முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
அரசு கேபிளுக்காக சக்சேனா கைதா ? ஜுனியர் விகடன் சந்தேகம். அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 32
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
புதன்கிழமை, 06 ஜூலை 2011 10:06

.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு அடுத்தடுத்து அதிரடிகள். லேட்டஸ்ட்... சன் பிக்சர்ஸ் தலைமை செயல் அதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்சேனாவைக் கைது செய்திருக்கிறது போலீஸ்!

கடந்த 3-ம் தேதி ஹைதராபாத்தில் நடந்த ஃபிலிம்ஃபேர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, விமானம் மூலம் சென்னைக்குத் திரும்பினார் சக்சேனா. விமானத்தில் இருந்து இறங்கியவரை, அசோக் நகர் உதவி கமிஷனர் குருசாமி தலைமையிலான போலீஸ் டீம் ஏர்போர்ட்டிலேயே  கைது செய்தது.

'சக்சேனா மீது புகார் கொடுத்தது யார்... என்ன வழக்கு?’ என்ற எந்த விவரத்தையும் உடனடியாக மீடியாவுக்குத் தெரிவிக்கவில்லை. அவர் எங்கே வைக்கப்பட்டு இருக்கிறார் என்பதில்கூட போலீஸார் ரகசியம் காத்தனர். அதன் பிறகு, இரவு 9 மணிக்கு சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் வீட்டில் சக்சேனாவை ஆஜர்படுத்தி ரிமாண்ட் செய்தது போலீஸ்.

சக்சேனா மீது புகார் கொடுத்தவர், சேலம் மாவட்டத் திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்தின் பொருளாளரும், கந்தன் ஃபிலிம்ஸ் உரிமையாளருமான செல்வராஜ். என்ன நடந்தது?

செல்வராஜ் தரப்பில் பேசினோம். ''விஷால் நடித்த 'தீராத விளையாட்டுப் பிள்ளை’ படத் தயாரிப்புக்காக அதன் தயாரிப்பாளர் விக்ரம் கிருஷ்ணாவுக்கு ஃபைனான்ஸ் செஞ்சோம். அவங்க அந்தப் படத்தை மொத்தமாக சன் பிக்சர்ஸுக்கு வித்துட்டாங்க. படத்தின் சேலம் மாவட்ட உரிமத்தை இனியவேல் குரூப்புக்கு  1.25 கோடிக்குக் கொடுத்தாங்க. ஆனா, அவங்களால் சொன்ன நேரத்துக்கு பணத்தை செட்டில் பண்ண முடியலை. பட ரிலீஸுக்கு முன்பு சேலம் வந்த சன் பிக்சர்ஸ் ஆட்கள் செல்வராஜை அழைத்துப் பேசி, 'உங்களுக்குத் தயாரிப்பாளர் தரப்பில் தர வேண்டிய  1.25 கோடிக்குப் பதிலாக, சேலம் மாவட்ட உரிமத்தை எடுத்துக்கோங்க. படத்தோட வசூலில்  உங்களுக்குச் சேரவேண்டிய பணத்தை எடுத்துட்டு, மீதியை எங்களுக்குக் கொடுங்க’ன்னு சொன்னாங்க.

ஆனா, படம் எதிர்பார்த்த மாதிரி போகலை. மொத்த வசூலே 43 லட்ச ரூபாய்க்குள்தான். செல்வராஜுக்கு தர வேண்டிய மீதி  82 லட்சத்தைக் கேட்டு, பல தடவை அவர்களது அலுவலகத்துக்கு நடந்தார். ஆரம்பத்தில் அமைதியாப் பேசிட்டு இருந்த சக்சேனா ஒரு கட்டத்தில், 'பணம் எல்லாம் தர முடியாது. உன்னால் என்ன முடியுமோ, அதை நீ பார்த்துக்கோ’ன்னு பேச ஆரம்பிச்சிட்டார். நாங்களும் பல தரப்புகளில் இருந்து பேசிப் பார்த்தோம். பணத்தைத் திருப்பிக் கொடுக்குற மாதிரி தெரியலை. அதோட, எங்களுக்கும் மிரட்டல் விடுத்துட்டே இருந்தாரு. வேறு வழி தெரியாமத்தான் போலீஸ் கமிஷனரிடம் புகார் செஞ்சோம்...'' என்று சொன்னார்கள்.

ஏற்கெனவே இதே சக்சேனா மீது,  செக்கர்ஸ் ஹோட்டலைத் தாக்கியதாக ஒரு புகார் உள்ளது. விஜய் நடித்த 'காவலன்’ பட விவகாரம் தொடர்பாகவும் சக்சேனா மீது மத்தியக் குற்றப் பிரிவு போலீஸாரிடம் ஒரு புகார் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் சக்சேனாவை கஸ்டடி எடுத்து விசாரிக்க,  சைதாப்​பேட்டை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் 4-ம் தேதி மனுத் தாக்கல் செய்தது போலீஸ் தரப்பு. அதே தினத்தில், சக்சேனாவும் ஜாமீன் கேட்டு மனுத் தாக்கல் செய்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, '5-ம் தேதி சக்சேனாவை நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்த வேண்டும்’ என்று உத்தரவிட்டார்.

போலீஸ் கஸ்டடி கிடைக்கும்பட்சத்தில், சக்சேனா மீது உள்ள வேறு சில வழக்குகள் தொடர்பாகவும் விசாரணை நடத்தத் திட்டமிட்டு இருக்கிறதாம் காவல் துறைத் தரப்பு.

சென்னை மாநகரக் காவல் துறை ஆணையர் திரிபாதியிடம் பேசினோம். ''சேலத்தை சேர்ந்த சினிமா விநியோகஸ்தர் செல்வராஜ் கொடுத்த புகாரின் அடிப்படையில் சன் பிக்சர்ஸின் தலைமை செயல் அதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்சேனா மீது நம்பிக்கை மோசடி, வஞ்சித்து ஏமாற்றுதல், கொலை மிரட்டல் என மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்து இருக்கிறோம். விசாரணை நடைபெற்று வருகிறது. சட்டம் தன் கடமையைச் செய்யும்!'' என்று சொன்னார்.

சக்சேனா தரப்பில் சைதை நீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறிஞர் குமரேசனிடம் பேசினோம். ''இது ஒரு ஜோடிக்கப்பட்ட வழக்கு. இரண்டே பக்க காகிதத்தில் அவசர அவசரமாக இந்த வழக்கை தயாரித்து உள்ளது தமிழக போலீஸ். இதைச் சொல்லி நாங்கள் ஜாமீன் கேட்டோம். இந்த வழக்கை அடிப்படையாக வைத்து புதிய வழக்குகள் போட்டுவிடக்கூடாது என்றும் சொல்லி இருக்கிறோம். மற்றபடி இது ஜாமீன் தரக்கூடிய சாதாரண வழக்குதான். போலீஸ் கஸ்டடி எடுத்து விசாரிக்கும் அளவுக்கு பெரிய வழக்கு அல்ல. எங்கள் தரப்பு நியாயங்களை நீதிமன்றத்தில் சொல்வோம்!'' என்று கூறினார்.

சக்சேனா கைது செய்யப்பட்ட அதே தினத்தன்று, அரசு கேபிள் டி.வி. அமைப்புக்கான தலைமை அதிகாரிகளை நியமித்து அரசின் அறிவிப்பும் வெளியானது. ஒரு புறம் அரசு கேபிள் டி.வி-யை துவங்குவதற்கான அதிரடி வேலைகள் ஆரம்பமாகும் நேரத்தில், குறைந்தபட்சம் சில நாட்களாவது கேபிள் ஆபரேட்டர்களிடம் யாரும் பேசி மனதைக் கலைத்துவிடக் கூடாது என்பதற்காகவே சக்சேனாவை சிறையில் அடைத்தார்களோ என்ற கேள்வியும் தற்போது எழுகிறது.

 

நன்றி ஜுனியர் விகடன்

 

Comments  

 
+1 #30 நடு நிசி நாயகன் 2011-07-15 15:02
காசுக்காக சும்மா ஊ......ரைக் கெடுக்கிற எட்டப்பன் வேலை செய்யிறதுக்கு பதிலா கரண்ட் முதலாளி பேரைப் போட்டு ஜூ.வி.ங்கிற பேரை ஒரு நல்ல நாளில் முப்பத்து முக்கொடி தேவர்களின் முன்னிலையில் ”கேடீ விளம்பி” ந்னு அறிவிச்சுடலாம். நேர்மையாவாவது இருக்கும்...
Quote
 
 
0 #29 TMS 2011-07-14 21:53
சன் டி.வி. சக்சேனா மீது புகார் கொடுத்த செல்வராஜ்
வீடு- அலுவலகத்தில் சோதனை கோவை வருமான வரித்துறை அதிகாரிகள் சேலம் வந்தனர்.

அவர்கள் சேலம் புதிய பஸ்நிலையம் அருகே வசிக்கும் சினிமா வினியோகஸ்தர் செல்வராஜின் வீட்டிற்கு சென்றனர். செல்வராஜிடம் உங்களிடம் விசாரிக்க வேண்டும் என கூறி அவரிடம் சம்மனை கொடுத்தனர். இதை வாங்கி பார்த்த செல்வராஜ் விசாரணைக்கு ஒத்துக்கொண்டார் .
Quote
 
 
0 #28 Thustan 2011-07-14 20:27
பாராட்டுக்கள்.
கழுகார் பகுதியை சரியாக படித்து இருக்கிறீர்கள்.
அது இனி 'கழுகார்' இல்லை, "கேடியார்" என்று அழைக்கப்படலாம்.
கேடிக்களின் நாடித்துடிப்பு என்று சவுக்கு தலிப்பு போட்டது எவ்வளவு சரியாய் போய்விட்டது பாருங்கள்.
Quote
 
 
0 #27 palainiyappan 2011-07-14 19:29
விகடன் டெலிவிஸ்டாஸ் - சன் டிவி சீரியல் பத்தி யாருமே எதவும் சொல்லவில்லை..?! அப்படி ஒரு வணிக கூட்டணி இருக்கே..
Quote
 
 
0 #26 batisha 2011-07-11 15:36
இன்னுமா இந்த ஊர் நம்மல நம்பிகெட்டு இருககு.....
Quote
 
 
+2 #25 GOPALASAMY 2011-07-10 13:46
RIGHT FROM BEGINING, JUNIOR VIKADAN IS SUPPORTING DAYANIDHI MARAN.
WHEN CHECKERS HOTEL INCIDENT HAPPENED ALSO, JV DID NOT REPORT IT.
JV AND KALUGAR SHOULD HONESTLY ACCEPT THEIR BOSSES ARE KD BROTHERS AND THEY WILL DECLARE THAT THEY WILL SUPPORT KD BROTHERS ATROCITIES AND CORRUPTION.
Quote
 
 
+11 #24 choco 2011-07-08 22:23
இந்த ஜூ.வி. இருக்கானே.. கெட்ட பய சார்.. உண்மைய விட பொய்யத்தான் ரொம்ப அழகா எழுதுவான்.. விகடன் எழுத்துல எப்பவுமே ஒரு கிக் இருக்கும்.. இந்த பய புள்ள தன்னோட வாசகர்களோட இந்த எழுத்து மயக்கத்த வியாபாரமாக்கி கே.டி.சகோதரர்களுக்கு நல்லா சிங்கி அடிக்கிரறானுவ்.. இப்படியே விட்டா சாக்ஸ் மாதிரி ஒரு கலைச் சேவகனை இந்த ஊலகத்திலேயே யாரும் பார்த்திருக்க முடியாதுன்னு கோடாங்கி அடிக்கவும் செய்வானுக..( சாட்டையடி சாக்கோ )
Quote
 
 
+2 #23 Thustan 2011-07-08 17:15
100 சதவீதம் கரீக்டா சொன்னீங்க.
திமுக மற்றும் முக ஆகியவற்றை அழித்ததில் பெரும் பங்கு இந்த மாறனுக்கு உண்டு.
Quote
 
 
+21 #22 RAJARAAJAN 2011-07-08 16:20
கேட்பவன் கேணையன் என்றால் கேழ்வரகில் நெய் வடிகிறது என்பார்கள் ஜுவிக்காரர்கள்.
அடுத்தவன் பணத்தை மோசடி செய்வதையே தொழிலாக வைத்திருந்த ஒருவனை கைதுசெய்தால்
அந்த மோசடி பற்றி எழுதாமல் அரசு கேபிளுக்காக கைது செய்வதாக திசை திருப்புகிறார்க ள்.
சீனிவாச ஐயரே உனக்கு இது தேவையா?

ராஜராஜன்
Quote
 
 
+17 #21 chinnakundoosi 2011-07-08 12:56
எல்லோரும் ஒன்றை நன்றாக புரிந்துகொள்ள வேண்டும்...இந்த பத்திரிக்கைகளும ் போலிச்சாமியார்க ள் போலதான்...கடை பரப்பி வைக்கிறார்கள்..நாம்தான் விட்டில் பூசிகள் போல அவர்களை ஏதோ உத்தமர்கள் என்று நம்பி போய் விழுகிறோம்...இந்த வெகுஜன பத்திரிக்கைகள் எல்லாம் ஒன்றும் நாட்டை திருத்தவோ சமூகத்தை மாற்றவோ கங்கணம் கட்டிக்கொண்டு வரவில்லை..அவர்களுக்கு தேவை வியாபாரம்...அதை நடத்துவது பெரிய தொழிலதிபர்கள்...எந்த பத்திரிக்கையை வேண்டுமானாலும் எடுத்துக்கொண்டு அதன் பின்னணியை பாருங்கள்...தினமலர், தினத்தந்தி, விகடன், குமுதம், குங்குமம்.....எல்லா பத்திரிக்கைகளும ் பத்திரிக்கை தவிர கல்லூரிகள், எஸ்டேட்டுகள், மால், கட்டுமான நிறுவனங்கள், மீடியா புரொடக்ஷன் என்று பல பெரிய தொழில்களை பின்னணியில் நடத்தி வருபவைதான்...பத்திரிக்கை என்பது மற்ற பல தொழில்களை பாதுகாக்கவும், லாபி செய்யவும், செல்வாக்கோடு தொழில் போட்டியாளர்களை சமாளிகக்கவுமே ஒரு ஆயுதம் போலும் முகமூடி போலவும் உதவ நடத்தப்படுபவை...மற்றபடி பத்திரிக்கை தர்மம், சமூக நோக்கம் என்று கூறுவது எல்லாம் நம்மை போன்ற அப்பாவி வாசகர்களை ஏமாற்றவும் போலியான ஒரு மயக்கத்தில் வைத்திருக்கவும் மட்டுமே... அரசியல்வாதிகள், அதிகாரிகள், தொழிலதிபர்கள் என்ற வரிசையில் பத்திரிக்கையாளர ்களும் அதிகார வர்கத்தின் ஒரு அங்கமே..
Quote
 
 
+3 #20 Suryanarayanan 2011-07-08 11:23
This is an excellent opportunity to destroy the evil empire of the Sun TV group. The DMK has belatedly realised how the opportunistic Maran's have used the DMK's political power to enrich themselves. By the time Karunanidhi and his children woke up it was too late. The Maran's were even richer than all the DMK family members put together, so much so that they started fearing the Marans. Karunanidhi should silently distance himself from them and even covertly undermine them. Otherwise it's bad news not only for his family and the DMK, but also for the people of Tamil Nadu.
Quote
 
 
+5 #19 elango kovai 2011-07-07 21:48
[ஃஉஒடெ நமெ="கணேஷ் குமார்."]சுமங்கலிக்கும் இந்த சாக்ஸூக்கும் எந்த சம்மந்தமும் இல்லை... கேடிகளுக்கு சன்டிவி மேலாண்மைக்கு சாக்ஸ் கிட்டியது போல சுமங்கலி கேபிளுக்கு வேறு ஆள் உண்டு... அவன் பெயர் விட்டல்...

விகடன் திசை திருப்பப் பார்க்கிறது!... கால காலமாக தமிழ்ப் பத்திரிக்கைகளில ் சிறந்து விளங்கிய விகடன் இப்போ இவங்க கையில் கிடைச்சு விளங்காத விகடாயிடுச்சு!...[/ஃஉஒடெ]
விட்டல் அவன் முரசொலி மாரனின் அக்கா மகன் தானே
Quote
 
 
+7 #18 elango kovai 2011-07-07 21:45
மதிப்பிற்குரிய சவுக்கு, கேபிள் டிவியில் சன் குழுமம் என்னென்ன தில்லு முல்லு செய்தது பே சானல்கள் கட்டனகொள்ளை ,பிற சானல்களிடம் அலைவரிசை ஒதுக்க கொள்ளை ,பல ஆபரேட்டர்களிடம் இணைப்புகளை அபகரித்தது,தொழி லை விட்டே துரத்தியது என பல விசயங்களை துப்பு துலக்குங்கள் .
Quote
 
 
+4 #17 ரமீஜா 2011-07-07 15:25
[ஃஉஒடெ நமெ="கன்னன்_டமில்"]இந்த வார ஜூனியர் விகடனில் ஹன்ஸ்ராஜ் சக்ஸேனா பற்றிய செய்தியில் ஜூனியர் விகடனின்
சகோதரர்கள் பாசம் வெளிபடுகிறது. மேலும் விகடனின் பங்குகளை அவர்கள் வாங்கியிருபதாக வந்த
செய்திகளில் உண்மை இருக்குமோ என்று சந்தேகப்பட வைக்கிறது இந்த வார ஜூனியர் விகடன் .
1 . ஹன்ஸ்ராஜ் சக்ஸேனா பற்றிய செய்தியில் ஜூனியர் விகடன் செய்தி போலவே இல்லை.
2 . "எங்களை மாற்ற நினைத்தால் கட்சி அழிந்துவிடும்" இதுவே ஜூனியர் விகடனின் அட்டை பட வசனம்
இது வீரபாண்டியர் சொன்னதாக எழுதப்படிருக்கி றது . ஆனால் மறைமுகமாக சொல்லப்பட்டிருக ்கும்
எச்சரிக்கையாகவே இதை எடுத்து கொள்ளவேண்டும் .இங்கே விகடனின் பங்குகளை அவர்கள் வாங்கியிருபதாக வந்த
செய்திகளை கொஞ்சம் நினைவுபடுதிக்கொ ளுங்கள். யார் யாருக்கு சொன்னது என்பது தி.மு.க வின் தொண்டர்களுக்கு
புரியும்.
3 . கழுகார் செய்தியில் ஸ்டாலின் மற்றும் அழகிரி பற்றிய செய்திகளை நன்கு கவனித்தால் இருவருக்கும் மூட்டிவிட
ஆசை கொண்டவர்களின் தந்திரம் விளங்கும் .
ஆக மொத்தம் ஸ்டாலின் மற்றும் அழகிரியை சண்டை போட வைத்து கழகத்தை கைப்பற்ற முயற்சி எடுக்கப்படுகிறத ு.[/ஃஉஒடெ]


என்னமோ நடக்குதுங்க நாட்டிலே எப்படியோ உண்மைவெளியில்வந ்த சரித்தான்
Quote
 
 
-3 #16 keerikutti 2011-07-07 11:09
ஜூனியர் விகடன் பேருக்கு பதிலா "கற்பூரம்"னு வைங்க
Quote
 
 
+13 #15 Kannan_Tamil 2011-07-07 07:46
இந்த வார ஜூனியர் விகடனில் ஹன்ஸ்ராஜ் சக்ஸேனா பற்றிய செய்தியில் ஜூனியர் விகடனின்
சகோதரர்கள் பாசம் வெளிபடுகிறது. மேலும் விகடனின் பங்குகளை அவர்கள் வாங்கியிருபதாக வந்த
செய்திகளில் உண்மை இருக்குமோ என்று சந்தேகப்பட வைக்கிறது இந்த வார ஜூனியர் விகடன் .
1 . ஹன்ஸ்ராஜ் சக்ஸேனா பற்றிய செய்தியில் ஜூனியர் விகடன் செய்தி போலவே இல்லை.
2 . "எங்களை மாற்ற நினைத்தால் கட்சி அழிந்துவிடும்" இதுவே ஜூனியர் விகடனின் அட்டை பட வசனம்
இது வீரபாண்டியர் சொன்னதாக எழுதப்படிருக்கி றது . ஆனால் மறைமுகமாக சொல்லப்பட்டிருக ்கும்
எச்சரிக்கையாகவே இதை எடுத்து கொள்ளவேண்டும் .இங்கே விகடனின் பங்குகளை அவர்கள் வாங்கியிருபதாக வந்த
செய்திகளை கொஞ்சம் நினைவுபடுதிக்கொ ளுங்கள். யார் யாருக்கு சொன்னது என்பது தி.மு.க வின் தொண்டர்களுக்கு
புரியும்.
3 . கழுகார் செய்தியில் ஸ்டாலின் மற்றும் அழகிரி பற்றிய செய்திகளை நன்கு கவனித்தால் இருவருக்கும் மூட்டிவிட
ஆசை கொண்டவர்களின் தந்திரம் விளங்கும் .
ஆக மொத்தம் ஸ்டாலின் மற்றும் அழகிரியை சண்டை போட வைத்து கழகத்தை கைப்பற்ற முயற்சி எடுக்கப்படுகிறத ு.
Quote
 
 
+2 #14 Raj mohan 2011-07-07 07:21
ரொம்ப யோக்கியன் போல தான் எல்லாரும் நடந்துக்குவாங்க
Quote
 
 
+20 #13 kaasinaath 2011-07-07 00:04
"எங்கப்பன் குதிருக்குள்ள இல்ல" என்பதை விகடன் இந்த கட்டுரை மூலம் சொல்லியிருக்கிற து. கடந்த மாதத்துடன் விகடனை வலைத்தளத்தில் படிப்பதர்க்கான சந்தா கட்டுவதை நிறுத்தி விட்டேன் என்பதில் மன திருப்தி கொள்கிறேன்.
Quote
 
 
+30 #12 கணேஷ் குமார். 2011-07-06 20:47
சுமங்கலிக்கும் இந்த சாக்ஸூக்கும் எந்த சம்மந்தமும் இல்லை... கேடிகளுக்கு சன்டிவி மேலாண்மைக்கு சாக்ஸ் கிட்டியது போல சுமங்கலி கேபிளுக்கு வேறு ஆள் உண்டு... அவன் பெயர் விட்டல்...

விகடன் திசை திருப்பப் பார்க்கிறது!... கால காலமாக தமிழ்ப் பத்திரிக்கைகளில ் சிறந்து விளங்கிய விகடன் இப்போ இவங்க கையில் கிடைச்சு விளங்காத விகடாயிடுச்சு!...
Quote
 
 
+5 #11 Padmanabhan 2011-07-06 20:02
good action taken against him
Quote
 
 
+21 #10 கே.அசோகன், vellore 2011-07-06 17:58
நல்லா அடிக்கிறீங்க ஆப்பு. இப்படித்தான் இந்த நாய்களை செருப்பால அறையனும். எத்தனை முறை பட்டாலும் புத்தி வர மாட்டேங்குதே. எழுதுவானுங்களாம ். அதையும்கூட அவனுங்களுக்கு சாதகமாத்தான் எழுதுவானுங்களாம ். ஒரே நேரத்துல ரெண்டு பேரை சமாதானப்படுத்து றாங்களாம். எப்படி எஜமானர்கள் கோபிச்சுக்கக் கூடாதாம். அரசு உள்நோக்கத்தோட கைது செஞ்சிருக்குறதா சொல்வாங்களாம். நீங்க, சவுக்கு கேள்வி கேட்டுடக் கூடாதுன்னு, ஒரு பக்கத்துக்கு மேட்டர் போடுவானுங்களாம் . என்னமா இந்த ஊரை ஏமாத்துறானுங்க பாத்தீங்களா சவுக்கு? இவனுங்களையெல்லா ம் இன்னுமா நம்புறாங்க ஜனங்க? செ.... பால அடிக்கணுங்க.
Quote
 
 
+5 #9 santhosh 2011-07-06 16:30
Edhuku da indha maanam ketta polapu... Thu naaye...
Quote
 
 
-18 #8 தூயவன் 2011-07-06 15:24
ஜுனியர் விகடன் என்றைக்கும் மாறது... சவுக்குதான் ஒரு அரசியல் பலிகடா ஆனதால் அட்ம்க் தவிர அணைத்து எதிரிகளையும் திட்டுறான்... அன்றைக்கு நக்கீரன் நிருபர் போன்ல சொன்னது போல இவன் அட்ம்க் கிட்ட காசு வாங்கிட்டு எழுதுறான்...
Quote
 
 
+24 #7 வால்டர் வணங்காமுடி 2011-07-06 14:27
[ஃஉஒடெ நமெ="சொவை முருகன்"]இந்த குரூப் பத்திரிக்கை நடத்தறதுக்கு பதிலா ...மஞ்ச பத்திரிக்கை நடத்தி மாமா வேல பாக்கலாம் ... :ட் :லொல்:[/ஃஉஒடெ]

எதுக்கு சுத்தி வளைச்சிகிட்டு... நேரா 'நக்கீரன்'ன்னு சொல்ல வேண்டியது தானே?
Quote
 
 
+52 #6 நியாயத் தராசு 2011-07-06 12:43
அரசு கேப்ள் டிவி ஆரம்பித்தால் நல்லது தானே... அதற்க்கு யார் யாரெல்லாம் முட்டுக்கட்டை போடமுடியுமோ அவர்களை உள்ளே போடுவது ஒண்ணும் தவறில்லை... இந்த சக்சேனா ஒரு தேச பக்தரா என்ன?
Quote
 
 
+43 #5 covai murugan 2011-07-06 12:19
இந்த குரூப் பத்திரிக்கை நடத்தறதுக்கு பதிலா ...மஞ்ச பத்திரிக்கை நடத்தி மாமா வேல பாக்கலாம் ... :D :lol:
Quote
 
 
+35 #4 Mercury 2011-07-06 12:12
அரசு கேபிள் டி.வி அதிரடி வேலைகள் ஆரம்பம். அம்மாவுக்கு ஜெ.ஜெ
Quote
 
 
+43 #3 வால்டர் வணங்காமுடி 2011-07-06 11:55
ஜூனியர் விகடன் சந்தேகமா கேக்குதா இல்லை தன்னோட எஜமானர்களை உஷார் படுத்துதா? எனக்கென்னவோ 'உஷார்'படுத்துற மாதிரி தான் தெரியுது.
Quote
 
 
+54 #2 உண்மை விளம்பி 2011-07-06 11:38
இந்த நாத்தமெடுத்த சாக்ஸ் எவ்வளோ பெரிய அயோக்கியன்னு எல்லோரும் பேசிக்கிட்டு இருக்கும்போது ஜூ.வி மட்டும் எப்படி வேற கோணத்துல உள்ளர்த்தம் கற்பிக்க பாக்குது பாத்தீங்களா? ஜூ.வி கை மாறிடுச்சுனு நம்பறதுக்கு இதவிட என்ன பெரிய ஆதாரம் வேணும்?
Quote
 
 
+26 #1 keppamari 2011-07-06 10:58
விகடன் ரொம்ப யோசிகிமோ ?
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 92 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday10151
mod_vvisit_counterYesterday11112
mod_vvisit_counterThis week31350
mod_vvisit_counterLast week80132
mod_vvisit_counterThis month234082
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12756201