முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
ஆவின் நெய்யும், ராமானுஜத்தின் பொய்யும் அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 57
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
ஞாயிற்றுக்கிழமை, 19 செப்டம்பர் 2010 15:45

ஆவின் என்ற பிரபலமாக அழைக்கப் படும் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைமை அலுவலகம், மாதவரம் பால்பண்ணையில் இருக்கிறது.

 குஜராத்தில் ஆனந் போல லாபம் ஈட்டக் கூடிய வகையில் வளர்ந்திருக்க வேண்டிய ஆவின், நிர்வாகச் சீர்கேட்டாலும், ஊழலாலும், தள்ளாடிக் கொண்டிருக்கிறது.

1958ம் ஆண்டு ஆவின் உருவானது.   தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பால் உற்பத்தியாளர்களை ஒருங்கிணைத்து, அவர்களுக்கு ஒரு சந்தையை ஏற்படுத்தித் தர வேண்டும் என்ற உன்னத நோக்கத்துக்காக உருவாக்கப் பட்டதுதான் ஆவின்.

ஆவின் நிறுவனம் பால் தவிரவும், பாலில் உருவாகும் பால் பவுடர், வெண்ணை, நெய், ஐஸ் க்ரீம், இனிப்புகள் போன்ற பல்வேறு பொருட்களை தயார் செய்கிறது.

தமிழகத்தில் மொத்தம் 17 மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் இணையங்கள் இருக்கின்றன. அவை அனைத்தும் சென்னையில் உள்ள ஆவின் தலைமையகத்தின் கட்டுப் பாட்டிலேயே இயங்கும்.

ஆவின் தயாரிக்கும் நெய் மிக மிக தரமானதும், மிகப் பிரசித்தி பெற்றதும் ஆகும்.   இந்த நெய் மூன்று வகையாக ஆவினால் வியாபாரம் செய்யப் படுகிறது. ஒன்று உற்பத்தியாகும் இடத்தின் அருகிலேயே விற்பனை செய்வது. இரண்டாவது, சென்னை நகரில் விற்பனை செய்யப் படுவது.   மூன்றாவது தமிழகம் அல்லாத பிற மாநிலங்களில் விற்பனை செய்வது.

வெளி மாநில விற்பனைக்கு மட்டும் ஆவின் தலைமையகம் தான் பொறுப்பு. மாவட்ட கூட்டுறவு இணையங்கள் விற்பனை செய்வது தடை செய்யப் பட்டுள்ளது.

ஆவின் நிறுவனம், வெளி மாநிலங்களுக்கு நெய்யை விற்பனை செய்வதற்காக ஏஜென்ட்டுகளை நியமித்துள்ளது. இந்த ஏஜென்ட்டுகளையும் மாவட்ட கூட்டுறவு இணையங்கள் தொடர்பு கொள்ளக் கூடாது. இந்த விற்பனையில் ஆவின் நிறுவனத்துக்கு மொத்தம் 6 சதவிகிதம் கமிஷன். இந்த ஆறு சதவிகிதத்தில் 2 சதவிகிதம் ஏஜென்ட்டுகளுக்கு.

ஆவின் நெய், வெண்ணை மற்றும் இதர பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்ய Product Pricing Committee PPC எனும் ஒரு குழு உண்டு. இந்தக் குழுவில், ஆவின் நிர்வாக இயக்குநர், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, மதுரை, கோவை மற்றும் உதகமண்டல மாவட்ட பால் உற்பத்தியாளர் இணையத்தின் பொது மேலாளர்கள், ஆவின் தலைமையகத்தில் உள்ள மேலாளர் (திட்டங்கள்), மேலாளர் (விற்பனை) மேலாளர் (பால் உற்பத்தி), நிதி மேலாளர் மற்றும் பொது மேலாளர் ஆகியோர் உறுப்பினர்கள். இந்தக் கமிட்டியின் வேலை சந்தை நிலவரத்துக்கு ஏற்ப ஆவின் பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்வதுதான்.

 1983ம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கச் சட்டம் பிரிவு 181ன் படி, விலை நிர்ணயக் குழு நிர்ணயம் செய்த விலைக்கு குறைவாக விற்பனை செய்வது தடை செய்யப் பட்டுள்ளது.

 இந்த விலை நிர்ணயக் குழு மாதந்தோறும் கூடி சந்தை நிலவரத்துக்கு ஏற்பவும், ஆவின் நிறுவனத்தின் லாபத்தை கருத்தில் கொண்டும், ஆவின் பொருட்களின் விலையை கூட்டவோ குறைக்கவோ முடிவெடுக்க வேண்டும். ஆனால் இந்தக் குழு பல ஆண்டுகளாக கூடவேயில்லை என்பதும், ஆவின் நிர்வாக இயக்குநர் எடுத்த முடிவுகளை பின்னேற்பு செய்வதற்காக மட்டுமே கூடுகிறது என்றும் தகவல்கள் கூறுகின்றன.

மேலும் இந்தக் குழு எடுத்துள்ள பல்வேறு முடிவுகள், ஏஜென்ட்டுகளுக்கு சாதகமாக இருக்கின்றன என்றும் தெரிகிறது. விலை நிர்ணயக் குழுவில் உள்ள அனைவருமே ஆவின் நிர்வாக இயக்குநருக்கு கீழ் பணி புரிபவர்கள் என்பதால், ஒருவர் கூட எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காமல், நிர்வாக இயக்குநரின் ஊழல் போக்குக்கு துணை போகிறார்கள்.

ஏஜென்ட்டுகள் தேர்வு டெண்டர் மூலம் விளம்பரம் கொடுத்து தேர்ந்தெடுக்கப் பட வேண்டும். 1993க்குப் பிறகு புதிதாக ஏஜென்ட்டுகள் நியமிக்கப் படவே இல்லை. அப்போது இருந்த ஏஜென்ட்டுகளே ஆண்டுதோறும் புதுப்பிக்கப் பட்டு வருகின்றனர்.

2007—2008ம் ஆண்டில் தீபாவளி சமயத்தில், சென்னை நகரில் ஆவின் நெய்க்கு கடும் தட்டுப் பாடு ஏற்பட்டது.   உள்ளுர் தேவைகளை பூர்த்தி செய்த பிறகே வெளி மாநிலங்களுக்கு அனுப்ப வேண்டும் என்ற அடிப்படை விதியை மீறி வெளி மாநிலங்களுக்கு நெய் அனுப்பப் பட்டது.

அந்த ஆண்டு ஈரோடு பால் உற்பத்தியாளர் இணையத்தின் சார்பாக வெளி மாநிலங்களுக்கு விற்பனை செய்யப் பட்ட நெய் 1,60,375 கிலோ.   ஒரு கிலோ நெய்க்கு விலை நிர்ணயக்குழு நிர்ணயம் செய்த விலை ரூபாய் 135.30.   ஆனால் வெளி மாநிலத்திற்கு விற்கப் பட்ட விலை ரூபாய் 126.24. இதனால் ஈரோடு மாவட்ட பால் உற்பத்தியாளர் இணையத்திற்கு ஏற்பட்ட இழப்பு 15 லட்சம்.

2007-2008 ஆண்டில் சேலம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் இணையம் விற்பனை செய்த மொத்த நெய்யின் அளவு 2,18,505 கிலோ. இந்த விற்பனைக்கு விலை நிர்ணயக் குழு நிர்ணயித்த விலை ஒரு கிலோ ரூபாய் 132.20.   ஒரு கிலோ நெய் தயாரிக்க ஆகும் செலவு ரூபாய் 125.53.   சேலம் இணையம் விற்பனை செய்த விலை ஒரு கிலோ ரூபாய் 123.35. அதாவது அடக்க விலையை விடக் குறைவாக விற்பனை செய்திருக்கிறார்கள். இந்த வகையில் ஆவினுக்கு ஏற்பட்ட இழப்பு 20 லட்சம்.

இதே போல கோவை மாவட்ட இணையம் 2007-2008 ஆண்டில் விற்பனை செய்த நெய்யின் மொத்த அளவு 89,901 கிலோ.   விலை நிர்ணயக் குழு நிர்ணயம் செய்த விலை ஒரு கிலோ 136.71. விற்பனை செய்யப் பட்ட விலை 129.88. அரசுக்கு ஏற்பட்ட இழப்பு 7 லட்சம்.

இது ஆவின் நெய் மட்டுமே. இதே போல பால் பவுடர், வெண்ணை, மைசூர்பாகு, போன்ற பல்வேறு பொருட்களின் விற்பனையிலும் இதே போன்ற முறைகேடுகள் நடந்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

 ஆவின் வட்டாரங்களில் விசாரித்த போது இந்த அத்தனை முறைகேடுகளும் அதன் நிர்வாக இயக்குநர் அபூர்வா வர்மா,ஐஏஎஸ் அவர்களின் உத்தரவின் படியே நடைபெறுவதாக தெரிகிறது.

1

 

ஆவின் நிறுவனம் அனைத்து மாவட்ட பால் உற்பத்தியாளர் இணையங்களுக்கும் 2407/2001-N2 என்ற எண்ணில் 16.03.2001 நாளிட்ட சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அச்சுற்றறிக்கையின் படி, விலை நிர்ணயக்குழு நிர்ணயம்செய்த விலைக்கு குறைவாக, எக்காரணம் கொண்டும் ஆவின் நெய் மற்றும் பால் பவுடர் விற்பனை செய்யக் கூடாது என்று உத்தரவிடப் பட்டுள்ளது. ஆனால், இந்த உத்தரவு காற்றில் பறக்க விடப் பட்டு ஆவினுக்கு நஷ்டம் ஏற்படுத்தும் அளவுக்கு ஊழல் நடைபெற்றுள்ளது.

இந்த விபரங்கள் எல்லாம் ஆதாரங்களோடு, ஒரு புகாராக தயாரிக்கப் பட்டு, ஒரு வழக்கறிஞர் மூலமாக லஞ்ச ஒழிப்புத் துறையின் முன்னால் இயக்குநர் ராமானுஜம் அவர்களிடம் நேரடியாக வழங்கப் பட்டது.

 

Ramanujam

ராமானுஜம் இந்தப் புகார் உண்மையா என்று விசாரிக்க உத்தரவிடுகிறார். விசாரித்த அதிகாரி இந்தப் புகார்கள் உண்மை என்றும், இதை விட அதிகமாக ஊழல்கள் நடைபெற்றுள்ளன என்றும், இப்போதும் இந்த ஊழல் நடைபெற்று வருகின்றன என்றும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரிக்கலாம் என்றும் பரிந்துரை செய்கிறார்.

ராமானுஜம் என்ன செய்கிறார் தெரியுமா ? ஜுலை 2009ல் இந்தப் புகாரை துறை ரீதியான விசாரணை நடத்துமாறு அனுப்பி வைக்கிறார். எங்கே தெரியுமா ?

எந்த ஐஏஎஸ் அதிகாரி ஊழல் புரிந்திருக்கிறாரோ, யார் மீது குற்றச் சாட்டோ, அதே அபூர்வா வர்மாவிடம் இதை அனுப்பி வைக்கிறார் ராமானுஜம்.  

2

இப்படி அனுப்புவதற்காக ராமானுஜம் ஆபூர்வா வர்மாவிடம் பணம் பெற்றுக் கொண்டார் என்று சவுக்கு குற்றம் சாட்டவில்லை.

ஆனால் இத்தனை பெரிய ஊழல் நடைபெற்றிருக்கிறது. அதை முறைப்படி விசாரிக்காமல் குற்றம் சாட்டப் பட்டவருக்கே அனுப்பி வைப்பதற்கான காரணம் தான் என்ன ?

சவுக்கின் முந்தைய பதிவுகளில் ராமானுஜத்தைப் பற்றி எழுதியிருந்ததை பார்த்த பல பத்திரிக்கையாளர்களும், சில மூத்த அதிகாரிகளும், சவுக்கு தவறாக எழுதியிருக்கிறது என்றும், ராமானுஜம் மீதான குற்றச் சாட்டுகளில் உண்மை இல்லை என்றும் சவுக்கை கடிந்து கொண்டனர்.

சவுக்கு விசாரிக்காமல், எழுதுவதில்லை என்பதை எடுத்துரைத்தும், அவர்கள் நம்ப மறுத்தனர். இப்போது ராமானுஜம் எடுத்த இந்த முடிவுக்கான காரணம் என்ன என்பதை அவர்கள் தான் விளக்க வேண்டும்.

ராமானுஜத்தின் பலமே, பசுத்தோலை போர்த்திக் கொண்டு நடமாடுவதுதான். அந்த பசுத் தோலை பார்த்து பல பேர் “நம்பி” ஏமாந்துள்ளனர்.   ராமானுஜம் நாயுடு இனத்தைச் சேர்ந்தவர்.   நாயுடு இனத்தைச் சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்திற்காக சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி ராதாகிருஷ்ணன் மீது வந்த பல புகார்களை நடவடிக்கை எடுக்காமல் மூடி மறைத்துள்ளார் என்று தகவல்கள் கூறுகின்றன.

 

தண்ணீரை விட ரத்தம் அடர்த்தியானது அல்லவா ?

 

Comments  

 
-1 #26 metro Boy 2011-01-14 10:35
//It is time to move on from Police dept to Politicians//
Sorry, friend. Please continue bringing out the misdeeds of the bureacracy. Media and blogs get immersed in condemning politicians, more than their share of rebuke. The officials share the loot; they should share the bad name too.
Quote
 
 
0 #25 joe 2010-12-14 12:53
:D
Quote
 
 
0 #24 visva 2010-12-08 06:09
i am really shocked
Quote
 
 
-2 #23 நேர்மைக்காக போராடும் 2010-11-24 20:16
சாரி வேகத்தில் கடைசி வரியை மறந்து விட்டேன் .

நாயுடு சாதிகாரனா அவன் . அவனுங்க தானே காமராஜர் ஆட்சி காலத்தில் இருந்து இப்ப வரைக்கும் தமிழகத்தில் எந்த ஆட்சி மாறினாலும் தங்குதடையில்லாம ல் ஆட்டையை போடுபவன்கள் . அய்யா கர்ம வீரர் காமராஜருக்கு கெட்ட பெயர் வந்ததே அவனுங்களால தான் . எந்த ஆட்சி
வந்தாலும் சிண்டிகேட் அமைத்து தங்கள் சாதி ஆட்களை மட்டும் ஊழல் செய்தால் மாட்டாமல் காப்பாற்றி விட்டு விடுவான்கள்.

இப்ப அடுத்து ஒருத்தன் தமிழன் என்கிற போர்வையில் தான் தான் அடுத்த தமிழக முதல்வர் என்று சவடால் விட்டு கொண்டு அலையுறான் . கோயம்புத்தூர் லட்சுமி மில் ஒனரான நாயுடு சாதியை சேர்ந்தவர் தான் எல்லா வித உதவிகளும் செய்கிறாராம் . எல்லா கட்சிகளிலும் உள்ள நாயுடு சாதிகாரங்களிடம் தொடர்பு உண்டாம்
Quote
 
 
-1 #22 நேர்மைக்காக போராடும் 2010-11-24 20:08
ஒரு சின்ன சந்தேகம் இந்த ராமானுஜம் எந்த சாதிக்காரன். அவனுடைய சாதிபெயரையும் போடுங்களேன் எல்லாரும் தெரிந்து கொள்ளட்டும்
Quote
 
 
0 #21 ram 2010-09-23 12:51
kuppusamyyyyy-------
:: Dairy Development activities in Tamilnadu started early in the year 1920. The first cooperative dairy was set up at Chennai city during the year 1927. The State Dairy Development Department in the state was established in 1958
Quote
 
 
0 #20 lovely 2010-09-21 19:56
if it goes on like this then where will the govt. go to run the show, this needs to be curtailed immediately.
Nice Savukku.
Quote
 
 
0 #19 kuppusamy 2010-09-21 15:55
there was no aavin in 1958... why are you giving wrong news ? Does it mean everything your write about others are wrong and false ? are you a cheat ? are you writing false news for cheap publicity ?
Quote
 
 
0 #18 VIJAY_USA 2010-09-20 17:58
Like Robin said - Savukku may expand his horizon to politics also. The problem, we all may not understand, is that, it needs another team with expertise and honesty, and moreover lot of money!
I think if the Police department is on hook, pretty much all the politicians are in trouble to. These two go hand and glove! So being focused on police department will automatically expose dirty politicians associated....
Quote
 
 
+2 #17 ASAI SIVA. M D M K 2010-09-20 16:30
DEAR SIR,

KEEP IT UP, VERY SUPER.
Quote
 
 
+3 #16 Pradeep_P 2010-09-20 15:40
எங்கும் லஞ்சம் எதிலும் லஞ்சம்...... வாழ்க தமிழ்நாடு.
Quote
 
 
+2 #15 kannan 2010-09-20 12:52
Ramanujam indha unamayai theriyamal eppadi seykirar enna unmai?
"INNIKKU SETTHA NALAIKKU PAALU"

PASUVIN PAALAI PIRITHU VIRKA
PASUMTHOL PORTHIYA PULIYA?

RAJA RAJAN SILAYAI KETKA GUJARATHUKKU AAL ANUPPIYA KARUNA NIDHI
RAMANUJATHAYUM GUJARATH ANAND EPPADI SEYALPADUKIRATH UNNU PARKKA ANUPPALAME !
Quote
 
 
+5 #14 அ.சந்தர் சிங். 2010-09-20 12:39
ஆவின் பாலும் புளிக்கிறதே?

இதுதான் காரணமா?

அந்த கோமாதாவின் சாபம் இவர்களை

சும்மா விடாது.
Quote
 
 
+4 #13 J.B. 2010-09-20 11:39
வாழ்த்துகள். தர்மமும் நியாயமும் இனி மியூசியப் பொருட்கள் போல வழக்கொழிந்து‍ போய்விடுமோ என அச்சமாக உள்ளது.
பாபு
உடுமலை
Quote
 
 
+3 #12 Lakshmidharan 2010-09-20 11:36
Savukku..... palleyum oozhal visham kalandhuthuttat hey ....
aedhaiyum DMK thirudargal vittuvaikkamatt argala...
thamizh nadu engey pogudhuppa....
panam paduthum padu....
yaravadhu shoot panna kilambamattanga la thirudargalai azhikka......
Quote
 
 
+4 #11 Soundar 2010-09-20 09:39
Good article
Quote
 
 
+6 #10 Jayadevi 2010-09-20 07:34
அடடா.. காலாவதி மருந்து விவகாரம் மாதிரி ஆவின் ஆகாம இருக்கனும்!

சவுக்காரே, நானும் எனது தோழிகளும் தங்களின் வலைப்பூவை தொடர்ந்து வாசித்து வருகிறோம். வெளிச்சத்திற்கு வராத பல்துறை சார்ந்த பல பதிவுகளை கொடுத்து பாமர மனிதனுக்கும் புரியும் வகையில் நல்லதொரு சமுதாய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றீர், நன்று.
Quote
 
 
+1 #9 Robin 2010-09-20 07:19
Savukku,
Last two days the hits are getting reduced- I think fatigue is setting in.It is time to move on from Police depta to Politicians. I know you dont do without evidence. Atleast look into knowhn scams like spectrum from your perspective. Old issues of Daily pioneer gave all documents and details which no tamil magazine published. Savukku should look into that also.
Also look at general political scenario and the alliance possibilities and also ground level voter mood etc. The corruption what you say has become well known and failing to excite beyond a point
Robin
Quote
 
 
+1 #8 VIJAY_USA 2010-09-20 06:53
Great effort Savukku. I am trying my level best to popularize your website here in the USA. Just suggeastion - if you can run the English version also, simultaneously, would help our own own tamils who can't read tamil (its a shame though), and even people from other part of the country, especially in north or even Manmohan and Sonia, to get the tryth from horses's mouth!
Please be safe and Keep it up - for the sake of tamils and tamilnadu!
Quote
 
 
+2 #7 ananymous 2010-09-20 05:21
அப்படியே கொஞ்சம் மணல் திருட்டையும் எழுதுங்க......... :o
Quote
 
 
+1 #6 priyanga 2010-09-20 05:19
கலக்குங்க பாஸ் ..........!!!!!!!!!!!!! :P
Quote
 
 
+1 #5 BrokenHeart 2010-09-19 22:37
We appreciate all the efforts of Savukku and wish Savukku all success in his service. However Savukku is writing about corruption to the same society which is corrupt and hardened its hearts to the dying Eelam Tamils. Karunanidhi is successful because he reflects exactly what the society wants and what it is upto. Anyway hoping against hope that Savukku makes some influence.
Quote
 
 
+3 #4 charles 2010-09-19 18:42
intha kayavarkalai makkal munpu niruthi adikkanum
Quote
 
 
0 #3 KUMARESAN 2010-09-19 18:06
blood is thicker than water always successful formula. you are very correct.
Quote
 
 
+1 #2 kadheroli 2010-09-19 17:30
unmaya sonna yaru nampuva nanpa.. Engu yellorukkum 9thara kalyanam pantra matterthan kastama irukku Avin eppadi pona enna nanpa...?????????????
Quote
 
 
+1 #1 thirunavukkarasu 2010-09-19 16:49
keep it up
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 107 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday6320
mod_vvisit_counterYesterday12350
mod_vvisit_counterThis week75572
mod_vvisit_counterLast week80132
mod_vvisit_counterThis month278304
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12800423