முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
ஜெயலலிதாவின் அதிரடியில் ஈடிஏ ஸ்டார் அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 15
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சனிக்கிழமை, 16 ஜூலை 2011 12:17

லைஞர் காப்பீட்டுத் திட்டத்துக்கு மூடுவிழா நடத்திவிட்டார் முதல்வர் ஜெயலலிதா. முந்தைய தி.மு.க. அரசின் பல திட்டங்களை ஜெயலலிதா தவிடுபொடி ஆக்கினாலும், 'புதிய தலைமை செயலகத்துக்கு விசாரணை கமிஷன், கலைஞர் காப்பீட்டுத் திட்டம் நிறுத்தம்’ ஆகியவைதான் கூடுதல் அரசியல் அர்த்தத்தோடு பார்க்கப்படுகிறது. காரணம், இந்த இரண்டு திட்டங்களுக்கும் கருணாநிதிக்கு நெருக்கமான சலாவு​தீனின் இ.டி.ஏ. ஸ்டார் ஒப்பந்தம் எடுத்திருந்தது!

இ.டி.ஏ. ஸ்டார் குழுமத்தின் வளர்ச்சி!

கீழக்கரையில் வைர வியாபாரம் செய்துவந்த பி.எஸ்.அப்துல் ரஹ்மான், இலங்கை, ஹாங்காங், துபாய் என்று தனது சாம்ராஜ்யத்தை விரிவாக்​கினார். மதுரையில் அவரது சேது பிலிம்ஸ் நிறுவனம் 'இதயக் கனி,’ 'உலகம் சுற்றும் வாலிபன்’ போன்ற படங்களைத் தயாரிக்கப் பல வகைகளில் உதவியது. எம்.ஜி.ஆருக்கு நெருக்கமாக இருந்தாலும், கருணாநிதி, மூப்பனார் போன்றவர்களோடும் சமமாகப் பழகினார் அப்துல் ரஹ்மான்.

கருணாநிதி ஆட்சியில் கட்டப்பட்ட அண்ணா மேம்பாலம், வள்ளுவர் கோட்டம் போன்றவை அப்துல் ரஹ்மானின் இ.டி.ஏ. நிறுவனம் கட்டியவைதான். இந்த  நிறுவனத்தில், தனது தூரத்து உறவினரான சையத் சலாவுதீனை வேலைக்கு அமர்த்தினார்.

ஆனால், கொஞ்ச காலத்திலேயே அப்துல் ரஹ்மானுக்குப் போட்டியாக 'இ.டி.ஏ. ஸ்டார்’ என்ற புதிய நிறுவனத்தை சலாவூதீன் தொடங்கிவிட்டார். அப்துல் ரஹ்மானைப்போலவே இவரும் அரசியல் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டார்.

கட்டுமானம், சாலைப் பணிகள், ரியல் எஸ்டேட், மின் மற்றும் வணிகத் திட்டங்​கள், கப்பல் போக்குவரத்து, துறைமுக மேலாண்மை, மெட்ரோ ரயில், ஏர்கண்டிஷன் தொழில்நுட்பம், ஆட்டோமொபைல்ஸ், மின் இயந்திரவியல் பயன்பாடு என்று பல தொழில்களில் விரிந்துகிடக்கிறது சலாவூதீனின் சாம்ராஜ்யம்.

22 நாடுகளில் 50-க்கும் அதிகமான நிறுவனங்கள் அவர் கண் அசைவில் செயல்படுகின்றன. 60 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை பார்க்கிறார்கள். தமிழகத்தில் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம், ரஹேஜா டவர்ஸ், கோட்டூர்புரத்தில் அமைந்து உள்ள புதிய நூலகக் கட்டடம் என்று இ.டி.ஏ. ஸ்டார் தொடாத இடங்களே இல்லை. உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்தும் இந்த நிறுவனத்தின் ஆண்டு விற்பனை மதிப்பு சுமார்  16,000 கோடிக்கு மேல் என்கிறார்கள்.

தி.மு.க. தொடர்பு...

புதிய தலைமைச் செயலகம் கட்டிய 'ஈஸ்ட் கோஸ்ட் கன்ஸ்ட்ரக்ஷன்’, இ.டி.ஏ. ஸ்டார் குழுமத்தின் ஓர் அங்கம். காஞ்சிபுரம் மாவட்டத்தில்  3,750 கோடி செலவில், 350 ஏக்கர் பரப்பளவில் தகவல் தொழில்நுட்ப சிறப்புப் பொருளாதார மண்டலம் மற்றும் ஒருங்​கிணைக்கப்பட்ட நகரியத்தை அமைக்க முந்தைய தி.மு.க. அரசு முடிவு செய்தது. இந்தப் பணியை இ.டி.ஏ. ஸ்டார் ப்ராப்பர்ட்டீஸ் டெவலப்பர்ஸ் லிமிடெட் என்ற நிறுவனத்திடம் ஒப்படைத்தார்கள்.

கலைஞர் காப்பீட்டுத் திட்டம்

2009-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட கலைஞர் காப்பீட்டுத் திட்டத்துக்கு ஸ்டார் ஹெல்த் நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம், சலாவுதீ​னுடன் கருணாநிதிக்கு இருக்கும் நெருக்கம் தான். இந்தத் திட்டத்துக்காக ஆண்டுக்கு  517 கோடியை பிரிமியமாக அரசு செலவழித்தது. முதல் ஆண்டில், பயனாளிகளுக்காக மருத்துவ​மனை களுக்குச் செலுத்தப்​பட்ட தொகை சுமார்  415 கோடி மட்டுமே. இரண்டாவது ஆண்டில்,  750 கோடி பிரிமியம் செலுத்தப்பட்டது. ''மக்களின் வரிப் பணம், பன்னாட்டு கம்பெனிக்கு போய்க்கொண்டு இருந்தது. மக்களின் வரிப் பணத்தில், சுமார்  400 கோடி லாபம் ஈட்டி இருக் கிறது!'' என்று புகார் வாசிக்கப்படுகிறது.

புதிய தலைமைச் செயலகம்

'முதலில்  700 கோடிக்கு தலைமைச் செயலகம் கட்டுவதாகச் சொல்லி,  பிறகு  1,200 கோடி வரையில் பணத்தை செலவழித்தார்கள்!’ என்பது ஜெயலலிதாவின் குற்றச்சாட்டு. வரைபடம் தயாரித்துக் கொடுத்த ஜெர்மன் கம்பெனி, முன்னாள் பொதுப் பணித் துறை செயலாளர் ராம சுந்தரம், அரசு அதிகாரிகள், தோட்டா தரணி, இ.டி.ஏ. ஸ்டார் நிறுவனத்தின் அதிகாரிகளை எல்லாம் விசாரணை கமிஷன் விரைவில் விசாரிக்கப்போகிறது.

ஸ்பெக்ட்ரம்

ஆ.ராசாவின் தயவால் 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் பயனடைந்த நிறுவனங்களில் ஒன்று, ஸ்வான் டெலிகாம் நிறுவனம். ஒதுக்கீட்டைப் பெற்ற பிறகு, அதை 9 மாதங்கள் கழித்து, துபாயின் பிரபல தொலைபேசி நிறுவனமான எடிஸாலட் நிறுவனத்துக்கு 5.7 சதவிகிதப் பங்குகளை அதிக விலைக்கு விற்றது. பிறகு, எடிஸாலட் டிபி என அந்த நிறுவனத்தின் பெயர் மாறுகிறது. மூன்றே மாதத்தில்  380 கோடி மதிப்புள்ள பங்குகளை, எடிஸாலட் டிபி-யிடம் இருந்து வாங்குகிறது இன்னொரு நிறுவனம். அதன் பெயர் 'ஜெனிக்ஸ் எக்ஸிம் வெண்டர்ஸ்’. சென்னையைச் சேர்ந்த இந்த நிறுவனம், வெறும்  1 லட்சம் முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த நிறுவனம் இ.டி.ஏ. ஸ்டார் குழுமத்தின் தலைவர் சலாவுதீனின் மகனைச் சார்ந்தது. இ.டி.ஏ. ஸ்டார் 7.1.2008 அன்று, சென்னை சங்கமம் நிகழ்ச்சிக்கு  1 கோடி கொடுத்தது.

இ.டி.ஏ. ஸ்டார் நிறுவனத்தின் ஆதிக்கத்தைத் தடுத்து நிறுத்தி இருக்கும் ஜெயலலிதா, அடுத்து என்ன செய்யப்போகிறார் என்பதுதான் அனைவரது எதிர்பார்ப்பும்

நன்றி ஜுனியர் விகடன்

 

Comments  

 
+2 #19 Abi 2011-07-22 15:00
[Quoting rajab:
I am proud to be a ETA employe.because it giving life to more than 50000 direct employes and his families and indirectly several lakhs of people in the world.Any part of the world is affect by any natural dissaders ETA help that affected people.So don't mix political in ETA issues.


If a person kill 10 people and feed other 2 people , we will never say him as a mercy/charitable person. The same way if ETA exploited the govt and people's money and do some eye washing helps to poor we definitely should not encourage them. They are the blood sippers..
Quote
 
 
+3 #18 குடுகுடுப்பை 2011-07-22 13:49
Quoting rajab:
I am proud to be a ETA employe.because it giving life to more than 50000 direct employes and his families and indirectly several lakhs of people in the world.Any part of the world is affect by any natural dissaders ETA help that affected people.So don't mix political in ETA issues.

அதான் எடுத்தவுடனே சொல்லிடீங்கல்ல நீங்க ஈ.டி.ஏ ஊழியர்னு...செல்லாது செல்லாது...உங்க சாட்சியம் செல்லாது..
Quote
 
 
+4 #17 சுமன் 2011-07-22 13:24
அரச பொது மருத்துவமனையை ஒழுங்கா நடத்தினால் போதாதா? எதற்கு காப்பீட்டுத்திட ்டங்கள்?

[ஃஉஒடெ நமெ="குமர் ஸுரெஷ்"]கலைஞர் காப்பீட்டுத் திட்டம் மூலம் தவறு செய்தவங்களைத் தண்டிகிறது தப்பு இல்லை. ஆனால் காப்பீட்டுத் திட்டத்தை பொது நிறுவனத்தின் மூலம் நடத்தாமல் மூடு விழா நடத்துவது எப்படி சரி ஆகும்???[/ஃஉஒடெ]
Quote
 
 
+5 #16 Kumar_pdy 2011-07-21 10:58
சார் அப்படியே இந்த ஸ்ட் கார்கோ எப்படி குறுக்கு வழியில் முன்னுக்கு வந்தார்கள் என்பதை எழுதினால் நிறைய பேர் முகத்திரையை கிழித்து எறியலாம்.
Quote
 
 
+8 #15 system 2011-07-20 19:59
ஜுனியர் விகடன் ஒரு தக்வலை மரந்து விடது. மூன் டிவி யும் இவர்கலுடையது தான்.
Quote
 
 
+9 #14 theko 2011-07-20 11:11
ETA STAR GlobeVill விற்பனை செய்வதற்குதான் தூங்கி விட்ட green field விமான நிலையம் project மீண்டும் செய்திகளில் வரவைத்தார் திரு கருணாநிதி. இதன் மூலம் சதுரம் 1850 ரூபாய் விலை இருந்த வீடுகள் 2300 -2500 வரை விற்கப்பட்டது.
Quote
 
 
+17 #13 kanipriyan 2011-07-20 10:08
இந்த கேப்மாரி பய பேருல இந்த திட்டத்த ஆரம்பிச்சதுக்கு பதிலா இந்த பணத்துல ஒவ்வொரு மாவட்டத்திலும் சகல வசதிகளோடையும் ஒரு மருத்துவ கல்லூரியுடன் கூடிய பிரம்மாண்டமான நவீன மருத்துவமனைகள கட்டியிருக்கலாம ்..அதுவே போதும் எல்லாவிதமான பிரச்சினைகளுக்க ும் தீர்வு கிடைக்க...அத விட்டுட்டு மக்களோட வியாதியிலையும் பொறுக்கி தின்னுருக்கானுங ்க பாருங்க..இவனுங்கள என்னன்னு சொல்றது?
Quote
 
 
+3 #12 RaBaSha 2011-07-20 09:27
Winning Govt. contracts cannot be a straight forward process with out under the table dealing... that too MK has always awarded major contracts to the same group (Gemini Flyover, Valluvar kottam to new assembly complex, central library, star insurance etc)... just because they are providing jobs to Tamilians or Indians in Dubai they cannot be overlooked here. Sorry mates... a crime is a crime is a crime.
Quote
 
 
0 #11 sriperumbudur 2011-07-20 09:20
sriperumbudur l kattapadam ETA Star Globevill kumbal anga irukkum nilathai kuraindha vilaikki miratti vangi ullargal endru andha area vil koora ketten...avargal vilambaram seiyum edam innum pathiram padivu kooda seiyavillai endru korapadukirathu . oru tamilnattu vip perai solli avar inga irukkum edathai ellam vaangi koranja velaiki than ....ETA vukku virpangalam..ETA avargalukku indirecta Share holderaam ...paavam anga sila nanbargal nilathai vangi indha mirattalukku bayandhu ivaragaluku kuraindha vilaiki vitruvittargal .
Quote
 
 
+11 #10 கஜா கா தோஸ்த் 2011-07-19 20:49
ஈ.டி.ஏ குழுமத்தில் யாரை வேலைக்கு எடுக்கிறார்கள்...என்ன மாதிரி மோல்ட் செய்கிறார்கள் என்பது விஷயம் அறிந்தவர்களுக்க ு நன்கு தெரியும்..மக்கள் பணத்தை ஊழல் செய்து ராமநாதபுரம் மாவட்ட மக்களுக்கு நல்லது செய்தால் அது ரொம்ப நல்ல நிறுவனமா? மக்கள் பணத்தை யார் முறையற்ற முறையில் கவர்ந்தாலும் அது திருட்டுதான்..இனி நடக்க போகும் விசாரணையில் ஈ.டி.ஏ வின் முழு ரூபம் வெளிப்படும்..
Quote
 
 
+9 #9 Suresh Raja 2011-07-19 19:01
செய்யுறது மக்கள் (நம்மோட) வரி பணத்துல... இதுல இந்த பேமானி பய பேர எதுக்கு போடணும்? திட்டம் பேரு மாற்றத்தோட 950 நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும்னு சொன்னப்போவே இந்த ஸ்டார் என்னாச்சுன்னு நெனச்சேன்... இப்போ சந்தோசம். அந்த நிறுவனம் அடிச்ச 400 கோடிக்கு எத்தன (பின் தங்கிய) மாவட்டத்துல தொழிற்சாலைகள் கட்டி இளைஞர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு குடுத்துருக்கலா ம்??? யோசிங்கப்பா... :eek: :eek: :eek: :eek: :eek:
Quote
 
 
+11 #8 Iridium Cobra 2011-07-19 18:52
பல ஆயிரம் பேர்களுக்கு வேலை தருகிறார்கள், இயற்கை சீற்றத்தால் பாதிக்கபட்டவர்க ளுக்கு உதவுகிறார்கள் என்பதற்காக ஒரு நாட்டின் சட்டங்களை மீறும் வகையில், குறுக்கு வழியில், அதிகாரத்தில் உள்ளவர்களின் துணையோடு, இந்திய நாட்டு மக்களின் பணத்தை கொள்ளை அடிப்பதை கேள்வி கேட்க கூடாது எனக்கூறுவது மகா முட்டாள்தனம். இப்படி நாட்டு மக்களில் 99.99 % பேர் நமக்கு என்ன எனவும் எவன் திருடிவிட்டு போனால் என்ன என்று இருப்பதினால்தான ், அரசியல்வாதிகளும ், அரசு அதிகாரிகளும், ஊழல் செய்யும் நிறுவனகளும் கூட்டு சேர்ந்து மக்களின் பணத்தை கூட்டுக்கொள்ளை அடிக்கின்றன. மக்களின் பலம், அதிகாரம், சக்தி போன்றவைகளை உணர்ந்து, ஒரு மாவட்டத்திற்கு வெறும் 500 பேர் முறையான வகையில் அரசு அதிகாரிகளை கேள்வி கேட்டாலே ஊழல் செய்யும் அரசு அதிகாரிகளின் நிலை ஆட்டம் காணத்தொடங்கும். லோக்பால் மசோதா கொண்டு வர பாடுபடும் அன்ன ஹசாரே அவர்களின் கூட இருக்கும் அவரைப்போன்ற கருத்துடையவர்கள ின் எண்ணிக்கை 200 ஐ தாண்டாது. இந்த 200 பேர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல காங்கிரஸ் அரசு என்ன பாடுபடுகிறது என்பது நாடே அறியும்.
Quote
 
 
-4 #7 thilak kannan 2011-07-19 16:41
இன்னும்
Quote
 
 
-8 #6 Kumar Suresh 2011-07-19 12:37
கலைஞர் காப்பீட்டுத் திட்டம் மூலம் தவறு செய்தவங்களைத் தண்டிகிறது தப்பு இல்லை. ஆனால் காப்பீட்டுத் திட்டத்தை பொது நிறுவனத்தின் மூலம் நடத்தாமல் மூடு விழா நடத்துவது எப்படி சரி ஆகும்???
Quote
 
 
+13 #5 anbumozhi 2011-07-19 11:40
இன்னும் இவர் எத்தனை காலம் வாழப்போகீரார் எதர்க்கு இந்த பண ஆசை
Quote
 
 
+11 #4 Vishu 2011-07-19 11:16
I also worked in ETA group long back. Converting black money through their charitable trust, criticising Hindu religion in their library, Foreign Exchange Regulation Act violation, corruption to maximum. It is the trademark of Rehman and Salauddin groups.
Quote
 
 
-21 #3 shabir 2011-07-19 11:14
ETA is feeding thousand of families ,politician's can do as their own will and wish.noone can touch eta group.we are proud of ETA mind it
Quote
 
 
-22 #2 நல்லுரையான் 2011-07-19 09:54
சவுக்கு சார் , இ.டி.ஏ. ஸ்டார் விவகாரத்தில் மேம்போக்கான விமர்சனம் செய்கிறீர்கள் என்றே நினைக்கிறேன் . இ.டி.ஏ. ஸ்டார் பிந்தங்கிய ராமநாதபுரம் , தூத்துக்குடி மாவட்ட இளைஞர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு ஏற்பாடு செய்து கொடுத்துள்ளது .
Quote
 
 
-65 #1 rajab 2011-07-19 00:01
I am proud to be a ETA employe.because it giving life to more than 50000 direct employes and his families and indirectly several lakhs of people in the world.Any part of the world is affect by any natural dissaders ETA help that affected people.So don't mix political in ETA issues.
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 44 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday1632
mod_vvisit_counterYesterday10391
mod_vvisit_counterThis week1632
mod_vvisit_counterLast week80132
mod_vvisit_counterThis month204364
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12726483