முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
சமச்சீர் கல்வி - தினமணி தலையங்கம் அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 5
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
செவ்வாய்க்கிழமை, 19 ஜூலை 2011 07:10

சமச்சீர் கல்வியை இந்தக் கல்வியாண்டு முதலாகவே அமல்படுத்த வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிவிட்டது. இதை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஏற்கெனவே உயர் நீதிமன்றம் இதைத்தான் சொன்னது. அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டபோது, ஒரு நிபுணர் குழுவை அமைக்க ஆலோசனை வழங்கி, உயர் நீதிமன்றத்திலேயே அந்தக் குழுவின் பரிந்துரைகளைத் தாக்கல் செய்யச் சொன்னது உச்ச நீதிமன்றம். அதன் அடிப்படையில் உயர் நீதிமன்றம் இதில் தீர்ப்பு வழங்கும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்ததன் பின்னணியில்தான் மீண்டும் இந்தத் தீர்ப்பை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 

இதை எதிர்த்து மேல்முறையீடு செய்வதாக இருந்தால் செய்யலாம்தான். ஆனால், அதனால் என்ன பயன் கிடைத்துவிடும் என்பதை மறுபரிசீலனை செய்தாக வேண்டிய மிகமுக்கியமான தருணத்தில் இருக்கிறது தமிழக அரசு.

 

தொடக்கம் முதலே இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு தமிழக அரசுக்குச் சாதகமாகத்தான் இருக்கிறது என்பதை ஏன் தமிழக அரசு உணர்ந்துகொள்ளவில்லை என்பதும், நீதிமன்றத் தீர்ப்பை தனக்கு எதிரானதாக ஏன் கருதுகிறது என்பதும் விளங்காத புதிர்.

 

சமச்சீர் கல்வி கூடாது என்பது தமிழக அரசின் நோக்கமல்ல. சமச்சீர் கல்வித் திட்டத்தில் சில திருத்தங்கள் தேவை என்பதுதான் தமிழக அரசின் விருப்பம். சில பாடங்கள் அடுத்த பாடத்துடன் தொடர்பு இல்லாமல் இருப்பதாகவும், சில பாடங்கள் தரமானதாக இல்லை என்பதும், ஆகவே பாடத் திட்டத்தை மாற்றியமைக்க வேண்டியது அவசியம் என்பதும் தமிழக அரசின் நியாயமான வாதம். அதை நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டுள்ளது. பாடத்திட்டத்தில் சில பகுதிகளை நீக்குவதும், சேர்ப்பதும் தமிழக அரசின் கல்வித்துறையைப் பொறுத்த விவகாரம் என்று நீதிமன்றம் தெளிவாகவே சொல்லிவிட்டது.

 

தமிழக அரசின் அடிப்படை நோக்கத்தில் நீதிமன்றம் குறுக்கீடோ தடையோ செய்யவில்லை. நீதிமன்றம் சொல்லும் ஒரே விஷயம், இந்தக் கல்வியாண்டே சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என்பதுதான். அந்த ஒரு விஷயம்தான் இப்போது தமிழக அரசைச் சங்கடப்படுத்துவதாக இருக்கிறது.

 

சமச்சீர் கல்வியை அமல்படுத்துவதும், தமிழக அரசு எந்தப் பாடங்கள் எல்லாம் திணிப்பு என்று கருதுகிறதோ அவற்றையெல்லாம் நீக்கி, தரமானதாக மாற்றுவதும் தமிழக அரசுக்கு மிகமிகச் சுலபம். இந்தப் பிரச்னையில் தமிழக அரசின் செயல்பாடு எப்படி இருக்க வேண்டும் என்பதை "எதிர்காலம் பாதிக்காமல்' என்ற தலைப்பில் 23.6.2011 அன்று நாம் எழுதிய தலையங்கத்தில் தெளிவாகவே குறிப்பிட்டிருக்கிறோம்.

 

நிச்சயமாக கடந்த அரசால் பரிந்துரைக்கப்பட்ட சமச்சீர் கல்விப் பாடத்திட்டத்தில் பல குறைபாடுகள் இருக்கின்றன என்பதையும், திமுக ஆட்சியாளர்கள் சிலவற்றை வேண்டுமென்றே திணித்திருக்கிறார்கள் என்பதையும் பாடநூல்களில் காண முடிகிறது. ஒரு குழந்தைக்கான பாடப்புத்தகத்தில், சூரியன் உதிப்பது கிழக்கு என்று படம் போடுவதில் தவறில்லை. அதை உதயசூரியன் சின்னத்தைப்போல போடுவது ஆட்சியாளர்களின் குறுகிய மனநிலையைத்தானே காட்டுகிறது. மின்காந்த விசையைச் சித்திரமாக வரையும்போது அது உதயசூரியனின் கதிர்கள்போல விரிய வேண்டிய தேவை இல்லைதான். சின்னஞ்சிறு குழந்தைகளுக்குத் தரப்படும் பள்ளிக்கூடப் பாடப்புத்தகம் என்ன கரைவேட்டியா? ஆங்கிலப் பாடப்புத்தகத்தில் எழுத்துகளைக் கருப்பு சிவப்பு வண்ணங்களில் பிரசுரித்திருக்கிறார்களே என்று கேட்கலாம். இவை தப்புதான். இதையெல்லாம் நீக்கிவிட்டு முறையாகப் பாடநூல்களை அச்சிடுவதும், பாடங்களை முறைப்படுத்துவதும் மிகவும் அவசியம்தான். அதை நீதிமன்றமும் அங்கீகரிக்கும்போது, ஏன் சமச்சீர் கல்வித் திட்டத்தை அமல்படுத்தாமல் தள்ளிப்போட வேண்டும்?

 

இன்று இந்தத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று வழக்குத் தொடுக்கும் சமூக ஆர்வலர்களும் முன்னாள் ஆசிரியர்களும், கல்வியாளர்களும் முந்தைய அரசு இந்தப் புத்தகத்தைப் பதிப்பிக்கும்போதே, கல்வியாளர்களுக்கு ஒரு மாதிரிப் புத்தகத்தை அச்சிட்டுக் காட்டி, ஒருமித்த கருத்துக் கிடைத்த பிறகே அச்சிடுவதைத் தொடர வேண்டும் என்று அன்றைய திமுக அரசைக் கேட்டிருந்தால் அல்லது நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தால், இன்று பாடப்புத்தகத்தில் உள்ள தேவையில்லாத சில படங்கள், பகுதிகள் ஆகியவற்றுக்காக இன்று தமிழகப் பள்ளிக் கல்வியே முடங்கிப் போகும் சூழல் ஏற்பட்டிருக்காது. அவர்கள் ஏன் அப்படிச் செய்யவில்லை? அவர்கள் ஏன் கருணாநிதியைக் குறை சொல்லாமல் என்னை மட்டுமே குறை சொல்கிறார்கள் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கேட்டால் அந்தக் கேள்விக்கான நியாயத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது.

 

ஆனால், அதற்காக சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்திவைப்பது, கல்விச்சூழலை ஏளனப்படுத்துவதோடு, மாணவர்களின் மனநிலையிலும் பாதிப்புகளை ஏற்படுத்திவிடும். ஆகவே தமிழக அரசு மேல்முறையீடு செய்வதை விடுத்து, தேவையற்ற பகுதிகளை நீக்கிவிட்டு, புதிய பகுதிகளை அடுத்த அரையாண்டுத் தேர்வுக்குப் பின்னர் சேர்த்து, சமச்சீர் கல்வியை அமல்படுத்துவதுதான் முறையானது.

 

சமச்சீர் கல்வித் திட்டத்தைப் பொறுத்தவரை நமது கருத்தில் மாற்றமே இல்லை. அகில இந்தியத் தரத்திலான, சிறந்த தனியார் பள்ளிகளில் கற்பிக்கப்படும் தரத்திலான ஒரே கல்வித்திட்டம்தான் தமிழகத்தில் இருக்க வேண்டும். சமச்சீர் கல்வி என்ற பெயரில் தரம் குறைந்த கல்வித் திட்டமும் ஏற்புடையதல்ல. அதேநேரத்தில், அரசுப் பள்ளிகளில் ஒரு கல்வி, தனியார் பள்ளிகளில் வேறொரு பாடத்திட்டம் என்பதும் ஏற்புடையதல்ல.

 

ஒரு சிக்கலைத் தனக்குச் சாதகமாக மாற்றுவதுதான் திறமை. ""சொத்துகள் முழுவதும் தனது அடிமைக்கே சொந்தம், என் உடைமைகளில் ஏதேனும் ஒன்றை மட்டும் பெறுவதற்கு என் மகன் உரிமை படைத்தவர்'' என்று ஒரு தந்தை உயில் எழுதியபோது, அவரது மகன் கோபம் கொள்ளவில்லை, "என் அப்பாவின் அடிமை எனக்கும் அடிமையாக வேண்டும்' என்றானாம்.

 

சமச்சீர் கல்வியைத் தரமானதாக, தவறுகள் இல்லாததாக மாற்றுங்கள். ஆனால், இந்த ஆண்டே அமல்படுத்துங்கள். பள்ளிகளில் பாடம் எதுவும் நடத்தப்படாமல் மாணவ, மாணவியர் வெட்டிப் பொழுது போக்குகிறார்கள். பெற்றோர்களும், ஆசிரியர்களும் குமுறுகிறார்கள். அரசின்மீது வெறுப்பு ஏற்படாவிட்டாலும், பள்ளிக்கல்வித் துறையின் செயல்பாடுகள் பற்றிய சலிப்பு ஏற்பட்டிருக்கிறது. இது நல்லதற்கல்ல.

 

பிச்சைக்கு மட்டுமே ஏற்பது இகழ்ச்சி, தீர்ப்புக்கு அல்ல!

 

நன்றி தினமணி

 

Comments  

 
0 #18 NAKKERAN 2011-07-24 21:53
ITHUTHAN PERIAR SINTHANAIYO? ARIVALAYAM SEZHITHU VALARA VENDUM ENPATHARKAKA THAYAGATHAIYUM KAMALAYALATHAIY UM IDITHUVIDAVEDUM A? INNUM EN INNTHA PERIYARAI VITHU KASU PARKKUM KUMPALAKKU THERIYAVILLAI? HINDI THERINTHAVARKAL UKKUTHAN CENTRAL MINISTER ENDRU ARIVITHATHU ENN? PARPANAN.....PARPANAN... EN INTHA MULAKKAM IVARKAL KUMBAL ADITHA KOLLAIYAI THERIVIPPATHAL... AVA MEETHU KADUPPU..KELE ULLAVARKALAI MELA ERTRATHAN ENI MELA IRUPPAVARKALAI KELE THALLIVITTUTTU ITHUTHAN SAMACHEER?
Quote
 
 
0 #17 டங்குவாரு அந்துரும் 2011-07-24 13:47
சமச்சீர் கல்வி பாடத்திட்டம் தரமற்றது என்று கூறுவோர் அந்த பாடப் புத்தகங்களைப் பார்த்துவிட்டு அதில் உள்ள தவறுகளை சுட்டிக் காட்ட வேண்டும். அதை விடுத்து வெறுமனே, பாடத்திட்டம் சரியில்லை என்பது முட்டாள்தனமான செயல்.
Quote
 
 
0 #16 test 2011-07-23 22:46
தினமணி அதிமுக கட்சி பதிரிகையா மாரி ரொம்ப நாள் ஆயிடுச்சு
Quote
 
 
+1 #15 Abi 2011-07-22 15:29
[ஃஉஒடெ நமெ="ப்ரப்ஹகரன்.வ்"][ஃஉஒடெ நமெ="ப்ரப்ஹகரன்.வ்"]சமச்சீர் கல்வி அமல்படுத்துவதில ் சவுக்கின் மன நிலை என்ன? அனேக புத்தகங்களை போதம்கின் என்பவர் வினவு தலத்தில் விளக்கி எழுதி இருக்கிறார், நானும் படித்து பார்த்தேன் நன்றாகத்தானே இருக்கிறது, ஒரு சில இடங்களில் கருணாநிதி புராணம் பாடப்பட்டு இருக்கிறது அதுவும் தமிழ் பாடத்தில் தான் இருக்கிறது, அறிவியல், கணிதம் நன்றாக இருக்கிறது. இந்த அரசு தமிழ் பாடநூலை வேண்டுமானால் , மாற்றி அமைக்கலாம், மற்ற பாட புத்தகத்தை விநியோகம் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே ? சவுக்கு இதை கண்டிக்காதது ஏன்? ஜெயலலிதாவை நேரடியாக கண்டித்து பதிவு எழுதினால் வீட்டிற்கு ஆட்டோ வரும் என்ற பயமா?
கருணாநிதி அரசு இருக்கும் போது எதனை எதிர்ப்பு கட்டுரை எழுதினீர்கள், நாங்கள் உங்களுக்கு துணையாக இருந்தோமே, இப்போது என்ன பயம் உங்களுக்கு ஜெயலலிதாவை எதிர்பதற்கு[/ஃஉஒடெ]

எந்த விசயம் என்றாலும் ஆதரவு எதிர்ப்பு என்பதையும் தாண்டி நடுனிலை கூட உண்டு தோழர் அவர்களே..
Quote
 
 
+1 #14 Abi 2011-07-22 15:27
சமச்சீர் கல்வி என்ற பெயரில் தரம் குறைந்த கல்வித் திட்டம் அமுல்படுத்துவதை ஜெயலலிதா அரசு விரும்பாதது கூட ஒரு காரணமாக இருக்கலாம் இல்லையா... தனியார் பள்ளிகளின் கல்வி திட்ட தரத்திற்கு இணையாக அரசு பள்ளிகளின் தரம் உயர்த்தப் பட்டால் அது வரவேற்க்க தக்கது.. ஆனால் அரசு பள்ளிகளின் பாட திட்டத்திற்கு ஏற்ப தனியார் பள்ளிகளின் கல்வி திட்ட தரம் குறைக்கப் பட்டால் அதையும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டுமா ? அரசு பள்ளிகளின் பாடம் தனியார் பள்ளிகளின் பாட திட்டத்திற்கு இணையானது என்று யாரும் சப்பை கட்டு கட்ட முடியாது.. ஏற்கனவே ஹிந்தி ஒழிப்பு என்று சொல்லி தமிழ் நாட்டு எல்லையை தாண்ட முடியாத நிலை.. இதில் உள்ளதும் போச்சுடா என்பதைப் போல கல்வி தரத்திலும் dilution a ..?
Quote
 
 
0 #13 prabhakaran.v 2011-07-21 15:29
[quote name="prabhakaran.v"]சமச்சீர் கல்வி அமல்படுத்துவதில ் சவுக்கின் மன நிலை என்ன? அனேக புத்தகங்களை போதம்கின் என்பவர் வினவு தலத்தில் விளக்கி எழுதி இருக்கிறார், நானும் படித்து பார்த்தேன் நன்றாகத்தானே இருக்கிறது, ஒரு சில இடங்களில் கருணாநிதி புராணம் பாடப்பட்டு இருக்கிறது அதுவும் தமிழ் பாடத்தில் தான் இருக்கிறது, அறிவியல், கணிதம் நன்றாக இருக்கிறது. இந்த அரசு தமிழ் பாடநூலை வேண்டுமானால் , மாற்றி அமைக்கலாம், மற்ற பாட புத்தகத்தை விநியோகம் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே ? சவுக்கு இதை கண்டிக்காதது ஏன்? ஜெயலலிதாவை நேரடியாக கண்டித்து பதிவு எழுதினால் வீட்டிற்கு ஆட்டோ வரும் என்ற பயமா?
கருணாநிதி அரசு இருக்கும் போது எதனை எதிர்ப்பு கட்டுரை எழுதினீர்கள், நாங்கள் உங்களுக்கு துணையாக இருந்தோமே, இப்போது என்ன பயம் உங்களுக்கு ஜெயலலிதாவை எதிர்பதற்கு
Quote
 
 
-1 #12 suri 2011-07-21 09:13
சவுக்கு ஒரு பார்ப்பான் என்று தெரிந்த
முதல் நான் அவரை படிப்பதில் ஆர்வம்
காட்ட வில்லை .
இப்போது மொஸ குட்டி வெளியே
வந்து கொண்டு இருக்கிறது
உன்னோட பார்ப்பன தனத்தை
நிறுத்து.
Quote
 
 
0 #11 Iyyavu 2011-07-20 10:05
ஆத்திரம் கண்ணை மூடும் போது அறிவுக்கு அங்கு வேலை இல்லை. அதனால் குழப்பம். பாவம் . மனம் வேதனைப் படுக
Quote
 
 
+4 #10 rag 2011-07-20 07:11
பசங்க உயர்ர்ர்..ந்த படிப்பு படிக்கனும்னு எங்க முதல்வர் மம்மிக்கு தான் என்னா ஒரு வெறி. விட மாட்டாங்க போலிருக்குதே! மம்மி அவர்களே.. இப்போ என்னா ஆயி போயிச்சின்னு இப்படி ஹைகோர்ட்டுக்கும ் சுப்ரீம் கோர்ட்டுக்கும் இந்த அலை அலையிறீங்க? இந்த கோர்ட்டு, தீர்ப்பு, ஜட்ஜ், இத்யாதி இதுக்கெல்லாம் எப்படி அல்வா குடுக்கற‌துன்னு உங்களுக்கு தெரியாதா? என்னா பெரிய தீர்ப்பு.. ஜுஜுபி. அதான் கூடவே "குறைகள் இருந்தால் நீக்கிட்டு 3 மாசத்துல திருத்த பட்ட பாடங்களை தனியா குடுத்துடலாம்னு " சொல்லியிருக்காங ்களே. போதாதா நமக்கு? "குறை தான்னு" சொல்லி எல்லா பக்கத்துலயும் ஸ்டிக்கரை ஒட்டி மூடிட்டு, 3 மாசத்துல பழைய பாட புத்தகங்களை அச்சடிச்சி "இது தான் திருத்தப்பட்ட பாடம்னு" சொல்லி குடுத்துடுங்க.அப்புறம் அதிமுக சொம்புங்க நாங்க‌எல்லாருமா "பாத்தீங்களாய்யா எங்கம்மா கோர்ட்டு தீர்ர்ப்பையும் மீறாம தான் நினைச்சதையும் சாதிச்சி காட்டிட்டாங்க"ன்னு சொம்படிச்சி கூவிடுறோம். மேட்டரு ஓவரு. அதுக்கப்புறம் எவன் இந்த தமிழ்நாட்டுல உங்களுக்கு எதிரா கேஸ் போடுவான்னு பாத்துடலாம். எப்புடி? இப்படி சிம்பிளா முடிக்கிற விஷயத்துக்கு சோமாறி பசங்க பேச்சை கேட்டுகிட்டு இந்த குதி குதிக்கிறீங்களோ போங்கோ
Quote
 
 
+1 #9 சீனி மோகன் 2011-07-20 01:22
[ஃஉஒடெ நமெ="முபரக் குநைட்"]சமச்சீர் கல்வி அமல்படுத்துவதில ் சவுக்கின் மன நிலை என்ன? அனேக புத்தகங்களை போதம்கின் என்பவர் வினவு தலத்தில் விளக்கி எழுதி இருக்கிறார், நானும் படித்து பார்த்தேன் நன்றாகத்தானே இருக்கிறது, ஒரு சில இடங்களில் கருணாநிதி புராணம் பாடப்பட்டு இருக்கிறது அதுவும் தமிழ் பாடத்தில் தான் இருக்கிறது, அறிவியல், கணிதம் நன்றாக இருக்கிறது. இந்த அரசு தமிழ் பாடநூலை வேண்டுமானால் , மாற்றி அமைக்கலாம், மற்ற பாட புத்தகத்தை விநியோகம் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே ? சவுக்கு இதை கண்டிக்காதது ஏன்? ஜெயலலிதாவை நேரடியாக கண்டித்து பதிவு எழுதினால் வீட்டிற்கு ஆட்டோ வரும் என்ற பயமா?
கருணாநிதி அரசு இருக்கும் போது எதனை எதிர்ப்பு கட்டுரை எழுதினீர்கள், நாங்கள் உங்களுக்கு துணையாக இருந்தோமே, இப்போது என்ன பயம் உங்களுக்கு ஜெயலலிதாவை எதிர்பதற்கு.[/ஃஉஒடெ]
வழி மொழிகிறேன்.
Quote
 
 
0 #8 aha 2011-07-19 18:30
If universal education is without degrading the matric and other schools no one is going to oppose. The issues are not with MK's lessons for a year.He has already lost in the propaganda war.What is the use of them now? Given that,studying something now is better than nothing, TN Govt needs to show flexibility.Arrogance in Jaya many times has blocked her vision.
Quote
 
 
-4 #7 Doha ravi 2011-07-19 17:52
சமச்சீர் கல்வியை ஜெயா விடம் எதிர்பார்ப்பது எவ்வலவு பெரிய மூடத்தனமோ அதை விட பெரிய மூடத்தனம் சவுக்கிடம் நடுனிலையை எதிர்பார்பது. சவுக்கு உன் போக்கை மாட்ராவிட்டால் இன்னும் 3 மாதத்தில் ஒரு நாலைக்கு 20,000 பேர் பார்க்கும் இனையதலம் 1000 க்கும் கீலெ குரைவது உருதி.!!
Quote
 
 
+8 #6 su.raghuraman 2011-07-19 16:30
உயர் நீதி மன்றத்தின் தீர்ப்பை தன்னுடைய கௌரவ பிரச்னையாக கருதாமல் மாணவர்களின், பெற்றோர்களின், நலத்தை மனதில் வைத்து முதலமைச்சர் நீதிக்கு தலை வணங்கி ஏற்றுகொள்ள வேண்டும்.
Quote
 
 
+4 #5 Ramamoorthy, Dubai 2011-07-19 16:08
கருணாநிதி கொண்டு வந்த சமச்சீர் கல்வி, மெட்ரிக் பள்ளிகளின் தரம் நகராட்சி பள்ளிகளின் தரத்திற்கு கொண்டு வருவது போலாகும், அரசு பள்ளிகளின் தரத்தை மெட்ரிக் பள்ளிகளின் தரத்திற்கு இணையாக உயர்த்துவது அல்ல.
உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எத்தனையோ தீர்ப்புகள் உச்ச நீதி மன்றத்தில் "திருத்தி" அமைக்கப்பட்டுள் ளன. அதில் இதுவும் ஒன்றாய் இருக்கலாம். முன்பு "ஹிந்தி" பாடம் படிக்காமல் ஒரு தலைமுறையே எவ்வளவு பாதிக்க பட்டது என்று இன்றைய பெற்றோராகிய உள்ளங்களுக்கு தெரியும். அந்த நிலை வரவே கூடாது என்பதற்காகத்தான ் அம்மாவின் அரசு பாடுபடுகின்றது.
ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது பல மாதங்கள் படிப்பு பாதித்தது மறந்து விட்டது. அதைப் பற்றிய குற்ற உணர்வு இல்லாததை விட மோசம், அதை மொழிப் போர் என்றும் தன்னை தியாகி என்றும் கூறிக் கொள்வது. கண்டிப்பாக ரயில் ஏறிச் செல்லாது என்றும், இன்று பக்கத்தில் பல நூறு பேர்களை வைத்துக் கொண்டு அஞ்சா நெஞ்சன் என்று சொல்லிகொள்ளும் பேடியைப் போலே, பலத் தொடர்கள் துணை இருக்க தண்டவாளத்தில் ( உள்ளூர பயந்துகொண்டே ) படுத்தப் போராளி! இன்று பிள்ளைகளின் படிப்பை பற்றி நீலிக் கண்ணீர் வடிக்கின்றார்
Quote
 
 
0 #4 நாயகன் 2011-07-19 14:53
{mubarak kuwait) avargale nalla naakai pudunkikira mathiri kettinga ponga...

sankar jeyalalitha yethirppu yendra peyaril viraivil oru uppu sappu illatha pathivai ....poduvar ..

athai padithi vittu savukku oru nadunilai pathirikai yendu nam ninaithukondu pogavendum ... ...oh ippothu purigirathu nakeeran dmk support ...savukku ...purrr ooops
Quote
 
 
+8 #3 Vijay123 2011-07-19 11:21
எனக்கு என்னமோ நீங்க தேடி தேடி தற்போதைய தமிழக அரசுக்கு வக்காலத்து வாங்கும் செய்திகளையே போடுகிறீர்களோ என்று தோன்றுகிறது. சமச்சீர் கல்விக்கு எதிராக அரசு செயல்படுவது கண்டிப்பாக மாணவர்கள் நல்ல கல்வி கற்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் கிடையாது. பழி வாங்கல், முந்தைய அரசு ஆரம்பித்து வைத்ததால் அவர்களுக்கு பெயர் வந்து விட கூடாது மற்றும் பல தனியார் பள்ளிகள் தொழில் பாதிக்கும் என்ற காரணத்தினால் தான்.
Quote
 
 
+3 #2 நடுனிசி நாயகன் 2011-07-19 10:47
ஆத்திரம் கண்ணை மூடும் போது அறிவுக்கு அங்கு வேலை இல்லை. அதனால் குழப்பம். பாவம் குழந்தைகள். மனம் வேதனைப் படுகிறது
Quote
 
 
+13 #1 mubarak kuwait 2011-07-19 10:18
சமச்சீர் கல்வி அமல்படுத்துவதில ் சவுக்கின் மன நிலை என்ன? அனேக புத்தகங்களை போதம்கின் என்பவர் வினவு தலத்தில் விளக்கி எழுதி இருக்கிறார், நானும் படித்து பார்த்தேன் நன்றாகத்தானே இருக்கிறது, ஒரு சில இடங்களில் கருணாநிதி புராணம் பாடப்பட்டு இருக்கிறது அதுவும் தமிழ் பாடத்தில் தான் இருக்கிறது, அறிவியல், கணிதம் நன்றாக இருக்கிறது. இந்த அரசு தமிழ் பாடநூலை வேண்டுமானால் , மாற்றி அமைக்கலாம், மற்ற பாட புத்தகத்தை விநியோகம் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே ? சவுக்கு இதை கண்டிக்காதது ஏன்? ஜெயலலிதாவை நேரடியாக கண்டித்து பதிவு எழுதினால் வீட்டிற்கு ஆட்டோ வரும் என்ற பயமா?
கருணாநிதி அரசு இருக்கும் போது எதனை எதிர்ப்பு கட்டுரை எழுதினீர்கள், நாங்கள் உங்களுக்கு துணையாக இருந்தோமே, இப்போது என்ன பயம் உங்களுக்கு ஜெயலலிதாவை எதிர்பதற்கு.
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 151 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday5866
mod_vvisit_counterYesterday14175
mod_vvisit_counterThis week62768
mod_vvisit_counterLast week80132
mod_vvisit_counterThis month265500
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12787619