முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
இவர்களை தெரிந்து கொள்ளுங்கள். அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 68
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
ஞாயிற்றுக்கிழமை, 26 செப்டம்பர் 2010 17:34

 

இவர்கள் யார் என்பது தெரியுமா ?   இவர்களை உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம்.   ஆனால் உங்களை இவர்களுக்குத் தெரிந்திருக்கலாம்.   உங்கள் அந்தரங்கங்களும் தெரிந்திருக்கலாம்.   உங்களுக்கு யார் மீது கோபம், யாருடன் நீங்கள் நெருக்கம், யாரை உங்களுக்கு சுத்தமாக பிடிக்காது அத்தனையும் இவர்களுக்கு தெரியும்.

 

நீங்கள் என்று குறிப்பிடுவது, சவுக்கு வாசகர்கள் மட்டுமல்ல.   சமுதாயத்தின் முக்கியப் புள்ளிகளாக இருக்கும் அனைவரும் தான்.   நீதிபதிகள், வழக்கறிஞர்கள், அரசியல் பிரமுகர்கள், பத்திரிக்கையாளர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள், ஐஏஎஸ் அதிகாரிகள், ஆகிய உங்கள் அனைவருக்கும் இந்த நபர்கள் சவாலானவர்கள் தான்.

 

பில்டப் போதுமல்லவா ?   இந்த இருவரும் தொழில் நுட்ப பிரிவைச் சேர்ந்தவர்கள் .   காவல்துறையில், Technical Sub-Inspector of Police என்று ஒரு பதவி உண்டு. இந்த இருவரில் ஒருவர் தொழில் நுட்ப உதவி ஆய்வாளர் மற்றவர் தொழில் நுட்ப ஆய்வாளர்.   இவர்கள் இருவருக்கும் ஏ.சி கார்கள் வழங்கப் பட்டுள்ளன.   டிஎஸ்பிக்களுக்கு கூட வண்டி இல்லாத நிலையில் இவர்களுக்கு மட்டும் எப்படி ஏசி கார் என்ற வியக்காதீர்கள்.   இவர்களுக்கு மட்டும் ஏன் ஏ.சி கார் என்றால், ஜாபர் சேட்டின் கண்களும் காதுகளும் இவர்கள் தான்.

 

முதல் நபர் பெயர் சேகர்.

 

IMG

96 முதல் 2001 வரை நடந்த திமுக ஆட்சியின் போது, ஜாபர் சேட்டோடு மிகுந்த நெருக்கமாகிறார் இந்த சேகர்.   விரைவில் பணியிலிருந்து ஓய்வு பெறப் போகிறார். இந்த சேகர் ஒரு Bugging Expert.   Bugging என்றால் ஒட்டுக் கேட்பது என்று உளவுத்துறை வட்டாரங்களில் பொருள். நீங்கள் ஜாபர் சேட்டோடு மோதுகிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள்.   உடனடியாக உங்கள் மொபைல், லேண்ட் லைன், உங்கள் மனைவியின் மொபைல், நீங்கள் நெருக்கமாக பேசும் நண்பரின் மொபைல் போன், அத்தனையும் ஒட்டுக் கேட்பில் வரும். சேகரின் பணி, தொலைபேசியில் ஒட்டுக் கேட்பு கருவி மட்டும் பொருத்துவது அல்ல.   உங்கள் காருக்குள், உங்கள் படுக்கை அறைக்குள், அலுவலக அறைக்குள் ஒட்டுக் கேட்பு கருவியை பொறுத்துவதிலும், சேகர் கை தேர்ந்த நிபுணர்.

 

இது போக ஜிபிஎஸ் என்று அழைக்கப் படும், க்ளோபல் பொசிஷனிங் சிஸ்டம் என்ற கருவியை உங்கள் வாகனத்தில் பொருத்தி நீங்கள் எங்கெங்கெல்லாம் செல்கிறீர்களோ, அதை கண்டு பிடிக்கும் வகையில் ஜிபிஎஸ் கருவியை பொருத்துவதிலும் சேகர் எக்ஸ்பெர்ட்.

 

அடுத்த முறை இந்த நபரை உங்கள் வீட்டுக்கு அருகிலோ, வாகனத்தின் அருகிலோ பார்த்தீர்கள் என்றால் என்ன செய்வது என்பது உங்களுக்கே தெரியும்.

 

அடுத்த நபர் யார் தெரியுமா ? அவர் பெயர் குமரேசன்.  

IMG_0002

ஜாபர் சேட்டின் மிக மிக நம்பிக்கைக்கு உரியவர்.   இவருக்கு முழு நேர பணி தொலைபேசிகளை ஒட்டுக் கேட்பது மட்டுமே.   சென்னை நகரில் 3 இடங்களில் ஒட்டுக் கேட்பு நடைபெறுகிறது.   ஒன்று டி3டி டெக்னாலஜிஸ் நிறுவனத்தில். மற்றொன்று, சென்னை அடையாறில் உள்ள அவுட்சார் டெக்னாலஜிஸ் நிறுவனத்தில். மூன்றாவது, டிஜிபி அலுவலகத்தின் உள்ளே இருக்கும் ஒரு பழைய கட்டிடத்தில்.   பார்ப்பதற்கு பழைய கட்டிடமாக தெரிந்தாலும் இந்தக் கட்டிடத்தின் உள்ளே தான் தமிழகத்தின் பல்வேறு ரகசியங்கள் புதைந்து கிடக்கின்றன.

 

கருணாநிதியின் துணைவி ராசாத்தி அம்மாளின் தொலைபேசியையே கருணாநிதியின் உத்தரவுப் படி ஒட்டுக் கேட்டு, அந்த உரையாடலை அப்படியே அவரிடம் போட்டுக் காட்டிய பிறகே, சிஐடி காலனி பக்கமே 15 நாட்கள் செல்லாமல் கோபித்துக் கொண்டிருந்தார் கருணாநிதி. முதலமைச்சரின் மனைவி உரையாடலை ஒட்டுக் கேட்கும் பொறுப்பு ஒப்படைக்கப் பட்ட ஒரு நபர் மற்ற யாரையாவது மதிப்பாரா ?   ஜாபர் சேட்டைத் தவிர வேறு எந்த அதியாரியையும் இந்தக் குமரேசன் மதிப்பது கிடையாது.   குமரேசன் மிக மிக தலைக்கனம் பிடித்த நபர் என்று விபரமறிந்தவர்கள் கூறுகிறார்கள்.   டிஜிபி அலுவலகத்தில் யாராவது ஒரு உயர் அதிகாரி, குமரேசனை பகைத்துக் கொண்டால் அவ்வளவுதான்.   அன்றே அந்த அதிகாரியின் தொலைபேசி ஒட்டுக் கேட்பு வளையத்தில் வந்து விடும். அவரின் ரகசியங்களை தெரிந்து கொண்டு, உன் ரகசியம் எனக்கு தெரியும் பார் என்று, அந்த நபரை மறைமுகமாக மிரட்டுவது, குமரேசனின் ஸ்பெஷாலிட்டி.

 

ஜாபர் சேட் எள் என்று சொல்லி முடிப்பதற்கு முன்பே, எண்ணையாக மாறக் கூடிய அளவுக்கு ஜாபர் சேட்டுக்கு குமரேசன் விசுவாசமான மனிதர் என்று கூறப் படுகிறது.

 

இப்படித் தான் ஒரு முறை நக்கீரன் இணை ஆசிரியர் காமராஜின் தொலைபேசியை ஒட்டுக் கேட்பு வளையத்துக்குள் கொண்டு வந்து, அந்த விபரத்தை குமரேசன் காமராஜுக்கு தெரிவித்ததாகவும், கடும் கோபமடைந்த காமராஜ், நேரில் வந்து ஜாபர் சேட்டிடம் சத்தமிட்டதாகவும், அது போல நான் செய்யவேயில்லை என்று ஜாபர் சேட் சத்தியம் செய்ததாகவும் கூறப் படுகிறது.

 

டி3டி டெக்னாலஜிஸ் முதலாளி நாராயண யாதவுடன், இந்தக் குமரேசன் மிகுந்த நெருக்கம் என்று கூறப் படுகிறது.

 

முக்கிய பிரமுகர்கள் பெரும்பாலானோர் உரையாடலை ஒட்டுக் கேட்பதால், குமரேசன் யாரையும் மதிக்காமல் சகட்டு மேனிக்கு பேசுகிறார் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

 

இவருக்கு மட்டும மாதம் 20 ஆயிரம், ரகசிய நிதியிலிருந்து ஜாபர் சேட் வழங்குவதாக கூறப் படுகிறது.

 

இந்த நபரையும் நன்றாக பார்த்து வைத்துக் கொள்ளுங்கள்.   இவரை நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைக்கும் நபர்கள், ஒட்டுக் கேட்பது தொடர்பாக உங்களுக்கு உள்ள சந்தேகங்களை கேட்டு நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

இன்னும் இரண்டு பேர் இருக்கிறார்கள். அவர்களைப் பற்றிய விபரங்கள் சேகரிக்கப் பட்டு வருகிறது.   அவர்களைப் பற்றிய விபரம் வந்தவுடன், சவுக்கு வாசகர்களுக்கு படைக்கப் படும்.

 

Comments  

 
0 #36 s.udayakumar 2011-03-02 16:54
wish u all sucess. and b carefull that family.
power cut eppa mudiym?
Quote
 
 
+1 #35 sellvaraaj 2011-01-13 15:29
WRITE AN ARTICLE ABOUT THE HOARDERS AND TRADERS WHO SUCK FARMERS AND INFLATE FOOD PRICES
Quote
 
 
+2 #34 d.kavichelvam 2011-01-01 23:07
Quoting ஷேஷாத்ரி:
கருணாநிதி குடும்பத்தை தொலுரிக்கும் கட்டுரைகளை வெளியிடுங்கள் . எவனோ விமர்சிததான் என்பதற்காக ஞாநி,சோ
மற்றும் கார்ட்டூன் மதி போன்றோர் தொடர்பை விட்டு விடாதீர்.உங்கள் தளத்தை படித்து
பல இளைஞர்கள் கொட்ச்சே போன்று ஊழலை எதிர்த்து துப்பாக்கி எடுக்க வேண்டும்.

athu viraivil nadakkum sesadhri
Quote
 
 
+3 #33 Naanum inthiyan 2010-11-05 22:23
Quoting Sam:
Quoting Ramanan:
Nice gossip. Third rate Blogging. You will survive among the Tamil perverts!
Then go to hell man, why are you here and reading the articles?

Very well said..
Quote
 
 
+1 #32 Pradeep_P 2010-09-30 14:48
அரசு தகவல்களை வெளிப்படுத்தியத ாக கைது செய்யாமல் இருந்தால் சரி
Quote
 
 
+3 #31 Sam 2010-09-29 11:23
Quoting Ramanan:
Nice gossip. Third rate Blogging. You will survive among the Tamil perverts!
Then go to hell man, why are you here and reading the articles?
Quote
 
 
+2 #30 rukku 2010-09-28 09:52
மாணவிகளை எரித்துக்கொன்றவ ர்களுக்கு தூக்குத்தண்டனை சரியானதே தேவையிருப்பின் தீர விசாரித்து பின்னணியில் காரணமாயிருந்தவர ்களுக்கும் இரட்டைத்தூக்குத ்தண்டனை நிறைவேற்றலாம், இன்னுMஒன்று இவையெல்லாவற்றிற ்கும் மூல ஆதாரிகள் அரசியல்க்கட்சித ்தலைவர்கள் என்பது உண்மை, எனவே தீர விசாரித்தால் கருணாநிதிக்கும் ஜெயலலித்தாவுக்க ும் பல நூறு தூக்குத்தண்டனை நிறைவ் ஏற்றவேண்டியிருக ்கும் ,
Quote
 
 
+2 #29 priya murali 2010-09-28 08:56
:-)
dear frnd,
i like ur guts and way of writing...........but there r many other issues other then jaffer ... :-) ......... y do u target only him..........there r more imp & most notorious issues other than him........my req is dont make him big.........come out and plz write abt all those things .......we expect more frm u......broadmindedly..............this s a friendly req of ur fan savukku sir..............................
Quote
 
 
+2 #28 jahangeer.m.b. 2010-09-27 22:05
narigalin mugathil torch adithukkattum ungal pani thodarattum.
Quote
 
 
0 #27 புலி 2010-09-27 20:04
பிராமின் இனம் மீது கை வைக்க துணிவு என்றெல்லாம் இல்லை நண்பர்களே ...இவர் கத்தி எனில் அம்மா கோடாலி .. சின்ன கெடுதல் பெரிய கெடுதல் ... நமக்கு தேவை இருவருமல்ல ..நம்மவர்களே ..நல்லவர்களே..
Quote
 
 
0 #26 antony valan 2010-09-27 15:43
உயிரற்ற பேருந்தை கொழுத்தியதர்க்க ாய் யாருக்காவது தூக்கு தண்டனை கொடுப்பார்களா? சுவுக்கை படிப்பவர்களுக்க ு கூட குறைந்த பட்ச நாட்டு நடப்புகள் தெரியாதா? 3 இளம் பெண்கள் உயிரோடு எரிக்கப்பட்டு கொல்லப்பட்டார்க ளே அதெல்லாம் பார்க்கவில்லை போலும்..மனித உரிமை ஆர்வலர்கள்,தூக் கு தண்டனைக்கு எதிராக பேசுபவர்கள் கொலையாளிகளின் குரூர மனப்பான்மையினை சற்று யோசிக்க வேண்டும்..குழந்தைகளை மோசம் செய்பவர்கள், வயதான மூதாட்டிகளை கழுத்து அறுத்து கொல்பவர்கள், உயிரோடு எரித்து கொல்பவர்கள் இவர்களுக்கு எல்லாம் எதற்கு கருணை மனு?..சொல்லப்போனால் உடனே தூக்கு.. இல்லையானால்,சாக ும் வரை ஆயுள் தண்டனை(அண்ணா பிறந்த நாள், கலைஞர் பிறந்த நாள் என்று எந்த சலுகையும் இல்லாத ஆயுள் தண்டனை)..தண்டனைகள் கடுமையாக இல்லாதவரை குற்றங்கள் குறைவது இல்லை.தோழமையுடன் ஆண்டனி வளன்
Quote
 
 
+2 #25 magdoum ali 2010-09-27 15:18
GOOD INFORMATION..
Quote
 
 
+5 #24 புலி 2010-09-27 14:39
தண்டனை பேருந்து எரிப்புக்கு அல்ல .3 மாணவ கண்மணிகளை எரித்ததற்கு தான்..
Quote
 
 
+5 #23 புலி 2010-09-27 14:37
பேருந்து எரிப்பு பற்றி ஒரு அன்பர் எழுதயுள்ள கருத்து கண்டிக்கதக்கது .தயவு செய்து அன்பர்கள் அதுபற்றி கருத்து கூறுங்கள் ..
Quote
 
 
0 #22 stalin 2010-09-27 14:33
amazing work.keep it up. try

struggle all against all cheating parties
Quote
 
 
0 #21 M.S.Vasan 2010-09-27 13:17
What Happened to your JHONYKHAN ST TO CHANDHANA KADU Serious??? (You did declare it will be released on every THURSDAY)
Quote
 
 
+15 #20 அனானி 2010-09-27 11:58
மிஸ்டர் சவுக்கு... உங்களை பற்றி எனக்கு நன்றாக தெரியும். நியாயமாக எங்களை பார்த்து சல்யூட் அடிக்க வேண்டிய நபர்தான் நீங்கள். ஆனால், இன்று நாங்கள் எல்லாம் உங்களுக்கு சல்யூட் அடிக்கிறோம் மனதளவில். இந்த அவமானச் சின்னங்களை, எங்கள் துறையைச் சேர்ந்தவரே அம்பலப்படுத்துக ிறார் என்பதில் எங்களுக்கு ஓர் பெருமையே. ஒரே ஒரு விண்ணப்பம். விரைவில் தமிழில் பதிவு செய்ததுமே, ஆங்கிலத்திலும் அதை வெளியிடுங்கள். காரணம், நமது சகோதரர்கள் பலர், தமிழை வேகமாக படிக்கத் தெரியாத உயர் அதிகாரிகளுக்கு படித்துக் கொண்டிருப்பது சிரமமாக இருக்கிறது. ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துவிட்டா ல், இன்னும் பல அதிகாரிகள் படிப்பது உறுதி.
Quote
 
 
-9 #19 டுபாக்கூர் பதிவர் 2010-09-27 10:52
தனிப் பட்ட வன்மங்களையும், பகைமையையும் தீர்த்துக் கொள்கிறீர்கள் போலும்....ம்ம்ம்ம்ம்

நடத்துங்க! நடத்துங்க
Quote
 
 
+2 #18 anbu 2010-09-27 10:35
thul thul....dont worry full support to savukku
Quote
 
 
+7 #17 rukku 2010-09-27 10:20
Quoting செந்தில்:
நரிகளின் முகத்தில் டார்ச் அடித்து காட்டும் உங்களின் பணி தொடரட்டும்.

முகத்தில் டார்ச் அடித்தால் மட்டும் போதாது அஸிட்டும் கொஞ்சம்போல் அடித்தால் இன்னும் நன்றாக இருக்கும்,
Quote
 
 
+1 #16 Pathirikaikari 2010-09-27 08:01
enna pa..AIADMK pathi eduvuma illaya???kindly give us a ringside view of all political parties..
Quote
 
 
0 #15 VIJAY_USA 2010-09-27 07:47
kARTHIK_UK - The fault is with the second aprt of your name "UK". The country that made you kind of dumbs slaves for ever. You don't have to be a relative to these guys (karuna or others), but the money they laundering is ours! Take a shower tomorrow and clean that UK thing in your heart.
Quote
 
 
+4 #14 செம்பரைச்செல்வன் 2010-09-27 06:35
தலைமை தேர்தல் அதிகாரி சேஷன், ஜெயேந்திர சரஸ்வதி ,மணிஷங்கர் ஐயர்,இந்து ராம்,
i.a.s. அதிகாரி சந்திரலேக்கா, auditor மஹாதேவன்,சுப்ரம ணியன் சுவாமி, குருமூர்ததி
போன்ற பவர்‌ஃபுல் பிராம்நாள் மீது கருணாநிதி எல்லாம் கை வைத்திருக்க முடியுமா?
ஆகவே தைரியமான முதல்வர் தான் நமக்கு தேவை .அம்மா வந்தால் தான்
இது போன்றவர்கள் அடங்குவர்.எனவே வரும் தேர்தலில்........
Quote
 
 
+1 #13 S G Thiyagu 2010-09-27 00:12
:D thanks for make us aware the truth
Quote
 
 
+1 #12 unmai 2010-09-26 23:55
Nee oru Emdan...
Quote
 
 
+5 #11 ஜாபரின் விசுவாசி 2010-09-26 22:56
8) கலக்குர சங்கர் கலக்குர... பேசமா கருணாநிதி ஜாபர் சேட்டை தூக்கிட்டு அந்த வேலைக்கு உங்க டீமை நியமிக்க திட்டமிட்டிருக் காராம்...காது வழி சேதி
Quote
 
 
+6 #10 பொதுஜனம் 2010-09-26 22:06
மனசாட்சி இல்லாத நீதிபதிகளை கேட்டால்
"போதிய சாட்சி" இல்லை என்றே கூறுவார்கள்
கொடுமை யாதெனில், கோவை பஸ் எரிப்பு
குற்றவாளிகளுக்க ு தூக்கு விதித்திருப்பது தான்

மாணவிகளின் இறப்புக்கு காரணமானவர்கள்
தண்டிக்கப்பட வேண்டியவர்கள்! சந்தேகம் இல்லை.
பேருந்தை கொளுத்தியது யாரையும் கொல்வதற்கு அல்ல
தலைமையின் "கைதுக்கு" தங்கள் எதிர்ப்பை காட்டவே

பேருந்தை கொளுத்தியதற்கு தூக்கு என்றால்
இந்திய மக்கள்தொகையில் கணிசமான அளவு
குறைந்திருக்கும ், பல அரசியல் தலைவர்களும்,
பல பேருந்துகளும் கூட குறைந்திருக்கும

உச்சநீதிமன்ற நீதிபதிகளில் பதினாறில் எட்டுபேர்
கறைபடிந்தவர்கள் என ஒரு முன்னாள் நீதிபதியே
கூறும் இந்நாளில், பேருந்தை எரித்தவர்களுக்க
தூக்கு விதித்ததில் அரசியல் உள்நோக்கம் உள்ளதோ?

எதிர்வரும் தேர்தலை மனதில் வைத்து வழங்கப்பட்ட
எதிர்மறைத் தீர்ப்பில் மூன்று உயிர்கள் பலியாக வேண்டுமா?
சிந்தியுங்கள் என் தமிழ் மக்களே! சிந்தியுங்கள்
நாளை நமக்கும் இதுபோல் தீர்ப்பு வரலாம்
Quote
 
 
+7 #9 பொதுஜனம் 2010-09-26 22:05
நாடாளுமன்றத்தை தகர்க்க வந்த
நாசகார சக்திகளுக்கு ராஜ உபசாரம்
மும்பையை சிதறடித்த, மூர்க்க
குணம் கொண்டவனுக்கு ராஜ உபசாரம்

விஷ வாயு மூலம் போபாலில் கூட்டமாய்
கொன்றவனுக்கு ராஜ உபசாரம்
கோவை மாநகரில் கொத்து கொத்தாய்
கொன்றவருக்கு ராஜ உபசாரம்

இந்திரா மறைந்தவுடன், சீக்கியரை
கூட்டமாய் கொன்றவனுக்கு அமைச்சர் பதவி
இலங்கைத்தீவில் தமிழர்களை கொடூரமாய்
கொன்றவனுக்கு ராஜ உபசாரம்

தலித் இளைஞரை சென்னையில் கொன்ற
டக்ளசுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு
தமிழக முன்னாள் அமைச்சரை
கொன்றவருக்கு மத்திய மந்திரி பதவி

சொல்லிக்கொண்டே போகலாம் இதுபோல்
பல பல நீதி தவறிய உதாரணங்களை
திட்டமிட்டு மக்களை கொன்றவர்களை
திட்டமிட்டே நீதிபதிகள் காப்பாற்றினர்
Quote
 
 
+1 #8 ismail 2010-09-26 22:04
i wish u all the best.... your all great work to give society.. Thanks
Quote
 
 
+6 #7 செந்தில் 2010-09-26 21:47
நரிகளின் முகத்தில் டார்ச் அடித்து காட்டும் உங்களின் பணி தொடரட்டும்.
Quote
 
 
+3 #6 Jaisankar 2010-09-26 21:19
Very Good
Write more about karunanithi and his family rowdisam in tamil nadu.
Quote
 
 
+4 #5 Lakshmidharan 2010-09-26 20:55
வெரி வெரி குட் ..... சபாஷ்.... கருணா ஃபாமிலிக்கு வெடியை பத்த வச்சுட்டே...இனி மாறன் பாடு குஷி தான்...‌‌
Quote
 
 
+4 #4 Karthik_UK 2010-09-26 20:14
Mr Ramanan,

neenga enna Karunanidhikku sondhama? Ille neengalum Jaffer mathiriya?Ungallu en pathikittu varuthu?
Quote
 
 
-12 #3 Ramanan 2010-09-26 19:06
Nice gossip. Third rate Blogging. You will survive among the Tamil perverts!
Quote
 
 
+7 #2 ஷேஷாத்ரி 2010-09-26 18:44
கருணாநிதி குடும்பத்தை தொலுரிக்கும் கட்டுரைகளை வெளியிடுங்கள் . எவனோ விமர்சிததான் என்பதற்காக ஞாநி,சோ
மற்றும் கார்ட்டூன் மதி போன்றோர் தொடர்பை விட்டு விடாதீர்.உங்கள் தளத்தை படித்து
பல இளைஞர்கள் கொட்ச்சே போன்று ஊழலை எதிர்த்து துப்பாக்கி எடுக்க வேண்டும்.
Quote
 
 
+5 #1 V 2010-09-26 18:40
Inteligent new approach
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 171 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday6501
mod_vvisit_counterYesterday14175
mod_vvisit_counterThis week63403
mod_vvisit_counterLast week80132
mod_vvisit_counterThis month266135
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12788254