முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
மானங்கெட்ட மத்திய அரசு அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 37
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
திங்கட்கிழமை, 25 ஜூலை 2011 22:29

மத்தியில் ஆளும் மன்மோகன் சிங்கின் அரசு போன்ற மானங்கெட்ட அரசை உலகில் எங்குமே பார்க்க முடியாது போலிருக்கிறது.

4192193579_cd1facfd4f_b

சேனல் 4ன் ஆவணப்படம், உலகின் மனசாட்சியை உலுக்கியிருக்கிறது.   கண்டவர் மனதை கதற வைத்திருக்கிறது.   ஆனாலும், இலங்கையின் இந்தப் போருக்கு உதவி செய்து தன் கரங்களில் ரத்தத்தோடு இருக்கும் மத்திய அரசாங்கம் மவுனம் சாதிக்கிறது.

 

இலங்கையிலிருந்து பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருக்கும், அமெரிக்க அரசாங்கத்தின் காங்கிரஸ் கமிட்டி, இலங்கை மீது உள்ள போர்க்குற்றங்களுக்காக பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறது. அருகில் உள்ள, வல்லரசு ஆக வேண்டும் என்ற நப்பாசை உள்ள மத்திய அரசாங்கமோ, திருடனுக்கு தேள் கொட்டியது போல கனத்த மவுனத்தோடு இருக்கிறது.

இது மட்டுமல்ல, ஊழலுக்கு மேல் ஊழலாக புற்றீசல் போல கிளம்பியிருக்கும் புகார்களைப் பற்றி சற்றும் கவலைப்படாமல், கர்நாடகத்தில் பிஜேபியின் ஊழல், உத்தரப்பிரதேசத்தில் மாயாவதியின் ஊழல் என்று சாவகாசமாக சவடால் பேசிக் கொண்டிருக்கிறது.   விலைவாசி உயர்வு, ஊழல், பணவீக்கம், கோஷ்டி மோதல், கூட்டணிக் கட்சிகளின் நெருக்கடி என்று அனைத்து பக்கங்களிலும் தோல்வியைத் தழுவியுள்ளது காங்கிரஸ் அரசாங்கம்.

 

ஆனால் காங்கிரசின் நல்ல நேரம், பிரதான எதிர்க்கட்சியான பிஜேபி, சொந்தக் காசிலேயே சூனியம் வைத்துக் கொண்டு இருக்கிறது.   ஆட்சியில் இல்லாத போதே அக்கட்சியின் கோஷ்டி மோதலால் நிலைகுலைந்து எழுந்திருக்க முடியாமல் இருக்கிறது.

 Manmohan_Singh_1

இது தவிரவும் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தால் பல முறை கண்டிக்கப் பட்டு வந்திருக்கிறது.

கடந்த ஆண்டு ஜுலை மாதத்தில் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பைப் பற்றி ஒரு பொது நல வழக்கு உச்சநீதிமன்றத்தில் வருகிறது.   அப்போது, வேலைக்குச் செல்லாமல், வீட்டு வேலையில் இருக்கும் பெண்களை, பிச்சைக்காரர்கள், விலை மகளிர், சிறைக் கைதிகள் வரிசையில், பொருளாதார ரீதியாக பயனற்றவர்கள் என்று வகைப்படுத்தியிருப்பதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப் பட்டது.   “மக்கட் தொகை கணக்கெடுப்பில் இந்த பாரபட்சம் மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. சமைப்பது, பாத்திரம் கழுவுவது, பிள்ளைகளைப் பார்த்துக் கொள்வது, தண்ணீர் சேகரிப்பது, சுள்ளி பொறுக்குவது போன்ற வேலைகளைச் செய்யும் பெண்களை பிச்சைக்காரர்களோடு வகைப்படுத்தப் பட்டுள்ளனர். வீட்டு வேலை செய்யும் பெண்கள், வீட்டு வேலைகளை செய்வதன் மூலம், அலுவலகத்தில் சென்று வேலை பார்க்கும் பெண்கள் அங்கு செலவிடும் நேரத்தை வீட்டில் செலவிடுகின்றனர். அரசு கடைபிடித்துள்ள இது போன்ற பாரபட்சமே, அவர்களை சமூக ரீதியாக, உளவியல் ரீதியாக ஒடுக்கி, வறுமையில் வைததிருப்பதற்கான காரணம்” என்று உச்ச நீதிமன்றம் சொன்னது.

 

ஆகஸ்ட் மாதத்தில் லட்சக்கணக்கான மக்கள் ஒரு வேளை உணவோடு ஒரு நாளைக் கழிக்கும் ஒரு தேசத்தில், உணவு தானியங்கள் கெட்டுப் போக அனுமதிப்பது, கிரிமினல் குற்றமல்லவா என்று கேள்வி எழுப்பி விட்டு, இது போல வீணாகும் தானியங்களை வீணாகும் முன்பாக ஏழை மக்களுக்கு வழங்கவும் என்று கூறியது.   இதைப் பற்றி கருத்து தெரிவித்த உணவு அமைச்சர் ஷரத் பவார், உச்ச நீதிமன்றத்தின் இந்த ஆலோசனையை ஏற்க முடியாது என்றார். அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும் போது, உச்ச நீதிமன்றம், இது எங்களது ஆலோசனை அல்ல. உத்தரவு.   உங்கள் அமைச்சரிடம் இது உத்தரவு என்று சொல்லுங்கள் என்று கூறியது.

 

அக்டோபர் 2010ல், மற்றொரு வழக்கில், பணம் இல்லாமல் எதுவுமே இந்நாட்டில் நகராது என்று தங்கள் விரக்தியை வெளிப்படுத்தினர் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மார்கண்டேய கட்ஜு மற்றும், டி.எஸ் தாக்கூர் ஆகியோர்.   நீதிபதிகள் கிண்டலாக, “பேசாமல் ஊழலை சட்டபூர்வமாக, இது இதற்கு இவ்வளவு கட்டணம் என்று அறிவித்து விட்டால் என்ன ?” என்றும் கேட்டு விட்டு, ஒரு மனிதனின் வழக்கை முடிப்பதற்கு 2500 ரூபாய் என்று அறிவித்து விட்டால், ஒவ்வொருவருக்கும் எவ்வளவு லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று தெளிவாக தெரியும் அல்லவா ? பேரம் பேச வேண்டிய அவசியம் இருக்காது அல்லவா ? அரசு ஊழியர்களையும் குறை சொல்ல முடியாது.   பண வீக்கத்தை சமாளிக்க வேண்டுமல்லவா ? என்று கிண்டலாக கேட்ட நீதிபதிகள், நாட்டில் ஊழல் கடுமையாக பெருகி விட்டது. குறிப்பாக, வருமான வரித் துறை போன்ற வரி விதிக்கும் துறைகளில் ஊழல் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு வளர்ந்துள்ளது என்றனர்.

ஸ்பெக்ட்ரம் வழக்கு நவம்பர் 2010ல் விசாரணைக்கு வந்த போது, 11 மாத காலமாக சுப்ரமணிய சுவாமியின் புகார் மீது நடவடிக்கை எடுக்காத மன்மோகன் சிங்கின் நடவடிக்கையை கண்டித்த உச்ச நீதிமன்றம் நடவடிக்கை எடுக்காமல் அமைதி காப்பது, கவலை அளிக்கிறது என்றனர். மூன்று மாதங்களுக்குள் அனுமதி அளித்திருக்க வேண்டும். ஆனால் 11 மாதம் என்பது மிக நீண்ட காலம் என்றனர் நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி மற்றும் ஏ.கே.கங்குலி ஆகியோர்.

 

ஜனவரி 2011ல், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி இழப்பு என்று சொல்லுவது, முழுக்க முழுக்க தவறானது.   அடிப்படை இல்லாதது என்றும், ஜீரோ லாஸ் என்றும் கூறிய கருத்துக்கு தனது கடும் கண்டனத்தை பதிவு செய்தது உச்ச நீதிமன்றம். அமைச்சரின் இந்தக் கருத்த துரதிருஷ்ட வசமானது.   அமைச்சர் என்பவர் பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும் என்று கூறியது. கூறியதோடு அல்லாமல், இது போன்ற எந்தக் கருத்துக்களையும் கவனத்தில் கொள்ளாமல், சிபிஐ தனது விசாரணையை நடத்த வேண்டும் என்று கூறிய அன்றே தன் பதவியை கபில் சிபல் ராஜினாமா செய்திருக்க வேண்டும். ஆனால், அதெல்லாம் மானமுள்ளவர்கள் செய்யும் காரியமல்லவா ?

 776013728_e0691574e0

மத்திய அரசுக்கு மிகப் பெரிய அவமானமாக அமைந்தது, மத்திய கண்காணிப்பு ஆணையர் பி.ஜே.தாமஸின் நியமனத்தை ரத்து செய்தது தான். தாமஸின் நியமனம் சரியே என்று வெட்டியாக வறட்டுத் தனமாக, உச்ச நீதிமன்றத்தில் வாதாடிய மன்மோகன் அரசுக்கு பெரும் பின்னடைவாக அது அமைந்தது.   பாமாயில் இறக்குமதி ஊழலில் 8வது குற்றவாளியாக, குற்றப் பத்திரிக்கையில் சேர்க்கப் பட்டிருந்த தாமஸை எப்படி ஊழல் ஒழிப்பு ஆணையராக்க முடியும் என்று சங்கடமான பல கேள்விகளை எழுப்பியிருந்தது உச்ச நீதிமன்றம்.

பிப்ரவரி 2011ல் அமர் சிங்கின் தொலைபேசி ஒட்டுக் கேட்பு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, இது போல சட்டவிரோதமாக ஒருவர் உரையாடலை ஒட்டுக் கேட்ட ரிலையன்ஸ் நிறுவனத்தின் லைசென்சுகளை ஏன் ரத்து செய்யவில்லை என்று கேள்வி எழுப்பியது.   “ஒட்டுக் கேட்க வேண்டும் என்று அனுப்பப் பட்ட கடிதத்தில் அத்தனை தவறுகள் உள்ளது வெளிப்படையாக தெரிகிறதே… உடனடியாக அந்நிறுவனத்தின் லைசென்ஸை ரத்து செய்திருக்க வேண்டாமா ? யாருடைய உரையாடல்களை வேண்டுமானாலும் ஒருவர் ஒட்டுக் கேட்க முடியும் என்றால் எவ்வளவு ஒரு ஆபத்தான நிலையில் இருக்கிறோம் என்பதைப் பாருங்கள்.   எவ்வளவு ஒரு மோசமான சூழல் ஏற்பட்டு விட்டது. இவ்வளவு ஒரு முக்கியமான ஒரு விஷயத்தில் அரசு நடவடிக்கை எடுக்காமல் மெத்தனம் காட்டி விட்டது. நீங்கள் எல்லாரும் கூட்டு சேர்ந்து இதைச் செய்கிறீர்கள்.   நீதிமன்றம் தான் உங்கள் எல்லாருக்கும் இளப்பமாகத் தோன்றுகிறது” என்று கடுமையான கருத்துக்களை பதிவு செய்தனர்.

சமீபத்தில் இந்த மாதம், நக்சலைட்டுகளை ஒடுக்குவதற்கென்று அமைக்கப் பட்ட சிறப்பு காவல்படையை கலைக்க உத்தரவிட்டும், உச்ச நீதிமன்றம் கடும் கண்டனங்களை மத்திய அரசு மீதும் பதிவு செய்திருந்தது குறிப்பிடத் தக்கது.

கருப்புப் பணத்தை வெளிக் கொண்டு வருவதற்கு தயக்கம் காட்டும் மத்திய அரசின் மீது நம்பிக்கை இழந்த உச்ச நீதிமன்றம், நீதிமன்றத்தின் மேற்பார்வையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்தது, மத்திய அரசுக்கு சரியான சவுக்கடி. ஆனாலும், சூடு சொரணையற்ற அரசு, அந்த தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்திருப்பது, கருப்புப் பணம் வைத்திருப்பவர்களைக் காப்பாற்றுவதில் எவ்வளவு குறியாக இருக்கிறது மத்திய அரசு என்பதையே காட்டுகிறது.

 

கண்மூடித்தனமாக பெட்ரோல், டீசல் விலைகளை ஏற்றி நடத்தர ஏழை மக்களை மோசமான வேதனைக்குள்ளாக்கியிருக்கிறது மத்திய அரசு.

 manmohan

எதிர்க்கட்சியான இருக்கும் பிஜேபி கூடாரம் கல கலத்துப் போய் இருக்கும் சூழலில், மூன்றாவது அணி அமைய வாய்ப்பே இல்லை என்ற சூழ்நிலையிலும், கூட்டணிக் கட்சிகளை ஊழல் புகாரில் சிக்க வைத்து பலவீனமாக்கி வேறு வழியில்லாத காரணத்தால் இன்று ஆட்சியில் தொடர்ந்து கொண்டிருக்கிறது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு.

 

பிஜேபி கட்சியோ, இந்துத்வாவா இல்லையா ? ஊழல் எதிர்ப்பா இல்லையா ? கட்சி இருக்கிறதா இல்லையா ? ஆர்எஸ்எஸ் பேச்சைக் கேட்பதா இல்லையா ? என்ற குழப்பத்திலே ஆழ்ந்து கொண்டிருக்கும் போது, அவ்வப்போது தலை தூக்குகிறது எடியூரப்பாவின் பிரச்சினை. ஊழலில் ஊறித் திளைத்து, முடை நாற்றம் எடுக்கும் அளவுக்கு கர்நாடக பிஜேபி அரசு நாறிக் கொண்டிருந்தாலும், ஒரு மாநில முதலமைச்சரை ராஜினாமா செய்ய வைக்க வக்கில்லாத நிலையில் தான் பிஜேபி இருக்கிறது. கர்நாடகத்தின் சுரங்க வளங்களை கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் ரெட்டி சகோதரர்களின் ஊழலை ஆவணத்தோடு கர்நாடக லோக் ஆயுக்தா அம்பலப்படுத்தினாலும், அந்த ஊழலைப் பற்றிப் பேச மாட்டேன், ஸ்பெக்ட்ரம் ஊழலைப் பற்றித் தான் பேசுவேன் என்று இரட்டை வேடம் போட்டு வருகிறது பிஜேபி.   ஊழலை மூடி மறைப்பதில், காங்கிரசுக்கு கொஞ்சமும் சளைத்ததில்லை என்பதை, டெஹல்கா விவகாரத்தை பிஜேபி கையாண்ட விதம் வெளிப்படுத்தியது.

 

என்னை கூட்டணி சேர்த்துக் கொள்ளுங்கள் என்று பிஜேபி கதறினாலும், எந்த மாநிலத்திலும் எந்தக் கட்சியும், பிஜேபியை சேர்த்துக் கொள்ள தயாரில்லாத ஒரு நிலையில், அனாதையாக அரற்றிக் கொண்டிருக்கிறது பிஜேபி. அதனால் 2016ல் கூட, பிஜேபி, காங்கிரஸ் அரசை வீழ்த்தும் என்ற நம்பிக்கை இல்லை. மேலும், பிஜேபி போன்ற, மதவாத, இந்துத்துவ வெறி பிடித்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், அது நாட்டுக்கு ஆபத்தே…. புதிய தீவிரவாத சட்டம், ராமர் கோவில் என்று நாட்டை பிளவுபடுத்தும் வேலைகளில் பிஜேபி காட்டும் முனைப்பு, மிக மிக ஆபத்தில் கொண்டு போய் முடியும்.

 bjp-flag-_new

 

BJP_149529f

இந்நிலையில் நம்பிக்கை அளித்துக் கொண்டிருந்த இடது சாரிகள், மக்கள் மனதை சரியாக கவனிக்கத் தவறி, எந்த முதலாளித்துவத்தை எதிர்ப்பதை கொள்கையாக வைத்திருந்தார்களோ, அந்த முதலாளியின் காலை வருடி, ஏழை உழைப்பாளி மக்களை போலீசை விட்டு அடித்தார்கள்.   ரத்தன் டாடாவுக்கு ரத்தினக் கம்பளம் விரித்து, உழைப்பாளி மக்களை தாக்கியதன் விளைவே, 30 ஆண்டு கால இடது சாரிகளின் தகர்ந்த கோட்டை.

 BUDDHADEB_4729f

ஆனாலும், இன்று நம்பிக்கை அளிக்கும் சக்தியாக விளங்குவது, இடது சாரிகள் மட்டுமே.   இந்த இடது சாரிகள் இன்று மேற்கு வங்கத்திலும், கேரளாவிலும், எதிர்க்கட்சியாக இருப்பது, அவர்கள் சுயபரிசோதனை மேற்கொண்டு, தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து, மீண்டு எழுந்து வருவார்கள் என்பதே ஜனநாயக சக்திகளின் எதிர்ப்பார்ப்பு.

 

அவ்வாறு எழுந்து வரும் இடது சாரிகள், சோனியா காங்கிரசுக்கும், பாரதிய ஜனதாவிற்கும் ஒரு மாற்றாக உருவாகும், மூன்றாவது அணிக்கு தலைமை ஏற்க வேண்டும் என்பதே நமது விருப்பம்.

 

ஈழத் தமிழரின் ரத்தம் தோய்ந்த கைகளைக் கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சியை கருவறுக்க வேண்டிய கடமை தமிழர்களாகிய நமக்கு இருக்கிறது.   இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும், தமிழர்களுக்கு இந்த காங்கிரஸ் செய்த துரோகத்தை மறக்காமல், நினைவில் வைத்திருந்து, தமிழகத்தில் இருந்து காங்கிரஸ் கட்சியை துடைத்து எறிய வேண்டும்.   தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி என்று சொன்னால் அடி விழும் என்று அஞ்சும் நிலையை உருவாக்க வேண்டும்.   இந்த காங்கிரஸ் கட்சியை பல்லக்கில் வைத்துத் தூக்கிக் கொண்டிருக்கும், திமுகவை அந்த காங்கிரஸ் கட்சியே அழித்து ஒழித்து விடும். மீதம் உள்ள வேலையை கருணாநிதி செய்து முடிப்பார்.   அதனால் திமுக பற்றி கவலைப் படத் தேவையில்லை.

 

காங்கிரஸ் ஒழிக்கப் படும் நாளே, முள்ளிவாய்க்காலில் உயிரை விட்டவர்களுக்கு நாம் செலுத்தும் அஞ்சலி.

 

Comments  

 
0 #66 darsan 2011-07-29 15:16
நாண் சவுக்கு மீது மிகுந்த மாரியாதை வச்சுருக்கேன் ,ஆனால் சவுக்கு கம்யூனிஷ்ட்டில் சேர்ந்து விட்டது போலும். சவுக்கு வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.கம்யூனிஷ்ட்டில் சேர்ந்து விட்டதா இல்லையா என்று?சவுக்கு தடுமாற் ஆரம்பித்து விட்டது போல் தெரிகிறது
Quote
 
 
+4 #65 நியாயத் தராசு 2011-07-27 23:59
[ஃஉஒடெ நமெ="Rajesh11"]@J

"நாய் வாழ நிமித்த முடியுமா?..."

பஜ்ரங் தல்லை தீவிரவாத அமைப்பு என்று சொல்லும் போதே இந்த செய்தியின் உள்னோக்கம் புரிகிறது.. நியாயத் தராசு சொன்னதை போல நன்றாக விசாரித்து பார்த்தால் விவரம் தெழிவாகும்..[/ஃஉஒடெ]

அன்பர் Rajesh11 அவர்களே,
பஜ்ரங் தள் தீவிரவாத (extremist) அமைப்புதான். தங்கள் கோட்பாட்டை தீவிரமாக அமல் படுத்த விரும்பும் இயக்கம்தான். RSS, முஸ்லிம் லீக், நக்சல், வுல்ஃபா போன்ற தீவிரவாத இயக்கங்களும் இந்தியாவில் இருக்கின்றன. அல்-ஃக்வைதா, லஷ்க்ர்-ஈ-தொய்பா, ஜமாத்-உத்-தாவா, அல்-உம்மா, இந்தியன் முஜாஹிதீன், SIMI போன்ற பயங்கரவாத (terrorist) அமைப்புகளே பல இந்தியாவில் உள்ள போது பஜ்ரங் தள் இருப்பதில் என்ன தவறு.

ஆகையால் யாராவது 'பஜ்ரங் தள் தீவிரவாத அமைப்பு' என்று கூறினால் வருத்தப் பட வேண்டாம். I.N.A. கூட தீவிரவாத அமைப்புதான் என்று பதிலளித்துவிடுங ்கள்.
பெங்களூருவில் நைட்-க்ளப்களில் அராஜகம் செய்தார்கள் என்று சொன்னால், இளைய சமுதாயத்தை முடக்கி, நாட்டை சூனியம் ஆக்க அனுமதிப்பதைவிட விட அராஜகம் செய்வதே மேல் என திருப்பிச் சொல்லுங்கள்.

புஷ்ரா சம்பவம்: பொதுவாக வெவ்வேறு மதத்தினர் காதல் திருமணம் செய்யும் போது கணவன் மதத்திற்கு மனைவி மாறுவதை நான் கண்டிருக்கிறேன் . ஆனால் இங்கே, பிரசாந்த் செட்டி, புஷ்ராவை மணப்பதற்க்காக இசுலாமியராக மதம் மாறியதாகக் கூறப் பட்டிருக்கிறது. இதில் ஏதோ விவகாரம் அடங்கியிருக்கிற து என்பதாலேயே இந்த புஷ்ரா சம்பவத்தை தீர விசாரிக்க வேண்டும் எனக் கூறினேன். எது எப்படி இருப்பீனும் கட்டாயத்தின் பேரில் மதம் மாற்றம் செய்வது தவரானதுவே.
Quote
 
 
+3 #64 நியாயத் தராசு 2011-07-27 22:54
Dear Mr.Chagla,

I may be a 'fanatic' and 'foolish' because I support Mr.Narendra Modi who,

1. has been elected by the same Gujarat people repeatedly,
2. has been and is being supported by the same Gujarati Muslims (please refer to the election results in the Muslim dominated areas of Gujarat in particular),
3. is being 'the most hatred', by the heavenly Congress men and the Communist comrades,
4. had been endorsed by the social reformer Mr. Anna Hazare (but had gone back due to political reasons),
5. more importantly, has been making the Gujarat, a vibrant state which is thriving for its excellence in all the spectrums.

Dear all,
In the independant India, we have come come across mass riots in many instances. While in some instances the then governments have taken aggressive foot, in some other instances the goverments have taken defensive foot. In all the instances, the Goverments had been criticised strongly. In Gujarat riot case, which happened after the suspicious accident which killed ~55 swayam/kar sevaks, Narendra Modi had taken a defensive foot which had been politically convienient at that point of time. By the way, I dont say that Narendra Modi is IMMACULATE but, waiting for an immaculate person is hypothetical. Are we going to wait or support the best amongst available.
Quote
 
 
+5 #63 rajesh11 2011-07-27 20:06
@ M.S.Chagla

"All these right wing parties spew venom and are primitive in their mindset. It's an irony that fools like Niyayatharasu are supporting this bastard party. Narendra Modi is culpable under Genocidal crime. And yet he goes scottfree."

Oh is it ? One more person brainwashed by Media propoganda.. UPA is ruling from 2004. Why couldnt they prove a single thing against Modi ? If they have any proof, they could have filed charges against him long back. Even the supreme court appointed SIT couldnt find anything against him. And still, our seculars and liberals will keep shouting against him..

For a change, go through the following about the secular 'activists' and their claims..

http://dailypioneer.com/356020/Teesta-seeks-anticipatory-bail-in-false-affidavit-case.html

http://www.deccanherald.com/content/58606/naroda-riots-case-doc-says.html

http://www.sandeepweb.com/2009/04/14/teesta-it-hit-your-face/

"What have these people got right to rule over this country and what have they achieved so far?"

NDA's rule from 98-2004 proved that they are far better than congress in every aspect.. they are not perfect, but so much better in terms of governance and corruption.. Roads were constructed 10 times faster, a lot of development in infrastructure etc. their rule in Gujarat, MP, Bihar etc have proved they achieve better results than any of the congress ruled states..

If you want a 100% honest Agmark branded politician, keep dreaming.. there won;t be one.. In the mean time, sane people will chose the 'lesser evil' than the monster congress..
Quote
 
 
+4 #62 rajesh11 2011-07-27 19:41
@ஜ்

"நாய் வாழ நிமித்த முடியுமா?..."

பஜ்ரங் தல்லை தீவிரவாத அமைப்பு என்று சொல்லும் போதே இந்த செய்தியின் உள்னோக்கம் புரிகிறது.. நியாயத் தராசு சொன்னதை போல நன்றாக விசாரித்து பார்த்தால் விவரம் தெழிவாகும்..
Quote
 
 
+2 #61 kkr 2011-07-27 17:47
India should be brought under President's rule, I mean Dr APJ Abdul Kalaam's rule and control for twenty years.

Saadhanai Tamizhar endraal Ivar andro ?

Congress Sonia and Mr MK did not respect even this great son of India and denied him second term Presidency.What a pity ?
Quote
 
 
+4 #60 MarxistPrasanna 2011-07-27 14:25
மன் மோகன் சிங்கிற்கு பதில் மைக் மோகன் பிரதாமராக இருந்தால் கூட உசிதம்... :D :D :D
Quote
 
 
+13 #59 அஞ்சாநெஞ்சன் 2011-07-27 14:20
சவுக்கு பிஜெபி மதவாத கட்சி மதவாத காங்கிரஸ் மற்றும் மதமோகம் கொண்ட கட்சிகளின் வாதம். காங்கிரஸ் கட்சியின் ஆட்சியை, பிஜெபி ஆட்சியுடன் ஒப்பீடு செய்து எழுதுங்கள். இன்றய இந்தியாவின் வளர்ச்சிக்கு, வாஜ்பாயின் நாற்கர சாலை ஒரு முதுகெலும்பு. அதன் பின்னர்தான் வளர்ச்சி வேகம் கண்டது. அதில் தவறே நடக்கவில்லை என்று பொய் கூறவிரும்பவில்ல ை, இன்னும் பிஜெபி ஆட்சிக்கு வந்தால் குறைந்தது 10 வருடங்கள் ஊழலை அகற்ற முடியாது. அது ஆழமாக வேறூன்றி விட்டது. நல்லவர்களலெல்லா ம் அரசியலுக்கு வரவேண்டும். நல்லவர்களலெல்லா ம் அரசியலைவிட்டு வெளியேறியதுதான் பொறம்போக்குகள் உள்ளேவந்துவிட்ட து. கம்யூனிஸ்ட்களில ் இன்னும் நல்ல நேர்மயான் பல தலைவர்கள் உள்ளார்கள் தா பாண்டியன் போல. ஆனால் அவர்களின் கொள்கை தவறானது. இன்னும் ஒருபடி மேலேசென்று சொன்னால், மோடி இந்தியாவின் பிரதமராகவேண்டும ். அப்துல்கலாம் மீண்டும் ஜனதிபாதிஆகவேண்ட ும்.
Quote
 
 
+2 #58 nanduvaakkili 2011-07-27 11:31
ஒவ்வொரு நாடும் அந்நாட்டு மக்களுக்கு நம் நாடுதான் சிறந்த நாடு நல்ல நாடு என்று போதிக்கும்..அந்த மக்களும் அதைதான் நம்பி ஆக வேண்டும்..பாகிஸ்தானும் சரி, இந்தியாவும் சரி அதே வரிசைதான்..ஆனால் இவர்கள் அடிக்கும் கூத்து அந்நாட்டு மக்களுக்கு தெரியாவண்ணம் பார்த்துக்கொள்ள மீடியா இருக்கிறது..பள்ளி பாடங்களிளியே பொய் தான் சொல்லி தரபடுகிறது..இந்தியா அப்படி இப்படி என்று..உண்மையில் இந்தியாவை போல இனவெறி பிடித்த அரசு உலகத்திலேயே இல்லை..வடக்கன் உயர்த்த இனம் அதிலும் தாழ்த்தப்பட்டவன ் கேவலம்.. அவன் ஆலதளிபட்டால் இவர்கள் சுயரூபத்தை காணலாம்...
Quote
 
 
+6 #57 pakku mandaiyan 2011-07-27 11:16
தல நான் எற்கனவே ஆரம்பிச்சுட்டேன ்..... எங்க ஊர்ல இருக்கிற காங்கிரஸ் பசங்கள வம்பிழுத்து அடிக்க ஆரம்பிச்சுட்டேன ்.....விரைவில் எங்க ஊர்ல அவங்களை ஒரு கை பாத்துடுறேன் தல.......
Quote
 
 
-5 #56 M.S.Chagla 2011-07-27 10:41
Dear Sir,
I endorse your comments. Every single Tamilian should support the cause of decimating Congress, the traitor of Tamils cause, in Tamilnadu to the extent that it sh'ld be its Waterloo. But the B.J.P is also a communal party which is also to be kept away. I find here some fanatical people supporting BJP, which is not surprising because they may have links with the right wing the half-trouser clad party - RSS. All these right wing parties spew venom and are primitive in their mindset. It's an irony that fools like Niyayatharasu are supporting this bastard party. Narendra Modi is culpable under Genocidal crime. And yet he goes scottfree. Basically both the BJP & Congress are in the same category. It's only Congress is a soft-core hindutva and is disguised. What have these people got right to rule over this country and what have they achieved so far?
Quote
 
 
+2 #55 Devil 2011-07-27 10:15
Quoting rajesh11:
Its laughable that you wish for third front to come to power.. it wont even last 1 year.. Don't remember that last election ?

"ஜேபி போன்ற, மதவாத, இந்துத்துவ வெறி பிடித்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், அது நாட்டுக்கு ஆபத்தே…. புதிய தீவிரவாத சட்டம், ராமர் கோவில் என்று நாட்டை பிளவுபடுத்தும் வேலைகளில் பிஜேபி காட்டும் முனைப்பு, மிக மிக ஆபத்தில் கொண்டு போய் முடியும்."

Are you serious ? BJP is ruling in many states.. Is it butchering minorities there ? Asking for POTA when terror attacks keep happening is not 'communal' you seculars.. No wonder that congress has managed to rule this country for so long....


Then why the FUCK since 60 yrs after freedom india is a poor country, though we have abundant resource in all the fields?, As a congreess supoter please ask ur leader the KGB agent to open her mouth about where she looting our contry economy too?. I'm not a BJP activist or any other parties...

We paying tax for no reason simply blindly and madly. Take Petrol price it has been sky rocket nowdays, I dont want to live in shit under the illusion created in the name of recesion / inflation. Even Japan hit by tsunami within 3 months they are back to the stage, even though they do farming in ships, think ABOUT US...
Quote
 
 
0 #54 நியாயத் தராசு 2011-07-27 09:46
Quoting J:
Quoting rajesh11:
Its laughable that you wish for third front to come to power.. it wont even last 1 year.. Don't remember that last election ?

"ஜேபி போன்ற, மதவாத, இந்துத்துவ வெறி பிடித்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், அது நாட்டுக்கு ஆபத்தே…. புதிய தீவிரவாத சட்டம், ராமர் கோவில் என்று நாட்டை பிளவுபடுத்தும் வேலைகளில் பிஜேபி காட்டும் முனைப்பு, மிக மிக ஆபத்தில் கொண்டு போய் முடியும்."

Are you serious ? BJP is ruling in many states.. Is it butchering minorities there ? Asking for POTA when terror attacks keep happening is not 'communal' you seculars.. No wonder that congress has managed to rule this country for so long....



What about the following in Karnataka, Rajesh?... நாய் வாழ நிமித்த முடியுமா?...

"கட்டாய மதமாற்றம் செய்ய முயன்றதாக முஸ்லிம் பெண் புகார்"
http://www.inneram.com/2011072017972/muslim-woman-accuses-bajrang-dal-of-forced-conversion-urges-igp-to-take-action



Kattayap paduththi yaar madha maatram seidhaalum sariyalla. Ingae 'Kattaayap paduththi' enbadhu uyir bayam mattumalla panam koduththu aasai vaarththai kooruvadhuvumae . BJP aalaadha mattra maanilangalil aenaiyor seivadhaiyum marakkak koodaathu.
Indhap penn vivakaaraththil kooda, hindu mathaththil irundhu oru muslimai manappadharkkaa ga madham maariyaver pol therikiradhu, satru porumaiyudan visaariththup paarththaal pala unmaigal velivarum. adhai viduththu 'NAAY VAAL' endru kooruvadhu sariyaagadhu.
Quote
 
 
-1 #53 சிபிசந்தர் 2011-07-27 09:18
காங்கிரஸ் பிஜேபி போன்ற கட்சிகளுக்குள் பல முரண்பாடுகளும் பேதங்களும் உண்டு..ஆனால் தமிழினத்தை அழிப்பதில் தமிழ் மொழியை அழிப்பதில் இரு கட்சிகளும் இணைந்தே இருக்கிறார்கள் ...இது புரியாத தமிழ் நாட்டு கட்சிகள் இருவருக்கும் பல்லக்கு தூக்கியே துரோகத்துக்கு துணை போகிறார்கள் ...
Quote
 
 
-5 #52 J 2011-07-27 05:48
Quoting rajesh11:
Its laughable that you wish for third front to come to power.. it wont even last 1 year.. Don't remember that last election ?

"ஜேபி போன்ற, மதவாத, இந்துத்துவ வெறி பிடித்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், அது நாட்டுக்கு ஆபத்தே…. புதிய தீவிரவாத சட்டம், ராமர் கோவில் என்று நாட்டை பிளவுபடுத்தும் வேலைகளில் பிஜேபி காட்டும் முனைப்பு, மிக மிக ஆபத்தில் கொண்டு போய் முடியும்."

Are you serious ? BJP is ruling in many states.. Is it butchering minorities there ? Asking for POTA when terror attacks keep happening is not 'communal' you seculars.. No wonder that congress has managed to rule this country for so long....



What about the following in Karnataka, Rajesh?... நாய் வாழ நிமித்த முடியுமா?...

"கட்டாய மதமாற்றம் செய்ய முயன்றதாக முஸ்லிம் பெண் புகார்"
http://www.inneram.com/2011072017972/muslim-woman-accuses-bajrang-dal-of-forced-conversion-urges-igp-to-take-action
Quote
 
 
+4 #51 உண்மை விளும்பி 2011-07-27 04:17
Rameshh உங்களைபோன்ற இளிச்சவாயர்கள் இருப்பதனால்தான் இந்த மானங்கெட்ட காங்கிரஸ்சார் இன்னமும் நம் தலையில் மிளகாய் அறைதுக்கொண்டிரு க்கிரர்கள். இவ்வலோவு தெளிவாக சுட்டி கட்டியும் உங்களைபோன்றோர் காங்கிரஸ் அரசாங்கத்தை ஆதரிப்பது கல்லை கட்டிக்கொண்டு கிணற்றில் குதிப்பதற்கு சமம். காங்கிரஸ்சாரின் பலம் உங்களை போன்றோரின் அறியாமைதான், இனிமேலாவது திருந்துங்கள்.
Quoting rameshh:
there is a LIMIT for JALRA. savukku is just a copy/paste portal. keep it in mind always...

Quoting உண்மை விளும்பி:
Savukku, When are you starting a count down for Congress govt? Though it's a long count down pls start soon. Who knows the government may be toppled sooner then it's life.
Quote
 
 
+2 #50 வால்டர் வணங்காமுடி 2011-07-26 22:44
[ஃஉஒடெ நமெ="க்க்"]திமுகவை ஒழிக்க எப்படி அதிமுகவிற்கு ஆதரவு கொடுதிர்களோ அது போல் காங்கிரஸ் கட்சியை ஒழிக்க பிஜேபி கட்சிக்கு அதரவு கொடுக்க வேண்டும். இது காலத்தின் கட்டாயம் . 2014 ஆண்டு பிஜேபி ஆட்சிக்கு வந்தால் ஈழம் தமிழர் பிரச்சினையை தீர்க்க ஒரு வழி வைக்கும் . மீண்டும் காங்கிரஸ் வந்தால் தமிழ் ஈழம் மற்றும் நாம் எல்லோரும் மறைந்து போவோம் .
எதிரியின் எதிரி நமது நண்பன் .
பிஜேபி எதிர்ப்பு நிலை மாற வேண்டும்
மா[/ஃஉஒடெ]

நீங்கள் பிஜேபிக்கு ஜால்ரா அடியுங்கள். ஆனால் போகிறபோக்கில் தமிழ் ஈழம் அமைய பிஜேபிக்கு வாக்களிக்கயுங்க ள் என்ற உங்கள் காமெடி தான் கேவலமாக உள்ளது. உங்களுக்கு சிலவற்றை சுட்டிக் காட்ட விரும்புகின்றேன ். 1) யாழ்கோட்டையில் கிட்டத் தட்ட 20000 சிஙகள இராணுவ ஆட்கள் புலிகளினால் சுற்றிவளைக்கப் பட்டபோது, அப்போதைய சிஙகள அதிபர்,அப்போதைய இந்திய பிரதமர் வாஜ்பாயிடம் உதவி கேட்டார். உடனே வாஜ்பாய் தேசிய தலைவருக்கு அனுப்பிய பதில் "அவர்களை விட்டுவிடு. இல்லை என்றால் இந்திய இராணுவத்தை எதிர்கொள்ள தயாராய் இரு" 2) 2009ல் போர் உக்கிரமாக நடந்தபோது கூட பிஜேபி தமிழீழத்தை அங்கீகரிக்க முடியாது, ஆனால் ஈழத் தமிழர்களின் பிரச்சனை தீர்க்கப் பட்வேண்டும் என்று தான் தன் நிலையை வெளியிட்டது. ஆக, பிஜெபி, காங்கிரஸ் இரண்டுமே ஒன்று தான்.
Quote
 
 
+7 #49 subha 2011-07-26 21:55
தமிழர்களுக்கு இந்த காங்கிரஸ் செய்த துரோகத்தை மறக்காமல், நினைவில் வைத்திருந்து, தமிழகத்தில் இருந்து காங்கிரஸ் கட்சியை துடைத்து எறிய வேண்டும்.
Quote
 
 
+5 #48 rajesh11 2011-07-26 20:37
Its laughable that you wish for third front to come to power.. it wont even last 1 year.. Don't remember that last election ?

"ஜேபி போன்ற, மதவாத, இந்துத்துவ வெறி பிடித்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், அது நாட்டுக்கு ஆபத்தே…. புதிய தீவிரவாத சட்டம், ராமர் கோவில் என்று நாட்டை பிளவுபடுத்தும் வேலைகளில் பிஜேபி காட்டும் முனைப்பு, மிக மிக ஆபத்தில் கொண்டு போய் முடியும்."

Are you serious ? BJP is ruling in many states.. Is it butchering minorities there ? Asking for POTA when terror attacks keep happening is not 'communal' you seculars.. No wonder that congress has managed to rule this country for so long....
Quote
 
 
+2 #47 rajesh11 2011-07-26 20:37
Its laughable that you wish for third front to come to power.. it wont even last 1 year.. Don't remember that last election ?

"ஜேபி போன்ற, மதவாத, இந்துத்துவ வெறி பிடித்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், அது நாட்டுக்கு ஆபத்தே…. புதிய தீவிரவாத சட்டம், ராமர் கோவில் என்று நாட்டை பிளவுபடுத்தும் வேலைகளில் பிஜேபி காட்டும் முனைப்பு, மிக மிக ஆபத்தில் கொண்டு போய் முடியும்."

Are you serious ? BJP is ruling in many states.. Is it butchering minorities there ? Asking for POTA when terror attacks keep happening is not 'communal' you seculars.. No wonder that congress has managed to rule this country for so long....
Quote
 
 
+18 #46 jayabal 2011-07-26 18:46
ஈழ தமிழர்களை மட்டுமல்ல இந்தியாவையும் காக்க அந்நிய காங்கிரசை இந்தியாவைவிட்டு துரத்த இப்போதைக்கு பிஜேபி ய விட்ட தமிழர்களாகிய நமக்கும் இந்தியர்களுக்கு ம் வேறு நாதி இல்லை
Quote
 
 
+3 #45 Suresh Raja 2011-07-26 18:40
என்ன சொன்னாலும் இந்த காட்டேரிகள் திருந்த மாட்டார்கள்... எவனும் சரி இல்லை. பேசாமல், உச்ச நீதி மன்றம் கண்காணிப்பில், ஒரு அரசு அமைக்கலாம். இப்போதைய சூழலுக்கு அது தான் சிறந்தது.
Quote
 
 
+10 #44 prabhakaran.v 2011-07-26 18:13
மக்களுக்கு ஏன் அரசியல், நிர்வாகம் மீது கோபம் வருகிறது ?

காரணங்கள் இதோ ..

ஜனாதிபதி தகுதி :
--------------------
முன்னாள் பாரத பிரதமருக்கு சமையல் வேலை செய்து பாத்திரம் கழுவியவர்.
குற்ற பின்னணி உடையவர்.

பிரதமர் :
----------
முன்னாள் இந்திய மத்திய வங்கியின் பணியாளர். உலக வங்கி அனுபவம் உண்டு. தற்போது எதை கேட்டாலும் தெரியாது என்று சொல்பவர்.

இதோ சில தெரியதுகள் ...

1) 2க் ஊழலா .. தெரியாது

2) சொம்மென் நெஅல்த் கமெச் ஊழலா .. தெரியாது

3) ஆடர்ஷ் ஊழலா .. தெரியாது

4 ) உணவு தானியங்கள் கோடி கணக்கான டன் கணக்கில் கேட்டு போகிறதா ? தெரியாது.

5) இலங்கையில் நம் மக்கள் கொல்லப்படுகிறார ்களா ? தெரியாது.

6 ) நமது மீனவர்கள் கொல்லப்படுகிறார ்களா ? தெரியாது.

தெரியாது என்று சொல்வதற்கு ஒரு பிரதமர்.
Quote
 
 
+2 #43 chinnasamy 2011-07-26 17:11
Manmohansing is a actor not a PM and Ragul is a chilly boy so, don't worry savkku congress will away from inida not in tamilndau.Congress will get huge punishment If my tamil peoples crying in srilanka so, all of publisher / Reporters pls advise to stop economic help to srilanga.
Quote
 
 
+7 #42 JP 2011-07-26 15:24
BJP should come to power...Mr.Savukku
Quote
 
 
+5 #41 naanjil nagaraj 2011-07-26 15:06
ஒன்னு மட்டும் நிச்சயம் இந்தியாவின் பொருலதாரம் இரான் மாதிரி ஆகபோகிரது.அங்க 1 கிலோ தக்காலி வாங்க 7140 ரூபா குடுக்கனும்
Quote
 
 
+3 #40 வால்டர் வணங்காமுடி 2011-07-26 14:43
[ஃஉஒடெ நமெ="சின்ன தம்பி"]பாஜீவ் பூந்தியை , பூந்தியாக்க யார் காரணம் ?
1) மோனியோ பூந்தி
2) சு சாமி
3) ச சாமி
4) பிரேமா தாசன்
5) இஸ்ரவேல்
6) பெரியண்ணன்
7) மேலே உள்ள அனைவரும்

ப்லெஅசெ டிச்க் தெ சொர்ரெச்ட் அன்ச்நெர்.[/ஃஉஒடெ]


'சிரிக்க தெரியாதவரை' விட்டுவிட்டீங்க ...
Quote
 
 
+28 #39 KK 2011-07-26 13:12
திமுகவை ஒழிக்க எப்படி அதிமுகவிற்கு ஆதரவு கொடுதிர்களோ அது போல் காங்கிரஸ் கட்சியை ஒழிக்க பிஜேபி கட்சிக்கு அதரவு கொடுக்க வேண்டும். இது காலத்தின் கட்டாயம் . 2014 ஆண்டு பிஜேபி ஆட்சிக்கு வந்தால் ஈழம் தமிழர் பிரச்சினையை தீர்க்க ஒரு வழி வைக்கும் . மீண்டும் காங்கிரஸ் வந்தால் தமிழ் ஈழம் மற்றும் நாம் எல்லோரும் மறைந்து போவோம் .
எதிரியின் எதிரி நமது நண்பன் .
பிஜேபி எதிர்ப்பு நிலை மாற வேண்டும்
மா
Quote
 
 
+17 #38 KK 2011-07-26 13:10
திமுகவை ஒழிக்க எப்படி அதிமுகவிற்கு ஆதரவு கொடுதிர்களோ அது போல் காங்கிரஸ் கட்சியை ஒழிக்க பிஜேபி கட்சிக்கு அதரவு கொடுக்க வேண்டும். இது காலத்தின் கட்டாயம் . 2014 ஆண்டு பிஜேபி ஆட்சிக்கு வந்தால் ஈழம் தமிழர் பிரச்சினையை தீர்க்க ஒரு வழி வைக்கும் . மீண்டும் காங்கிரஸ் வந்தால் தமிழ் ஈழம் மற்றும் நாம் எல்லோரும் மறைந்து போவோம் .
எதிரியின் எதிரி நமது நண்பன் .
பிஜேபி எதிர்ப்பு நிலை மாற வேண்டும்
Quote
 
 
+4 #37 Chinna Thambi 2011-07-26 13:04
பாஜீவ் பூந்தியை , பூந்தியாக்க யார் காரணம் ?
1) மோனியோ பூந்தி
2) சு சாமி
3) ச சாமி
4) பிரேமா தாசன்
5) இஸ்ரவேல்
6) பெரியண்ணன்
7) மேலே உள்ள அனைவரும்

Please tick the correct answer.
Quote
 
 
-8 #36 திலிப் நாராயணன் 2011-07-26 12:50
//இன்று நம்பிக்கை அளிக்கும் சக்தியாக விளங்குவது, இடது சாரிகள் மட்டுமே. இந்த இடது சாரிகள் இன்று மேற்கு வங்கத்திலும், கேரளாவிலும், எதிர்க்கட்சியாக இருப்பது, அவர்கள் சுயபரிசோதனை மேற்கொண்டு, தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து, மீண்டு எழுந்து வருவார்கள் என்பதே ஜனநாயக சக்திகளின் எதிர்ப்பார்ப்பு // சரியான கணிப்பாக இருக்கிறது. வாழ்த்துக்கள். இடது பக்கம் மக்களை வழி நடத்தட்டும்.
Quote
 
 
+15 #35 வால்டர் வணங்காமுடி 2011-07-26 12:40
பெட்ரோல் விலை ஏற்றம் குறித்து கேட்டால் சர்வதேச சந்தையில் ஒரு பீப்பாய் விலை உயர்ந்துவிட்டது என்று வழக்கமான அதே பல்லவியையே இந்தியா பாடுகிறது. நிற்க. இந்தியா சுமார் 80% அளவுக்கு தான் பெட்ரோலிய பொருட்களை இறக்குமதி செய்கிறது. மீதி 20% பொருளை இந்தியாவே உற்பத்தி செய்கிறது. இவ்வாறாக 100% பெட்ரோலிய பீப்பாய்களைத்தா ன் இந்தியா இங்கிருக்கும் அம்பானி,களவானி சுத்திகரிப்பு நிலையங்களுக்கு கொடுக்கிறது. சரி அதில் என்ன பிரச்சனை என்று கேட்கிறீர்களா? அங்கு தான் நம்ம மன்மோகனுடைய அப்பட்டமான திருட்டுத் தனம் தெரிகிறது. உள்நாட்டிலேயே எடுத்தாலும் 20% கச்சா பொருளை இந்தியா அம்பானிக்கு உலக சந்தையில் எனன் ரேட் விற்கப் படுகிறதோ அதே ரேட்டுக்கு தான் விற்க வேண்டும். ஆனால் அது தான் இல்லை. இந்தியா 20% கச்சா பொருளை மலிவான விலைக்கே அம்பானிக்கு கொடுக்கிறது. ஆனால் வெளிவரும் பெட்ரோல் விலையோ ஒரே மாதிரி தான் உள்ளது. இது அநியாயம் இல்லையா? அப்படியானால் மன்மோகன் சிங் இந்த யோசனையை நிறைவேற்றுவாரா? "தமிழ்நாட்டில் போதுமான அளவு பெட்ரோலிய கச்சா பொருட்கள் கிடைக்கின்றன. எனவே தமிழ்நாட்டில் கிடைக்கும் பெட்ரோலிய பொருட்களை தமிழ்நாட்டின் தேவைக்கு போக, மீதம் உள்ளதை மட்டும் இந்தியா மற்ற மாநிலங்களுக்கு பயன்படுத்தலாம்". இதை செய்வாரா? என் கிராமத்தில் கிடைக்கும் பெட்ரோலை நான் நேரடியா வாங்கினா எனக்கு 10ரூபாய் தான் ஆகும்.ஆனால் அதே பெட்ரோலை இந்தியா எடுத்து எனக்கு 75ரூபாய்கு விக்குது. ஆக, தமிழ்நாடு இந்தியாவுடன் ஒட்டிகொண்டிருக் கும் பாவத்துக்காக ஒவ்வொரு முறை நான் பெட்ரொல் போடும்போதும் 65ரூபாய் எனக்கு தண்டம் விதிக்கப் படுகிறது. சிந்திப்பாய் தமிழா...!!! அடுத்தமுறை 'ஜனகனமன' பாடல் கேட்டால் எழுந்துநின்று சல்யூட் அடிக்கும்போது... சிந்திப்பாய் தமிழா...சிந்திப்பாய்...!!!
Quote
 
 
+15 #34 வால்டர் வணங்காமுடி 2011-07-26 12:26
இந்தியாவை சுற்றி பர்மா,இந்தோனேசி யா,நேபாளம்,பாகி ஸ்தான்,இலங்கை,க ம்போடியா போன்ற பிரதேசங்கள் உள்ளன. இவற்றை பொருத்தவரை இந்தியாவின் வெளிநாட்டுகொள்க ை ஒன்றே ஒன்று தான். 'இந்த பிரதேசங்களில் எந்த காரணம் கொண்டும் அமைதி நிலவ கூடாது.இவர்கள் அமைதியில்லாம இருந்தால் தான் இந்தியா அதில் குளிர்காய முடியும்'. அவ்வளவே...!!! ஒரு நாட்டில் மன்னராட்சியை இந்தியா ஊக்குவிக்கும், இன்னொரு நாட்டில் இராணுவ ஆட்சியை ஊக்குவிக்கும். காரணம் அதனுடைய வெளியுறவு கொள்கை. இதை புரிந்துகொண்டால ் தான் இலங்கை மீதான் இந்தியாவின் பார்வை இங்கிருக்கும் தமிழர்களுக்கு விளங்கும். என்ன அது? இந்தியா இலங்கையை எப்போதும் தனது பொருள்தாரா சந்தையாக,ஒரு ஊறுகாய் போலவே வைத்திருக்க நினைக்கிறது. இலங்கை (வரலாற்றில்) எப்போதெல்லாம் இந்தியாவின் நினைப்பிற்கு ஒத்துப்போகாமல் இருக்கிறதோ, அப்போதெல்லாம் இந்தியா இலங்கையில் கிளர்ச்சியாளர்க ளை ஊக்குவித்து, அரசிற்கு எதிராக காய்நகர்த்துகிற து. எப்போது இலங்கை அரசு இந்தியாவின் தாளத்துக்கு ஒத்து வருகிறதோ, அப்போதே இந்தியா தான் வளர்த்துவிட்ட கிளர்ச்சி குழுக்களை தானே அழித்துவிடவும் செய்கிறது. இது பர்மா,நேபாளம் தொடங்கி இலங்கையிலும் இந்தியா செய்யும் அடாவடித் தனம். அப்போ ஈழத்தமிழர்கள்? தம்ழீழம்?. இந்தியா எந்தகாலத்திலும் தமிழீழம் அமைக்க உதவாது. மாறாக முட்டுக்கட்டையா கவே இருக்கும். ஒருவேளை நிலைமை மிகவும் சிக்கலாகிவிட்டா ல் இந்தியா இலங்கையில் ஒரு தனிப்பிரதேசத்தை உருவாக்க துணைநிற்கும். உருவாக்கும். ஆனால் அது 'தமிழீழமாக' இருக்காது. 'சவுத் டெல்லியாக' இருக்கும். அங்கே தமிழர்கள் இருக்கமாட்டார்க ள். வட இந்தியர்கள் தான் இருப்பார்கள். எனவே 'ஈழம்' உருவாக இந்தியாவை இன்னும் நம்புவது சொந்த செலவில் மீண்டும் மீண்டும் சூனியம் வைத்துகொள்வதற்க ு சமம்.
Quote
 
 
0 #33 mariappan 2011-07-26 12:08
மானன்கெட்ட மூர்த்தி மானன்கெட்ட மூர்த்தி........................
Quote
 
 
+12 #32 Abdul Rahman - Dubai 2011-07-26 11:38
என்ன சவுக்கு?? மண்ணு மோகன் சிங்கத்தைப் பற்றி ஏன் இப்படி மனசாட்சி இல்லாமல், பாரபட்சமாக எழுதுகிறாய்??

நேற்று லண்டன் லார்ட்ஸ் விளையாட்டு அரங்கிற்குள், இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் விளையாட்டை பார்க்க, பஞ்சாப்பு சிங்கு ஒருவன், கத்தியோடு (குறுவாள்) உள்ளே செல்ல முயன்றானாம். ஆனால், அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் அவனை, பாதுகாப்பு காரங்களுக்காக, அந்த சர்தார்ஜியை உள்ளே அனுமதிக்க மறுத்து விட்டார்களாம். உடனே, அவன் அரங்கு வாயிலில் நின்று எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பித்து விட்டான்.

இதை கேள்விப்பட்ட நம்ம மண்ணு மோகன் சிங்கத்துக்கு ரத்தம் எப்படி கொதித்து இருக்கும்??? மீசை எப்படி துடித்து இருக்கும்??? கோபத்தில் நரம்பு எப்படி புடைத்து இருக்கும்???

ஆனால், நம்ம மண்ணு கோபப்பட்டாரா??? ம்ஹூம்..... இல்லவே இல்லையே!!! எவ்ளோ நல்லவரு?? அவரைப் பற்றி இப்படி தப்பாக எழுதுகிறாரே??

ஈழத் தமிழர்களின் அழு குரல் அவருக்கு காதில் விழவில்லை என்று கோபப்படுகிறீர்க ளே!!! அவருக்கு எப்படியா கேட்கும்?? எப்படி கேட்கும்?? அவர்தான் பத்து மீட்டர் துணியை வைத்து தலையையும் - காதையும் சேர்த்து சுற்றி சுற்றி கட்டி வைத்து இருக்கிறாரே!!!! பிறகு எப்படி கேட்கும்??

இவ்வளவு பேர் இவ்வளவு திட்டுகிறோமே!! எதற்குமே கோபப்படாமல், கல்லுளி மங்கன் மாதிரி சிரித்துக் கொண்டு இருக்கிறாரே! ஏன் தெரியுமா?? அதெல்லாம் பொறுமை காரணம் கிடையாது... அவருக்கு காது கேட்காதைய்யா... காது கேட்காது....
Quote
 
 
+9 #31 Nellai Kumaran 2011-07-26 11:29
இன்னும் சில நாட்களில் இந்தியா முழுவதும் நெருக்கடி நிலை (அவசர நிலை ) வரும் என்று தெரிகிறது. மக்களே தயாராக இருங்கள் !!!!!!!
Quote
 
 
+19 #30 Nellai Kumaran 2011-07-26 11:18
மக்களுக்கு ஏன் அரசியல், நிர்வாகம் மீது கோபம் வருகிறது ?

காரணங்கள் இதோ ..

ஜனாதிபதி தகுதி :
--------------------
முன்னாள் பாரத பிரதமருக்கு சமையல் வேலை செய்து பாத்திரம் கழுவியவர்.
குற்ற பின்னணி உடையவர்.

பிரதமர் :
----------
முன்னாள் இந்திய மத்திய வங்கியின் பணியாளர். உலக வங்கி அனுபவம் உண்டு. தற்போது எதை கேட்டாலும் தெரியாது என்று சொல்பவர்.

இதோ சில தெரியதுகள் ...

1) 2G ஊழலா .. தெரியாது

2) Commen Wealth Games ஊழலா .. தெரியாது

3) Adarsh ஊழலா .. தெரியாது

4 ) உணவு தானியங்கள் கோடி கணக்கான டன் கணக்கில் கேட்டு போகிறதா ? தெரியாது.

5) இலங்கையில் நம் மக்கள் கொல்லப்படுகிறார ்களா ? தெரியாது.

6 ) நமது மீனவர்கள் கொல்லப்படுகிறார ்களா ? தெரியாது.

தெரியாது என்று சொல்வதற்கு ஒரு பிரதமர்.
Quote
 
 
+17 #29 Nellai Kumaran 2011-07-26 11:17
நிதி அமைச்சர்:
-----------------
மேற்படி அண்ணன் எப்ப போவான் திண்ணை எப்போ காலியாகும் என்று காத்து இருப்பவர்.

உள்துறை அமைச்சர் :
-----------------------
வெற்றி பெற்றாரா என்ற சந்தேகம் உலகம் முழுதும் உண்டு. கருப்பு பணம் பட்டியலில் இவரது மகன் பெயர் முதலில் உள்ளதாக செய்தி. இவர் குடும்பம் பற்றி தனியாக எழுதலாம்.

முன்னாள் உள்துறை அமைச்சர் :
---------------------------------
தனது உடை மற்றும் சிகை அலங்காரத்தில் அதிக அக்கறை உள்ளவர். டெல்லி மற்றும் மும்பையில் குண்டு வெடித்தால் கண்டு கொள்ளாதவர்.

தொலைதொடர்பு துறை :
--------------------------
முன்னாள் அமைச்சர் திகார் சிறையில்.
இந்நாள் அமைச்சர் மிக சிறந்த வக்கீல் (திருடர்களுக்கு ). 2க் "ஜீரோ லாஸ்" என்ற தத்துவத்தை உதிர்த்தவர்.

விவசாய அமைச்சர் :
-------------------------
இந்த நபர் எதற்கு அமைச்சர் என்பது எல்லாருக்கும் தெரியும் (கிரிக்கெட்). உணவுக்கிடங்கில் பல்லாயிரம் டன் உணவு கெட்டுபோகிறது. ஆனால் கொள்ளை அடிப்பதிலும், கிரிக்கெட் தலைவராக இருப்பதிலும் குறியாக உள்ளான்.

இவர்களின் தலைவர் :
-----------------------
என்ன படித்து இருக்கிறார் என்றே இந்த நாட்டுக்கு தெரியாது. தனது சொந்த நாட்டில் பிழ்ழ விற்றவர். 40 வயது மகனுக்கு இன்னும் அறிவு முதிர்ச்சி இல்லை.
Quote
 
 
+14 #28 Nellai Kumaran 2011-07-26 11:15
இவர்களின் தலைவர் :
-----------------------
என்ன படித்து இருக்கிறார் என்றே இந்த நாட்டுக்கு தெரியாது. தனது சொந்த நாட்டில் பிழ்ழ விற்றவர். 40 வயது மகனுக்கு இன்னும் அறிவு முதிர்ச்சி இல்லை.

முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை :
-------------------------------------
பல முறை கேடுகளுக்கு சொந்தம். இன்று சொத்து கணக்கை வெளியிட மாட்டேன் என்று சொல்லி விட்டார்.

முன்னாள் ஊழல் கண்காணிப்பு தலைவர் :
-----------------------------------------
இவரைப்பற்றி நாடே அறியும். நான் என்ன சொல்ல வேண்டும்.

கருப்பு பணம் தலைவர் :
-------------------------
இவருக்கு இந்நாள் உள்துறை மனைவி வக்கீல். நல்ல குடும்பம்.

பாண்டிசேரி ஆளுனர் :
----------------------
மேற்படி ஆளுக்கு பாஸ்போர்ட் வாங்கி கொடுத்தவர்.

பக்கத்துக்கு மாநிலங்களில் கனிமவள கொள்ளை.

தமிழ் நாட்டை பற்றி நான் ஒன்றும் சொல்லத் தேவை இல்லை.

எனவே இந்த ஊழல் எதிர்ப்பு போராட்டத்திற்கு யார் தலைவர் என்று மக்கள் பார்க்கவில்லை.

தாவூத் இப்ராஹீம் அல்லது நாதுராம் கோட்சே உயிருடன் எழுந்து வந்து போராடினாலும் மக்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராகி விட்டார்கள்.

மக்கள் பகத்சிங், சுபாஷ் அல்லது ஜெயப்ரகாஷ் நாராயணன் வரும் வரை பொருத்து கொள்ளத் தயாராக இல்லை.
Quote
 
 
+9 #27 அம்பு, திருச்சி 2011-07-26 11:12
தான் பதவியில் இருக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக தன் இனத்தைச் சேர்ந்த 3000க்கும் மேற்பட்ட அப்பாவி சீக்கியர்கள் எரித்தும் வெட்டியும் கொள்ளப்பட்ட வழக்கைப்பற்றிக் கவலையே படாதவர்தான் இந்தப் பெருமகனார். கருணாநிதியைப் போலவே இனத்துரோகி. அடுத்து பிஜெபி. எந்த அடிப்படையுமே இல்லாமல் தோன்றிய கட்சி. இரண்டு கம்யூனிஸ்டுக்கா ரர்களுமே ரஷ்யா மற்றும் சீனா போடும் எழும்புக்காக குரைக்கும் நாய்கள். மாநிலத்திற்கு ஒரு நிலையல்ல பல நிலை எடுப்பவர்கள். ஈழப்பிரச்சனையில ் இராஜபச்சே போர்க்குற்றவாளி என்ற அமெரிக்காவின் குரலை ஈனஸ்வரத்தில் சிலர் குரைத்து அங்கு இனப்படுகொலை நடந்தது என்பதைப்பற்றிக் கவலைப் படாமல் அதை மறைக்கவும் உதவுகின்றனர்
Quote
 
 
+6 #26 விக்கி 2011-07-26 11:12
[ஃஉஒடெ நமெ="ராஜேஷ் தேவேந்திரன்"]திமுக எப்படி படு தோல்வி அடைந்ததோ அதே போல இந்த மானம் கெட்ட காங்கிரஸ் அரசும் படு தோல்வி அடையும் நாள் வெகு தொலைவில் இல்லை ஏழை வீட்டில் உணவு உண்டேன் என்று சொல்லும் ராகுலை அதே ஏழை ஒரு நாள் விஷம் வைத்து கொல்லும் நாளும் மிக தொலைவில் இல்லை என்னடா நடக்கு நாட்டில இதுவா ஜன நாயக நாடு ? ஒரு குடும்பம் ஆளுவது மன்னராட்சி அல்லவா ? முடிவு கட்டுங்கள் தமிழர்களே[/ஃஉஒடெ]
.
.
நீங்க வேற அவுரு தலித் வீடுகளில் அவுங்களே ஒரு வேலை சாப்பாட்டுக்கு கஞ்சியோ கூழோ வைத்திருப்பார்.அதை புடுங்கி இவன் சாப்பிடுறான்.இது எவ்வளவு இழிவான விஷயம்?
Quote
 
 
-2 #25 டங்குவாரு அந்துரும் 2011-07-26 10:58
வந்துட்டாருய்யா இந்த நியாயத் தராசு,

பாரதீய ஜனதா மதவாத கட்சி இல்லையாம்....நாட்டாமை தீர்ப்பை மாத்திசொல்லு.... இல்ல அநியாயத் தராசுன்னு பேர் வெச்சுக்கோ...
Quote
 
 
+4 #24 MLA 2011-07-26 10:48
தமிழன் : சோமாலிய கடற்கொள்ளையர்கள ிடம் இருந்து அந்நிய நாட்டு சரக்கு கப்பலை காப்பாற்ற விரைந்து செல்லும் இந்திய கடற்படைக்கப்பலா ல் தமிழக மீனவர்களை காப்பாற்ற முடியவில்லை..
கபில்சிபல் : கப்பல் அந்த பக்கம் வந்தாலே பஞ்சர் ஆகிடுது அவ்வளவுதான் மீனவர்களை வேண்டும் என்றால் சோமாலிய கடற்பகுதியில் வரச்சொல்லுங்க, பிடித்து கொடுத்து விடலாம் அப்படி செஞ்சால் ஸிரே லாஸ்..
தமிழன் : யாருகிட்ட கொள்ளையர்களிடமா ? ,,#$%@&&
Quote
 
 
+10 #23 சைதை அஜீஸ் 2011-07-26 10:27
என்ன சவுக்கு கடைசியிலே கம்யூனிஸ்டுக்கு ஆதரவு கொடுத்துவிட்டீர ்கள்? இந்தியாவிலுள்ள அரசியல் கட்சிகளின் சொத்துக்களில் மிக அதிகம் உள்ளது இவர்களுக்குத்தா ன் என்று ஒரு புள்ளிவிரம் கூறுகிறது. கிழிந்த சட்டை அணிந்துக்கொண்டு காட்சி கொடுக்கும் ஜார்ஜ் ஃபெர்ணாண்டஸ் மீது அவர் குடும்பத்தினரே போட்ட வழக்கு எத்தனை கோடிக்கு என்பது உங்களுக்கு தெரிந்தே இருக்கும். மக்களவையின் சபாநாயகராக இருந்த சோம்நாத்தை எதற்காக கட்சியை விட்டு நீக்கினார்கள் இவர்கள்? ஒன்று மட்டும் நிச்சயம் சவுக்கு... அதிகாரம் யார் கையில் கிடைத்தாலும் அவர்களை அந்த நாற்காலி போதை மாற்றிவிடுகிறது . இதற்கு உதாரணம் நம் மன்மோகன்(ம்?)சிங்.
Quote
 
 
+11 #22 Iridium Cobra 2011-07-26 10:17
ஜனதா கட்சி தலைவர், பள்ளி படிப்பைக்கூட முடிக்காத, பாரில் வேலை பார்த்து வந்த நபரின் யோக்கியதையை 200 பக்கங்கள் கொண்ட மறுக்க முடியாத சான்றுகளுடன் எடுத்துக்காட்டி , அவரின் மீது லஞ்ச ஊழல், கறுப்பு பண மோசடி, ஹவாலா மோசடி வழக்குகள் தொடுக்க, நாட்டின் தலை சிறந்த பொருளாதார மேதை எனக்கூறிக்கொள்ள ும் ஊமைக்குசும்பனிட ம் அனுமதி கேட்டு அனுப்பிய கடிதம், அதன் தொர்பு கடிதம் & 200 பக்கங்கள் கொண்ட ஆவணங்களை, சோத்தில் உப்பு போட்டு சாப்பிடும் ஒவொரு இந்தியனும் படித்து, இந்த நாசமகப்போன ஆட்சியில் இந்தியர்களின் சொத்தை எப்படி வந்தேறிகளும், கயவர்களும், கொள்ளைஅடித்து, இந்திய மக்களை, அடி முட்டாள்களாக நினைத்து கொக்கரித்து கொண்டு இருக்கிறார்கள் என்ற உண்மை நிலையைதெரிந்து கொள்ள வேண்டும்.

http://www.janataparty.org/pressdetail.asp?rowid=60
http://www.janataparty.org/letter.pdf
Quote
 
 
+14 #21 Iridium Cobra 2011-07-26 10:16
கொலம்பியா நாட்டின் போதை மருந்து கடத்தல் தலைவனின் மகளை கூட்டிக்கொண்டு திரியும், போதை மருந்துக்கு அடிமையான அந்த கூகுல்காந்தி
நாயை பாஸ்டன் ஏர்போர்ட்ல் கணக்கில் வராத டாலர்களை வைத்து இருந்ததாக அமெரிக்க போலிசாரால் கைது செய்யப்பட்டு பின்னர் இந்தியாவின் தலையீட்டால் விடுதலை செய்யப்பட்டான். பணம் ஏது எனக்கேட்ட போது பெபெப்பே என முழித்தான் இந்த தண்டக்கருமாந்தி ரம். இவனெல்லாம் இந்தியாவின் எதிர்கால பிரதமராக வந்து 120௦ கோடி மக்களின் தலையெழுத்தை நிர்ணயம் செய்தால் என கதி ஆகும்.
Quote
 
 
+6 #20 Iridium Cobra 2011-07-26 10:15
அனைத்து அமைச்சகத்திலும் உள்ள சொந்த & கூட்டணி கட்சி மந்திரிகள், ஊழல் செய்த கொள்ளை அடிப்பதையே முழுநேர தொழிலாக செய்து வெளிநாடுகளில் பணத்தை பதுக்கும் போது, போதை மருந்துக்கு அடிமையான அந்த கூகுல்காந்தி
பெரிய மயிறு மாதிரி உபியில் போய் கஞ்சியைக்குடித் துவிட்டு விவசாயிகளின் நண்பன் என போஸ் கொடுக்கிறான். அடிக்கிற கொள்ளையில் இவனுக்கும், இவனின் வந்தேறி ஆத்தாளுக்கும் பங்கு கொடுத்துவிட்டு, மேற்படியாக பெண்களையும், போதை மருந்துகளையும் இந்த தறுதலை நாய்க்கு ஏற்பாடு செய்து கொடுத்துவிட்டு ஆயிரங்கணக்கான கோடிகளை கொள்ளை அடிக்கிறார்கள்.
Quote
 
 
+9 #19 Iridium Cobra 2011-07-26 10:13
பள்ளி படிப்பைக்கூட முடிக்காத, பொழைப்புக்காக பாரில் சரக்கு ஊத்திக்கொடுத்து வந்த, ஒரு நாட்டின் பிரமரின் முட்டாள் மகனை, உடல் கவர்ச்சியால் கவர்ந்து, நாட்டின் உயரிய பதவியில் உள்ள நபரின் குடும்பத்தில் நுழைந்து, நம் நாட்டின் ரகசியங்களை வேவு பார்த்து கொடுத்த, பிறந்த நாட்டின் குடிஉரிமையை விட்டுக்கொடுக்க ாமல், பொய் தகவலை சொல்லி இந்திய குடிஉரிமையையும் பெற்று, இரு நாட்டின் பாஸ்போர்ட்களை பெற்று, பொய் தகவலைக்கூறி தேர்தலில் நின்று பிரதமராக முயன்று முடியாமல் போன ஒரு வந்தேறியின் ஏவல் வேலைக்காரனாக உள்ள இந்த ஊமைக்குசும்பன் மக்கு சிங்கின்
தலைமையில் உள்ள கடைந்தெடுத்த அயோக்கியர்களின் கூட்டம் தான் 120 கோடி இந்திய மக்களின் தலையெழுத்தை நிர்ணயிக்கிறது. சுதந்திர நாட்டில் ஒரு நூறு கடைந்தெடுத்த அயோக்கியர்களின் அடிமைகளாக இருப்பதற்கு, ஒவ்வொரு இந்தியனும் வெட்கி தலை குனியவேண்டும். அப்படி உள்ள அயோக்கியர்களின் கொட்டத்தை தட்டிகேட்க முடியாமல் தானுண்டு தன குடும்பம் உண்டு, தொழில் உண்டு என நாம் எல்லோரும் இருந்தால், ஆங்கிலேயன் நமக்கு சுதந்திரம் கொடுக்குபோது "இந்த இந்தியர்கள் எத்தனை நாளைக்கு இந்த சுதந்திரத்தை வைத்து நன்றாக வாழ்வார்கள் என்ப்பார்க்கலாம ்" எனக் கூறிய சாபம் கூடிய விரைவில் பலித்து விடும்.
Quote
 
 
+9 #18 Iridium Cobra 2011-07-26 10:11
பள்ளி படிப்பைக்கூட முடிக்காத, பொழைப்புக்காக பாரில் சரக்கு ஊத்திக்கொடுத்து வந்த,ஒரு நாட்டின் பிரமரின் முட்டாள் மகனை கவர்ந்து, நாட்டின் உயரிய பதவியில் உள்ள நபரின் குடும்பத்தில் நுழைந்து, நம் நாட்டின் ரகசியங்களை வேவு பார்த்து கொடுத்த, பிறந்த நாட்டின் குடிஉரிமையை விட்டுக்கொடுக்க ாமல், பொய் தகவலை சொல்லி இந்திய குடிஉரிமையையும் பெற்று, இரு நாட்டின் பாஸ்போர்ட்களை பெற்று, பொய் தகவலைக்கூறி தேர்தலில் நின்று பிரதமராக முயன்று முடியாமல் போன வந்தேறியின் கட்டளைகளுக்கு சேவகம் பார்த்துக்கொண்ட ு, அந்த வந்தேறியின் சொந்த நாட்டில் சொத்துக்களை வாங்கி குவிக்க ஊழல் செய்து பணத்தை அடித்து வரும் பணத்தில் பாதியை பங்கு கொடுத்து விட்டு மீதியை பங்கு போட்டுக்கொள்ளும ் ஆட்கள் நிரந்த கட்சிதான் அது.
Quote
 
 
+8 #17 விக்கி 2011-07-26 10:10
சராசரியாக பதினோரு நாளைக்கொருமுறை வெளிநாடு பயணம் கேளம்பிடும் மன்னுமோகன் சிங்
இந்த கபில் சிபல் டுபுக்கு அப்புறம் ரப்பர் வாயன் மனிஷ் திவாரி வெறி பிடித்த திக்விஜய் சிங் அப்புறம் நம்ம சிவகங்கை சீமான் ஐயோ நாடு உருப்பட்டாப்புல தான்
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 243 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday9108
mod_vvisit_counterYesterday12350
mod_vvisit_counterThis week78360
mod_vvisit_counterLast week80132
mod_vvisit_counterThis month281092
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12803211