|
அன்பார்ந்த பத்திரிக்கையாளர்களே.. நக்கீரன் இதழின் ஆசிரியர் கோபால் அவர்கள் மீதும், இணை ஆசிரியர் காமராஜ் அவர்கள் மீதும், தமிழக காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. நித்யானந்தா மற்றும் ரஞ்சிதா தொடர்பான ஒளிப்படக் காட்சிகளை ஒளிபரப்பும் முன், ஒரு ஹோட்டலில் வைத்து, பணம் கேட்டு மிரட்டினார்கள் என்ற புகாரின் அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப் படாமல் இருக்க, கோபால் மற்றும் காமராஜ் ஆகிய இருவரும் முன் ஜாமீன் கேட்டு சென்னை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்கள்.
இந்நிலையில், திரு கோபால் அவர்கள், பத்திரிக்கை அதிபர்களை தொடர்பு கொண்டு, நக்கீரன் இதழை முடக்கவும், பத்திரிக்கை சுதந்திரத்தை பறிக்கும் நோக்கத்திலும், இந்த வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளதாகவும், இதற்காக போராட்டம் நடத்துமாறும் கேட்டு வருகிறார் என்று அறிகிறோம்.

அவரின் கோரிக்கையில் உள்ள நியாயங்களுக்குள் செல்லும் முன்பாக, இவர்கள் மீது பதியப் பட்டுள்ள வழக்கு எப்படிப் பட்ட வழக்கு என்பதைப் பார்ப்போம். பத்திரிக்கை சுதந்திரம் பறிப்பு என்று இன்று பேசும் கோபால், தனி மனித சுதந்திரத்தை பறித்ததைப் பற்றி ஏன் யோசிக்க மறந்தார். அந்த சம்பவத்தைப் பற்றி செய்தி வெளியான நக்கீரன் இதழை குழந்தைகளுக்கு படிக்கக் கொடுக்க முடியுமா ?
அப்படியே, அதை வெளியிடுவதைக் கூட ஒரு பக்கம் வைத்துக் கொண்டால், அதை வெளியிடாமல் இருக்க பணம் கேட்டு பேரம் நடத்தப் பட்டது என்றல்லவா புகார் வந்திருக்கிறது. இந்தப் புகாரில் உண்மை என்ன என்பதை விசாரிக்க வேண்டாமா ? ஒரு வேளை அந்தப் புகார் உண்மையாக இருந்தால், அதை எந்த இதழியல் நெறிகளில் சேர்த்துக் கொள்ள முடியும் ?
இது போல எத்தனை தனி மனித உரிமை மீறல்களை செய்திருக்கிறது நக்கீரன் என்ற ஊடகம் ? எந்த விதமான இதழியல் நெறிகளிலும் பொருந்தாமல், திமுகவையும், கருணாநிதியையும் ஆதரிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் தானே நக்கீரன் இதழ் கடந்த 5 வருடங்களாக நடத்தப் பட்டு வந்தது ?
கடந்த ஐந்து வருடங்களாக நக்கீரன் இதழ், திமுகவுக்கு ஜால்ரா அடித்ததை விட வேறு என்ன செய்திகளை உருப்படியாக மக்களுக்கு தந்திருக்கிறது ? கடந்த இரு வாரங்களுக்கு முன்பு கூட, கனிமொழி மத்திய மந்திரி ஆகிறார் என்று கூசாமல் பொய்ச் செய்தியைத் தானே வெளியிட்டார்கள் ?
துளியாவது நியாய உணர்வு உள்ள பத்திரிக்கையாளர்கள், இப்படிப் பட்ட செய்திகளை ஏற்றுக் கொள்ள முடியுமா ? கருணாநிதிக்கு ஆதரவு தர வேண்டும் என்பதற்காக, ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஊழலே நடைபெற வில்லை என்று பச்சைப் பொய்யை செய்தியாக வெளியிடும் நக்கீரன் இதழை எப்படி பத்திரிக்கை என்று ஏற்றுக் கொள்ள முடியும் ? தேர்தல் கருத்துக் கணிப்பு எதுவும் நடத்தாமலேயே, நடத்தியதாக செய்தி வெளியிட்டு, 120 சீட்டுகளில் திமுக வெல்லப் போகிறது என்று கருணாநிதியின் மனதை குளிரவைக்க செய்தி வெளியிடும் நக்கீரன் எப்படி பத்திரிக்கை வரிசையில் வரும் ?
அதிமுக ஆட்சியின் ஒரு ஊழல் குறித்த செய்திகளை வெளியிட்டு, அதற்காக இன்று நக்கீரன் இதழ் பழிவாங்கப் படுகிறதென்றால், நமது மனமாச்சர்யங்களையெல்லாம் தூர எறிந்து விட்டு, நக்கீரனுக்காகவும், பத்திரிக்கை சுதந்திரத்துக்காகவும், போர்க்குரல் கொடுக்க யாரும் தயங்கப் போவதில்லை. கடந்த காலத்தில், அதிமுக ஆட்சியில், நக்கீரன் பழி வாங்கப் பட்ட போது, அதுதான் நடந்தது. தமிழ் மற்றும் ஆங்கிலப் பத்திரிக்கைகளில் ஒட்டு மொத்த பத்திரிக்கையாளர்களும் திரண்டு நின்று நக்கீரனுக்கு தோள் கொடுத்ததார்கள்.
ஆனால், அதற்குப் பிறகு என்ன நடந்தது ? ஜெயலலிதா எதிர்ப்பு என்ற நக்கீரனின் நிலைபாடு, திமுக ஆதரவு என்பதில் அல்லவா சென்று முடிந்தது ? கருணாநிதிக்கு ஜால்ரா போடுவது மட்டுமல்லாமல், ஜாபர் சேட் சொல்படி அல்லவா பத்திரிக்கையை நடத்தினார் காமராஜ் ?
கருணாநிதியோடு தங்களுக்கு இருக்கும் நெருக்கத்தை பயன்படுத்திக் கொண்டு, வீட்டு மனை ஒதுக்கீடு பெறுவதும், லாபம் சம்பாதிப்பதையுமே ஐந்தாண்டுகளாக செய்து கொண்டிருந்தவர்கள், ஒரு பெண்ணை ஆபாசமாக படமெடுத்து வெளியிடாமல் இருக்க பணம் கேட்டு மிரட்டியவர்கள் இன்று பத்திரிக்கை சுதந்திரம் பறி போகிறது என்று குரல் கொடுப்பது எள்ளி நகையாடுவது போல உள்ளது.

அது மட்டுமின்றி, கடந்த காலங்களிலே, தின பூமி ஆசிரியர் கைது சம்பவத்தின் போதும், தினமலர் லெனின் கைது சம்பவத்தின் போதும், ஜுனியர் விகடனை பொட்டு சுரேஷ் மிரட்டிய போதும், சீமான் கைதின் போது பத்திரிக்கையாளர்கள் தாக்கப் பட்ட போதும், ஊடகத்துறையினர் போராட்டம் நடத்திய போது, எங்கே இருந்தார்கள் காமராஜும், கோபாலும் ? சக பத்திரிக்கையாளனை அடித்து நொறுக்கும், ஒடுக்கும் ஒரு அரசுக்கு ஆதரவாக அல்லவா குரல் கொடுத்துக் கொண்டிருந்தார்கள் ?
இன்று தங்களுக்கு நெருக்கடி என்றதும் பத்திரிக்கை சுதந்திரம் பறி போகிறது என்று குரலெழுப்புவது நியாயமற்ற செயலல்லவா ? கோபாலும், காமராஜும், உங்கள் அனைவரின் ஆதரவை தேடக் கூடும். போராடுங்கள் என்று அழைக்கக் கூடும்.
ஆனால் நியாய உணர்வு உள்ள பத்திரிக்கையாளர்களாகிய நீங்கள், சிந்தித்து செயல்படுங்கள். அக்கிரமத்துக்கு துணை போன குற்றத்திற்கு ஆளாகாதீர்கள். வினையை விதைத்தவர்கள், இன்று வினையை அறுக்கிறார்கள். அவர்களைக் காப்பாற்றுவது நமது வேலை இல்லை.
|
Comments
நாம் கேட்க மாட்டோம் .ஏனென்றால் நாம் மனிதர்கள் ,பிறரின் தனிமையை உணர்ச்சியை மதிப்பவர்கள்.
மனிதர்களை அவர்களது குறைகளுடன் அப்படியே ஏற்றுகொள்ள வேண்டும் ...அதை விட்டு நமது விருப்பதை அவர்கள் மேல் திணிக்க கூடாது .. நித்யானந்த - ரஞ்சிதா உறவு அவர்களது தனிப்பட்ட விருப்பம் ..அது தவறு என்று கூற நக்கீரன் யார் ? அப்படித்தானே கூறினாலும் நக்கீரன் புகழ் உலகம் முழுவதும் இணைய முகப்பில் காரி உமிழப்படுகிறது ....
சீனா பழமொழி ஒன்று உண்டு ...அது நக்கீரன் கோப்பை்
"தவறான பாதைஇல் எவ்வுளவு தூரம் சென்றாலும் பாராவை யல்லை
திரும்பி வந்து விடுங்கள் ".
பணம் தரமுடியாது என்றவுடன் அதே போல பத்திரிக்கையில் தகவல் வந்தது.
. y do not u write about their stand... To all brothers of Ranjitha here, hw many of u did not see the video and enjoy it...... first clean urselves nd talk abt others.....
எப்போது?
ஆச்ரமகளுக்கு சென்ரது .கலவரத்தை காட்டியது.நாக்கீரனும் சன்டிவியும் இனைந்து எல்லா இடஙகளிலும் ரவுடிகளையும் கேமரா மேனையும் வைத்ததோ. மத்திய மானிலத்தில் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து தனியார் தொலைபேசி லைஙளை உபயோகித்து அரசுக்கு 400 கோடீ இளப்பு உன்டாக்கிய சன் டிவியையும் முடக்க வேன்டும்
அது சன் டிவி உதய டிவியில் மட்டும் ஒலிபரப்பாகும். இவர் செல்வதோ அரசு
சார்பில்.இந்த்க்கேசில் மஞகல் டிவியான
சன் குளுமத்தையும் முடக்க வேன்டும்.
இன்று பத்திரிக்கையளர் களை ஆதரவு கேட்கும் இவரை என்னவென்று சொல்வது. பத்திரிக்கை படிக்கும் எங்களுக்கே இவரை பற்றி நல்ல அபிப்ராயம் இல்லாதபோது, பத்திரிக்கையாளர ்களுக்கு என்ன அபிப்ராயம் இருக்கபோகிறது. ? பாவத்தின் சம்பளம் மரணம். முற்பகல் செய்தார். பிற்பகலில் அனுபவிக்கிறார்.
What happened to the follow up of 995 people, any links?...
தாங்களும் தயவு செய்து தற்சமயம் தி மு க எதிர்ப்பு நிலை மாறி, அதி மு க ஆதரவு நிலையை எடுத்த மாதிரி தான் தோணுது.
கடந்த மூன்று மாதமாக பள்ளி குழந்தைகள் எந்த பாட புத்தகத்தை வைத்து படிப்பது என்பது தெரியாமல் இருக்கும் சூழ்நிலையில்,
இந்த ஆட்சியின் சீர்கெட்ட நிலைபாட்டை , பாரபட்சம் இல்லாமல் விமர்சித்து எழுதங்கள் பார்க்கலாம்.
million Rupees question.. Are they wanting 'free press' only for their magazine?
They don't deserve any sympathy,as you rightly said they were a support of all atrocities done by the past DMK government against scribes.
சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது சின்ன மனுசன் பெரிய மனுசன்செயலை பார்த்து சிரிப்பு வருது,
Black money from India revealed by Wikileaks
http://t.co/34U0W4z
Nakkeeran Gopal has piled huge wealth in Veerappan case and he discarded the entire journalistic community. Both Gopal and kamaraj do not have the basic courtesy or colleagueship to treat the journalist and Gopal and Kamaaraj were acting like ex-officio DGP in lot of cases. many families hve got ruined due to these combo and never allowed any one except DMK members. Gopal/kanimozhi/KPP Samy[Fisheries Minister]/jaffer sait combination behind the scenes have done lot of damage to squeeze the blood of common and poor people who cannot even afford Rs.100 per day. Gopal should be put under goondas act and kamaraj should be put under terrorist act for threatening lot of people. they have some agents like A.P.SURESH kumar [R3 pictures], and some kunjamanis for their threatening point. Beware about these scoundrals.
( நம்ம டார்ச்லைட் சாரி, நக்கியசலைட் சார்தான் இனிமேல் எடிட்டரா?)
நாலு பேரு படிக்கிராங்கங்க ரதுக்காக என்ன வேண்னா எழுதலாமா...
டொங்.டொ.டொங்.டொ.டொங்.டொ.டொங்.
RSS feed for comments to this post