முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
பிட்டு சுரேஷ்… …. …. …. அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 34
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
சனிக்கிழமை, 06 ஆகஸ்ட் 2011 10:26

பாரப்பட்டி சுரேஷ், பொட்டு சுரேஷ் வரிசையில் பிட்டு சுரேஷ்.  இந்த பெயர் சவுக்கு வைத்ததில்லை.  தினகரன் தலைமை நிருபர் சுரேஷைப் பற்றி சவுக்கில் எழுதியபோது, ஒரு வாசகர் எழுதியிருந்த பின்னூட்டம், “அழகிரிக்கு ஒரு பொட்டு சுரேஷ், கலாநிதிக்கு ஒரு பிட்டு சுரேஷ்”. அது கவிதை போல அழகாக இருந்ததால், அந்தப் பெயரே இக்கட்டுரைக்கு வைக்கப் பட்டது.

 

பிட்டு சுரேஷைப் பற்றி சவுக்கில் எழுதியவுடன், பாராட்டுக்கள் என்றால் பாராட்டுக்கள், அப்படி ஒரு பாராட்டு.  வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.  வாழ்த்துக்களோடு, பல்வேறு தகவல்களையும் சொன்னார்கள்.

 IMG_0039

சில ஆண்டுகளுக்கு முன்பு, பிட்டு சுரேஷ், மாலைச் சுடர் பத்திரிக்கையில் பணியாற்றிக் கொண்டிருந்தார்.   அப்போது கிண்டி துணை ஆணையர் அலுவலகத்தில் வரும் தினசரி க்ரைம் ரிப்போர்ட்டுகள், பத்திரிக்கையாளர்களுக்கு காண்பிக்கப் படும்.   அப்படி ஒரு நாள் காண்பிக்கப் பட்ட க்ரைம் ரிப்போர்ட்டில் “Four suspicious persons arrested” என்று இருந்தது.  அதாவது சந்தேகத்திற்குரிய நான்கு நபர்கள் கைது செய்யப் பட்டனர்.

 

பிட்டு சுரேஷுக்கு இந்தத் தகவல் கிடைத்ததும், மாலைச் சுடர் பத்திரிக்கையில் தலைப்புச் செய்தியாக, பேனர் நியூசாக இந்தச் செய்தியை கொடுத்து விட்டு வந்து விட்டார்.   காலை 11 மணிக்கு வந்து மற்ற பத்திரிக்கையாளர்களுக்கு இந்தத் தகவலை பகிர்ந்து கொள்கிறார்.   மற்ற பத்திரிக்கையாளர்கள் என்ன ஏது என்று விசாரிக்கிறார்கள்.  விசாரித்தால்,  முதல் நாள் இரவு, நான்கு நபர்கள் குடித்து விட்டு, ரயில்வே ட்ராக் அருகே சிறுநீர் கழித்துக் கொண்டிருக்கிறார்கள்.  இருப்புப் பாதையை சரி செய்ய வந்த நபர் யார் என்று கேட்டதும், அவர் மீது கல்லெடுத்து வீசியிருக்கிறார்கள்.  அவர் காவல்நிலையத்துக்கு தகவல் கொடுத்ததும், அவர்கள் நாக்கு பேரையும் பிடித்து வந்து நாலு சாத்து சாத்தி அனுப்பி விட்டார்கள்.    இதுதான் பிட்டு சுரேஷின் திறமையான பத்திரிக்கையாளருக்கான அடையாளம்.

இது போல, பிட்டு சுரேஷின் திறமைக்கு பல சம்பவங்களை சான்றாக சொல்லுகிறார்கள்.

 

தினகரன் பத்திரிக்கைக்கு வேலைக்கு சென்றவுடன், சுரேஷின் நடவடிக்கைகளில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக சொல்லுகிறார்கள்.   நம்பர் ஒன் நாளிதழ் என்று தினகரன் சொல்லிக் கொண்டதும், இவரும் தன்னை நம்பர் ஒன் நிருபர் என்று கருதிக் கொள்கிறார்.  இந்த நம்பர் ஒன் என்ற கித்தாப்பில், இவர் அடிக்கும் கூத்துக்களுக்கு அளவே இல்லை என்கிறார்கள்.  தினகரன் நாளிதழில் வரும் கிசு கிசு பகுதியில், பிடிக்காத நபர்களைப் போட்டுத் தாக்குவது என்பது இவருக்கு கைவந்த கலை என்கிறார்கள்.

 potta_badu.psd

சென்னை மாநகர காவல்துறையில் ஒரு பெண் காவலர் பணியாற்றி வந்தார்.  அவர் கணவர் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகையில் ஒரு விபத்தில் இறந்து விடுகிறார்.  கணவர் இறந்ததும், தன் குழந்தைகளுக்காக தன் வாழ்வை அர்பணித்து பணியாற்றி வருகிறார்.  நல்ல குரல் வளம் இருப்பதால், காவல்துறை சார்பாக நடைபெறும் விழாக்களில் இவரை அறிவிப்பு செய்யும் வேலைக்கு நியமிப்பதுண்டு.  அப்படி ஒரு விழாவில் இவர் அறிவிப்பு செய்து கொண்டிருக்கையில், மேடை ஏறிய ஒரு அதிகாரிக்கு சல்யூட் வைக்க தவறி விட்டார்.  உடனடியாக அந்த அதிகாரி கடிந்து கொள்ளவும், அந்த காவலர் மன்னிப்பு கேட்டார்.  அந்த அதிகாரியும், அத்தோடு அந்த விவகாரத்தை முடித்து விட்டார்.

 

இது இப்படி இருக்கையில், கணவனை இழந்த விதவைதானே…  நாம் வளைத்துப் பார்க்கலாம் என்று ஒரு உதவி ஆய்வாளர் அந்த பெண் காவலரிடம் தன் சில்மிஷத்தை காட்டுகிறார்.  எரிச்சல் அடைந்த பெண் காவலர் உயர் அதிகாரிகளிடம் புகார் அளிக்கிறார்.  உயர் அதிகாரிகள் அந்த உதவி ஆய்வாளரை அழைத்து, சட்டையை கழற்றி விடுவேன் என்று கடுமையாக எச்சரிக்கிறார்கள்.

 

இதனால், ஒரு காவலர் கொடுத்த புகாரில் தனக்கு இப்படி ஒரு அவமானம் நேர்ந்து விட்டதே என்று அந்த உதவி ஆய்வாளர் கருவிக் கொண்டு இருக்கிறார்.  அந்த உதவி ஆய்வாளரின் ஆருயிர் நண்பனான பிட்டு சுரேஷிடம் இந்தத் தகவல்களை சொல்கிறார் அந்த உதவி ஆய்வாளர்.

 potta_suresh1.psd

அவ்வளவுதான்.  உயர் அதிகாரிகளை மதிக்காத, பல பேருடம் தொடர்பு வைத்திருக்கும் பெண் காவலர் என்று செய்தியை பீட்டர் மாமாவில் வெளியிட்டார் பிட்டு சுரேஷ்.   அப்போத காவல்துறையில் இதைக் கண்டு எரிச்சலடைந்த உயர் அதிகாரிகள் பலரும், தாங்கள் தயாரிக்கும் திரைப்படங்களில் கதாநாயகிகளாக நடிக்கும் நடிகையரோடு, கேடி சகோதரர்கள் அடிக்கும் லூட்டியைப் பற்றி பிட்டு சுரேஷ் எழுதத் தயாரா என்று கேள்வி எழுப்பினார்கள். ஆனாலும், பிட்டு சுரேஷைப் பற்றி எங்கே புகார் செய்வது ?  தினகரன் ஆசிரியர் ஆர்எம்ஆர்.ரமேஷ் தான் என்ன சொன்னாலும் கேட்பார், தன்னை மீறி ஒரு வார்த்தை செய்ய மாட்டார் என்று தம்பட்டம் அடித்துக் கொண்டு திரியும் பிட்டு சுரேஷைக் கண்டு அஞ்சி எந்த அதிகாரியும் காவலரும் ஒரு வார்த்தை பேசவில்லை.

 

பிட்டு சுரேஷ் யாருக்குத் தான் விசுவாசமாக இருப்பார் என்று விசாரித்தால், அவர் தனக்கு மட்டுமே விசுவாசமாக இருப்பார் என்கிறார்கள்.

 

தான் தான் ஆர்எம்ஆர்.ரமேஷுக்கு நெருக்கம், நான் என்ன சொன்னாலும் ஆர்எம்ஆர் கேட்பார் என்று வெளியில் சொல்லிக் கொண்டு, ஆர்எம்ஆர் பெயரைச் சொல்லி பிட்டு சுரேஷ் காரியம் சாதித்துக் கொள்வதுதான் அதிகம் என்கிறார்கள்.  போலீஸ் துறையில் பல்வேறு மாறுதல்களை இது போல, சாதித்துக் கொண்டுள்ளதாக கூறுகிறார்கள்.

 

தனக்கு காரியம் சாதித்துக் கொள்வது மட்டுமல்லாமல், சன் டிவி ராஜாவுக்கும் வேலைகளை முடித்துக் கொடுப்பார் என்கிறார்கள்.   தனக்கான காரியமாக இருந்தாலும் சரி, சன் டிவி ராஜாவுக்கான காரியங்களாக இருந்தாலும் சரி, சுரேஷ் சொல்வது, இது ஆர்எம்ஆர்.ரமேஷின் வேலை என்றுதான்.  அப்போதுதான் உயர் அதிகாரிகள் தட்டாமல் அந்த வேலையை செய்து கொடுப்பார்கள் என்ற சூட்சுமத்தை நன்கு அறிந்தவர் பிட்டு சுரேஷ்.

 

தனக்கான காரியங்களை சாதித்துக் கொள்வது சரி.  சன் டிவி ராஜாவுக்காக எதற்கு சுரேஷ் இப்படிப் பட்ட காரியங்களை செய்கிறார் ?   சன் டிவி ராஜாதான், பிட்டு சுரேஷை திருச்சி தினமலரிலிருந்து தினகரனுக்கு வேலைக்கு எடுத்தது.   அந்த விசுவாசத்தைத் தான் இப்படி காண்பிக்கிறார்.

 

சரி, ஆர்எம்ஆர்.ரமேஷுக்கும், தினகரன் நிறுவனத்துக்கும் சுரேஷ் விசுவாசமாக இருக்கிறாரா என்றால் அதுவும் இல்லை.   ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு தினகரன் நிறுவனத்தில், நடக்கும் விஷயங்களையும், ஆர்எம்ஆர்.ரமேஷின் நடவடிக்கைகளையும், சன் டிவியில் நடக்கும் உள் விவகாரங்களையும், கலாநிதி, சக்சேனா போன்றவர்களைப் பற்றி ஊழியர்களும், மேலிட நிர்வாகிகளும் என்ன பேசிக் கொள்கிறார்கள், என்ன டெவலப்மென்ட் ஆகியற்றைப் பற்றி துல்லியமாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்து வருகிறார்.

 suresh

பிட்டு சுரேஷ் ஏன் காவல்துறைக்கு விசுவாகமாக இருக்க வேண்டும் ?  என்ன இப்படி கேட்டு விட்டீர்கள் ?  காவல்துறைக்கு விசுவாசமாக இருந்தால் தானே, பிட்டு சுரேஷூக்கு வேண்டிய விவகாரங்களை சாதித்துக் கொள்ள முடியும் ?   என்னதான் ஆர்எம்ஆர்.ரமேஷுக்கும், சன் டிவி ராஜாவுக்கும் நெருக்கமாக இருந்தாலும், காரியங்களை செய்து கொடுப்பது என்னவோ காவல்துறை அதிகாரிகள் தானே….  ஆக எல்லோரையும் விட, காவல்துறை அதிகாரிகள் தானே முக்கியம் ?  அப்போதுதானே, பிட்டு சுரேஷின் காரியங்களை செய்து முடித்துக் கொள்ள முடியும் ?

தினகரன் ஊழியர்களும், பிட்டு சுரேஷ் மீது கடுமையான கோபத்தில் தான் இருக்கிறார்கள்.  ஏனென்றால், ஆர்எம்ஆர்.ரமேஷிடம் இல்லாததையும் பொல்லாததையும் போட்டுக் கொடுத்து, அந்த ஊழியர்களின் வேலைக்கு ஆப்பு வைப்பதில், பிட்டு சுரேஷ் கை தேர்ந்தவர் என்கிறார்கள்.    ஒரு முறை பிட்டு சுரேஷும் தினகரன் ஊழியர் ஒருவரும், மாலையில் டீ குடித்து விட்டு, நன்றாக சிரித்துப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.  அப்படியே பிரிந்து வீட்டுக்கு போய் விட்டார்கள்.  மறுநாள் காலை அந்த ஊழியரை அழைத்த ஆர்எம்ஆர்.ரமேஷ் நாளையிலிருந்து வேலைக்கு வராதே என்று கூறியிருக்கிறார்.   அதிர்ச்சி அடைந்த அந்த ஊழியருக்கு என்ன ஏது என்று ஒன்றுமே புரியவில்லை.   ஏன் சார் நான் என்ன தப்பு செய்தேன், ஏன் என்னை வேலையை விட்டு அனுப்புகிறீர்கள் என்று கேட்டதற்கு, ஆர்எம்ஆர், என்னய்யா, சீப் ரிப்போர்ட்டர் சொன்ன வேலையை செய்ய மாட்டேங்கிறியாமே... கொஞ்சம் கூட மரியாதை இல்லையாமே....   என்ன நெனச்சுகிட்டு இருக்க உன் மனசுலே... என்று கடுமையாக பேசி விட்டு, போயி சீப் ரிப்போர்ட்டர பாரு என்று கூறியிருக்கிறார்.   

பிறகு அந்த ஊழியர், நம்ப பிட்டு சுரேஷைப் பார்த்து, கெஞ்சி, தனது வேலையை தக்க வைத்துக் கொண்டார்.  இது போல, அத்தனை ஊழியர்களும் தன் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று கடுமையான தகிடுதத்தங்களில் ஈடுபடுபவர்தான் பிட்டு சுரேஷ் என்கிறார்கள் தினகரன் ஊழியர்கள்.     

 

Comments  

 
0 #39 கனபதி 2012-07-08 12:17
good
Quote
 
 
+1 #38 முகைதீன் அமர் 2011-08-12 10:16
பிட்டு சுரேஷ் போன்ற பல பண்ணாடைகள் தமிழ் பத்திரிக்கையுலக ில் நிர்வாக ஆட்களை கையில் போட்டுக்கொண்டு சகதொழிலாளர்களை பாடாகப்படுத்துக ின்றன....அவர்கள் ட்ரவுசரையும் கழட்டுங்கள் சவுக்கு அவர்களே
Quote
 
 
+1 #37 sindhu 2011-08-10 13:16
ஹலோ சர், தமிழ் பத்திரிக்கைகளில ் தினமலர், தினகரன், தினமணி, தினந்தந்தின்னு நிறைய இருக்கு, அதுல வேலை பார்க்குறவங்க படுற பாடு இருக்கோ, சொல்லி மாளாது...அதை கொஞ்சம் விசாரிங்க...
Quote
 
 
0 #36 Vaedhampudhidhu 2011-08-10 01:47
Quoting saraswathi:
Dear Savukku,
This guy is a bit and why do you want to waste your time even writing about him...I will give you something which i heard through my friends who work in sun news. A girl from Erode who was working in the sun news as news producer, was about to get married and just a week before the marriage she died under mysterious circumstance near saidapet railway station and its a trauma working there for many who dont know how to highlight their problem. Use your sources and I am expecting you to write a special report. Savukku Edunga


Similar to this In Chennai CTS Meps Night shift Cab drivers misbehaving to the female passanger
Quote
 
 
+3 #35 வால்டர் வணங்காமுடி 2011-08-09 00:33
வாசகர்களுக்கு ஒரு கொசுறு தகவல்:
கீழ்கண்ட விசயங்களை எல்லாம் முடிச்சு போட்டால் உங்களுக்கு ஒரு விசயம் 'பளிச்'சென்று புரியும்.

1.காவலன் படத்தை வெளியிட முடியாத அளவுக்கு சக்சேனா,கலாநிதி போன்றோர் விஜய்க்கு கொடுத்த நெருக்கடி.
2.ஆட்சி மாற்றம்
3.சக்சேனா,அய்யப்ப ன்,அன்பு செழியன் கைதுகள்
4.வெளியிட படம் இல்லாததால் ஓட்டை ஒடசல் படமாகவும், தமிழ்மொழி மாற்றம் செய்த ஆங்கில படங்களே தற்போது சன் குழும தொலைக்காட்சிகளி ல் வெளியிடப் படுகின்றது.
5.இந்திய அளவில் உருளும் மாறன் சகோதரர்களின் தலைகள்
6.சன் குழும பங்குகளின் மாபெரும் வீழ்ச்சி.
7.அரசு கேபிள் டீவி தொடக்கம்

லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்......
8. 'சூப்பர் ஹீரோ' ஆகிறார் விஜய் என்ற குங்குமம் விளம்பரமும், அட்டை படமும்.

மாறன்களின் டவுசர்கள் கிழியும் சத்தம் தூரத்தில் கேட்கிறது.
Quote
 
 
0 #34 வால்டர் வணங்காமுடி 2011-08-09 00:25
//பிட்டு சுரேஷ் யாருக்குத் தான் விசுவாசமாக இருப்பார் என்று விசாரித்தால், அவர் தனக்கு மட்டுமே விசுவாசமாக இருப்பார் என்கிறார்கள்//

இதே வரிகளைத் தான் பீட்டர் அல்போன்ஸுக்கும் எழுதப் பட்டிருந்தது. ஆக், என்ன தான் "எங்கள் அண்ணன், உயிரே உணர்வே, விடிவெள்ளி, எழுச்சி நாயகன்"னு கட் அவுட் வச்சாலும் எல்லா அல்லைகை பொறம்போக்குகளும ் தங்களுக்கு மட்டுமே விசுவாசமாக இருந்திருக்கிறா ர்கள் போல...!!!
Quote
 
 
+8 #33 வால்டர் வணங்காமுடி 2011-08-09 00:16
சவுக்கு வாசகர்: "நாங்க படிக்கிறது நம்பர் ஒன் நியூஸ்(பேப்பர்) . அப்போ நீங்க?"

தினகரன் வாசகர்: "நாங்க படிக்கிறது 'நம்பர் டூ போனா' தொடைக்கிற பேப்பர்....!!!" :lol:
Quote
 
 
0 #32 Iyyavu 2011-08-08 23:03
ஒரு ஊமையின் குரல் * என்னதான் கஷ்டப்பட்டு வேலை பார்த்தாலும்,
Quote
 
 
0 #31 friend 2011-08-08 16:58
[ஃஉஒடெ நமெ="பச்சோந்தி"]யப்பா.. சவுக்கு சங்கரு.. நாம்பாட்டுக்கு நாளுக்கு ரெண்டு பிட்டை போட்டுக்கினு தினகரனில் காலத்தை ஓட்டிக்கினு இருக்கேன். அதுல மண்ணை போட்டுட்டியே மகராசா... - இப்ப்டித்தான் பிட்டு சுரேஷ் தன்னோட நண்பர்களிடம் புலம்புகிறானாம் .

அறேஆள்ள்ய் ஸூபேற்ப் மாமூ....... :லொல்: :லொல்: :லொல்: :லொல்: :லொல்: :லொல்: :லொல்: :லொல்: :லொல்:
நல்லாத்தான் சொல்றாய்ங்கப்பு ...நடக்கட்டும் நடக்கட்டும்..![/ஃஉஒடெ]

அடறாசக்க.. அடறாசக்க.... 8) What a pity!
Quote
 
 
+7 #30 உங்களில் ஒருவன் 2011-08-08 12:08
இன்றைய தினமணியில் வந்துள்ள செய்தி, சமச்சீர் தவிர்த்து இது ஓரளவுக்கு நல்ல அரசு என்பதுக்கு சான்று இது:

காற்றாலை மூலம் பெறப்படும் மின்சாரம் 6,007 மெகாவாட், எப்போதும் ஒரே அளவில் கிடைப்பதில்லை. காற்று அதிகமாக உள்ள ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில், காற்றாலை மூலம் பெறப்படும் மின்சாரம் அதிக அளவில் இருக்கும். இவ்வாறு காற்றாலை மூலம் பெறப்படும் மின்சாரத்தின் அளவு, மின்சாரத் தேவை குறைவாக உள்ள இரவு நேரங்களில் தான் அதிகமாக கிடைக்கும். எனவே, பல நேரங்களில் இவ்வாறு கிடைக்கக் கூடிய மின்சாரத்தைப் பயன்படுத்த இயலாமல் போய் விடுவது உண்டு. இதன் காரணமாக, காற்றாலை மூலம் மின்சாரம் தயாரிப்போர், அந்த மின்சாரத்தை, விற்க இயலாத நிலை ஒரு பக்கமும்; மின்சாரத் தேவை உள்ளோர் அதனைப் பெற இயலாத சூழ்நிலை ஒரு பக்கமும், நிலவுவது உண்டு. உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை சேமித்து வைக்க இயலாது என்பதை அனைவரும் நன்கு அறிவார்கள். எனவே, மின்சாரத் தேவை குறைவாக உள்ள நேரங்களில் கிடைக்கப் பெறும் அதிக அளவு மின்சாரத்தை, தேவை உள்ளவர்களுக்கு வழங்குவது தான் சிறந்த மின் நிர்வாகம் ஆகும்.

ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் மாதங்களில் காற்றாலை மூலம் இரவு நேரங்களில் பெறப்படும் அதிக அளவு மின்சாரத்தை தற்போது பயன்படுத்த எனது தலைமையிலான அரசு ஒரு செயல் திட்டத்தை வகுத்துள்ளது. இதன்படி, காற்றாலை மூலம் இரவு நேரங்களில் பெறப்படும் சுமார் 100 மெகாவாட் மின்சாரம், உயர் அழுத்தத் தொழிற்சாலைகளுக் கு இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை 20 விழுக்காடு மின் தடையை விலக்கிக் கொண்டு வழங்கப்படும். காற்றாலை மூலம் இவ்வாறு பெறப்படும் மின்சாரம் முழுவதும் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதால், தமிழ்நாடு மின்சார வாரியத்திடம் இந்த மின்சாரத்தை பயன்படுத்திக் கொள்ள இசைவு தெரிவிப்பவர்களு க்கு இது வழங்கப்படும். இந்த செயல் திட்டம் இன்று, அதாவது, 8.8.2011 முதல் நடைமுறைப்படுத்த ப்படும். இதன் மூலம், உயர் அழுத்தத் தொழிற்சாலைகளுக் கு சுமார் 100 மெகாவாட் அளவுக்கு நிவாரணம் கிடைப்பதுடன், காற்றாலை மூலம் மின் உற்பத்தி செய்பவர்கள் அந்த மின்சாரத்தை தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு விற்பதன் மூலம் பயன் பெறுவர். மேலும், தமிழ்நாடு மின்சார வாரியம் மின் தேவை மற்றும் மின் பயனீட்டு அளவுக் கட்டணமாக சுமார் 10 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும்.
Quote
 
 
0 #29 raja333 2011-08-08 10:55
please check the authenticity of the wiki leak info about black money holder list which being run thro mail.

they are sharing it is loaded in the below IP of rapid share.
88.80.16.63 on port 9999
Quote
 
 
0 #28 minky 2011-08-08 08:50
இவ்லொ விஷ்யம் எழுதுரிஙலெ சவுகு . இதுல எதவாது ஒரு வீஷ்யதிர்கு நடவடிக்கை எடுக்க பட்டிருக சவுகு. இந்த மாதிரி கருத்துகலை பதிவு செய்தல் மட்டும் போதுமா.பொது மக்கலாக நாங்கல் என்ன செய்யாலம். தினமும் இதை படித்து படித்து கொந்தலிதல் மட்டும் போதது :சட்:
Quote
 
 
+1 #27 kk 2011-08-08 02:09
The Central Vigilance Commission (CVC) has referred a fresh case to the CBI against former Telecom Minister A Raja about alleged manipulation in awarding WiMax franchisee of BSNL to friendly companies.

According to sources, CBI would register a separate case against Raja and top BSNL officials for conspiracy and forging documents in the WiMax franchisee deal.

The CVC decided to refer the case to CBI after finding gross violations and criminal conspiracy in the dubious allotment of WiMax franchisee of BSNL to Starnet Communications, owned by close associate of Raja. The Starnet, which failed to meet the criteria specified by BSNL, was issued Letter of Intent (LoI) in six major circles of the public sector telecom company.

According to sources, cases may be registered against Raja and senior officials in the BSNL headquarters in Delhi and Southern Project Division office in Chennai for colluding with the private beneficiaries, close to Raja.

WiMax is the high-speed Internet service and upon Raja’s intervention BSNL decided to allot franchisee to private companies on revenue share model. In the controversial policy, the private operator, who got franchisee, would be the custodian of valuable 20MHz of spectrum and BSNL would get below 30 per cent of the revenue.
Quote
 
 
+8 #26 santhana veerappan 2011-08-07 21:15
இவரு ராஜாவுக்கு கைத்தடி இல்லே, ராஜாவால வேலைக்கு வந்து அவரை மதிக்காத ஜென்மன்,பிட்டு மட்டுமல்ல ராசாவால வேலைக்கு வந்தவங்க நெர்ய பேரு அவரை மதிக்கிறதே இல்லஏ, இதனால் ராஜா இப்போ தினகரன்ன்னு சொனனலே வேர எதாவது பேசுப்பு நனு தான் சொல்றாரு, மத்தபடி பிட்டடு பத்தி எழுதினாது எல்லாமே உன்மைதான் மிஸ்டர் சவுக்கு
Quote
 
 
+9 #25 ஒரு ஊமையின் குரல் 2011-08-07 17:00
தினகரன் பத்திரிகையின் பிட்டு சுரேஷ் மட்டுமல்ல..தமிழகம் முழுவதும் இதுபோன்ற தில்லாலங்கடிகள் இருக்கத்தான் செய்கிறார்கள்.சென்னையில் மட்டும் ஒருவனை அம்பலப்படுத்திய சவுக்கே..,உனது பார்வையை சற்று தமிழகம் முழுவதும் பரவலாக்கினால் பரவாயில்லை.உண்மையாக உழைக்கும் செய்தியாளர்களுக ்கு சுரேஷ் போன்ற புல்லுருவிகளினா ல் கெட்டபெயர் ஏற்படுவது வேதனையளிப்பதாக உள்ளது.

அரசியல்வாதிகள், காவல்துறை,அரசு அதிகாரிகள் உள்ளிட்டவர்களின ் கயமைத்தனங்களை மட்டுமின்றி,பொத ுமக்களின் பாதுகாவலர்களாக விளங்கும் பணியில் இருப்பதாக பாவலா பண்ணிக்கொண்டு,இ துபோன்ற கயவாளித் தனங்களில் ஈடுபடும் பத்திரிகையாளர்க ளையும் அம்பலப்படுத்த வேண்டும். ஏனெனில்,சமூகவிர ோதிகளை வெளிக்கொணரும் பொறுப்பிலிருந்த ு கொண்டு, அவர்களுடன் கூட்டணி போடுவதென்பது பொதுமக்களை வஞ்சிப்பதே ஆகும். குற்றவாளிகளைவிட ,குற்றவாளிகளுக் கு அடைக்கலம் கொடுப்பவனும், இவன் ரொம்ப நல்லவன் என்று செய்திபோடுபவனும ் முதலில் தண்டிக்கப்பட வேண்டும்.

இதுமட்டுமின்றி பிரபல பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்ச்ப்க ள் தங்கள் ஊழியர்களை எவ்வாறு கொத்தடிமைகளாக எவ்வளவு ஆண்டுகாலமாக வைத்திருக்கிறார ்கள் என்பதையும் சவுக்கு அம்பலப்படுத்தின ால் பரவாயில்லை. பொதுமக்களின் துன்பங்களை வெளிப்படுத்தும் வாய்ப்புள்ள ஊடகங்களின் பணியாளர்கள் படும் துன்பங்களை வெளியே சொல் எவ்வித வாய்ப்பும் இல்லை என்பதே இப்போது இருக்கும் நிலை. இந்த சவுக்கு.. குரலற்றவர்களின் குரலாகவும் ஒலிக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறோ ம்.அதையும் தினகரன் மற்றும் சன் தொலைக்காட்சியில ிருந்தே துவங்கினால் மிகவும் நன்று…
Quote
 
 
0 #24 FAAZ 2011-08-07 13:13
http://www.theindiacall.com/2011/08/some-hidden-facts-about-nehru-gandhi.html?utm_source=feedburner&utm_medium=email&utm_campaign=Feed%3A+Theindialeaks+%28THENDIALEAKS%29

DEAR SAVUKKU, PLS TRANSLATE IN TAMIL AND PUBLISH.
Quote
 
 
+15 #23 KK 2011-08-07 12:04
ராமேஸ்வரம் : ராமேஸ்வரத்தில் பா.ஜ., சார்பில் இன்று கடல் முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. கச்சத் தீவை இந்தியாவிற்கு மீட்டுத்தர வலியுறுத்தி பா.ஜ., வினர் இப்போராட்டத்தை நடத்துகின்றனர். இந்த போராட்டத்தில் எவரம் எதிர்பாராத அளவில் மீனவர்களும், பொது மக்களும் கலந்து கொண்டுள்ளனர். இதனால் ராமேஸ்வரத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.
Quote
 
 
+4 #22 பச்சோந்தி 2011-08-07 09:13
யப்பா.. சவுக்கு சங்கரு.. நாம்பாட்டுக்கு நாளுக்கு ரெண்டு பிட்டை போட்டுக்கினு தினகரனில் காலத்தை ஓட்டிக்கினு இருக்கேன். அதுல மண்ணை போட்டுட்டியே மகராசா... - இப்ப்டித்தான் பிட்டு சுரேஷ் தன்னோட நண்பர்களிடம் புலம்புகிறானாம் .

நல்லாத்தான் சொல்றாய்ங்கப்பு ...நடக்கட்டும் நடக்கட்டும்..!
Quote
 
 
-1 #21 Prakash J 2011-08-07 03:32
Alagiri pathi oru katurai pannungale...

http://www.tehelka.com/story_main50.asp?filename=Ne060811Godfather.asp
Quote
 
 
+16 #20 Padman 2011-08-07 00:53
இது எல்லாம் ஒரு செய்தின்னு எதுக்கு சவுக்கு எரிச்சலை ஏற்படுத்துற?

புத்தகமே கொடுக்காமல் தேர்வு நடத்த சொல்கிற இந்த அரசை என்ன செய்வது?
பசங்க எதிர்காலம் என்னாகும்?
நீதி மன்ற உத்தரவு வருமுன்னே மெட்ரிக் பள்ளிகள் மெட்ரிக் புத்தகத்தை வினியோகிக்கிறார ்கள். அப்படியென்றால் தீர்ப்பை வாங்கியாச்சா?

ரஞ்சிதா பேட்டியை விட பிரின்ஸ் கஜேந்திரபாபு போன்றவர்களின் பேட்டிதான் சவுக்கு வாசகர்களுக்குத் தேவை. முடிந்தால் முயற்சிக்கவும். கல்வியோடு இவர்கள் விளையாடுவது வேதனையாக இருக்கிறது.

இதையே திமுக செய்திருந்தால் அமைதியாகவா இருப்பீர்கள்?
Quote
 
 
+8 #19 கடற்கரைவாசி 2011-08-06 21:45
பகுதி 2:

எங்கள மாதிரி பரதேசத்துல இருக்குறவங்க (நாங்க பரதேசி சார்!!!) என்ன உதவி பண்ணனும்னு சொல்லுங்க, கேளுங்க, எங்களால முடிஞ்ச உதவிய பண்றோம்...

நமக்கு இருக்குற ஆதங்கங்கள இப்படி வெட்டியா பின்னோட்டம் போட்டு தவிர்த்துக்குறோ ம்... என்பதுதான் வேதனையிலும் வேதனை... நம்ம ஆசான் சவுக்கு மாதிரி ஆக்கப்பூர்வமா செஞ்சா நாடு உருப்படும்...

நாம் ஆசான் சவுக்கிடம் இருந்து நிறைய கற்றோக்கொள்ள வேண்டும், வேலை நிறுத்தம் செய்யப்பட ஊழியர், இவ்வளவு செய்ய எவ்வளவு உழைத்திருப்பார் ,

சவுக்கை விட அதிக பணம் படைத்தவர், அதிகாரம் படைத்தவர் இங்கு அதிகம் பேர் இருப்போம், ஆளுக்கு ஒரு அக்கிரமத்தை வெளிக்கொண்டு வந்தால், சிறு துளி பேரு வெள்ளம் என்பது போல, நாம் அனுபவிக்கா விட்டாலும், நமது சந்ததிகள் அனுபவிக்கும்...


ஏதோ எனக்கு பட்டது....
Quote
 
 
+7 #18 கடற்கரைவாசி 2011-08-06 21:41
@, @தோலுறிப்பவன்!! , மற்றும் தோழர்கள்...

இவர்கள் எல்லாம் இதற்கு முதல் குற்றவாளிகள் அல்ல, நாம் தான், மக்கள் தான் முதல் குற்றவாளிகள்...

இவர்களுக்கு ஒவ்வொரு முறையும் ஒட்டு போட்டு, இன்னமும் ஒட்டு போட்டு, நாம் வெங்காயம் வாங்க திருவோடு ஏந்தும் அளவுக்கு வந்தாலும் மீண்டும் இந்த கொள்ளையர்களுக்க ு ஒட்டு போட்டு...

ரொம்ப நல்லவங்களா இருக்கோமே, எப்பதான் திருந்துவோம்னே தெரியல...

படிச்சவன், IIT, IITMல படிச்சவன் தேர்தல்ல நின்னா deposit கூட வாங்க மாட்டேங்கறான்...

அட ஏன் சார், நம்ம ஆசான் சவுக்கு நின்னா கூட அவரு deposit வாங்குறது கஷ்டம்...

இன்னைக்கி இருக்குற CM நல்லவங்கல்னா ஒட்டு போட்டோம், மொள்ளமாரிக்கும் முடிச்சவிக்குக் கும் தான் ஒவ்வொரு முறையும் ஒட்டு போடுறோம்...

அவன் தலைவராக்குறோம்.... நம்மள ஆள வைக்கிறோம்...

நம்ம மாறனும், நம்ம ஒற்றுமையா இருக்கணும், அஞ்சுக்கும், பத்துக்கும், அரைக்கும், கோட்டருக்கும், ஒட்டு போடுறவன அணுகி, அவனுக்கு புரிய வைக்கணும், அவன் புள்ள குட்டி படிக்க உதவனும்... ஒண்ணா நின்னு ஒத்துமையா நின்னு நல்ல ஆள தேர்தல்ல நிக்க வைக்கணும், அப்பத்தான் ஒரு அளவுக்கு உருப்படும்...

இதுங்க ஜெயிக்குரதுக்கா க, சாதி, மதம், அப்டின்னு பிரிவினை பண்ணி, ஊற எரியவிட்டு குளிர் காயுறாங்க...

உணர்ச்சிவசப்பட் டு எதையும் செய்யுறத விட்டுட்டு, ஆறாவது அறிவ பயன்படுத்தி யோசிச்சு செய்யணும்...

ஜாதிக்காரன்னு ஒட்டு போடுறத விட்டுட்டு, சாதிக்க கூடியவனான்னு பாத்து ஒட்டு போடணும்...

அப்ப ஒரு வேலை நம்ம உருப்படலாம்...

மாற்றம் மனதளவில் வேண்டும், ஒவ்வொரு செயலிலும் வேண்டும்... ஒவ்வொரு சிந்தனையிலும் வேண்டும்,

கருணாநிதிக்கு இவ்வளவு நிதி என்பதில் ஆச்சரியப்படுபவர ், மிகக்குறைவே, இதெல்லாம் ஊரறிந்த ரகசியம்...

இத வெளில வந்தத வச்சு நம்ம ஆசான் சங்கர் மாதிரி இத பயன்படுத்தி இவங்கள தண்டிக்க என்ன பண்ணனும்னு யோசிங்க மக்களே, யாராச்சும், வக்கீலா இருந்தா கேசு போடுங்க, அரசு ஊழியரா இருந்தா, லஞ்சம வாங்காதீங்க, அடுத்தவன் வாங்குனா ஆதாரத்தோட அத வெளிக்கொணர முயர்ச்சிங்க....
Quote
 
 
+3 #17 TG Ramamurthy 2011-08-06 21:27
கருப்பு ஆடு எல்லா இடஙகளிலும் உள்ளது இத்தகைய கருப்பு ஆடுகளை கொன்று குவிக்க வெண்டும்
Quote
 
 
+9 #16 Ravi 2011-08-06 19:28
நாயும் பிழைக்கும் இந்த பிழைப்பு...பாரதி சொன்னான்.
Quote
 
 
+17 #15 உங்களில் ஒருவன் 2011-08-06 17:43
அழகிரிக்கு பொட்டு
திருப்பதிக்கு லட்டு
தினகரனுக்கு ஒரு பிட்டு

பிட்டு, நீ ஒரு வெத்து வேட்டு
சவுக்கு வச்சார்ல உன் மண்டைல ஒரு கொட்டு

ஏய் டண்டணக்கா ஏய் டனக்குனக்கா
Quote
 
 
+12 #14 THOTTI SURESH 2011-08-06 17:35
யப்பா.. சவுக்கு சங்கரு.. நாம்பாட்டுக்கு நாளுக்கு ரெண்டு பிட்டை போட்டுக்கினு தினகரனில் காலத்தை ஓட்டிக்கினு இருக்கேன். அதுல மண்ணை போட்டுட்டியே மகராசா... - இப்ப்டித்தான் பிட்டு சுரேஷ் தன்னோட நண்பர்களிடம் புலம்புகிறானாம் .
Quote
 
 
+9 #13 Suresh Raja 2011-08-06 17:33
உஸ்ஸ்ஸ்ஸ் அப்பா......... கண்ணெல்லாம் கட்டுதே!!!!!! ஏம்பா சவுக்கு, இந்த பிக்காளி பயல பத்தி இம்பூட்டு எழுதியிருக்கிங் களே... அப்புடியே அவனுக்கு வேற பட்ட பேரு வைக்க கூடாது? பேரு டேமேஜ் ஆகுதுல்ல... :o :o :o :o
ஆளாளுக்கு வண்டி கட்டி வந்து திட்டுவாங்க... 8) 8) 8) 8) 8) 8) 8) 8)
Quote
 
 
+4 #12 gv_t@gmai.com 2011-08-06 16:00
'' ஓ... மை காட்! கலைஞர்ஜி குடும்பத்துக்கு இவ்வளவு சொத்தா? - ஜூனியர் விகடன் - 201108
http://www.vikatan.com/article.php?mid=2&sid=251&aid=9074
Quote
 
 
+6 #11 தோலுறிப்பவன்!! 2011-08-06 15:20
இதப் படிங்க சவுக்கு, ஒரு அல்லக்கை ஃபேஸ்புக்ல போட்டு இருக்கு:

அந்த அல்லக்கையோட பெயர்: அன்பு குமார்
புடுங்குறது: சன் டிவில சப்புற எடிட்டர், சாரி, சப் எடிட்டர்

ஃபேஸ்புக் யுஆரெல்: ஹ்ட்ட்ப்://ந்ந்ந்.ஃபசெபோக்.சொம்/#!/ப்ஹொடொ.ப்ஹ்ப்?ஃப்பிட்=212303758818601&செட்=அ.112323225483322.5783.100001169346497&ட்ய்பெ=1&தெஅடெர்
அல்லக்கை ஃபேஸ்புக் யுஆரெல்: ஹ்ட்ட்ப்://ந்ந்ந்.ஃபசெபோக்.சொம்/#!/ப்ரொஃபிலெ.ப்ஹ்ப்?இட்=100001886660187

இத ஒரு கை பாருங்க!!

தளபதி முதலமைச்சராக அமரவைப்பதற்கு அம்மையாரே வழி வகுப்பார் ..!

தேமுதிக இன்று எதிர்க்கட்சியாக இருந்தாலும் பிராதான எதிர்க்கட்சி என்றுமே திமுக தான் இதை அறிவுடையவர்கள் மறுக்க முடியாது மறுப்பவர்கள் அறிவுடையவர்களா இல்லையா என்பதை நான் சொல்ல மாட்டேன் ...உங்களுக்கே வெளிச்சம்... அவை மரபுகள் ஒரு பக்கம், அவை மறுப்புகள் ஒருபக்கம், எதிர்க்கட்சியாய ் அதிமுகவின் அத்தனை கேள்விகளுக்கும் பதில் சொல்லவும் அவர்களை வெல்லவும் தயாராக இருக்கும் எங்கள் உடன் பிறப்புகளுக்கு சட்டப்பேரவையில் முன் வரிசையில் இடம் இல்லை, வாயை மூடி வேடிக்கை பார்க்கும் சில பேருக்கு முன்வரிசையில் முழம் போட்ட இடம் பிடிப்பு என்ன நடக்கிறது சட்டப்பேரவையில் ... எதிர்க்கட்சிகளை மரியாதையாகவும் அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் அரசு தான் ஒரு நல்ல அரசாக இருக்க முடியும் மற்றவையெல்லாம் நாலஞ்ஜாதி அரசியல் தான். அவை நடவடிக்கைகளில் அம்மா அம்மா என்ற வார்த்தையை தவிர வேறு வாசிப்புகள் இல்லை. காலில் விழும் சம்பிரதாயங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே... ஆளும் கட்சிக்கு நெருக்கடி கொடுத்து அவர்கள் நல்வழியில் ஆட்சியை நடத்திட எதிர்க்கட்சிகள் தான் தூண்டுகோளாக இருக்க வேண்டும் இன்றைய நிலை அப்படியா ?? அடுத்து என்ன படம் என்ற நினைவினிலே காலம் தள்ள பார்கிறார்கள் என்ன சொல்ல,...
Quote
 
 
+7 #10 Abdul Rahman - Dubai 2011-08-06 12:44
ஏம்ப்பா சவுக்கு...?

தெர்யாமத்தான் கேக்குறேன்... அப்புடி இன்னாத்தே நீ பெருசா தப்பு கண்டு புடிச்சிட்டே???

“Four suspicious persons arrested” - இதுலே Suspicious-லே நடுவாண்டே Pish-ன்னு கீதா?

Pish-ன்னா மூச்சா போறதுன்னுதானே?? நம்ம பிட்டு சுரேஷு கொஞ்சம் பில்ட்-அப்பு சுரேஷு ஆகி, அந்தாண்டே கொஞ்சம், இந்தாண்டே கொஞ்சம் பில்ட்-அப்பு குடுத்து நியூஸ் போட்டு இருக்கான். இதுலே இன்னாத்தே நீ பெருசா தப்பு கண்டு புடிச்சிட்டே???

உன்னைவிட நம்ம பில்ட்-அப்பு சுரேஷு படு புத்திசாலியா இருக்கான்ங்குற, விட்டா அப்துல் கலாமுக்கே அறிவுரை சொல்லுற அளவுக்கு புத்திசாலியா இருக்கான்ங்குற வயித்தெரிச்சலில ்தானேப்பா நீ இப்புடியெல்லாம் எழுதறே??

:D :D :D :D :D :D :D :D :lol: :lol: :lol: :lol: :lol: :lol:
Quote
 
 
+9 #9 kuruvi 2011-08-06 11:56
எப்பா தாங்க முடியலப்பா .இப்படி இருக்கிற நிருபரை பத்தியும் கொஞ்சம் ஏழுதுங்க....
Quote
 
 
+22 #8 MSR 2011-08-06 11:51
:D தினகரனே ஒரு தறுதலை பத்திரிக்கை, அதுல இந்த மாதிரி ஒரு தறுதல , எப்படித்தான் வெளங்க போகுதோ?
Quote
 
 
+16 #7 மனிதம் மட்டும் 2011-08-06 11:44
ஊர்ல இருக்குறவன் தூக்கத்தை கெடுக்கும் பத்திரிக்களர்கள ின் தூக்கத்தை கெடுக்கும் சவுக்குக்கு வாழ்த்துக்கள்
Quote
 
 
+20 #6 minnal 2011-08-06 11:31
(கீழ்கண்ட விஷயங்கள் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் நிர்வாகிக்கு எந்தவகையில் தெரியாமலேயே போய்விடுகிறது என்பதுதான் வறுத்தப்படவேண்ட ிய விஷயம்)


* முதலில் நமக்கு மேல் பணிபுரியும் மேலாளரை காக்கா பிடிக்க வேண்டும்.

* மற்றவங்களை பற்றி போட்டுக் கொடுக்க தெரிந்திருக்க வேண்டும். இது மிக முக்கியமானது....
* மேலாளரின் சொந்த ஊர்காரராக, நல்லா ஜால்ரா, ஜிஞா போட தெரிய வேண்டும்.

* என்னதான் கஷ்டப்பட்டு வேலை பார்த்தாலும், வேலையே செய்யலைன்னுதான் சொல்வாங்க, அதை கேட்டு கேட்டு தினமும் மனதில் ஆதங்கபட்டுக் கொள்ள வேண்டும்.
* மேலாளரின் சொந்த வேலை என என்ன வேலை சொன்னாலும் நேரம், காலம் பார்க்காமல் உடனடியாக செய்து கொடுக்க வேண்டும்.
* 7 மணிநேரம் வேலைனா, குறைந்தது 10 மணி நேரமாவது உட்கார்ந்து வேலை பார்ப்பது போல பாவ்லா செய்ய வேண்டும்..நடிக்க வேண்டும்...
* நம்முடைய உணர்வுகளை கொஞ்சம் கூட புரிந்து கொள்ள மாட்டாங்க...அதுவும் ஒரே பெண்ணா போய் மாட்டினா, அவ்வளவுதான் நம்மள ரொம்ப சாதாரணமா, இழிச்சவாயித்தனம ா நடத்துவாங்க...எல்லாத்தையும் பொறுத்துப்போகனு ம்.
* வானத்துல பறக்குறது வெள்ளைக் காக்கா என்று சொன்னாலும், ஆமாம்சாமி என்று தலையாட்ட வேண்டும்.

* நேரம், காலம் பார்க்காம வேலை பார்க்கணும், அப்படியும் வேலை செய்யலைன்னுதான் சொல்வாங்க....எதிர்பேச்சு பேசக் கூடாது...
* அலுவலகத்தில் நடக்கும் எதையும் கண்டுகொள்ள கூடாது....உடன் இருப்பவர்கள் வேலை செய்யாமல் தூங்கினா கூட எழுப்பி விடக்கூடாது, அவனோட தூக்கத்தை தொந்தரவு செய்யாம வேலை பார்க்கணும்....
* உடன் பணிபுரிபவர்கள், அவரவர்கள் வேலையை காப்பாற்றிக் கொள்வதற்காக பச்சோந்தி மாதிரி மாறி மாறி பேசுவார்கள். அதனால் யாரை நம்பினாலும் நம்பலாம், உடன் பணிபுரிபவர்களை மட்டும் நம்பகூடாது...

* என்னதான் சரியான புத்திக்கூர்மைய ுடைய, நீங்க செய்கிற வேலையை பற்றி அதிக அறிவு படைத்த, நல்லா வேலை செய்ய தெரிந்த, இரவு, பகலா வேலை பார்க்கூடிய, அலுவலகத்திற்கு விசுவாசமானவராக இருக்க கூடியவர்கள் கூட மேற்கண்டவற்றை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்....
* மொத்தத்தில் வெட்கம், மானம், சூடு, சொரணை, தன்மானம் எல்லாவற்றையும் இழந்துவிட வேண்டும்....
(என்னுடைய தோழி இதை என்னிடம் சொன்னாள்....அதை நான் உங்களிடம் கூறுகிறேன்....)
Quote
 
 
+20 #5 saraswathi 2011-08-06 11:28
Dear Savukku,
This guy is a bit and why do you want to waste your time even writing about him...I will give you something which i heard through my friends who work in sun news. A girl from Erode who was working in the sun news as news producer, was about to get married and just a week before the marriage she died under mysterious circumstance near saidapet railway station and its a trauma working there for many who dont know how to highlight their problem. Use your sources and I am expecting you to write a special report. Savukku Edunga
Quote
 
 
+11 #4 minnal 2011-08-06 11:24
பஸ்ட் பத்திரிக்கையாளர ்கள் பத்திரரிக்கையாள ர்களாக இருக்க வேண்டும்...சரியான தொடை நடுங்கிகாளாக இருப்பதாக்ல்தான ் பிட்டு சுரோஸ் மாதிரியான ஆட்கள் வளர காரண்மாகிறது.
Quote
 
 
+12 #3 Ponchandar 2011-08-06 11:21
”பிட்டு” சுரேஷ்-ன் சொத்து விவரங்களையும் வெளியிட்டு இருக்கலாமே ! !
Quote
 
 
+6 #2 minnal 2011-08-06 11:13
சங்கர் ஏன் உங்க கன்னுக்கு பாரம்பரியமான பத்திரிக்கைகள் எல்லாம் கண்ணுக்கு தொரிய மாடெங்குது....அங்க நடக்குறதொல்லாம் எப்பாதாங்க முடியல...எங்களையும் கொஞ்சம் பாருங்க...என்ன...சரியா
Quote
 
 
+18 #1 minnal 2011-08-06 11:11
ஹல்லொ இவரு தினகரன்ல மட்டும் இல்ல சங்கர், தினமலர்லயும் இப்படிதான்...
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 51 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday2857
mod_vvisit_counterYesterday10087
mod_vvisit_counterThis week2857
mod_vvisit_counterLast week78861
mod_vvisit_counterThis month215676
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12737795