|
“உச்சிதனை முகர்ந்தால்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சி. கடந்த வெள்ளிக்கிழமை, சென்னை கிருஷ்ண கான சபாவில் அந்த நெகிழ்ச்சியான நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்தத் திரைப்படத்தின் இயக்குநர் புகழேந்தியைப் போன்ற ஒரு உணர்வுள்ள மனிதரை காணுவது அரிதிலும் அரிது. தான் செய்யும் பணிகள் வெளியில் யாருக்கும் தெரியக்கூடாது என்று நினைத்து செய்யும் மனிதர். ஈழப் போர் இறுதிக் கட்டத்தில் இருந்த நேரத்தில் இந்த மனிதர் தனி நபராக செய்து, காரியங்கள் சொல்லி மாளாது. எப்படியாவது இந்தப் போரை நிறுத்த முடியாதா ? ஒரு நாலு உயிரையாவது காப்பாற்றி விட மாட்டோமா என்று இந்த மனிதர் கண்ணீரோடு அல்லாடியது இவரது நெருங்கிய நண்பர்களுக்குத் தெரியும். ஈழப்போரின் இறுதிக் கட்டத்தில் கூட, அந்த நெருக்கடியான நேரத்திலும் கூட, பணம் பண்ண வேண்டும் என்று புகழேந்தியை ஏமாற்றியவர்கள் உண்டு.

அன்புத் தோழர் புகழேந்தி
ஆனால், அவர்கள் மீது தன் கோபத்தைக் கூட காட்டாமல் உதாசீனப் படுத்தி விட்டு தன் பணியை தொடர்ந்து செய்தவர் புகழேந்தி. இறுதிப் போரின் போது, போரை நிறுத்து என்ற கோரிக்கையோடு சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பொதுக்கூட்டங்களின் பின்னணியில், ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் தோழர் புகழேந்தி என்பது பலருக்குத் தெரியாது.

அந்தப் புகழேந்திதான் இந்தத் திரைப்படத்தை எடுத்திருக்கிறார். செய்தித்தாளில், புனிதவதி என்ற 13 வயது ஈழச் சிறுமிக்கு நேர்ந்த அவலத்தை படித்த உடன் புகழேந்தி மனதில் ஏற்பட்ட கடுமையான பாதிப்பே இந்தத் திரைப்படம்.
திரைப்படம் என்பது, பொழுதுபோக்கு ஊடகம் என்று ஒரு கருத்து இருக்கிறது. வணிக ரீதியாக வெற்றியைத் தருவதற்கு, பெரும்பாலான மக்களை சென்று அடைய வேண்டும் என்பதற்காக பொழுது போக்கு அம்சங்களை நிறைத்துத்தான் திரைப்படங்கள் எடுக்கப் பட்டு வருகின்றன. அதே நேரத்தில், உலக சினிமா என்ற பிரிவில் இருக்கும் பல்வேறு நாடுகளின் திரைப்படங்களை காண்கையில், திரைப்படம் பொழுதுபோக்கு அல்ல. இறந்து போன உணர்வுகளை மீட்டு எடுக்கவும், மீண்டும் நம்மை மனிதர்களாக்கவும் இந்த ஊடகத்தைப் பயன்படுத்த முடியும் என்பதை நூற்றுக்கணக்கான திரைப்படங்கள் நிரூபித்திருக்கின்றன.
திரைப்படம் எடுத்து, வணிக ரீதியாக அதை வெற்றி பெறச் செய்து, அதன் மூலம் லாபம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கும் மனிதர் அல்ல புகழேந்தி. அவர் எப்படிப்பட்ட திரைப்படத்தை எடுப்பார் ? அவர் எப்படிப்பட்ட மனிதரோ, அப்படிப்பட்ட திரைப்படத்தைத் தான் எடுப்பார். அப்படிப்பட்ட ஒரு திரைப்படம் தான் உச்சிதனை முகர்ந்து.

இந்தத் திரைப்படத்தை எடுக்க முடிவு செய்த பிறகு, புனிதவதி பாத்திரத்திற்கு சரியான குழந்தை கிடைக்காமல் தாங்கள் பட்ட சிரமத்தையும், பிறகு ஒரு நாள் புனிதவதியே நேரில் வந்தது போல கிடைத்த குழந்தையையும், அந்தக் குழந்தைக்கு நீநிகா (நீர், நிலம் காற்று) என்று பெயர் வைத்ததையும் விரிவாக பேசினார் புகழேந்தி. இந்தத் திரைப்படத்துக்கு இசை அமைத்த இமான் கொடுத்த ஒத்துழைப்பை குறிப்பிட்ட புகழேந்தி, இசை அமைப்பதற்கான தொகையை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளாமல், என்ன முடியுமோ, அதைக் கொடுங்கள் என்று கூறி விட்டு, இந்தத் திரைப்படத்துக்கு இழைத்து இழைத்து இசையமைத்திருப்பதை குறிப்பிட்டார்.
சத்யராஜ், சீமான் மற்றும் நாசர் ஆகியோர் இந்தத் திரைப்படத்துக்கு அளித்த ஒத்துழைப்பையும், ஒளிப்பதிவாளர் கண்ணன் மற்றும் அவர் உதவியாளர்கள் ஆகியோர் அளித்த உழைப்பைக் குறிப்பிட்டார்.

கவிஞர் காசி ஆனந்தன் பேசுகையில், உலகில் பல்வேறு நாடுகளில் நடந்த போராட்டங்களில் கலைஞர்களின் பங்கு குறிப்பிடத் தக்கதாக இருந்திருக்கிறது என்றார். பொதுவாக திரைப்படத்துக்கு பாடல் எழுதும் வழக்கம் இல்லாத காசி ஆனந்தன், புகழேந்தியின் இந்தத் திரைப்படமும் ஒரு போராட்டம் என்பதால் பாடல் எழுத ஒப்புக் கொண்டதாக குறிப்பிட்டார். திரைப்படங்கள் மற்றும் கலைஞர்களின் பங்கு போராட்டத்தில் எத்ததையது என்பதை தேசியத்தலைவர் பிரபாகரன் நன்கு உணர்ந்திருந்தார் என்பதைக் குறிப்பிட்ட காசி ஆனந்தன், பிரபாகரனோடு சபையர் தியேட்டரில் “Operation Day Break” என்ற திரைப்படத்தை பார்த்த நிகழ்வை நினைவு கூர்ந்தார்.
தன் சொந்த ஊரான மட்டக்களப்பு பற்றிய நினைவுகளில் ஆழ்ந்த காசி ஆனந்தன், அந்த ஊரின் உப்பேரியைப் பற்றிக் குறிப்பிட்டார். அந்த உப்பேரியில் படகில் செல்லும் போது, அந்த துடுப்பு நீரில் இருக்கையில், அந்தத் துடுப்பின் நுனியில் காதை வைத்தால் எழும் ஓசை, மீன் பாடுவது போன்று இருக்கும் எனவும், அதனாலேயே மட்டக் களப்புக்கு மீன் பாடும் தேனாடு என்ற பெயர் உண்டு என்று குறிப்பிட்டார்.
சமீபத்தில் ஈழத்தில் நடந்த சம்பவம் ஒன்றைக் குறிப்பிட்டார். ஒரு மர்ம நபர், இரவு நேரங்களில் முகாம்களுக்கு வந்து, பெண்களை கத்தியால் கீறி கொலை செய்வதைக் குறிப்பிட்ட அவர், உலகம் இலங்கையின் போர்க்குற்றத்தை மவுனத்தோடு பார்த்துக் கொண்டிருந்தாலும், இலங்கை முகாம்களுக்குள் மக்கள் நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று கூறிக்கொண்டிருந்தாலும், “நாங்கள் அழிந்து கொண்டிருக்கிறோம்” என்று சொல்லி முடித்தார்.
தோழர் சத்யராஜ் பேசுகையில், எடுத்த எடுப்பிலேயே, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்காக துடிக்கும் இதயங்களுக்கு வணக்கம் என்றார். கூட்டத்தில் ஏற்பட்ட சலசலப்பை புரிந்து கொண்ட சத்யராஜ், அப்போது, அவர்களுக்காக துடிக்காத இதயங்களுக்கு வணக்கம் இல்லையா என்றால், அவர்களுக்காக துடிக்காத இதயம் இதயமே இல்லை, பிறகு எதற்கு வணக்கம் என்றார். திரைப்படத்தில் நடிப்பது பணத்துக்காக என்றாலும், எப்போதாவது ஒரு முறைதான் மனத்திருப்திக்காக நடிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது என்று குறிப்பிட்ட அவர், உச்சிதனை முகர்ந்து அப்படிப்பட்ட ஒரு திரைப்படம் என்று குறிப்பிட்டார்.

அதன் பிறகு இயக்குநர் ஆர்.சி.சக்தி, தோழர் மணியரசன், ஆகியோர் வாழ்த்திப் பேசினர். நிகழ்ச்சியில் இப்படத்தில் இடம் பெற்றுள்ள “உச்சிதனை முகர்ந்தால்” மற்றும், “இருப்பாய் தமிழா நெருப்பாய்” என்ற பாடல்கள் மேடையில் பாடப்பட்டன. இருப்பாய் தமிழா நெருப்பாய் என்ற பாடல், நடனக்கலைஞர்களால் மேடையில் காட்சியாக்கப் பட்டது.
இந்தப் படத்தின் இந்த இரண்டு பாடல்களையும் பற்றி குறிப்பிட்டுச் சொல்லியே ஆக வேண்டும்.
உச்சிதனை முகர்ந்தால், உள்ளங்கால் வரை சிலிர்க்குதடி என்ற பாடல், ஒரு மிகச் சிறந்த மெலடி. இந்தப் பாடலின் வரிகளும், இருப்பாய் தமிழா நெருப்பாய் என்ற பாடலின் வரிகளையும் வடித்த காசி ஆனந்தன், பாடலைக் கேட்கையில் இப்பாடல் வரிகளின் சுவையால், தமிழ் என் தாய் மொழி என நினைத்து பெருமைப் பட வைக்கிறார்.
அந்தப் பாடலின் வரிகளோடு முடிப்பது பொருத்தமே…
இருப்பாய் தமிழா நெருப்பாய் நீ….
இழிவாய் கிடக்க செருப்பா நீ….
ஓங்கி ஓங்கி புயல் அடிக்கிறதே…
ஒரு தீபம் அணையும் முன்னே துடிக்கிதே…
துடித்துத் துடித்து உடல் சிதைகிறதே….
தினம் பிணங்கள் பிணங்களாய் புதைகிறதே….
என் பிள்ளையை மண்ணில் புதைப்பார்கள்…
அவள் தாய் மண்ணை அவர்கள் எங்கே புதைப்பார்கள்…….
|
Comments
Best film in movie
surely this movie reach all the sections
of people of this country.
By Your Brother
RAJESH S
நண்பரே காற்றுக்கேன்னவே லிதிரைப்படத்தின ிரண்டாம்பாகமெடு ப்பதாகவும் திரைக்கதை புத்தகம்முன்கூட ்டியே தறுவதகசொல்லி பலபேரிடம் பில் போட்டு வாங்கிய தொகை போதாதா ?
திரு புகழேந்தி அவர்களுக்கும் நோர்வே தயாரிப்பாளர்களு க்கும் எனது நன்றிகள். படம் தூள் கிளப்புவதோடு உலகத்தமிழனின் உணர்வையும் தட்டியெழுப்பும் என்பதி ஐயம் இல்லை.
யாருக்காவது நோர்வே தயாரிப்பாளர்களை தெரிந்தால் தயவுசெய்து எனக்கு அறியத்தரவும். நாம் எல்லோரும் அவர்களுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டவர்கள ்.
Vanakkangal.
I understand your messages.
Brahmins have to do a lot for the Tamil community now, not that others need not do.Kindly do not mistake my post.I honestly feel bad about our community role in last many decades, we have to make amends for all these things.
I again request Mr Shankar to inform the bank details of Mr Pugalendi, so that we all can start contributions directly into the account.
Now I am giving a call to all Tamilians irrespective of caste or religion.Let us unite for all such noble causes.
Let us not divide ourselves by caste or religion, first and last we are all Tamilians,let us all remember that always.
Regards
KKR
"அவள் தாய் மண்ணை அவர்கள் எங்கே புதைப்பார்கள்...."
அப்பாவி சகோதர, சகோதரிகள் தன் கண்முன்னே அழியும்போது துக்கத்தில் வடிக்கும் வார்த்தைகள்.
உயிர்கள் கொடுமையாக பறிபோகும் சூழலிலும்கூட தங்கள் "தாய் மண்ணை" என்ன செய்ய முடியும் என்று வார்த்தைகள் தெறிக்கிறது, உயிரை விட தாய்மண் உயர்ந்தது என்பதை சொல்கிறார். ரத்தத்தில் சுதந்திர வேட்கை கலந்துவிட்டது. அருமை அருமை
Time has come for Brahmin friends to show some real support for Mr Pugalendi and Savukku.
Let us all make a good contribution for this film. Earlier the better please.
My own suggestion is to get the bank account details of Mr Pugalendi and all of us can remit directly into this accout.Someone can maintain the list of contributors from our community.
Guys let us do something fast , not only just read Savukku every day.
Please remember our Sri Lanka brethern are depending on our support. Atleast we can support Mr Pugalendi who is working for this noble cause.Please carry the message also to your other friends.
Regards
KKR
Mr Savukku Shankar, please inform the bank account details of Mr Pugalendi (bank name, his exact bank account name and account number etc ) by a separate post.We know you will not accept any contribution, let us all help atleast Mr Pugalendi.
எனல்லோரும் தம் புகழை ஏந்தி வருவார்கள். தமிழகத்தில் ஒருவர் இருக்கிறார். அவரைப் புக ஏந்த வருகிறது, அவர் தான் திரு புகழேந்தி.
அன்னாருக்கும் திருவாளர்கள் இமான் சத்தியராஜ் மற்றும் அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள் வாழ்க நீவிர் பல்லான்டு,
என்றும் மாறாத அன்புடன்
நந்திதா
//திரைப்படம் எடுத்து, வணிக ரீதியாக அதை வெற்றி பெறச் செய்து, அதன் மூலம் லாபம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கும் மனிதர் அல்ல புகழேந்தி.//
உண்மைதான் அவருக்கு பணவசதி இருப்பதாகத் தெரியவில்லை. இசை அறிமுக விழாவில் கூட நேரடியாக பாடல் இசைக்கப் படவில்லை என்றே நினைக்கிறேன். இதை குறையாக கூறவில்லை மாறாக, [ப்]இதுபோன்ற படங்களுக்கு மக்கள் கொடுக்கும் ஆதரவே தயாரிப்பாளர்களு க்கு உற்சாகம் அளிக்கும்[/ப்]. அவர்களை பயமின்றி செலவு செய்து மேலும் இத்தகைய படங்கள் கிடைக்கும். மற்ற காப்பியடித்த படங்களை DVD-யிலோ download செய்தோ பார்ப்பது போலல்லாமல் தியேட்டர்களில் பார்த்தாலும் அது "இன உணர்வின் வெளிப்பாடாகவே கருதுகிறேன்".
இந்த விழாவினைப் பற்றி எனக்கு தெரிவித்த "சவுக்கு" மற்றும் "May 17" நன்பர்களுக்கும் என் நன்றி.
நண்பர்களுக்கு ஒரு நற்ச்செய்தி, சோனியா ராஜீவிற்கு கர்ப்பப்பை புற்று நோய் என கேள்வி பட்டிருந்தோம், கர்ப்ப வாய் புற்று நோய் என்று கூட கேள்விப்பட்டிரு ந்தோம்,
ஆனால் சற்று முன் கிடைத்த ஒரு உருதியான தகவல், அவருக்கு ஸ்பீணாள் சோற்ட் சாண்சேற் என்பது.
பிற உயிர் துன்புற்றிருக்க நாம் இன்பம் காண்பது தவறுதான், ஆனால் எம்மின மக்கள் பட்ட அவஸ்தையை அவர் உணர்வார் அல்லவா?
atleast now will she realise her mistakes
இன்னலின் தொடர்ச்சி விடிவாகும்
விடிவு என்ட்ருதான் வருமோ
All tamil magazines caring for Tamil should give good publicity for the movie.It needs to be a commercial success.
நடந்த எப்படி? ராஜீவ் படுகொலை விசாரணை. மோகன்ராஜ் CBI அதிகாரி அதிர்ச்சி தகவல்
வெல்க தமிழ்.
வளர்க உங்கள் பணி.
நன்றி,
தனி ஒரு மனிதனாய் பல போராட்டங்களுக்க ு பின் நின்று, அத்தகைய ஒரு போராட்டத்தை போலவே ஒரு திரைப்படமும் எடுத்திருக்கிறா ர்.
நம்மாலான ஒரு சிறு உதவி, குறைந்தது சவுக்கின் வாசகர்கள் 5000 பேராவது இருப்போம் தமிழ்நாட்டில். இத்திரைப்படம் பார்க்க நாம் அனைவரும் குறைந்தது ஒருவரையாவது அழைத்து செல்ல வேண்டும்.
நண்பர்களுக்கு ஒரு நற்ச்செய்தி, சோனியா ராஜீவிற்கு கர்ப்பப்பை புற்று நோய் என கேள்வி பட்டிருந்தோம், கர்ப்ப வாய் புற்று நோய் என்று கூட கேள்விப்பட்டிரு ந்தோம், ஆனால் சற்று முன் கிடைத்த ஒரு உருதியான தகவல், அவருக்கு SPINAL CORD CANCER என்பது.
பிற உயிர் துன்புற்றிருக்க நாம் இன்பம் காண்பது தவறுதான், ஆனால் எம்மின மக்கள் பட்ட அவஸ்தையை அவர் உணர்வார் அல்லவா?
பாடலை ஒரு முறை கேட்டுப்பாருங்க ள்... அதில் இருக்கும் வலியும் தெரியும். வலிமையும் புரியும்
"கன்னத்தில் முத்தமிட்டால்....." என்ற ஒரு பாடல் அற்புதமான ஓர் இசையிலும், அருமையான காட்சிகள் மற்றும் நடிப்பில் வந்து இருந்தாலும், இன்றுவரை அந்த திரைப்படத்தையோ - அல்லது பாடலையோ நான் முழுமையாக பார்த்ததும் கிடையாது - முழுமையாக கேட்டதும் கிடையாது.
பார்க்கும்போதும ் - கேட்கும்போதும், உள்ளதில் ஏதோ ஒரு இனம் புரியாத பயம் - பாரம் - கவலை - கோபம் - ஆதங்கம் - வெறி - அழுகை - ஏமாற்றம் போன்ற எல்லா உணர்வுகளும் ஒன்று கூடிவிடும்.
மீண்டும் அந்த உணர்வை கிளற விரும்பவில்லை. எனவே, “உச்சிதனை முகர்ந்தால்” திரைப்படத்தை (வெளிவந்த பிறகு) பார்க்க மனமில்லை!!
என்ன சார் படம் எடுக்குறீங்க?? வெறும் பத்து கிலோ எடை உள்ள கதாநாயகன், வானத்தில் இருந்து சும்மா சர்ர்... சர்ர்ன்னு... பறந்து வந்து நூற்றி ஐம்பது கிலோ எடை உள்ள வில்லன்களை, ஒரே குத்தில் எட்டு பேரை சாய்க்க வேண்டாமா?? AK-47 துப்பாக்கியால் சுட்டால்கூட, அத்தனை தோட்டாக்களையும் பற்களால் பிடித்து, மென்று துப்ப வேண்டாமா??
அந்த மாதிரியெல்லாம் படம் எடுக்க தெரியாம.... கெளம்பீட்டாங்க.... நாங்களும் படம் எடுப்போம்ன்னு ஒரு கூட்டம்...
கொல்லன் பட்டறையில், காசி ஆனந்தன் ஊசி விற்க வந்துள்ளார் - பார்ப்போம்.
அதாவது, ஆடு செத்தா... மாடு செத்தா... மனுசன் செத்தா... அட்றா... அட்றா... நாக்க முக்க... நாக்க முக்க... நாக்க முக்க... நாக்க முக்க... என்ற காவியத் தமிழில் / செந்தமிழில் (!!??) பாட்டு கேட்டு பழகிய எங்களிடம், ஏதோ, எங்களுக்கு புரியாத ஒரு மொழியில் "இருப்பாய் தமிழா நெருப்பாய் நீ….இழிவாய் கிடக்க செருப்பா நீ…." என்று காசி ஆனந்தன் சொல்கிறார். எந்த அளவிற்கு எடுபடுகிறது என்று பார்ப்போம்.
ம்ஹூம்... என்னத்தே சொல்ல...???
RSS feed for comments to this post