முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்தொடர்புக்கு
+++
அன்னா ஹசாரேவின் போராட்டம் ஊடகங்களால் பெரிதுபடுத்தப் படுகிறதா ? அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 41
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
செவ்வாய்க்கிழமை, 23 ஆகஸ்ட் 2011 00:28

 அன்னா ஹசாரே போராட்டம் தொடர்பாக தொலைக்கட்சி சேனல்களில் தொடர்ந்து நடைபெறும் விவாதங்களில் இடம்பெறும் முக்கிய விஷயங்கள்,

அன்னா ஹசாரேவின் போராட்டம் ஊடகங்களால் பெரிது படுத்தப் படுகிறதா ?

இது நடுத்தர வர்க்கத்தின் போராட்டம் மட்டும் தானே ?

pict13

நடுத்தர வர்க்கம் மட்டுமே இந்தியாவின் பிரதிநிதிகளா ?

அன்னா ஹசாரேவின் குழுவினர் பாராளுமன்றத்தையும் அரசையும்  மிரட்டுகிறார்களா ?

15 நாட்களில் சட்டம் கொண்டு வருவது சாத்தியமா ?

சட்டம் இயற்றுவது பாராளுமன்றத்தின் வேலையில்லையா ?

120 கோடி மக்களின் பிரதிநிதியாக அன்னா ஹசாரேவின் குழுவினரை எப்படி ஒப்புக் கொள்ள முடியும் ?

pict17

இந்தக் கேள்விகளுக்கான விடைகளை இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.

இந்தப் போராட்டம் ஊடகங்களால் பெரிது படுத்தப் படுகிறதா என்பதற்கான பதில் ஆம் மற்றும் இல்லை.

ஊடகங்களின் டிஆர்பி ரேட்டிங்குகளை நிர்ணயிப்பவர்கள் ஆங்கில செய்தித் தாள் மற்றும் ஆங்கில தொலைக்காட்சிகளைப் பார்க்கும் நடுத்தர வர்க்கத்தினர் தான்.   அந்த நடுத்தர வர்க்கத்தினரின் கவனத்தை ஈர்க்கும் எந்த ஒரு விஷயத்தையும் இந்த ஊடகங்கள் புறக்கணிக்க முடியாது.   டெல்லி விமானநிலையத்தில் பழுது ஏற்பட்டுள்ளது, ஏசி வகுப்பில் கட்டணம் குறைக்கப் பட்டுள்ளது, மல்டி ப்ளெக்சுகளில் சுகாதாரம் இல்லை, கேஎப்சி சிக்கனில் கொழுப்பு அதிகமாக உள்ளது, ஐஐடியில் கட்டணங்கள் உயர்த்தப் பட்டுள்ளது போன்ற விபரங்கள், இந்த ஊடகங்களால் செய்தியாக்கப் படுவதற்கான காரணம் இதுதான்.

ஆனால் இந்த ஊடகங்களால்தான் இந்தப் போராட்டமே நடக்கிறது என்கிறா வாதத்தையும் ஏற்றுக் கொள்ள முடியாது.  தொலைக்காட்சிகளில் வரும் செய்திகளை தகவல்களுக்காக பார்த்துத் தெரிந்து கொண்டு, தன்னெழுச்சியாக வரும் கூட்டமே அதிகம்.   மும்பையில் வேலை நிறுத்தம் செய்யும் டப்பாவாலாக்கள் அர்னாப் கோஸ்வாமியைப் பார்த்துத்தான் போராட்டத்தில் குதித்தார்கள் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.   இந்தப் போராட்டத்தை லைவாக கவர் செய்வதால், தங்கள் டிஆர்பி ரேட்டிங் கூடும் என்ற சுயநல நோக்கத்தாலேயே இப்படி லைவ் கவரேஜ் செய்கிறார்கள்.

இதே புதுதில்லியில், நாட்டின் பல மூலைகளிலும் இருந்து, பல்வேறு மலைவாழ் மக்கள், விவசாயிகள், போன்றவர்கள் தங்களின் பல்வேறு கோரிக்கைகளுக்காக வாரத்தில் இரண்டு நாட்கள் போராட்டங்களை நடத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள்.  ஆனால், அந்தப் போராட்டங்கள் இந்த தொலைக்காட்சிகளின் கண்ணுக்குத் தெரிவதில்லை.  காரணம், நடுத்தர, உயர் நடுத்தர வர்க்கத்தினருக்கு, மலைவாழ் மக்களின் வாழ்வுரிமைப் பிரச்சினைகள் ஒரு பிரச்சினையாகவே தெரிவதில்லை.

 

pict3

இது நடுத்தர வர்க்கத்தின் போராட்டம் மட்டுமே என்றால் இருக்கலாம் அதில் என்ன தவறு என்றுதான் கூற முடியும்.  ஏழை மக்களை விட நடுத்தர மக்கள், இந்த ஊழலால் மிக அதிகமாக பாதிக்கப் படுகிறார்கள் என்பது இதற்கு ஒரு முக்கிய காரணம்.  கிராமப்புரங்களில் சாதாரண கூலித் தொழிலாளியாக வேலை பார்க்கும் ஏழை விளிம்பு நிலை மக்களை, ஊழல் பெரிய அளவில் பாதிப்பதில்லை.  ஏனெனில், ஊழலை அவன் நேரடியாக சந்திக்கும் நேர்வுகள் குறைவு. ஆனால் நடுத்தர, உயர் நடுத்தர மக்கள், லஞ்சத்தை நேரடியாக பல நேர்வுகளில் சந்திக்கிறார்கள்.    பைக்குகள், கார்கள் வாங்குகையில் ஆர்டிஓ ஆபீஸ்களில் லஞ்சம் கொடுப்பதில் தொடங்கி, வீட்டு மனை மற்றும் வீடுகள் வாங்குககையில் பல்வேறு அனுமதிகளுக்காக லஞ்சம் கொடுப்பது வரை, இவர்கள் நேரடியாக லஞ்சத்தை சந்திக்கும் நேர்வுகள் அதிகம் என்பதால், இவர்கள் போராட்டத்தில் குதிப்பதில் வியப்பில்லை.

pict2

ஏழை விளிம்புநிலை மக்கள் பங்கேற்காத இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தரலாமா என்ற கேள்விக்கு தர வேண்டும் என்பதே பதில்.  ஏனெனில், விளிம்புநிலை மக்கள் நேரடியாக பாதிக்கப் படாவிட்டாலும், மறைமுகமாக அவர்கள் பாதிக்கப் படுவது, பன்னாட்டு நிறுவனங்களால்.  உதாரணமாக, காமன்வெல்த் விளையாட்டுக்கள் நடக்கையில், டெல்லியிலிருந்து 20 ஆயிரம் ஏழை மக்கள் அப்புறப் படுத்தப் பட்டனர்.  சென்னையில், உயர் விரைவு பாலம் கட்டும் விவகாரத்தில், ஆயிரக்கணக்கான சேரி மக்கள் அப்புறப் படுத்தப் பட்டார்கள்.  இந்த இரண்டு விவகாரங்களிலுமே, கோடிக்கணக்கான ரூபாய் ஊழல் நடந்திருக்கிறது.   இந்த ஊழல் காரணமாக நேரடி பாதிப்புக்கு உள்ளானவர்கள் ஏழை மக்களே.    இந்த ஊழலில் ஈடுபட்ட அதிகாரிகளும், பன்னாட்டு நிறுவனத்தின் அதிகாரிகளும், புதிய லோக்பால் மசோதாவால் தண்டிக்கப் படுவார்களேயானால், அதனால் பயனடையப் போவது ஏழை விளிம்பு நிலை மக்கள் தானே…. ? இது தவிரவும், சுற்றுச் சூழலுக்கு கடும் சேதத்தை ஏற்படுத்தும் பல்வேறு தொழிற்காலைகளுக்கு அனுமதி கொடுக்கும் விவகாரத்தில் கோடிக்கணக்கில் பணத்தை பெற்றுக் கொண்டு அனுமதி அளிக்கும் அதிகாரிகளும், அமைச்சர்களும் லோக்பால் மசோதாவால் தண்டிக்கப் பட்டால், அதனால் சுற்றுச் சூழல் பாதிக்காமல் தடுக்கப் பட்டால் அதனால் அனைத்துத் தரப்பு மக்களும் தானே பலனடைவார்கள் ?

நடுத்தர மக்கள் மட்டுமே இந்தியாவின் பிரதிநிதியா என்றால், நடுத்தர மக்களும், இந்தியாவின் பிரதிநிதிகளே….  நடுத்தர மக்களை ஒட்டு மொத்த இந்தியாவின் பிரதிநிதிகளாக ஏற்றுக் கொள்ள முடியாது என்றால், விளிம்பு நிலை மக்களை மட்டும் இந்தியாவின் பிரதிநிதிகளாக இந்த அரசியல்வாதிகளாக ஏற்றுக் கொள்வார்களா என்ன ?   ஏழை விளிம்பு நிலை மக்களின் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டு நிறைவேற்று உள்ளார்களா என்ன ? குறைந்தபட்சம் அந்த மக்களின் வறுமையைக் கூட போக்கவில்லையே இந்த அரசியல்வாதிகள்…!!!!

pict14

இது நடுத்தர மக்களின் போராட்டம், ஆனால் நடுத்தர மக்கள் ஒட்டுமொத்த இந்தியாவின் பிரதிநிதிகள் இல்லை என்றால், எதற்காக காங்கிரஸ் அரசாங்கம் அன்னா ஹசாரேவோடு பேச்சுவார்த்தை நடத்துகிறது ?   நீங்கள் ஒட்டுமொத்த இந்தியாவின் பிரதிநிதிகள் இல்லை, ஆகையால் நாங்கள் உங்களோடு பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம் என்று எளிதாக சொல்லியிருக்க முடியுமே …..

சரி, நடுத்தர வர்க்கம் ஒட்டு மொத்த இந்தியாவின் பிரதிநிதிகள் இல்லை என்றால், இன்று பாராளுமன்றத்தில் அமர்ந்திருக்கும் உறுப்பினர்கள் மட்டும் ஒட்டுமொத்த இந்தியாவின் பிரதிநிதிகளா என்ன ?   பிரதமர் மன்மோகன் சிங்கே மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டவர் இல்லையே ? மக்களவையில் அமர்ந்திருக்கும் உறுப்பினர்கள் அனைவரையும் சேர்த்தால் அவர்கள் மட்டும் என்ன 120 கோடி மக்களின் பிரதிநிதிகளா என்ன ?

இவர்கள் அனைவருமே தேர்தலில் போட்டியிட்ட தொகுதியில் 100 சதவிகித வாக்குகளைப் பெற்றார்களா என்ன ?  தேர்தலில் வாக்குப் பதிவே 60 சதவிகிதம் தானே… ? அதிலும் பாதியைத்தானே பெற்றிருக்கிறார்கள் ?  இவர்கள் மட்டும் ஒட்டு மொத்த இந்தியாவின் பிரதிநிதியா ?

pict4

அன்னா ஹசாரேவின் குழுவினர் பாராளுமன்றத்தையும் அரசையும் மிரட்டுகிறார்களா ?

இதை தலைகீழாக அல்லவா பார்க்க வேண்டும் ?   அண்ணா ஹசாரே குழுவினர், ஆயுதம், அரசு அதிகாரம் ஏதும் இல்லாமல், உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன் என்று சொல்லுகிறார்கள். ஆனால் அரசு அல்லவா டெல்லி போலீசை வைத்து அன்னா ஹசாரே குழுவினரை மிரட்டப் பார்த்தது ?  இந்தியா முழுவதையும் ஆளும் ஒரு கட்சி, காவல்துறையை வைத்து போராட்டத்தை முடக்கலாம் என்று திட்டமிட்டது காங்கிரஸ் கட்சி அல்லவா ?  எங்களுக்கும் டெல்லி போலீசின் நடவடிக்கைக்கும் சம்பந்தமே இல்லை என்று இரண்டு மணி நேரம் பேசினாரே ப.சிதம்பரம் ?  சரி. மிரட்டுகிறார்கள் என்றே வைத்துக் கொள்வோம். இப்படி மிரட்டியே இந்த அரசு, பணியாமல் இழுத்தடித்துக் கொண்டு இருக்கிறதென்றால், மிரட்டாமல், கோரிக்கை மனு கொடுத்தால் செவி சாய்த்து விடுவார்களா என்ன ?  மேலும், இந்த பிரச்சினை இப்போது தொடங்கவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.  டிசம்பர் மாதம் தொடங்கிய இந்தப் போராட்டம், ஏப்ரலில் வலுப்பெற்றது.  அதன் பிறகு, அன்னா ஹசாரே குழுவினரோடு ஏறக்குறைய 100 மணி நேரத்துக்கும் மேல் இந்த அரசின் மூத்த அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தினார்களே… இப்போது காட்டும் இந்த வேகத்தை ஏப்ரல் மாதம் முதல் காட்டியிருந்தார்களேயானால், இன்று இந்த சிக்கல் ஏற்பட்டிருக்காதே…

15 நாட்களில் சட்டம் கொண்டு வருவது சாத்தியமா ?

pict5

மனமிருந்தால் மார்க்கமுண்டு.   15 நிமிடங்களில் 17 சட்டங்களை நிறைவேற்றியது இதே பாராளுமன்றம் தான்.   அதற்காக லோக்பால் மசோதா விவாதமின்றி நிறைவேற்றப் பட வேண்டும் என்று யாருமே சொல்லவில்லையே…..   விவாதித்து நிறைவேற்ற இரண்டு நாட்கள் அல்லது நான்கு நாட்கள் போதாதா ?  மேலும், அரசு நினைத்தால், பாராளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட இயலுமே… இத்தனை நாள் செய்யாததை இப்போதாவது செய்யுங்கள் என்று எழுந்துள்ள கோரிக்கை நியாயமற்றது அல்லவே.

சட்டம் இயற்றுவது பாராளுமன்றத்தின் வேலை இல்லையா ?

சட்டம் இயற்றுவது பாராளுமன்றத்தின் வேலை என்பதை யாருமே மறுக்கவில்லையே.. அந்த வேலையைச் செய்யுங்கள் என்றுதானே கேட்கிறார்கள்.  40 ஆண்டுகளாக ஒரு சட்டத்தை அறிமுகப் படுத்தப் பட்ட நிலையிலேயே துருப்பிடிக்க வைத்த காரணத்தாலே தானே இன்று போராட்டம் நடந்திருக்கிறது.  இந்தப் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் வேலையை ஒழுங்காகச் செய்திருந்தால் இந்தப் போராட்டத்துக்கு அவசியமே இருந்திருக்காதே….  மகளிருக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு கொடுக்க அறிமுகப் படுத்தப் பட்ட மசோதா 15 ஆண்டுகளாக சட்டமாக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதே… இதுதான் பாராளுமன்ற உறுப்பினர்களின்  லட்சணம்.

120 கோடி மக்களின் பிரதிநிதியாக அன்னா ஹசாரேவின் குழுவினரை எப்படி ஒப்புக் கொள்ள முடியும் ?

pict12

ஒட்டு மொத்த இந்திய மக்களின் பிரதிநிதியாக மஹாத்மா காந்தியை பிரிட்டிஷார் ஏற்றுக் கொள்ளவில்லையா ?  அவ்வாறு ஏற்றுக் கொண்டுதானே காந்தியோடு பேச்சுவார்த்தை   நடத்தினார்கள் ?  மேலும், ஏற்கனவே கூறியது போல, ஒரு தொகுதியில் வெற்றி பெற்ற பாராளுமன்ற உறுப்பினர் அந்தத் தொகுதியில் உள்ள அனைத்து வாக்காளர்களின் பிரதிநிதி   அல்லவே !!  உதாரணமாக ஒரு தொகுதியில் 10 லட்சம் வாக்காளர்கள் இருக்கிறார்கள் என்றால், அதில் வாக்களிப்பவர்கள் 6 லட்சம்.  சராசரியாக, அன்றைய தேர்தல் நிலைமைகளைப் பொறுத்து, இந்த 6 லட்சத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர் வெறும் 2 லட்சம் வாக்குகளை மட்டும் பெற்று வெற்றி பெற்றதில்லையா ?  அவ்வாறு வெறும் 2 லட்சம் வாக்குகளை மட்டும் பெற்று வெற்றி பெற்றாலும் அவரைத்தானே அந்தத் தொகுதியின் பிரதிநிதியாக கருதுகிறார்கள்.   வெறும் 5 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப் பட்ட ப.சிதம்பரம் இன்று அமைச்சராக இல்லையா ?

சோனியா காந்தி தலைவராக உள்ள தேசிய ஆலோசனைக் குழு (National Advisory Council) கூட பல்வேறு சட்டங்களின் வரைவுகளை தயாரித்துத் தருகிறதே…  அந்த அடிப்படையில் உருவான சட்டம் தானே ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் ?   அந்த தேசிய ஆலோசனைக் குழு 120 கோடி மக்களின் பிரதிநிதியா என்ன ?

இன்று நடைபெற்று வரும் இந்தப் போராட்டமானது, கோடிக்கணக்கான ரூபாய்கள் மதிப்புள்ள ஊழல்களை செய்து விட்டு, அதை மறைக்க கடும் முயற்சிகளை எடுத்த இந்த அரசாங்கத்தின் மீதானது.  ராசா தவறே செய்யவில்லை, ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் அரசுக்கு ஜீரோ லாஸ் என்று பச்சைப் பொய்யைப் புளுகி விட்டு, கூச்சமில்லாமல் லோக்பால் மசோதாவைக் கொண்டு வருகிறோம் என்று சொல்லும் அரசாங்கத்தை எப்படி மக்கள் நம்புவார்கள் ?  ஊடகங்கள் எழுதும் வரை, அரசாங்கம், காமன்வெல்த் போட்டிகளில் ஊழலே நடைபெறவில்லை என்றுதானே சாதித்துக் கொண்டு இருந்தது ?  இந்த அன்னா ஹசாரே பிரச்சினை எழுவதற்கு முன்பு கூட, ஷீலா தீக்ஷித்தைக் காப்பாற்றத் தானே காங்கிரஸ் கட்சி முயற்சி செய்து கொண்டு இருந்தது. தயாநிதி மாறனை கடைசி வரை காங்கிரஸ் காப்பாற்றவில்லையா ?

pict15

சோனியாவின் குடும்ப நண்பர் ஒத்தாவியோ கொட்டரோச்சியை காப்பாற்றி, பத்திரமாக வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்து, அவர் மீது இருந்த ரெட் கார்னர் நோட்டீசை சத்தம் போடாமல், நீக்கி, முடக்கி வைக்கப் பட்டிருந்த அவருடைய வெளிநாட்டு வங்கிக் கணக்கை சத்தமில்லாமல் ரிலீஸ் செய்து, சோனியாவின் நண்பரை காப்பாற்றியது அத்தனையும் சிபிஐ தானே ?

எதை வைத்து நம்பச் சொல்கிறார்கள் இந்தக் காங்கிரஸ் அரசை ?


 

Comments  

 
+1 #71 Tamil Magan 2011-09-04 08:26
Will Anna Hazare support the manipuri woman Sharmili's hunger strike against Indian Army's rowdy behavior? If Anna is fighting for all Indians, aren't Manipuris Indians? Will Anna Hazare go on to demonstrate for the cause of Tamils? where was Anna Hazare when tens of Indian tamil fishermen killed, attacked and robbed by Srilankan forces? Would Anna Hazare's blood boil only if upper case hindus are affected?
Quote
 
 
+2 #70 che 2011-08-31 12:54
தயவு செய்து அருந்ததிராய் இந்த ஆளை பற்றி எழுதியுள்ள கட்டுரையை வெளியிடுங்கள்
Quote
 
 
+2 #69 che 2011-08-31 12:53
உலகமயமாக்கல் மூலம் சம்மாதித்த சுரண்டல் பணத்தில் சிறிய தொகையை லங்சமாக கொடுக்க வருத்தப்படும் நடுத்தரவர்க்கம் , அவர்களுக்கு வால் பிடிக்கும் ஹசாரே... சுரண்டபட்ட ஏழை மக்களை எப்பொழுது பேசுவார்கள்... அந்நிய நேரடிமுதலீட்டிற ்க்கு எதிராக இப்படி போராட்டம் நடத்த தயாரா.. நீங்களும் ஆதரிப்பீர்களா....
Quote
 
 
0 #68 che 2011-08-31 12:48
காமன்வெல்த் போட்டியினால் சொந்த வாழ்விடங்களில் இருந்து அப்புறப்படுத்தப ்பட்ட மக்களுக்கும்,.. ஊழலுக்கும் முடிச்சிபோடுகிற ீர்களே.... ஊழல் நடக்காவிட்டாலும ் அவர்கள் நேர்மையான அதிகாரிகளால் அப்புறப்படுத்தப டுவார்கள்..... சவுக்கை படிப்பவன் முட்டாள் அல்ல தோழர்
Quote
 
 
+1 #67 citizen 2011-08-26 00:27
எல்லா ஊடகங்கள் அன்னா  ஹசாரே வை முன் நிறுத்துகின்றன என்று கூறுபவர்கள்.
ஒன்றை சிந்தித்து பார்க்க வேண்டும்.
அவர் முன் நிறுத்தும் விஷயம் ஊழல்.
 இதனால் பாதிக்க பட்டவர்கள், மொழி,இனம்,மாநில ம் மற்றும் நாடு தாண்டிய அணைத்து மக்களும் என்பதை மறக்க முடியாத என்பது உண்மை.
மற்ற போரட்டங்கள் எல்லாம் மேற் சொன்ன கோட்பாட்டுகுள்ள ே அடங்கி விடுபவை என்பது மறைக்க முடியாத உண்மை .
 மேலும் அவைகள் பக்கத்துக்கு வீட்டு எழவு போல் .
 ஊழல் என்பது நம் வீட்டு துயரம் போல் எல்லார் மனதிலும் உள்ளது .
 அதன் வெளிபாடுதான் அன்னா ஹசாரே விற்கு பெருகி வரும் ஆதரவு.
 இது எளிதில் அடங்காது , எதிர்பவர்களை அடித்துதான் செல்லும்.
41 ஆண்டுகள் இந்த மசோதாவை தொடாத அரசியல் வாதிகள் . அதை பேசவும் தகுதி அற்றவர்கள்.
 தயவு செய்து அரசியல் பேச்சு பேசாதீர்கள்.
 'அற செயல்' செய்வோம் வாருங்கள் . 
     
Quote
 
 
+2 #66 Vijay Bangalore 2011-08-25 22:56
[ஃஉஒடெ நமெ="குட்ட்ய்சவுக்கு "]இது நம் இந்திய அரசியல்வாதிகளைக ்கொண்டு தயாரிக்கப்பட்ட புதிய மெட்ரிக் அளவீட்டுக்கான வாய்ப்பாடு...

100 கோடி = 1 திமுக எம்.எல்.ஏ

100 திமுக எம்.எல்.ஏ. = 1 காங் எம்.பி.

100 காங் .எம்.பி. = 1 ராடியா

100 ராடியா = 1 கல்மாடி

100 கல்மாடி = 1 பவார்

100 பவார் = 1 ராஜா

100 ராஜா = 1 கருணாநிதி

100 கருணாநிதி = 1 சோனியா

100 சோனியா = இனி பிறக்கப்போகும் ராகுல் வாரிசு[/ஃஉஒடெ]

கனிமொழிய விட்டுடீங்ககலே! !
Quote
 
 
0 #65 Ravi 2011-08-25 21:16
வலுவான வாதங்கள். என்னை போன்றோர் எமது வலைத்தளங்களில் கேட்க நினைத்த அனைத்து கேள்விகளையும் நீங்களே கேட்டு எமக்கு வேலையில்லாமல் செய்துவிட்டீர்க ள். நன்றி..
Quote
 
 
0 #64 M.Gnanasuriyan 2011-08-25 17:13
நமக்கு நல்ல் அனுபவம் உண்டு தடா பொட சட்டஙகள் தேவிர வாதத்தை ஒழிக்க வில்லை மாறாக அப்பாவிகள் மேதுதன் பாஈந்தது லொக்பால் கோடிச்வரர்களை விட்டு விடும் 50 ரூபாஇ வாஙிய சாதரண அரசு ஊழியனை தாக்கும் தவிர லொக்ப்பால் ஊழலின் ஊற்று கண்ணை அடையளம் காண வில்லை மாறாக ஊழல் நடந்த பின்னரெ குற்றம் நடந்த இடதிர்கு வருகிறது
Quote
 
 
+1 #63 nanban 2011-08-25 11:54
#65காங்கிரஸ் ஊழலை ஒழிக்கும் என்பது குதிரை கொம்பு தான். பாஜகவிற்கு இந்துத்வா எப்படியோ அதே போலத்தான் காங்கிரசிற்கு ஊழல். இவ்வளவு நடந்த பின்பும் கபில் சிபல் அம்பானிகளுக்கு நீதிமன்றம் விதித்த கோடி நஷ்ட ஈட்டுத் தொகையை கோடியாக குறைக்கிறார் என்றால் எவ்வளவு திமிர் இருக்கும். ஆகையால் ஊழழுக்கு எதிரான எந்த ஒரு போராட்டமும் அவசியமானதாகவே தெரிகிறது. ஆனால் அண்ணாவை கண்ணை மூடிக்கொண்டு ஆதரவு தெரிவிப்பது வருந்தத்தக்க ஒன்று. காங்கிரஸ் எதிர்ப்பு என்கிற ஒற்றைப் பார்வை சவுக்கை நடுநிலையிலிருந் த சறுக்கச் செய்கிறது. லோக்பால் வந்தால் டில்லி காமன் வெல்த் விளையாட்டால் பாதிக்கப்பட்டவர ்களுக்கு நியாயம் கிடைக்கும் என்று சவுக்கு கூறுவது வருந்தத்தக்கது. மேட்டுக்குடி மக்களின் கேளிக்கூத்திற்க ும், இந்தியா ஒளிர்கிறது என்கிற போலியான ஒரு கருத்தை பரப்ப வாஜ்பாய் அரசு எவ்வளவு செலவானாலும் சரி காமன் வெல்த் விளையாட்டு இந்தியாவில் நடைபெற வேண்டும் என்று பாஜக முடிவு செய்து இந்தியாவிற்கு அந்த விளையாட்டை கொண்டுவந்தது பாஜக. எத்தனை ஆயிரம் உயிர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்தாலும் பரவாயில்லை என்று அந்த கனவை நனவாக்கியது காங்கிரஸ். இருபதாயிரம் மக்கள் கட்டாயமாக புலம்பெயர்க்கப் பட்ட பொழுது இந்த மேட்டுக்குடி கொழுந்துகள் எதுவும் அதை எதிர்த்து போராடவில்லை. டில்லியில் காணப்பட்ட பிச்சைக்காரர்கள ை நாய் வண்டி பிடிப்பது போல பிடித்து அவர்களை ஊரைவிட்டு வெளியேற்றிய பொழுது டில்லியில் பிச்சைக்காரர்கள ் இல்லை என்று கொண்டாடிய இந்த மேட்டுக்குடிகளு க்கு காமன் வெல்த் விளையாட்டில் ஊழல் என்று ரிப்போர்ட் வந்தவுடன் தேசபக்தி பொங்கி எழுகிரதாம். அவர்களிடமும் நியாயம் இருக்கிறது என்று சவுக்கு எழுதுவது கொடுமை.[/ஃஉஒடெ]
Quote
 
 
+1 #62 malar 2011-08-25 11:43
சக மனிதர்கலே ஒரெ ஒரு கேல்வி. ஒரு குடிமகனின் அடிப்படைத் தேவையான குடினீர் இலவசமாக தரமுடியாத அரசான்கம் விலையாட்டுப் போட்டி நடத்தி என்ன சாதிக்க நினைக்குது.
Quote
 
 
-1 #61 Vaedhampudhidhu 2011-08-25 00:44
Quoting அன்பு:
Quoting Iridium Cobra:
அன்பு அவர்கள் கூறி உள்ளது போல், அன்னா அவர்கள் எந்த கட்சிக்கும் ஆதரவாகவோ, எந்த கட்சிக்கும் எதிராகவோ லோக்பால் சட்டத்தை கோரவில்லை. அவர் கேட்பது எல்லாம் ஊழலை ஒழிக்க கடுமையான சட்டம் மட்டுமே. ?


தஙளின் கருத்து முற்றிலும் தவறானது,
ஜன் லோக்பால் - அரசு லோக்பால் இரண்டில் எது வந்தாலும் அது ஊழலை முற்றிலும் ஒழித்து விடாது என்பது ஒரு புறம் இருக்கட்டும். அரசின் லோக்பால் மசோதா மிகவும் பலவீனமானது என்பதில் துளியும் சந்தேகமில்லை.

ஆனால், அண்ணாவின் வரைவு மிக உன்னதமா? அதன் அடிப்படை என்ன...? "ஊழல் என்றால் என்ன?" என்று பிரிவு 2(4) -ல் கீழ்க்கண்டவாறு விளக்கியிருக்கி றார்கள்.

"to include anything made punishable under Chapter IX of the Indian Penal Code or under the Prevention of Corruption Act (PCA), 1988."
."
ஆக, இதன் அடிப்படை ஏற்கனவே உள்ள சட்டங்கள் தான் என்பது புரிந்திருக்கும ். ஆகவே, அந்த சட்டங்களில் இருக்கிற அனைத்து குறைபாடுகளும் அன்னா ஹசாரேயின் ஜன் லோக்பாலுக்கும் இயல்பாகவே பொருந்தும் என்பதுதானே உண்மை...? ’இருக்கிற சட்டங்கள் போதாது; புதிதாய்ச் சட்டம் கொண்டு வருகிறோம்,' என்று சொல்வது மக்களை ஏமாற்றுகிற வேலை.


Anbu naalaikae unga kudumbathayae congress / government ammanama road la pitchai eduka vaichaalum adhu nanmaikaenu thaan neenga eduthukanum purinjitha.. govt ewlo nalladhu panuthu..
Quote
 
 
+2 #60 Vijay Bangalore 2011-08-25 00:10
அன்பு போன்ர ஆட்கல் தான் காங்ரசில் இருக்கிரார்கல், வாழ்க அன்னா ஹசாரே..
Quote
 
 
+10 #59 kuttysavukku 2011-08-24 19:29
இது நம் இந்திய அரசியல்வாதிகளைக ்கொண்டு தயாரிக்கப்பட்ட புதிய மெட்ரிக் அளவீட்டுக்கான வாய்ப்பாடு...

100 கோடி = 1 திமுக எம்.எல்.ஏ

100 திமுக எம்.எல்.ஏ. = 1 காங் எம்.பி.

100 காங் .எம்.பி. = 1 ராடியா

100 ராடியா = 1 கல்மாடி

100 கல்மாடி = 1 பவார்

100 பவார் = 1 ராஜா

100 ராஜா = 1 கருணாநிதி

100 கருணாநிதி = 1 சோனியா

100 சோனியா = இனி பிறக்கப்போகும் ராகுல் வாரிசு
Quote
 
 
+2 #58 rgk 2011-08-24 18:47
அண்ணா அவருக்காக இதை செய்யவில்லை. நாட்டின் எதிர் காலத்திற்க்காக செய்கிறார்.
Quote
 
 
-4 #57 kanisabeenaa 2011-08-24 14:26
எப்படி அனவன் வொகந்தொட வெல வெடி எவன் பக்க்ருது

அன்னா கமினா
Quote
 
 
+3 #56 david 2011-08-24 13:35
my vote is only for annahazare
Quote
 
 
+5 #55 வால்டர் வணங்காமுடி 2011-08-24 13:21
அன்னா ஹசாரேவின் போராட்டம் உணர்த்துவது "ஊடகத்தின் பலம் மற்றும் எதிர்கட்சிகளின் ஒருங்கிணைப்பு" மட்டுமே. இதில் ஏதாவது ஒன்று இல்லாவிட்டாலும் போராட்டம் இந்த அளவுக்கு மக்களை சென்று சேர்ந்திருக்காத ு. நிற்க. இதே பணியை ஏன் இந்த ஊடகங்கள் மற்றும் எதிர் கட்சியினர் 'மே 2009' வாக்கில் செய்யவில்லை. அல்லது செய்ய முயற்சிக்க வில்லை. சவுக்கு சொன்னது போல அது 'நடுத்தர வர்க்கத்தை' பாதிக்கும் நிகழ்வு அல்லவே. அதனால் தான்.
Quote
 
 
-4 #54 வால்டர் வணங்காமுடி 2011-08-24 13:14
//நடுத்தர, உயர் நடுத்தர வர்க்கத்தினருக் கு, மலைவாழ் மக்களின் வாழ்வுரிமைப் பிரச்சினைகள் ஒரு பிரச்சினையாகவே தெரிவதில்லை//

ஐரோம் சரிமிளா போல...!!!
Quote
 
 
+2 #53 jagan t 2011-08-24 11:29
அன்பு அவர்களே.. நன்றாகத்தான் வாதாடுகிறீர்கள் . ஆனால் எல்லாம் விரயமே. போதும். விழித்துக்கொள்ள ுங்கள்.
Quote
 
 
+6 #52 உங்களில் ஒருவன் 2011-08-24 10:50
அன்னா ஹசாரே நல்ல விசயத்துக்காக போராடுகிறார். ஆனால் அவருக்கு ஆதரவு தருகிறேன் பேர்வழி என்று கள்ளப்பணம் வைத்திருப்பவர்க ள் அல்லவா கோஷம் போடுகிறார்கள்(ச ந்திரபாபு நாய்டு, தமிழ் சினிமாவில் சூர்யா, இந்தி சினிமாவில் ஷாருக்கான் மற்றும் பலர்).

நல்லவன் வாழ்க என்பதாலேயே ஒருவன் நல்லவன் ஆகிவிடமுடியாது, அவன் செய்யும் தீய செயல்களை ஒழித்தால்தான் முடியும், சூர்யா ஷாருக்கான் போன்றவர்கள் எவ்வளவு சம்பளம் வாங்குகின்றனர் என சொல்ல முடிமா? அத்தனை பணத்தையும் வெள்ளையாக வாங்குகிறார்கள் என சொல்ல முடிமா? அவர்களிடம் கருப்பு பணமே இல்லை என சொல்ல முடிமா?

என்னை பொறுத்தவரை அன்னா ஹசாறேவின் போராட்டம் இன்றைய தேவை. அது அனைத்து தரப்பினரையும் கேள்வி கேட்ககூடிய தண்டனை அளிக்ககூடிய லோக்பாலை அமல்படுத்த வலியுறுத்த வேண்டும்.

"லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர்" என சவுக்கு வேண்டுமானால் இருக்கலாம், ஆனால் சவுக்கு வேலை பார்த்தவர்களில் ஒரு சிலர் தவிர எழுபத்தைந்து சதவிகிதம் லஞ்சம் வாங்குபவர்களே. சவுக்கால் இதை மறுக்க முடிமா? சாதாரண கான்ஸ்டபிள் முதல் ஐஜி வரை அவரவர் அளவிற்கு லஞ்சம் வாங்குகின்றனர்.

அன்னா ஹசாறேவின் போராட்டம் ஒரு சிறு ஆரம்பம் மட்டுமே, இதனால் மொத்த ஊழலையும் லஞ்சத்தையும் ஒழிக்க முடியாது, ஆனால் சிறு அளவிற்கேனும் அவற்றில் ஈடுபடுபவர்களுக் கு பயத்தை கொடுக்க முடியும்.

தண்டனை கடுமையானால் மட்டுமே குற்றங்கள் குறையும், "திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால ் திருட்டை ஒழிக்க முடியாது"
Quote
 
 
0 #51 ஏகா.. 2011-08-24 10:19
\\அன்னா ஹசாரேயொன்றும் பெரிய யோக்கியசிகாமணிய ல்ல. அவரால் தேசீயவாத காங்கிரஸ் கட்சியின் மந்திரி சுரேஷ் ஜெயின் பதவி விலகினார் என்று பீற்றிக்கொள்கிற ார்கள். ஆனால், சுரேஷ் ஜெயின் பதவி விலகக் காரணமாக இருந்த பி.பி.சாவந்த்.///..
ஆமா நீங்களும் பண்ண மாட்டிங்க பன்னுறவங்களையும ் இது மாதிரி ஏதாவது சொல்லி அடக்கக பார்ப்பீங்க. இப்ப என்ன அன்னாவையும் லோக்பாலின் கீழ் கொண்டு வந்து விசாரிங்க போதுமா?



\\அன்னா ஹசாரே ஒரு பொம்மை மட்டும் தான், அதன் கயிரு பி.ஜெ.பி இடமும் அம்பானிகளிடமும் உள்ளது...//..
அன்னாவிற்கு பதிலாக அப்துல் கலாம் உண்ணவிரதம் இருந்திருந்தாலு ம் தப்புகண்டுபிடிப ்பீர்கள் உங்கள‌ என்னத்த சொல்ல?
Quote
 
 
+1 #50 AS Prabhu 2011-08-24 08:53
Dear Savukku,

Please have a look at the link that I attached here. Its about the culprit sonia. and please translate and post it on Savukku so every one will know more about her.

http://infinitytimes.com/2011/08/23/the%E2%80%9D-true%E2%80%9Dstory-of%E2%80%9D-fake-leader%E2%80%9D-sonia-gandhi-alias-antonia-maino-by-satyamitra/

Thanks

Regards
Prabhu
Quote
 
 
0 #49 m.perumal 2011-08-24 08:23
You are accusing too much coverage by Media.
But why you are doing the same by displaying the writings of some LUNATICS. It is cutomary for these eunuchs to ask why in the past no protest against this and that. Saukku must support Anna's efforts to fight corruption without delving deep into one or two minor demands of the Team.
Quote
 
 
-22 #48 அன்பு 2011-08-24 04:32
ஓ.......... இதுக்கு பேர்தான் உண்ணாவிரதாமா???

ராம்லீலா மைதானில் அன்னா ஆதரவாளர்களுக்கா க அண்டா கட்டி சமையல்:
தட்ஸ்தமிழ் செய்தி

அன்னாவைப் பார்க்க வரும் ஆதரவாளர்களுக்கா க அங்கு அண்டா கட்டி சமையல் செய்யப்படுகிறது . இதுவரை சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு உணவு அளிக்கப்பட்டுள் ளது.

அன்னாவின் ஆதரவாளர்களான மகேந்திர கோயல், பாரத் பூஷன் மற்றும் அனில் ஜெயின் ஆகிய 3 பேரும் சேர்ந்து அன்னாவின் சமையல் அறையைத் துவங்கி ராம்லீலா மைதானுக்கு வருபவர்களுக்கு உணவளித்து வருகின்றனர்.

இது குறித்து கோயல் கூறியதாவது,

இது வரை 2 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு உணவு அளித்துள்ளோம். ஷிப்ட் முறையில் 200 சமையல்காரர்கள் பணிபுரிகின்றனர் . அன்னா ராம்லீலா மைதானில் இருக்கும் வரை மக்களுக்கு உணவளிக்கத் திட்டமிட்டுள்ளோ ம். சமையலுக்குத் தேவையான மாவு, மசாலாப் பொருட்கள் உள்ளிட்டவற்றை பலர் நன்கொடையாக அளிக்கின்றனர் என்றார்.

நேற்று முந்தினம் மட்டும் 200 குவிண்டால் அரிசி சமைக்கப்பட்டுள் ளது என்றார் ஜெயின்.

டன் கணக்கில் உருளைக்கிழங்கு ஏற்றி வந்த பல மினி டிரக்குகளை நேற்று ராம்லீலா மைதானில் காணமுடிந்தது.

இந்த மூவர் தவிர்த்து ஹரியானாவைச் சேர்ந்த ஜன் சன்ஸ்தான் சேவா சங்க் அமைப்பு கடந்த ஞாயிற்றுக் கிழமை முதல் இதுவரை 20 ஆயிரம் பேருக்கு உணவளித்துள்ளது.

******

ம்ம்ம்ம் நல்லா சாப்புட்டு, தெம்பா கோசம் பொடுங்க...


உங்க தேசபக்திய நெனச்சா புல்லரிக்குது,, ,,

அவ்வ்வ்வ்வ்வ்வ் வ்வ்வ்வ்வ்
Quote
 
 
-25 #47 அன்பு 2011-08-24 04:05
அன்னா ஹசாரேயொன்றும் பெரிய யோக்கியசிகாமணிய ல்ல. அவரால் தேசீயவாத காங்கிரஸ் கட்சியின் மந்திரி சுரேஷ் ஜெயின் பதவி விலகினார் என்று பீற்றிக்கொள்கிற ார்கள். ஆனால், சுரேஷ் ஜெயின் பதவி விலகக் காரணமாக இருந்த பி.பி.சாவந்த் கமிட்டியின் அறிக்கையில், அன்னா ஹசாரேயின் தொண்டு நிறுவனங்களிலும் முறைகேடுகள் நடந்திருப்பதாக குறிப்பிடப்பட்ட ிருக்கிறது. தனது பிறந்த நாளுக்காக, தொண்டு நிறுவனத்திலிருந ்து 2.21 லட்சம் ரூபாய் எடுத்துக்கொண்டி ருப்பதாக குறிப்பிடப்பட்ட ிருக்கிறது. இது தவிர நிர்வாகச் சீர்கேடு தொடங்கி, கட்டப்பஞ்சாயது வரை அவர் மீது பத்துக்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுக் கள் அந்த அறிக்கையில் உள்ளன.

இதை படித்துவிட்டு யாரும் அவர் 2 லட்சம் தானே திருடினார் என்று சப்பை கட்டு கட்டவேண்டாம்!
அப்போது அவரால் திருட முடிந்தது அவ்வளவு தான்,

இந்த போராட்டம் அறிவித்த பிறகு வந்த டொனேசனில் நன்றாக கல்லா கட்டியிருப்பார் .

அவர் உன்மையிலேயே யோக்கிய சிகாமணியாகா இருந்தால், அவருடைய இயக்கத்துக்கு வந்த நன்கொடை விபரங்களை பற்றி சொல்லட்டுமே!

கேட்டால், காங்கிரஸ் சொல்லட்டும் நான் சொல்லரேன்னு சொல்லுரார்! காங்கிரஸ்தான் திருடன்னு எல்லாருக்கும் தெறியுமே!
Quote
 
 
-15 #46 அன்பு 2011-08-24 03:42
அரசு கொணர்ந்துள்ள லோக்பால் சட்ட வரைவில், அரசல்லாத நிறுவனங்கள் (Non Government Organisations) மீதும் நடவடிக்கை எடுக்க வழிவகைகள் உள்ளன. ஆனால், அவற்றை அன்னா ஹசாரேயின் குழு வன்மையாக எதிர்த்தது. ஏன்? தன்னார்வத்தொண்ட ு நிறுவனங்களில் ஊழல் நடப்பதில்லையா? அன்னாவின் ’இந்து ஸ்வராஜ் ட்ரஸ்ட்’டிலேயே நடந்தது என்பது தானே பி.பி.சாவந்த் அறிக்கையின் சாரம்?

தன்னார்வத்தொண்ட ு நிறுவனங்களில் பல என்ன செய்கின்றன? மக்கள் சேவை என்று சொல்லிக்கொண்டு அரசுகளிடமிருந்த ு நிதி வசூலிக்கின்றன; வெளிநாடுகளிலிரு ந்து நன்கொடை மற்றும் நிதியுதவி பெறுகின்றன. "நான் தான் தலைவர், நீ செயலாளர், நீ பொருளாளர்," என்று சுயேச்சையாக (adhoc) நிர்வாகத்தை உருவாக்கி, வருகிற நிதிகளை மனம்போலச் செலவழிக்கின்றனர ். விரல்விட்டு எண்ணக்கூடியவை தவிர மீதமிருப்பவை மிக மோசமான நிர்வாகம், பணமோசடி என்ற அளவிலே தான் இருக்கின்றன.

இவற்றை லோக்பாலின் கீழ் கொண்டு வர வேண்டாம் என்று அன்னா சொல்வது ஏன்?
ஏனெனில், அப்படி வந்தால் அவர்தான் முதலில் உள்ளே செல்வார்! ’இந்து ஸ்வராஜ் ட்ரஸ்ட்"ல் ஊழல் செய்ததற்கு இதுவரை அவர் எந்த தண்டனையும் அனுபவிக்கவில்லை !
நன்றி
http://settaikkaran.blogspot.com/2011/08/blog-post_15.html
Quote
 
 
-7 #45 அன்பு 2011-08-24 03:19
Quoting Iridium Cobra:
அரசு சொல்லியுள்ளது போல் NGo களை தண்டிக்க தனியான சரத்து தேவையில்லை, ஏற்கனவே அரசாங்க உதவி வாங்கும் அனைத்து விதமான அமைப்புகளும், NGOகளும் அரசுக்கு என்ன விதி உள்ளதோ அதே விதிப்படி செயல்பட வேண்டும் எனவும், அரசுக்கு பொருந்தும் அனைத்து தண்டனைகளும் அவைகளுக்கும் பொருந்தும் எனவும் உள்ளது. அரசு உதவி பெறும் ஒரு NGO மீது வழக்கு போட்டு அது நிரூபணம் ஆனால் அதனை ப்ளாச்க் ளீஸ்ட் செய்து விடலாம். எனவே ண்கோகளுக்கு என எந்தவிதமான தனி சரத்தும் தேவை இல்லை ?


இதுவும் தவறு,
Prevention of Corruption Act (PCA) என்ற ஊழல் ஒழிப்புச் சட்டம் எல்லாக் குடிமகன்களுக்கு ம் பொருந்தாது. அது மக்கள் சேவகர்கள் (Public Servants) என்ற ஒரு பிரிவை மட்டுமே கருத்தில்கொண்டு இயற்றப்பட்ட சட்டம். அத்துடன், ஜன் லோக்பால் வரைவில் இந்திய தண்டனைச் சட்டம் (IPC) 410 முதல் 424 வரையிலான சட்டப்பிரிவுகள் விலக்கப்பட்டுள் ளன. பொது சேவகரோ அல்லது தனியாரோ மோசடி அல்லது ஏமாற்று போன்ற குற்றங்களில் ஈடுபட்டால் தண்டிப்பதற்குரி ய பிரிவுகள் அவை. அவற்றை ஜன் லோக்பால் மசோதாவிலிருந்து விலக்கியதன் மர்மம் என்ன?

அரசியல்வாதிகளுக ்காவது ஐந்து வருடத்துக்கு ஒருமுறை ஓட்டு என்ற அங்குசம் மக்களின் கட்டுப்பாட்டில் இருக்கின்றது..! ஆனால்... இவர்களை எப்படி அடக்குவது..? இவர்கள் மொத்தமாக ஒரு வெளிநாட்டிடம் அடகு போய் விட்டால் அப்புறம் நம் நாட்டின் நிலை..?

பிரதமரை கேள்வி கேட்கலாம், ஆனால் ஜன் லோக்பாலில் உள்ளவர்களை கேள்வி கேட்க முடியாது? என்ன விசித்திரமான சட்டம்??? நாளை இவர்கள் தான் நம் நாட்டை ஆளப்போகின்றார்க ள் என்றால், பின் நீதிமன்றம் எதற்கு? தேர்தல் எதற்கு?
Quote
 
 
-7 #44 அன்பு 2011-08-24 03:09
Quoting Iridium Cobra:
அன்பு அவர்கள் கூறி உள்ளது போல், அன்னா அவர்கள் எந்த கட்சிக்கும் ஆதரவாகவோ, எந்த கட்சிக்கும் எதிராகவோ லோக்பால் சட்டத்தை கோரவில்லை. அவர் கேட்பது எல்லாம் ஊழலை ஒழிக்க கடுமையான சட்டம் மட்டுமே. ?


தஙளின் கருத்து முற்றிலும் தவறானது,
ஜன் லோக்பால் - அரசு லோக்பால் இரண்டில் எது வந்தாலும் அது ஊழலை முற்றிலும் ஒழித்து விடாது என்பது ஒரு புறம் இருக்கட்டும். அரசின் லோக்பால் மசோதா மிகவும் பலவீனமானது என்பதில் துளியும் சந்தேகமில்லை.

ஆனால், அண்ணாவின் வரைவு மிக உன்னதமா? அதன் அடிப்படை என்ன...? "ஊழல் என்றால் என்ன?" என்று பிரிவு 2(4) -ல் கீழ்க்கண்டவாறு விளக்கியிருக்கி றார்கள்.

"to include anything made punishable under Chapter IX of the Indian Penal Code or under the Prevention of Corruption Act (PCA), 1988."
."
ஆக, இதன் அடிப்படை ஏற்கனவே உள்ள சட்டங்கள் தான் என்பது புரிந்திருக்கும ். ஆகவே, அந்த சட்டங்களில் இருக்கிற அனைத்து குறைபாடுகளும் அன்னா ஹசாரேயின் ஜன் லோக்பாலுக்கும் இயல்பாகவே பொருந்தும் என்பதுதானே உண்மை...? ’இருக்கிற சட்டங்கள் போதாது; புதிதாய்ச் சட்டம் கொண்டு வருகிறோம்,' என்று சொல்வது மக்களை ஏமாற்றுகிற வேலை.
Quote
 
 
+7 #43 Tamilss 2011-08-23 22:36
கூவம் ஓரம் குடியிருக்கும் இந்த விளிம்பு நிலை மக்களை அப்புறப்படுத்து ம் பொழுது அவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தால் அவர்களைச் சாடுவதற்கு முந்திக்கொண்டு வருபவர்கள் இந்த நடுத்தரவர்க்க புரட்சியாளர்கள் தான். இவர்கள் இந்தியாவின் உண்மையான முகம் அல்ல. இவர்களைப் பொறுத்தவரை கார்ப்பரேட் கம்பெனிகளும் முதலாளிகளும் அவசியம். இயற்கை வளங்களை அவர்களிடம் விற்பதும் அவசியம். முதலாளிகள் இயற்கை வளங்களைச் சுரண்டுவது கண்டு பாதிப்படையும் விளிம்பு நிலை மக்கள் போராடினால் அவர்களை இரும்புக்கரம் கொண்டு நசுக்குவதும் அவசியம்.

மன்மோகன் அரசாங்கத்திற்கு உள்ள புரியாத புதிர், இந்தப் போராடும் நடுத்தரவர்க்கமு ம் ஊழல்களால் பலனடையக் கூடியவர்கள் என்பது அந்த நடுத்தரவர்க்கத் துக்கு தெரியுமா தெரியாதா? இவ்வளவு அரைகுறைகளாக இருக்கிறார்களே. அரைகுறைகளைச் சமாளிப்பது மிகவும் கடினம்தான்.

ஆனால் உழைக்கும் மக்களுக்கு எதிராக வன்முறையில் இறங்கும் போலிஸ் இங்கும் ஒரு சுற்று லத்தியைச் சுற்றி, கையில் விலங்கை மாட்டினால் இந்தப் புரட்சியாளர்கள் ஓடி ஒளிந்துகொள்வார் கள். விடிந்தால் காருக்கோ, பைக்குக்கோ தவணை கட்டவேண்டிய கட்டாயத்தில் புரட்சியாவது மண்ணாங்கட்டியாவ து.
Quote
 
 
+5 #42 Tamilss 2011-08-23 22:36
மிகத் தட்டையான விளக்கம்.

ஊழலின் அடிப்படை தெரியாத நடுத்தரவர்க்கத் தின் போராட்டம் என்பதுதான் குற்றச்சாட்டு. நடுத்தரவர்க்கம் போராடக் கூடாது என்று சொல்லவில்லை. ஏன் உயர்வர்க்க சீமான்கள் கூட போராட்டத்திற்கு ஆதரவு கொடுக்கிறார்கள் . கார்ப்பரேட் ஊடகங்கள் கூட ஆதரவு கொடுக்கின்றன. ஆக உயர்வர்க்கம் போராடக் கூடாதா என்றால் திருடனே எப்படித் திருட்டுக்கு எதிராகப் போராட முடியும்? இந்த கார்ப்பரேட் உயர்வர்க்கம் திருடன் என்றால் இந்தத் திருடர்கள் மூலம் பலனடையக் கூடியதுதான் இந்தப் போராட்டத்தில் குதித்துள்ள நடுத்தரவர்க்கம் .

இயற்கை வளங்களையும், உழைக்கும் மக்களையும் சுரண்டுவதற்கு வேண்டிய லைசன்ஸ் பெருவதில் ஊழல் - இதனால் உயர்வர்க்கம் ஊழலுக்கு எதிராக போராடுகிறது. ஆக இவர்களின் நோக்கம் ஊழலே இல்லாமல் வளங்களைச் சுரண்ட வேண்டும்.

இப்படிச் சுரண்டும் கார்ப்பரேட் கம்பெனிகள், முதலாளிகளிடம் வேலை பார்த்து பலன் பெறும் நடுத்தரவர்க்கம் அவர்களின் முதலாளிகளிடம் விலைபோன அரசின் அன்றாட பணிகளில் சந்திக்கும் ஊழல் - இதனால் நடுத்தரவர்க்கம் ஊழலுக்கு எதிராகப் போராடுகிறது. இவர்களின் நோக்கம் சுரண்டுபவனிடம் நாங்கள் பணி புரிந்து பலன் பெறுவோம். ஆனால் எங்களின் அன்றாட வேலைகளான மின்சார பில் கட்டுவது, தொலைபேசி பில் கட்டுவது, பிறப்புச் சான்றிதழ் பெறுவது போன்றவை ஊழலில்லாமல் நடைபெற வேண்டும்.

விலை கொடுத்தாலும் இந்த ஊழல்களால் பலன் பெறுபவர்கள் கார்ப்பரேட்டுகள ும் அவர்களை அண்டிப் பிழைக்கும் இந்த நடுத்தர வர்க்க புரட்சியாளர்களு ம்.

அரசாங்கத்தாலும் , அரசாங்கச் சொத்துகளை விற்பதால் பயன்பெறக் கூடிய தனியார்களாலும் கைவிடப்பட்ட விளிம்பு நிலை மக்கள்தான் இந்த ஊழல்களால் எவ்விதப் பலனையும் அடையாதவர்கள். தொடர்ந்து பாதிப்புக்கு ஊள்ளாகுபவர்கள்.
Quote
 
 
+10 #41 Iridium Cobra 2011-08-23 17:57
வெறும் RTI மூலமாகவே தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திற்கும ் ஒரு துறைக்கு வெறும் ஐந்தே ஐந்து பேர் வீதம் (மொத்தம் 5600 நபர்கள் >> 32 மாவட்டம் X 35 துறைகள் X 5 நபர்கள்௦) அந்தந்த துறையில் நடக்கும் செயல்களை, செலவுகளை கணக்கு கேட்டு மனு அனுப்பினால் மொத்த அரசாங்க துறைகளும் வெலவெலத்து போய் விடும். இதன் கூடவே லோக்பால் போன்ற தண்டனை அதிகம் உள்ள, விசாரணை கடுமையான, எந்த வித அரசியல் செல்வாக்கால் பாதிக்கபடாத அமைப்பு இருக்குமே ஆனால், ஊழவாதிகளை உண்டு இல்லை என ஆக்கி விடலாம். லோக்பால் வந்த அடுத்த நாளே நாட்டில் பாலாறும், தேனாறும் ஓடாது. மக்கள் அதனை கடுமையாக பயன்படுத்தி அதிக தண்டனை கிடைக்கும் போது ஊழல் செய்ய ஒவ்வவொருவரும் பல முறை யோசிப்பார்கள். எங்கள் அமைப்பின் மூலமாக 5 வருடங்களாக போலீஸ், சமூக நலத்துறை & நீதித்துறை ஆகியவைகளை கேள்வி மேல் கேள்வி கேட்டு பல விசயங்களை சாதித்து உள்ளோம். தமிழகத்தில் மொத்தம் உள்ள 196 மகளிர் காவல் நிலையங்களில் வேலை செய்யும் அனைத்து மகளிர் போலிசின் சொத்துக்கணக்கு, அவர்களின் சர்வீஸ் விவரங்கள் போன்றவற்றை கேட்டும், மாநிலத்தில் உள்ள 32 மாவட்ட வரதட்சனை தடுப்பு அதிகாரிகளின் கடந்த 10 வருடத்தில் செய்த செலவுகள், தடுத்து நிறுத்திய வரதட்சனை திருமணங்கள் போன்றவற்றை கேட்டு RTI மனு செய்தோம். கிடைத்த ஆதாரங்களை வைத்து மொத்த சமூக நலத்துறையையே suspend செய்ய முடியும். எனவே கேள்வி கேட்க சட்டம் இருக்கிறது, ஆட்கள் இருக்கிறார்கள், மக்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை என்ற நிலை வரும் போது ஊழல செய்ய எவனும் பல முறை யோசிப்பான். அந்த நிலை வர ஒரு தொடக்கம் தேவை,அந்த தொடக்கத்தை கொண்டு வர லோக்பால் பாடுபடுகிறது. அதில் உள்ள குறைகளை களைய காலப்போக்கில் மற்றம் செய்ய வேண்டியதும் தேவைப்படும். அதை விட்டு லோக்பால் வந்தால் ஊழல் ஒழியுமா? அதனை கொண்டு வரவேண்டும் என சொல்பவர்கள் யோக்கியாமா? என வெட்டி பேச்சு பேசினால் நமது அழிவை யாராலும் தடுக்க முடியாது.
Quote
 
 
+7 #40 Iridium Cobra 2011-08-23 17:44
(தொடர்ச்சி.....)4.கள்ளதொடர்பு வைத்து இருந்த மனைவியின் தாத்தாவான ஆள் DSP பதவியில் இருந்துகொண்டு,ஹ ை கோர்ட்டில் 3 வக்கீல்கள், & ஒரு நீதிபதி சொந்தக்கார்கள் என்ற திமிரில் பொய் வழக்கு போட்டார். கணவனின் குடும்ம்பத்தார் DSP ஆளின் குடும்ப உறுப்பினர்கள் 18 பேரை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் திருப்பி அடித்த அடியில் காலில் விழாத குறையாக DSP அழுது கேஸ்களை வாபஸ் வாங்கினார்கள். DSPயின் டாக்டர் மருமகன் வேலை செய்யும் புகழ் பெற்ற மருத்தவமனையின் மூத்த டாக்டர்கள் 5 பேர் நேரில் வந்து மன்னிப்பு கேட்டு கணவனின் பதிலடியை நிறுத்த வேண்டிக்கொண்டார ்கள். 5.கள்ளதொடர்பு வைத்து இருந்த மனைவியின் செயல்களை மறைத்து பொய் வழக்கு போட்ட VAO பணியில் இருந்த அந்த பெண்ணின் தந்தை மீது 250 + தகவல் அறியும் உரிமை சட்ட கோரிக்கைகளை போட்டு 45 புகார் கடிதம் எழுதி, 13 குற்றங்களை கண்டுபிடித்து ஊழல் வழக்கில் விசாரணை வைக்க கலக்டிரின் ஆணை பெறப்பட்டது. விசாரணை ஆரம்பித்த உடன் VAO அதிர்ச்சியில் மாரடைப்பால் செத்தான். 6.பொய் கேஸ் போட்டு மிரட்டி பணம் பறிக்க நினைத்த 7 மகளிர் இன்ஸ்பெக்டர்களை வழிக்கு கொண்டு வந்து ஆளை விட்டால் போதும் என ஓட வைத்தோம். 8.பொய் கேஸ் போட்டு மிரட்டி பணம் பறிக்க நினைத்த ஒரு மகளிர் இன்ஸ்பெக்டர் கணவனின் வக்கீல் ஆபீசெக்கு நேரில் வந்து தன்னை ஒன்றும் செய்து விட வேண்டாம் என கண்ணீர் விட்டு அழுக வைத்தோம். 9. மாவட்ட விவசாய துறையில் உள்ள மொத்த அதிகாரிகளின் கூலியாளாக வேலை பார்த்து லஞ்சம் வசூலித்து தந்து கொண்டு பிழைப்பை ஒட்டி வந்த நபரின் மகள் பொய் வழக்கு போட்ட காரணத்திற்காக, அந்த கேசால் பதிக்கப்பட்ட நபர் திருப்பி அடித்த அடியில் மொத்த மாவட்ட விவசாய துறையில் உள்ள ஆட்கள் எல்லாம் கதி கலங்கி போய் போட்ட பொய் கேசை வாபஸ் வாங்க வைத்தார்கள். இது போல தமிழகம் & மற்ற மாநிலங்களில் எங்கள் அமைப்பில் உள்ள சாதாரண ஆட்கள், பதவி, அரசு அதிகாரம், போலீஸ் & அரசியவாதிகளின் சப்போர்ட் என திமிராக இருந்த நூற்றுக்கணக்கான அரசு அதிகாரிகளை வழிக்கு கொண்டு வந்து உள்ளோம். அதே முறையில் அரசில் உள்ள அனைத்து துறைகளில் நடக்கும் செயல்களை, செலவு செய்யப்படும் பணத்தின் கணக்குகளை, ஒரு பைசா விடாமல் கணக்கு கேட்டு ஊழல், அதிகார துஷ்ப்ரயோகம் நடக்காமல் முற்றிலுமாக தடுக்க நம்மால் கண்டிப்பாக முடியும்.
Quote
 
 
+4 #39 Iridium Cobra 2011-08-23 17:40
////அடுத்ததாக நீங்கள் சொன்ன "நீங்கள் போய் வாஜ்பாயியை கேட்டு இருக்கலாமே?" அப்படியே நான் கேட்டு இருந்தாலும், என்னோட பேச்சை கேட்டு விட்டுதான் அவர் மறு வேலை பார்ப்பர்! என்னா சார் நீங்க?
ஜன் லோக்பால் சட்டம் வந்துவிட்டால் நாட்டில் பாலாரும் தேணாரும் ஓடும் என்று பத்திரிக்கைகள் கதை விடுகிறது!//
நீங்களாகவும் எதுவும் செய்ய மாட்டீர்கள், செய்யும் ஆட்களையும் குறை சொல்லமட்டும் ஆயிரம் காரணம் கண்டுபிடுத்து விமர்சனம் செய்ய வருவீர்கள். அன்னா அவர்களின் லோக்பால் ஊழலை ஒழிக்க முடியாது என் நீங்கள் கூறினால்,அதனை முற்றிலும் ஒழிக்க என்ன சட்டம் கொண்டு வரவேண்டும் என நீங்கள் கூறுங்கள். நங்கள் அனைவரும் உங்கள் பினால் நிற்கிறோம். நீங்கள் சொன்ன மாதிரி வாஜ்பேயி கேட்டால் அவர் கேட்டகவா போகிறார் என அன்னா அவர்கள் சும்மா வீட்டில் உட்கார்ந்து வியாக்கியானம் பேசாமல் மகாராஷ்டிரா அரசை எதிர்த்து பல வகையில் நல்லது செய்ய வழி செய்து உள்ளார். குடுமப பிரச்னைகளை கிரிமினல் வழக்குகளாக மாற்றி பணத்தைக்கொள்ளை அடிக்கும் மனைவிகள், அவர்களின் வீட்டு ஆட்கள், பொய் கேஸ்களைப்போட்டு மிரட்டும் போலீஸ், துணை போகும் வக்கீல்கள் அரசியல்வாதிகள்
ஆகியோரை எதிர்த்து போராடும் கணவர்களின் இயக்கத்தில், வெறும் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தி ன் மூலம் மட்டுமே சாதாரண ஆட்களான ஒரு 50 பேர், இதுவரையிலும் கீழ்கண்ட பதவிகளில் இருந்த ஆட்களை வழிக்கு கொண்டு வந்து கதற கதற மன்னிப்பு கேட்க வைத்து உள்ளோம். 1.தமிழகத்தின் முன்னாள் உள்துறை செயலாளர்(அனைத்த ு போலீஸ் அதிகாரிகளின் பாஸ் ஆகா இருந்தவர்).2. CBCID யில் டெபுடி கமிசனாராக இருந்து கொண்டு 7 மாவட்ட போலிசின் மூலம் கணவனின் குடும்பத்தை மிரட்டி போய் வழக்கு போட்டவர்.(அடித்த அடியில் நொந்து போய் குடும்பத்தை அனாதையாக விட்டு மாரடைப்பால காலமாகி விட்டார்) 3. CBCID யில் இன்ஸ்பெக்டராக இருந்து கொண்டு, முன்னாள் அமைச்சரின் 2 கைத்தடிகளை மச்சான்களாக கொண்டு, கணவனின் குடும்பத்தை 8 பொய் கேஸ்கள் போட்டு படாதபாடு படுத்தியவர்.
Quote
 
 
0 #38 truth 2011-08-23 17:08
Anna Hazare-Lokpal

First all government should corruption free and more over present UPA fails most of the corruption issues ,they are in the coalition government PM himself declared coalition Dharma(will adjust partners),Its clearly means he don't have individual decision making powers

Secondly Anna team this type indefinite fasting bad example for future generation... why .... Because should understand our parliamentary democracy already UPA have majority in the house
how we expect they will pass full lokpal bill .... ok how will implement or make the law for this bill

Through next general election Anna team & our media's should emphasize include this bill to their (party's) election manifesto & their top priority agenda for next new government

Now our turn we should select which party willing to pass this Jan lokpal, we should vote for them,
Election & our vote power only we will see the reform

unfortunately urban population only knows(shows interest) this bill & corruption's because more agitation happening from urban side. Rural India not much echo but Anna team should create awareness(lokpa l) among them then only we will see the real Impact.
Quote
 
 
0 #37 Shyam 2011-08-23 15:49
அருமை. அற்புதம்.
Quote
 
 
-4 #36 அன்பு 2011-08-23 14:39
[ Iridium Cobra ] BJP அரசு அம்பானிகளுக்கு எண்ணைக் கிணறுகளை தாரை வார்த்த போது அன்பு அவர்கள் எங்கே போனீர்கள். நீங்கள் போய் வாஜ்பாயியை கேட்டு இருக்கலாமே? .[Reply

நன்பரின் பதில் கருத்துக்கு மிக்க நன்றி!

ஊழலை ஒழிப்பேன் என்று புறப்பட்டவர் நேர்மையானவரா?

"இந்து ஸ்வராஜ் ட்ரஸ்ட்" நிதியிலிருந்து பணம் கையாடல் செய்ததாக 2003இல் பி.பி.சாவந்த் கமிட்டியால் அன்னா ஹஜாரே குற்றம் சாட்டப்பட்டதை காங்கிரஸ் கட்சியின் மணீஷ் திவாரி குறிப்பிட்டதும் , அன்னாவுக்குப் பொத்துக் கொண்டு வந்துவிட்டது.

"எனது பெயரை நீக்கும்வரை உண்ணாவிரதம் இருப்பேன்," என்று சவடால்விட்டார்!

அடுத்த சில நிமிடங்களில் எல்லா தொலைக்காட்சிகளு க்கும் பேட்டியளித்த நீதிபதி.பி.பி.சாவந்த், "ஆமாம், அன்னா ஹஜாரே ஊழல் செய்ததை நான் குறிப்பிட்டிருக ்கிறேன்.((I have indicted Anna Hazare for corruption) என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னதும், அன்னாவின் வாய் அடைத்துப்போனது. பி.பி.சாவந்த் அறிக்கை 2003-ல் சமர்ப்பிக்கப்பட ்டது. எட்டு வருடமாக அதுபற்றி வாயே திறக்காமல் மவுனம் சாதித்த உண்ணா ஹஜாரேவுக்கு இப்போது ஏன் கோபம்?

இவருக்கு நேர்மையயை பற்றி பேச என்ன யோக்கிதை உள்ளது?
எனக்கும் ஊழல் ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

அதற்கு நாம் முன்னிருத்தும் நபர் நேர்மையானவரா என்பதில் தான் கருத்து வேறுபாடு.

அடுத்ததாக நீங்கள் சொன்ன "நீங்கள் போய் வாஜ்பாயியை கேட்டு இருக்கலாமே?" அப்படியே நான் கேட்டு இருந்தாலும், என்னோட பேச்சை கேட்டு விட்டுதான் அவர் மறு வேலை பார்ப்பர்! என்னா சார் நீங்க?

ஜன் லோக்பால் சட்டம் வந்துவிட்டால் நாட்டில் பாலாரும் தேணாரும் ஓடும் என்று பத்திரிக்கைகள் கதை விடுகிறது!

அன்னாவின் ஆதரவாளர்களும் மக்களை முட்டாளாக மாற்றுகிறார்கள் .

உதாரனமாக,
"அன்னாவின் ஜன் லோக்பால் சட்டம் வந்தால் என்ன நடக்கும் தெரியுமா? யாராவது லஞ்சம் கேட்டால், உடனே 101 டயல் செய்து புகார் தெரிவித்தால் போதும். லோக்பாலின் வாகனம் வந்து லஞ்சம் கேட்டவரை அள்ளிக்கொண்டு போய்விடும்!" - இப்படி காதில் பூ சுற்றியிருப்பவர ் கிரண் பேடி
Quote
 
 
+4 #35 raja sekar.mech eng 2011-08-23 13:36
All college students support Annaji for Non corruption movement.

Future India in youngster Hand

Vande mataram.........................
Quote
 
 
+4 #34 raja sekar.mech eng 2011-08-23 13:32
All college students support Anna Hazare for Non Corruption movement .
Future India in Youngster Hand.
DR.APJ

Vande Mataram............
Quote
 
 
+2 #33 sathyshk 2011-08-23 13:32
Guys we should not discuss about anna's past. What is going on now? How would it help us? If we had a lokpal, we might have send FORMER INTELLIGENCE ADGP behind the bars. We need this bill. If the bill passed, at least some 20 percent of corruption being contained? The 20 percent ll work out for minimum rupees 500 billion. Do support the bill. If we miss it, we have to wait for another Anna..
Quote
 
 
+3 #32 Pothi 2011-08-23 13:22
This is the time to show the unity and courage to continue this silent agitation until Jan Lokpal is implemented.
Quote
 
 
+2 #31 Vazhi pokkan 2011-08-23 13:07
சட்டம் என்பது மக்களுகாக இயற்ட்டப்பட்டது .ஆனல் இன்கு சட்டத்தை காப்பவர்கலே ஊலல் பன்னுகிறார்கள்.இதை கேட்டல் உங்கல் வழிமுறை தவரு என்கிறார்கல் பதவியில் இருபவர்கள்.எனக்கும் ஒரு ஆஸை உன்டு. நனும் அன்னா ஹzஅரெ போரட்டத்தில் கலந்து கொல்ல வேன்டும் என்று.ஆனல் என்னை நம்பி என் மனைவி மட்றும் என் குடும்பம் உல்ளது, அதனல் என்னல் கலந்து கொள்ள முடியவில்லை.என்னை போல் எத்தனை பேர் உள்ளனர்.இந்நாட்டு அரசியல் வாதிகள் நாட்டுக்கு நல்லது செய்ய முன்வரவில்லை, எல்லொரும் சம்பதிக்கும் என்னொத்தொடு மட்டுமெ வருகிறர்கள்.ஊலலை ஒழிக்க புதிய சட்டம் கொன்டு வர வேன்டும்.ஊலல் பன்னுகிறவர்கள் துக்கில் போட வேன்டும் இல்லயேல் 10 வருடமாவது சிறையில் பொட வேன்டும் .அப்பொதுதன் ஊலலை முட்றிலும் தவிர்க முடியும்..என்னுடைய கருத்து ஒன்ரை மட்டும் சொல்கிரென், ஊலலை ஒலிக்க கடுமையன சட்டம் தேவைபட்டால் ,யோஸிக்கமல் அதை செயல்படுதலாம். அதை விடுத்து யோஸிதால் அவர்கலும் குட்றவாலிகளெ.
Quote
 
 
0 #30 kumarnow 2011-08-23 12:35
Everyone of us must read this

http://www.box.net/shared/h8lfn3k0zk39rs8z21t3
Quote
 
 
+2 #29 kumarnow 2011-08-23 12:33
அனைவடரும் அவசியம் படிக்க வேண்டும்

http://www.box.net/shared/h8lfn3k0zk39rs8z21t3
Quote
 
 
-5 #28 அன்பு 2011-08-23 12:23
[ஃஉஒடெ நமெ="ஈரிடிஉம் சொப்ர"]அரசு சொல்லியுள்ளது போல் ண்கோ களை தண்டிக்க தனியான சரத்து தேவையில்லை, ஏற்கனவே அரசாங்க உதவி வாங்கும் அனைத்து விதமான அமைப்புகளும், ண்கோகளும் அரசுக்கு என்ன விதி உள்ளதோ அதே விதிப்படி செயல்பட வேண்டும் எனவும், அரசுக்கு பொருந்தும் அனைத்து தண்டனைகளும் அவைகளுக்கும் பொருந்தும் எனவும் உள்ளது. அரசு உதவி பெறும் ஒரு ண்கோ மீது வழக்கு போட்டு அது நிரூபணம் ஆனால் அதனை ப்ளாச்க் ளீஸ்ட் செய்து விடலாம். எனவே ண்கோகளுக்கு என எந்தவிதமான தனி சரத்தும் தேவை இல்லை[/ஃஉஒடெ]

இதுவும் தவறு,
ப்ரெவென்டிஒன் ஒஃப் சொர்ருப்டிஒன் ஆச்ட் (ப்சா) என்ற ஊழல் ஒழிப்புச் சட்டம் எல்லாக் குடிமகன்களுக்கு ம் பொருந்தாது. அது மக்கள் சேவகர்கள் (புப்லிச் ஸெர்வன்ட்ச்) என்ற ஒரு பிரிவை மட்டுமே கருத்தில்கொண்டு இயற்றப்பட்ட சட்டம். அத்துடன், ஜன் லோக்பால் வரைவில் இந்திய தண்டனைச் சட்டம் (ஈப்ச்) 410 முதல் 424 வரையிலான சட்டப்பிரிவுகள் விலக்கப்பட்டுள் ளன. பொது சேவகரோ அல்லது தனியாரோ மோசடி அல்லது ஏமாற்று போன்ற குற்றங்களில் ஈடுபட்டால் தண்டிப்பதற்குரி ய பிரிவுகள் அவை. அவற்றை ஜன் லோக்பால் மசோதாவிலிருந்து விலக்கியதன் மர்மம் என்ன?

அரசியல்வாதிகளுக ்காவது ஐந்து வருடத்துக்கு ஒருமுறை ஓட்டு என்ற அங்குசம் மக்களின் கட்டுப்பாட்டில் இருக்கின்றது..! ஆனால்... இவர்களை எப்படி அடக்குவது..? இவர்கள் மொத்தமாக ஒரு வெளிநாட்டிடம் அடகு போய் விட்டால் அப்புறம் நம் நாட்டின் நிலை..?
Quote
 
 
+6 #27 sakthivel_tup 2011-08-23 12:19
ஊழல் ஒழிப்பு என்பது ரொம்ப சுலபம். இன்று அன்னா ஹசாரேவின் பின்னால் திரளும் மக்கள், இனிமேல் வாழ்நாளில் லஞ்சம் கொடுப்பதோ, வாங்குவதோ இல்லை என்றும் தாங்கள் சட்டத்தை மீறி எந்த ஊழலுக்கும் துணைபோவதில்லை என்றும் உறுதியான இறுதியான முடிவெடுத்து அதன்படி நடந்தால், ஊழலே இருக்காது. எந்த சூழ்நிலையிலும் தான் யோக்கியன் என்று காட்டிக்கொள்ள ஒருவருக்கு வாய்ப்பு கிடைத்தால் அதனை சரியாகவே பயன்படுத்திக்கொ ள்வார்கள். அதன் காரணமாகவே அன்னாவின் பின்னால் அடித்து பிடித்து திரளுகின்றனர். அன்னாவின் பின்னால் இருக்கும் பொதுமக்கள், தான் மட்டும் திருந்தினாலே போதும், இந்தியா திருந்திவிடும்.

ஊழலை ஒழிக்க கடுமையான சட்டம் வேண்டும் என்பது, என்னை வீட்டுக்குள்ள விட்டு போகும்போது கட்டி போட்டுட்டு போங்க, இல்லைனா நான் திருடிருவேன் என்பது போலத்தான்.

இந்தக்கருத்து ஊழலுக்கு மட்டும்தான், உடனே அறிவு ஜீவிகள், அப்போ கொலை கொள்ளை பாலியல் பலாத்காரம் போன்ற குற்றங்களுக்கும ் சட்டம் தேவையில்லையா என்று சண்டைக்கு வராதீர்கள். ஊழல் என்பது அதிக சதவிகிதம் தனிமனித ஒழுக்கத்தை சார்ந்தது.
Quote
 
 
-4 #26 அன்பு 2011-08-23 12:14
[ஃஉஒடெ நமெ="ஈரிடிஉம் சொப்ர"]அன்பு அவர்கள் கூறி உள்ளது போல், அன்னா அவர்கள் எந்த கட்சிக்கும் ஆதரவாகவோ, எந்த கட்சிக்கும் எதிராகவோ லோக்பால் சட்டத்தை கோரவில்லை. அவர் கேட்பது எல்லாம் ஊழலை ஒழிக்க கடுமையான சட்டம் மட்டுமே. . [/ஃஉஒடெ]

தஙளின் கருத்து முற்றிலும் தவறானது,
ஜன் லோக்பால் - அரசு லோக்பால் இரண்டில் எது வந்தாலும் அது ஊழலை முற்றிலும் ஒழித்து விடாது என்பது ஒரு புறம் இருக்கட்டும். அரசின் லோக்பால் மசோதா மிகவும் பலவீனமானது என்பதில் துளியும் சந்தேகமில்லை.

ஆனால், அண்ணாவின் வரைவு மிக உன்னதமா? அதன் அடிப்படை என்ன...? "ஊழல் என்றால் என்ன?" என்று பிரிவு 2(4) -ல் கீழ்க்கண்டவாறு விளக்கியிருக்கி றார்கள்.

"டொ இன்ச்லுடெ அன்ய்திங் மடெ புனிஷப்லெ உன்டெர் சப்டெர் ஈ௯ ஒஃப் தெ ஈன்டிஅன் பெனல் சொடெ ஒர் உன்டெர் தெ ப்ரெவென்டிஒன் ஒஃப் சொர்ருப்டிஒன் ஆச்ட் (ப்சா), 1988."
ஆக, இதன் அடிப்படை ஏற்கனவே உள்ள சட்டங்கள் தான் என்பது புரிந்திருக்கும ். ஆகவே, அந்த சட்டங்களில் இருக்கிற அனைத்து குறைபாடுகளும் அன்னா ஹசாரேயின் ஜன் லோக்பாலுக்கும் இயல்பாகவே பொருந்தும் என்பதுதானே உண்மை...? ’இருக்கிற சட்டங்கள் போதாது; புதிதாய்ச் சட்டம் கொண்டு வருகிறோம்,' என்று சொல்வது மக்களை ஏமாற்றுகிற வேலை.
Quote
 
 
-4 #25 அன்பு 2011-08-23 12:04
[ஃஉஒடெ நமெ="ஈரிடிஉம் சொப்ர"] ப்ஜ்ப் அரசு அம்பானிகளுக்கு எண்ணைக் கிணறுகளை தாரை வார்த்த போது அன்பு அவர்கள் எங்கே போனீர்கள். நீங்கள் போய் வாஜ்பாயியை கேட்டு இருக்கலாமே?.[/ஃஉஒடெ]

நன்பரின் பதில் கருத்துக்கு மிக்க நன்றி!

ஊழலை ஒழிப்பேன் என்று புறப்பட்டவர் நேர்மையானவரா?

"இந்து ஸ்வராஜ் ட்ரஸ்ட்" நிதியிலிருந்து பணம் கையாடல் செய்ததாக 2003இல் பி.பி.சாவந்த் கமிட்டியால் அன்னா ஹஜாரே குற்றம் சாட்டப்பட்டதை காங்கிரஸ் கட்சியின் மணீஷ் திவாரி குறிப்பிட்டதும் , அன்னாவுக்குப் பொத்துக் கொண்டு வந்துவிட்டது.

"எனது பெயரை நீக்கும்வரை உண்ணாவிரதம் இருப்பேன்," என்று சவடால்விட்டார்!

அடுத்த சில நிமிடங்களில் எல்லா தொலைக்காட்சிகளு க்கும் பேட்டியளித்த நீதிபதி.பி.பி.சாவந்த், "ஆமாம், அன்னா ஹஜாரே ஊழல் செய்ததை நான் குறிப்பிட்டிருக ்கிறேன்.(ஈ ஹவெ இன்டிச்டெட் ஆன்ன ஹழரெ ஃபொர் சொர்ருப்டிஒன்) என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னதும், அன்னாவின் வாய் அடைத்துப்போனது. பி.பி.சாவந்த் அறிக்கை 2003-ல் சமர்ப்பிக்கப்பட ்டது. எட்டு வருடமாக அதுபற்றி வாயே திறக்காமல் மவுனம் சாதித்த உண்ணா ஹஜாரேவுக்கு இப்போது ஏன் கோபம்?

இவருக்கு நேர்மையயை பற்றி பேச என்ன யோக்கிதை உள்ளது?
எனக்கும் ஊழல் ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

அதற்கு நாம் முன்னிருத்தும் நபர் நேர்மையானவரா என்பதில் தான் கருத்து வேறுபாடு.

அடுத்ததாக நீங்கள் சொன்ன "நீங்கள் போய் வாஜ்பாயியை கேட்டு இருக்கலாமே?" அப்படியே நான் கேட்டு இருந்தாலும், என்னோட பேச்சை கேட்டு விட்டுதான் அவர் மறு வேலை பார்ப்பர்! என்னா சார் நீங்க?

ஜன் லோக்பால் சட்டம் வந்துவிட்டால் நாட்டில் பாலாரும் தேணாரும் ஓடும் என்று பத்திரிக்கைகள் கதை விடுகிறது!

அன்னாவின் ஆதரவாளர்களும் மக்களை முட்டாளாக மாற்றுகிறார்கள் .

உதாரனமாக,
"அண்ணாவின் ஜன் லோக்பால் சட்டம் வந்தால் என்ன நடக்கும் தெரியுமா? யாராவது லஞ்சம் கேட்டால், உடனே 101 டயல் செய்து புகார் தெரிவித்தால் போதும். லோக்பாலின் வாகனம் வந்து லஞ்சம் கேட்டவரை அள்ளிக்கொண்டு போய்விடும்!" - இப்படி காதில் பூ சுற்றியிருப்பவர ் கிரண் பேடி
Quote
 
 
+23 #24 சைதை அஜீஸ் 2011-08-23 11:29
இந்த கட்டுரை இரண்டு விஷயங்களைப் பற்றி பேசுகிறது.
ஒன்று, அன்னா ஹசாரேவின் போராட்டம்.
இரண்டு, ஊடகங்களின் பங்களிப்பு.
இந்தப் போராட்டம் சரியா தவறா அல்லது தேவையா தேவையற்றதா என்பதைப் பற்றி பின்னர் பார்ப்போம்.
ஆனால் இதில் ஊடகங்களின் பங்களிப்புதான் மிகத்தவறான முன்னுதாரணமாகிற து.
ஏற்கனவே நம் மக்கள் ஆட்டு மந்தைகளைப் போன்று ஒரே பக்கம் சாய்பவர்கள். இந்தத் தன்மையை மேலும் இவர்கள் அதிகப்படுத்துகி ன்றனர்.
ஊடக உலகில் இப்போது போட்டி அதிகரித்துவிட்ட து. இவர்களுக்கு வருமானத்திற்கு விளம்பரங்கள் தேவைப்படுகின்றன . அதற்கு TRP RATING மிக முக்கியம். சமூக சிந்தனைப் பற்றியெல்லாம் இவர்கள் கவலைப்படுவதில்ல ை.

உண்மையிலேயே ஊழலை ஒழிக்க ஊடகங்கள் நினைத்தால்...
KD சகோதர்கள் கதை என்ன ஆனது?
சக்சேனா புகார்/விசாரணை என்ன ஆனது?
போஃபோர்ஸ் குத்ரோச்சி என்ன ஆனார்?
மதுகோடா என்ன செய்துகொண்டு இருக்கிறார்?
ப சிதம்பரம் உண்மையிலேயே வெற்றி பெற்றாரா?
போபால் விஷ வாயு கசிவு தீர்ப்பு என்ன ஆனது?
சென்னை குழந்தைகள் நல மருத்துவமனையில் பணியாளர் தட்டுப்பாட்டால் ஏற்பட்ட சாவுகளுக்கு யார் காரணம்?
நீதிபதி தினகரன் ராஜினாமா செய்து பின் திரும்பப்பெற்றத ு ஏன்?
இதுபோல நீண்ட பட்டியலுக்கு காரணம் தேடி போராடுங்கள்.

இன்று மட்டும் அன்னா ஹசாரே போராட்டம் இல்லாமலிருந்தால ், ஊடகங்களின் தலைப்புச்செய்தி யாக இந்திய கிரிக்கெட் இருந்திருக்கும் . எவ்வளவு கேவலமாக தோற்று இருக்கிறார்கள்? 4-0. நான் குப் போட்டிகளில் எதுவும் முழுவதுமாக ஐந்து நாட்கள் நடைப்பெறவில்லை. அனைத்து ஊடகங்களும் தோனியை கிழித்திருப்பார ்கள். ஆனால் ஊடகங்களுக்கு இப்போது அதற்கு நேரமில்லை. காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்கிற ார்கள்.

விஞ்ஞனி அப்துல் கலாமின் இன்றைய SCHEDULE என்ன? அவருடைய 2020 திட்டம் எந்த அளவில் வெற்றி பெற்றுள்ளது அல்லது நடைமுறைபடுத்தப் பட்டுக் கொண்டிருக்கிறது ?
இதெல்லாம் யாருக்குத் தேவை? இதனால் TRP RATING கூடுமா?

ஊர் ரெண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பது பழமொழி. ஆனால் இன்று ஊடகங்களோ தங்களுடைய வெற்றிக்காக ஊரையே இரண்டாக்குகின்ற ன. பின்னர் அதில் கூத்தாடியைவிட கேவலமாக குளிர்காய்கின்ற னர்.
Quote
 
 
+10 #23 Ram Prasad 2011-08-23 10:42
மேதா பட்கர் அடித்தட்டு மக்களுக்காக போராடி சிறை சென்ற பொழுது எங்கே சென்றது இந்த மேட்டுக்குடி கொழுந்துகள்? ஏழை எளிய மக்களுக்காகவே தனது வாழ்க்கையை அர்ப்பணித்த பினாயக் சென்னை சிறையிலடைத்த பாஜகவைப் பற்றி இந்த கொழுந்துகள் ஏதேனும் மூச்சு விடுமா? ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஈடுபட்டிருக்கும ் டாட்டா, அம்பானி உள்ளிட்டோரை எந்த சாப்ட்வேர் எஞ்சினியர்களுக் கும் மூச்சு விடமாட்டார்கள். ஆனால் ஊழழை ஒழிப்போம் என்று அண்ணாவின் பின் செல்லும் இவர்கள் அரசாங்கத்தோடு கைகோர்த்து தேச சொத்தை கொள்ளையடிக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களைப் பற்றி விமர்சனம் செய்யச் சொல்லுங்களேன் இவர்களின் தேச பக்தி லட்சணம் புரியும்.
Quote
 
 
+7 #22 Ram Prasad 2011-08-23 10:40
திரு. அன்பு அவர்களே உங்கள் கருத்தில் முழுவதும் உடன்படுகிறேன். காங்கிரஸ் ஊழலை ஒழிக்கும் என்பது குதிரை கொம்பு தான். பாஜகவிற்கு இந்துத்வா எப்படியோ அதே போலத்தான் காங்கிரசிற்கு ஊழல். இவ்வளவு நடந்த பின்பும் கபில் சிபல் அம்பானிகளுக்கு நீதிமன்றம் விதித்த கோடி நஷ்ட ஈட்டுத் தொகையை கோடியாக குறைக்கிறார் என்றால் எவ்வளவு திமிர் இருக்கும். ஆகையால் ஊழழுக்கு எதிரான எந்த ஒரு போராட்டமும் அவசியமானதாகவே தெரிகிறது. ஆனால் அண்ணாவை கண்ணை மூடிக்கொண்டு ஆதரவு தெரிவிப்பது வருந்தத்தக்க ஒன்று. காங்கிரஸ் எதிர்ப்பு என்கிற ஒற்றைப் பார்வை சவுக்கை நடுநிலையிலிருந் த சறுக்கச் செய்கிறது. லோக்பால் வந்தால் டில்லி காமன் வெல்த் விளையாட்டால் பாதிக்கப்பட்டவர ்களுக்கு நியாயம் கிடைக்கும் என்று சவுக்கு கூறுவது வருந்தத்தக்கது. மேட்டுக்குடி மக்களின் கேளிக்கூத்திற்க ும், இந்தியா ஒளிர்கிறது என்கிற போலியான ஒரு கருத்தை பரப்ப வாஜ்பாய் அரசு எவ்வளவு செலவானாலும் சரி காமன் வெல்த் விளையாட்டு இந்தியாவில் நடைபெற வேண்டும் என்று பாஜக முடிவு செய்து இந்தியாவிற்கு அந்த விளையாட்டை கொண்டுவந்தது பாஜக. எத்தனை ஆயிரம் உயிர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்தாலும் பரவாயில்லை என்று அந்த கனவை நனவாக்கியது காங்கிரஸ். இருபதாயிரம் மக்கள் கட்டாயமாக புலம்பெயர்க்கப் பட்ட பொழுது இந்த மேட்டுக்குடி கொழுந்துகள் எதுவும் அதை எதிர்த்து போராடவில்லை. டில்லியில் காணப்பட்ட பிச்சைக்காரர்கள ை நாய் வண்டி பிடிப்பது போல பிடித்து அவர்களை ஊரைவிட்டு வெளியேற்றிய பொழுது டில்லியில் பிச்சைக்காரர்கள ் இல்லை என்று கொண்டாடிய இந்த மேட்டுக்குடிகளு க்கு காமன் வெல்த் விளையாட்டில் ஊழல் என்று ரிப்போர்ட் வந்தவுடன் தேசபக்தி பொங்கி எழுகிரதாம். அவர்களிடமும் நியாயம் இருக்கிறது என்று சவுக்கு எழுதுவது கொடுமை.
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 372 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday10759
mod_vvisit_counterYesterday13443
mod_vvisit_counterThis week24202
mod_vvisit_counterLast week95998
mod_vvisit_counterThis month258249
mod_vvisit_counterLast month382199
mod_vvisit_counterAll days13174616