முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்தொடர்புக்கு
+++
ஒழித்தே தீருவோம். அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 84
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
செவ்வாய்க்கிழமை, 12 அக்டோபர் 2010 10:21

2010 டிசம்பர் 1. இதுதான் இறுதி நாள்.   அதற்கு முன்பாக சவுக்குக்கு முடிவு கட்டியே தீர வேண்டும்.   இதுதான், வெள்ளை மாளிகையில் நேற்று எடுக்கப் பட்ட முடிவு.

 

இந்த வெள்ளை மாளிகையின் சிறப்புக் கூட்டத்தில் பங்கேற்றோர் விபரம்.

 

1)  திரு.கே.ராதாகிருஷ்ணன், சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி

2)  திரு.சுனில் குமார், இணை இயக்குநர், லஞ்ச ஒழிப்புத் துறை

3)  காமராஜ் என்கிற குருமாராஜ், நக்கீரன் இணை ஆசிரியர்

4)  ராஜாதி ராஜ ராஜ மார்த்தாண்ட ராஜ கம்பீர ராசகுல திலக ராஜ பராக்கிரம வீர அதி உத்தம ஜாபர் சேட்

2

 

இந்தக் கூட்டத்தில் சவுக்கு குறித்து விரிவான விவாதம் மேற்கொள்ளப் பட்டு உள்ளது.   குறிப்பாக சுனில் குமார், கடுமையான கோபத்தோடு, சவுக்கை ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்று கூறியுள்ளார்.

 sunil_2

முதலில் ஆலோசிக்கப் பட்ட திட்டம், சவுக்கை ஏதாவது பெண் விவகாரத்தில் சிக்க வைப்பது. அதாவது, சவுக்கின் பெண் தோழர்கள் யாராவது ஒருவர் மேல், வழக்கு போட்டு, அதில் சவுக்கையும் சிக்க வைப்பது.   இந்தத் திட்டம், சரி வர இருக்குமா என்று யோசித்துப் பார்த்ததில், இத்திட்டம், சரிப்பட்டு வராது என்று முடிவெடுக்கப் பட்டது.

 

அடுத்த திட்டம், யாராவது ஒரு பெண் ஒருவரை வைத்து, சவுக்கு அந்தப் பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டார் என்று அந்தப் பெண்ணை வைத்து புகார் கொடுக்க வைத்து, சவுக்கை மீண்டும் ஒரு முறை கைது செய்து சவுக்கையும் அவர் குடும்பத்தினரையும் அவமானப் படுத்துவது.

 

அடுத்த திட்டம், சவுக்கின் மீது எடுக்கப் பட்டு வரும் துறை ரீதியான நடவடிக்கைகளை துரிதப் படுத்தி சவுக்குக்கு நெருக்கடி கொடுப்பது.   இத்திட்டம் செயல்படுத்தப் பட்டு விட்டது.

 

அடுத்து ஜாபர் சொன்ன திட்டம், சவுக்கு சாலையில் சென்று கொண்டிருக்கும் போது, பைக்கில் யாரையாவது விட்டு, தகராறு செய்யச் சொல்லி, இதுதான் சாக்கு என்று, அடி பின்னி எடுப்பது. இந்தத் திட்டம், பெரும்பாலானவர்களால் ஆமோதிக்கப் பட்டு உள்ளது. இத்திட்டத்தை ஆமோதித்தவர்கள் சொன்ன விஷயம், சவுக்கை ஏற்கனவே கைது செய்தது, சரிவர வெற்றி பெறவில்லை என்பதால், யாரையாவது விட்டு, சவுக்கிடம் தகராறு செய்து, கையை காலை உடைத்து விட வேண்டும், அப்போதுதான் சரிப்பட்டு வருவான் என்பதுதான் அது.

 

அடுத்த திட்டம், சவுக்கின் மீது இருக்கும், தொலைபேசி ஒட்டுக் கேட்பு வழக்கையும், மதுரவாயலில் ஒருவரை “செங்கலில் தாக்கிய“ வழக்கையும் துரிதப் படுத்துவது. தொலைபேசி ஒட்டுக் கேட்பு வழக்குக்கு, நீதிமன்ற தடையாணை இருப்பதால், உடனடியாக விரைவு படுத்த முடியாது.

 

சவுக்கு மதுரவாயல் காவல்நிலையத்தில் கைது செய்யப் பட்ட வழக்கு என்ன ஆனது என்ற அப்டேட் சவுக்கு வாசகர்களுக்கு வழங்கப் படவில்லை.

 

சவுக்குக்கு, பூந்தமல்லி நீதிமன்ற நடுவர், 30 நாட்களுக்கு மதுரவாயல் காவல்நிலையத்தில் கையொப்பம் இட வேண்டும் என்ற நிபந்தனையோடு பிணை வழங்கினார்.

 

சவுக்கு, சிறையிலிருந்து வெளி வந்த பின், மதுரவாயல் காவல்நிலையத்தில் கையொப்பம் இடச் சென்ற போது, அங்கே இருந்த காவலர்கள், “அய்யா வந்ததும் பார்த்து விட்டு போங்கள்“ என்று கூறினர். காலை 9.30 மணி முதல், 12 மணி வரை, அய்யா வரவேயில்லை.   அடுத்து ஒரு பொய் வழக்குக்கு தயாரிப்பு வேலைகளை செய்கிறார்கள் என்று உணர்ந்த சவுக்கு, அங்கிருந்து வெளியேறி, அதற்குப் பிறகு கையொப்பம் இடவேயில்லை.

காவல்துறையால் கைது செய்யப் பட்டு, நிபந்தனைகளை நிறைவேற்றாத எத்தனையோ வழக்குகள், மதுரவாயல் காவல்நிலையத்திலும், பல்வேறு காவல்நிலையங்களிலும் நிலுவையில் இருந்தாலும், சவுக்கின் வழக்கில் மட்டும், கையொப்பம் இடாததால், பிணையை ரத்து செய்யுமாறு, பூந்தமல்லி நீதிமன்றத்தில், மதுரவாயல் காவல் ஆய்வாளர் தமிழ்வாணன், மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

 

இந்த மனு விசாரணைக்கு வந்த போது, சவுக்கு சார்பாக, நடந்த உண்மைகளை எடுத்துக் கூறி, உயர்நீதிமன்றத்தின் அருகில் உள்ள, எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் கையெழுத்திட, சவுக்கு தயார் என்றும், நிபந்தனையை மாற்றி உத்தரவிடுமாறும் மனு செய்யப் பட்டது. இந்த மனுவுக்கு, காவல்துறை இன்று வரை மனு தாக்கல் செய்யாமல், இழுத்தடித்துக் கொண்டு உள்ளனர். இதனால், வாரம் ஒரு முறையாவது, பூந்தமல்லி நீதிமன்றம் சென்று அரை நாளுக்கும் மேலாக காத்துக் கிடக்க வேண்டியுள்ளது.

 

ஆக, இந்த வழக்கிலும், நெருக்கடி கொடுக்க வேண்டும் என்பது அடுத்த திட்டம்.

 

சவுக்கின் கணினியை ஹேக் செய்ய பிரத்யேகமாக பிறைசூடிய மாதவன் என்ற தொழில் நுட்ப உதவி ஆய்வாளர் நியமிக்கப் பட்டுள்ளார்.   இந்த பிறை சூடிய மாதவனுக்கு முழு நேர வேலை அடுத்தவர் கணினியை ஹேக் செய்வது, கணினிக்கு வைரஸ் அனுப்புவது, WORM மற்றும் TROJAN அனுப்பி, கணினியிலிருந்து பாஸ்வேர்டை திருடுவது, தவறான மின்னஞ்சல் அனுப்பி அடுத்தவர்களை சிக்கலில் மாட்டி விடுவது, இது மட்டும் தான்.

 

இந்த பிறை சூடிய மாதவன், ஜாபரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளார்.   சாதாரண உதவி ஆய்வாளரான இவருக்கு, ஜாபர் சேட், குளிர் சாதன வசதி உள்ள காரை வழங்கியுள்ளார்.   இவர் செய்யும் சிறப்பான வேலைகளுக்காக மாதந்தோறும், 20,000 ரூபாய் ரகசிய நிதியிலிருந்து இவருக்கு வழங்கப் படுகிறது.

 

அடுத்த நபர், சார்லஸ் என்பவர். இவர் தமிழ்நாடு சிறப்பு காவல் படையைச் சேர்ந்த ஆய்வாளர். இவருக்கு முழுநேர வேலை Surveillance எனப்படும், ஆட்களை பின்தொடரும் வேலை. இவரைப் பற்றிய கூடுதல் தகவல், ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளை பின் தொடர்ந்து, அவர்கள் ரகசியமாக செல்லும் இடங்களை அறிந்து, அத்தகவலை ஜாபர் சேட்டிடம் சொல்லுவது மட்டுமல்லாமல், சம்பந்தப் பட்ட அதிகாரிகளை மிரட்டி பணம் பறிப்பார் என்பதுதான் அது.

 

இந்த சார்லஸ், சவுக்கை 24 மணி நேரமும் பின் தொடரும் படி பணிக்கப் பட்டுள்ளார் என்று தகவல்கள் கூறுகின்றன.   இந்த நபர், சவுக்கை பின் தொடர்ந்து கொடுத்த அறிக்கை நேற்று நடந்த கூட்டத்தில் விவாதிக்கப் பட்டுள்ளது.

 

இந்த அடிப்படையில், உயர்நீதிமன்றத்தின் விடுமுறை நாட்களுக்குள்ளாகவே சவுக்கை ஏதாவது ஒன்று செய்து, சவுக்கை ஒழித்தே தீர வேண்டும் என்று முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

சவுக்கு, சவுக்கின் நண்பர்கள் என்று அத்தனை பேரின் தொலைபேசிகளும் ஒட்டுக் கேட்பு வளையத்தில் கொண்டு வரப் பட்டுள்ளன.

1

 இவர்களின் இந்தத் திட்டங்களுக்கெல்லாம், சவுக்கின் பதில் என்ன என்பதை பல முறை சொல்லியும், ஜாபர் சேட்டுக்கு புத்தி வரவில்லை என்றால் என்ன செய்வது ?

 

ஜாபர்சேட்டைப் போலவும், சுனில் குமாரைப் போலவும், குருமாராஜை போலவும், ராதாகிருஷ்ணனைப் போலவும், சவுக்குக்கு கோடிக்கணக்கான சொத்துக்கள் ஏதும் கிடையாது. அதனால், அதைப் பாதுகாக்க வேண்டும் என்ற அச்சமும் கிடையாது.   “காதற்ற ஊசியும் வாராதுகண் கடைவழிக்கே“ என்ற உண்மை சவுக்குக்கு நன்றாகவே தெரியும்.

 

ஜட்டி கூட இல்லாமல், இரவு முழுவதும் காவல்துறையினரிடம் அடி வாங்கிய பிறகு, வேறு என்ன அவமானத்தை சவுக்குக்கு செய்து விட முடியும் என்று நினைக்கிறீர்கள் ஜாபர் சேட் ?

 

k2

சவுக்கிடம், வாக்குமூலம் வாங்கி, உங்கள் எதிரியான அந்த உயர் அதிகாரியை தொலைபேசி ஒட்டுக் கேட்பு வழக்கில் சிக்க வைக்கத் தான் அந்த அடி என்பது சவுக்குக்கு தெரியாதா ?   அந்த அதிகாரி பேரைச் சொன்னால், அடி நிற்கும் என்று சிபி.சிஐடி போலீசார் சவுக்கிடம் பேரம் பேசவில்லையா ?   அவ்வளவு அடி வாங்கிய பிறகும், எந்த அதிகாரியின் பேரையும் சொல்ல சவுக்கு மறுத்து விட்டது என்பதை, சைபர் கிரைம் டிஎஸ்பி பாலு சொல்லவில்லையா ? அதற்கு பிறகும், உண்மை கண்டறியும் சோதனை என்று பெங்களுரு அழைத்துச் செல்ல முயன்ற உங்கள் அறிவீனத்தை என்னவென்று சொல்வது ஜாபர் சேட் ? அவ்வளவு அடி வாங்கியும் சொல்லாத உண்மையையா சோடியம் பெண்டதால் சொல்ல வைக்கப் போகிறது ?

 

ஏற்கனவே, மதுரவாயல் காவல்நிலையத்தில் ஒரு பொய்வழக்கு போட்டு, கடுமையான பின்னடைவைச் சந்தித்தீர்களே….. சவுக்கின் கைதுக்குப் பிறகு, சவுக்கு அடைந்த பாப்புலாரிட்டியை    பார்த்தீர்களா ?   முன்பு சவுக்கு என்பது தனி நபர். இன்று சவுக்கு ஒரு இயக்கம்.   சவுக்கின் வாசகர்கள் சவுக்கின் மீது பொழியும் அன்பைப் பார்த்தீர்களா ?   இந்த அன்பை மீறி சவுக்கை என்ன செய்து விடமுடியும் என்று நினைக்கிறீர்கள் ஜாபர் சேட் ?

 3

உங்களுக்காகவே, புனித குரானில் ஒரு அற்புதமான வாசகம் இருக்கிறது ஜாபர் சேட். நீங்கள் படித்திருக்க மாட்டீர்கள்.   ஏனென்றால் உங்களுக்கு உங்கள் சொத்துப் பத்திரங்களையும், அடுத்தவர் உரையாடலை ஒட்டுக் கேட்கவுமே நேரம் பத்தாது… குரான் படிக்க எங்கிருந்து நேரம் இருக்கப் போகிறது….

 

“நீங்கள் எங்கிருந்தாலும் மரணம் உங்களை அடைந்தே தீரும். நீங்கள் உறுதிமிக்க கோட்டைகளில் இருந்தாலும் சரியே ! “

 

திருக்குர் ஆன் 4: 78

 

சுனில் குமார்…. உங்களின் சாயம் வெளுத்துப் போய், ராஜா வேஷம் கலைந்து போனதில் உங்களுக்கு இருக்கும் கோபத்தை புரிந்து கொள்ள முடிகிறது. அதனால் மீண்டும் மீண்டும் தவறு செய்யாதீர்கள். பகவத் கீதை படித்திருப்பீர்கள். இந்த வாசகத்தை நினைவு கூறுங்கள்

 

“Delusion arises from anger. The mind is bewildered by delusion. Reasoning is destroyed when the mind is bewildered. One falls down when reasoning is destroyed.”

 

ஜாபர் சேட்…..   சவுக்கு உங்களுக்கு சுட்டிக் காட்ட விரும்புவது மாவோவின் மேற்கோளை…

 

மரணம் பொதுவானது..

சில நேரங்களில் இறகை விட லேசானது
சில நேரங்களில் மலையை விடக் கடினமானது.
மக்களுக்காக வாழ்ந்து மடிதல் என்பது
மலையை விடக் கடினமானது.
ஏகாதிபத்தியத்திற்கும், எதேச்சதிகாரத்திற்கும்
அடிமைப் பட்டுச் சாவதென்பது
இறகை விட லேசானது.
ஆக மரணம் பொதுவானது.

 

மற்றொன்றையும் நினைவில் வையுங்கள் ஜாபர் சேட்.

Jaffar_Sait_2

 மாற்றத்தை தவிர மாறாதது எதுவுமேயில்லை.   உங்கள் பதவி உட்பட.

 

காமராஜுக்கும், ராதாகிருஷ்ணனுக்கும், எந்த மேற்கோளையும் சவுக்கு காட்ட விரும்பவில்லை. ஏனென்றால், இவர்கள் இருவருமே, தங்களை மிகப் பெரிய அறிவாளிகள் என்று நினைத்துக் கொள்பவர்கள். இவர்களுக்கு தெரியாதது ஒன்றுமே இல்லை என்று நினைப்பவர்கள். அதனால், இவர்கள் அழிவை இவர்களே தேடிக் கொள்வார்கள்.

 

Comments  

 
0 #131 Thamizhachi 2011-05-06 02:29
Savukku is popular in USA too. Please register in Facebook /twitter/orkut..network is very powerful.
Quote
 
 
0 #130 sanakkiyan 2011-03-16 17:30
Thiru savukku..... arasial vathigal enna sonnalum athu unmai endru makkal ninatha kalam malai earivittathu.avargalin thuduppu athigarigala mattum enna vanathil iruntha vanthargal? enna seithalum makkal ettrukolla...thookathil pala varudam iruntha neethi mandram kuda ippothu indiavil vilithukondathu , neethi mandra nadavadikaigal athai thelivu paduthi ullathu........iruthiaga nam savukkukku sollum karuthu..siru Nari olam kettu singam thayangi vidalamo? Thaarnthu othungi vidalamo? arabu nadugalin makkal puratchiai antha MAAAKKALUKKU ninaivu paduthungal..
Quote
 
 
+1 #129 Raja Ponpandian 2011-02-13 01:24
Savukku.....please take care.....these fellows are bastards they will anything for money & posting.......bitches.......
Quote
 
 
+1 #128 ravikumar99 2011-01-27 17:38
Quoting VIJAY_USA:
Hello - I see lot of good souls from USA writing here. Why don't we all connect to a group, and discuss what best we can do to support Savukku? Think we work smarter than harder to be more efficient! Interested please come forward here and I will suggest the ways to connect! Always a group rather than individuals produces results faster. Common guys, lets put our 2 cents to Savukku's noble efforts...


Savuku must me in Facebook & Twitters.

Saukku is popular in UK aswel.
Quote
 
 
0 #127 ravikumar99 2011-01-27 17:36
Yow Savukku, Nee Indiavin Wikileak.

Long live your service.

In May Amma will put Jafer in the cell and give the same treatment you got.

Every dog has its day.

Jafer thinks he is the CM of TN.
Quote
 
 
0 #126 veerabagu 2011-01-07 11:03
sir,

Be Brave
Quote
 
 
0 #125 ArunPrince 2011-01-07 09:26
இவனுக முஞ்சிய பார்த்தாலே IAS/ IPS தேர்வில் வெற்றி பெற்று வந்த மாதிரி தெரியவில்ல. எல்லாம் தமிழகத்தின் தலையெழுத்து டா சாமி. மூஞ்சே பார்த்தாலே பொம்பளே மாதிரி இருக்கனுங்க. இவனுக ஆபிசரம். அடங்கோயலே.
Quote
 
 
+1 #124 mahesh23 2011-01-06 02:21
/*வார வாரம் ஒரு இனைய இதழ் ஒன்று வெளியிடலாம்.
அதை வாசகர்கள் பிரிண்ட் போட்டு தமிழகமெங்கும் முடிந்த வரை வெளியிடலாம்
*/

Hats Off Savukku !!

melae ulladhai naan vazi moligaraen !!
Quote
 
 
0 #123 KANIMOLIRAJAN 2010-12-04 10:38
:lol: :lol: :lol: Today 4th december :D :D :D
Quote
 
 
+1 #122 Thondaiman 2010-11-30 16:12
We are with you savukku...
Quote
 
 
0 #121 maharaja 2010-11-25 20:38
Mr. savukku.
i'm new to this website and when i heard from my friend about savukku, i really surprised. becoz how is possible to collect all evidents for any news like that. but when i see this news i also want to do something to kill like these corrupted peoples.
Quote
 
 
+1 #120 LGR 2010-11-09 18:49
Barking dogs seldom bite...
Quote
 
 
+5 #119 ராஜேஷ் தேவேந்திரன் 2010-10-25 15:45
சவக்கு அண்ணா தேசிய தலைவர் பிரபாகரனார் சொன்னது போல அடக்கு முறையாளர்கள் போராளிகளை அழிப்பதில் காட்டும் தீவிரத்தை விட பொது மக்களின் ஆன்ம உறுதியை உடைபதில்தான் அதிக அக்கறை காட்டுகின்றனர் என்பது போல உங்கள் மீது வழக்கு போட்டு உங்களை குற்றவாளியாக காட்டவே அரசும் அவர்களின் அடிமைகளும் நினைகின்றனர் ஆகவே இப்பொழுது நமக்கு தேவை எச்சரிக்கை
Quote
 
 
+2 #118 Yavarum Nalam 2010-10-22 19:25
I hope that we all stand with you if you have any troubles by them.
Quote
 
 
+2 #117 Senthil Kumar 2010-10-22 13:44
Hats off to yourr courage..!!!
Quote
 
 
+3 #116 Saravanan Kasinathan 2010-10-20 20:07
Kolaiyar Kuttam...Kudi Kummiyadithalum
Savuku thozharae ungalai theendavum
mudiyathu...thangal ezhuthai..azhikavum mudiyathu...
Quote
 
 
+5 #115 pattukkottai mathan 2010-10-19 19:08
யேய் ஜாபர்,என்னைய காலி பண்ண நீ எவ்வளவோ முயற்சி பண்ணினாய்.நானும்சவுக்கு மாதிரிதான்.என்னைய உன்னால ஒன்னும் பண்ண முடியாது. பெயரைக் கூட மறைக்க விரும்பலை.. நான் பட்டுக்கோட்டை மதன் தான்டா பேசுறேன்.என்னைய உன்னால என்ன பண்ண முடியும்? என்மேல வழக்கு போட உனக்கு எப்படி மனசு வந்தச்சு? என்னிக்கு இருந்தாலும் உனக்கு வீழ்ச்சி உன்டு.
Quote
 
 
+2 #114 அய்யனார் 2010-10-19 05:32
உங்கள் துணிவான போரட்டம் மற்றும் உண்மைச் செய்திகளுக்கு பாராட்டுகள். எங்களின் ஆதரவு எப்போதும் உங்களுக்கே. மகாத்தம காந்தி போல் நிங்கள் இந்த போரட்டத்தில் வெற்றி அடைவீர்கள்.
Quote
 
 
+2 #113 zia 2010-10-18 18:21
pls take care.
Quote
 
 
+3 #112 charles 2010-10-17 23:36
NAKKERAN JUNIOR VIKKADAN PADIPPATHAI NIRRUTHI VITTEN...... SAVUKKAI PADIPPATHAL
Quote
 
 
+2 #111 Pradeep_P 2010-10-17 17:21
மாற்றத்தை தவிர மாறாதது எதுவுமேயில்லை ........ivanuka eppavum maramatanga
Quote
 
 
+6 #110 VIJAY_USA 2010-10-17 05:49
Hello - I see lot of good souls from USA writing here. Why don't we all connect to a group, and discuss what best we can do to support Savukku? Think we work smarter than harder to be more efficient! Interested please come forward here and I will suggest the ways to connect! Always a group rather than individuals produces results faster. Common guys, lets put our 2 cents to Savukku's noble efforts...
Quote
 
 
+4 #109 தமிழவன் 2010-10-17 03:57
வணக்கம்
இங்கு முன் வைக்கப்படும் கேள்விகளுக்கும் , சுட்டிக்காட்டப் படும் தவறுகளுக்கும்,உ ரிய பதில்தராது, மாற்றாக அதிகாரத்தின் அநீதிகளுக்கெதிர ாய் உரத்துக் குரலெழுப்பும் இதுபொன்ற சனநாயக ஆற்றல்களுக்கு சவால்விடும் அதிகார அமைப்புக்கெதிரா ய் அணிதிரள்வோம்
Quote
 
 
+2 #108 RAJESH 2010-10-16 20:06
மிக்க கவனம்! தோழரே! கவலையாயிருக்கிற து
Quote
 
 
+2 #107 SHA 2010-10-16 17:35
ARTICLE THROWS LIGHT ON THE OTHER SIDE OF JAFFAR AND OTHERS.
Quote
 
 
+3 #106 Senthil.S 2010-10-16 17:17
Dnt worry Mr.Savukku sir.....

Nobody tocuh you becoz you are real hero.
சவுக்கு சார்...உங்கள் பின்னால் நாங்க இருக்கிறோம்.சும்மா இந்த வெட்டி பசங்களுக்கு உங்களை பார்த்து பயம் வந்துடுச்சு.சார் என்னோட request என்னன்னா நீங்க magazine ah வெளியிடுங்க....அதுக்கு என்ன அமௌன்ட் ஆனாலும் நாங்க தருவதற்கு ரெடி சார்.becoz
மக்களுக்கு உண்மை தெரியனும்..முதலில் எந்த பத்திரிகை உண்மை யா இருக்குதுனு மக்கள் இப்போ எதை நம்புறதுனே தெரியலே.Becoz அவங்க அவர்களுக்கு எது லாபமோ அதை வைத்து பணம் பண்ணுறாங்க..உண்மை செத்து போச்சு சார்
நீங்க மட்டும் தான் உண்மையாக ஆதாரமாக எழுதுறீங்க..so please consider my request.
இப்படிக்கு
மக்களை பற்றி கவலைப்படும் உங்களை போல் ஒரு பைத்தியகாரன்
Senthil.S
Quote
 
 
+2 #105 கடலூர் எழில் 2010-10-15 23:31
கவலைப்படாதீங்க சவுக்கு இந்த நன்னாறிப் பயலுக ஒரு நாள் இல்லை ஒரு நாள் வருத்தப்படும் நேரம் வரும், தர்மம் ஒரு நாள் வென்றெத் தீரும்.
Quote
 
 
+2 #104 Tamizhan 2010-10-15 12:19
Hats Off to your genuine work...Very ashamed to see this idiotic behavior of police criminals...!
Quote
 
 
+3 #103 பரமன்குறிச்சி 2010-10-15 10:28
வார வாரம் ஒரு இனைய இதழ் ஒன்று வெளியிடலாம்.
அதை வாசகர்கள் பிரிண்ட் போட்டு தமிழகமெங்கும் முடிந்த வரை வெளியிடலாம்.
Quote
 
 
+2 #102 brother 2010-10-14 22:28
I am totally upset
Quote
 
 
+2 #101 tamilneyan 2010-10-14 20:52
தோழர் சவுக்குக்கு நன்றி..அநீதி அழியும் வரை போராடுவோம்,, நீதி பெரும் வரை துணை நிற்போம். தமிழ்நேயன்.....
Quote
 
 
+7 #100 Rk.Guru 2010-10-14 13:40
சவுக்கு, இவ்வளவு இன்னல்களை பார்த்திருக்கிற தா, பார்த்தும் கொண்டிருக்கிறதா ...என்று நினைக்கும் போது என் நினைவே அச்சத்தின் பிடியில் இருக்கிறமாதிரி ஒரு நிலையை ஏற்படுத்துகிறது ....ஆனால் இதில் அச்சமே உங்களை கண்டு அஞ்சும் என்பதை உங்கள் எழுத்துகள் நிரூபிக்கிறது...உங்கள் மன உறுதி அந்த பிரபாகரனையே எங்களுக்கு நினைவுட்டுகிறது ....போரை கண்ட பிரபாகரன் தற்காலிகமாக பின்னடைவு காணலாம் ஆனால் உங்களுக்கு 'ஏகாதியபத்திய எதிர்ப்பு' என்ற உங்கள் எழுத்து போரில் உங்களுக்கு நிச்சயமாக பின்னனடைவு எனபதே இல்லை....

சவுக்கை இன்னும் வேகமாக சுழற்றுங்கள் உங்கள் கரங்களை வலுபடுத்த நாங்கள் இருக்கிறோம்....என்றும் உங்களை போல் மனஉறுதியுடன்.........
Quote
 
 
+2 #99 kayamozhi 2010-10-14 12:37
you only face your problems at the moment, so, edugate us to work against that evil forces in that situation. it will be in our leavel.eg; financial help, wallposters,bit noteices..or any other new methods. because we dont know how to react... this is all of our problem.
Quote
 
 
+5 #98 ரோஸ்விக் 2010-10-14 09:42
அனைவரும் தங்களது வலைத்தளங்களின் முதல் பக்கத்தில் சவுக்கின் தல முகவரியை அனைவரின் பார்வைக்கும் வைப்போம். நீளட்டும் சவுக்கின் சுழல் ஆரம்...
Quote
 
 
+3 #97 Sakthi 2010-10-14 05:54
Savukku,

My god they can do anything. Pls. Be careful. I learned from people that even people couldn't save Seeman's Arrest. You have to be really really careful. Never go alone any wher Pls.........
Quote
 
 
0 #96 ராஜராஜன் 2010-10-14 00:03
சவுக்கு சார். இந்த கட்டுரையைப் படித்ததும், ஒரு விஷயம் உங்களுக்கு சொல்லப் போறேன். உங்க சவுக்கும் தினத்தீங்கற பிளாக்ஸ்பாட்டும ் ஜூனியர் விகடன் நிர்வாகத்தை ரொம்பவே பாதிச்சிருக்காம ். விற்பனையிலும் ரொம்பத் தொய்வாம். நிர்வாக இயக்குநர் ஆசிரியர் இலாகாவின் முக்கியப் பொறுப்பில் இருப்பவர்களை அழைத்து பேசியிருக்கிறார ். எல்லோரும் உங்களையும் தினத்தீ ஆசாமிகளையும் பற்றிச் சொல்லியிருக்கிற ார்கள். அவர் உங்களைப் பற்றி விசாரித்துவிட்ட ு, ஜாபர்சேட் மற்றும் குருமாராஜிடம் சேர்ந்து உங்களை உண்டு இல்லைன்னு பண்ணச் சொல்லியிருக்கிற ாராம். ஆனா, நீங்க எதைப்பத்தியும் கவலைப்படாம சவுக்குக்கு மேட்டர் எழுதிகிட்டு இருக்கீங்க. என்ன செய்ய உங்களை நினைச்சா பாவமாத்தான் இருக்கு. ஆக பலரோட தூக்கம் பறிபோக காரணமா இருக்கும் உங்களோட தூக்கம் சில நாட்களுக்குப் பறிபோகப் போகுது. பார்த்து ஜாக்கிரதையா இருங்க.
Quote
 
 
+4 #95 nellai nanban 2010-10-13 23:43
சவுகு நீதாண்டா உண்மையான தமிழ்ன். அல்லக்கைகளின் அட்டுழியைங்கலை அவுத்து காட்டும் அமரன். நம்ம தலைவர் style ல சொன்னா துனிவே துனை.
Quote
 
 
+1 #94 MDMK 2010-10-13 23:36
We all are with you....
Quote
 
 
0 #93 முத்து 2010-10-13 22:45
#90 tsekar 2010-10-13 19:26
உங்கள் தைரியம் பாராட்டுகூரியது !!!
யாராவது உங்களை அடித்தால் - ADMK அம்மா ஆட்சிக்கு வந்து அவர்களை -அடிப்பார்
நண்பர்களே, அப்படியெல்லாம் நம்பி ஏமாந்து விடாதீர்கள்.
சவுக்கு உண்மைகளை எழுதினால் அம்மா மட்டும் விட்டு விடுவாரா..?
ஒட்டுமொத்த அரசியல் மாற்றம் வந்து அதிகாரம் (ஜனநாயக!) புரட்சியாளர்கள் கைகளில் வரும்வரைக்கும் சவுக்குக்கு சோதனைதான்.. இது என் தனிப்பட்ட கருத்து.
Quote
 
 
+2 #92 jahangeer.m.b. 2010-10-13 22:42
savukku sir, ungal mana thairiyathay paratugiren. seekkiram oru pathirigai arambiyungal. ungalakku atharavuu alikka pala nalla ullangal thayaraga irukkindrana.
Quote
 
 
+2 #91 கோவை தமிழன் 2010-10-13 20:28
நண்பர் சேகர் அவர்கள் என்ன தெரிந்து கூறுகிறாரா? இல்லை காமெடி சைகிரார? இந்த கேடிகளை விட அந்த ரௌடி பரவா இல்லை என்கிறாரா?
Quote
 
 
-3 #90 tsekar 2010-10-13 19:26
உங்கள் தைரியம் பாராட்டுகூரியது !!!

யாராவது உங்களை அடித்தால் - ADMK அம்மா ஆட்சிக்கு வந்து அவர்களை -அடிப்பார்
Quote
 
 
+1 #89 tsekar 2010-10-13 19:23
உங்கள் தைரியம் பாராட்டுகூரியது !!!

யாராவது உங்களை அடித்தால் -கடவுள்-அவர்களை -அடிப்பார்
Quote
 
 
+4 #88 mk 2010-10-13 17:34
Quoting VIJAY_USA:
Savukku - as I suggested earlier please launch the english version of your work as soon as possible. Then its our duty to take it to the rest of INDIA. If you want you can be out of Inida and stay a our home for a safe period! Till this government is kicked out! I am serious brother!


Dear Mr.Vijay,

I am proud of you, for save savukku.
Quote
 
 
+3 #87 durai 2010-10-13 16:24
darmasamsdanaya sampavamy uke uke
Quote
 
 
+4 #86 rukku 2010-10-13 15:40
இது தமிழக முதல்வரின் கவனத்திற்கு,ஒரு வாசகனின் கடிதம் ,நாட்டில் சமூகச்சீர்கேட்ட ிற்கு அதிகாரிகளே முழுக்காரணம் என்பது காலாகாலமாக "சந்தேகப்பட்டுவந ்த" உண்மை,இவற்றை பத்திரிகைகள் ஊடகங்கள் வெளிப்படுத்திவந ்திருந்தாலும் கண்டுகொள்ளாதவைந ிறையவுண்டு.இன்று ஆதாரங்களின் அடிப்படையில் சவுக்கு இணையத்தளத்தால் வெளியிடப்படும் தரவுகளை உண்மையா பொய்யா என்று பகிரங்க விசாரணை நடாத்தவேண்டிய பொறுப்பு மக்களின் வாக்குப்பெற்று ஆட்சியிலிருப்பவ ர்களுக்கு உண்டு.அதை சரியாகச்செய்யாம ல் மூடிமறைக்க அல்லது சம்பந்தப்பட்ட ஊடகத்தை "இருட்டு மாநாடு நடத்தி" ஒடுக்க நினைத்தால்,முழு க்குற்றத்திற்கு ம் ஆட்சியிலிருக்கு ம் தமிழகமுதல்வரே காரணகர்த்தா (மீதி அடுத்த பக்கத்தில்)
Quote
 
 
+5 #85 rukku 2010-10-13 15:38
என்பதை அவர் ஒப்புக்கொண்டவரா கின்றார்.எனவே இன்று ஆட்சியிலிருக்கு ம் தமிழக அரசின் முதல்வர் திரு மு.கருணாநிதி, அவர்கள் பாரபட்சமற்ற விசாரணையை தொடங்கவேண்டும். தகவல் அறியும் சட்டத்தின் அடிப்படையிலும் ஊழல்களை வரவேற்கமுடியாத சமூக நோக்கோடும் அரசாங்கத்தின் அசட்டைப்போக்குக ்காரணமாகவும் சவுக்கு மட்டுமல்ல இன்னும் பல ஊடகங்கள்பிறந்து சீரழிவுகளை தெருவுக்கு கொண்டுவர முயலுமுன் அரசுதலையிட்டு நீதியை நிலைநாட்டி கட்டுப்பாட்டுக் குள் கொண்டுவரும் என நம்புகிறோம்.தவறும் பட்த்தில் ஒழுக்கமற்ற அதிகாரிகளை தன்நலனுக்காக வளர்த்த குற்றம் முழுவதும் ஆட்சியாளர்களையே சென்றடையும்,"பொதுமகன்"
Quote
 
 
+2 #84 vendan 2010-10-13 14:35
Dear Savukku,
You are doing great job, All we are supporting you
Quote
 
 
+3 #83 Jagan . R 2010-10-13 14:20
சவுக்கு, உங்களின் மன தைரியத்தை பாராட்டுகிறேன்.இப்பொது நீங்கள் மிகவும் கவனமாக இருக்கவேண்டும். வெறி பிடிச்ச நாய்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.தயவு செய்து கோர்ட்டில் முன் ஜாமீன் பெற்றுக் கொள்ளுங்கள், இல்லையெனில் எதாவது ஒரு வழக்குரைனரிடம் ஆலோசனை பெறுங்கள், சவுக்குக்கு பின் பல்லாயிரக்கணக்க ான சமுக அக்கறையுள்ள இளைஞர்கள்/ஆர்வலர்கள் இருக்கிறார்கள்.
சவுக்கை எவரும் இனி அழிக்க முடியாது
சவுக்கு தவறு ஏதும் செய்யாதவரை..
எங்கள் ஆதரவு எப்போதும் உண்டு.
மனசாட்சி உள்ளவர்கள் அனைவரும் உங்கள் பின் எப்போதும் உண்டு.

Dubai Jagan.
Quote
 
 
+3 #82 Anbu 2010-10-13 13:25
Dear Savukku,
I started read your articles just 1 month ago, all the articles are very nice.
I used to wonder who are you, how are you getting these much informations with solid proofs, are you a single man, do you have a network (something like ACF in movie Ramana :-) )
Whatever you are, whoever you are.., but you are making revolution against corruptions, political power misuse. And you are relieving the real faces of every politicians and officials.
I hope you writings will me the difference in our society. And it suppose to, at least for your sufferings.
"Theivathaal aagatheninum muyarchi than mei varutha kooli tharum"
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 57 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday1704
mod_vvisit_counterYesterday18770
mod_vvisit_counterThis week33917
mod_vvisit_counterLast week95998
mod_vvisit_counterThis month267964
mod_vvisit_counterLast month382199
mod_vvisit_counterAll days13184331