முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
சொல்வதெல்லாம் உண்மை பாகம் 14 அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 36
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
புதன்கிழமை, 31 ஆகஸ்ட் 2011 07:50

வாங்கருவா போல மீச வச்சு’ என்று பாரதியைப் பாடுவார்கள். இவரும் பாரதியைப்போல மீசை வைத்திருப்பவர்தான். ஆனால், பாரதியாக அல்ல; சாரதியாக தன்  வாழ்க்கையைத் துவங்கியவர். லாரி ஓட்டத் தொடங்கி, பின்னர் லாரி புரோக்கராக தன் வாழ்க்கையைத் தொடங்கியவர். இவருடன் லாரி புரோக்கராக இருந்தவர்கள்  இப்போது பஸ் புரோக்கராகத்தான் புரமோஜன் பெற்றுள்ளனர்.

ஆனால், இவரோ ஒட்டுமொத்த பஸ்ஸையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார். தம்பி உடையான் படைக்கஞ்சான் என்பார்கள். இவருக்கும் அப்படித்தான். இவரின்  தம்பிகளால்தான் எல்லா படைகளும் அஞ்சிக் கிடந்தன. அண்ணன், தம்பிகள் நால்வர் என்றாலும் முத்திரை பதித்த மூன்று பேர் மும்மூர்த்திகளாய் மகுடம் சூட் டிக்கொண்டனர். அரசர்கள் போலவே அவர்கள் வலம் வந்ததை அந்த மாவட்ட மக்களே அஞ்சி நடுங்கிப் பார்த்தார்கள். சோழ மன்னர்கள் ஆண்ட பூமியை இந்த  மூவரும் சூழ நின்று ஆண்டார்கள்.

ஒற்றை வழக்குக்காக விசாரணைக்கு அழைத்துப்போக, வரிசையாக புகார்கள் வந்துகொண்டிருக்கின்றன.பொய் வழக்கு என்ற புலம்பலெல்லாம் இவர்கள் விஜயத்தில் பொய்யாகிப் போகும் என்கின்றனர் உடனிருப்பவர்கள். தேர்தல் முடிந்து தலைமையைப் பார்க்கப்போனபோது, ‘மலையில் இருந்த கோட்டையை வளைக்காமல் விட்டுவிட் டாயே’ என, தலைமை கேட்க, மலைத்துப் போனார் இவர். அந்த அளவிற்கு வில்லங்கங்களை விதைத்து வைத்திருந்தார் இவர்.

விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டவரின் மனசாட்சியிடம் பேசினோம். வாக்குமூலம் கிடைத்தது.

தமிழகத்தின் மையப்புள்ளி அருகில் உள்ள ஒரு நல்லூர்தான் எனது சொந்தக் கிராமம். அப்பா கதராடை அபிமானி. பக்கத்து ஊரில் ஒரு வட்டிக்கு பணம் வாங்கி, இர ண்டு வட்டிக்கு பணம் கொடுப்பார். அந்த ஒரு வட்டி விஷயத்தில்தான் ஏழு பேர் கொண்ட எங்கள் குடும்பமே வாழ்ந்து வந்தது. வறுமையின் அழுத்தத்தால் எஸ்.எஸ்.எ ல்.சி.க்கு மேலே என்னால் படிக்க முடியவில்லை. லாரி ஓட்டத் தெரியும். லாரியைப் பற்றியும் கொஞ்சம் தெரியும் என்பதால், லாரி புரோக்கர் தொழிலுக்கு வந்தேன். அங்கி ருந்த நவீன லாட்ஜின் வாசல்தான் என் வாசஸ்தலம். லாரிகளைப் பற்றிப் பேசியே வாழ்க்கையை நகர்த்தினேன். 

அங்கிருக்கும்போதுதான் கட்சிக்காரர்களின் அறிமுகம் கிடைத்தது. எங்கள் ஊரின் கிளைக் கழகச் செயலாளரானேன். பின்னர் எங்கள் மாவட்டத்தில் பவர்ஃபுல் புள்ளியாக  இருந்த தர்மராஜாவின் அறிமுகமும் கிடைத்தது. அவர்தான் என்னை கட்சியின் பாதையில் காலூன்றி நடக்க வைத்தவர். பின்னர், ஒரு காலத்தில் நான் அவரை ஓரங்கட் டியதோடு அவரின் லாரிகளைக்கூட வளரவிடாமல் ஒழித்துக்கட்டியதெல்லாம் வேறு கதை. ஆனால், ஆரம்பத்தில் அந்த தர்மராஜரின் எடுபிடியாக ஒட்டிக்கொண்டேன்.  அப்போதெல்லாம் தலைமையைச் சந்திக்க சென்னைக்குச் செல்லும் தர்மராஜா, எழும்பூரிலிருக்கும் பயணிகள் விடுதியில்தான் தங்குவார். நான் அவரின் அறைக்கு வெளியே  துண்டை விரித்துப் படுத்துக்கொள்வேன். அவர் கூப்பிட்டால் போய் டீ வாங்கி வந்து தருவேன். 

இப்படியாக அவருக்கு நான் என் விசுவாசத்தைக் காட்டிக் கொண்டிருக்க, அவருக்கும் மாவட்டத்தில் செல்லமான ராஜாவுக்கும் அரசியல் போட்டி இருந்து வந்தது. அந்த  நேரத்தில் தனது கைத்தடிகளை வளர்த்து, தனது செல்வாக்கை பெருக்கிக்கொள்ள நினைத்த தர்மராஜா, எனக்கு எங்களூரில் போட்டியிட சீட் வாங்கித் தந்தார். அதுதான்  எங்கள் மாவட்டத்தில் கட்சியை அழிக்க அவர் போட்ட பிள்ளையார்சுழி என்பது அப்போது அவருக்குத் தெரியாது. வெற்றி பெற்ற வேகத்தில் சுழல் விளக்கும் எனக்குத்  தரப்பட்டது.

எனக்கு அங்கீகாரம் கொடுத்ததர்மராஜாவிடமிருந்து எனக்கு முன்னணியிலிருந்த ஒவ்வொருவரையும் கட்சியிலிருந்து ஓரங்கட்ட வைத்தேன். எங்கள் மாவட்டத்தைப்  பொறுத்தவரை தர்மராஜா மற்றும் அவரின் வாரிசுகள், பூவானவர், கிருஷ்ணபாலன், தங்கமான ராசா, கீர்த்தி, செல்வமான ராசா, வாசி என ஜாம்பவான்கள் இருந்தனர். நான்  தலையெடுத்த பிறகு அனைவரையும் கட்சியில் அடையாளம் காட்டப்படாமல் அழித்தேன். பரணி பாடியவர் மட்டும் முக்கிய வாரிசுடன் கொஞ்சம் ஒட்டிக் கிடந்தார். அந் தரங்கங்களை அவிழ்த்துவிட்டு அவரையும் ஓரங்கட்டினேன். அதன்பிறகு ஒட்டுமொத்த கட்சியையும் என் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தேன்.

எங்கள் கட்சியிலிருந்து புயல் புறப்பட்டபோது முக்கிய புள்ளிகள் அனைவரையும் கட்சித் தலைமைக்கு எதிராக திரட்டி சென்னைக்கு வண்டியேற்றியதே நான்தான். ‘எ ல்லோரும் போய்க்கிட்டிருங்க... நான் மூவிங்கில் ஏறிக்கிறேன்’னு சொல்லித்தான் அவர்களை அனுப்பினேன். நான் சொன்னதை நம்பி அந்த வண்டியில் ஏறியவர்கள் எல் லாம் போன வேகத்திலேயே காணாமல் போனார்கள்.

நானோ இங்கு தனிக்காட்டு ராஜாவாக முடிசூட்டிக் கொண்டேன். என் தம்பிகள் இருவரையும் இளவரசர்களாக மகுடம் சூட்டி வைத்தேன். ஒரு தம்பி ஜெயமான ராமரை  கட்சியைக் கட்டுப்படுத்தவும், கட்டப்பஞ்சாயத்து செய்யவும், மற்றொரு தம்பி சூரியனை பொய்யான மதிப்பில் மிரட்டி வாங்கிய இடத்தில் உண்மையான மதிப்பில் வீடுகள் கட்டி வியாபாரத்தைப் பெருக்கவும் ஏற்பாடு செய்தேன்.

இப்போது என் வியாபாரம் பெருகி, இந்தியாவில் பல மாநிலங்களில் மட்டுமன்றி சிங்கப்பூர், மலேஷியா, இந்தோனேஷியா என உலகில் பதினான்கு நாடுகளில் பரந்து  விரிந்து கிடக்கிறது. நிலத்திற்கு அடியில் கிடைக்கும் கரியானாலும் சரி, பனைமரத்தில் கிடைக்கும் எண்ணெய்த் தொழிற்சாலையானாலும் சரி முக்கிய நகரங்களில் முக்கிய  வியாபாரி நான்தான்.

அதேபோல் தென்ஆப்பிரிக்காவின் ஒரு பகுதியான போட்ஸ்லானாவில் வெட்டி எடுக்கப்படும் வைரத்திற்கு ‘பிளட் டைமன்ட்ஸ்’ என்று பெயர். அந்தப் பகுதியில்  வைரங்களை வெட்டி எடுக்க பணியாட்கள் ரத்தம் சிந்தியும், உயிர்ச்தேசம் அதிகமாக ஏற்படுவதுமே அந்த வைரங்களுக்கு அந்தப் பெயர் வர காரணமாம். எனவே  அங்குள்ள அரசு அந்த வைரங்களை வெட்டி எடுக்க அனுமதியளிக்கவில்லை. எனவே லோக்கல் மாபியா கும்பல்தான் அங்கு கள்ளத்தனமாக வைரங்களை வெட்டி எடு த்து வியாபாரம் செய்து வருகிறது.அந்தக் கூட்டத்துடன் என் உடன்பிறப்புகளுக்கு வியாபாரரீதியான தொடர்புண்டு. மும்பை சினிமாவில் சுமார் ஐநூறு கோடியை முதலீடு  செய்யக் கொடுத்தேன். திருப்பிக் கேட்க, என் உடன்பிறப்புடன் என் முன்னாள் மீசைக்கார உதவியாளரும் சென்றபோது, மும்பையின் நிழல் உலக தாதா சோட்டா  ராஜனால் மிரட்டப்பட்டு தப்பித்தோம், பிழைத்தோம் என்று ஓடிவந்து சேர்ந்தார்கள்.

லோக்கலில் நாங்கள் சொத்து வாங்கும் ஸ்டைலே தனி. எங்கள் பகுதியில் தில்லையாடி நகரில் இஸ்லாமியர் ஒருவருக்குச் சொந்தமான நிலமும், வீடும் இருந்தது. அந்த  அப்பா மூன்று மகன்களுக்கு  பிரித்துக் கொடுக்கத் திட்டமிட்டார். அதில் கொஞ்சம்  இழுபறி இருந்தது. அந்த விவகாரம் எங்கள் காதுக்கு வந்துவிட்டது. அந்த இடத்தைப்  பதிவு செய்ய அந்த குடும்பம் ரிஜிஸ்ட்ரார் அலுவலகம் போனது. அங்கே அந்த ரிஜிஸ்ட்ரார் எங்கள் கம்பெனியிலிருந்து எழுதி சீல் போட்டு என்.ஒ.சி. வாங்கி வந்தால்தான்  பதிவு செய்யமுடியும் என்று கூறிவிட்டார். எங்களிடம் வந்த அவர்களின் நிலத்தை எனது உடன்பிறப்பு அடிமாட்டு விலைக்குக் கேட்க, கொதித்துப் போன அவர்கள்  இஸ்லாமிய இயக்கத்தவர்களை அழைத்துச் சென்று போராட்டம் நடத்தி இடத்தை பங்கிட்டு பதிவு செய்து கொண்டனர்.
அதேபோல் எங்களூரில் பரம்பரைப் பணக்காரரான முருகனின் பெயர் கொண்டவர், ஒரு ரைஸ் மில் வைத்து நடத்தி வந்தார். அவரை அழைத்து மிரட்டி அந்த ரைஸ்  மில்லை கால் பங்கு விலைக்கு முடித்துவிட்டோம். அதிநவீன ரைஸ் மில்லை அதில் எழுப்பி, தினமும் முப்பது டன் நெல்லுக்கு மேல் அங்கு அரைக்கப்படுகிறது. இதனால்  போக்குவரத்து அங்கு பெருகிவிட எதிரில் உள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்களும், மாணவர்களும் பயந்து நடுங்கிப் போய் வருகின்றனர்.

அதேபோல் எங்கள் பகுதியில் இருக்கும் புனித சிலுவைப் பள்ளியில் ஒரு அட்மிஷனுக்கு என் உடன்பிறப்பு போன் செய்தது.அந்த தலைமையாசிரியை ஒரு கன் னியாஸ்திரி. அவர் சீட் தரமுடியாது என்று கூறியிருக்கிறார். அதற்கு என் உடன்பிறப்பு அந்த சிஸ்டரை ‘நீ பள்ளிக்கு வெளியில் வந்தால் உன் துணியை எல்லாம் கழற்றி,  நிர்வாணமாக்கி நடுத்தெருவில் ஓட வைப்பேன்’ என்று மிரட்ட, அந்த விஷயம் கிறிஸ்தவர்கள் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் புனித கல்லூரிக்குச் சொந்தமான சுமார் நாற்பது ஏக்கர் நிலம் குடியான கிராமத்தில் இருந்தது. அந்த நிலத்தை எங்களுக்குத் தரும்படி கேட்டோம். அவர்கள்  தரவில்லை. அந்த இடத்தை மடக்கிப் போட ஆட்களை ஏற்பாடு செய்தோம். அவர்கள் நீதிமன்றம் சென்று உத்தரவு வாங்கிவந்து காம்பவுண்டு சுவர் போட போலீஸ்  உதவியுடன் வந்தனர். வந்த பாதிரியார்கள், உதவியாளர்கள் என அனைவரும் எங்கள் ஆட்களால் வெட்டப்பட்டனர்.அதுகுறித்து விசாரிக்கக்கூட எந்த போலீஸாரும்  முன்வரவில்லை. காரணம், முன்னாள் உளவு எங்கள் பாக்கெட்டில் கிடந்ததுதான்.

அதேபோல் மரியன்னை தியேட்டரை எங்களுக்கு விற்கும்படி அதன் உரிமையாளர்கள் மிரட்டப்பட்ட விஷயம் லோக்கலில் படுஃபேமஸானது. ஊர்வசி என்ற பட் டப்பெயரால் அழைக்கப்பட்ட பழம்பெரும் நடிகையின் பெயரில் பெரிய பட்டு ஜவுளி மாளிகை எங்கள் பகுதியில் இருக்கிறது. அதன் உரிமையாளரை சந்தித்த என் உட ன்பிறப்பு அதை தனக்கு விற்கும்படி கேட்டு மிரட்டியிருக்கிறார்.அவர் மதுரைப் புள்ளிக்கு கொஞ்சம் தொடர்புடையவர். இதுகுறித்து மதுரைப்புள்ளியிடம் பேசியிருக்கிறார்  கடையின் உரிமையாளர். முந்நூறு கோடி ரூபாய் கேட்கும்படியும், முப்பது கோடி அட்வான்ஸ் என்றும் சொல்லும்படி அறிவுறுத்தியது மதுரை. அப்படியே கூறினார்  உரிமையாளர். மறுநாள் காலையில் முப்பது கோடி அட்வான்ஸுடன் எங்கள் மக்கள் போக, அங்கே ஏற்கெனவே மதுரை கும்பல் காத்துக் கொண்டிருந்தது.அந்த முப்பது கோடியை வாங்கிக்கொண்ட மதுரை கும்பல் முக்கியப்புள்ளிக்கு போன் போட்டுக் கொடுத்தது. முப்பது போக மீதம் இருநூற்று எழுபதை மதுரையில் கொண்டுவந்து கொடு த்துட்டு பதிவு செய்துக்க என்று அங்கிருந்து கூறப்பட கப்சிப் என வந்துவிட்டனர் எங்கள் ஆட்கள். முப்பது கோடியை முதலில் கொடுத்துவிட்டு, ஐம்பது கோடியில்  கடையை அமுக்கிவிடலாம் என நாங்கள் கணக்குப் போட, முப்பது போனதுதான் மிச்சம்.

தனது துணையின் பெயரில் ஒரு கம்பெனியை வைத்திருக்கிறார் உடன்பிறப்பு. அந்த கம்பெனிக்கு அவர்தான் எம்.டி. ஆனால், அவரோ எங்கள் மாவட்டத்துக்கே  எம்.டி.யாகத்தான் நடந்துகொள்வார். கலெக்டரிடம் பேசினாலும் சரி, போலீஸ் கமிஷனரிடம் பேசினாலும் சரி - எம்.டி.ன்னு சொல்லித்தான் பேசுவார். அந்த எம்.டி. போட்ட  ஆட்டத்தால்தான் இப்போது எம்ட்டியாகி நிற்கிறது கட்சி.

தில்லையாடி நகரில் உள்ள டென்னிஸ் கோர்ட்டில் அவர் சுற்றிச் சுழன்று பஞ்சாயத்து செய்யும் ஸ்டைலே தனிதான். கட்சியிலிருந்த எத்தனையோ உடன்பிறப்புகளை ஒழி த்துவிட்டு எனது இந்த உடன்பிறப்பை வளர்த்தேன்.இந்த உடன்பிறப்பு இப்போது கட்சியை ஒழித்துக்கொண்டிருக்கிறது.

ஆனாலும்,எனக்கு கீழுள்ள கட்சிக்காரர்களை நான் நன்றாகவே கவனித்துக்கொள்வேன். மணல், பார் போன்றவற்றிலிருந்து வரும் பணத்தை கட்சிக்காரர்களுக்கு பதவி  வாரியாக கவரில் போட்டுக் கொடுத்தனுப்புவேன். எனவே யாரும் என்மீது தலைமைக்கு அதிகமாக புகார்கள் அனுப்புவதில்லை.

ஆனால், எனக்கு சுழல் விளக்கு கொடுக்கப்பட்ட புதிதில் ஆங்கிலம் அவ்வளவாக எழுதப்படிக்கத் தெரியாது என்பதால் பட்டம் படித்த என் உறவுக்கார பையனை எனக்கு  உதவியாளராக வைத்துக்கொண்டேன். அப்போது அவருக்கு மாதச் சம்பளம் இருநூற்று அறுபது ரூபாய். ஏசக்குமரனான அவரோ, பின்னாளில் என்னைவிட உயரமாக  வளர்ந்து, என்னைவிட பெரிய மீசையை வைத்துக்கொண்டு டெல்லியில் சுழல் விளக்கில் வலம் வருகிறார். அவருக்காக ராஜபாரதியிடம் கூறி நடிக்கும் வாய்ப்பை வாங்கிக்  கொடுத்ததும் நான்தான். ஆனால் இன்று எனக்கு அரசியல் எதிரியாகிவிட்ட அவர்தான் என்னைப் பற்றி தலைமையிடம் சில குற்றச்சாட்டுகளை ஆதாரங்களுடன் கூறி  வருகிறாராம்.

அவரைப் பேசச் சொன்னாலும் அவரின் மனசாட்சியும் அதிகமாகப் பேசும். இத்தனை குற்றச்சாட்டுகளுக்கு மத்தியிலும் எங்கள் ராஜாங்கம் அசைக்கப்படாமல் இருந்தது என்றால் அதன் முக்கிய காரணம் என் கிஸ்தி விநியோகம்தான்.வீரபாண்டிய கட்டபொம்மன் மாதிரி மீசை வைத்திருந்தாலும், திரை, வரி, கிஸ்தி என நான் வசனமெல் லாம் பேசியது இல்லை. ஆரம்ப காலத்திலிருந்து ஒலிமுரசு உட்பட எட்டுப் பேருக்கு என் காணிக்கையை சமர்ப்பித்தே காலத்தை ஓட்டி வந்தேன்.

எனக்கு முதன்முதலில் சுழல் விளக்கு கொடுக்கப்பட்டபோது திரையின் உச்சத்திலிருந்த பசுதமி எனக்கு பரிச்சயமாகிவிட்டார். கொஞ்ச நாட்கள் என்னோடு குடும்பம் நட த்திய அவருக்கு சில கோடிகளை கொட்டிக் கொடுத்தேன். தோல்வியடைந்து, நான் தொழில் பார்க்கும்போதும் என் எண்ணெய் வியாபார இடத்துக்கே அவர் தேடி வரத்  தொடங்க, என் உடன்பிறப்பு ஜெயமானவரால் மிரட்டி அனுப்பப்பட்டார் அவர். அதேபோல் மாவட்ட சங்கீதம், அழகு நிலைய அன்னம் என அடிக்கடி பலர் என்  பாதையில் கடந்து செல்வார்கள்.

அதேபோல் என் சூரிய தம்பியின் சேட்டைகளோ சொல்லி மாளாது. உலகப் பாதிரியார், முக்கிய வாரிசு, முக்கியதுணை, தேர்வாணையப்புள்ளி என பலரின் பணத்தை  முதலீடு செய்ய வைத்து அப்படியே அமுக்கிப் போட்ட அறிவுஜீவி.

ஒருவரை வழக்குப் போட்டு உள்ளே தள்ளி ஜெயிலுக்குள்ளே போய் மிரட்டி சொத்தை எழுதி வாங்கி வரும் திறமையெல்லாம் ஜெயமான உடன்பிறப்புக்கு உண்டு.

ஆனால்,இப்போதோ எழுதி வாங்கிய சொத்துக்காக நாங்கள் சிக்கியிருக்கிறோம். அது மட்டுமின்றி ஏற்கெனவே குற்றப்பிரிவில் விசாரித்துவரும் இருவர் எரித்துக்கொல் லப்பட்ட இரட்டைக் கொலை வழக்கையும் நேர்மையாக விசாரிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளதாம்.

என்ன செய்வது விதைத்தாகிவிட்டது. அறுத்துத் தானே ஆகவேண்டும்.  

நன்றி குமுதம் ரிப்போர்டர்

 

Comments  

 
0 #35 முத்து சிவா 2011-09-15 15:21
தெலுங்கரான இவர் - தமிழர்கலை ஒழிப்பது புதிது இல்லையே
Quote
 
 
0 #34 Kvenki 2011-09-12 14:45
These scoundrals have not brought any one good project to trichy or nearby area except developing thier commision oriented business. Ofcorse how can we except from them when they are not person hailed form good thought. After all he was the lorry brokers only na. So there is nothing to disappoint that his thought level would be like that only. People like him (lorry broker), pottu suresh madurai(he was previosuly known as corporation kakkus keeper, pavadai business, bajji business)what level their thought process will be. This is nothing but our sin only. Atleast this media power let us to get some good people (like Anna hazare) to rule us.
Quote
 
 
+4 #33 vennai 2011-09-07 11:42
இந்த லட்சனத்தில் ஜனாதிபதியிடம் மனு கொடுக்கிறார்கள் . வெட்கம் கெட்ட ஜென்மங்கள். நாடு நாசமாக போய்க்கொண்டிருக ்கிறது.
Quote
 
 
0 #32 soldier 2011-09-07 10:34
The attrocities of K N Nehru & his brothers are only partially brought out. illegal possession of land & properties are done in an enormous way and still Trichians are afraid to lodge a complaint. K N Ramajeyam has gone one step further and captures the Tamilnadu Basketball Association and J J Indoor stadium. Hon C M should make an enquiry into that matter as well and bring back A N Dyaneswaran, Dr Ramakrishnan, Senthureswaran and Kalaiselvan as office bearers of TNBA.
Quote
 
 
+4 #31 dinesh kumar 2011-09-07 10:02
பய புல்லைகு ரொம்ப ஆச தான் சாரதாச் விலைக்கு கேட்டு இருக்கு
Quote
 
 
+1 #30 thamizh eezham 2011-09-07 03:58
தனது கைத்தடிகளை வளர்த்து, தனது செல்வாக்கை பெருக்கிக்கொள்ள நினைத்த தர்மராஜா, எனக்கு எங்களூரில் போட்டியிட சீட் வாங்கித் தந்தார். அதுதான் எங்கள் மாவட்டத்தில் கட்சியை அழிக்க அவர் போட்ட பிள்ளையார்சுழி என்பது அப்போது அவருக்குத் தெரியாது.
Quote
 
 
+2 #29 வால்டர் வணங்காமுடி 2011-09-05 15:03
//தமிழகத்தின் மையப்புள்ளி அருகில் உள்ள ஒரு நல்லூர்தான் எனது சொந்தக் கிராமம்//

காணக் கிளிய நல்லூர் நேரு.
சுருக்கமாக கே.என். நேரு
Quote
 
 
-3 #28 Tamil Magan 2011-09-04 03:43
If we are fighting for truth, let us speak only truth and stay away from making up wrong claims. Botswana is relatively peaceful country and there is no blood diamond claims on Botswana. Blood diamond is a word coined on the diamond trades made with the rebels in Sierra Leone.Botswana is in southern part of Africa where as Sierra Leone is in the sub-Saharan Africa. So I wonder why make wrong claims or publish articles without verifying the facts? if Kumudham reporter knew about blood-diamond means he or she should have been reading international media. Making wrong claims intentionally throws doubts on the article itself.
Quote
 
 
0 #27 pattarmadam 2011-09-03 14:57
"Muthurajavukku muzhangalule moolai nnannam".Even when these scoundrels have 1/4th of brain, they loot the entire state and what if they have full size of brain? They will with their inamanathamizha r's blessings would have ruined entire nation. Ivanungallam oru manushan; ivangalukkoru katchi, thalaivan! "thhoooo"
Quote
 
 
+1 #26 reader 2011-09-02 23:27
அவரு மும்பைக்கே போய் வெத்தல போடுவதும், ரயில் சிநேகம் வச்சுக்குவதிலும ் ரொம்ப பிரசித்தம்.

காங்கிரஸ்காரன் பெயர இப்படியும் கெடுக்கலாமோ? ;)
Quote
 
 
+3 #25 sunnambu 2011-09-01 18:06
பூவானவர் மலர் மன்னன்
கிருஷ்ணபாலன், பால கிருஷ்னன்
தங்கமான ராசா, KKM தங்கராசு
கீர்த்தி, மூர்த்தி
செல்வமான ராசா, செல்வராஜ்
வாசி திருச்சி சிவா
பரணி பாடியவர் பரணிகுமார்
Quote
 
 
+22 #24 sivasankar 2011-09-01 12:09
இதில் சொல்லப்பட்ட கருத்துகள் ஒரு சிறு துளியே ..இன்னும் இவனை பற்றி சொல்ல வேண்டுமானால் ஒரு சவுக்கு பத்தாது.
Quote
 
 
+1 #23 ranramani 2011-09-01 08:31
Possible we can put in prison till his dead
Quote
 
 
+2 #22 raja123 2011-09-01 05:28
enna koduma da :eek:
Quote
 
 
+6 #21 Vaedhampudhidhu 2011-08-31 20:32
K.N Nehru, anbil dharmalingam, trichy siva, naepolean, Ramajayam all r same cast peoples. Initially into transport. Try to corner sarathas later cornered by alagiri. One more info he carried some 5k crore kani's money to buy an big estate at kerala again cornered by alagiri at T.N border. The container truck used to carry money. loosed 1000 crore on mumbai by underworld peoples. Had so many keeps especially housewives. We stayed in a house, the opposite house occupied by an young couple that wife is his keep, whenever her husband leaves his car shown up and later by afternoon he leaves the place its near by a famous college area. Now he buying property in US. He brough 50+ bunglows in thillai nagar mostly by threatening people. Brough SRC womens college, JJ engineering college now handovered to kanimozhi. Brought coal mine in Indonesia. He introduced a.raza (2g) into D.M.K to gain SC/ST support. Karuna critisized him by saying "leave malai kottai, cause its a historic monument buy the surrounding place" for buying crystal plaza near malaikottai.
Quote
 
 
+8 #20 Hindija 2011-08-31 20:29
echa porukki naayaa irundha indha mollamaari ellam innakki kodila puraluthunnaa athukku antha kasmaalam karunaanidhi thaan kaaranam..they paya pullainga...ivanungala kaalaraa kondu poga...naasamaa povaanunga...
Quote
 
 
0 #19 Anony 2011-08-31 18:51
[ஃஉஒடெ நமெ="மணவை மன்னாரு"]திருச்சி நேருஜி ... :-)..உறவுக்கார பையன் - நெப்போலியன் ?[/ஃஉஒடெ]
Quote
 
 
+11 #18 இரண்டுமுகம் 2011-08-31 18:51
மீசைக்காரர் உலக நாயகனைவிட கில்லாடியா இருப்பார் போல இருக்குது,
Quote
 
 
+8 #17 c.parameswaran 2011-08-31 15:08
சவகர்லால் நேரு மட்டும் உயிரோடு இருந்திருந்தால் ரத்தம் கக்கி செத்திருகப்பார் . பைந்த பயபுள்ள என்ன வேலையெல்லாம் பார்த்துருக்கு பாருங்க
Quote
 
 
+14 #16 Ravi 2011-08-31 14:12
இப்படி ஒவ்வொரு மாவட்ட செயலாளரும் ஒதுக்கிய பதுக்கியதை கூட்டினாலே ஒரு 50000 கோடிகள் போலிருக்கே??? அடேங்கப்பா..அப்படின்னா தல எந்த அளவுல சுருட்டியிருக்க ும். மலைக்க வைக்குதப்பா!!!த மிழ் நாட்டு வரிப்பணங்கள மும்பை சினிமாவைக்கூட வாழ வைத்திருக்கிறாத ா?...அப்படி போடு..விட்டா இந்தியாவையே இந்த கழக கண்மனிகள் விலை பேசியிருப்பார்க ளோ...
Quote
 
 
+3 #15 city 2011-08-31 14:00
kn nehru :lol: :-)
Quote
 
 
-65 #14 குலே பகாவலி 2011-08-31 13:32
கே என் நேரு அவர்களை திருடன், நிலம் அபகரிப்பு செய்யக் கூடியவன், என்று சொல்லும் சவுக்கை வன்மையாக கண்டிக்ரியேன். தி மு க வில் எத்தனியோ திருடர்கள் இருக்கும்போது திருச்சி மாநகரத்தின் பேரரசு அவர்களை தவறாக சித்தரித்த குமுதம் ரேபோர்டார் மற்றும் அதை வெளியிட்ட சவுக்கு கண்ட்கிறேன்.


குலே பகாவலி
Quote
 
 
+1 #13 தர்ஷன் 2011-08-31 12:05
கே.என்.நேரு
Quote
 
 
+7 #12 123 2011-08-31 12:01
ஊர்வசி என்ற பட் டப்பெயரால் அழைக்கப்பட்ட பழம்பெரும் நடிகையின் பெயரில் பெரிய பட்டு ஜவுளி மாளிகை எங்கள் பகுதியில் இருக்கிறது................
சாரதாஸ்
Quote
 
 
+12 #11 nila 2011-08-31 11:49
K.N.NEHRU KHANA KILIYANALLUR NARAYANA REDDY NEHRU
ANBIL DHARMALINGAM
MALAIKOTTAI
K.N.MANIVANNAN, MD, S.N.R.RICE MILL, POOVALUR, LALGUDI
RAMAJEYAM
NEPOLEAN
SARATHA TEXTILES, TRICHY
VASI TRICHY SIVA
MURASOLI
BARATHI RAJA
Quote
 
 
+4 #10 MalaiKottayan 2011-08-31 11:45
K.N.Nehru, RamaJeyam, Napolean
Quote
 
 
+29 #9 r.s.ramalingam 2011-08-31 10:40
கடவுளே... தமிழ் நாட்டை காப்பாற்ற ஒரு நல்ல தலைவனை அடையாளம் காட்டு... வெள்ளைக்காரனை நல்லவனாக்கிடுவா ஙகபோலிருக்கே நம்ம கொள்ளைக்காரன்கள ்...
Quote
 
 
+8 #8 ramesh Kailasam 2011-08-31 10:34
பயபுல்ல நேரு
Quote
 
 
+21 #7 மணவை மன்னாரு 2011-08-31 10:25
திருச்சி நேருஜி ... :-) பசுதமி மேட்டரு புதுசா இருக்கு...உறவுக்கார பையன் - நெப்போலியன் ?
Quote
 
 
+7 #6 Vinayagamoorthi 2011-08-31 10:22
திருச்சி கே.என். நேரு...
Quote
 
 
+10 #5 bharathinesan 2011-08-31 10:13
காந்தி, நேரு,போஸ், படேல், கக்கன், காமராஜ் போன்ற பெயர்களை வைக்க உடனே தடை செய்ய வேண்டும்.
Quote
 
 
+5 #4 ksn.balaji 2011-08-31 09:52
I THINK HE IS K N NEHRU
Quote
 
 
+6 #3 RAJEEVAN 2011-08-31 09:24
K N NEHRU
Quote
 
 
+5 #2 sagamanithan 2011-08-31 09:19
முன்னாள் அமைச்சர் நேரு
Quote
 
 
+8 #1 Existentialist 2011-08-31 08:50
K N Nehru ? :)
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 89 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday6086
mod_vvisit_counterYesterday9391
mod_vvisit_counterThis week6086
mod_vvisit_counterLast week78643
mod_vvisit_counterThis month287461
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12809580