|
யார் இந்த அப்சல் குரு ? காஷ்மீரில் தீவிரவாதம் வேர் விட்டு வளரத் தொடங்கிய நேரத்தில், இளைஞனாக இருக்கும் துரதிருஷ்டத்தை பெற்றவர்தான் இந்த அப்சல் குரு. காஷ்மீர் சமுதாயத்தில் நிலவி வந்த அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுத்துக் கொண்டிருந்தார் மக்பூல் பட். தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டார் என்று 1984ம் ஆண்டு மக்பூல் பட் தூக்கிலிடப் படுகிறார். ஐக்கிய முஸ்லீம்கள் கூட்டணி என்று ஒன்று அமைக்கப் பட்டு, இஸ்லாமியர்களின் உரிமையை நிலை நாட்ட வேண்டும் என்ற குரல் ஒலிக்கத் தொடங்குகிறது. ஐக்கிய முஸ்லீம்கள் கூட்டணி, தேர்தலில் போட்டியிட்டு பெரும் வெற்றியைப் பெறுகிறது. தேர்தலில் வெற்றி பெற்ற தலைவர்கள் கைது செய்யப் படுகிறார்கள், சிறையிலடைக்கப் படுகிறார்கள். கைது செய்யப் பட்ட தலைவர்கள், காஷ்மீர் மக்களை ஆயுதம் ஏந்த அழைக்கிறார்கள். காஷ்மீரின் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இந்தியாவுக்கு எதிராக ஆயுதம் ஏந்துகிறார்கள். ஜீலம் பள்ளத்தாக்கு மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பு படித்துக் கொண்டிருந்த அப்சல் குரு, படிப்பை கை விட்டு, ஆயுதம் ஏந்துகிறார். பாகிஸ்தானுக்கு சென்று ஆயுதப் பயிற்சி எடுக்கிறார். ஆனால், பாகிஸ்தானுக்கு சென்ற சில நாட்களிலேயே பாகிஸ்தான் அரசியல்வாதிகளும், காஷ்மீர் மக்களை வைத்து அரசியல் நடத்துகிறார்கள் என்பதை உணர்ந்து, பாதிப் பயிற்சியிலேயே காஷ்மீர் திரும்புகிறார். திரும்பியவர் சும்மா இருந்திருக்கலாம். நல்ல பிள்ளையாக வேண்டும் என்று, எல்லைப் பாதுகாப்புப் படையிடம் சரணடைகிறார். சரணடைந்த தீவிரவாதியின் அந்தஸ்து வழங்கப் படுகிறது.

மருத்துவப் படிப்பை பாதியில் கைவிட்டதால், அறுவை சிகிச்சை கருவிகளை விற்கும் தொழிலில் ஈடுபடுகிறார். தொழிலைத் தொடங்கி திருமணமும் செய்து கொள்கிறார். ஆனால், சிறப்புப் பாதுகாப்புப் படையும், ராஷ்ட்ரீய ரைபிள்ஸ் நிறுவனமும், தொடர்ந்து நெருக்கடி தருகின்றன. காஷ்மீரில் எங்கே தீவிரவாத தாக்குதல் நடந்தாலும், அப்சல் பிடித்துச் செல்லப் படுவார். அவரோடு சேர்ந்து மனம் போன போக்கில் இளைஞர்களாக தென்படுபவர்கள் பிடித்துச் செல்லப் படுவார்கள். அந்த முகாம்களில் சித்திரவதை தொடங்கும். பல வாரங்கள் இந்த சித்திரவதை தொடரும். இறுதியாக, சம்பந்தப் பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், கையில் இருக்கும் தொகையை லஞ்சமாக கொடுத்து, மீட்டு வர வேண்டும். 22வது ராஷ்ட்ரீய ரைபிள்ஸ் பிரிவைச் சேர்ந்த மேஜர் ராம் மோகன் ராய், அப்சலின் அந்தரங்க உறுப்புக்களில் மின்சாரத்தை பாய்ச்சி சித்திரவதை செய்திருக்கிறார். ராணுவ முகாம்களில் உள்ள கழிவறைகளைச் சுத்தம் செய்ய வேண்டும். அப்சல் இது போல சித்திரவதைக்கு உள்ளாகும் போது, டிஎஸ்பிக்கள் வினய் குப்தா மற்றும் தேவீந்தர் சிங் ஆகியோர், அருகில் இருந்து மேற்பார்வை செய்திருக்கின்றனர். சாந்தி சிங் என்ற சித்திரவதை நிபுணர் ஒரு லட்ச ரூபாயை கொடு என்று மூன்று மணி நேரம் மின்சாரம் பாய்ச்சி சித்திரவதை செய்திருக்கிறார். இறுதியாக அப்சலின் மனைவி, நகைகளை அடகு வைத்து, அப்சலின் ஸ்கூட்டரை விற்று, ஒரு லட்ச ரூபாய் கொடுத்த பிறகே அப்சல் விடுவிக்கப் படுகிறார். அதையடுத்து ஆறு மாதங்கள் அப்சல் படுத்த படுக்கையாக இருக்கிறார்.
காஷ்மீர் போலீசின் சிறப்புப் படையின் சித்திரவதை முகாம்களில் சித்திரவதைக்கு ஆளானவர்கள், காவல்துறை இட்ட பணியை மறுக்காமல் செய்வார்கள். மறுத்தால், அந்த சித்திரவதைக்கு மீண்டும் ஆளாக நேரிடும் என்ற அச்சமே காரணம். அது போல, ஒரு நாள் டிஎஸ்பி தேவீந்தர் சிங் ஒரு சிறிய வேலையை செய்து கொடு என்று கேட்கிறார். என்ன என்று கேட்ட போது, ஒரு நபரை டெல்லிக்கு அழைத்துச் சென்று, அவருக்கு ஒரு வீடு பார்த்துக் கொடுக்க வேண்டும். அவர் அறிமுகப் படுத்திய நபர், காஷ்மீரி அல்ல. அவர் தன் பெயரை முகம்மது என்று கூறினார். இந்த முகம்மது, பாராளுமன்றத் தாக்குதலில் கொல்லப் பட்ட 5 பேர்களில் ஒருவர்.
டெல்லியில் இருக்கும் போது, முகம்மதுவுக்கு தேவீந்தர் சிங்கிடமிருந்து தொலைபேசி அழைப்புகள் வரும். சில நாட்கள் கழித்து, முகம்மது ஒரு காரை வாங்கினார். காரை வாங்கி விட்டு, நான் இப்போது திரும்பிச் செல்லலாம் என்று கூறி, 35 ஆயிரம் ரூபாய் பணத்தை தந்தார். இது அன்பளிப்பு என்று சொன்னார்.
காஷ்மீருக்கு திரும்பிச் செல்லும் போதுதான் நான் பேருந்து நிலையத்தில் டெல்லி போலீசாரால் கைது செய்யப் பட்டேன். என்னை பரிம்போரா போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றார்கள். பிறகு காஷ்மீரில் உள்ள சிறப்பு முகாமுக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் மீண்டும் டெல்லி அழைத்து வந்தனர். நான் முகம்மது பற்றி எனக்குத் தெரிந்தது அனைத்தையும் சொன்னேன். ஆனால், ஷவுகத், அவர் மனைவி நவஜோத் மற்றும் எஸ்ஏஆர்.கிலானி ஆகிய அனைவரையும் தெரியும்ம என்று சொல்லச் சொன்னார்கள். இதை ஊடகங்களின் முன் சொல்ல வேண்டும் என்று சொன்னார்கள். நான் மறுத்த போது, என் குடும்பத்தினர் அனைவரும் காஷ்மீர் முகாமில் இருப்பதால் சொல்ல மறுத்தால் எப்போது வேண்டுமானாலும் கொல்லப் படுவார்கள் என்றனர். வெற்றுக் காகிதங்களில் என்னிடம் கையொப்பம் பெற்றார்கள். ஊடகம் முன்பு, நான்தான் பாராளுமன்றத் தாக்குதலுக்கு பொறுப்பு என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தேன். எஸ்ஏஆர்.கிலானியைப் பற்றி ஒரு கேள்வி வந்த போது, நான் அவர் நிரபராதி என்று கூறினேன். ராஜ்பீர் சிங் என்ற ஏசி என்னை கடுமையாக திட்டினார். பத்திரிக்கையாளர்களிட்ம் இதை ஒளிபரப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.
மறுநாள் என் மனைவியோடு பேச அனுமதிக்கப் பட்டேன். அவர்கள் உயிரோடு இருக்க வேண்டுமானால் போலீசாரோடு ஒத்துழைக்க வேண்டும் என்று மிரட்டப் பட்டேன். அதன் பிறகு, முகம்மது சென்ற இடங்கள் என்று பல்வேறு இடங்களுக்கு என்னை அழைத்துச் சென்றனர். அங்கே அவர் பொருட்கள் வாங்கிய போது, நான் உடன் இருந்தேன் என்ற சாட்சிகளைத் தயார் செய்தார்கள். என் குடும்பத்தினரின் பாதுகாப்பைக் கருதி, அனைத்துக்கும் ஒப்புக் கொண்டேன்.
என்னை சிக்க வைத்ததன் மூலம், டெல்லி போலீசார் நாட்டையும் மக்களையும் ஏமாற்றி விட்டனர். பாராளுமன்றத் தாக்குதலுக்கு காரணமானவர்கள் யார் என்பதை இறுதி வரை கண்டுபிடிக்கத் தவறி விட்டனர். சிறப்பு பாதுகாப்புப் படை மற்றும் டெல்லி போலீசார் என்னை பலி கடா ஆக்கி விட்டனர். டெல்லி போலீசாருக்கு விருதுகள் வழங்கப் பட்டன, எனக்கு தூக்கு விதிக்கப் பட்டது.
இவ்வழக்கில் நான் கைது செய்யப் பட்டு 6 மாதங்களுக்கு என்னுடைய குடும்பத்தையே பார்க்க அனுமதிக்கப் படவில்லை. 6 மாதம் கழித்து, நீதிமன்றத்தில் சிறிது நேரம் சந்திக்க அனுமதி வழங்கப் பட்டது. எனக்காக வாதாட 4 வழக்கறிஞர்களை தேர்ந்தெடுத்தேன். நான்கு பேரும் வாதாட மறுத்து விட்டதாக நீதிபதி எஸ்.என்.திங்க்ரா தெரிவித்தார். எனக்காக நீதிமன்றம் நியமித்த வழக்கறிஞர் என்னைக் கேட்காமலேயே பல ஆவணங்களை அனுமதித்தார். நீதிமன்றத்தால் நியமிக்கப் பட்ட வழக்கறிஞர் என்னைப் பார்க்கக் கூட மாட்டார். இப்படிப்பட்ட ஒரு முக்கிய வழக்கில் எனக்காக வழக்கறிஞர் கூட வைக்காமல், எனக்கு தூக்கு தண்டனை விதிப்பதாக இருந்தால், எதற்காக இந்த நீதிமன்றத்தின் விசாரணை ? விசாரணை நடத்தாமலேயே என்னைத் தூக்கிலிட்டிருக்கலாமே ?
சிறையிலும் எனது வாழ்க்கை மிகக் கொடூரமானது. தனிமைச் சிறையில் அடைக்கப் பட்டுள்ளேன். தொலைக்காட்சி கிடையாது. வானொலி கிடையாது. நான் வாங்கும் செய்தித்தாள் கூட, கிழித்துத்தான் கொடுக்கப் படுகிறது. நான் மட்டும் இல்லை. என்னைப் போன்ற சக காஷ்மீரிகள் இந்தியாவின் பல்வேறு சிறைகளில் வழக்கறிஞர் உதவி கூடட இல்லாமல் அடைக்கப் பட்டுள்ளனர். தினந்தோறும், காஷ்மீரில் திவிரவாதிகள் சுட்டுக் கொலை என்று போலி என்கவுண்டர்களுக்கு அங்கீகாரம் கொடுக்கப் பட்டு வருகிறது. காஷ்மீரில் இன்னும் நிலைமை மோசம். மொத்த காஷ்மீருமே ஒரு திறந்தவெளிச் சிறைச்சாலையாக உள்ளது. ஒரு நாகரீக சமுதாயம் எதைப் பார்க்கக் கூடாதோ, அது காஷ்மீரில் தினந்தோறும் நடந்து கொண்டு இருக்கிறது.
ஆனாலும் நம்பிக்கை இழக்க அவசியம் இல்லாத வண்ணம், இந்த சமுதாயத்திலும், சில வழக்கறிஞர்கள், எழுத்தாளர்கள், அறிவு ஜீவிகள் இந்த அநீதியை எதிர்த்து தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்பது நிம்மதியைத் தருகிறது.
எஸ்ஏஆர்.கிலானி விடுதலை செய்யப் பட்ட போதுதான் முதன் முதலாக மக்கள் காவல்துறையின் கதையை கேள்வி கேட்கத் தொடங்கினார்கள். உண்மையை நேசிக்கும் மக்கள் அப்சல் குருவுக்கு அநீதி இழைக்கப் பட்டிருக்கிறது என்று சொல்வது இயல்பே. ஏனெனில் அதுதானே உண்மை.
எனக்கு திருமணமாகி 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இதில் பாதி நாட்களுக்கு மேல் சிறையில் கழித்திருக்கிறேன். மேலும் ஒரு பாதியை சித்திரவதை முகாம்களுக்குள் கழித்திருக்கிறேன். என் ஆணுறுப்பு உள்ளிட்ட அத்தனை இடங்களிலும் மின்சாரம் பாய்ச்சி சித்திரவதை செய்யப் பட்டு நான் வீட்டுக்கு திரும்பி வருகையில், என்னை அன்போடு பார்த்துக் கொண்டாள் என் மனைவி தபஸ்ஸம். எங்களுக்கு ஒரு குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு பிரபல கவிஞர் மீர்சா காலீப் பெயரை வைத்தோம். என் மகன் மருத்துவராக வேண்டும் என்பதே எனது கனவு. எனது நிறைவேறாத கனவு அது. என் மகன், அநீதிக்கு எதிராக அஞ்சாமல் குரல் கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.
காஷ்மீரைப் பொறுத்தவரை, இந்திய அரசாங்கத்தின் ஊதுகுழலாக செயல்படுவதை ஊடகங்கள் நிறுத்த வேண்டும். இந்திய அரசு எடுத்துக் கொடுக்கும் செய்திகளை, உண்மைக்குப் புறம்பான செய்திகளை, ஊடகங்கள் மறுபேச்சு பேசாமல் வெளியிடுகின்றன. உண்மையில் பத்திரிக்கை துறையை நேசிப்பவர்களாக இருந்தால் உண்மையை விசாரித்து எழுதட்டும். உளவுத் துறையின் ஏஜென்டுகளாக இருப்பதை நிறுத்தட்டும். இந்திய அரசு, காஷ்மீர் மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள மறுக்குமேயானால், காஷ்மீர் பிரச்சினைக்கு என்றுமே தீர்வு கிடைக்காது.
ஒரு வழக்கில் குற்றம் சாட்டப் பட்ட ஒரு காஷ்மீரியை எந்தவித வழக்கறிஞர் உதவியும் இல்லாமல், இந்த தேசத்தின் நீதித்துறை தூக்கிலிடுமேயானால், காஷ்மீர் மக்களுக்கு இந்தியாவின் மீது எப்படி நம்பிக்கை வரும் ?
என்னுடைய வழக்கின் ஒரே சாதனையாக நான் கருதுவது, என் வழக்கின் மூலமாக, காஷ்மீர் சிறப்புப் படையின் சித்திரவதைக் கூடங்களை வெளியில் கொண்டு வந்ததுதான். காஷ்மீர் மக்கள் நாள்தோறும் படும் வேதனைகள் விவாதிக்கப் படுகின்றன. எங்கள் உணர்வுகளை புரிந்து கொள்கின்றனர். காஷ்மீருக்கு வெளியே வசிக்கும் மக்களுக்கு சுத்தமாக புரியாத விஷயங்கள் இவை.
நான் இறந்த பிறகு காஷ்மீர் மக்களின் அப்சலாக நினைவு கூறப்பட விரும்புகிறேன். இந்திய மக்களுக்கும் நான் அப்சர் தான் என்றாலும், காஷ்மீர் மக்களை இந்திய ஊடகங்கள் ஏமாற்ற முடியாததால், நான் அடைந்த வேதனைகளை அவர்கள் நன்றாகவே புரிந்து கொள்வார்கள்.
இறுதியாக இந்த உலகத்துக்கு ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். கிலானிக்கு தூக்கு தண்டனை விதிக்கப் பட்ட போது நீதிமன்றத்தில் அவர் இதைத்தான் சொன்னார். அமைதியும் நீதியும் வேறு வேறானது அல்ல. நீதியோடு சேர்ந்துதான் அமைதி வரும். நீதி இல்லையென்றால் அமைதியும் இல்லை. என்னை தூக்கிலிட விரும்பினால் தூக்கிலிடுங்கள். ஆனால் எனக்கு விதிக்கப் பட்ட தூக்கு இந்திய நீதித்துறை வரலாற்றிலும், அரசியல் வரலாற்றிலும் ஒரு கருப்புப் புள்ளியாக இருக்கும் என்பதை மறந்து விடாதீர்கள்” என்று அப்சல் சொன்னார்.
இது அப்சல் தன் வாயால் சொன்ன அவரின் கதை.
தொடரும்
|
Comments
நாடாளுமன்ற வாசல் வரைக்கும் வந்த பாகிஸ்தான்(?) திவிரவாதிக்கு உள்ளே வர வழி தெரியவில்லையோ?
இந்தியாவில் அரச பயங்கரவாதமும், ஹிந்து பயஙகரவாதமும் எப்பொழுது ஒழிகிறதோ அப்பொழுது தான் பொதுமக்கள் நிம்மதியாக வாழ முடியும்.[/ஃஉஒடெ]
6565
டெல்லியில் இருக்கும் போது, முகம்மதுவுக்கு தேவீந்தர் சிங்கிடமிருந்து தொலைபேசி அழைப்புகள் வரும். சில நாட்கள் கழித்து, முகம்மது ஒரு காரை வாங்கினார். காரை வாங்கி விட்டு, நான் இப்போது திரும்பிச் செல்லலாம் என்று கூறி, 35 ஆயிரம் ரூபாய் பணத்தை தந்தார். இது அன்பளிப்பு என்று சொன்னார்.
காஷ்மீருக்கு திரும்பிச் செல்லும் போதுதான் நான் பேருந்து நிலையத்தில் டெல்லி போலீசாரால் கைது செய்யப் பட்டேன். என்னை பரிம்போரா போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றார்கள்.
read the story and ask questions later
தயஙகுஹிரது
நாடாளுமன்ற வாசல் வரைக்கும் வந்த பாகிஸ்தான்(?) திவிரவாதிக்கு உள்ளே வர வழி தெரியவில்லையோ?
இந்தியாவில் அரச பயங்கரவாதமும், ஹிந்து பயஙகரவாதமும் எப்பொழுது ஒழிகிறதோ அப்பொழுது தான் பொதுமக்கள் நிம்மதியாக வாழ முடியும்.
Quoting அன்பு:
உங்கலுக்கு சற்றேனும் நேர்மை இருப்பின், பாகிஸ்தான் காஷ்மீரில் நுழைந்து பல்லாயிரக்கணக்க ான ஹிந்துக்களை கொன்ரதையும், அப்பொது RSS பெரும்பாடுபட்டு பாரதப் போர் விமானஙகல் இறங்க ஓடுத்ளம் அமைத்து கொடுத்ததையும் அதைப் பாராட்டி அவர்கல் சம்பளம் வாங்காத சிப்பாய்கல் என்று பாராட்டி குடியரசு தின பேரணியில் அவர்களை அணிவகுத்து நடக்க வைத்த கௌரவத்தையும் எழுதுஙகள்.
சங்கரராமன் கொலையில் ஜெயந்தரனுக்கு சம்பந்தம் இல்லை என்றால் - அரசு செய்தது பயங்கரவாதம்.
ஜெயந்தரனுக்கு சம்பந்தம் உண்டு என்றால், கொலை செய்து விட்டு ஜெயந்தரன் தப்பிக்க பார்க்கிறான் - இது சங்கர மடத்தின் பயங்கரவாதம்.
அம்பிகளே புரிகிறதா ?
how many people know that 4 Indians shot dead during Ramadan for eating unknowingly happened in Kuwait and declared the man who shot is "crazy mentally ill" but he was a cop. .. and they will go mad if France says no to vail? hypocrites .. as of my studies Islam means hypocrites...
they will accept you convert to Islam, but they will kill you, if you are converted to other religion... i have many Egyptian friends who were facing problem and left Egypt... wherever Islam goes .. there will be no peace
note: there are few good heart people i have found in Islam. bcoz they went to elsewhere to study and gathered their knowledge.
[ஃஉஒடெ நமெ="ஹ்ட்ட்ப்://கோதடிவெட்ட"]அப்சல்
முஸ்லீம்களின் தீவிரவாதம் உருவாக காரணமாக இருந்ததே அமெரிக்காவின் தீவிரவாதம்தான், அன்றைக்கு யூதர்களை பலஸ்தீன பாலைவனப்பகுதியி ல் குடியேற்றி யூதர்களின் அத்துமீறலை வளர்த்துவிட்டதன ் விளைவு இன்று உலகம் முழுவதும் முஸ்லீம்களின் தீவிரவாதம் பரவ காரணமாயிருக்கிற து.
காஸ்மீரிகளை இந்தியர்கள் என்று பொத்தம்பொதுவாகச ்சொல்லுபவர்கள் டில்லியிலும் பம்பாயிலும் காஸ்மீரிகள் நடமாடினால் தீவிரவாதிகளாகவே பார்க்கின்றனர்.
ஹ்ட்ட்ப்://கோதடிவெட்டை.ப்லொக்ச்பொட்.சொம்/[/ஃஉஒடெ]
In such a situation, if the version of Afzal Guru is true, then those tortures which he had undergone are wrong only, isn't it?
Why should he be denied the opportunities to prove himself?
Savukku's intention is not to support anti-Indian elements. Its intention is that any person who is punished should be given enough opportunities and chances before the Law of Court to prove his innocence. No human being should be tortured, forced and persuaded in order to get any false statements.
That is what Savukku would have wanted to tell its readers.
Your articles were interesting during the period of DMK rule.
It seems currently your expected things/favours art not happening in this present government. Therefore you are against this present government and your are trying to use your prolankan issues and anticongress sentiments.
One thing you should understand that the previous government was thrown out not because of you. But in your mind, you have a feeling that you are instrumental behind that event. That is not correct at all. It was the general public mood against the DMK government. Even if DMK would have ruled the state properly, they would have got thrown out by the people.
Coming back to this article, you are having a feeling that the high court /supremecourt will finally reduce the punsihment for murugan,santhan and pararivalan. You want to show the public that you have also contributed a lot to make this event success.
Dear Sir, Please come back to the realistic world.
I really doubt if the writer has ever been to the place of event.
The readers' response to the article on TN govt and its official found favours with them for the reason of authenticity and personal experience of the writer. In the articles about capital punishment, the writer lacks both. The story of chessman was deliberately tweaked to portray him as a victim where as he deserved the same punishment even otherwise if not for the case mentioned in the article. Chessman was a criminal and had spent most of his life behind bars even prior to the occurrence of the event that caused his conviction and death.
The writer may not want to mention that Christians were given asylum in this country when they were persecuted in Syria. Today more than 80% of the places of worship of Christians are converted into mosques without tomb by simply getting rid of its idols.
Persians, Jews, Islamists, Tibetian Buddhists faced religious persecution in their own country, our country invited them and assimilated them in to our culture.
We must continue to be a land of tolerance and acceptance and hosts of humans that needs our patronage. For that, we need strong laws that provide severe and non repeatable punishment to all and sundry that would stand by way of our tolerant cultural practice. The law must be blind to the cause, nativity and belief of the perpetrator. The objective of the law is to protect us (our tolerance, freedom etc) rather than that of the perpetrator. Like, we always find people construct strong bund/fence/compound wall around their living. The fence is not stronger than the house but stronger than the trespassers
TEACHING THE WORLD?????? ONE WOULD LAUGH VIA HIS ASS IF HE STUDIES THE SENTENCE!
THE HARVARD STUDENTS HAVE SPIT ON THE FACE OF "SUNA SAANAA" BY PROTESTING THAT THEY DONT WANT SUCH A NONSENSE AS PROF.
ஐயா வணக்கம்!
இங்கு சவுக்கு எதிர்ப்பு கருத்து கூறுவது உச்ச நீதி மன்றத்திற்கு எதிராக அல்ல! காவல் மற்றும் புலனாய்வுத்துறை யை! நன்றாக படித்து முதலில் புரிந்துக்கொள்ள வும்! பிறகு கருத்து எழுதவும்! - சோழன்.
ஆகவே இங்கே அப்சல் குரு சொல்வது எல்லாம் பொய் என்றோ, இந்திய அரசாங்கம் சொல்வது எல்லாம் சரி என்றோ ஒப்பு கொள்ள முடியாது.
எனவே, உண்மை தெரியாத பட்சத்தில், அப்சல் குரு குற்றவாளி என்று தூக்கில் போடுவது, உணவாக மலம் தின்பதற்கு சமம்.
இது போன்ற வழக்குகளின் விசாரணை, விருப்பு வெறுப்பு இன்று நடக்க வேண்டும். இல்லையேல் நாம் பிரச்னையை மூடி மறைத்து நம்மை நாமே ஏமாற்றி கொள்கிறோம் என்று பொருள்.
இந்த பிரசனைகளை தீர்க்க கூடிய தலைவர்கள் நம்மிடம் இல்லை என்பது எதார்த்தம். என்று நாம் அனைவரும் தொண்டு, துறவு இவற்றை பொது வாழ்கையில் பின்பற்று கின்ற மனிதரை ஆதரித்து அவரின் பின்னால் நிற்கிறோமோ அன்று தான் இந்த பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். அப்படிப்பட்ட மனிதன் இல்லையென்றல் உங்களின் குழந்தை களை அவ்வாறு உருவாக்குங்கள், இன்று இல்லை என்றாலும் நாளை ஒரு விடிவு கிடைக்கும்.
* ENGINEERING/SCIENCE GRADUATES LIKE U?
* AS U R CURRENTLY KISSING THE ASS OF WESTERN WORLD IN CALIFORNIA?
BEFORE BLINDLY CRYING FOR YOUR CASTE ONLY, KNOW WHAT IS WHAT AND WHAT IS FOR WHAT, AT LEAST BASICALLY IDIOT!
IF YOU ASK TO WORRY FOR POOR FC PEOPLE, WHY DONT YOU WORRY FOR POORER LOWER CASTE PEOPLE? DID YOUR CASTE WORRY FOR THEM?
1. I am going to stop visiting your 'crap' site.
2. Police need to take action against you for your anti India writing. You simply forgot that you were part of the police force and whatever oath you took before joining the department is still applicable to you.
3. Intha pozaippu pizaikka naandukittu saagalaam.
http://www.haindavakeralam.com/HKPage.aspx?PageID=14662
Hope savukku will correct itself, otherwise soon, you will be forgotten soon..
Better wind up your blog . From reservations, to brahmin hatred to calling subramania swamy a fascist, you have shown your true colour. If swamy is a fascist, then what are you?
What happened to your cheap publicity petitions on IIT and Swamy? No court will admit such petitions.
Book yourself a place in Kilpauk.
அமெரிக்காவின் தீவிரவாதம் அன்றைக்கு யூதர்களை பலஸ்தீன பாலைவனப்பகுதியி ல் குடியேற்றி யூதர்களின் அத்துமீறலை வளர்த்துவிட்டது . ்
காஸ்மீரிகளை இந்தியர்கள் என்று பொத்தம்பொதுவாகச ்சொல்லுபவர்கள் டில்லியிலும் பம்பாயிலும் காஸ்மீரிகள் நடமாடினால் தீவிரவாதிகளாகவே பார்க்கின்றனர்.
ஈழத்தமிழனுக்கு வாடகைக்கு வீடு கொடுக்கக்கூடாது என்று தமிழ்நாட்டிலேயே தமிழினத்தை பயங்கரவாதியாக பார்த்த காலம் உண்டு.
தீவிரவாதிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்கவேண்டும், மூலம் இல்லாமல் கருவறுக்கவேண்டு ம் என்றெல்லாம் ஜனநாயகம் போர்த்திய ஆட்சி அதிகாரம் கொண்ட தீவிரவாதிகள், நாட்டு மக்களுக்கு ப்றைன் வாஸ் செய்வது போலவே,
ஈராக்கில் அமெரிக்கா படைகள் நுழைந்து ஒட்டுமொத்தமான மனித படுகொலையை செய்தால் அவை நேசநாடுகளின் ஜனநாயகப்போர், என்றும் அதே செயற்பாட்டை ஒசாமா பின்லாடன் செய்தால் பயங்கரவாதம் என்றும் பெயர்சூட்டி முடிக்கின்றனர்.
ராஜீவ் மக்கள் தலைவர் என்று சொல்லுபவர்கள் அவர் எப்போது மக்களால் தெரிவு செய்யப்பட்டு பிரதமரானார் என்பதை அறிய முயற்சிக்கவில்ல ை, நேருவின் பேரன் என்ற தகுதியை மட்டும் கொண்டு தன்னிச்சையாக ஜெய்ல் சிங்கும், டிக்சித்தும், நாராயணன் போன்றவர்களும் முடிவெடுத்து ஈழத்தில் 4,000 பெண்கள் கற்பழிக்கப்படுவ தற்கு ராஜீவ் காரணமாயிருக்கிற ார். 10,000 பேரின் படுகொலை ராஜீவ் என்ற ஒற்றைமனிதனால் ஈழத்தில் நிகழத்தப்பட்டது .
தீவிரவாதத்தின் மூலவேர் இப்படித்தான் உருவானது என்பதை பணிவுடன் தெரிவித்துக்கொள ்ளுகின்றேன்.
அப்ப அவின்க ஏன் கன்கிரச் மக்களுக்கு சல்யூட் அடிக்கான்க மக்கா... ரொம்ப கடுமையா யோசிக்கிறவர் போல....
நீ தான் மூனாதுனா.... நாங்கெள்ளாம் இல்லப்பா.... ஒடனே எல்லாத்துக்கும் "ஆர்ஸ்ஸ்" தான் காரனமா... சிப்பு தான் வருது..... மதராசால இது தான் சொல்லி தராங்கலோ.. சமச்சீர் கல்வியே பரவாஇல்ல போல இருக்கே...
Wake up Savukku - we want the real Savukku the unattached warrior fighting for people and not a 'pseudo secular,terrori st supporting' facade
For these savukku, nedumaram, chiiiimaaN, poikko and all, who is equal to whom is not answer. Vaikko used his MP strength when he was with BJP not to take up any mercy petition. Then he moved with MK in the first UPA 1. That time also because of number game, he put pokes on mercy petition. Now he is acting drama in roads when decision is taken. Hence these people who is equal to whom is not important than rajiv murders convicts.... If you accept perarivaalan, son of arputham is the innocent, you can understand these elements clearly. if not you are clearly tamil ina virodhi and good enough to be burnt with tyre. Ask Mahatiya which criminal proceedure code the puli facist used to kill him with Aavi amutha.
அந்த மக்களுக்கு அடிப்படை சுதந்திரம் மறுக்கப்படுகிறத ு,
பத்திரிகை சுதந்திரம் கிடையாது, தமிழ் நாட்டை போல் சுதந்திரமாக எழுத முடியாது,
அங்கு உள்ள பத்திரிக்கைகள் ராணுவத்தின் முன் அனுமதி பெற்றுத்தான் எந்த ஒரு செய்தியையும் வெளியிடமுடியும் .
மீறி செய்தால் அவர்கள் என்கவுண்டர் செய்யப் படுவார்கள், அல்லது காணாமல் போனவர்கள் பட்டியலில் சேர்ந்து விடுவார்கள்,
இந்தியாவின் கொடூர முகத்தை காஷ்மீரிலும், வட கிழக்கு மாநிலங்களிலும் பார்க்கலாம், இங்கெல்லாம் பல்லாயிரக்கணக்க ான அப்பாவிகளை கொன்றதால் தான், அவர்களால் இலங்கையிலும் ஒரு கொடூரத்தை அரங்கேற்ற உதவி செய்யமுடிந்தது.
அட்லச் புத்தகத்தை வைச்சுக்கோ!!! காலையிலும் மாலையிலும் கிளயரசில் மூன்று தடவை தடவிகிட்டே வா!!! இந்தியா முகமூடி கிழின்சு வெள்ளையா ஆயிடும்....
இப்படிப்பட்ட ஒரு முக்கிய வழக்கில் எனக்காக வழக்கறிஞர் கூட வைக்காமல், எனக்கு தூக்கு தண்டனை விதிப்பதாக இருந்தால், எதற்காக இந்த நீதிமன்றத்தின் விசாரணை ? விசாரணை நடத்தாமலேயே என்னைத் தூக்கிலிட்டிருக ்கலாமே ?
என் ஆணுறுப்பு உள்ளிட்ட அத்தனை இடங்களிலும் மின்சாரம் பாய்ச்சி சித்திரவதை செய்யப் பட்டு நான் வீட்டுக்கு திரும்பி வருகையில், என்னை அன்போடு பார்த்துக் கொண்டாள் என் மனைவி தபஸ்ஸம். எங்களுக்கு ஒரு குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு பிரபல கவிஞர் மீர்சா காலீப் பெயரை வைத்தோம். என் மகன் மருத்துவராக வேண்டும் என்பதே எனது கனவு. எனது நிறைவேறாத கனவு அது.
ஈ நச் மொவெ டொ டெஅர்ச்.
விச்டிம்ச் அரெ மடெ. ணொட் பொர்ன்.[/ஃஉஒடெ]
ஆணுறுப்பு அந்து போனது பின்னாடி பொண்ட்டாடிக்கு குழந்தை பிறந்ததுக்காகவா ???
உலகிலேயே மிகவும், ஒரே கெட்டவர் ஜாபர் சேட் தான். மிச்சம் இருக்கும் அனைத்து கொலை காரன், குண்டு வைசசவன், வன்புணர்ச்சி செய்யறவன் எல்லாமே மகாத்மாக்கள். அதுவும் அவின்களுக்கு இருக்க்கும் மறுபக்கம் ரொம்ப பரிதாப பட வைக்கும். இந்தியா இல்லாமல் போன உடனே புலி பாசிச ஆட்சியில் போலீச் தடி வைசசிருக்காமல், மயிலிறகு வைச்சு வீசுவான்கள். சவுக்கு ஒரு பொழப்பை தொலைச்சவன்.
I have been reading your blog for quite long time, all your efforts against corrupted politicians especially Karunanidhi & co, corrupted babus are commendable. i know most of your contents are worth of trust and honest. this is on good side of you. we all stand up/supported you just because of the fact that there is injustice happen to you. we believe you completely.
I get frustrated and irritated, by reading your article regarding IIT professors, supporting Afzal Guru. You people still in 1950's thinking about reservation, casteism, blindly supporting Muslims. at the same time you don't even consider or intentionally forgot about poor Forward caste people. I believe you guys stuck to pseudo socialism. I feel very discomfort in reading past 2 articles. At some point later i know you gonna to support al qaeda, all terrorist organization around the world. To be honest, you can write/propgand something that will enlight society to go forward, not backward. I must say 2 things
1) Because of reservation mess in india, we have more engineering gradutes not engineers, we have more science graduates not scientists. unless we fix basic problems in your institution, we need to kiss the Ass of western world to get projects or run our lives in IT world.
2) Please stop supporting all these terror groups, First of all everyone should stand up as good human being, then Indian. Not as tamil/xx/yy/zz or bihari/xx/yy/zz or muslim/kashmir/xx/yy/zz
I urge all savukku readers, to support savukku he is doing great things compared to other media in tamilnadu. Please visit www.makkalsakthi.net
1.R U A EX CHIEF JUSTICE?
2.PROMINENT LAWYER?
3.DO U KNOW FULL BACKGROUND OF WHAT HAPPENED?
4.YOU R JUDGING BASED ON SOME PRESS MATERAILS. HAVE U DONE ANY PROOF TO SAY THAT AFSAL GURU IS INNOCENT...IF U HAD ANY PROOF, WHY U HAD NOT DONE ANYTHING IN LAST 15 YEARS TO SAVE HIM...... PLEASE NOTE THAT EVEN U AGREED THAT AFSAL INITIALY WAS IN TERRORIST CAMP.....
IN 2G CASE, SAME SAVUKKU PRAISED SUPREME COURT LIKE ANYTHING..IF U DONT LIKE CONGRESS, U FIGHT AGAINST IT. FOR GOD SAKE, DONT PROMOTE THIS KIND OF THINGS.....IT WILL DESTABILIZE INDIAN DEMOCRACY AND JUDICIARY.
WHO R U TO GIVE JUDGEMENT? MAY BE IT WRONG....BUT WHEN A TOP COURT OF A COUNTRY GIVES AN ORDER, WE HAVE TO OBEY THAT.....
MEANING OF DEMOCRACY IS NOT LIKE THIS.IF U ARE AGAINST DEATH PENALTY, PLEASE SAY THAT ONLY..DONT TRY TO PROVE THAT EVERYBODY WHO R GIVEN DEATH PENALTY BY SUPREME COURT IS INNOCENT.........
I expect you to justify tomorrow another article against life imprisonment for 6 Muslims who killed a Hindu leader,for which judegement came today.
Your support to Rajiv case accused can be independant of support to Muslim terrorists . Otherwise you will lose your good will and readership.Hope you publish it
-------------------------------------
well said sir,
If kashmiris are innocent, they why they pushed out lakhs of pandits out of kashmir. Mr. savukku, some times you are behaving like a mentally retarded person.
rajesh.v
முஸ்லீம்களின் தீவிரவாதம் உருவாக காரணமாக இருந்ததே அமெரிக்காவின் தீவிரவாதம்தான், அன்றைக்கு யூதர்களை பலஸ்தீன பாலைவனப்பகுதியி ல் குடியேற்றி யூதர்களின் அத்துமீறலை வளர்த்துவிட்டதன ் விளைவு இன்று உலகம் முழுவதும் முஸ்லீம்களின் தீவிரவாதம் பரவ காரணமாயிருக்கிற து.
காஸ்மீரிகளை இந்தியர்கள் என்று பொத்தம்பொதுவாகச ்சொல்லுபவர்கள் டில்லியிலும் பம்பாயிலும் காஸ்மீரிகள் நடமாடினால் தீவிரவாதிகளாகவே பார்க்கின்றனர்.
ஈழத்தமிழனுக்கு வாடகைக்கு வீடு கொடுக்கக்கூடாது என்று தமிழ்நாட்டிலேயே தமிழினத்தை பயங்கரவாதியாக பார்த்த காலம் உண்டு.
தீவிரவாதிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்கவேண்டும், மூலம் இல்லாமல் கருவறுக்கவேண்டு ம் என்றெல்லாம் ஜனநாயகம் போர்த்திய ஆட்சி அதிகாரம் கொண்ட தீவிரவாதிகள், நாட்டு மக்களுக்கு ப்றைன் வாஸ் செய்வது போலவே,
இவர்களால் உருவான தீவிரவாதிகளும் வேறு வழியில்லாமல் பதிலுக்கு செய்கின்றனர்.
ஈராக்கில் அமெரிக்கா படைகள் நுழைந்து ஒட்டுமொத்தமான மனித படுகொலையை செய்தால் அவை நேசநாடுகளின் ஜனநாயகப்போர், என்றும் அதே செயற்பாட்டை ஒசாமா பின்லாடன் செய்தால் பயங்கரவாதம் என்றும் பெயர்சூட்டி முடிக்கின்றனர்.
ராஜீவ் மக்கள் தலைவர் என்று சொல்லுபவர்கள் அவர் எப்போது மக்களால் தெரிவு செய்யப்பட்டு பிரதமரானார் என்பதை அறிய முயற்சிக்கவில்ல ை, நேருவின் பேரன் என்ற தகுதியை மட்டும் கொண்டு தன்னிச்சையாக ஜெய்ல் சிங்கும், டிக்சித்தும், நாராயணன் போன்றவர்களும் முடிவெடுத்து ஈழத்தில் 4,000 பெண்கள் கற்பழிக்கப்படுவ தற்கு ராஜீவ் காரணமாயிருக்கிற ார். 10,000 பேரின் படுகொலை ராஜீவ் என்ற ஒற்றைமனிதனால் ஈழத்தில் நிகழத்தப்பட்டது .
தீவிரவாதத்தின் மூலவேர் இப்படித்தான் உருவானது என்பதை பணிவுடன் தெரிவித்துக்கொள ்ளுகின்றேன்.
http://koothadiveddai.blogspot.com/
I feel ashamed that I have supported you once...
You remains me karuna, initially he was like you, until get it in to CM post, Tamil, Tamil and Tamil but now, u knows better than me about him :)
You were against of corruption once (not really, took revenge on your enemies but now, to keep your blog visitors, you are using negative publicity. I believe you are funded to write this kind of articles)
Otherwise, why don't you right about apsal guru's Pakistan stay, how he got linked to go? Who were involved etc and reveal true color of Pakistani terrorists if you are loyal enough to India? I expect a next story written by you about a very poor man, KASAB was kidnapped and fallaciously accused him as Mumbai attacker, India by RAW.
I expect courage from you in publishing this comment too
Such a joke this article is.
Tamilscafe.blogspot.com
Tamilsnadu.blogspot.com
RSS feed for comments to this post