முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
தூக்கிலிடப்படுவது ‘லைவ்’ ரிலே ? ஒரு குரூரத் திட்டம் அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 9
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
சனிக்கிழமை, 10 செப்டம்பர் 2011 07:41

8-26-2011-22-vellore-prison-receives-commun

 

1999ம் ஆண்டு ராஜீவ் கொலை வழக்கில் நளினி, முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகியோருக்கு உச்ச நீதிமன்றம் தூக்கு தண்டனையை உறுதி செய்ததிலிருந்தே இவ்வழக்கில் சம்பந்தப் பட்டவர்கள் மரணத்தை எதிர்நோக்கி காத்திருந்தனர்.   2000ம் ஆண்டில் நளினியின் கருணை மனுவை மட்டும் சோனியா மற்றும் தேசிய மகளிர் ஆணைய தலைவர் மோகினி கிரி ஆகியோரின் பரிந்துரையின் படி, தமிழக ஆளுனர் பரிசீலித்து ஆயுள் தண்டனையாகக் குறைத்தார்.   ஆனால் முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளனின் கருணை மனுவை ஆளுனர் நிராகரித்தார்.

 

இதையடுத்து இம்மூவரும் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பியிருந்தனர்.   11 ஆண்டுகள் 4 மாதங்கள் கழித்து, திடீரென்று குடியரசுத் தலைவர் கருணை மனுக்களை நிராகரித்து செய்தி அனுப்பியதையடுத்து அதிர்ச்சி அலைகள் பரவின.  தமிழகமெங்கும் போராட்டம் வெடித்துக் கிளம்பியது  கட்சிகளை அப்பாற்பட்டு மூவர் உயிரைக் காக்க வேண்டும் என்று உரத்த குரலில் கோரிக்கை வைத்தனர்.

 

நீதிமன்றத் தடையுத்தறவு ஏதும் இல்லாததால் ஆகஸ்ட் 26ம் தேதி, தமிழக அரசின் உள்துறை, சிறைக் கண்காணிப்பாளர் மூலமாக மூவருக்கும் செப்டம்பர் 9ம் தேதி அன்று தூக்குத் தண்டனை விதிக்க இருப்பதாக தகவல் தெரிவிக்கும் கடிதத்தை மூவருக்கும் அளித்தார்.  உடனடியாக சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் மற்றும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் களத்தில் இறங்கினர்.   நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப் பட்டதையடுத்து, உயர்நீதிமன்ற நீதிபதிகள் நாகப்பன் மற்றும் சத்யநாராயணா ஆகியோர் இடைக்காலத் தடை விதித்து 30ம் தேதி உத்தரவிட்டதையடுத்து தமிழகம் நிம்மதிப் பெருமூச்சு விட்டது.

 

இந்நிலையில், செப்டம்பர் 9 என்று தேதி நிர்ணயம் செய்யப் பட்ட பிறகு, வேலூர் சிறை நிர்வாகம் தூக்கிலிடுவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யத் தொடங்கியது. தூக்கிலிடும் இடத்தைச் சுற்றி தடுப்புகள் எழுப்பப் பட்டன.    லோக்கல் காவல்துறை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை, அதிரடிப் படை, மற்றும்  சிறைத் துறையின் கமாண்டோப் படை ஆகிய நான்கடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறையைச் சுற்றிச் செய்யப் பட்டன.  சிறையின் வெளிப்பகுதியில், கண்காணிப்பாளரின் வண்டியை நிறுத்தும் இடத்தில், தமிழ்நாடு காவல்துறையின் கட்டுப் பாட்டு அறை தற்காலிகமாக ஏற்படுத்தப் பட்டது.

 

இந்நிலையில், இந்த பாதுகாப்பு ஏற்பாடுகளோடு, இந்த தூக்கு தண்டனையை நேரடி ஒளிபரப்பு செய்வதற்கும் ஏற்பாடு செய்யப் பட்டிருந்ததாக அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.

 centraljailwomen

இது குறித்து, சிறைத்துறையின் உயர் அதிகாரி ஒருவரிடம் பேசினோம்.  தன் பெயர் குறிப்பிட விரும்பாத அவர் “வேலூர் சிறையில் பொது மக்கள் மனு பார்க்கும் இடத்துக்கு பின்புறம் தூக்கிடப் படும் இடம் இருக்கிறது.  அது சிறை வளாகத்துக்கு உள்ளே அமைந்திருக்கிறது.  கைதிகளை பார்வையிட வரும் பொது மக்கள் அதைக் காண முடியும்.  அந்த தூக்கிலிடும் இடத்தைப் பார்க்கும் வகையில் சிசிடிவி எனப்படும் ஒரு அதி நவீன காமெரா பொருத்தப் பட்டுள்ளது.   அந்த காமெரா நேரடியாக தூக்கிலிடும் இடத்தை கவர் செய்யும் வகையில் அமைந்துள்ளது.  தூக்கிலிடப்படும் போது தூக்கிடப்படுபவரை 15 அடி தூரத்திலிருந்து அழைத்து வரும்போதே இந்தக் காமெரா மூலம் பார்க்க முடியும்.

 

சிறை நிர்வாகத்திற்கு சிறைக்கு வெளியே காமெராவைப் பொருத்துவதற்கு மட்டும் தான் உரிமை உள்ளது.  பாதுகாப்புக் காரணங்களுக்காகக் கூட சிறைக்கு உள்ளே காமெராவைப் பொருத்துவதற்கு விதிகளில் இடம் இல்லை. அப்படியே பாதுகாப்புக் காரணங்களுக்காக பொருத்துவதாக எடுத்துக் கொண்டாலும் தூக்கிடும் இடத்தைப் பார்த்து பொருத்த வேண்டிய அவசியம்   என்ன ? அதுவும், செப்டம்பர் 9 அன்று தூக்கு என்று முடிவெடுத்த 26ம் தேதி அறிவித்தனர்.  அதற்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு 28 அன்று, இந்தக் காமெராவைப் பொருத்த வேண்டிய தேவை என்ன ? இந்தக் காமெராவை, மத்திய உளவுத் துறையின் உத்தரவின் படியே பொருத்தப் பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் இந்தக் காமெராவைப் பொருத்தும் பொழுது, மத்திய உளவுத்துறையினர் நேரடி மேற்பார்வை செய்தனர் என்றும் தெரிகிறது.

 

தற்போது காமெரா பொருத்தப் படும் இடத்தின் அருகில் சிறைக் கண்காணிப்பாளருக்கான புதிய அறை கட்டும் பணி கடந்த ஆறு மாத காலமாக நடைபெற்று வருகிறது.  தூக்கு தண்டணைக்கு நாள் குறித்து ஆணை சிறைக்கு வந்த பிறகு, அந்தக் கட்டுமானப் பணிகள் முழுவதும் திடீரென்று நிறுத்தப் பட்டன.  இதன் பிறகுதான் இந்தக் காமெரா 28ம் தேதி பொருத்தப் பட்டுள்ளது” என்றார்.

 

இது குறித்து, அவர்களின் வழக்கறிஞர் புகழேந்தியிடம் கருத்து கேட்டோம். “21 ஆண்டுகளாக, நளினி, சாந்தன், முருகன், பேரறிவாளன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் மற்றும் ரவிச்சந்திரன், வெளி உலகத்தையே காணாமல் தனிமைச் சிறையில் இருக்கின்றனர்.  இவர்களை சிறையிலிருந்து வெளியே விடக் கூடாது என்று எந்த சக்தி விரும்பிகிறதோ, அந்த சக்திதான்  இந்த விஷமத்தனமான சம்பவத்திற்கு காரணமாக இருக்கக் கூடும்” என்றார்.

 

தொடர்ந்து, “ஒரு வேளை நீதிமன்றத்தில் தடை கிடைக்காமல், முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் தூக்கிலிடப்பட்டால் அவர்கள் படும் வேதனையையும், அவர்களின் இறப்பையும் நேரடி ஒளிபரப்பில் கண்டு களிக்கலாம் என்று சில மனித நேயமற்றவர்கள் விரும்பியிருக்கக் கூடும்.   இன்றைய விஞ்ஞான வளர்ச்சியில், எந்த நாட்டில் இருந்தாலும், மருத்துவமனையில் இருந்தாலும் கூட, கம்ப்யூட்டர் மூலமாக நேரடி ஒளிபரப்பைக் காண இயலும் வசதி வாய்ப்புகள் இருக்கும் போது, இந்தக் கொலைக் காட்சியை காண விரும்பியவர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக இது நடந்திருக்கலாம் என்றார். இல்லையென்றால் மத்திய உளவுத்துறை இது போன்ற காரியத்தில் ஈடுபடுவதற்கான அவசியமே இல்லை.”

 

 

இது தொடர்பாக சிறைத் துறை கூடுதல் டிஜிபி எஸ்கே.டோக்ரா விடம் பேசிய போது, ”நாங்கள் அனைத்தையும் விதிப்படியே செய்தோம்.  சிறைப் பணியாளர்களைத் தவிர வேறு யாரும் தூக்குக் கைதிககளிடமோ, தூக்கிடப் படும் இடத்தின் அருகிலோ நெருங்க முடியாது.  நீங்கள் சொல்லும் விஷயத்துக்கு அடிப்படை ஏதுமில்லை” என்று முடித்துக் கொண்டார்.

 

வெள்ளையர்கள் இந்தியாவை ஆண்ட போது கூட,  தூக்கிலிடுவதை புகைப்படம் எடுக்கக் கூட அனுமதிக்கவில்லை.  அரபு நாடுகளில் தான், மரண தண்டனை பொதுமக்கள் முன்னிலையில் நடைபெறும்.  ஆனால், இந்தியா போன்ற ஒரு ஜனநாயக நாட்டில், இது போல மரண தண்டனையை நேரடி ஒளிபரப்பு செய்வதை நாகரீகம் உள்ள எந்த மனிதனும் ஏற்றுக் கொள்ள முடியாது.

 

 நன்றி மீடியா வாய்ஸ்

 

Comments  

 
0 #38 gchithirai 2011-09-16 14:58
congeres leader thangabaluvin valai camera poruthuvathu.
Quote
 
 
+1 #37 pirayan 2011-09-14 20:24
அப்ப உஙக லாஜிக் படி ராஜ பக்க்ஷய மன்னிச்சு விட்டுரலாமா?
Quote
 
 
-1 #36 வால்டர் வணங்காமுடி 2011-09-13 15:33
//இந்தியா போன்ற ஒரு ஜனநாயக நாட்டில்//

என்னது இந்தியா ஜனநாயக நாடா? சொல்லவே இல்ல.... :lol:
Quote
 
 
-1 #35 வால்டர் வணங்காமுடி 2011-09-13 15:31
சத்ரியன் உயிர்துறப்பதை நேரடியாக பார்த்தால், பார்ப்பவர்களுக் கு மோட்சம் கிடைக்கும் என்று மன்னு தர்மத்தில் குறிப்பிடப் பட்டிருக்கோ என்னவோ...!!! லாரியில் அடிபட்டால் கூட மோட்சம் கிடைக்குமே...!!! சம்பந்தபட்ட விஷமிகள் சிந்திப்பார்களா ?
Quote
 
 
0 #34 வால்டர் வணங்காமுடி 2011-09-13 15:27
[ஃஉஒடெ நமெ="டமில்மகன்"]அரபு நாடுகளில் தான், மரண தண்டனை பொதுமக்கள் முன்னிலையில் நடைபெறும்.
நல்ல ஏற்பாடு இதை மக்கள் பாக்கணும் அப்போதான் பயம் வரும் . குற்றம் செய்ய நினைக்கும் போது இந்த காட்சி மனசுல வரணும் . பயம் பயம் பயத்துனால மட்டும்தான் மனுசன திருத்த முடியும் மத்திய உளவுத்துறை கு பாராட்டுகள் .[/ஃஉஒடெ]


பேரை மாத்துங்க பாஸ். 'தமிழ் மகனாம்'ல..?
Quote
 
 
+4 #33 eelam 2011-09-13 15:25
Some eye opener for you. You should take out 5min. to read this for yourself and your childrens / generations to come :

· Mrs. Sonia gandhi (vincci)

o 5th std. educated

o Italian citizen name - Antonia Maino

o Was a waitress. She met Rajiv Gandhi, who was enrolled in Trinity College at the University of Cambridge in 1965 at a Greek restaurant (Varsity Restaurant) while working there, as a waitress to make ends meet

o Then sales executive in UK

o Holds a fake degree in English of Cambridge university

This is the qualification of the lady, who is governing India (beneficiary of 6 biggest scams in Indian history including Boforce, KGB, 2G, Equity sales fraud, Hawala and Swiss accounts)...Sonia Gandhi is currently in Switzerland not in USA to move their black money from their Swiss accounts. She and Congress are fooling people of India that she is in USA for some surgery/operation. She can have an operation/surgery in India also. India has worlds’ best hospitals and medical facilities available now. She can even call any doctor from world to India as visiting doctor to take opinion on her surgery/operation but as it is all fake story to fool India and its innocent people to transfer Black money before Indian people demands government to act and get it black money back to India. Government is also protracted and not acting on black money now till all politicians take out their money from their swiss accounts.
Quote
 
 
+1 #32 வால்டர் வணங்காமுடி 2011-09-13 15:24
//இந்நிலையில், இந்த பாதுகாப்பு ஏற்பாடுகளோடு, இந்த தூக்கு தண்டனையை நேரடி ஒளிபரப்பு செய்வதற்கும் ஏற்பாடு செய்யப் பட்டிருந்ததாக அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது .//

இந்த மூனுபேரை தூக்குல போடுவதை லைவ் ரிலே பண்றதெல்லாம் இருக்கட்டும் பாஸு. 'ராஜிவ்' செத்ததை லைவ்'வா பதிவு பண்ணி, அந்த டேப்பை இன்னிக்கு வரைக்கும் பார்த்து பரவசம் அடையும் ஆட்களை பத்தி ஏன் எந்த 'இந்தியனும்' பேச மாட்டேங்கிறான்? அவன் மட்டும் பாத்தா பரவாயில்லை. அவன் கூட்டாளிகளிங்க எல்லாத்துக்கும் போட்டு காட்டுறான். அப்படி அந்த டேப்பை பாத்தவங்க எல்லாருமே இன்னிக்கு மத்தியில் செல்வாக்கான துறைகளில் இருப்பதாகவும் ஒரு வதந்தி இருக்கே. இதை பத்தி ஏன் எந்த மான்ம் வெக்கம் உள்ள எந்த 'இந்தியனும்' பேச மாட்டேங்கிறான்? அமெரிக்காவுக்கு புடிக்காத எவனும் உயிரோடவே இருக்க முடியாது. ஆனால் அமெரிக்காவுக்கு புடிக்காத அந்த 'டேப் மாறி' இன்னும் எப்படி இந்தியாவின் ஆளுநரா இருக்கான்? அப்படி அந்த டேப்பில என்ன தான் இருக்கு? சி.பி.ஐ கேட்டே அந்த டேப்பை குடுக்கல்ன்னா, அந்த டேப்பில சி.பி.ஐயையே ஆட்டிப் படைக்கும் ஏதோ மேட்டர் இருக்குன்னு தானே அர்த்தம்? ஏன் அந்த டேப்பை வாங்க எவனும் எந்த முயற்சியும் எடுக்கல?
Quote
 
 
+9 #31 வால்டர் வணங்காமுடி 2011-09-13 11:41
1. இந்திய அரசாங்கம் 'குப்பி','கன்னத்தில் முத்தமிட்டால்' போன்ற படங்களுக்கு அன்மதி கொடுக்கிறது. ஆனால் 'செங்கடல்','காற்றுகொன்னவேலி ' மற்றும் இராஜிவ் கொலையின் மறுகோணத்தை சொல்லும், கடந்த 20 வருடங்களுக்கு மேலாக சென்சாரினால் தடைசெய்யப் பட்டும் பொட்டியில் தூங்கும் ஆர்.கே.செல்வமணியின் 'குற்றப்பத்திரிக ்கை' போன்ற படங்களை தடைசெய்யும்.
2. சி.பி.ஐ விசாரித்த அனைத்து கோப்புகளும் அதன் வலைதள்த்தில் கிடைக்கும் ராஜிவ் கொலைவழக்கை தவிர.
3. ஒரு நாட்டின் முன்னாள் பிரதமரின் கொலை வழக்கு எவருக்கும் தெரியாமல் ஒரு இருட்டு சட்டத்தின் கீழ் மர்மமாக நடைபெற்றது.

டேய் பொறம்போக்குகளா.... அப்படி என்ன எழவு மர்மத்தைடா நீங்க ராஜிவ் கொலை வழக்கில் பேணிக் காத்துகொண்டு இருக்கிறீர்கள்? ஏன் எவனும் அதை பத்தி பேச மாட்டேங்கிறான்? காந்தி செத்ததையும்,இந் திரா காந்தி சாகும் பிண்ணனியும் வைத்துகூட படம் வந்திருக்கு. ஏன் இராஜிவ் காந்தி கொலை பற்றி எந்த படத்தையும் வரவிடமாட்டேங்கு றீங்க? ஏன் புலிகள் தான் இதை செய்தார்கள் என்கிற் ரீதியில் வரும் படத்தை மட்டும் அனும்திக்கிறீர் கள்?
Quote
 
 
+10 #30 வால்டர் வணங்காமுடி 2011-09-13 11:31
1.மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்டார். விசாரணை வெளிப்படையாக நடந்தது. கொலையாளி சார்ந்த இயக்கம் இன்னும் இயங்குகிறது.
2.இந்திராகாந்தி படுகொலை செய்யப்பட்டார். விசாரணை வெளிப்படையாக நடந்தது.கொலையாளி சார்ந்த மக்களோ இன்னும் உயிரோடு தான் இருக்கிறார்கள்.
3.ராஜிவ்காந்தி படுகொலை செய்யப்பட்டார்.
— விசாரணை வெளிப்படையாக நடைபெறவில்லை. சி.பி.ஐயின் வலைப் பக்கத்தில் கூட அவர்கள் கையாண்ட அனைத்து வழக்குகளின் விவரங்களு உண்டு. இராஜிவ் வழக்கை தவிர.
— கொலையாளி சார்ந்த மக்கள் ஒன்றறை லட்சம் பேர் இதற்காக பழிவாங்கப் பட்டார்கள்.

காரணம் ‘தமிழன் இளிச்சவாயன். பணம் கொடுத்தால் காட்டிகொடுக்கும ் ஆட்கள் அதில் உண்டு’ என்பதால்.
Quote
 
 
+7 #29 வால்டர் வணங்காமுடி 2011-09-13 11:27
ராஜிவ் கொலையை பற்றி எந்த பிண்ணனியும் தெரியாமல் எதோ கடமைக்கு என்று (இவர்கள் எல்லாரும் இந்தியர்களாம். :லொல்: ) கருத்தெழுதும் கந்தசாமிகளை சவுக்கில் தான் காண்கிறேன். எம்பா கந்தசாமிகளா? இதெல்லாம் ஒரு பொழப்பா உங்களுக்கு? அது சரி. 'பொண்ணுங்க குளிக்கும்போது ஒளிஞ்சிருந்து பார்த்தவனை தெய்வமாகவும், நாட்டை காட்டிகொடுத்தவன ை மகாத்மாகவும்,ஒர ு பேடியை அவதாரமாகவும்' கும்பிட்டு பழக்கப் பட்டுபோன ஒரு சமூகத்தில், ராஜிவ் கொலையை "ஒழுங்கா விசாரி" என்று சொன்னால் மட்டும் திடீர்னு புத்தி வந்து விடப்போகிறதா? உங்களை பொருத்தவரை 'தமிழன் சாவனும்' அவ்வளவு தானே. நடத்துங்க. நடத்துங்க.
Quote
 
 
+2 #28 anonymous 2011-09-13 11:12
[ஃஉஒடெ நமெ="டமில்ச்னடு.ப்லொக்ச்பொட்"]என்ன ஒரு மனித தன்மையற்ற மிருக கூட்டம், பேட்டரி வாங்கி கொடுத்தான்னு ஒருத்தனை தூக்கில் இட செய்வது உச்ச கட்ட மனித உரிமை மீறல்..


மில்ச்சஃபெ.ப்லொக்ச்பொட்.சொம்
மில்ச்னடு.ப்லொக்ச்பொட்.சொம்[/ஃஉஒடெ]
[ஃஉஒடெ நமெ="டமில்ச்னடு.ப்லொக்ச்பட்]என் ன ஒரு மனித தன்மையற்ற மிருக கூட்டம், பேட்டரி வாங்கி கொடுத்தான்னு ஒருத்தனை தூக்கில் இட செய்வது உச்ச கட்ட மனித உரிமை மீறல்.
இது கயிரை தான் பிடிதென் மரு முனைஇல் மாடு இருந்ததை பார்கல என்பது பொல தான்
Quote
 
 
-6 #27 Priyan 2011-09-12 20:12
மனித வெடிகுன்டாக செயல்பட்ட தனு செய்தது கூட சின்ன தவரு தான். பட்டனை அழுத்தியதர்க்கு தன்டனையா?? தமிழின தலைவர்கல் உடனடியாக தனுவுக்கு சிலை வைக்க ஆவன செய வென்டும்
Quote
 
 
-5 #26 ookkllo 2011-09-12 17:08
evanukalukku vakkalathu vankum vaiko seman nedumaram savvku evanukalai thukkil podavendum eathaiveda therumavillan pedi evani adithe kollavendum
Quote
 
 
+3 #25 danguvaaru andhurum 2011-09-12 12:13
Quoting nanbenda:
please read rajiv kolai valaku by Ragothaman.
It is only Rs. 130
Much pacier than a crime novel

These fellows must be hanged.


இந்த புத்தகத்தின் 208 பக்கத்தில் முன்னால் CBI Director ரகோத்தாமன் CBI-Special Investigation Team குற்றப் பின்னனி உள்ள மற்றும் கொலைச் சதியில் ஈடுபட்ட அனைவரையும் விசாரிக்கவில்லை என்பதனை ஒப்புக் கொண்டுள்ள பின்னும் இவர்களை தூக்கிலிட வேண்டும் என்பதில் எந்த நியாயமும் இல்லை. அதே வேளையில் இவர் ஒன்றும் தானாக முன்வந்து ஒப்புக் கொள்ளவில்லை, ஜெயின் கமிஷன் அறிக்கையில் உள்ளதை ஏற்றுக் கொண்டிருக்கிறார ் என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.

CBI-SIT யின் கூற்றுப் படி இவர்கள் மூவரும் குற்றவாளிகள் என்று ஏற்றுக் கொண்டாலும், மேற்கூறிய அனைவரையும் முறையாக விசாரித்திருந்த ால் இம்மூவரின் குற்றப் பங்கைவிட மறைக்கப் பட்ட மற்றவர்களின் பங்கு அதிகமாக கருதப் பட்டு இவர்களுக்கு குறைவான தண்டணையே கிடைத்து இருக்கும். ஆகவே இம்மூவரையும் தூக்கில் இடுவது முறையற்றது.

அப்படிக் கேட்கும் சுப்ரமணிய சாமி உட்பட சிலருக்கு CBI-MDMA முடுக்கி விடப்பட்டு விடுமோ, தாங்கள் எங்கே மாட்டிக் கொள்வோமோ என்ற அச்சம்தான் காரணம். இது மிகப் பெரிய கொலைச் சதி என்று தெரிந்த பின்னும் இவர்கள் மூவரை தூகில் போட வேண்டும் என்பது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதுவே.

இங்கே அதுபோன்று கருத்துக்கள் உண்மை தெரியாமல் பதிவு செய்பவர்களுக்கு குறிப்பாக “நீங்களும் ஏமாந்து எங்களையும் ஏமாறச் சொல்லதீர்”, தெரிந்தே சொல்பவர்களை (அதற்கு பல காரணங்கள் உண்டு) திருத்தமுடியாது விட்டு விடுங்கள்.
Quote
 
 
-7 #24 Annian 2011-09-12 11:39
எப்படி ஊழலுக்கு எதிராக மக்கள் கொதிப்பாக உள்ளார்களோ, அதுபோலவே, இது போல சட்டத்தை தம் சொந்த சுயலாபஙக்ளுக்கா க கையில் எடுத்துக்கொள்ளு ம் "அரைவ்வேக்காடுகள ின்" (வைக்கோல், ச்சீ மான், நெடுமரம்,) மீதும் நடு நிலையான மக்கள் கோபமாகத்தான் உள்ளனர்,,,,,,
Quote
 
 
-9 #23 manithan 2011-09-12 11:15
மிகுத்து எழுதப்பட்ட பொய். எப்பெடில்லாம் யோசிக்கிறாங்கப் பா... சதாம்ஹுசைன் தூக்கிலடப்பட்டத ே காணொளியாக கிடைக்கும்போது இந்த கொலை வல்லுனர்கள் சயனைடு விரும்பிகள், உயிராயுதபனிகள், சட்டப்படி தூகிலடப்படுவது ஒன்றும் பெரிய விடயமே இல்லை...

இவுங்களா சயனைடு சப்பி செத்த அது தியாகம்...
தற்கொலை கொண்டு கட்டி 100 பேரை கொன்னுட்டு செத்தா அது வீரம்...
எதிர் சமரில் சுட்டு கொன்னால் அவரு மாவீரரு...
செய்த கொலைக்காக...சட்டம் கொன்றால்...அது மட்டும் தப்பு...
என்னடா உங்க நியாயம்...
Quote
 
 
-2 #22 Thamizhan 2011-09-12 11:09
May be central government want to ensure whether they are really hanged to death or not. I don't see anything wrong here.
Quote
 
 
-3 #21 Thamizhan 2011-09-12 11:07
[ஃஉஒடெ நமெ="கன்னன்5"]பிரபாகரன் போட்டோகிராபரை அனுப்பி படம் பிடித்து ராஜிவ் கொலையை ரசிக்க திட்டம் போட்டதை பற்றி சவுக்கு ஏன் எழுதவில்லை? இறந்த அந்த போடோகிரபரும் தமிழர் தான்.[/ஃஉஒடெ]

Excellent comment. Savukku is biased.
Quote
 
 
-1 #20 Annian 2011-09-12 09:59
இது ஒரு நல்ல ஏற்பாடு,,,,,,இல ்லையெனில் சிலக் கூலிப்படைகளை அண்டிப் பிழைப்பவர்கள் அந்த மூன்று "உலக உத்தமர்களும்" இன்னும் உயிருடன் தான் உள்ளனர் என்று மனதார பொய்ப் பேசுவார்கள்,,,, ,,,,,
Quote
 
 
+9 #19 kannan5 2011-09-11 23:26
பிரபாகரன் போட்டோகிராபரை அனுப்பி படம் பிடித்து ராஜிவ் கொலையை ரசிக்க திட்டம் போட்டதை பற்றி சவுக்கு ஏன் எழுதவில்லை? இறந்த அந்த போடோகிரபரும் தமிழர் தான்.
Quote
 
 
+7 #18 S.Vydhianathan 2011-09-11 15:41
It is nothing but a spicy story to attract the attention of readers. The jail manual never allows direct live relay of hanging procedures. The story is nothing but a figment of imagination.
Quote
 
 
-19 #17 sureshbabu 2011-09-11 03:50
நம்முடைய பிரதமரை கொலை செய்ய / உதவிய இந்த கொலைகார குமபலை தூக்கில் போடுவதை பார்க்க முடியாமல் போனதர்காக என் மனம் தவியாய் தவிக்கிரது. PLEASE HANG THEM AS SOON AS POSSIBLE
Quote
 
 
+3 #16 nanbenda 2011-09-10 23:54
please read rajiv kolai valaku by Ragothaman.
It is only Rs. 130
Much pacier than a crime novel

These fellows must be hanged.
Quote
 
 
+21 #15 Rajaaaaaaaaaa 2011-09-10 22:45
என்ன சவுக்கு உங்க சொந்த பதிவு ஏதையும் காணம் எல்லாம் புத்தகத்தில் இருந்து எடுத்து போடுறீங்க
Quote
 
 
-3 #14 vasudevan 2011-09-10 22:19
i dont think this kind of voyuristic pleasure experiment will be allowed by any civilised country. But yes, those three convits should be hanged without any mercy. we need not to see rajiv as an individual, we should see that it was an assualt on the indian sovernity. Also the so called tamil sympathisers, there were some 17 tamilians who lost thier ivies on the same night when rajiv was killed. aren't they tamils.
Quote
 
 
+4 #13 tamilsnadu.blogspot 2011-09-10 19:56
என்ன ஒரு மனித தன்மையற்ற மிருக கூட்டம், பேட்டரி வாங்கி கொடுத்தான்னு ஒருத்தனை தூக்கில் இட செய்வது உச்ச கட்ட மனித உரிமை மீறல்..

Tamilscafe.blogspot.com
Tamilsnadu.blogspot.com
Quote
 
 
+6 #12 sam 2011-09-10 18:29
சவுக்குக்கு சோனியாவை பிடிக்காது யென்பது ஊருக்கே தெரியும். அதற்க்காக இப்படி யெல்லாம் கட்டுக்கதை விட வேன்டாம்.
Quote
 
 
+3 #11 rajadhadi 2011-09-10 15:21
Three criminals was proved and given all legal assistance. Everybody telling tamils not to be hanged, dead peoples with thiru rajiv also tamils. the supporting group and parties should be punished. supporting convicted criminals should be also viewed as punishable offence.
Quote
 
 
0 #10 kvpanand 2011-09-10 14:39
அது என்ன ஆந்திரா பொன்னுஙக...அவங்க என்ன கேவலமா ... உஙக ஊர் அட்ரெஸ் சொல்லு.. இல்ல உஙக வீடு அட்ரெஸ் சொல்லுடா வெண்ணை...
Quote
 
 
+11 #9 ksn.balaji 2011-09-10 14:19
DON'T BELIVE THIS ARTICLE .DEAR SAVAKKU SIR
DON,T PUBLISH LIKE THIS TYPE OF NEWS .AS OUR
INDAN IPC LAWS THIS IS NOT POSSIBLE
Quote
 
 
+10 #8 SAMPATHKUMAR 2011-09-10 14:08
So far Savukku was writing based on certain proofs and made a fan following. But now in the name of Tamil cause, he has fallen in Mud. I am a Tamilian. But I will never support a convict. Writing imaginary stories like the above is not expected from Savukku.
Quote
 
 
+7 #7 SAMPATHKUMAR 2011-09-10 14:05
I agree with Vennai. In the name of Tamil,and Tamilan these people are trying to misguide the public like MK did for the last 50 years (and looted money). Convicted has to be punished whether he is tamilan, Malayali, Huindu, Muslim or Christian. If we start showing leneinecy in the name of a particular sect, where is the law? Savukku has lost his credibilty by supporting this.
Quote
 
 
+7 #6 Mukilan 2011-09-10 12:42
please read the following artile named "Death Penalty is nothing but bruttal murder of the state" says K. T. Thomas former Surepeme Court Judge who delivered the death penalty in the Rajiv case.
He stated in his article:
"It was my misfortune to have presided over the Supreme Court bench which pronounced the judgement as per which the four accused were sentenced to death." and
"But, unfortunately neither government nor public pay its attention to the issue of human issue of reformation. They know only short-cut; liquidate the criminal and rejoice in the wild pleasure that brings about. Let me caution you from my long experience. It’s quite possible that guilty could be found innocent by court. But, sometimes, though very rarely only, even innocent might be found guilty. This is the consequence of sensationalisat ion of cases."
link is
http://www.asianage.com/ideas/death-penalty-nothing-brutal-murder-state-814
in which
Quote
 
 
-2 #5 SEKHAR RAJU 2011-09-10 11:28
No one can believe this story. There is no truth at all. Stop supporting these terrorists. They should face death immeditely at any cost.
Quote
 
 
+33 #4 Kaliraj 2011-09-10 11:02
வியாதியில் ஆஸ்பத்திரியில் செத்திருக்கவேண் டியதெல்லாம் இப்படி திரும்பு வந்து அடுத்தவன் சாவை பாக்கணும்னு அடம்பிடிக்குது....சாவின் விளிம்பு வரை போயும் இன்னும் புத்தி வரவில்லை என்றால்...காலம் அவருக்கு கொடுக்கவிருக்கு ம் தண்டனை இன்னும் கொடியதாக இருக்கும்..
Quote
 
 
-23 #3 Tamilmagan 2011-09-10 10:57
அரபு நாடுகளில் தான், மரண தண்டனை பொதுமக்கள் முன்னிலையில் நடைபெறும்.
நல்ல ஏற்பாடு இதை மக்கள் பாக்கணும் அப்போதான் பயம் வரும் . குற்றம் செய்ய நினைக்கும் போது இந்த காட்சி மனசுல வரணும் . பயம் பயம் பயத்துனால மட்டும்தான் மனுசன திருத்த முடியும் மத்திய உளவுத்துறை கு பாராட்டுகள் .
Quote
 
 
+5 #2 sankarasubramanian.K 2011-09-10 10:00
இது வன்மயாக கன்டிக்கதக்கது. ஜனனாயக நாட்டில் இது சாதியம் அல்ல. எந்த ஒரு இன்டியனும் இதை ஒப்புக்கொல்லமாட ்டன்.
Quote
 
 
-19 #1 vennai 2011-09-10 08:42
as per law this is not at all possible. for business dont publish these type news. better bring some andhira girls and do business rather than doing press prathol...........r u eating Pee ... how can u publish these type of foolish news....
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 34 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday2318
mod_vvisit_counterYesterday14175
mod_vvisit_counterThis week49133
mod_vvisit_counterLast week78861
mod_vvisit_counterThis month261952
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12784071