முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
தள்ளிக்கோட்டை ராஜுத் தேவர் பாலு அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 40
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
திங்கட்கிழமை, 19 செப்டம்பர் 2011 12:43

ஆனால் திமுகவின் மிகப்பெரிய முதலை யார் தெரியுமா ?  தள்ளிக்கோட்டை ராஜுத் தேவர் பாலுதான்.   இவர்களை விட மாறன் சகோதரர்கள் பெரிய முதலை என்றாலும், டிஆர்.பாலு, யுபிஏ.1 அரசாங்கத்தில் சம்பாதித்தது போல யாரும் சம்பாதிக்க வில்லை.

  

திமுகவின் மிக முக்கியப் புள்ளியாகவும், முதல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தில் தரை வழி மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை அடித்த கொள்ளைகள் கொஞ்ச நஞ்சம் அல்ல.

 

மத்தியில் உள்ள திமுக அமைச்சர்களாகட்டும், மாநிலத்தில் உள்ள அமைச்சர்களாகட்டும், ஊழல் மற்றும் நில அபகரிப்புப் புகாரில் ஒருவர் பின் ஒருவராக பதவியை இழந்து சட்டத்தின் பிடிக்கு அஞ்சி வாழ்ந்து வரும் நிலையில், எவ்வித புகாருக்கும் ஆளாகாமல், டி.ஆர்.பாலு மட்டும் தப்பியே வருகிறார்.

 

தனது சொந்த நிறுவனமாக கிங் கெமிக்கல்சுக்கு எரிவாயு ஒதுக்கீடு செய்ததாக எழுந்த புகாரைத் தவிர, வேறு எந்தப் புகாரிலும் சிக்காமல் இருக்கிறார் பாலு. ஆனால், யுபிஏ 2 அரசாங்கத்தின் அமைச்சரவை அமைக்கப்படும் போது, டி.ஆர்.பாலுவை மட்டும் வேண்டவே வேண்டாம் என்றார் மன்மோகன்.   அமைச்சரவை அமைப்பதில் மன்மோகன் சிங்கை விட ‘முக்கியப் பங்கு’ வகித்த நீரா ராடியாவின் உரையாடல்களில் இருந்தே இது தெளிவானது.

 

டி.ஆர்.பாலு பெயரைக் கேட்டாலே அலறினார் மன்மோகன் சிங்.  மன்மோகன் சிங் அலறியது ஒரு புறம் இருந்தாலும், கருணாநிதிக்கே பாலு மீண்டும் மந்திரியாவதில் விருப்பம் இல்லை.  இதற்கு முக்கிய காரணம், டி.ஆர்.பாலு, எச்சில் கையால் காக்காய் ஓட்ட மாட்டார்.  அந்த அளவுக்கு “தாராள” மனது படைத்தவர்.  திமுகவிற்கு தேர்தல் செலவுக்குக் கூட பணம் கொடுக்க மாட்டார்.

 

இழவு வீட்டில் கொள்ளையடித்த பாலு.

லிபியாவில் கலவரம் மூண்ட போது, அங்கிருக்கும் இந்தியர்களை மீண்டும் தாயகத்திற்கு அழைத்து வருவதற்கு இந்திய அரசாங்கம் நடவடிக்கைகள் மேற்கொண்டது. இவ்வாறு, எடுத்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, பல்வேறு இடங்களில் இருந்த இந்தியர்களை ஒரு இடத்துக்கு வரவழைத்து, அங்கிருந்து அவர்களை ஏர் இந்தியா விமானம் மூலம் வரவழைக்க திட்டமிடப் பட்டது.

 

மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சகம் 22 பிப்ரவரி 2011 முதல் 3 மார்ச் 2011 வரை, 13 நாட்களுக்கு கப்பல்களை வாடகைக்கு எடுத்தது.  அவ்வாறு எடுக்கப் பட்ட கப்பல்களுள் ஒன்று, தற்போது தூத்துக்குடி மற்றும் கொழும்பு பயணிகள் கப்பல் போக்குவரத்துக்காக ப்ளெமிங்கோ என்ற நிறுவனம் பயன்படுத்தும் ஸ்காட்டியா ப்ரின்ஸ் கப்பல்.   இந்தக் கப்பலை லிபிய கலவரங்களின் போது, மத்திய அரசு ஒரு நாளைக்கு 2 லட்சத்து 75 ஆயிரம் கொடுத்து வாடகைக்கு எடுத்தது.

 

இந்த ஸ்காட்டியா ப்ரின்ஸ் கப்பல் அமெரிக்காவைச் சேர்ந்த ஐஎஸ்பி என்ற ஒரு நிறுவனத்துக்கு சொந்தமானது.   அந்த ஐஎஸ்பி நிறுவனத்திடமிருந்து ப்ளெமிங்கோ நிறுவனம் இந்தக் கப்பலை வாடகைக்கு அமர்த்தியே இலங்கைக்கு சவாரி நடத்திக் கொண்டிருக்கிறது. இதற்கு ப்ளெமிங்கோ நிறுவனம் ஐஎஸ்பிக்கு கொடுக்கும் வாடகை, ஒரு நாளைக்கு 18 ஆயிரம் அமெரிக்க டாலர்கள்.

 Libya_Scottia_Prince_Page_1

Libya_Scottia_Prince_Page_2

ப்ளெமிங்கோ நிறுவனம் கொடுக்கும் 18 ஆயிரம் டாலர்கள் எங்கிருக்கிறது, இந்திய அரசு ப்ளெமிங்கோ நிறுவனம் கொடுத்த 2 லட்சத்து 75 ஆயிரம் டாலர்கள் எங்கிருக்கிறது ?

 

லிபிய நாட்டுக்கு அருகிலோ, அல்லது க்ரீஸ் நாட்டிலோ கப்பலை வாடகைக்கு எடுத்திருந்தால், இந்தத் தொகையில் பத்தில் ஒரு பங்கு கூட ஆகியிருக்காதே….  பின் எதற்காக இப்படிப்பட்ட வீண்   செலவு ?  பொறுங்கள் சொல்கிறேன்.

 

சிங்கள அரசாங்கம் புரிந்த போர்க்குற்றங்கள் பற்றிய ஆதாரங்கள் மேலும், மேலும் அம்பலமாகிக் கொண்டிருந்த வேளையில், எரியும் நெருப்பில் எண்ணையை ஊற்றும் விதமாக, இந்திய அரசாங்கம் தூத்துக்குடிக்கும், கொழும்புவுக்கும் இடையே கடந்த ஜுன் மாதத்தில், பயணிகள் கப்பல் போக்குவரத்தை தொடங்கியது.    இவ்வாறு தொடங்கப் பட்ட பயணிகள் கப்பல், சற்றும் முன் அனுபவம் இல்லாத ப்ளெமிங்கோ ட்யூட்டி ப்ரீ ப்ரைவேட் லிமிட்டெட் என்ற நிறுவனத்துக்கு கொடுக்கப் பட்டுள்ளது.

 

இந்த ப்ளெமிங்கோ நிறுவனமே, டிஆர்.பாலுவின் பினாமி நிறுவனம் என்பதுதான் சிறப்புத் தகவல்.

 

விரேன் அஹூஜா, டிஆர்.பாலுவின் மகன்கள் டிஆர்பி.செல்வகுமார் மற்றும் டிஆர்பி.ராஜா நடத்தும் நிறுவனங்களில் 2003 முதல் இயக்குநர்களாக உள்ளனர்.  ப்ளெமிங்கோ நிறுவனம்,  மும்பையைச் சேர்ந்த விரேன் விவின் அஹுஜா மற்றும் அதுல் அஹூஜா ஆகியோரால் நடத்தப் படுகிறது.

 

 

இந்த ப்ளெமிங்கோ நிறுவனத்துக்கு மத்திய அரசின் கப்பல் போக்குவரத்துத் துறை காண்பித்திருக்கும் சலுகைகள் மலைக்க வைக்கின்றன.   ப்ளெமிங்கோ நிறுவனம் கொழும்புக்கு நடத்தும் கப்பல் போக்குவரத்துக்காக, அமெரிக்காவைச் சேர்ந்த ஐஎஸ்பி என்ற நிறுவனத்திடமிருந்து “ஸ்காட்டியா ப்ரின்ஸ்” என்ற கப்பலை ஒரு நாளைக்கு 18 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

 

இந்தப் ப்ளெமிங்கோ நிறுவனத்தின் பின்னணியை ஆராய்ந்தால் மர்மமாகவே இருக்கிறது.  ப்ளெமிங்கோ நிறுவனத்தின் பிரதான தொழில், விமான நிலையங்கள் மற்றும், துறைமுகங்களில் ட்யூட்டி ப்ரீ கடைகளை நடத்துவது.

 

டி.ஆர்.பாலு தரை வழி மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சரான பிறகுதான், ப்ளெமிங்கோ நிறுவனத்துக்கு விமான நிலையங்களிலும், துறைமுகங்களிலும் ட்யூட்டி ப்ரீ கடைகள் நடத்துவதற்கான அனுமதி கிடைக்கிறது.  2006ல், விசாகபட்டினம், ஹல்தியா, கோவா மும்பை என தனது தளத்தை விரிக்கிறது ப்ளெமிங்கோ.  இன்று இந்தியாவின் 12 விமான நிலையங்களிலும், 7 துறைமுகங்களிலும் ப்ளெமிங்கோவுக்கு 45 கிளைகள் இருக்கின்றன.   ப்ளெமிங்கோ நிறுவனத்தின் பிரதான இறக்குமதிகள் எல்லாமே, வெஸ்ட் கேட் லாஜிஸ்டிக்ஸ் என்ற நிறுவனத்தின மூலமாக நடக்கிறது.  இந்த இரண்டு நிறுவனங்களுக்கும் இடையே நடைபெற்றிருக்கும் பணப்பறிமாற்றம் பல கோடிகளை தாண்டுகிறது.

 
A110217

வெஸ்ட் கேட் லாஜிஸ்டிக்கின் இயக்குனர்கள், கருணாநிதியின் துணைவி ராசாத்தி அம்மாள் மற்றும் கனிமொழி என்பது குறிப்பிடத் தக்கது.  ஆனாலும், டி.ஆர்.பாலுவை விட, ஆ.ராசா மந்திரி ஆவதை கனிமொழியும் ராசாத்தி அம்மாளும் விரும்பியதற்கான காரணம், ராசாவைப் போன்ற “மிக மிக திறமை வாய்ந்த அடிமையாக” டி.சூர்.பாலு இருக்க மாட்டார்.

 

ப்ளெமிங்கோவின் இயக்குநர்களில் ஒருவரான விரேன் அஹுஜா, பெர்மாகோ எனர்ஜி, ப்ளெமிங்கோ ஜுவல்லரி, ப்ளெமிங்கோ கோவா ரீட்டெயில், டவுன் ட்டவுன் ரீட்டெய்ல, பிடிசி பெர்மாகோ எனர்ஜி, அவினாஷ் போஸ்லே பவர் லிமிட்டெட், ஓலியன்டர் பார்ம்ஸ் என்று பல்வேறு நிறுவனங்களில் இயக்குநராக உள்ளார்.   இது தவிரவும், முக்கிய தொழில்களில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட ஷேர்களை வைத்துள்ளார்.

 

இத்தனை பெரிய ‘தொழில் அதிபர்’ நடத்தும் நிறுவனமான ப்ளெமிங்கோ நிறுவனம், கள்ளக் கடத்தலில் ஈடுபட்டு கஸ்டம்ஸில் சிக்கியது சுவையான கதை. 2006ல் கஸ்டம்ஸ் துறையால், 34 பாட்டில்கள் விஸ்கியும், 350 பாக்ஸ் மார்ல்பரோ சிகரெட்டும் கடத்தியதாக கஸ்டம்ஸ் துறையால் தண்டிக்கப் பட்டிருக்கிறது ப்ளெமிங்கோ.   சட்டவிரோதமாக ஸ்காட்ச் விஸ்கி மற்றும் சிகரெட் போன்ற பொருட்களை 1.72 கோடி ரூபாய்க்கு ப்ளெமிங்கோ நிறுவனம் விற்றிருப்பதாக கஸ்டம்ஸ் துறையின் ஆவணம் ஒன்று தெரிவிக்கிறது.  இந்த வழக்கு தமிழ்நாட்டில்.   அண்டை மாநிலமான ஆந்திராவிலும், ப்ளெமிங்கோ நிறுவனம், ட்யூட்டி ப்ரீ கடையில் விற்க வேண்டிய பொருட்களை வெளிச் சந்தையில் விற்றதாக கஸ்டம்ஸ் துறையால் தண்டிக்கப் பட்டிருக்கிறது. ஆந்திர கஸ்டம்ஸ் துறைக்கு ப்ளெமிங்கோ செலுத்த வேண்டிய சுங்க வரி பாக்கி மட்டும் 13.11 கோடி என்கிறது மற்றொரு ஆவணம்.  இவ்வாறு கடத்தலில் ஈடுபட்டதால், சென்னை விமான நிலையத்திலும், விசாகபட்டினம் விமான நிலையத்திலும், ப்ளெமிங்கோ நிறுவனத்துக்கு வழங்கப் பட்ட ட்யூட்டி ப்ரீ கடை நடத்தும் லைசென்சுகளை ரத்து செய்திருக்கிறது கஸ்டம்ஸ் துறை.

 1

2

3

4

இப்படி கள்ளக் கடத்தலில் ஈடுபட்ட ஒரு நிறுவனத்துக்குத் தான் தற்போது தூத்துக்குடியிலிருந்து கொழும்புக்கு பயணிகள் கப்பல் இயக்குவதற்கான அனுமதி கிடைத்திருக்கிறது. இதற்கு ஒரே காரணம், இந்த நிறுவனம் டி.ஆர்.பாலுவின் நிறுவனம் என்பதைத் தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும் ?

 

 D-4241l

கொழும்புக்கு கப்பல் போக்குவரத்து ஆணை வழங்குவதற்கான டெண்டர் விடும் போது, ப்ளெமிங்கோ நிறுவனத்துக்கு ஆணை கிடைக்க வேண்டுமென்பதற்காகவே ஒரு புதிய விதி சேர்க்கப் பட்டதாக மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  இந்த டெண்டரில், கொழும்புக்கு கப்பல் போக்குவரத்து நடத்த விரும்பும் நிறுவனங்கள், ட்யூட்டி ப்ரீ கடைகள் நடத்துவதில் முன் அனுபவம் இருத்தல் விரும்பத் தக்கது என்று ஒரு விதி சேர்க்கப் பட்டுள்ளது.  பயணிகள் கப்பலை இயக்குவதற்கும், ட்யூட்டி ப்ரீ கடைகள் நடத்துவதற்கும் என்ன சம்பந்தம் என்று வியக்கிறார், ப்ளெமிங்கோவின் போட்டியாளர் ஒருவர்.   இவ்வாறு புதிய விதி சேர்க்கப் பட்ட அதே நேரத்தில், பயணிகள் கப்பல் போக்குவரத்து நடத்துவதில் 5 ஆண்டுகள் முன் அனுபவம் வேண்டும் என்று ஏற்கனவே இருந்த விதியை எப்படி மறந்தார்கள் என்றும் கேள்வி எழுப்புகிறார் அவர்.  ப்ளெமிங்கோவுக்கு கப்பல் போக்குவரத்தில் ஒரு மாதம் கூட அனுபவம் இல்லை என்பது குறிப்பிடத் தக்கது.

 

சரி, இப்படி போட்டி போட்டுக் கொண்டு கப்பல் போக்குவரத்து நடத்த ஆணை பெற்ற ப்ளெமிங்கோவுக்கு வருமானம் கூரையை பிய்த்துக் கொண்டு கொட்டுகிறதா என்றால் அதுவும் இல்லை.   தூத்துக்குடியிலிருந்து கொழும்புக்கு இயக்கப் படும் ஸ்காட்டியா ப்ரின்ஸ் கப்பலில் மொத்தம் 1049 பயணிகள் செல்லும் கொள்ளவு உண்டு.  ஆனால் ஒரு ட்ரிப்பில் வெறும் 300 பயணிகள் மட்டுமே செல்கிறார்கள். இப்படி நஷ்டத்துக்கு தொழில் நடத்த ஏன் ப்ளெமிங்கோ போட்டி போட வேண்டும் என்றால், அங்கே தான் சோழியன் குடுமி சும்மா ஆடாது என்பது.

 

இந்தக் கப்பல் போக்குவரத்து நடத்தப் படுவதே கள்ளக் கடத்தலில் ஈடுபடுவதற்காகத் தான் என்கிறது, போக்குவரத்து வட்டாரங்கள்.  கொழும்பிலிருந்து தூத்துக்குடி துறைமுகத்துக்கு வந்து இறங்கும் பயணிகள் அத்தனை பேரும் கையில் இரண்டு பாட்டில்கள் ஸ்காட்ச் விஸ்கி வைத்திருக்கிறார்கள்.  அவர்களை அணுகி இதற்கு பில் உண்டா என்று கேட்டால், பில்லுக்கு பதிலாக ஒரு துண்டுச் சீட்டைக் காட்டுகிறார்கள். ஸ்காட்ச் விஸ்கி, சிகரெட் போன்றவற்றுக்கு கஸ்டம்ஸ் வரி மட்டும் 250 சதவிகிதம்.   இது தவிர, எக்சைஸ் மற்றும் வாட் வரி உண்டு.   வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு சலுகை வழங்க வேண்டும் என்பதற்காகவே ட்யூட்டி ப்ரீ ஷாப் என்ற ஒரு முறையை ஏற்படுத்தி, பாஸ்போர்ட், போர்டிங் பாஸ் போன்றவற்றை ஆய்வு செய்து, பதிவு செய்து, ஒரு நபருக்கு இரண்டு பாட்டில்கள் மட்டும், பில்லோடு வழங்க வேண்டும் என்பது விதி.

 

இந்த வரிகளைத் தவிர்ப்பதற்காக, தூத்துக்குடியிலிருந்து பயணிகளை ப்ளெமிங்கோ நிறுவனமே ஏற்றி, அவர்கள் இறங்கி வருகையில் ஆளுக்கு இரண்டு ஸ்காட்ச் பாட்டில்களை கொடுத்து, துறைமுகத்துக்கு வெளியே அதை பிடுங்கிக் கொண்டு, பர்மா பஜாரில் விற்றால் 300 சதவிகிதத்துக்கு மேல் லாபம் கிடைக்கும் அல்லவா ?  இதைத்தான் ப்ளெமிங்கோ நிறுவனம் செய்து கொண்டிருக்கிறது என்கிறார்கள்.

 

தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து வரும் பயணிகளிடமிருந்து பில் இல்லாமல் ஸ்காட்ச் எடுத்து வருகையில், பல்வேறு தடவை இடைமறித்து பறிமுதல் செய்திருக்கிறது மத்திய தொழிற் பாதுகாப்பு படை.  இது தவிரவும், தங்கம் மற்றும் பல்வேறு கடத்தல்கள் நடப்பதாகவும் தகவல்கள் வருகின்றன.  கடந்த வாரம் கூட, தங்க பிஸ்கட் கடத்திய ஒரு பெண், இந்தக் கப்பலில் இருந்து பிடிபட்டார்.

 

கப்பலில் ட்யூட்டி ப்ரீ ஷாப் நடத்துவதற்கு கஸ்டம்ஸ் துறையின் அனுமதியை தனியாக பெற வேண்டும். ஆனால் ப்ரின்ஸ் ஸ்காட்டியா கப்பலில் இது போல நடத்துவதற்கு எவ்வித அனுமதியையும் ப்ளெமிங்கோ நிறுவனம் பெறவில்லை.  ஏன் பெறவில்லை என்றால், ஏற்கனவே கள்ளக் கடத்தலில் ஈடுபட்டு தண்டிக்கப் பட்ட ஒரு நிறுவனத்துக்கு நிச்சயம் அனுமதி கிடைக்காது.   பிறகு எப்படி ப்ளெமிங்கோ நிறுவனம் கப்பலில் ட்யூட்டி ப்ரீ ஷாப் நடத்துகிறது என்று விசாரித்தால், கப்பலில் இருக்கும் கடையில் விற்பனை, இந்தியாவிலிருந்து புறப்பட்ட கப்பல் சர்வதேச எல்லையைக் கடந்த பிறகே விற்பனை தொடங்குமாம்.   சர்வதேச எல்லையை கப்பல் தாண்டி விட்டது என்பதை எப்படிக் கண்டுபிடிப்பார்கள் என்பது கடலன்னைக்குத் தான் வெளிச்சம்.

 Vayalar-Ravi-3-copy

கப்பல் போக்குவரத்துத் துறை அனுப்பிய தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழான ஒரு பதிலில், ப்ளெமிங்கோ நிறுவனத்துக்கு, கப்பலில் ட்யூட்டி ப்ரீ ஷாப் நடத்துவதற்கான எவ்விதமான அனுமதியும் வழங்கப் படவில்லை என்று தெரிவிக்கிறது.  பிறகு எப்படி நடத்துகிறார்கள் ?

 

சரி தள்ளிக்கோட்டை ராஜுத்தேவர் பாலுவுக்கும், ப்ளெமிங்கோ நிறுவனத்துக்கும் என்ன சம்பந்தம் என்று பார்த்தால்,  அவர் மகன்கள் நடத்தும் மீனம் எக்ஸ்போர்ட்ஸ், கிங் இந்தியா கெமிக்கல் கார்ப்பரேஷன், கிங் இந்தியா பவர் கார்ப்பரேஷன் மற்றும் கோல்டன் வாட்ஸ் ஆகிய அனைத்து நிறுவனங்களிலும் அஹுஜாக்கள் இயக்குநர்களாக இருக்கிறார்கள்.  கள்ளக் கடத்தலில் ஈடுபட்டு தண்டிக்கப் பட்ட ஒரு நிறுவனத்தின் இயக்குநரை, தன் மகன் நடத்தும் நிறுவனத்திலும் இயக்குநராக வைக்க வேண்டிய அவசியம் டி.ஆர்.பாலுவுக்கு என்ன என்பதை பாலுதான் விளக்க வேண்டும்.

 

கொழும்பு தூத்துக்குடி கப்பல் போக்குவரத்து டெண்டர் வழங்கப் பட்டதில் நடந்த ஊழலும், ட்யூட்டி ப்ரீ கடைகளில் நடக்கும் ஊழல்கள் குறித்தும் சிபிஐக்கு புகார் அனுப்பப் பட்டுள்ளது.   ஆனால், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜி.கே.வாசன் அல்லவா கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சராக உள்ளார் ?  காங்கிரஸ் கட்சியினர் சிபிஐ கட்டுப் பாட்டுக்கு அப்பாற்பட்டவர்கள் அல்லவா ? சிபிஐ எப்படி நடவடிக்கை எடுக்கும்.

 

இப்போது வாசகர்களுக்கு ஏற்படும் இன்னொரு சந்தேகம், தற்போது ஜி.கே.வாசன் தானே கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர்.  பின் எப்படி டி.ஆர்.பாலுவின் நிறுவனத்துக்கு இன்னும் இத்தனை சலுகைகள் அளிக்கப் படுகின்றன என்று.

 DMK14

பணம் பாதாளம் வரை பாயும் போது, ஜி.கே.வாசனின் வீட்டுக்குள் பாயாதா என்ன ? அது மட்டும் இல்லாமல், தானே திறமையாக ஊழல் புரிந்து பணம் சம்பாதிக்கும் அளவுக்கு ஜி.கே.வாசனுக்கு துப்பு இல்லை என்பதும் மற்றொரு உண்மை.

 

Comments  

 
0 #63 mahes 2011-09-24 00:36
அது எபடி தெவர் நு மட்டும் சொர்ரெச்ட் அஹ் பொட்ரனுக..யென் நடர்,பல்லன்,சகி லியன்,கொஉன்டன், வன்னியன் நு எவனயஹ்டு பொட சொலென்..சல்லி பயலுகா..
Quote
 
 
+2 #62 raja12 2011-09-23 21:51
இவன் ப்ராடு பயதான் இருந்தாலும் நிஙக தேவர் நு போட்டு இருக்க வேன்டிய அவசியம் இல்லனு நினைகுரென்
Quote
 
 
+4 #61 தஞ்சை குணா 2011-09-23 12:05
பொதுமக்களிடமிரு ந்து பங்கு வெளியிட்டின் மூலம் நிதி திரட்டப்பட்டு கிங் கெமிக்கல் தொடங்கப்பட்டு பின்னர் முதலீட்டளர்களின ் நிதி கொள்ளையடிக்கப்ப ட்டது. இன்று அந்த நிறுவனத்தை மது உற்பத்திக்கு மாற்ற பாலு நடத்திய அராஜகங்களை கண்டு வெறுத்துப்போன வடசேரி மக்களின் போராட்டங்கள் பல பத்திரிக்கையில் வெளி வந்து அப்பகுதி மக்களால் காரி உமிழப்பட்டது .

தனது செல்வாக்கை பயன்படுத்தி திருச்சியிலிருந ்து மன்னார்குடி வழியாக தலிக்கோட்டைக்கு அரசு பஸ் இயக்கப்படுகின்ற து. திருச்சியிலிருந ்து மன்னார்குடி வரை பயணிகளால் நிறைந்து வழியும் பேருந்து மன்னார்குடியிலி ருந்து நான்கு பேரை ஏற்றிக்கொண்டு செல்வதால் அரசு பேருந்து நிறுவனத்திற்கு ஒவ்வொரு நாளும் நஷ்டமே.

சேது சமுத்திரத்திட்ட த்தில் பல ஆயிரம் கோடி கொள்ளையடிக்கப்ப ட்டது.கடலுக்கடியில் போய் யார் கணக்குப் பார்க்க போகிறார்கள்?

கருணாநிதியிடம் கார் ஓட்டுனராக சேர்ந்த பாலுவுக்கு எத்தனை கப்பல்கள், கல்லூரிகள்.

திமுக கூட்டம் தமிழ்நாட்டையே கொள்ளயடித்துவிட ்டது
Quote
 
 
0 #60 Mukil 2011-09-23 10:05
http://thatstamil.oneindia.in/news/2011/09/22/rs-34-lakhs-worth-cigarettes-seized-tuticorin-aid0175.html
Quote
 
 
+1 #59 Prabakaran 2011-09-23 00:13
எழுத்டதாளர் சவுக்கு கொடுத தகவலுகு நன்றி
திறமையாக ஊழல் புரிந்து பணம் சம்பாதிக்கும் கலை திமுகவினரின் தனி திறமை..
இது போல, இவிந்தியா முழுவதும் இருக்கும் அரசியல்வாதிகளின தோலை உறிப்பதுதான் சவுக்குக்கு விடப்படும் சவால்! தொடரட்டும் உமது பணி.இனி தெடரும் என் வரி... இவன் கிங் கெமிக்கல்ஸ் நடத்த எதிர்ப்பை தெரிவித்த பகுதிமக்களில் ஒருவன் நான்..
Quote
 
 
+3 #58 chockar 2011-09-22 12:05
அருமை,நல்லா எழுதியிருக்கீங் க.இது மாதிரி
ஆட்களிடமிருந்து முறைகேடாக சம்பாதித்ததை மத்திய,மாநில அரசாங்கங்கள்
பறிமுதல் செய்யனும்.மிக உயர்ந்த பதவி,அதிகாரதில் உள்ளவர்கழுக்கு சுயநலம்
மிக அதிகம்.பெரியார்,அண்ணா இவர்களின் கருத்துக்களை ஒவ்வொரு சாமானியனுக்கும்
கொண்டுசென்ற தி.மு.க (ஆரம்பத்தில்)பி றகு
அதிகார மமதையில் சுய லாபத்தை பார்க்க ஆரம்பித்தது.பின்னர் அது கட்சியின் வட்டம்
பதவியில் உள்ளவர் வரை பரவிப்போனது.தலமையின் குடும்ப உறுப்பினர்கழும் தங்களை இதில் முழுமயாக
அற்பணித்துக்கொண ்டனர்.(கூடா நட்ப்பு என்றது இதைத்தான்)தலைமை யும் இதனை கட்டுப்படுத்தாத ு விட்டது பெரும் தவறு.அற்புதமான வாய்ப்பு தி.மு.க.தலைமைக்கும் அவர் தம் வாருசுகளுக்கும் மக்களுக்கு தொண்டாற்றி தமிழனின் மனதில் நீங்கா இடம் பெற-இப்படி பேரை கெடுத்துக்கொண்ட ு அனைவரிடமும் இடிபடனுமா.ஆமாம் இவ்வளவு கோடி பணத்தை வச்சு என்ன பண்ணுவாங்க,செல் அரித்து வீணாகவா.ஏழைகழுக்கு செய்தால் வாழ்த்தவாவது செய்வார்கள்.
Quote
 
 
+3 #57 junkmailing09@gmail. 2011-09-21 22:52
தானே திறமையாக ஊழல் புரிந்து பணம் சம்பாதிக்கும் அளவுக்கு ஜி.கே.வாசனுக்கு துப்பு இல்லை என்பதும் மற்றொ
ரு உண்மை
ஒர் ஊடகமக இருந்துக்கொன்டு இதை எலுத உஙகலுக்கு வெக்கமக இல்லை கொல்லை அடித்தவன் பத்தி நாலு பக்க கட்டுரை வாசனுக்கு தெரியமலே இருக்கட்டும் அதை நீஙக பலிக்க கூடாது ( நான் எந்த கட்ஷியயிஉம் சர்ந்தவன் இல்லை ) இதர்கு நீஙல் மன்னிப்பு கோர வேன்டும்
Quote
 
 
0 #56 Nethaji_Priyan 2011-09-21 19:49
Please don't append Devar with his name to this criminal and culprit....
Quote
 
 
+5 #55 Vijay S 2011-09-21 19:00
கூட்டமா கொள்ளையடிங்டா
Quote
 
 
+8 #54 PremkumarSJ 2011-09-21 18:26
இவன் தப்பிசிடே இருக்கான் . சிக்கிரம் மாட்டனும்
Quote
 
 
+5 #53 suresh 2011-09-21 16:33
ஆதிமுத்து (savukku) சங்கர் நாடார்?
Quote
 
 
+7 #52 Force 2011-09-21 16:27
இவர் கிங் கெமிக்கல்ஸ் நடத்த அந்த பகுதிமக்களின் எதிர்ப்பை (வடபாதி மங்களம்) திமுக அடக்கியது நினைவுக்கு வருகிறது. அந்த சேது சமுத்திரத் திட்டத்தில் கொட்டப்பட்டதாய் ச் சொல்லும் பணம்? விசைப்படகு சலுகை ஊழல்? இன்னும் எத்தனை எததனையோ?
Quote
 
 
+10 #51 manithan 2011-09-21 15:29
பாலு-ங்கறது உங்க பேரு... தேவர்-ங்கறது நீங்க படிச்சி வாங்கின பட்டமா.... பளார்.... பளார்.... பளார்....
Quote
 
 
+4 #50 Tamilscafeblogspot 2011-09-21 14:05
அடேங்கப்பா உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா??

இந்த சவுக்கு, தேவர் ந்னு கட்டுரையில் எழுதி இருப்பதை கண்டித்தேன், அதுக்கு உடனே (என் மக்காள்) மக்கள் வீறுகொண்டு எனக்கும் தும்ப்ச்டொந்ன் போட்டு உள்ளார்கள்..நான் நினைச்சேன் ஒரு வேலை நம்ம தகவல்ல தங்கம் கடத்துரானுங்கன் னு சொன்னா அர்த்தம் இருக்குன்னு..அதுக்குதான் இத்தன கொலைவெறியோ நம்ம மேலன்னு..

ஆனால் பின்னாடியே நண்பர் மதுபைய வுக்கும் துப்ச்டொந்ன் இப்ப புரியுது ஜாதியை சாணி போட்டு அழிச்சாலும் அதை எடுத்து உன் பேருக்கோ, அடுத்தவன் பேருக்கோ பின்னாடி போட்டுக்கணும், இது தான் தமிழ் நாட்டோட வழக்கம் போல..

அய்யா கருத்து கூறும் நல்லுலக நண்பர்களே, கருத்துகளுக்கு விளக்கம் கொடுங்கய்யா..(கொஞ்ச நாள் நானும் இப்படித்தான், தும்ப்ச்டொந்ன் அ பார்த்தா நம்ம பங்குக்கு ஒன்ன போட்டுட்டு போய்டுவேன் சவுக்குல, இது அப்படி இருந்தா சந்தோசம், இல்லன்னா கொஞ்சம் விளக்கம் கொடுக்கலாம்)

தப்பு செஞ்சா சவுக்கயும் கண்டிக்கனும் அப்பத்தான் சமூக பொறுப்பு அதிகரிக்கும் என்பது என் கருத்து. இன்னொரு உதாரணம் நண்பர் காலி.க்ரிஷ்ன சொன்னமாதிரி சும்மா இருந்த சங்க ஏன் ஊதி கெடுக்கணும், (திருடுறதுக்கு தேவை துப்பு இல்ல கேட்ட எண்ணமும், செயலும் போதும்) என்ன சவுக்கு நான் சொல்றது??
Quote
 
 
+4 #49 S.JAYARAMAN 2011-09-21 12:41
எல்ல்லாம் சரி. சேது சமுத்திரம் திட்டத்தில் ரூபாய் 2000 கோடி செலவு செய்து தூர் வாரினார்களே அந்த மண்ணை எங்கு கொட்டினார்கள். சவுக்கின் அடுத்த ஆராய்ச்சி இதுவாக இருக்கட்டும்.
மாயூரனாதன்.
Quote
 
 
+4 #48 kalaivanan 2011-09-21 11:28
நமக் கு சுதந்திரம் இன்னும் கிடைகவில்லை என்பது தெலிவாக புரிகிரது..
Quote
 
 
+4 #47 Jegan Nathan 2011-09-21 10:26
சவுக்கு அவர்களே இதை படிக்க வேதனையாய் உள்ளது. இதுபோன்று கொள்ளை அடித்த மு கா கூட்டம் இன்னும் வசதியோடும் எந்த தண்டனையும் இல்லாமலும் இருப்பதை பார்க்கும் பொழுது எந்த ஆஸ்திகனும் கடவுள் நம்பிக்கையை இழப்பான். இவெங்களை எல்லாம், இவ்வளவு ஆதாரங்கள் இருந்தாலும், ஒன்றும் செய்ய இயலாதா? நமக்கு விடிவு என்பது உண்டா?
Quote
 
 
+6 #46 suthiran 2011-09-20 23:26
திருட்டு ராஸ்கல் பாலு என்று அழைக்கலாம் இந்த டி ஆர் பாலுவை ! அவ்வளவு திருட்டுத் தனம் ! தெருப் பொறுக்கித் தனம்!
இவனை தேர்ந்தெடுத்த மக்கள் இதைப் படிக்க நேர்ந்தால் கட்டாயம் மனம் வருந்துவார்கள் ! திருட்டுத் தனத்திலும், கூத்தியாளை வைத்துக் கொண்டு , துணைவி என்று நாக்கூசாமல் அழைத்துக்கொண்டு ம், ஊரெல்லாம் அறிய கூத்தியாள் குடும்பத்தை கூட்டம் போட்டு ஊர் முன் உட்கார வைத்துக்கொண்டு வோட்டுக் கேட்பதில் கொஞ்சம் கூட வெட்கப்படாமல் இருப்பதிலும் திருட்டுக் கூட்டத்தின் தலைவனுக்குக் கொஞ்சமும் சளைத்தவன் அல்ல இந்த திருட்டு ராஸ்கல் பாலு.
Quote
 
 
+3 #45 kaangirasu 2011-09-20 18:11
ஒன்று தெரிய்யுமா? ஜி.கே.வாசன் பல முறை இந்த துறை வேண்டாம்.. வேரு சுலபமான துறை கொடுஙகள் என்று கேட்டும் அன்னை ஏன் கொடுக்கவில்லை? பல திறமைசாலிகள் காங்ரெசில் ரெடியாக இருக்கும்போது ஏன் மாற்ற வில்லை என்பது புதிராக உள்ளது..

ஆமா...... இந்த பணத்த எல்லாம் என்னா பாசு பண்ணுவாங்க??
Quote
 
 
+9 #44 R. Kani 2011-09-20 17:23
சவுக்கு,

டி. ஆர். பாலுவை பற்றி எழுதினீர்கள். அதே சமயத்தில் முன்னாள் முதல்வர் , இந்த நாள் நிதி அமைச்சர் அது மட்டுமில்லாமல் வருங்கால முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் அலுவலகத்தில் லஞ்சம் விரித்து ஆடுகிறது. ஒவ்வொரு டிரான்ஸ்பரிலும் அவர் கூட இருக்கும் இரு உதவியாளர்கள் பணம் கொழிக்கிறார்கள் . கேட்டால் அம்மாவுக்கு, சின்னம்மாவுக்கு என்று கட்டு கதை. அவர் அனைவரும் ஒரே இனம் என்பதால், விஷயம் ஒன்னுக்குள்ள ஒன்னு.

துப்பு துலக்க வேண்டுகிறேன். நிறைய விவகாரங்கள் தலைமைக்கு தெரியாமல் நடக்கிறது. ஓபிஎஸ் மகனும் இஷ்டத்துக்கு விளையாடுகிறார்.
Quote
 
 
+1 #43 thamizhan 2011-09-20 16:58
Dear Mr.Savukku

This is the Savukku style we expect always and not simply about jaffer sait alone.

One more information about this criminal is - out of 32000 crores sethu samudram project he has swindled 12000 crores and started a power plant at China and made his son Raja as the director and he has come only before elections just to make him MLA. out of 3 wives poongothai is most powerful and she has amassed huge wealth when he was minister in the last regime. He is one of the chidambaram election technology winner in sriperambaduru constituency which every one knows and even that information is censored. he hs a good truck with sasikala due to DEVAR tag.

Hats off to you Savukku - Carry on
Quote
 
 
+4 #42 Mani123 2011-09-20 12:52
நீண்ட நாளைக்கு பிறகு கண்ணே பாப்பா படம் போட்டதற்கு நன்றி.
கண்ணே பாப்பா ரசிகர் மன்றம்
கிழக்கு கடற்கரை சாலை.
Quote
 
 
0 #41 muniandi 2011-09-20 12:52
தள்ளிக்கோட்டை ராஜுத்தேவர் பாலு, ராஜாத்தி அம்மாள் தேவர், பேஷ், பேஷ் ரொமப நன்னா இருக்கே!
Quote
 
 
+5 #40 MP 2011-09-20 12:33
தன் தலைவரை போல, இவருக்கும் ஒரு மனைவி, ஒரு துனைவி உண்டு என்பது நிறைய பேருக்கு தெரியாது...
Quote
 
 
-4 #39 Sivak 2011-09-20 12:07
எனக்குத் தெரிந்து பாலு "அய்யர்" என்று நினைக்கிறேன். ஏதோ ஒரு கூட்டத்தில் பேசும்போதோ, பேட்டியிலோ பாலுவே கூறியதாக நினைவு
Quote
 
 
+4 #38 sk 2011-09-20 12:01
ஏன்டா அப்ப நான்க எல்லாம் தேவை இல்லாம பொரந்துட்டமா.....
Quote
 
 
+4 #37 Annian 2011-09-20 11:19
போற்றிப் பாடடிப் பொண்ணே!!!தேவர் காலடி மண்ணே!!!தெக்குத ்தெசை ஆண்ட மன்னர் இனம்தான்!!!ஊரைக ் கொள்ளை அடிக்கும் திருட்டு ஜனம்தான்!!!பாலு த்தேவரே!முறையான உங்கள் சம்பளம் ஒரு கோடிக் கூட வராதே!இவ்வளவு சொத்தும் எப்படி சேத்தீங்க!!!
Quote
 
 
+32 #36 T.G.Sekar 2011-09-20 11:06
தி மு க வில் ஒரு யோக்கியனும் கிடையாதா? தலை எப்படியோ, அப்படியே...
Quote
 
 
+8 #35 GOPALASAMY 2011-09-20 09:42
I THINK T.R BALU'S NAME AS PER CERTIFICATE.
IF. T.R. BALU WANTS HE CAN CHANGE HIS NAME.
Quote
 
 
+7 #34 devadasan 2011-09-20 08:43
If any RTI activist write to erstwhile ICICI, IDBI, IFCI,Indian Bank about the amount of loan sanctioned to M/s king chemicals and about the amount of concessions received by the company from these Term lending institutions, it will open up another scam. The company was listed in RBI website as a defaulted company. The company has cheated these banks hugely.
Quote
 
 
+20 #33 கடற்க்கரைவாசி 2011-09-20 08:09
தூள் கெளப்பிட்டீங்க ஆசானே...

இந்த சனியன எல்லாம் தாங்குற நம்ம தமிழ் பூமிக்கு ரொம்ப பொறுமை ஜாஸ்தி... நெனச்சா பொறாமையா இருக்கு, தமிழ் பூமியின் மேல்...
Quote
 
 
+24 #32 சவுக்கின் விசிறி 2011-09-20 07:49
ரொம்ப நாளைக்கு பிறகு, தமிழ் கூரும் நல்லுலகிற்கு உருப்படியான புலனாய்வுச் செய்தியை கொடுத்த சவுக்கிற்கு வாழ்த்துக்கள்.
இது போல, இந்தியா முழுவதும் இருக்கும் அரசியல்வாதிகளின ் தோலை உறிப்பதுதான் சவுக்குக்கு விடப்படும் சவால்! தொடரட்டும் உமது பணி.
Quote
 
 
+41 #31 thangamalai 2011-09-20 07:33
கொலைகார இலங்கைக்கு கப்பல் விட்டு காசு பாக்குற இந்த ஆள் கொஞ்ச நாளுக்கு முன் மக்களவையில் அந்த நாட்டுக்கு எதிராய் வீரவசனம் பேசினான்.
அட சீ ....
Quote
 
 
+10 #30 ranramani 2011-09-20 05:42
Who ever joins with congress there do such things, only possible way is throw congress from center
Quote
 
 
+10 #29 தியாகி இமானுவேல் சேக 2011-09-20 04:38
நன்றி ்ர்ய்ட்ர்்ட்ன்
Quote
 
 
+29 #28 தியாகி இமானுவேல் சேக 2011-09-20 04:37
அருமையான ்கட்டுரை .ஆதாரத்தோடு வெளி இடுவதில் ுசவ்வுக்கு ்நிகர் ்்யாரும் இல்லை என்பதை நிரூபித்து ்உள்ளார் .அரசியல் வாதிகளில் இந்த மாதிரி ்கொள்ளையர்களை ்்வெளி உலகத்துக்கு ்வெளிச்சம் போட்டு ்ு்காட்டிய ுசவ்வுக்கு மிக்க ்நன்றி .ய்ர்்க்்்க்்்ட் ட்ொஹ்்
Quote
 
 
+22 #27 Ravi 2011-09-20 03:23
இன்று இருக்கும் இணையம் மற்றும் தகவல் அறியும் சட்டம் போன்றவற்றினால் இந்த கழகக் கயவர்கள் எத்தனை கோடிகள் சுருட்டுகிறார்க ள் அல்லது சுருட்டினார்கள் என்று தெரிய வருகிறது. இல்லையேல் இந்த கருணா நிதிக் கூட்டம் தங்களை காந்திக்கு பேரனாக அறிவித்துக் கொண்டு தியாகிகளாகத்தான ே காட்டிக் கொள்வார்கள்? கிழவன் இன்னும் அப்படித்தான் கூறிக் கொள்கிறார் என்பது வேறு விஷயம்.
Quote
 
 
+42 #26 Kaali.Krishna 2011-09-20 01:28
//////தானே திறமையாக ஊழல் புரிந்து பணம் சம்பாதிக்கும் அளவுக்கு ஜி.கே.வாசனுக்கு துப்பு இல்லை என்பதும் மற்றொரு உண்மை/////

சும்மா இருக்கிறவரை ஏன் தூண்டி விடுறிங்க? அவர் பாட்டுக்கு ஏதோ போடுறத வாங்கிட்டு ஒரு ஓரமா கிடக்கார்.

நீங்க உசுப்பி விட்டு , அப்புறம் அவரும் வசூலுக்கு கிளம்பிட்டார் என்றால் நாடு தாங்காதுடா சாமீ.
Quote
 
 
+17 #25 வால்டர் வணங்காமுடி 2011-09-20 00:46
"கப்பல் மட்டும் அல்ல, எனக்கு தெரியாமல் என்னுடைய இனிஷியலையே இந்த பாலு ஆட்டையை போட்டுவிட்டார்" என்று நம்ம 'டி.ஆர்' கோர்ட்டில் கேஸ் போட்டாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.
Quote
 
 
-41 #24 Puthu Road Ilyas 2011-09-19 22:14
இது நம்பும் படியஹ இல்லை
Quote
 
 
+14 #23 Mayavi 2011-09-19 22:05
Making money through benamis is not new to TR Balu. Thirty years ago he obtained boat loans from banks in Chennai under various names and none of them was repaid.
Quote
 
 
+8 #22 manudan 2011-09-19 21:35
கருனா போதுமா உனது கருனை
Quote
 
 
+28 #21 http://koothadivedda 2011-09-19 19:27
கூட்டி கழிச்சுப்பாத்தா பாலுத்தேவரை வில்லங்கம் வளைக்கப்போகிறது என்கிறது மட்டும் புரியறது.????
Quote
 
 
+24 #20 shan 2011-09-19 19:24
உஙலுக்கு மட்டும் யெப்படி இதுமாதிரியன விஷயஙல் தெரிகிரது... வால்துகல்...தொடரடூம் உமது சேவை....
Quote
 
 
+43 #19 shocking 2011-09-19 18:31
சவுக்கு, மிக அதிர்ச்சியாக உள்ளது. எத்தனை கயவர்களடா? அதில் எத்தனை சதிகள் விஞ்ஞானபூர்வமான தடா?

எனக்கு உங்கள் சில நிலைப்பாடுகளில் உடந்தை இல்லை. ஆனாலும் இது போன்ற செய்திகள் ஆராய்ந்து வெளியிடுவதில் உங்களுக்கு நிகர் யாரும் இல்லை என்பேன்.
Quote
 
 
+14 #18 stranger 2011-09-19 18:02
சுபெர் அப்பு
Quote
 
 
+10 #17 MAHI 2011-09-19 17:47
சுச்சு தேவர் பாலு
Quote
 
 
+3 #16 jeyhel 2011-09-19 17:18
குற்றவாளீ நிருபிஹ்சி தண்ன்ட்னை பெற்றவங்கள் ஆட்சில இருக்கக்ர்ரார்க ல் ,இத்லம் சும்மா
Quote
 
 
+7 #15 rajesh.v 2011-09-19 17:04
அட kevalamey.....kadathal panravanellam indha natuladhan amaicharaga mudiyum
Quote
 
 
-16 #14 Tamilscafeblogspot 2011-09-19 16:51
எனது கண்டனங்கள் "தள்ளிக்கோட்டை ராஜுத் தேவர் பாலு" இதில் தேவர் ஏன்? உன் ஜாதி வெறுப்பை திணிப்பது தவறல்லவா?

சோழியன் குடுமி சும்மா ஆடாது ? திரும்பவும் தவறு!!

"தூத்துக்குடியில ிருந்து பயணிகளை ப்ளெமிங்கோ நிறுவனமே ஏற்றி, அவர்கள் இறங்கி வருகையில் ஆளுக்கு இரண்டு ஸ்காட்ச் பாட்டில்களை கொடுத்து, துறைமுகத்துக்கு வெளியே அதை பிடுங்கிக் கொண்டு, பர்மா பஜாரில் விற்றால் 300 சதவிகிதத்துக்கு மேல் லாபம் கிடைக்கும் அல்லவா?" தங்கம் போன்றவைகளை கடத்தும் கும்பல் என்றால் அர்த்தம் உள்ளது??!!

மற்ற படி இது நல்ல கட்டுரை..
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 137 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday9961
mod_vvisit_counterYesterday9398
mod_vvisit_counterThis week79702
mod_vvisit_counterLast week78106
mod_vvisit_counterThis month202302
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12724421