முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
சிறை செல்கிறாரா செட்டி நாட்டு சீமான் அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 13
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
வெள்ளிக்கிழமை, 23 செப்டம்பர் 2011 10:57

2ஜி ஊழல் வழக்கு எப்படி உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டுக்கு பிறகு சூடு பிடித்தது என்பதை நாம் அனைவரும் அறிவோம்.    2ஜி வழக்கில் எப்ஐஆர் போடப்பட்டு, 11 மாதங்களுக்குப் பிறகு சாவகாசமாக தொலைத் தொடர்புத் துறை அலுவலகங்களில் சோதனை நடத்தியது சிபிஐ.  11 மாதங்கள் கழித்து சோதனை நடத்தி விட்டு, இந்தக் கோப்பை காணவில்லை, அந்த ஆவணத்தை காணவில்லை என்று புலம்பிக் கொண்டிருந்தது.   

chidambaram2

காணாமல் போன ஆவணங்களைப் பற்றி புலம்பும் சிபிஐ, கையில் உள்ள ஆவணத்தை வசதியாக மறைத்தது ஏன் என்பதுதான் மர்மமாக உள்ளது. 
ஜுலை 8 அன்று பத்திரிக்கையாளர்களை கல்லுளி மங்கன் கபில் சிபலும், மற்றொரு பொய்யர் பவன் குமார் பன்சாலும் சந்தித்தனர்.  அப்போது கபில் சிபல், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிதம்பரத்துக்கு எந்தப் பங்கும் கிடையாது.  (ஏன்னா பங்கை முதல்லயே வாங்கிட்டார்)   அவரை பதவி விலகச் சொல்லி எழுந்துள்ள கோரிக்கை ஒரு சதித்திட்டத்தின் வெளிப்பாடு. ஆண்டிமுத்து ராசாவுக்கும், சிதம்பரத்துக்கும் இடையே நடந்த மீட்டிங் தொடர்பாக குறிப்புகள் ஏதும் தயாரிக்கப் படவில்லை 
கூட்டத்திற்கான குறிப்புகள் தயாரிக்கப் படாதது குறித்து விளக்கிய பாராளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் பவன் குமார் பன்சால் “ராசா மற்றும் சிதம்பரம் இடையே நடந்த அந்த கூட்டம், குறிப்பு எடுப்பதற்கான தேவையை ஏற்படுத்தவில்லை.  பல்வேறு சந்தர்ப்பங்களில் அமைச்சர்கள் சில விவகாரங்களை விவாதிப்பதற்காக சந்திப்பதுண்டு.  ஆனால் எல்லா நேரங்களிலும் குறிப்புகள் எடுக்கப் படுவதில்லை” என்று கூறினார்.  

ஆண்டிமுத்து மகனுக்கும், பழனியப்பன் மகனுக்கும் இடையே நடந்த மீட்டிங், அலுவல் ரீதியான சந்திப்பு.   ஸ்பெக்ட்ரம் விலை நிர்ணயம் செய்வது தொடர்பாக நடந்த சந்திப்பு. (அல்லது சிதம்பரத்துக்கு பங்கு பிரிப்பதற்காக)      மன்மோகன் சிங் ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக அவர் மீதே குற்றச் சாட்டுகள் சுமத்தப் பட்ட போது, பிப்ரவரி 24 அன்று பாராளுமன்றத்தில், இவ்வாறு பேசினார். 

The government’s policy on the pricing of spectrum was taken on the basis of the Cabinet decision of 2003, which specifically left this issue to be determined by the Ministry of Finance and the Ministry of Telecommunications. Contrary to the assertion of the Leader of the Opposition, the record clearly shows that the then Finance Minister, while he initially had a different view, which he communicated to me on January 15, subsequently consulted with the Minister, Telecommunications and the two Ministers worked out an agreed formula on spectrum charges, which was reported to me in a meeting on July 4, 2008.   

அதாவது, 2003ல் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் (அதாவது பிஜேபிய ப்ளேம் பண்றாராமாம்…!!!!!) ஸ்பெக்ட்ரம் விலை தொடர்பான முடிவு நிதி மற்றும் தொலைத் தொடர்புத் துறை அமைச்சகத்தால் எடுக்கப் பட்டது.  முதலில் நிதி அமைச்சருக்கு விலை தொடர்பாக கருத்து வேறுபாடு இருந்தது.  பிறகு இரண்டு அமைச்சர்களும் ஜனவரி 15 அன்ற சந்தித்தார்கள்.  சந்தித்த பிறகு அவர்களுக்குள் உடன்பாடு ஏற்பட்டது (பேரம் படிந்தது) அவர்கள் அந்த விபரத்தை ஜுலை 4 அன்று நடைபெற்ற ஒரு கூட்டத்தில் என்னிடம் தெரிவித்தனர்.  (6 மாசமா இவருக்கு தெரியாதாம்…!!!! ஹய்யோ… ஹய்யோ..) 
ஆனால் சிதம்பரத்துக்கும், ராசாவுக்கும் இடையே நடந்த கூட்டத்தில் குறிப்புகள் (Minutes) எடுக்கப் பட்டுள்ளன என்று தற்போது தகவல் வெளியாகியுள்ளது.   இந்தக் கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்க பட்ட விஷயம், ஸ்பெக்ட்ரம் விலை தொடர்பானது.  இந்தக் கூட்டத்துக்கு முன், ராசா 2001 விலைக்கு ஸ்பெக்ட்ரத்தை கொடுக்க வேண்டும் என்கிறார், அதற்கு நிதி அமைச்சர் என்ற முறையில், சிதம்பரம் எதிர்ப்பு தெரிவிக்கிறார்.  இதை நாட்டாமை மன்மோகன் சிங் கூடிப் பேசுமாறு உத்தரவிடுகிறார்.   

chidambaram

இந்தக் கூட்டம், ராசா 122 ஸ்பெக்ட்ரம் லைசென்சுகளை வழங்கி உத்தரவிட்ட 20வது நாள் நடக்கிறது.  இந்தக் கூட்டம் தொடர்பாக பதிவு செய்யப் பட்ட குறிப்பில், சிதம்பரம், ஏற்கனவே ஸ்பெக்ட்ரம் ஒதுக்கப் பட்ட நிறுவனங்களுக்கு கூடுதலாக கட்டணம் வசூலிப்பதையோ, வருவாயைப் பகிர்ந்து கொள்வதைப் பற்றியோ மீண்டும் ஆராய வேண்டியதில்லை என்று குறிப்பிட்டிருக்கிறார்.   22 நவம்பர் 2007 அன்று அப்போதைய நிதிச் செயலாளர் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா ?   122 லைசென்சுகள் 1658 கோடி ரூபாய்க்கு வழங்கப் பட்டுள்ளன.  இது 2001 அன்று உள்ள விலைக்கு கொடுக்கப் பட்டது.  ஆகையால் இந்த லைசென்சுகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று சிதம்பரத்தின் அமைச்சகத்தின் செயலாளர் எழுதுகிறார்.

 

fmlettertopmopage01

fmletterPage10

இது தவிரவும் இந்தக் கூட்டத்திலேயே, ஒரு நிறுவனம் இன்னொரு நிறுவனத்தோடு இணைவது தொடர்பான விதிமுறைகளை மாற்ற வேண்டும் என்றும் ஸ்பெக்ட்ரத்தை ஒதுக்கீடு பெற்ற பின்பு நிறுவனங்கள் அதை விற்பதை தடை செய்வுது தொடர்பான விதிமுறைகளையும் மாற்ற வேண்டும் என்று அந்தக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.   இந்த சந்திப்புக்கு 3 மாதங்கள் கழித்து, ராசா தன்னிச்சையாக இரு நிறுவனங்கள் இணைவது தொடர்பான விதிமுறையை மாற்றுகிறார்.  ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெற்ற நிறுவனங்கள் 3 ஆண்டுகளுக்கு தங்கள் ஷேர்களை விற்பதோ, வேறு நிறுவனத்துடன் இணைவதோ, ஸ்பெக்ட்ரத்தை மறு விற்பனை செய்வதோ கூடாது என்ற விதியை சந்தடியில்லாமல் தளர்த்துக்கிறார்.   இதன் காரணமாகவே ஸ்வான், யூனிடெக் மற்றும் டாடா நிறுவனங்கள் தங்கள் பங்குகளை முறையே எடிசலாட், டெலிநார் மற்றும் டோகோமோ நிறுவனங்களுக்கு விற்று கொள்ளை லாபம் பார்த்தன.

இந்த மாற்றங்கள் எல்லாம் அறிந்தும் செட்டிநாட்டு சீமான் எதுவுமே செய்யவில்லை.  மாறாக 15.01.2008 அன்று சிதம்பரம் எழுதிய குறிப்பில், “தற்போது ஏற்கனவே ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெற்றவர்கள் குறித்த கேள்வி எழுந்துள்ளது.  ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெற்ற பொழுது அவர்கள் செலுத்திய கட்டணத்தை கூடுதல் ஸ்பெக்ட்ரத்துக்காக அவர்கள் செலுத்திய கட்டணமாக எடுத்துக் கொண்டு, இந்த விவகாரத்தை முடிந்து விட்டதாக கருதலாம்.” என்று எழுதியுள்ளார்.

தன்னுடைய அமைச்சகத்தின் செயலாளர், குறைந்த விலையில் ஸ்பெக்ட்ரம் வழங்கப் பட்டுள்ளது, அதை ரத்து  செய்ய வேண்டும் என்று எடுத்த முடிவை சிதம்பரம் ஏன் ரத்து செய்தார் என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி.

மார்ச் 2011ல் தற்போதைய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி மன்மோகன் சிங்குக்கு எழுதியுள்ள குறிப்பில், ஏற்கனவே ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப் பட்ட விலை குறித்து மீண்டும் மறு பரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் இல்லாததால், நிதி அமைச்சகம் (ப.சிதம்பரம்) குறைந்த விலைக்கு ஸ்பெக்ட்ரம் வழங்கியதை ஒப்புக் கொண்டதாகவே தெரிகிறது என்று எழுதியுள்ளார். 

1

2

3

4

பிரணாப் முகர்ஜி இப்படி வெளிப்படையாக சிதம்பரத்தை குற்றம் சாட்டி கருத்து தெரிவித்த பிறகும், காங்கிரஸ் சிதம்பரத்துக்கு வக்காலத்து வாங்குவது ஏன் என்பது மர்மமாகவே உள்ளது.

இந்நிலையில், திமுகவினர் தற்போது நடந்துள்ள டெவலப்மென்டுகளால் அகமகிழ்கின்றனர்.   ராசா மட்டுமே குற்றம் செய்தார் என்று, கனிமொழியையும், ராசாவையும், சிறையில் அடைத்த காங்கிரஸ் கட்சி, இன்று தன்னுடைய உள்துறை அமைச்சரின் பங்கு குறித்து என்ன பதில் சொல்லப் போகிறது என்பதையும் ஆர்வத்தோடு கவனித்து வருகிறார்கள்.

உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார் சுப்ரமணியம் சுவாமி. இந்த விவகாரத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ள சிபிஐ எடுத்துள்ள நிலைபாடுதான் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது. புதிய வழக்கு பதிவு செய்யவோ, புதிதாக குற்றவாளியை சேர்க்கும் உரிமை விழக்கு விசாரணையை நடத்தும் நீதிபதிக்குத் தான் உள்ளது. உச்ச நீதிமன்றத்துக்கு அந்த அதிகாரம் இல்லை என்ற நிலைபாட்டை சிபிஐ எடுத்துள்ளது. 

ஆனால் சுப்ரமண்ய சுவாமியோ, சிதம்பரத்தை விசாரிக்காமலேயே அவரை காப்பாற்ற சிபிஐ ஏன் முயற்சிக்கிறது என்ற கேள்வியை எழுப்புகிறார்.   உச்ச நீதிமன்றத்தில், ஸ்பெக்ட்ரம் 2001 விலைக்கு விற்கப் பட்டதில் சிதம்பரத்தின் பங்கு என்ன என்பதற்கு ஆதாரமாக ராசாவுக்கும், அப்போதைய நிதி அமைச்சர் சிதம்பரத்துக்கும் இடையே 2008 ஜனவரி 30இ மே 29, ஜுன் 12 மற்றும் ஜுலை 4 ஆகிய தினங்களில் நடந்த அலுவல் ரீதியான கூட்டங்களுக்கான ஆதாரங்களை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார் டாக்டர் சுவாமி.

சிபிஐ தனது குற்றப் பத்திரிக்கையில், நிதி அமைச்சரின் ஆலோசனையை ஆ.ராசா நிராகரித்துள்ளார் என்று குற்றம் சாட்டியுள்ளது.  ஆனால், நிதி அமைச்சருக்கும் இதில் பங்கு இருக்கிறது என்பதை விளக்கி, ஆதாரங்களோடு சிபிஐக்கு கடிதம் எழுதிய போது, சுவாமிக்கு பதில் அனுப்பிய சிபிஐ, அவர் அனுப்பிய ஆதாரங்கள் பரிசீலிக்கப் படும் என்று தெரிவித்தது.  ஆனால், குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்த போது, இந்த ஆதாரங்கள் நிராகரிக்கப் பட்டு, ஆ.ராசா தன்னிச்சையாக முடிவெடுத்திருப்பது போல் சிபிஐ நிலைபாடு எடுத்திருப்பது ப.சிதம்பரத்தை காப்பாற்றவே என்கிறார் டாக்டர் சுவாமி.

மேலும் சிபிஐ உச்ச நீதிமன்றத்தில் எடுத்துரைத்துள்ள வாதமும் தவறே..  சிபிஐயின் கூற்றுப் படி, வழக்கு விசாரணை நீதிமன்றத்துக்குத் தான் புதிய குற்றவாளியை சேர்க்கவும், விசாரணைக்கு உத்தரவிடவும் அதிகாரம் உள்ளது.   2ஜி வழக்கை பொறுத்தவரை, ஏற்கனவே உச்ச நீதிமன்றம், 2ஜி வழக்கில், விசாரணை நீதிமன்றமோ, உச்ச நீதிமன்றமோ உத்தரவுகள்  எதையும் பிறப்பிக்கக் கூடாது என்று ஆணையிட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.

 

இது தவிரவும், உச்ச நீதிமன்றம் என்பது குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் படியும், அரசியல் அமைப்புச் சட்டத்தின் படியும், அளவில்லாத அதிகாரங்களைக் கொண்டது.  ஆகையால், உச்ச நீதிமன்றம், பழனியப்பன் சிதம்பரம் குறித்து விசாரிக்க சிபிஐக்கு உத்தரவிட அதிகாரம் இல்லை என்ற வாதம் தவறானது.

ஆனால் இத்தனை ஆதாரங்கள் வெளியாகிய பின்னரும், காங்கிரஸ் கட்சி, சிதம்பரம் அப்பழுக்கற்றவர் அவர் ராஜினாமா செய்யத் தேவையில்லை என்று வாதிட்டு வருகிறார்கள்.

அதிமுக, பாஜக, இடது சாரிகள் என அனைவரும் சிதம்பரம் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.  ஆனால் காங்கிரஸ் கட்சி, சிதம்பரத்துக்கு ஆதரவாக எடுத்தள்ள நிலைபாடும், உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பாக எடுத்து வைக்கப் படும் வாதமும், சிதம்பரம் தவிர்த்து காங்கிரஸ் கட்சியில் வேறு யார் யாருக்கு 2ஜி ஊழலில் பங்கு இருக்கிறதோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.

ஆ.ராசா, பிரதமர் மற்றும் நிதி அமைச்சருக்கு தெரிந்தே 2ஜி விவகாரத்தில் அனைத்து முடிவுகளும் எடுக்கப் பட்டன என்று கூறுவதில் நியாயம் இல்லாமல் இல்லை.

சிதம்பரத்தை விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டால், அப்போது சிதம்பரம் இந்த ஊழலில் எனக்கு மட்டும் பங்கு இல்லை, மன்மோகனுக்கும் பங்கு இருக்கிறது என்று சொல்வாரா எனத் தெரியவில்லை.

ஆனால், இந்த ஊழலில், ராசா, கனிமொழி, சிதம்பரம் ஆகியோருக்கு இருக்கும் பங்கை விட, இந்த ஊழல் நடைபெறுவது தெரிந்தும், தன் பதவியை காப்பாற்றிக் கொள்வதற்காக மவுனச் சாமியாராய் இருந்த மன்மோகன் சிங்தான் மிகப் பெரிய குற்றவாளி.

அவர் மீது சட்டத்தின் கரங்கள் பாயுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 

 

 

 

 

 

 

Comments  

 
0 #37 padithurai pandi 2011-09-28 17:34
சவுக்கு நன்ரி
Quote
 
 
0 #36 muralikrishnan 2011-09-27 08:09
hello savukku,
who is going to bother about 2G OR 3G avarai patri eludhuvatho koodathu illavidil avar sarbaaga evanavadhu oruvan vandhu raid pannuvan appadi illai enil matrapadi aalai virru adippaan illvidil romba smartaaha share business pannuvaan ivanaal thaan indian share market keettu kuttichavar ayidutchu ??/ adhil ivan ethanai ayiram kodigal adithaaooooona???????
Quote
 
 
-1 #35 chandrasekharn 2011-09-26 20:26
எவன் பெரிய திருடன்? வோட் எடுங்கள்.

ஏமாந்தவன் யார்? சரன் சாரா? பசி அவ்ளோ பரியராரு!
Quote
 
 
+2 #34 narsu 2011-09-25 17:32
PM is no longer the head of the government. No one listens to him. His role is only in allocating portfolio's as per indiviudals and parties requirement. IT has been a calculated loot. Government shoudl resign, forthwith and re elections should be ordered.
Quote
 
 
+1 #33 Congress-karan 2011-09-25 15:39
ஒரு காலதில் மட்தியில தமிழ் நாட்டின் பிரதினிதியாகவும ் நனஙு படடிதவ்ராகவும் பார்க்கப்பட்ட சிதம்பரம் இவ்வாரு கீழ்தரமாக நடந்து கொல்வது வியப்பஹ உல்லது.
Quote
 
 
+4 #32 சவுக்கின் விசிறி 2011-09-25 09:05
திகாரில் தமிழ் விங் ஏற்படுத்தும் நிலை உருவாகி வருகிறது.
விரைவில், திகாரில் சரவண பவன் கிளை தொடங்க அண்ணாச்சிக்கு நல்ல வாய்ப்பும் இருக்கிறது.
Quote
 
 
-4 #31 SARAN 2011-09-25 04:41
I couldn't understand what is p.chidambaram's mistake. He only as a cabinet minister constantly and continuously opposed RAJA'S DECISION & DAYANIDHI MARAN's decision. Both were not in a mood to hear and both not willing to take this matter to GROUP OF CABINET MINISTERS to fix spectrum price. there are more than 100 evidences how much opposition PC shown to RAJA & MARAN.( EVERYBODY KNOWS THIS- WHETHER SWAMY DOESN'T KNOW THIS? ) It is his opposition only has come as a this much level SPECTRUM issue. IF he has accepted raja's decision earlier and didn't show any objection- NO SPECTRUM ISSUE.
can u show in RECENT INDIAN HISTORY any cabinet minister shown this much level effort to prevent our country's loss?
Finally as FM he has to agree other ministry's decision( like all of us) - he has no other way. this every average intelligent person know this.
Quote
 
 
+1 #30 p kuppuswamy 2011-09-24 23:34
ANY PERSON WITH NORMAL PRUDENCE AND AVERAGE EDUCATION WILL FIND IT DIFFICULT TO DIGEST THE FUNCTIONING OF Mr MANMOHAN SINGH GOVERNMENT ( I DON'T DENY HIS ROLE IN ECONOMIC REVOLUTION - LIBERALIZATION ETC ) - THEN HE IS FIT TO BE AN ADVISER TO GOVERNMENT AND FOR RULING THE COUNTRY . THE ARGUMENT OF COALITION IS NO MORE VALID ALL ARE WAITING FOR BALLOT TO TEACH A LESSON AND AFTER THAT THE CONGRESS WILL BE FORGOTTEN EVEN BY CONGRESSMEN
Quote
 
 
0 #29 tgrmurthy 2011-09-24 22:41
செட்டிநாட்டுசீம ான் சிதம்பரம் கனரா வங்கி்யின்
Quote
 
 
0 #28 N.Rajan 2011-09-24 16:24
Evanai evan jathiyiley irunthu othiki vaithithirupath u evan oru thirudan enbathinalthano
Quote
 
 
+2 #27 Force 2011-09-24 14:59
சிபிஐ உள்துறை அமைச்ச‌க‌த்தின் அடியாட்க‌ளாய் / வேலைக்காரர்களாய ் இருக்கிற‌து. குவாட்ரோச்சியை காப்பாற்றிய‌வ‌ர ்கள், காங்கிரஸுக்கு எதிரானவர்களை பொய் வலையில் சிக்க வைப்பார்கள்.
வ‌ழ‌க்கு வ‌ரும் முன்பே, உள்துறை அமைச்ச‌ர் (சித‌ம்ப‌ர‌ம்) த‌வ‌று இழைக்க‌வில்லை (அப்ப‌ன் குதிருக்குள் இல்லை) என்கிற‌து. ப‌ சித‌ம்ப‌ர‌த்தின ் அப்ப‌ழுக்க‌ற்ற‌ வெள்ளை உடைக‌ளுக்கும், வியாப‌ர‌ புன்ன‌கைக்கும் பின்னே, அவ‌ரின் நிர்வாண‌ முக‌ம் சிதம்ப‌ர‌ம் தேர்த‌ல் வெற்றி, மாவோஸ்டுக்க‌ள் எதிர்க்கும் வேத‌ந்தாவின் முந்நாள் நிர்வாகி, இந்திய‌ நாட்டை மின்சார‌ ச‌க்தி என்ற‌‌ பெய‌ரில் கொள்ளைய‌டித்த‌ 'என்ரான்' குழும‌த்திற்கு ச‌ட்ட‌ அலோச‌க‌ர் என அவ‌ரின் முர‌ணான வேட‌ங்க‌ளை இய‌ல்புக‌ளை அர‌சிய‌ல் விவ‌ர‌ம் அறிந்த‌வ‌ர்க‌ள் அறிவ‌ர் என்ப‌தை அவ‌ரும் அறிவார். மவோஸ்டுக‌ளை சாம‌தான ஒப்ப‌த்தந்திற்க ு சுவாமி அக்னிவேஷ் அழைத்து வ‌ரச் சொல்லிவிட்டு ஆஸாத் ம‌ற்றும் ப‌த்திரிக்கையாள ‌ர் பாண்டே மீதான‌ என்க‌வுண்ட‌ர் ஒரு சிறு சாட்சி.
Quote
 
 
0 #26 Force 2011-09-24 14:19
ச‌வுக்கு, த‌ங்க‌ளின் ப‌திவுக‌ளின் நோக்க‌த்தின் தாக்க‌த்தை, தாங்க‌ள் ப‌ய‌ன்ப‌டுத்தும ்'சாதிக‌ள்' நீர்த்துப் போகச் செய்கின்ற‌ன. முடிந்த‌ அள‌வு தேவையற்ற‌ இட‌ங்க‌ளீல் அதை த‌விர்த்தல் ந‌ன்று.
Quote
 
 
+7 #25 danguvaaru andhurum 2011-09-24 12:53
இங்கே யாருமே 2Gல மிகப் பெரிய லாபம் பார்த்த இராபர்ட் வதேரா பத்தி பேசவே மாட்டேங்கறீங்க. பழைய இரும்பு வியாபாரி பத்தே வருஷத்தில் top-5 பணக்கார லிஸ்ட்டில் இருக்கான்.

இதுல கூட மைனாரிட்டி பாகுபாடா?
Quote
 
 
+4 #24 M.S.Chagla 2011-09-24 11:29
In this mela, I am afraid the monster criminal brothers - one of them Dayandhi is being left scott free. He is happily roaming around outside. Always, I had doubts regarding the nefarious activities of Chidhambaram and his son Karthik. My friends tell me that he is the person who is managing all funds for his father. As the father so is the son. How is that without doing any job, Karthik is able to meet his everyday needs and come up to this level. All these scoundrels should be canned and fleeced.
Quote
 
 
+15 #23 Kaliraj 2011-09-24 11:13
சிதம்பரத்துக்கு ஒரு அட்வைஸ்.. கொஞ்சநாளைக்கு ஹெலிஹாப்ட்டர்ல போகாதீங்க..ஏன்னா நீங்கமாட்டுனா ஒரு நீல டர்பன் மாட்டிக்கொள்ளும ்.. அப்புறம் ஒரு பார்ல அட்டண்டரா வேலை பார்த்தவ மாட்டுவா.. போபர்ஸ்ல ஆட்டையப்போட்டவன ையே சாகடிச்சு உத்தமனாக்கிவிட் டார்கள்..அதுபோல உங்களையும் உத்தமானாக்கிவிட ுவாங்க..என்னைக்கேட்டா உயிர்பாதுகாப்பு க்கு பேசாமல் சு.சாமி சொல்லுவதுபோல கம்பிகளுக்கு பின்னாடி நீங்களே போயிடுங்க..ஆனால் அப்படி ஒரு காரியம் பண்ணுற அளவுக்கு நீங்க துணியமாட்டீங்க.. ஏன்னா நீங்க உங்களை ரொம்ப புத்திசாலின்னு நினைக்குற ஆளு..அதனால இன்னும் சுப்ரீம் கோர்ட்ல செருப்படிபட்டுத ்தான் மேற்ப்படி வேறவழியில்லாமல் நடந்திருக்கும்...இதையெல்லாம் அனுபவிக்கவா நீங்க பொய்யா ஜெயிச்சீங்க..உங்களுக்கான அடுத்த அஸ்திரம் உங்க தேர்தல் வழக்கு விசாரிக்கப்படும ்..அது கொஞ்சம் டவுட்டுதான்.. ஏன்னா அதுலையும் பார்ல வேலைபார்த்தவ மாட்டிக்கொள்ளுவ ா...
Quote
 
 
+4 #22 devadasan 2011-09-24 09:22
PC's complicity in stock market is well known as a share holder in fair Growth financial services Lrd. Will PC sell his stock holdings to the price at which he purchased. As a chettiar, he should have been a very honest Baniya. But PC is a blot for the Honest and intelligent community. days are not far off for his getting out of cabinet. Wait for Dr swamy's next salvo, which will be devastating.
Quote
 
 
+15 #21 suthiran 2011-09-23 23:56
தமிழன் என்று சொல்லடா ! தலை குனிந்து செல்லடா என்று செய்துவிட்ட ராஜா, கனி, தயா, செட்டினாட்டுக் கூட்டுக் களவாணி ப சி மற்றும் திருடர்கள் முன்னேற்ற கழகத்தின் ஒப்பற்ற திருட்டுத் தலைவன் கருணானிதி தாங்கள் தமிழினத்திற்குச ் செய்த மாபெரும் துரோகத்திற்குச் செய்யக்கூடிய ஒரே ப்ராயச்சித்தம் அப்புரூவர்களாகி , இந்த மாபெரும் துரோகி , உலக மஹா திருடி , அயோக்கிய சிகாமணிக் கட்சியின் ஒப்பற்ற சொக்கப் பித்தளை சோனியாவைக் காட்டிக் கொடுப்பது ஒன்று தான் . அப்போதும் கூட இந்தத் திருடர்களை எந்த ஒரு தமிழனும் என்றென்றும் மன்னிக்கவே கூடாது !
Quote
 
 
+5 #20 nonethuponavan 2011-09-23 21:24
he is corruped from 1977 itself.. he was pioneer of distributing money.. come and ask ppl in chettinadu about this stupid guy who did nothing to the sivaganga district.. this time also he threatened collector thro alagiri and made changes in result and declared himself won.. that case is still pending.. only in India it can happen when his selection of MP is under judiciary how can he be part of government ?... will they declare the result before next election ?..
Quote
 
 
+7 #19 USV 2011-09-23 20:58
ஐயோ வட பொச்சே.. காக்கா பாவம்ல?
ராஜா விடுவாரா?? ராஜா பாட்டு பாட.. நரி வடைய போட.. நம்ம ராஜாகிட்ட காக்கா தாங்க்ஸ் சொல்லிச்சு :ப்
Quote
 
 
+2 #18 Rangaraj Rajendran 2011-09-23 20:39
Welldone Savukku,
It is wonderful on the part of savukku to disclose these details for savukku readers.The High command of P.C
may involve in This matter.That why the role of CBI gets diluted.The legal system of India still lively
Quote
 
 
+16 #17 dilip kumar 2011-09-23 20:32
இந்த செட்டி நாட்டு சீமான் 2008 இல் ஹுண்டாய் கம்பெனி 10000 கோடி வரி ஏய்ப்பு செய்ததற்க்கு உடந்தை.அதை அமுக்கியவர் இவர்தான்.அதுவும் வெளி வந்தால் நிச்சயமாக இவர் சிறை செல்வார்.
Quote
 
 
+13 #16 Bertrand G. Russell 2011-09-23 19:57
ப. சிதம்பரத்திற்க் கு உள்ள் ஒரே வழி உண்மையை சொல்வதுதான் - பாரத மாதா சோனியாவின் தொடர்பை சொன்னால் - மீதம் உள்ள த்மிழர்களின் மானம் காக்கப்படும்.
Quote
 
 
+28 #15 ayyyoooo....ayyyyooo 2011-09-23 18:30
எனக்கு ஒரே சிப்புச்சிப்பா வருது... 120 கோடி மக்கள்.. மிகப்பெரிய சனநாயகநாடு... எந்த சட்டமும் உருப்படி கிடையாது.. ஊழல் செஞ்சால் ஒன்னும் பண்ண முடியாது.. குண்டு வச்சாலும் ஒன்னும் பண்ண முடியாது... கொலை ப்ண்ணாலும் ஒண்ணும் புடுஙக முடியாது... இந்த நஞ்சி நாற்றம் எடுத்த உதவாத சட்டத்த மாத்த முடியாது... படிச்சவன் எல்லாம் உழைக்காமல் சம்பாதிக்க அரசு வேலை மட்டும் தான் லாயக்குனு அதுக்காகவே அவன் எவ்வளவு திணணாலும் பரவைல்லனு ஒரு குறிப்பிட்ட கட்சிக்கும், என்மதத்த மதம் தெளியாமல் வச்சிகிறாஙகனு ஒரு கட்சிக்கும் ஓட்டு போடுவோம்... ஐ டினு ஒரு ஜாதி இப்ப புதுசு.. அது அவ்வ்வ்வ்.... அப்புடிதான்.
இது போதாதுனு நம்மள ஆள ஒரு ஆள இத்தாலி பார் ல இருந்து இறக்குமதி பண்ணி அப்புறம் நம்ம எல்லாலம் நம்ம காடு, மலை, மண், பணம், தங்கம், இன்னும் என்ன என்ன இருகோ? அது எல்லாத்தயும் கொள்ளை கொன்டு போ வெள்ளை தேவதயேனு... டி வி பாத்துகிட்டு டாஸ்மாக்ல மப்பு ஏத்திகிட்டு கவுந்துஅடிச்சி படுத்து ..... அய்ய்ய்யோ...அய்ய்யோ... ஒரே சிப்பு..சிப்பா வருது
Quote
 
 
+12 #14 manithan 2011-09-23 17:33
இவனுகல என்காவாது தமிழ்னாட்டில் நாம் பார்த்தால் ஓடஓட வெட்டிக் கொல்லனும் அதுவே நம் பில்லைகலுக்கு நாம் செய்யும் நல்லது.
Quote
 
 
+7 #13 jaya 2011-09-23 16:18
culprits. They ( congress) sircar is very big theif than the british. the congress will be defeated in the next parliament elctions definetly.
Quote
 
 
+20 #12 kaangirasu 2011-09-23 16:12
அப்ப சுப்புனிசாமி சொன்ன ஸ்பெக்ட்ரம் பர்சென்டஜ் 60% 30% 10% அப்புடிஙரது உன்மை தான்.... அப்ப செட்டினாடு பழனியப்பன் சிதம்பரம் யாருக்கு கப்பம் கட்டி இருப்பர்?? அப்பழுக்க்ற சொக்கதங்கம், பாரதத்தாய்க்கு இலவசமாகவே பல சேவைகளை செய்துவரும, என்ன காரணம்னே தெரியாமல் ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெற்ற அமரிக்க ரிட்டர்ன் ராஜமாதாவுக்கா...........? ஆ...ஆ...
Quote
 
 
+26 #11 htt/koothadiveddai. 2011-09-23 16:07
இதுவே சீனா, மற்றும் அரபு நாடுகளாயிருந்தா ல்.இம்மாம் பெரிய ஊழலுக்கு மண் மோகம் சிங்கத்துக்கும் , பீ சிடம்பரத்துக்கு ம் தூக்குத்தண்டனை குடுத்திருப்பான ுகள்.

இந்தியாவில மிஞ்சிப்போமனால் அடுத்த வருஷம் ஒரு குருட்டு நீதிபதியை நெயமிச்சு விசாரணைக்கமிஷன் அமைச்சு முடிச்சுடுவானுக ள். அவ்வளவுதான்.
Quote
 
 
+30 #10 தஞ்சை குணா 2011-09-23 16:04
ஆரம்பத்தில் சிதம்பரத்தின் நேர்மையையும், திறமையையும் கண்டு வியந்திருக்கிறே ன்.அவர் தமிழர் என்பதால் பெருமையடைந்திரு க்கின்றேன். சிறிய குற்றச்சாட்டுக் காக கூட தனது பதவியை ராஜினாமா செய்ய நினைக்கின்ற அவரது நேர்மையை கண்டு ஆச்சர்யமடைந்திர ுக்கின்றேன். இவர் தமிழ்நாட்டின் முதலமைச்சரானால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று கனவு கண்டிருக்கின்றே ன்.

ஆனால் இன்று ...........

எப்டி இருந்தவர் இப்டி ஆயிட்டார்....

எல்லாம் சகவாச தோசமா? உங்கள் மனசாட்சி இவ்வளவு தூரம் மரத்துப் போனது எப்படி ஐய்யா? உங்களை கடந்த தேர்தலின் போது காப்பாற்றியவர்க ளுக்கு உங்களது நன்றிக் கடனோ? நீங்கள் எப்போது உங்கள் வெற்றியை விலை கொடுத்து வாங்கினீர்களோ அன்றே உங்கள் மீதான மதிப்பை இழந்துவிட்டீர்க ள். நீங்கள் உள்ளபடி தோற்றிருந்தால் உங்கள் பெருமை உயர்ந்திருக்கும ்.
Quote
 
 
+15 #9 இராப்பிச்சை ராமதாசு 2011-09-23 16:01
இன்னுமா புரியல? திமுக திருட்டு கும்பல் (அமைச்சர் பெருமான் ராஜா, அன்பு மகள் கனி) 2ஜி ஆட்டய போடப்பார்த்தது. இந்த விஷயம் நம்ம செட்டினாட்டு சீமான் பசிக்கு தெரிஞ்சு கட்டிங் கேட்டார். கெடைக்கல, உடனே பிரச்சினையை ஆத்தாக்காரி, இத்தாலி ராணி சோனியா மைனேக்கு காட்டிக்கொடுத்த ார். ஆத்தாக்காரி பெரிய பங்கு எடுத்துக்கிட்டு மீதி சில்லறையையும் பெரும் பகுதியாக கெடைச்சது. ஆனால் அதில் கொஞ்சம் எலும்புத்துண்டை சித்துக்கு போட்டவுடன், அவர் பொருமிக்கொண்டு, மேட்டர வெளியில லீக் செஞ்சுட்டாரு. இந்த ஷேர் பிரிக்கறதில வந்த பிரச்சனையில் ஒருத்தனுக்கு ஒருத்தன் போட்டுகொடுத்திட ்டானுங்க. ஆனாலும் ஆத்தாக்காரி சோனியா பெரிய திருடிங்கறாதால மொத்த அமைச்சர் திருடனுங்களும், உள்குத்து செய்து ஏதாவாது பொருக்கமுடியுமா ன்னு பார்க்கறானுங்க. கெடைக்கல்லேனா போட்டுக்குடுத்த ு தன் வைத்தெரிச்சல காட்ட மட்டுமே முடியுது. ஏன்னா மம்மி மாட்டிக்கிட்டா பதவி போடயிடும், போனா பொருக்கமுடியாது . புரிஞ்சுதா?
Quote
 
 
+9 #8 R. Kani 2011-09-23 15:58
மடையர்களே,

பிரணாப் பிரதமர் பதவிக்கு கண் வைத்துள்ளார். சிதம்பரத்துக்கு ம் ஒரு கண். இந்த போட்டி காரணமா பிரணாப் சிதம்பரத்தை ஒழிக்க பார்க்கிறார். கொள்கை அளவில் எடுத்த முடிவு பிரணாபும் பொறுப்பு

ராஜா செய்தது திருட்டுதனம்
Quote
 
 
+17 #7 mathi 2011-09-23 15:10
என்ன செட்டியாரே! இப்படி வந்து தனியா மாட்டிகிட்டியேப ்பா. ராசா, கனி, தயா நிதி இப்ப சிதம்பரம் என்டா என்னத்தடா சாப்பிடுரிங்க இப்படி தமிழன் மனத்த கப்பலே த்திடிங்கலேடா.
Quote
 
 
+5 #6 s.g.kesav 2011-09-23 14:48
:zzz அர்புதம்
Quote
 
 
+8 #5 பெருசு 2011-09-23 13:54
என்னதய்யா புதுசா அப்பிடி கண்டுபுடிச்சு சொல்லிட்ட இப்போ?
இதயே தான நம்ம சுவன்னா சாமி வருசகணக்கா கூவிக்கிட்டு இருக்காரு, இந்த "சின்ன பையன" உள்ள புடிச்சுப் போடணும்னு....
போங்கயா போங்கயா போயி வேற வேல எதுனா இருந்தா பாருஙகப்பு...நல்லா கண்டுபுடிச்சான் சவுக்கு 'முட்டைலேந்து தான் கோழி வந்துச்சு'னு..
Quote
 
 
+5 #4 smurali 2011-09-23 13:38
சரியான ஆப்பு இருக்கு சிதம்பரத்திற்கு
திமுக வுக்கு கொண்டாட்டம். :P :P
Quote
 
 
+15 #3 Ravi 2011-09-23 13:28
இவரை செட்டி நாட்டு சீமான் என்று சொல்வது செட்டி நாட்டுக்காரர்கள ை அவமானப் படுத்துவதாகும். இவரை வேண்டுமானால் "செட்டி நாட்டு வெட்டி" என்று சொல்லுங்கள். அல்லது செட்டி நாட்டு பிச்சைக்காரன் என்று சொல்லுங்கள். இவர் இப்படி திருடி நக்கி தின்பதற்கு வேறென்ன சொல்ல முடியும்.
Quote
 
 
+36 #2 arunyo 2011-09-23 12:49
கொஞ்சம் பொறுத்திருங்கள்
இந்த சிவகங்கை சின்ன பையன் ஸ்டேட் பாங்க் மூலமாக

ஒரு மன்னாரு அன் கம்பெனிக்கு 600 கோடி
ருபாய் லோனை எந்தவித செக்குரிட்டி
இல்லாமல் கொடுத்துள்ளான்
அதில் சிக்கி அவதிப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை
Quote
 
 
+15 #1 G GUNASEKAR 2011-09-23 12:27
NICE REVELATION.FRAUD GOVT. UNHOLY NAC. CHAIRMAN.ITALIAN FILTHY. PRAY GOD TO SAVE INDIA. NONSENSE RAHUL SHOULD GO TO TIHAR
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 68 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday3153
mod_vvisit_counterYesterday10087
mod_vvisit_counterThis week3153
mod_vvisit_counterLast week78861
mod_vvisit_counterThis month215972
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12738091