முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
இன்றோடு ஆறு ஆண்டுகள். அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 64
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
திங்கட்கிழமை, 18 அக்டோபர் 2010 21:41

 

Koose_Muniswamy_Veerappan_con_mitra

இன்றோடு ஆறு ஆண்டுகள் ஆகின்றன. எது பற்றி என்று கேட்கிறீர்களா ?   சந்தன வீரப்பன் என்று அழைக்கப் பட்ட கூஸ் முனுசாமி வீரப்பன் இறந்து இன்றோடு ஆறு ஆண்டுகள் ஆகின்றன.

 

வீரப்பனை கொன்றோம் என்று மார் தட்டிக் கொண்டவர்களும், அதிகாரி வீட்டில் சப்பாத்தியும் தோசையும் சுட்டவர்களும், அதிகாரி ஷூவுக்கு பாலீஷ் போட்டவர்களும், ஒரு படி பதவி உயர்வும், இரண்டு லட்சம் ரொக்கமும், இரண்டு கிரவுண்டு நிலமும் பெற்று இன்றோடு இரண்டு ஆண்டுகள் ஆகி விட்டன.

 veerappan_300

ஆனால், வீரப்பனை தேடுகிறோம் என்ற பெயரால், வன்புணர்ச்சி செய்யப் பட்ட பெண்களும், இட்லரின் நாஜிப் படையை விட மோசமான சித்திரவதைகளுக்கு உள்ளான ஆண்களும், பெண்களும், இன்றும் மவுன சாட்சிகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இந்தச் சித்திரவதைகளை செய்தவர்களும், செய்யத் தூண்டியவர்களும், இன்று பதவி மெத்தைகளிலும், அதிகார அரியணைகளிலும், அமர்ந்திருக்கிறார்கள்.

 

வீரப்பனால் பெயரைக் கூறி பத்திரிக்கை விற்பனையை பெருக்கியும், வீரப்பனுக்கு தருகிறேன் என்று கூறி, கோடிக்கணக்கான ரூபாய்களை கொள்ளையடித்தவர்களும், அன்று ஆட்சி பீடத்தில் உள்ளவர்களுக்கு, நெருக்கமாக, கும்மியடித்துக் கொண்டு, ஆட்சியாளர்கள் அடிக்கும் கொள்ளைகளுக்கு ஒத்து ஊதிக் கொண்டு உள்ளார்கள்.

virappan7 

வீரப்பனை கொன்று விட்டோம் என்ற மார்தட்டிக் கொண்டு, ஆறு ஆண்டுகள் கழித்து, இன்றைய நிலைமை என்ன என்று பார்த்தால், வருத்தமும், ஏமாற்றமும், வீரப்பன் இல்லையே என்ற ஏக்கமும் ஏற்படுகிறது.

 

வீரப்பன் இன்று உயிரோடு இருந்தால், படகில் தமிழகம் வந்து ஒகெனக்கலை சொந்தம் கொண்டாட யாருக்காவது தைரியம் இருக்குமா ? தமிழகத்தில் கால் வைக்க வாட்டாள் நாகராஜுக்கு தைரியம் இருக்குமா ?

வீரப்பன் தந்தங்களுக்காக யானைகளைக் கொன்றான், மரங்களை வெட்டினான் என்றெல்லாம் பல்வேறு குற்றச் சாட்டுகளைச் சொன்னாலும், வீரப்பன் என்ற ஒரு நபர் இல்லாத இந்தியாவின் பல்வேறு இடங்களில் சந்தனமும் ரோஸ்வுட் மரமும், தேக்கும் மற்றும் பல்வேறு உயர்வகை மரங்களும் மிக மிக மோசமாக கொள்ளையடிக்கப் பட்டுத்தானே வருகின்றன ? இந்தியாவில் வனங்கள் இருக்கும் பகுதிகளில், மரக்கொள்ளையர்கள் இன்று வரை மரங்களையும் இயற்கை வளங்களையும் கொள்ளையடித்துத் தானே வருகின்றனர் ?

ver1 

ஆனால், ஒரு கட்டத்திற்குப் பிறகு, விரப்பன் யானைகளை கொல்வதை நிறுத்தி விட்டார் என்பதுதான் உண்மை. ஆனால், வீரப்பனை தேடுகிறோம் என்ற பெயரில், மலைவாழ் மக்களை, கர்நாடக காவல்துறையும், தமிழக காவல்துறையும் படுத்திய பாடு கொஞ்ச நஞ்சமல்ல. சோளகர் தொட்டி படித்துப் பாருங்கள்… !  

 

வீரப்பன் இருந்த காலத்தில், காட்டுக்குள் வந்து வேட்டையாட பயந்த மரக் கொள்ளையர்கள் வீரப்பன் இருந்த பக்கமே வரமாட்டார்கள் என்றும், வனத்துறையினர் மீது துளியும் பயம் இல்லை என்றும், வீரப்பன் என்றால் அவ்வளவு அச்சம் என்றும், சத்தியமங்கலம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் தெரிவிக்கிறார்.

 veerappan_brother

வீரப்பன் என்கவுண்டரில் சுட்டுக் கொலை செய்யப் பட்டார் என்ற செய்தி டிவியில் வந்ததும் அறிந்திருப்பீர்கள்.   ஆனால், அந்த என்கவுண்டரில் முக்கியப் பங்கு வகித்த ஒரு ஆய்வாளர் யார் தெரியுமா ? என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் என்று தன்னைத் தானே அழைத்துக் கொள்ளும் வெள்ளைத் துரை.   ஆறு ஆண்டுகளுக்கு முன், என்கவுண்டர் நடந்ததாக சொல்லப் படும் 18.10.2004ம் ஆண்டு, வெள்ளைத் துரை சங்கம் தியேட்டர் எதிரில் இருக்கும் உதவி ஆய்வாளர்கள் குடியிருப்பில் குடியிருக்கிறார்.   17.10.2004 அன்று இரவு, தன்னுடைய குடியிருப்பில் இருக்கும் குழந்தைகளோடு, தரைத் தளத்தில் வண்டி நிறுத்தும் இடம் அருகே வெள்ளைத் துரை கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தது, அந்த குடியிருப்புக்கே தெரியும். மறுநாள் டிவியைப் பார்த்தால், வெள்ளைத் துரை போஸ் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்.

 

வீரம் என்பது என்ன தெரியுமா ? மோரில் விஷம் வைத்து ஒருவனை கொன்று விட்டு, பிணத்தின் மீது துப்பாக்கியால் சுட்டு, அந்தப் பிணத்தோடு போஸ் கொடுப்பதல்ல. ..   34 ஆண்டு காலம், இரண்டு மாநில காவல்துறைக்கும், மத்திய ரிசர்வ் காவல் படைக்கும், சிம்ம சொப்பனமாக விளங்கி மலைவாழ் மக்களின் கதாநாயகனாக வாழ்ந்தது தான் வீரம்.   கடற்கரையின் இருட்டில் உட்கார்ந்திருந்தவனை பேசப் போவது போல் சென்று, கொன்று விட்டு அயோத்திக் குப்பம் வீரமணியை நான்தான் கொன்றேன் என்று மார்தட்டிக் கொள்வது வீரமல்ல….

 

வீரப்பன் இல்லாத நிலையில், இன்று கேரள எல்லையில், தொடர்ந்து சந்தன மரங்கள் கடத்தப் படுவதாக தகவல்கள் கூறுகின்றன.   வீரப்பன் இருந்த வரை, யானைகளையும் வன விலங்குகளையும், உணவுக்காக வேட்டையாடக் கூட, வனத்துறையினர் அஞ்சி நடுங்கியதாகவும், இப்போது, பழைய ராஜாக்கள் காலம் போல, வனத்துறையினர், மான்களையும், மற்ற வன விலங்குகளையும், உணவுக்காக வேட்டையாடி வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

 

வீரப்பனுக்கு, உணவு கொடுத்தோம், உதவி செய்தோம் என்ற காரணத்துக்காக, பல்வேறு சித்திரவதைகளுக்கு உள்ளான மலைவாழ் மக்கள் கூட, இன்று வீரப்பன் இல்லாததை நினைத்து வருந்துவதாக தகவல்கள் கூறுகின்றன.

 

 வீரப்பன் என்ற ஒருவன் குற்றவாளியாக இருக்கலாம்.   வனச் சொத்துக்களை அழித்தான் என்று அவன் மீது குற்றஞ்சாட்டலாம்.   வீரப்பன் வனச் சொத்துக்களை அழித்தான் என்றால், மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தையும், மலையின் இயற்கை வளத்தையும், நீராதாரத்தையும் அழித்துச் சுரங்கம் தோண்டும் வேதாந்தா குற்றவாளி இல்லையா ? அதன் இயக்குநர்களில் ஒருவராக இருந்த ப.சிதம்பரம் குற்றவாளி இல்லையா ?   மலைவாழ் மக்களுக்கு எதிராகவும், வேதாந்தாவுக்கு ஆதராவகவும் தீர்ப்பு அளித்த இந்திய தலைமை நீதிபதி கபாடியா குற்றவாளி இல்லையா ?

இயற்கை வளங்களை யார் அழிக்கவில்லை ?   காட்டில் அழித்தால் மட்டும் தான் இயற்கை வளமா ? நகரத்தில் உள்ள ஏரிகளை தூர்த்து, அதன் மீது, பிளாட் போட்டு விற்று, கோடிக்கணக்கில் பணத்தை கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகளும், ரியல் எஸ்டேட் காரர்களும் அழிப்பதற்கு பெயர் இயற்கை வளம் இல்லையா ?

 

    VATAL_NAGARAJ_5289e

வீரப்பன் என்ற மாவீரன் இல்லாததால் தமிழகம் இழந்ததே அதிகம். வீரப்பன் இருந்திருந்தால், வாலாட்டும் வாட்டாள் நாகராஜின் வாலை நறுக்கியிருப்பார்.

 

Comments  

 
+2 #60 Anniyan 2010-11-21 14:37
அடைந்திருக்கலாம ே நீ சரண்-
உன் மேல் இருந்த வழக்கு எல்லாம்
ஏறி இருக்குமேபரண்.

சுடப்பட்டதாலே நீ
வீணப்பன்..பிழைத்திருந்தால ் தின்றிருக்கலாமே
மைசூர் கார பன்.

நீ செய்ததோ நூறே கொலை-
உன் உயிரா அதற்கு விலை?

கொன்றவரும் அடித்தார் மொட்டை--
விட்டிருந்தால் காடே மொட்டை!
நீ கண் திறந்தால் ஆனைகள் அதிரும் -
பொறை உன் கண் மூடியதால் அன்றோ
பூனைகளும் புது வீரம் கண்டன?

உன் ராஜராஜாங்கத்தில ் சிறு நரிகளையும்
உலவ விட்டதனால் அன்றோ
எலிகளும் இன்று ஏரியல்-வ்யூ பார்க்கின்றன?

நீ கைமுஷ்டிக்குள் புயலை அடக்குபவன்..
வெறும் தென்றலா உன்னை புரட்டிப் போட்டது?

நீ காட்டையே கட்கத்தில் அடக்கியவன் -
சிறு செடியா உன்னை இடறி விட்டது?

நீ நிறுத்திவிட்டாய ் உன் ஆட்டத்தை--
நானும் நிறுத்துகிறேன் என் பாட்டத்தை.
Quote
 
 
0 #59 maari 2010-11-19 11:22
Prabagaran pondra oru thalaivan thamilagatthel vanthaalthaan thamilagam thalai nimira mudiyum...illai endraal kodunkolaragale l kaiyel sikki kondu, makkal sitthiravathaig alai anubavikka vayndiyathuthaa n...
Quote
 
 
-2 #58 noone 2010-11-11 15:46
where is ur reply savukku?? why dont u speak abt jaya???
Quote
 
 
-1 #57 Nadunilaiyalan 2010-10-30 17:34
ஜெயலலிதா தற்போது மாநிலத்திலும், மத்திய அரசிலும் எந்த செல்வாக்கும் இல்லை..அவர் வெறும் அதிகாரம் இல்லாத எதிர் கட்சி தலைவராக தான் தற்போது உள்ளார். அவரை பற்றி எழுதுவதற்கு என்ன இருக்கிறதுஓகே நான் ஒத்து கொள்கிறேன். ஆனாலும் சவுக்கு ஏன் வீரப்பன் விசயத்துல ஜெயலலிதாவ பத்தி ஒண்ணுமே சொல்லல.காவிரி விசயத்துல ஜெயலலிதா இதுக்கு முன்னாடி என்ன பண்ணினா? ஜெயலலிதா இலங்கை தமிழ் மக்களுக்கு செய்ததை சவக்கு சொல்லலாமே? ஜெயலலிதா மதுரையில் பேசியதும் இங்கே கட்டுரையாக வருவதும் ஒரே மாதிரியாக இருப்பதை பார்த்தல் யார் அந்த அம்மாவுக்கு எழுதி கொடுப்பது என்று தெரியவில்லை. இங்கே உள்ள சில மன்குனிகள் வேண்டுமானால் சவுக்கு நடுநிலை என்று சொல்லலாம். ஆனால் அது உண்மை இல்லை. இவர் ஒரு பக்கா ஜெயலலிதாவின் அனுதாபி. 1991 - 1996 மற்றும் 2001 - 2006 தமிழ்நாடு எவ்வளவு கேவலமான ஆட்சியை கண்டது என்று எல்லாருக்கும் தெரியும். இங்கே பலர் சொன்னது போல கொடநாட்டில் இருந்து எத்தன பொட்டி கை மாறியது இப்படி இந்த ஆட்சியை பத்தி எழுத. உண்மையான பதில் தேவை. Mr சவுக்கு உண்மையான பதில் தேவை மற்றும் ஜெயலலிதா பற்றிய உங்களுடைய உண்மையான நிலை என்ன?
Quote
 
 
+1 #56 anonymous 2010-10-26 22:47
Excellent post sir. i agree with you 100%..

I first realised this truth, when i saw the serial "santhanak kaadu" in makkal TV..

We are NOT independant india.. rather, the government today is the same colonial government.. only diff is that earlier white people looted us.. not brown people doing the same.. (Vellakkaran poi kollakkaran vanthaacchu)
Quote
 
 
+6 #55 இலங்கை தமிழன் 2010-10-26 11:25
மனமுல்ல தமிழங்க தமிழ் நட்டில் அறுகி போயிட்டாங்க கட்டாயம புரட்சி வெடிக்கனும் இல்லாட்டி உங்கல கப்பாத்த யாராலயும் முடியாது இனி நீங்க இந்தியாவ நம்பி வேலை இல்லை தமிழன அவனே கப்பத்திகனும்
Quote
 
 
0 #54 Pradeep_P 2010-10-25 15:24
nalla pathivu..... cricket adekondu epadee encounter paninar white thurai ???? :-?
Quote
 
 
+6 #53 ராஜேஷ் தேவேந்திரன் 2010-10-25 15:16
அரசியல் வாதிகள் அடிக்காத கொள்ளையா எங்க அண்ணன் வீரப்பன் அடிச்சிட்டான் முதலில் ஊழல் செய்யும் அரசியல் வாதியை தான் சுடனும்
Quote
 
 
0 #52 sarathi 2010-10-23 11:48
very good news : :lol:
Quote
 
 
+4 #51 கபிலன் 2010-10-22 17:39
தங்களின் பதிவு உண்மைதான். ஒரு தனிப்பட்ட மனிதனுக்காக இந்திய அரசாங்கம் செய்த செலவுகள், எல்லாம் வீண். அவன் இல்லாததால் நடக்கும் கொடுமைகளை யார் அறிவார்? வீரப்பன் இல்லாததால் வனங்கள் குறைந்து கொண்டு கொண்டே போகிறது. எப்படி மழை பெய்யும் காடு குறைந்தால். எல்லாம் அரசியல் சதி தான். அனைவரும் சிந்திக்க வேண்டிய விஷயம் தங்களின் பதிவு... தங்களின் பதிவுக்கு நன்றி..
Quote
 
 
+3 #50 Suyiyaa 2010-10-22 02:47
சோளகர் தொட்டி. படிக்கும் நமக்கே இவ்வளவு தாக்கம்


இவ்வுலகில் நமக்கு என்ன உரிமை


உண்டோ, அதே உரிமை மற்ற அனைவருக்கும், உண்டு. அது நாமாக இருந்தாலும் சரி, மலை வாழ் மக்களாக இருந்தாலும் சரி, ஈழ தமிழனாக இருந்தாலும் சரி, அனைவருக்கும் அணைத்து உரிமையும் உண்டு.
Quote
 
 
0 #49 Suyiya 2010-10-22 02:45
மன்னார் அமுதன்...சங்கடப் படுத்த மாட்டார்கள் ......கருத்துக்களில் கூட மாடரேஷன் கூடாது என்பதுதான சவுக்கின் கருத்து. அதற்காக சகட்டு மேனிக்கு, வாய்க்கு வந்தபடி எழுதலாமா ? அது சரியா
Quote
 
 
+1 #48 madura muNiyaNdi 2010-10-21 10:31
ஏப்ப, admk JJ edhuvume theriyadha ambi
Quote
 
 
0 #47 abc 2010-10-21 00:08
Police officials are only stooges of the politicians. Don`t expect them to be brave and honest. You are right in criticising Karunanidhi while sparing Jayalalithaa. Because, Karunanidhi is ruling the state while Jaya is only an opposition leader.
Why don't you expose the corrupt IAS officials like Thanjavur collector M S Shanmugam.
Quote
 
 
0 #46 chandran 2010-10-20 23:33
oru criminal veerappanukku vakkalatthu vangureenga avan etthanai perai marainthirinthu konran theriyuma avan oru veeranaa? romba butthisali ennu ninaikkkathinga
Quote
 
 
+4 #45 lkc 2010-10-20 23:09
ப.சிதம்பரம் குற்றவாளி இல்லையா ? மலைவாழ் மக்களுக்கு எதிராகவும், வேதாந்தாவுக்கு ஆதராவகவும் தீர்ப்பு அளித்த இந்திய தலைமை நீதிபதி கபாடியா குற்றவாளி இல்லையா ?

இயற்கை வளங்களை யார் அழிக்கவில்லை ? காட்டில் அழித்தால் மட்டும் தான் இயற்கை வளமா ? நகரத்தில் உள்ள ஏரிகளை தூர்த்து, அதன் மீது, பிளாட் போட்டு விற்று, கோடிக்கணக்கில் பணத்தை கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகளும ், ரியல் எஸ்டேட் காரர்களும் அழிப்பதற்கு பெயர் இயற்கை வளம் இல்லையா ?//
சவுக்கு அவர்களே, நெத்தியடி .....
இருந்தாலும் இந்த பொறுக்கி தேசம் இந்திய அரசியல்வியாதிகள ் திருந்தவ போராயிங்க ?!:(


மக்களின் கதாநாயகனாக வாழ்ந்தது தான் வீரம்.//
வீரம் குறித்த விளக்கம் மிக அருமை தோழர்...
வீரப்பன் அவர்கள் குறித்து தகவல் + நினைவுகூரிய அல்லது நினைவூட்டலுக்கு மிக்க நன்றி தோழர்..
Quote
 
 
0 #44 MDMK 2010-10-20 21:06
Good article..
Quote
 
 
+8 #43 tsekar 2010-10-20 19:46
நக்கீரன் ஆசிரியர் -கோபால் சொன்னார் -வீரப்பன் இரண்டாவது மகளை -டாக்டர்க்கு-(Doctor-) படிக்கச் வைபதாக-ஆதாவது -தனியார் மருத்துவ கல்லூரியில் -சீட் வாங்கி -படிக்க வைபதாக -பத்ரிகைகலுக்கு பேட்டி தந்தார் -அதற்கு எவ்வளவு பணம் -வீரப்பனிடம் -வாங்கி இருப்பார் !!

வீரப்பன் தனது இரண்டாவது மகளை -டாக்டர்க்கு படிக்க பெரிதும் ஆசைபட்டார் !!! அதனால் நிறைய பணம் நக்கீரன் ஆசிரியர் -கோபால்கு கொடுத்தார்

ஆனால் வீரப்பன் இரண்டாவது மகள் -எப்போது - பொறியியல் -(Engineering) தான் படிகிறார்.

நக்கீரன் ஆசிரியர் -கோபால் -உங்களுக்கு மனசாட்சி என்று ஒன்று -உண்டா ?

நன்றி விசுவாசம் -என்று ஒன்று உங்களுக்கு உண்டா ?

-tsekar
Quote
 
 
+3 #42 MURUGHES 2010-10-20 18:57
வீரத்தமிழர் வீரப்பன் அவர்களுக்கு வீர வணக்கங்கள்.

வீ முருகேசன், பம்பாய், இந்தியா. +91 9833776818.
Quote
 
 
+4 #41 jaya 2010-10-20 17:02
தமிழகத்தில் வீரப்பன் என்ற ஒரு சுத்தமான வீரனை நியாயத்திற்கு புறம்பாக கொன்று விடீர்களே "
Quote
 
 
+5 #40 கனிமொழி கபடநிதி, 2010-10-20 14:41
ஊரை விற்றவன் முதல்வன்,
ஒருவனுக்கு ஒருத்தி என்ற தமிழ்ப்பண்பாட்ட ை விற்றவன் தமிழர் தலைவன்,
ஊழலின் ஊற்றுவாய்க்கு வித்தகன் என்று பேர்,
அண்டப்புளுகும் பொய் வாய்க்கும் காவலன் என்று பேர்,
தமிழரை கொன்று வதைப்பவன் தமிழ்க்காவலன்,
இதுதான் தமிழனின் தலைவிதிஃ
Quote
 
 
0 #39 syed Zia KSA 2010-10-20 13:31
We thought DSP Vellaidurai as hero and now found he is less than a comedy piece.. poooo..
Quote
 
 
0 #38 சம்பந்தம் 2010-10-20 12:57
Quoting ravinathan:
how to type in tamil in savuku comment?


நீங்கள் google-ல் சென்று NHM Writer download செய்து அதை Install செய்யவும்
Quote
 
 
+4 #37 Manikandan 2010-10-20 12:52
Hi readers,

I am from sathyamangalam.... here many of readers said tat veerapan is a criminal and all... who said he is criminal..... Come and see in sathyamangalam.... he is the real hero....... now also people thinking veerapan is god and all... dont loose ur word without knowing anything,,,, all said he killed wild animals and cutted sandal wood ... but now only tat and all increased while comparinig to veerapan years..... then see who is criminal...
Quote
 
 
+1 #36 tamilan 2010-10-20 12:34
all the viewers will think u r bold enough to post these articles but u r one sided and it is proved from your past articles itself u have not mentioned JJ in any category(good r bad) but u r cursing only karuna. Readers b careful with all his articles. he is saying the police officials raid in the village but at that time the government runner is JJ. no comments about her. she proudly said in many meetings as,in my rule only veerapan was encountered. savukku feel shame to be one sided.. u have the political support. if u r really brave enough u should have posted your pictures in the site. hiding and doing such things will not favour u.
Quote
 
 
+1 #35 satya 2010-10-20 11:03
who were the regular buyers of the sandal woods that had been supplied to them by veerappan, why nobody found ou sofar in this connection.
Quote
 
 
-2 #34 சீனு 2010-10-20 08:22
சவுக்கடி...
Quote
 
 
-5 #33 Nameless 2010-10-20 01:35
Dear Savukku,
I have a high regard for you for your courage and motive.

ஒரு மரம் கடத்தி எப்படி வீரனான் என்று விவரிக்கவும்.

கெட்டவர்கள் ஒன்று சேர்ந்து ஒரு கெட்டவனை நேர்மையின்றி கொன்றுவிட்டால் கொன்றவர்கள் கெட்டவர்கள் என்பதற்காக கொல்லப்பட்ட கெட்டவன் நல்லவன் ஆகிவிடுவானா?

சவுக்கு சரியான கருத்தைச் சொல்கிறீர்களா?

கருநாயைவிட கனியைவிட ராசாவை விட மோசமான கொள்ளைக்காரன் இல்லை வீரப்பன்(Veerap an's illegal assets would not even match up a 0.0000000000001% of what MK's family had acquired illegaly) அனைவரும் ஒப்புக்கொள்ளலாம ் ஆனால் இந்த ஒரு விடயம் மட்டுமே போதுமா வீரப்பன் நல்லவனாகிவிட?

வழக்கம் போல,
அனானி
Quote
 
 
0 #32 ravinathan 2010-10-20 01:33
how to type in tamil in savuku comment?
Quote
 
 
-2 #31 thileeban 2010-10-20 00:39
kannada naai kal tamil nadu varamudiuma ,
Quote
 
 
-1 #30 tamilan 2010-10-19 23:23
unmai entravathu veli varum enpathrkku intha article le satchi.
Quote
 
 
-8 #29 chakrapani r 2010-10-19 22:00
Savukku,

You have disappointed me by supporting people like sandal wood smuggler veerapan.
I think you need to clean your glasses.

Thanks,
R. Chakrapani
:sad:
Quote
 
 
+4 #28 Rajasekar 2010-10-19 21:52
Spice Jet தனது சேவையை இலங்கைக்கு தொடங்கியுள்ளது என்பதனை அறிந்து அதிர்ந்தேன் . கருணா சிங்களர்களுக்கு ஆதரவாக செயல் பட்டதற்காக கிடைத்த சலுகையா???
பிணம் தின்னி என்பதனை நிருபித்து விட்டார்.
Quote
 
 
+8 #27 rukku 2010-10-19 20:04
வீரப்பன் அவர்களுக்கு நல்லபுத்தியும் ரோசமும் வீரமும் இனப்பற்றும் இரத்தத்தோடு கலந்திருந்தும் "நடிக்கத்தெரியாத " காரணத்தாலும் பித்தலாட்டம் தெரியாததால் வனவாசம் போக நேரிட்டது.இந்த வீர மனுசனுக்கு குறைந்தது சிரிப்பு நடிகர் கருணா அளவிற்காவது நடிக்கவந்திருந் தால் ,நாடகச்சக்கரவத் தி காக்கா ராதாகிருஷ்ணனை, வென்று மத்தியில் உள்த்துறை, அல்லது பாதுகாப்பு அமைச்சைப்பெற்றி ருக்கலாம், விரும்பினால் முதலமைச்சராகவும ் ஆகியிருக்க முடியும் .மனிசனுக்கு ரோசம் முன்னுக்கு நின்றது, நடிப்பும்பொய்யு ம் தெரியவில்லை, காலம்.
Quote
 
 
+7 #26 ப.ச.விடுதலைசக்ரவர்த் 2010-10-19 19:17
தமிழகத்திற்கு இருந்த பிரபாகரன் கொல்லப்பட்டார் என்பது தமிழ் உணர்வாளர்கள் அணைவரின் வருத்தமே
Quote
 
 
0 #25 Dravidan 2010-10-19 18:48
DEAR SAVUKKU,
WHY YOU ARE NOT SPEAKING ABOUT 'PURATCHI THALAIVI'. FEW PEOPLE THINK THAT YOU ARE BIASED. I KNOW ITS DIFFICULT TO ANSWER READER COMMENTS, BUT PLS.
Quote
 
 
0 #24 Dravidan 2010-10-19 18:30
VAZHTHUKKAL SAVUKU, YOU HAVE CROSSED 5L HITS :-)
Quote
 
 
+6 #23 வடக்குபட்டி ராமசாமி 2010-10-19 16:56
வீரப்பனை கொன்றதாக மார் தட்டிகொண்ட புரட்சிதலைவி பற்றி சொல்ல ஒண்ணும் இல்லையா சவுக்கு.
Quote
 
 
+4 #22 M.S.Vasan 2010-10-19 16:38
/ப.சிதம்பரம் குற்றவாளி இல்லையா ? மலைவாழ் மக்களுக்கு எதிராகவும், வேதாந்தாவுக்கு ஆதராவகவும் தீர்ப்பு அளித்த இந்திய தலைமை நீதிபதி கபாடியா குற்றவாளி இல்லையா ?//

புதுக்கோட்டை ச‌மண‌ர் குகைக்குன்றுக‌ள ், ம‌துரை ஒத்த‌க்க‌டை யானை ம‌லை, பாலாறு, நெய்யாறு, வைகை (வ‌ள்ள‌ல்க‌ள்), தாமிர‌ப‌ர‌ணி ஆற்று நீர் ம‌ற்றும் ம‌ண‌ல் கொள்ளைய‌ர்க‌ள். இன்றைய‌ கொள்ள‌ய‌ர்க‌ள், மீசை வைத்து க‌ட்ட‌ம் போட்ட‌ லுங்கியில், கையில் அருவாள்க‌ளுட‌ன் இல்லை,
ப‌ளீர் வெள்ளை வேஷ்டி, தும்பைபூ நிற‌ச் ச‌ட்டை, பால்,வெண்னை வ‌ழியும் முக‌ம், காவ‌ல‌திகாரி புடைசூழ‌ காதுவ‌ரை நீண்ட‌ புன்ன‌கை வேஷத்தில் கார்ப‌ரேட் கொள்ளைய‌ர்க‌ள் வெளிநாட்டு பிஎம்ட‌பிள்யூக‌ ளில் டீவி செய்திக‌ளில் பொய் சிரிப்புட‌ன், பூனை மாதிரி நட‌ந்து வருவார்க‌ள்.‌
உஷார்.
Quote
 
 
+5 #21 panneer 2010-10-19 16:21
சில வாரங்களுக்கு முன் துவக்கி 2 பகுதிகளோடு நிறுத்தப்பட்ட வீரப்பன் குறித்த தொடரை மீண்டும் தொடங்குங்கள் சவுக்கு ....
முன் அறிவிப்பின்றி ஏன் அது நிறுத்தப்பட்டது ....?
Quote
 
 
+3 #20 eyarkainambi 2010-10-19 16:03
தேவையான பதிவு
வீரப்பனை குற்றவாளி என கூறுகிறவர்களுக் கு ஒரு கேள்வி
ஏன் அவரை குற்றவாளி என்கிறோம். சந்தன மரங்களை கடத்தினார் என்பதற்கா? யானைகளை கொன்று தந்தங்களை கடத்தினார் என்பதற்கா? அப்படியானால் அதை வாங்கியவர்களும் குற்றவாளிகள் தானே ! அவர்கள் எல்லாம் பெரு முதலாளிகள், அரசியல் தலைவர்கள் என்ற பேரில் இன்றும் சுகபோக வாழ்க்கையில்!
வீரப்பனால் என்று தங்களுடைய தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லையோ அன்றே குற்றவாளி என முத்திரை குத்தப்பட்டு பின்பு கொல்லபட்டார். இனியாவது மாற்று சிந்தனைக்கு இடம் கொடுப்போம்
Quote
 
 
0 #19 savukku vasagan 2010-10-19 15:50
Quoting Kaipulla Dubai:
i am really surperised and shocked about this article.savuku means justice. BUT here savukku supporting criminal is unjustified....pls keep it straight forward..if u doing this means u will loose the crdibility... :oops:


பேருக்கு தகுந்த மாதிரி கைப்புள்ளையா இருக்கியே...உங்க தெருக்குள்ள நடக்கிற விஷயம்கூட உனக்கு முழுசா தெரியுமான்னு தெரியல...தினமலர்ல கமெண்ட் போடறதோட நிறுத்திக்கோங்க ..உங்களோட மொக்கைய இங்க போடவேண்டாம்.
சவுக்கு ஒரு விஷயம் நல்லா தெரியுது....நெறைய பேரு தலைவர் பிரபாகரன் மேல விஷத்தகக்குரானு ங்க ? இதுக்கு பேரு தான் கலிகாலமா ?
Quote
 
 
+7 #18 சவுக்கு 2010-10-19 14:18
Dear Kaipulla of Dubai, thanks for the appreciation. Though Veerappan is a criminal, what about the criminals who raped innocent women and who electrocuted the innocent tribals ? Are you aware what was the methods adopted for torture ? Tribals were forced to eat human faeces..! Live electric wires were connected to males penises and testicles.. Similarly live wires were inserted into private parts of females. Lathis were inserted into the private parts of females..

Would you condone these barbarism in the name of searching for Veerappan ?
Quote
 
 
+11 #17 KVR 2010-10-19 13:38
வீரப்பன் உயிரோட இருந்தபோது ஒரு காட்டுவள ஆராய்ச்சியில் சொல்லப்பட்ட செய்தி: இந்தியாவில் அதிகம் அழிக்கப்படாத காடுகளில் முதலிடம் வகித்தது வீரப்பன் வாழ்ந்த காட்டுப்பகுதியே . காரணம், வீரப்பனைப் பற்றிய பயம். இப்போ!!! :-(
Quote
 
 
-1 #16 RAMA 2010-10-19 13:12
we are living in the capitalism world.
Only vedantha,sun tv,manaada mayilaada,relia nce like people are fit to live in this world.Killing veerappan,praba karan makes these activities reach entier population and brain wash everybody to follow them.
Quote
 
 
-7 #15 Kaipulla Dubai 2010-10-19 13:03
i am really surperised and shocked about this article.savuku means justice. BUT here savukku supporting criminal is unjustified....pls keep it straight forward..if u doing this means u will loose the crdibility... :oops:
Quote
 
 
-1 #14 venkattan 2010-10-19 12:38
பதிவு அருமை. dont compare saddam. he killed other community. veerappan is not a raciest or genocide.
Quote
 
 
+6 #13 நான் கடவுள் 2010-10-19 12:36
சரியான நேரத்தில் சரியான கட்டுரையை கொடுத்திருக்கிற ீர்கள் சவுக்கு. உங்கள், எழுத்து, கேள்விகள், பதில்கள், எடுத்துக்காட்டு கள் அனைத்துமே மெச்சத்தக்க அளவில் உள்ளன.

தமிழகத்தில் சவுக்கு மட்டுமே உண்மையான, துணிச்சலான பத்திரிகை. ஆனால், அச்சில் வராதது தமிழர்களின் துரதிருஷ்டமே!

“வெள்ளைத்துரை மட்டைப் பந்து விளையாடிக்கொண்ட ிருந்தான்” என்கிற உண்மையை ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு சவுக்கு வந்துதான் சொல்லவேண்டி இருக்கிறது.

அவமானம். -தமிழ்ப் பத்திரிகைகளுக்க ு.
Quote
 
 
+3 #12 வீரத்தமிழன் 2010-10-19 12:22
இதைக் கண்டிப்பாகப் படிக்கவும்.
சோளகர் தொட்டியின் விமர்சனம்:

http://elanko.net/?p=63

நெஞ்சை உருக்கும் சம்பவங்கள்....
இத்தனை பாவம் செய்தவர்களுக்கு பதவி உயர்வு, நிலம்.....
Quote
 
 
+2 #11 tamil2175 2010-10-19 11:58
வீரப்பன் இறந்து ஆறு ஆண்டுகள் ஓடிவிட்டன, அனால் வீரப்பனை பிடிக்கிறோம் என்று சொல்லிக்கொண்டு மலைவாழ் மக்களின் வாழ்வை நாசமாக்கி அவர்களின் வாழ்வை கெடுத்த மனிதநேயம் அற்ற காவல்துறை அதிகாரிகள் மீது ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்காதது ஏன்?
இந்த கூட்டுச் சதியில் தங்களுக்கும் தொடர்பு இருக்கின்ற காரணத்தினாலா?
மக்களுக்கு தேவை மக்கள் ஆட்சி, அதிகாரிகளின் மனிதநேயமற்ற ஆட்சிமுறை அல்ல
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 209 விருந்தினர்கள் மற்றும் 1 உறுப்பினர்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday5382
mod_vvisit_counterYesterday11260
mod_vvisit_counterThis week37841
mod_vvisit_counterLast week80132
mod_vvisit_counterThis month240573
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12762692