முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்தொடர்புக்கு
+++
தயாநிதி மீது விரைவில் எப்ஐஆர். அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 16
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
வியாழக்கிழமை, 29 செப்டம்பர் 2011 09:23

2ஜி ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் மீது விரைவில் முதல் தகவல் அறிக்கை பதிவு (எஃப்.ஐ.ஆர்.) செய்யப்படுமென்று உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ புதன்கிழமை தெரிவித்துள்ளது.

 

÷2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேட்டில் தயாநிதி மாறனுக்கு எதிராக ஆதாரம் இருப்பதாகவும் உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ கூறியுள்ளது.

 

÷ மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தபோது, "ஏர்செல்' நிறுவனத்துக்கு நெருக்குதல் கொடுக்கும் வகையில் நியாயமற்ற முறையில் நடந்து கொண்டார் என்பது உள்பட அவர் மீதான பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் சிபிஐ வசம் உள்ளதாகத் தெரிகிறது.

 

÷2ஜி அலைக்கற்றை வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இந்த வழக்கின் விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் தொடர்பான புதிய விசாரணை நிலை அறிக்கை மூடி முத்திரையிடப்பட்ட உறையில் வைத்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி, ஏ.கே. கங்குலி ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்விடம் அறிக்கை அளிக்கப்பட்டது.

 

÷சிபிஐ தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் கே.கே.வேணுகோபால் அப்போது கூறியது: இந்த வழக்கில் தயாநிதி மாறனுக்கு உள்ள தொடர்பு குறித்த முதல்நிலை விசாரணை முடிந்து விட்டது. அடுத்த சில நாள்களில் அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படும்.

 

÷இதே வழக்கில் "எஸ்ஸôர்' நிறுவனத்தின் மீதான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது முடிய இன்னும் 2 வார காலம் ஆகும். வழக்கில் தொடர்புடைய ஒவ்வொருவர் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படும் என்றார்.

 

÷"ஏர்செல்' நிறுவனத்தின் முன்னாள் உரிமையாளரான சிவசங்கரனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மத்திய அமைச்சராக இருந்த தயாநிதி மாறன், நியாயமற்ற வகையில் பாரபட்சமாக நடந்து கொண்டது தெரியவந்துள்ளது.

 

÷நெருக்குதல் காரணமாக மலேசியாவின் "மேக்ஸிஸ்' நிறுவனத்துக்கு "ஏர்செல்' விற்கப்பட்டுள்ளது. இதில் ரூ.549 கோடி கைமாறியுள்ளது என்று கூறினார். ஆனால் இது தொடர்பான முழு விவரங்களை வேணுகோபால் கூறவில்லை.

 

÷"மேக்ஸிஸ்' நிறுவனம் மாறன் சகோதரர்களுக்குச் சொந்தமான சன் குழுமத்தில் முதலீடு செய்துள்ளது. இது தொடர்பாக அந்த நிறுவன அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. ஏர்செல் - மேக்ஸிஸ் விவகாரத்தில் தயாநிதியின் பங்கு குறித்து அப்பல்லோ மருத்துவமனை இயக்குநர் சுனிதா ரெட்டியிடமும் விசாரணை நடத்தப்பட்டது என்றும் வழக்குரைஞர் வேணுகோபால் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

 

இந்த வழக்கில் தொடர்புடைய பிற நிறுவனங்கள் மீது விசாரணை நடைபெற்று வருவதால் 3-வது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்படுகிறது என்றும் அவர் கூறினார்.

 

÷முன்னதாக காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி முதல் முறையாக மத்தியில் 2004-ல் ஆட்சி அமைத்தபோது தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி பதவி வகித்தார்.

 

2007 வரை அவர் அமைச்சராக இருந்தபோது ஏர்செல் நிறுவனத்துக்கு நெருக்குதல் கொடுத்ததாகப் புகார் எழுந்தது. இப்புகாரை அடுத்து "ஏர்செல்' நிறுவனர் சிவசங்கரனிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றது.

 

அதில் தயாநிதி மாறன் தமக்கு அலைக்கற்றை ஒதுக்கீடு தராமல் சுமார் இரண்டு ஆண்டு காலம் இழுத்தடித்தார் என்றும், அதன் காரணமாக "ஏர்செல்' நிறுவனத்தை மலேசியாவைச் சேர்ந்த "மேக்ஸிஸ்' நிறுவனத்திடம் விற்க வேண்டியதாயிற்று என்றும் சிவசங்கரன் கூறியிருந்தார்.

 

மலேசிய நிறுவனத்தின் கைக்கு "ஏர்செல்' மாறிய 30-வது நாளில் 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். அதன் பின், சன் குழுமத்தின் சன் டி.டி.எச். நிறுவனத்தில், மேக்ஸிஸ் துணை நிறுவனமான அஸ்ட்ரோ ரூ. 600 கோடியை முதலீடு செய்திருந்தது.

 

÷இதையடுத்து 2ஜி ஊழலில் தயாநிதிக்கும் தொடர்பு உண்டு என்று உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ கூறியது. இதனால் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் இரண்டாவது ஆட்சி காலத்தில் ஜவுளித்துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் கடந்த ஜூலை 7-ம் தேதி பதவி விலகினார்.

 

Comments  

 
+5 #11 asai siva 2011-10-15 16:53
சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து சுரண்டலையே முழுநேர தொழிலாக்கி கொண்டு விட்ட காங்கிரஸின் அந்நாளைய முதலைகளிலிருந்த ு இந்நாளைய சோனியா(அண்டோமெய ்னா),ராகுல்ரால் ),கபில்சிபல்,பி ரணாப்,சிதம்பரம் , திக்விஜய்சிங் என அனுமார் வால் போல் நீண்டு கிடக்கும் தலைமைகள் ஒதுக்கப்படவேண்ட ிய அரசியல் வியாதி இல்லையா? தமிழ் தமிழன் என்று சொல்லி ஏமாற்றி இப்போது மகளை சிறைக்கு அனுப்பி உலகின் மிகபெரும் ஊழலை நடத்தி காட்டியிருக்கும ் கருணாநிதி ஒதுக்கப்படவேண்ட ிய அரசியல் வியாதி இல்லையா? 100 கோடியில் வளர்ப்பு மகனுக்கு ஆடம்பர திருமண விழா நடத்தி எல்லையில்லா தொல்லைகள் கொடுத்து மக்களால் தண்டிக்கப்பட்ட ஜெயலலிதா ஒதுக்கப்படவேண்ட ிய அரசியல் வியாதி இல்லையா? எடுத்ததெற்கெல்ல ாம் மரத்தை வெட்டி போட்டு மக்களை சாதி அரசியலுக்குள் அடைத்து அழிக்க முற்படும் ராமதாசும் திருமா_வும் ஒதுக்கப்படவேண்ட ிய அரசியல் வியாதி இல்லையா? 45 ஆண்டுகால அரசியல் வாழ்வில் ஒற்றை ரூபாய் கூட ஊழல் புரியாத வை.கோ, எத்தனையோ தமிழர் பிரசினைக்களுக்க ாக குரல் தந்து போராடும் வை.கோ அரசியலில் வெல்வது தமிழகத்திற்கும தமிழினத்திற்கும ் நல்லது.
Rate it: 76 6Share this comment
Quote
 
 
+1 #10 வால்டர் வணங்காமுடி 2011-10-14 14:08
இவனுங்களை 'தடா'வில் விசாரிக்க வேண்டும்.
Quote
 
 
+3 #9 seithi 2011-10-03 14:55
Kalanidhi Maran to land in Delhi with his wife, travelling in their special aircraft. Speculation CBI wants him for further investigation
Quote
 
 
-5 #8 Aadivasi 2011-10-01 18:03
This smart ass finds the way to Tihar. One more question Savukku...neega en ADMK ku jaldra adikeriga?
Quote
 
 
+12 #7 savukku raja 2011-09-29 22:05
When will the CBI start invetigating the Leased line scam done by Maran from his boat house.
He used the costly BSNL leased line for his "bun TV" group from boat club house.

Tamil Nadu CM initally said that giovt will investigate the cable laid from maran home to "bun tv" office. But there is no sign of that...
Quote
 
 
+5 #6 BalajiKR 2011-09-29 21:46
Good News :-)
Quote
 
 
+10 #5 savukku fan 2011-09-29 17:20
wow superb. Savukku back to form....

Count down start panniyachu... :-)
Quote
 
 
+7 #4 M.S.Chagla 2011-09-29 13:59
But more greater thieves are roaming scottfree outside. The case to the point is the swindling brothers Ambani and the mother of all scandals - P.Chidhambaram. More such scoundrels should be exposed right from the Italian bar lady to his son too. At any cost, the Maran brothers sh'ld'nt be left free.
Quote
 
 
+21 #3 http://koothadivedda 2011-09-29 12:55
தயாநிதி மீது எவ் ஐ ஆர் போடுறது சரி. மண் மோகன், பசி, கருணா, ராசாத்தி, தயாளு, இவங்கமேல எப்ப வழக்கு சார்ஜ் பண்ணி எப்போ எவ் ஐ ஆர் போடப்போறங்க.
Quote
 
 
+13 #2 kumarnow 2011-09-29 11:45
பாபா (சவுக்கு) கவுண்டவுண் ஸ்டார்ட்ஸ்!!!
Quote
 
 
+32 #1 puthiaanniyan 2011-09-29 09:54
Wow,,,,I like this countdown,,,,,, real rowdy who looks like a gentleman who talks like an idiot who is really a stupid should definitely be arrested,,,,,,, ,,,,,,,,,Nowher e in the world, one could abuse his power like this to have a private exchange,,,,,,
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 406 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday11902
mod_vvisit_counterYesterday13443
mod_vvisit_counterThis week37132
mod_vvisit_counterLast week95167
mod_vvisit_counterThis month259392
mod_vvisit_counterLast month382199
mod_vvisit_counterAll days13175759