முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
புத்திசாலி ராசா…. அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 15
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
வியாழக்கிழமை, 29 செப்டம்பர் 2011 13:56

ஆனால், ராசா கைது செய்யப் பட்டதிலிருந்து, 2ஜி வழக்கின் விசாரணை தொடங்கி நடைபெறத் தொடங்கியது முதலே மிக மிக கவனமான அணுகுமுறையை கையாள்கிறார்.   ராசா கைது செய்யப் பட்ட பிறகு, ஒட்டு மொத்த ஊழலுக்கும் ராசாதான் காரணம் என்று பேசப்பட்டுக் கொண்டிருந்த சமயத்தில், திடீரென்று மாறன் சகோதரர்கள் மீதான ஊழல் குற்றச் சாட்டுகள் வெளியாகின.   இதன் பின்னணியில் இருந்தது ராசா என்றே கூறப்பட்டது.

அதன் பிறகு இவ்வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்த போது, ராசா மிக கவனமாக, அனைத்து முடிவுகளும் பிரதமருக்கு தெரிந்தே நடந்தன என்ற வாதத்தை முன் வைத்த போது, காங்கிரஸ் கட்சி அதிர்ந்து போனது.  ராசா கைது செய்யப் பட்ட புதிதில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த, சோனியாவுக்கு நெருக்கமானவராக அறியப்பட்ட அஹமது படேல், ராசாவை சந்தித்தார்.   அதன் பிறகு, ராசாவை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டது மட்டுமல்ல, திமுகவைச் சேர்ந்தவர்களே கண்டு கொள்ளவில்லை.

A_Raja_0098

திமுகவைச் சேர்ந்தவர்கள் கண்டுகொள்ளாமல் விட்டதோடு மட்டுமல்லாமல், ராசாவை தகத்தகாய கதிரவன், பொட்டல் காட்டில் பூத்துக் குலுங்கும் பூச்செடி (கொடுத்த காசுக்கு சளைக்காமல் கூவுகிறார்) என்று வர்ணித்த கருணாநிதி, அத்தனை ஊழல்களையும் செய்தது ராசாதான் என்றும், கனிமொழி, ஒன்றும் அறியாத அப்பாவி, வாயில் விரல் வைத்தால் கூட கடிக்கத் தெரியாதவர் என்றும் கனிமொழியின் ஜாமீன் மனு விசாரணையின் போது வாதிடச்  செய்தார்.

ஆனாலும் சாதுர்யமான ராசா, இந்த நேரத்தில் இதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பது தன்னுடைய வழக்கில் பின்னடைவு ஏற்படுத்தும் என்று உணர்ந்து அதை கண்டுகொள்ளாமல் விட்டு விட்டார்.  கனிமொழி மட்டும் சிறையில் இல்லாவிட்டால், தன்னைப் பார்க்க திமுகவில் இருந்து ஒருவரும் வரப்போவதில்லை என்பதை உணராதவர் அல்ல ராசா.

ஆனால், ராசா அடுத்து நகர்த்திய காய் நகர்வுகள், காங்கிரஸ் கட்சியை ஆடிப்போக வைத்தது.    ராசா கைது செய்யப் பட்ட புதிதில், ராசாவை சோனியாவின் அரசியல் ஆலோசகர் அஹமது படேல் வந்து சந்தித்ததோடு சரி.  காங்கிரஸ் கட்சியில் இருந்து ஒருவர் கூட தன்னை வந்து சந்திக்கவில்லை என்பதை ராசா உணராதவர் அல்ல.   பொறுமையாக காத்திருந்து உரிய நேரத்தில் அதற்காக பதிலடியை கொடுத்தார்.

ஸ்பெக்ட்ரத்தை ஏலம் விட வேண்டாம், முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்பது நான் மட்டும் எடுத்த முடிவு அல்ல, அமைச்சரவை எடுத்த முடிவு.  ஆனால் கூட்டாக எடுத்த முடிவுக்காக நான் மட்டும் சிறையிலிருக்கிறேன் என்று வாதிட்ட போது, காங்கிரஸ் கட்சியில் பெரும் அதிர்வுகள் ஏற்பட்டன.   “இது நீதிமன்றத்தில் செய்யப் படும் வாதம், அதற்கு பெரிதாக முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதில்லை” என்று வெளியில் சொல்லிக் கொண்டாலும், காங்கிரஸ் கட்சியின் பெரிய தலைகள் ஆடித்தான் போனார்கள்.

அடுத்து ராசா, சிதம்பரத்தையும், மன்மோகன் சிங்கையும் சாட்சியாக விசாரிக்க வேண்டும் என்று வாதாடினார்.   இது சாதாரணமாக எடுத்து வைத்த வாதமாக கருத முடியாது.  சிதம்பரமோ, மன்மோகன் சிங்கோ சாட்சியாக விசாரணை நீதிமன்றத்தில் விசாரிக்கப் படும் போது, அவர்களிடம் கேட்கும் கேள்விகளுக்கு அவர்கள் அளிக்கும் பதில்களை வைத்தே, அவர்களை குற்றவாளிகளின் பட்டியலில் சேர்க்க முடியும் என்பதை வழக்கறிஞரான ராசா உணர்ந்தே செய்தார் என்று தோன்றுகிறது.

a-raja4_20110217

தற்போது மத்திய அரசில் ஏற்பட்டு வரும் குழப்பங்களை ராசா மகிழ்ச்சியோடு ரசித்து வருவதாகவே தெரிகிறது.  தொடக்கத்தில் பெரும் பரபரப்போடு தொடங்கப் பட்ட 2ஜி வழக்கின் விசாரணை ராசா வசமாக சிக்கிக் கொண்டார் என்று எண்ண வைத்தது.  ஆனால் நாளுக்கு நாள் நடக்கும் புதுப் புது திருப்பங்கள் ராசா மீதான வலை தளர்ந்து வருவதை உணர்த்துகிறது.

நேற்றைக்கு முன்தினம் ராசாவின் வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் எடுத்து வைத்த வாதம் அற்புதமானது.    ராசாவின் வழக்கறிஞர் சுஷில் குமார், உச்ச நீதிமன்ற டிவிஷன் பென்ச் முன்பாக, வாதிடும் போது, ‘சிபிஐ 2ஜி வழக்கில் விசாரணை இன்னும் முடியவில்லை என்று கூறுகிறது.  புலன் விசாரணை தொடர்ந்து நடைபெறுவதாகவும் தெரிவிக்கிறது.   2ஜி வழக்கு தொடர்பாக 2010 அக்டோபர் 21ல் பதிவு செய்யப் பட்ட ஒரே ஒரு எப்ஐஆர் தான் உள்ளது.  புலன் விசாரணை முடிந்தால் தான் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப் பட வேண்டும் என்று குற்றவியல் நடைமுறைச் சட்டம் கூறுகிறது.

அப்படி இருக்கையில் புலன் விசாரணை நடைபெறும் ஒரு வழக்கில் ராசா மட்டும் ஏன் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப் பட வேண்டும் ?” என்று வாதிட்டார்.

இவரது வாதத்தை கேட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே.கங்குலி மற்றும் ஜி.எஸ்.சிங்வி ஆகியோர் “நீங்கள் புத்திசாலியான மனிதர்” என்று தெரிவித்தனர்.  ராசா தரப்பில் தற்போது வைக்கப் பட்டுள்ள வாதம், சிபிஐக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.  அடுத்த கட்டமாக, புலனாய்வு முடியாத ஒரு வழக்கில் நான் ஏன் சிறையில் இருக்க வேண்டும் என்ற வாதத்தையும் ராசா முன்வைப்பார்.

உண்மையிலேயே ஆண்டிமுத்து ராசா, புத்திசாலி ராசா தான்.

 

Comments  

 
-1 #23 Raja Nesan 2011-10-05 09:51
Without knowing any iota of the case all were crying foul as if raja had looted money...and the cry came from all the caste ridden subramania swamy co to anti-DMK lobby. At last Raja was made scape goat...as he had no strong lobby and a dalit . The New Delhi Politics is full of network with Beaurocrats/politicians/judges/media....and some vested interests always blow up small issues.

Raja might have taken bribery but not to the extent that was publicised...and who is not taking the bribery in the govt beaurocrate position including a peon to supreme court judge to ministers.

So Raja was targetted to destablise DMK and keeping TN election and corner Karunanithi...and they were successful. To me Raja is suffering in jail due to politics and not due to bribery.
Quote
 
 
0 #22 makku sarika 2011-10-04 22:49
சவுக்கு புத்திசாலி ராசா தான் ட்.
tc
Quote
 
 
0 #21 AROKIARAJ 2011-10-02 22:48
he is very talented, and COURT IS NOT SUITABLE FOR POLITICIANS- ONLY CHOICE IS PEPLES COURT IS THE CORRECT THING AND WE HAVE TO BEET HIM LIKE A BABY AND THEN ONLY INDIA IS GOING TO CHANGE
Quote
 
 
-2 #20 பெருசு 2011-10-01 12:09
[ஃஉஒடெ நமெ="சுண்டெலி"][ஃஉஒடெ நமெ="வால்டர் வணங்காமுடி"][ஃஉஒடெ நமெ="பெருசு"][ஃஉஒடெ நமெ="வால்டர் வணங்காமுடி"][ஃஉஒடெ நமெ="கலிரஜ்"]கருணாநிதி எனக்கு திசை காட்டும் விளக்கு: மன்மோகன் சிங்

ஒரு கையில தியாகத்திருவிளக ்கு, மறுகையில மஞ்சவிளக்கு..விளங்கிடும்[/ஃஉஒடெ]


சொன்னா தப்பா நினைக்க கூடாது.
இப்போ அந்த 'விளக்கை' மன்மோகன் யாருக்கு புடிச்சிகிட்டு இருக்காரு?[/ஃஉஒடெ]

முருகனுக்கும் நளினிக்கும்[/ஃஉஒடெ]


அப்போ கார்த்திகேயனுக் கும், மன்மோகனுக்கும் சரியான போட்டின்னு சொல்லுங்க....!!! :லொல்:[/ஃஉஒடெ]

அப்போ ரகோத்தாமன்?!!!?... ம் எண்ணெய் ஊற்றுவான் (நம்புங்க விளக்குகுதான்) கேடுகெட்ட பிராமணன்.[/ஃஉஒடெ]

எப்புடீ? இலங்கைக்கு போயி க்ராதபட்சே கைய்ய குலுக்கிட்டு வந்தானே தெருமா, அவன மாதிரியா?
Quote
 
 
+5 #19 shan 2011-09-30 12:12
போகிர போக்கை பார்தால் 2ஜி ஒன்ரும் இல்லாமல் போகி விடும் போல... வால்துகள்.
ராசா மாடும் யென்ன இலிஷ வாயனா?
Quote
 
 
0 #18 சுண்டெலி 2011-09-30 10:44
Quoting வால்டர் வணங்காமுடி:
[ஃஉஒடெ நமெ="பெருசு"][ஃஉஒடெ நமெ="வால்டர் வணங்காமுடி"][ஃஉஒடெ நமெ="கலிரஜ்"]கருணாநிதி எனக்கு திசை காட்டும் விளக்கு: மன்மோகன் சிங்

ஒரு கையில தியாகத்திருவிளக ்கு, மறுகையில மஞ்சவிளக்கு..விளங்கிடும்[/ஃஉஒடெ]


சொன்னா தப்பா நினைக்க கூடாது.
இப்போ அந்த 'விளக்கை' மன்மோகன் யாருக்கு புடிச்சிகிட்டு இருக்காரு?[/ஃஉஒடெ]

முருகனுக்கும் நளினிக்கும்[/ஃஉஒடெ]


அப்போ கார்த்திகேயனுக் கும், மன்மோகனுக்கும் சரியான போட்டின்னு சொல்லுங்க....!!! :lol:


அப்போ ரகோத்தாமன்?!!!?... ம் எண்ணெய் ஊற்றுவான் (நம்புங்க விளக்குகுதான்) கேடுகெட்ட பிராமணன்.
Quote
 
 
-4 #17 manithan 2011-09-30 02:18
ராசாவையும் கனியையும் கைது பன்னின போலிஷ் அம்மா போலீஷாக இருந்திருந்தால் சும்மா சுப்பாராக இருந்திருக்கும் .
Quote
 
 
+19 #16 ஊர்க்குருவி. 2011-09-29 18:36
கருணாநிதிக்கு சூனியா தியாக திருவிளக்கு.
மண் மோகனுக்கு கருணா குத்துவிளக்கு.
தங்கம் பாலுவுக்கு அன்னை சூனியா அமரதீபம்.
குஞ்சாமணி அண்ணனுக்கு ஆ ராசா மற்றும் கருணா மானமிகு சூரிய ஒளி.
அடங்கமறுப்போம் திடுமாவுக்கு அனைத்தும் விளக்கு.
ராமதாசருக்கு அன்புமணி அணையா விளக்கு,
Quote
 
 
0 #15 வால்டர் வணங்காமுடி 2011-09-29 18:10
[ஃஉஒடெ நமெ="பெருசு"][ஃஉஒடெ நமெ="வால்டர் வணங்காமுடி"][ஃஉஒடெ நமெ="கலிரஜ்"]கருணாநிதி எனக்கு திசை காட்டும் விளக்கு: மன்மோகன் சிங்

ஒரு கையில தியாகத்திருவிளக ்கு, மறுகையில மஞ்சவிளக்கு..விளங்கிடும்[/ஃஉஒடெ]


சொன்னா தப்பா நினைக்க கூடாது.
இப்போ அந்த 'விளக்கை' மன்மோகன் யாருக்கு புடிச்சிகிட்டு இருக்காரு?[/ஃஉஒடெ]

முருகனுக்கும் நளினிக்கும்[/ஃஉஒடெ]


அப்போ கார்த்திகேயனுக் கும், மன்மோகனுக்கும் சரியான போட்டின்னு சொல்லுங்க....!!! :lol:
Quote
 
 
+20 #14 சவுக்கு பிரியன் 2011-09-29 16:58
சவுக்கு ராஜா வை திட்டினாலும் ரசிக்கிறார்கல்... பாராட்டினலும் ரசிக்கிறார்கல்... ஸ் த பவர் ஆப் சவுக்கு?
Quote
 
 
-10 #13 பெருசு 2011-09-29 16:48
[ஃஉஒடெ நமெ="வால்டர் வணங்காமுடி"][ஃஉஒடெ நமெ="கலிரஜ்"]கருணாநிதி எனக்கு திசை காட்டும் விளக்கு: மன்மோகன் சிங்

ஒரு கையில தியாகத்திருவிளக ்கு, மறுகையில மஞ்சவிளக்கு..விளங்கிடும்[/ஃஉஒடெ]


சொன்னா தப்பா நினைக்க கூடாது.
இப்போ அந்த 'விளக்கை' மன்மோகன் யாருக்கு புடிச்சிகிட்டு இருக்காரு?[/ஃஉஒடெ]

முருகனுக்கும் நளினிக்கும்
Quote
 
 
+4 #12 வால்டர் வணங்காமுடி 2011-09-29 16:11
[ஃஉஒடெ நமெ="கலிரஜ்"]கருணாநிதி எனக்கு திசை காட்டும் விளக்கு: மன்மோகன் சிங்

ஒரு கையில தியாகத்திருவிளக ்கு, மறுகையில மஞ்சவிளக்கு..விளங்கிடும்[/ஃஉஒடெ]


சொன்னா தப்பா நினைக்க கூடாது.
இப்போ அந்த 'விளக்கை' மன்மோகன் யாருக்கு புடிச்சிகிட்டு இருக்காரு?
Quote
 
 
+9 #11 sgd 2011-09-29 16:06
ஜகத்ரட்சகன் மட்டும் இன்னும் மட்டவெ இல்லைய ஏன் ?
Quote
 
 
+7 #10 bg 2011-09-29 16:06
வெலியில் வந்தால் சாட்சிகலை கலைத்துவிடுவார் .
Quote
 
 
+20 #9 sgd 2011-09-29 16:05
ஜகத்ரட்ஷகன் மட்டும் இன்னும் மாட்டவெ இல்லை என்?
Quote
 
 
+4 #8 ppyadav 2011-09-29 15:38
எப்ப்டியொ ராசா ராசாதான்
Quote
 
 
+10 #7 arjuna 2011-09-29 15:07
எப்படியும் 2ஜி ஒன்ரும் இல்லமல் போக போகிரது. எல்லாரும் வெலியா வந்து விடுவார்கல். கடைசியில் புச்சு வானம் ஆகிவிடும்
Quote
 
 
+5 #6 வால்டர் வணங்காமுடி 2011-09-29 14:52
//அடுத்த கட்டமாக, புலனாய்வு முடியாத ஒரு வழக்கில் நான் ஏன் சிறையில் இருக்க வேண்டும் என்ற வாதத்தையும் ராசா முன்வைப்பார்//


இதெல்லாம் ஒரு மேட்டரா?
கேஸே முடியாத நிலையில் முருகன்,சாந்தன் ,அறிவு ஆகியோருக்கு தூக்கு தண்டனையே கொடுக்கும் அளவுக்கு இந்தியா முன்னேறிடுச்சு. ராசா மேல கேஸ் போடாம அவர் உள்ள இருக்குறதெல்லாம ் சுண்டைக்காய் சமாச்சாரம்.
Quote
 
 
+17 #5 kumarnow 2011-09-29 14:49
ராசா புத்திசாலி ராசாவாக இருந்துட்டு போகட்டும், நம்ம எல்லோரும் என்னவாக போகிறோம்!? எப்போதும் போல முட்டாளாக்கிட்ட ு போக போயிடுவானுங்களா ? :sad:
Quote
 
 
+6 #4 Kaliraj 2011-09-29 14:37
கருணாநிதி எனக்கு திசை காட்டும் விளக்கு: மன்மோகன் சிங்

ஒரு கையில தியாகத்திருவிளக ்கு, மறுகையில மஞ்சவிளக்கு..விளங்கிடும்
Quote
 
 
+16 #3 Sreenivasan 2011-09-29 14:32
//திடீரென்று மாறன் சகோதரர்கள் மீதான ஊழல் குற்றச் சாட்டுகள் வெளியாகின. இதன் பின்னணியில் இருந்தது ராசா என்றே கூறப்பட்டது//
மாறன் பதவி பறிக்கப்பட்டதை உச்ச நீதிமன்ற வளாகத்திலேயே தகத்தகாய கதிரவன் ஆண்டிமுத்து ராசாவும், கவிதாயினி கனிமொழியும் (அருகில் தொழில் அதிபர் ராசாத்தி இருக்க) இனிப்பு கொடுத்து கொண்டாடியதுதான் கழக வரலாறு.
Quote
 
 
+9 #2 kkanwarali 2011-09-29 14:22
அவரும் வக்கில் தான்
Quote
 
 
+19 #1 kkanwarali 2011-09-29 14:20
அமச்சரவை எடுத்த முடிவுக்கு ராஜ மட்டும் எப்படீ குட்ரவாலி அவார்
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 150 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday2443
mod_vvisit_counterYesterday10391
mod_vvisit_counterThis week2443
mod_vvisit_counterLast week80132
mod_vvisit_counterThis month205175
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12727294