|
1. உங்கள் ஆரம்ப கால வாழ்க்கை பற்றிச் சொல்லுங்கள்.
2. ஒரு சாதாரணமான குக்கிராமத்தில், பிறந்த நீங்கள், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் என்ற திட்டம் ஏதாவது இருந்ததா ?
3. தலித் மக்களின் விடுதலைப் போராட்டத்துக்கான தலைமை ஏற்போம் என்று நினைத்தீர்களா ?

4. சமூக இயக்கமாக இருந்த விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பை தேர்தலில் பங்கெடுக்க வேண்டும் என்று நிலை வந்ததற்கு உங்கள் பதில்.
5. தலித்துகளுக்கு உரிய பிரதிநிதித்துவதத்தை இரு திராவிடக் கட்சிகளுமே வழங்கவில்லை என்ற குற்றச் சாட்டு பற்றி என்ன நினைக்கிறீர்கள்.
6. ஒரு வலுவான தலித் அமைப்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை கட்டியமைத்த நீங்கள், அரசியலில் வலுவாக கால் ஊன்றுவதற்கு தடை எது என்று நினைக்கிறீர்கள்.
7. திராவிட கட்சிகள் கட்டப் பஞ்சாயத்து செய்வதில் வல்லவர்கள் என்ற கருத்து உண்டு. அதே பாணியில் உங்கள் கட்சியும் கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபடுவதாக பரவலான கருத்த உண்டு. இது பற்றி என்ன கூறுகிறீர்கள்
8. தலித் மக்கள் அரசியல் அதிகாரம் பெறுவது சாத்தியமா ?
9. தலித் ஒருங்கிணைப்பு அரசியல் அதிகாரம் அடைவதை சாத்தியப் படுத்துமா ? அல்லது தமிழ் தேசிய அரசியல் சாத்தியப் படுத்துமா ?
10. உங்கள் அமைப்பை பலப்படுத்த 2011 விடுதலைச் சிறுத்தைகள் ஆண்டு என்று அறிவித்த நீங்கள், அதை செயல்படுத்த தவறியது போலத் தோன்றுவதற்கான காரணம் என்ன ?
11. விடுதலை சிறுத்தைகள் கட்சியில் ஜனநாயக சக்திகள் வளரவில்லை என்று அறிவு ஜீவிகள் மத்தியில் ஒரு கருத்து உள்ளது. இது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்.
12. உங்கள் கட்சியில் இரண்டாம், மூன்றாம் கட்ட தலைவர்கள் வளர்ச்சியடையாமல் இருப்பதற்கு என்ன காரணம் ?
13. திராவிடக் கட்சியில் இரண்டாம் கட்டத் தலைவர்கள் மற்றும் மூன்றாம் கட்டத் தலைவர்கள்தான் பரவலாக மக்கள் மத்தியில் அக்கட்சிகளை செல்வாக்கடைய வைத்தார்கள் என்பது வரலாறு. திராவிடக் கட்சி பாணியை பின்பற்றுவது போலத் தோன்றும் உங்களுக்கு இரண்டாம், மூன்றாம் கட்டத் தலைவர்கள் வளர்வதை பலவீனமாக நினைக்கிறீர்களா ?
.
14. 2009 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவிடமிருந்து அழைப்பு வந்தும், அப்பாவி மக்கள் பலியானதற்கு காரணமான காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்தது ஏன் ? விடுதலைச் சிறுத்தைகளுக்கும், திமுகவுக்கும் தான் கூட்டணி, காங்கிரஸ் கட்சிக்கும் விடுதலைச் சிறுத்தைகளுக்கும் கூட்டணி கிடையாது என்று நீங்கள் கூறினாலும், சோனியாவோடு ஒரே மேடையில் அமர்ந்திருக்கிறீர்கள் என்ற உண்மையை மறுக்க முடியாது. இது குறித்து என்ன கூறுகிறீர்கள்.
15. பெண்களையும், குழந்தைகளையும் நச்சுக் குண்டுகள் வீசி கொலை செய்ய உத்தரவிட்ட ராஜபக்ஷேவை சந்தித்து கை குலுக்கியதை, உலகத் தமிழர்கள், அவர்களுக்கு நீங்கள் செய்த மிகப் பெரிய துரோகமாக கருதுகிறார்கள். இது குறித்து உங்கள் கருத்து ?
16. 25 வயது தலித் இளைஞன் திருநாவுக்கரசுவை கொலை செய்துவிட்டு இலங்கைக்கு தப்பியோடி, தமிழக காவல்துறையால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப் பட்டு, இன்று அங்கே அமைச்சராக இருக்கும் டக்ளஸ் தேவானந்தாவோடு விருந்துண்டதை உலகத் தமிழர்கள் ரசிக்கவில்லை. இது குறித்து உங்கள் கருத்து
17. அரசியலுக்காக திமுக தமிழர்களுக்கு செய்த துரோகங்களையும், அவமானங்களையும் தாங்கிக் கொண்ட உங்களை, உள்ளாட்சித் தேர்தலில் புறக்கணித்தது திமுக. உங்களை தேர்தல் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல் சமயத்தில் தலித் வாக்குகளுக்காக பயன்படுத்திக் கொண்டு, தேவையற்ற சமயத்தில் ஒதுக்கி விட்டதாக உணர்கிறீர்களா ?
18. திமுக அரசில் ஊழல் தலைவிரித்து ஆடியபோதும் அது குறித்து ஒரு வார்த்தையும் நீங்கள் பேசாமல் இருந்ததனால், தனிப்பட்ட முறையில் எந்த ஊழல் புகாருக்கும் ஆளாகாத உங்களுக்கு இது தடுமாற்றம் இல்லையா ?
19. வடபழனியில் உங்கள் கட்சி அலுவலகம், ஆக்ரமிப்பு குற்றச் சாட்டின் பேரில் வேறு ஒருவருக்கு சாதகமாக தீர்ப்பளிக்கப் பட்டது. அதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் வரை சென்று நீங்கள் வழக்காடினாலும், இந்த விவகாரத்தில் உங்கள் கூட்டணிக் கட்சியான திமுக எந்த உதவியும் செய்யாமல், துரோகம் இழைத்ததாக கருதுகிறீர்களா ?
20. தமிழகத்தில் கணிசமான அளவில் இருக்கும் தலித்துகளை ஒருங்கிணைத்து மற்ற தலித் அமைப்புகளோடு கூட்டணி வைத்து ஒரு வலுவான தலித் அமைப்பை உருவாக்க நீங்கள் முயற்சிகள் எடுக்காததற்கு காரணம் ?
21. ஈழத் தமிழர் விவகாரத்தில் கருணாநிதி கடுமையான துரோகம் இழைத்து விட்டதாக உலகத் தமிழர்கள் அனைவருமே கருதுகிறார்கள். அவ்வாறு இருக்கையில், உங்களுக்கு கிடைக்கும் எம்.எல்.ஏ / எம்.பி சீட்டுக்காகவும், கூட்டணியில் இருப்பதால் கிடைக்கும் சலுகைகளுக்காகவும், கருணாநிதியை ஆதரித்தீர்கள் என்ற குற்றச் சாட்டுக்கு என்ன கூறுகிறீர்கள் ?
22. சென்னை புல்லா அவென்யூவில், நீங்கள் நடத்திய எழும் தமிழ் ஈழம் என்ற மாநாட்டுக்காக செய்யப் பட்டிருந்த விளம்பரங்களில் ஈழம் என்ற வார்த்தையை கருணாநிதி அரசின் காவல்துறை இரவோடு இரவாக அழித்த போதும், அதற்கு துளி கூட எதிர்ப்பு தெரிவிக்காததன் காரணம் என்ன ?
23. ஈழத்தில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்று நான்கு நாள் உண்ணாவிரதம் இருந்த நீங்கள், ஈழப் போருக்கு பெருமளவில் ஆயுதங்களை கொடுத்து உதவிய காங்கிரஸ் கட்சி இருக்கும் கூட்டணியில் இருப்பதை எப்படி நியாயப் படுத்துகிறீர்கள் ?
இவை சவுக்கு கேட்க விரும்பும் கேள்விகள். திருமாவிடம் கேட்பதற்கு வாசகர்களின் கேள்விகள் வரவேற்கப் படுகின்றன. அதிக பட்சம் 3 நாட்களுக்கு கேள்விகள் ஏற்றுக் கொள்ளப் படும். வாசகர்கள் உங்கள் கேள்விகளை, தமிழிலோ, ஆங்கிலத்திலோ newsavukku@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
|
Comments
good.. dont cut short any replies from him.. publish it as original!
thanks!!
திருமா வை போன்றவர்கள் நாம் எதிர்பார்க்கும் நல்ல பதிலை கொடுத்தாலும், அதுபோல் அவர்
நடப்பார் என்று கனவிலும் நினைக்காதீர்கள் .
திருமா விடம் கேட்பதும் கருணாநிதியிடம் கேட்பதும் ஒன்றுதான்.
தமிழகமெங்கும் தலித் மக்கள் பல்வேறு சாதிக்கொடுமைகளை இன்னும் அனுபவித்தே வருகின்றனர். பெரியார் தன்னால் இயன்றவரை சாதிக்கொடுமைகளு க்கு எதிராகக் குரல்கொடுத்து களத்தில் இறங்கி போராடவும் செய்தார். ஆனால், அவர வழி வந்ததாக சொல்லிக்கொண்டு தனது ஆட்சிக்காலத்தில ் எந்தவொரு சமூக மாற்றத்தையும் ஏற்படுத்தாத கருணாநிதிக்கு தாங்கள் சமத்துவப் பெரியார் என பட்டம் வழங்கியது நியாயமா?
Mr padmanaban can you think thiruma only can do the upliftment to the entire dalit community? it is possible?Are u aware thiruma can participate the lunch? i read so many article and report he said that he never drink a cup of water in the party
2.இந்தியா- கருணாநிதி, ஈழத்தில்-கருணா
3.ஈழப்போர் தமிழர் உயிரயிழப்பு- முழு காரணம்
தமிழின தலைவர்- கருணாநிதி
தமிழ் குடிதாங்கி -மருத்துவர்.ராமதாசு
தமிழின போராளி -திருமா
ஈழம் பற்றி எப்போது கேட்டாலும் நீங்கள் ஜெ அல்லது மற்றவர்களை சொல்கிறீர்களே நீங்கள் என் ஒரு முன் உதாரணமாக அந்த கூட்டணி விட்டு நாடள மன்ற தேர்தலில் விலகவில்லை? அல்லது ஜெயித்த உடனே நீங்கள் என் பதவியை ரஜினமா செய்யவில்லை?
கணபதி
ரொறொண்டோ
கனடா
திருமாவின் நேர்காணலின் செவ்வியை மறக்காமல் இணைத்து வெளியிடவும்
Can u share your views on the following:
1. The programmes and efforts for the last 6 decades were centered around dalit and suppressed. In this scenario how long do you exepect will it take to remove supression?
2. Do you have any data on the actual requirement for benefits of Govt policies have attained till date?
3. Will you be able to consider and accept the fact that, the benefit of policies and programmes should be made available to a dalit family only once and it should be withdrawn, once the benefit is availed by that family?
Only by doing so you can really achieve what you aim for "equality and equal opportunity".
The benefits can not be enjoyed for generations together.
திருமாவின் கட்சி கட்டபஞ்சாயத்து செய்வது கண்டத்துக்கு உரியது தான். இருப்பினும் ஒரு சில கேள்விகளுக்கு 'கனி' பதில் சொன்னால் நல்லது?
1. தமிழ்நாட்டில் கட்டபஞ்சாயத்து செய்யாத எந்த கட்சியாவது இருக்கிறதா?
2. அனைத்து கட்சிகளும் கட்ட பஞ்சாயத்தை செய்கிறது என்றால், வி.சி யை மட்டும் கட்டபஞாயத்து கட்சி என்று விளிப்பதன் நோக்கம் என்ன?
brother dr krishnasamy and dr thiuma must unite together and fight against atrocities among dalit people,we will support them
brother u are not uderstood thiruma and his vck
well said brother, u are correct thiruma is only leader for the dalit
http://www.youtube.com/watch?v=ZAkFt2hTBK0&feature=related
http://www.youtube.com/watch?v=jXxriTqSqkw&feature=related
இந்த ராசா என்ன சாதி. இவர் சாதி மறுப்பு கல்யானம் தான் பன்னுவார். ஒன்னா கூடி குலாவுவார். இவர்கள் எல்லாம் பேப்பர் (கழுதைப்) புலிகள்.
1. முத்துகுமாரை நினைவிருக்கிறதா ?
2. தாழ்த்தப் பட்ட ச்முகத்தில் உள்ள அனைத்து சாதிகளும் குறைந்த பட்சம் அவைகளுக்குகாகவே சரிசமமாக நடத்தப் படுவதில்லை. உதாரணமாக 'புதிரை வண்ணார்' எனப்படும் தாழ்த்தப் பட்ட சமூகம், 'பள்ளர்' போன்ற மற்ற தாழ்த்தப் பட்ட சமூகத்தினருக்கு அடிமையாகத் தான் இன்றும் நடத்தப் படுகிறது. குறைந்தபட்சம் 'தாழ்த்தப் பட்ட' சமூக மட்டத்திலாவது சமதர்மத்தை நிலைநாட்ட உங்களிடம் வேலைத் திட்டம் உள்ளதா? இது சாத்தியம் இல்லை என்றால் மற்ற சமூகம் 'தாழ்த்தப் பட்ட சமூகத்தின்' மீது நடத்தும் அடிமைத் தனத்தை எதிர்க்க உங்களுக்கோ, உங்களை போன்றோருக்கோ எந்த அருகதையும் கிடையாது. ஒத்துகொள்கிறீர் களா?
3.தாழ்த்தப் பட்ட சமூக பிரதிநிதிகள் எப்போதும் ஒன்று சேரவண்ணம் ந்டத்தப் படும் அரசியியல் விளையாட்டினை நீங்கள் புரிந்துவைத்துள ்ளீர்களா? உதாரணத்திற்கு, "இதுவரை நடந்த எந்த தேர்தலிலும்" நீங்களோ, கிருஷ்ணசாமியோ ஒரே கூட்டணியில் இருந்தது இல்லையே ஏன்? இது எதேச்சையாக நடந்ததா இல்லை திராவிட கட்சிகளின் திட்டமிட்ட செயலா?
4.வன்னியர்கள் இந்திய அரசியல் பணிகளில் குறிப்பாக ஐ.ஏ.எஸ் போன்ற பணிகளில் இடம்பெற மருத்துவர்.ராமதாசு பயிற்சி கூடங்கள் நடத்துகிறார். அதன் பலன் பின்வரும் காலங்களில் தெரியும். அதுபோல 'தாழ்த்தப் பட்ட' ச்மூகத்திற்கு இதுவரை தாங்கள் செய்துவ்ரும் நிகழ்கால,எதிர்க ால திட்டங்கள் எவை எவை?
5.ஈழத்தில் போர் உக்கிரமாக நடக்கும்போது போரின் கவனம் சிதறுவதாலும், உயிர்காப்பு கருதியும், போராளிகளுடனே இறுதிவரை பயணம் செய்த சுமார் 1500 பொதுமக்களை கடல் வழியாக த்மிழகத்தில் தரையிறக்க உங்களுடன் பேசி ஒரு முயற்சி நடந்ததாக சொல்லப் படுகிறது. நீங்களும் 'இதோ கேட்டுசொல்கிறேன ்' என்று 'தமிழின காவலர்' அன்றைய முதல்வர் கருணாநிதியுடன் கலந்தாசித்ததாகவ ும் சொல்லப் படுகிறது. இறுதியில் நீங்கள் எந்த முடிவும் எடுக்காமல் விட்டதாகவும் சொல்லப் படுகிறது. அந்த 1500 பேரும் மரணத்தை தழுவியிருக்கவேண ்டும். இந்த நிகழ்வு குறித்தும், ஏன் எந்த முயற்சியும் நீங்கள் எடுக்கவில்லை என்பது குறித்தும் மக்களுக்கு தெரியப் படுத்தவும்.
என்ன சவுக்கு... எடக்கு மடக்கா எதாவது கேள்வி கேட்டு பிறகு அடங்க மறு அத்து மீறு...
அயோத்திதாசர் படைப்புகளை வாசித்ததுண்டா ? அயோத்திதாசர் குறித்து ஜெயமோகனின் கட்டுரைகள் , எண்ணங்கள் குறித்த உங்கள் கருத்து என்ன ?
ரஜினி
RSS feed for comments to this post