முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்தொடர்புக்கு
+++
ஜெகஜ்ஜாலக் கில்லாடி ஜாங்கிட்.. அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 54
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
ஞாயிற்றுக்கிழமை, 09 அக்டோபர் 2011 17:47

 

Jangid_IPS

 

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் சென்னை விமான நிலையத்தில் வாகன நிறத்த காண்ட்ராக்ட் எடுத்திருந்த நவ்பாரத் என்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.  அந்த சோதனையின் போது, விமானநிலைய காவல்நிலையத்திலும், புறநகர் காவல்துறையில் பணியாற்றும் காவல்துறையினர் வசூல் செய்யும் மாமூல்களை தேதி வாரியாக பதிவு செய்து வைத்திருந்தனர்.  இப்படி பதிவு செய்யப் பட்டிருந்த டைரியை கைப்பற்றியது சிபிஐ.

 

கைப்பற்றப் பட்ட டைரியில் உள்ள விபரங்கள், தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப் பட்டன. தமிழக அரசு புறநகர் கமிஷனர் ஜாங்கிட்டுக்கு அதை விசாரணைக்காக அனுப்பியது.  புறநகர் கமிஷனர், அதை ஜனவரி 2010ல் செயின்ட் தாமஸ் மவுன்ட் துணை ஆணையர் வரதராஜுவுக்கு அனுப்பி வைக்கிறார்.

 

அந்த டைரியில் இருந்த விபரங்கள் என்னவென்றால், விமான நிலைய உதவி ஆணையராக இருந்த குப்புசாமி என்பவர் 3 வருடங்களாக மாதந்தோறும் 5 ஆயிரம் வாங்கினார்.   மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் பல்வேறு தேதிகளில் பணம் வாங்கியுள்ளார்.   எஸ்.ஐ முனுசாமி, தலைமைக் காவலர் பாண்டியன், போக்குவரத்து எஸ்.ஐ, எஸ்.ஐ.லட்சுமணன், சிவா என்ற போலீஸ், பெண் எஸ்.ஐ சுப்புலட்சுமி, எஸ்.ஐ கன்னியப்பன், எஸ்.ஐ.சிவா, எஸ்.ஐ சுப்ரமண்யம், சர்கிள் இன்ஸ்பெக்ட்ர், பெண் எஸ்.ஐ.சசிகலா, போலீசுக்கு நன்கொடை 25,000 என்று அந்தப் பட்டியல் நீளுகிறது.

 Jaffer_Jangid

இது போல ஊழல் விவகாரங்களில் கிடைக்கும் ஆதாரங்கள், வழக்கமாக லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணைக்கு அனுப்பி வைக்கப் படும்.    ஆனால், கடந்த திமுக ஆட்சியில் தான் விதி மீறலுக்கு எல்லையே கிடையாதே.

 

அதனால் ஜாங்கிட்டிடம் இந்தப் புகார் அனுப்பி வைக்கப் படுகிறது.   இதை விசாரிக்கும் பொறுப்பில் இருந்த துணை ஆணையர் வரதராஜு ஒரு வருடம் இந்தப் புகாரை கட்டி வைக்கிறார்.   இந்தப் புகார் வந்த பிறகும், விமான நிலைய உதவி ஆணையர் குப்புசாமி உட்பட யாருமே மாற்றல் செய்யப்  படக் கூட இல்லை.

 

சரியாக ஒரு வருடம் கழித்து, 2011 ஜனவரி இறுதியில், வரதராஜு அவசர அவசரமாக ஒரு விசாரணை அறிக்கையை தயார் செய்கிறார்.   அந்த விசாரணையில் குற்றம் சுமத்தப் பட்டிருக்கும் காவல்துறையினர் ஒருவரைக் கூட விசாரிக்கவில்லை. ஒருவரையும் விசாரிக்காமல் அவர் அளித்த அறிக்கையில் அற்புதமாக ஒரு காரணத்தை சொல்கிறார்.

 

நவ்பாரத் என்டர்பிரைசஸ் நிறுவனத்தில் பணியாற்றும் வர்கீஸ் மற்றும் ரஞ்சித் மாதவன் ஆகியோரை விசாரித்தேன். அவர்கள் இருவரும் தங்கள் வாக்குமூலத்தில் நவ்பாரத் என்டர்பிரைசஸ் முதலாளி தங்களுக்கு போதுமான ஊதியம் தரவில்லை.  மாதம் 10 ஆயிரம் தான் தருகிறார்.  அதனால் நாங்களே போலீசருக்கு மாத மாமூல் கொடுப்பது போல பொய்க் கணக்கு எழுதி அந்தப் பணத்தை முதலாளிக்கு தெரியாமல் கையாடல் செய்து விட்டோம் என்று கூறினார்களாம்.

 IMG_0001

IMG_0002

இவர்கள் வாக்குமூலத்தைக் கண்ட வரதராஜு, தனது அறிக்கையில், நவ்பாரத் நிறுவன ஊழியர்களே நடந்த உண்மையை ஒப்புக் கொண்டார்கள்  என்பதால், இதில் இனிமேல் விசாரிக்க ஏதுமில்லை என்று அறிக்கை அளிக்கிறார்.

 Varadha_Raj._13

வரதராஜு ஐபிஎஸ்

சரி, ஒரு வருடமாக தூங்கிக் கொண்டிருந்த வரதராஜு திடீரென்று அறிக்கை அளிக்க காரணம் என்ன ?   சோழியன் குடுமி சும்மா ஆடுமா ?  அறிக்கை அளித்த ஒரு சில நாட்களிலேயே விமான நிலைய உதவி ஆணையராக இருந்த குப்புசாமி, டிஎன்பிஎஸ்சி உறுப்பினராக்கப் படுகிறார்.

Kuppusamy_TNPSC1

தேர்வாணைய உறுப்பினராக நியமிக்கப் பட்ட குப்புசாமி

எப்படி இருக்கிறது ?   இந்த குப்புசாமிதான் ஆண்டுக்கணக்கில் உழைத்து க்ரூப் 1 தேர்வுகளும் மற்ற தேர்வுகளுக்காகவும் தயாரிப்பில் ஈடுபட்டு உழைத்த இளைஞர்களின்  தலையெழுத்தை தீர்மானிக்கப் போகிறவர்.  இவர் இந்தப் பதவியைப் பெறுவதற்காக ராசாத்தி அம்மாளுக்கு 3 கோடி கொடுத்து இந்தப் பதவியை ‘வாங்கினார்’ என்பது கூடுதல் தகவல்.  ஒரு சாதாரண டிஎஸ்பிக்கு 3 கோடி ரூபாய் எப்படி வந்தது என்பது ஜாங்கிட்டுக்கே வெளிச்சம்.

 

சரி வரதராஜு அறிக்கை சரி என்றே வைத்துக் கொள்ளுவோம். இப்படி பொய்யான கணக்கு வழக்குகளை எழுதி ஏமாற்றிய அந்த வர்கீஸ் மீதும் ரஞ்சித் மாதவன் மீதும் வழக்கு பதிவு செய்திருக்க வேண்டாமா ?   ஏன் செய்யவில்லை ?

 

விமான நிலைய உதவி ஆணையராக இருந்த குப்புசாமி ராசாத்தி அம்மாளை அணுகியதும், தன் மீது நிலுவையில் இருக்கும் இந்தக் குற்றச் சாட்டு குறித்து, ஜாங்கிட்டிடம் தெரிவிக்கிறார் குப்புசாமி.  அம்மையார் ஏற்பாடு செய்வார்கள். தடையாக இருப்பது இந்த புகார் மட்டும் தான் என்கிறார்.  கவலையே படாதீர்கள் நான் பார்த்துக் கொள்ளுகிறேன் என்று வரதராஜுவுக்கு ஆணையிடுகிறார் ஜாங்கிட்.  வரதராஜு என்பவர், ஜாங்கிட்டின் விசுவாசமான அடிமை.  சொன்ன காரியத்தை கச்சிதமாக முடித்துக் கொடுத்தார்.

 

இது போல திமுக குடும்பத்தினருக்காகவும், ட்ராலி பாய் பாண்டியனுக்காகவும் ஜாங்கிட் செய்து கொடுத்த காரியங்கள் ஒன்று இரண்டல்ல. ஜாங்கிட்டுக்கு காவல்துறையில் ஏராளமான எதிரிகள் உண்டு.  ஆனாலும், அத்தனை எதிரிகளையும் சமாளித்து, கடைசி வரை தன்னை யாருமே அசைக்க முடியாத வகையில் இருந்ததுதான் ஜாங்கிட்டின் சாமர்த்தியம்.   ஜாங்கிட்டுக்கு கருணாநிதி குடும்பத்தில் நெருக்கமான தொடர்புகளை ஏற்படுத்தித் தந்தவர் கருணாநிதியின் மருத்துவர் டாக்டர் கோபால்.  இந்த கோபாலைப் பற்றி தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் சொல்வதெல்லாம் உண்மையின் இந்தப் பகுதியை படிக்கவும். அதனால் தான் அவர் ஜெகஜ்ஜாலக் கில்லாடி.

 

ஜாங்கிட்டுக்கு பகுதி நேரம் தான் காவல்துறை அதிகாரி பணி.  முழு நேரப் பணி ரியல் எஸ்டேட்.  இவர் மதுரையில் எஸ்.பி யாக இருந்த காலத்திலேயே ரியல் எஸ்டெட் தொழிலை தொடங்கினார்.   தற்பொழுது உயர் உயர் அதிகாரிகள் குடியிருக்கும் மணப்பாக்கம் பகுதி லே அவுட் ஜாங்கிட் போட்டதுதான்.  ஜாங்கிட்டுக்கு அரசியல்வாதிகள், அதிகாரிகளை விட, பத்திரிக்கை யாளர்களைத் தான் ரொம்பவும் பிடிக்கும்.     புறநகர் பகுதியில் க்ரைம் பீட் பார்க்கும் பத்திரிக்கையாளர்களை குளிப்பாட்டுவார்.   புறநகரில் க்ரைம் பீட் பார்த்து விட்டு, ஜாங்கிட்டிடம் பொறுக்கித் தின்னாத பத்திரிக்கையாளர்களே கிடையாது என்னும் அளவுக்கு.

 

ஜுனியர் விகடன், குமுதம் ரிப்போர்டர், தமிழக அரசியல், நக்கீரன் போன்ற பத்திரிக்கைகளில் தன்னைப் பற்றி தவறான எந்த செய்தியும் வராமல் பார்த்துக் கொள்வதில் ஜாங்கிட்டின் சாமர்த்தியமே தனி. இந்த அத்தனைப் பத்திரிக்கைகளிலும், தன்னிடம் பொறுக்கித் தின்னும் உளவாளிகளை வைத்திருப்பார் ஜாங்கிட்.  இவரைப் பற்றி ஏதாவது தவறான செய்திகள் ஒரு வேளை தப்பித் தவறி வந்து விட்டால்  உடனடியாக அந்த நிறுவனத்திடம் பேசி மறுப்பு போடச் சொல்லுவார்.   அவர்கள் மறுத்தால் உடனே வக்கீல் நோட்டீஸ் அனுப்புவார்.   சம்பந்தப் பட்ட பத்திரிக்கை நிறுவனங்கள், வக்கீல் நோட்டீஸ் வந்த உடனேயே அவர்கள் நிறுவனத்தில் பணியாற்றும் ஜாங்கிட்டின் உளவாளிகளை அனுப்பி பேச்சுவார்த்தை நடத்துவார்கள். பேச்சுவார்த்தையின் முடிவில், ஜாங்கிட் ஒரு பெரிய தில்லாலங்கடி.  வில்லாதி வில்லன்.   ஜேம்ஸ் பாண்ட்.  என்று ஆகா ஓகோ என புகழ்ந்து ஒரு செய்தி வந்ததும், வழக்கை வாபஸ் வாங்குவார் ஜாங்கிட்.

 Jan---15-i

வெளிப்படையாக மற்ற அதிகாரிகளிடம் பேசும் போது, ஜாபர் சேட்டை எனக்கு பிடிக்காது, ஜாபர் எனக்கு எதிரி என்றெல்லாம் மார் தட்டிக் கொண்டாலும், இவரே ஜாபர் சேட்டுக்கு ஒரு விசுவாசமான அடிமையாகத் தான் இருந்திருக்கிறார்.  ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், இப்போது ஜாபர் சேட்டோடு பேசுவதையே தவிர்த்து வருகிறார்.  ஆட்சி மாறியதும், நாகர்கோவில் போக்குவரத்து கழகத்தில் கண்காணிப்பு அதிகாரியாக, அரசுப் பேருந்துகளின் பழைய உதிரி பாகங்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் பணியை செய்து வருகிறார்.

 

நவீன நெற்றிக் கண் என்று ஒரு பத்திரிக்கை வெளி வருகிறது.  இதன் ஆசிரியர் ஏ.எஸ்.மணி.   தராசு என்ற பத்திரிக்கையில் இவர் பணியாற்றிய போது அங்கே லே அவுட் ஆர்டிஸ்டாக இருந்தவர்தான் கோபால். பிறகு தராசு ஆசிரியர் ஷ்யாமோடு ஏற்பட்ட கருத்து வேறுபடு காரணமாக பிரிந்து வந்து நெற்றிக் கண் பத்திரிக்கையை தொடங்கி நடத்தி வருகிறார்.

 

தமிழக காவல்துறையில் அருண் என்று ஒரு ஐபிஎஸ் அதிகாரி இருக்கிறார்.  இவர் பேண்டில் ஜிப் வைத்து தைக்க மாட்டார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.   திருமணம் ஆவதற்கு முன்பு, தமிழகத்தைச் சேர்ந்த ஒரு இளம் பெண் ஐபிஎஸ் அதிகாரியை தீவிரமாக காதலித்தார்.   அவரோடு காதல் சிறகை காற்றினில் விரித்து வான வீதியில் பறந்தார்.    நீ இல்லாமல் நான் இல்லை என் உயிரே என்று காதல் டயலாக்குகளை அள்ளி விட்டார்.  அந்த அதிகாரியும் இவரை நம்பி உயிருக்கு உயிராக காதலித்து வந்தார்.

 Arun_IPS

காமக் கொடூரன் அருண்

ஆனால் ஒரே நேரத்தில் அருண் மற்றொரு பெண் ஐஆர்எஸ் அதிகாரியையும் காதலித்து வந்ததை அந்த பெண் ஐபிஎஸ் அதிகாரி அறியவில்லை.  இந்த ஐஆர்எஸ் அதிகாரியின் தந்தை அப்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்தார்.    யாரைத் திருமணம் செய்வது என்ற சிக்கல் வந்த போது, நீதிபதியை பகைத்துக் கொண்டால், தன் வேலைக்கு வேட்டு வைத்து விடுவார்கள் என்பதை உணர்ந்த அருண், ஐபிஎஸ் அதிகாரியை கழற்றி விட்டு விட்டு, ஐஆர்எஸ் அதிகாரியை கரம் பிடித்தார். திருமணம் ஆனாலும் அருண் வேலி தாண்டிய வெள்ளாடாகவே இருந்து வந்தார்.  பாடுன வாயும், ஆடுன காலும் சும்மா   இருக்குமா ?  உடனே சவுக்கு வாசகர்கள் அருணை காமக் கொடூரன் அருண் என்று சொல்லக் கூடாது.

 

அருண் அண்ணா நகரில் துணை ஆணையராக இருந்த போது, நடிகை மும்தாஜ் வீட்டுக்கு அடிக்கடி சென்று, மும்தாஜ் காறித் துப்பி அனுப்பியதாகவும் ஒரு தகவல் கூறுகிறார்கள்.    அண்ணா நகரிலிருந்து செயின்ட் தாமஸ் மவுன்ட்டுக்கு அருண் மாறுதலாகிறார்.  அங்கே மஞ்சுளா என்ற ஒரு பெண் எஸ்.ஐ பணியாற்றினார்.    இந்த மஞ்சுளாவை வளைக்கலாம் என்று முடிவெடுத்த அருண், மஞ்சுளாவுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்புவது, இரவு நேரங்களில் கால் செய்வது என்று தன் லீலைகளை தொடங்கினார்.   மஞ்சுளா ஒன்றும் ஒத்து வருவதாக இல்லை என்பது தெரிந்ததும், இரவு நேர ரோந்துப் பணிகளுக்கு மஞ்சுளாவை தன்னோடு வருமாறு உத்தரவிட்டார். ரோந்துப் பணிகளில் செல்லும் சமயங்களில் மஞ்சுளாவை தொடுவது, சீண்டுவது என்று தனது லீலைகளை துவக்கினார்.  தொந்தரவுகள் எல்லை மீறுவதை கண்டு பொறுக்க முடியாத மஞ்சுளா, இந்தச் செய்தியை நெற்றிக் கண் ஆசிரியர் மணியிடம் சொல்கிறார்.   நெற்றிக் கண் இதழில் அருணின் லீலைகள் பற்றி செய்தி வருகிறது.  செய்தியை படித்த அருணின் மனைவியான ஐஆர்எஸ் அதிகாரி, அருணை காறித் துப்பியிருக்கிறார்.

 

கடும் கோபம் அருண், அப்போது தமிழகத்தின் சக்ரவர்த்தியாக இருந்த ஜாபர் சேட்டிடம் இது குறித்து தகவல் சொல்லுகிறார்.   “சார் இந்த மாதிரி என்னைப் பற்றி நியூஸ் போட்டிருக்கிறார்கள். இது மட்டும் இல்லை உங்களைப் பற்றியும் நியூஸ் போட்டிருக்கிறார்கள்.  நம்ப சிஎம் துணைவியார் பத்தியும் நியூஸ் போட்டிருக்கிறார்கள்” என்கிறார்.  சரி என்ன பண்ணலாம் என்று ஜாபர் கேட்டதற்கு, அவனை நான் பார்த்துக் கொள்கிறேன்.  எனக்கு அனுமதி மட்டும் கொடுங்கள் என்று கேட்கிறார்.  உடனே ஜாபர் சக்ரவர்த்தி அனுமதி கொடுக்கிறார்.

 jaffar_sait_3

 

பேரைக் கேட்டாலே....   நாறுதுல்ல.....

பாண்டிச்சேரியிலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்த மணியின் கார் செக்போஸ்டில் மடக்கப் படுகிறது.  அந்தக் காரில் மணியோடு, அவரின் மகள் ரேகாவும் இருக்கிறார்.  ரேகா எம்பிபிஎஸ் படித்த மருத்துவர்.   மடக்கப் பட்ட கார், பள்ளிக்கரணை காவல்நிலையத்திற்கு எடுத்துச் செல்லப் படுகிறது.  மணியும், அவரது உதவியாளர்கள் இருவரும், ரேகாவும் காவல்நிலையத்தினுள் அழைத்துச் செல்லப் படுகிறார்கள்.

 

ரேகாவை ஒரு தனி அறைக்கு அழைத்துச் சென்று, அவர் துப்பட்டாவை எடுக்கச் சொல்லி, வீடியோ எடுக்கிறார்கள்.  அப்போது அருண், “நான்  இப்படி வீடியோ எடுத்ததை பத்தி உங்க அப்பன எழுதச் சொல்லு” என்கிறார்.

 

மணி நிர்வாணப்படுத்தப் பட்டு சராமாரியாக அடிக்கப் படுகிறார்.   டேபிளின் மீது படுக்கப்போட்டு லத்திக் கம்புகளால் அடித்துத் துவைக்கிறார்கள்.   அப்போது அந்த நிலையத்தின் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் மணியை உட்கார வைத்து அவர் வாயை வலுக்கட்டாயமாக திறக்கிறார்.   அவர் வாயில் மலம் கரைத்து ஊற்றப் படுகிறது. அருண் மணியின் மீது சிறுநீர் கழிக்கிறார்.

 Arun-DC

மறுநாள் மணி மீதும், அவர் மகள் மீதும், மற்ற இருவர் மீதும் துப்பாக்கியால் ஒரு பெண்மணியை மிரட்டியதாக வழக்கு பதியப் படுகிறது.  நீதிபதியின் முன்பு ஆஜர் படுத்தப் படும் போது மணி அனைத்து விபரங்களையும் நீதிபதியிடம் சொல்கிறார்.     மணியின் அருகே வந்து அவர் மீது மல நாற்றம் வீசுவதை பார்த்த நீதிபதி, அத்தனை விவகாரங்களையும் பதிந்து கொள்கிறார்.

 

மணியும் மற்றவர்களும் சிறையில் அடைக்கப் பட்டார்கள்.   மணி சிறையில் அடைக்கப் பட்டதால் பத்திரிக்கை வெளிவராமல் நின்று விடும் என்று எதிர்ப்பார்த்த அருணுக்கு அதிர்ச்சி.  அடுத்த வாரமே தவறாமல் பத்திரிக்கை வெளி வந்தது.   பத்திரிக்கை எப்படி வெளி வந்தது என்று கடும் கோபம் அடைகிறார் அருண்.  விசாரித்த போது மணியின் மகனும் பொறியியல் பட்டதாரியுமான பார்த்திபன் என்பவர் பத்திரிக்கையை வெளிக் கொண்டு வந்திருக்கிறார் என்பத தெரிந்தது.

 

உடனே இந்த விபரத்தை அப்போது சென்னை நகரின் கூடுதல் கமிஷனராக இருந்த ஜாங்கிட்டிடம் தெரிவிக்கிறார் அருண்.   உடனே, பார்த்திபன் மீதும், அவர் தாயார் தனலட்சுமி மீதும், பக்கத்து வீட்டில் இருந்த ஒரு பெண்மணியை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை முயற்சி செய்ததாக குற்ற எண் 1028/2007 ல் ஒரு வழக்கு பதியப் படுகிறது.   இந்த வழக்கில் முன் ஜாமீன் பெறுகிறார்கள் பார்த்திபனும் அவர் தாயாரும்.  அப்போது கண்டிஷனின் படி கையெழுத்து போடுவதற்காக நுங்கம்பாக்கம் காவல்நிலையம் சென்ற போது, அந்த காவல்நிலையத்தின் ஆய்வாளர் ஆறுமுகம், “ஏண்டா……   …… ……. ……. ………” என்று தகாத வார்த்தைகளால் திட்டி, பார்த்திபனை பத்திரிக்கை நடத்தக் கூடாது என்று மிரட்டுகிறார். 

 

IMG_8498

அழகிரி மகனிடம் பல் இளிக்கும் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம்

இந்த வழக்கில் யாரை கொலை செய்ய மிரட்டினார்கள் என்று பார்த்திபன் மீதும், அவர் தாயார் மீதும் வழக்கு பதிவு செய்தார்களோ, அந்தப் பெண்மணி நீதிமன்றத்துக்கு வந்து, அந்தப் புகார் ஒரு பொய்யான புகார்.  நான் இவர்கள் வீட்டில் பல முறை சாப்பிட்டிருக்கிறேன் இவர்களுக்கு எதிராக பொய் சொல்ல மாட்டேன் என்று சொன்னதன் அடிப்படையில் இந்த வழக்கு 2009ல் தள்ளுபடி செய்யப் பட்டது.

 

45 நாட்கள் கழித்து மணி ஜாமீனில் வெளி வருகிறார்.  சில ஆண்டுகள் அமைதியாக போகிறது.  இதற்குள் ஜாங்கிட் புறநகர் கமிஷனராகிறார்.     அப்போது ஜாங்கிட்டுக்கு கூடுதல் டிஜிபியாக பதவி உயர்வு வரும் நேரம்.   நெற்றிக்கண் பத்திரிக்கையில் யாருடைய பெயரையும் போடாமல் பதவி உயர்வு பெறும் ஒரு வட நாட்டு போலீஸ் அதிகாரி, நல்ல பதவி பெறுவதற்காக பெரிய இடத்துக்கு 5 கோடி லஞ்சம் கொடுத்திருக்கிறார் என்று ஒரு செய்தி வருகிறது.

 

அவ்வளவுதான்.  ஜாங்கிட்டுக்கு வந்ததே கோபம்.    மணி மீண்டும் கைது செய்யப் படுகிறார்.  அவரோடு அவருக்கு உதவியாக இருந்த ஒரு இளைஞனையும் கைது செய்கிறார்கள். அந்த இளைஞன் யாரென்றே தெரியாமல், அவர்தான் மணியின் மகன் என்று நினைத்து, ஏற்கனவே துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக நிலுவையில் இருந்த வழக்கின் சாட்சிகளை மிரட்டினார்கள் என்று புதிய வழக்கு பதியப் பட்டது.   இந்த சம்பவம் நடந்ததாக இவர்கள் கூறும் போது, பார்த்திபன் டெல்லியில் இருந்தார்.    குரோம்பேட்டை காவல்நிலையத்தில் மணி லாக்கப்பில் அடைக்கப் படுகிறார்.    விடியற்காலை 3 மணிக்கு ஜாங்கிட் குரோம்பேட்டை காவல்நிலையத்திற்கு வருகிறார். அப்போது அந்த காவல்நிலையத்தில் சந்திரசேகர் இன்ஸ்பெக்டராக இருக்கிறார். 

Netrikkan_Mani_1

நெற்றிக் கண் ஆசிரியர் மணி

ஜாங்கிட்டிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதற்காக ஜாங்கிட் முன்னிலையிலேயே மணியை சராமாரியாக அடிக்கிறார்.  இரண்டு காவலர்கள் மணியின் இரண்டு கால்களையும் 180 டிகிரிக்கு விரிக்கிறார்கள்.  (இந்த சித்திரவதைக்கு பெயர் பஞ்சாப் கட்.  சவுக்குக்கும் சிபி.சிஐடி போலீசார் இதே டெக்னிக்கைத்தான் கடைபிடித்தார்கள்)  வலி தாங்க முடியாமல் மணி கதறுகிறார்.  அப்போது மணியின் தொடை மீது ஏறி குதித்தார் ஜாங்கிட்.    இந்தச் சித்திரவதையும் போதாது என்று மீண்டும் மணியை நான்கு பேர் பிடித்துக் கொள்ள, அவர் வாயில் மலத்தை கரைத்து ஊற்றினார்கள்.

Chandrashekar-Ins

கழிப்பறை சுத்திகரிப்பு தொழிலாளி சந்திரசேகர்.

அத்தனை சித்திரவதைகளுக்கும் மணி ஆட்படுத்தப் பட்டதற்கான ஒரே காரணம் ஜாங்கிட்டைப் பற்றி மணி செய்தி போட்டதுதான்.  அந்தத் தகவல் பொய்யாக இருக்குமேயானால் ஜாங்கிட் நெற்றிக் கண் மீது அவதூறு வழக்கு தொடர்ந்திருக்கலாம்.  மேலும், ஜாங்கிட் நல்ல பதவிக்காக கருணாநிதியின் காலை அல்ல, கருணாநிதி வீட்டு கழிவறையையே நக்குவார் என்பது ஊருக்கே தெரியும்.   மணியின் வாயில் மலத்தை வலுக்கட்டாயமாக ஊற்றினார் ஜாங்கிட்.

 

ஆனால் மலத்தை உண்டால் நல்ல பதவி தருகிறேன் என்று கருணாநிதி சொல்லியிருப்பாரேயானால், ஜாங்கிட் விருப்பத்தோடு மலத்தை உண்டிருப்பார்.  பதவிக்காக எதையும் செய்பவர்தான் இந்த ஜாங்கிட்.  ஒரு சக மனிதனின் வாயில் மலத்தை ஊற்றும் இவர் ஜாங்கிட் அல்ல.  கிழிந்த ஜாக்கெட்.

 

தற்போது ஜாங்கிட் என்ன செய்து கொண்டிருக்கிறார் தெரியுமா ? இரண்டு வாரங்களாக சென்னையில் முகாமிட்டு, தற்போது அதிமுக ஆட்சியில் பலமாக உள்ள காவல்துறை அதிகாரிகளை சந்தித்து எப்படியாவது தன்னை சென்னைக்கு மாறுதல் வழங்கும் படி கேட்டுக் கொண்டிருக்கிறார்.

 

சவுக்கு வாசகர்கள் யாருக்காவது அரசாங்கத்தில் நல்ல தொடர்புகள் இருந்தால், அதைப் பயன்படுத்தி ஜாங்கிட்டுக்கு நல்ல பதவியை பெற்றுத் தருமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறது.

 

Comments  

 
+13 #71 jayaraj 2012-07-10 20:23
மணி மீது ஜாங்கிட் எத்தனை பொய் வழக்கு போட்டாலும் சளைக்காமல் ஜெயிலில் இருந்து கூட தன் நெற்றிகண் பத்திரிகையை வெற்றிகரமாக நடத்தி அதில் காக்கி கார்னர் பகுதியை தொடர்ந்து வெளியிட்டு உயர் காக்கிகளை நடுங்க வைத்தார். மணி மகனின் கடிதம் மற்றும் தங்கள் சவுக்கு கட்டுரையை படித்த பின் தான் மணிக்கு ஜாங்கிட்ஆல் ஏற்பட்ட இன்னல்கள் புரிகிறது. காக்கி கார்னர் பகுதி வெளி வந்த போது அதற்கு தனி ரசிகர் பட்டாளமே தமிழகத்தில் இருந்தது. ஜாங்கிட் தீ மு க ஆட்சியில் இருந்த போதே காக்கி கர்னரால் உயர் போலீசை மிரட்டி உருட்டிய இச்சுவையான பகுதியை ஜாங்கிட் போன்ற கேடிகள் ஆட்சியில் இல்லாதபோது நெற்றிகண் நிறுத்திய மர்மம் என்னவோ? இதனால் நெற்றிகண் கண்டிப்பாக பல ஆயிரம் ரசிகர்களை இழந்டிருக்ககூடு ம். ஜாங்கிட், அருண் போன்ற காவல் பொறுகிகளை சுளுக்கு எடுக்கவும் நல்ல மனம் கொண்ட உயர் போலிசுகளை தட்டிகொடுக்கவும ் நெற்றிகண் தொடர்ந்து இந்த காக்கி கார்னர் பகுதியை தைரியமாக வெளியிட்டு கணினி துறையில் சவுக்கு போலிசுக்கு சாட்டை அடி கொடுபதுபோல் பத்திரிகை துறையில் நெற்றிகண் காக்கி கார்னர் மூலம் ஈரல் கெட்ட காவல் அதிகாரிகளை குடலை உருவி மாலையாக போட்டு கொள்ள வேண்டும். உச்சி மீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும் என்ற பாட்டை சவுக்கை போல் ஆயிரம் இன்னல்கள் வந்தாலும் நெற்றிகண் மறந்து விட கூடாது. இது சவுக்கு வாசகர்களின் நேயர் விருப்பம்.
Quote
 
 
+6 #70 தமிழ்க்கனல் 2011-10-23 21:52
இன்றைக்கும் இறந்து போன ரவுடியின் குடும்பம் நடுரோட்டில் நிற்கிறது. ஆனால், தன்னுடைய காரியத்தையும் முடித்துக் கொன்று விட்டு, ஹாயாக சுற்றுகிறான் மீசை. நெல்லையில் விசாரித்தால், இந்த கொலை குறித்து கதை கதையாகச் சொல்வார்கள். இந்த கொலை தொடர்பாக பசுபதி பாண்டியன் சில பிரச்னைகள் செய்தார். ஜான் பாண்டியனுக்கும் நன்கு தெரியும். அதனால், அவர்களை விசாரித்து கொலையானவரின் குடும்பம் குறித்தெல்லாம் விசாரித்து பிரசுரியுங்கள். ஜாங்கிட் தன்னுடைய கழிவறையை நக்கி குடிக்கும் பிழைப்புக்காக எத்தனை பேரை கொலை செய்திருக்கிறான ் என்பதெல்லாம் அப்பட்டமாக வெளிவரும்.
Quote
 
 
+5 #69 தமிழ்க்கனல் 2011-10-23 21:47
இப்ப தொடர்ந்து திருடுறதுதான் தொழில். கொலை செய்யறதை விட்டுட்டேன்னு சொல்லியிருக்கான ். உடனே, கண்ணப்பனும் அஸ்ரா கர்க்கும் இதுதான் சாக்குன்னு ஜாங்கிட்டை காலிபண்ண பிளான் போட்டுட்டாங்க. அது எப்படியோ, எச்சலைப் பொறுக்கி போலீஸ்காரன்கள் மூலமா ஜாங்கிட் காதுக்குப் போய்விட்டது. உடனே, திருநெல்வேலியில ் லாக்கப்பில் இருந்த அந்த கொள்ளைக் காரனை ஆளை விட்டுத் தீர்க்கிறார். அதாவது லாக் அப் மரணமாகிவிட பெரிய விஷயமாகி விட்டது. ஊர்க்காரர்களெல் லாம் போலீஸ் ஸ்டேஷன் முன்பாக போராட்டம் நடத்துகிறார்கள் . மரணத்துக்கு நியாயம் கேட்டு நடந்ததால், இதை அமுக்கவே கண்ணப்பனுக்கும் அஸ்ரா கர்க்குக்கும் தலையால தண்ணி குடிக்க வேண்டியதாகி விட்டது. அதை வைத்து ஒரு கொலை வழக்கில் இருந்து எளிதாக தப்பி விட்டான் ஜாங்கிட். தங்களை காப்பாத்திக்கறத ுக்காக கண்ணப்பனும் அஸ்ரா கர்க்கும் தொடர்ந்து இந்த விவகாரத்தை தோண்டுவதில் இருந்து ஒதுங்கிக் கொண்டு விட்டார்கள்.
Quote
 
 
+6 #68 தமிழ்க்கனல் 2011-10-23 21:42
அன்புள்ள சவுக்கு வணக்கம்.
ஜாங்கிட் பத்தி நீங்க எழுதியிருக்கறது எல்லாமே சரிதான். ஆனா, இந்த புறம்போக்கு தூத்துக்குடியில எஸ்.பி-யா இருந்தப்ப அடிச்சக் கூத்து கொஞ்ச நஞ்சமல்ல. அதுக்குப் பின்னாடி இந்த பன்னாட பதவி உயர் பெற்று சென்னைக்கு வந்துட்டான். ரெண்டு வருஷத்துக்கு முன்னால் நெல்லை போலீஸ் டி.ஐ.ஜி-யா இருந்த கண்ணப்படனும் எஸ்.பி-யா இருந்த அஸ்ரா கர்க்கும் ஒரு கொள்ளைக்காரனை பிடிக்கிறாங்க. அவனை உரி உரின்னு உரிக்கிறாங்க... அப்ப தன்னோட வரலாற்றைச் சொல்றான் அந்த ரவுடிப்பய. நான் ஏற்கனவே ஜாங்கிட் ஆளா இருந்து அவனுக்காக கொலையெல்லாம் பண்ணியிருக்கேன் . அவன் இங்க இருந்து போன பிறகு, எனக்கு அவ்வளவு எளிதா கொலைகளை பண்ண முடியலை. அதனால திருட்டுத் தொழில்ல இறங்கிட்டேன்.
Quote
 
 
+4 #67 தமிழ்க்கனல் 2011-10-23 21:39
மதிப்பிற்குரிய சவுக்கு, வணக்கம். இந்த போஸ்டிங்கை கொஞ்சம் கால தாமதமாகத்தான் படிக்க முடிந்தது. இந்த ஜாங்கிட் அயோக்கியன் குறித்து ஒரு புறம்போக்கு பத்திரிகைகார பயலும் எழுத மாட்டேங்கறானேன் னு வருத்ததுல இருந்தேன். எல்லா பயலுகளும் அவனுடைய மூ... வாங்கிக் குடிச்சுட்டு இன்னும் இன்னும்னு கேட்குற பசங்க. அதனால அவனுக செய்ய மாட்டானுங்கனு எனக்குத் தெரியும். இருந்தாலும் சமுதாயத்து மேல இருக்குற ஆர்வமும் நப்பாசையிலயும் ஜூனியர் விகடன், குமுதம் ரிப்போர்ட்டர், தமிழக அரசியல், நக்கீரன்னு நான் அலையாத இடம் இல்லை. எல்லா பயலுகளும் அவனுகிட்ட பொறுக்கித் திண்றானுங்க. ஒருபயலும் எழுத முன் வரலை. ஒரே ஒருத்தன் இருந்தான். அவனையும் பொய்யைச் சொல்லி அபாண்டத்தைச் சொல்லி அனுப்பிட்டாங்க. அதுக்குப் பின்னாடி, தமிழ் பத்திரிகை சமூகமே கெட்டுத்தான் போயிடுச்சு. என்ன செய்ய..? உங்கள மாதிரி ஒருத்தர் ரெண்டு பேரு இருக்கறதுனாலதான ் கொஞ்சமாவது மழை பெஞ்சிகிட்டு இருக்கு. வாழ்க உங்கள் பணி. வாழ்த்துக்கள். தொடரட்டும் உம்முடைய சமூகத் தொண்டு. ஜாங்கிட், ஜாபர் போன்ற போலீஸ் பொறுக்கிகளை தோல் உரிங்க.
Quote
 
 
+3 #66 An Avid Leader 2011-10-20 09:31
Mr Parthiban Mani - your father's sufferings will never go in vain. On another thought for whom your father took all these suffering? it is truly for us people in the street. So it is our responsibility to stand behind your father. Also proving pulikku pirandadhu poonayaagaathu - your father will be proud of you if you also stand supporting him.
I can only respect your family for your service to this society.
Quote
 
 
+2 #65 An Avid Leader 2011-10-20 09:26
Even after all these atrocities if Mani is continuing his journalism means - even as a man, I couldn't stop tears in my eyes. I salute Mr. Mani. This government gives so many padmasiris and what not to all their jalraas, but for people like Mani atleast we should respect him.

I am not surprised why our country is down under. We cannot just blame politicians. The government officials are equally culpable for the current state of affairs. We need a Tahrir square.
Quote
 
 
+1 #64 jahir 2011-10-19 10:59
netthi adi. savukku. woooooooowwwwww w
Quote
 
 
+4 #63 ஒரிஜினல் நக்கீரன் 2011-10-16 20:36
சவுக்கு...உமக்கு ஒரு பணிவான ரிக்வெஸ்ட்..நேர்மையற்ற ஊழல் நிறைந்த பதிரிக்கைக்கைகள ுக்கும் பத்திரிக்கையாளர ்களுக்கும் ஆப்பு வைக்க யாரும் இல்லை..சொல்லப்போனால் யாருக்கும் துணிவில்லை..தயவு செய்து குமுதம் 'சொல்வதெல்லாம் உண்மை' போல பத்திரிக்கைகளைய ும் பத்திரிக்கையாளர ்களையும் தோலுரித்து காட்டுவது போல் ஒரு புதிய பகுதியை சவுக்கில் தொடங்குக .... ஆர்வத்துடன் எதிர்பார்கிறேன் ..
Quote
 
 
+2 #62 ஒரிஜினல் நக்கீரன் 2011-10-16 20:29
தமிழ் பத்திரிக்கைகளை மட்டும் குறிப்பிட்டுள்ள ீர்கள்..இந்த வென்று மதுரையில் கமிஷனராக இருந்த போது இந்து பத்திரிக்கையில் நிருபராக இருந்த போலீஸ் பீட் பாத்த விஜய் என்ற ஆசாமிதான் இவனுக்கு பி.ஆர்.ஒ மாதிரி..
Quote
 
 
+10 #61 ஒரிஜினல் நக்கீரன் 2011-10-16 20:23
[ஃஉஒடெ நமெ="ஸூட்ஹீறாண்"]" நான் போலீஸ் இல்லை ! பொறுக்கி " என்று பல தமிழ் நாட்டுப் போலீஸ்காரர்கள் நிரூபித்துக் கொண்டு இருக்கிறார்களே ! சவுக்கு அவர்களே ! இந்தப் பொறுக்கிகள் தங்கள் கீழ்த்தரமான போக்கிரித்தனங்க ளையும், பொறுக்கித்தனங்க ளையும் உங்கள் மீதும் ஏவாமல் இருக்க உங்களை அந்த இறைவன் தான் காப்பாற்ற வேண்டும் ![/ஃஉஒடெ]

பொறுக்கிகளும் அரசியல்வியாதிகள ும் இனியும் சவுக்கை சீண்டி பாக்க துணிய மாட்டார்கள்..மற்ற வெகுஜன பத்திரிக்கைகளோட ு ஒப்பிட்டால் சவுக்குக்கு வாசகர்கள் எண்ணிக்கையில் கம்மிதான்...ஆனால் சவுக்கின் வாசகர்கள் யார் யார் என்று தெரிந்தால் அனைவருமே ஆச்சரியபடுவார்க ள்..பெரும்பாலும் ஒப்பீனியன் கிரியேட்டர்ஸ்...ஒவ்வொருவரும் குறைந்தது ஒரு ஆயிரம் பேரையாவது இன்ப்ளூயென்ஸ் செய்யகூடிய சக்தி படைத்தவர்கள்..அரசு ஊழியர்கள், டாக்டர்கள், வக்கீல்கள், மாணவர்கள், வெளிநாட்டு வாழ் இந்தியர்கள், போலீசார், பத்திரிக்கையாளர ்கள் ஏன் அரசியல்வாதிகளும ் அடக்கம்...ஒரு வாசகன் என்ற முறையில் எனக்கு நேரடியாக தெரிந்த வாசகர் வட்டத்தை நான் கூறுகிறேன்..ஆகவே இனியும் அராஜகம் அரசாள முடியாது..மக்கள் சக்திக்கு பதில் சொல்லியே ஆகவேண்டும்.!!! வாழ்க ஜனநாயகம்..!
Quote
 
 
+4 #60 ஒரிஜினல் நக்கீரன் 2011-10-16 20:12
நீங்கல்லாம் மனுசங்கதானா..? காசுக்காக என்ன வேணாலும் பண்ணுவீங்களா? அரசியல்வியாதி, போலீஸ், வக்கீல், நீதிபதி, பத்திரிக்கையாளர ்கள்..இவங்க எல்லோருமே ஒன்னுக்குள்ள ஒன்னு..(20 % நல்லவங்க இருக்காங்க..அவுங்க மன்னிச்சுக்கோங் க..) அதிலும் எல்லா உண்மையையும் வெளியே கொண்டு வர வேண்டிய பத்திரிக்கையாளர ்களும் அதிகாரத்துக்கு கால் நாக்கிகொண்டு இருப்பதுதான் கேடு கெட்ட ஈனத்தனமான செயல்..சவுக்கு..எதற்கும் பணியாமல்..இந்த ரூட்ட புடிச்சுகிட்டு போயிகிட்டே இரு..உனக்கு வரலாறுல கண்டிப்பா ஒரு நல்ல இடம் உண்டு..
Quote
 
 
0 #59 balasubramanian g 2011-10-15 22:03
தமிழக போலிஸ் படைகளே இன்னும் நாகரீகம் அடையவே இல்லை ,
Quote
 
 
0 #58 iromnathan 2011-10-14 19:59
Dear savukku

http://www.whispersintamilnadu.com/#!/2011/10/operation-suriyan.html

is this true?
Quote
 
 
+6 #57 ஜொனோதன் 2011-10-14 08:25
சார், ஜாங்கிட்டுங்கற பொறுக்கி நாய், மலம் திண்ணும் பேய் நெற்றிக்கண் ஆசிரியர் மணிக்கு என்னன்ன கொடுமைக்ளையெல்ல ாம் செய்தானோ, அதைவிட கொடூரங்களை தனித் தமிழர் சேனை அமைப்பைச் சேர்ந்த நகைமுகனிடமும் அவருடைய மனைவியிடமும் நிறைவேற்றி இருக்கிறான். நகைமுகனின் பெண், ஒரு முஸ்லிம் பையனோடு ஓடிப் போய்விட்டார். அதற்குக் காரணம் ஜாங்கிட்தான். அதற்காக நகைமுகனை நல்லவர் என்று சொல்ல வரலை. அவர் ஒரு கட்டப்பஞ்சாய்த் துப் பார்ட்டி, பிளாக் மெயிலர் என்பது ஊரறிந்ததுதான். ஜாங்கிட்டும் நகைமுகனும் ஒரு காலத்தில் ஒன்றாக இருந்து திரிந்த போது நிறைய நிலங்களை ஒருசேர வளைத்திருக்கிறா ர்கள். இருந்தாலும், தொழிலில் சண்டை என்று பிரிந்ததும், அவரை கைது செய்து கொடுமைப்படுத்து வது, மனைவியை அவமானப்படுத்தி துன்பப்படுத்துவ தெல்லாம் கூடாதில்லையா? சட்டத்துக்குப் புறம்பான காரியங்களை தொடர்ந்து செய்து கொண்டிருக்கும் ஜாங்கிட்டின் மீசையை அறுங்கள் சார். டவுசரை கழட்டுங்க சார். நாங்களாம் உங்க பின்னாடி இருக்கிறோம்.வீழ்வது ஜாங்கிட் போன்ற சமூக விரோதிகளாக இருக்க, வாழ்வது தமிழ் சமுதாயமாக இருக்கட்டும்.
Quote
 
 
0 #56 USV 2011-10-13 02:29
http://www.thehindu.com/news/national/article40641.ece

http://www.unhcr.org/refworld/country,,RSF,,IND,,4af92ade1e,0.html

Paging Inspector Chandrashekar... your friend Ahamed Jan is waiting for you
Quote
 
 
+15 #55 போலீஸ்பாபு 2011-10-12 15:20
இப்படியொரு கேடு கெட்ட, வெட்கம் கெட்ட ஜென்மம்தான் இந்த அயோக்கிய ஜாங்கிட். இவனைத்தான் இந்த கேடுகெட்ட அயோக்கிய பத்திரிகையாள நாய்கள் தூக்கி வைத்து கொண்டாடுகின்றன. என்ன, அவன் திண்ணுவிட்டு தூக்கி எறியும் எச்சிலையைப் பொறுக்கித் திண்ணுவிட்டு, அதற்கு வாலாட்டுகின்றன. இப்படி கேடுகெட்ட மனிதன் ஜாங்கிட்டின் மீசையை நீங்கள் ஒரு நாள் ஒட்ட நறுக்க வேண்டும். அன்றைய தினம் நாங்களெல்லாம் திருப்பதி கோயிலுக்குச் சென்று மொட்டைப் போடுவோம். பத்திரிகையாள பொறுக்கிகளையும் எங்கு கண்டாலும் விடாதீர்கள். இந்த நாட்டுக்கு போலீஸை விட கேடானவர்கள் பத்திரிகையாள பொறுக்கிகள்தான் . அனுபவத்தில் உணர்ந்துதான் இதையெல்லாம் சொல்கிறேன். கொஞ்சம் கூட கூட்டிச் சொல்லவில்லை.வாழ்த்துக்கள். பணி இதே வேகத்திலேயே தொடரட்டும். நீங்கள் பெரிய மீசை வளருங்கள். அது உங்களுக்கு தகுதியானது.
Quote
 
 
+15 #54 போலீஸ் பாபு 2011-10-12 15:19
அன்பார்ந்த சவுக்கு, உம்முடைய செயல் தைரியமானதுதான். அதற்காக ஜாங்கிட் போன்ற நல்ல அதிகாரியாக வேஷம் போட்டுக் கொண்டிருந்த கொடூரனை உரிச்சு உப்புக் கண்டம் போட்டுட்டீங்க. அவர்களெல்லாம் இத்தனைக்கும் பிறகு எப்படி உயிரை வைத்துக் கொண்டு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. இந்த கட்டுரையை அவர்கள் வீட்டில் இருப்பவர்களும் படிக்கத்தானே செய்வார்கள்? உண்மையிலேயே அவர்கள் வீட்டில் இருப்பவர்களில் யாராவது ஒருவர் நியாயமாக இருந்தால்கூட இந்த மாதிரியான புறம்போக்கு அதிகாரிகளை மதிப்பார்களா? பணம் என்றால் மலத்தையும் திண்ணும் இந்த மாதிரி அதிகாரிகளைக் கண்டால் நீங்கள் கடைசி வரையில் விடக் கூடாது. நீங்கள் ஜாபர் சேட் என்கிற அயோக்கியனால் பாதிக்கப்பட்டவர ் என்பதால், அவரைப் பற்றி மட்டும்தான் அதிகமாக எழுதுவீர்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், நீங்கள் நியாயமானவர் என்று காட்டிவிட்டீர்க ள். போலீஸ் தலைமை அலுவலகத்தில் பணி புரிவதால், சமீபத்தில் எனக்குக் கிடைத்த ஒரு தகவலையும் இந்த நேரத்தில் பகிர்ந்து கொள்கிறேன். இந்த ஜான்கிட் தன்னுடைய பதவிக்காக யார் காலையும் நக்குவார் என்பதற்கு சமீபத்திய சம்பவம்... புதிய டி.ஐ.ஜி-யாக இன்டலிஜென்ஸ் பிரிவுக்கு வந்திருக்கும் பொன். மாணிக்கவேலை போய் பார்த்து அவர் காலில் சாஸ்டாங்கமாக் விழுந்திருக்கிற ார் ஜாங்கிட். அவருக்கும் ஜாங்கிட்டுக்கும ் ஆகாது. இருந்தாலும், அவர் பொறுப்பில் இருப்பதால், அவரால் தனக்கு ஆபத்து வந்துவிடக் கூடாது என்பதற்காக அவர் காலில் விழுந்திருக்கிற ார்.
Quote
 
 
+4 #53 Parthiban Mani 2011-10-12 14:34
Dear Ahamed jan

As per ur comment , nanga ninachi iruntha Veerapan Kita irunthu 100 Crores vangi irruka mudiyum ( Nee mattum en peacha ketu iruntha 100 cr sambathichu irrukalam avan ippo en pera vachi 100 kodiku mela sethutan ) these lines were said by Sandalwood Veerpan in 2003 by an audio cassette sent to us. And for ur kind information , only after the formation of newly elected members from Chennai Press Club , we got support. I would like to thank office bearers of the press club for their kind support towards us. And for ur futher information , in same 2010 reg a fake complaint and arrest our Editor by Madurai Pottu Suresh , we got the support of International Organisations like International Press Institute(Vienn a),RSF(France)e tc., And our Editor's Guild ( New Delhi)and much more, without knowing anything don jus comment !!!
Quote
 
 
+6 #52 Arun Chennai 2011-10-12 14:33
Excellent article.. Im wondering how you could explain everything with their pictures? it needs lot of guts. Excellent job.. We ordinary people know that many polices are insane.. the above are the perfect examples of being animals.. At the same time you should have explained little bit about Mr.Mani's character.. Hope he is good charactered guy..
Quote
 
 
+6 #51 manithan 2011-10-11 23:46
மலம் திண்ணும் ஆசாமி ஜான்கிட் என்றால், அவருடைய மலத்தை திண்ணும் பத்திரிகையாளர்க ளை என்னவென்று சொல்வது. பத்திரிகையாளர்க ளை எங்கு கண்டாலும் அடிக்கணும் சார். இதுக்கு ஏற்பாடு பண்ணுங்க சார். தொடரட்டும் உம்முடைய ஜான்கிட் தோலுரிப்புப் பணி. வாழ்த்துக்கள்.
Quote
 
 
+14 #50 manithan 2011-10-11 23:45
சவுக்கு வாசகர்களுக்கு ஒரு செய்தி.
நான் போலீஸ் வட்டாரத்தில் நல்ல தொடர்பில் இருப்பவன். என்னை சில போலீஸ் அதிகாரிகளுக்குப ் பிடிக்கும். சிலருக்குப் பிடிக்காது. நேர்மை தவறிய போலீஸ் அதிகாரிகளை எனக்கும் பிடிக்காது. அதனால், அவர்கள் பக்கம் நான் போவதில்லை. செய்திகளுக்காகத ்தான் நான் போலீஸ் அதிகாரிகளைப் பார்க்கிறேன். சமீப காலமாக நான் பார்க்கும் போலீஸ் அதிகாரிகளின் ஒரிஜினல் முகம் நரி முகமாகத்தான் இருக்கிறது. வரிசையாக ஒவ்வொரு போலீஸ் அதிகாரிகளாகக் கிழியுங்கள். அதுவும் வட இந்திய போலீஸ் அதிகாரிகள் அவ்வளவு பேரும் ஊழலில் ஊறித் திளைக்கும் பொறுக்கிகளாகத்த ான் இருக்கிறார்கள். ஒருசிலர் நல்லவர்கள் இருக்கலாம். அதற்காக அவர்கள் கோபித்துக் கொள்ள வேண்டாம். ஜான்கிட் போன்ற தவறானவர்களை தோல் உரிப்பதுதான் சவுக்கின் வேலை என்றான பிறகு, எல்லோரையும் தோல் உரியுங்கள். பணி பாராட்டும்படி இருக்கும். போலீஸ் வட்டாரத்துக்குள ்ளேயே உங்களுக்கு சிலை வைப்பார்கள். டி. ராஜேந்திரன் என்கிற கண்ணாயிரம், ராதாகிருஷ்ணன் என்கிற போலி ஆசாமி, லத்திகா சரண், ஜார்ஜ் என்று அயோக்கிய போலீஸ் அதிகார்களை ஒருகாலும் விடக்கூடாது சவுக்கு அண்ணா.
Quote
 
 
+15 #49 கவிப்ரியா 2011-10-11 23:36
அன்பு சவுக்கு உங்கள் திறமையை நினைத்தால், அப்படியே மெய் சிலிர்க்கிறது. ஜாங்கிட் என்கிற புறம்போக்கு போலீஸ் அதிகாரி நல்லவர்களுக்கு எதிராக நடத்திய சதிராட்டம் கொஞ்ச நஞ்சமல்ல. நீங்கள் குறிப்பிட்டிருப ்பது போல எந்த சமூக பத்திரிகைகளும் சமூகத் தளங்களும் இவரைப் பற்றி எழுதுவதற்கு தயங்குகின்றன. அதற்கு மிக முக்கியமான காரணம், அந்த பத்திரிகைகளில் உங்களைப் போன்ற சமூக அக்கறையும் தைரியமும் உள்ள பத்திரிகையாளர்க ள் இல்லாததுதான். ஜூனியர் விகடனில் பொறுப்பில் இருப்பவர் யார் என்று பாருங்கள். அதனால், ஜாங்கிட்டைப் போலவே இருக்கும் மற்ற்ப் போலீஸ் அதிகாரிகளை எழுதுவது போல, இந்தமாதிரியான பத்திரிகையாளர்க ளையும் எழுதுங்கள்.
Quote
 
 
+14 #48 ரவிஷங்கர் 2011-10-11 23:04
சவுக்குவின் திருவிளையாடல் துணிவுடன் தொடரட்டும்.
Quote
 
 
+9 #47 ரவிஷங்கர் 2011-10-11 23:02
சவுக்குவின் திருவிளையாடல் தொடரட்டும், துணிவோடு.
Quote
 
 
+8 #46 T.Karthikeyan 2011-10-11 15:02
I am praying to the god for mr.Savukku's (my Hero) health and saftey after reading of these brutal idiotic policemen. God must punish all these policemen. Dear Savukku take care of yourself because we need you and your service for a long period.
Quote
 
 
-8 #45 jothibasu 2011-10-11 09:51
கருனானிதியை திட்டின்னால் மட்டும் அந்த கமென்டை பொடுவிர்கலா?? .
சவுக்கு எல்லா கமென்டையும் தைரிய மிருந்தால் போடூஙல் , நீங்கல் ஒரு நடுனிலையலராகைரு ந்தால் ,
ஊங்கலுகுக்கு ஜால்ரா அடிகிர கமென்டை மட்டும் தான் போடுவிர்கலா???
Quote
 
 
+9 #44 prabhubhaskar 2011-10-11 08:26
யார் யார் மீதோ நடவடிக்கை எடுக்கும் அரசாங்கம், இந்த ஜான்கிட்டின் அராஜகம் தெரிந்தும், இன்னமும் சும்மா இருப்பது ஏன்? முதல்வர் அவர்களுக்கு உங்களுக்கு ஆர்வத்தோடு வாக்களித்த வாக்காளன் என்கிற உரிமையில் உங்களை வணங்கிக் கேட்டுக் கொள்கிறேன். இந்த மாதிரியான அரக்கன்களை முதலில் தண்டியுங்கள் அம்மா. இவர்களையெல்லாம் விட்டு வைத்தீர்களென்றா ல், உங்களை பெரிதாக நம்பி வாக்களித்த எங்களைப் போன்ற கோடிக்கணக்கானவர ்களின் சாபத்துக்கு ஆளாக நேரிடும். ஏதோ மிரட்டலாகச் சொல்லவில்லை. ஆதங்கத்தைச் சொல்லிவிட்டேன். நியாத்தைப் புரிந்து நடவடிக்கை எடுக்க வேண்டியது, எங்களையெல்லாம் ஆளும் ஸ்தானத்தில் இருக்கும் உங்களுடைய கடமை. இதே கருணாநிதியிடம் நாங்கள் கேட்க மாட்டோம். ஏனென்றால், இந்த மாதிரியான புறம்போக்கு நாய்களை வளர்த்துவிட்டதே , கருணாநிதி போன்ற பண்ணாடைகள்தான். அம்மா நியாயத்தை செய்யுங்கள் அம்மா.
Quote
 
 
+7 #43 ponkumar 2011-10-11 08:20
ஆண் மகனாக இருப்பவர்கள் அந்தக் காலத்தில் பெரிய மீசை வைப்பார்கள். அவர்களிடம் ஒரு நியாயமும் நேர்மையும் இருக்கும். இது அந்த மனிதருக்கும் கவுரவம். மீசைக்கும் கவுரவம். ஆனால், இந்த ஜான்கிட் போன்ற பொறுக்கிகளுக்கு பொட்டைகளுக்கு எதற்கு மீசை. முதல்ல அந்த ஆளின் மீசையை அறுக்கணும் சவுக்கு. டவுசரை அவுத்துட்டீங்க. அந்த அளவில் எங்களுக்கு சந்தோஷம்தான். விடாதீங்க. முகங்களை கிழிங்க.
Quote
 
 
+15 #42 police nanban 2011-10-11 08:18
ஊர் நியாமெல்லாம் பேசும் பத்திரிகையாளர் சங்கத்தைச் சேர்ந்த பொறுக்கிகளெல்லா ம் மணி விஷயம் முழுவதையும் நன்கு தெரிந்து கொண்டும் கண்டும் காணாமல் இருந்து வருவதன் மர்மம், ஜான்கிட் போன்றவர்கள் திண்ணுவிட்டுப் போடும் எச்ச மலம்தான் காரணம். இதைச் சொல்ல வந்துவிட்டீர்கள ். செகரட்டரியேட் பக்கம் கொஞ்சம் போய் பாருங்கள். பத்திரிகையாளர்க ளின் முடை நாற்றம் எந்தளவுக்கு என்று. புரோக்கர்களை விட கேவலமாக அமைச்சர்களுக்கு ம் அதிகாரிகளுக்கும ் மாமா வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார ்கள். இவனுங்களைத்தான் சார், கண்டம் துண்டமாக வெட்டிப் போட வேண்டும். பத்திரிகையாளர் ஒரு கூட்டத்தில் சிக்கி, அடிபட்டுவிட்டால ோ சாதாரண போலீஸ் கான்ஸ்டபிள் தவறாக நடந்து கொண்டாலோ ரோட்டுக்கு வந்து போராடும் வீராவேஷம் காண்பிக்கும் பத்திரிகையாள சங்கங்கள் இதற்கு பின்னும் அமைதியாக இருக்குமானால், அவர்கள் தாங்களாகவே மலம் திண்பதை ஒப்புக்கொள்கிறா ர்கள் என்றே அர்த்தம். ஜாங்கிட்டோடு நெருக்கமாக இருக்கும் அதிகாரி ஏ.கே. நடராஜன் என்று நண்பர் ஒருவர் குறிப்பிட்டிருக ்கிறார். அது தவறு அந்த போலீஸ் நாய் ஏ.கே. விசுவநாதன். ஜாபர் சேட்டுக்குப் பிடிக்காத அதிகாரி. கடந்த தி.மு.க. ஆட்சி கெட்டுக் குட்டிச்சுவரானத ற்கு இவரும் முக்கியமான காரணம். இவருடைய ஊழலும் நிறைய இருக்கு. அதையும் விசாரிச்சு முகத்தை கிழிங்க. எதிர்பார்க்கிறோ ம்.
Quote
 
 
+30 #41 Ravi 2011-10-11 01:53
மனதளவில் எத்தனை அளவுக்கு இவர்கள் சிதைந்து போயிருந்தால் இந்த காவல்துறை அதிகாரிகள் இப்படி நடந்து கொள்வார்கள்? பழைய அதிகாரிகள்தான் கொடுமையானவர்கள் என்றால் இப்போது வரும் அதிகாரிகளும் அவர்களை போலவே இருப்பதை அறிந்து அதிர்ச்சியாக இருக்கிறது. சந்திரசேகர் மற்றும் காமராஜர் போன்ற ஆய்வார்களுக்கு தினமும் எப்படி தூக்கம் வருகிறது? அவர்களின் குடும்பம் எப்படி இருக்கிறது? இந்த வக்கிரங்களின் வாரிசுகளும் வக்கிரங்களாகவே இருக்க பெரும் வாய்ப்புள்ளது.
Quote
 
 
+21 #40 rancho 2011-10-11 00:01
திருடர்களுக்கும ் தெருபொறுக்கிகளு க்கும் பொறம்பொக்குகளுக ்கும் சீருடை கொடுதால் இப்படி தான். நம்ம நாட்டை இன்னொரு ட்சுனாமி வந்து காப்பாத்தினா தான் வெலன்கும்
Quote
 
 
+22 #39 makku 2011-10-10 23:44
ஜெகஜ்ஜாலக் கீல்லாடி சவுக்கு

இனி யாரும் உன்னை மாதிரி யாரும் கஷ்ட்ட படக் கூடாது

நெஞ்சம் பதறுது சவுக்கு
O God please help
Quote
 
 
+44 #38 poovarasu 2011-10-10 23:33
ஜூனியர் விகடன் பாலகிஷனின் மகள் மோனிஷா, பிளஸ் டூவில் மாநிலத்திலேயே முதல் மார்க் வாங்கியவர். 800/1200. இந்த மார்க்குக்கு உலக மாகா கல்லூரியில் எல்லாம் அவருக்கு சீட் வேண்டுமாம். அதுவும் பொறியியல் கல்லூரியில். சீட்டுக்கு பிச்சையெடுத்துப ் பார்த்தார் கிடைக்கலை. உடனே, விகடன் பதிப்பாசிரியர் கே. அசோகனிடம் , தன்னுடைய பெண்ணுக்கு சீட் வாங்கிக் கொடுக்க காலியில் விழுந்து கெஞ்சுகிறார். உடனே, தனக்கு இயக்குநர் சுசி கணேசன் மூலமாக நெருக்கமாக இருக்கும் ஏ.கே. நடராஜன் என்கிற உலக மகா கேடி போலீஸ் அதிகாரியை நாடி காலில் விழுகிறான். அவரும் ஜாங்கிட்டும் நகையும் சதையும். உடனே, அவரிடம் தகவல் சொல்லப்பட... புற நகர் கமிஷனர் என்கிற கோதாவைப் பயன்படுத்தி, ஏழு லட்ச ரூபாய் டொனேஷன் கொடுத்து வாங்க வேண்டிய சீட்டை, இலவசமாக வாங்கிக் கொடுக்கிறார் ஜாங்கிட். அதுமட்டுமல்ல... நான்காண்டுகளுக் கான ஃபீஸையும் கட்டுகிறார் ஜாங்கிட். அதன்பிறகு, ஓராண்டுக்குப் பிறகு மோனிஷா வாங்கிய மார்க்கைப் பார்த்து, ச்ந்திர மண்டலத்தில் படிக்க வேண்டிய பெண் மோனிஷா என்று சொல்லி, கல்லூரியில் இருந்து மோனிஷாவை அனுப்பி விட்டார்கள். வேறு வழியில்லை... மீண்டும் ஜான்கிட் காலில் விழுகிறான், பாலகிஷன். உடனே, அவர் ஜெகத்ரட்சகனிடம் பேசுகிறார். சென்னை, கிழக்குத் தாம்பரத்தில் இருக்கும் பாரத் பொறியியல் கல்லூரிக்கு மாற்றலாகி வந்து படித்துக் கொண்டிருக்கிறார ். படிப்பு விஷயத்தில் நாம் குறை சொல்ல வேண்டாம். இப்படியெல்லாம் பத்திரிகையாளர்க ளும் பதிப்பாசிரியர்க ளும் கண்ட கண்ட போலீஸ் அதிகார நாய்களிடமும் பணத்துக்காக அடிமையாகி நிறபதை நினைத்தால், வெட்கமாகவும் வேதனையாகவும் இருக்கிறது.
Quote
 
 
+33 #37 sundarraman 2011-10-10 23:24
ஜூனியர் விகடன் என்று நீங்கள் பெயரைக் குறிப்பிட்டிருப ்பதால், அங்கே இன்றைக்கும் ஜான்கிட்டிடம் மாமூல் வாங்கிக் கொண்டிருக்கும் இருவரை உங்களுக்கு அடையாளப்படுத்த வேண்டியது கடமை என்பதால் எழுதுகிறேன். செயின்ட் தாமஸ் மவுன்ட்டில் ஜாங்கிட்டின் அடிவறுடியாக இருந்து செயல்படும் உதவி கமிஷனர் ஜெயக்குமார் என்கிற புர்ம்போக்குத்த ான், சீனியர் நிருபராக இருக்கும் இரா. சரவணன், சிறப்புச் செய்தியாளர் ஆர். பாலகிஷன் இருவருக்கும் மாமா வேலை செய்து கொடுத்து, இருவரையும் கையில் வைத்துக் கொண்டிருக்கிறான ். இதே போல ஒவ்வொரு பத்திரிகையிலும் புரோக்கர்கள் இருக்கிறார்கள். அவர்களும் லேசுபட்டவர்கள் அல்ல... கூட்டிக் கொடுக்கவும் தயங்காதவர்கள். கேட்டால், ஊர் உலக நியாயம் பேசுவார்கள். அயோக்கியர்கள். இவர்களையெல்லாம் தோலை உரிங்க சவுக்கு. நியாயத்தை எழுதறதுன்னு முடிவெடுத்துட்ட ப் பிறகு, இந்த மாதிரியான பத்திரிகையாளர்க ளும் சமூகத்துக்கு எதிரிதானே... இதை செய்யலைன்னா, உங்க மேல இருக்குற நம்பிக்கைப் பொய்த்துவிடும். எதிர்பார்க்கிறே ன். விடாதீங்க, இந்த பத்திரிகைகார பண்ணாடலைகளை. செருப்பால அடிங்க. அப்பனாச்சும், திருந்துறானுங்க ளான்னு பார்ப்போம்.
Quote
 
 
+21 #36 savukku priyan 2011-10-10 23:16
அன்பார்ந்த சவுக்கு...
வணக்கம். ஜாங்கிட் வட நெம்மேலியில் அங்கிருப்பவர்கள ுக்குச் சொந்தமான இடத்தை வளைத்திருக்கிறா ர். மணப்பாக்கத்தில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்-களுக்கு நகர் உருவாக்குவதற்கா க அவர் செய்த அதிகார துஷ்பிரயோகம் கொஞ்ச நஞ்சமல்ல. அப்பாவி ஒருவரின் இடத்தை மிரட்டி வாங்குவதற்கு முயன்றார். அவர் மறுத்ததும் அவரை அடித்துக் கொன்று விட்டார். இதே போல இவர் தூத்துக்குடி எஸ்.பி-யாக இருந்தபோது வல்லநாட்டில் சூட்டிங் ரேஞ்சு அமைக்கிறேன் என்று அங்கே குட்டிகளை அழைத்து வந்து குட்டி போடுவதற்காக நீச்சல் குளம், கெஸ்ட் ரூம்களை அமைத்து ஏகப்பட்ட தில்லுமுல்லுகளை ப் பண்ணினார். இது தொடர்பாக தூத்துக்குடி எமி என்ற மாவட்டப் பஞ்சாயத்துக் கவுன்ஸிலர் வழக்கே தொடர்ந்து நிலுவையில் இருக்கிறது. வழக்குப் போட்டார் என்கிற ஒரே காரணத்துக்காக அவர் மீது பல பொய் வழக்குகளைப் போட்டிருக்கிறார ். இப்படித்தான், இவரைத் தட்டிக் கேட்டார் என்பதற்காக தனித் தமிழர் சேனையின் நகைமுகன் மீது பொய் வழக்குப் போட்டார். பங்க் குமாரை சுட்டார். மதுரைக்குப் பக்கத்தில் இருக்கும் நாகமலைப்புதுக் கோட்டையிலும் நில வளைப்பு வேலையில் ஈடுபட்டிருக்கிற ார். இந்த தகவல்களையெல்லாம ் சேகரியுங்கள். மணப்பாக்கத்தில் அவர் இரண்டு கிரவுண்டுக்கும் கூடுதலாக கட்டியிருக்கும் பங்களாவை படம் பிடித்து வந்துப் போடுங்கள். அவர் எத்தனை கோடிகளுக்குச் சொந்தக்காரர் என்பது சொல்லாமலேயே விளங்கும்.
Quote
 
 
+27 #35 கடற்கரைவாசி 2011-10-10 22:53
இதுக்கு ஜான்கிட்டுன்னு பேரு வச்சதுக்கு, சாக்கடைன்னு பேரு வசுருக்கலாம்...

சனியனுங்க... ஓநாய்கலே ஆடுகளுக்கு பாதுகாவலன்களாக இருந்தால்... ஆட்டு மந்தையின் எண்ணிக்கை முட்டைதான்...

Quoting Parthiban Mani:
Dear Savukku Readers ,
First of all i not only me my family thanks Mr.Savukku for bringing this news to the public.Many have asked about human rights commission, all these commissions are there for name sake , till date no action has been taken, a single letter from Press Council of India came in 2008 , stating they will look into this issue.After the formation of new government my dad has taken this matter to Hon'ble CM and madam has promised government will take necessary steps. I really have hope that after reading this article from Savukku the government will speed up the process and Mr.S.R.Jangid IPS , Mr.Arun IPS , and all police involved in this case will be put behind bars .


ஐயா நீங்களும் உங்கள் குடும்பமும் நன்றாக வாழ எல்லாம் வல்ல ஏகனை பிரார்த்திக்கிற ோம்... இந்த சாத்தான்களை சந்தி சிரிக்க வையுங்கள்... நீங்களும் நாங்களும் சாந்தி பெறலாம்...

Bravo to Savukku and to Honorable Mani and his family.

P.S: இந்த சனியன் ஜெகஜ்ஜால கில்லாடி இல்ல, செக்கிளுக்க வேண்டிய கேடி.
Quote
 
 
-10 #34 Ahamed jan 2011-10-10 21:24
இவ்வளவு நடந்தும் ஒரு பத்திரிக்கையும் ,பிரஸ் கவுன்சிலும் ,ஒரு சின்ன கண்டனம்,எதிர்ப் பு எதுவும் தெரிவிக்கவில்லை என்றால்,இவர் பத்திரிக்கை நடத்திய லட்சணத்தை தெரிந்து கொள்ளுங்கள்,செய ்தி போட்டு மிரட்டி பணம் சம்பாதிப்பதையே தனது பிழைப்பாக வைத்திருந்து இருப்பார் ..இல்லேன்னா எப்படி இப்படி ?? அதற்காக ஜாங்கிட் நேர்மையான அதிகாரி,அருண் நல்லவர் என்று சொல்லவில்லை ,இவருடைய செய்திகளில் தரம் இல்லை ,நேர்மை இல்லை ,மிரட்டல் மட்டுமே இருந்தது ..என்று சொல்கிறேன் ...இல்லை என்றால் நீதிமன்ற படி ஏறி இருக்க வேண்டியதுதானே ....
Quote
 
 
+17 #33 savukku priyan 2011-10-10 17:53
இந்த கட்டுரையில் சொல்லப்பட்டிருக ்கும் பத்திரிகையாளர்க ள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக சவுக்கு தோல் உரிக்க வேண்டும். அப்போதுதான், மணியின் ஆன்மா மன்னிக்கும். செய்வீர்களா சவுக்கு?
Quote
 
 
+21 #32 savukku priyan 2011-10-10 17:52
காக்கி உடைக்குள் இருக்கும் இந்த மாதிரி பொறுக்கிகளை இனியும் அனுமதிக்ககூடாது சவுக்கு. இவனுங்களையே மலம் திண்பவர்கள் என்று சொல்லிவிட்டு இவனுங்களுடைய மலத்தையே திண்ணும் பத்திரிகையாளர்க ளை என்னவென்று சொல்லப் போகிறீர்கள். பத்திரிகையாள பொறுக்கிகள் அனைவரையும் கொல்லணும் சவுக்கு. இவனுங்களெல்லாம் கூட்டிக் கொடுத்துக் கூட பொழைப்பானுங்க.
Quote
 
 
+24 #31 adirainesan 2011-10-10 16:22
சவுக்கின் இது போன்ற நாய்களின் முதுகுத்தோலை உரிக்கக்கூடிய கட்டுரை மென்மேலும் வர என் மனமார்ந்த வாழ்த்துக்கள். ஆமாம் எந்த காரணத்திற்காக உஙகளை சிபிசிஐடி சித்ரவதை செய்தது?
Quote
 
 
+15 #30 GOWRISHANKAR L 2011-10-10 15:53
ஈந்த மாதிரி ஆட்கலை எல்லா பத்ரிகைலும்,தொல க்காஇட்சிலும் கொஇன்டு வெலிகாஇடவென்டும ்.
முதலில் பதிரிகை ஒஇட்ருமையக நேஇர்மையக செயைல்பட வேஇன்டும்
Quote
 
 
+22 #29 Sreenivasan 2011-10-10 15:32
atrocious... நெஞ்சம் பதறுது சவுக்கு
Quote
 
 
+63 #28 Parthiban Mani 2011-10-10 15:17
Dear Savukku Readers ,
First of all i not only me my family thanks Mr.Savukku for bringing this news to the public.Many have asked about human rights commission, all these commissions are there for name sake , till date no action has been taken, a single letter from Press Council of India came in 2008 , stating they will look into this issue.After the formation of new government my dad has taken this matter to Hon'ble CM and madam has promised government will take necessary steps. I really have hope that after reading this article from Savukku the government will speed up the process and Mr.S.R.Jangid IPS , Mr.Arun IPS , and all police involved in this case will be put behind bars .
Quote
 
 
+18 #27 tamilscafe.blogspot 2011-10-10 15:06
Though I don't like savukku's double standard in some issues, this article is must read one. To write article like this you do really need political support from Thiruma and similar groups otherwise you will be treated as same as Mr. Mani.

Very well done job savukku and my hats off to Mr.Mani.

Tamilscafe
Quote
 
 
+13 #26 s.g.kesav 2011-10-10 14:50
இவர்கல் மனிதர்கல இல்லை கன்டிபக அரசு தன்டனை கொடுகவென்டும்
Quote
 
 
+29 #25 டயாப்பர் தாத்தா 2011-10-10 14:30
பொறம்போக்கு போலீஸும் ஜான்கிட்டும்! படிக்கவே கேவலமாக இருக்கிறது! பாவம் அருணும், அவர் பத்திரிக்கை குடும்பமும். தமிழத்தின் ஒரே தலைவர், டயாப்பர் இல்லாமல் வெளியே போகமுடிவதில்லைய ாம்! அவர் இப்படியே நூறாண்டுகாலம் வாழ மனமாற வாழ்த்துவோம்! - நன்றிகள் சவுக்கு!
Quote
 
 
+4 #24 பார்த்திபன் 2011-10-10 14:02
நந்தன் சொல்வது நியாயம் தான்!
Quote
 
 
+13 #23 admiral 2011-10-10 13:44
Savvuku,

Though you have taken a double standard on Parammakudi Police firing issue, for which i have posted my objections, i really appreciate you for this articles and your courage. I can really understand why you hate Police community.
Bravo and hats Off for you.
Quote
 
 
+27 #22 muru2005 2011-10-10 13:06
ஜாங்கிட் நல்ல பதவிக்காக கருணாநிதியின் காலை அல்ல, கருணாநிதி வீட்டு கழிவறையையே நக்குவார் என்பது ஊருக்கே தெரியும். மணியின் வாயில் மலத்தை வலுக்கட்டாயமாக ஊற்றினார் ஜாங்கிட்.
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 175 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday11337
mod_vvisit_counterYesterday13443
mod_vvisit_counterThis week36567
mod_vvisit_counterLast week95167
mod_vvisit_counterThis month258827
mod_vvisit_counterLast month382199
mod_vvisit_counterAll days13175194