முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்தொடர்புக்கு
+++
கேடி சகோதரர்கள் கைது எப்போது ? அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 26
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
திங்கட்கிழமை, 17 அக்டோபர் 2011 22:04

 

அவர்கள் கைது செய்யப் படப் போவதே இல்லை.  என்ன இது என்று ஆச்சர்யமாகப் பார்க்கிறீர்களா ?  ஆம், நேற்று கேடி சகோதரர்கள் கைது செய்யப் படக் கூடாது என்று காலை முதல் பிற்பகல் வரை, கருணாநிதி குடும்பத்துக்கும், கேடி சகோதரர்கள் குடும்பத்துக்கும் ப்ரோக்கராக செயல்பட்டு வரும், தலைச் சிறந்த நெடுந்தொடர் நடிகை செல்வி ஏற்பாட்டில் விளக்கு பூஜை நடைபெற்றது. செல்வியின் கோரிக்கையின் பேரில், ,அகில இந்திய சாய் சமாஜ் சங்கத்தின் தலைவர் தங்கராஜ் என்பவர் இதை ஏற்பாடு செய்தார்.

 selvi-serial1

இந்த விளக்கு பூஜையில், கேடி சகோதரர்களுக்கு ஏற்பட்டிருக்கும் திருஷ்டியை கழிக்கும் வகையிலும், அவர்கள் சிறை செல்லாமல் தடுக்கும் வகையிலும் சிறப்பு மந்திரங்கள் ஓதப்பட்டன.   சிறப்பு மந்திரங்கள் என்னவாக இருக்கும் ?

 DSC_1959-small

வேறு என்ன ?  சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளிவந்த முதல் படமான “காதலில் விழுந்தேன்” படத்தில் வெளி வந்த ஹிட் பாடலான “அட்றார்றா நாக்க முக்க நாக்க முக்க நாக்க முக்க“ என்ற மந்திரங்கள் காலை முதல், மாலை வரை ஓதப்பட்டிருக்கும்.

 

இந்த மந்திரங்களைக் கேட்ட முப்பத்து முக்கோடித் தேவர்கள் மனமிறங்கி, கேடி சகோதரர்களை சிறை செல்லாமல் காப்பாற்றுவார்கள் என்று நெடுந்தொடர் நடிகை செல்வி, பெரிய கேடியின் மனைவி காவேரி மற்றும் சின்னக் கேடியின் மனைவி ப்ரியா ஆகியோரும் உறுதியாக நம்புகிறார்கள்.

karunanidhi-family-2-small

 

இவர்கள் பூஜை செய்து, அதைக் கண்ட முப்பத்து முக்கோடி தேவர்கள் மனமிறங்கலாம். சுப்ரமண்ய சுவாமி கூட ஏதாவது ஒரு டீலில் செட்டில் ஆகலாம். இவர்கள் மீதான வழக்குப் பதிவை தாமதம் செய்து, இவர்கள்  கைதையும் தாமதம் செய்து கொண்டிருக்கும்,  மத்திய புலனாய்வுத் துறையின் வழக்காடும் பிரிவு (Directorate of Prosecution)ன் தலைவர், அப்துல் அஜீஸ் மனமிறங்கலாம். அந்த அப்துல் அஜீஸை, தமிழக ஐபிஎஸ் அதிகாரி, முகம்மது ஷகீல் அக்தரை வைத்து, கேடி சகோதரர்கள் தங்கள் பக்கமாக வளைக்கலாம்.

 

ஆனால், இந்தியாவுக்கு நம்பிக்கை அளித்துக் கொண்டிருக்கும் மூன்று தெய்வங்கள் மனமிறங்குமா என்பது சந்தேகமாகவே இருக்கிறது.    யார் அந்த மூன்று தெய்வங்கள் என்று   கேட்கிறீர்களா ?  2ஜி வழக்கில் இன்று வரை பல உண்மைகளை வெளிக் கொணர்வதில் முன்னணியில் இருக்கும் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே.கங்குலி மற்றும் சிங்வி தான் அந்த மூன்று தெய்வங்கள்.

 

இந்த விளக்கு பூஜை இந்த மூன்று தெய்வங்களின் மனதை இறங்கச் செய்யுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.  

 

karunanidhi-family-4-small

 

அதனால், கேடி சகோதரர்களின் கைதுக்காக அது வரை காத்திருங்கள்.

 

Comments  

 
+2 #25 SUTHIRAN 2011-10-25 10:39
அவாள் , இவாள் என்று எழுதி, இந்தக் கே டி பிரதர்ஸ்களின் தேசத் துரோக குற்றங்களை, ஜாதி சாயம் பூசி , குறைக்காதீர்கள் ! அந்தக் காலங்களில் பிராமணர்கள் நிறைய சுயலாபத்திற்காக தவறுகள் செய்திருக்கலாம் ! அதனால் இன்றைய கால கட்டங்களிலும் , பிராமணனாகப் பிறந்து விட்ட ஒரே காரணத்தினால், நல்ல ஒழுக்க சீலமான , படித்த , பண்புள்ள , ஜாதி வித்தியாசமே பாரட்டாத , முற்போக்கு சிந்தனையும், ஜாதி எதிர்ப்பு குணமுமுடைய , எண்ணற்ற பிராமணர்களையும் "அவாள். இவாள்" என்று கேலியாக எழுதுவது மிகவும் வருத்தத்திற்குர ியது !
Quote
 
 
0 #24 iromnathan 2011-10-20 16:45
Dear savuku

This websiet is doing super job

http://www.whispersintamilnadu.com/

follow this
Quote
 
 
+4 #23 வெளங்காதவன் 2011-10-19 17:07
ஹி ஹி ஹி!
ஓம் 2ஜி யெ ஸ்வாக!
ஓம் டெலிபோன் கனக்சனே ஸ்வாக!
#வெளங்கும் :-*
Quote
 
 
0 #22 வால்டர் வணங்காமுடி 2011-10-19 16:16
[ஃஉஒடெ நமெ="நல்லது"]தப்பாக எடுக்க வேண்டாம், அந்த புகைப்படத்தில் எல்லாம் “அவாள்” கூட்டமாக தெரியுது. ஆரிய எதிரி, அகாமார்க் திராவிடன் மற்றும் தமிழரான, கருணாந்தி குடும்பத்தில் என்ன அவாள் கூட்டமா. ஒருவேளை கருணாநதி குடும்பத்தார் எல்லாம் ‘அவாளுக்கு” மாறிவிட்டார்களோ .[/ஃஉஒடெ]


மாறானோட மாமனார் ஒரு 'அவாள்'. பேரு 'சந்து' ராம். அதாம்பா... 'இந்து'ராம்.
Quote
 
 
+1 #21 dsfadsa 2011-10-19 14:22
[ஃஉஒடெ நமெ="பொது ஜனம்"]முதல் முறையாக உமது கவுண்ட் டவுன் பொய்த்து விட்டது..

கவலைப் படாதீர், கூடிய சீக்கிரம் ”சாமி” தனது விளையாட்டை ஆரம்பிப்பார்..

செவி வழிச் செய்தி
ஹ்ட்ட்ப்://செவிவழிசெஇதி.ப்லொக்ச்பொட்.சொம்[/ஃஉஒடெ]
Ok... lets say ur story is true... always we are speaking we are veera thamilargal, tamilagam vetriyin vilai nilam.. but in history when tamilian won? Opposite of whom we won? never.. we dont have any strength ( in mind or body or unity) But still we are speaking veeram, vetri.. it's sad..
Quote
 
 
+7 #20 Force 2011-10-19 13:22
பெரியாரின் வ‌ழித் தோன்ற‌ல்க‌ளின் ம‌ஞ்ச‌ள் சால்வையும், ப‌ட்டு வேஷ்டி தெஞ்சை கோவிலும், த‌யாளுஅம்மாள் சாய்பாபா வீட்டு விஜ‌ய‌மும், அஞ்சாநெஞ்ச‌ருக் கு காப்பு க‌யிறும், கேடி ச‌கோத‌ர‌ர்க‌ளுக ்கு யாக‌முமாய் தொண்ட‌ர்க‌ள் ம‌ட்டும், பாவம் இன்னும் இந்த‌ க‌ட்சியை ந‌ம்பி க‌ரை வேட்டியைக் க‌ட்டிக்கிட்டு ஏமாந்த‌ சோனகிரிக‌ளாய்.
Quote
 
 
+2 #19 ks prabhu 2011-10-19 07:08
ஊழ் வினை உருத்து வந்து ஊட்டும் தலைவருக்கு தெரியதா யென்ன!!!
Quote
 
 
+3 #18 KKR 2011-10-18 22:49
சவுக்கு

துனிச்சல் எனும் வானில் நீ ஒரு துருவ நட்சத்திரம்
Quote
 
 
+25 #17 vivekk 2011-10-18 21:53
கே.டி பிரதர்சுக்கு "விளக்கு"மாறு பூஜை நடத்த எல்லா ஏற்பாடுகளும் தயாராகிவிட்டது.
Quote
 
 
+1 #16 கும்பிடறேன் சாமி 2011-10-18 20:45
[ஃஉஒடெ நமெ="நல்லது"]தப்பாக எடுக்க வேண்டாம், அந்த புகைப்படத்தில் எல்லாம் “அவாள்” கூட்டமாக தெரியுது. ஆரிய எதிரி, அகாமார்க் திராவிடன் மற்றும் தமிழரான, கருணாந்தி குடும்பத்தில் என்ன அவாள் கூட்டமா. ஒருவேளை கருணாநதி குடும்பத்தார் எல்லாம் ‘அவாளுக்கு” மாறிவிட்டார்களோ .[/ஃஉஒடெ]
ராஜராஜசோழன் தான் நடத்திய போர்களில் கொல்லப்பட்ட ஆன்மாக்களினால் தான் பாதிக்கப்படாமல் இருக்க தங்க பசு செய்து அதன் வயிற்றில் அமர்ந்து வெளி வந்து பிறகு தானம் செய்தானாம். அவன் அடக்கம் செய்யபட்டதாக கருதப்படும் சமாதியின் புகைபடம் இணையத்தில் தேடினால் கிடைக்கும். ஆண்டாண்ட அரசர்களுக்கு இயற்கை நீதி இவ்வாறு இருக்க எத்தனை அவாளுக்கு தானம் செய்தும் காலதேவதையிடம் தப்பிக்க முடியுமோ??...
Quote
 
 
+6 #15 gopi 2011-10-18 19:12
சாமி வருவார் சவுக்கடி கொடுப்பார் கேடிகளின் நாடிகள் எல்லாம் நாளங்கள்
ஆகும்:
வாழ்க பாரதம் & வளர்க தமிழகம்
Quote
 
 
0 #14 sirpi 2011-10-18 18:38
[ஃஉஒடெ நமெ="கும்பிட்றேன் சாமி"]வெட்கமாக இருக்கிறது....தெய்வம் உண்டு என்று இருந்திருந்தால் ....மாபாதகம் செய்ய மனது வந்திருக்குமா??.... இல்லை... தெய்வம் உண்டு என்று இருந்திருந்தால் இந்த பூசனையின் பலன் தெரிந்திருக்கும ே!!!!.. இரண்டுமே தெரியவில்லை... தெய்வமும் தெரிய வில்லை... முன் ஜென்ம வினை, இப்பிறவி வினை... கனைத்தும் அண்டி வரும் நேரம்...அனுபவித்து தீர வேண்டியது தான்... ஆனால் பெரியாரும் அண்ணாவும் எத்தனை முறை தான் புரண்டு படுப்பது... பேசாமல் எரித்திருக்க சொல்லி எழுதிவைத்திருக் கலாம்...[/ஃஉஒடெ]
[ஃஉஒடெ நமெ="கும்பிட்றேன் சாமி"]வெட்கமாக இருக்கிறது....தெய்வம் உண்டு என்று இருந்திருந்தால் ....மாபாதகம் செய்ய மனது வந்திருக்குமா??.... இல்லை... தெய்வம் உண்டு என்று இருந்திருந்தால் இந்த பூசனையின் பலன் தெரிந்திருக்கும ே!!!!.. இரண்டுமே தெரியவில்லை... தெய்வமும் தெரிய வில்லை... முன் ஜென்ம வினை, இப்பிறவி வினை... அனைத்தும் அண்டி வரும் நேரம்...அனுபவித்து தீர வேண்டியது தான்... ஆனால் பெரியாரும் அண்ணாவும் எத்தனை முறை தான் புரண்டு படுப்பது... பேசாமல் எரித்திருக்க சொல்லி எழுதிவைத்திருக் கலாம்...[/ஃஉஒடெ :ழ்ழ்ழ் அப்பாகன்னாட்டுத ெய்
Quote
 
 
+21 #13 நல்லது 2011-10-18 18:36
தப்பாக எடுக்க வேண்டாம், அந்த புகைப்படத்தில் எல்லாம் “அவாள்” கூட்டமாக தெரியுது. ஆரிய எதிரி, அகாமார்க் திராவிடன் மற்றும் தமிழரான, கருணாந்தி குடும்பத்தில் என்ன அவாள் கூட்டமா. ஒருவேளை கருணாநதி குடும்பத்தார் எல்லாம் ‘அவாளுக்கு” மாறிவிட்டார்களோ .
Quote
 
 
+4 #12 an 2011-10-18 17:55
ஸ்ரீஸ்ரீஸ்ரீ துக்ளக் தாண்டவராய ஸ்வாமிகள் அருளிய மனமோகன துஷ்ட கவசம்
Quote
 
 
+7 #11 Arun Chennai 2011-10-18 16:41
// அந்த அப்துல் அஜீஸை, தமிழக ஐபிஎஸ் அதிகாரி, முகம்மது ஷகீல் அக்தரை வைத்து, கேடி சகோதரர்கள் தங்கள் பக்கமாக வளைக்கலாம்.//

இது புதுசா இருக்கே? உன்ன்மயா ?
Quote
 
 
+1 #10 SS 2011-10-18 12:42
அய்யா எங்கிருந்து புகைப்படங்கள் கிடைத்தன ? உண்மையில் சூப்பர் !
கலக்குஙகள் !!
Quote
 
 
+1 #9 unmai kasakkum 2011-10-18 12:33
அமாம் அய்யா.. திருவிளக்கு பூஜை என்பது இருள் அகற்றி ஒளி கிடைக்க மன ரீதியாகவும், ஆன்மீக ரீதியில் எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சும் வகையில் ஒளியிடம் ஒளி வேண்டுவதாக நம்பிக்கை.. இந்த கே டி சகோதரர்களுக்கு இன்னும் என்ன ஒளி வேண்டும்? அதை இறைவன் போதும் போதும் என்ற அளவுக்கு கொடுத்துவிட்டான ், இல்லை அவர்களாகவே உலகத்தில் கிடைத்த ஒளி ஆற்றலை எடுத்துகொன்டனர் (ஸ்பெக்ட்ரம் உட்பட).. இன்னும் அவர்களுக்கு மட்டும் அல்ல.. இந்திய அரசியல்வாதிகளுக ்கு எல்லாம் தேவை தெய்வம் நின்று கொல்லும் என்பதை அறியாத அறியாமை இருள் அகற்றி அறிவொளி படர இந்த திருவிளக்கு பூஜை பயன்படட்டும்.. அப்படி எல்லருக்கும் அறிவொளி சுடர் பரவ வேண்டி சவுக்கு ஒரு விளக்கு பூஜை எற்பாடு செய்யலாம்... செய்யுமா??
Quote
 
 
0 #8 Rakesh Patel 2011-10-18 10:38
The arrest of Dayanidhi and Kalanidhi Marans will reveal the basic unity of North and South India.
There is basic undercurrent of "INDIAN IDENTITY" based on Hinduism- but not the "HINDU CHURCH" of "VHP"(vishwa hindu parishad), wgich will breal India like "UNOCOL" in Afghanistan.
If they were not arrested India is in the hand of some "UNOCOL & Dick Chenny".
This money was invested in Srilankan problem and they have taken good profit by arms and medicine sales, and thrown away the people in scrap like Taliban and Mullah mohammen Omar.That fellow Prabakaran must kill his own family because of this "BILLIONs $ TRAP"!.
Quote
 
 
+7 #7 கும்பிட்றேன் சாமி 2011-10-18 09:37
வெட்கமாக இருக்கிறது....தெய்வம் உண்டு என்று இருந்திருந்தால் ....மாபாதகம் செய்ய மனது வந்திருக்குமா??.... இல்லை... தெய்வம் உண்டு என்று இருந்திருந்தால் இந்த பூசனையின் பலன் தெரிந்திருக்கும ே!!!!.. இரண்டுமே தெரியவில்லை... தெய்வமும் தெரிய வில்லை... முன் ஜென்ம வினை, இப்பிறவி வினை... அனைத்தும் அண்டி வரும் நேரம்...அனுபவித்து தீர வேண்டியது தான்... ஆனால் பெரியாரும் அண்ணாவும் எத்தனை முறை தான் புரண்டு படுப்பது... பேசாமல் எரித்திருக்க சொல்லி எழுதிவைத்திருக் கலாம்...
Quote
 
 
+20 #6 ஊர்க்குருவி. 2011-10-18 08:45
காக்கைக்குக் தன் குஞ்சு பொன் குஞ்சு............

கணவர் வழி மைத்துனர்மாரில் இருக்கும் ஆதங்கம் அக்கறை , தங்கை கனிமொழி மீது இந்தம்மா செல்வி அவங்களுக்கு இருந்ததாக தெரியல்ல,

முப்பது கோடி தேவர்களில் எத்தனை கோடி தேவர்களின் ஆதரவு கேடி, பிரதர்ஸ்க்கு இருக்குன்னு தெரியல்ல, நிறய தேவர்களுக்கு வயதாகி மூப்பெய்துவிடதக வும், எனது தாத்தா சமீபத்தில் எனக்கு எஸ் எம் எஸ் அனுப்பியிருந்தா ர்.

அத்துடன் நிறய தேவர்கள் கேடி பிரதர்ஸின்மீது காட்டமாக இருப்பதாகவும் குறிப்பிட்டார். விகிதாசரப்படி பூலோகத்தில் இருக்கும் நூற்று இருபது கோடி மக்களோட வயிற்றெரிச்சலை தேவர்கள் புறந்தள்ளவும் தயாரன மனநிலையில் அவர்கள் இல்லை என்றும் தாத்தா சுட்டிக்காட்டின ார், அவரோட வாக்குமூலத்தை "வாசகர் படைப்புகள்" பகுதியில் பதிவு செய்ய தயாரித்துக்கொண் டிருக்கிறேன். எனவே விளக்கு பூசை கேடிகளுக்கு சில நாட்களை காலங்கடத்த உதவுமே தவிர,, மக்களின் வயிற்றெரிச்சலுட ன் போட்டி போட்டு வெல்லும் என நம்ப முடியாது,
Quote
 
 
+2 #5 விகடகவி 2011-10-18 06:40
சூப்பர் சவுக்கு!
Quote
 
 
+40 #4 USV 2011-10-18 02:11
இந்த பூஜைக்காவது இவனுங்க செலவு பண்ணிணானுங்களா இல்லை இதுக்கும் நம்ம கிட்ட தான் ஆட்டைய பொட்டானுங்களா? அப்படியே அண்ணன் அஞ்சா ..சனுக்கும் எதாவது தாயத்து கட்ட வேண்டியது தான்.
Quote
 
 
0 #3 பொது ஜனம் 2011-10-18 00:21
முதல் முறையாக உமது கவுண்ட் டவுன் பொய்த்து விட்டது..

கவலைப் படாதீர், கூடிய சீக்கிரம் ”சாமி” தனது விளையாட்டை ஆரம்பிப்பார்..

செவி வழிச் செய்தி
http://sevivazhicheithi.blogspot.com
Quote
 
 
+7 #2 k krishnan 2011-10-17 22:36
தெய்வம் எப்போதும் அன்யாயதுக்கு துனை போகாது.
Quote
 
 
+11 #1 shiva Kovai 2011-10-17 22:25
KD brothers up till now managing to escape from arrest.Even savukku failed twice putting count down.
Hence hereinafter we can call KD brothers as "Emuton" KD brothers. sariyanna emutanaukappaaa !
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 164 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday2058
mod_vvisit_counterYesterday13577
mod_vvisit_counterThis week59635
mod_vvisit_counterLast week95167
mod_vvisit_counterThis month281895
mod_vvisit_counterLast month382199
mod_vvisit_counterAll days13198262