முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
இயக்கவியல் விதியை மீறிய ஜெயலலிதா. அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 28
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
புதன்கிழமை, 09 நவம்பர் 2011 13:05

மாற்றத்தைத் தவிர மாறாதது எதுவுமில்லை என்பது இயக்கவியல் விதி.  ஆனால், அந்த விதியை மாற்றுவேனே ஒழிய, நான் மாற மாட்டேன் என்பதை ஜெயலலிதா மீண்டும் நிரூபித்து உள்ளார்.

 J-Jayalalitha

நேற்று தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் பணியாற்றி வந்த 12 ஆயிரம் மக்கள் நலப் பணியாளர்கள், ஒரே அரசாணையில் வீட்டுக்கு அனுப்பப் பட்டுள்ளனர்.

 

இந்த மக்கள் நலப் பணியாளர்கள் முதன் முறையாக 1990ம் ஆண்டில் திமுக அரசால் நியமிக்கப் பட்டனர்.  ஊரக வளர்ச்சித் துறையின் கீழ், பணியாற்றும் இந்த அரசு ஊழியர்கள், மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து செயல்படுத்தக் கூடிய வேலை வாய்ப்புத் திட்டங்கள், மற்ற மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்துவதில் அரசு அதிகாரிகளுக்கு உதவியாக செயல்படும் வேலைகளைச் செய்து கொண்டிருந்தனர். 1990ல் இவர்களுக்கு மாதந்தோறும் 200 ரூபாய் ஊதியமாக கொடுக்கப் பட்டு வந்தது.

 

1991ல் அதிமுக ஆட்சி வந்ததும், கருணாநிதியால் வேலை கொடுக்கப் பட்டவர்களை எப்படி வேலையில் வைக்கலாம் என்று அத்தனை பேரையும் பணி நீக்கம் செய்தார் ஜெயலலிதா.   1996ல் திமுக ஆட்சி வந்ததும், வேலையிழந்த அத்தனை பேருக்கும் மீண்டும் வேலை கொடுக்கப் பட்டது.   2001ல் அதிமுக ஆட்சி வந்தது.  விடுவாரா ஜெயலலிதா…. ?  மீண்டும் அத்தனை பேரும் நீக்கப் பட்டனர்.

 

2006ல் கருணாநிதி மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் மீண்டும் மக்கள் நலப் பணியாளர்கள் அமர்த்தப் பட்டனர்.  அவ்வாறு அமர்த்தப் பட்டவர்களைத் தான் ஜெயலலிதா தற்போது பணி நீக்கம் செய்திருக்கிறார்.  தற்போது பணி நீக்கம் செய்யப் பட்ட மக்கள் நலப் பணியாளர்களுக்கு மாதந்தோறும் 2500 ரூபாய் ஊதியமாக கொடுக்கப் பட்டு வருகிறது.

 

மத்திய அரசின் திட்டங்களான தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டம் போன்ற திட்டங்களை செயல்படுத்துவதில் களப்பணியாளர்களாக இவர்கள் பணியாற்றி வந்தனர்.  தற்போது 12 ஆயிரம் பேர் ஒட்டு மொத்தமாக வீட்டுக்கு அனுப்பப் பட்டுள்ளனர்.

 IN21_JAYA_1296f

‘எளிதல்ல’ என்ற பதிவுக்கு பின்னூட்டமாக மின்னஞ்சலில் சவுக்கு வாசகர், அருள் விக்டர் சுரேஷ் என்பவர் “திமுக அரசின் இறுதி நாட்களில், அதிமுக அரசு அமையும் பட்சத்தில் தமிழக நிர்வாகம் பெரிய அளவில் மாற்றம் பெறும் போன்ற ஒரு பிம்பத்தை உருவாக்கினீர்கள். நீங்களே உண்மையில் அப்படி நம்பினீர்கள் என்றே நினைக்கிறேன். இல்லாவிட்டால், புதிய அரசிற்கு ஆலோசனைகள் வழங்குங்கள் என்றெல்லாம் முயற்சிகள் எடுத்திருக்க மாட்டீர்கள்.

 

2006 - 2011 திமுக அரசின் மேலுள்ள கடுமையான விமரிசனங்களுக்கு அப்பாற்பட்டு நோக்கும் போது, சுதந்தரமான கருத்துக்களை முடக்குவதில் அதிமுக, திமுகவை விட ஆயிரம் மடங்கு மோசமானது என்பது வரலாறு. எனவே, தங்களது தற்போதைய நிலைமை எனக்கு எந்தவித ஆச்சரியத்தையும் அளிக்கவில்லை. ஏன் இதை நீங்கள் முன்னமே எதிர்பார்க்கவில்லை என்ற வியப்பைத்தான் அளிக்கிறது.” என்று எழுதியிருந்தார்.

 

தற்போது மிக முக்கியமான நபராக இருக்கும் ஒரு மூத்த பத்திரிக்கையாளர் 1993ம் ஆண்டில் எழுதிய கட்டுரையில், கருணாநிதியையும், ஜெயலலிதாவையும் ஒப்பிட்டு சொல்லுகையில் “கருணாநிதியைப் பார்க்கும் போதெல்லாம் புடவை கட்டிய ஜெயலலிதாவாகவும், ஜெயலலிதாவைப் பார்க்கும் போதெல்லாம் வேட்டி கட்டிய கருணாநிதியுமாகவே எனக்குத் தெரிகிறது” என்று எழுதியிருந்தார்.

 

ஜெயலலிதாவும், கருணாநிதியும் மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதில் சற்றும் சளைத்தவர்கள் இல்லை என்பது ஊரறிந்த விஷயம்.   நயமான வார்த்தைகளைப் பேசி, இனிப்பு தடவி விஷத்தை ஊட்டும் கலையில் கருணாநிதி வல்லவர்.  ஜெயலலிதாவுக்கு அந்தக் கலை தெரியாது.   தடாலடியாக நடவடிக்கைகளை எடுத்து, மக்களின் எதிர்ப்பை நேரடியாக சந்தித்துக் கொள்பவர் ஜெயலலிதா.   அதே நடவடிக்கைகளை நாசூக்காக எடுத்து, வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல செய்பவர் கருணாநிதி.

 

அருள் விக்டர் சுரேஷ் சொல்லியது போல, ஜெயலலிதாவுக்கு கருணாநிதி பரவாயில்லை என்பதையே ஏற்றுக் கொள்ளள முடியாது.   பின் ஏன் 2011 தேர்தலில் வெளிப்படையாக அதிமுகவை ஆதரிக்க வேண்டும் ?

 

அப்போது இருந்த திமுக ஆட்சியை அகற்றுவதற்கு அதிமுகவை ஆதரிப்பதை விட வேறு ஏதாவது வழி இருந்ததா ?  இன்று ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால், வீரபாண்டி ஆறுமுகம், கேபிபி சாமி, கே.என்.நேரு, பொன்முடி, சக்சேனா என்று ஊரை அடித்து உலையில் போட்ட மக்கள் விரோதிகள் சிறிது காலமாவது சிறையில் இருக்கிறார்கள்.  ஒரு வேளை திமுக ஆட்சி தொடர்ந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதை நினைத்துப் பாருங்கள் ?   குறைந்த பட்சம் கனிமொழி கூட சிறை சென்றிருக்க மாட்டார்.   இவர்களின் அடாவடிகள் இன்று வரை தொடர்ந்திருக்கும்.   சிறிது காலமாவது சிறையில் இருந்தால் தான் இவர்களுக்கு சாமான்ய மக்களின் வலி என்ன என்பது புரியும்.  மேலும் சம்பாதித்து வைத்திருக்கும் சொத்தில், கொஞ்சமாவது கோர்ட்டு கேஸ் என்று செலவு செய்வார்கள்.

 

திமுக ஆட்சி தொடர்ந்திருந்தால், நீங்களும் நானும் சாலையில் நடமாடக் கூட முடிந்திருக்காது என்பதே உண்மை.   இந்த ஒரே காரணத்துக்காகத் தான் அதிமுக ஆட்சி வர வேண்டும் என சவுக்கு மட்டுமல்ல, ஒட்டு மொத்த தமிழகமும் விரும்பியது.

 

அதற்காக ஜெயலலிதா மிகச் சிறந்த ஆட்சியைத் தரப்போகிறார் என்று நம்பியதாக கருதக் கூடாது.  மிகச் சிறந்த ஆட்சியைத் தர வேண்டும் என்ற ஆதங்கமே…   இரண்டு முறை மிக மோசமான தேர்தல் தோல்விகளைச் சந்தித்த ஜெயலலிதா பாடம் கற்றுக் கொள்வார், ஓரளவாவது திருந்துவார் என்று எதிர்ப்பார்த்தது தவறா ?

இவர் திருந்தவில்லை, மனம் வருந்தவில்லை என்பதை அவரது தொடர்ச்சியான நடவடிக்கைகள் காட்டுகின்றன.

 

சமச்சீர் கல்வி என்ற திட்டத்தை ரத்து செய்ததற்கு ஒரே காரணம் அது கருணாநிதியால் கொண்டு வரப் பட்டது என்பதைத் தவிர வேறு காரணம் இருக்க முடியாது.   உயர்நீதிமன்றம் ஒரு தெளிவான தீர்ப்பை வழங்கி, மாணவர்களின் வாழ்க்கையில் அரசியலைப் புகுத்தாதீர்கள் என்று உத்தரவிட்ட பின்னரும், ஏறக்குறைய இரண்டு மாத காலத்திற்கு பிள்ளைகள் பாடப்புத்தகங்களே இல்லாமல் விளையாடிக் கொண்டிருந்ததை வேடிக்கை பார்த்தார் ஜெயலலிதா.  இதற்கு ஒரு கமிட்டியைப் போட்டு, ஜெயலலிதாவுக்கு ஜால்ரா அடிப்பவர்களாகப் பார்த்து அந்த கமிட்டியின் உறுப்பினர்களாகப் போட்டு, அவர்களை வைத்து, சமச்சீர் கல்வி, மனித குலத்திற்கே விரோதமான ஒரு திட்டம் என்று அறிக்கை அளிக்க வைத்தார்.

 

அழகான ஒரு நூலகக் கட்டிடத்தை குழந்தைகள் மருத்துவமனையாக மாற்றுகிறேன் என்று, பெரும்பாலான மக்கள் விரோதத்தைச் சந்தித்திருக்கிறார் ஜெயலலிதா.   அவரின் பிடிவாதமான மக்கள் விரோத நடவடிக்கைகளின் தொடர்ச்சியாகவே இன்று 12 ஆயிரம் மக்கள் நலப் பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பியிருக்கிறார்.

 

அரசு ஊழியர்களோடு, 18 ஆண்டு காலம் பழகியதால், அவர்களின் மனநிலை சவுக்குக்கு அத்துப் படி.  அரசு ஊழியனுக்கு, வேலைதான் உலகம், உயிர், எல்லாமும்.   சாதாரணமாக ப்யூன் வேலைப் பார்ப்பவன் கூட, ‘கவர்மென்ட் வேலை’ என்று பெருமையாக கூறிக்கொள்வான். அந்த அரசு வேலைக்கு ஏதாவது ஒரு சிறு ஆபத்து என்றால் கூட அரசு ஊழியர்களுக்கு உயிரே போய் விடும்.   ஒரு சாதாரண மெமோ கொடுத்தற்கே ராத்திரி பகலாக தூங்காமல், அதிகாரிகள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்பார்கள்.

 

அரசு ஊழியர்கள் அனைவருமே கடுமையான உழைப்பாளிகள், நேர்மையானவர்கள் என்று சொல்லவில்லை.  80 சதவிகித அரசு ஊழியர்கள் நிச்சயமாக கடினமாக வேலை செய்யக் கூடியவர்கள் தான்.  மீதம் உள்ள 20  சதவிகிதத்தினர் எங்கே லஞ்சம் கிடைக்கும் என்று, அரசுப் பணியை லஞ்சத்துக்காகவே பயன்படுத்துபவர்கள்.   இப்படி அரசுப் பணியை உயிராக நினைக்கும் அரசு ஊழியர்களில் ஒன்றரை லட்சம் பேரை ஒரே நாளில் வீட்டுக்கு அனுப்பினார் ஜெயலலிதா.   அரசு ஊழியர் என்றால் அவர்களின் பின்னால் ஒரு குடும்பம் உண்டு என்பதை ஜெயலலிதா அன்றும் நினைத்துப் பார்க்கவில்லை. ஒன்றரை லட்சம் பேரை பணி நீக்கம் செய்தது மட்டுமல்லாமல், அவர்கள் குடியிருந்த அரசுக் குடியிருப்பிலிருந்து அவர்களை இரவோடு இரவாக காலி செய்ய வேண்டும் என்று நெருக்கடி கொடுத்தது ஜெயலலிதா அரசு.   ஆயிரக்கணக்கானோர் ரவுடிகளையும் திருடர்களையும் போல, இரவோடு இரவாக வேட்டையாடி கைது செய்யப் பட்டனர். இதற்கு காரணம் அவர்கள் ஒன்றும் பெரிய தேசத் துரோகத்தை செய்து விடவில்லை.  ஆண்டாண்டு காலமாக அவர்களுக்கு வழங்கப் பட்டு வந்த, பஞ்சப்படி, விடுப்பு காலச் சலுகை, பண்டிகை முன்பணம், சரண் விடுப்பு போன்ற சலுகைகளை நிறுத்தியதற்காக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டார்கள்.

 

அந்தச் சலுகைகளை நிறுத்தி விட்டு அரசு ஊழியர்களை சவுக்கால் அடித்து வேலை வாங்குகிறேன் என்றார் ஜெயலலிதா.  94 சதவிகித அரசு வருவாயை 2 சதவிகிதம் இருக்கும் அரசு ஊழியர்கள் பறித்துக் கொள்கிறார்கள் என்றார்.  2004 பாராளுமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்த ஜெயலலிதா, அதே 2 சதவிகித அரசு ஊழியர்களுக்கு அந்தச் சலுகைகளை மீண்டும் வழங்கினார். அரசு ஊழியர்கள் சரியாக பணியைச் செய்யவில்லை, அவர்களை சவுக்கால் அடித்து வேலை வாங்குகிறேன் என்று சொன்ன ஜெயலலிதா, முதலமைச்சராக கோப்புகளைப் பார்க்கும் தனது பணியை எப்படிச் செய்தார் என்பதை 2006ல் முதலமைச்சராக வந்த கருணாநிதி வருடக் கணக்கில் ஜெயலலிதா கோப்புகளை எப்படி கட்டி வைத்திருந்தார் என்பதை பட்டியலிட்டார்.

 

அந்தத் தேர்தலில் கிடைத்த படிப்பினைகள், ஜெயலலிதாவை பக்குவப் படுத்தியிருக்க வேண்டும். திருத்தியிருக்க வேண்டும்.  ஆனால் அந்தத் தோல்விகளும், அதற்குப் பிறகு கிடைத்த தோல்விகளும் கொடுத்த பாடத்தை விட, 2011 தேர்தலில் கிடைத்த வெற்றி ஜெயலலிதாவுக்கு அகந்தையை ஏற்படுத்தியதாகவே தெரிகிறது.

 

12 ஆயிரம் ஊழியர்களுக்கு மாதந்தோறும் தலா 2500 ரூபாய் கொடுக்கப் படுவது என்பது ஒன்றும் அரசுக்கு பெரிய செலவினம் இல்லை.  அவர்கள் சரியாக பணியாற்றவில்லை என்பது ஜெயலலிதாவுக்கு பெரிய குறையாக இருக்குமேயானால், அவர்களிடம் சரி வர வேலை வாங்காத அதிகாரிகள் மீதல்லவா ஜெயலலிதா நடவடிக்கை எடுக்க வேண்டும் ?

 

ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமீபத்திய சட்டசபை கூட்டத் தொடரில் எதிர்க்கட்சி உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஜெயலலிதா, ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பது ஒன்றும் எளிதான காரியம் இல்லை.  அவர்களோடு இருக்கும் மற்ற அதிகாரிகள் அதை அனுமதிக்க மாட்டார்கள் என்றார்.

 
jaya3434

இன்று ஆயிரக்கணக்கில் நில அபகரிப்புப் புகார்கள் வந்துள்ளன.  அவற்றின் மீது எனது அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று பெருமையாக கூறிக் கொள்ளும் ஜெயலலிதா, இந்தப் புகார்கள் திமுக ஆட்சிக் காலத்தில் கொடுக்கப் பட்ட போது, அவற்றின் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுத்துள்ளார் ?   பத்திரப் பதிவுத் துறை மற்றும் காவல்துறையினர் உதவி இல்லாமல் இத்தனை நில அபகரிப்புகள் நடந்திருக்க வாய்ப்பு உள்ளதா ?

 

தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க துணிச்சல் இல்லாத ஜெயலலிதா, 13 ஆயிரம் மக்கள் நலப் பணியாளர்களை ஒரே நாளில் வீட்டுக்கு அனுப்பி உத்தரவிட்டது, அவர்கள் கிள்ளுக் கீரைகள் என்ற நினைப்புதானே ?

 

அல்லல் பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் எத்தனை பெரிய செல்வத்தையும் தேய்க்கும் படை.

 

 

செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க

செய்யாமை யானுங் கெடும்.

 

செய்யக்கூடாதவற்றைச் செய்தாலும் செய்ய வேண்டியவற்றைச் செய்யாமல் விட்டாலும் அழிவு வரும் என்கிறார் அய்யன் வள்ளுவர்.  உங்களுக்கு தமிழ் பிடிக்காது.   அதனால் உங்களுக்காக ஆங்கிலத்திலும் இந்தக் குறள் வழங்கப் படுகிறது.

 

'Tis ruin if man do an unbefitting thing; 
Fit things to leave undone will equal ruin bring.

 

He will perish who does not what is not fit to do; and he also will perish who does not do what it is fit to do.

 

செய்யக் கூடாதவற்றைச் செய்தால் வரும் கேடு, எந்த வடிவிலும் வரும்.  பெங்களுரு நீதிமன்ற வடிவத்திலும் வரும்.

 

Comments  

 
0 #75 rajesh_v07 2011-11-19 12:20
அம்மா
இந்த சினிமாவிர்க்கு வரி விலகை ரத்து பன்னுனா அரசுக்கு இன்னும் வருமானம் வருமே.....
8) 8)
Quote
 
 
+4 #74 PETHURAJ 2011-11-17 13:20
திரு சவுக்கு அவர்களே!
நான் உங்கள் நலம் விரும்பி! ஒரு "மிடில் கிளாஸ் " நண்பன்!

இந்த விஷயத்தில் ஜெ. செய்தது மிகச் சரி!
எங்கள் கிராமத்தில் "இவர்கள்" வேலை செய்து கிழித்ததை நான் பார்த்து இருக்கிறேன்! தண்ட செலவு மிச்சம்!

"உழைத்து" சாப்பிட சொல்லுங்கள்!உடம ்பில் ஒட்டும்!

மேலும், அரசு ஊழியர்களில் "நல்லவர்:லஞ்சபேய ்கள்", "20 :80 " என்பதே என் தாழ்மையான கருத்து!
நன்றி!
Quote
 
 
+2 #73 Sananmukiu 2011-11-14 22:15
dei savukku nee parayana?
Quote
 
 
-1 #72 danguvaaru andhurum 2011-11-14 16:59
Quoting che:
சரி.இந்த ஆட்சிகாலத்தில் ஜெயா ஆட்டம்போடுவார்..இதனால் அவர் குறைந்தபட்சம் வருந்த என்ற்ய் சொல்லி அடுத்த தேர்தலில் கருணாவைஆதரிப்பீ ர்கள்.. இதற்கு முடிவு என்ன???


முடிவை நீங்களே சொல்லுங்களேன்.... மதிமுக இல்லையா?

வைகோ இல்லையா??
Quote
 
 
0 #71 Kandhasamy 2011-11-14 03:22
இரன்டு லகரம் வாஙிகிட்டு வேலை பொட்டு கொடுதுல்லரல், திமுக கட்ஷி கார்கல், ஈந்த ணடவடிக்கை ஸரியனதெய்
Quote
 
 
+4 #70 ravan 2011-11-12 11:13
how many of your THONDAR Bought this profile??? how much they paid..explain here..Quoting புதியவன் ராஜ்:
மக்கள் நலப்பணியாளர்கள் பணி நீக்கத்திற்கு சென்னை உயர் நீதிமன்றன் இடைக்கால தடை விதித்துள்ளது என்ற நல்ல செய்தி வந்துள்ளது. நம் சகோதரர்களும் சகோதரிகளும் வேலை இழக்காமல் இருக்க நீதிமன்றம் காப்பாற்றும் என்று நம்பிக்கை துளிர்த்துள்ளது .
Quote
 
 
0 #69 sarika 2011-11-11 19:57
சவுக்கு முதலில் இதை எடுத்து விடு அம்மாவை குரை சொல்லதெய்
Quote
 
 
-12 #68 புதியவன் ராஜ் 2011-11-11 15:57
மக்கள் நலப்பணியாளர்கள் பணி நீக்கத்திற்கு சென்னை உயர் நீதிமன்றன் இடைக்கால தடை விதித்துள்ளது என்ற நல்ல செய்தி வந்துள்ளது. நம் சகோதரர்களும் சகோதரிகளும் வேலை இழக்காமல் இருக்க நீதிமன்றம் காப்பாற்றும் என்று நம்பிக்கை துளிர்த்துள்ளது .
Quote
 
 
+5 #67 S.K 2011-11-11 13:21
do your duty and never expect the profit/result, this is what Geethai says, but as for as i know about this employers .. never gone to work, nor sent govt msg to people. have anyone seen any of these guys telling "drinking is bad for health?" "smoking is injurious to health?" to anyone. never. savukku, i am not agreed with you man on this. all you remembered she disposed 1 lakh employees for striking due to bonus and all. but coz of them? public suffered transport. have anyone talked about it? i was suffered to go paris to saidapet. came to Shanti by bus(hung on foot board by my single foot finger and lost one slipper) and walked towards saidapet. if you seen LIC stop, there were 1000s of people waiting for bus. now tell me its who's mistake? govt? or employees? govt employee who is not worth for public should be shown doors, she did it. why they are not talking about it? its just for me.. guess what if people want to go tambaram from paris? never justify her actions against govt employees. she's not like karuna who had useless arcot verasamy for 5 years who did nothing to electricity.
Quote
 
 
+13 #66 S.K 2011-11-11 12:59
Quoting Middle Class Madhava:
திரு சவுக்கு அவர்களே!
நான் உங்கள் நலம் விரும்பி! ஒரு "மிடில் கிளாஸ் " நண்பன்!

இந்த விஷயத்தில் ஜெ. செய்தது மிகச் சரி!
எங்கள் கிராமத்தில் "இவர்கள்" வேலை செய்து கிழித்ததை நான் பார்த்து இருக்கிறேன்! தண்ட செலவு மிச்சம்!

"உழைத்து" சாப்பிட சொல்லுங்கள்!உடம ்பில் ஒட்டும்!

மேலும், அரசு ஊழியர்களில் "நல்லவர்:லஞ்சபேய ்கள்", "20 :80 " என்பதே என் தாழ்மையான கருத்து!
நன்றி!


Agreed!!!!! 100% truth.
Quote
 
 
+2 #65 nsharma 2011-11-11 11:43
சட்டம் தோற்கும் பார்ப்பனியம் வெல்லும்..."

What the hell பார்ப்பனியம் has got to with this current issue? That old man from DMK has constantly used this caste issue and has made the people of TN absolute fools. Even educated people like you still keep using this as a weapon to hurt a section of the population. Can't you write any thing with out bringing caste into that? Why cannot the real subject be discussed in a decent manner with out resorting to cheap politics? You are a disgusting fellow!
Quote
 
 
0 #64 Shiv 2011-11-11 11:37
Quoting puli:
இதை முதலில் கண்டுபிடித்து சொன்னது மதிமுக தான். // காலம் தந்த படிப்பினை ஜெயலலிதாவை மாற்றி இருக்கும் என்று எண்ணினோம், அவர் திருந்த மாட்டார் // என்று அறிக்கை கொடுத்து விட்டு விலகிக் கொண்டனர். அவர்களுக்கும், ஏன் சவுக்குக்கும் இது நல்லா வேணும் ... இரண்டு கட்சிகளை விட்டால் வேறு வழியே இல்லை என்று சொல்லிக்கொண்டு, மாறி மாறி இவர்களை ஆதரிக்கும் மக்களுக்கு இவர்கள் வேறு என்ன செய்வார்கள் ? இனிமேலாவதுமதிமு கஆதரியுங்கள்.
Quote


இப்போது நமது ஒரே நன்பிக்கை அண்ணா ஹசாரே தான். காலம் பதில் சொல்லும்.

Regards
www.iAvadana.com
Quote
 
 
+6 #63 Sureshss 2011-11-11 10:49
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=346938 - ஏன்யா சவுக்கு - இந்த அணு உலை எதிர்ப்பு தீவிரவாத கூட்டத்திற்கு உன் பதில் என்ன. உனக்குத்தான் எல்லா விசயமும் தெரியுமே. எந்த கிறிஸ்டீன் மிசினரி அல்லது அமெரிக்க கூட்டம் மற்றும் கடத்தல் கும்பல் உள்ளது இதன் பின்னணியில்.
Quote
 
 
-3 #62 madhu 2011-11-11 10:23
இவர்கலுக்கு மாட்ராக ஏன் வைகோ அல்லது விஜகாந்த ஐ ஏர்க்க கூடாது
Quote
 
 
+3 #61 vennai 2011-11-11 08:47
I fully agree ...Quoting பெருசு:
தம்பி சவுக்கு, நா மறுபடியும் சொல்றேன்..இந்த "எழுத்தாளர்" (அடேங்கப்பா!) முகமூடிய ஒரு ஓரமா கழட்டி எறிஞ்சுட்டு நல்லா கைய கால கழுவிட்டு உன் பழய போலிஸ் வேலைல திருப்பி சேர முடியுமானு பாரு....உன் கருத்துக்கள (?!!) விட மஞ்சத்துண்டாரோட ஒண்ணத்துக்கும் ஒதவாத எதுக மோன அறிக்கையே தேவல.
Quote
 
 
+8 #60 raasaa 2011-11-10 22:38
ஜெ செய்தது சரியான செயல்தான். வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் மட்டுமே பணியாளர்கள் தேர்வு செய்யப்படவேண்டு ம்.ஆனால் எங்கள் ஊர் மக்கள் நலப்பணியாளர் ஏ.வ.வேலுவிடம் 1.5 லகரம் கொடுத்து பணியில் சேர்ந்தார். இப்போ முழிக்கிறார்.13000 ஐ 150000 ஆல் பெருக்கி பாருங்கள் 195 கோடி வரும்.
Quote
 
 
-4 #59 http://koothadivedda 2011-11-10 21:43
நான் கேள்விப்பட்டவரை ஜெயலலிதா முற்றுமுழுதாக நம்புவது சோதிடர்களை.

சோதிட சாஸ்த்திரங்கள் எதை சொல்லுகின்றனவோ அதை பின்பற்றியே ஜெயலலிதா அவர்களின் நடவடிக்கைகள் அமைகின்றன. நீதிமன்றங்களுக் கு சமூகமளிப்பது விலத்தி வைப்பது எல்லாமே சோதிடர்களின் முடிவை பின்பற்றியே நடக்கின்றன.

ஆறு மணிநேரங்கள் அசையாமல் யாக புகை மூட்டத்துள் உட்கார்ந்து தவம் செய்த நிகழ்வுகளும் சமீபத்தில் நடந்திருக்கின்ற ன.

மக்களை நம்புவதைவிட அவர் சோதிட முடிவுகளையே உறுதியாக நம்புகிறார். ஜெயலலிதா செய்து வரும் ஒவ்வொரு கருமங்களையும் கூர்ந்து கவனித்தால் இந்த இரகசியம் நன்கு புலப்படும்.

சோதிட சாஸ்த்திரத்தின் விதிப்பயன்படி, தனது ஆட்சி அதிகாரத்திற்கு குறிப்பிட்ட காலம்வரை பங்கமில்லை என்று தெரிந்துகொண்டு தனது விரோதியான கருணாநிதியை கருவறுக்கிறேன் என்று மக்கள் விரோதத்தை சம்பாதித்துக்கொ ண்டிருக்கிறார்.

மக்களின் வயிற்றெரிச்சல் கிரகங்களின் பார்வைகளையே கட்டுப்படுத்தக் கூடியது. என்ற சோதிட உண்மையை அம்மா விரைவில் அறிந்துகொள்ளுவா ர்.

இச்செய்தியை நண்பர்கள் பலர் நகைச்சுவையாக எடுத்துக்கொண்டா லும் பரவாயில்லை. யதார்த்தம் அப்பட்டித்தான் இருக்கிறது.
Quote
 
 
+9 #58 sekar sekaran 2011-11-10 19:51
மக்கள் நலப்பணியாளர்கள் என்பதே திமுகவினரால் அவர்களது அல்லகைகளுக்காக உருவாக்கப்பட்ட ஒன்றே..! இவர்கள் ஒன்றும் அரசு ஊழியர்கள் அல்ல. திமுக எதை செய்தாலுமே அதிலே "கப்பம்" வசூலிக்காமல் விட்டுவிட மாட்டார்கள். அதற்க்கு இந்த அரசாங்கத்தில் இடம் இல்லை. வாங்கப்பட்ட கப்பத்திற்கு இவர்கள் வேண்டுமானால் பணிந்துதான் போகவேண்டும். நீலிக்கண்ணீர் வடிக்கின்றார். ஏன் இவரிடம் இல்லாத பணமா? ஸ்பெக்ட்ரம் பணத்திலிருந்து ஒரு துளியை எடுத்து கொடுத்தாலே போதுமே...அவர்கள் எங்குமே போகவேண்டாம்..கோபாலபுரம் நோக்கி சென்றார்லே போதும்..அள்ளிவழங்கும் கர்ண பரம்பரை ஆச்சே..! இத்தனைக்கும் மூல காரணமே இவர்தான்..! அரசியல் சித்து விளையாட்டை செய்து நிர்வாகம் என்கிற அறிவே இல்லாமல் அரசியல் செய்ததின் விளைவு இது. ஏற்கனவே அம்மா அவர்களால் தேவையே இல்லாதவர்கள் என்கிற பட்டியலில் உள்ள இவர்களை இந்த மஞ்ச துண்டு மகான் ஏன் பணி "நிரந்தரம்" செய்யவில்லை? கரிசனம் அவ்வளவா? அல்லது கப்பத்திற்கு இவ்வளவுதான் செய்ய முடியும் என்பதா? இரண்டு முறை மீண்டும் மீண்டும் பணிக்கு எடுத்த இந்த மகான் இவர்களுக்கு ஏன் பணிநிரந்தரம் செய்யவில்லை? யாரேனும் இவரை கேட்டீர்களா? என்னமா நீலி கண்ணீரை உதிர்கின்றார் பாருங்கள்..பாவத்தை பற்றி இவர் பேசுகின்றார்..ஐந்து முறையும் ஊழல் செய்து பணத்தை அள்ளிய இந்த மகான்.! ஐம்பது கோடி மக்கள் நித்தமும் ஒருவேளை உணவுக்கு இல்லாமல் தவிக்கின்ற இந்த திருநாட்டிலே ஒருலட்சத்து எழுபத்தாராயிரம் கோடிகளை "ஸ்வாஹா" செய்தவர்..இவர் பேசுகின்றார்..! இவர்கள் அனைவருமே திமுகவின் அல்லகைகளே..கட்சியினருக்கு அரசாங்க பணத்திலே பணம் கொடுக்க முடியாது..! திட்டமிட்ட இல்லாத பணிக்கு உருவாக்கப்பட்ட கட்சி பணியாளர்களுக்கு அறிவாலயத்தில்தா ன் பணம் கொடுக்கவேண்டும் ..! அரசாங்க பணத்தில் அல்ல..! கத்தை கத்தையாய் பணத்தை அள்ளிபோட்டீர் அல்லவா? அழைத்து மாதம்தோறும் கொடுங்கள்..எங்கே போவார்கள் என்றால் அதற்க்கு நீர்தான் பொறுப்பு..! பாவத்தை செய்தவர்கள் பலனை அனுபவிகின்றார்க ள்..! பாவத்தை செய்ய செய்தவர்கள் இந்த திமுக..! அதிமுகவிற்கு எதிராய் பணி செய்தவர்களுக்கு சரியான தீர்ப்புதான்..! இவர்கள் அனைவருமே திமுக கொள்கைபரப்பு பணியைத்தான் செய்தார்கள்.! சத்தியமாய் சரியான தீர்ப்புதான்..!
Quote
 
 
-12 #57 புதியவன் ராஜ் 2011-11-10 18:47
வெண்ணை, தினகரன் ஊழியர் கொலை வழக்கு என்றாலும் தா.கி. கொலை வழக்கு என்றாலும் குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் எனக்கு முழு உடன்பாடு உண்டு. அதற்கும் 13000 பணியாளர்களை திடீர் என்று பணி நீக்கம் செய்வதற்கும் என்ன சம்பந்தம்? பணி இழந்தோர் குடும்பஙள் அவர்கள் பிள்ளைகள் படும் வேதனையை நினைத்து பார்த்தீர்களா?
Quote
 
 
-4 #56 R Anbhazhagan 2011-11-10 18:38
சவுக்கு,

ஜெயலலிதா எடுத்த முடிவு சரி. அண்ணா நூலக விசயத்தில் தவ்று. அண்ணா நூலக விவகாரத்தில் ஜெயலலிதாவுக்கு ஐடியா கொடுத்தது செங்கோட்டையனுன் , ஓ. பன்னீர் செல்வமும் என்று கேள்வி.
Quote
 
 
+1 #55 manojkumar 2011-11-10 17:37
இந்த வாரம் அனந்த விகடன் பபார்திர்கல அதில் நம்ம பொலி நிருபர் புதுக்கோட்டை யிலிருந்து சரவனன் தொலிலதிபர் ராஜதியை பெட்டி கன்டு பொட்டிருக்கிரர் படிதவுடன் நெஞம் கனத்து இதயம் பனிது மனம் துவன்டது எதுக்கு என்ரு கெட்டிர்கலனால் 15 ரூ குடுத்து என்பது பொய் வான்கி விட்டெனெ என்ருதான்.அனந்தவிகடன் - ஜால்ரா
Quote
 
 
+4 #54 roja 2011-11-10 16:42
இவர்கள் என்ன வேலை செய்தார்கள்.?
Quote
 
 
+9 #53 moorty 2011-11-10 16:07
1990ம் ஆண்டு நியமனம் செய்த அணைவரும் தி மு க உறுப்பினர் என்று அறிவீரா
Quote
 
 
+1 #52 PONSOOSAI 2011-11-10 15:45
[ஃஉஒடெ நமெ="பொது ஜனம்"]அருமையான பதிவு.. அதிமுகவினருக்கு ம் சவுக்கடி..

ஆனால் நீங்க அந்தத் திருமாவளவனை தலையில் தூக்கி வைத்து ஆடுவது தான் கவலையாக உள்ளது..[/ஃஉஒடெ]
அவரும் காரியக்காரர் தான் சொனியாக்கு வாழ்க சொன்னவர்தானே
Quote
 
 
+3 #51 dgp 2011-11-10 15:07
pathu unakkum oru oscar kodukka porranga..Quoting பொது ஜனம்:
Quoting whistle:
அம்மா !!
என் பையன் ஸ்கூலுக்கு போக சைக்கிள் கொடுத்தீங்க !
படிக்க லேப்டாப் கொடுத்தீங்க !

என்னைய வேலைய விட்டு இப்ப தூக்கிட்டீங்க ..

இப்ப அவனுக்கு யாரும்மா சோறு போடுவாங்க !!!


Wow.. கேட்கும் போதே கண்கள் கலங்குகின்றன..
Quote
 
 
+3 #50 ஆர்.தியாகு 2011-11-10 13:18
"பொது ஜனம்" - சொன்னதை தொடர்ந்து...

முதல்வர் ஜெயலலிதா.....

:உன் பிள்ளைக்கு பள்ளிப்போக சைக்கிள் கொடுத்தேன்.
:சாப்பிட மத்திய உணவு கொடுத்தேன்.
:உன் மகளுக்கு திருமண உதவி தொகை மற்றும் தாலிக்கு தங்கம் கொடுத்தேன்.
:உன் அம்மாவுக்கு முதியோர் உதவி தொகை கொடுத்தேன்.
: உன் மனைவிக்கு மிக்சி,கிரண்டர் ,விசிறி மற்றும் ஆடுகள், மாடுகள் என வாரி வழக்கினேன்

என்ன நலனும் செய்தேன் ஆனால் "மக்கள் நல பணியாளர்கள்" என்ற பெயரில் லஞ்சம் வாங்கிக்கொடுக்க ும் புரோக்கராக வலம் வந்தாய்... அரசியல் செய்தாய்... ஆதனாலேயே உன்னை வீட்டுக்கு அனுப்பினேன்...!
Quote
 
 
+17 #49 puli 2011-11-10 11:39
இதை முதலில் கண்டுபிடித்து சொன்னது மதிமுக தான். // காலம் தந்த படிப்பினை ஜெயலலிதாவை மாற்றி இருக்கும் என்று எண்ணினோம், அவர் திருந்த மாட்டார் // என்று அறிக்கை கொடுத்து விட்டு விலகிக் கொண்டனர். அவர்களுக்கும், ஏன் சவுக்குக்கும் இது நல்லா வேணும் ... இரண்டு கட்சிகளை விட்டால் வேறு வழியே இல்லை என்று சொல்லிக்கொண்டு, மாறி மாறி இவர்களை ஆதரிக்கும் மக்களுக்கு இவர்கள் வேறு என்ன செய்வார்கள் ? இனிமேலாவதுமதிமு கஆதரியுங்கள்.
Quote
Quote
 
 
+8 #48 saran 2011-11-10 10:46
கடந்த அ.தி.மு.க., ஆட்சியிலே பணி நீக்கம் செய்யப்பட்டபோது , பட்டினியாலும், தற்கொலை செய்தும் அவர்களில் பலர் இறந்தனர். அந்த நிலையை மீண்டும் உருவாக்கலாமா? ஏழை அழுத கண்ணீர் வீண் போகாது, அப்பப்பா என்ன ஒரு கரிசனம் மஞ்ச துண்டாருக்கு. மக்கள் தற்கொலை செய்துகொள்வதை பற்றி பேசும் இவர், தா.கிருட்டிணன் ஒரு மனிதனாக தெரியலையா அல்லது சாதிக் பாஷா மனிதனாக தெரியலையா? நான் கூட அம்மா இந்த விஷயத்தில் ஏன் இப்படி உள்ளார் என்று நினைத்தேன் ஆனால் அவர் செய்தது நியாயமாக தான் படுகிறது ஏன் என்றால், மக்கள் நல பணியாளராக வேலையே இல்லாமல் சம்பளம் வாங்குகிறார்கள் , மேலும் இந்த பணியினால் அனைவரும் நூறு நாள் வேலை திட்டத்திற்கு செல்வதால் விவசாயம் பாதிக்கபடுகிறது . எனக்கு தெரிந்து காலம் காலமாக விவசாயம் செய்து வரும் ஒரு குடும்பம், நூறு நாள் வேலை திட்டத்திற்கு சென்றது முதல் விவசாயத்தை கைவிட்டனர். அவரை நான் கேட்டேன், அதற்க்கு நாள் எல்லாம் வெயிலில் உழைத்து விவசாயம் செய்தாலும் சில நேரங்களில் பயிர் சேதம், மழை காரணம், பூச்சிகள் தொல்லை போன்ற காரணத்தால் நஷ்டம் ஏற்படுகிறது. நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்தால் நிரந்திரமாக வருமானம் கிடைக்கிறது என்று கூறினார். எல்லாரும் நூறு நாள் வேலைக்கு சென்று விட்டால் யார் விவசாயம் பார்ப்பார்கள்? மேலும் நேற்று தான் நினைத்தேன், என்னடா சமச்சீர் கல்வி பிரச்சனை முடிந்துவிட்டது , சட்டமன்ற பிரச்சனை அடங்கிவிட்டது, இனிமேல் திமுகவினர் எதை வைத்து அரசியல் நடத்துவார்கள் என்று நினைத்த மறுநாளே இந்த செய்தியை படித்தேன். நான் நினைத்தது போலவே நடந்தது. அடுத்த ஒரு வாரத்திற்கு இதை வைத்து அரசியல் செய்வார்கள். மேலும் நியமிக்கப்பட்ட அந்த 12 ஆயிரம் பெரும் திமுகவினர். அதனால் தான் திமுக வெட்டி சம்பளம் கொடுத்து மக்களை மயக்கி வைத்திருந்தது. என்னை கேட்டால் தேமுதிகவின் கோரிக்கை நியாயம் தான். அம்மா அதை நிறைவேற்றியது சரி தான். கத்துபவர்கள் ஒரு வாரத்திற்கு கத்துவார்கள் பிறகு அடங்கிவிடுவார்க ள். என்ன இருந்தாலும் அடுத்த நான்கரை ஆண்டிற்கு ஒன்னுமே செய்யமுடியாது. கத்த தான் முடியும்.
Quote
 
 
+8 #47 vennai 2011-11-10 10:29
what about dinakaran employee . tha kee.etc etc??? are you still employee of dmk and earning perks????Quoting புதியவன் ராஜ்:
அடுத்தவர் துன்பத்தில் இன்பம் காணும் சாடிஸ்ட் மனப்பான்மை உள்ளவர்கள் தான் வேலை இழந்தவர்கள் நிலையையும் அவர்கள் குடும்பஙள் படும் வேதனையையும், அவர்கள் பிள்ளைகள் படிப்பு கேள்விக்குறியாக ும் பரிதாபத்தையும் புரியாமல் பணி நீக்கம் செய்வது சரிதான் என்று பேசுகிறார்கள். 10000 சாலைப்பணியாளர்க ளை பணி நீக்கம் செய்தாரே ஜெ. அவர்களும் திமுகவினரா?
Quote
 
 
+5 #46 http://koothadivedda 2011-11-10 09:02
நரகாசுரன் கருணாநிதியும், சர்வாதிகாரி ஜெயலலிதாவும், பாம்பும் ஏணியும் விளையாட்டு விளையாடுகின்றனர ். வேறு ஒரு நல்ல விளையாட்டு அறிமுகமாகும்வரை பரமபதம் தொடரும்.
Quote
 
 
+38 #45 Middle Class Madhava 2011-11-10 08:29
திரு சவுக்கு அவர்களே!
நான் உங்கள் நலம் விரும்பி! ஒரு "மிடில் கிளாஸ் " நண்பன்!

இந்த விஷயத்தில் ஜெ. செய்தது மிகச் சரி!
எங்கள் கிராமத்தில் "இவர்கள்" வேலை செய்து கிழித்ததை நான் பார்த்து இருக்கிறேன்! தண்ட செலவு மிச்சம்!

"உழைத்து" சாப்பிட சொல்லுங்கள்!உடம ்பில் ஒட்டும்!

மேலும், அரசு ஊழியர்களில் "நல்லவர்:லஞ்சபேய ்கள்", "20 :80 " என்பதே என் தாழ்மையான கருத்து!
நன்றி!
Quote
 
 
+1 #44 senthil_aavadi 2011-11-10 06:14
12000 jobs means 12000 families..JJ is no God to decide fate of their children.feeling guilty of voted her.
Quote
 
 
+44 #43 RaBaSha 2011-11-10 03:48
சவுக்கு சார், மற்ற விஷயங்களை விடுங்கள், இந்த மக்கள் நல பணியாளர்கள் விஷயத்தில் ஜெஜெ சரியான முடிவை எடுத்திருக்கிறா ர். முந்தைய ஆட்சியிலும் அரசு பணியாளர்கள் விஷயத்தில் முதல் முறை சரியான முடிவையே எடுத்தார்... பிறகு தேர்தல் தோல்வியினால் அதை திரும்பப்பெற்றா ர். She had to play to the masses you see. You have given right numbers but in reverse (80% are lazy and corrupt and only 20% work honestly and hard). Sorry - not with you this time.
Quote
 
 
+44 #42 Gnanaguru K 2011-11-10 01:47
ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேன்டும். இந்த மக்கள் நலப்பணியாளர்களை கருனானிதி தன் ஆட்சிக்காலம் முழுவதும் ஒப்பந்த அடிப்படையிலேயே வைத்திருந்தார். இப்போது ஒப்தந்தம் முடியும் தருவாய். கருனானிதிக்கு உண்மயிலெயே அக்கறை இருந்திருந்தால் தன் ஆட்சிக்காலத்தில ேயே இவர்களை நிரந்தர பணியாளர்களாக ஆக்கியிருக்கலாம ே?
Quote
 
 
-23 #41 புதியவன் ராஜ் 2011-11-10 00:58
அடுத்தவர் துன்பத்தில் இன்பம் காணும் சாடிஸ்ட் மனப்பான்மை உள்ளவர்கள் தான் வேலை இழந்தவர்கள் நிலையையும் அவர்கள் குடும்பஙள் படும் வேதனையையும், அவர்கள் பிள்ளைகள் படிப்பு கேள்விக்குறியாக ும் பரிதாபத்தையும் புரியாமல் பணி நீக்கம் செய்வது சரிதான் என்று பேசுகிறார்கள். 10000 சாலைப்பணியாளர்க ளை பணி நீக்கம் செய்தாரே ஜெ. அவர்களும் திமுகவினரா?
Quote
 
 
+24 #40 Anandalr 2011-11-10 00:27
பொதுவாக அரசியல்வாதிகள் மக்களை பாதிக்கும் செயல்களை செய்வார்கள், ஆனால் பெரும் முதலாளிகளை பாதிக்கும் எந்த செயலையும் செய்ய மாட்டார்கள். உதாரணம் சமசீர் கல்வி, அண்ணா நூலகம். இவற்றில் முதலாளிகள் சம்பந்த பட வில்லை. கலைஞர் கொண்டு வந்த காப்பீடு திட்டத்தை ஏன் ரத்து செய்யவில்லை? கலைஞர் ஆட்சியில் பல அந்நிய தொழிற்சாலைகளுக் கு சலுகை தரப்பட்டுள்ளன, ஏன் ரத்து பண்ண வில்லை? ஏன் என்றால் அவற்றில் முதலாளிகள் சம்பந்தப்பட்டுள ்ளனர்.
Quote
 
 
+3 #39 selvakumar 28 2011-11-09 22:47
jj action is very good, they are selected in employeement, one incident in my place one girl my place pro she is doing in the pracititu business, she is correct panchaytha prasiedent and pdo, now she is getting pro think about , mr. savukku
Quote
 
 
+29 #38 பா 2011-11-09 22:43
விகடனில் வந்துள்ள செய்தி http://news.vikatan.com/?nid=4865.
இதன்படி, திமுக மாநிலம் தழுவிய போராட்டம் நடத்துமாம். ஏன், எதற்கெடுத்தாலும ் வழக்கு தொடுக்கும் இவர்கள் இதற்கும் நீதிமன்றத்துக்க ுச் செல்ல வேண்டியது தானே? ஏனென்றால், அப்படி நீதிமன்றம் சென்றால் திமுக-வின் குட்டு வெளிவந்து விடும். அதனால் இதற்கு வெட்டி போராட்டம் செய்வது தான் சரி.

திமுக ஆட்சியிலேயே ஒரு அரசு அதிகாரி, இந்த திட்டத்தை ரத்து செய்து விடலாம் என்று கருணாநிதிக்கு அறிக்கை கொடுத்தால் இது எவ்வளவு பெரிய போங்கு திட்டமாக இருக்கவேண்டும்.
Quote
 
 
-17 #37 பொது ஜனம் 2011-11-09 22:14
Quoting whistle:
அம்மா !!
என் பையன் ஸ்கூலுக்கு போக சைக்கிள் கொடுத்தீங்க !
படிக்க லேப்டாப் கொடுத்தீங்க !

என்னைய வேலைய விட்டு இப்ப தூக்கிட்டீங்க ..

இப்ப அவனுக்கு யாரும்மா சோறு போடுவாங்க !!!


Wow.. கேட்கும் போதே கண்கள் கலங்குகின்றன..
Quote
 
 
-6 #36 anniayn 2011-11-09 22:13
//#11 சோழன் 2011-11-09 15:27
ஜெ’வுக்கும் நூலிழையில் விபத்து நடக்கும்
தப்பிக்கவும் செய்வார்....
சட்டம் தோற்கும் பார்ப்பனியம் வெல்லும்...
+7 #10 Anniyan 2011-11-09 14:56
Amma your good job this time.....this employees very worst in every V.A.O. office and other panchayath Office..//
திரு அந்நியன், திரு சோழன்,
உண்மையான சோழனும் நானும் வெகுகாலமாக கருத்துப் பதிவுகளைச் செய்து வருகிறோம். இடையில் ஒருமுறை "அந்நியன்" என்று பெயரிட்டு (நான் எழுதுவது போல் பாவித்து, என்மேல் பழி உண்டாக்கும் நோக்கோடு) ஒருவர் தலித்களையும், தமிழர்களையும் இழிவாகப் பேசியும் எழுதியிருந்தார் . இப்போது நீங்க இருவரும் புதுக் குழப்பம் ஏற்படுத்த வேண்டாம்.

சவுக்கின் கட்டுரை நன்று. வேலையை விட்டு எடுத்தல் நியாயமன்று. இதை விட ஜெயலலிதா புத்திசாலித்தனம ாக 24 ,000 அதிமுக ஆதரவாளர்களை நியமிக்கலாம். அல்லது இந்த 12 000 பேரிடமும் பேசி நிரந்தரப்பணியாள ர் ஆக்குவதாகவும், அதற்கு ஊழல்களை அவர்கள் காட்டிக்கொடுக்க வேண்டும் என்றும் நிர்ப்பந்தம் செய்யலாம். இதன் மூலம் ஜெயாவின் கெட்ட பெயர் மாறிவிட வாய்ப்புள்ளது.
Quote
 
 
+14 #35 பொது ஜனம் 2011-11-09 22:12
அருமையான பதிவு.. அதிமுகவினருக்கு ம் சவுக்கடி..

ஆனால் நீங்க அந்தத் திருமாவளவனை தலையில் தூக்கி வைத்து ஆடுவது தான் கவலையாக உள்ளது..
Quote
 
 
+13 #34 ஊர்க்குருவி. 2011-11-09 20:34
#26 ஆர்.தியாகு 2011-11-09 18:21
இங்கு எல்லோரும் ஒன்றை கவனிக்க வேண்டும் !

//மக்கள் நல பணியாளர்கள் எல்லோரும் ஒன்றும் அரசு தேர்வானையத்தின் மூலமாகவோ அல்லது வேலை வாய்ப்பு அலுவலகம் மூலமாகவோ வந்தவர்கள் அல்லர். அத்தனையும் கருனாநிதியின் கட்சி காரர்கள் அனுதாபிகள்...//

# நண்பர் தியாகு அவர்கள் கூறியவை உண்மையாக இருந்தாலும், மக்கள் பணியாளர்களை ஒரு இரவில் வேலையை விட்டு தூக்க ஜெயலலிதா அவர்களுக்கு மக்களால் வழங்கப்பட்ட அதிகாரம்தான் பயன்பட்டிருக்கி றது.

அத்துடன் அத்தனைபேரும் கருனாநிதியின் கட்சி காரர்கள் மற்றும் அனுதாபிகள் என்றும் சொல்லியிருக்கிற ார். தமிழ்நாட்டில் கடைசியாக நடந்த தேர்தலில் திமுக பெற்ற எம்எல்ஏ களே முப்பதுக்கும் உட்பட்டவை. ஆரம்பத்தில் கருணாநிதியின் அனுதாபிகளாக இருந்த பல கோடி மக்கள் கருணாநிதியை புறக்கணித்து ஜெயலலிதாவை வெற்றி பெறவேண்டுமென்று வாக்களித்திருக் கின்றனர்.

நண்பர் குறிப்பிட்டதுபோ ல கருனாநிதியின் ஆதரவாளர்களாக இருந்தால் அவர்கள் (அதிமுக) அரசில் வேண்டத்தகாதவர்க ள் என்று கொள்ளவேண்டுமா. அது தர்மம் ஆகுமா?

வசதியானவர்கள் ஒரு சிலர் தவிர, வரலாற்றில் மத்திய வகுப்பினரும் ஏழைகளும் ஒரே கட்சிக்கு தொடர்ந்து வாக்களித்ததில்ல ை. அதிமுக, திமுக இரண்டு கட்சிகளுக்கும்த ான் மாறி மாறித்தான் வாக்களித்து வருகின்றனர். ஆட்சி மாற்றங்கள் அதை உறுதி செய்கின்றன.

கட்சியின் மாசே, வசே. மந்திரி எம்எல்ஏ க்கள் தொடர்ந்து ஒரேகட்சியில் இருக்கலாம். அதில் கூட மாற்றம் நடந்திருக்கிறது .

எது எப்படியிருப்பின ும் மாற்றுக்கட்சிக் கு வாக்களித்தவர்கள ் என்பதால் ஒரு வரையறைப்படுத்தா மல் ஒரு இரவில் கட்டளையிட்டு கடை நிலையில் உள்ள அவர்களின் வேலையை புடுங்கிக்குள்ள ுவது ஜனநாயகத்திற்கு புறம்பான செயல்.

உகண்டாவின் இடி அமீனும், ஜெ,ர்மானிய ஹிட்லரும் இந்த நடைமுறையைத்தான் தெரிவு செய்திருந்தனர்.

இப்படியே போனால் யாரோ கூறியதுபோல கடவுள் கர்நாடகா நீதிமன்ற வடிவத்தில் எடியூரப்பாவின் நிலை ஏற்பட்டாலும் வியப்பதற்கில்லை . அப்படி ஒருவேளை நடந்தாலும் மக்கள் மகிழ்ச்சியுடன் அமைதி காப்பார்களே தவிர. ஆதரவு எதையும் காட்டமாட்டார்கள ்.

குறிப்பு: கடைசி தேர்தலின்போது கருணாநிதி தோற்று ஜெ முதல்வராக வரவேண்டுமென மிகவிரும்பியவர் களில் நானும் ஒருவ
Quote
 
 
0 #33 Karthik-K 2011-11-09 20:08
Excellent Article
Quote
 
 
-11 #32 பெருசு 2011-11-09 19:49
தம்பி சவுக்கு, நா மறுபடியும் சொல்றேன்..இந்த "எழுத்தாளர்" (அடேங்கப்பா!) முகமூடிய ஒரு ஓரமா கழட்டி எறிஞ்சுட்டு நல்லா கைய கால கழுவிட்டு உன் பழய போலிஸ் வேலைல திருப்பி சேர முடியுமானு பாரு....உன் கருத்துக்கள (?!!) விட மஞ்சத்துண்டாரோட ஒண்ணத்துக்கும் ஒதவாத எதுக மோன அறிக்கையே தேவல.
Quote
 
 
+1 #31 Vendhan 2011-11-09 19:47
Recently Jayalaitha atleast in words she fighted for Tamil Fishermans & Lankan tamils, issue will not solved anyway but she shows her strength....

What karunanidhi did ? You should not compare Karuna with Jaya....... Jaya is always 100 times ahead of Karuna in all means even though she is so aggressive & adamant....
Quote
 
 
+1 #30 Vendhan 2011-11-09 19:46
East or West AMMA is Best..... Dont just judge the government by these actions, Jayalaitha shows her grudje only against Govt Officials who comes through D.M.K, Look how peaceful people are now.... They are not worried about their own lands, Rowdism etc., But this sort of peace cannot be attained in Karunanidhi's rule were the entire FAMILY always look to ROB tamil nadu....
Quote
 
 
+19 #29 பாப்பாத்தி 2011-11-09 19:43
[ஃஉஒடெ நமெ="ஆர்.தியாகு"]இங்கு எல்லோரும் ஒன்றை கவனிக்க வேண்டும் !

மக்கள் நல பணியாளர்கள் எல்லோரும் ஒன்றும் அரசு தேர்வானையத்தின் மூலமாகவோ அல்லது வேலை வாய்ப்பு அலுவலகம் மூலமாகவோ வந்தவர்கள் அல்லர். அத்தனையும் கருனாநிதியின் கட்சி காரர்கள் மற்றும் அனுதாபிகள்...

இந்த மக்கள் நல பணியாளார்கள் என்ன செய்தார்கள் தெரியுமா..?

வந்து போகும் ஏழைகளிடம் பறித்து அதிகாரிகளுக்கு கொடுக்கும் அற்புதபணியை செய்தார்கள்.


கமிஷன், கட்டிங் என எல்லாமும் கிடைக்கும்.

கலைஞர் டி.வி.யில் போராட்டம் பண்ணுகிறவர்களை பாருங்கள் 2500 சம்பளம் வாங்குகிறவர்களை ... எத்தனை மிடுக்கு என்று..!

பசை இல்லாமல் எந்த நோட்டு ஒட்டும்..![/ஃஉஒடெ]

பாப்பாத்திகளை காட்டியதால் கருணாவின் சக்கர நாற்காலிக்கும் ஜொள்ளு வடிந்தது என்று கவிதை விட்ட ஆளு ஜெயா காலை எப்படி முக்கி நக்குகிறார் பாருஙக சனங்களே.
Quote
 
 
+2 #28 saran 2011-11-09 19:13
savukku before writing the blog first investigate and write or go to other news paper site and read the comments given by the readers. This action is good move against DMK only not for Govt employees.
Quote
 
 
+14 #27 manithan 2011-11-09 18:45
வெங்கட்டான் அவர்கலுக்கு
தி முக ஆட்சி மீண்டும் வந்திருக்குமானா ல் அவர்களால் உருவாக்க பட்ட இன்ஃப்ரச்ட்ருச் டுரெ மேலும் உருதியடைதிருக்க ம்

ஒவ்வொரு மந்திரியும் நல்ல சினைப்பன்னி மாதிரி இருந்தானுன்க போய்யா போ வாய்ல கேவலமா வந்துரும்.
Quote
 
 
+74 #26 ஆர்.தியாகு 2011-11-09 18:21
இங்கு எல்லோரும் ஒன்றை கவனிக்க வேண்டும் !

மக்கள் நல பணியாளர்கள் எல்லோரும் ஒன்றும் அரசு தேர்வானையத்தின் மூலமாகவோ அல்லது வேலை வாய்ப்பு அலுவலகம் மூலமாகவோ வந்தவர்கள் அல்லர். அத்தனையும் கருனாநிதியின் கட்சி காரர்கள் மற்றும் அனுதாபிகள்...

இந்த மக்கள் நல பணியாளார்கள் என்ன செய்தார்கள் தெரியுமா..?

வந்து போகும் ஏழைகளிடம் பறித்து அதிகாரிகளுக்கு கொடுக்கும் அற்புதபணியை செய்தார்கள்.


கமிஷன், கட்டிங் என எல்லாமும் கிடைக்கும்.

கலைஞர் டி.வி.யில் போராட்டம் பண்ணுகிறவர்களை பாருங்கள் 2500 சம்பளம் வாங்குகிறவர்களை ... எத்தனை மிடுக்கு என்று..!

பசை இல்லாமல் எந்த நோட்டு ஒட்டும்..!
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 53 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday299
mod_vvisit_counterYesterday11260
mod_vvisit_counterThis week32758
mod_vvisit_counterLast week80132
mod_vvisit_counterThis month235490
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12757609