|
WE, THE PEOPLE OF INDIA, having solemnly resolved to constitute India into a SOVEREIGN SOCIALIST SECULAR DEMOCRATIC REPUBLIC and to secure to all its citizens: JUSTICE, social, economic and political;LIBERTY of thought, expression, belief, faith and worship; EQUALITY of status and of opportunity; and to promote among them all
FRATERNITY assuring the dignity of the individual and the unity and integrity of the Nation;
இந்திய மக்களாகிய நாம், இந்தியாவை இறையாண்மை கொண்ட சமதர்ம, சமய சார்பற்ற, மக்களாட்சிக் குடியரசாக அமைப்பது என்ற உறுதி ஏற்றுள்ளோம். இதன் மூலம், இந்தியாவில் உள்ள அனைத்து குடிமக்களையும் பாதுகாப்போம் என்று நமது அரசியல் அமைப்புச் சட்டத்தின் முன்னுரை சொல்கிறது.
கடந்த ஒரு வாரமாக, கிங்பிஷர் ஏர்லைன்ஸின் விமானங்கள் நூற்றுக்கும் மேற்பட்டவை ரத்து செய்யப் பட்டுள்ளன. கிங்பிஷர் விமான நிறுவனம் நொடித்துப் போகும் அளவை எட்டியுள்ளது.

நேற்று, செய்தியாளர்களிடம் பேசிய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் வயலார் ரவி, விஜய் மல்லையா என்னிடம் பேசினார். நான் இது தொடர்பாக நிதி அமைச்சரிடம் பேசி, வங்கிகளிடம் பேசி, கிங்பிஷர் நிறுவனத்திற்கு வழங்கப் பட்டுள்ள கடன்களை மாற்றி அமைத்து, அந்நிறுவனத்தை மாற்றியமைக்க முடியுமா என்று பேசியிருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
கிங்பிஷர் நிறுவனத்துக்கு தற்போது இருக்கும் மொத்த கடன் 7057 கோடி ரூபாய். கிங்பிஷர் நிறுவனம் தற்போது சந்தித்துள்ள மொத்த நஷ்டம் மார்ச் 31 அன்று உள்ளபடி 4283 கோடி ரூபாய். இந்நிறுவனம் 2005ல் தொடங்கியதிலிருந்து இது வரை ஒரு பைசா கூட லாபமாக சம்பாதிக்கவில்லை. 20011 தொடக்கத்தில், கிங்பிஷர் நிறுவனத்துக்கு கொடுக்கப் பட்ட கடன் திரும்ப வசூல் செய்வதில் உள்ள சிக்கல்களை கருத்தில் கொண்டு, ரிசர்வ் வங்கி, தேசியமயமாக்கப் பட்ட வங்கிகளை, கடனுக்கு பதிலாக கிங்பிஷர் நிறுவனத்தின் பங்குகளை வாங்கிக் கொள்ளச் சொல்லி பரிந்துரைத்தது.
அந்தப் பரிந்துரையின் அடிப்படையில், தேசியமயமாக்கப் பட்ட 13 வங்கிகள் கிங்பிஷர் நிறுவனத்தின் பங்குகளை ஒரு பங்கு 63 ரூபாய்க்கு (அப்போதைய கிங் பிஷர் பங்கு மதிப்பு ரூ.40) தற்போது கிங்பிஷர் நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை ரூ.19.65. வங்கிகளுக்கு தரவேண்டிய கடன் தொகை போக, கிங்பிஷர் நிறுவனம், தேசிய எண்ணை நிறுவனங்களுக்கு தர வேண்டிய தொகை என்ன தெரியுமா ? இந்துஸ்தான் பெட்ரோலியம் (HPCL) நிறுவனத்துக்கு 600 கோடி. பாரத் பெட்ரோலியம் நிறுவனத்துக்கு 250 கோடி (BPCL) இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கு (IOCL) 200 கோடி. எண்ணை நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன என்ற காரணத்தால், வாரத்திற்கு ஒரு முறை பெட்ரோல் விலையை உயர்த்தும் நிதி அமைச்சகமும், பெட்ரோலியத் துறை அமைச்சகமும் மல்லையாவிடம் ஏன் அமைதியாக இருக்கிறார்கள் என்பது அவர்கள் மனசாட்சிக்குத் தான் தெரியும்.

இந்த மல்லையா யாரென்பது, தெரியுமா ?

மிகப் பெரிய சாராய அதிபர். யுனைட்டட் ப்ரூவரிஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருபவர். 2005ல் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை தொடங்குகிறார். இவர் ஒரு சோக்காளி. பணக்காரர்களையும் பெண்களையும் அழைத்து அவ்வப்போது பார்ட்டி கொடுப்பது இவரது பொழுது போக்கு. இவரது பார்ட்டிகளில் கலந்து கொள்ளாத நடிக நடிகைகளே இல்லை எனலாம். ஆண்டுதோறும் கிங்பிஷர் காலண்டர் என்ற பெயரில் மாடல் அழகிகளை வைத்து காலண்டர் தயாரித்து வெளியிடுவார்.



எல்லா தொழிலிலும் இறங்கி விட்டோம். அரசியலிலும் இறங்கலாம் என்று 2000த்தில் ஜனதா கட்சியில் சேர்ந்து கர்நாடகா முழுவதும் வேட்பாளர்களை களத்தில் இறக்கினார். ஆனால் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாமல், இவர் கட்சி மண்ணைக் கவ்வியது. ஆனால் பின்னாளில் ராஜ்ய சபா எம்பி தேர்தலில், பணம் கொடுத்து, ஜனதா தளக் கட்சி வேட்பாளரை தோற்கடித்து, சுயேட்சையாக எம்.பி ஆனார்.
பெங்களுரு ராயல் சேலஞ்சர்ஸ் என்ற பெயரில் ஐபிஎல் டீமை சொந்தமாக வைத்துள்ளார். எப் 1 பார்முலா ரேசில், போர்ஸ் ஒன் என்ற பெயரில் ஒரு டீம் வைத்துள்ளார்.
தென் ஆப்ரிக்காவில் இந்தியக் கிரிக்கெட்டின் இறுதிப் போட்டி நடைபெற்ற போது, இந்தியாவில் இருந்து சொந்த விமானத்தில் பல்வேறு எம்பிக்களை அழைத்துச் சென்றார்.
இந்த மல்லையாவுக்குத் தான் தற்போது நெருக்கடி. இவருக்குத் தான் உதவி செய்ய வேண்டும் என்று மத்திய விமானத்துறை அமைச்சர் வயலார் ரவி பரிந்து பேசியுள்ளார்.
இது ஒரு பக்கம். மற்றொரு பக்கம். 1995 முதல் 2010 வரையிலான ஆண்டுகளில் கடன் தொல்லை தாங்காமல் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை மட்டும் 2,56,913. இது வேலை வெட்டி இல்லாத சமூக ஆர்வலர்கள் தொகுத்த கணக்கீடு அல்ல. மத்திய அரசின் தேசிய குற்றவியல் கணக்கிடும் பிரிவு வெளியிட்டுள்ள எண்ணிக்கை இது.

கடன் தொல்லைகள் காரணமாக விவசாயிகள் தற்கொலை என்ற செய்தி வரும்போதெல்லாம் கண் துடைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் மத்திய மாநில அரசுகள், விவசாயிகளின் கடன் பிரச்சினையையும், அவர்கள் தற்கொலையையும் வெறும் எண்ணிக்கையான மட்டுமே பார்க்கின்றன என்பதே வேதனை தரும் விஷயம்.

இந்தியாவில் உள்ள அனைத்து குடிமக்களையும் பாதுகாப்போம் என்று அரசியல் அமைப்புச் சட்டத்தின் கீழ் உறுதி மொழி எடுத்துக் கொண்டுள்ள அரசியல்வாதிகள் கண்களுக்கு மல்லையாக்களும், ரத்தன் டாடாக்களும், அம்பானிகளும் மட்டுமே குடிமக்களாகத் தெரிகிறார்கள் என்பதுதான் வேதனை.
இது மக்கள் ஆட்சியாம்.......!!!!!!
|
Comments
Finally, 14 banks lead by SBI are going to lend additional 600 crores ( already their 7000 cr is in trouble ). And Vayalaar is saying there will be no bail-out from govt !? I am amazed by the ignorance of the people to the cheating by the deadly combination of politicians and industrialists.
மேலும், விமானத்தில் பயணம் செய்பவர்களுக்கு த் தெரியும் – எவ்வளவு கேவலமாக நடத்தப் படுகிறார்கள் என்று. ‘மத்திய அரசு பணியில் இருக்கும் என்னை பயணிகளாக நீங்கள் ஒன்றும் புடுங்க முடியாது’ என்று தெனவட்டாக நெஞ்சை நிமிர்த்தி விமானத்தில் உள்ளே திரிந்து கொண்டிருப்பார்க ள் – உங்களுக்கு சேவகம் செய்வதை விடுத்து!. ஆனால் மற்ற விமானங்களின் சேவையை கொஞ்சம் கூட ஒப்பிட்டு பார்க்க முடியாது. சிங்கப்பூர், மலேசியா விமானங்களில் கூட தமிழில் அறிவிப்பு இருக்கும். ஆனால் சென்னை வரும் இந்திய விமானத்தில் ஹிந்தியில் செய்தி அறிவிப்பார்கள்!
நம்மூர் தனியார் பேருந்துக்கு வழி விட்டு செல்லும் அரசு பேருந்து போல, சில தடத்தில் கிங் பிஷ்சர் போன்ற தனியார் நிறுவனத்திடம் சோரம் போய் விமானச் சேவையை தாமதமோ அல்லது சில நேரங்களில் ரத்தே செய்து விடுவார்கள். ‘நஷ்டம்’ என்ற நிலையில் வருடா வருடம் மத்திய (மலையாளி மந்திரி) அரசு பணத்தை கொடுத்து ’உதவி’ செய்து வருகிறது.
இந்தத் துறை மட்டுமல்ல; தூர தர்சன், ராணுவம், வெளி விவகாரம், பாதுகாப்பு – இவைகள் அனைத்தும் தொடர்ந்து மலையாளிகளின் ஆதிக்கத்தில் தான் இருந்து வருகிறது.
அதுக்கு...??/
பண உதவி கொடுங்கன்னு சொல்ல வர்றீங்களா???
ஊனிடெட் ப்ரெநெரிஎச்-ஐ அரசு ஏலம் விட்டு அதில் கிடைக்கும் பணத்தை கொண்டு கடன்களை அடைக்கச் சொல்லுங்கள்....[/ஃஉஒடெ]
அந்த அர்த்ததுல சொல்ல வரல, ஒருத்தர பத்தி சொல்லுரப்போ அவர பத்தி முழுசா சொல்லனும்ல. நீங்க எல்லாம் சொல்லுர மாதிரி ஒரு தனியார் நிறுவனம் நட்டத்தை சந்திக்கும் போது அதுக்கு அரசு உதவனும்னு அவசியம் இல்ல தான், எப்போன்னா அந்த இடத்த வேற ஒரு நிறுவனம் நிறப்ப வாய்ப்பு இறுந்தா. ஆனா ஏர் இந்தியா விமான போக்குவரத்து நிருவனமே கடும் நிதி நெருக்கடில தான் இயங்கிட்டு இருக்கு, அதுபோல தான் கிங்ஃபிசரும். இதோட நிதி நெருக்கடிய யு.பி குரூப் மூலம்தான் சமாளிச்சிகிட்டு இருந்திருக்காங் க. இதுக்கு மேலயும் நட்டத்துல இயக்க முடியாதுன்னுதான ் நட்டத்துல இயங்குன விமானத்தை எல்லாம் நிருத்திட்டாஙக. ஆனா அரசு அதை இயக்க சொல்லுது, அப்புடி இயக்கனும்னா அரசு உதவிய எதிர்பாக்குறாங் க. நஷ்டம் ஏற்படுத்தும் ரூட்களில் விமானங்களை இயக்க வேண்டியது கிங்பிஷருக்கு வேலையா? அல்லது நிறுவனத்தை லாபத்துடன் இயக்க வேண்டியது கிங்பிஷருக்கு வேலையா??
அதுக்கு...??/
பண உதவி கொடுங்கன்னு சொல்ல வர்றீங்களா???
United Breweries-ஐ அரசு ஏலம் விட்டு அதில் கிடைக்கும் பணத்தை கொண்டு கடன்களை அடைக்கச் சொல்லுங்கள்....
The Elected body by innocent people specifically meant for the Big Business Man's Growth and never ending Corruption...
தொடருங்கள்... வாழ்த்துக்கள்...
I hv few differences with u but that doesnt mean i am against u.I honestly like 95% of ur articles except for some castesist artciles.this article is one of ur best,when ppl suffer coz of inflation,rate hikes,land bill which is in offing(going to raise the land prices and make it unaffordable for common ppl),why should Cong govt bailout Mallya when he has other businesses esp Beer business to bailout his KF.Rahul Bajaj was spot on"Will u bailout Bajaj Auto if its in dire straits,allow ppl to die if he needs to die".
Weldone Savukku !
சாராயம் விக்கறவன பாது காக்கிறவன் நல்லவனாவா இருப்பான்?, அவனும் அவன மாதிரிதான இருப்பான்!.
Good work Savukku.
Tamilscafe.blogspot
தூக்கி இப்போது தரவில்லையே.இதே அரசுதானே விவசாயிகளின் கடன்களையும் தள்ளுபடி செய்தது.அது போதாது என்பது உண்மை.ஆனால் அரசு ஒன்றும் செய்யவில்லை என்பது போல் ஏன் எழுதுகிறீர்கள்.
இந்த வேருபட்டை நீக்க மக்கள் புரட்சி ஒன்றே வழி..
Even "Anna hasare" movement also not interested to make their voice against this corporates. we should include Indian private sector com pines/corporate also in to the Lokpal Bills.
RSS feed for comments to this post