முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
வசந்தமில்லா வசந்தி. அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 58
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
செவ்வாய்க்கிழமை, 26 அக்டோபர் 2010 07:50

யார் இது புது கேரக்டர்.   வசந்தி என்றவுடன் கண்ணா பின்னாவென்று யோசிக்காதீர்கள். இந்த வசந்தி வேறு யாருமல்ல. திராவிட முன்னேற்றக் கழகத்தின் ராஜ்ய சபை உறுப்பினர் வசந்தி ஸ்டான்லி தான் அந்த நபர்.

 இந்த வசந்தி ஸ்டான்லியைப் பற்றி விரிவாகப் பார்க்கும் முன்பு, சமீபத்தில் வசந்தி ஸ்டான்லி வெளியிட்ட, கலைஞர் 87 என்ற ஒரு ஜால்ரா நூலை வெளியிட்டார். அதை ஏற்றுக் கொண்ட புகழ்ச்சியே பிடிக்காத கருணாநிதி என்ன பேசினார் என்பதை கொஞ்சம் பார்ப்போம்.

 

Kalaignar_87_Book_Release_Invitation_02

“இந்தத் தொகுப்பு நூலில் வசந்தி ஸ்டான்லி எழுதிய கட்டுரையில் கடைசி வரிகள் என்னுடைய உள்ளத்தில் எத்தனையோ உணர்வுகளை ஏற்படுத்தியிருக்கின்றது.

""""அப்பா! என் ஆயுள் அடங்கும் கடைசி நொடியில் விழியோரம் ஒரு சொட்டு நீர் உருண்டு வரும்.   அது உங்கள் பாதத்தை நனைத்தால் நன்றிக் கடனைத் தீர்த்த பாக்கியத்தை நான் அடைவேன் அப்பா!""     என்று வசந்தி ஸ்டான்லி எழுதியிருக்கிறார்.   (இதுக்குப் பேர்தான் நெஞ்ச நக்கறது) இது என்னுடைய உள்ளத்தை உருக்குவதாக இருந்தாலுங்கூட, இப்படி ஒன்று நடக்கக் கூடாது என்று நான் விரும்புகின்றேன் வசந்தி ஸ்டான்லி போன்ற கழகத்தினுடைய கருவூலம் போன்றவர்கள்,   கழகத்தினுடைய ஆற்றல் மிக்க தொண்டுள்ளம் படைத்தவர்கள் பல காலம் இருந்து எந்தக் கொள்கைக்காக   தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும் அவர்கள் வழி நின்று நாங்களும் பாடுபட்டு வருகிறோமோ, அந்தக் கொள்கைகளை வெற்றிகரமாக நிறைவேற்றித் தீருவோம் என்று ஒரு சூளுரை மேற் கொண்டு இந்தக் கட்டுரை முடிக்கப்பட்டிருந்தால் நான் பெரிதும் மகிழ்ச்சி அடைந்திருப்பேன்.

 P2059

சுருக்கமாகச் சொன்னால் கழகத்தின் கருவூலமாம்.   இந்தக் கருமம், மன்னிக்கவும், கருவூலம் என்ன செய்திருக்கிறது என்பதைப் பார்ப்போம்.

 

வசந்தி ஸ்டான்லி.   மிகச் சாதாரண அரசு ஊழியராக, வருவாய்த் துறையில் தனது பணியைத் துவக்கியவர்.   அதன் பிறகு, வணிக வரித் துறைக்கு வருகிறார். வணிக வரித் துறையிலே, உதவி வணிக வரி அலுவலர் வரை பதவி உயர்வு பெறுகிறார்.

 

வணிக வரித் துறையிலே என்னதான் மாமூல் வந்தாலும், அரசியலில் சம்பாதிப்பது போல வருமா… ? உடனே என்ன அரசியல்வாதிகளோடு தனது தொடர்பை நெருக்கப் படுத்துகிறார்.   குறிப்பாக இருட்டுக் கடை அல்வாக் காரர் இந்த அம்மணிக்கு நெருக்கம் என்கிறார்கள். அந்த நெருக்கத்தின் பயனாக, வசந்தி, 2006 சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் சார்பாக போட்டி போடுவதற்கு, டிக்கெட் கேட்கிறார்.

 

இவரை விட பல பேர், பெட்டியோடு காத்திருந்ததால், அந்த வாய்ப்பு பறி போகிறது. தன் முயற்சியில் சற்றும் மனந் தளராத வசந்தி, மீண்டும் ஏதாவது ஒரு அரசுப் பதவி கிடைக்குமா என்று முயற்சி செய்கிறார். கருணாநிதியின் கடைக்கண் பார்வை இவருக்கு கிடைக்கிறது.

 

சிறுபான்மையினர் கமிட்டி உறுப்பினர் பதவி கிடைக்கிறது.   அரசு ஊழியர் பதவியை ராஜினாமா செய்கிறார். அப்படியே பொழப்பை பாத்துக்கிட்டு போனா சம்பாதிக்க முடியுமா ?

 

கணவர் ஸ்டான்லி ராஜன் அருமையாக ஒரு வேலையைத் தொடங்குகிறார்.   அது என்ன வேலை தெரியுமா…. ? அரசு வங்கிகளை ஏமாற்றுவது.

 

உங்களில் யாராவது ஒருவர் கடன் வேண்டும் என்று வங்கிக்கு செல்லுங்களேன்.   என்னென்ன கேள்வி கேட்பார்கள் உங்களிடம். இங்க கையெழுத்து போடு, அங்க போடு, இப்டி போடு, அப்டி போடு, இந்த டாகுமென்ட குடு, அந்த டாகுமென்ட குடு என்று என்னென்ன சொல்லி டபாய்ப்பார்கள் ?.

 

ஆனால், ஸ்டான்லி ராஜன் முதன் முதலில், அண்ணா நகரில் பேங்க் ஆப் பரோடாவில், முகப்பேரில் உள்ள தனது பிளாட்டை அடமானமாக வைத்து 40 லட்ச ரூபாய் கடன் வாங்குகிறார்.   வெறும் 40 லட்சத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது.   அதனால், அதே முகப்பேர் பிளாட்டின் பத்திரத்தை போலியாக தயாரித்து (வேறு என்ன செய்வது, பரோடா வங்கியில் அசல் இருக்கிறதே …) ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா அண்ணா சாலை கிளையில் 25 லட்சம் வாங்குகிறார்.   என்ன இந்த பேங்க் கார பசங்க ரொம்ப நல்லவங்களா இருக்காங்களே என்று, அடுத்தடுத்து, பல பத்திரங்களை தயாரித்து, எல்ஐசி, திருவாங்கூர் வங்கி, விஜயா வங்கி, சிண்டிகேட் வங்கி, ஹைதராபாத் ஸ்டேட் வங்கி, தேனா வங்கி என்று பின்னி எடுக்கிறார்.

 

இந்த அத்தனை கடன்களிலும், உத்தரவாதமாக சமர்ப்பிக்கப் பட்டவை போலி ஆவணங்கள். அத்தனை கடன்களிலும், வசந்தி ஸ்டான்லி, அதாங்க திமுகவின் கருவூலம், ஜாமீன்தாரர் அல்லது, இணை கடன்தாரர்.

 

வாங்கின கடனை திருப்பி கட்டினால் வங்கிகள் கண்டு கொள்ளாது. ஒரு வங்கியில் கூட வாங்கிய கடனை கட்டவில்லை. உடனே, சம்பந்தப் பட்ட வங்கிகள், ஆவணங்களை எடுத்து சொத்தை ஏலம் விடலாம் என்று பார்த்தால், ஒரே வீட்டை ஏலம் விட, ஒன்பது வங்கிகள் வந்ததைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைகிறார்கள். என்னடா இது என்று ஆவணங்களை சரி பார்த்தால், அத்தனையும் போலி என்பது தெரிய வருகிறது.

 kalaignar-vairamuthu-3-31-08-10

உடனே, சென்னை மாநகர காவல் துறை ஸ்டான்லி ராஜன் மீதும், வசந்தி ஸ்டான்லி மீதும் ஏழுக்கும் மேற்பட்ட வழக்குகளை பதிவு செய்கிறது. ஸ்டான்லி ராஜன் உடனடியாக கைது செய்யப் படுகிறார். வசந்தி ஸ்டான்லி தான் இருட்டுக் கடை அல்வாக் காரருக்கு நெருக்கமாயிற்றே….   காவல்துறை, அவரை முன்ஜாமீன் வாங்கச் சொல்லி யோசனை தெரிவிக்கிறது.

 

வசந்தி முன்ஜாமீன் தாக்கல் செய்கிறார்…   அந்த வழக்கு விசாரணைக்கு வரும் போது, 25 லட்சம் பெறுமானமுள்ள சொத்துக்கான பத்திரத்தை வசந்தியோ, அல்லது வசந்தி சார்பாக வேறு ஒருவரோ நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், இரண்டு நபர்கள், தலா ஒரு லட்சம் மதிப்புள்ள ஜாமீன் தாரர்களாக இருக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை விதிக்கிறது.

 

இது வரை கதை சரி.   இதற்குப் பிறகுதான் திடுக்கிடும் திருப்பங்கள்.  வசந்தி நீதிமன்ற உத்தரவுப் படியே பிணைதாரர்களை நிறுத்தி, முன்ஜாமீன் பெறுகிறார்.

 

வசந்திக்கு ஜாமீன் தாரர்கள் மூன்று பேர்.   முதலாமவர் கே.ராமதாஸ். தந்தை பெயர் கண்ணன். முகவரி 25/38, கோவிந்த சிங் தெரு, புளியந்தோப்பு, சென்னை 12.

 

அடுத்த ஜாமீன்தாரர் கே.ராதாகிருஷ்ணன். தந்தை பெயர் கண்ணன். முகவரி எண் 2/421, முதல் குறுக்குத் தெரு, ராஜீவ் காந்தி நகர், மேடவாக்கம், சென்னை.

 

மூன்றாவது ஜாமீன் தாரர் எம்.புஷ்பராஜ், தந்தை பெயர் முனுசாமி. எண் 99, போக்குவரத்து சந்து தெரு, புதுப்பேட்டை, சென்னை.2

 

இதில் முதல் ஜாமீன்தாரர் ராமதாஸ் செங்கல்பட்டு மாவட்டம், சைதாபேட்டை தாலுகா, 135, சேலையூர் கிராமம், விவேகானந்தர் தெரு, கதவு எண் 198ல், சர்வே எண் 212/பி ல் உள்ள பிளாட் எண் 4561 விஸ்தீரணம் 2400 சதுர அடியில் உள்ள வீடும் காலி மனையும் அடங்கிய சொத்துப் பத்திரத்தை வசந்திக்காக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கிறார். இவருக்கு இந்த அளவுக்கு சொத்து உள்ளது என்று தாம்பரம் தாசில்தார், ஒரு சொத்துச் சான்றிதழையும் வழங்குகிறார்.

 

இரண்டாவது நபர் ராதாகிருஷ்ணன், தனக்கு எண் 28, அம்மன் கோயில் தெரு, ஈஞ்சம்பாக்கம் கிராமம், தாம்பரம் தாலுகா என்ற முகவரியில் நான்கு செண்ட் மதிப்பில் ஒரு ஓட்டு வீடும் காலி மனையும் இருப்பதாக காட்டி, தாம்பரம் தாசில்தார் அலுவலகத்தில் ஒரு சொத்துச் சான்றிதழை தாக்கல் செய்திருக்கிறார்.

 

மூன்றாவது நபர், புஷ்பராஜ், அவருக்கு சென்னை தாம்பரம் தாலுகா, சேலையூர் கிராமம், திருவள்ளுவர் தெருவில், நான்கு சென்ட் இடத்தில் ஒரு ஓட்டு வீடும், ஒரு காலி மனையும் இருப்பதாக காட்டியிருக்கிறார்.   இதற்கும் தாம்பரம் தாசில்தார் சான்று அளித்துள்ளார்.

 Kalinjar_87

இந்த ஆவணங்களின் அடிப்படையில், வசந்தி ஸ்டான்லி, கைது செய்யப் படாமல் முன்பிணை பெறுகிறார்.

 

இப்போது விஷயத்துக்கு வருவோம்.   ராமதாஸ் தனக்கு சொந்தமானது தாக்கல் செய்துள்ள 25 லட்ச ரூபாய் மதிப்புள்ள சொத்துப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள வீட்டிற்கு சென்றால், அப்படி ஒரு வீடே அங்கு இல்லை.   ராமதாஸ் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு சென்று பார்த்தால், அங்கு உள்ள ராமதாஸ் மாதம் 350 ரூபாய் வாடகை வீட்டில் குடியிருக்கும் ஒரு கூலித் தொழிலாளி.   ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த வீட்டையும் காலி செய்து விட்டு சென்று விட்டார்.   அந்த பத்திரத்தின் எண் 2856. தாம்பரம் பத்திரப் பதிவு அலுவலகத்தில் விசாரித்துப் பார்த்தால், அந்தப் பத்திரம் வேங்கை வாசல் கிராமத்தில் இருக்கும் ருக்குமணி என்பவரின் சொத்து. ராமதாசுக்கும் இந்த சொத்துக்கும் சம்பந்தமே இல்லை.

 

அடுத்த நபர் ராதாகிருஷ்ணன். அதுவும் கே.ராதாகிருஷ்ணன்.   இவர் தனது சொத்து என்று குறிப்பிட்டுள்ள, எண் 28, அம்மன் கோயில் தெரு, ஈஞ்சம் பாக்கம் என்ற முகவரியே போலி. அப்படி ஒரு சொத்து இல்லை. இந்த ராதாகிருஷ்ணன் கொடுத்த வீட்டு முகவரியும் போலி.

 

மூன்றாவது நபரான புஷ்பராஜ் தனக்கு சேலையூரில் சொத்து இருப்பதாக ஆவணம் தாக்கல் செய்துள்ளார். அந்த முகவரியில் அப்படி ஒரு வீடே இல்லை என்பது தெரிய வந்தது.  சரி இந்த நபரின் புதுப்பேட்டை முகவரியாவது சரியாக இருக்குமா என்று பார்த்தால், அந்த தெருவில் இரண்டு புஷ்பராஜுகள் இருந்தனர். ஒருவர் இறந்து விட்டார். மற்றொருவர், அவரது வீட்டை 1999ம் ஆண்டு விற்று விட்டு சென்று விட்டார்.

 

சரி. தாம்பரம் தாசில்தார் அலுவலகத்தில் சொத்துச் சான்றிதழ் கொடுத்திருக்கிறார்களே… அது எப்படி வழங்கப் பட்டது என்று விசாரித்தால், இதை விட பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது.

 

எஸ்.கோவிந்தராஜன், வட்டாட்சியர், (பொறுப்பு), தாம்பரம், தனது கடித எண் ந.க.459/2009 பி2 என்ற 22.04.2009 நாளிட்ட கடிதத்தில் இந்த மூன்று சொத்துச் சான்றிதழ்களும் பரிசீலிக்கப் பட்டது.   அந்த சான்றுகளில் தாம்பரம் வட்டாட்சியர் வி.ராமனாதன் என்று கையொப்பமிடப் பட்டுள்ளது.   மேற்குறிப்பிட்ட தேதிகளில், திரு.ராமனாதன் என்ற பெயர் கொண்ட வட்டாட்சியர் எவரும் இவ்வட்டத்தில் பணிபுரிய வில்லை. எனவே இந்தச் சான்றுகள் இந்த அலுவலகத்தில் வழங்கப் படவில்லை என்றும், மேலும் தாங்கள் தாக்கல் செய்துள்ள பட்டாக்களில் வட்டாட்சியர் கையொப்பம் இடப்பட்டுள்ளது. தனி நபர் பெயர்களில் வழங்கப் படும் பட்டாக்களில் வட்டாட்சியர் கையொப்பமிட்டு வழங்கப் படுவதில்லை. துணை வட்டாட்சியர் நிலையில்தான் பட்டாக்களில் கையொப்பமிடுதல் வழக்கம். மேலும் அதில் உள்ள கோபுர முத்திரையை ஆய்வு செய்ததில் அம்முத்தியும் இவ்வலுவலக முத்திரை கிடையாது. ஏனெனில் வட்டாட்சியர் அலுவலகம் என்று இவ்வலுவலக முத்திரை இருக்கும். ஆனால் தாங்கள் தாக்கல் செய்துள்ளவற்றில் வட்டாட்சியர் அலுவலர் என்று உள்ளது. எனவே மேற்படி சான்றுகள் இவ்வலுவலகத்தில் வழங்கப் படவில்லை என்றும், மெய்த்தன்மையற்றது என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.   இத்துடன் இவ்வலுவலகத்தில் பயன்படுத்தப் படும் வட்டாட்சியர் ரப்பர் ஸ்டாம்ப் முத்திரையையும், கோபுர முத்திரையையும் வெள்ளைத்தாளில் இட்டு இணைத்து அனுப்பியுள்ளேன் என்று கூறியுள்ளார்.

 

இது தொடர்பான ஆவணங்கள் இதோ.... .... .....

 

main_0001

main_0002

 

main_0003

 

main_0004

 

 

main_0005

main_0006

 

main_0008

 

main_0009

main_0010

 

main_0011

இப்போது ஆவணங்களோடு, வசந்தி ஸ்டான்லியின் வண்டவாளங்களை தண்டவாளத்தில் ஏற்றியாயிற்று.   இப்போது நடவடிக்கை எடுக்க வேண்டியது யார்… ? நமது கண்ணாயிரம் தான். அவர் அடுத்த வாரம் வரை கமிஷனராக இருப்பாரா என்பது தெரியவில்லை. ஆனால் ஒரு வேளை இருந்தால், நடவடிக்கை எடுப்பாரா ? வசந்தி ஸ்டான்லி மீது, போலி ஆவணங்களை தயாரித்து நீதிமன்றத்தை ஏமாற்றியதற்காக ஒரு புதிய வழக்கு பதிவு செய்வது இருக்கட்டும். உடனடியாக, சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய முன்ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று நடவடிக்கை எடுக்க வேண்டுமே… எடுப்பாரா கண்ணாயிரம்..

 

சவுக்கு வாசகர்கள் தான் முடிவு சொல்ல வேண்டும்.

 

Comments  

 
0 #122 m.Babu 2011-07-11 17:55
really super ivaluku pinnad aappu vaikathenga munnad vainga chee iva nenja nakka matta yellathayum nakkuva intha martin payala pathium konjam yeluthunga pa
Quote
 
 
0 #121 sridhar 2011-04-06 22:35
yenge sellum entha padhai yaro yararivaro,indh iya nattai patri kanum kanavu kanavagividum pol ulaadhu, i am still dreaming the words of abdul kalam.
Quote
 
 
0 #120 sivakumar 2011-03-20 20:27
[quote name="Puli Aatharavaalan"]ஆனந்த் அவர்களுக்கு,
கீழ்க்கண்ட இணையதளத்திற்கு சென்று தமிழில் எழுதலாம்.


நன்றி.சிவக்குமார்.
Quote
 
 
0 #119 Rajesh_101 2011-03-19 14:42
தமிழனின் தலை எழுத்து இதுதானா?
Quote
 
 
-1 #118 ajin 2011-02-07 15:15
Kalaignar: tamilarkale tamilarkale neengal yennai kadalil thooki pottalum kattumarathil oolal saithavathu mithappean, neengal atil yerinal alagiriyum stalinum ungalai kopalapuram veetil kondu poi viduvargal “admaigalaga”.
Quote
 
 
0 #117 Arjunan 2011-02-04 15:12
A single vegetable selling person has brought justice to the whole country which was corrupted (Tunisiya)

The above incident has waken-up big country Egypt to start another revolution, which is ongoing? hopefully, justice will be done.

In our countr...hmm..what to say....
Quote
 
 
+1 #116 JP 2010-12-30 13:29
EXCELLANT INVESTIGATION
Quote
 
 
0 #115 ranganathan 2010-12-28 09:56
very good investigative reporting.Then what is the big question. All of us know the corrupt ways of these indescent politicians. How to punish them?
Quote
 
 
+1 #114 Pradeep_P 2010-11-02 23:03
வசந்திக்கு வாசம் இல்லை என்றாலும் இன்னும் வசதி இருக்குபோல அது தான் இன்னும் எதுவும் நடக்க விளையோ ???
Quote
 
 
0 #113 RahmanI 2010-11-02 18:52
:sad: Andru Neethiyarasar Sarkaria sonnaar''Oozhalai scintifikka seyvadil MUKA via vital indiavil Yarum illai. That've 8 adi paymthaal MOONAKANA'
Parivarangal 8,16'32,_64 adi payvargal opportune!
Quote
 
 
0 #112 The Thalaivan 2010-11-01 05:57
:lol: :lol: :lol: :lol: :lol: :lol:
Quote
 
 
0 #111 devil 2010-10-29 22:09
MP of Tamilnadu is very famous in Delhi, so this is a alpam matter for her. Soon she will become PM of India, a long dream. Appurum parunga ammaniyin attaithai? Yaruku vendum India ya ? beram pesa vanga... vanga en vituku.
Quote
 
 
0 #110 VIJAY_USA 2010-10-28 17:49
In a nutshell - the current state of Tamilnadu is as great as a septic tank! More you dig, more will it stink!
Quote
 
 
+1 #109 கஸ்தூரிராஜா 2010-10-28 17:17
இங்கேயும் போய் படியுங்கள்

http://www.rsyf.blogspot.com/
Quote
 
 
+1 #108 VIJAY_DL 2010-10-28 17:14
ADGP NIYAMANAM PATTRI VIRIVAGA SOLLUNGAL YENENIL NAMMA KARUPPU EPPADI ULLE VANTHARU ENDRU THERINTHU KOLLA ASAIPADUGIREN
Quote
 
 
+4 #107 திருக்குவளை நல்லசக்த 2010-10-28 15:49
தமிழ் நாட்டை நாசப்படுத்தும் இந்த திமுக நிறுவனத்தின் தற்போதைய நிறுவனர் என் மாவட்டத்தை சேர்ந்தவர் என்று நினைக்கும் பொது வெட்க்கபடுகிறேன ். திமுக = ஸ்பெக்ட்ரம் , காங்கிரஸ் = அரசு பங்குகள் தனியாருக்கு விற்பனை (பலமான கூட்டணி) எங்கே செல்லும் இந்த நாடு? திமுக , அதிமுக இது இரண்டையும் விட்டா தமிழ்நாட்டுக்கு வேற நாதி இல்ல.என் கிராமத்திலே நான் திமுகவை சார்ந்தவன் இல்லை என்று சொல்ல முடியாத அளவுக்கு திமுக நிறுவனத்தின் ஆதிக்கம் அதிகமாகி விட்டது. என்கிறமாம் முழுவதும் டாஸ்மார்க் ஆள் திமுக விற்கு அடிமயகிவிட்டது.பெரியாரும் அண்ணாவும் சொல்லித்தந்த வலி இதுதானா?
Quote
 
 
+8 #106 aziz 2010-10-28 15:20
Quoting aziz:
[quote name="மாணிக்கவேல்"]ஸ்டாலின் நான்கு எழுத்து,
அழகிரி நான்கு எழுத்து,
கனிமொழி நான்கு எழுத்து,
கழகம் நான்கு எழுத்து ,
கலைஞர் நான்கு எழுத்து,

எங்களில் யாராவது ஒருவர் தொடர்ந்து அரியணையில் இருப்பது தமிழனின் தலை எழுத்து.

நன்றி: http://adrasaka.blogspot.com


தலை எழுத்தை திருத்த வந்திருக்கும் சவுக்கு நான்கு எழுத்து
Quote
 
 
+1 #105 aziz 2010-10-28 15:16
Quoting மாணிக்கவேல்:
ஸ்டாலின் நான்கு எழுத்து,
அழகிரி நான்கு எழுத்து,
கனிமொழி நான்கு எழுத்து,
கழகம் நான்கு எழுத்து ,
கலைஞர் நான்கு எழுத்து,

எங்களில் யாராவது ஒருவர் தொடர்ந்து அரியணையில் இருப்பது தமிழனின் தலை எழுத்து.

நன்றி: http://adrasaka.blogspot.com




gfuytu
Quote
 
 
+1 #104 பொதுஜனம் 2010-10-28 14:40
வாசகர்களே! இந்த கட்டுரையை படித்து விட்டு, நெஞ்சை நக்கினால் எம்.பி பதவி கிடைத்து விடும் என்று நினைத்து விடாதிர்கள். ;-)
Quote
 
 
+1 #103 கனிமொழி கபடநிதி 2010-10-28 13:38
Quoting suryan:
இந்த நாடு எப்போ உருப்படும்னு தெரியலையே? எல்லாரும் வீதில வந்து போராடுனாதான் நமக்கு விமோசனம்.

போராட்டம் அது இது ன்னு பொறப்பட்டீங்க பருப்புத்தான் திம்பீங்க. போடா, தடா,தேசியபாதுக் காப்பு, கருணா பாதுகாப்பு, சட்டம் அப்பிடின்னு நெறய சட்டம் கைவசம் வச்சிருக்காரு, சிலோன்கார ஆர்மிக்காரன் தமிழனை சுட்டுத்தள்றான் னு கண்கள் சிவக்க கொதிச்சாரு டைரக்டர் சீமான் இப்பொ மூணு மாசமா கொசு அடிக்கிறாரு. போராட்டத்துக்கு போனீங்க ஒங்களையும் புடிச்சி போடான்னு போடாவில உள்ள தள்ளிட்டு கெழவன் குஷ்பூவையும் வசந்தி அக்காவையும் ஒக்காரவச்சு மானாட மயிலாட பாத்து ரசிச்சிட்டு தேமேன்னு இருப்பாரு, ஆளை தூக்கி எறிங்க லேசான வழி அதுதான்.
Quote
 
 
0 #102 Rammmmm 2010-10-28 13:33
தமிழில் தட்டச்சு செய்ய அருமையான மென்பொருள் தரவிறக்கம் செய்து பயன் படுத்தவும்.
http://software.nhm.in/products/writer

இந்த மென்பொருளை எவ்வாறு பயன் படுத்துவது என்ற எளிய செயல் விளக்கத்திற்கு..
http://kmdfaizal.blogspot.com/2008/10/nhmwriter.html
Quote
 
 
+4 #101 கனிமொழி கபடநிதி 2010-10-28 13:30
Quoting suryan:
இந்த நாடு எப்போ உருப்படும்னு தெரியலையே? எல்லாரும் வீதில வந்து போராடுனாதான் நமக்கு விமோசனம்.

போராட்டம் அது இது ன்னு பொறப்பட்டீங்க பருப்புத்தான் திம்பீங்க. போடா, தடா,தேசியபாதுக் காப்பு, கருணா பாதுகாப்பு, சட்டம் அப்பிடின்னு நெறய சட்டம் கைவசம் வச்சிருக்காரு, சிலோன்கார ஆர்மிக்காரன் தமிழனை சுட்டுத்தள்றான் னு கொதிச்சாரு இப்பொ மூணு மாசமா கொசு அடிக்கிறாரு. போராட்டத்துக்கு போனீங்க ஒங்களையும் புடிச்சி போடான்னு போடாவில உள்ள தள்ளிட்டு கெழவன் குஷ்பூவையும் வசந்தி அக்காவையும் ஒக்காரவச்சு மானாட மயிலாட பாத்து ரசிச்சிட்டு தேமேன்னு இருப்பாரு, ஆளை தூக்கி எறிங்க லேசான வழி அதுதான்.
Quote
 
 
+1 #100 kumaran123 2010-10-28 13:24
where is Tamil Nadu Police !?

are they really working or damm ******* they doing please resign your job and beg on the road side

I will really follow this to CBI and RAW.

please contact me I am one of the human rights member
Quote
 
 
+2 #99 SUJA 2010-10-28 13:22
1
Quote
 
 
+3 #98 kumaran123 2010-10-28 13:21
he done lot of story writing now he should write how to develop bribe over the world.

innum kalaingar lives for 10 year he can buy total india... intha naadum naattu makkalum nasamaa povanga...
Quote
 
 
+4 #97 rukku 2010-10-28 13:14
Quoting suryan:
இந்த நாடு எப்போ உருப்படும்னு தெரியலையே? எல்லாரும் வீதில வந்து போராடுனாதான் நமக்கு விமோசனம்.

ஏன் போராட்டமெல்லாம் ,, தமிழ்நாட்டின் அழிவுக்கு காரணம் கருணாநிதி என்கிற 87 வயதைத்தாண்டிய கிழம்,, அறிவை பயன் படுத்தி கருணாநிதியை கட்டை பிடுங்கிவிடுங்க ள்,, பிரச்சினை ஓவர்,,,
Quote
 
 
+1 #96 Puli Aatharavaalan 2010-10-28 13:02
ஆனந்த் அவர்களுக்கு,
கீழ்க்கண்ட இணையதளத்திற்கு சென்று தமிழில் எழுதலாம்.

http://www.google.com/transliterate/
Quote
 
 
+3 #95 suryan 2010-10-28 12:17
இந்த நாடு எப்போ உருப்படும்னு தெரியலையே? எல்லாரும் வீதில வந்து போராடுனாதான் நமக்கு விமோசனம்.
Quote
 
 
+1 #94 J. ANAND 2010-10-28 10:22
HOW CAN I POST MY COMMENTS IN TAMIL HELP ME PLEASE
Quote
 
 
+3 #93 திராவிட வேங்கை 2010-10-28 00:33
Quoting Kumar.T:
வாவ்... இன்று மட்டும் 24000 ஹிட்ஸ்!!!

எப்படி இவ்வளவு?? ... ஒருவேளை கருணாநிதி குடும்பத்தில் உள்ள எல்லோரும் சவுக்கு வெப்‌ஸைட் படிக்க ஆரம்பித்துவிட்ட ார்களா??? :D :eek: :P


எல்லா தி.மு.க. உடன்பிறப்புகளுக ்கும் ஒரு அன்பான வேண்டுகோள்:
தம்பி நீ தினமும் சவுக்கு வெப்சைட்டைப் படிப்பாயாக..
இன்று என்னைப் பற்றிய செய்தி வந்திருக்கிறது, நாளை உன்னைப் பற்றிய செய்தியாக இருக்கலாம். அதனால் தினமும் படியுங்கள் சவுக்கு.நெட்

இந்த அன்பான கட்டளையினால் இருக்கலாம் சகோதரா
Quote
 
 
+3 #92 Kumar.T 2010-10-27 23:49
வாவ்... இன்று மட்டும் 24000 ஹிட்ஸ்!!!

எப்படி இவ்வளவு?? ... ஒருவேளை கருணாநிதி குடும்பத்தில் உள்ள எல்லோரும் சவுக்கு வெப்‌ஸைட் படிக்க ஆரம்பித்துவிட்ட ார்களா??? :D :eek: :P
Quote
 
 
+5 #91 தேன் வண்டு 2010-10-27 23:06
Quoting முத்து:
தமிழர்களே தமிழர்களெ
நீங்கள் என்னை கடலில் தூக்கிப் போட்டாலும்
அதில் நான் கட்டு மரமாய் மிதப்பேன்..
அதிலேறி நானும் எனது பிள்ளைகளும் உற்றார் உறவுகளும் உயிர் பிழைத்து தப்பிச் செல்வோம்...

எங்கை தப்பிச்செல்லுறத ு திரும்ப உங்களுக்கு ஆப்படிக்க வருவேன்,
Quote
 
 
+6 #90 முத்து 2010-10-27 22:54
தமிழர்களே தமிழர்களெ
நீங்கள் என்னை கடலில் தூக்கிப் போட்டாலும்
அதில் நான் கட்டு மரமாய் மிதப்பேன்..
அதிலேறி நானும் எனது பிள்ளைகளும் உற்றார் உறவுகளும் உயிர் பிழைத்து தப்பிச் செல்வோம்...
Quote
 
 
+5 #89 rukku 2010-10-27 22:52
மனதைதொட்டுச்சொல ்லுகிறேன் இந்தப்பின்னூட்ட ங்களை பார்க்கும்போது வேறு வளர்ந்த ஒரு நாட்டுக்காரன் மொழிபெயர்த்துக் கூட படித்துவிடக்கூட ாது என்று என் மனம் அங்கலாய்க்கிறது , நானும்தான் இந்த ஜென்மங்களுக்கு படு மட்டமான கொமண்ட் எழுதியிருக்கிறே ன்,(வெட்கப்படுக ிறேன்)சம்பந்தப் பட்டவர்கள் திருந்திக்கொள்ள வேண்டும், விளையாட்டாக பொழுதுபோக்கிற்க ாக எழுதப்பட்டதென்ற ோ காழ்ப்புணர்ச்சி யில் எழுதப்பட்டதென்ற ோ நியாயம் கற்பித்து அரசியல் விமர்சனங்கள் என்று தம்மையும் ஏமாற்றி மக்களை தொடர்ந்து ஏமாற்ற முயலக்கூடாது. எரிச்சலிலும் இயலாமையின் கோபத்திலும் வெளிவரும் உண்மைகள் இவை, அரசியலில் இருப்பவர்கள் அப்படி இப்படி இருப்பது இயல்புதான் அதற்காக பன்றிகளின் கூட்டம்போல் தொடர்ச்சியாக நடந்துகொள்ளக்கூ டாது முதல்வர் கருணாநிதி அவர்கள் சிந்திப்பார்கள் என நம்புகிறேன் ,நன்றி,
Quote
 
 
+6 #88 கனிமொழி கபடநிதி 2010-10-27 21:28
Quoting காலவன்:
உதயநிதி ஸ்டாலின் ,துரைதயாநிதி இருவரும் சினிமாவில் முதலீடு செய்கிற பணமெல்லாம் அவர்களது அப்பாக்கள் ஸ்டாலினும் ,அழகிரியும், முட்டை தூக்கி சம்பாதித்தது போல அந்த உழைப்பின் சிகரங்களை பற்றியோ அவர்களது சொத்துகள் பற்றியோ ஏன் எழுத விருப்பமில்லையோ ..?

அந்தக்காசெல்லாம ் தா(த்)தா எழுதுகோல் கொண்டு பராசக்தி தொடங்கி குஷ்புவின் குலுங்கும் முந்தானை படம் வரை வசனம் எழுதி குவித்த செல்வத்திரவியங் கள் தா(த்)தா இந்த 87 வயோதிகத்திலும் ஓயாது தள்ளு வண்டியிலிருந்து உழைப்பதெல்லாம் தமிழ் உடன் பிறப்புக்களுக்க ும் மீந்திம் சிறுதுளி துரையும் உதயாவும் மக்கள் விழிப்'புணற்சிக்கு' பொதுநோக்கோடு படமெடுக்கின்றனர ்,இதை பெரிது படுத்துவதா?,
Quote
 
 
+6 #87 காலவன் 2010-10-27 20:36
உதயநிதி ஸ்டாலின் ,துரைதயாநிதி இருவரும் சினிமாவில் முதலீடு செய்கிற பணமெல்லாம் அவர்களது அப்பாக்கள் ஸ்டாலினும் ,அழகிரியும், முட்டை தூக்கி சம்பாதித்தது போல அந்த உழைப்பின் சிகரங்களை பற்றியோ அவர்களது சொத்துகள் பற்றியோ ஏன் எழுத விருப்பமில்லையோ ..?
Quote
 
 
+4 #86 திருமுருகன் 2010-10-27 19:45
Quoting தங்கம்.முருகேசன்:
இருட்டு அல்வா தெரிந்துகொள்ள ஒரு குழு கொடுங்களே !


அது மின்வெட்டுத் துறை அமைச்சருங்கோ
Quote
 
 
+1 #85 மருது 2010-10-27 19:44
வாவ் சவுக்கு,

இன்று மட்டும் 22,000 ஹிட்ஸ்,
ஹாட்ஸ் ஆஃப் சவுக்கு,
தங்கள் இயக்கம் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
Quote
 
 
+5 #84 KOVAI PRIYAN 2010-10-27 17:52
தோழர்களே இது DMK .. AIADMK என்பது அல்ல பிரச்சினை..இரண்டு மே கயவர் கூட்டம் இனி என்ன செய்யவேண்டும் ..யாருன் திருந்த மாட்டார்கள் என்று கூறுவதை விட நம் அனைவரும் சிறிய தபால் அட்டையிலாவது முதல்வரின் தனிபிரிவு அல்லது உயர்நீதிமன்றத்த ின் கவனத்திற்கு அனுப்புவோம் .கண்டிப்பாக என்றாவது ஒருநாள் TN சேசன் அல்லது கலாம் போன்று நம் வேண்டுதலுக்காக ஒருவர் வரும் காலம் இவை பயன்படும். மேலும் அநீதி கண்டு பொங்கதான் முடியவில்லை இதாவது செய்தோம் அல்லது செய்து வரும் சவுக்குகு துணை நின்றோம் என்ற மனதிருப்தியவது கிடைக்கும்
Quote
 
 
+1 #83 தங்கம்.முருகேசன் 2010-10-27 17:52
இருட்டு அல்வா தெரிந்துகொள்ள ஒரு குழு கொடுங்களே !
Quote
 
 
+2 #82 தங்கம்.முருகேசன் 2010-10-27 17:49
கலைஞருக்கு பாராளுமன்றத்துக ்கு அனுப்ப நல்ல அறிவாளிகளே கிடைக்கவில்லைய.இனம் இனத்தோடுதான் சேரும் போல !
Quote
 
 
+1 #81 citizan 2010-10-27 14:36
vaw super savukku
Quote
 
 
+5 #80 கனிமொழி கபடநிதி 2010-10-27 13:26
கருணாநிதி என்றால் நடிப்பு, கபடதாரி, கடிதம், ஊழல், 1/2நாள் உண்ணாவிரதம், பலதாரம்.......
அழகிரி என்றால் அரிவாள், தினகரன் த கிருஷ்ணன்,ஆங்கி லம்,மதுரை........
ஸ்ராலின் என்றால் சன் செய்திவாசிப்பாள ினியின் கற்பு, உதயநிதியின் பல்லாயிரங்கோடி வரவுக்கு உழைப்பு........
கனிமொழி என்றால் ராசா,கஸ்பர், ஸ்பெக்ரம் எக்ஸ்ரா எக்ஸ்ரா,...............
தமிழரசு என்றால் கலைஞர் ரி வீ, வம்ஷம் வரை,..............
கலாநிதி தயாநிதி என்றால் ,நிதி ,எந்திரன் தந்திரன் ,சன், பாராளுமன்றம்...........
வஸந்தி என்றால் சொட்டு துளி நீர், இருட்டு அல்வா மின்மினி,...........
Quote
 
 
+5 #79 தேன் வண்டு 2010-10-27 13:00
./.வசந்தி ஸ்டான்லியின் வண்டவாளங்களை தண்டவாளத்தில் ஏற்றியாயிற்று. இப்போது நடவடிக்கை எடுக்க வேண்டியது யார்…/ரயிலில்லா தண்டவாளத்தின் உதவியால் அண்ணாவை ஏமாற்றி அரியணையில் அடம்பிடிக்கும் காட்டெருமை கருணாவும்,, சக்தியில்லா மின்சாரத்துறைக் கு சித்தமாக மந்திரியாயிருக் கும் ஆள்க்காட்டி வீராச்சாரியும் நிச்சியம் நடவடிக்கையில்லா த நடவடிக்கையெடுத் து நாட்டு நலனுக்காக வஸதமுல்லையை காத்துவிடுவார்க ள்,ஜீபூம்பா,
Quote
 
 
+3 #78 மாணிக்கவேல் 2010-10-27 11:43
ஸ்டாலின் நான்கு எழுத்து,
அழகிரி நான்கு எழுத்து,
கனிமொழி நான்கு எழுத்து,
கழகம் நான்கு எழுத்து ,
கலைஞர் நான்கு எழுத்து,

எங்களில் யாராவது ஒருவர் தொடர்ந்து அரியணையில் இருப்பது தமிழனின் தலை எழுத்து.

நன்றி: http://adrasaka.blogspot.com
Quote
 
 
+1 #77 வேல்முருகன் 2010-10-27 11:41
Quoting Muthu:
முன்னாள் எ எஸ் பி கஞ்சா வளக்குறான்..
முன்னாள் எம் எல் எ வழிப்பறி செய்யிறான்
ஒரு சி(சீ)ட்டிங் எம் பி இது கூடசெய்யக் கூடாதா..?


சரியாகச் சொன்னீர்கள் தோழரே
Quote
 
 
+2 #76 pathirikaikari 2010-10-27 11:06
Valthukkal.. media persons should learn courage and confidence, hard work from Savukku,,,I salute u Savukku...
Quote
 
 
+1 #75 Anbukkumaran 2010-10-27 10:22
Everyone must appreciate Annan Savukku's courage and support for doing something which we can't even think.
Quote
 
 
+2 #74 jeri 2010-10-27 10:18
karunai maranam thamilan vazvu
Quote
 
 
+4 #73 Anbukkumaran 2010-10-27 10:15
Quoting பச்சைமாலு:
காண்டாமிருகம் தப்பித்தவறி அடுத்ததடவை ஆட்சிக்கு வந்தால், குஷ்புவுக்கு நிச்சியம் மந்திரிப்பதவி, மானாட மயிலாட நமீதாவுக்கு ஹிந்தி ந்ல்லாவரும் என்பதால் மத்தியமந்திரி, மத்தியிலிருக்கு ம் அழகிரிக்கு இங்கிலிஷ் வரமறுப்பதால் இணை முதல்வர், மகள் கனியை சபாநாயகர் அல்லது ஜனாதிபதி ஆக்குவதற்கு சோனியாவையும் ராகுல்கானையும் காண்டாமிருகம் டில்லிக்குப்போய ் நெருக்கடி கொடுத்து நிறைவேற்றுவார் தமிழனுக்கு நாமம்,


Super!!!
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 112 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday6260
mod_vvisit_counterYesterday10391
mod_vvisit_counterThis week6260
mod_vvisit_counterLast week80132
mod_vvisit_counterThis month208992
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12731111