முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
கருப்பு ஆடுகள்.. … … அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 20
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
திங்கட்கிழமை, 05 டிசம்பர் 2011 18:09

 

எந்தத் துறையில் தான் கருப்பு ஆடுகள் இல்லை ?  எல்லா துறைகளிலும் உள்ளது போலவே, கருப்பு ஆடுகள் வழக்கறிஞர்களிலும் இருக்கின்றன.  அப்படிப்பட்ட கருப்பு ஆடுகள் சில வெள்ளியன்று தீக்கதிர் பத்திரிக்கையின் புகைப்படக் கலைஞரை கடுமையாக தாக்கின.

 


IMG_5136

 

சவுக்கு இரண்டு பிரிவினருக்கு தன் வாழ்க்கையில் மிகவும் கடன் பட்டிருக்கிறது.  ஒன்று பத்திரிக்கையாளர்கள்.  மற்றொன்று வழக்கறிஞர்கள்.   வழக்கறிஞர்கள் மட்டும் இல்லையென்றால், கருணாநிதி அரசு, சவுக்கின் கதையை என்றோ முடித்திருக்கும்.   அப்படி வழக்கறிஞர்கள் சமுதாயத்திற்கு சவுக்கு கடமைப் பட்டிருந்தாலும், அவர்கள் தவறிழைக்கையில் அதை சுட்டிக் காட்டத் தவறுவது, மனசாட்சிக்கு செய்யும் துரோகம்.

 

வெள்ளிக் கிழமை அன்று சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் ஒரு சம்பவம் நடந்தது.  குடும்ப நீதிமன்றத்தின் அருகே விவாகரத்து வழக்கு தொடுத்திருந்த ஒரு வழக்கறிஞருக்கும், ஒரு கணவருக்கும் தகராறு.  இந்தத் தகராறில் கைகலப்பு ஏற்பட்டு, அந்த கணவரை 100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் சேர்ந்து அடித்து உதைத்தனர்.   அப்போது அந்த இடத்தில் இருந்த பிரகாஷ் என்ற இளைய புகைப்படக் கலைஞர் படம் எடுத்தார்.

 

அவ்வளவுதான் !!!.  அத்தனை வழக்கறிஞர்களும் சேர்ந்து அந்த புகைப்படக் கலைஞரை தாறுமாறாக அடிக்கத் தொடங்கினர்.  கேமராவை பிடுங்கிக் கொண்டனர். அப்போது அருகே இருந்த ஒரு இன்ஸ்பெக்டர் தலையிட்டு, அந்தப் புகைப்படக் கலைஞரை காப்பாற்றி எஸ்பிளனேடு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார்.

 

தகவல் அறிந்த பத்திரிக்கையாளர் சங்க நிர்வாகிகள் உடனடியாக அந்த இடத்துக்கு விரைந்து வந்தனர்.   சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் மோகனகிருஷ்ணனும் செயலார் அறிவழகனும் வந்தார்கள்.   இரண்டு மணி நேரம் பேச்சுவார்த்தை நடந்தது.   பேச்சுவார்த்தையின் முடிவில், சேதமடைந்திருந்த கேமராவை மீட்டுக் கொடுத்தனர் காவல்துறையினர்.   மோகனகிருஷ்ணன், இனி இது போன்ற சம்பவங்கள் நடக்காது என்று உறுதியளித்தார். அந்த உறுதியின் அடிப்படையில் பத்திரிக்கையாளர்களும் வழக்கறிஞர்களும் கலைந்து சென்றனர்.  காவல்துறை அதிகாரிகள் நிம்மதிப் பெருமூச்சு விட்டதைப் பார்க்க முடிந்தது.

 

ஆனால் அடி வாங்கிய பிரகாஷின் கண்களில் கண்ணீர்.  தன் வேலையைச் செய்ததற்காக தன்னை அடித்த வழக்கறிஞர்களை எதுவுமே செய்ய முடியவில்லையே என்ற ஆற்றாமை தெரிந்தது.

 IMG_5138

இந்தச் சம்பவத்தை ஒரு தனிப்பட்ட சம்பவமாக பார்க்க முடியாது.   சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் இது போல எத்தனையோ சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

 

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு சம்பவம்.  வழக்கறிஞர் சங்கரசுப்புவின் மகன் கொலை தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தது.  அந்த வழக்கு முடிந்ததும்  திடீரென்று சலசலப்பு.  அந்த நீதிமன்றத்தில் பார்வையாளர் பகுதியில் சந்தேகத்திற்கிடமான ஒரு நபர் இருந்தார் என்று யாரோ சொல்ல, உடனடியாக அந்த நபர் பிடிக்கப் பட்டு வழக்கறிஞர்களால் சூழப்பட்டார்.  அவர் நான் காவல்துறையில் பணியாற்றும் கான்ஸ்டபிள் என்று சொன்னது யார் காதிலும் ஏறவில்லை.  ஒரு வழக்கறிஞர் அவர் சட்டையைப் பிடித்து இழுத்தார்.  ஒருவர் அவரை அடிக்க முயற்சி செய்தார்.  அவரின் பாக்கெட்டிலிருந்த செல்போன்கள், பர்ஸ், அடையாள அட்டை உள்ளிட்டவை பிடுங்கப் பட்டன.  இதற்குள், அந்த கான்ஸ்டபிள் பணியாற்றும் இன்ஸ்பெக்டருக்கு தகவல் போனதும் அவர் அந்த இடத்துக்கு வந்தார்.  இன்ஸ்பெக்டர் வந்ததும், கான்ஸ்டபிளை விட்டு விட்டு இன்ஸ்பெக்டரை அடிக்க பாய்ந்தார்கள்.   இதைத் தடுக்க தலையிட்ட வழக்கறிஞர் புகழேந்தி இழுத்து தள்ளப் பட்டார்.

 

 

இவ்வாறு நடக்க காரணம் என்னவென்றால் சங்கரசுப்புவின் மகன் வழக்கில் என்ன நடக்கிறது என்று பார்ப்பதற்கு யாரோ உளவு பார்க்க வந்திருக்கிறார்களாம்.

 

எத்தனை அற்பத்தனமாக இருக்கிறது ?  இன்று இருக்கும் தகவல் சாதனங்களால், தொலைபேசியில் இதைச் சொல்லி விட   முடியாதா ?    மேலும், நீதிமன்றத்தில் நடப்பதைப் பார்ப்பதால் என்ன தெரிந்து விடப் போகிறது ?  இந்தச் சம்பவத்தில் முன்னணியில் நின்று அந்த இன்ஸ்பெக்டரை தாக்குவதில் முன்னணியில் நின்ற வழக்கறிஞர் தன்னை மார்க்சிஸ்ட் கட்சியின் உறுப்பினர் என்று அழைத்துக் கொள்வார் என்பது குறிப்பிடத் தக்கது.  பின்னர் இரண்டு மணி நேரம் கழித்து அந்த காவலரின் செல்போனும், பர்ஸூம் கிடைத்தது.

 

இது போல சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் பல்வேறு சம்பவங்கள் நடந்துள்ளன.  குறிப்பாக குடும்ப நீதிமன்றத்துக்கு வரும் கணவனோ, மனைவியோ இது போன்ற தாக்குதல் சம்பவங்களுக்கு ஆளான நேர்வுகள் ஏராளம்.  இந்தச் சம்பவங்களில் ஈடுபடும் வழக்கறிஞர்களின் எண்ணிக்கை வெகு குறைவு.  ஆனால் இவர்கள் தங்களின் இந்த வன்முறைச் செயலின் மூலம் நினைத்ததைச் செய்ய முடியும் என்ற எண்ணத்தோடே இருக்கிறார்கள்.  காரணம், இவர்களை காவல்துறையோ, வழக்கறிஞர் சங்கமோ எதுவுமே செய்ய முடியாது என்ற துணிச்சலே.   உண்மையில், ஒரு தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர் என்று அடையாளம் காணப்பட்டாலும் கூட, அந்த வழக்கறிஞரை கைது செய்வது என்பது நடக்கவே நடக்காத காரியம்.   ஒரு வழக்கறிஞரை கைது செய்தால் உடனே நூற்றுக்கணக்கில் வழக்கறிஞர்கள் திரண்டு சென்று போராட்டம் நடத்தும் வழக்கம் இன்றளவிலும் தொடர்ந்து வருகிறது.

 
IMG_5135

இது போல காவல்துறையினரை பல முறை தாக்கியும், அவதூறாகப் பேசிய சம்பவங்களும் பல்வேறு முறை நடந்துள்ளதன் தொடர்ச்சியாகவே 19/2 அன்று வழக்கறிஞர்கள் மீது தாக்குதல் தொடுக்கச் சொல்லி ராதாகிருஷ்ணன் நாயுடு உத்தரவிட்டதும் தங்கள் நெடுநாளைய கோபத்தை வழக்கறிஞர்கள் மீது கொட்டித் தீர்த்தார்கள் காவல்துறையினர்.  அப்பாவி வழக்கறிஞர்கள் காவல்துறையினரால் கடுமையாகத் தாக்கப் பட்ட போதும் கூட, பொது மக்கள் மத்தியில் வழக்கறிஞர்களுக்கு ஆதரவு இல்லாமல் போனது வழக்கறிஞர்களின் இந்த நடத்தை காரணமாகவே…

 

நம்மில் ஒருவர் காவல்துறையினரிடம் சிக்கினால், அவர்கள் அடித்துத் துவைப்பதும், உயர்நீதிமன்றத்தில் ஒரு காவல்துறையினரோ, பொதுமக்களோ சிக்கினால் அவர்களை அடிப்பதும், படித்த நாகரீகமான மனிதன் செய்யும் செயலா ?  மிருகங்கள் தானே இப்படிப் பட்ட வேலையில் ஈடுபடும்.   தன்னுடைய ஏரியாவுக்குள் நுழைந்த ஒரு நாயை, மற்ற நாய்கள் அனைத்தும் சேர்ந்து கடித்துக் குதறுவதைப் போல அல்லவா உள்ளது இது ?

 

காவல்துறையினரின் பல்வேறு மனித உரிமை மீறல்களை, நீதிமன்றத்தின் உதவியோடு அம்பலப்படுத்தும் சிறப்பான பணியில் ஈடுபட்டுள்ள வழக்கறிஞர்களே மனித உரிமை மீறலில் ஈடுபடுவதை மன்னிக்கவே முடியாது.

 

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் நிர்வாகிகள் இது போன்ற செயல்களுக்கு உறுதியாக முற்றுப் புள்ளி வைக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும்.   பொதுமக்கள் மீதோ, காவல்துறையினர் மீதோ தாக்குதலில் ஈடுபடும் வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் படும் என்று வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.  இதனால் சில வழக்கறிஞர்கள் கோபம் கொள்ளக் கூடும்.   சங்க நிர்வாகிகளை ஏசக் கூடும்.  ஆனாலும் பரந்துபட்ட பொதுமக்களுக்காகவே வழக்கறிஞர்கள் இருக்கிறார்கள் என்பதை மறந்து விடக் கூடாது.   இப்படிப்பட்ட ஒரு நடவடிக்கையால், காவல்துறையினரும், பொதுமக்களும், வழக்கறிஞர்களை இன்னும் மரியாதையோடு பார்ப்பார்கள் என்பதை சொல்ல வேண்டியதில்லை.

 

பத்திரிக்கையாளர் பிரகாஷ் தாக்கப் பட்ட சம்பவத்தில் குறிப்பிட வேண்டிய மற்றொரு வருத்தத்திற்குரிய செய்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியாற்றும் பத்திரிக்கையாளர்களைப் பற்றியது.    சென்னை உயர்நீதிமன்ற பீட்டில் பத்திரிக்கை யாளர்களாகப் பணியாற்றும் பலர் தங்களை வழக்கறிஞர்களாகவே நினைத்துக் கொள்கிறார்கள்.  சிலர் நீதிபதிகளாகவும் நினைத்துக் கொள்கிறார்கள். தோழர் பிரகாஷ் தாக்கப் பட்டு எஸ்பிளனேடு காவல்நிலையத்தில் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்த போது சென்னை உயர்நீதிமன்ற பத்திரிக்கையாளர்களில் ஒருவர் கூட காவல்நிலையத்திற்கு வரவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.  வந்தால் வழக்கறிஞர்கள் கோபித்துக் கொள்வார்களாம்.

 

இவர்களைப் பார்த்துதான் பாரதி, “சொந்த சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும் சிந்தை இறங்கா ரடீ - கிளியே செம்மை மறந்தா ரடீ” என்றான்.

 

தன்னைப் போன்ற ஒரு சக பத்திரிக்கையாளன் தாக்கப் பட்ட போது, அவனோது காவல் நிலையம் சென்று தன்னுடைய ஆதரவை தர வேண்டும் என்ற குறைந்தபட்ச மனிதாபிமானம் இல்லாத இந்தப் பத்திரிக்கையாளர்களை பிழைப்புவாதிகள் என்று சொல்லலாமா என்று தெரியவில்லை.   இவர்கள் அத்தனை பேரும், ஒரு நிர்வாகத்திற்காக, ஒரு முதலாளியின் கீழ் வேலை பார்ப்பவர்கள் என்பதை மறந்து விடுகிறார்கள்.  இன்று ஹைகோர்ட் பீட்.  நாளை வேறு ஒரு பீட்.   ஆனால் இவர்களுக்கு ஒரு துன்பம் என்றால், நாளை இவர்களுக்காக குரல் கொடுக்கப் போவது, பத்திரிக்கையாளர் சங்கமே, வழக்கறிஞர்கள் அல்ல என்பதை இவர்கள் நினைவில் கொண்டால் நல்லது.

 

மேலும் உயர்நீதிமன்ற பத்திரிக்கையாளர்கள் காவல்நிலையம் வராமல் போனதற்கான காரணம், தாக்கப் பட்ட பத்திரிக்கையாளர் தீக்கதிர் பத்திரிக்கையில் பணி புரிபவர் என்பதும் ஒரு காரணம்.  இதே இந்து, டைம்ஸ் ஆப் இந்தியா, எக்ஸ்பிரஸ் போன்ற பத்திரிக்கைகளில் பணி புரிபவர்களுக்கு ஏதாவது நடந்திருந்தால் இவர்கள் அமைதியாக இருந்திருப்பார்களா என்பது சந்தேகமே.


IMG_5137

ஆனால் மற்ற பத்திரிக்கைகளை விட தீக்கதிர் சிறந்த பத்திரிக்கை என்பதை உறுதியாகச் சொல்ல முடியும்.  மற்ற பத்திரிக்கைகள் பெரு முதலாளிகளால் லாபத்துக்காக நடத்தப் படுகின்றன.  ஆனால், தீக்கதிர், உழைப்பாளி மக்களால், அவர்கள் வசூல் செய்யப் பட்டு கொடுத்த தொகையால் நடத்தப் படுகிறது.  தாக்கப் பட்ட தீக்கதிர் புகைப்படக் கலைஞர் பிரகாஷ் கூட, இந்திய மாணவர் சங்கத்தில் இருந்து கொள்கையில் ஏற்பட்ட ஆர்வத்தில் புகைப்படக் கலைஞரானவர்.

 

சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுமக்களோ, காவல்துறையினரோ பத்திரிக்கையாளர்களோ என்றுமே தாக்கப் பட மாட்டார்கள் என்ற நிலை என்று ஏற்படுமோ என்ற ஏக்கம் என்று நிறைவேறும் என்று தெரியவில்லை…..

 

Comments  

 
+2 #46 sundarwipro 2011-12-10 15:43
இந்த நேரத்தில் தம்பி பிரகாஷின் துணிச்சல் பாராட்ட படவேண்டியது, அவர் தனக்கு தரப்பட்ட வேலையை தான் செய்து இருக்கிறார். அவரை பார்த்தல் வசதியாக இருப்பவர் போலவும் தெரியவில்லை. தம்பி பிரகாஷுக்கு எங்களது அனுதாபங்கள்.
Quote
 
 
+4 #45 Mahir 2011-12-10 11:15
I appreciate Savukku to bring this article to the public. The culprits should be punished. Law associations should confirm they are not supporting violence by lawyers and they should expel/punish the members if they behave public misconduct or involve in violence. Otherwise the public will lost confidence against these organisations, court & laws.

Regards
Mahir
Chennai
Quote
 
 
+5 #44 அஞ்சன்குமார் 2011-12-09 21:02
ஆசிரியர், மருத்துவர், வழக்கறிஞர், நீதிபதி ஆகிய தொழில்களை நன்னோக்குடைப் பதவிகள் ( நோபிள் புரொஃபெஷன்) என்பர். ஆனால் இன்றோ இவை எல்லாவ்ற்றிலும் கருப்பு ஆடுகள் உள்ளன.

19/2 அன்று வளக்கறிஞர்களை போலீஸ் தாக்குதல் குறித்து இவ்வளவு எழுதும் சவுக்கு தனது மனசாட்சியைத் தொட்டுப் பார்க்க வேண்டும். 17/2 அன்று நீதிமன்றத்து ஹாலுக்குள், இர்ஹண்டு நீதிபதிகள் முன்னிலையில் வழக்கறிஞர்கள் வன்முறையில் ஈடுபட்டது குறித்து சவுக்கு எழுதியது என்ன?

அதனை மறைக்கத்தானே 19/2 அன்று வழக்கறிஞர்கள் முன்னரை விடவும் பெரிய வன்முறையில் ஈடுபட்டனர்?

சவுக்குக்குப் பிடிக்காத சுப்பிரமணியம் சாமி மீது இதே வழக்கற்ஞர்கள் நடத்திய தாக்குதலைப் புறந்தள்ளி சவுக்கு வழக்கறிஞர் சார்பாக எழுதிய கட்டுரைகள் எத்தனை?

இப்போது ஆட்டைக் கடித்தி மாட்டைக் கடித்து வழக்கறிஞர்கள் தீக்கதிப் பத்திரிகையாளரை அடித்ததும் சவுக்கின் மன சாட்சி விழித்துக் கொண்டது.

வழக்கறிஞர்களில் சிலர் வன்முறையாளர்களா கக் காலம் காலமாக இருக்கிறார்கள். ரஜனிகாந்த் என்ற வழக்கறிஞர் அவர்களில் முன்னணியில் உள்ளார். அவருக்கு துரைசாமி என்ற வழக்கறிஞர் ஆதரவு. துரைசாமி என்ற மூத்த வழக்கறிஞர் திராவிடர் கழகத்தவர். அவர் ஈழப் போராளிகளுக்கு வாதாடுபவர். எல்லாவற்றாஇயும் வெளிப்படையாக எழுதும் சவுக்கு இதில் மவுனம் காப்பது ஏன்?

தோழர் பிரகாஷ் மீது தாக்குதல் நடத்திய வழக்கறிஞர்கள் கடும் கண்டனத்துக்கு உரியவர்கள்.
Quote
 
 
-7 #43 karthikprabhakaran 2011-12-08 11:28
யோவ் சவுக்கு!!!! என் கமெண்ட்ட பாஸ் பண்ணலண்ண என் வக்கீல விட்டு அடிப்பேன்.ஜாக்கிரதை. 8) 8)
Quote
 
 
-8 #42 Abdul Rahman - Dubai 2011-12-07 22:44
தம்பி சவுக்கு :

கருப்பு ஆடுகள் என்று தலைப்பு இட்டு, சற்றே கருப்பான இந்த தோழரின் புகைப்படத்தையும ் சேர்த்து போட்டுயுல்லாயே.... இந்த தோழர்தான் அந்த கறுப்பாடு என்று பொருள் படாதா??
Quote
 
 
+2 #41 Nithi 2011-12-07 20:49
ENTHA AYOKIYA NAIGALUKU ENNA PUNISHMENT VENALUM THARALAM....
Quote
 
 
+8 #40 ரவி 2011-12-07 20:22
பெரும்பாலான சட்டத்தின் விதிகள் முதலாளிகளுக்கும ் அதிகார வர்க்கத்தினர்க் கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு ம் சாதகமாக, மூலத்திலிருந்து திருத்தியமைக்கப ்பட்டு அவர்களின் சேவைக்காக மாற்றப்படுகிறது .சட்டம் பயிலும் மாணவர்களுக்கான பாடமும் அதனை சார்ந்ததாகவே இருக்கும்போது சமூக பார்வையற்ற வழக்குரைஞராகத்த ான் பணியேற்கின்றனர் .90ன் தாராளமய தனியார்மய உலகமயத்திற்க்கு பின் எல்லாமும் வியாபாரமயம் என்றானபின் சட்டம் மட்டும் விதிவிலக்கா? கண்டுகொள்ளப்படா த விசயங்களை பொதுவெளிக்கு காண்பித்து விவாதப்பொருளாக் குவதில் சவுக்கு மீண்டும் வெற்றியடைந்திரு க்கிறது.
Quote
 
 
+14 #39 Karthikprabakaran 2011-12-07 15:31
படித்து (???) பட்டம் பெற்ற ரெளடிகள்.சட்டக்கல்லூரியி ல் உள்ளே படித்த நாட்கள விட தெருவில் அடித்துக் கொண்ட நாட்களே அதிகம்.பணத்துக்காக கொலைகாரனையும் கற்பழீத்தவனையும ் கருணாவையும் கனியையும் ஜாமீனில் எடுக்கும் கூட்டம். கேட்டால் தொழில் தர்மம். வாய்தா வாங்கி வாழ்க்கை நடத்தும் ஜென்மம்.மனித உரிமையைப் பற்றி வாய் கிழியப் பேசி விட்டு அடுத்தவன் வாயை கிழிக்கும் தறுதலைகள்.தட்டிக் கேட்க ஆள் இல்லாமல் திரியும் தாண்தோன்றிகள். நல்ல வக்கீல்கள் மன்னிக்கவும்.
Quote
 
 
+6 #38 Ravi 2011-12-07 13:50
வழக்கறிஞர்கள்..என்று சொல்லவே வருத்தமாக இருக்கிறது. அவர்கள் அறிஞர்கள் அல்லவே..ஆனால் தமிழ்ல் வேறு வார்த்தையில்லை. என்றைக்கு வட்டார மற்றும் மாவட்ட நீதி மன்றங்கள் கட்ட பஞசாயத்து போல செயல்பட தொடங்கினவோ (அது பல வருஷங்களாச்சு) அன்றே வக்கீலகள் தரகர்களாகவும் ரவுடிகளாகவும் ஆகிவிட்டனர். சில வருடங்களாக இந்த வியாதி உயர்நீதி மன்றத்திலும் பீடித்திருக்கிற து. பேய்கள் அரச்சாண்டால் பிணம் தின்னும் சாஸ்திரங்கள். பணப் பேய் அரசாளும் நீதிமன்றத்தில் இதுவும் நடக்கும்.
Quote
 
 
+3 #37 vandhiyadevan 2011-12-07 12:17
Many lawyers enter the profession for wrong reasons.Choosing legal career path as a business would lead to failure and unhappiness in the society.
Law in general is to govern behavior and lawyers should make sure that they exercise their duties to maintain it.
In this case, its highly unethical.

Law and Media are backbone of a democratic nation. Its really funny they say we are in a largest democratic country. 8)
Quote
 
 
+2 #36 kk1977 2011-12-06 23:05
player.vimeo.com/video/18283950?autoplay=1
Quote
 
 
+8 #35 yespeeor 2011-12-06 19:15
WRETCHED RASCALS IN BLACK GOWNS.
Quote
 
 
+7 #34 சவுக்கு பிரியன் 2011-12-06 18:11
இதற்கு ஒரு நல்ல தீர்வு... ஊடக துறையில் பனி சேர அனைவரும் BL முடித்து வழக்கறிகர் சங்கத்தில் பதிவு செய்திருக்க வேன்டும் என்று பத்திரிக்கையாளர ் சங்கம் அரிவிக்க வேன்டும்... பிரகு எப்படி அந்த நா__ள் இவர்கள் மீது கை வைக்கிரார்கள் என்று பார்போம்...
Quote
 
 
+31 #33 Iridium Cobra 2011-12-06 18:09
இந்த களோபரத்தில் 100 வக்கீல்கள் சேர்ந்து தாக்கிய அந்த கணவரின் நிலை என்ன என்றே சொல்லவில்லையே? குடும்ப வழக்குகளில் பெண்களின் சார்பாக வழக்காடும் வக்கீல்கள், கோர்ட் வளாகத்தில், அந்த கணவரையும், அவரின் குடும்பத்தாரையு ம் சேர்ந்து தாக்கி, மிரட்டி, பெரும் பணத்தை கணவரிடமிருந்து பறிப்பது வெகுநாளாக சென்னையில் உள்ள குற்றவியல் நீதிமன்றங்களில் நடந்துவரும் நிகழ்ச்சியாகும் . விவாகரத்து வழக்குக்காக வரும் பெண்களை தூண்டிவிட்டு, அவரின் கணவன் & பெற்றோர்கள் மீது பொய் வரதட்சனை வழக்கு, பொய் குடும்ப வன்முறை வழக்கு, 3 வெவ்வேறு பிரிவுகளில் ஜீவனாம்ச வழக்குகள் என ஆறேழு கிரிமினல் & சிவில் வழக்குகளை பல்வேறு கோர்ட்டுகளில் போடச்செய்து, கணவனிடமிருந்து லட்சகணக்கில் பணத்தை பிடிங்கி அந்த கணவனின் குடும்பத்தை நாசமாக்குவதில் பல வக்கீல்கள் தனி டாக்டர் பட்டமே வாங்கியுள்ளர்கள ். பொய் வழக்குகளில் சிக்கி, போலீஸ் & வக்கீல்களிடம் தர்ம அடிவாங்கி, சிறை சென்று, வேலையை தொலைத்து, குடும்பத்தை தொலைத்து, மானத்தை இழந்து,மரியாதைய ை இழந்து, பல கோர்ட்டுகளில் வருடகனக்கில் வாய்தா மேல் வாய்தா வாங்கி, பைத்தியம் பிடித்தவன் போல அலையும் நூற்றுகணக்கான நபர்களை தினமும் தமிழகத்தில் உள்ள அனைத்து குற்றவியல், குடும்ப & உச்ச நீதிமன்றங்களில் பார்க்கலாம்.
Quote
 
 
+7 #32 rachinn 2011-12-06 18:02
தன்மானம் இல்லாத தமிழ் உடகவியலாளர்களை என்ன சொல்லி என்ன செய்ய.மக்களுக்கு உதவிசெய்யவெ சட்டம் கர்றவர்கள் அவர்களுக்கு கெடு செய்யவெ இருக்கிறார்கள் என்றால் சோல்ல என்ன இருக்கீறது.
Quote
 
 
+21 #31 picky 2011-12-06 17:46
[ஃஉஒடெ நமெ="பிச்க்ய்"]அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்
தங்களுக்கு நன்றி சொல்ல கடமை பட்டிருக்கேன்
காரணம்:
அன்றிய தினத்தில் மீடியாக்கள் வந்தும் பயனில்லை......
சவுக்கு மட்டுமே இதை மக்களுக்கு கொண்டு போயுள்ளது.......
நன்றி நன்றியுடன் பிரகாஷ் தீக்கதிர்
Quote
 
 
+3 #30 boomi 2011-12-06 16:46
Well said Amjad
Quote
 
 
+13 #29 Stupid 2011-12-06 16:21
எல்லா துறைகளிலும் உள்ளது போலவே, கருப்பு ஆடுகள் வழக்கறிஞர்களிலு ம் இருக்கின்றன என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. நியாயத்திற்காக போராட வேண்டிய வழக்கறிஞர்களில் சிலர் வேசியைப்போல பணத்திற்கு விலை போகிறார்கள். ஒரே சொத்திற்கு மூன்று வேறு பார்ட்டிகளுக்கு ஆஜராகிய வழக்கறிஞர் குறித்து வழக்கறிஞர் சங்கத்தில் நான் புகார் செய்து ஒன்றரை வருடம் கழிந்தும் இன்னும் விசாரணை கூட ஆரம்பிக்கவில்லை . சவுக்கு விரும்பினால் ஆதாரத்துடன் நிரூபிப்பேன்.
Quote
 
 
+12 #28 ♠புதுவை சிவா♠ 2011-12-06 16:19
வழக்கறிஞர்களே உங்களுக்கு ஒரு சகோதரர் அல்லது மகன் இருந்தால் அவருக்குஇப்படி ஒரு நிலை ஏற்பட்டால் அதன் உண்மையான வலி உங்களுக்கு நிச்சயம் தெரியும்.

தோழர் பிரகாஷ்க்கு மனம் உடலும் வலிமை பெறுக.
இந்த அவமானத்தை திருப்பி அடிக்க காலம் வரும்.
Quote
 
 
+17 #27 picky 2011-12-06 15:35
அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்
தங்களுக்கு நன்றி சொல்ல கடமை பட்டிருக்கேன்
காரணம்:
அன்றிய தினத்தில் மீடியாக்கள் வந்தும் பயனில்லை......
சவுக்கு மட்டுமே இதை மக்களுக்கு கொண்டு போயுள்ளது.......
நன்றி பிரகாஷ் தீக்கதிர்
Quote
 
 
+11 #26 tamil paingili 2011-12-06 15:34
அந்த பிரகாஷ் தம்பிக்கு மருத்துவ உதவி கொடுக்கப் பட்டதா..கிழிந்த சட்டைக்கு மாற்றுச் சட்டை கொடுக்கப் பட்டதா ..
அடித்த வழக்கறிங்கர்களை யே...வாங்கிக் கொடுக்கச் சொல்லியிருக்கலா மே காவல் துறையினர்..இதை மட்டுமாவது செய்யலாமே..
Quote
 
 
+15 #25 சீனு 2011-12-06 15:33
உயர்நீதிமன்றத்த ில் காவலர்களால் தாக்குதல் நடத்தப்பட்ட போது என் வழக்கறிஞர் நண்பன் சொன்னது, "இவர்களுக்கு இது தேவை தான்" என்று. காரணம், வழக்கறிஞர் என்ற மமதையில் அவர்கள் நடந்து கொள்ளும் விதம் அருவருப்பானது. எந்த கேஸும் போட முடியாது. அங்கிருக்கும் காவல்துறையினரை வம்புக்கிழுப்பத ு போன்றவை. ஒரு வக்கீல் சாலை விதிகளை மீறினாலோ, அல்லது எந்த டாக்குமென்ட்ஸும ் இல்லாமல் வண்டியில் போனாலோ, காவல்துறையினறால ் ஒன்றும் செய்ய முடியாது.
Quote
 
 
+10 #24 picky 2011-12-06 15:33
அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்
தங்களுக்கு நன்றி சொல்ல கடமை பட்டிருக்கேன்
காரணம்:
அன்றிய தினத்தில் மீடியாக்கள் வந்தும் பயனில்லை......
சவுக்கு மட்டுமே இதை மக்களுக்கு கொண்டு போயுள்ளது.......
நன்றி நன்றியுடன் பிரகாஷ் தீக்கதிர் 9791163542
Quote
 
 
+1 #23 ramki 2011-12-06 14:59
மிகவும் வருத்தப்டவேண்டீ ய விடயம்.
Quote
 
 
+7 #22 Maaamallan 2011-12-06 13:59
சட்டத்தை மீறுவதே இவனுக தான். இந்த மதிரி நடக்கிர்வனுகள முச்சந்தில நிக்க வச்சு செருப்பால அடிக்கணும். அடிச்சா தான் இவனுகளுக்கு புத்தி வரும், பயமும் வரும்..
Quote
 
 
+4 #21 ss 2011-12-06 12:45
அரசியல் வியாதிகள் பலரும் சட்டம் படித்த வகீல்கள். அங்கு தான் ரவுடித் தனம் பயிற்சி பெருகிரார்கள்.
Quote
 
 
+12 #20 Arun1985 2011-12-06 12:07
வக்கீல்களைவிட சட்ட கல்லூரியில் படிக்கற மாணவர்களின் அட்டூழியம் அதிகம்.. இந்த அடாவடிதனத்த இவனுங்க இங்கயே ஆரம்பிச்சடரானுங ்க.. இந்த தொழிலில் சில நல்லவர்கள் இருப்பதை மறுப்பதற்கில்லை .. ஆனால் அதிகப்படியானோர் இது போன்ற ரவுடிகளே.. இதை இவர்கள் நீதிமன்றத்தில் மட்டுமில்லை பொது இடங்களிலும் அவிழ்த்து விடுவது பொதுமக்களை பெரிதும் பாதிக்கிறது.. இவர்களை போலீஸ் மட்டுமல்ல நீதிபதிகளே தண்டிக்க மறுப்பது கொடுமையிலும் கொடுமை.. இது வேறு எந்த நாட்டிலும் நடக்காத ஒன்று..
Quote
 
 
+2 #19 Vijay123 2011-12-06 12:07
Indha maadhiri rowdy dhanam pandra law college students, arts college students, lawyers, police ellarayum adhe idathula nikka vachu sudanum.....porikkeenga
Quote
 
 
+25 #18 daar al amaan 2011-12-06 11:07
சட்டம் படிது விட்டொம் என்ற திமிறும், எல்லம் தெரிந்தவர்கள் என்ற மமதையும் தான் இவர்களை இப்படி ஆட்டம் போட வைக்கின்றது. இவர்களாக அடஙா விட்டால், ஒரு நாள் பொது மக்கள் அனைவரும் சட்டத்தை கையில் எடுத்து இவர்களை அடக்குவார்கள்.
Quote
 
 
+20 #17 sathish77 2011-12-06 10:14
அம்ஜத் சொல்வது உன்மை.. ரவுடிகள் மட்டுமெ சட்டக் கல்லூரியில் படிக்க முடியும்... மலம் தின்னும் மிருகங்கள்
Quote
 
 
+7 #16 gopalasamy 2011-12-06 09:44
I REQUEST SAVUKKU TO TAKE A COMMON CONSISTANT STAND IN THESE ISSUES.
THEN THERE WILL NO DIFFERENCE BETWEEN JUNIOR VIKADAN AND SAVUKKU.
WHAT YOUR ARICLE SAYS IS 100 % RIGHT.
AT THE SAME TIME THE STANDARD OF LAW COLLEGE STUDENTS IS VERY POOR.THE DIRTY POLITICS STARTS FROM THERE.
Quote
 
 
+9 #15 http://koothadivedda 2011-12-06 09:05
இதுவும் ஒருவகையில் கட்டப்பஞ்சாயத்த ு வழிமுறைதான். சட்டம் படித்தவர்களே சட்டத்தை மதிக்காமல் அடாவடியில் இறங்கினால்.http://koothadiveddai.blogspot.com/
Quote
 
 
+12 #14 ஊர்க்குருவி. 2011-12-06 08:05
காவல்த்துறையும் நீதித்துறயும்(வ க்கீல்கள்)தானே நாட்டின் சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்தி மக்களின் காவலரண்களாக நம்பக்கூடியவை, வேலியே பயிரை மேய்ந்தால்?
Quote
 
 
+12 #13 kamalakkannan 2011-12-06 07:18
இளம் வழக்குறிஞர்கள் இது போன்ற வன்முறை தனமான போக்கினை கைவிட வேண்டும் ,இது போன்ற நடவடிக்கைகள் கீழ்தரமானது.கருப்பு கவுன் அனிந்த இருண்ட இதயம் உள்ள கயவர்கள் தண்டிக்கபட வேண்டும் .பதிக்கப்பட்ட தோழர் பரிதபதிற்கு உரியவர் .
Quote
 
 
+11 #12 eleventh sense 2011-12-06 01:25
Lawyers are all professional rowdies. They are the only people in the world to make money in others sorrows. The basic qualification of a lawyer is to quarrel, if possible beat the Police personnel, even while they are in their first semester. They see the world as if they are gods, capable of doing anything they wish. Even all channels applaud these idiots as valakkarignarga l, instead of valakkuraignarg al - the correct word for lawyer in tamil.
Quote
 
 
+18 #11 Zafar Rahmani 2011-12-06 00:37
காவல் துறையினர் குற்றவாளியை தேடிப்போகும்ப்ப ோது இளம் பெண்களை கண்டால் கூட்டு சேர்ந்துக்கன்னி ப்பெண்ணையும் கற்பழிப்பார்கள் க் க்கற்பழிப்பார்க ள் . கர்ப்பிணியையும் விடமாட்டார்கள்

கோர்ட்டுக்குள் நுழைந்து விட்டால் வழக்கறிஞர்கள் தன்னையே நீதி தேவதையின் மறுபிறவி என கருதுவார்கள்.
சகதோழன் அடிபடுவதை தடுக்காமல் தன்நலத்தை மட்டும் கவனிக்கும் ஊடகவியலாளர்களின ் இத்த்கைய போக்கு வருந்தத்தக்கது.
நாம் 21 ஆம் நூட்ரான்டில் தான் வாழ்கிறோமா? நாம் நாகரீக உலகில்தான் வாழ்கிறோமா?
Quote
 
 
+64 #10 மண்ணடி அம்ஜத் 2011-12-05 22:59
ரவுடிகள் தான் அதிகமானோர் சட்ட கல்லூரியில் படிக்கின்றனர் என்பதை யாராவது மறுக்க முடியுமா?....

அம்பேத்கர் சட்ட கல்லூரி.இல் நடந்த கொடூர மோதல் ... பிராட்வே சிக்னல் அருகே மறியல் பண்ணி காலை முதல் மாலை வரை போக்குவரத்தை ஸ்தம்பிக்க வைத்த பெருமை...

புழல் சிறையில் அடை பட்டிருக்கும் ஏழை சிறைவாசிகளின் மனைவி கேஸ் விசயமாக வழக்கறிஞரை பார்க்க வரும் பொது அவர்களை படுக்க கூப்பிடும் கேவலமான லாயர்கள் தான் அதிகமானோர்...

சென்னை.இல் நல்ல லாயர் என்றால் அது லட்சத்தில் ஒருவர் தான் இருக்க முடியும்...

சுப்ரமணிய சாமி மீது முட்டி வீசி எல்லோ பெரிய பிரச்சனை ஏற்படுத்தினார்க ள்.... கோர்ட் இரண்டு மாதம் செயல் படாமல் முடங்கியது...


இவர்களை அடக்க இறைவன் ஒரு நல்ல வழி காட்ட வேண்டும் என்று என்னோடு சேர்ந்து நீங்களும் பிராத்தனை செய்யுங்கள்...
Quote
 
 
+22 #9 பத்மநாபன் 2011-12-05 22:55
இது போன்ற கேவலமான செயல்களில் ஈடுபடும் வக்கீல்களை கடுமையாக தண்டித்தே ஆக வேண்டும். அப்போதுதான் திமிறெடுத்து அலையும் சில வக்கீல்களின் கொட்டம் அடங்கும். அதற்கு பத்திரிகையாளர்க ளும் எவனிடமும் ”கவருக்கு” காத்திருப்பதையு ம் தவிர்க்க வேண்டும்.
Quote
 
 
+10 #8 k krishnan 2011-12-05 22:35
ரொம்ப கொடுமை சார் இது.
Quote
 
 
+8 #7 niceguy 2011-12-05 22:20
court valakathil camera vecha enna... why dont file a case against those lawyers.. ivarkaluku yar antha urimiyai koduthathu..
Quote
 
 
+26 #6 பா 2011-12-05 21:43
உயர் நீதிமன்றத்தில் சுப்பிரமணிய சாமி தாக்கப்பட்ட போது, அதனை சவுக்கே கூட நியாயப்படுத்திய தாக நினைவு. இந்த இரட்டை நிலையை எப்படி ஏற்றுக்கொள்வது சவுக்கு??
Quote
 
 
+12 #5 USV 2011-12-05 21:38
இன்றைய சட்ட கல்லூரி மாணவர்கள் தான் நாளைய வழக்குரைஞர்கள்.. ஐந்திலே வளையாதது ஐம்பதில் எப்படி வளையும்??
Quote
 
 
0 #4 jai sathish 2011-12-05 21:07
:zzz
Quote
 
 
+20 #3 குட்டி 2011-12-05 20:55
சவுக்கு தங்களின் கடமைக்கு ஒரு வணக்கம்..யென்னதான் சவுக்கு வழக்கறிஞர்கலுகக ு கடமை பட்டிருந்தாலும் அவர்களுக்கு யெதராகவும் கட்டுரை எழுதியிருப்பது வரவேற்கக்தக்கது .... பத்திரிக்கை நம் சமுதாயததின் ஒரு முக்கிய தூண்.. அப்படிபட்ட பத்திரிக்கையாளர ்களுக்கே இந்த நிலமை யென்ட்ரல் சாதாராண பொதுமக்கலுக்கு????யென்ன சொல்ல

இந்த கருப்பு அங்கி அணிந்த ரௌடிகளை......
Quote
 
 
+18 #2 puthiyaanniyan 2011-12-05 19:40
தமிழ்னாட்டு வழக்கறிக்னர்கள் ரவுடிகள்தான் என்பது நாடறிந்த விஷயம்தான்,,,,, ,,,,,,,,,,,,,,, ,,,,
Quote
 
 
+11 #1 Mayavi 2011-12-05 19:21
Thank you for boldly highlighting this issue. I am sure You are also aware of Justice Srikrishna Commission report, where in he has observed, " ..... the soft-pedaling policy followed by the Madras High Court Judges has led to the present piquant situation. The lawyers appear to have been encouraged by the wrong signals sent out and seemed to think that they could do anything and get away within the Court premises. Regretfully, far from being the upholders of the rule of law, the lawyers seem to have behaved as hooligans and miscreants".
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 102 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday11277
mod_vvisit_counterYesterday14175
mod_vvisit_counterThis week68179
mod_vvisit_counterLast week80132
mod_vvisit_counterThis month270911
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12793030