|
ஜெயலலிதா தன்னுடைய 30 ஆண்டு கால உயிர்த்தோழி சசிகலாவை விலக்கி வைத்தாலும் வைத்தார், தமிழ்நாட்டில் உருவாகியுள்ள கதைகளுக்குத் துளியும் பஞ்சமில்லை. சாதாரண டீக்கடை முதல், உயர் உயர் அதிகாரிகள் முதல், தொழிலதிபர்கள் வரை ஒவ்வொரு நிமிடமும் விவாதிக்கப் பட்டு வரும் விஷயமாக மாறிப் போய் உள்ளது.

இது போல இந்த விஷயம் பரபரப்பாக விவாதிக்கப் படுவதற்கான காரணம் சசிகலாவையும், ஜெயலலிதாவையும் பிரித்துப் பார்க்க முடியாத வகையில் ஜெயலலிதாவின் அரசியல் பிரவேசம் அமைந்ததுதான். அதிமுகவின் கொள்கைப் பரப்புச் செயலாளராக ஜெயலலிதாவை எம்ஜிஆர் 1980ல் நியமித்த இரண்டு ஆண்டுகளில் ஜெயலலிதாவுக்கு சசிகலாவின் நட்பு ஏற்படுகிறது. திமுக ஆட்சியில் மக்கள் தொடர்பு அதிகாரிகளாக இருந்த அனைவரையும் எம்ஜிஆர் அரசு டிஸ்மிஸ் செய்கிறது. இது போல டிஸ்மிஸ் செய்யப்பட்டவர்களில் சசிகலாவின் கணவர் நடராஜனும், பன்னீர்செல்வம் என்பவரும் நீதிமன்றம் செல்கின்றனர். இவர்கள் இருவருக்கு மட்டும் 1980ல் மீண்டும் வேலை கிடைக்கிறது. அப்போது சந்திரலேகா ஐஏஎஸ், வட ஆற்காடு மாவட்ட ஆட்சியராக இருக்கிறார். அவரிடத்தில் நடராஜன் மக்கள் தொடர்பு அதிகாரியாகச் சேர்கிறார். அப்போது சந்திரலேகா சசிகலாவை சந்திக்கிறார். அவரிடத்தில், சசிகலா தன்னுடைய நகைகளை அடகு வைத்து கணவரின் வழக்கை நீதிமன்றத்தில் நடத்தியது குறித்து அழுது புலம்புகிறார். பிறகு சசிகலா, சென்னையில் ஒரு வீடியோ கேசட் வாடகைக்கு விடும் கடையை தொடங்குகிறார். அவருடைய கடையில் ஜெயலலிதா கேசட்டுகளை வாடகைக்கு எடுத்தாலும், கேசட்டுகளை வாங்கிச் செல்வது வேலைக்காரர் என்பதால், சசிகலாவுக்கு அந்த கேசட்டுகள் ஜெயலலிதாவுக்குத் தான் செல்கின்றன என்பது தெரியாது.
பிறகு சசிகலா சிங்கப்பூர் சென்று, வீடியோ ரெக்கார்டர்களை வாங்கி வந்து, திருமணம் மற்றும் விழா நிகழ்ச்சிகளை ஷுட் செய்யும் வேலைகளில் ஈடுபடுகிறார். அவரது கணவர் மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்ததால், பல ஆர்டர்கள் கிடைக்கின்றன. அப்போது சந்திரலேகாவைச் சந்தித்த சசிகலா, ஜெயலலிதா அதிமுகவின் கொள்கைப் பரப்புச் செயலாளராக இருப்பதால், அவரை அறிமுகப் படுத்தி வைக்குமாறு கேட்கிறார். அதன்படி சசிகலாவை ஜெயலலிதாவுக்கு அறிமுகப் படுத்தி வைக்கிறார், சந்திரலேகா.
அந்த அறிமுகத்தோடு ஜெயலலிதாவிடம் ஒட்டிக் கொண்ட சசிகலா, அதன் பிறகு ஜெயலலிதா மீது ஆக்ரமிப்பு செய்யத் தொடங்கினார்.

அதன் பிறகு சசிகலா இல்லாமல் ஜெயலலிதா இல்லை என்ற நிலை தொண்ணூறுகளில் ஏற்படுகிறது. இந்த யதார்த்தத்தை தமிழக மக்கள் மட்டுமல்லாமல் பெரும்பாலான அரசியல் கட்சிகளும் ஏற்றுக் கொண்டு விட்டன. 1991 முதல் 1996 வரையிலான ஆட்சிக் காலத்தில் சசிகலா குடும்பத்தினர் செய்த அக்கிரமங்களை பத்திரிக்கைகள் அப்போது விரிவாகவே எழுதின. ஆனாலும், ஜெயலலிதா, என்னுயிர்த்தோழி, கேளொரு சேதி என்று, சசிகலாவை விலக்கி வைக்கத் தயாராக இல்லை. 1996ல் ஏற்பட்ட சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஒன்று சேர்ந்து கொண்டனர்.
ஆட்சியாளர்களோடு நெருக்கமாக இருப்பவர்கள், அதிகாரம் செலுத்துவதும், அவர்களிடத்தில் அதிகாரிகள் அடங்கிப் போவதையும் வரலாறு பார்த்தே வந்திருக்கிறது. சஞ்சய் காந்தி தொடங்கி, வாஜ்பாய் அரசாங்கத்தில் மிகப் பெரிய ப்ரோக்கராக விளங்கிய அவரது மருமகன் ரஞ்சன் பட்டாச்சார்யா வரை இது போன்ற பல நேர்வுகள் இருந்திருக்கின்றன என்றாலும், ஜெயலலிதா சசிகலா நட்பு என்பது இது எல்லாவற்றையும் விட மோசமானது.
ரஞ்சன் பட்டாச்சார்யா, வாஜ்பாய் அரசாங்கத்தில் அப்போது தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த ப்ரஜேஷ் மிஷ்ராவோடு சேர்ந்து பல்வேறு ப்ராஜெக்டுகளில் வசூல் செய்து குவித்தார். ஆனாலும் ரஞ்சன் பட்டாச்சார்யா தன்னைப் போல பல வசூல் ராஜாக்களை தன்னைச் சுற்றி உருவாக்கிக் கொள்ளவில்லை.
ஆனால், சசிகலாவைச் சுற்றி மன்னார்குடி மாபியா என்று அழைக்கும் அளவுக்கு பெரிய கூட்டம் உருவாகியது. சசிகலாவோடு உடன் பிறந்தவர்களே ஐந்து பேர். அவர்களது வாரிசுகள், உறவினர்கள் என்று ஒரு பெரும் கூட்டமே கடந்த 20 ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்டு கொண்டிருந்தது. இந்தக் கூட்டத்தின் அராஜகங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.
சென்னை மற்றும் தமிழகமெங்கும் முக்கிய இடங்களில் உள்ள நிலங்களையும், மனைகளையும் வளைத்துப் போடுவதாகட்டும், தொழில் அதிபர்களை மிரட்டிப் பணம் பறிப்பதாகட்டும், தமிழகத்தில் புதிய தொழில்களை ஆக்ரமிப்பதாகட்டும், பொதுமக்களின் நலத்திட்டங்களுக்கான காண்ட்ராக்டுகளை பறித்துக் கொள்வதாகட்டும், இவர்களின் ஆதிக்கமே எங்கும் நீக்கமற நிறைந்திருந்தது.
தற்போது ஜெயலலிதா, எடுத்துள்ள இந்த அதிரடி நடவடிக்கையின் பின்னணியாக பல்வேறு கதைகள் பத்திரிக்கையாளர்கள் மத்தியில் உலா வந்த வண்ணம் உள்ளன. ஒரு மூத்த பத்திரிக்கையாளர் சொன்ன கதை அம்புலிமாமா கதையை விட மோசமாக இருந்தது. அது போயஸ் தோட்டத்திலிருந்து 400 கோடியை ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரி திருலைச்சாமி எட்டு தவணைகளில் எடுத்து திவாகரனிடம் கொடுத்து விட்டாராம். ஜெயலலிதா அவரை அழைத்துக் கேட்ட போது சின்னம்மா சொல்லிதான் எடுத்துச் சென்றேன் என்று கூறினாராம். இதனால் கோபமடைந்த ஜெயலலிதா, அவரை மாற்றி விட்டு, மந்திரிகளை அழைத்து என்னிடம் பணம் இல்லை, கட்சியிலும் பணம் இல்லை, அதனால் நீங்கள் அனைவரும் நன்றாக உழைக்க வேண்டும். பணம் சம்பாதித்து என்னிடம் கொடுக்க வேண்டும் என்று கூறினாராம்.
சரி, இந்த பத்திரிக்கையாளர் ஏதோ தெரியாமல் சொல்லுகிறார் என்று பார்த்தால், தஞ்சாவூரிலிருந்து நேற்று சென்னைக்கு வந்திருந்த மற்றொரு நண்பர், இதே கதையைச் சொன்னார். இது போல பல்வேறு அம்புலிமாமா கதைகள் ஊடகங்களிலும், பத்திரிக்கையாளர்களிடத்திலும், பொது மக்களிடத்திலும் வலம் வந்த வண்ணம் உள்ளன.
பொதுமக்கள், அரசியல்வாதிகள், உயர் உயர் அதிகாரிகளிடத்தில் விவாதிக்கப் பட்டு வரும் மற்றொரு விவகாரம், இந்தப் பிரிவு நிரந்தரமானதா…. மீண்டும் சேர்ந்து கொண்டால் என்ன செய்வது ….
நடராஜன், ராமச்சந்திரன், ராவணன் போன்றவர்கள் வீடுகளில் ரெய்டு நடந்தது, ஜெயா டிவியில் ரெய்டு நடந்தது என்றும் சில தகவல்கள்.

இந்தத் தகவல்களை விசாரித்த போது சவுக்குக்கு கிடைத்த தகவல்கள், இந்தப் பிரிவு நிரந்தரமானதே. மன்னார்குடி மாபியாவின் எத்தனையோ அநியாயங்களையும், அட்டூழியங்களையும் பொறுத்துக் கொண்ட ஜெயலலிதாவுக்கு, மன்னார்குடி மாபியா தனக்கு எதிராக காய்களை நகர்த்தத் தொடங்கியருப்பது கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பெங்களுரு சொத்துக் குவிப்பு வழக்கு ஜெயலலிதாவுக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தியிருந்த நிலையில், மன்னார்குடி மாபியாவின் துணைத் தலைவர் நடராஜன் முதல்வராவதற்கு எடுத்த முயற்சிகளை ஏன் இப்படிச் செய்தீர்கள் கண்ணாயிரம் என்ற கட்டுரையில் சவுக்கு விரிவாகவே பதிவு செய்திருந்தது. இதையடுத்து, சவுக்கு பிட்டுக்கு மண் சுமந்த சொக்கனுக்கு விழுந்த அடி என்ற கட்டுரையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வசூல் வேட்டைகளைப் பற்றியும் எழுதியிருந்தது.
இந்த ஆறு மாத காலத்தில் மன்னார்குடி மாபியா நடத்திய வசூல் வேட்டை மட்டும் 4000 கோடியைத் தொடும் என்கிறார்கள் அதிமுக கட்சியினர். அமைச்சரவை பதவியேற்ற ஒரு சில நாட்களிலேயே நடந்த மாற்றம், அனைத்து அமைச்சர்களிடத்திலும், மன்னார்குடி மாபியாவைப் பற்றிய கடும் பயத்தை ஏற்படுத்தியிருந்தது. சென்னை ஜெமினி மேம்பாலத்தை ஒட்டிய பகுதியில் அமைந்துள்ள தோட்டக்கலைத் துறைக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு நிலத்தை, தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்திக்கு மீண்டும் குத்தகைக்கு வழங்கியதில் தொடங்கி, வணிகவரித்துறையில் அக்ரி கிருஷ்ணமூர்த்தி நடத்திய வசூல் வேட்டை, நத்தம் விஸ்வநாதன் நடத்திய நிலக்கரி இறக்குமதி பேரம், காவல்துறையின் நில அபகரிப்புப் புகார்களில் சிக்கியவர்களை மிரட்டி நடத்திய வசூல், லாட்டரி அதிபர் மார்ட்டினிடம் நடத்திய 100 கோடி பேரம், பத்திரிக்கை அதிபர்களிடம் நடத்திய பேரம், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளிடம் நடத்தியுள்ள வசூல் வேட்டை, தனியார் பஸ் அதிபர்களிடம் வசூலித்த 450 கேடி என்று என்று மன்னார்குடி மாபியாவின் அட்டகாசம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருந்தது. வணிகவரித்துறை மற்றும் தொழில் துறை கொடுத்த நெருக்கடியால், பல தொழிலதிபர்கள் தொழிலையே விட்டு விடலாமா என்ற யோசனைக்கு போகும் அளவுக்கு நெருக்கடிக்கு ஆளானார்கள்.
ஜெயலலிதா மீது அதிகப்படியான விருப்பம் இல்லாவிட்டாலும், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்று விரும்பிய சில பத்திரிக்கை ஆசிரியர்களும், அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு நடந்து வந்த மன்னார்குடி மாபியாவின் அட்டகாசங்களால் கடும் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள். இந்த மாபியாவை எப்படியாவது ஒழித்தே தீர வேண்டும் என்று இவர்கள் தொடர்ந்து முயற்சி எடுத்த வந்தார்கள். அந்த அடிப்படையில் இவர்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட தூதுவர்தான் சோ ராமசாமி.

கடந்த வாரத்தில் சோ, ஜெயலலிதாவை சந்தித்து மூன்றரை மணி நேரம் விவாதித்துள்ளார். அந்த விவாதத்தின் போது, தொழில் அதிபர்களின் நெருக்கடிகள், மன்னார்குடி மாபியாவின் ஆதிக்கம், அதிகாரிகள் மாபியா கும்பலுக்கு காட்டும் விசுவாசம் போன்றவற்றை விரிவாக எடுத்துரைத்துள்ளார்.
ஏற்கனவே பெங்களுரு வழக்கு தொடர்பாக பல்வேறு சந்தேகங்களில் இருந்த ஜெயலலிதாவுக்கு சோ அளித்த இந்த தகவல்கள் பலத்த அதிர்ச்சிகளை ஏற்படுத்தியுள்ளது. பெங்களுரு நீதிமன்ற வழக்கு தொடர்பாக, பிஜேபி வழக்கறிஞர் ரவிசங்கர் பிரசாத், சில ரகசிய தகவல்களை ஜெயலலிதாவுக்கு அனுப்பியுள்ளார்.
இது போக, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மூலமாக, ஜெயலலிதாவுக்கு சில ரகசிய அறிக்கைகள் கிடைத்துள்ளன. அந்த அறிக்கைகளில் மன்னார்குடி மாபியாவின் நடவடிக்கைகள் குறித்த சில முக்கிய விபரங்கள் அளிக்கப் பட்டுள்ளன. இதையடுத்தே ஜெயலலிதா களையெடுக்கும் நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியுள்ளார்.
சசிகலா கும்பல் நீக்கப் பட்ட அறிவிப்பு வெளிவந்த அன்று இரவும், மறுநாளும், சில தனியார் புலனாய்வு நிறுவனங்களும், தமிழக காவல்துறையின், சில முக்கியமான அதிகாரிகளும் மன்னார்குடி மாபியாவின் முக்கிய மையங்களில் சோதனைகள் நடத்தியுள்ளனர். நடராஜன், அவர் தம்பி ராமச்சந்திரன் ஆகியோரும் சுற்றி வளைக்கப் பட்டுள்ளனர். இதில் காவல்துறையின் கவனிப்புக்கு ஆளானவர் ராவணன் என்று தகவல்கள் கூறுகின்றன.
இந்த முறை அதிமுக ஆட்சிக்கு வந்ததும் இருப்பதிலேயே – நடராஜனை விட – அதிக செல்வாக்காக இருந்தவர் ராவணன். இந்த ஆறு மாத காலத்தில் ராவணனின் வசூல் வேட்டை மட்டும் 500 கோடியைத் தாண்டும் என்கிறார், ஒரு முக்கிய அதிமுக தலைவர். இந்த ராவணனின் வீட்டில் சோதனைகள் நடத்திய போது 75 கோடி ரொக்கமாக கிடைத்து, அவை கைப்பற்றப் பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈடிஏ ஸ்டார் குழுமம் திமுக தலைவர்களுக்கு எவ்வளவு நெருக்கம் என்பது ஊரறிந்த உண்மை. இந்த குழுமம் ஸ்ரீபெரும்புதூரில் 100 ஏக்கர் பரப்பளவில் க்ளோப்வில் வில்லேஜ் என்ற அடுக்கு மாடி குடியிருப்புகளை கட்டி வருகிறது. இந்த குடியிருப்புகள் கட்டப்படும் இடம், அரசாங்கத்தால் விளைநிலமாக வரையறை செய்யப் பட்ட நிலம். இந்த நிலத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட வேண்டுமெனறால் அரசு நிலப் பதிவேடுகளில் மாற்றம் செய்யப் பட வேண்டும். இது கடந்த ஆட்சியில் ஸ்டாலின் தலையிட்டும், இறுதி வரை முடியாமல் போய் விட்டது. இந்த நிலத்தை வணிக நிலமாக மாற்ற, ராவணன், நேரடியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு சென்று, ஆட்சியரை மிரட்டியதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த ராவணன் அவ்வளவு பெரிய தில்லாலங்கடி. மன்னார்குடி மாபியாவின் மற்ற உறுப்பினர்களைப் போல அல்லாமல், ராவணன் ‘செமத்தியாக கவனிக்கப் பட்டதாகவும்’ தகவல்கள் கூறுகின்றன.

இந்த நடவடிக்கைகளை அடுத்து, மன்னார்குடி மாபியாவின் சில முக்கிய தலைகளின் மீது வழக்கு பாய்வதற்கான வாய்ப்புகள் இருக்கிறது என்றும் தகவல்கள் கூறுகின்றன.
அடுத்தபடியாக அதிகாரிகள் மட்டத்தில் களையெடுப்புக்கான பட்டியல் வெகு வேகமாக தயாராகிக் கொண்டிருக்கிறது. இந்தப் பட்டியல் வெள்ளியன்றோ, சனியன்றோ வெளியாகும். இதையடுத்து நிர்வாக ரீதியாக பல மாற்றங்களை செய்ய ஜெயலலிதா தயாராகிக் கொண்டிருக்கிறார் என்றும், தற்போது நடக்க இருக்கும் இந்த பெரிய மாற்றத்துக்கு பிறகு, அடிக்கடி மாற்றங்கள் இருக்க வேண்டாம் என்று ஜெயலலிதா விரும்புவதாகவும் தகவல்கள் கூறுகின்றன. அமைச்சரயிலும் பெரிய மாற்றம் நடைபெற உள்ளதால், மாபியா கும்பலின் தயவில் அமைச்சர்களான அனைவரும் பதவி இழப்பார்கள் என்றும் தகவல்கள் கூறுகின்றன. அதிமுகவின் வழக்கறிஞர் பிரிவிலும் அதிரடி மாற்றங்கள் ஏற்படு உள்ளன. வரும் வாரத்தில், அனைத்து மாற்றங்களையும் ஏற்படுத்தி முடித்து நிர்வாகத்தை ஒரு வழிக்கு கொண்டு வர ஜெயலலிதா முடிவெடுத்திருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.
நரேந்திர மோடி மீது குஜராத் கலவரம் தொடர்பான குற்றச்சாட்டுகள் இன்னும் ஓயவில்லை என்றாலும், குஜராத், தொழில் துறையிலும், நிர்வாகத்திலும் ஒரு சிறந்த மாநிலமாக விளங்குவதால், குஜராத்தைப் போலவே தமிழ்நாட்டை மாற்றிக் காட்டி, வரலாற்றில் நீங்காத இடத்திப் பிடிக்க வேண்டும் என்று ஜெயலலிதா எண்ணி வருவதாகவும் தெரிகிறது.

ஓபனிங் நல்லாத்தான் இருக்கு. பினிஷிங் எப்படி என்பதுதான் தெரியவில்லை.
|
Comments
நீதி - அநீதி
திருப்தி - அதிருப்தி
ருசி - அருசி
சுரன் - அசுரன்
....
....
திமுக - அதிமுக
இங்கு பின்னூட்டமிடும் அறிவாளிகள் மேற்சொன்ன ரீதியில் தான் தமிழக அரசியலை பார்க்கிறார்கள் . திமுகவின் குறையை சுட்டிகாட்டினால ், உடனே அதிமுகவில் அது இல்லையா என்று உளறுகிறார்கள்... அதிமுகவின் குறையை சுட்டிக் காட்டினால் திமுகவில் அது இல்லையா என்று இன்னொரு குரூப் உளறுகிறது. அட அறிவுகெட்ட பதர்களா....
தமிழ்நாட்டை கன்னடத்தியும், தெலுங்கனும் ஆண்டது போதும். இனி வரும் காலத்திலாவது 'தமிழ்நாட்டை தமிழனை ஆளவிடுங்கப்பா...'
ஃஉஒடெ]
இதெற்கெல்லாம் ஒரே தீர்வு
குஷ்பூ தலைமையில் வருங்கால தமிழகம்
திருப்தி - அதிருப்தி
ருசி - அருசி
சுரன் - அசுரன்
....
....
திமுக - அதிமுக
இங்கு பின்னூட்டமிடும் அறிவாளிகள் மேற்சொன்ன ரீதியில் தான் தமிழக அரசியலை பார்க்கிறார்கள் . திமுகவின் குறையை சுட்டிகாட்டினால ், உடனே அதிமுகவில் அது இல்லையா என்று உளறுகிறார்கள்... அதிமுகவின் குறையை சுட்டிக் காட்டினால் திமுகவில் அது இல்லையா என்று இன்னொரு குரூப் உளறுகிறது. அட அறிவுகெட்ட பதர்களா.... இந்த இரண்டுமே தமிழன் வாழும் தமிழநாட்டுக்கு உகந்தது அல்ல என்று உணர்ந்து நீங்கள் எப்போது முடிவெடுப்பீர்க ளோ அப்பொது தான் இந்த வெட்டி பேச்சும்,வீணான விவாதமும் குறையும். திமுகவுக்கு மாற்றாக அதிமுகவையோ, அதிமுகவுக்கு மாற்றாக திமுகவையோ கை காட்டுவது என்பதற்கும் ' தூக்கில் தொங்கி சாவது, ஓடும் இரயிலில் இருந்து குதிப்பது' என்பதற்க்கும் பெரியவித்தயாசம் இல்லை.... தமிழ்நாட்டை கன்னடத்தியும், தெலுங்கனும் ஆண்டது போதும். இனி வரும் காலத்திலாவது 'தமிழ்நாட்டை தமிழனை ஆளவிடுங்கப்பா...' உங்களுக்கு புண்ணியமா போவட்டும்...!!!
இது தானா உங்க டக்கு....?
திரு.நல்லவன் ,உங்கள் கருத்துக்கள் தமிழில் பதிவேற்றப்பட்டா ல் இன்னும் சூடாகவும் சுவையாகவும் இருக்குமே..
என்பது வள்ளுவர் வாக்கு. நல்லவன் என்று பெயர் வைத்துக்கொண்டு ஒருவர் அநாகரீகமாக வசை பாடுகிறார். இன்னொருவர் சாதிப்பெயரை இழுத்து தனது இன வெறியை வெளிப்படுத்துகி றார். ஆனால் எங்கள் கொள்கை. வைதவர் யாவரும் வாழட்டும் என்பது தான். எனவே வசவாளர்கள் வாழ்க. வாசகர் அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள ்.
If anybody, in future, pursue TAMIL or TELUGU identity will be persecuted and annihilated!- if they didn't accept Semitic Hinduism.
Coming to India, we notice the same kind of Non-Parallelism. Most of the Indian languages belong to the Indo-European language group (or the Sanskrit-Group), but two languages of South India, Tamil and Telgu, seem to be outside the group of Indo-European languages. But that does not make South-Indians (generally referred to as Dravideans) racially different from the North-Indians, any more than the Non-European languages of Finns, Hungarians, and Basque people, make them Non-IndoEuropeans racially.. other than Pagans?.
Until last year Christmas, many Indian students - but only from Andhra Predesh were shot and killed in USA and Australia, eventhough in these countries the number of immigrants for "career opportunities(P AGANS?)" from Andhra Predesh(includi ng Brahmins)were less and negligible compared to Malayalees(Kera la), Tamil Brahmins, Srilankan Tamils. Anybody investigated this?.-- http://www.youtube.com/watch?v=YUqY9prt35M
கருணாநிதியும் இதற்கு விதிவிலக்கு அல்ல ..50 வருடம் கழித்து வரும் அரசியல் வாதிகளும் இதயே செய்வார்கள் ...இதன் முலகராணம் யாரோ ஒருவர் சின்ன இது போன்ற தவறை பண்ணி இருப்பார் அதில் வெற்றியும் பெற்று இருப்பார் ...அதற்க்கு பின்னால் வந்தவர்கள் அதை படித்து , அதை பெரிதாக உதி அவர்கள் கால சூழ்நிலையில் அவர்கள் இயன்ற வரை பெரிதகுவார்கள் இன்னும் பரப்பு வார்கள் அது விரிவடைந்து ஒவ்வொரு கட்டத்திலும் பல மனிதர்களால் பலம் பெற்று சமுதாய கட்டமைப்பை உடைத்து கொண்டே வந்து கொண்டிருகிறது ...இதனால் 50 களில் கம்மியாக கொள்ளை அடித்த அரசியவாதி நல்லவன் இன்றைய அரசியல்வாதிகள் மட்டுமே கெட்டவர்கள் என்று சொல்வது மிக தவறு ..அந்த கயவர்கள் தான் இவர்களின் முன்னோடிகள் ....
இதனால் அரசியவாதி மட்டும் தான் ஊழல் உள்ளவனா ? நம் பணியாற்றும் இடத்தில எதனை பேர் மனசாட்சியுடன் பணிஆற்றுகிறோம் ? பிரிட்டிஷ் காலத்தில் ஒருவனின் மனசாட்சி வேறு விதமாக இருக்கிறது , 60 களில் வேறு இப்போது வேறு ...நாம் பணியாற்றும் இடத்தில நம் சக மனிதனுக்கு தீங்கு ஏற்ப்பட்டால் நாம் 'நாம் உண்டு நம் வேலை ' உண்டு என்று இருந்து விடுவதே இன்றைய 'நல்ல மனசாட்சி '...தீங்கு ஏற்ப்படதே என்று 'உறுத்தவும் ' நம்மக்கு செய்வதில்லை ..அந்த அளவுக்கு நம் மனசாட்சி மழுங்கிவிட்டது ...
Quoting புதியவன் ராஜ்:
இன்னும் நெறைய விஷயங்கள் இருக்கின்றன ..இவற்றை கழியாதவரை ஊழல் , ட்வேஷதை ஒழிக்க முடியாது ......சசி ஜெய போன்றோர் இணைவர் பின்பு மீண்டு பிரிவர் ..வேறொருவர் அவர் இடத்தில வருவர் ...காலம் ஓடிக்கொண்டுதான் இருக்கும் ..அது நிற்ப்பதில்லை
எ
ஊழல் மட்டும் தான் பிரச்சனையா ? எப்படி நல்ல குணங்கள் ஒன்றோடு ஒன்று தொடர்பு உள்ளதோ அது போல் தான் கெட்ட குணங்களும் ...
ஊழலுக்கும் ஜாதி மத மற்றும் ஏனைய வக்கிரங்களுக்கு ம் தொடர்பு உண்டு ....இந்த பிரச்னைகள் எதோ அரசியவாதிகள் போல மேல் இடத்தில் மட்டும் தான் இல்லை ..எல்லா மட்டத்திலும் இருக்கிறது ..உதாரணமாக சென்னையில் வசிக்கும் நடுத்தர கிளார்க் தன் மகனை மெட்ரிக் பள்ளிக்கு அனுப்புவான் ...நல்ல கொஞ்சம் வசதி படைத்த மனிதன் நல்ல பள்ளிகுடதிற்கு அனுப்புவான் ..ஏழை தொழிலாளி அரசு பள்ளிகுடத்திர்க ்கு அனுப்புவன் ..கிராமத்தில் உள்ளவனோ சில மையில் தூரம் சென்று படித்து வருவான் ..குடும்ப சூழ்நிலை , ஒவ்வொரு பள்ளியில் இருக்கும் ஆசிரியார்கள் ,வசதி அமைப்பு எல்லாம் சேர்ந்தே ஒரு நல்ல மாணவனை உருவாகிறது ..சில வசதி படைத்த பள்ளிகளில் சில 'ஜாதிகளை ' தவிர வேறு யாரையும் சேர்த்து கொள்வதில்லை ..இது எழுத படாத உண்மை ...இப்படி கீழ் மட்டத்திலே பல வேறுபாடுகள் இருக்கும் பொது எப்படி உயர் மட்டத்தில் எதிர்ப்பாக முடியும் ..இப்படி சிறு வயது முதல் பல பிரச்னை மனிதன் மீது திணிப்பதால் , அவன் அதை உணரும் பொது த்வேஷம் , ஜாதி பற்று போன்றவற்றை எப்படி அறுக்க முடியும் .....
இது மட்டுமில்லாமல் பணக்கார கம்பெனி முதலாளிகளின் சுயநலங்கள் என்று பல கோணங்களில் ஊழல் ஜாதி மத த்வேஷம் தாக்கிறது ..இப்பொழுது உலகம் இணைக்க பட்டு விட்டது அதனால் வரும் ஆசைகள் ட்வேஷங்களும் அடங்கும் ..ஆபாச படம் மட்டும் தான் பிரச்னை இல்லை , ' 25 வழிகளில் பணக்காரன் ' ஆவது எப்படி என்ற புத்தகம் கூட ஊழலுக்கு வழிவக்குக்கும் .....
யோசித்து பார்த்தல் இவர்கள் எல்லோர் நினைக்கும் எல்லா காரணங்களும் முறையில்லாதவை ஆபத்தானவை ......
சசி ஆடிப்படைத்தார் என்கிறார்கள் ..அவர் எம்ஜிஆர் காலத்தில் ஆரெம்வி போன்றோர் என்ன செய்தாரோ அதை தான் செய்தார் ..ஜெயாவும் அப்படியே ...கருணாநிதியும் இதற்கு விதிவிலக்கு அல்ல ..50 வருடம் கழித்து வரும் அரசியல் வாதிகளும் இதயே செய்வார்கள் ...இதன் முலகராணம் யாரோ ஒருவர் சின்ன இது போன்ற தவறை பண்ணி இருப்பார் அதில் வெற்றியும் பெற்று இருப்பார் ...அதற்க்கு பின்னால் வந்தவர்கள் அதை படித்து , அதை பெரிதாக உதி அவர்கள் கால ரும் பொது த்வேஷம் , ஜாதி பற்று போன்றவற்றை எப்படி அறுக்க முடியும் .....
ஆத்மார்த்த நண்பர்களாக இருந்திருக்கலாம ் ..பணம் , ஆளும் கட்சி , எதிர்க்கட்சி என்ற நிலை வந்தவுடன் யார் , யாருக்கு எதனால் லாபம் என்பதில் தான் நட்பு இருந்திருக்கும் ..இப்போது அத்தகைய நட்பு முறிந்திருந்தால ் சசி யினால் வரும் பலன்களை மேலும் இன்னும் சில பலன்கள் ( பெங்களூர் வழக்கு ) போன்றவற்றை தருவதாக சொலி இருப்பார் .. அவர் யார் ? அவரினால் வரும் லாபம் என்ன என்பது தான் கேள்வி ? பெங்களூர் வழக்கு இருக்கும் பொது சசியை நீக்க யாரும் முட்டாள் இல்லை அப்படி நீக்கினால் அதற்கு லாபம் தருபவர் யார் ....இதுவே முக்கியமான கேள்வி ? சோ வந்தால் அவர் மூலியமாக தேசிய கட்சி , அவர்களின் நெருக்கமான பிசினஸ் தரகர்கள் நுழைவதற்கு ஒப்புதல் வழங்க படும் ... கொள்கை முடிவிலும் மாற்றம் வரும் ...ஏனெனில் ஆரசியவாதிகள் அந்த நபர்கள் (சோவையும் சேர்த்து) சொல்லு விஷயங்களுக்கு ஆட்பட வேண்டும் ....இது தான் ..மத்தபடி நாலாட்சி என்பதெலாம் கனவில் ..யாரும் ஞானி அல்ல ..நீங்களே சொல்லுங்கள் ..இவ்வளவு காசு கொடுத்து எம் எல் ஏ , ஆளும் கட்சி என்று அமர்கையில் மக்களுக்கு சேவை செய்வீர்களா அல்லது விட்ட பணத்தை எடுப்பீர்களா ? இதில் கம்பனி முதலாளிகள் ' டவலோப்மென்ட் ' என்ற பெயாரால் அவர்கள் அடிக்கும் பணத்தில் ஒரு லாபத்தை இவர்களுக்கு கொடுத்து இன்னும் தூண்டுகிறார்கள் ....பிரெச்சனை எங்கு உள்ளது என்பது தெளிவானால் நாம் கொண்டாடவும் , துன்பப்படவும் தேவையில்லை ....இந்த பிரிவினால் ஏன் மக்கள் இன்பமும் துன்பமும் அடைகிறார்கள் என்று புரிய வில்லை ? நமக்கு நெறைய வேலைகள் உள்ளன , நாம் அதை பார்க்கலாம்
உதய சூரியன்...உங்கள் விமரிசனத்தைப்பட ிக்கும் பொழுது பெருமையாக இருக்கின்றது!
பல போலி 'பகுத்தறிவாளர்'களைப்போலல்லாமல் பிராமணர் தேவர் - இந்த இரண்டு ஜாதிகளையும் இழுக்காமல் கருத்தை வைத்துள்ளீர்கள் ...
வாழ்க வளமுடன்!
டேய் நாதாரி .. திருந்த மாட்ட்யாடா? எப்போ பார்தாலும் பார்பனன் சதின்னுக்கிட்டு .. உனக்கு என்ன ஆட்டு மூளையா?
பிராமனர் அல்லாத அரசியல் வியாதிகளொன்ன என்ன ரொம்ப கிழிச்சுட்டுனான ுங்களா?
நீ எல்லாம் தமிழ்நாட்டுக்கு பாரம் டா!!
நீ பிராமனன வெறுப்ப...உன்னோட ஜாதிய வேற வெட்டிப்பய வெறுப்பான்...
அது சரி... நீ தமிழ்நாட்டுக்கு என்ன செஞ்ச ? ஒங்க ஜாதி என்ன செஞ்சு நாட்ட வாழ வெச்சாங்க ?
பகுத்தறிந்து செயல்படு...ஜாதிய வெச்சு யாரோட குணத்தையும் எடை போடாதே...
வெட்டிப்பயலே...உருப்படு...நாம் எல்லாம் தமிழர்...மனிதர்...
சசிகலா மற்றும் நடராஜன் இருவரும் தனது சமுதாயத்திற்காக ஒரு முடியைக்கூட உதிர்க்க வில்லை.
ஆனால் அவர்கள்தான் என்னமோ ஒட்டுமொத்த முக்குலோத்தோர் சமுகத்திற்கு பிரதிநிதி மாதிரி காட்டிக்கொண்டது எல்லாம் .. செல்வாக்கோடு கொள்ளையடிக்கவே.
அ.தி.மு.க-வும் என்னமோ தேவர்கள் கட்சி என்று "அம்மா" ஒரு பில்டப் செய்துதான் வைத்திருக்கிறார ்.ஆனால் ஒரு புண்ணாக்கும் செய்ததில்லை.... 2001-ல் மதுரை விமான நிலையத்திற்கு தேவர் பெயரை வைக்காமல் வேண்டுமென்றே செய்தது.இதே "அம்மா"தான் அதே தோழி சசிகலாதான்.ஓ.பி.ஸ் முதல்வர் என்றாலும் ஜெ-யின் கண்ணசவில்லாமல் எதுவும் நடக்காது
தேர்தல் வருகிறது என்றால் பசும்பொன்னில் பார்க்கலாம் இந்த உடன் பிறவா சகோதரிகளை.
ஆனால் ஜெ-ஆட்சியில்தான் முக்குலோத்தோர் மீது பி.சி.ஆர் அதிகமாய் பாய்ந்தது.
ஜெயலலிதாவும் சசிகலாவும் சேர்ந்து அடித்த கொள்ளைக்கு முக்குலோத்தோர் பெயர் கெட்டதுதான் மிச்சம்.[/ஃஉஒடெ]
சரியான பின்னூட்டம்
RSS feed for comments to this post