|
There is enough for everyone’s need, but not enough for everyone’s greed என்றார் மகாத்மா காந்தி. இது யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ. ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு நன்கு பொருந்தும். திமுக ஆட்சி காலத்தில் சென்னை, நெற்குன்றத்தில் “Own your house” என்ற பெயரில் உயர் உயர் அதிகாரிகளுக்கான வீட்டு வசதித் திட்டத்தை கொடை வள்ளல் கருணாநிதி உருவாக்கினார். இந்தத் திட்டத்தின் படி ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஎஃப்எஸ் அதிகாரிகள் மற்றும், க்ரூப் 1 அதிகாரிகள் மற்றும் இதர அரசு ஊழியர்களுக்கு அடுக்கு மாடி வீடுகள் கட்டிக் கொடுப்பதுதான் திட்டம்.

மஹாராஷ்டிர மாநில முதல்வர் பதவியை பறித்த ஆதர்ஷ் அடுக்கு மாடி குடியிருப்பு
இந்தத் திட்டம், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான 17 ஏக்கர் நிலத்தில் கட்டப் படுகிறது. இந்த வாளாகத்தில் மொத்தம் 1016 வீடுகள் கட்டப் படுகின்றன. இந்த 1016 வீடுகளில் 608 வீடுகள் உயர் உயர் அதிகாரிகளுக்காக (ஐஏஎஸ், ஐபிஎஸ்) என்றும், 120 வீடுகள் க்ரூப் 1 அதிகாரிகளுக்காக என்றும், 288 வீடுகள் இதர அரசு ஊழியர்களுக்காகவென்றும் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளன. மொத்தம் உள்ள வீடுகளில் பாதிக்கும் மேற்பட்ட வீடுகளை உயர் அதிகாரிகளுக்கு ஒதுக்கீடு செய்ததில் இருந்தே இந்தத் திட்டம் யாருக்காகவென்பது புரிந்திருக்கும்.
உயர் உயர் அதிகாரிகளுக்கு 2458 சதுர அடி கொண்ட நான்கு படுக்கையறை வசதி கொண்ட வீடுகள் மற்றும் 1923 சதுர அடியில் மூன்று படுக்கையறை வசதி கொண்ட வீடுகளும் வழங்கப் படும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.
இதில் விசித்திரம் என்னவென்றால், ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு ஒதுக்கப் பட்டுள்ள வீடுகளின் விலை ஒரு சதுர அடி ரூபாய் 2442/-. க்ரூப் 1 அதிகாரிகளுக்கு ஒதுக்கப் பட்டுள்ள வீட்டின் விலை ஒரு சதுர அடி ரூபாய் 2894/-. இதர அரசு ஊழியர்களுக்கு ஒதுக்கப் பட்டுள்ள வீட்டின் விலை ஒரு சதுர அடி ரூபாய் 2690/-/ எப்படி இருக்கிறது விலை நிர்ணயம் ?
இது மட்டுமல்லாமல், அந்த இடத்தில் தற்போதைய சந்தை விலை ஒரு சதுர அடி ரூபாய் 3800 முதல் 5000 வரை போகிறது. தமிழ்நாடு அரசு கடுமையான நிதி நெருக்கடியில் இருக்கிறது என்று அறிவிக்கப் பட்டுள்ள நிலையில், 300 முதல் 500 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்படும் வகையில் எதற்காக இப்படி ஒரு வீட்டு வசதித் திட்டத்தை உயர் உயர் அதிகாரிகளுக்காக வழங்க வேண்டும் ?

நெற்குன்றத்தில் அடுக்கு மாடி விற்பனைக்காக டிசம்பம் மாதம் இணையத்தில் வெளி வந்த விளம்பரம்
இந்த வீட்டு வசதித் திட்டத்திற்காக விதிமுறைகள் மற்றும் நெறிகள் அறிவிக்கப் பட்டது 28.02.2011 அன்று. இந்த அறிவிப்பே மோசடியான அறிவிப்பு என்று தகவல்கள் கூறுகின்றன. தமிழ்நாடு வீட்டு வசதித் வாரியத்தின் மேலாண் இயக்குநரிடமிருந்து உயர் உயர் அதிகாரிகளுக்கு 28.10.2010 அன்று ஒரு கடிதம் அனுப்பப் படுகிறது. அந்தக் கடிதத்தின் படி தமிழ்நாடு அரசு அரசு ஊழியர்களுக்காக “Own your housing scheme” என்ற திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்களுக்கு வீடு கட்டித் தரும் திட்டத்திற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் திட்டத்திற்கான விதிமுறைகள் “Own your housing scheme” என்ற திட்டத்திற்கு வகுக்கப் பட்டுள்ள விதிமுறைகளின் படி பொருந்தும். உங்களுக்கு “சின்ன வீடு வேணுமா… பெரிய வீடு வேணுமா…” என்பதை 5 நவம்பர் 2010க்குள் தெரியப்படுத்தவும் என்று அந்தக் கடிதம் தெரிவிக்கிறது.

“Own your housing scheme” என்ற அந்தத் திட்டத்திற்கான விதிமுறைகள் என்று வகுக்கப் படுகின்றன தெரியுமா ? 28.02.2011 அன்று. அதாவது சரியாக தேர்தல் தேதி அறிவிக்கப் படுவதற்கு சரியாக ஒரு நாள் முன்னதாக அறிவிக்கப் படுகிறது. அதுவும் அந்த அரசாணை வெளியிடப்படும் நேரத்தைப் பார்த்தீர்களேயானால், 1 மார்ச் 2011 விடியற்காலை 00.59 மணிக்கு பொதுத்துறைச் செயலாளர் பெயரில் பதிவாகியுள்ள தொலைபேசி எண்ணிலிருந்து அனுப்பப் பட்டிருக்கிறது. எந்த அரசு அலுவலகத்திலாவது இரவு 1 மணிக்கு இப்படி வேலை செய்து பார்த்திருக்கிறீர்களா ?


28.02.2011 அன்று வழிகாட்டும் நெறிமுறைகள் வெளியிடப் பட்ட ஒரு திட்டத்திற்கு 5 நவம்பர் 2010 அன்று எப்படி விண்ணப்பிக்க முடியும் ?
சரி. வெளியிடப்பட்ட இந்த விதிமுறைகளையாவது பின்பற்றியிருக்கிறார்களா என்றால் அதுவும் இல்லை. இந்த விதிமுறைகளில் விதி எண் 3 (xv) என்ன கூறுகிறது என்றால்
“3 (xv) The applicants who have already availed the benefit of allotment under GDQ from TNHB within the respective corporation limits, of the project will not be considered for allotment in this scheme.”

அரசு விருப்புரிமைக் கோட்டாவில் ஒதுக்கீடு பெற்ற அதிகாரிகள் இந்தத் திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு பெற பரிசீலிக்கப் பட மாட்டார்கள் என்பதே இந்த விதி முறை. இதையாவது பின்பற்றியிருக்கிறார்களா என்றால் அதுவும் இல்லை. ஒரு சாம்பிளுக்கு ஐபிஎஸ் வகையறாவை மட்டும் எடுத்து, ஒப்பீடு செய்து பார்த்ததில், கீழ் கண்ட அதிகாரிகள் அரசு விருப்புரிமைக் கோட்டாவில் ஒதுக்கீடு பெற்றுள்ள விபரம் தெரிய வந்துள்ளது.
Name House / Plot / Flat under GDQ
1. K.P.Maghendran IPS Housing Board Plot HIG-A-101,Nolambur Neibhourhood Scheme
2. S.George,IPS HIG 108, Nolabmbur, Chennai
3. T.K.Rajendran,IPS Plot No.946, 10th Street, Mogappair Eri Scheme Chennai
4, J.K.Tripathy IPS HIG C3/924, 10th Street Mogappair Eri Scheme Chennai
5. C.K.Gandhirajan,IPS No.2, 10th Street Mogappair Eri Scheme Chennai
6. Asuthosh Shukla,IPS Plot No. A.1-907. Mogappair Eri Scheme Chennai
7. C.Sylendra Babu IPS Plot No.LIG 959/62 (4 plots) Mogappair Eri Scheme Chennai
8. Karan Sinha IPS Plot No.2, Arignar Anna Nagar West Chennai
9. S.Rajendran IPS HIG Flat No. H-80 F.1 type TNHB Valmiki Nagar Besant Nagar Extension Thiruvanmiyur
10. T.V.Ravichandran IPS A1/6, Mogappair Eri Scheme Mogappair West, Chennai. 600 058
11. R.C.Kudawla IPS Plot No.955 to 958 Mogappair Eri Scheme Chennai
இவர்கள் அத்தனை பேரும், நெற்குன்றம் வீட்டு வசதித் திட்டத்திலும் கீழ்கண்டவாறு ஒதுக்கீடு பெற்றுள்ளனர்.
1) K.P.MAGHENDHRAN IPS Floor No. 11 Flat No. 3
2) S.GEORGE IPS Floor No. 19 Flat No. 3
3) T.K.RAJENDRAN IPS Floor No. 9 Flat No. 2
4) J.K.TRIPATHY IPS Floor No. 10 Flat No. 2
5) C.K.GANDHIRAJAN IPS Floor No. 18 Flat No. 1
6) ASUTOSH SHUKLA IPS Floor No. 15 Flat No. 1
7) C.SYLENDRA BABU IPS Floor No. 11 Flat No. 1
8) KARAN SINGHA IPS Floor No. 2 Flat No. 1
9) S.RAJENDRAN IPS Floor No. 3 Flat No. 1
10) T.V.RAVICHANDRAN IPS Floor No. 9 Flat No. 3
11) R.C.KUDAWLA IPS Floor No.10 Flat No. 1
இந்த உயர் அதிகாரிகளுக்கு அரசு வழங்கியுள்ள அதிகாரங்களின் படி, இவர்களின் கீழ் பணியாற்றும், கீழ் நிலை அரசு ஊழியர்களின் தலையெழுத்தை நிர்ணயிப்பவர்கள் இவர்கள்தான். ஒரு அரசு ஊழியர் பணியில் தவறு செய்தாலோ, ஒழுங்கீனமான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தாலோ, அவர்களுக்கு தண்டனை கொடுக்கும் அதிகாரம் இவர்களிடம் வழங்கப் பட்டிருக்கிறது. இந்தப் பட்டியலில் உள்ளவர்களில் கே.பி.மகேந்திரன் முன்னாள் லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர். டி.கே.ராஜேந்திரன் இன்னாள் லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர். திரிபாதி சென்னை மாநகர கமிஷனர். ஜார்ஜ் சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி. ஸ்நேக் பாபு என்று அழைக்கப் படும் சைலந்திரபாபு வடக்கு மண்டல ஐஜி. ஸ்நேக் பாபுவுக்கு மட்டும் இருக்கும் மொத்த சொத்துக்கள் என்னென்ன தெரியுமா ?


1) சென்னை முகப்பேரில் 2400 சதுர அடி நிலத்தில் வீடு
2) சென்னை நொளம்பூரில் 4800 சதுர அடி நிலம் (வீரப்பனை சுட்டதுக்காம்)
3) மதுராந்தகம் விளாங்காட்டில் 3 ஏக்கர் நிலம்
4) கன்குளம், தம்போடு கிராமத்தில் மனைவி பெயரில் 1.795 ஹெக்டேர் நிலம்
5) வளத்தோட்டம் கிராமத்தில் மனைவி பெயரில் நிலம்
6) மனைவி பெயரில் முகப்பேர் ஏரித்திட்டத்தில் 1280 சதுர அடியில் வீடு
7) திருவள்ளுர் மாவட்டத்தில் மனைவி பெயரில் 591 சதுர அடி நிலம்
8) காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் கிராமத்தில் மனைவி பெயரில் 50 சென்ட் நிலம்
9) காஞ்சிபுரம் செய்யாறு தாலுகாவில் மனைவி பெயரில் 2 ஏக்கர் நிலம்.
மேற்கண்ட 11 அதிகாரிகளுக்கும் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ள வீடுகளை ரத்து செய்ய வேண்டும் என்று வீட்டு வசதித் துறைச் செயலருக்கு கடிதம் அனுப்பப் பட்டுள்ளது.



இந்த விவகாரத்தில் மிகப் பெரிய அயோக்கியத்தனம் செய்யப் பட்டுள்ளது. அது என்னவென்றால் 1979ம் ஆண்டில், யாருக்கு வீடு ஒதுக்கலாம் என்பதற்கான விதிமுறைகள் வகுக்கப் பட்டன. அதன் படி, ஏற்கனவே வீடோ /வீட்டு மனையோ/ அடுக்குமாடிக் குடியிருப்போ/ தன் பெயரிலோ, தன் குடும்பத்தினர் பெயரிலோ, இந்தியாவின் எந்த மாநகராட்சி, முதல் நிலை பேரூராட்சியிலோ வைத்திருப்பவர்களுக்கு வீட்டு வசதி வாரியத்தின் ஒதுக்கீடுகள் செய்யப் படக் கூடாது என்பது.

இந்த விதிமுறை இன்று வரை தளர்த்தப்படவில்லை. ஆனால், இதில் வீடு ஒதுக்கீடு பெற்றுள்ள 95 சதவிகிதமான உயர் உயர் அதிகாரிகள் அனைவரும் வீடோ, அல்லது வீட்டு மனையோ வைத்திருக்கிறார்கள் என்பதும், அவற்றை தங்கள் சொத்துக் கணக்கில் தெரிவித்திருக்கிறார்கள் என்பதுமே.
சரி இந்த அதிகாரிகளை விடுங்கள். இவர்களை விட பேராசைப் பிடித்த அதிகாரி ஒருவர் இருக்கிறார். அவர் யாரென்றால், தலைமைத் தகவல் ஆணையராக உள்ள ஸ்ரீபதிதான்.

இவரைப் பற்றி சவுக்கில் பல முறை கேவலமாக எழுதியும் பதவியை ராஜினாமா செய்து விட்டுப் போவேனா என்கிறார். அது சரி.. இதெல்லாம் மான ரோஷம் உள்ளவர்கள் செய்வது அல்லவா ?

இந்த ஸ்ரீபதி 30.04.2010ல் அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெறுகிறார். நெற்குன்றம் வீட்டு வசதித் திட்டத்திற்கான அழைப்புக் கடிதம் முதன் முதலில் அனுப்பப் படுவதே 28 அக்டோபர் 2010ல். அப்படி இருக்கும் போது ஏப்ரல் 2010ல் ஓய்வு பெற்ற ஸ்ரீபதிக்கு எப்படி ஒதுக்கீடு செய்ய முடியும் ? சென்னை அண்ணா நகர் ஆபீசர்ஸ் காலனியில் பிரம்மாண்டமான வீடு கட்டிக் குடியிருக்கும் ஸ்ரீபதிக்கு இன்னும் எவ்வளவுதான் வேண்டும் ? மனிதனின் பேராசைக்கு ஒரு அளவே இல்லையா ?
உயர் அதிகாரிகளே… நீங்கள் அரசு வழங்கியுள்ள சொகுசுக் கார்களில் சென்னை நகரில் பவனி வரும் போது, சாலையோரங்களிலும், கூவம் நதிக்கரை ஓரத்திலும் வசிப்பவர்களைப் பாருங்கள். அவர்கள் கட்டும் வரிப்பணத்தில் தான் உங்களுக்கு சம்பளம் வழங்கப் படுகிறது என்பதை மறந்து விடாதீர்கள்.



நபிகள் நாயகம் கூறுவதை சவுக்கு உங்களுக்கு நினைவுபடுத்தக் கடமைப் பட்டுள்ளது. “பசியுள்ள இரண்டு ஓநாய்களை ஆட்டு மந்தையில் விட்டுவிடின் அவை எத்தணை குழப்பத்தை உண்டு பண்ணி விடுமோ, அத்துனை குழப்பத்தை ஒரு மனிதனுடைய பொருளாசையும் பதவி மோகமும் அவனுடைய மார்க்கத்தில் உண்டு பண்ணிவிடும்”
|
Comments
They are act in in very perfect person in department
In department one constable get 50 rs they
Jumbed through earth to heaven
நம்முடைய உமாசங்கர்.IAS போன்று எத்தனையோ நேர்மையான, திறமையான அதிகாரிகள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள் ...நமக்கு உரிமை இல்லாத ,அடுத்தவர், அல்லது அரசு பணத்தை அபகரிக்க நினைக்கும் எண்ணம் அவரவர் உள்ளத்திலும், எண்ணத்திலும் தான் உள்ளது..வகிக்கும் பதவிக்கு கிடையாது.
IAS,IPS,பதவிக்க ு வந்த பின்பும் ,கற்ற கல்விக்கும் ,பெற்ற பதவிக்கும் பெருமை சேர்ப்பவர்கள் IAS,IPS அதிகாரிகள் இந்திய முழுக்க இருப்பதை இப்போதும் நாம் காண முடியும் ...மற்ற வகையில் சுருட்டும் அதிகாரிகளும் இருக்கிறார்கள் ,அவர்கள் பெற்றோரின் வளர்ப்பில் தான் குற்றம் இருக்க முடியும்..
நல்ல கட்டுரை வாழ்த்து.
எப்படிதான்,யோசி ப்பதோ தெரியவில்லை.நல்ல கலகம் .
மெய்தேடி..................
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால ், ........
உங்களுக்கு எல்லாம் எவ்வளவு தான்டா பணம் பதவி பட்டம் வேணும். எத்தனை கோடியை சேர்த்து வெச்சாலும் நிம்மதியா இருக்க முடியுமா உங்கனால. நீங்க எல்லாம் இப்படி ஊரை அடிச்சு உலையில் போடறதுனால மேல படத்துல பாரு ரோட்டுல குடி இருக்கறதை. இதை எல்லாம் பாத்துட்டு உங்களுக்கு எல்லாம் எப்படி சோறு உள்ள போகுது. எத்தனை வீடு இருந்தாலும் ஒரு வீட்டுலதான தூங்க முடியும்.உங்களுக்கு கார் ஓட்ட ஒரு ஆள் . கார் கதவை தொறக்க ஆள். வீட்டு வேலை செய்ய ஒரு ஆள். ஷு லேஸ் அவுந்தா அதை கட்ட ஒரு ஆள்.
எவ்வளவு பணம் இருந்தாலும் காலைல நாலு இட்லிக்கு மேல திங்க முடியுமா உன்னால. எத்தனை வீடு , ஏக்கர் கணக்குல நெலம் வாங்கி போட்டாலும் செத்தா ஆறடி தான் . இப்ப எல்லாம் அதுவும் இல்ல . மூணு மணி நேரம் கழிச்சு ஒரு சொம்புல தருவாங்க . அதுக்குள்ள எவ்வளவு தான் ஆடுவீங்க.ஒத்த பைசா செலவு உண்டா உங்களுக்கு. எல்லாம் ஓசி . ஓசில கெடைச்சா எதை வேணா வாங்கிகிவீங்களா . நேர்மை . நியாயம் , எளிமை எல்லாம் ஆபீஸ் வாசல்லயே விட்ருவீங்களா. இப்படி அடுத்தவன் காசுல திங்கும் போது அருவெறுப்பா இருக்காது.???????? இது வரைக்கும் காசு குடுத்து ஒரு டீ வாங்கி குடிச்சிருகின்க ளா ?????
எத்தனை சைபர்னு என்ன முடியாத அளவுக்கு கொள்ளை அடிச்சான் ஒருத்தன் .நீங்க எல்லாம் வரிசைல நின்னு சல்யுட் அடிச்சிங்க .இப்ப ஆறு மாசமா கம்பி என்றான். வாழ்க்கை ஒரு வட்டம் . ஒரு நாள் எல்லாம் வந்த வேகத்தில போயிரும்.
ஆனால், தமிழுக்கு இந்துத்துவ(பிரா மண அமைப்புமுறை) எதிர்ப்பை தவிர வேறு ஒரு “காலனித்துவ எதிர்ப்பு இந்துத்துவ” முகமும் உள்ளது. இதற்கு மகாக்கவி சுப்பிரமணிய பாரதியே உதாரணம்!.
சுப்பிரமணிய சுவாமியும், சோவும், கர்நாடகா விஜயநகர சாம்ராஜ்ஜியத்தை புகழ்ந்து (சோழனையும், மராட்டிய சிவாஜியையும் புறம்தள்ளி) இந்த சுயநல வெளிநாட்டு(வி.ஹெ ச்பி) போக்கை ஆதரிப்பது,தற்போ து உள்ள சுழலில் ஏதோ ஒரு அடையாளம் தேவை என்பதை காட்டுகிறது. அதற்காக இதிலும் “பாக்கெட்டை” நிரப்பும் அதே சுயநலமா?.
“தமிழ் அடையாளத்தை” போட்டுத்தள்ளுவத ன் மூலம் மட்டும் வட மற்றும் தென்னிந்தியா “இந்துத்துவத்தி ன் அடிப்படையில்” ஒருமித்து விடுமா??.
ஜாதி அமைப்புமுறை என்பது இனம், பழங்குடி, அமைப்பு முறையிலிருந்து ஐரோப்பாவில் உருவான “சிட்டிசன்ஷிப்” தேசிய நாட்டுருவாக்கம் போன்றது என்கிறார்கள். இது ஹிந்தியில் “நாடு” என்பதற்கு “ஜாதி” என்று கூறுவதால், ஏற்ப்பட்ட மேற்குலக புரிதலால் இருக்கலாம்.
இதனால் ஜாதியை ஒரு தேசிய முரண்பாடு அளவுக்கு மிக இறுக்கமான புரிதலாக, 19 ஆம் நுற்றாண்டின் ஐரோப்பிய தேசங்களின் “போர்முறை தீர்வு” யதார்த்த நிலையுடன் ஒப்பிட்டு மேற்குலகம் தற்போது அணுகுவதாகவே உள்ளது.
மத்திய கிழக்கு தேசங்களில் ஏற்ப்பட்டுள்ள “ஸ்பிரிங்” இந்துத்துவ, புத்தமத உலகிற்கு காப்பியடிக்க முடியாது. ஆனால், வெளிநாட்டு வேலைவாய்ப்புகளி ல் இருக்கும் மத்தியதர இந்தியர்கள் (குறிப்பாக தென்னிந்தியர்), இதை தங்களின் சுயநல ஆட்சிப்பிடிப்பி ற்கு பி.ஜே.பி. பின்னால் நிற்கிறார்கள்.
http://www.youtube.com/watch?v=b2v8Fnuv2ps
http://www.youtube.com/watch?v=P7Xgc4ljHKM
http://inioru.com/?p=3443
“பிராமணர்கள்” இதில் தாக்குப்பிடிக்க முடியாமல் தங்களைமட்டும் பாதுகாத்துக்கொள ்ளும் சுயநலவாதிகளாக மாற்றிக் கொண்டார்கள். “ஆரியம்” என்பது இந்த சுயநலத்திற்காகத ்தான் இவர்களால் பிடிக்கப்பட்டது .
இதே “சுயநலத்திற்காக த ்தான்” பக்தி இயக்க பரிணாமமான வெள்ளாள,முதலியா ர்கள் “தமிழை” பிடித்துக் கொண்டார்கள். யாழ்ப்பாண “வெள்ளாளர்களும் ” தமிழை பிடித்தது இப்படிதான்.
அனைவருக்கும் பொதுவான விஷயம் “வேலைவாய்ப்பு”.
“இலங்கைத் தமிழர்” மத்தியில் பிராமண அமைப்புமுறையை காக்க வேண்டிய “பொறுப்பு” கிடையாது, வெறும் வேலைவாய்ப்பு பிரச்சனைதான்.
இதே போன்ற சுயநல நோக்கோடுதான் “சசிகலா” கும்பலும் செயல்பட்டது. இவர்களிடம் பிராமண அமைப்புமுறையை பாதுகாக்கும் பொறுப்பை எதிபார்த்தால் எப்படி?.
1970 களில் கர்நாடகா சுயநிதி கல்லூரிகள் மூலம் அப்போது வெளிநாட்டு பல்கலைகழகங்களில ் படித்த இந்திய மாணவர்களில் 40 % பெங்களுரிலிருந் து சென்றவர்கள். கேரளா கம்யுனிஸ்ட் ஆட்சியால் டிரைவர்,குழாய் ரிப்பேர், கட்டிட வேலை போன்ற சான்றிதழ்கள் மினிமம் பாஸ் முறையில் வழங்கப்பட்டு மத்திய கிழக்கு வேலைவாய்ப்பில் சென்றவர்கள் 90 % மலையாளிகள்.
ஆகையால் தற்போது இவர்களின் தலைமுறைகள் அனைவரும் தங்கள் அடையாளத்திற்காக “விஷ்வ இந்து பரிஷத்தை” பிடித்துள்ளனர். ராஜ ராஜ சோழனையும், தமிழையும் பிடித்த இலங்கைத்தமிழர்க ளும் தற்போது இதில் சேர்ந்துள்ளனர்.
திருப்பூர் கவுண்டர்களும் சண்முகம்(மலேஷிய ா ஹிண்ட்ராப்) மூலம் தங்கள் ஆடை ஏற்றுமதிக்காக இலங்கைத்தமிழர் பக்கம் சாய்ந்துள்ளனர்( யமுனா ராஜேந்திரன்).
இது மிகப்பெரிய செல்வாக்கை பி.ஜே.பி. மற்றும் நரேந்திர மோடி நடவடிக்கைகளில் செலுத்துகிறது.
இவர்களால் பிராமண அமைப்புமுறையை காப்பாற்ற முடியுமா அல்லது இன்னொரு ஆப்கானிஸ்தானை உருவாக்குகிறார் களா?
இந்த விவரங்களை அரசிடமிருந்தே பெற்றுக் கொண்டு
பொது நல வழக்கு போடலாமே. இதற்கும் சுப்பு சாமி தான் வர வேண்டுமா?
ஜாபர் கேஸ் மீண்டும் கிளறப்பட்டால், அதிலிருந்து தப்புவதற்கு வேறு யாராவது ஒருவரின் தயவு தேவை! (மிடில்-ஈஸ்ட் நபர் தமிழகத்தில் தலையைக் காட்டாதவரை சேஃப்!)
-விறுவிறுப்பு.காம் இணையத்துக்காக, ரிஷி
ஆனால், ஜாபர் தனது உளவுத்துறை கனெக்ஷன்களை வைத்துக்கொண்டு மன்னார்குடி குடும்பத்தில் ஒருவருடன் டீல் ஒன்றைப் போட்டுத் தப்பித்துக் கொண்டார். ஜாபரின் வழக்குகள் எல்லாம் கிடப்பில் போடப்பட்டுவிட, அவரும் அடக்கி வாசித்துக்கொண்ட ு இருந்தார்.
இப்போது மீண்டும் சோதனையாக, அவரது காவல் தெய்வத்துக்கே கல்தா கொடுக்கப்பட்டுள ்ளது.
தி
WELDON MAN
இந்த ஜென்மங்கள் எல்லாம் எப்போது திருந்தும்?... பேராசையே இவர்களைக்கண்டு வெட்கப்படும்... இந்தப்பரதேசிகள் எப்போது பரலோகம் போவர்களோ...
இந்தப்பரதேசிகள் பரலோகம் போனால்தான் நம்தேசம் பாரில் பெரியதாகுமோ
RSS feed for comments to this post