|
இன்னும் எவ்வளவுதான் வேண்டும் என்ற கட்டுரையில் சவுக்கு அரசு விருப்புரிமைக் கோட்டாவில் வீட்டு மனை ஒதுக்கீடு பெற்ற உயர் உயர் அதிகாரிகள் நெற்குன்றம் வீட்டு வசதி வாரிய “Own your house” என்ற திட்டத்தின் கீழ் மீண்டும் மோசடியாக ஒதுக்கீடு பெற்றுள்ளனர் என்று விரிவாக எழுதப் பட்டிருந்தது. இவ்வாறு மோசடி ஒதுக்கீடு பெற்ற 11 ஐபிஎஸ் அதிகாரிகளின் ஒதுக்கீடுகளை ரத்து செய்யுமாறு புகார் ஒன்றும் அனுப்பப்பட்டிருந்தது.
இது குறித்து நேற்றைய டெக்கான் க்ரானிக்கிள் நாளிதழில், காவல்துறை அதிகாரிகள் எப்படி வீட்டு வசதி வாரிய வீடுகளை கபளீகரம் செய்கிறார்கள் என்று விரிவான செய்தி வெளியிடப் பட்டிருந்தது.


அந்த செய்தி தொடர்பாக ஸ்னேக் பாபுவை தொடர்பு கொண்டு கேட்ட போது, “நாங்கள் முகப்பேரில் வீட்டு வசதி வாரிய மனையைப் பெறும் போது, அது சென்னை மாநகராட்சி எல்லைக்குள் இல்லை. அதனால் அந்த விதி எங்களுக்குப் பொருந்தாது” என்று விளக்கம் அளித்தார். சென்னை மாநகர காவல்துறை கமிஷனர் திரிபாதியிடம் கேட்கப் பட்ட போது “நாங்கள் விண்ணப்பித்தோம். வீட்டு வசதி வாரியத்தை யார் ஒதுக்கீடு செய்யச் சொன்னது ?” என்று கூறியிருக்கிறார். (நல்லா இருக்கு சார் உங்கள் நியாயம்)
மோசடியாக ஒதுக்கீடு பெற்ற 11 ஐபிஎஸ் அதிகாரிகளின் நெற்குன்றம் ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று 28.12.2011 அன்று அளிக்கப் பட்ட புகாரின் எதிரொலியாக, வீட்டு வசதி வாரியம், நெற்குன்றத்தில் ஒதுக்கீடு பெற்ற அனைவருக்கும் ஒரு கடிதம் அனுப்பியுள்ளது. அந்தக் கடிதத்தில் விரிவாக்கப் பட்ட சென்னை மாநகராட்சி எல்லைக்குள் வீட்டு வசதி வாரிய ஒதுக்கீடு பெற்றிருந்தாலும், அவர்களுக்கு நெற்குன்றத்தில் ஒதுக்கீடு செய்யப் பட மாட்டாது. இது குறித்த விபரங்களை பொங்கலுக்குள் வழங்க வேண்டும் என்று கடிதம் அனுப்பியுள்ளது என்ற செய்தியை சவுக்கு தனது வாசகர்களோடு மகிழ்ச்சியாக பகிர்ந்து கொள்ள விரும்புகிறது.


டெக்கான் க்ரானிக்கிள் நாளிதழ், தமிழ்நாட்டின் ஆதர்ஷ் ஊழல் என்று நெற்குன்றம் திட்டத்தை வர்ணித்துள்ளது. வீட்டு வசதி வாரியத்தில் ஏற்கனவே ஒதுக்கீடு பெற்றவர்கள் மட்டுமல்ல, சென்னை நகரம் மற்றும் புறநகரில் வீட்டு மனையோ, வீடோ, அடுக்கு மாடிக் குடியிருப்போ, தனது பெயரிலோ, தன் குடும்பத்தினரின் பெயரிலோ வைத்திருக்கும் எந்த அதிகாரிக்கும் நெற்குன்றத்தில் ஒதுக்கீடு செய்யப் படக் கூடாது என்பதே நியாயமான செயலாக இருக்கும். இருப்பினும், அநியாயத்துக்கு போங்கு ஆட்டம் ஆடிய 40 சதவிகித ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளின் வீடு அம்பேல் என்பது ஒரு சிறு வெற்றி. இந்த வெற்றியை தனது வாசகர்களோடு பகிர்ந்து கொள்ளும் அதே நேரத்தில் இந்தச் செய்தியை வெளியிட்ட டெக்கான் க்ரானிக்கிள் நாளிதழுக்கும், இச்செய்தியை சிரத்தையோடு வெளியிட்ட அன்புத் தோழர்கள் கார்த்திகேயன் மற்றும் ரகு ஆகியோருக்கும், சவுக்கு தனது மனமார்ந்த நன்றியை தனது வாசர்கள் சார்பாக தெரிவித்துக் கொள்ள கடமைப் பட்டுள்ளது.
சிறிய வெற்றியாக இருந்தாலும், அது அளிக்கும் மகிழ்ச்சி பெரிதாகத்தான் இருக்கிறது. அதே நேரத்தில் ஸ்நேக் பாபுவுக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறது... அய்யோ வடை போச்சே !!!!!!!
|
Comments
I want to know about the Maran's 2G Scam case. I want to know more about it.
நல்ல செய்தி, பாராட்டுக்கள்
நல்லாதான் எழுதுறீங்க பாஸ்..
கலக்கு கலக்கு
With the help of NARENDRA MODI's "deadly attack group- which killed muslims in Gujarat before, and RSS support in Tamilnadu ADMK cadres(now,Hind u salafists or Vishwa Hindu Parishad-VHP) rampaged and terrorized the streets of Tamilnadu- which was once called "peace park".-- http://tamil.oneindia.in/news/2012/01/07/tamilnadu-admk-cadres-attack-nakkheeran-office-aid0136.html
இன்னும் எவ்வல்லவோ இருக்கு
சவுக்கு சார்
ஐ.பி.எஸ் பயிற்சியில் பயிற்சி எடுத்துகிட்ட நண்பர் இவரைப் பற்றி ஆகா ஓகோ அப்படின்னு புகழ்ந்து தள்ளிட்டார்... ரோல் மாடல்... அப்படி இப்படின்னு...
ஆனா நீங்க இப்படி எழுதுறீங்க...
நீங்க எப்பவும் நேர்மையாகத்தான் எழுதுறீங்க... அது எங்களுக்கு நல்லாவே தெரியும்.
பதினைந்துக்கும் அதிகமான அதிகாரிகள் இதிலிருந்தாலும் எதுக்கு பாபு... பாபுவுக்கு மட்டும் கட்டம்?
ஒய் திஸ் கொலவெரி பாபு?
1. flat/plot/house to be allotted to persons who does own plot/flat/house in name or his family name.
2. Allottee should be Nativity of Tamilnadu.
3. (newly added) Previously allottee should get flat/plot/house under GDQ from the THNB. (this condition because some of them may got plot/flat and house under GDQ may be sold to some others). so they added this norms also.
ஊழியர்களுக்கு ஒதுக்குவதில் சில நியதிகளுக்கு
உட்பட்டு ஒதுக்குவதில் தவறு இல்லை.ஒன்றுக்கு மேல் ஒதுக்குவது தவறு.
http://athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=1484
எங்கு ஓட்டை இருந்தாலும் சிரமம் எடுத்து ஆப்படிக்கிறீங்க .
இதுதான் திரில்லான லைப்.
கொஞ்சம் பொறாமையாயிருந்த ாலும் வாழ்த்துக்கள்.
"சிறு உளிதான் மலையையும் பெயர்க்கும்" என்று கூறப்படுவது மீண்டும் உண்மையாகியிருக் கிறது.
மாறன் சகோதரர்கள் எண்ண ஆனார்கள்? இது பற்றி ஒரு பதிவு வேண்டும்.
திரிபாதி சார்... கவலைப்படாதிங்க.. அவனுங்க குடுக்காட்டி என்ன.. இன்னும் ஒரு ஆறு மாசத்துல நாமலே கஷ்டப்பட்டு உழைச்சு(????) போட் கிளப்ல்லயோ இல்ல அடையாறுலயோ ஒரு வீடு வாங்கிரலாம் சார்.
RSS feed for comments to this post