முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
நக்கீரன் விரித்த வலையில் சிக்கிய ஜெயலலிதா.. ….. அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 58
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
சனிக்கிழமை, 07 ஜனவரி 2012 18:03

இன்று நக்கீரன் அலுவலகம் அமைந்துள்ள ஜானி ஜான் கான் சாலையே போர்க்களமாக காட்சியளித்தது.  நக்கீரன் அலுவலகம் அதிமுக தொண்டர்களால் காலை 10 மணி முதல் தொடர்ந்து தாக்கப் பட்டு வருகிறது.  இந்தத் தாக்குதலுக்கான காரணம், நக்கீரன் வெளியிட்ட செய்தி.

அப்படி என்ன செய்தி வெளியிட்டது நக்கீரன்.. … ?  அது ஒரு கவர் ஸ்டோரி.   “மாட்டுக்கறி சாப்பிடும் மாமி நான்” விவரிக்கும் ஜெயலலிதா. இதுதான் அந்தச் செய்தியின் தலைப்பு.  உள்ளே உள்ள கட்டுரையில் அந்தச் செய்தி இதுதான் “ஜெ.வுடன் ஆலோசனையில் ஈடுபட்டவர்களின் பேச்சு, சசிகலா விவகாரம் பற்றித் திரும்பியுள்ளது.   அதை விரும்பாத ஜெ., “அதைப்பற்றிப் பேசாதீங்க.  நான் தவறான விதையை விதைச்சிnakkheeran_gopal4ட்டு விஷத்தை அறுவடை பண்ணிக்கிட்டிருக்கேன்” என்று சொல்லிவிட்டு, கலைஞர் மீதும் வீரமணி மீதும் கோபத்தைத் திருப்பியிருக்கிறார். “இவங்க இரண்டு பேரும், என் கூட இருக்கிறவங்களை மயிலாப்பூர் மாஃபியான்னு பிரச்சாரம் பண்ணுறாங்க. அதாவது நான் மாமியாம்.  என்கூட இருக்கிறவங்க மாமிகள் அதிகமுள்ள மயிலாப்பூர் மாஃபியாவாம்.  இந்த விமர்சனம் எம்.ஜி.ஆர் காலத்திலேயே கட்சிக்குள்ளே வந்தது.  அப்ப அவர் என்ன சொன்னார் தெரியுமா” என்று தன் முன்னே இருந்தவர்களைக் கேட்டுவிட்டு, அந்த சம்பவத்தை விளக்க ஆரம்பித்திருக்கிறார் ஜெ.

”நான் அரசியலுக்கு நுழைஞ்ச நேரம் அது.  எம்.ஜி.ஆர். என்னைக் கூப்பிட்டு, இனி தன்னால ஊர்ஊரா சுற்ற முடியாதுன்னும், கருணாநிதிக்கு போட்டியா ஜானகியை கொண்டு வரமுடியாதுன்னும் சொல்லி, அம்முதான் சரியான ஆள்னு என்னைக் காட்டி, கட்சி நிர்வாகிகள்கிட்டே சொன்னார்.  அதோடு, கொள்கை பரப்புச் செயலாளர் பதவியையும் கொடுத்தார்.   கே.ஏ.கே, எஸ்.டி.எஸ் போன்றவங்க கடுமையா எதிர்த்தாங்க.  அப்ப பொன்னையன் இருந்தாரு.  அவரு ‘நம்ம கட்சியும் திராவிட இயக்கம்ங்கிற அடையாளத்தோடு இருக்கு.  இதனோட கொள்கையை பரப்ப ஒரு பிராமினை நியமிக்கிறது சரியா இருக்காது’ன்னு சொன்னார்.  அப்ப எம்.ஜி.ஆர், ‘நீங்க அம்முவை பிராமின்னு நினைக்கிறீங்களா ?  பிராமின்னா குழைஞ்சு குழைஞ்சு பேசி காரியம் சாதிப்பாங்க.  அம்மு எதையும் பட்பட்டுன்னு நேரில் பேசிடும்.  அப்புறம், இங்கே இருக்கிற நீங்க யாரும் மாட்டுக்கறி சாப்பிட்டிருக்க மாட்டீங்க.  ஆனா, அம்மு ஸ்பென்சரிலிருந்து ஸ்பெஷல் பீஃப் வாங்கி எனக்கு சமைச்சிக் கொடுத்திருக்கு.  நான்தான் பழக்கமில்லாததால அதை சாப்பிடலை.  மாட்டுக்கறி சாப்பிடுற அம்முவை எப்படி பிராமின்னு நினைக்கிறீங்க’ன்னு சொன்னார்.  இன்னைக்கு கருணாநிதியும் வீரமணியும் நான் பிராமின்னும் என்கூட இருக்கிறவங்களை மயிலாப்பூர் மாஃபியான்னும் சொல்றாங்க” என்றபடி சிரித்திருக்கிறார்.

nak1

nak2

nak3

இதுதான் அந்தச் செய்தி.  இந்தச் செய்தி பொய் என்பது மட்டுமல்ல.  மிக மிக விஷமத்தனமாகது.  அவதூறானது. அயோக்கியத் தனமானது என்பதில் நியாய உணர்வுள்ள யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.   ஆனால், நக்கீரன் இன்று நேற்றல்ல… பல காலமாக இப்படித்தான் பத்திரிக்கை நடத்தி வருகிறது.  சவுக்கில் கூட, நக்கீரனைப் பற்றி அச்சு வடிவில் ஆதித்யா,  என்றெல்லாம் நக்கீரனைப் பற்றி பலமுறை எழுதப் பட்டுள்ளது.  நக்கீரன் இதழின் தலைமை நிருபர் பிரகாஷ், சவுக்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டு எப்படிப் பேசினார் என்பதை, சவுக்கு வாசகர்கள் அனைவரும் நன்கு அறிவீர்கள்.  இதற்குப் பிறகும், இப்படிப் பட்ட ஒரு நபரை, நக்கீரன் இதழின் தலைமை நிருபராகவே இன்னும் பணியில் வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால் அந்தப் பத்திரிக்கை எப்படிப் பட்ட பத்திரிக்கை என்பதை நீங்களே புரிந்து கொள்ளுங்கள். நக்கீரன் இதழின் தரத்தைப் பாருங்கள் என்ற கட்டுரையை படியுங்கள்

வியாபாரத்திற்காக நக்கீரன் எது வேண்டுமானாலும் செய்யும் என்பதற்கு நித்யானந்தா விவகாரமே ஒரு சாட்சி.   இது மட்டுமல்லாமல் கடந்த ஆறு மாத காலமாக நக்கீரன் பத்திரிக்கையைப் படித்து வருபவர்களுக்கு, அதில் வெளிவரும் பெரும்பாலான செய்திகள், நக்கீரன் அலுவலகத்தில் மல்லாக்கப் படுத்துக் கொண்டு யோசித்து எழுதும் கற்பனைச் செய்திகள் என்பது நன்கு தெரியும்.

ஆனால், இந்த இதழில் ஜெயலலிதா பற்றி வந்துள்ள கற்பனைச் செய்தியானது, அயோக்கியத்தனத்தின் உச்சம்.   இதை மன்னிக்கவே முடியாது.   இப்படி ஒரு செய்தி வெளியிட்டால் தாக்குதல் நடக்கும் என்பது நக்கீரனுக்குத் தெரியாதா ?   நிச்சயம் தெரியும்.  பிறகு ஏன் வெளியிட்டார்கள் ?

நித்யானந்தாவை மிரட்டி பணம் பறித்ததாக கொடுக்கப் பட்ட புகாரில் எப்ஐஆர் பதிவு செய்யப் பட்டு, பூர்வாங்க விசாரணை நடைபெற்று வருகிறது.  இந்த விவகாரத்தில் காமராஜ் எந்த நேரமும் கைது செய்யப் படலாம் என்பதே காவல்துறை வட்டாரத் தகவல்.  இப்படிப் பட்ட சூழலில் இப்படி ஒரு செய்தியை வெளியிட்டு, அதிமுகவினர் அலுவலகத்தைத் தாக்கினால், நாளை நித்யானந்தா விவகாரத்தில் காமராஜ் கைது செய்யப் பட்டால் கூட, ஜெயலலிதாவுக்கு எதிராக இப்படிப் பட்ட ஒரு செய்தியை வெளியிட்டதாலேயே காமராஜ் உள்நோக்கத்தோடு பழிவாங்கும் வகையில் கைது செய்யப் பட்டுள்ளார் என்று தகிடுதத்தம் செய்யலாம் என்ற திட்டமாகவே இருக்கக் கூடும்.  வழக்கமாக 10 மணிக்கு அலுவலகத்துக்கு வரும், நக்கீரன் கோபாலும், காமராஜும் இன்று காலை 7 மணிக்கே அலுவலகத்துக்கு வந்து அமர்ந்திருப்பதும் இந்தச் சந்தேகத்தை வலுப்படுத்துகிறது.   அடுத்த இதழ் நக்கீரனைப் பாருங்களேன்.   “லைவ் கவரேஜ்….  ஜெ ஆட்சியில் பத்திரிக்கை சுதந்திரத்துக்கு ஆபத்து.  நக்கீரன் அலுவலகம் மீது அதிமுக ரவுடிகள் தாக்குதல்” என்று பக்கங்களை நிரப்புவார்கள்.   திமுக ஆட்சியின் போது, பத்திரிக்கை சுதந்திரத்தை பறித்து, பத்திரிக்கையாளர்களின் தொலைபேசிகளை ஒட்டுக் கேட்டு, அவர்களின் குரல்வளையை நெறித்த கருணாநிதி, “அய்யகோ… அம்மையார் ஆட்சியில் அநியாயத்தைப் பாரீர்” என்று ஓலமிடுவார்.

பத்திரிக்கை சுதந்திரம் பரிபோகிறது என்று கூப்பாடு போடும் நக்கீரன், தினகரன் ஊழியர்கள் மூன்று பேர் கொல்லப் பட்ட சம்பவம் தொடர்பாக நடந்த வழக்கில் எப்படி நடந்து கொண்டது என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். உங்களுக்கு வெட்கமாக இல்லையா என்ற கட்டுரையைப் படியுங்கள்.  காமராஜின் பவுசு தெரியும்.

இதெல்லாம் நடக்க வேண்டும் என்பதற்காகவே நக்கீரன் வேண்டுமென்றே இப்படிப் பட்ட செய்தியை வெளியிட்டிருக்க வேண்டும்.  அந்த வலையில் அதிமுகவினர் வசமாக சிக்கிக் கொண்டனர்.   இன்று காலை பத்து மணி முதலாகவே சாரி சாரியாக நக்கீரன் அலுவலகத்துக்கு வந்த அதிமுக தொண்டர்கள், கற்களை வீசி நக்கீரன் அலுவலகத்தைத் தாக்கினர்.  பெரிய இரும்பு கேட் இருந்ததால், அவர்களால் உள்ளே செல்ல முடியவில்லை.   முதலில் ஒரு அணி சென்று கலாட்டா செய்து முடித்ததும், அடுத்த கட்டமாக ஜின்னா என்ற கவுன்சிலர், ஜானி ஜான் கான் தெருவில் உள்ள அனைத்துக் கடைகளையும் அடைக்கச் சொல்லி உத்தரவிட்டார்.    அவரோடு வந்த தொண்டர் அடிப்பொடிகள், “கடையை மூட்றா” என்று அனைவரையும் மிரட்டி கடையை அடைக்க வைத்தனர்.   ஜின்னா மற்றும் அவரது டீம்,  நக்கீரன் அலுவலகத்தை அடையும் முன்பாகவே, உதவி ஆணையர் செந்தில் குமரன், அவரை வழியிலேயே மடக்கி, சமயோசிதமாக வண்டியில் ஏற்றி அனுப்பி வைத்தார்.

அடுத்தடுத்து வந்த அதிமுக அணியினர், நக்கீரன் அலுவலகம் முன்பாக, நக்கீரன் இதழ்களை கொளுத்துவதும், நக்கீரன் ஆசிரியர் கோபாலை, காது கூசும் அளவுக்கு, கெட்ட வார்த்தைகளில் திட்டுவதும், பெரிய பெரிய கற்களை வீசி அலுவலகத்துக்குள் தாக்குதல் நடத்த முயற்சிப்பதும் என தொடர்ந்து கொண்டே இருந்தது.   நான்காவதாக வந்த மகளிர் அணியினர், துடைப்பத்தை நக்கீரன் அலுவலகம் மீது வீசி தாக்குதல் நடத்தினர்.   அதற்கு அடுத்து வந்த மகளிர் அணியினர் ஒரு வாளியில் சாணியைக் கரைத்து ஊற்றினர்.  அந்த சாணிக் கரைசல், நக்கீரன் அலுவலக வாசலில் நின்று கொண்டிருந்த காவல்துறையினர் மீதே விழுந்தது.  காலை 10  மணி முதல் அந்த இடத்தில் பம்பரம் போல சுழன்று பணியாற்றிக் கொண்டிருந்த செந்தில்குமரன் மீதும் விழுந்தது.

அடுத்து வந்த அதிமுக அணி சிறிது கடுமையாக வன்முறையில் இறங்கியது.   அங்கிருந்த காவலர்களை தாக்கியது.   அப்போது பாய்ந்து சென்ற செந்தில்குமரன், கேட்டின் மீது ஏற முயன்ற சில அதிமுக தொண்டர்களை பலவந்தமாக அப்புறப் படுத்தினார். பிறகு அடுத்தடுத்து 15 நிமிட இடைவெளியில் அதிமுக தொண்டர்கள் வந்த வண்ணம் இருந்தனர்.  சவுக்கு அந்தத் தெருவில் இருந்த மதியம் 3 மணி வரை, போராட்டம் நிற்கவில்லை.

அதிமுகவின் இந்தப் போராட்டங்கள் அரசின் துணையோடும், காவல்துறையின் ஒத்துழைப்போடுமே நடந்துள்ளது.   அதிமுக தொண்டர்களுக்கு தங்கள் தலைவியைப் பற்றி அவதூறாக எழுதிய நக்கீரன் பத்திரிக்கைக்கு எதிராக போராட்டம் நடத்த எல்லா உரிமையும் இருக்கிறது.   இதற்கு எதிராக காவல்நிலையத்தில் புகார் கொடுக்கவும், நீதிமன்றம் செல்லவும், வழக்கு தொடுக்கவும், எல்லா உரிமையும் உண்டு.  அனால், காலை முதல், ஒரு தெருவில் உள்ள எல்லா கடைகளையும் அடைக்கச் சொல்லி மிரட்டி, கற்களை வீசி ஒரு அலுவலகத்தைத் தொடர்ந்து தாக்குவது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

அதிமுக தொண்டர்கள் இது போல போராட்டம் நடத்துவார்கள், அவர்கள் மீது தடியடி நடத்த வேண்டாம் என்று காவல்துறைக்கு உத்தரவிட்டிருப்பதாகவும் தெரிகிறது.   அரசின் துணையோடு நடக்கும் இது போன்ற வன்முறைப் போராட்டங்களை இன்று அங்கீகரித்தால், நாளை ஆதாரத்தோடு அரசுக்கு எதிராக செய்திகளை வெளியிடும் ஊடகங்களும் தாக்கப் படும்.  ஒரு ஜனநாயகத்தில் ஊடகத்தின் சுதந்திரத்தைப் பாதுகாப்பபது மிக மிக முக்கியம்.

திமுகவின் அராஜகங்களால், மனம் வெதும்பிய மக்கள் அளித்த வாக்கில் இன்று ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் ஜெயலலிதா, இது போன்ற வன்முறைகளுக்கு ஆதரவு தருவது என்பதை ஏற்றுக் கொள்ளவே முடியாது.  இந்த வன்முறைகள் அத்தனைக்கும், அதிமுகவின் பொதுச்செயலாளர் என்ற முறையிலும், உள்துறை அமைச்சர் என்ற முறையிலும், ஜெயலலிதாவே பொறுப்பு.   நக்கீரன் பத்திரிக்கை மீது ஜெயலலிதாவுக்கு இருக்கும் கோபத்தை நன்றாகவே புரிந்து கொள்ள முடிகிறது.  ஆனால், அந்தக் கோபத்தைத் தீர்த்துக் கொள்வதற்கு இது வழியல்ல.

அதிமுக தொண்டர்களின் வசவுச் சொற்களையும், சாணிக் கரைசலையும் பொறுத்துக் கொண்டு, தங்கள் பணியைச் செவ்வனே செய்த காவல்துறையினரின் நிலைமையை எண்ணிப் பாருங்கள்…  அரசுப் பணி என்று ஒரு வேலைக்கு வந்ததற்காக இந்த நிலைமையா ?   இதே திமுகவினர் இப்படி ஒரு போராட்டத்தை நடத்தினார்கள் என்றால், இந்த அரசு சும்மா இருந்திருக்குமா ?  காவல்துறையினர் இப்படி அமைதியாக இருந்திருப்பார்களா ?

நக்கீரன் பத்திரிக்கை ஒரு கட்சித் தலைவியைப் பற்றி தவறாக எழுதியதற்கு, ஜானி ஜான் கான் சாலையில் கடை வைத்திருக்கும் வணிகர்கள் என்ன பாவம் செய்தார்கள் ?  அந்த சாலையில் காலையிலேயே பிரியாணி செய்து விற்பனைக்கு வைத்திருந்தவர்கள், கடையைத் திறக்க முடியாமல், கள்ளத்தனமாக, பாதி ஷட்டரை திறந்து வைத்துக் கொண்டு வியாபாரம் செய்தததைப் பார்க்க முடிந்தது.  அதிமுக தொண்டர்களின் போராட்டத்தால், இவர்கள் அத்தனை பேரும் ஒரு நாள் வருமானத்தை இழக்க நேரிட்டது எந்த விதத்தில் நியாயமாக இருக்க முடியும் ?

அதிமுக அரசு ஒரு மங்குணி அரசு என்பதற்கு பல உதாரணங்களைச் சொல்ல முடிந்தாலும், நக்கீரன் விவகாரத்தை இந்த அரசு கையாண்டது ஒரு மிகச் சிறந்த உதாரணம்.  ஜெயலலிதாவுக்கு எதிராக தொடர்ந்து பொய்யையும், புரட்டையும் எழுதி வரும் நக்கீரனின்  மென்னியை முறிக்க வழியா இல்லை ?  நித்யானந்தா விவகாரத்தில் எப்ஐஆர் போட்டு, காமராஜை கைது செய்வதற்கு ஆறு மாதம் வேண்டுமா ?  காமராஜ் தன் மனைவி ஜெயசுதா பெயரில், வீட்டு மனையை அபகரித்துள்ளார், வீடு வைத்திருக்கும் போது, அதை மறைத்து பொய்யான சான்று அளித்து வீடு வாங்கியுள்ளார் என்று சிபி.சிஐடியிடம் புகார் அளித்து ஆறு மாதங்கள் ஆகிறதே… அப்போதே காமராஜை கைது செய்திருந்தால், இன்று இப்படி எழுதுவார்களா ?

யாராவது இரண்டு பேர் தொடர்ந்து தும்மினால், “வடசென்னையில் மர்ம தும்மல் பரவுகிறது”  என்று செய்தி வெளியிடும் சன் டி.வி, இப்படிப் பட்ட ஒரு மிகப்பெரும் தாக்குதல் நடந்தும், மூச்சே விடவில்லை.   சன் டிவியின் மூமூமூத்த செய்தியாளர் ராமசெல்வராஜ் வந்திருந்தும், எந்தச் செய்தியையும் வெளியிடவில்லை.

இந்த நேரத்தில், மூன்று விஷயங்களை குறிப்பிட்டே ஆக வேண்டும்.  மைலாப்பூர் சரக துணை ஆணையர் எஸ்.பாஸ்கரன் என்பவர்தான் இன்று பணியில் இருந்தார்.  அவரைப் போன்ற ஒரு மங்குணி அதிகாரியைப் பார்க்கவே முடியாது என்னும் வகையில், கலவரம் நடந்து கொண்டிருக்கும் போது எனக்கென்ன என்று ஓரமாக நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

அதே நேரத்தில், திருவல்லிக்கேணியின் உதவி ஆணையர், செந்தில்குமரன், பம்பரமாக சுழன்று பணியாற்றியதாகட்டும்.  தடியடியோ பலமோ பிரயோகம் செய்யத் தடை இருந்த நேரத்தில், அந்த ரவுடிக் கூட்டத்தை கையாண்ட விதமாகட்டும், சளைக்காமல் தொடர்ந்து பணியாற்றியதாகட்டும்.  ஒரு காவல்துறை அதிகாரி எப்படி இருக்க வேண்டுமோ… அப்படி இருந்தார் செந்தில்குமரன்.   வாழ்த்துக்கள் செந்தில் குமரன் அவர்களே…..

IMG_5398

IMG_5402

உதவி ஆணையர் செந்தில் குமரன்

நக்கீரன் மீதான தாக்குதல் குறித்து சவுக்கின் பிரத்யேக ஆல்பம்.

IMG_5278

போராட்டம் நடத்த வருகை தரும் அதிமுகவினர்

 IMG_5288

 

அதிமுக மகளிர் அணியினர்

IMG_5289

கைது செய்யப் படும் அதிமுகவினர்

IMG_5290

IMG_5298

மங்குணி எஸ்.பி பாஸ்கரன்

IMG_5306

IMG_5318

IMG_5329

கடைகளை மூடச் சொல்லும் கவுன்சிலர் ஜின்னா

IMG_5341

IMG_5342

IMG_5344

காவலரை தாக்கப் பாயும் அதிமுக தொண்டர்

IMG_5348

IMG_5361

 

IMG_5364

IMG_5378

IMG_5379

IMG_5380

IMG_5413

IMG_5405

IMG_5423

சாணியைக் கழுவும் காவலர்

IMG_5429

IMG_5431

 

 

Comments  

 
0 #115 parthiban.d 2012-11-23 09:55
this news is verd good
Quote
 
 
0 #114 thanga durai 2012-08-24 11:15
nakkeran oru sakkadai
Quote
 
 
-2 #113 VAIRAVEL S G 2012-01-23 17:03
:-x :eek: :zzz :P :roll: :sigh: :-| 8) :lol:
Quote
 
 
-3 #112 VAIRAVEL S G 2012-01-23 17:02
சரிதான் நேர்மை என்றால் சர்க்காரிய சொல்லி இருக்கற அந்த மனிதனிடம் போயி கேளுங்கள் இல்லை என்றால் திகரில் போயி குடி இருந்த பெண்மணியிடம் கேளுங்கள் இல்லை என்றால் எனக்குதெரியாதுஇ டம் போயி கேளுங்கள்முதலில ் தினமரை விமர்சித்து விட்டு அடுத்து நக்கீரனுக்கு வாருங்கள்.
Quote
 
 
+5 #111 nallavan 2012-01-20 11:43
too. good. the same contents he copied into other protal and got too good response from one guy called arumuga samy....Quoting Serran:
சரிதான் நேர்மை என்றால் சர்க்காரிய சொல்லி இருக்கற அந்த மனிதனிடம் போயி கேளுங்கள் இல்லை என்றால் திகரில் போயி குடி இருந்த பெண்மணியிடம் கேளுங்கள் இல்லை என்றால் எனக்கு இங்கிலீஷ் தெரியாது என்று சிபிஐ இடம் மண்டி இட்ட பெரிய மனுசி இடம் போயி கேளுங்கள் இல்லை என்றால் பார்லிமென்ட் இல் செவ்ரீங்கா என்று குளுரு ஜுரம் வரும் ஒருவனிடம் கேளுங்கள் இல்லை என்றால் கேபிள் திருடனிடம் போயி கேளுங்கள் இல்லை என்றால் தமிழக நீர ராடிய விடம் போயி கேளுங்கள் இல்லி என்றால் அண்ணாநகர் ரமேஷ் இடம் போயி கேளுங்கள் . மீதி எனக்கு டைம் இல்லைசினிமா , சுரங்கம் நேர்மை எல்லாம் வேறு யாராவது fill பண்ணுங்கள் . Quoting புதியவன் ராஜ்:
இதவை வேந்தல், எம்.ஜி.ஆர். இறந்த போது, ஒரு அரசியல் பெண்மணி, "எம்.ஜி.ஆரை அவர் மனைவி ஜானகி தான் மோரில் விசம் வைத்து கொன்றார்" என்று அபாண்டமாக இன்னொரு பெண் மீது பழி சொன்னாரே. அவருக்கும் அவரை ஆதரிப்பவர்களுக் கும் மற்றவர் குற்றச்சாட்டை குறை சொல்லும் தகுதி இருக்கிறதா?
Quote
 
 
+8 #110 Serran 2012-01-17 10:27
இதை எல்லாம் நீ சொல்வது தான் சிப்பா வருது . சங்கர் --இதற்க்கு எல்லாம் நீ மயங்கினால் இன்னொரு முரசொலி யாகி விடும், ஜாக்கிரதை :lol: :lol: Quoting புதியவன் ராஜ்:
சவுக்கு, வாசகர் கருத்து பரிமாற்றத்தில் என்ன நடக்கிறது. கருத்துக்கள் தணிக்கை செய்த பின் பிரசுரிக்கப்படு ம் என்று சொல்கிறீர்கள். வெண்ணை, நல்லவன் என்ற பெயரில் கருத்து எழுதி இருப்பவர்கள் பயன் படுத்தியுள்ள வார்த்தைகளை பார்த்தீர்களா? (கருத்துக்கள் வரிசை எண் : 104 மற்றும் 99. ) வாசகரின் தரமா? சவுக்கின் தரமா? அல்லது இரண்டுமே அப்படி தானா? இதில் நக்கீரன் கோபாலுக்கு ஏதோ கீதா உபதேசம் range-ku8 கிருஷ்ண பரமாத்மா போல அறிவுரைகள் சொல்கிறீர்கள்.
Quote
 
 
+7 #109 Serran 2012-01-17 10:24
சரிதான் நேர்மை என்றால் சர்க்காரிய சொல்லி இருக்கற அந்த மனிதனிடம் போயி கேளுங்கள் இல்லை என்றால் திகரில் போயி குடி இருந்த பெண்மணியிடம் கேளுங்கள் இல்லை என்றால் எனக்கு இங்கிலீஷ் தெரியாது என்று சிபிஐ இடம் மண்டி இட்ட பெரிய மனுசி இடம் போயி கேளுங்கள் இல்லை என்றால் பார்லிமென்ட் இல் செவ்ரீங்கா என்று குளுரு ஜுரம் வரும் ஒருவனிடம் கேளுங்கள் இல்லை என்றால் கேபிள் திருடனிடம் போயி கேளுங்கள் இல்லை என்றால் தமிழக நீர ராடிய விடம் போயி கேளுங்கள் இல்லி என்றால் அண்ணாநகர் ரமேஷ் இடம் போயி கேளுங்கள் . மீதி எனக்கு டைம் இல்லைசினிமா , சுரங்கம் நேர்மை எல்லாம் வேறு யாராவது fill பண்ணுங்கள் . Quoting புதியவன் ராஜ்:
இதவை வேந்தல், எம்.ஜி.ஆர். இறந்த போது, ஒரு அரசியல் பெண்மணி, "எம்.ஜி.ஆரை அவர் மனைவி ஜானகி தான் மோரில் விசம் வைத்து கொன்றார்" என்று அபாண்டமாக இன்னொரு பெண் மீது பழி சொன்னாரே. அவருக்கும் அவரை ஆதரிப்பவர்களுக் கும் மற்றவர் குற்றச்சாட்டை குறை சொல்லும் தகுதி இருக்கிறதா?
Quote
 
 
-4 #108 புதியவன் ராஜ் 2012-01-14 11:46
இதவை வேந்தல், எம்.ஜி.ஆர். இறந்த போது, ஒரு அரசியல் பெண்மணி, "எம்.ஜி.ஆரை அவர் மனைவி ஜானகி தான் மோரில் விசம் வைத்து கொன்றார்" என்று அபாண்டமாக இன்னொரு பெண் மீது பழி சொன்னாரே. அவருக்கும் அவரை ஆதரிப்பவர்களுக் கும் மற்றவர் குற்றச்சாட்டை குறை சொல்லும் தகுதி இருக்கிறதா?
Quote
 
 
-6 #107 புதியவன் ராஜ் 2012-01-14 11:42
சவுக்கு, வாசகர் கருத்து பரிமாற்றத்தில் என்ன நடக்கிறது. கருத்துக்கள் தணிக்கை செய்த பின் பிரசுரிக்கப்படு ம் என்று சொல்கிறீர்கள். வெண்ணை, நல்லவன் என்ற பெயரில் கருத்து எழுதி இருப்பவர்கள் பயன் படுத்தியுள்ள வார்த்தைகளை பார்த்தீர்களா? (கருத்துக்கள் வரிசை எண் : 104 மற்றும் 99. ) வாசகரின் தரமா? சவுக்கின் தரமா? அல்லது இரண்டுமே அப்படி தானா? இதில் நக்கீரன் கோபாலுக்கு ஏதோ கீதா உபதேசம் range-ku8 கிருஷ்ண பரமாத்மா போல அறிவுரைகள் சொல்கிறீர்கள்.
Quote
 
 
+6 #106 K.attabiraman 2012-01-14 07:33
கோபால் வெளியிட்ட செய்தி எந்த நியாயமும் அடிப்படையும் இல்லாதது. தமிழ்க இதழியல் வரலாற்றில் இதைப் போன்ற அற்க்கொலை நடந்ததில்லை. நல்ல காலம்! மதுரை மாதிரி இஙகே ப்டுபாத்க்ம் நடக்கவில்லை.தொண்டர்களின கோபம் நியாயமானதுதான்.
Quote
 
 
-7 #105 வால்டர் வணங்காமுடி 2012-01-12 23:42
வெண்ணை அவர்களுக்கு,
-----------------------
நான் சவுக்கிற்கு வருவது நாலு விசயத்தை தெரிஞ்சிக்கவும் , தெரிந்த விசயத்தை விவாதிப்பதற்கு மட்டுமே. தனி மனித தாக்குதல் (அதுவும் கீழ்த்தரமான வார்த்தைகளை வைத்து) நடத்த அல்ல. நீங்கள் அதை விரும்பினால், நானும் அதற்கு தயார். ஆனால் ஒன்று நிச்சயம். அதற்கப்புறம் இந்த ஜென்மத்துக்கு நீங்கள் சவுக்கு பக்கம் தலைவைத்து படுக்கமாட்டீர்க ள். இதை எச்சரிக்கையாக எடுத்துகொண்டாலு ம் சரி, அறிவுரையாக எடுத்துகொண்டாலு ம் சரி. வேண்டாம் 'தனி மனித தாக்குதல்'....!!!!

சவுக்கிற்கு
----------
ஒரு தளத்தின் தரம் அதன் வாசகர்களின் பின்னூட்டங்களில ும் அடங்கி உள்ளது. தங்கிலிஷாக இருந்தாலும், கவனமாக தணிக்கை செய்யவும். இல்லை என்றால் உங்கள் கண் முன்னே, சவுக்கின் பின்னூட்டங்களின ் தரம் விரைவில் சுக்கு நூறாகும்.

மற்ற அன்பர்களுக்கு
-------------------
தனி மனித தாக்குதலை கண்டிக்காவிட்டா லும் பரவா இல்லை, ஆதரிக்க வேண்டாமே..! எனது பக்கத்து நியாயத்தை அடியேன் சொல்லிவிட்டேன். 'வெண்ணை' போன்றோரின் கீழ்த்தரமான பின்னூட்டங்கள் தொடர்ந்தால்,அதற ்கு தரும் பதிலடி பின்னூட்ங்களை படித்துவிட்டு "சவுக்கின் தரம் தாழ்ந்துவிட்டது " என்று என்னை போன்றோரை நோக்கி வரும் காலத்தில் ஒப்பாரி வைக்க வேண்டாமே...!!!

அன்புடன்,
வால்டர் வணங்காமுடி
Quote
 
 
+2 #104 வால்டர் வணங்காமுடி 2012-01-12 22:35
Quoting vennai:
so un vadham padi, un inam alliyum podhu nee yaryio oomp...i.. kondu irundhaai.... soothiran kku ilakkaam ipoo puriudhua.... you have qus and ans...Quoting வால்டர் வணங்காமுடி:
Quoting vennai:
kasu kodutha KOOLI kku allu irukkumpodhu nanga edukkppa ponum. sari. appo srilanga ina padukolai podhu soothira pannigal ellam enga pee thinna poneenga.. nee udpada??? காமெடி எல்லாம் 'இந்து' மதம் தழைத்தோங்கும் இந்தியாவில் மட்டுமே சாத்தியம். :lol: :lol: :lol: :lol:



sooththira pannigal ellaam piraamanchchiga Lai appodhu bend'u eduththukittu irundhom... adhennavo theriyala, panningakitta uravu vachchikiradhul a thaan mulu sugam irukkudhunnu cetificate vera kodukkuraaluva...


adu kuruttu kamnaatti vennai... unakku s.u.n.n.i thaan velai seyyaadhunnu un pondaatti sonnaa...aanaa unakku kannum velai seyyaadhaa? nallaa kannai kalvuittu paaru... enna sollirukkennu? por nadakkum podhu idaiye ilaippaara sooththiran paappaaththiyai bend'u eduppadhu saadhaaranam... mind'u relax aakumla... enna panna.. unakku thaan oru elavum theriyaadhe? unakku therinjadhellaa m thatti viduradhum, kootti kodukkuradhum,k attinavalai oor meya viduradhum thaane.... summaa solla koodaadhu.. sema kattai un pomnaatti.. pesh pesh...romba nannaa irukku velai seyya...!!! :lol: :lol:
Quote
 
 
-1 #103 Rajamani 2012-01-12 14:57
#90 பன்னாடை,
According to the website www.cathnewsindia.com, “It was Father Xavier Stanislaus Thaninayagam who founded the International Association of Tamil Research and called the first International Conference of Tamil Studies in 1965. That event ultimately led to this year’s(2010) highly prestigious conference”.

Depending on the political climate, both may merge tomorrow, for the Church(MAATTUKK ARI- BEEF) is capable of going any lengths to establish its ‘love’ for Tamil. The IATR has conducted 8 conferences in the last 45 years, of which one was a DMK conference (Madras, 1968, when Annadurai was CM), two were AIADMK conferences (Madurai, 1981, by MGR and Thanjavur, 1995, by Jayalalithaa); the remaining five (Kuala Lumpur1966, Paris 1970, Jaffna 1974, Kuala Lumpur 1987, Mauritius 1989) were relatively lacklustre.

And what did the Tamil language, literature, archaeology or culture receive from these eight conferences - NOTHING! Undeniably, the just concluded Classical Tamil Conference was also a DMK jamboree. Television channels clearly confirmed this through their live telecasts. And Christian domination was also quite visible in this conference, which again underlined the Christian-Dravidian nexus(JAYALALIT HA- CIA?- MAATTUKKARI(BEE F)) !.
Quote
 
 
-3 #102 Rajamani 2012-01-12 14:52
....#90 பன்னாடை, "எம்.ஜி.ஆரை டிஸ்மிஸ் செய்து விட்டார்கள்" என்றார். "இருக்காதே" என்றேன். "இப்போதுதான் எனக்குச் செய்தி வந்தது" என்றார். இது இரண்டு மணிக்கு நடந்திருக்குமென ்றால், எனக்கு இரண்டு ஐந்துக்கெல்லாம் இந்தச் செய்தி வந்தது.
அவர் டெலிபோனை வைத்த உடனேயே, டெலிபோன் மணி அடித்தது.

கருணாநிதி பேசினார்: "முதல் முதலாக உனக்குத் தானய்யா சொல்லுகிறேன். கேள்விப்பட்டாயா ?" என்றார்.

"உங்களுக்கு முன்னாலே சோ போன் பண்ணினார் அய்யா" என்றேன்.

----- இதிலிருந்து, எம்.ஜி.ஆரை உருவாக்கியதில் சோ.ராமசாமியின்(துக ்ளக்)செல்வாக்கு எவ்வளவு என்று புலப்படும். சோவும், கருணாநிதியும் கவியரசு கண்ணதாசனை ஏமாற்றியுள்ளனர் .

நான் வெள்ளைக்காரர்கள ை எதிர்க்கவில்லை, என்னுடைய சொந்தக்காரர்கள் பலர் வெள்ளையரை திருமணம் செய்துள்ளனர். ஆனால் "சவுக்கு" சி.ஐ.ஏ வின் தலைவராக இருந்தாலும், அமெரிக்காவிலேயே சி.ஐ.ஏ வின் செல்வாக்கு சரிந்து வருகிறது என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும். பாக்கிஸ்தான்,ஆப ்கானிஸ்தானில் அதன் செயல்பாடுகளே இதற்கு உதாரணம்.

இங்கே இந்தியாவில் ஜெயலலிதா- சோ, கருணாநிதி... ஆப்கான் "WAR LORDS" போல் செயல்படுகிறார்க ள். சி.ஐ.ஏ. அங்கு சிக்கித் தவிப்பதுபோல் இங்கும் சிக்கித் தவிக்கிறது!.

ஜெயலலிதாவை, "மாட்டுக்கறி(சி.ஐ.ஏ) சாப்பிடும் மாமி" என்று நக்கீரன்(கலைஞரி ன் பணம்,கையூட்டு) நெற்றிக்கணை திறந்ததில் அர்த்தம் இருக்கத்தான் செய்கிறது!.
Quote
 
 
-2 #101 Rajamani 2012-01-12 14:50
#90 பன்னாடை, 1974 யாழ்ப்பாண உலக தமிழாராய்ச்சி மாநாட்டில் ஏன் கலைஞர் கருணாநிதி கலந்துக்கொள்ளவி ல்லை?
1972 - 1974 க்குள் எம்.ஜி.ஆர். பெரிய அரசியல் தலைவராகிவிட்டார ். 1972ல் கவிஞர் கண்ணதாசனுக்கும் , கலைஞர் கருணாநிதிக்கும் ஏற்ப்பட்ட சம்பாஷணை:
செயற்குழுவுக்கு முதல் நாள் நண்பர் கருணாநிதி அவர்கள், எனக்கு டெலிபோன் செய்து, "இல்லை இல்லை.. அது ஒன்றும் நடக்காது. இன்று ஒரேயடியாக ஒழித்துவிட வேண்டியதுதான்" என்று சொன்னார்.
நான்(கவிஞர்)சொன ்னேன்,"சில மக்கள் பின்னணி இருக்குமே" என்று.
"என்ன, பத்துபேர் கத்துவான். பார்த்துக் கொள்ளலாம்" என்றார்.
மறுநாள் நன்றாகத் தூங்கிக் கொண்டிருக்கும் போது, நண்பர் சோ.ராமசாமி(துக்ளக் ) அவர்கள் டெலிபோன் செய்தார். "தெரியுமா விஷயம்?" என்று கேட்டார். "என்ன?" என்றேன். "தெரியாதா?" என்றார். "தெரியாது" என்றேன் "எம்.ஜி.ஆரை டிஸ்மிஸ் செய்து விட்டார்கள்" என்றார். "இருக்காதே" என்றேன். "இப்போதுதான் எனக்குச் செய்தி வந்தது" என்றார். இது இரண்டு மணிக்கு நடந்திருக்குமென ்றால், எனக்கு இரண்டு ஐந்துக்கெல்லாம் இந்தச் செய்தி வந்தது.
அவர் டெலிபோனை வைத்த உடனேயே, டெலிபோன் மணி அடித்தது.....
Quote
 
 
-5 #100 Suresh123 2012-01-12 14:31
இந்த வினவு.காம் நாயை பற்றி உங்கள் பதில் என்ன.

http://www.vinavu.com/2012/01/10/jayalalitha-nakheeran-beef-trouble/#tab-comments
Quote
 
 
+9 #99 nallavan 2012-01-12 13:17
thaa ki mathri avanai kolai panninargala? illai dinakaran mathri avanai avan pondatiyai erithargala? idhi ellam andha PEE Thinnum netthipathi parkavillaya???Quoting புதியவன் ராஜ்:
நல்லவன், கலைஞர் நள்ளிரவு கைது பற்றி உங்கள் கருத்து குரூரமானது. எந்த பிடி ஆணையோ, நீதிமன்ற உத்தரவோ இல்லாமல், சட்டவிரோதமாக நள்ளிரவில் படுக்கை அறைக்குள் புகுந்து கலைஞரை காட்டுமிராண்டி தனமாக கைது செய்ததை கண்டித்த நீதிபதி, விசாரணை அதிகாரியை பார்த்து : "உன் இதயத்தில் சதை இருக்கிறதா களிமண் இருக்கிறதா" என்று சாட்டையால் அடிப்பது போல கேட்டார். அது அராஜக அரசைப்பார்த்து கேட்ட கேள்வி. ஆனால் சிலர் இதயத்தில் மட்டுமல்ல, தலையிலும் களிமண் தான் இருக்கிறது போல. எனவேதான் நள்ளிரவில் நடந்த சட்டவிரோதமான கைதை ஏதோ நகைச்சுவை போல பேசுகிறார்கள். தனக்கு எதிராக தீர்ப்பு சொன்ன நீதிபதி மருமகன் மீதே பொய் கஞ்சா வழக்கு போட்டவர்கள், அவர்களை ஆதரிப்பவர்களிடம ் நாகரீகத்தையும் நேர்மையான பதிலையும் எதிர்பார்க்க முடியாதுதான்.
Quote
 
 
0 #98 வால்டர் வணங்காமுடி 2012-01-12 10:19
Quoting vennai:
kasu kodutha KOOLI kku allu irukkumpodhu nanga edukkppa ponum. sari. appo srilanga ina padukolai podhu soothira pannigal ellam enga pee thinna poneenga.. nee udpada??? Quoting வால்டர் வணங்காமுடி:
ஒரு பார்ப்பனர் மீது சூத்திரன் கோபால் செய்யும் விமர்சனத்தை அந்த பார்ப்பனர்கள் நேரடியாக அல்லவா எதிர்கொண்டிருக் க வேண்டும். ஆனால் செய்யவில்லை. மாறாக தனது அடிமை சூத்திரர்களை தட்டிவிட்டு வேடிக்கை பார்க்கிறது இதே பார்ப்பன கூட்டம். அத்தகைய ரவுடி கூட்டத்தை அவர்கள் செயதது சரி என்று அவர்களை உச்சி முகர்ந்து நியாயப் படுத்துவதும் அதே பார்ப்பன கூட்டம் தான். எவன் மாட்டுகறி தின்னா இந்த அதிமுக ரவுடி கூட்டத்துக்கு என்ன வந்தது? மானாவரியா விலைவாசி உயர்த்தினப்போ வராத கோபம் இப்போ ஏன் வருது? இதுல செம்ம காமெடி என்னவென்றால் நக்கீரன் அலுவகதத்துக்கு பக்கத்தில் தான் 'பீப் பிரை' கடை உள்ளது. எனக்கென்னவோ இந்த சூத்திர அதிமுக கண்மணிகள் அந்த 'பீப் பிரை' கடையில் தான் செம கட்டு கட்டிவிட்டு "ஏண்டா என் தலைவி மாட்டு கறி தின்னுனாங்கன்னு " எழுதிறியான்னு வாயை கூட தொடைக்காம கம்பு சுத்துனதா கள நிலவரம் சொல்லுதாம். ஒருத்தன் இன்ன உணவு சாப்பிடறான் என்ற ஒரே காரணத்துக்காக தெருவில் இறங்கி கட்டையை சுழட்டும் காமெடி எல்லாம் 'இந்து' மதம் தழைத்தோங்கும் இந்தியாவில் மட்டுமே சாத்தியம். :lol: :lol: :lol: :lol:



sooththira pannigal ellaam piraamanchchiga Lai appodhu bend'u eduththukittu irundhom... adhennavo theriyala, panningakitta uravu vachchikiradhul a thaan mulu sugam irukkudhunnu cetificate vera kodukkuraaluva...
Quote
 
 
+2 #97 vennai 2012-01-12 09:14
20 கோடி koduthaal kamaraj kundi kooda kaluvi viduvana... approam edukku vennam enru sonnan. 20 கோடி vendam enraa sollum alavukku gopal enna mahatma gandhiya ya??? ayyoo ayoo?? nattai gopal nadu enru marrugangpa!!!! Quoting நண்பன்:
சவுக்கு ஒரு குற்றசாட்டு இந்த ஜெ 1996-ல் நக்கீரனிடம் 20 கோடி கொடுத்து விடுகிறோம் எங்களை விட்டுவிடு என்று விலை பேசியதா? இல்லையா? அதை நக்கீரன் மறுத்தா? இல்லையா? இந்த (தின)துணிமணி தலையங்கம் அப்போ எங்கபோனது?
Quote
 
 
+3 #96 vennai 2012-01-11 18:59
kasu kodutha KOOLI kku allu irukkumpodhu nanga edukkppa ponum. sari. appo srilanga ina padukolai podhu soothira pannigal ellam enga pee thinna poneenga.. nee udpada??? Quoting வால்டர் வணங்காமுடி:
ஒரு பார்ப்பனர் மீது சூத்திரன் கோபால் செய்யும் விமர்சனத்தை அந்த பார்ப்பனர்கள் நேரடியாக அல்லவா எதிர்கொண்டிருக் க வேண்டும். ஆனால் செய்யவில்லை. மாறாக தனது அடிமை சூத்திரர்களை தட்டிவிட்டு வேடிக்கை பார்க்கிறது இதே பார்ப்பன கூட்டம். அத்தகைய ரவுடி கூட்டத்தை அவர்கள் செயதது சரி என்று அவர்களை உச்சி முகர்ந்து நியாயப் படுத்துவதும் அதே பார்ப்பன கூட்டம் தான். எவன் மாட்டுகறி தின்னா இந்த அதிமுக ரவுடி கூட்டத்துக்கு என்ன வந்தது? மானாவரியா விலைவாசி உயர்த்தினப்போ வராத கோபம் இப்போ ஏன் வருது? இதுல செம்ம காமெடி என்னவென்றால் நக்கீரன் அலுவகதத்துக்கு பக்கத்தில் தான் 'பீப் பிரை' கடை உள்ளது. எனக்கென்னவோ இந்த சூத்திர அதிமுக கண்மணிகள் அந்த 'பீப் பிரை' கடையில் தான் செம கட்டு கட்டிவிட்டு "ஏண்டா என் தலைவி மாட்டு கறி தின்னுனாங்கன்னு " எழுதிறியான்னு வாயை கூட தொடைக்காம கம்பு சுத்துனதா கள நிலவரம் சொல்லுதாம். ஒருத்தன் இன்ன உணவு சாப்பிடறான் என்ற ஒரே காரணத்துக்காக தெருவில் இறங்கி கட்டையை சுழட்டும் காமெடி எல்லாம் 'இந்து' மதம் தழைத்தோங்கும் இந்தியாவில் மட்டுமே சாத்தியம். :lol: :lol: :lol: :lol:
Quote
 
 
+4 #95 நண்பன் 2012-01-11 18:20
சவுக்கு ஒரு குற்றசாட்டு இந்த ஜெ 1996-ல் நக்கீரனிடம் 20 கோடி கொடுத்து விடுகிறோம் எங்களை விட்டுவிடு என்று விலை பேசியதா? இல்லையா? அதை நக்கீரன் மறுத்தா? இல்லையா? இந்த (தின)துணிமணி தலையங்கம் அப்போ எங்கபோனது?
Quote
 
 
+17 #94 Partner 2012-01-11 14:28
சவுக்கு அவர்கள் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தது முதல் மிகவும் பயந்தே காணப்படுகிறார், ஏதோ ஜெயலலிதா ரொம்ப ஒழுங்கு மாதிரியும் கருணாநிதி மட்டும் அயோக்கியன் மாதிரியும் சித்திரிக்கிறார ் இது ஏன் என்று புரியவில்லை, யாருடைய ஆட்சியில் அராஜகம் நடந்தாலும் சவுக்கு நாடு நிலையுடன் செயல்படுவதையே சவுக்கின் வாசகர்களாகிய நாங்கள் விரும்புகிறோமே, அதனை விடுத்து ஒரு தலை பட்சமாக நடப்பது சவுக்குக்கு அழகல்ல. வாக்களித்த மக்களுக்கு இது நாள் வரை ஒரு நல்ல திட்டம் கூட சென்றடையவில்லை அதனை பற்றி எழுதுங்கள் சவுக்கு அவர்களே
Quote
 
 
-2 #93 idavai venthal 2012-01-11 11:32
[ஃஉஒடெ நமெ="டஙுவாரு அந்துரும்"]ஜின் சாப்பிடும் மாமி மாட்டுக்கறி சாப்பிட்டால் மட்டும் தவறா???

புரியவில்லை எதற்க்கு இவ்வளவு ஆர்ப்பாட்டம்?[/ஃஉஒடெ]
நீ ஊத்தி கொடுத்தாயா ? அல்லது மாட்டுக்கறி சமைத்து குடுத்தியா ? பொம்பிளை என்று வாய்க்கு வந்தமாதிரி எழுதலாமா ? அரசியலில் அல்லது பொது வாழ்வில் இருப்பதால் அவர்களை நீ என்ன வேண்டுமானாலும் விமர்சினம் செய்யலாம் இல்லையா ? ஒரு முஸ்லிம்மை பண்ணி கறி சாப்பிட்டான் என்று சொல்லி பார் ? அவன் உன்னக்கு சுன்னத் செய்துவிடுவான் ? பொத்திக்கோ.
Quote
 
 
+8 #92 வால்டர் வணங்காமுடி 2012-01-11 10:28
ஒரு பார்ப்பனர் மீது சூத்திரன் கோபால் செய்யும் விமர்சனத்தை அந்த பார்ப்பனர்கள் நேரடியாக அல்லவா எதிர்கொண்டிருக் க வேண்டும். ஆனால் செய்யவில்லை. மாறாக தனது அடிமை சூத்திரர்களை தட்டிவிட்டு வேடிக்கை பார்க்கிறது இதே பார்ப்பன கூட்டம். அத்தகைய ரவுடி கூட்டத்தை அவர்கள் செயதது சரி என்று அவர்களை உச்சி முகர்ந்து நியாயப் படுத்துவதும் அதே பார்ப்பன கூட்டம் தான். எவன் மாட்டுகறி தின்னா இந்த அதிமுக ரவுடி கூட்டத்துக்கு என்ன வந்தது? மானாவரியா விலைவாசி உயர்த்தினப்போ வராத கோபம் இப்போ ஏன் வருது? இதுல செம்ம காமெடி என்னவென்றால் நக்கீரன் அலுவகதத்துக்கு பக்கத்தில் தான் 'பீப் பிரை' கடை உள்ளது. எனக்கென்னவோ இந்த சூத்திர அதிமுக கண்மணிகள் அந்த 'பீப் பிரை' கடையில் தான் செம கட்டு கட்டிவிட்டு "ஏண்டா என் தலைவி மாட்டு கறி தின்னுனாங்கன்னு " எழுதிறியான்னு வாயை கூட தொடைக்காம கம்பு சுத்துனதா கள நிலவரம் சொல்லுதாம். ஒருத்தன் இன்ன உணவு சாப்பிடறான் என்ற ஒரே காரணத்துக்காக தெருவில் இறங்கி கட்டையை சுழட்டும் காமெடி எல்லாம் 'இந்து' மதம் தழைத்தோங்கும் இந்தியாவில் மட்டுமே சாத்தியம். :lol: :lol: :lol: :lol:
Quote
 
 
+3 #91 panadai 2012-01-10 21:27
appo thaa kee, dinakaran eripu ellam commnist panniadha . avangadhaan vanmurai katchi attacha..panni irruppargal!! :lol: :lol: :lol: Quoting thivyan:
சவுக்கிற்கும் , நக்கீரனிற்கும் தனிப்பட்ட பகை இருக்கலாம். அதற்காக நக்கீரன் மேல் இழைக்கப்பட்ட இம்மாபெறும் கொடுமையை நியாயப்படுத்தக் கூடாது..

ஒருவேளை அப்படி ஜெயலலிதா அப்படிப் பேசவே இல்லையெனில் மறுப்புத் தெரிவித்திருக்க வேண்டும்...

ஹிட்லர் ரிட்டன்ஸ்...சவுக்கு , ஏதாச்சும் நேரடியா அரசை விமர்சிக்கணும்ன ு நினைச்சிருந்தீங ்கண்ணா கடைய இப்பவே சாத்திடுக்கிடுங ்க...

கவுணட் டவுன் போடுறது என்ன....போடுற மாதிரி கனவு கூட காணமுடியாது உங்களால்..

எங்கள் தலைவர் கலைஞர் ஆட்சியா நடக்குது ? விமர்சிப்பவர்கள ையும் , விமர்சனங்களையும ் தாங்கிக்கொள்ளும ் பக்குவமிருக்க...

அனுபவிங்க மக்களே அனுபவிங்க!!! ஒரே ஓட்டு , ஓகோன்னு வாழ்க்கை!
Quote
 
 
-1 #90 panadai 2012-01-10 21:26
un nangaam paramparai parr mudalil!!! :lol: :lol:
Quoting Rajamani:
கட்சிப் பொறுப்பிலிருந்த ு பழ.கருப்பையா விடுவிப்பு:

"The Semites of the Middle East were Pagans, and many post-Mosaic Israelites peoples were Pagans" was a humbug theory of "Semitic Hindus" - VHP & neo-con Christians.

Kirshna meanas dark(கருப்பையா) . வெளிநாடுகளில் முன்னேற வேண்டுமென்றால் வெள்ளைத்தோல் அல்லது "கிறிஸ்தவ தலித்தாக" இருக்கவேண்டும். விஷ்வ ஹிந்து பரிஷத்(VHP) இதை ஒருங்கிணைக்க, இந்துத்துவத்தை மேற்குலக திரிபு படுத்துகிறது.
ஜெயலலிதாவும் சோ மூலம் இதற்கு அடிமையாகி வருகிறார்.

கிறிஸ்தவத்திற்க ு முன் ஐரோப்பிய "PAGAN" உலகில், DARK என்றால் misfortune, LIGHT என்றால் freedom. இதுவே Harrypotter, Lord of the Ring கில் கூறப்படுகிறது. இதற்கொப்பவே இந்துத்துவம் திரிபுபடுத்தப்ப டுகிறது.இதற்குத்தான் சைபிரியாவில் ரஷிய Orthodox christians பகவத் கீதைக்கு எதிராக வழக்கு போட்டார்கள்.
இது இந்துத்துவத்தின ் கருப்பு-வெள்ளை(Dark energy,Dark matter - visible matter) Balance(Yin & Yang) க்கு முரணானது.
Quote
 
 
+3 #89 panadai 2012-01-10 21:24
nee yarupaa ADI MUTTALA :lol: :lol: Quoting வால்டர் வணங்காமுடி:
நிகழ்வு1:
மரியம்பிச்சை செத்ததுக்கு அறிவிக்கப் படாத பந்தை நடத்தியது அதிமுக கூட்டம்.ஒரு புங்கமரத்தை கோடாரி இல்லாமல் வேறோடு சாய்த்து நடுரோட்டில் போட்டு அடாவடி செய்தது அதே அதிமுக கூட்டம்.

நிகழ்வு2:
ஜெயாவின் அல்லகைகள்,லூசு கோவாலை எதிர்த்து அதே பாணியில் வெளுத்து வாங்குகிறார்கள் .

இதை எல்லாம் சரி என்று வாதாடும் அரைவேக்காடு கூட்டம்,இவர்கள் செய்வது அராஜகமாக இருந்தாலும் அது சரியே என்று வாதாடும் உத்தமர் கூட்டம், இவர்களை போல அல்லாமல் தனது கோவத்தை காட்டிய பரமகுடி 7 பேரை மட்டும் சுட்டு கொலை செய்தது? நான் கேட்பது ஒன்றே ஒன்று தான்.


போலிஸின் துப்பாக்கிகள் இப்போது எந்த சாக்கடையில் விழுந்துகிடக்கி றது? ஜெயாவை குறை சொன்னதும் பொங்கி எழும் கூட்டத்தை நோக்கி ஏன் ஒரு துப்பாக்கி தோட்டா கூட பாயவில்லை? இன்று ஜெயாவுக்கு சொம்பு தூக்கும் அறிவுஜீவிகள் இதே போன்று பரமகுடியில் நடந்த செய்தியை 'ரவுடி கும்பல்' என்று வர்ணித்தது ஏன்? நீங்க கோவப் பட்டா அது ஜனநாயகம்,எதிர்ப ்பு போராட்டம்,எதிர் ப்பு நிலை... பரமகுடி ஆட்கள் போராடினா அது 'ரவுடிசமா'? இப்படி ஒரே மாதிரியான சம்பவத்தையே இடத்துக்கு இடம் மாத்தி பேசி, வேண்டியவங்களுக் கு ஜால்ரா அடிக்கிறதுக்கு பதிலா நாண்டுகிட்டு சாகலாமே?

குறிப்பு: இதை சொல்வதால் நான் திமுக காரன் என்று எண்ணி தெலுங்கன் ஆட்சியில் அப்படி இல்லையா, இப்படி இல்லையா என்று உளறிகொட்டி என்னிடம் மேலும் வாங்கி கட்டிக் கொள்ள வேண்டாம் என்று ர.ரக்களை கேட்டுகொள்கிறேன ். என்னை பொருத்தவரை 'உ.பி', 'ர.ர' இரண்டுமே முட்டாள்கள் தான்.
Quote
 
 
-4 #88 புதியவன் ராஜ் 2012-01-10 20:44
நல்லவன், கலைஞர் நள்ளிரவு கைது பற்றி உங்கள் கருத்து குரூரமானது. எந்த பிடி ஆணையோ, நீதிமன்ற உத்தரவோ இல்லாமல், சட்டவிரோதமாக நள்ளிரவில் படுக்கை அறைக்குள் புகுந்து கலைஞரை காட்டுமிராண்டி தனமாக கைது செய்ததை கண்டித்த நீதிபதி, விசாரணை அதிகாரியை பார்த்து : "உன் இதயத்தில் சதை இருக்கிறதா களிமண் இருக்கிறதா" என்று சாட்டையால் அடிப்பது போல கேட்டார். அது அராஜக அரசைப்பார்த்து கேட்ட கேள்வி. ஆனால் சிலர் இதயத்தில் மட்டுமல்ல, தலையிலும் களிமண் தான் இருக்கிறது போல. எனவேதான் நள்ளிரவில் நடந்த சட்டவிரோதமான கைதை ஏதோ நகைச்சுவை போல பேசுகிறார்கள். தனக்கு எதிராக தீர்ப்பு சொன்ன நீதிபதி மருமகன் மீதே பொய் கஞ்சா வழக்கு போட்டவர்கள், அவர்களை ஆதரிப்பவர்களிடம ் நாகரீகத்தையும் நேர்மையான பதிலையும் எதிர்பார்க்க முடியாதுதான்.
Quote
 
 
+3 #87 Vini 2012-01-10 19:00
இந்த நிகழ்ச்சி தமிழ்நாடு இன்னும் முதிர்ச்சியடயணு ம்ங்கரத தான் காட்டுது. இன்னும் ஒரு தலைவர் மேல எல்லா பாரத்தையும் போட்டுட்டு பே.. என்று உக்கார்ரது, தலைவர்கள் சொந்த வாழ்கைல எதாச்சும் விசயம்னா உடனே கொடியை பிடிச்சி ஆர்பாட்டம் பண்ரது.. எ.கா. நித்தியானந்தா. இப்ப நக்கீரன் நாக்குல செல்வி.ஜெயலலிதா. இதலாம் விட்டுட்டு அரசு செலவுல ஜோசியர் சொன்னார்னு யானைக்கு விருந்து நடத்துரத பத்தி கூட எழுதலாமே.
Quote
 
 
0 #86 idavai venthal 2012-01-10 18:33
[ஃஉஒடெ நமெ="திவ்யன்"]சவுக்கிற்கும் , நக்கீரனிற்கும் தனிப்பட்ட பகை இருக்கலாம். அதற்காக நக்கீரன் மேல் இழைக்கப்பட்ட இம்மாபெறும் கொடுமையை நியாயப்படுத்தக் கூடாது..

ஒருவேளை அப்படி ஜெயலலிதா அப்படிப் பேசவே இல்லையெனில் மறுப்புத் தெரிவித்திருக்க வேண்டும்...

ஹிட்லர் ரிட்டன்ஸ்...சவுக்கு , ஏதாச்சும் நேரடியா அரசை விமர்சிக்கணும்ன ு நினைச்சிருந்தீங ்கண்ணா கடைய இப்பவே சாத்திடுக்கிடுங ்க...

கவுணட் டவுன் போடுறது என்ன....போடுற மாதிரி கனவு கூட காணமுடியாது உங்களால்..

எங்கள் தலைவர் கலைஞர் ஆட்சியா நடக்குது ? விமர்சிப்பவர்கள ையும் , விமர்சனங்களையும ் தாங்கிக்கொள்ளும ் பக்குவமிருக்க...

அனுபவிங்க மக்களே அனுபவிங்க!!! ஒரே ஓட்டு , ஓகோன்னு வாழ்க்கை![/ஃஉஒடெ]

பொது வாழ்வுக்கு வந்தவர்களை அரசியல் ரீதியாக விமர்சிக்கலாம். ஆனால் ஜெயலலிதா அவர் பொது வாழ்வுக்கு வந்துவிட்டார் என்று அவரை தனிப்பட்ட வாழ்க்கையையோ, உணவு பழக்க வழக்களையோ, தேக அமைப்புகளை தாந்தோன்றி தனமாக விமர்சனம் செய்து அதை பத்திரிக்கை சுதந்திரம் என்று சொன்னால் அது அயோக்யத்தனம் அல்லவா ? அட்டை கத்தி, புஸ் குல்லா, மலையாளி என்று எம்ஜியாரையும், அண்டங்காக்கை என்று காமராஜரையும், குல்லுக பட்டர் என்று ராஜாஜியையும் தனி விமர்சினத்தில் இறங்கியது கருணாநிதி தான். அவரின் ஜால்ரா நக்கீரன் போன்ற மூன்றாம் தர பத்தரிகைகள் பத்திரிக்கை சுதந்திரத்தை பற்றி பேசுவது வேடிக்கையாக உள்ளது. மாட்டு கறி தின்பதில் தப்பில்லை. ஆனால் சிலர் சைவமாக இருப்பார்கள். அவர்கள் மாமிசம் உண்கிறார்கள் என்றல் கோவம் வராதா ? என்னமோ ஆஈஆட்ம்க் பொது குழுவை அழைத்து அதில் ஜெயலலிதா நக்கீரன் அலுவலகத்தை தாக்க முடிவு செய்தார் போல அல்லவா பழி சுமத்துகீர்கள். கலைஞர் ஆட்சியில் பழ. கருப்பையா, சீமான் வீட்டில் நடந்த தாக்குதலை திமுக தொண்டர்கள் செய்யவில்லையா ?
Quote
 
 
+4 #85 ஓசூர் கே.பார்கவ் 2012-01-10 15:52
நக்கீரன் அலுவலகம் தாக்கப்பட்டு சிறிது நேரத்திலேயே கருணாநிதி இச் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்திருக்க ிறார்.

தாக்கப்பட்ட தகவல் வெளியான குறுகிய நேரத்தில் தனது கண்டனத்தை ஏன் அவசரமாக பதிவு செய்தார்?

தனக்கு பின் யார் என்ற உப்பு சப்பில்லாத கேள்விக்கு தன் மகனுக்கு 3% கொடுத்த தினகரன் பத்திரிக்கை அலுவலகத்தையும், மூன்று ஊழியரின் உயிரையும் சூறையாடிய சம்பவத்தையும் மறந்து இப்படி அவசரமாக கண்டனத்தை தெரிவித்திருப்ப தும்..,

விலைவாசி உயர்வையும் தாண்டி அ.தி.மு.கவிற்கு பெருகிவரும் ஆதரவையும் ஜெயலலிதாவின் பெருமையும் குறைக்கும் வகையிலேயே இச்சம்பவம் திட்ட்டமிட்டு நடந்திருப்பதாக தெரிகிறது.
Quote
 
 
+8 #84 idavai venthal 2012-01-10 15:15
நக்கீரன் பத்திரிக்கை மீது தாக்குதல் நடத்தியது அதிமுகவின் அடிமட்ட தொண்டர்களே. தங்கள் தலைவியை பற்றி கட்டுக்கதை எழுதியதற்கு தங்கள் கோவத்தை காட்டினார்கள். அண்ணா, பெரியார் எல்லாம் வந்து என் கனவில் வந்து சொன்னார்கள் என்று இறந்தவர்களை தன்னுடைய சாட்சியாக கூப்பிடுவது கருணாநிதியின் வழக்கம். இறந்தவர்கள் சொன்னார்கள் என்று தன்னுடைய பச்சை புளுகை நியாயபடுத்துவது கோபாலின் அயோக்யத்தனம் அல்லவா ? அம்மா இவர்கள் மீது மான நஷ்ட வழக்கு தொடரலாம். பாவம் கோபாலும் என்ன செய்வார் ? வீரப்பன் இருந்தவரை அவர் பெயரை சொல்லி சம்பாதித்தான். கருணாநிதி ஆட்சியில் இருந்தவரை நித்தியானந்த போன்ற பொட்டை சாமியாரிடம் மிரட்டி சம்பாதித்தான். கோபால் ஒரு பக்கா ஊடக விபச்சாரி. இவன் அலுவலகத்திற்கு இன்சூரன்ஸ் செய்திருப்பான். மானங்கெட்ட இவனுக்கு இந்த செருப்படி, சாணி அபிஷேகம் எல்லாம் ஒரு பொருட்டு அல்ல. இவனை சட்ட ரீதியாக காய் அடிக்க வேண்டும்.
Quote
 
 
+5 #83 ஷாலி 2012-01-10 14:11
நக்கீரன் கோபாலுக்கு இதெல்லாம் சர்வசாதாரணம்,கட ப்பாரையை முலுங்கிவிட்டு சுக்குத்தண்ணி இல்லே சுடுதண்ணியே குடிக்கிற ஆளு.விழுகிற கல்லில் வீட்டை கட்டுகிற ஆளு.ஜெ மாமி தயவுலே இலவச விளம்பரம் கிடைத்துவிட்டது .

இதற்கு முன்னால் தராசில் ஒரு கவர் ஸ்டோரி தலைப்பு-பகுத்தறிவு முதல்வர் வீட்டில் ஒரு பகல்வேஷம்...ராஜாத்தி அம்மாளும் ரகசிய சாமியாரும்..அப்ப திமுக காரர்கள் யாரும் கல் அடிக்கலை.
Quote
 
 
+1 #82 N.Rajan 2012-01-10 11:55
Mannarkudi Maphia erukalam myaloper mahpia erukakoodatha?
Quote
 
 
-1 #81 மானசீக அம்மனி 2012-01-10 10:09
சவுக்கு


பாராடுக்க்கல்
Quote
 
 
+2 #80 தமிழ் அரக்கன் 2012-01-10 04:52
[ஃஉஒடெ நமெ="ச"]ஜெயலலிதாவை கெட்டவார்த்தையி ல் திட்டினால் கோவம் வரலாம்...மாட்டுகறி சாப்பிடுவாய் என்று கூறுவது இவ்வளவு கோபத்தை உண்டாக்குகிறது என்றால் மாட்டுகறி உண்பவர்களை பற்றி நீ அவ்வள்வு இழிவாக கருத்கிறாய் என்று தானே அர்த்தம்[/ஃஉஒடெ]


மிகவும் சரியான வாதம்!
Quote
 
 
+1 #79 NadanasigamanyCanada 2012-01-10 00:24
நக்கீரன் கோபால் ஒரு தி.மு.க. கைக்கூலி. இவனை நடுத் தெருவில் கட்டிவைத்துச் செருப்பால் அடிக்க வேண்டும். கருணாநிதி குடும்பம் அடித்த கொள்ளையில் இவனுக்கும் பங்கு உண்டோ? நக்கீரன் தடை செய்யப்பட வேண்டிய ஒரு கேவலமான இதழ்.
Quote
 
 
+2 #78 anamika 2012-01-09 20:27
கோபால் ஒரு ஃப்ராட்...காமராஜ் ஒரு பொறுக்கி
எந்த பொழப்பு க்கு தூ/...சொல்ல கூசுது
Quote
 
 
-5 #77 ஆர்.தியாகு 2012-01-09 20:19
ஜெயலலிதவை பற்றி நக்கீரன் எழுதியதிற்கு சவுக்கு கண்டன கட்டுரை....

இது கட்டுரையா இல்லை குட்டுரயா..? இத்தனை குட்டு குட்டினால் கோபாலின் தலை கொம்பு மாதிரி வீங்கிதான் போகும்...


ஜெயலலிதாவை பற்றி பொய் கட்டுரை எழுதியதிற்கு இப்ப்டி குதிக்கும் சவுக்கே...!

திரு. பசுபொன் தேவரை பற்றி அவதூறு சொல்லி , பொய் சொல்லி கட்டுரை எழுதி ,கட்டு கதைகள் புனைந்த உன் சிழ் வடியும் புத்தியை என்ன வென்று சொல்வது...

இதை வெளியிட்டாலும் சரி அல்லது அப்படியே விட்டாலும் சரி!


சவுக்கு அல்ல நீ சமுக சுழுக்கு.....அழுக்கு
Quote
 
 
0 #76 thivyan 2012-01-09 20:07
சவுக்கிற்கும் , நக்கீரனிற்கும் தனிப்பட்ட பகை இருக்கலாம். அதற்காக நக்கீரன் மேல் இழைக்கப்பட்ட இம்மாபெறும் கொடுமையை நியாயப்படுத்தக் கூடாது..

ஒருவேளை அப்படி ஜெயலலிதா அப்படிப் பேசவே இல்லையெனில் மறுப்புத் தெரிவித்திருக்க வேண்டும்...

ஹிட்லர் ரிட்டன்ஸ்...சவுக்கு , ஏதாச்சும் நேரடியா அரசை விமர்சிக்கணும்ன ு நினைச்சிருந்தீங ்கண்ணா கடைய இப்பவே சாத்திடுக்கிடுங ்க...

கவுணட் டவுன் போடுறது என்ன....போடுற மாதிரி கனவு கூட காணமுடியாது உங்களால்..

எங்கள் தலைவர் கலைஞர் ஆட்சியா நடக்குது ? விமர்சிப்பவர்கள ையும் , விமர்சனங்களையும ் தாங்கிக்கொள்ளும ் பக்குவமிருக்க...

அனுபவிங்க மக்களே அனுபவிங்க!!! ஒரே ஓட்டு , ஓகோன்னு வாழ்க்கை!
Quote
 
 
+2 #75 நெல்லை பாலாஜி 2012-01-09 19:30
[ஃஉஒடெ நமெ="புதியவன் ராஜ்"]"ச" என்ற பெயரில் "தனக்கு பிடிக்காதவர்கள் மீது கஞ்சா வழக்கு போட்ட ஜெயலலிதாவுக்கு பொய் செய்தி பற்றி பேச தகுதி கிடையாது" என்று சரியான கருத்தை தான் சொல்லி இருக்கிறார். அதற்கு 12 எதிர்ப்பு வாக்குகள். அப்படியானால் சவுக்கு வாசகர்கள் பெரும்பாலோர் அதிகார துஷ்பிரயோகம் செய்து பொய் கஞ்சா வழக்கு போடுவது தவறல்ல என்று கருதுகிறார்களா? இதுதான் அவர்கள் சிந்திக்கும் தகுதியா?[/ஃஉஒடெ]
அட்ரா சக்க... அப்படி போடு..
Quote
 
 
+7 #74 நெல்லை பாலாஜி 2012-01-09 19:26
[ஃஉஒடெ நமெ="ஸோம்பூ ஸூப்றாமாணீ"]கனிமொழியும் ஜாபாசேட்டும் ராசாத்தி அம்மாளும் கருணாநிதியும் பேசிக்கொண்டதை நேரில் பார்த்தமாதிரி சவுக்கு எழுதி பல கட்டுரைகள் படித்திருக்கிறோ ம்.ஆனா ஜெயலிதா பத்தி மட்டும் அப்படியெல்லாம் எழுதக்கூடாது என்று சவுக்கு சொல்வது........சரி சரி தனக்கு வலித்தால் தான் அடுத்தவர் வலி சிலருக்கு புரியும்.[/ஃஉஒடெ]


அட... இது நல்லா இருக்கே!!!!!
Quote
 
 
+4 #73 நெல்லை பாலாஜி 2012-01-09 19:22
[ஃஉஒடெ நமெ="சுன்டர்நிப்ரொ"]மக்களால் தேர்ந்தெடுக்க பட்ட முதல்வர், ஒரு வயதான பெண்மணி, அவரை "மாட்டுக்கறி சாப்பிடும் மாமி" என்று முகம் சுளிக்க வைக்கும் வகையில் செய்தி விடுபவர்களை என்ன வென்று சொல்வது. பொய் செய்திகளை சொல்லியே பிழைப்பு நடத்துவதற்கு எங்காவது போய் நாண்டுகிட்டு சாகலாம் கோபால். இதை தட்டி கேட்டது சரி தாண்.[/ஃஉஒடெ]
சுந்தர்... என்ன இது... இவள் ஆடிய ஆட்டம் என்ன!!!!.. பாடிய பாட்டு என்ன.... எல்லாம் தெரிந்துதான் இப்படி கமெண்ட் ஆ???? ஐயகோ.. இந்த நாட்ட திருத்த முடியாத???!!! அது சரி , மாட்டு கரி சாப்பிடுறது என்ன அவ்வளவு அசிங்கமா??? நீங்கள் ஏன் இஸ்லாமிய சகோதரர்களை இழிவு படுதுகிறிர்கள்...இது வன்மையாக கண்டிக்க தக்கது..
Quote
 
 
-3 #72 நெல்லை பாலாஜி 2012-01-09 19:16
[ஃஉஒடெ நமெ="ஸிவகுமர்.ம்"]பகுதி௨ ........ தென்ன மரத்தில் தேள் கொட்டினால் பண மரத்தில் நரிகட்டுமாம். அது போல் தெரிகிறது. சவுக்கின் இந்த கட்டுரை. மடியில் கணம் இல்லை என்றால் வழியில் பயம் இல்லை. சவுக்கு இதை கண்டு பயப்பட வேண்டாம். அதற்காக எதிர்காலத்தில் நடுநிலையாக செய்தி வெளியிட்டாலும் தாக்குவார்கள் என்று உன் பத்திரிக்கை தந்திரத்தை இங்கு காட்டவேண்டாம். இந்த மாதிரி ரெண்டு காட்டு காட்டுனாத்தான் பாதிரிக்கை சுதந்திரம் சுத்தமாகும் என்பதை புரிந்துகொள்ளுங ்கள். ஜெயலலிதா தமிழ்நாட்டின் முதல்வர். அதாவது எங்கள் முதல்வர். இது போன்றதொரு கீழ்த்தரமான செய்தி வெளியிட்ட நக்கீரனுக்கு ஆதரவாக சவுக்கு செய்தி வெளியிட்டு சவுக்கின் பயத்தை வெளிக்காட்டவேண் டாம். இது நடுத்தெருவில் இறங்கி கொடி பிடிக்கும் அதிமுக தொண்டனின் கருத்து இல்லை. பொறியியல் படித்து விட்டு இன்று ஒரு கம்பெனியில் சீனியர் பொறியாளராக வேலை பார்க்கும் ஒரு சாதாரண மனிதனின் கருத்து. இன்றைய செயலை முழுமையாக ஆதரிக்கிறேன். ஜெயாவின் சில நடவடிக்கைகள், செயல்கள் நிர்வாக ரீதியாக பிடிக்கவில்லை என்றாலும் அதற்காக அவர் மீது உள்ள மரியாதையும் நம்பிக்கையும் குறையவில்லை. ஒரு நிறுவனத்தை வழிநடத்தும் எனக்கே அதில் உள்ள சிரமத்தை சமாளிக்க மிகுந்த விழிப்புணர்வுடன ் இருக்கவேண்டும். இங்கு எதிரி என்று சொல்லபோனால் மற்றொரு நிறுவனமே அதுவும் கண்ணுக்கு தெரிந்த உணரக்கூடிய சந்தை போட்டி. ஆனால் அரசியல் ரீதியாக, நிர்வாக ரீதியாக முக போன்ற நயவஞ்சக நரி கூட்டம் உள்ள இந்த மாநிலத்தை வழி நடத்த வேண்டும் என்றால் சுலபமான காரியம் இல்லை. இதற்காகவே ஜெயாவின் மீது உள்ள மதிப்பும் மரியாதையும் பன் மடங்கு உயர்கிறது. இன்றைய நாட்டு நடப்பை பார்க்கும் பொழுது ஜெயா மக்களுக்காக தன்னை மாற்றிக்கொண்டுத ான் உள்ளார். ஆனால் இன்றுவரை மாறாமல் இருக்கும் தமிழினத்தின் ஒரே துரோகி முக மட்டுமே.[/ஃஉஒடெ]

தம்பி சிவா.. ஏன்!!!?? ஏன்.... எதுக்கு இந்த கொதிப்பு??? நீ பொறியியல் படிதுல்லையா, இல்ல அ தி மு க கோ ப செ வா??? ஜெயாவின் வரலாறு உங்கள்ளுக்கு தெரியாதா?? நீ பொத்திகிட்டு இரு.... கொய்யால என்ன வேகம்!!!!.. வொய் திஸ் கொலைவெறி பாஸ்!!!!!
Quote
 
 
+3 #71 ராஜன் 2012-01-09 19:15
நித்யானந்தா படுக்கையறை காட்சிகளை ஸ்க்ரீன் ஷாட்டாக ஒவ்வொரு ஷாட்டையும் போட்டு கல்லா கட்டியவர்கள் இந்த மஞ்சள் பத்திரிகை ஆசாமிகள்! :-x
Quote
 
 
+7 #70 ராஜன் 2012-01-09 19:14
சவுக்கு அடுத்து கண்டிப்பாக தலைவர் கலைஞரின் ஆட்சி தான். ///
.
.
நெனப்புதான் பொழப்ப கெடுக்குது!ஹீ ஹீ :-?
Quote
 
 
+4 #69 நெல்லை பாலாஜி 2012-01-09 19:13
அப்படி போடுடா செல்ல குட்டி... இங்கே கமெண்ட் போடுறவனெல்லாம் ஏதோ ஜெயலலிதா யோக்கியம் மாதிரி
பேசுறானுக... இவ யோக்கியம் ஒருக்கே தெரியும்.. நக்கீரன் வந்துதான் சொல்லனுமா????
[ஃஉஒடெ நமெ="ச"]வாச்சாத்தி பெண்கள் போலிசாரால் ,காட்டிலாகா அதிகாரிகளால் வன்புணர்வு செய்யபட்ட போது "காசுக்காக அவர்கள் குற்றம் சொல்கிறார்கள்" என்று சொன்ன ஜெயலலிதா நக்கீரன் தன்னை அவதூறாக பேசுவதா சொல்வதற்க்கு எந்த தகுதியும் கிடையாது[/ஃஉஒடெ]
Quote
 
 
+4 #68 senthilkumars 2012-01-09 18:47
[ஃஉஒடெ நமெ="ஸிவகுமர்.ம்"]பகுதி௧ ............. சவுக்கு இந்த விசயத்தில் பொத்திகிட்டு இருப்பது நல்லது. பத்திரிக்கை சுதந்திரம் என்ற பெயரில் நீங்க என்ன வேண்டுமென்றாலும ் எழுதுவீர்கள். நாங்கள் அமைதியாக இருக்கவேண்டுமா! நாங்கள்தான் பொது மக்கள். எங்களுக்கு தெரியும். எது பொய் எது உண்மை என்று. தான் எழுதுவது தவறு என்று தெரிந்தே எழுதும் நக்கீரனுக்கு மன்னிப்பே இல்லை. தெரியாமல் செய்த தவறுக்கு மனிப்பு உண்டு. ஆனால் தெரிந்தே செய்த தவறுக்கு. இன்று நடந்ததை விட அதிகம் எதிர் பார்த்தேன். நாம் என்ன ஆயுதம் எடுக்க வேண்டும் என்று எதிரிதான் தீர்மானிப்பான். ஆசிரியரை கைது செய்கிறார்களா இல்லையா என்பதை அரசு பார்த்துகொள்ளும ். தப்பு செய்தவனை விட அதை தூண்டியவனுக்குத ான் தண்டனை அதிகம். இந்திய இறையாண்மையை ஒற்றுமையை பாதிக்கும் விதத்தில் வைகோ பலமுறை பேசி ஜெயிலுக்கு சென்றுள்ளார். ஆனால் அவரின் பேச்சை கேட்டு வன்முறையில் ஈடுபட்ட எவரும் ஜெயிலுக்கு செல்லவில்லை என்ற யதார்த்தத்தை புரிந்துகொண்டு நக்கீரனை கண்டிக்க வழியை பாருங்கள். நக்கீரன் வலையும் விரிக்கவில்லை. அதில் வந்து ஜெயா மாட்டவும் இல்லை. ஜெயா ஒரு சுனாமி. கைவைத்து தடுக்கலாம் என்று நினைக்கும் நக்கீரன் போன்ற பத்திரிக்கைகள் காணமல் போகுமே தவிர அவரின் புகழுக்கு களங்கம் விளைவிக்க முடியாது. முடிந்தால் ஒரு சர்வே எடுத்து பார். இன்றைய நிகழ்வு சரியே என்று அனைத்து பொதுமக்களும் சொல்வர். சொல்லபோனால் பொது மக்களே இதுபோன்றதொரு நிகழ்வை நக்கீரன் மீது எதிர்பார்த்தார் கள்.[/ஃஉஒடெ]


நாம் என்ன ஆயுதம் எடுக்க வேண்டும் என்று எதிரிதான் தீர்மானிப்பான்.
Quote
 
 
-3 #67 Nanban 2012-01-09 18:02
Savukku is nxt version of "Thuglak", "Nammdhu MGR","Dinamalar","Dinamani"(btw, i have heared that Dinamalar and Dinamani trying to become number 1 on spreading the AIDMK/Jayalalitha's "KOLIGAIKAL","KOTPADUKAL". Now savukku also...Tell me how much you have got this? :D
Quote
 
 
+4 #66 ஹுசைன் 2012-01-09 18:01
இன்றைக்கு பத்திரிக்கை சுதந்திரம் என்பது தடிஎடுத்தவநேல்ல ாம் தண்டல்காரன் எனும் நிலையில் தான் உள்ளது,முதலில் எத்துறையில் இருப்பவரும் தன்னிலை உணர்ந்து தன் கடமை உணர்ந்து பணியாற்ற வேண்டும்.என்னை பொறுத்தவரையில் பத்திரிக்கை சுதந்திரம் என்பது நம் நாட்டில் தனி மனித சுதந்திரத்தைவிட அதிகமானது தனி மனிதன் அடுத்தவரை பற்றி பேசும் போது நேரடியாக தண்டனைக்கும் வழக்குகளுக்கும் உள்ளாகிறான் ஆனால் பத்திரிக்கையாளர ்கள் யாரை பற்றி விமர்சனம் செய்தாலும் பொய் செய்தியே வெளியிட்டாலும் தண்டனைக்கு உட்படுவதில்லை மறுப்பு என்று ஒரு சிறிய பெட்டி செய்தி வெளியிட்டு தப்பி விடுவார்கள் பத்திரிக்கை சுதந்திரம் எனும் ஒரு சொல்லை பயன்படுத்தி இன்று வியாபாரம் மட்டும் தான் செய்கிறார்கள் நடுநிலையோ பத்திரிக்கை தர்மமோ காக்கபடுவதில்லை ,"சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்" எனும் குறளுக்கு் ஒப்ப கடமையுனர்ந்து கடமை செய்வோம்.
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 73 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday4433
mod_vvisit_counterYesterday10391
mod_vvisit_counterThis week73207
mod_vvisit_counterLast week80887
mod_vvisit_counterThis month207165
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12729284