முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
காவிரியில் தண்ணீர் கிடையாது அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 4
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சனிக்கிழமை, 30 அக்டோபர் 2010 21:38

 

காவிரி ஆற்றிலிருந்து, தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடும் பேச்சுக்கே இடமில்லை என்று கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை பெங்களூரில் அனைத்துக் கட்சி கூட்டம் முடிந்ததும் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்..

இதை தொடர்ந்து பெங்களூரில் இருக்கும் அவரை 28ம் தேதி காலை 11.10 மணிக்கு தொடபுக்கொண்டோம்…

தமிழகத்திலிருந்து வரும் தினமதி பத்திரிகைக்கு பேட்டி வேண்டும் என்று கூறியது, சிரித்துக்கொண்டே நான் சொல்வதை மட்டும் போடுங்க.. சொல்லாதை சேர்த்து போட்டு, மாநில அரசுகளுக்கிடையே மோதல் உண்டாக்கிவிடாதீர்கள் என்ற பேட்டியை தொடங்கினார்..

 

கேள்வி:காவிரி நடுவர் நீதிமன்றத்தின் தீர்ப்பு அடிப்படையில் காவிரியில் தண்ணீர் திறந்து விட வேண்டுமே..?

பதில்: காவிரி நடுவர் மன்ற உத்தரவுபடி தண்ணீர் திறந்துவிடும் பிரச்சனை இப்போது எழவில்லை. இது தொடர்பாக கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையிட்டு மனு தாக்கல் செய்துள்ளோம், அது தற்போது விசாரணையில் உள்ளது.

கேள்வி: தண்ணீர் திறந்துவிடும்படி தமிழக அரசு கோரிக்கை விடுத்ததா..?

பதில் : தமிழக அரசு சார்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டது. காவிரி பாசனப் பகுதிகளில் விவசாயத்துக்கு பெங்களூர், மைசூர், மண்டியா போன்ற நகரங்கள், ஊரகப்பகுதி குடிநீர்த் தேவைக்கு மட்டுமே நீர் போதுமானதாக உள்ளது. இதனால் தமிழக அரசின் வேண்டுகோளை ஏற்க சாத்தியமில்லை.

கேள்வி : உண்மையில் காவிரியில் தண்ணீர் இல்லை, அனைத்து கட்சி கூட்டத்தின் முடிவு அறிவிக்கப்படுகிறதா..?

பதில் : காநாடகத்தில் காவிரி பாசனப்பகுதியில் உள்ள அணைக்கட்டுகளின் நீர் இருப்பு, அணைக்கு நீர் வரத்து , கர்நாடகத்தின் நீர் தேவை ஆகியவை குறித்து எதிர்கட்சி தலைவர்களுடன் நீண்ட விவாதம் நடந்தது, அதில் எடுத்த முடிவைதான் உங்களிடம் கூறுகிறேன்.

கேள்வி : காவிரி போதுமான தண்ணீர் இருக்கிறதா என்ற கேள்விக்கு பதில் சொல்லவில்லை.

பதில் : சிரித்துக் கொண்டே.. அடுத்து கேள்விக்கு போகலாமே என்றார்..

கேள்வி: அணைகட்டுகள் நிரம்பி வழிந்தால் மட்டுமே தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்கும் அப்படிதானே ?

பதில் : கிருஷ்ணராஜசாகர் அணையின் மொத்த உயரம் 124.80 அடி, இன்று இரவுக்கு அணை நிரம்பிவிடும், அணையின் பாதுகாப்பு கருதி, தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்படும்.

கேள்வி : தமிழகத்தை தேவைக்கு அதிகமாக இருந்தால்தான், கர்நாடகவுக்கு நெய்வேலியிருந்து மின்சாரம் தருவோம் என்ற தமிழக அரசு பிரச்சனை எழுப்பினால் என்னவாகும்..?

பதில் : நல்ல கேள்வி..தமிழக அரசு அப்படி செய்யாது என்ற நம்பிக்கை இருக்கும்.. அதே நேரத்தில் காவிரியில் தண்ணீர் திறந்துவிடும் பிரச்சனையில் வெளிப்படையாக சில விசயங்களை பகிர்ந்து கொள்ள முடியாது, கர்நாடக மக்களை சிலர் தூண்டிவிட்டு விடுவார்கள்.. அதனால்தான் நாங்கள் வெளிப்படையாக சொல்லாமல், தமிழகத்திற்கு தேவையான தண்ணீரை திறந்துவிடுவோம்.. எங்களுக்கு அண்டை மாநிலமான தமிழகத்தின் நட்பு எப்போதும் தேவை, மிக்க நன்றி என்று முடித்தார்..

நாமும் போனில் நன்றி தெரிவித்தோம்..

 

நன்றி நம்தினமதி நாளேடு

 

Comments  

 
+2 #1 Panivazhan 2010-11-29 17:08
நான்தமிழன்.திராவிடன்அல்ல.
தமிழா,
பள்ளனாய், பறையனாய்,
நாடானாய், தேவனாய்,
வன்னியனாய், பரவனாய்,
பிள்ளையாய், கவுண்டனாய்,
மள்ளனாய், குயவனாய்......
வாழ்ந்தது போதும்.
வா - தமிழா
தமிழனாய் வாழ்வோம்.
வந்தேறி தெலுங்கன், கன்னடன், மலையாளி, மார்வாடி, ஆரிய பிராமணர், இவர்களிடம் இருந்து நம் தமிழ் நாட்டை காப்போம்.
"பக்கத்தில் உள்ளவன் சாதியை கேள், அவன் இனம் தெரியும்.
தமிழன் என்றால் தோள் கொடு, வந்தேறி என்றால், விரட்டி அடி "
''தமிழர்கள் சிறுபான்மையாக உள்ள இடங்களில் தாய்மொழி பற்றோடு இருக்கிறார்கள். பெரும்பான்மையாக உள்ள தமிழகத்தில் சீரழி்ந்த தமிழர்களாக இருக்கிறார்கள்!
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 47 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday2767
mod_vvisit_counterYesterday10268
mod_vvisit_counterThis week35407
mod_vvisit_counterLast week78861
mod_vvisit_counterThis month248226
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12770345