முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்தொடர்புக்கு
+++
செல்லமுத்து நல்லவர் !!! அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 10
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
திங்கட்கிழமை, 23 ஜனவரி 2012 15:49

எந்தச் செல்லமுத்து ?  தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக இருந்து தன் பதவியை ராஜினாமா செய்த செல்லமுத்து அவர்களைத்தான் நல்லவர் என்று சவுக்கு சொல்கிறது.  வீட்டு வசதித்துறையின் செயலராக இருந்தபோது, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் பல்வேறு வீட்டு மனைகளை, திமுக அடிவருடிகளுக்கு தாரை வார்த்துக் கொடுத்து, தேர்வாணையத்தின் தலைவரானதும் பல்வேறு முறைகேடுகளில், தேர்வாணைய உறுப்பினர்கள் ஈடுபடுவதற்கு உறுதுணையாக இருந்த செல்லமுத்துவை எப்படி நல்லவர் என்று சொல்லலாம் என்று ஆச்சர்யமாக இருக்கிறதா ?  

DSC_0596

நடுவில் இருப்பவர் செல்லமுத்து 

 

செல்லமுத்து நல்லவர்தான்.   தலைமைத் தகவல் ஆணையர் ஸ்ரீபதியோடு ஒப்பிடுகையில் செல்லமுத்து நல்லவரே.  ஏன் என்பதைப் பார்ப்போம்.. ….

ஸ்ரீபதி 1 செப்டம்பர் 2010 அன்று தமிழக தகவல் அணையத்தின் தலைமைத் தேர்தல் ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்டார்.   இவர் 1975ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியாக தேர்ந்தெடுக்கப் பட்டார்.  இந்த ஸ்ரீபதி கடந்த  திமுக ஆட்சியில் கருணாநிதியின் கைப்பாவையாக செயல்பட்டார் என்றால் அது மிகையல்ல.  கருணாநிதி ஆட்சிக்காலத்தில் விழிப்புப் பணி ஆணையராக இருந்தார் ஸ்ரீபதி.  அப்போது, ராதாகிருஷ்ணன் மற்றும் நரேந்திர பால் சிங் ஆகிய இரு ஐபிஎஸ் அதிகாரிகள் மீது, அவர்கள் இருவரும் லஞ்ச ஒழிப்புத் துறையில் பணியாற்றிய போது, முறைகேடுகளில் ஈடுபட்டு, அந்த முறைகேடுகளுக்கு பிரதிபலனாக, தங்கள் பிள்ளைகளுக்கு அண்ணா பல்கலைகழகத்தில் அரசு கோட்டாவில் சீட் பெற்றனர் என்று புகார் வந்தது.  இந்தப் புகார், உள்துறைச் செயலாளரிடம் சென்று, அவர் லஞ்ச ஒழிப்புத் துறையிடம் இது குறித்து விசாரித்து அறிக்கை அளிக்குமாறு கேட்கிறார்.

லஞ்ச ஒழிப்புத்துறையிடம் இந்த விசாரணை ஒப்படைக்கப் பட்டதும், லஞ்ச ஒழிப்புத்துறையில் அப்போது பணியாற்றிக் கொண்டிருந்த முத்து என்ற ஆய்வாளரிடம் இதை விசாரித்து அறிக்கை அனுப்பும் பொறுப்பு ஒப்படைக்கப் படுகிறது.  அந்த ஆய்வாளர், அண்ணா பல்கலைகழகத்துக்குச் சென்று, இந்தப் புகார் குறித்த ஆவணங்களை பார்வையிட வேண்டும் என்று சொல்கிறார்.    அண்ணா பல்கலைகழகத்தில் இருந்த அதிகாரி, எந்த ஆவணத்தையும் தர முடியாது, காண்பிக்கவும் முடியாது, ஆவணங்களைப் பார்வையிட வேண்டுமென்றால், எழுத்துபூர்வமான கடிதத்தோடு வாருங்கள் என்று கூறுகிறார். உடனே, முத்து அங்கேயே அமர்ந்து கீழ்கண்ட ஆவணங்கள்  வேண்டும் என்று எழுத்துபூர்வமான கடிதத்தை அளிக்கிறார்.  அண்ணா பல்கலைகழகத்தில் இரண்டு நாள் கழித்து வாருங்கள், ஆவணங்களை தருகிறோம் என்று கூறுகிறார்கள்.

அன்று மதியமே, விழிப்புப் பணி ஆணையராக இருந்த  ஸ்ரீபதியிடமிருந்து லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் உபாத்யாய்க்கு போன் வருகிறது.  அந்த போனில், ஸ்ரீபதி உபாத்யாயிடம், உங்கள் அலுவலகத்தைச் சேர்ந்த முத்து என்ற ஆய்வாளர், அண்ணா பல்கலைகழகம் சென்று, ராதாகிருஷ்ணன் மற்றும் என்.பி.சிங் ஆகிய அதிகாரிகளைப் பற்றி விசாரிக்கிறாராமே… …. .. இது குறித்து ஏதாவது விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறதா ? என்று கேட்கிறார்.  உபாத்யாய், விசாரணைக்கு உத்தரவிடப்படவில்லை, உள்துறை செயலாளர் அந்த மனு மீதான லஞ்ச ஒழிப்புத் துறையின் கருத்தைக் கேட்கிறார்… அதனால்தான் விசாரிக்க உத்தரவிட்டேன் என்கிறார். ஸ்ரீபதி, நீங்கள் என்னோடு முதலில் விவாதியுங்கள்… விவாதித்து விட்டு பிறகு முடிவெடுங்கள். அந்த ஆய்வாளர் ஒரு கடிதம் வேறு எழுதியிருக்கிறாராம்… அந்தக் கடிதம் என்னிடம் வந்துள்ளது….   என்னோடு விவாதித்து விட்டு பிறகு நடவடிக்கை எடுக்கலாம் என்று உத்தரவிடுகிறார்.

31_10_2009_002

ஸ்ரீபதி உபாத்யாயோடு பேசிய இந்த உரையாடல், 2008ம் ஆண்டில் ஊடகங்களில் வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  அண்ணா பல்கலைகழகத்துக்கு லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளர் எழுதிய கடிதம், ஸ்ரீபதி கைக்கு எப்படிச் சென்றது, அதில் விசாரணை நடத்தாதே என்று ஸ்ரீபதி உத்தரவிட்டது அம்பலமாகியும் கூட, கருணாநிதி ஸ்ரீபதியை தலைமைச் செயலாளராக்கினார்.

விசாரணை நடத்தாதே என்று சட்டவிரோதமாக உத்தரவிட்ட ஸ்ரீபதிக்கு தலைமைச் செயலாளர் பதவி… அந்த உரையாடலை பதிவு செய்து வைத்தற்காக உபாத்யாய் சஸ்பெண்ட் செய்யப் பட்டார்.  அப்படிப்பட்ட ‘நேர்மையான’ அதிகாரிதான் ஸ்ரீபதி.

இந்த ஸ்ரீபதியின் நேர்மைக்கு மற்றொரு உதாரணம் தன்னுடைய பிறந்த நாள் தொடர்பாக அவர் தொடுத்த வழக்கு.  ஐஏஎஸ் தேர்ச்சியடைந்து நான்கு ஆண்டுகள் கழித்து, தன்னுடைய பிறந்த நாள் தான் ஐஏஎஸ் சேரும்போது கொடுத்த 28.04.1950 அல்ல. சரியான பிறந்த தேதி, 09.10.1951 என்று விண்ணப்பிக்கிறார்.  இதை இவர் எப்படிக் கண்டுபிடித்தார் என்றால், இவர் திருமணத்துக்காக ஜாதகம் பார்த்துக் கொண்டிருந்த போது, ஜாதகத்தில் சரியான பிறந்த தேதி இருந்ததாம்.   தவறுதலாக இவர் பிறந்த தேதி 28.04.1950 என்று பதிவாகி விட்டது.  இந்தத் தவறை செய்தவர் இவர் தாய்மாமா என்றும், இதனால் இவர் பிறந்த தேதியை மாற்ற வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.

karuna_sripathy

இந்த விண்ணப்பம் நிராகரிக்கப் பட்டு, இவர் சிவில் நீதிமன்றத்தில் பிறகு வழக்கு தொடர்ந்து, அதுவும் சென்னை உயர்நீதிமன்றத்தால் ரத்து செய்யப் பட்டது.

இறுதியாக நிர்வாகத் தீர்ப்பாயத்தில் 2004ல் வழக்கு தொடுக்கிறார் ஸ்ரீபதி.  அந்த வழக்கில் தீர்ப்பாயம் பிறந்த தேதியை மாற்றுவதற்கு எவ்வித முகாந்திரமும் இல்லை என்று இவர் மனுவை தள்ளுபடி செய்கிறது.

ஆனால் அப்போதும் அடங்கவில்லை ஸ்ரீபதி.  சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் ஒரு வழக்கு தொடுக்கிறார். அந்த வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம் கீழ்கண்டவாறு தனது தீர்ப்பில் குறிப்பிடுகிறது

“It is to be pointed out that even as per the affidavit of the petitioner, his father was a Central Government employee and not a layman. Such being the case, his father is well aware of the importance attached to the entry of date of birth in the school records. Even if it is believed that by 'inadvertence,' the maternal grand-father of the petitioner has furnished the wrong date of birth of the petitioner and the same has been carried out in his school records, subsequently, at different stages of education and pursuing the employment, the father of the petitioner might have noticed the same. But, till the petitioner joined the IAS, there was no attempt made on the part of the petitioner or his father to get the date of birth corrected. Therefore, the plea of the petitioner that he came to know of his 'actual date of birth', only when there was marriage proposal for him, does not seem to be a convincing one.”

“மனுதாரர் தாக்கல் செய்த மனுவிலேயே தனது தந்தை ஒரு மத்திய அரசு ஊழியர், அவர் படிப்பறிவில்லாதவர் கிடையாது  என்பதைக் குறிப்பிட்டுள்ளார்.  அப்படி இருக்கையில் அவர் தந்தைக்கு பிறந்தநாள் குறித்தும், பள்ளி ஆவணங்களில் அதன் முக்கியத்துவம் குறித்தும் நன்கு தெரிந்திருக்கும்.  ஒரு வேளை ஸ்ரீபதியின் தாய்மாமன் பிறந்த நாளை தவறாகக் குறிப்பிட்டிருந்தால் கூட ஸ்ரீபதியின் படிக்கும் போது, பள்ளிக்காலத்திலோ, பின்னாளிலோ இந்தத் தவறை அவர் தந்தை சரி செய்திருக்க முடியும்.  ஆனால், மனுதாரர் ஐஏஎஸ்-சில் சேரும்வரை பிறந்த நாளை மாற்றுவதற்கு மனுதாரரோ, அவர் தந்தையோ எந்த முயற்சியும் எடுக்கவில்லை.  ஆகையால், திருமணத்துக்கு ஜாதகம் பார்க்கும் போதுதான் பிறந்தநாளில் இருந்த தவறு தெரியவந்தது என்ற கூற்று நம்பும்படி இல்லை” என்று சென்னை உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தது. எவ்வளவு பேராசை பார்த்தீர்களா….

malathi_and_sripathy

தன்னுடைய அசல் பிறந்த தேதியின் படி ஸ்ரீபதி 30.04.2010ல் ஓய்வு பெற்றிருக்க வேண்டும்.  ஆனால், கருணை வள்ளல் கருணாநிதியின் விசுவாசமான அடிமையாக இருந்த காரணத்தால், அவருக்கு ஆறு மாதம் பணி நீட்டிப்பு வழங்கப் பட்டது.  இதன் படி ஸ்ரீபதி 31.10.2010 அன்று ஓய்வு பெற வேண்டும்.  ஆனால், தலைமைச் செயலாளர் பதவியை விட சிறப்பான, தலைமைத் தகவல் ஆணையாளர் பதவி கிடைக்கும் போது கசக்கவா செய்யும்.  அதுவும், தலைமைச் செயலாளராக இருந்து கொண்டு, தன்னை தலைமைத் தகவல் ஆணையாளராக நியமிக்கும் கோப்பை கண்கொத்திப்பாம்பாக பின்தொடர்ந்து 01.09.2010 அன்று அரசாணை வெளியிடப்படுவதை உறுதி செய்ததும், பெருந்தன்மையோடு ஸ்ரீபதி 31.08.2010 அன்றே பதவி ஓய்வு பெற்றார்.

31.08.2010 அன்று பதவி ஓய்வு பெற்றதும், மறுநாளே அதாவது 01.09.2010 அன்று தமிழக தகவல் ஆணையத்தின் தலைமைத் தகவல் ஆணையாளராக ஸ்ரீபதி நியமிக்கப் படுகிறார்.  

pargo_e_124_2010_1-1

தமிழக தகவல் ஆணையம், ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகளின் மடமாக மாறி விட்டதுதான் என்றாலும், பணியில் இருந்தபோதே நேர்மையாக இல்லாத ஸ்ரீபதி போன்ற நபர்களை நியமித்தது, கருணாநிதி அரசின் மற்றொரு அயோக்கியத்தனம்.

இந்த ஸ்ரீபதியை தற்போது தலைமைத் தகவல் ஆணையாளர் பதவியிலிருந்து நீக்கம் செய்யவேண்டும் என்று கோரி, மாநில ஆளுனருக்கு புகார் மனு அனுப்பப் பட்டுள்ளது.   ஸ்ரீபதியை ஏன் பதவி நீக்கம் செய்ய வேண்டும் ?

சென்னை நெற்குன்றத்தில் உயர் உயர் அதிகாரிகளுக்காக வீட்டு வசதித் திட்டம் ஒன்று ஏற்படுத்தப் பட்டதும், அந்த வீட்டு வசதித் திட்டத்தில் பரம ஏழைகளான ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஎஃப்எஸ் அதிகாரிகளுக்கு சந்தை விலையை விட பாதி விலைக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப் பட்டதும், சவுக்கு வாசகர்கள் அறிந்ததே….  அந்த நெற்குன்றத்தில் ஸ்ரீபதிக்கு வீடு ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. இதில் என்ன முறைகேடு உள்ளது ?

நெற்குன்றம் வீட்டு வசதித் திட்டம், ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கானது.  ஸ்ரீபதி 31.08.2010 அன்று ஐஏஎஸ் பதவியிலிருந்து ஓய்வு பெறுகிறார்.  01.09.2010 அன்று தலைமைத் தேர்தல் ஆணையராக பொறுப்பேற்றுக் கொள்கிறார்.   இந்த வீடுகட்டும் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் 28.10.2010 அன்று வீட்டு வசதி வாரியத்தின் மேலாண் இயக்குநரால், உயர் அதிகாரிகளிடமிருந்து வரவேற்கப் படுகின்றன.

tnhb_nerkundram_letter__1_2_Page_1

அப்படி இருக்கையில் 28.10.2010 அன்று ஸ்ரீபதி எப்படி இந்த வீட்டு வசதித் திட்டத்துக்கு விண்ணப்பிக்க முடியும் ?   ஆக, ஐஏஎஸ் அதிகாரிகளுக்கான ஒரு வீட்டு வசதித் திட்டத்தில், தலைமைத் தகவல் ஆணையாளராக இருந்து கொண்டு, ஸ்ரீபதி முறைகேடாக ஒதுக்கீடு பெற்றிருக்கிறார் அல்லவா ?  இப்படி முறைகேட்டில் ஈடுபட்ட ஸ்ரீபதி, தலைமைத் தகவல் ஆணையாளராக தொடரக் கூடாது, அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றுதான் புகார் மனு அனுப்பப் பட்டுள்ளது.

list_of_allottees_1-13

இது மட்டுமல்ல.. தற்போது ஸ்ரீபதி குடியிருக்கும் மனை எண் 1085, ஆபீசர்ஸ் காலனி, அண்ணா நகர், சென்னை என்ற வீட்டு மனையும், இவருக்கு அலெக்சாண்டர் கவர்னராக இருந்த காலத்தில் விருப்புரிமையில் ஒதுக்கீடு செய்யப் பட்ட வீட்டு மனை.   ஸ்ரீபதியின் பேராசைக்கு அளவே இல்லையா ?

இந்தப் புகார் மனுவின் நகல் ஊடகங்களுக்கு அனுப்பப் பட்டு, ஊடகங்கள் கேள்வி கேட்டதும், ஸ்ரீபதி முதலில் ஆணவமாக பதில் அளித்திருக்கிறார்.   “எல்லாம் சட்டபூர்வமாகத்தான் நடந்திருக்கிறது.  இதில் தவறு எதுவும் இல்லை.  அரசியல் உள்நோக்கத்தோடு சில விஷமிகள் இப்படி பிரச்சினையை எழுப்புகிறார்கள்” என்று கூறியிருக்கிறார்.  பிறகு மற்றொரு நிருபர் அவரைச் சென்று சந்திக்கையில், எங்களுக்கு ஒரு கட்ஆப் டேட் கொடுத்தார்கள்.. அந்த கட்ஆப் டேட்டுக்குள்தான் நான் விண்ணப்பித்தேன்  என்று கூறியிருக்கிறார்.  எது சார் அந்த கட்ஆப் டேட் என்றால், ஏப்ரல் 2010 என்று கூறியிருக்கிறார்.   அவர் முன் அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்து, இதில் அந்த கட் ஆப் டேட் எங்கே இருக்கிறது என்று கேட்டதற்கு, நான் விசாரணையை உரிய முறையில் சந்திப்பேன் என்று பதில் அளித்திருக்கிறார்.

complaint_against_Sripathi_2_Page_1

complaint_against_Sripathi_2_Page_2

complaint_against_Sripathi_2_Page_3

ஆளுனருக்கு அனுப்பப் பட்ட புகார் மனு

20_01_2012_001_008

20_01_2012_006_020

புகார் தொடர்பாக டெக்கான் க்ரானிக்கிள் நாளிதழில் வந்த செய்தி

இவர் உரிய முறையிலோ, உரியாத முறையிலோ, விசாரணையை சந்தித்தே ஆக வேண்டும்.  ஆளுனரிடம் அளித்த புகார் மனுவின் மீது நடவடிக்கை எடுக்கப் படவில்லையென்றால், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப் படும் என்பதை சவுக்கு இந்த நேரத்தில் ஸ்ரீபதிக்கு சொல்லிக் கொள்ள விரும்புகிறது.

இப்போது தலைப்புக்கு வருவோம்.   செல்லமுத்து ஏன் நல்லவர் என்றால், அவரும் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை தொடங்கியவுடன் அந்த விசாரணையை ரத்து செய்வதற்கு உயர்நீதிமன்றத்தை அணுகி என்னென்னவோ செய்து பார்த்தார்.  ஆனால் விசாரணை தொடர்ந்து நடைபெற்றே வந்தது.   இப்போது செல்லமுத்து பதவியை ராஜினாமா செய்யாவிட்டாலும், அரசால் உடனடியான எதுவுமே செய்ய முடியாத அளவுக்கு அரசியல் அமைப்புச் சட்டம் அவருக்கு பாதுகாப்பை வழங்கியிருக்கிறது.

ஆனாலும் தன்னுடைய மனசாட்சி உறுத்தியதன் காரணமாக செல்லமுத்து ராஜினாமா செய்துள்ளார்.   அவருக்கு சவுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

ஆனால் சில பேர் இருக்கிறார்கள்.  தடித்த தோலுடையவர்கள்.  உடனே கருணாநிதி என்று கூறாதீர்கள்.  கருணாநிதிக்கு இருப்பது தோலே அல்ல.. இரும்புத் தகடு.   துப்பாக்கிக் குண்டு கூட துளைக்காது.

Sripathy

கிட்டத்தட்ட ஸ்ரீபதியும் அதே வகையில்தான் வருவார் போலிருக்கிறது.   ஸ்ரீபதி மீது அளிக்கப் ப்டட இந்தப் புகாரில் நியாயம் உள்ளது, இதிலிருந்து அவர் வெளிவருவது கடினம் என்பது மெத்தப் படித்த அவருக்கும் தெரியும்.  ஆனாலும் தன் மீது உள்ள தவறை உணராமல், இந்தப் புகார் குறித்த செய்தியை வெளிவரவிடாமல் செய்வதற்கு முயற்சி எடுத்ததிலிருந்தே ஸ்ரீபதிக்கு மனசாட்சி என்பதே இல்லை என்று தோன்றுகிறது.

ஸ்ரீபதியை ஒப்பிடும்போது செல்லமுத்து நல்லவர் தானே… ?

 

 

 

Comments  

 
0 #44 Robinhood 2012-07-05 20:24
Except very few,most of the all india service officers are corrupt, selfish, dishonest,& shameless. They only spoil the politicians,, misguide them for their personal benefits. If all the officers are honest, upright, never agree to do anything wrong, what the politicians would do? Will this happen in our country? At least 50% of them are OK we may see some change. Because these beuracrats are selfish,dishone st and aspiring for powerful posts our country is like this. People should question them and expose them. Nerkundram housing scheme should be cancelled and utilized for the sake of poor people.
Quote
 
 
+3 #43 vennai 2012-02-06 20:01
I said MK Ganthi destroyed this country lot. so his assasination i fully support -- dont say he was a freedom figter -- say he was ONE OF THE freedom fighter. the same Karunanithi govt disovled by President without governor sign(ofcourse thats not rquired by law) and that too i fully support. are you not in the SMS world. do you need complete picture of each and every sentenance... Quoting புதியவன் ராஜ்:
Quoting vennai:
both were destroyed this country


What does it mean? What kind of English is this? For this also there are 6 thumbs up?
Quote
 
 
-3 #42 புதியவன் ராஜ் 2012-02-04 23:46
Quoting vennai:
both were destroyed this country


What does it mean? What kind of English is this? For this also there are 6 thumbs up?
Quote
 
 
+6 #41 vennai 2012-02-01 12:17
both were destroyed this country so both actions were very very perfect .... Quoting புதியவன் ராஜ்:
Reference my previous posting. A correction. DMK government was dismissed on 30th January 1991 (Mahatma Gandhi was also assassinated on 30th January 1948 and democracy was assassinated on 30th January 1991). Rajiv Gandhi was assassinated on 21st May 1991 (not 1990).
Quote
 
 
+6 #40 vennai 2012-02-01 12:16
Hindu Ram vitta. avan nalla JALRA poduvana. adha padikkalaya nee. pathrikkai eppadi nadatha vendum enru nee comment ila podugiraai attchi mariya pinnum. appo ungal sarvathigara aatchyil nee enna enna attam pottu irruppai... Quoting புதியவன் ராஜ்:
சவுக்கு, பெங்களூர் சொத்து குவிப்பு வழக்கை முதலில் இருந்து விசாரணை செய்ய அனுமதி கேட்டு தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் செய்த மனு மீதான விசாரணையில் உச்ச நீதிமன்றம் தமிழக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது . "குற்றம் சாட்டப்பட்டவர்க ள் சிறிதளவாவது நியாயமாக நடந்து கொள்ளக்கூடாதா?" என்றெல்லாம் சூடு கொடுத்து இருக்கிறார்கள். ஆனால் இந்த செய்தி, தின மலர், தின மணி, சவுக்கு போன்ற "நடு நிலை" பத்திரிகைகளில் கூட வந்தது போல தெரியவில்லை. தினகரன், நக்கீரன் மட்டுமே துணிவுடன் வெளியிட்டுள்ளன.
Quote
 
 
0 #39 ooooo 2012-01-31 14:53
கழுதை விட்டையில் எது நல்லது,முன் விட்டயா? பின் விட்டயா? என்று கேட்பதுபோல் உளளது.இரண்டும் மெத்தப்படித்த மேதாவிகள்.

வள்ளுவன் சொன்னதுபோல் “நல்லவர் போல் கள்வர்”
வேடம்போட்டு சுரண்டியவர்கள்.பேசாமல் கள்ளமுத்து என்றே இனி கூப்பிடலாம்.

ஸ்ரீ பதிக்கு பதவி ஆசை அவ்வளவு சீக்கிரம் விடாது.மனிதனுக்கு வாயில் மண் விழுகும்வரை ஆசை அடங்காது..சிவலோக பதவி கிடைக்கும்வரை.......
Quote
 
 
0 #38 jj 2012-01-31 14:52
இந்த மாதிரி ஆட்கள பாத்தாவே வாந்தி வாந்தியா வருது....இவர்களை சாக்கடை புழு என்று சொன்னால் அந்த புழுவே வருந்தும்
Quote
 
 
0 #37 selvamani 2012-01-30 10:43
இந்தியர்களாகிய எங்களுக்கு பாடப்புத்தகங்கள ில், பாகிஸ்தாந்தான் எதிரி என்றும், இலங்கை- முக்கியமாக இந்திரா காந்திக்கு நிகராக, சிரீமாவும் அவரது கட்சியும் "ந்ண்பர்கள்" என்றுதான் சொல்லிக் கொடுத்திருக்கிற ார்கள்.

இதற்கு என்ன செய்யலாம் என்கிறீர்கள்?. இலங்கைத்தமிழர்க ளை நம்பி பிரயோசனம் கிடையாது.
இலங்கையில் தமிழர் என்பவர்களுக்கும ், சிங்களவர்களுக்க ும் உள்ள பிரச்சனை வேறு, இந்தியாவின் வெளி உறவு கொள்கை வேறு. “தமிழீழம்” கேட்க “ஆசைபடுபவர்களைத ான்” இந்திய கொள்கை வகுப்பாளர்கள் பயன்படுத்துகின் றனர்(நீங்கள் மேல் கூறிய பள்ளிக்கூடத்தில ் சொல்லிக்கொடுத்த விஷயத்தின்படி).

ஒரு பொது அறிவு, 95% தமிழர்கள் வாழும் வடக்கு இலங்கையில் எப்படி “சிங்களவர்களால் ” பிரச்சனை வரும்?. வெளிநாடுகளில் குடிபெயர்ந்துள் ள 85 % தமிழர்களுக்கு மேல் வட இலங்கையை சேர்ந்தவர்கள்.

சிங்களவர்களுடன் எல்லைப்புறங்களி ல், கொழும்பில் வாழ்ந்த தமிழர்களுக்கு சில தீர்க்கவேண்டிய பிரச்சனைகள் இருந்தது உண்மைதான்(LIKE changing voting pattern by settling singhalese), ஆனால் அது 1971 பங்களாதேஷ் யுத்தத்தில் R.N.KAO and SHANKARAN NAIR (R &AW) போன்றோர் திறமையாக நடத்திய யுத்தத்தில், இலங்கை ஜே.ஆர்.ஜெயவர்த்தனா பாக்கிஸ்த்தானுக ்கு விமான எரிபொருள் நிரப்ப உதவி செய்ததை “கண்டிக்கும்!” அளவுக்கு “கடுமையாக இல்லை. ஆகவேதான் தமிழீழ ஆசையை பயன்படுத்திக் கொண்டனர்.

ஆகவே தற்போது, இலங்கை தமிழர்களின் பிரச்சனையை தீர்ப்பதையும், இந்திய வெளியுறவு கொள்கையையும்(சீ னா) “DELINK” செய்யப்படவேண்டு ம்.
Quote
 
 
0 #36 கைப்புள்ள 2012-01-30 10:34
Chempakaraman Pillai : A title superior to the ordinary Pillai was that of Chempakaraman Pillai, an innovation of Maharajah Marthanda Varma of Travancore. The individual whom it was the king’s pleasure to honour was first taken in a procession by the nobles and ministers of the state, atop an elephant, around the main four streets of the city of Trivandrum and then received in the palace by the Prime Minister and seated next to him. The ceremony concluded by treating him to Paan Supari. A person thus honoured prefixed Kanakku, followed by Chempakaraman instead of the name of his maternal uncle, followed by his own name, e.g. Kanakku Chempakaraman Krishnan.

Illathu Pillai(Ezhavar) : The Ezhavas (Malayalam:Īḻav ar) are a community with origins in the region presently known as Kerala. They are also known as Ilhava, Irava, Izhava and Erava in the south of the region.
They were as well as being agricultural laborers, small cultivators, toddy tappers, and liquor businessmen, some Ezhavas were also involved in weaving and some practised ayurvedic medicine.

These people also have PILLAI Title: Chempakaraman Pillai, also Cemapakaraman Pilla(September 15, 1891 – May 26, 1934) was an Indian revolutionary during the Anti-British Movements in India.
“When the First World War began in 1914, Chempakaraman PILLAI, a Tamil from Thiruvananthapu ram(now Kerala), formed the Indian Independence Committee in Germany along with some revolutionaries from India. He joined Emden War Ship as an officer and masterminded the attack on Madras mainly aimed at the British navy.

Viluppuram Chinnaiah PILLAI Ganesan Manrayar commonly known by his stage name Sivaji Ganesan(1 October 1928 – 21 July 2001),was an Indian stage and film actor active during the latter half of the 20th century- particularly in Tamil.
Quote
 
 
0 #35 கைப்புள்ள 2012-01-30 10:33
IN KERALA: Pillai is a subdivision or clan of the “Nair community of Kerala”. Pillai was one of the most common titles of dignity held by the Hindu caste of the Nairs and Pattaryas of North Travancore. The title of Pillai was bestowed through a formal ceremony known as Thirumukom Pidikkuka, i.e. holding the face of the King, and included the payment of a fee known as Adiyara to the King. A person thus bestowed with this title now secured the honorific title of Pillai suffixed and the distinctive title of Kanakku (meaning accountant in Tamil language) prefixed to his name. However, Kanakku and Pillai were never used together; a person named Krishnan would be referred to as Krishnan Pillai or Kanakku, followed by his maternal uncle’s name, and Krishnan. The latter style was used in royal writs and communications. So important were the privileges granted by this title that as late as in 1814 a Brahmin, Sanku Annavi, sometime Dewan of Travancore, obtained the same from the Maharajah. Prominent among the Pillais of medieval Kerala were the Ettuveetil Pillamar of Travancore.

IN TAMIL NADU: In Tamil Nadu, this title or surname is mostly used by people of the Vellalar caste among the population of Tamil descent (particularly in southern districts) , Illathu Pillaimar & Saiva Pillai, and the Nair caste population of the Malayalam-speaking immigrant population. The usage of the title is prevalent, though to a lesser extent, among Paraiyar(DALITS ), and Tamil Yadavas. The Elur Chetty community in South Tamil Nadu and Kerala also use this surname.
Quote
 
 
0 #34 கைப்புள்ள 2012-01-30 10:29
வே.பிரபாகரனின் தகப்பனார் வேலுப்பிள்ளை கேரளத்திலிருந்த ு(கொல்லம்)குடிப ெயர்ந்த “மளையாளி” ஆவார். புதுடெல்லியின் ஆஸ்தான தொலைக்காட்சி NDTV.

-http://www.youtube.com/watch?feature=player_embedded &v=7uMe7lUIFZU

Pillai, Pillay, Pulle , Pilli or Pillaimar is a popular title used by land owning caste of Tamil- and Malayalam-speaking people of India and others living in Sri Lanka, Singapore, Malaysia, South Africa and Fiji, mostly from Vellalar and Nair communities.
Though it started as a Hindu title, today Pillai is also found amongst Christians both as a surname and a given name.
South African Tamils use the spelling Pillay, whereas some Sri Lankan castes may also use Pulle or Pilli.

It is an Indian name, the name is a patronymic(mean ing obedient loyal Accountants,lik e ClellaPILLAI in Andhra pradesh), not a family(caste) name, and the person should be referred to by the given name. Sometimes newly granted by Jamindars and Colonial authorities to Loyal aides.
Quote
 
 
0 #33 புதியவன் ராஜ் 2012-01-28 11:47
சவுக்கு, பெங்களூர் சொத்து குவிப்பு வழக்கை முதலில் இருந்து விசாரணை செய்ய அனுமதி கேட்டு தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் செய்த மனு மீதான விசாரணையில் உச்ச நீதிமன்றம் தமிழக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது . "குற்றம் சாட்டப்பட்டவர்க ள் சிறிதளவாவது நியாயமாக நடந்து கொள்ளக்கூடாதா?" என்றெல்லாம் சூடு கொடுத்து இருக்கிறார்கள். ஆனால் இந்த செய்தி, தின மலர், தின மணி, சவுக்கு போன்ற "நடு நிலை" பத்திரிகைகளில் கூட வந்தது போல தெரியவில்லை. தினகரன், நக்கீரன் மட்டுமே துணிவுடன் வெளியிட்டுள்ளன.
Quote
 
 
-1 #32 மாவீர்ன் 2012-01-27 21:40
சபாஷ்! சரியான பதிவு


செல்லமுத்து நல்லவர் டா ந்
Quote
 
 
0 #31 deepu 2012-01-27 14:53
ஒரே பதிவில் இரண்டு ஃபிராடுகளை வளைத்திருக்கிறீ ர்கள். ஒன்று மக்கும் குப்பை, மற்றென்று மக்காத குப்பை.
Quote
 
 
+2 #30 pudhuvasantham 2012-01-26 20:52
ஆந்திர அரசுக்கு ரூ. 200 கோடி இழப்பு
தமிழக கவர்னர் ரோசய்யா மீது நில மோசடி வழக்கு !

www.ullatchithagaval.com
Tamil Online Magazine
Quote
 
 
0 #29 செல்வமணி 2012-01-26 14:49
"திருப்பதி கணேசா" நடிகர் திலகம் சிவாஜி கணேசனை தி.மு.கா. விலிருந்து வெளியேற்றியவர் கலைஞர் மு.கருணாநிதி.
தற்போது கோயிந்தா, கோவிந்தா என்று "மஞசள் துண்டு அணிந்து மஞசள் பூ கொடுக்கப்படுகிற து".

இலங்கைத் தமிழர்களும் இவ்வாறே,/இவ்வேளையில், அண்மையில் தமிழ் நாட்டில் இந்து பாசிச குழு ஒன்றின் யாத்திரையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கலந்து கொண்டமை மட்டுமன்றி அவர் விஷ்வ இந்து பரிஷாத்தில்(VIS HWA HINDU PARISHAD VHP) இலங்கைப் பிரதிநிதி என்றும் அறிவித்தார்.

இலங்கைக் கொழும்பில் இந்தப்பிரச்சனைக ளுக்கு முன்பு, “தமிழர் தலைமை” என்ற சிலர் சொத்துக்களும் வியாபாரங்களும், வெளிநாடுகளுக்கு குடிபெயரும் வசதிகளும் உடையவாராக இருந்தனர். இவர்களுக்கு யாழ்ப்பாணம் என்றால் என்னவென்று தெரியாது ஆனால், அவற்றின் “MP” ஆக இவர்கள்தான் இருந்தனர்.

இவர்களின் சொத்துகளுக்கு ஆபத்து என்றவுடன் “தமிழை” பிடித்து வே.பிரபாகரனை பிடித்து 30 ஆண்டுகளாக மிரட்டிப்பார்த் தனர், பருப்பு வேகாது என்றவுடன், இவர்களின் “திருகுதாளங்கள் ” சிங்களவர்களிடன் வேகாது என்றவுடன், கூடாரத்தையும், சொத்துக்களையும் தற்போது “தமிழநாட்டுக்கு ள்” மாற்றிக் கொண்டார்கள்.

இவர்கள் கொடுத்த கயிற்றை விழுங்கி அழிந்த மக்களில் சிலர் தமிழ்நாட்டில் சில சலசலப்புகளை ஏற்படுத்த “இவர்கள்” தற்போது “மகிந்த ராஜபக்ஷே குடும்பத்தையும் ” இந்திய அரசாங்கத்தையும் பிடித்து “தமிழ்நாட்டிலுள ்ள(வெளிநாட்டிலு ள்ள சொத்துக்களின் மையம்)” சொத்துக்களை பாதுகாத்துக் கொண்டுள்ளனர்!.

இதில் ஒருவர்தான் தற்போது “கனடாவில் வசிக்கும்” DBS ஜெயராஜ் and Rajasingam Jeyadevan.The behave as front organization of Indian intelegent(KASH MIRI) RAW !.
/The military has informed that they will be vacating the property I own in Navatkuli by end of this month. This change of stance was said to be a result of the government attempting to implement the recommendations of the LLRC./- Jayadevan.-- http://dbsjeyaraj.com/dbsj/archives/3809#more-3809

http://dbsjeyaraj.com/dbsj/archives/3781#more-3781
Quote
 
 
0 #28 hachu 2012-01-26 14:32
மானன்கெலட்;ட் மனிதர்கல்
Quote
 
 
0 #27 Saransasthi 2012-01-26 13:03
கருனானிதியை வசை பாடுவது மட்டும் தான் உன் நோக்கமா?
Quote
 
 
-3 #26 புதியவன் ராஜ் 2012-01-26 12:40
Reference my previous posting. A correction. DMK government was dismissed on 30th January 1991 (Mahatma Gandhi was also assassinated on 30th January 1948 and democracy was assassinated on 30th January 1991). Rajiv Gandhi was assassinated on 21st May 1991 (not 1990).
Quote
 
 
-4 #25 புதியவன் ராஜ் 2012-01-26 12:30
Vennai, Rajiv Gandhi was assassinated on 21st May 1990 and that time Tamil Nadu was ruled by President as the DMK government was dismissed in 2 years in January 1990 itself. You are talking about DMK. And for your kind information, Rajiv Gandhi came to Tamil Nadu and went back safely 8 times during the DMKu rule of 2 years. The fact that you are talking Rajiv Gandhi assassination and jumping at DMK it is solid proof that you have pathetic knowledge about the issues to talk as if you know everything under then Sun. If you don't know the basics, first improve it come to discuss. Has any charge been proved against Dr. Kalaignar? Still you talk so much against him and it is preposterous that you ask proof from others. You want others to believe that you dont' know who has constructed 40 bed room palatial house occupying dalit land?
Quote
 
 
0 #24 குட்டி பாப்பா 2012-01-25 21:31
சவுக்கு

சூபர்

பராட்டுக்க்ல்
Quote
 
 
+2 #23 ரப்பர் ஸ்டம்ப் 2012-01-24 19:40
மஞ்சதுண்டுக்கு மஞ்சள் நிற பொக்கே, இதுக்கு எவ்வளவு மெனக்கெட்டு யோசிருப்பானிவன் . அத கொஞ்சம் மக்களுக்காக செய்திருந்தால் நாடு நல்லாயிருக்கும் !
Quote
 
 
+4 #22 ரப்பர் ஸ்டம்ப் 2012-01-24 19:37
ஸ்ரீபதியின் தவறான வழக்கு, நேர்மையின்மையை வெளிப்படுத்தும் ஒரு பானை சோறு. அப்போதே இந்த தவறான வழக்கிற்காக டிஸ்மிஸ் செய்யபட்டிருந்த ால் ஊரையே கொள்ளையடிச்சிரு ப்பாரா? என்னதான் இவர் மீது நடவடிக்கை எடுத்தால் என்ன ஆகப்போகிறது, அதற்கு பதிலாக எல்லா சொத்துக்களயும் பறிமுதல் செய்து, உள்ளே தூக்கிபோடவேண்டு ம். அது ஒருபோதும் நடக்காது? அய்யகோ யாராவது இந்த நாட்டைக்காப்பாற ்ற வருவார்களா? - இங்கனம் நாதியற்ற நாய்கள்
Quote
 
 
+4 #21 KarthikPrabhakaran 2012-01-24 16:20
என்னமோ போங்க....இப்படியே போனா கடைசியில கருணாநிதி , ராசா, கனிமொழி , கல்மாடி எல்லாரும் நல்லவங்க ஆயிருவாங்க போலத் தெரியுது....
Quote
 
 
+11 #20 rahul 2012-01-24 10:57
சில பேர் இருக்கிறார்கள். தடித்த தோலுடையவர்கள். உடனே கருணாநிதி என்று கூறாதீர்கள். கருணாநிதிக்கு இருப்பது தோலே அல்ல.. இரும்புத் தகடு. துப்பாக்கிக் குண்டு கூட துளைக்காது.கிட்டத்தட்ட ஸ்ரீபதியும் அதே வகையில்தான் வருவார் போலிருக்கிறது.
Quote
 
 
+8 #19 ஊர்க்குருவி. 2012-01-24 09:07
//சில பேர் இருக்கிறார்கள். தடித்த தோலுடையவர்கள். உடனே கருணாநிதி என்று கூறாதீர்கள். கருணாநிதிக்கு இருப்பது தோலே அல்ல.// அருமை அருமை! என்னே ஒரு உவமை.
Quote
 
 
+9 #18 vennai 2012-01-24 08:29
Gopalapuram also occupied in corproation land. who were died govt servent in DMK ruling party including Rajiv assanation.?? can you show one proff that thats Dalith Land??? i asked so many times come with solid proff against your allegations but you are so much speed "PURAMUDHU KATTUVADHIL" when i ask proff. manidhan enraal oru varathaikku kattupaduvan?? verru sapiidupavan???? Quoting புதியவன் ராஜ்:
சவுக்கு, இந்த அதிகாரிகள் எல்லாம் சிறு மீன்கள், தலித் இடத்தை ஆக்கிரமித்து, 40 படுக்கை அறை கொண்ட அரண்மனை போன்ற மாளிகை கட்டி வாழ்பவர் தான் திமிங்கலம். ஆனால் அவருக்கு நீங்கள் வெண்சாமரம் வீசுவீர்கள். சில வாசகர்களும் சம்பந்தம் இல்லாமல் கலைஞர் எதிர்ப்பிலேயே காலத்தை ஓட்டுவார்கள். தமிழ் நாட்டின் டி.ஜி.பி. ஆக இருந்து கொண்டு வளர்ப்பு மகன் கல்யாணத்தில் சாம்பார் வாளி தூக்கிய கேவலத்தை விட வேறு உண்டா? அவருக்கும் ஓய்வு பெற்ற பின் பதவி கிடைத்ததே. ஹரி பாஸ்கர் என்ற ஊழல் குற்றச்சாட்டிற் கு உள்ளான அதிகாரிக்கு ஓய்வு பெற்றபின்பும் பணி நீட்டிப்பு கொடுத்தது யார்?
Quote
 
 
+8 #17 SUTHIRAN 2012-01-24 06:51
ஸ்ரீ பதிக்குத் தான் வெட்கம் மானம் ரோசம் என்பது துளிக் கூடக் கிடையாதே ! உயர் நீதி மன்றம் மட்டும் இவர் தன் வயது மாற்றம் பற்றிக் கூறிய அண்டப் புளுகு ஆகாயப் புளுகை ஏற்றுக் கொண்டிருந்தால் இன்னும் ஒரு வருடம் ஐ ஏ எஸ் பதவியில் ஒட்டிக் கொண்டிருந்திருப ்பார் ! நெற்குன்றம் அலிபாபா குகை ஃப்ளாட்டும் சட்டத்தின் கண் முன்னால் சரியாகத்தான் ஒதுக்கீடும் செய்யப்பட்டதாக காணப்படும் ! இவருக்கு அலெக்ஸாந்தர் காலத்தில் மனை ஒதுக்கீடு செய்யப்பட்டதை மறைக்க முயன்றிருப்பார் !
இவருக்கு எல்லாம் மன சாட்சி என்பதும் கிடையாது ! இவர் வேறு என்னென்ன சொத்து விவரம் பற்றி பொய்யறிக்கைகள் கொடுத்துள்ளார் என்பதை சவுக்கு கண்டு பிடித்து வெளியிட்டால் இவரது தோல் முழுவதுமாக உரிக்கப் பட்டு முழு ரூபமும் வெளிப்படும்! செய்வீர்களா சவுக்கு அவர்களே! இது நீங்கள் தமிழ் மக்களுக்கு செய்யும் மிகப் பெரிய சேவையாக எண்ணப்பட்டு போற்றப் படுவீர்கள்!
Quote
 
 
+8 #16 Ravi 2012-01-24 00:57
மக்களை காக்க வாழவைக்க சட்டம் இயற்ற வேண்டிய அரசியல்வாதிகள் கூட்டாக சேர்ந்து அல்லது தனித் தனியாக கொள்ளையடிக்கிறா ர்கள். அவர்களைப் கட்டுப்படுத்த அவர்களையே சட்டம் இயற்ற (லோக்பால்)கெஞ்ச ிக் கொண்டிருக்கிறோம ். சட்டத்தை செயல்படுத்த வேண்டிய அதிகாரிகள் கூட்டாக சேர்ந்து கொள்ளையடிக்கிறா ர்கள். இவர்களை கட்டுப்படுத்தும ் சட்டத்தை இவர்களே செயல்படுத்த கெஞ்சிக் கொண்டிருக்கிறோம ். இந்த இரண்டு கும்பலும் இதை ஒருக்காலும் செய்யாது. இவை இரண்டயும் கவனிக்க வேண்டிய நீதித்துறை அழுக தொடங்கி வெகு நாளாகிவிட்டது. இப்படி ஜனநாயகத்தின் ஒவ்வொரு அங்கமும் மக்களை வஞ்சித்தால் வேறு வழியின்றி மக்கள் வன்முறையில்தான் நம்பிக்கை வைப்பார்கள். உதாரணத்திற்கு இந்த மருத்துவர்கள் செய்த அட்டகாசத்தால் நாட்டின் ஒரு மூலையில் ஒருவர் வன்முறையில் நம்பிக்கை வைத்ததால் நிகழ்ந்த விபரீதம் ஒரு மருத்துவரின் கொலை. மருத்துவர்கள் தமக்கு தாமே சட்டம் இயற்றிக் கொண்டு தம்மை தாமே காப்பாற்றிக் கொண்டு தவறு செயத மருத்துவர்களை மூடி மறைத்து நெடுநாள் மக்களை வஞ்சித்ததால் வந்த வினை இது. இதே போன்று மற்ற துறை மற்றும் அரசு அதிகாரிகள் மக்களை தொடர்ந்து வஞ்சிக்கும் போது இவர்கள் முடிவு கோரமாக முடியும்.
அப்போது எந்த பணமும் வந்து இவர்களை காப்பாற்றது.
Quote
 
 
0 #15 புதியவன் ராஜ் 2012-01-24 00:25
சவுக்கு, இந்த அதிகாரிகள் எல்லாம் சிறு மீன்கள், தலித் இடத்தை ஆக்கிரமித்து, 40 படுக்கை அறை கொண்ட அரண்மனை போன்ற மாளிகை கட்டி வாழ்பவர் தான் திமிங்கலம். ஆனால் அவருக்கு நீங்கள் வெண்சாமரம் வீசுவீர்கள். சில வாசகர்களும் சம்பந்தம் இல்லாமல் கலைஞர் எதிர்ப்பிலேயே காலத்தை ஓட்டுவார்கள். தமிழ் நாட்டின் டி.ஜி.பி. ஆக இருந்து கொண்டு வளர்ப்பு மகன் கல்யாணத்தில் சாம்பார் வாளி தூக்கிய கேவலத்தை விட வேறு உண்டா? அவருக்கும் ஓய்வு பெற்ற பின் பதவி கிடைத்ததே. ஹரி பாஸ்கர் என்ற ஊழல் குற்றச்சாட்டிற் கு உள்ளான அதிகாரிக்கு ஓய்வு பெற்றபின்பும் பணி நீட்டிப்பு கொடுத்தது யார்?
Quote
 
 
+6 #14 சுரா 2012-01-24 00:03
இந்த நாதாரிகள் சாகும்போது தண்ணி குடுக்க கூட பக்கத்தில் எந்த சொந்தமும் இருக்காது..
Quote
 
 
+5 #13 T.I.CHELIAN 2012-01-23 23:48
THESE INFORMATION SHOWS THAT HE WAS "CHEAP" SECRETARY AND NOW HE IS THE "CHEAP" INFORMATION COMMISSIONER OF GOVT. OF TAMILNADU.HIS NEXT AIM MAY BE TO PROVE THE "CHEAPEST" IAS OFFICER EVER.LET US WISH HIM TO ACHIEVE IT.
Quote
 
 
+5 #12 Raja N 2012-01-23 22:26
இந்த மாதிரி ஆட்கள பாத்தாவே வாந்தி வாந்தியா வருது....இவர்களை சாக்கடை புழு என்று சொன்னால் அந்த புழுவே வருந்தும்

hats off to you savukku for bringing this நியூஸ் டு light
Quote
 
 
+2 #11 gjjp 2012-01-23 21:26
ner(ser)uppadi sir
Quote
 
 
0 #10 jaya 2012-01-23 21:24
அமம் நல்லவர் தன்.
Quote
 
 
+10 #9 Padman 2012-01-23 20:54
இதுக்கு பேர்தான் வாழை பாசத்தில் ஊசி ஏற்றுவதோ?

அதுசரி...இதை படித்தபிறகாவது இவருக்கு சொரணை வருகிறதா இல்லை எருமை மாட்டின்மீது அடிக்கும் சாரல்போல....

ஒன்று மட்டும் நிச்சயம் சவுக்கு... தவறு செய்த அதிகாரிகள் திருந்துவார்களோ இல்லையோ... இனி தவறு செய்தால் என்ன மாதிரியான விளைவுகள் வருமென்பதை உயர் பொறுப்பில் இருப்பவர்கள் அறிவார்கள்? அந்த வகையில் சவுக்கின் சேவை இந்த சமுதாயத்திற்கு மிகவும் தேவை.

அரசுப்பணியில் இருப்பவர்கள் அனைவரும் சவுக்கை படிக்க வேண்டும். அதற்கு ஏதாவது செய்யலாமா சவுக்கு?
Quote
 
 
+6 #8 fraud & antisocial 2012-01-23 19:44
let us fix day (without annoucement to govt)let us protests suddenly infront of office of Tamilnadu information commission, let ask Sripathi to resign the post chief commissione and ask Governor to take action against Sripathi.
Quote
 
 
+10 #7 Suresh Raja 2012-01-23 19:23
கொள்ளைக்காரனோடு ஒப்பிடும் போது திருடன் கொஞ்சம் நல்லவன் தான்... அதுக்காக அடிச்ச காசு இல்லைன்னு ஆகிடுமா? :zzz :zzz :zzz
Quote
 
 
+9 #6 ஷாலி 2012-01-23 18:49
கழுதை விட்டையில் எது நல்லது,முன் விட்டயா? பின் விட்டயா? என்று கேட்பதுபோல் உளளது.இரண்டும் மெத்தப்படித்த மேதாவிகள்.

வள்ளுவன் சொன்னதுபோல் “நல்லவர் போல் கள்வர்”
வேடம்போட்டு சுரண்டியவர்கள்.பேசாமல் கள்ளமுத்து என்றே இனி கூப்பிடலாம்.

ஸ்ரீ பதிக்கு பதவி ஆசை அவ்வளவு சீக்கிரம் விடாது.மனிதனுக்கு வாயில் மண் விழுகும்வரை ஆசை அடங்காது..சிவலோக பதவி கிடைக்கும்வரை.......
Quote
 
 
+16 #5 தமிழ்ப்பிரியன் 2012-01-23 18:03
"கருணாநிதிக்கு இருப்பது தோலே அல்ல.. இரும்புத் தகடு. துப்பாக்கிக் குண்டு கூட துளைக்காது"

இப்படி எத்தனை பேரு அந்த மனுஷனை செருப்பால் அடித்திருப்பார் கள்!!
திருந்த கூடிய ஜென்மமா அது!!
Quote
 
 
+3 #4 Eleventh Sense 2012-01-23 17:10
Every Govt. officers know and are acquainted with the art of bootlicking. somehow, they would manage to jump over and above all litigations, even if there was strong evidence against them. Sripathy outwitted all culprits, by pulling allocation of costless allocation of houses.
Quote
 
 
+7 #3 Narayan 2012-01-23 17:05
Dear Savukku,

MK allotted so many patta's to reporters as well. Can you write about that??
Quote
 
 
+4 #2 Pattarmadami 2012-01-23 17:01
This gentle man is holding three doctorates degrees. Did he obtain these by virtue of his ability, merit etc. or get them exploiting his official positions in various capacities? God save this nation!
Quote
 
 
+5 #1 Pattarmadami 2012-01-23 16:58
This gentleman is holding three doctorate degrees. Did he really obtain these doctorates by virtue of his ability, merit etc. or get them explointing his official positions in various capacities? God save this nation!
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 174 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday8805
mod_vvisit_counterYesterday13577
mod_vvisit_counterThis week66382
mod_vvisit_counterLast week95167
mod_vvisit_counterThis month288642
mod_vvisit_counterLast month382199
mod_vvisit_counterAll days13205009