முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
ஆடு நனைகிறதே என்று….. அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 22
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
செவ்வாய்க்கிழமை, 14 பிப்ரவரி 2012 08:12

மத்திய அரசின் சட்டத்துறை அமைச்சராக இருக்கும் சல்மான் குர்ஷீத் சனியன்று பேசிய பேச்சு விரக்தியின் வெளிப்பாடு மட்டுமல்ல, விஷமத்தனமானது. 

Salman_Khurshid_portrait

உத்தரப்பிரதேச மாநில தேர்தலை பிரதான கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பிஜேபி இரண்டுமே வாழ்வா சாவா என்ற நோக்கிலேயே அணுகி வருகின்றன. உத்தரப்பிரதேச தேர்தல் முடிவுகள் மத்தியில் இருக்கும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் எதிர்காலத்தை முடிவு செய்யும்.   காங்கிரஸ் கட்சி ஒரு வேளை இத்தேர்தலில் தோல்வியைத் தழுவினால், தற்போது ஆதரவு கொடுத்துக் கொண்டிருக்கும் கூட்டணிக் கட்சிகள் காலை வாருவதற்காக சாத்தியக்கூறுகள் ஏராளமாக இருக்கின்றன. மற்ற கட்சிகள் காலை வாரும் அந்த நேரத்தில், திமுக காங்கிரஸ் கட்சியின் சங்கை அறுப்பதற்கு தயாராக காத்துக் கொண்டிருக்கிறது.  இந்த விபரங்கள் மற்ற அனைவரை விடவும், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு நன்றாகவே தெரியும்.

தன் மகனை 2014ல் பிரதமராக்க வேண்டும் என்று கனவு கண்டு கொண்டிருக்கும் சோனியா ஆட்சி கவிழக் கூடாது என்பதில் மிக மிக கவனமான இருக்கிறார்.   இது தவிரவும், தன் மகன், மகள், மருமகன் ஆகியோரின் செல்வாக்கை நிரூபிக்கும் தேர்தலாகவும் உத்தரப்பிரதேசத் தேர்தல் சோனியாவால் பார்க்கப் படுகிறது.

இந்தியாவை மொத்தமாக குத்தகைக்கு எடுத்திருக்கும் ராஜீவ் காந்தி குடும்பத்தில் தற்போது அரசியலில் நுழைந்திருக்கும் பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேராவும், தன் பங்குக்கு தனது அரசியல் ஆர்வத்தைப் பற்றி வெளிப்படையாக பேசியிருக்கிறார்.  பொதுமக்கள் விரும்பினால் அவர் அரசியலுக்கு வருவாராம்.  ராபர்ட் வதேரா அரசியலுக்கு வருவதை விரும்பும் பொதுமக்கள் யாராவது சவுக்கு வாசகர்களாக இருந்தால், வதேராவுக்கு கடிதம் எழுதி, உங்கள் விருப்பத்தைத் தெரிவியுங்கள்.   ராகுல் மற்றும் பிரியங்கா ஆகிய இருவரும்,  கடந்த காலத்தைப் போலல்லாமல், மிக மிகத் தீவிரமாக இத்தேர்தலில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.   நான்குமுனைப் போட்டியாக இருப்பதால், இந்தப் போட்டியில் எப்படியாவது வென்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் கடும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.   முலாயம் ஒரு பக்கமும், மாயாவதி மற்றும் பாரதீய ஜனதா கட்சி ஒரு புறமுமாக காங்கிரஸ் கட்சிக்கு கடும் நெருக்கடியைத் தந்து கொண்டு உள்ளது.

தலித்துகள் மாயாவதியை விட்டு மாறி வாக்களிக்கப் போவதில்லை. யாதவ்கள் முலாயம் சிங் யாதவ் பக்கமே நிற்பார்கள்.    மற்ற உயர்சாதி இந்துக்கள் நிச்சயம் பாரதீய ஜனதாவுக்கே வாக்களிப்பார்கள்.  இச்சூழலில், உத்தரப்பிரதேசத்தில் கணிசமான எண்ணிக்கையில் இருக்கும் முஸ்லீம்களின் வாக்ககளை எப்படியாது பெற்று விட வேண்டும் என்று பாரதீய ஜனதா கட்சியைத் தவிர்த்து அனைத்து கட்சிகளுமே பகீரதப் பிரயத்தனம் செய்து வருகின்றன. முஸ்லீம்களின் வாக்குகளைப் பெறும் கட்சிக்கு உத்தரப்பிரதேசத் தேர்தலில், சாதகத்தன்மை அதிகமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.  இதன் அடிப்படையிலேயே முஸ்லீம்களைக் கவரும் விதமாக கட்சிகள் வாக்குறுதிகளை வாரி வழங்கிக் கொண்டுள்ளன.

இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தில் தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்து வந்த காங்கிரஸ் கட்சி எப்படியாவது இத்தேர்தலில் வென்று, இந்தியா ராஜீவ் காந்தி குடும்பத்தின் சொத்து என்பதை நிலைநாட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இது தவிரவும், காங்கிரஸ் கட்சி பலவீனமான நிலையில் இருக்கும் தனது செல்வாக்கைத் தூக்கி நிறுத்துவதற்கு இத்தேர்தல் பயன்படும் என்று கருதுகிறது.

இப்படிப்பட்ட பின்புலத்தில்தான், உத்தரப்பிரதேசத் தேர்தல் பிரச்சாரம் உச்சகட்டத்தை அடைந்துள்ளது.  மாயாவதி தனது கட்சியின் ஒரே ஸ்டார் பிரச்சாரகராக ஊர் ஊராகச் சென்று பிரச்சாரம் செய்து வருகிறார். முலாயம் சிங்கும் அவர் மகனும் தங்களது கட்சிக்காக கடும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.   பாரதீய ஜனதா கட்சிக்கு பல்வேறு தலைவர்கள், பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

காங்கிரஸ் கட்சி சார்பில், ராகுல், பிரியங்கா மற்றும் சோனியா பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்தால், அது ராகுல் மற்றும் பிரியங்காவுக்கு கிடைத்த தோல்வியாகவே கருதப்படும் என்பதால், காங்கிரஸ் கட்சித் தலைவர்கள், அளவுக்கு அதிகமான விசுவாசத்தோடு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்தப் பின்னணியில்தான் கடந்த 8 பிப்ரவரி அன்று, உத்தரப்பிரதேசத்தில் நடந்த ஒரு தேர்தல் பேரணியில் காங்கிரஸ் கட்சித் தலைவரும், மத்திய சட்டம் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்ருமான சல்மான் குர்ஷீத் பேசியுள்ளார்.  அன்றைய பேரணியில் பேசிய குர்ஷீத், பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 27 சதவிகித இட ஒதுக்கீட்டில் 9 சதவிகிதம் இசுலாமியர்களுக்காக வழங்கப்படும் என்று அறிவித்தார்.   இந்த அறிவிப்புக்கு, அனைத்து எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தன.  இந்த வாக்குறுதி ஒரு அரசியல்கட்சித் தலைவர் வழங்கும் வாக்குறுதியாக எடுத்துக் கொள்ள முடியாது.  மத்திய சட்டம் மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சராக இருக்கும் ஒருவர் சொல்லும் இந்த அறிவிப்பு, நிச்சயமாக தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயலாகும்.  எதிர்க்கட்சிகளின் புகாரைத் தொடர்ந்து, 9 பிப்ரவரி அன்று கூடிய தேர்தல் ஆணையர்கள் குரேஷி, வி.எஸ்.சம்பத் மற்றும் எச்.எஸ்.பிரம்மா ஆகியோர் சல்மான் குர்ஷீத்தை கண்டித்து ஆணை வெளியிட்டனர்.  அவர்கள் ஆணையில், ‘தேர்தல் ஆணையம் இதன் மூலம் சர்மான் குர்ஷீத்தை கண்டிக்கிறது.  அவர் மேலும் இது போன்ற நடத்தை விதி மீறல்களில் ஈடுபடமாட்டார் என்ற நம்புகிறது’ என்று அந்த ஆணையில் தெரிவிக்கப் பட்டது.

மறுநாள் (9 பிப்ரவரி) கடக்பூரில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசிய சல்மான் குர்ஷீத், “தேர்தல் ஆணையம் என்னைக் கண்டித்துள்ளது.   ஆனால், தேர்தல் ஆணையம் என்னைத் தூக்கில் போடட்டும் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும்.  ஆனால் இசுலாமியர்களுக்கு வர வேண்டிய நியாயமான சலுகைகளை நான் வழங்காமல் இருக்க மாட்டேன்.”

சல்மான் குர்ஷீத்தின் இந்த அறிவிப்பு மிகப் பெரிய சர்ச்சையையும், சட்டச் சிக்கலையும் உருவாக்கியிருக்கிறது.     இந்தியாவில் நீதித்துறை போல, ஓரளவுக்கு தன்னிச்சையாக, சுதந்திரத்தோடு செயல்படும் அமைப்புகளில், தேர்தல் ஆணையமும் ஒன்று.   தேர்தல் ஆணையத்தின் அதிகாரம் என்பது நிலைநாட்டப் பட்டால்தான் நியாயமான முறையில் தேர்தல் நடத்த முடியும்.   தேர்தல் ஆணையத்துக்கு வரைமுறையற்ற அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது என்று உச்சநீதிமன்றத்தில் தொடுத்த ஒரு வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், “பாரபட்சமற்ற முறையில் தேர்தல் நடத்த வேண்டிய தேர்தல் ஆணையம், எங்களுக்கு அதிகாரம் இல்லை என்பதற்காக வானத்தை நோக்கி கை கூப்பி வேண்டிக்கொண்டிருக்க முடியாது.  நியாயமான, சுதந்திரமான தேர்தலை நடத்த என்னென்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ, அத்தனை நடவடிக்கைகளையும் தேர்தல் ஆணையம் எடுக்கலாம்” என்று தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

தேர்தல் ஆணையம் மட்டும் சுதந்திரமாக, நியாயமான முறையில் செயல்படவில்லையென்றால், 2011 சட்டமன்றத் தேர்தல் எப்படி நடந்திருக்கும் என்பதை சற்றே சிந்தித்துப் பாருங்கள்.

தேர்தல் ஆணையத்தின் சுதந்திரமும், அதிகாரமும் நிலைநாட்டப்பட வேண்டியது, ஜனநாயகம் தழைத்தோங்குவதற்கு அடிப்படையான ஒன்று.   அந்த அமைப்பின் அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்குவது இறுமாப்பான காரியம் மட்டுமல்ல, விஷமத்தனமானதும் கூட. அதுவும் சட்டத்துறை அமைச்சரே, இப்படிப்பட்ட காரியத்தைச் செய்திருப்பது வேதனையிலும் வேதனை.

இவ்வாறு சல்மான் குர்ஷீத் பேசிய பிறகு, அவசரக் கூட்டத்தைக் கூட்டிய தேர்தல் ஆணையம், இந்திய ஜனநாயக வரலாற்றில் இல்லாத வகையில், குடியரசுத் தலைவருக்கு கடிதம் அனுப்பியது.  அக்கடிதத்தில்,  “தொலைக்காட்சிகளில் பார்த்த சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷீத்தின் பேச்சு, தேர்தல் ஆணையத்தின் அறிவுரைகளை சட்ட அமைச்சர் துச்சமாக மதித்துள்ளதோடல்லாமல், உதாசீனப்படுத்தும் வகையிலும் அலட்சியப்படுத்தும் வகையிலும் பேசியுள்ளார். இவரின் பேச்சு, இதர வேட்பாளர்கள் நியாயமாக போட்டி போடுவதை தடைசெய்யும் வகையில் உள்ளது.   தேர்தல் நடத்தை விதிகளை மீறுவது தொடர்பான தேர்தல் ஆணையத்தின் உத்தரவு பற்றிய சட்ட அமைச்சரின் இந்தப் பேச்சு, ஒரு அசாதாரணமான சூழலை உருவாக்கியுள்ளது.  அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் உச்சநீதிமன்றமே ஒப்புக் கொண்டபடி, தேர்தல் நடத்தை விதிகளை மீறியதற்காக தேர்தல் ஆணையம் எடுத்த நடவடிக்கைகளுக்காக வருத்தப்படவேண்டிய ஒருவர் அதை எதிர்த்துப் பேசுவதல்லாமல், உதாசீனப்படுத்தவும் செய்திருக்கிறார். இந்த நடவடிக்கை வரலாறு காணாதது.  அதனால் தேர்தல் ஆணையத்தின் அவசரக்கூட்டம் இன்று மதியம் கூட்டப்பட்டு, சல்மான் குர்ஷித்தின் நடவடிக்கைகள் நியாயமான தேர்தல் நடத்துவதற்கு குந்தகம் விளைவிக்கும் என்பது குறித்து விவாதிக்கப் பட்டது.

21CHEIF_ELECTION_COMMISSION_S1.Y_QUARISHI_KA_PRESS_CONFRENCE

தேர்தல் ஆணையத்தின் சுதந்திரத்தையும், அதிகாரத்தையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் உள்ள சட்ட அமைச்சரே இப்படி தேர்தல் ஆணையத்தை சிறுமைப்படுத்துவது போல நடந்து கொண்டிருப்பது குறித்து ஆணையம் கவலை கொள்கிறது. நியாயமான முறையில் தேர்தல் நடத்துவது ஜனநாயகத்தின் அனைத்து உறுப்புகளுக்கும் பொருந்தும் என்பதை குடியரசுத் தலைவரின் கவனத்துக்கு கொண்டு வர தேர்தல் ஆணையம்  முடிவு செய்திருக்கிறது.  அரசியல் அமைப்புச் சட்டம் உருவாக்கிய அமைப்புகளுக்குள்ளே இருக்கும் நுண்ணிய சமன்பாடுகள் அமைச்சரின் முறையற்ற, சட்டவிரோதமான செயல்பாடுகளால் பாதிப்புக்குள்ளாக்கப் பட்டுள்ளன.  உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாரபட்சமற்ற முறையில் தேர்தலை நடத்துவதற்கும், தேர்தல் ஆணையம் தன் பணிகளை அரசியல் அமைப்புச் சட்டப்படி செய்வதற்கும், தேர்தல் ஆணையம் உங்களின் தீர்மானமான தலையீட்டை இந்தச் சூழலில் தவிர்க்க இயலாமல் கோருகிறது.”  என்று எழுதியுள்ளது.

PresidentSK_11022012_Page_1

PresidentSK_11022012_Page_2

இந்தக் கடிதத்தை குடியரசுத் தலைவர் மன்மோகன் சிங்குக்கு அனுப்பி வைத்துள்ளார்.   ராசா ஊழல் செய்த போது அமைதியாக வேடிக்கை பார்த்தது போல, மன்மோகன் சிங் இதையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்.  இவர் இப்படி அமைதியாக வேடிக்கைப் பார்ப்பதும், மேலிடத்தின் ஒப்புதலோடுதான் சல்மான் குர்ஷீத் இப்படிப் பேசியுள்ளார் என்ற முடிவுக்கு வர வேண்டியுள்ளது.

சச்சார் கமிட்டியில் தெரிவித்திருந்தபடி, இசுலாமியர்கள் மோசமான நிலையில் 60 ஆண்டுகளுக்கான இருந்ததற்கு 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நாட்டை ஆண்ட காங்கிரஸ் கட்சியே காரணம்.   பாபர் மசூதியில் இரவோடு இரவாக சிலை வைக்கப் பட்டது நேரு பிரதமராக இருந்த போது.   அந்த இடம் வழிபாட்டுக்கு திறந்து விடப்பட்டது ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த போது.   பாபர் மசூதி இடிக்கப் பட்டது நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது.  இசுலாமியர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்க இப்போது உத்தரப்பிரதேச தேர்தல் சமயத்தில் முனைப்பாக விதிகளை மீறி அறிவிப்புகளை வெளியிடும் காங்கிரஸ் இத்தனை ஆண்டுகளாக இசுலாமியர்களுக்காக எதுவுமே செய்யவில்லை என்பதுதான் உண்மை.  தேர்தல் நேரத்தில் எப்படியாவது இசுலாமியர்களின் வாக்குகளைப் பெற்று விட வேண்டும் என்ற உத்வேகத்தில் இப்படி காங்கிரஸ் கட்சிப் பேசுவது, ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுவது போலத்தான் உள்ளது.

 

Comments  

 
0 #30 Mr.Right 2012-03-07 10:16
dear savku nice article...but small mistake kudiarasu thalivar not monmonhan sing...pradhipa pattil...pls some times give articles about bgp:லொல்:
Quote
 
 
0 #29 ruddy 2012-02-28 14:11
[ஃஉஒடெ நமெ="ஹ்ட்ட்ப்://கோதடிவெட்ட்"]நான் நினைக்கிறேன் இந்திய வரலாற்றிலேயே 2011 தமிழ்நாடு சட்டசபை தேர்தலில், தேர்தல் ஆணையம் நடந்துகொண்டதுபோ ல் முன்னை எப்போதும் நடந்து கொண்டிருக்கவில் லை என்றே அறியப்படுகிறது. தமிழ்நாடு தேர்தலின்போது ஆணையம் நடந்த முறை நியாயமானது என்றே பரவலான அபிப்பிராயம் நாடுமுழுவதும் பிரதிபலித்ததாகத ்தான் நம்பவும்படுகிறத ு. எவரும் தேர்தல் ஆணையத்தை குறைகூறவுமில்லை . இந்திய தேர்தல் ஆணையம் ஜனநாயகத்தை காப்பாற்றியதாகவ ே உலக அளவிலும் பாராட்டப்பட்டது . அதே விதிமுறைகளை ஏன் இந்த கறுப்பாடு சல்மான் குர்ஷீத் மீது பிரயோகிக்கக்கூட ாது. மவுனம் காக்கும் பேசாமடந்தை மண்மோகனுக்கும் கண்டிப்பான கட்டளையை ஏன் இடமுடியாது. பொறுப்பான சட்டத்துறையில் உள்ள சல்மான் குர்ஷீத் என்ற (தனி)மனிதரை தேர்தல் முடியும்வரையேனு ம் பதவியிலிருந்து தள்ளி வைக்கக்கூடாது? அப்படிச்செய்தால ் இன்னுமொரு கறுப்பாடு உருவாகாமல் தடுத்த பெரிய பணி தேர்தல் ஆணையத்தை சேரும். ஜனநாயகம் உயிர்பெற வழியும் பிறக்கும்.[/ஃஉஒடெ]


2011 சட்டசபைத் தேர்தலில் தேர்தல் ஆணையம் அதிமுக வின் கூட்டணிக் கட்சியாக செயல்படுகிறது என்று தானே அனைத்துத் தரப்பிலிருந்தும ் செய்திகள் வந்தன.
Quote
 
 
-2 #28 சிவா சங்கரன் 2012-02-21 00:44
[ஃஉஒடெ நமெ="சொலன்"]\\உயர்சாதி இந்துக்கள் நிச்சயம் பாரதீய ஜனதாவுக்கே வாக்களிப்பார்கள ்\\


முட்டாள் தனமான வாதம். அப்படி என்றால் பாஜாக ஆட்சியில் இருக்கும் பொழுது எல்லாம் யார் ஓட்டு போட்டு ஜெயித்தார்கள்

எல்லாவற்றிலும் சாதியை பார்ப்பதில் கருணாநிதியை மிஞ்சிவிட்டீர்க ள்[/ஃஉஒடெ]

இது எழுத்தாளரின் பார்வை அல்ல. நம் நாட்டு மக்களே அப்படிதான் பிரிந்து இருக்கிறார்கள்( பிரிதாளப்படுகிற ார்கள்). நான் பார்த்த வரையில் பிராமணர்களும் மற்ற உயர்ச்சாதியினர் களும் ஹிந்துத்துவ மனநிலையில் தான் உள்ளார்கள். ஹிந்துக்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயம் கிடைக்கவில்லை என்ற எண்ணம் பரவலாக அவர்களிடம் உள்ளது(அல்லது விதிக்கப்பட்டுள ்ளது ). அதை பா.ஜா. காவினர் அரசியல் ஆக்கிக் கொள்கிறார்கள். இதையே தான் மற்ற கட்சிகள் தலித்துகளிடமும் சிருபான்மையினரி டமும் செய்கிறார்கள்
Quote
 
 
+6 #27 solan 2012-02-19 00:45
\\ 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நாட்டை ஆண்ட காங்கிரஸ் கட்சியே காரணம். பாபர் மசூதியில் இரவோடு இரவாக சிலை வைக்கப் பட்டது நேரு பிரதமராக இருந்த போது. அந்த இடம் வழிபாட்டுக்கு திறந்து விடப்பட்டது ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த போது. பாபர் மசூதி இடிக்கப் பட்டது நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது\\

அப்படியே காஷ்மீரில் இலட்சகணக்கான மக்களை கொன்றது, பல இலட்சம் ஹிந்துகள் கொல்லப்படும் பொழுது வேடிக்கைபார்த்த து.... மத் ரீதியான சட்ட திருத்தம் கொண்டு வந்தது... நூற்றுகணக்கான கோயில்களை உடைதத்து....

முஸ்லீம்களுக்கு மெக்கா எப்படியோ... ஹிந்துகளூக்கு காசி, மதுரா மற்றும் அயோத்தியில் ஹிந்துகளுக்கு கொடுக்காமல்... அதில் அரசியல் செய்வது என அனைத்தும் எழுது இருந்தால் நன்றாக இருந்து இருக்கு
Quote
 
 
+3 #26 solan 2012-02-19 00:42
\\உயர்சாதி இந்துக்கள் நிச்சயம் பாரதீய ஜனதாவுக்கே வாக்களிப்பார்கள ்\\


முட்டாள் தனமான வாதம். அப்படி என்றால் பாஜாக ஆட்சியில் இருக்கும் பொழுது எல்லாம் யார் ஓட்டு போட்டு ஜெயித்தார்கள்

எல்லாவற்றிலும் சாதியை பார்ப்பதில் கருணாநிதியை மிஞ்சிவிட்டீர்க ள்
Quote
 
 
-3 #25 sahul 2012-02-16 18:42
இதே பாரதீய ஜனதா தனது தேர்தல் அறிக்கையில், உத்தரப் பிரதேசத்தில் ஆட்சிக்கு வந்தால் ராமன் கோவில் கட்டு வோம் என்று அறிவித்து இருக்கிறார்களே. அதைப் பற்றி தேர்தல் ஆணையம் ஏன் கண்டு கொள்ளவில்லை?

மதச்சார்பற்ற தன்மையுடைய இந்திய அரசமைப்பு சட்டத்துக்கு விரோதமாக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள ார்களே. இது மாபெரும் குற்றமில்லையா?
Quote
 
 
0 #24 sahul 2012-02-16 18:41
காங்கிரஸ் தன் தேர்தல் அறிக்கையில் இஸ்லாமியர்களுக் கு இடஒதுக்கீடு அளிக் கப்படும் என்று அறிவித்துள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரத்தில் அதனை விளக்கிப் பேசியதில் என்ன குற்றம் என்று தெரிய வில்லை.
இதே பாரதீய ஜனதா தனது தேர்தல் அறிக்கையில், உத்தரப் பிரதேசத்தில் ஆட்சிக்கு வந்தால் ராமன் கோவில் கட்டு வோம் என்று அறிவித்து இருக்கிறார்களே. அதைப் பற்றி தேர்தல் ஆணையம் ஏன் கண்டு கொள்ளவில்லை?

மதச்சார்பற்ற தன்மையுடைய இந்திய அரசமைப்பு சட்டத்துக்கு விரோதமாக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள ார்களே. இது மாபெரும் குற்றமில்லையா?
Quote
 
 
+3 #23 ரப்பர் ஸ்டாம்ப் 2012-02-16 12:24
முஸ்லிம்களுக்கா க என்னை தூக்கிலிட்டால்க ூட ஏற்றுக்கொள்வேன் , ஆனால் இந்த நிலைமியிலிருந்த ு பின்வாங்கமாட்டே ன் என்று சொன்ன சல்மான் குர்ஷீத் ஏன் அந்தர் பல்டி அடித்தார்? அவருக்கு உய்ரைவிட மேலான எதற்கோ ஆபத்து வந்த்தாலோ? உண்மையிலேயே இவர்களுக்கு இந்த கருணை இருந்திருந்தால் 65 வருடங்களாக என்ன செய்தார்கள்? பிரித்தாலும் கேவலமான காங்கிரஸ் கட்சி, இந்த தேர்தலோடு அதன் அஸ்தமனம் தொடங்கட்டும். பிஜெபி கூட ஒரு வெற்றி ஃபார்முலாவான மோடியின் டெவெலப்மென்ட் தியரியை வைத்துக்கொண்டு கேவலமாக பிரசாரம் செய்வது மானக்கேடு!
Quote
 
 
+2 #22 raajsank987987 2012-02-16 06:31
congress has been turned into political mocery with all pawns ( digvijay,ambiga soni, salman kurshid, chidambaram etc..). They doesn't want any peace in the country, they follow the Divide and rule politics in all states. What is the achievement done by Sonia, Rahul and Priyanka to India? Only done the stunt politics by rahul. 50+ age people must have supported congress in the past, now the new generation people knows who is doing good for the country. Hope they should give proper response in UP election.
Quote
 
 
+4 #21 Eesan 2012-02-15 22:47
People from minorty community can say anything is this country. The majority community should keep quite. That is secularism as defined by Psedo Secularists. Recent Incident in Tamilnadu - DAM 999 is banned in Tamilnadu. The director was chased by some groups when he came to Chennai. No director or actor gave any statement against the ban. Great music director AR Rahman wished DAM 999 to win an oscar. Did any Tamil group or any director in TN raise any objection to that? No. Why? Had Rajinikanth or Kamalhassan said this, every Tamil Group and Savukku would have made a big issue. This is Psedo Secularism. India will never come up with Psedo Secularists.
Quote
 
 
-7 #20 danguvaaru andhurum 2012-02-15 20:04
Quoting abu haashima vaver:
இந்து மதவெரி அமைப்புகலுக்கு இதைவிட யாரும் இனிப்பான கட்டுரை கொடுக்க முடியாது.கான்கிரசை அனுப்பிவிட்டு காவிகலை அரியனை எட்ர நினைக்கும் உன்கல் முயர்ஷி வெட்ரி பெராது.


சற்றுமுன் திமுகவை ஒழித்துக் கட்ட அதிமுகவுக்கு ஓட்டுப்போட்ட அனுபவம் நம்மில் பலருக்கு இருக்கும் 2014-ல் அந்த தவறு நிகழ்ந்துவிடக் கூடாது...

2014ல் 1977, 89, 96 போன்ற மாநில கட்சிகளின் கூட்டாட்சி அமைய வேண்டும்... அப்போதும் திமுக/அதிமுக காயடிக்கப்பட்டு ஏனைய உண்மையான தமிழ் மக்களுக்கான கட்சிகள் வெற்றி பெற வேண்டும்.
Quote
 
 
+34 #19 Suresh Raja 2012-02-15 18:39
நான் எந்த மதத்தையும் குறை கூறவில்லை. விதண்டாவாதம் செய்ய வரவில்லை. எல்லா மதமும் ஒரே குறிக்கோளை கொண்டவை என்பது என் கருத்து... நான் கோவிலுக்கும், தேவாலையத்திருக் கும், மசூதிக்கும் சென்று கடவுளை வணங்கி இருக்கிறேன்...
தெரியாமல் தான் கேட்கிறேன், இஸ்லாமிய சகோதரர்களுக்கு என்ன உரிமை இங்கு இல்லை? மற்றவர்களை போலவே பள்ளி கல்லூரிகளில் கட்டணம் வசூலிக்கப்படுகி றது... அதே பாடம் தான் எல்லோரும் கற்கிறோம்.... வேலை வாய்ப்புகளும் எல்லோரும் விண்ணப்பிக்கிறோ ம்... (தயவு செய்து அரசாங்க வேலை தான் வேண்டும் என்று சொல்ல வேண்டாம்... எந்த மதமாக இருந்தாலும் நம் எல்லோருக்கும் அரசு வேலை கொடுப்பதில்லை)த குதி உள்ளவர்கள் வேலையை பெறுகிறார்கள்.... இது போக, இஸ்லாமிய சகோதரர்களுக்கு என்று தனி சட்டம் வேறு... அவர்கள் எல்லா வகையான சட்டங்களையும் பின்பற்றுவதில்ல ை... (எ.கா. பல திருமணம், விவாகரத்து)
நான் இஸ்லாமிய நாட்டில் தான் இருக்கிறேன்... இங்கு நான் மற்ற மதங்களை வணங்குவது தடை செய்யப்பட்டது... இங்கு நான் சிறுபாண்மை என்பதற்காக எந்த ஒரு சலுகையும் இல்லை... பின் எதற்காக நம் நாட்டில் இவ்வளவு பிரச்சனை... நான் உண்மையிலேயே தெரியாமல் தான் கேட்கிறேன்... தெரிந்தவர்கள் சொன்னால் சந்தோசம். :sad: :sad: :sad:
Quote
 
 
+15 #18 deepu 2012-02-15 16:23
இந்தியாவின் இந்த‌ப் ப‌த்தாண்டு கால சீர‌ழிவுக்கு முத‌ல் கார‌ண‌ம், அந்நிய சோனியாவின் கைக‌ளில் அதிகார‌ம் இருப்ப‌தால்த் தான். 2ஜி, எஸ் ப‌ண்டு, காம‌ன்வெல்த், பி.என் நேட், அந்நிய‌ முத‌லீடு என எல்லாவ‌ற்றிலும் போப‌ர்ஸ் குடும்ப‌த்தின் ப‌ங்கு ப‌ல‌மாய் இருக்கிற‌து.
Quote
 
 
+5 #17 mahesh_new 2012-02-15 15:59
Can any congress leader who is hindu can speak like this ? Further will Sonia keep mum if such thing happens ? I am confused as who is really minority people in this country.
Quote
 
 
-2 #16 iniavan 2012-02-15 13:51
முஸ்லிம்களை பற்றிய அக்கறை இல்லாத காங்கிரஸ் மற்றும் சல்மான் குர்ஷித் போன்றவர்களின் உளறல் ஓட்டுக்காக என்பதை முஸ்லிம்கள் புரிந்தே வைத்துள்ளனர்.ஆனால் இந்த பேச்சுக்கு இவ்வளவு அழுத்தம் கொடுக்க வேண்டியதன் அவசியம் என்ன.இது என்ன சட்ட விரோத பேச்சா.தமிழகத்தில் நடை பெற்ற தேர்தலில் திமுக அதிமுக உட்பட பல கட்சிகள் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு கொடுப்போம் என்று பேசிதானே பிரசாரம் செய்தனர்.இந்த பேச்சுக்கு இப்படி குதிக்கும் தேர்தல் ஆணையம் என்ற பாசிச நிறுவனம் நாங்கள் வெற்றி பெற்றால் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவோம் என்று வெளிப்படையாக தொலைகாட்சிகளில் பேட்டி கொடுக்கும் பாஜக தலைவர் நிதின் கத்காரி மீது என்ன நடவடிக்கை எடுத்துள்ளது.இதிலில் இருந்தே தெரியவில்லையா தேர்தல் கமிசன் யோக்கியதை.
Quote
 
 
-7 #15 GOPALASAMY 2012-02-15 12:21
Quoting abu haashima vaver:
இந்து மதவெரி அமைப்புகலுக்கு இதைவிட யாரும் இனிப்பான கட்டுரை கொடுக்க முடியாது.கான்கிரசை அனுப்பிவிட்டு காவிகலை அரியனை எட்ர நினைக்கும் உன்கல் முயர்ஷி வெட்ரி பெராது.


very nice. election commission can not interfere with salman khurshid. he is more powerful than anybody in india.
Quote
 
 
+5 #14 GOPALASAMY 2012-02-15 12:18
WHY ONLY HINDUS ARE RELIGIOUS FANATICS?

WHEN ALL OTHER RELIGIONS ARE SECULAR,

WHETHER HINDUS ONLY CREATING PROBLEM?
Quote
 
 
+13 #13 idavai venthal 2012-02-15 10:37
[ஃஉஒடெ நமெ="அபு ஹாஷிம வவெர்"]இந்து மதவெரி அமைப்புகலுக்கு இதைவிட யாரும் இனிப்பான கட்டுரை கொடுக்க முடியாது.கான்கிரசை அனுப்பிவிட்டு காவிகலை அரியனை எட்ர நினைக்கும் உன்கல் முயர்ஷி வெட்ரி பெராது.[/ஃஉஒடெ]


ஒரு நடுவண் அரசு, அதில் உள்ள மதிய சட்ட அமைச்சர் தேர்தல் நேரத்தில் சிறுபான்மை மக்களுக்கு இன்னும் அதிக எடை ஒதிக்கீடு என்று தேர்தல் விதி முறைகளை மதிக்காமல் பேசுகிறார். அவரை சட்டப்படி தண்டிக்க முடியாது. ஏனெனில் அவர் சிறுபான்மை வகுப்பை சேர்த்தவர்.

ஒவ்வொரு வருடமும், டிசம்பர் 6 தேதியில் இவர்கள் "இழந்ததை மீட்போம், இருப்பதை காப்போம்" என்று அங்கங்கு முழங்குவார்கள். இவர்கள் மத வெறியர்கள் அல்ல. உலக நாயகன் ஒசாமாவுக்கு இரங்கல் கூட்டம் நடத்தி தங்கள் விசுவாசத்தை காட்டுவார்கள். இவர்கள் மத வெறியர்கள் அல்ல. சல்மான் ருஷ்டி போன்றவர்களை நம் நாட்டிற்குள் வரகூடாது என்று தன்னுடைய எதிர்ப்பை தெரிவிப்பார்கள் . இவர்கள் மத வெறியர்கள் அல்ல.பாகிஸ்தானில் ஜனநாயக முறையில் தேர்தெடுத்த அரசை, மதவாதிகள் கவிழ்க்க முயற்சிப்பார்கள ். ஆனால், இங்கு வுள்ளவர்கள் அதை கண்டிக்க கூட மாட்டார்கள். இவர்கள் மத வெறியர்கள் அல்ல.

வாஜ்பாய் ப்ரிதம மந்திரியாக இருந்தபோது நடந்த குஜராத் கலவரத்துக்கு மோதியை கண்டித்து தன்னுடைய அறிக்கை வெளியிட்டார். ஆனால், இந்திரா காந்தி சுடப்பட்டு இறந்தபோது, சீக்கியர்களின் மீது மற்ற மதத்தவர்கள் காட்டுமிராண்டி தான தாக்குதல் நடத்தி, மூவாயிரம் பேரை கொன்ற நிகழ்ச்சியை, ஒரு பெரிய மரம் விழும்போது, இதுபோன்ற அதிர்வுகள் இருக்கத்தான் செய்யும் என்று ராஜீவ் காந்தி சொன்னார்.

பெரும்பான்மை இனத்தவரின் நலன் பற்றி யாரவது பேசிவிட்டால் அவர்கள் காவி கட்டிய மதவெறியர்கள்.

வாழ்க சமத்துவம். வாழ்க இந்திய இறையாண்மை.
Quote
 
 
-53 #12 abu haashima vaver 2012-02-14 22:05
இந்து மதவெரி அமைப்புகலுக்கு இதைவிட யாரும் இனிப்பான கட்டுரை கொடுக்க முடியாது.கான்கிரசை அனுப்பிவிட்டு காவிகலை அரியனை எட்ர நினைக்கும் உன்கல் முயர்ஷி வெட்ரி பெராது.
Quote
 
 
+37 #11 Ravi 2012-02-14 20:19
இந்தியாவுக்கு யாராவது தீங்கு இழைப்பார்கள் என்று கருதினால் அவர்கள் வெளியே இருந்து இல்லை என்பதை மக்கள் உணரவேண்டும். இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்ததாக பீற்றிக் கொள்ளும் அதே காங்கிரஸ்தான் இன்று அந்த சுதந்திர இந்தியாவை இத்தாலிக்கு அடகு வைக்கிறது. ஏன் விற்றுவிட்டது என்றே கொள்ளலாம். பதவிக்காக இவர்கள் இவர்களின் பாட்டி காலத்திலிருந்து தொடர்ந்து இந்த நாட்டின் ஜனநாயக அமைப்பின் ஒவ்வொரு அங்கத்தையும் அவமதித்து அதிகாரமில்லாததா க்கி அழுகச் செய்து நசுப்பிக்கிறார் கள். இந்தியாவின் ஒருமைப்பாட்டை காக்க வேண்டுமென்றால் இந்த காங்கிரஸ் என்கிற அமைப்பு இருக்கக் கூடாது என்று சொன்ன காந்தி சொன்ன வாக்கியத்தை இன்று நிறைவேற்ற வேண்டும். இல்லையேல் இந்த முட்டாள் மன்மோகன் சிங், பேராசை கொண்ட சிதம்பரம், கொள்ளைக்காரர்கள ் மாறன் சகோதர்கள் மற்றும் ராசா போன்றவர்களால் இன்னும் 20 ஆண்டுகளில் இந்தியா என்று ஒரு தேசமே இருக்காது. இந்தியா "சூப்பர் பவர்" ஆகாது. விரல் சூப்பர பவர்தான் ஆகும்.
Quote
 
 
-23 #10 jafar 2012-02-14 19:56
இன்று தமிழகத்தில் நடை பெற்ற முஸ்லீம்களின் வாழ்வுரிமைப்போர ாட்டம் போல் உ.பியிலும் நடந்தேறவேண்டும்
காங்கிரசை நாம் நம்புவதில்லை ஆனால்
அங்கே நிலவரம் என்னவென்று தெரியவில்லை
Quote
 
 
-24 #9 ஷாலி 2012-02-14 19:27
சல்மான் குர்ஷித் ஒரு முஸ்லிமாக இருப்பதால் தான் காங்கிரஸ்காரன் என்பதை மறந்து உணர்சிவசப்பட்டு விட்டார்.
ஒன்றும் பிரச்சினையில்லை ,அவர் கூறியதுமாதிரி,
அவரோடு சேர்த்து முஸ்லிம்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான உரிமைகளையும் சேர்த்து தூக்கில் போட்டு,

தேர்தல் ஆணையத்தின் சுதந்திரத்தையும ்,அதிகாரத்தையும ் நிலைநாட்டி ஜனநாயகம் தழைத்தோங்க செய்வோம்.

“சனங்க என்ன ஆனா என்ன அண்ணாச்சி, நம்ம சனநாயகம்
வாழ்ந்த போதும் அண்ணாச்சி,

கையிலே காசு வாயிலே தோசை, ஓட்டை போட்டு குத்தி நிமித்தினா கொடுப்பாங்க சில்லறை...”
வாழ்க ஜனநாயகம்.

ஆடு நனைகிறேதே என்று இங்கு ஓநாய் மட்டும் அழவில்லை,
நாய்,நரி,சிங்கம ் புலி எல்லாமும்தான்.
.
Quote
 
 
-13 #8 sammaty 2012-02-14 14:48
இந்த தலைப்பு சவுக்கு வுக்கும் சால பொருந்தும்.
Quote
 
 
0 #7 Shiva.ap 2012-02-14 13:40
ஸுப்பர்...
Quote
 
 
+19 #6 ரப்பர் ஸ்டாம்ப் 2012-02-14 13:02
காங்கிரஸ் உபி தேர்தலில் வெற்றிபெறும் என்று சோனியா, ராகுலே நம்ப மாட்டார்கள். அவர்களின் நோக்கமெல்லாம், ஒரு கனிசமான வெற்றி, அது கூட்டணிக்கு அவசியம் என்ற நிலைப்பாடு. எனவே அதன்மூலம், ஆளும் கட்சியின் ஆதரவை மத்திய அரசுக்கு பெற்றுவிடலாம். காங்கிரஸ் ஒரு ஒழியவேண்டிய கட்சி, அதற்கான சமாதியின் முதல் ஆணி உபி தேர்தலில் தொடங்கும் என்று நம்புவோம். இந்த தேர்தலில் எந்த கட்சியும் பெரும்பான்மை கிடைக்காது என்று அனைவருக்கும் தெரியும். உபியின் கேவலமான மக்கள் வாழ்கையை நினைத்து பார்த்தால், மனம் வருந்துகிறது. அப்படியொரு வளமையான கங்கை பாயும் நாடு, ஏழ்மையில்வாடுகி றது என்றால், காங்கிரஸின் ஆட்சியும் ஒரு முக்கிய காரணம் என்பதையும், மக்களின் அறியாமையுமே காரணம்.
Quote
 
 
+22 #5 http://koothadivedd 2012-02-14 12:05
நான் நினைக்கிறேன் இந்திய வரலாற்றிலேயே 2011 தமிழ்நாடு சட்டசபை தேர்தலில், தேர்தல் ஆணையம் நடந்துகொண்டதுபோ ல் முன்னை எப்போதும் நடந்து கொண்டிருக்கவில் லை என்றே அறியப்படுகிறது. தமிழ்நாடு தேர்தலின்போது ஆணையம் நடந்த முறை நியாயமானது என்றே பரவலான அபிப்பிராயம் நாடுமுழுவதும் பிரதிபலித்ததாகத ்தான் நம்பவும்படுகிறத ு. எவரும் தேர்தல் ஆணையத்தை குறைகூறவுமில்லை . இந்திய தேர்தல் ஆணையம் ஜனநாயகத்தை காப்பாற்றியதாகவ ே உலக அளவிலும் பாராட்டப்பட்டது . அதே விதிமுறைகளை ஏன் இந்த கறுப்பாடு சல்மான் குர்ஷீத் மீது பிரயோகிக்கக்கூட ாது. மவுனம் காக்கும் பேசாமடந்தை மண்மோகனுக்கும் கண்டிப்பான கட்டளையை ஏன் இடமுடியாது. பொறுப்பான சட்டத்துறையில் உள்ள சல்மான் குர்ஷீத் என்ற (தனி)மனிதரை தேர்தல் முடியும்வரையேனு ம் பதவியிலிருந்து தள்ளி வைக்கக்கூடாது? அப்படிச்செய்தால ் இன்னுமொரு கறுப்பாடு உருவாகாமல் தடுத்த பெரிய பணி தேர்தல் ஆணையத்தை சேரும். ஜனநாயகம் உயிர்பெற வழியும் பிறக்கும்.
Quote
 
 
+7 #4 jaya 2012-02-14 11:04
If you give the regime to congress in Up they will suck all the resources of India. UP people should be cautious.
Quote
 
 
+21 #3 Tamilian 2012-02-14 10:14
காங்கிரஸ் இது வரை மைனாரிடி இஸ்லாமியரை மட்டும் அணைத்துக்கொண்டு அரசியல் செய்துள்ளது என்பதே உண்மை! மதநோக்கில் இந்துக்கள் ஓட்டு போடுவதில்லை
என்பதை காங்கிரஸ் சாதகமாக பயன்படுத்தியுள் ளது என்பதே உண்மை! தேச நன்மைக்காக தோன்றிய ஒரு கட்சி இப்ப்டி ஆனது துரதிர்ஷ்டமே!
Quote
 
 
+14 #2 springjanani 2012-02-14 10:06
இந்த காங் கட்ஷி யாருக்கும் எதுவும் 60 ஆன்டுகளாக செய்யவில்லை என்பதுதான் உண்மை! தனக்காகவும், நேரு குடும்பத்திர்கா கவும் மட்டுமே இது உள்ளது.இட ஒதுகீடு எல்லா சமூகத்தினருக்கு ம் என்பதல்லாமல் ,இஸ்லாமியருக்கு தனி என்பது
சட்டபடி செல்லாது.அப்படி சட்ட திருத்தம் கொண்டு வரும் பட்ஷத்தில் அந்த கட்சிகளை

மக்கள் புறக்கணிக்க வெண்டும்.
Quote
 
 
+10 #1 kandhan 2012-02-14 09:45
Very nice article about our Law Minister.Thats is why Sonia purposly removed Veerappa Moily who is very honest and appointed this useless guy as Law minister.Shame to Indian Democracy..
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 106 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday4997
mod_vvisit_counterYesterday11112
mod_vvisit_counterThis week16109
mod_vvisit_counterLast week78861
mod_vvisit_counterThis month228928
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12751047