முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
புற்றுநோய் அல்லாமல் வேறு என்ன ? அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 26
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
திங்கட்கிழமை, 20 பிப்ரவரி 2012 15:49

சனிக்கிழமை அன்று சசிகலாவின் கணவர் நடராஜன் நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டதைப் பார்க்கும் போது, வரலாறு திரும்புகிறது என்றே சொல்லத் தோன்றுகிறது.    மூன்று மாதங்களுக்கு முன்பு, சசிகலாவின் நெருக்கமான உறவினர்கள் இது போல கைது செய்யப்படுவார்கள் என்று யாராவது சொல்லியிருந்தால், நம்புவதற்கு ஆள் இருந்திருக்க மாட்டார்கள். ஆனால் மன்னார்குடி மாபியாக்கூட்டத்தின் உறுப்பினர்கள் ஒவ்வொருவராக சிறை சென்ற வண்ணம் உள்ளார்கள்.

2176838929_30c714cf74_b

இந்த மன்னார்குடி மாபியா கும்பல் தங்களிடம் அதிகாரம் இருந்தபோது மற்றவர்களுக்கு அவர்கள் செய்தது, இன்று அவர்களுக்கே திருப்பிக் கிடைக்கிறது. 2001ல் ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது, 2003 ஜுலை மாதம் திடீரென்று மதுரையைச் சேர்ந்த செரினா பானு என்கிற ஜனனி என்கிற பெண் கைது செய்யப்பட்டார்.   அவரோடு, அவர் தாயார் ரமீஜா மற்றும் அவர்கள் கார் டிரைவர் சதீஷ்குமார் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.  அவர்கள் காரிலிருந்து 10 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. சென்னை நீலாங்கரையில் உள்ள அவர்கள் வீட்டிலிருந்து 1.04 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது.   விமானப்பணிப்பெண் பயிற்சி பெற்றிருந்த செரினா என்கிற அந்தப்பெண் எதற்காக கைது செய்யப்பட்டார், ஏன் கைது செய்யப்பட்டார் என்ற விபரங்கள் மர்மமாகவே இருந்தன.

2006060614510601
ஆனால் செரினாவுக்கு ஜாமீன் வேண்டி நீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறிஞர் யார் தெரியுமா ?   தற்போது தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருக்கும் கபில் சிபல்.    கபில் சிபல் செரினாவுக்காக ஆஜரானதும் ஒட்டுமொத்த பத்திரிக்கை உலகமுமே பரபரப்பாகி இந்த வழக்கை உற்று கவனிக்கத் தொடங்கின. அதற்குப் பிறகு அப்போதைய ஜுனியர் விகடன், குமுதம் ரிப்போர்டர் போன்ற பத்திரிக்கைகள் இந்த வழக்கின் பின் உள்ள மர்மங்களை மறைமுகமாக எழுதத் தொடங்கின.  அந்தப் பத்திரிக்கைகள் எழுதியவற்றின் சாராம்சம் என்னவென்றால், செரினா என்ற இந்தப்பெண், சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு நெருக்கமானவர்.   அவர் தன் கணவரோடு நெருக்கமாக இருப்பதை விரும்பாத சசிகலா, ஜெயலலிதாவிடம் சொல்லி, காவல்துறையை விட்டு, செரீனா மீது கஞ்சா வழக்கு போட உத்தரவிட்டார்.  அவரைப்போலவே, காவல்துறையில் சிக்கிய மற்றொருவர், ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் வி.என்.சுதாகரன். சென்னை தியாகராயநகரில் உள்ள வி.என்.சுதாகரன் வீட்டில் கடந்த 2001 ம் ஆண்டு ஜுன் மாதம் 13 ந் தேதி பாண்டி பஜார் போலீசார் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கிருந்து 16 கிராம் ஹெராயின் என்ற போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. அதை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் வி.என்.சுதாகரனின் அபிராமபுரத்தில் உள்ள அலுவலகத்திலும் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அங்கிருந்தும் 72 கிராம் ஹெராயின் கைப்பற்றப்பட்டது.  போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது தொடர்பாக சுதாகரன், முகைதீன், பாஸ்கர் மற்றும் ஜலாவுதீன் ஆகிய நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அந்த வழக்கு இன்று வரை நடந்து வருகிறது.

29VBG_SASIKALA_850717f

இந்த இரண்டு வழக்குகளுமே சசிகலாவின் உத்தரவால் பதியப்பட்டவை.   செரினா வழக்கு நடராஜனுடனான அவரது நெருக்கத்தால் அவர் மீது பதியப்பட்டது என்றால், சுதாகரன் வழக்கு ஜெயலலிதா நம்பிக்கையோடு கொடுத்தனுப்பிய பணத்தை கையாடல் செய்ததால் தொடுக்கப்பட்டது என்பது அரசியல் வட்டாரங்களில் பேசப்படும் செய்தி.  தன்னிடம் அதிகாரம் இருந்தபோது, தன்னுடைய எதிரிகளை பழிவாங்குவதற்கு காவல்துறையை பயன்படுத்திய சசிகலா, இன்று அதே அதிகாரம் தன்னுடைய குடும்பத்தினரை பதம் பார்ப்பதை நேரடியாக அனுபவித்து வருகிறார்.

முதலில் சசிகலாவின் தம்பி திவாகரன்.  பின்னர் சித்தப்பா மருமகன் ராவணன்.  கடைசியாக சசிகலாவின் கணவர் நடராஜன்.  அடுத்து டாக்டர் வெங்கடேஷ் மற்றும் நடராஜனின் தம்பி ராமச்சந்திரன் என்று தெரிவிக்கிறது காவல்துறை வட்டாரங்கள்.  தற்பொழுது அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு, ராவணனும், திவாரகனும் செய்தி அட்டூழியங்கள் கொஞ்ச நஞ்சம் அல்ல.

மன்னார்குடியில் நேஷனல் ஸ்கூல் என்று ஒரு பள்ளி இருக்கிறது. இந்தப்பள்ளியின் நிர்வாகம் தொடர்பாக இரண்டு பிரிவினருக்கு இடையில் நெடுங்ககாலமாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது.  இதில் ஒரு தரப்பு திமுக ஆதரவு தரப்பு. மற்றொரு தரப்பு திவாகரன் ஆதரவு தரப்பு.   திமுக ஆதரவு தரப்பிடம் இந்தப் பள்ளி நிர்வாகம் இருந்து வந்த நிலையில், அந்தப் பள்ளியின் நிர்வாகத்தை ஒரு ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் பார்த்துக் கொண்டிருக்கிறார்.  அதிமுக ஆட்சிக்கு வந்ததும் திவாகரன் ஆதரவு தரப்பு பள்ளி நிர்வாகத்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கில், நிர்வாகத்தை கவனித்து வந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் 4 கோடி ரூபாய் கையாடல் செய்து விட்டார் என்று புகார் அளிக்கின்றனர். அந்தப் புகாரில் ஓய்வு பெற்ற ஆசிரியரை கைது செய்ய வேண்டும் திவாகரன் உத்தரவிட, மன்னார்குடி டிஎஸ்பி அய்யனார், ஆய்வாளர் சேதுமணிமாதவன் ஆகியோர் நள்ளிரவு 1 மணிக்கு ஓய்வுபெற்ற ஆசிரியரின் வீட்டுக்கு சென்று, இரும்பு கேட்டை உடைத்து வீட்டுக்குள் சென்றுள்ளனர்.   அவரின் திருமணமான பெண் மற்றும் அவரது வயதான மனைவி மட்டும் இருந்துள்ளனர்.   “எங்கே உங்கள் அப்பா” என்று மிரட்டி விட்டு அவர் இல்லை என்றதும், அந்தப் பெண்ணை போலீஸ் ஜீப்பில் ஏற்றிக் கொண்டு, அவர்களது அடுத்த மகள் இருக்கும் வேதாரண்யத்துக்கு ஜீப் சென்றுள்ளது.  அங்கேயும் அவர் இல்லை என்றதும், அவரது இரண்டாவது மகளின் கணவர் ஜீப்பில் ஏற்றப்பட்டுள்ளார். அடுத்த மகள் குடியிருக்கும் நாகப்பட்டினத்துக்கு சென்று, அவரின் கணவரும் ஜீப்பில் ஏற்றப்பட்டுள்ளார். காலை 8 மணிக்கு மகள் மட்டும் விடுவிக்கப்பட்டு, மருமகன்கள் இருவரும் காவல்நிலையத்திலேயே வைக்கப்பட்டுள்ளனர்.  இந்நிலையில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் தாக்கல் செய்துள்ளார்.  இந்த சாதாரண மோசடி வழக்கில், ஜாமீன் வழங்கக்கூடாது என்று தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் நவனீதகிருஷ்ணன் ஆஜராகி வாதாடியுள்ளார்.    ஒரு வாரம் வரை கைது செய்யக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து தீர்ப்பை தள்ளி வைக்கிறது.   இந்த தைரியத்தில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் மீண்டும் வீட்டுக்கு செல்கிறார்.   வீட்டுக்கு சென்றவுடன், தலைமை ஆசிரியர் அவர் பணியாற்றிய பள்ளியில் உள்ள ஒருவரை கொலை முயற்சி செய்ததாக அவர் மீது புதிய வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

இது அத்தனையும், அக்டோபர் 2011 முதல் நவம்பர் 2011 வரை நடைபெற்றவை. இப்படி காவல்துறையை ஆட்டிப்படைத்த திவாகரன்தான் இன்று சிறையில் தன் இருளான எதிர்காலத்தை எண்ணி கவலைப்பட்டுக் கொண்டு இருக்கிறார்.

இந்த அத்தனை வழக்குகளிலும் பின்ணியில் இருப்பவர் முதலமைச்சராக, காவல்துறை மற்றும் சட்டம் ஒழுங்கை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஜெயலலிதா.   தன் தோழிக்கு பிடிக்கவில்லை என்பதற்காக ஒரு பெண் மீது கஞ்சா வழக்கு.   தன் பணத்தை எடுத்துச் சென்று விட்டார் என்பதற்காக மற்றொருவர் மீது ஹெராயின் வழக்கு.  தன்னையே பகைத்துக் கொண்டார்கள் என்பதற்காக தற்போது சசிகலா உறவினர்கள் மீது நில அபகரிப்பு வழக்கு.

இந்த அத்தனை நேர்வுகளிலும், சட்டவிரோதமாக பணியாற்றியது யார் என்று கேட்டால் அது தமிழக காவல்துறை அதிகாரிகள் தான்.   உங்களில் யாராவது ஒருவர் காவல்நிலையம் சென்று, உங்கள் இரு சக்கர வாகனம் தொலைந்து விட்டது என்று புகார் கொடுத்துப் பாருங்களேன்.   எப்ஐஆர் போடுவதற்குள் தாலியை அறுத்து விடுவார்கள். உங்களுக்கு யாராவது உயர் அதிகாரியோ, பத்திரிக்கையாளரோ, முக்கிய பிரமுகரோ தெரிந்திருந்தால் மட்டுமே எப்ஐஆர் போடப்படும்.   வேறு ஏதாவது அடிதடி வழக்கு என்று சென்று புகார் கொடுத்தப் பாருங்களேன்.   உங்களை பஞ்சாயத்து பேசி அனுப்பி வைப்பார்களே தவிர, சாமான்யத்தில் எப்ஐஆர் போட மாட்டார்கள்.

நடராஜனோ, திவாகரனோ, ராவணனோ, இவர்கள் உண்மையில் நில அபகரிப்பில் ஈடுபட்டிருந்தார்களேயானால் இவர்கள் மீது சட்டம் பாய்வதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.  ஆனால், மணல் குவாரி வாங்குவதற்காக ஒரு கோடி ரூபாய் கொடுத்தேன் திருப்பித் தராமல் மிரட்டினார், மிரட்டி நிலத்தை வாங்கிக் கொண்டார் என்றெல்லாம் போடப்படும் வழக்குகள் உண்மையான வழக்குகளா ?   திவாகரன் ராவணன் போன்றோர் செய்த காரியங்களுக்கு அவர்கள் சிறைக்கு செல்ல தகுதியானவர்கள் என்றாலும் கூட பிடிக்காத எதிரிகள் மீது பொய் வழக்கு போடுவதை எப்படி நியாயப்படுத்த முடியும் ?

ஆட்சியாளர்கள் யாரை கைது செய்ய உத்தரவிட்டாலும், அதற்காக ஒரு புகார்தாரரை தயார் செய்து, எப்ஐஆர் போட்டு, உடனே கைது செய்து சிறையில் அடைக்கும் காவல்துறை அதிகாரிகள் அரசு ஊழியர்கள் அல்ல…. அடிமைகள்.

நடராஜனை கைது செய்யும்போது, சென்னையில் அவரை கைது செய்த தஞ்சாவூர் போலீசார் என்ன வழக்கில் கைது செய்வதென்றே முடிவு செய்யவில்லை என்று தகவல்கள் கூறுகின்றன.   முள்ளிவாய்க்காலில் இறந்த ஈழத்தமிழருக்காக நினைவிடம் என்று பொங்கல் விழாவில் நடராஜன் அறிவித்திருந்த இடத்தின் சொந்தக்காரரை, விடுதலைப்புலிகளோடு தொடர்பு என்று வழக்கு பதிவு செய்து கைது செய்வோம் என்று மிரட்டி புகார் பெறப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.  நடராஜனை கைது செய்து, தஞ்சாவூர் அழைத்துச் சென்று விடியற்காலை 4.30 மணிக்கு இரண்டாம் நீதிமன்ற நடுவர் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கு பதிலாக முதலாம் நீதிமன்ற நடுவர் மாலதி முன்னிலையில் ஆஜர்படுத்தியுள்ளனர்.    மாலதி, நடராஜனை ரிமாண்ட் செய்வதற்கு மறுத்துள்ளார்.  முதலாம் நீதிமன்ற நடுவர் முருகன் என்பவர் லீவில் சென்று விட்டார் என்று அவரிடம் கூறியுள்ளார்கள்.  இல்லை அவர் விடுப்பில் செல்லவில்லை, அவர் நேற்றுதான் விடுப்பு.  இன்று விடிந்து விட்டது.  இன்று அவர் பணியில் உள்ளார் நான் எப்படி ரிமாண்ட் செய்ய முடியும் என்று மறுத்ததற்கு, முருகனை நாங்கள் லீவில் அனுப்புகிறோம் என்று சொல்லி, முதலாம் நீதிமன்ற நடுவரை விடுப்பில் செல்ல வைத்திருக்கிறார்கள்.

DSC_1218

சட்டபூர்வமான உத்தரவுகள் வருகையில் அதை நிறைவேற்றுவது ஒரு காவல்துறை அதிகாரியின் கடமை.   ஆனால் அதே நேரத்தில் ஆட்சியாளர்களுக்கு பிடிக்காதவர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்யுங்கள் என்று வரும் உத்தரவுகளை நிறைவேற்றும் இந்தக் காவல்துறை அதிகாரிகள் தாங்கள் மக்கள் வரிப்பணத்தில் ஊதியம் பெறுகிறோம் என்ற நினைவில்லாமல், ஜெயலலிதாவின் சொந்தப் பணத்தில் ஊதியம் பெறும் விசுவாசமான பண்ணை அடிமைகளைப் போல நடந்து கொள்வது வேதனையளிக்கும் விஷயம்.  பொய்வழக்கு பதிவு செய்ய மாட்டேன் என்று ஒரே ஒரு காவல்துறை அதிகாரி கூட மறுப்பதில்லை என்பது, நம் நாட்டில் ஜனநாயக முறைதான் உள்ளதா… அல்லது மகாராணியின் அடிமை ஆட்சி நடைபெறுகிறதா என்ற சந்தேகத்தையே ஏற்படுத்துகிறது.

இப்படி மகாராணியின் விசுவாசமான அடிமைகளாக இருப்பதால்தான், காவல்துறை அதிகாரிகள் அப்பாவிகளைச் சுட்டுக் கொல்லும் போதும், பழங்குடிப்பெண்களை இரவில் கைது செய்து பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கும் போதும், அரசு முன்னின்று அவர்களைக் காப்பாற்றுகிறது.

காவல்துறையினர் மத்தியில் பரவியிருக்கும் இந்த அடிமை மனோபாவம்  ஜனநாயகத்தை பீடித்திருக்கும் மிக மோசமான புற்றுநோயே அல்லாமல் வேறு என்ன ?

 

Comments  

 
0 #31 kalidasan 2012-02-28 11:36
http://www.brookings.edu/opinions/2012/0224_tamil_nadu_antholis.aspx

" Star Wars III: Jayalalitha Strikes Back."
Super Super Super
Quote
 
 
-4 #30 Hariharan Chennai 1 2012-02-23 19:03
When Savukku Sankar himself is a slave of Prabakaran, (some one who blindly supports), how do u expect poilice not to be slave.
Quote
 
 
+4 #29 கிராமத்தான் 2012-02-23 08:25
அய்யா இதுவெல்லாம் நாடகம் இரண்டு திரவிட கட்சிகளும் கூட்டு சேர்ந்து நடத்தும் நடகம்--விரைவில் வெளிச்சத்திற்க் கு வரும்
Quote
 
 
+6 #28 Palaniappan 2012-02-22 16:26
இப்படியே ஒருனாலைக்கு அம்மாவையும் அம்மாவுக்கு பிடிக்காம்போனா நல்லா இருக்கும்!
Quote
 
 
+3 #27 bambino 2012-02-22 15:20
அப்பாவிகள் இப்படி துன்பப்படுகிறார ்களே. பார்க்க மனம் வேதனைப்படுகிறது . இல்லையா சவுக்கு?
Quote
 
 
+2 #26 Guruprasad V 2012-02-22 13:58
To get rid of this corrupt politicians public should be pure. Ask question to yourself whether this TN public is capable of electing a candidate based on education, honesty and other stuff. If I'm a film hero next day I could enter into politics and could grab votes. Situation has to be changed completely. Only then things would improve orelse this would continue for ever. Its as simple as that PUBLIC IS CORRUPT AND THATS WHY THEY DESERVE THESE KIND OF POLITICIANS.
Quote
 
 
0 #25 Sebastian 2012-02-21 23:59
தமிழர்களின் வருங்கால கடைமைகள், திரு. ரோன் ரிடினோர்:
The key points were: “There is no possibility of a resolution” [concerning the UN expert panel and war crimes issue]. This is due, partially, to the lack of “sufficient pressure” from the affected people.
Several Tamils I have come to know tell me that Tamils from Eelam are among the “most inward looking people” while complaining that other people are not interested in their welfare.
Furthermore, most of the Tamils in the Diaspora rely on western governments, and perhaps India, to fight their battles.

Add Russia to the long list: India, US, Israel, U.K., EU, Japan, Iran, Pakistan and the greatest war crimes contributor of them all, China.

Drop illusions of winning through political parties’ parliamentary power. Stand up to all terrorist states.
Organize from the grass roots. Go door-to-door. Learn and educate.

The battle for democracy is becoming a fight against backroom billionaires seeking to shape politics to suit their own interests.

Invariably, organisations arguing for regulations to be removed, top taxes to be reduced and other such billionaire-friendly policies, call themselves free-market or conservative thinktanks.

The leading Republican candidates have all but abandoned the idea of mobilising popular support. Instead they use the huge funds they raise from billionaires to attack the credibility of their opponents through television ads.-- http://dbsjeyaraj.com/dbsj/archives/4345#more-4345
Quote
 
 
+5 #24 Suresh Raja 2012-02-21 20:38
நடராஜன் செய்த எத்தனையோ அக்கிரமங்களுக்க ு எந்த ஒரு சாட்சியமும் கிடைக்கவில்லையா ? பொய் வழக்கு போடுவது கண்டிக்கத்தக்கத ு... அதே சமயம், இப்படியாவது இந்த அயோக்கியர்கள் சிறை தண்டனை பெறட்டுமே!!!!
முதல்வரின் நடவடிக்கைகள் கடந்த சட்டசபை கூட்டத்திலேயே முகம் சுழிக்க வைத்துவிட்டது.
Quote
 
 
+2 #23 tharaniramesh 2012-02-21 18:52
வறவேற்க்கிறேன் அறுமையான் கறுத்து
Quote
 
 
+2 #22 ARUTPERUNCHITTHAN 2012-02-21 17:37
ஐய்யா இன்று துணிச்சலுடன் நீங்கள் மற்றும் பலர் ஜெயலலிதாவை விமர்சிப்பதற்கு சசிகலா அவர் பக்கத்தில் இல்லாததே காரணம் என்பது தான் உண்மை.போலிஸ் கூட சில சட்ட விதிகளுக்கு உட்பட்டு தான் இயங்க முடியும் ஆனால் ரௌடிசம் அடுத்த கணமே ஆட்டோவில் வரும், ஆசிட் அடிக்கும்,ஆளையே தூக்கிவிடும்.அதற்க்கு தான் மக்கள் பெருமளவு பயம் கொள்வர் போலிசுக்கு அல்ல.போலிஸ் சுதந்திரமான நேர்மையான அமைப்பாக இருந்தால் ஆட்சியாளர்களுக் கே ஆபத்தாய் முடியும்.
Quote
 
 
+5 #21 பரங்கியன் 2012-02-21 17:30
உன்னாலாதான்யா இந்த மாத்ரிலாம் எழுத முடியுது...வாழ்த்துக்கள்
Quote
 
 
+6 #20 Savukku Reader 2012-02-21 16:50
//உங்களில் யாராவது ஒருவர் காவல்நிலையம் சென்று, உங்கள் இரு சக்கர வாகனம் தொலைந்து விட்டது என்று புகார் கொடுத்துப் பாருங்களேன். எபைஆர் போடுவதற்குள் தாலியை அறுத்து விடுவார்கள்.// நூற்றுக்கு நூறு உண்மை. நில அபகரிப்பு சம்பந்தமாக நான் கொடுத்த புகாரை ஏற்காமல் இறுதியில் உயர்நீதிமன்றம் மூலமாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து 2 வருடமாக நடவடிக்கை எதுவும் எடுக்காமலிருக்க ிறது காவல் துறை. சென்னையிலுள்ள காவல் துறை தலைவரிடம் புகார் கொடுக்க சென்ற போது, அங்கிருந்த அதிகாரி ஒருவர் வீடு உன்னிடம் தானே உள்ளது. திருடினால் தானே திருடனை தண்டிக்க முடியும் ? என்று விளக்கம் கொடுக்கிறார். இது தான்டா தமிழ் நாடு போலீஸ்.
Quote
 
 
+2 #19 vaaimai 2012-02-21 13:58
Jeya is the main culprit. Read this
http://www.vinavu.com/2012/02/21/jaya-sasi-cho-gamble/
Quote
 
 
+1 #18 idavai venthal 2012-02-21 12:58
ஊருக்கு வெட்கமில்லை (மத்திய அரசு) . இந்த உலகுக்குக்கும் (மாநில அரசுகள்) வெட்கமில்லை, யாருக்கும் (அரசியல் வாதிகள், அரசு ஊழியர்கள்). இதிலே அவருக்கு (தமிழக போலீஸ்) வெட்கமென்ன ?

பொது மக்களுக்கு ஆதரவாக இருந்தால், அரசு தனி பிரிவின் கீழ் வீடு கிட்டுமா ? அல்லது சிறந்த காவலருக்கான விருது கிட்டுமா ? நினைத்த ஊருக்கு மாற்றல் கிட்டுமா ? இவ்வளவு ஏன் ? காவலர் பணியில் சேர செலவு செய்த பணத்தை பொது மக்களா கொடுக்க போகிறார்கள் ? சும்மா போவியா. அரசு உழியர்கள். மனசாட்சி. நீதி, நேர்மை, ஞாயம். நீங்கள் இந்தியாவில் இருக்கிறீர்களா ? அல்லது சிங்கப்பூரில் இருக்கிறீர்களா ?
Quote
 
 
0 #17 kalidasan 2012-02-21 12:45
hey Friends, This india vs srilanka CB series 8 Match Live Cricket Link whtch this :

http://freetvall.com/video/A7H33KSR1AS2/Live-Cricket-Tv-4
Quote
 
 
+5 #16 குட்டி 2012-02-21 12:10
இந்த ஜெயா வும் சசியும் சேர்ந்து கொண்டு சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து தப்பித்துக் ஆடும் நாடகங்களில் இதுவும் ஒன்று... தமிழ்நாட்டு மக்களே இதை நம்பி ஏமாறாதீர்..ரெண்டு பேரும் சேர்ந்து தவறு செய்வார்கலாம ஆனால் ஒருவர் மட்டும் தான் அப்பாவியாம்.யென்ன விந்தை இது???
Quote
 
 
+4 #15 SUTHIRAN 2012-02-21 09:32
பேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் ! முன்பு பிசாசும் இப்போது கொள்ளிவாய்ப் பிசாசும் ஆட்சியில் உள்ளது ! சாத்திரங்கள் பிணம் தான் தின்னும் ! காவல் துறையில் பணிபுரியும் ஒவ்வொரு உயர் ஐ பி எஸ் அதிகாரிகளும் இந்தக் கட்டுரையை படிக்கும் போது சிறிதளவாவது மனம் சஞ்சலம் அடைவார்களா ? படித்தவன் சூது செய்கிறோமே ! படித்தவன் சூது செய்தால் அய்யோ என்று போக நேரிடுமே என்ற பதை பதைப்போ அச்சமோ இல்லாதவன் தான் அரசு பதவிகளுக்கு லஞ்சம் கொடுத்தாவது வருகிறான் ! இதற்கெல்லாம் ஒரே விடிவு ! எகிப்தில் நடந்தது போன்ற மக்கள் புரட்சி ! அது லிபியாவில் நடந்தது போன்ற ரத்தப் புரட்சியாகாமல் இருப்பது இந்தப் பேய்களும், கொள்ளிவாய்ப் பிசாசுகளும் தாங்கள் தாங்கள் செய்யும் அக்கிரமங்களின் அளவைப் பொறுத்தே அமையும்
Quote
 
 
+38 #14 kali.krishna 2012-02-21 02:18
இந்த கைது நடவடிக்கைகளை வைத்துகொண்டு, அம்மணி ஜெயலலிதாவுக்கு ஊழலே பிடிக்காத மாதிரியும், மன்னார்குடி கும்பலின் அட்டூழியங்கள் இதுவரை அவருக்கு தெரியாத மாதிரியும் பம்மாத்து காட்டுகிறார்கள் . அம்மணி ஜெயலலிதாவுக்கு, மன்னார்குடி கும்பலின் உண்மையான அட்டூழியங்களை வைத்து வழக்கு போட்டால், அது கடைசியில் எங்கு வந்து நிற்கும் என்று தெரியும்.

மிகவும் சின்சியராக இந்த கைது நடவடிக்கைகளை மேற்கொள்ளும் காவல் துறை, இந்த மன்னார்குடி கும்பலின் அட்டூழியங்களின் ஊற்றுக்கண்ணான ஜெயலலிதாவையும் கடைசியில் கைதுசெய்வார்கள் என்று சத்தியமாக நம்புவோமாக. :-* :-* :-*
Quote
 
 
+41 #13 Ravi 2012-02-21 00:45
இந்த அவலத்தை இன்று நேற்று அல்ல சுமார் 40 வருடங்களாக இந்த மக்கள் கண்டும் அனுபவித்தும் வருகிறார்கள். வெள்ளைக்காரன் தனக்கு வசதிக்காக கொண்டு வந்த பல அடக்குமுறை மற்றும் கொடுமையான காவல்துறை சட்டங்களை இன்னும் நமது ஆட்சியாளர்கள் மாற்றாமல் வைத்திருக்கும் காரணமே அவை இவர்களுக்கும் வசதியாக இருப்பதேயாகும். உதாரணமாக. செக்க்ஷ்ன் 144. அதாவது இந்த சட்டம் பிறப்பிக்கப் பட்ட பிறகு 4 பேருக்கு மேல் ஒரிடத்தில் யாரவது கூடினால் அது சட்டவிரோத கூட்டமாக கருதப்பட்டு அவர்கள் சிறைபிடிக்கப்பட ்டு தண்டிக்கப்படலாம ். ஆனால் ஒரு விநோதம் என்ன தெரியுமா? இதை கொண்டுவந்த இங்கிலாந்தில் இது போன்று ஒரு சட்டமே கிடையாது. இது எப்படி இருக்கு? வெள்ளையரிடம் வேலை செய்த போது இந்த காவல்துறை எப்படி காட்டுமிராண்டித னமாக இருந்ததோ அதைவிட மோசமாக அடிமைத்தனமாக இன்றைய ஆட்சியாளர்களால் மாற்றப்பட்டிருக ்கிறது. இதை எழுதும் போது இன்றய நீதி மன்ற செய்தி ஒன்று வந்துள்ளது. அதாவது நமது டி.ஜி.பி. உயர்நீதிமன்றத்த ில் திருக்கோவிலூரில ் இருளர் சமுதாய பெண்கள் கற்பழிக்கப் படவேயில்லை என்று சத்திய பிரமாணமாக கூறுகிறார். ஆனால் அந்த பெண்களை இரவில் காவல்நிலையத்தில ் வைத்தது தவறு என்று ஒத்துக் கொள்கிறார். பின் ஏன் அந்த காவலர்களை கைது செய்யவில்லை என்று நீதிபதி கேட்டதற்கு முழிக்கிறார். கற்பழிக்கவில்லை யென்றால் ஏன் அரசு அவர்களுக்கு பணமும் சலுகைகளும் அறிவித்தன என்று இந்த டி.ஜி.பி விளக்குவாறா? இப்படி ஒரு அசிங்கமான, வெட்கமற்ற, ஒழுங்கீனமான, வெட்கமற்ற ஒரு துறையில் வேலை செய்ய எப்படி இவர்களால் முடிகிறது? பணம் அந்த அளவுக்கு தோலை மறத்துப் போக செய்யுமா?
Quote
 
 
+16 #12 ELEVENTH SENSE 2012-02-21 00:36
Transfer Rates :
Head Constable :Rs.4.5 Lacs (from moffusil to
within city limit.....)
Traffic sensitive point(for tr. pc) : Rs. 2.75 Lacs
Teachers : Rs.2.5 Lacs
Divisional Engineers : Rs.11.5 Lacs
Assistant D E : Rs.5.0 Lacs
Sand Quarry : 200.00 Lacs per Point ( 212 of such
points are there to quarry sand).
NOC for Industrial Approval : Rs.5.00 Lacs
Industrial Licence : Rs. 25.00 Lacs
Illegal Patta Transfer : Rs. 0.25 Lacs
Forgery Document Registration : Rs..1.5 Lacs
Illegal Patta issue : Rs. 0.50 Lacs.
Creating Teacher Post : Rs. 6.00 Lacs
Electric Connection 3 Phase : Rs.0.75 lacs (for
inserting new poles, Conductor etc.,
Transformer Shifting : Rs.2.25 Lacs
to shift Post and Conductors running
Across one's own Patta land : Rs.3.00 Lacs
Meter Setting (only at night) : 30% Share of the
original Amount of consumption tariff.
"Everything is legal when the powerful does it."

இந்த அத்தனை நேர்வுகளிலும், சட்டவிரோதமாக பணியாற்றியது யார் என்று கேட்டால் அது தமிழக அதிகாரிகள் தான்.....

முதலாம் நீதிமன்ற நடுவர் முருகன் என்பவர் லீவில் சென்று விட்டார் என்று அவரிடம் கூறியுள்ளார்கள் . இல்லை அவர் விடுப்பில் செல்லவில்லை, அவர் நேற்றுதான் விடுப்பு. இன்று விடிந்து விட்டது. இன்று அவர் பணியில் உள்ளார் நான் எப்படி ரிமாண்ட் செய்ய முடியும் என்று மறுத்ததற்கு, முருகனை நாங்கள் லீவில் அனுப்புகிறோம் என்று சொல்லி, முதலாம் நீதிமன்ற நடுவரை விடுப்பில் செல்ல வைத்திருக்கிறார ்கள்.
இந்த தைரியத்தில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் மீண்டும் வீட்டுக்கு செல்கிறார். வீட்டுக்கு சென்றவுடன், தலைமை ஆசிரியர் அவர் பணியாற்றிய பள்ளியில் உள்ள ஒருவரை கொலை முயற்சி செய்ததாக அவர் மீது புதிய வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டார் .

நம் நாட்டில் ஜனநாயக முறைதான் உள்ளதா… அல்லது மகாராணியின் அடிமை ஆட்சி நடைபெறுகிறதா என்ற சந்தேகத்தையே ஏற்படுத்துகிறது .????????????
Quote
 
 
+22 #11 கும்பிட்றேன் சாமி 2012-02-20 23:32
[ஃஉஒடெ நமெ="உண்மை விளும்பி"]கலைஞர் ஆட்சி ஒழியவேண்டும் என எழுதிய பேனா இவ்வளவு விரைவில் அடுத்து வந்த ஆட்சியை விமர்சனம் செய்ய வேண்டியிருக்கிற தே!!! நமக்கு விமோசனமே கிடையாதா !!!! :சட்: :சட்: :சட்:[/ஃஉஒடெ]
விமர்சனம் வரவேற்கபடவேண்டி ய முறையில் உள்ளது. நியயாமான சொல்லாடல்களுடன் உண்மையான அக்கறையுடன் இன்றைய காவல் துறையின் முகமூடி கிழித்துள்ளது.
Quote
 
 
-2 #10 santhoshthalafan 2012-02-20 23:06
no use of blaming POLICE, if they didnt accept the assignments , they may get transfer and other official ll do it, so it better to hear the ruling party's voice
Quote
 
 
+55 #9 உண்மை விளும்பி 2012-02-20 21:30
கலைஞர் ஆட்சி ஒழியவேண்டும் என எழுதிய பேனா இவ்வளவு விரைவில் அடுத்து வந்த ஆட்சியை விமர்சனம் செய்ய வேண்டியிருக்கிற தே!!! நமக்கு விமோசனமே கிடையாதா !!!! :sad: :sad: :sad:
Quote
 
 
+21 #8 seenivasan 2012-02-20 20:58
இதர்க்கு தானே ஆசை பட்டாய் பாலகுமாரா
Quote
 
 
+31 #7 Bharath Arunachalam 2012-02-20 20:45
நடராஜன் ஒரு உலக மகா உத்தமன். அத நாங்க நம்பிட்டோம்.
Quote
 
 
-12 #6 JohnK 2012-02-20 18:08
What you have written is correct. But you have not posted such an article when DMK leaders were arrested. Do you think that this article will apply to DMK people also?
Quote
 
 
+7 #5 Eesan 2012-02-20 17:44
What to do Savukku? That's how 99% of the people in this country are there. People come to politics to make money. Why are govt. jobs sold? Why do police officers pay money to get postings? How will they get back their money? When you pay money and get a job, then you will listen to the people to whom you paid. People have to change and this should happen from childhood. By the way, Your Samacheer Kalvi will not solve this problem. Keep this in mind ...
Quote
 
 
0 #4 செல்வ மணி 2012-02-20 17:42
Intra-civilization wars are ubiquitous. The more culturally close are the opponents, the bloodier is their conflict. The two world wars, which were fought between culturally similar European countries, took an unprecedented number of lives. Civil wars are generally the bloodiest.

Contrary to Fukuyama’s dream of a post-human liberal world without wars, globalization works the other way around: people become more culturally homogeneous, interact more—and clash more often. Global projection of power is a function of globalization, which allows any two groups to fight, no matter the distance. Still more importantly, globalization pushes foreign images into our homes.

THERE HAS BEEN NO SINGHALESE IN INDIA. WHO IS CULTURALLY SIMILAR TO SINGHALESE IN INDIA?- MALAYALEES in KERALA, NAIRS in Indian military?.-- http://www.youtube.com/watch?v=q3BTaZmdh_Q

SRILANKA MILITARY EVOLVED BY TAMIL HATRED- NOW NO "JOB" FOR IT WHOM THEY HATE AND KILL?- MALAYALEES?-

Singhalese(Anag arika Dharmapala's Singhalese Buddhist nationalism) "PROUD" against Swamy Vivekananda(Ind ian Hindu nationalism)in Chicago, World’s Parliament of Religions (in 1893)by - http://www.lankaweb.com/news/items/2012/02/13/quantum-physics-in-the-sinhala-buddhist-culture/
Quote
 
 
-16 #3 springjanani 2012-02-20 17:25
நடராஜன் சவுக்கின் பின்புலமா?
Quote
 
 
+26 #2 http://koothadivedd 2012-02-20 17:03
இந்த நிலைதானே காலாகாலமாக தொடருகிறது. மக்களுக்கு வேறு வழியுமில்லை. யாராவது முன்வந்து நியாயம் கேட்டாலும் ஒடுக்கப்படும் அபாயம் இருக்கிறது. நெருக்கடி மத்தியிலும் இப்படியான செய்தியை வெளியிடுவதற்குக ்கூட நிறைய நேர்மையான உதவிகள் தேவை. இதற்கு சட்டப்படி மாற்று தேடவேண்டிய கடமையும் இப்பேர்ப்பட்ட சிந்தனைவாத ஊடகங்களுக்குத்த ான் உண்டு. செய்தியை வெளியிடுவதோடு நின்றுவிடாது ஏதாவது மார்க்கத்தையும் பொது நலனோடு தோற்றுவிக்கவேண் டிய கட்டாயம் எவரும் புறந்தள்ளக்கூடி யதல்ல. இன்று தினமலர் ஒன்லைன் செய்தியில் முதல்வர் இட்லி கதை ஒன்றை உவமைப்படுத்திய செய்தி வந்திருந்தது.முதல்வர் ஜெயலலிதாவுக்கும ் அந்த இட்லிக்கதைக்கும ் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடு இருப்பது அனைவருக்கும் புரிகிறது. இருந்தும் வேறு வழியின்றி பொழுதுபோக்காக படித்துவிட்டு கலைந்துவிடுவதில ்த்தான் அனைவரும் ஆர்வம் காட்டுகின்றனர். நேற்றைய செய்தி ஒன்றில் தாத்தா " நாடகங்களை நம்புவதில்லை" என்று கொமண்ட் அடித்திருந்தார் தாத்தா நடிக்காத அரசியல் நாடகம் இந்திய அரசியலில் ஏதும் உண்டா என எனது உள் மனதில் சிரிப்பூட்டியது வேறு வழியும் எவருக்கும் தெரியவில்லை. புற்றுநோய் இலகுவில் குணப்படுத்த முடியாது என்பதே அறிவியலின் முடிவுமாகும்! http://koothadiveddai.blogspot.com/
Quote
 
 
+34 #1 RAHAMATHULLA 2012-02-20 16:41
இந்த அடிமை மனோபாவம் ஜனநாயகத்தை பீடித்திருக்கும ் மிக மோசமான புற்றுநோயே அல்லாமல் வேறு என்ன ? உண்மை உண்மை.....................
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 42 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday2542
mod_vvisit_counterYesterday10087
mod_vvisit_counterThis week12629
mod_vvisit_counterLast week80132
mod_vvisit_counterThis month215361
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12737480