முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
நிஜமல்ல கதை. அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 58
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
வியாழக்கிழமை, 23 பிப்ரவரி 2012 14:21

கடந்த ஒரு மாதமாக சென்னை மாநகர காவல்துறையினரை பிடித்து உலுக்கிக் கொண்டிருந்த வங்கிக் கொள்ளை வழக்கு ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது.   கொள்ளையடிக்கப்பட்டதாக சந்தேகிக்கப் பட்ட 5 இளைஞர்களை சென்னை மாநகர காவல்துறை இரவோடு இரவாக சுட்டுக் கொன்றிருக்கிறது.  அடிக்கடி சொல்லிக்கொள்வார்களே….   ஸ்காட்லாண்டு யார்டுக்கு இணையான காவல்துறை என்று…  அந்த ஸ்காட்லாண்டு யார்டு போலீசையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டு விட்டது சென்னை மாநகர காவல்துறை.

DSC_6427

சென்னையில் பட்டப்பகலில் இரண்டு வங்கிகள் கொள்ளையடிக்கப் பட்டபோதே, சென்னை காவல்துறை ஆடித்தான் போனது. இது ஏற்கனவே ஆடிப்போயிருக்கும் சென்னை மாநகர காவல் ஆணையாளர் திரிபாதியின் நாற்காலியை மேலும் ஆடச் செய்தது.  சென்னை மாநகர ஆணையாளர் பதவியை பிடிக்க எப்போதுமே இருந்து வரும் போட்டியை எப்படியாவது சமாளித்து, தனது நாற்காலியை காப்பாற்றிக் கொள்ள வேண்டிய நெருக்கடியும் திரிபாதிக்கு இருந்தது.

இந்தப் பின்னணியில்தான் இந்த என்கவுண்டரை பார்க்க வேண்டும். வேளச்சேரியில் உள்ள வண்டிக்காரன் தெரு என்ற குடியிருப்புப் பகுதியில் இந்த என்கவுண்டர் நடந்துள்ளது.    இரவு 1 மணிக்கு இந்த என்கவுண்டர் நடந்ததாக தகவல்கள் கூறுகின்றன.

இன்று சென்னையில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய திரிபாதி “நள்ளிரவு 12.30 மணிக்கு காவல்துறையினருக்கு வங்கிக் கொள்ளையில் சம்பந்தப்பட்ட நபர்கள் அந்தப்பகுதியில் தங்கியிருப்பதாக தகவல் கிடைத்ததும், காவல்துறையினர் இரவு ஒரு மணிக்கு அந்த இடத்திற்கு சென்றனர்.  போலீசார் அந்த வீட்டை வெளியிலிருந்து பூட்டி விட்டு, உள்ளே இருந்தவர்களை சரணடையச் சொல்லியிருக்கிறார்கள்.  அனால் உள்ளே இருந்தவர்கள் சராமாரியாக காவல்துறையினரைப் பார்த்து சுடத் தொடங்கி விட்டனர். சுற்றியிருந்த மக்களின் பாதுகாப்புக்காகவும், காவல்துறையினர் தங்களைத் தற்காத்துக் கொள்வதற்காகவும் வேறு வழியில்லாமல் சுட்டனர்.  கொள்ளையர்கள் சுட்டதில், காவல்துறை ஆய்வாளர்கள் இருவருக்கு காயம் ஏற்பட்டது.   சுடப்பட்டதில் ஐந்து நபர்கள் காயமடைந்தனர்.   காயமடைந்தவர்களை அவசரமாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக எடுத்துச் சென்றபோது, அவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இறந்து போனவர்களை புகைப்படம் எடுத்து கொள்ளை போன வங்கிப் பணியாளர்களிடம் காண்பித்ததில், அவர்கள் வங்கியை கொள்ளையடித்தவர்கள்தான் என்று அவர்கள் அடையாளம் காண்பித்தனர்.   அந்த வீட்டிலிருந்து 5 பிஸ்டல், 2 ரிவால்வர் மற்றும் மொபைல் போன்கள் மற்றும் 14 லட்ச ரூபாய் ரொக்கம் ஆகியவை கைப்பற்றப் பட்டன” என்று தெரிவித்தார்.

DSC_6571

மேலும், உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளின் படி, “நீதித்துறை நடுவரின் விசாரணை நடைபெற்று வருவதால், மேற்கொண்டு இந்த விவகாரம் குறித்து பேச முடியாது” என்றும் தெரிவித்தார்.

இறந்து போன,  வினோத்குமார், வினாய்குமார், ஹரீஷ்பிரசாத், சசிகரே, அபேகுமார்  ஆகியோரில் நான்கு பேர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், ஒருவர் ஒரிஸ்ஸா மாநிலத்தைச் சேர்ந்தவர்.    திரிபாதி சொல்வதை வைத்துப் பார்த்தால், வேளச்சேரி வீட்டுக்கு விசாரணைக்காக சென்ற இடத்தில் கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டதால், வேறு வழியின்றி காவல்துறையினர் திருப்பிச் சுட்டுள்ளனர்.

DSC_5599

சம்பவம் நடந்த வீட்டின் அருகே உள்ள மக்கள், காவல்துறையினர் பெரும் எண்ணிக்கையில் இரவு 10 மணி முதலே அந்த இடத்தைச் சூழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.  பத்து மணி முதல் அந்த இடத்தில் குவிந்த போலீசார், அருகாமையில் உள்ள வீட்டில் இருந்தவர்களை வீட்டினுள் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.  இரவு 12.30 முதல் 1 மணிக்குள் துப்பாக்கிச் சத்தம் கேட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.   திரிபாதி சொல்வது போல வெறும் விசாரணைக்காக அந்த வீட்டுக்கு சென்றவர்கள் இது போல பெருமளவில் ஆயுதங்களோடு சென்றது ஏன் என்பது இயல்பான கேள்வி.  கொள்ளையர்கள் வங்கிகளை கொள்ளையடித்தபோது ஆயுதங்கள் வைத்திருந்ததால் காவல்துறையினரும் ஆயுதங்களை எடுத்துச் சென்றனர் என்று சொல்லும் திரிபாதி இத்தனை போலீசார் அங்கே ஏன் சென்றனர் என்பதை விளக்கவில்லை. சாதாரண விசாரணைக்காகத்தான் காவல்துறையினர் அங்கே சென்றார்கள் என்றால், “ஆபரேஷன் டீமின் ஹெட்” என்று அடையாறு துணை ஆணையரை குறிப்பிடுவது ஏன் ?  சாதாரண விசாரணையைத்தான் “ஆபரேஷன்” என்று அழைப்பார்களா ?  மேலும் சாதாரண விசாரணைக்கு துணை ஆணையரை நள்ளிரவில் அனுப்ப வேண்டிய காரணம் என்ன ?

DSC_0874

அருகாமையில் குடியிருந்த பொதுமக்கள் அத்தனை பேரையும் வீட்டுக்குள் செல்லுமாறு இரவு 10 மணியிலிருந்தே காவல்துறையினர் மிரட்டியதிலிருந்தே இது எப்படிப்பட்ட ஒரு மோசமான படுகொலை என்பது தெரிகிறது.  என்கவுண்டர் நடந்த உடனே ஒரு பத்திரிக்கையாளரிடம் பேசிய இணை ஆணையர் ஒருவர், இரண்டு காவல் அதிகாரிகளுக்கும் எப்படிக் காயம் ஏற்பட்டது என்று கேட்டதற்கு, அவர்கள் இருவரும் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்த போது, உள்ளே இருந்தவர்கள் அரிவாளால் வெட்டியதால் காயம் ஏற்பட்டது என்றார்.   ஆனால் திரிபாதியோ, காயமடைந்த இரண்டு ஆய்வாளர்களும், கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டதில் காயம் ஏற்பட்டது என்றார்.   இது போன்ற போலி என்கவுண்டர்களில் காவல் துறையினருக்கு ஏற்படும் காயம் அத்தனையுமே, வயிற்றிலோ, தோள்பட்டையிலோ தான் ஏற்படுகிறது.   இந்தச் சம்பவத்திலும் காயம் ஏற்பட்ட இரண்டு ஆய்வாளர்களுக்கும் தோள்பட்டையிலும், வயிற்றிலும், நெற்றியிலும் காயம் ஏற்பட்டிருக்கிறது.   இறந்து போன ஐந்து இளைஞர்களுக்கு மட்டும் நெஞ்சில் குண்டு பாய்ந்திருக்கிறது.   இந்த மர்மத்திற்கு காரணம் என்ன என்பதற்கு திரிபாதி விளக்கம் ஏதும் அளிக்கவில்லை.

DSC_5562a

DSC_5569

இந்த இளைஞர்களை இப்படி துணிச்சலாக கொன்றதற்கு மற்றொரு முக்கிய காரணம், இவர்கள் அத்தனை பேரும் வட இந்தியாவைச் சேர்ந்தவர்கள், இவர்களுக்காக வழக்கு போடவோ, மனித உரிமைகளுக்காக குரல் கொடுக்கவோ யாரும் வர மாட்டார்கள் என்ற துணிச்சலே காரணம்.  இது போன்ற போலி மோதல் படுகொலைகளை நீதிமன்றங்களும் உரிய தீவிரத்தோடு அணுகுவதில்லை என்பதும், காவல்துறையினரின் துணிச்சலுக்கு மற்றொரு காரணம். சென்னை உயர்நீதிமன்றத்தில் மட்டும், 15க்கும் மேற்பட்ட வழக்குகள் போலி என்கவுண்டர்கள் தொடர்பாக 3 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருக்கிறது.

இறந்து போன ஐந்து பேரும் கொள்ளையர்கள் என்றே வைத்துக் கொள்ளலாம்.  அவர்கள் கொள்ளையடிக்கும் போது, எந்தவிதமான வன்முறைச் சம்பவத்திலும் ஈடுபடவில்லை என்பதை பார்க்க வேண்டும்.    ஆளில்லாத வங்கிகளாகப் பார்த்து 30 லட்ச ரூபாயை கொள்ளையடித்திருக்கிறார்கள்.  இவர்கள் செய்தது இவ்வளவு பெரிய தவறென்றால், பல கோடி ரூபாய்களை கொள்ளையடித் தவர்கள்தானே நமக்கு ஆட்சியாளர்களாக இருக்கிறார்கள் ?  66.5 கோடியோடு ஒப்பிடும்போது 30 லட்ச ரூபாய் ஒன்றும் பெரிய தொகை இல்லையே….

DSC_6624

மனித சமுதாயம் தோன்றி பல்வேறு கட்டங்களில் வளர்ந்து, இன்று மனித உரிமைகளை மதிக்க வேண்டும், மரண தண்டனையை ஒழிக்க வேண்டும் என்ற ஒரு சிறப்பான வளர்ச்சிக்கட்டத்தில் இருக்கிறது.   நமது குற்றவியல் சட்டத்தின் அடிநாதமே, குற்றவாளிகளை திருத்தி சமுதாய நீரோட்டத்தில் கலக்கச் செய்ய வேண்டும் என்பதுதான்.    இசுலாமிய நாடுகளிலும், சீனாவிலும் இருப்பது போல, துப்பாக்கியால் சுட்டும், கழுத்தை சீவியும் மரணதண்டனை வழங்கும் கொடிய வழக்கம் இந்தியாவில் இல்லை.  மனித உரிமைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு நாகரீக நாடாகவே நாம் இதுவரை அறியப்பட்டிருக்கிறோம்.  அப்படித்தான் அறியப்படவும் வேண்டும்.

நேற்று இரவு நடந்தது போன்ற போலி மோதல் படுகொலைகள் நமது சமுதாயத்தை காட்டுமிராண்டிக்காலத்துக்கே இட்டுச் செல்லும்.   அந்த அறையில் தங்கியிருந்த ஐந்து இளைஞர்களில் ஒரே ஒருவர் அந்தக் கொள்ளையில் சம்பந்தப்படாமல் இருந்திருந்தால், பறிக்கப்பட்ட உயிருக்கு என்ன பதில் சொல்வார் திரிபாதி ?

DSC_5118

இந்தத் திரிபாதி என்கவுண்டருக்கு பெயர் போனவர்.   அவர் 2001 அதிமுக ஆட்சிக் காலத்தில், சென்னை மாநகரத்தின் இணை ஆணையராக இருந்தபோது, ராஜாராம், வீரமணி போன்றவர்களின் என்கவுண்டர்களை நேரடியாக முன்னின்று நடத்தியவர். தற்போது தனது கமிஷனர் பதவியை காப்பாற்றிக் கொள்வதற்காகவே இந்த என்கவுண்டரை நடத்தியிருக்கிறார் என்ற சந்தேகமே மேலோங்குகிறது.   மேலும், இன்று பெங்களுரில், ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், சசிகலா இன்று இரண்டாவது நாளாக சாட்சியம் அளிக்கும் நிலையில், அந்தச் செய்தியை பின்னுக்குத் தள்ளுவதற்காகவும் இந்த என்கவுண்டர் நடந்துள்ளதோ என்ற சந்தேகத்தையும் வலுவாக எழுப்புகிறார்கள் சில பத்திரிக்கையாளர்கள்.

DSC_5136

DSC_5155

இந்த தாக்குதலில் காயம் அடைந்ததாக வேடமிட்டுக் கொண்டு மருத்துவமனையில் படுத்திருக்கும் இரண்டு காவல்துறை ஆய்வாளர்களையும், நேரில் சென்று பார்த்து இந்த போலி என்கவுண்டருக்கு ஜெயலலிதா வலு சேர்ப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.  மோரில் விஷம் வைத்து வீரப்பனைக் கொன்றவர்களுக்கு இரண்டு லட்சம் ரொக்கமும், இரண்டு க்ரவுண்டு நிலமும், ஒரு படி பதவி உயர்வும் வழங்கியவர்தானே இந்த ஜெயலலிதா.

நுகர்வுக் கலாச்சாரம் மேலோங்கி இருக்கும் இன்றைய  சமுதாயத்தில் குறுக்கு வழியில் பணக்காரராக வேண்டும் என்ற உந்துதலில் தவறு செய்த இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட வேண்டும் என்றால், தனக்கு பிடிக்காத ஐஏஎஸ் அதிகாரி மீது ஆசிட் வீசச் சொன்னவருக்கும், ஒரு சர்வே வெளியிட்டதற்காக மூன்று இளைஞர்களை உயிரோடு கொளுத்தியவர்களுக்கும் என்ன தண்டனை தர வேண்டும் ?

 

Comments  

 
0 #83 karikaalan 2012-03-11 18:54
[ஃஉஒடெ நமெ="கன்ன"]சவுக்கின் தரம் தாழ்ந்து விட்டது.[/ஃஉஒடெ]
சட்டத்திற்கு புறம்பாக சுட்டுக்கொல்லப் பட்டதை பற்றி கேள்வி எழுப்பும் சவுக்கையும் மற்ற மனித உரிமை ஆர்வலர்களையும் இங்கு கேள்வி கேட்கும் அறிவு ஜீவிகளுக்கு ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். நீங்கள் ஒன்றை நினைத்து பாருங்கள், அங்கு சட்டத்திற்கு புறம்பாக, எந்த விசாரணையும் இன்றி, இருட்டில், முகம் கூட தெரியாமல், கண்மூடி தனமாக கொல்லப்பட்ட ஐந்த மனிதர்களும் வேறு யாரோ என்பதால் நமெக்கெல்லாம் இது ஒரு செய்தி மட்டுமே, எந்த வலியும் இன்றி கருத்தை அள்ளி வீசுகிறோம், இதுவே இப்படி அநியாயமாக கொல்லப்பட்டது நாமாகவோ, அல்லது நமக்கு வேண்டியவர்களாகவ ோ இருந்தால் ....? நினைத்துப்பாருங ்கள் !!!? யாரோ ஐந்து பேர்கள் மீது சுட்ட துப்பாக்கி, நாமும் எத்தனயோ ஊர்களில் வேலை பார்க்கிறோம், வீடு வாடகைக்கு எடுத்து நம் நண்பர்களும், சொந்தங்களும் தங்கி உள்ளார்கள், அங்கேயும் வங்கி கொள்ளை ஒரு நாள் நடக்கலாம், அந்த நகரிலும் ஒரு திரிபாதி கொலைகாரன் இருப்பான் , அவன் கேள்வியில்லாமல் சுடுவதற்கு நீங்கள் அனுமதிப்பீர்களா ? சிந்தித்துப்பார ுங்கள் !!, இந்த கொலைகள் ஒரு கொள்ளையை முறையாக விசாரிக்க துப்பில்லாத, ஒரு கயலாகத காவல் துறையின், விசாரிக்கும் வரை பொறுமை இல்லாத, அல்லது தனது ஆட்சியின் குறைபாடுகளை மறைக்க முயலும், ஒரு கையால் ஆகாத அரசாங்கத்தின் குற்றங்கள் என்பதை நாம் மறக்க கூடாது. அடுத்தவன் செத்தால் அது உனக்கு ஒரு நியூஸ், நீ செத்தால் மட்டுமே அது உனக்கு துக்கம், மறந்துவிடாதே!! , ஆகவே அடுத்தவன் அநியாயமாக கொல்லப்பட்டதை என்றும் நியாப்படுத்ததே !! ஏனெனில் நீயும் ஒருநாள் பாதிக்கப்படலாம் அதே காரணத்திற்காக !!!!
Quote
 
 
+4 #82 Anbu1 2012-02-27 13:32
இது ஒரு தவறான முன் உதாராணமக ஆகி விட கோடிய வாஇப்பு அதிகம் உள்ளது. கஞசா கைது, நில அபகரிப்பு கைது யெல்லாம் எப்படீ இப்பொது சாதாரனம் அகிசவிட்டரதஒ அது பொல இதுவும் சாதாரணம் ஆக கூடாது. இதுதான், இந்த நிகழ்வை எதிர்பதிற்கு காரணம் இதுவே.
Quote
 
 
+9 #81 naan kadavuL 2012-02-25 18:27
அகிம்சை பேசிய காந்தீய சோனியா இந்தியா இன்று கொலைகார கொள்ளைக்கார இந்தியாவாக மாறி விட்டது. மரண தண்டனையை நீக்க கோரும் இவ்வேளை கீழ்த்தரமான மிருகத்தனமான என்கவுண்டருக்கு வக்காலத்து வாங்குவோரை என்ன சொல்வது?தண்டனைகள் அதிகமாக வேண்டும்.அது மிருகத்தனமான கொலை அல்ல. விசாரணையற்று கொல்லப்பட்ட இவர்கள் குற்றவாளிகள் தான் என்பதற்கு என்ன சாட்சியம்?
Quote
 
 
-2 #80 crys 2012-02-25 17:44
அவர்கள் சத்யாகிரகம் செய்தவர்கள் அல்ல. துப்பக்கியை காட்டி கொள்ளையடித்தவரே . இவர்களை சட்டப்படி தண்டிப்பது நடவாத காரியம். இம்மாதிரி ஆட்களால் தமிழகம் பீகாராக மாறுவது நிச்சயம்.
Quote
 
 
+3 #79 kanna 2012-02-25 14:58
சவுக்கின் தரம் தாழ்ந்து விட்டது.
Quote
 
 
+4 #78 tamil paiyan 2012-02-25 14:35
இவை அனைதும் பொய் :-*
Quote
 
 
+7 #77 arunyog 2012-02-25 10:17
தமிழக சிறையில் இருக்கும் ஒரு குறிபிட்ட

மத தீவிரவாதிகளுக்க ு ஜெயிலில் பிரியாணி

கவனிப்பு எப்பொழுதும் உண்டு.
Quote
 
 
+10 #76 muhilsuryaa 2012-02-25 10:13
கொள்ளையர்கள் என்றும் கொடியவர்களே! இதில் எவருக்கும் இரு கருத்தில்லை.ஆனால் நடந்த சம்பவத்தில் கொல்லப்பட்டவர்க ள் ஐவரும் உண்மையான குற்றவாளிகளா?

போலீஸ் சொல்வதைவைத்து எல்லோரும் ஆதரிக்கிறார்கள் .
நம்ம தமிழ்நாட்டு கஞ்சா போலிசைப்பற்றி நன்கு தெரிந்தும் அவர்கள் சொல்வதை நம்பும் அப்பாவிகள் இன்னும் இருக்கின்றார்கள ே!

குற்றவாளிகளிடமி ருந்து தங்களை காத்துக்கொள்ளத் தான் என்கவுன்ட்டர். ஆனால் தங்கள் பதவி நாற்காலிகளை பாதுகாக்க இங்கு என்கவுன்ட்டர் நடக்கிறது. உலகிற்கு உண்மை தெரிந்து விடக்கூடாது என்பதற்காக ஒருவரைக் கூட விடாது கொண்டிருக்கிறார ்கள்.

என்கவுண்டரில் கொல்லப்பட்டது ஐந்து பேர் மட்டுமல்ல ஆறாவதாக சட்டமும் நீதிமன்றமும் சேர்த்துத்தான்.
செத்தவன் எவனும் இனி சாட்சி சொல்ல வரமாட்டான்.தமிழக காவல்துறையின் கையாலாகாத தனம் தான் இந்த திட்டமிட்ட படுகொலை. வெறும் முப்பது நாற்பது லட்சத்துக்காக ஐந்து பேர் படுகொலை மன்னிக்க முடியாதது. தவறு செய்யாத மனிதன் யாரிங்கே....தவறின் அளவு வேண்டுமாயின் வேறுபடும்.

ஒரு நொடியில் உடலை விட்டு பிரிக்கும் உயிரை கோடி முறை அழுது வேண்டினாலும் திரும்ப கொண்டு வந்து சேர்க்க முடியுமா?

தண்டனைகள் எதுவாயினும் மனிதனை வேரோடு திருத்துவதாய் இருக்கவேண்டுமே தவிர அவனை வேரோடு அழிப்பதாய் இருக்க கூடாது.அதிலும் இந்த திருட்டுல வெறும் ஐந்து பேர் தான் கூட்டு என்பது இவங்களுக்கு எப்படி தெரியும்?
எல்லா உயிரும் விலைமதிப்பில்லா தது என்பது மிக மிக முக்கியம்.அது அரசியல்வாதியானா லும் சரி இல்லை அயோக்கியனாலும் சரி என்பதை நீதிமன்றம் உறுதிசெய்யவென்ட ும்
Quote
 
 
-3 #75 Sanvi 2012-02-25 03:09
Savukku, pls stop this kind of non-sense as if you are the judge in providing judegement for all the cases in TN. How dare you call this as murder. Will you say the same if your house is looted? Since you lost job because of someone you've been in grudge with them until now - that is the state of affected person. Imagine the people who worked in the robbed banks and innocent public who depoisted money there. Talk only to matters relevant to you. You are such a waste for TN
Quote
 
 
+17 #74 Sivakumar.M 2012-02-25 02:51
சவுக்கின் தரம் தாழ்ந்து பல மாதன்கல் ஆகிவிட்டது. உதாரணத்திற்கு உனது குடும்பத்தில் உள்ள உனது உறவினர்கள் யாராவது பணத்தை திருட்டு கொடுத்தோ, அல்லது கற்பை பறிகொடுத்தோ இருக்கும் சமயத்தில் இதே போலிஸ் குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் பொது அவர்களை தண்டிக்கலாமா என்று நீதிமன்றம், மனித உரிமை ஆணையம் இப்படி அனைத்திடமும் கேட்டு கொண்டு கற்பை பறிகொடுத்த உனது உறவினரிடம் எங்கே, எப்படி கற்பழித்தார் எங்கே தொட்டார். மெதுவாக தொட்டாரா. அழுத்தி தொட்டாரா, வலித்ததா? என்று அனைத்தையும் விலாவாரியாக விசாரித்து பின்னர் ஒவ்வொரு மக்களிடமும் ஒப்பினியன் கேட்டு அனைவரும் ஒப்புக்கொண்டால் மட்டுமே அவரை கைது செய்யும் படி செய்யலாம். என்ன மக்களே இப்படி செய்தால் அனைவருக்கும் ஓகே தானே. இப்படி செய்தால் கடைசியில் பணமும் திரும்ப கிடைக்காது, கற்பும் கிடைக்காது. குற்றவாளிக்கு தண்டனையும் கிடைக்காது. குற்றவாளியும் திருந்தமாட்டான் . எப்போ சசியும் நடராஜனும் அவர்களை சார்ந்த கும்பலும் அதிமுகவில் இருந்து நீக்கபட்டனரோ அப்போதே சவுக்கு தனது முகவரியை மக்களிடம் காட்டிவிட்டது. நடராஜனுக்கு, ராவணனுக்கு, திவாகரனுக்கு ஆதரவாக கட்டுரை வெளியிட்டதோ அப்போதே சவுக்கின் முகவரியும் மக்களிடம் சென்று சேர்ந்துவிட்டது . சசி கும்பல் ஆதரவு அரசு அதிகாரிகள் அனைவரும் மாற்றப்பட்டுவிட ்டனர். எனவே இப்போதுள்ள அதிகாரிகள் அனைவரையும் சவுக்கு எதிரியாகத்தான் பார்க்கும். அதன் விளைவுதான் இந்த கட்டுரை.
Quote
 
 
+4 #73 Tirupurvalu 2012-02-25 00:40
Savukku i have a doubt clear me.
Do u support this 5 guys .If you angry with politicians & police don't play in this case b'coz if our state police not like to do north indians will come to all town then Tamilnadu become Bihar .Human rights have to keep quit in this case .
Quote
 
 
+7 #72 raja mallar 2012-02-24 22:05
அய்யா படித்த அறிவாளிகளே...
இங்கேயாவது கொள்ளை அடித்தவனை கொன்றார்கள்.. ஆனால் செப்டெம்பர் 11ல்
ஆறு பேரக் காரணமே இல்லாம சுட்டுக் கொன்னாங்களே அப்பா நீங்க எல்லாம்
எங்க இருந்தீங்கனு தெரிஞ்சுக்கலாமா .... வந்துட்டனுக... நியாயம் அநியாயம்...னு
Quote
 
 
+9 #71 அந்நியன் 2012-02-24 21:05
நெனச்சேன். என்னடா போலிஸ்காரங்க இத என்கவுண்டர்லையே இதுதான் கின்னஸ் சாதனையைப்போல் பேட்டில சொல்லும் போதே நெனச்சேன். ஓவர் பில்ட்டப்பா இருக்கேன்னு தோனுச்சு. அது போக இந்த நியூச தொடர்ந்து தினத்தந்தியில் மூணுநாள் தலைப்பு செய்தியா போட்டு சசிகலா விஷயத்தை மறைச்சிக்கிட்டே வர்றாங்களேன்னு அப்பவே பொறி தட்டுச்சு. இது நம்ம தில்லாலங்கடி திரிபாதியோட விளையாட்டுதானா? அதான் பார்ட்டிக்காரன் பிரஸ் மீட்டுல காட்டுக்குள்ள தன்னந்தனியா போயி டைனோசர போட்டு தள்ளிட்டு வந்த மாதிரி சவுண்டு குடுத்துக்கிட்ட ு இருக்காரா? புரிஞ்சு போச்சு சங்கதி. கத இப்பிடி போவுதா. நடத்துங்கடா உங்க நாடகத்த.
Quote
 
 
+1 #70 crys 2012-02-24 20:53
Nobody answering my simple question: where had these fellows gone(NHRC),when 100s of BSF jawans were dynamited in Jharkand? Are they not humans? Don't they have families?
Quote
 
 
0 #69 crys 2012-02-24 20:37
unless we are in the place of scenery we cannot comment which is right or wrong.police did a good job and is a warning for others. who know? they may rob for funding terrorists?

தண்டனைகள் கடுமையானால் தான் குற்றங்கள் குறையும்
Quote
 
 
+4 #68 savuku vasagan 2012-02-24 15:24
சவுக்கின் நடுநிலை சந்தேகமளிக்கிறத ு . கண்டபடி உளற வேண்டாம் .
Quote
 
 
+8 #67 tp 2012-02-24 15:14
I see here some people are blaming savukku for this article.To them I am asking few question?
Will you accept this encounter if the
victims belong to tamilnadu?
Do you think encounter is the only way
to stop bank robbery?
Do we have a sepaerate law for a
common man for the same crime?
Quote
 
 
+13 #66 deepu 2012-02-24 15:06
பாகிஸ்த‌னிலிருந ்து வ‌ந்து 2008 நவ‌ம்ப‌ரில், ர‌யில்வே நிலைய‌ம், யூத‌ரின் ஹோட்ட‌ல், தாஜ் ஹோட்டல் எனப் ப‌ல‌ இட‌ங்க‌ளில் தாக்கி ப‌ல அப்பாவிக‌ளையும் , காவ‌ல‌ர்க‌ளையும ் பெரிய‌ அதிகாரிக‌ளையும் சுட்டுக் கொன்று த‌ள்ளிய‌ தீவிர‌வாதி இன்னும் பிரியாணி சாப்பிட்டிட்டு ஜாலியா இருக்கான். இந்த‌ ஐந்து இந்திய‌ ப‌ச‌ங்க‌ வ‌ங்கியில் கொள்ளையடித்தார் க‌ள் என இரண்டே நாட்க‌ளில் விசாரித்து "து"ப்புத் துல‌க்கி யூகித்து ஒட்டு மொத்த ந‌ப‌ர்க‌ளையும் அரைம‌ணிக்குள் சுட்டுக் கொன்ற‌தில் ஒரு ம‌ர்ம‌ம் இருக்கிற‌து அல்ல‌து காவ‌ல்துறை சில உண்மைக‌ளை ம‌றைக்கிற‌து என்ப‌தே நிஜம். 75ல‌ட்சம் கோடிக‌ளை வெளிநாட்டில் ம‌றைத்து வைத்திருப்ப‌வ‌ர ்க‌ள் ஆளும் நாட்டில் இது போன்ற‌ நிக‌ழ்வுக‌ள் அதிர்ச்சியாய் இல்லாம‌ல் போவ‌து தான் இய‌ற்கை
Quote
 
 
-4 #65 Krishnasamy D 2012-02-24 14:56
மூன்ரு வேலை சோட்ருக்காக கூலி வேலை செய்யும் 70 வயது பாட்டி...துப்பாக்கியை காட்டி 30லட்சம் கொல்லை அடிக்கும் திருடர்கல்...இவர்கலை கொல்லாமல் ஜெயிலில் போட்டு கோலி ப்ரயானி வான்கி கொடுக்கலாம்...
Quote
 
 
+6 #64 SATISH 2012-02-24 14:38
புடிச்சா உள்குத்துன்னு சொல்லிவிங்க!!! புடிக்கலென்ன வெளிகுத்துன்னு சொல்லிவிங்க!!! உங்களையெல்லாம் நடுவுல குத்தனும்!!!
Quote
 
 
+10 #63 kfstrong 2012-02-24 14:28
கன்னா அவஙள போடலினா... அவங்க எல்லா உண்மையும் சொல்லிடுவாஙளே....அதுக்கு தான் இந்த என்கவுன்டர்....
Quote
 
 
-11 #62 arunmozhi 2012-02-24 14:02
அரசியல்வாதிகள் தவறு செய்கிறார்கள்.உண்மை.காவல் அதிகாரிகள் தவறு செய்கிறார்கள்.உண்மை.அதனால் நாட்டில் எந்த குற்றம் நடந்தாலும் யார் மீதும் நடவடிக்கை எடுக்க கூடாது.இது போன்ற நல்ல செய்திகளை அடிக்கடி எழுதுங்கள்.நாட்டுக்கு நல்லது.காவல் துறையில் சவுக்கு சங்கரைத் தவிர வேறு யாரும் யோக்கியம் கிடையாது..இந்த செய்தியையும் அடிக்கடி எழுதுங்கள்.
Quote
 
 
+3 #61 Bhargav Kesavan 2012-02-24 13:59
தண்டனைகள் கடுமையானால் தான், தவறுகள் தடுக்கப்படும் - என்று இதே வாய்தானே பேசுகிறது?
இது தான் நம் தவறு, தமிழர்கள் மற்றவரை முன்னுக்குத் தள்ளி, பின்னிருந்து வேலைகாரர்களாகவே இருப்பது இதனால் தான்.
எதனால்?
இந்த இரக்க குணத்தால் தான். இரக்கம் இருக்கத்தான் வேண்டும், ஆனால் இடம் அறிந்து இருக்கவேண்டும்.
'கொள்ளை அடிக்கறவன நிக்க வெச்சு சுடனும்' என்று இதே வாய் தானே பேசுகிறது?
ஒரு விடயம் ஒப்புக்கொள்ள வேண்டியது தான், இதுவே இந்த ஐந்து பேர் தவிர்த்து, இதே கொள்ளையை ஒரு நடிகரோ, ஒரு அரசியல்வாதியோ செய்திருந்தால், இந்த துப்பாக்கி சூடு நடந்திருக்காது! !!

ஒன்று புரிகிறது, ஏதோ எதிர்பார்த்தது ஜெ-ஆட்சியில் கிடைக்கவில்லை என்ற வெறுப்பு தெரிகிறது.
ஆட்சி ஆரம்பித்ததிலிரு ந்தே ஜெ வின் புகழை குலைக்கும் விதத்திலேயே சவுக்கின் நடுநிலை மாறுவது வெளிப்படையாக தெரிகிறது!!!
சவுக்கின் நடுநிலையை எதிர்பார்க்கும் , சவுக்கு வாசகன்!
Quote
 
 
-17 #60 ramaswamy senthilkum 2012-02-24 13:57
அரசியல்வாதிகள் தவறு செய்கிறார்கள்.உண்மை.காவல் அதிகாரிகள் தவறு செய்கிறார்கள்.உண்மை.அதனால் நாட்டில் எந்த குற்றம் நடந்தாலும் யார் மீதும் நடவடிக்கை எடுக்க கூடாது.எது போன்ற நல்ல செய்திகளை அடிக்கடி எழுதுங்கள்.நாட்டுக்கு நல்லது.காவல் துறையில் சவுக்கு சங்கரைத் தவிர வேறு யாரும் யோக்கியம் கிடையாது.எந்த செய்தியையும் அடிக்கடி எழுதுங்கள்.
Quote
 
 
+9 #59 VethuVettu 2012-02-24 13:53
[ஃஉஒடெ நமெ="றவி, டல்லச், ஊஸா"]சவுக்கிடம் இருந்து இன்னொரு அரைவேக்காட்டு கட்டுரை! போலிஸ் சுட்டிவிட்டதாலே யே அது தவறான ஒரு விஷயமாகாது![/ஃஉஒடெ]

போலீஸ் சுடாமலே பிடித்து இருக்கலாமே. நெட் வொர்க்கையும் கண்டு பிடித்து இருக்கலாமே. இந்த என்கவுண்டர் யாரை திருப்தி படுத்த.
Quote
 
 
-13 #58 ramaswamy senthilkum 2012-02-24 13:52
குற்றவாளிகளுக்க ு ஆயுள் தண்டனை குடுப்பது கூட சரியல்ல .ஏதோ ஒரு குற்றம் செய்துவிட்டான் என்பதற்காக காலமெல்லாம் அவனை சிறையில் வைப்பது மனித உரிமைக்கு எதிரானது.அவர்களுக்கு நல்ல புத்திமதி மட்டும் சொல்லி விட்டுவிடவேண்டு ம்.மனித உரிமை தழைக்கும்
Quote
 
 
+13 #57 பழைய வாசகன் 2012-02-24 12:45
கோவை குழந்தைகல் கொலை சம்பவத்திற்கு - மரண தண்டனை என்றாள் ஆது சரி
ஆந்த தவரின் வீரியம் மீஹா அதிகம் ஆதநால் மரண தண்டனை சரி என்று படுகின்றது

ஆனால் இந்த வங்கி கொள்ளை சம்பவத்திற்கு - மரண தண்டனை மிக மிக மிக
ஆதிகம் அவர்கள் நாக்ஸால் நடவடிக்கைக்கு பணம் திரட்டுவது என்றாலும்
மரண தண்டனை - ஆதுவும் காவல் துறையால் நடத்த படும் போலி மோதல்
கொடிது - சட்டத்தின் முன் நிறுத்தி - தண்டனை வாங்கி தந்து இருக்கவேண்டும்,

இந்த நடவடிக்கை பார்த்தால் நமது காவல் துறையை மதிக்க தோன்ற வில்லை.
பதிலுக்கு வெறுப்பும் ஒரு வித தவறான பயமும் தான் தோன்றுகிறது.
Quote
 
 
+11 #56 NADAGPRIYAN 2012-02-24 12:32
பாதிக்க பட்டவனின் நிலையில் இருந்து வழங்க படுவதே நீதி..

- திருவாசகம்!!!!! !!!!!!
Quote
 
 
+13 #55 Senthilraj 2012-02-24 11:12
Vatchathi rape panniya anaivariyum vivek minor kon*u sutta mathiri suda vendum.
Quote
 
 
+7 #54 குட்டி 2012-02-24 11:08
ஐந்து பேரில் ஒருவரை யாவது உயிரோடு பிடித்திருந்தால ் நமது காவல் துறையை உளமார பாராட்டலாம்..ஆனால் ??உண்மை யாருக்கு தெரியுமோ??.
Quote
 
 
+5 #53 nilamagan 2012-02-24 11:03
I don't think this can be justified by any means. It's the police brutality that had made the life miserable for the 5 people and their family.

TOlerence is the first sense of civilization any society would have incubated before evolving as human. This is a stone age cannibalism.

WHile we are pleading for 3 tamil lives to be freed from the hands of capital punishment on the road to peace we have comfortably stepped on the corpses of paramakudi and now velachery.

Life is not so cheap and people would realise that only when they are put in such situation.

Article was good.
Quote
 
 
+4 #52 kalparad 2012-02-24 10:25
If these youths were killed in encounter for the two crimes amounting to 30 lakhs, what should be done with our politicians ranging from Ward member to ministers who become millionaires in less than a year without any earning? Yet another case of abuse of power and excess by TN Police. Tripathy & his team should face trials for these brutal murder against the constitutional rights.
Quote
 
 
+15 #51 Vijay123 2012-02-24 10:01
இது நான் சவுக்கோட இந்த கட்டுரையை படிப்பதற்கு முன்னாள் ஃபசெபோக்ல போட்ட கருத்து:
இந்த விஷயத்துல நிறைய சொல்ல வேண்டியது இருக்கு. அவங்கள வெறும் சந்தேகத்தின் பெயரில் தான் கைது செய்ய போனார்கள். அவர்கள் தான் குற்றவாளிகள் என்று உறுதியாக யாரும் சொல்லவில்லை. அப்படியே இருந்தாலும் வெறும் திருட்டு செஞ்சவங்களுக்கு இந்த தண்டனை ரொம்ப ...ஜாஸ்தி. வீடு புகுந்து ஆளை கொன்று விட்டு கொள்ளை அடிச்சிட்டு போறவங்க எல்லாம் வெளியதான் சுத்திட்டு இருக்காங்க. இதுல ஏதோ பெரிய சதி இருக்கு. அதுவும் சங்கரன் கோயில் எலெக்ஷன் வர நேரத்துல நடந்திருக்கு. பொதுவா கலைஞர் ஆட்சியில ரவுடியிசம் அதிகமா இருக்கும் ஆனா அம்மா ஆட்சியில போலீஸ் காரங்களே அந்த வேலைய செய்ய ஆரமிச்சுடுவாங்க . ஒரு அஞ்சு பசங்க இருக்க இடத்தை சுத்தி ரவுண்டு அப் பண்ணியாச்சு. அவங்களால கண்டிப்பா தப்பிச்சு போக முடியாது. இவங்க அதுல ஒரு ரெண்டு பேரை சுட்டு கொன்று இருந்தாலும், மத்தவங்க கண்டிப்பா வந்து சர்ரண்டர் ஆகி இருப்பாங்க. அஞ்சு பேரையும் சுட்டு கொன்றது நம்பும் படியா இல்லை. அதிலும் இந்த திருட்டுல வெறும் ஐந்து பேர் தான் கூட்டு என்பது இவங்களுக்கு எப்படி தெரியும்? நல்லா சம்பாரிச்சிட்டு இருக்க ஒரு இஞினியரிங் படிச்ச மாணவன் பேங்க் கொள்ளை அடிச்சான் என்பது நம்பும் படியா இல்லை. அதே அவன் நூதனமா ஏதாச்சும் ஃப்ரௌட் வேலை பண்ணான்னு சொன்னா நம்பலாம்.

வங்கில இவங்க அடிச்சது மக்கள் பணமாக இருந்தாலும் அதுக்கு பொறுப்பு வங்கியும் அரசும் தான். அரசியல் வாதீங்க கோடி கோடியா அடிக்கிறாங்க ஆனா இவங்க அடிச்ச இருபது லட்ச ரூபாய்க்கு மரண தண்டனையா? அதுவும் அவங்க தான் அடிச்சாங்கன்னு உறுதியா தெரியாது. செத்து... போனவங்களுக்கு நம்ம ஊரு சட்டத்தை பற்றி தெரியாதா? அத்தனை கொலை பண்ண கசாப் இன்னும் பிரியாணி சாப்பிட்டுகிட்ட ு சந்தோஷமா இருக்கான். நம்ம ஊருல பல பேர் போலீஸ் உதவியோட சீட்டு கம்பெனி நடத்தி கொள்ளை அடிக்கறாங்களே? அவங்க யாருக்கும் இந்த மாதிரி என்கவுண்டர் நடக்கவே நடக்காது.

இந்த என்கவுண்டருக்கு சப்போர்ட் பண்ணுற இதே மக்கள் தான் கோடி கணக்குல ஊழல் பண்ணுற அரசியல் கட்சிகளுக்கு மாத்தி மாத்தி ஓட்டு போடுறாங்க. ஈஈட் முடிச்சிட்டு அரசியலுக்கு வர முயற்சி பண்ணுற ஒரு சில மாணவர்களுக்கு டெபாசிட் கூட கிடைக்க மாட்டேங்குது
Quote
 
 
+6 #50 K Velmurugan 2012-02-24 08:40
Quoting TechTamil Karthik:
#1. Government should fix unemployment.
#2. Government should control pricing & living expenses.
#3. If killing is the solution.,
Kill Kasab,
Kill Assamese Indian Army
Kill impotent Indian navy, Who failed to protect tamil fisherman.
Kill ALL corrupt politicians.

Justice should NOT given with emotion!


I completely agree with you. Justice should not be given on emotions. OK

but WHAT ARE ALL THIS

Kill Kasab,
Kill Assamese Indian Army
Kill impotent Indian navy, Who failed to protect tamil fisherman.
Kill ALL corrupt politicians.

IS this out emotions or what?
Quote
 
 
+11 #49 HAI MUTHU... 2012-02-24 08:07
5 உயிர்கள் லட்சம் பணத்திற்காக...
வேதனை... முறையற்ற செயல்...
Quote
 
 
+21 #48 Vijay123 2012-02-24 08:05
அடப்பாவீங்களா! இந்த என்கவுண்டருக்கு சப்போர்ட் பண்ணவும் ஆள் இருக்கா?
@சுன்டநிப்ரொ: அவங்க பாவிங்கன்னு இன்னும் நிரூபிக்கப்படவி ல்லை. அவன் அப்பாவியா இருக்க கூட வாய்ப்பு இருக்கு.
@கொவை முருகன்: அவுங்க எங்க வீட்டுல புகுந்து கொள்ளை அடிச்சிருந்தாலு ம், அவங்க சாகனும்னு நினைக்க மாட்டேன். பணம் திரும்ப கிடைக்கணும், அப்படியே கிடைக்கலைன்னாலு ம் நம்ம கிட்ட இருந்து திருடுன பணம் அவங்களுக்கு உபயோகமா இருக்க கூடாதுன்னு தான் நினைப்பேன். சரி, நான் திரும்ப கேட்கிறேன், அந்த ஐந்து பேரில் உங்க தம்பியோ அண்ணனோ இருந்த இந்த மாதிரி தான் பேசுவீங்களா? என் தம்பி கண்டிப்பா தப்பு செஞ்சிருக்க மாட்டான். இதுல ஏதோ தப்பு நடந்திருக்கு. தீர விசாரிச்சா உண்மை தெரியும்னு சொல்லுவீங்க இல்ல? இவங்களுக்கு அதுக்கு கூட வழி இல்லாம பண்ணிட்டாங்களே?
Quote
 
 
+9 #47 sind 2012-02-24 05:50
People supporting encounters for bank robbery are utterly stupid/cruel/emotional idiots. Please value human life. We don't even know whether these guys were involved in robbery, it has to be decided after investigation. I appreciate Savukku's article.
Quote
 
 
+5 #46 BrokenHeart 2012-02-24 05:13
These kinds of incidents are a great danger to civil society. Police can kill anybody . There is no need for courts,law ...etc. Very serious matter.
Quote
 
 
+33 #45 Valliappan 2012-02-24 04:44
தவறு செய்யாத மனிதன் யாரிங்கே....தவறின் அளவு வேண்டுமாயின் வேறுபடும்.

ஒரு நொடியில் உடலை விட்டு பிரிக்கும் உயிரை கோடி முறை அழுது வேண்டினாலும் திரும்ப கொண்டு வந்து சேர்க்க முடியுமா?

தண்டனைகள் எதுவாயினும் மனிதனை வேரோடு திருத்துவதாய் இருக்கவேண்டுமே தவிர அவனை வேரோடு அழிப்பதாய் இருக்க கூடாது.
Quote
 
 
+32 #44 Sarvanan021 2012-02-24 02:04
[ஃஉஒடெ நமெ="சொவை முருகன் "]சவுக்கு உனக்கு என்ன பைத்தியம் பிடிச்சிடுச்சா??? எங்கயோ வாடா நாட்டுல இருந்து இங்க வந்து கொள்ள அடிப்பானுங்க , அப்புறம் கொல பண்ணுவானுங்க ...நம்ம போலீஸ் வாயில லத்திய வச்சிக்கிட்டு நிக்கணும் இல்லையா ? உங்களுக்கு திரிபாதி மேல கண்டுன்னா அவர தனியா ஒரு கட்டுரையில போட்டு கிழிங்க அத விட்டுட்டு சும்மா கொலைகாரனுங்க கொள்ளகாரனுங்கள ஏன் சப்போர்ட் பண்ணுறீங்க ? சரி நீங்க சொல்ற மாதிரியே இதுல யாரவது ஒருத்தர் இந்த கொள்ளை சம்பவத்துல சம்பந்த படாதவருன்னு வச்சிக்குவோம் ...அவனுக்கு என்ன பு+++ற வேலையா அங்க ...இந்த மாதிரி நாய்கள இன்னும் பத்து பேத்த போட்டு தள்ளுனாதான் எவனும் வாலாட்டமாட்டன் ....(இவனுங்க அஞ்சு பெரும் உங்க வீட்ட்ல புகுந்து எதாவது கொள்ள அடிச்சிட்டு போய் இருந்தா இப்படியா ஒக்காந்து வியாக்கியானம் பேசுவீங்க சவுக்கு ஜி ][/ஃஉஒடெ]

அய்யா ஒரு வேளை உங்க தம்பி டீ கொடுக்கறதுக்காக அந்த அறைக்குள்ள அப்போது போயிருந்தாலும் சுட்டுருப்பாய்ங ்களேயா! அப்போ அவருக்கு அங்க என்ன புடுங்கற வேலைன்னா கேப்பீங்க! அப்பறம் நம்ம தமிழ் நாட்டுக்காரர் கேரளத்துல ஒரு பெண்ணை ரயில்ல கற்பழிச்சதுக்கா க, தூக்கு தண்டணை கொடுத்தாங்கலே அப்போ அதுவும் நியாயம் தானா? அப்பவும் மலையாலி என்கவுன்டர் பன்னலையேய்யா! சரிய்யா அவங்க கொள்ளையடிச்ச 30 லட்சத்த நான் கொடுக்கற்ன்யா, நீங்க அந்த பயலுகல திருப்பி கொடுக்க முடியுமா? சரிய்யா அம்மா மேல பெங்களூர் கோர்ட்ல நடக்கற கேஸ்ல அம்மா பணம் கொள்ளையடிச்சுறு க்காங்கன்னு தீர்ப்பு வந்துச்சுன்னா இதே தண்டனைய அவங்களுக்கும் வாங்கி தருவீங்களா? ஏம்ப்பா அப்படின்னா செல்வாக்கு, புகழ் இருக்கறவனுக்கு ஒரு நியாயம்,இல்லாதவ னுக்கு ஒரு நியாயமா, சொல்லுங்க? இதுல கொடுமை என்னன்னா , இப்போ நீங்க இதை ஆதறிச்சீங்கன்னா , நாளைக்கு நீங்களும் விக்டிம் மா மாறுவதுக்கு வாய்ப்பு இருக்கு!!!! தம்பி கேஸ் நடக்கும் போதெ இப்படி! தீர்ப்பு சரியா வந்தா, தர்மபுரி சம்பவம் மறந்துருக்க மாட்டீங்க!!!!
Quote
 
 
+31 #43 ஷாலி 2012-02-24 00:08
கொள்ளையர்கள் என்றும் கொடியவர்களே! இதில் எவருக்கும் இரு கருத்தில்லை.ஆனால் நடந்த சம்பவத்தில் கொல்லப்பட்டவர்க ள் ஐவரும் உண்மையான குற்றவாளிகளா?

போலீஸ் சொல்வதைவைத்து எல்லோரும் ஆதரிக்கிறார்கள் .
நம்ம தமிழ்நாட்டு கஞ்சா போலிசைப்பற்றி நன்கு தெரிந்தும் அவர்கள் சொல்வதை நம்பும் அப்பாவிகள் இன்னும் இருக்கின்றார்கள ே!

குற்றவாளிகளிடமி ருந்து தங்களை காத்துக்கொள்ளத் தான் என்கவுன்ட்டர். ஆனால் தங்கள் பதவி நாற்காலிகளை பாதுகாக்க இங்கு என்கவுன்ட்டர் நடக்கிறது. உலகிற்கு உண்மை தெரிந்து விடக்கூடாது என்பதற்காக ஒருவரைக் கூட விடாது கொண்டிருக்கிறார ்கள்.

என்கவுண்டரில் கொல்லப்பட்டது ஐந்து பேர் மட்டுமல்ல ஆறாவதாக சட்டமும் நீதிமன்றமும் சேர்த்துத்தான்.
செத்தவன் எவனும் இனி சாட்சி சொல்ல வரமாட்டான்.
இதுவரை இந்தியாவில் நடந்த போலீஸ் என்கவுன்டர்களில
கொல்லப்பட்டவர்க ள் அதிகமானோர் நிரபராதிகளே!

சவுக்கு கொள்ளையர்களை ஆதரிக்கவில்லை.ஆனால் நடந்த சம்பவத்தில் உள்ள முரண்பாடுகளை சொல்கிறது.

இந்தியன் பாங்குகளை கொள்ளை அடிப்பவர்களுக்க ு போலி(ஸ்)
என்கவுன்ட்டர். ஆனால் இந்தியாவையே கொள்ளை அடிக்கும் மந்திரிகளுக்கு போலீஸ் சல்யூட். வெல்டன் சவுக்கு.



..
Quote
 
 
+4 #42 senthil_TCS 2012-02-23 23:27
government thought to prove police power again by killing
Quote
 
 
+9 #41 Mukilan 2012-02-23 23:15
இரண்டு தினஙளூக்கு முன் கொள்ளயர்கள் சிவப்பு நிற மாருதியில் தப்பி சென்றதாக செய்தி வெளீயிட்டனர். ஆனால் கரர் பற்றி எந்த தகவலும் இல்லை. ???????
Quote
 
 
+3 #40 TechTamil Karthik 2012-02-23 23:07
#1. Government should fix unemployment.
#2. Government should control pricing & living expenses.
#3. If killing is the solution.,
Kill Kasab,
Kill Assamese Indian Army
Kill impotent Indian navy, Who failed to protect tamil fisherman.
Kill ALL corrupt politicians.

Justice should NOT given with emotion!
Quote
 
 
+18 #39 http://koothadivedd 2012-02-23 22:57
கொள்ளைக்காரர்கள ் சமூக விரோதிகள் தண்டிக்கப்படவேண ்டியவர்கள். தண்டனை கொடுக்கவேண்டியத ு நீதிமன்றம். பொலிஸார் தண்டனை கொடுப்பதாக இருந்தால் நீதிமன்றங்கள் தேவையில்லை. ஐந்துபேரை உயிருடன் பிடிக்க பொலிஸாரால் முடியவில்லை. பிறகெதற்கு பொலிஸ் துறைக்கு பெருத்த பதவி அடைமொழிகளும் பந்தாக்களும்? அரை மணி நேரத்தில் சுட்டாவது பிடிக்கவேண்டிய தேவை என்ன வந்தது? கொல்லப்பட்டவர்க ள் தீவிரவாதிகள் என்றும் பொலிஸ் சொல்லவில்லை.

கொள்ளைக்காரர்கள ் என்கௌண்டர் செய்யப்படவேண்டி யவர்களாக இருந்தால் நாட்டில் ஒரு மந்திரிமாரும் நடமாடமுடியாது. வடமானிலத்தவர்கள ் என்றால் சுட்டுக்கொல்லலா ம் என்ற மனநிலையிருந்தால ் அப்புறம் ஒருமைப்பாட்டுக் கும் தேசியத்திற்கும் என்ன வேலையிருக்கிறது .

இதே வைராக்கியத்தை வீரத்தை பலகோடி ஊழல் கொள்ளையடித்தவர் களை ஏன் இந்தபொலிஸ் ஒன்றும் செய்ய முடியவில்லை

அரச இயந்திரம் சர்வாதிகாரத்தை நோக்கி சரிவதன் அடையாளம்தான் இப்படியான தொலைநோக்கற்ற தாந்தோன்றித்தனம ான (என்குண்டர்)படு கொலைகள். உணர்வு மயமாக பார்க்கும்போது சரிபோல தென்படலாம். ஆனால் இது மிக மிக தவறான உதாரணமாகும்.
Quote
 
 
+11 #38 மனோன்மணி 2012-02-23 22:48
நீங்கள் கூறுகின்ற தஞ்சாவூர்காரர்க ள் இருவரும் ஏதோ கட்டுமரமாக மிதக்கிறார்களே தவிர அவர்களுக்கு கீழிருக்கும் தமிழக நீரோட்டம் வெகுவாக மாறிக்கொண்டிருக ்கிறது- குறிப்பாக சென்னை மாநகரம்!.

இருகோணங்களில் பார்க்கலாம். பீகார் மாநிலம் வறுமை நிறைந்த ஹிந்தி இறுதயப்பகுதி, இந்தியா முழுவதுக்கும் சொந்தமான 2 லட்சம் கோடி ரூபாய் பணத்தை விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு குடும்ப உறுப்பினர்கள் மட்டும் கொள்ளையடித்து தமிழ்நாட்டில் பதுக்கிவைத்து? இருப்பதால் பீகார் இளைஞர்கள் இங்கே கொள்ளையடிக்க வந்தார்களோ என்னமோ?.

அடுத்து, மிக நன்றாக திட்டமிட்டு இயங்கும் "மாவோயிஸ்டுகள்". எது எப்படியிருந்தால ும் இந்த இளைஞர்கள் அம்புகளாகவே தென்படுகிறது- எய்தவர்கள் பதுங்கிவிட்டார் கள், அல்லது மிகப்பெரிய வலையமைப்பிற்கான "துப்பை" தமிழக காவல்துறையினர் வேண்டுமென்றே கோட்டை விட்டுள்ளனர்.
அதாவது, ஆட்சியை நிர்ணயிக்கும் சக்தியாக "சென்னை பாதாள உலகம்" மாறி வருகிறது?. கமிஷ்னர் திரிபாதியும் ஒரிசாவை பூர்விகமாக கொண்டவர்தான் - ஆந்திரா, ஒரிசா, சட்டிஷ்கர் கமிஷ்னர்களைப்போ ல், மாவோயிஸ்டுகளிடம ் கமிஷன் வாங்குகிறாரா?

Shootout in Chennai is relief for Jaya government- G Pramod Kumar Feb 23, 2012.

Anti-Bihari sentiment? - http://en.wikipedia.org/wiki/Anti-Bihari_sentiment
Quote
 
 
+9 #37 RAJKUMARPANDIAN 2012-02-23 22:28
வட இந்தியர்கள் ,வேறு மொழி பேசுபவர்கள் நம் தமிழ்நாட்டில் நிலம் வாங்க தடை விதிக்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வர மாநில அரசு மத்திய அரசை நிர்பந்திக்கவேண ்டும்.இந்த என்கவுன்ட்டர் போலி ஆனது தான்..ஆனால் கொல்லபட்டவர்கள் ..கொள்ளையர்கள் என்றே நான் நம்புகிறேன் ..ஒரு வங்கி பணியாளரின் மனநிலையில் இருந்து யோசித்து பாருங்கள் .. எதாவது தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் ஒரு நாள் சென்று பாருங்கள் இந்த கலாசாரமற்ற கூட்டத்தின் ஒழுக்கத்தை அப்போது புரியும் சவுக்கு..வங்கியில் வேலை செய்பவர்களுக்கு நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் ..கொள்ளை அடித்தாலும் கொலை செய்தாலும் ..மனித உரிமை என்ற பெயரில் நீங்கள் வரிந்து கட்டுவதால் தான் ..மக்கள் மனித உரிமை பேசுபவர்களை பெரிதாக எடுத்து கொள்ளுவதில்லை..போலி encounter தான் என்றாலும் .. கொள்ளை காரர்களுக்கு உயிர் பயம் மட்டும் நிஜம்.
Quote
 
 
+3 #36 Raskal 2012-02-23 22:19
இன்னும் சில முட்டாள்கள் இந்த Fake Encounter சரியாணுது என்று கூறுவதை பார்த்தல் கேவலமாக உள்ளது ... தெள்ள தெளிவாக உற்று கவனித்தாலே தெரிகிறது இது போலி Encounter என்று ...
Quote
 
 
-10 #35 ramasaway 2012-02-23 22:13
ஒரு கட்டுரையை எழுதும்போது அந்த தகவல் மூலம் என்ன கூற வருகிறோம் என்பது தெளிவாக்கப்படவே ண்டும் , இது மேதாவித்தனமாக எழுதியதாக நினைத்து எதையாவது எழுதி மக்கள் நாறதன்மாக திட்டும் அளவிற்கு தரம் தாழக்கூடாது, ஒன்றில் நீ சென்னை போலீசாரை குற்றம் கண்டுபிடிக்க எழுதுகிறாயா அல்லது கொள்ளையர்கள் நியாயமானவர்கள் என்று எழுத வருகிறாயா து .......மீட்டருக்காக எழுதுபவர்களை கட்டுரை எழுத சொன்னால் இப்படிதான்
Quote
 
 
+7 #34 Dhanaa 2012-02-23 21:55
மனது வலிக்கிறது ஐந்து உயிர்கள், குருவி சுடுவது மாதிரி சுட்டடிருக்கிறா ர்கள்.
எங்கே செல்கிறது இந்திய ஜன நாயகம்?
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 156 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday4550
mod_vvisit_counterYesterday10087
mod_vvisit_counterThis week4550
mod_vvisit_counterLast week78861
mod_vvisit_counterThis month217369
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12739488