முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
வேளச்சேரி என்கவுண்டர் படுகொலை ? மீதம் உள்ள 5 பேர் கதி என்ன ? அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 24
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
சனிக்கிழமை, 25 பிப்ரவரி 2012 06:56

சென்னையில் அடுத்தடுத்து நடந்த இரண்டு வங்கிக் கொள்ளையில் சம்பந்தப்பட்டதாக கருதப்படும் ஐந்து நபர்களை சென்னை மாநகரக் காவல்துறையினர், சென்னை வேளச்சேரியில் எஸ்.என்.முதலித் தெருவில் உள்ள ஒரு வீட்டில் வைத்து கொலை செய்தனர்.    இந்த என்கவுண்டர் சம்பவத்தை விவரிக்கும் காவல்துறையினர்,  ஐந்து நபர்களை விசாரிப்பதற்காக சென்ற காவல்துறையினரை நோக்கி அந்த ஐந்து நபர்களும் சராமாரியாகச் சுட்டதால், தங்களைத் தற்காத்துக் கொள்ளவும், பொதுமக்களைப் பாதுகாப்பதற்கும் வேறு வழியின்றி துப்பாக்கிச் சூடு நடத்தியதில், அவர்கள் அனைவரும் இறந்து போனார்கள் என்ற தகவலை வெளியிட்டது.

DSC_5599

மேலும், தொலைக்காட்சியிலும், மற்ற ஊடகங்களிலும் வெளியிடப்பட்ட வங்கிக் கொள்ளையில் சம்பந்தப்பட்ட நபருடைய புகைப்படத்தைப் பார்த்து, வேளச்சேரிப் பகுதியில் குடியிருக்கும் ஒருவர் ரகசியமாக கொடுத்த தகவல்களை வைத்து, காவல்துறையினர் அந்த இடத்தை சோதனையிட்டதாக தகவல்கள் காவல்துறையால் தெரிவிக்கப் பட்டது.

தற்போது, சவுக்குக்கு வந்துள்ள தகவலின் படி, காவல்துறையினர், இந்த வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் என்று சந்தேகிக்கப்பட்ட 5 நபர்களை வேளச்சேரியிலேயே பிடித்துள்ளனர்.  பிடிக்கப்பட்டவர்களை விசாரிக்கையில், அவர்களோடு தங்கியிருந்தவர்களை காட்டுமாறு போலீசார் கூறியதையடுத்து, மற்ற ஐந்து நபர்கள் தங்கியிருந்த 335, எஸ்.என்.முதலி தெரு வீட்டை பிடிபட்ட நபர்கள் அடையாளம் காண்பித்துள்ளனர்.    காவல்துறையினர் அந்த வீட்டுக்குள் நுழைந்ததும், வீட்டினுள் இருந்த அனைவருமே சரண்டர் ஆகியிருக்கின்றனர்.  சரணடைந்தவர்களை, அருகே இருந்த துணியை எடுத்து, கைகளை பின்புறம் கட்டி, போலீஸ் வேனில் ஏற்றியுள்ளனர்.

அனைவரையும் போலீஸ் வேனில் ஏற்றி, கொண்டு செல்லுகையில், ஒரு 100 மீட்டர் தூரத்தை கடந்த பிறகு, பிடிபட்டவர்களை என்கவுண்டரில் கொல்லுமாறு உத்தரவு வருகிறது.   இந்த உத்தரவை வழங்கியது திரிபாதிதான் என்றும் கிடைத்த தகவல் கூறுகிறது.    வேன் மீண்டும் எஸ்.என்.முதலி தெருவுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, 5 பேரை வேனிலேயே வைத்து விட்டு,  5 பேரை அந்த அறைக்குள்ளேயே வைத்து சுட்டுக் கொன்று விட்டதாகத் தெரிகிறது.

சவுக்குக்கு தகவல் சொன்ன நபர், மீதம் உள்ள அந்த 5 நபர்களின் உயிரையாவது காப்பாற்றுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.   இந்தத் தகவல், காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் பத்திரிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பப் பட்டுள்ளது.   5 பேரை கொலை செய்து தங்கள் கரங்களில் ரத்தத்தோடு இருக்கும் சென்னை மாநகர காவல்துறையினர், மீதம் உள்ள 5 நபர்களையாவது கொலை செய்யாமல் நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்த வேண்டும் என்பதே, நியாயமானவர்கள் விடும் கோரிக்கை.

 

 

Comments  

 
+4 #21 vennai 2012-03-06 12:19
engaya ponanga indha 5 peru. savukku sankar office aa?? oru proff kooda illai inna thedhi varai.... everyday i am seening this article and lauging from backside
Quote
 
 
0 #20 Vijay123 2012-02-27 15:29
//அவர்கள் சத்யாகிரகம் செய்தவர்கள் அல்ல. துப்பக்கியை காட்டி கொள்ளையடித்தவரே . இவர்களை சட்டப்படி தண்டிப்பது நடவாத காரியம். இம்மாதிரி ஆட்களால் தமிழகம் பீகாராக மாறுவது நிச்சயம்.//
எல்லாம் சரிதான். அந்த அவர்கள் யாரு? அந்த அவர்களை போட்டு தள்ளினால் சரிதான். இவர்களும் அவர்களும் ஒன்னு தானா? வீரமணியை போட்டு தள்ளும்போது யாரும் சப்போர்ட் பண்ணலியே. அது வேறு. இது வேறு.
Quote
 
 
-3 #19 Vijay123 2012-02-27 15:26
//அய்யோடா எப்படிபட்ட கருத்து... செத்தவங்க என்ன அவங்க அப்பா அம்மா கிட்டயா திருடுனாங்க...//

செத்தவங்க தான் திருடுனாங்களா?
Quote
 
 
+12 #18 chinnakundoosi 2012-02-26 12:24
அவ்வளவு ஏன், சென்ற ஆட்சியில் மதுரையில் பட்ட பகலில் பத்திரிக்கை அலுவலகத்தை தாக்கி மூன்று பேரை எரித்து கொன்ற அட்டாக் பாண்டி, முன்னாள் அமைச்சரை நடு ரோட்டில் வெட்டி கொலை செய்த மன்னன், எஸ்ஸார் கோபி..இவர்களுக்கெல்லா ம் மேலாக போலீஸ் துறையையே தன கோவணத்தில் இறுக்கி முடிந்து வைத்திருந்த, பல மர்ம கொலைகள் புரிந்த மாமா பொட்டு சுரேஷ், திருச்சியில் ரெட்டை கொலைகள் புரிந்த நேரு மற்றும் அவர் தம்பிகள் மற்றும் கைத்தடிகள், சேலத்தில் ஆறுகொலை ஆறுமுகம், அவரது மகன் மற்றும் தம்பி மகன் போன்ற என்கவுண்டர் செய்ய தகுதியானவர்களுக ்கு எல்லாம் பாதங்களை கழுவி விட்டுக்கொண்டிர ுந்தது மட்டுமின்றி, இந்த ஆட்சியிலும் அவர்களிடம் பொறுக்கி தின்ற தங்கள் விசுவாசத்தை காட்டும்விதமாக அவர்கள் சுலபமாக ஜாமீனில் வெளி வருவது போல வழக்கு பதிவு செய்த போலீசை என்ன சொல்றது? என்கவுண்டர் செய்யப்படவேண்டி யவர்களை தைரியமாக வெளியில் நடமாட விட்டுவிட்டு யாரோ முகம் தெரியாதவர்களை குற்றவாளிகள் என்று கூறி சுட்டுக்கொலை செய்து கணக்கை முடிக்க பார்கும் போலீஸ்காரர்களை கண்டிப்பாக சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்று தர வேண்டும். அரசன் அன்றே கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்.
Quote
 
 
+10 #17 Ravi 2012-02-25 23:25
இந்த அதிர்ச்சி தரும் செய்தியை ஏன் மற்ற் ஊடகங்கள் அல்லது செய்திப் பத்திரிக்கைகள் வெளியிட வில்லை. இப்படி முதுகெலும்பில்ல ாமல் இருப்பதற்கு பத்திரிக்கை அல்ல்து ஊடகங்களை நடத்தாமலே இருக்கலாமே. என்ன கேவலம் இது? இது போல பயந்து பயந்து இருப்பதனாலேயே இந்த காவல்துறையும் அரசு அதிகாரிகளும் மாற மறுக்கின்றனர். சட்டத்தைப் பாதுகாப்பது வேறு. சட்டத்தை தன் கையில் எடுத்துக் கொள்வது வேறு என்று இவர்கள் என்று உணரப் போகிறார்கள்.?
Quote
 
 
-6 #16 Karthikeyan Palanisa 2012-02-25 20:07
[ஃஉஒடெ நமெ="பட்மன்"]சின்ன வயதில் நான் கூடதான் எங்கப்பா சட்டைப் பையிலிருந்து தெரியாம காசு எடுத்திருக்கிறே ன். அதுக்காக எங்க அம்மாவும், அப்பாவும் என்னை கண்டித்திருக்கி றார்கள், தண்டித்துமிருக் கிறார்கள். அந்த தவறுக்காக என்னை கொன்று விடவில்லையே!.
[/ஃஉஒடெ]

அய்யோடா எப்படிபட்ட கருத்து... செத்தவங்க என்ன அவங்க அப்பா அம்மா கிட்டயா திருடுனாங்க...
Quote
 
 
+4 #15 fool 2012-02-25 19:07
அனைவரையும் போலீஸ் வேனில் ஏற்றி, கொண்டு செல்லுகையில், ஒரு 100 மீட்டர் தூரத்தை கடந்த பிறகு, பிடிபட்டவர்களை என்கவுண்டரில் கொல்லுமாறு உத்தரவு வருகிறது. இந்த உத்தரவை வழங்கியது திரிபாதிதான் என்றும் கிடைத்த தகவல் கூறுகிறது. வேன் மீண்டும் எஸ்.என்.முதலி தெருவுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, 5 பேரை வேனிலேயே வைத்து விட்டு, 5 பேரை அந்த அறைக்குள்ளேயே வைத்து சுட்டுக் கொன்று விட்டதாகத் தெரிகிறது.அப்படியென்ரல் திரிபாதிதான் சுடபடவென்டியவர்
Quote
 
 
+10 #14 chinnakundoosi 2012-02-25 18:12
காந்தியை கோட்சே சுடும்போதாவது பலநூறு பேர் அதை நேரில் பார்த்திருக்கிற ார்கள். ஆனால் இந்த ஐந்து பெரும் கொள்ளையடித்ததாக போலீஸ்தான் சொல்கிறது..அப்படியே இவர்கள் கொள்ளை அடித்ததாக வைத்துக்கொண்டால ும் உடனே அவர்களை சுட்டுக்கொல்ல வேண்டிய அவசியம் என்ன? நாட்டில் இதைவிட பெரிய களவானிகளும் கொலைகாரர்களும் போலீஸ் செல்வாக்கோடு நடமாடிக்கொண்டு இருக்கிறார்களே? மக்கள் பணத்தை கோடி கோடியாக கொள்ளை அடித்து கொழுத்து கிடக்கும் ஊழல்வாதிகளையும் , கட்டப்பஞ்சாயத்த ு ஆசாமிகளையும், கந்துவட்டிக்கார ர்களையும் கண்டு எந்த போலீஸ் அதிகாரிக்கும் நெஞ்சு பொங்கி எழவில்லையே? அவர்களில் ஒருவரைக்கூட இதுவரை எந்த போலீசும் என்கவுண்டர் செய்யவில்லையே? சொல்லப்போனால் அவர்களுக்கெல்லா ம் பக்கபலமாகதானே இந்த போலீஸ் செயல்படுகிறது? இயற்கை நீதியை மீறியவிதமாக தானே குற்றம் சாட்டுபவராகவும் நீதி வழங்குபவராகவும் போலீஸ்துறை செயல்படுவது அக்கிரம்மமானது மட்டுமல்ல, நீதித்துறையின் அதிகாரத்தில் குறுக்கிடுவதாகு ம்
Quote
 
 
+13 #13 inigo anto xavier 2012-02-25 17:50
This is not encounter,this is a preplanned murder executed by tamilnadu police
Quote
 
 
-4 #12 bambino 2012-02-25 14:59
அவர்கள் சத்யாகிரகம் செய்தவர்கள் அல்ல. துப்பக்கியை காட்டி கொள்ளையடித்தவரே . இவர்களை சட்டப்படி தண்டிப்பது நடவாத காரியம். இம்மாதிரி ஆட்களால் தமிழகம் பீகாராக மாறுவது நிச்சயம்.
Quote
 
 
-13 #11 Sebastian 2012-02-25 14:23
இலங்கையின் இராணுவத்தினரும் , மக்களும், மகாவம்சத்தால் தமிழர்கள்தான் தங்களுக்குப் பிரச்சனை. தஞ்சாவூரை மையமாக அமைந்த சோழா பூரிகள் பிரசனையை கொன்றால் எல்லாம் அமைதி என்றுதான் கடந்த 30 வருடங்களாக உடல், பொருள் ஆவி அனைத்தையும் கொடுத்து உருவாக்கியுள்ளன ர். இந்தியாவில் சிங்களவர் இல்லை.

மே 2009 க்குப் பிறகு பெரும் வேலைவாய்ப்பை வழங்கிய இலங்கை இராணுவத்திற்கு வேலையில்லை. தமிழர் எதிர்ப்பு வேலைவாய்ப்பு இல்லையென்றால் இராணுவம் மகிந்த குடும்பத்திற்கு எதிராக திரும்பும்.
இலங்கை சிறையில் உள்ள முன்னால் விடுதலைப்புலி உறுப்பினர்களுக் கும் இதே நிலைதான். இதற்காக இலங்கைத் தமிழர் மிக அதிகமாக வசிக்கும் "கனடாவிலா" சண்டையிட முடியும். கிடைத்தது தமிழகம்- டாலர்களை ரூபாயாக தூக்கிப் போட்டால் தற்கொலைப்படைக்க ு "பீகாரிகள்". ஏற்கனவே உல்ஃபா மற்றும் மாவோயிஸ்டுகளை "உறிஞ்சும்" இலங்கையை மையமாக கொண்ட "சீன" அமைப்புகள்.

மாவோயிஸ்டுகளின் தலைவர்கள் பலர்(ஆந்திராவை சேர்ந்த) பலர் சென்னையிலும்,ஹை த்ராபாத்திலும், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து,கன டாவிலும்,இலங்கை த்தமிழருடன் கூட்டாக ரெஸ்டாரண்டுகளும ், தொழில்களும் நடத்துகின்றனர்.
இதற்கு இலங்கை அரசாங்கம் தன்னுடைய கோணத்திலிருந்து ஆதரவு தருகிறது !.
Quote
 
 
+16 #10 deepu 2012-02-25 14:22
இருக்கும் அந்த 5 நபர்கள் யார்?
இறந்த இந்த 5 நபர்கள் யார்?

என்னதான் நடக்கிறது இந்த ஜனநாயக நாட்டில்?
Quote
 
 
+25 #9 ஷாலி 2012-02-25 14:20
இதுதாண்டா போலீஸ்- என்பதை ஐந்து கொலைகள் மூலம் சென்னை மாநகர காவல்துறை மீண்டும் நிரூபித்துள்ளது .

கொலை நடந்த அறையில் எடுக்கப்பட்ட போட்டோக்கள் காவல்துறையின் கைவேலைக்கு சாட்சி சொல்கின்றன.

ஐந்து பேர்களையும் அறையில் அமரவைத்து நெஞ்சில் சுட்டுள்ளர்கள். ஆகவேதான் இரத்தம் ஒரே இடத்தில் குளமாக தேங்கிக்கிடக்கி றது.
என்கவுண்டரில் போலீஸ் சுட்டிருந்தால்,
குண்டடி பட்டவர்களின் இரத்த சிதறல்கள் சுவர்களில் பட்டு
தெரித்திருக்கும ். ஆனால் சுவர் சுத்தமாக உளளது.

என்கவுண்டரில் ஏராளமான துப்பாக்கி குண்டுகள் பரவலாக சீறிப் பாய்ந்து சுவர்களில் பட்டு அதன் தழும்புகள் கண்டிப்பாக இருக்கும். ஆனால் இங்கு குறி பார்த்து குருவியை சுடுவதுபோல்
சிக்கனமாக சுட்டுள்ளனர்.

எது எப்படியோ,ஒன்று நன்றாகத் தெரிகிறது அம்பாளின் அனுக்கிரகம் வேண்டியே வேட்டையாடியுள்ள ார்கள்
திருபாதிக்கு இரண்டு கிரவுண்டு அரசு நிலமும் ஐந்து லட்ச்சமும்.
அம்மாவின் ஆசியுடன் கிடைக்கலாம்.

நம்மைப்பொருத்தவ ரை, திருபாதியால் கொல்லப்பட்ட ஐவருக்கும் இறுதியில் கிடைத்த ஆறடி நிலம் தான்.கொன்றவருக்கும் நிரந்தரம்.
Quote
 
 
+26 #8 பரங்கியன் 2012-02-25 12:53
சவுக்குக்கு வந்த தகவல் எந்தளவுக்கு நம்பகமானது?? அதை நிருபிக்கும் ஒரு ஆதாராமாவது வெளியிட முடியுமா?
Quote
 
 
+7 #7 JaganT 2012-02-25 10:46
காவல்துறைக்கு அளவுக்கு மீறிய அதிகாரம் கொடுத்து கொலை செய்ய வைக்கும் அளவுக்கு நிர்வாகம்.. :((
பாவம் அந்த அப்பாவிகள்.
ஜெ.க்கு கோர்ட்டில் இன்னொரு ஆப்பு உறுதி.
Quote
 
 
+2 #6 Padman 2012-02-25 10:31
சின்ன வயதில் நான் கூடதான் எங்கப்பா சட்டைப் பையிலிருந்து தெரியாம காசு எடுத்திருக்கிறே ன். அதுக்காக எங்க அம்மாவும், அப்பாவும் என்னை கண்டித்திருக்கி றார்கள், தண்டித்துமிருக் கிறார்கள். அந்த தவறுக்காக என்னை கொன்று விடவில்லையே!.

மனிதர்கள் ஒவ்வொரு விதத்திலும் எதாவது ஒரு சந்தர்ப்பத்தில் தவறு செய்வது இயல்பு. அம்மா என்றழைக்க வேண்டுமென நினைப்பவர் இப்படி கருணையே இல்லாமல் இருப்பது நியாயமில்லை.

எல்லா உயிகளும் இந்த பூமியில் கடவுளுக்கே சொந்தம். நம் இந்திய அரசியல் சட்டத்திலேயே இருக்கிறது... தன் உயிரை தானே கூட மாய்த்துக் கொள்ளக்கூடாது என. தற்கொலையே குற்றமெனும் போது இது எப்பேற்பட்ட குற்றம்?

பிரதமர் பதவிக்கு ஆசைப்படும் ஒருவர் இது போல தவறுகளில் ஈடுபடுவது சரியல்ல. குற்ற செயல்களை தடுக்க இதுபோன்ற முடிவுகளும் சரியல்ல.

போலி என்கவுன்டரில் நரேந்திர மோடி பதவி எந்த அளவுக்கு ஆட்டம் கண்டது என்பது த.நா. முதல்வருக்கு தெரியாமல் போனது ஆச்சர்யம். இவருடைய பிரதமர் பதவி கனவில் இந்த செயல் எந்த அளவுக்கு பாதிப்பை ஏறபடுத்துமென்பத ை யாரவது எடுத்து சொல்லுங்கள். இவரை மத்தியில் போட்டியாக நினைப்பவர்கள் என்ன என்ன வேலைகள் இனி செய்வார்கள் என்பது போக போக தெரியும். தில்லி தமிழ்நாடு பவன் எதிரில் கூடிய விரைவில் இந்த போலி படுகொலைக்கு எதிராக போராட்டம் நடக்குமென்று நம்புகிறேன்.

பைத்தியக்காரத் தனமான ஒரு முடிவை த.நா. முதல்வர் எடுத்துவிட்டார் என்பதை அவர் நம்பும் அந்த கடவுளே விரைவில் உணர்த்துவார்.
Quote
 
 
+10 #5 kali.krishna 2012-02-25 10:12
வாழ்த்துக்கள் சவுக்கு,
காவல்துறையில் இருக்கும் நேர்மையான அதிகாரிகள், நடந்த உண்மையான சம்பவத்தை வெளி உலக்குக்கு கொண்டுவர உதவி செய்யவேண்டும். இதன் மூலம் அந்த உயிர்கள் காப்பாற்ற படுவதோடு, இனிமேலும் இப்படியான அராஜகங்கள் நடப்பதை தடுக்க முடியும்.
Quote
 
 
+12 #4 குட்டி 2012-02-25 10:08
பிணம் தின்னும் நாய்கள்....எதற்காக இந்த போலி நாடகம்?? யாரை திருப்தி படுத்த இந்த வேட்டை?
Quote
 
 
+20 #3 ஊர்க்குருவி. 2012-02-25 09:37
சட்டம் உண்டு, ஆனால் அது நமக்கில்லை!
நீதியுண்டு, ஆனால் அது எங்களுக்கில்லை!
கேள்வியுண்டு, ஆனால் எவரும் கேட்கக்கூடாது!
நாங்கள் எத்தனை கோடியும் கொள்ளையடிக்கலாம ், வேறு எவரும் கொள்ளையடிக்கக்க ூடாது!
நாங்கள் கொள்லையடிச்சா எங்களுக்கு உதவ மத்திய அரசுண்டு. மற்றவன் பிற்பொக்கற் அடித்தால் என்கௌண்டர் உண்டு!
நாங்க கோர்ட்டுக்கு போகாட்டி கிடைக்கும் வாய்தா. நீ புடிபட்டா கிடைக்கும் தோட்டா!
Quote
 
 
+19 #2 chinnakundoosi 2012-02-25 08:56
இந்த விஷயத்தை பற்றி கருத்து பதியும் பலரும் போலீஸ் இந்த மாதிரி குற்றவாளிகளை இப்படிதான் சுட்டு கொல்லவேண்டும் என்று ஏதோ போலீஸ் பெரிதாக சாதித்துவிட்டதை போல கொண்டாடுகிறார்க ள். இது மிக ஆபத்தான மனப்போக்கு ...ஜனநாயக நாட்டில் ஒருவன் குற்றவாளியா இல்லையா என்பதை நீதிமன்றம்தான் உரிய விசாரணை செய்து தீர்மானிக்கவேண் டும்..போலீசார் நீதிமன்ற விசாரணைக்கு உதவியாக துப்பு துலக்கி விசாரித்து உரிய சாட்சியங்கள் மூலம் குற்றத்தை நிரூபிக்க உதவ வேண்டும். தண்டிக்கும் அதிகாரம் நீதித்துறைக்கு மட்டுமே உள்ளது. ஏற்கனவே போலீசார் தங்கள் அதிகாரத்தை எந்த அளவுக்கு துஷ்ப்ரயோகம் செய்கிறார்கள் என்பது கண்கூடு. ஒரு முறையாவது காவல் நிலையத்துக்கு நியாயமான காரணத்துக்கு செல்பவர்களுக்கு (அதாவது பாஸ்போர்ட் வெரிபிகேஷன், வாகனம் தொலைந்தால் புகார் செய்வது போன்றவை) போலீசார் எந்த அளவுக்கு சாமான்யர்களை பொருட்படுத்தமாட ்டார்கள் என்பது தெரியும். நினைவில் கொள்ளுங்கள் ...நாளை இதேபோல உங்கள் பக்கத்துக்கு வீட்டுக்காரருக் கும் உங்களுக்கும் ஒரு சிவில் பிரச்னை ஏற்பட்டு, அந்த பக்கத்து வீட்டுக்காரர் எதாவது ஒரு முறையில் செல்வாக்கான நபராக இருந்தால் அவரிடம் பேருக்கு ஒரு புகாரை பெற்று உங்கள் மீது பொய்யான ஒரு கேஸ் போட்டு பெண்டு நிமித்திவிடுவார ்கள் இதே போலீஸ்காரர்கள். அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு அடிவருடிகளாகவும ் சாமான்ய மக்களை வதைத்து உதைக்கும் இரக்கமற்றவர்களா கவும், அதே பிரிட்டிஷார் காலத்து போலீசாகவேதான் தற்பொழுதும் நம் நாட்டில் போலீஸ் செயல்பட்டு வருகிறது. நீதித்துறையிலும ் சட்டம் மற்றும் நடைமுறைகளில் உள்ள ஓட்டைகளையும் சரி செய்தால்தான் மக்களுக்கும் neethimandranga lmeethum நம்பிக்கை ஏற்படும். ஆனால் நம் அரசியல்வாதிகள் அதை செய்யவிடமாட்டார ்கள். மக்கள்தான் தங்கள் vaakkurimaimool am சரியானவர்களை தேர்ந்தெடுத்து ஒரு மாற்றத்தை கொண்டு வரவேண்டும்.
Quote
 
 
+7 #1 அன்பு 2012-02-25 08:01
பேய்கள் ஆட்சி செய்யும் நாட்டில் வேறு என்ன எதிர் பார்க்க முடியும்?

இந்த படுகொலையின் மூலம் அனைவர் மனதிலும் ஒரு பயத்தை உன்டு பன்னிவிட்டார்கள ்...

இவர்கள் நினைத்தால் யாரை வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் கொலை செய்வார்கள்...

யாராலும் எந்த கேள்வியும் கேட்க முடியாது.

போலீஸ் அல்ல... அரசாங்க கூலிப்படையினர்..
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 160 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday1899
mod_vvisit_counterYesterday9391
mod_vvisit_counterThis week1899
mod_vvisit_counterLast week78643
mod_vvisit_counterThis month283274
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12805393