|
சென்னையில் இன்று நடப்பது வேறு யாருடைய ஆட்சியுமல்ல… ஐபிஎஸ் அதிகாரி திரிபாதியின் ராஜ்யமே நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. கடந்த 23 அதிகாலையில் 5 இளைஞர்களை கொன்றதிலிருந்தே திரிபாதியின் ஆட்டம் அதிரடி ஆட்டமாக மாறியிருக்கிறது.

சவுக்கு பல முறை ஏற்கனவே சொல்லியிருந்தது போல, அதிமுக ஆட்சி வந்தாலே மிகுந்த அதிகாரத்தோடு கொண்டாட்டமாக இருப்பவர்கள் காவல்துறையினர்தான். ஜெயலலிதாவின் செல்லப்பிள்ளைகள் போலத்தான் காவல்துறையினர் எப்போதுமே நடத்தப்படுவார்கள். இது மீண்டும் ஒரு முறை நிரூபணமாகியிருக்கிறது.
1991-1996 ஆட்சி காலத்தில் ஜெயலலிதா ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களை அடித்து ஒடுக்கியதும், மகாமகம் குளத்தில் குளிக்க வந்தவர்களை ஓட ஓட விரட்டிக் கொன்றதும், ஜெயலலிதா ஆட்சிக்கு எதிராக வழக்கு போட்டவர்களை கொலை செய்ய முயன்ற ரவுடிகளை பாதுகாத்ததும் ஜெயலலிதா காவல்துறையின் சாதனைகள். அதே போல, 2001-2006 ஆட்சி காலத்தில் கருணாநிதியை நள்ளிரவில் கைது செய்ததும், அதை எதிர்த்து நடந்த ஊர்வலத்தில் ரவுடிகளை விட்டு திமுகவினரையும், பத்திரிக்கையாளர்களையும் தாக்கியபோது, அமைதியாக அதை வேடிக்கை பார்த்ததும் இதே காவல்துறைதான்.
அதே காவல்துறைதான் இன்று ஜெயலலிதா கொடுத்துள்ள அதிகாரத்தால் தமிழகத்தை ஆண்டுகொண்டிருக்கிறது. கடந்த பிப்ரவரி 23 அதிகாலை வங்கிக் கொள்ளையர்கள் என்று சந்தேகிக்கப்பட்ட 5 பேரை திரிபாதி தலைமையிலான காவல்துறை சுட்டுக் கொன்றதிலிருந்தே காவல்துறையின் ஆட்டம் அதிகமாகித்தான் போயுள்ளது.
23 அதிகாலை 5 பேரை சுட்டுக் கொன்ற காவல்துறை, தொடக்கத்தில் இறுமாப்பாகத்தான் இருந்தது. ஆனால் கொலை செய்யப்பட்டவர்களின் அடையாளம் கூடத் தெரியாமல் சுட்டுக் கொன்றுள்ளார்கள் என்ற முணுமுணுப்பு எழத் தொடங்கியதிலிருந்தே உஷாரானார் திரிபாதி. சரியான முறையில் இந்த என்கவுன்டர் விவகாரத்தை கையாள வில்லையென்றால் சிக்கலைச் சந்திக்க நேரிடும் என்பதை உணர்ந்த திரிபாதி, தொடர்ந்து என்கவுன்டரை நியாயப்படுத்தும் வேலைகளில் இறங்கத் தொடங்கினார்.
திரிபாதி இது போல அம்பலப்பட்டதற்கான முக்கிய காரணம் ஊடகங்கள். ஊடகங்கள் என்றால் அனைத்து ஊடகங்களையும் சேர்த்துக் கொள்ள முடியாது. பாராட்டப்பட வேண்டிய பணியைச் செய்தது இரண்டே இரண்டு ஊடகங்கள் மட்டுமே. அவை இந்து நாளேடு மற்றும் ஜுனியர் விகடன்.

இந்து நாளேடு எழுப்பிய கேள்விகளை கண்டு அஞ்சி நடுங்கினார் திரிபாதி. எப்படிப்பார்த்தாலும் இது உண்மையான என்கவுன்டராக இருக்க வாய்ப்பே இல்லை என்று படம் போட்டு, அம்பலப்படுத்தி இதழும் என்கவுன்டர் தொடர்பான சந்தேகங்களை வலுவாக எழுப்பியது. மற்ற அச்சு ஊடகங்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். இதில் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் நக்கீரன் இதழில் வந்த கட்டுரைதான். காவல்துறை டீம் அங்கே சென்றதும், கதவைத் தட்டினார்களாம்…. ஆனால் உள்ளிருந்து துப்பாக்கியை லோட் செய்யும் சத்தம் வந்ததும் சுடத் தொடங்கினார்களாம். ஆனால் அடுத்த இதழிலேயே சுதாரித்துக் கொண்ட நக்கீரன், அதற்கு நேர்மாறான கட்டுரையை வெளியிட்டது.
காட்சி ஊடகங்களைப் பொறுத்தவரை புதிய தலைமுறை மற்றும் ஹெட்லைன்ஸ் டுடே ஆகிய ஊடகங்களைப் பாராட்டியே ஆக வேண்டும். புதிய தலைமுறை செய்தியாளர் மகாலிங்கம் அதிகாலை 3.30 மணிக்கு சம்பவ இடத்துக்கு வந்தார். காலை 7.30 மணிக்கு செய்தியாளர் சுப்பையா வந்தார். வந்தது முதல் புதிய தலைமுறை தொலைக்காட்சியினர் தொடர்ச்சியாக மக்களிடம் பேட்டி வாங்கி இரவு 10 மணிக்கே காவல்துறையினர் அந்த இடத்துக்கு வந்ததை அம்பலப்படுத்தினர்.
மற்ற ஊடகங்களைப் பற்றிச் சொல்வதற்கு எதுவுமே இல்லை. காவல்துறை சொல்வதை அப்படியே வாந்தி எடுக்கும் டைம்ஸ் ஆப் இந்தியா நாளேடு, இந்து நாளேட்டின் நெருக்கடியால், வேறு வழியின்றி என்கவுன்டரில் சந்தேகத்தை எழுப்பியது. சந்தேகத்தை ஒரு புறம் எழுப்பினாலும், மறு புறம், கொலை செய்யப்பட்டவர்கள் நக்சலைட்டுகளா என்பது போன்ற அயோக்கியத்தனமான செய்திகளும் டைம்ஸ் ஆப் இந்தியாவில் வந்து கொண்டுதான் இருந்தது. மற்ற புலனாய்வு வாரமிருமுறை இதழ்கள், நாளிதழ்கள் அத்தனையும், திரிபாதி சொல்ல விரும்பியதைச் சொல்லின. ஒரு வாரமிருமுறை இதழ், “வட இந்தியாவிலிருந்து தமிழகத்தில் குற்றம் புரியலாம் என்று கிளம்புபவர்களுக்கு நடுக்கம் உண்டாகும் வகையில் இந்த என்கவுன்டர் அமைந்தது” என்று சிலாகித்தது. ஆனால், அடுத்த வாரமே, வட இந்தியாவைச் சேர்ந்தவர்கள் துப்பாக்கியோடு, ஒரு சிறுவனைக் கடத்திப் பிடிபட்டனர்.

24 பிப்ரவரி, அன்று செய்தியாளர்களைச் சந்தித்த திரிபாதி காலை முதல் தொலைக்காட்சிகளில் காவல்துறையினர் இரவு 10 மணிக்கே வந்தார்கள் என்று செய்தி வெளியிட்டதைப் பற்றி கவலையே படாமல், நள்ளிரவுதான் அந்த இடத்துக்கே காவல்துறையினர் சென்றார்கள் என்று கூசாமல் பொய் சொன்னார். கொல்லப்பட்டவர்கள் யார் என்பதை அங்கிருந்து கைப்பற்றப்பட்ட வாக்காளர் அடையாள அட்டைகளை வைத்து கண்டுபிடித்துள்ளோம் என்று அறிவித்து அந்த விபரங்களை வெளியிட்டார்.
ஹெட்லைன்ஸ் டுடே தொலைக்காட்சி, திரிபாதி வெளியிட்ட பெயருள்ள நபர், பீகாரில் லாரி ஓட்டிக் கொண்டிருக்கிறார் என்பதை அம்பலப்படுத்தியது. இதன் பிறகுதான் திரிபாதி வெகு தீவிரமாக எதிர் நடவடிக்கைகளில் இறங்கினார்.
திடீரென்று காவல்துறையினருக்கு ஆதரவாக போஸ்டர்கள் நகரெங்கும் முளைத்தன. சென்னை நகரில் உள்ள பருப்பு வியாபாரிகள், புண்ணாக்கு வியாபாரிகள் போன்றோர் திரிபாதியை சந்தித்து “தற்காப்புக்காக சுட்டு கொலை செய்ததற்காக” பாராட்டு தெரிவிக்கத் தொடங்கினர். இவர்கள் இவ்வாறு சந்தித்து பாராட்டு தெரிவித்ததை செய்திக் குறிப்பாக சென்னை மாநகர காவல்துறை வெளியிட்டு,அந்தச் செய்தியை பத்திரிக்கைகளில் வெளியிடுமாறு கேட்டுக் கொண்டனர். எழும்பூரைச் சேர்ந்த ஒரு சில வழக்கறிஞர்களும் திரிபாதியை தங்கள் பங்குக்கு பாராட்டினர்.







திரிபாதியை பாராட்டிய கவிஞர் புயல்வேந்தன். (புயலில் பறக்கும் சருகு போல இல்லை ?)






இவ்வாறு பாராட்டுபவர்கள் யாரென்று பார்த்தால் காவல்துறையினரின் தயவை எதிர்ப்பார்த்து இருப்பவர்களே செய்துள்ளார்கள் என்பது நன்கு தெரியும். மேலும், ஒரு நல்ல அரசு அதிகாரி, இது போன்ற மலிவான விளம்பரங்களில் ஒரு போதும் ஈடுபட மாட்டார். இது போன்ற மலிவான விளம்பரங்களில் ஈடுபடுபவர், ஒரு கடைந்தெடுத்த அயோக்கியத்தனமான அரசியல்வாதி மட்டுமே. திரிபாதி எந்த வகையைச் சேர்ந்தவர் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
திரிபாதி சொன்னதை அச்சு மாறாமல் வெளியிட்டன நாளிதழ்கள். இந்த போலி மோதல் படுகொலையைச் செய்து விட்டு, திரிபாதி இன்னும் இறுமாப்பாக பவனி வந்து கொண்டிருப்பதற்கான காரணம், ஜெயலலிதா இது போன்ற கொலைகார காவல்துறை அதிகாரிகளுக்கு கொடுக்கும் ஆதரவே…. டான்சி வழக்கில் கைது செய்யப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்ட ஜெயலலிதா, கொசு கடிக்கிறது என்று புகார் கூறினார். தனக்கு என்று வந்தால் கொசுக்கடியைக் கூட தாங்க முடியாத ஜெயலலிதா, உண்மையான குற்றவாளிகளா இல்லையா என்று தெரியாத 5 இளைஞர்களை சுட்டுக் கொன்ற திரிபாதிக்கு ஆதரவு தெரிவித்து இன்னமும், கமிஷனர் பதவியில் உட்காரவைத்து அழகு பார்த்துக் கொண்டிருக்கிறார். நேர்மையான அதிகாரி என்று பரவலாக நம்பப்படும் ராமானுஜமும், மவுனச்சாமியாராக உட்கார்ந்து கொண்டு, தமிழகத்தில் நடக்கும் அத்தனை அட்டூழியங்களையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்.
திரிபாதியின் அராஜகம் எந்த அளவுக்கு சென்று விட்டதென்றால், சென்னையில் வாடகைக்கு குடியிருக்கும் அத்தனைபேரின் விபரங்களையும், புகைப்படத்தோடு, அருகாமையில் உள்ள காவல் நிலையத்தில் வழங்க வேண்டும் என்று உத்தரவிடும் அளவுக்கு சென்று விட்டது. சென்னை மாநகரின் குறுநில மன்னனாகவே திரிபாதி தன்னைக் கருதிக் கொண்டிருக்கிறார் என்றால் அது மிகையாகாது. இவ்வாறு தகவல் கொடுக்கத் தவறும் வீட்டு உரிமையாளர்கள் மீது இந்தியத் தண்டனைச் சட்டம் பிரிவு 188ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற மிரட்டல் வேறு… ….
சென்னையில் வாடகைக்கு குடியிருப்பவர்களைக் கேட்டுப்பாருங்கள்… சென்னையில் வீடு கிடைப்பது எவ்வளவு சிரமம் என்பதைச் சொல்வார்கள். அதிலும், இது போல அராஜகமான உத்தரவுகளை நிறைவேற்ற வேண்டும் என்று வீட்டு உரிமையாளர்களுக்கு நெருக்கடி கொடுத்தால் வீடு கிடைக்குமா என்பதை யோசித்துப் பாருங்கள். வீட்டு உரிமையாளர்களுக்கும் இது எத்தனை பெரிய நெருக்கடி என்பதை யோசித்துப்பாருங்கள்.
வடமாநிலக் கொள்ளையர்களை விரட்ட வேண்டுமென்றால், முதலில் விரட்டப்பட வேண்டியது, ஜாங்கிட், திரிபாதி போன்ற போலீஸ் உயர் அதிகாரிகளே… முகப்பேரில் அரசு கோட்டாவில் வீடு வாங்கிக் கொண்டு, நெற்குன்றத்திலும் பேராசையோடு வீடு வாங்கியுள்ள திரிபாதி செய்ததும், இறந்த அந்த இளைஞர்கள் வங்கியைக் கொள்ளையடித்தற்கும் பெரிய வேறுபாடு இல்லை. அதிகாரம் இருப்பதால் இவர் சட்டபூர்வமாக கொள்ளையடிக்கிறார். பதவி இல்லாததால் அவர்கள் வங்கியைக் கொள்ளையடிக்கிறார்கள்.
திரிபாதிக்கு சவுக்கு ஒன்றைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறது. தமிழகத்தில் காவல்துறை அதிகாரிகள் யாருமே செலுத்தாத அதிகாரத்தைச் செலுத்தியவர், முன்னாள் டிஜிபி துரை. இவர் வாகனம் டிஜிபி அலுவலகத்திலிருந்து கிளம்பும் போது, முதலமைச்சருக்காக வாகனங்கள் நிறுத்தப்படுவது போல, இவருக்காகவும் வாகனங்கள் நிறுத்தப்பட வேண்டும். இவர் இறுதியாக தற்கொலை செய்து கொண்டார். சவுக்கு வாசகர்களுக்கு நன்கு அறிமுகமான ஜாபர் சேட் செலுத்தாத அதிகாரமா ? இப்போது அவர் எங்கே இருக்கிறார், எப்படி இருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும்.
கொள்ளையடித்தாக சந்தேககிக்கப்பட்ட 5 பேரை கொலை செய்து விட்டு, அதே இறுமாப்போடு சென்னை மாநகர மக்களை மிரட்டி ஒடுக்கும் திரிபாதியும் இதே கதியைத்தான் அடைவார். அதிகாரத்தின் உச்சத்தில் ஆணவத்தோடு இருந்தவர்களுக்கு வரலாறு இதே பாடத்தைத்தான் கொடுத்திருக்கிறது.
|
Comments
காங்கிரஸ் உங்களுடைய நியாமற்ற தேவைகளை, உங்கள் அபிமானம் பெற்ற தீவிர வாதிகளை ஆதரிக்கவில்லை என்று நீங்கள் வெறுப்பதால் அவர்களுக்கு நஷ்டம் வொன்றும் இல்லை. நன்றி மறந்தவர்களுக்கு , செய்த வுதவியை மறந்தவர்களுக்கு இந்தியா செய்தது சரிதான். காங்கிரசை நீங்கள் நேசிப்பதும் அல்லது வெறுப்பதும் உங்கள் இஷ்டம். அவர்களை நேசிக்க உங்களை வற்புறுத்தவும் நான் தயார் இல்லை.
உங்களுக்கும் எனக்கும் சிந்தனைகளில் மட்டும் அல்ல, சித்தாந்தத்திலு ம் கருத்து வேறுபாடு உள்ளதால் கருணாநிதியின் வார்த்தையில் சொல்லவேண்டுமென் றால் "எதிர் லாவணி" பாடமுடியாது. உங்கள் வார்த்தையிலேயே சொல்வதென்றால் "பாஸ்" செய்துவிடுகிறேன ்.
அண்டை நாடுகளுடன் வெளி உறவு கொள்கைகளை பேணும் போது ஆறு கோடி மக்களின் நலனை விட 100 மக்களின் நலனையும் கருத்தில் கொண்டு தான் இந்திய செயல்படமுடியும் .
இன்றைய ஈழ தமிழர்களின் நிலை கண்டு நல்லவர்கள் யாராக இருந்தாலும் மனம் வெதும்பி துடிக்கின்றனர். ஆனால் ஒன்றும் செய்ய இயலாத நிலையில் உள்ளோம். ஆனால், இதற்க்கு இந்தியா 'மட்டும்' காரணம் இல்லை. இயலாமையில் சிலர் துவண்டு போவர்கள். சிலர் வ்ரக்தி அடைவார்கள். ஆனால், சிலர் நடைமுறை சாத்திய கூறுகளை ஆராய்வார்கள்.
இன்றைய காலகட்டகளில் சொரணை மட்டும் இருந்தால் போதாது. அனுசரணையும் தேவை. அனுசரணை என்பதை அடிவருடித்தனம் என்று கொள்ள தேவயில்லை.
இறையாண்மையை கடை பொருளாக நினைபவர்களுக்கு நீங்கள் சொன்ன விலாசம் பொருந்தும்.
காங்கிரஸின் மீதும், அதன் தலைமை(கள்) மீதும் அதீத வெறுப்பு ஏற்பட்டமைக்கு ஆயிரம் உதாரணங்களை இங்கே காட்ட முடியும். நான் ஏன் காங்கிரஸை நேசிக்க வேண்டும் என்பதற்கு ஒரு சில உதாரணங்களையாவது நீங்கள் காட்ட முடியுமா?
அதென்ன சார்...குச்சி மிட்டாய்,குருவி ரொட்டி மாதிரி அப்பப்ப ஒரு வார்த்தை சொல்றீங்க... "இந்திய இறையாண்மை"ன்னு.... அது எந்த கடையில விக்குது? சொன்னா நாங்களும் கொஞ்சம் வாங்கிகுவோம்ல?
1. போனா போவுது நம்ம இந்தியன் தானேன்னு காவிரியில் தண்ணி விடாம தண்ணி காட்டுறானே கன்னடன், அவனோட 'கடையிலையா'?
2. நமக்கு தமிழன் சோறு போட்டாலும், அவனுக்கு ஒரு டம்ளர் தண்ணிகூட கொடுக்ககூடாதுன் னு பெரிய்ய மன்சோட இருக்கானே 'மலையாளி'. அவனோட 'ஆலுகாஸ் ஜூவல்லரி' கடையிலையா?
3. எங்களுக்கு சொந்தமான கச்சத்தீவை கொடுத்துட்டு, தனக்கு சொந்தமே இல்லாத காஷ்மீரை தினமும் நாசம் செய்யுது இந்திய அரசு, அதோட கடையிலையா?
4. 40 எம்.பி இருந்தாலும் தமிழ்நாடு எங்களோட மயிருக்கு சமம்ன்னு சகட்டு மேனிக்கு 2 லட்சம் தமிழனை கொன்னு குவிச்சானே அந்த கடையிலையா?
5. எப்போவெல்லாம் தமிழனுக்கு சொரணை வருதோ, அப்போவெல்லாம் அவனுக்கு மட்டும் 'இறையாண்மை' ஊசிபோட்டு திரும்பவும் தூங்க வைக்க ஒரு குரூப் கெளம்புதே அந்த கடையிலையா?
எங்கே இந்திய இறையாண்மை என்று தேடாதீங்க. நான் சொல்றேன் அது எங்கே இருக்குன்னு.
'இந்தியா இலங்கை கிரிகெட்' மேட்ச் நடந்தாலும், இந்தியா வெற்றி பெற வேண்டும் என்று வேண்டியவன் ஈழத் தமிழன். அப்படிபட்டவனை முள்ளிவாய்க்கால ் வரை விரட்டி சென்று பிய்த்து எறிந்தது இந்திய அரசு. அதனால் அனாதைகளான பிஞ்சு குழந்தையின் சூ**தில் இருக்குது 'இந்திய இறையாண்மை'....
//வங்கிகள் நாளையே கூட அவரது சொத்துகளை விற்று கொடுத்த கடனை திரும்ப பெற முடியும்// என்று சொல்லியுள்ளீர்க ள். இனி மல்லையாவுக்கு எஸ்.பி.ஐ கடன் அளிக்காது என்று பிராணாப் சிலவாரங்களுக்கு முன்னால் சொன்னது உங்களுக்கு தெரிய்வைல்லை போலும். ஊத்திகொண்ட ஒரு கம்பெனிக்குத் தான் இந்த வ்ங்கிகள் பணத்தை வாறி இறைத்துள்ளன.ஆனால் கூசாமல் மல்லையா சொத்தை வித்து கடன் அடைத்துவிடுவார் என்று சொல்லி இருக்கிறீகள். அத் தான் எப்படி என்று புரியவில்லை. " மெக்டவல் க்ரெஸ்ட் பைனான்ஸ்" என்ற பைனான்ஸ் கம்பெனியை ஆரம்ப்த்து ஒட்டுமொத்த வாடிக்கையாளர்கள ுக்கு பட்டை நாமத்தை சாத்தியவரி ரொம்ப நல்லவர். அப்படி தானே?
//புலிகள், ராஜீவ் காந்தி கொலை, இந்திய அமைதி படை, சாத்தனின் படைகளை பற்றி நீங்கள் தான் திசை திருப்பிநீர்கள் //
விசித்திரமாக செயல்படுவது என்பதற்க்கு சொன்ன உதாரணங்கள் அவை. மற்றபடி அவை விவாதத்திற்கு எந்த வகையிலும் சம்பந்தம் கிடையாது. அதன் கடைசி வர்களை படித்தால் உங்களுக்கு புரியும்.
//சாத்தனின் படைகள் எதோ இசுலாமியருக்கு எதிரான புத்தகம் என்று எழுதவில்லை. இஸ்லாமியர்களின் நம்பிக்கையை அவமதிக்கும் சாத்தனின் படைகள் என்ற புத்தகம் என்று எழுதிள்ளேன். இல்லை என்று நிருபிக்க முடியுமா ?//
பாஸ். நீங்க திரும்பவும் தப்பான கண்ணோட்டத்திலேய ே 'சாத்தானின் படைகள்' என்ற வார்த்தைகளை நினைத்துகொண்டு இருக்கிறீர்கள். சும்மா கூகுளில் 'சாட்டனிக் ஃபோர்ஸ்' என்று ஆங்கிலத்தில் தட்டி பாருங்கள். அந்த 'சாத்தானின் படைகள்' யார் என்ற உணமை தெரியவரும்.
//புலிகள் ராஜீவை கொலை செய்யவில்லை. அவராகவே, இடுப்பில் கட்டி வந்த வெடிகுண்டை வெடிக்க செய்துவிட்டு, தற்கொலை செய்துகொண்டார் என்று நீங்கள் சொன்னாலும் ஆச்சிரியபடுவதர் கில்லை//
ராஜிவ் காந்தி படுகொலை பற்றி வேறொரு கட்டுரை வராமலா போய்விடப் போகிறது? போதுமான விவரங்களை தெரிந்துவைத்துக ொள்ளுங்கள். அப்போது தான் 'வீரப்பன் கேள்விக்கு' 'பாஸ்' என்று சொல்லி எஸ்கேப் ஆன மாதிரி ஆக முடியாது.
மல்லையா மீதான உங்கள் கருத்துக்கு பதில் என்னுடைய பதிவு எண் 48 இல் எழுதிவுள்ளேன். வங்கிகள் நாளையே கூட அவரது சொத்துகளை விற்று கொடுத்த கடனை திரும்ப பெற முடியும். கம்பனியின் நிதி நிர்வாகம் பழுதடைந்து உள்ளதே ஒழிய வங்கிகளை ஆட்டை போடவில்லை.
உங்கள் பதிவு 57 மறுமுறை பார்க்கவும். புலிகள், ராஜீவ் காந்தி கொலை, இந்திய அமைதி படை, சாத்தனின் படைகளை பற்றி நீங்கள் தான் திசை திருப்பிநீர்கள் .
ராஜிவ் பிரதமர் என்றும், 'சாத்தானின் படைகள்' எதோ இசுலாமியருக்கு எதிரான புத்தகம் என்றும் நீங்கள் சொன்னதில் இருந்து நீங்கள் எந்த அளவுக்கு 'ராஜிவ் படுகொலையின்' பிண்ணனியை புரிந்துவைத்துள ்ளீர்கள் என்று தெரிகிறது.
தவறுதான். முன்னாள் பிரதமர் என்று சரியாய் எழுதியிருக்க வேண்டும்.
சாத்தனின் படைகள் எதோ இசுலாமியருக்கு எதிரான புத்தகம் என்று எழுதவில்லை. இஸ்லாமியர்களின் நம்பிக்கையை அவமதிக்கும் சாத்தனின் படைகள் என்ற புத்தகம் என்று எழுதிள்ளேன். இல்லை என்று நிருபிக்க முடியுமா ?
என்னுடைய பதிவு 59 : ஐந்து கொள்ளைகாரர்களை சுட்டதில் நடக்கும் விவாதத்தில் மேற்கண்ட சம்பவங்களை கொண்டுவர தேவையில்லை என்று எழுதயுள்ளேன்.
புலிகள் ராஜீவை கொலை செய்யவில்லை. அவராகவே, இடுப்பில் கட்டி வந்த வெடிகுண்டை வெடிக்க செய்துவிட்டு, தற்கொலை செய்துகொண்டார் என்று நீங்கள் சொன்னாலும் ஆச்சிரியபடுவதர் கில்லை.
ஒரு கட்சியின் மீது, ஒரு நாட்டின் இறையாண்மை மீது உங்களுக்கு உள்ள ஒரு மிகைபடுத்திய வெறுப்பும், துவேஷமும் உங்கள் எழுத்தில் உங்கள் விமர்சினத்தில் தெரிகிறது.
வாழ்க போலி மனித வுரிமை ஆர்வலர்கள். வளர்க அவர்தம் தொண்டு.
---------------------------
இந்தியாவின் பிரதமரை அவருடைய நாட்டிலேயே கொன்று விட்டு.
எனது மறுமொழி:
----------------
5 பேரின் என்கவுண்டரில் ஆரம்பிச்சீங்க. மல்லையாவை கொஞ்சம் கவனீங்கன்னு சொன்னேன். அதுக்கு பதிலை காணோம். அங்க இருந்து வீரப்பனுக்கு தாவுணீங்க. அதுக்கும் கேள்வி கேட்டேன். அதுக்கு பதில் சொல்லாம எஸ்கேப். நான் விசித்திரமாம பேசுறதா சொன்னீங்க. சுத்தி விசித்திரமா நடக்குற நிகழ்வுகளில் சிலவற்றை எடுத்து சொல்லி மீண்டும் விவாதத்தை விட்ட இடத்திற்கு கொண்டு வந்தேன். அதில் இருந்து ஒரே ஜம்பாக 'ராஜிவ்' கொலையில் புலிகள் என்று தாவிவிட்டீர்கள் . இதற்கு பல கட்டுரைகளில், பலவாறு விவாதித்தாகிவிட ்டது. உங்களைப் போலவே எவரும் பதில் சொல்லவில்லை. இருந்தாலும் பழைய பல்லவியை மீண்டும் ஆரம்பித்ததால் ஒரு மீள்சிந்தனையாக ஒரு சில கேள்விகளை கேட்கலாம் என்று நினைத்தேன். ஆனால் ராஜிவ் பிரதமர் என்றும், 'சாத்தானின் படைகள்' எதோ இசுலாமியருக்கு எதிரான புத்தகம் என்றும் நீங்கள் சொன்னதில் இருந்து நீங்கள் எந்த அளவுக்கு 'ராஜிவ் படுகொலையின்' பிண்ணனியை புரிந்துவைத்துள ்ளீர்கள் என்று தெரிகிறது. மேற்கொண்டு பேசி பிரயோசனம் இல்லை. வாழ்க போலி என்கவுண்டர். வளர்க ஒழுக்க சீலர்கள்.
இந்தியாவின் பிரதமரை அவருடைய நாட்டிலேயே கொன்று விட்டு அதற்க்கு வருத்தம் கூட தெரிவிக்காமல் அதை ஒரு துன்பவியல் சம்பவம் என்று சொன்னவரை -- எங்களுக்கும் சிங்களவர்க்கும் நடக்கும் யுத்தம் சகோதர யுத்தம் அதில் இந்திய தலயிட தேவயில்லை என்று சொல்லி இந்திய அமைதி படையை திரும்ப போக சொன்னவரை -- ஈழ முஸ்லிம்களை தன சொந்த மண்ணை விட்டு விரட்டியவர்களை -- இந்தியா ஆதரிக்கவேண்டும் என்று சொல்வது விசித்திரம் அல்லாமல் வேறு என்ன ?
உங்களுக்கு பிடித்த தலைவரை கொன்ற காங்கிரசை நீங்கள் வெறுக்கும் போது, அவர்கள் தலைவரை கொன்ற கும்பலுக்கு காங்கிரஸ் உதவி செய்யுமா என்ன ?
தன் வலி பிறன் வலி அறிந்து செய்யாத காரியம் தனக்கே கெடுதியில் முடியும். இன்று ஈழ தமிழர்களுக்கு நடக்கும் அத்தனை கொடுமைகளுக்கும் ராஜா பக்ஷே எவ்வளவு காரணமோ அதில் பாதி விடுதலை புலிகளும் தான். இலங்கை - சீனா இரண்டுக்கும் உள்ள நெருக்கம் இந்தியாவை அநீதிக்கு எதிராக பேச அல்லது நடவடிக்கை எடுக்க மிரளவைக்கிறது.
இஸ்லாமியர்களின் நம்பிக்கையை அவமதிக்கும் சாத்தனின் படைகள் என்ற புத்தகத்தை இந்திய இறையாண்மையை மனதில் வைத்து தடை செய்ததில் என்ன தவறு ?
ஐந்து கொள்ளைகாரர்களை சுட்டதில் நடக்கும் விவாதத்தில் மேற்கண்ட சம்பவங்களை கொண்டுவர தேவையில்லை.
---------------------------
உங்களுடைய கருத்தை (தவறாக இருந்தாலும்) ஒத்த மற்ற பதிவுகளை சுட்டி காட்டும் நீங்கள் மற்ற இணைய தள பதிவுகளையும் பார்த்தல் நலம்.
எனது மறுமொழி:
----------------
தயவு கூர்ந்து அந்த இணைய பக்கங்களை இங்கு நீங்கள் குறிபிட்டு இருக்கலாமே? காத்திருக்கிறேன ்.
--------------------------
விமர்சித்து பேசினால் விவாதம் செய்யலாம். வ்ரக்தியில் பேசினால் விவகாரம் பேசலாம். ஆனால், விசித்திரமாக பேசினால், உங்களை என்ன சொல்வது ?
எனது மறுமொழி:
----------------
எது விசித்திரம் என்று நீங்கள் கொஞ்சம் விளக்கினால் தேவலை? 'பொய்யாக இருந்தாலும் சமூகத்துக்கு நல்லது' என்ற கருத்துடன் இங்கு ஐந்து பேரின் என்கவுண்டரை ஆதரித்து பின்னூட்டமிடும் பல்ர் (பலகாலம் அவர்களின் பின்னூட்டத்தை அறிந்தவன் என்பதால்), 'பொய்யாக இருந்தாலும் புலிகள் ராஜிவை என்கவுண்டர் செய்தது தமிழர்களுக்கு நல்லது' என்று சொன்னதே கிடையாது. இது உங்களுக்கு விசித்திரமாக படவில்லையா? இந்திய அமைதிப்படை இலங்கை தமிழர்களை காக்க வந்த ஆபத்பாந்தவன் என்று உளரும் அதே கூட்டம் வாழும் இந்தியாவில், "சாத்தானின் படைகள்" என்ற புத்தகத்தை தடை செய்தது விசித்திரம் இல்லையா? ஒருவனை அடித்தால் திருப்பி உடனே அடிக்கும் இந்த காலத்தில், வல்லரசான இந்தியா ராஜிவ் கொல்லப் பட்டு சுமார் 20 வருடங்கள் கழித்து 'ராஜிவ் கொலையை' காரணம் காட்டி 2 லட்சம் தமிழர்களை கொன்றது விசித்திரம் இல்லையா? கடலில் எல்லை தாண்டிய இந்திய மீனவனை இதுவரை கொலை செய்திராத பாகிஸ்தானை எதிர் நாடு என்றும், தினமும் அதே இந்திய மீனவனை கொலை செய்யும் இலங்கையை நட்பு நாடு என்றும் இந்தியா சொல்வது விசித்திரம் இல்லையா? ஒருபுறம் சிங்களன் இந்திய மீனவன் 20 பேர் மீது கடலில் பெட்ரோல் குண்டை வீசித் தாங்க்கும் போது, மறுபுறம் 'இந்தியா- இலங்கை' பங்கேற்கும் ஆசியக் கோப்பையை சக இந்தியர்கள் பார்த்துகொண்டிர ுப்பது விசித்திரம் இல்லையா? எளியவனுக்கு ஒரு விதி. வலியவனுக்கு ஒரு விதி என்று நீங்கள் பேசுவது உங்களுக்கே விசித்திரமாக இல்லையா?
--------------------------
வீரப்பன் விஷயத்திலும் அவனை மோரில் விஷம் வைத்து கொன்றார்கள் என்றனர் சிலர். அவனை முன்பே கைது செய்து வேறு இடத்தில கொன்றுவிட்டு அம்புலன்சில் வைத்து கொன்றதாக என்றனர் சிலர். தீயவர்களும், வன்முறையாளர்களு ம், கொள்ளைகாரர்களும ் கொல்லபடவேண்டியவ ர்கலே. அதில் நேர்மையான முறை, நேர்மையற்ற முறை என்று ஒன்றும் கிடையாது.
எனது மறுமொழி:
----------------
நடக்கும் நிகழ்வுகளை நீங்கள் எப்படிபட்ட கண்ணோட்டத்தில் பார்க்கிறீர்கள் என்பதற்க்கு இந்த ஒரு சோறே பதம். ஒன்று மட்டும் தெரிந்துகொள்ளுங ்கள். குற்றவாளிகளுக்க ு தண்டனை கிடைக்கவேண்டும் என்ற ஒற்றை புள்ளியில் நீங்களும் நானும் ஒன்றுபடுகிறோம். அது அல்ல பிரச்சனை. இன்னார் குற்றவாளி என்று யார் தீர்மானிப்பது என்பதும், சட்டம் போலிஸ் போன்றவை எல்லாருக்கும் சமமாக உள்ளதா என்பது தான் நமக்குள் இருக்கும் முரண்பாடு. நீங்கள் சொன்ன வீரப்பன் உதாரணத்தையே எடுத்துகொள்வோம் . உங்களது கண்ணோட்டத்தின் படி சந்தனமரம்,யானை தந்தம் கடத்திய வீரப்பன் சாக வேண்டியவன் அதனால் அவன் கொள்ளப் பட்டான். சரி. எனது கண்ணோட்டம் "காட்டில் மறைந்துவாழும் வீரப்பனுக்கு கட்டு கட்டாக,கோடி கோடியாக பணமோ, யானை தந்தமோ, சந்தன மரங்களோ தேவைப் படாது.அதெல்லாம் சொகுசு வாழ்க்கை வாழ்பவர்களுக்கு மட்டுமே தேவைப்படும். சந்தன மரத்தையும்,தந்த த்தையும் விற்ற வீரப்பனை கொன்றுவிட்டீர்க ள். அதை வாங்கிய எத்தனை பேரை போலிஸ் கொன்றுள்ளது? கைது செய்துள்ளது ? குறைந்தபட்சம் அது யார் யார் என்ற தகவலையாவது போலிஸ் வெளியிடுமா?" -- இந்த இடத்தில் தான் நாம் சற்று பிரேக் அடித்து யோசிக்க வேண்டும். இப்போது உங்களுக்கு எதோ ஒரு பொறிதட்டி இருக்கவேண்டும். அதே கண்ணோட்டத்துடன் மல்லையவையும், 'ஐந்து பேரின் என்கவுண்டரையும் ', நாளிதழில் வெளியான சந்தேகங்களையும் அலசி யோசியுங்கள். உங்களுக்கு பிரச்சனையின் இன்னொரு பரிமாணம் கிடைக்கும்.
Excellent Nellai Vaasan,
Savukku loves to hear comments like "Super Savukku". I don't feel like visiting this page quite often
உங்களுடைய கருத்தை (தவறாக இருந்தாலும்) ஒத்த மற்ற பதிவுகளை சுட்டி காட்டும் நீங்கள் மற்ற இணைய தள பதிவுகளையும் பார்த்தல் நலம். விமர்சித்து பேசினால் விவாதம் செய்யலாம். வ்ரக்தியில் பேசினால் விவகாரம் பேசலாம். ஆனால், விசித்திரமாக பேசினால், உங்களை என்ன சொல்வது ?
வீரப்பன் விஷயத்திலும் அவனை மோரில் விஷம் வைத்து கொன்றார்கள் என்றனர் சிலர். அவனை முன்பே கைது செய்து வேறு இடத்தில கொன்றுவிட்டு அம்புலன்சில் வைத்து கொன்றதாக என்றனர் சிலர். தீயவர்களும், வன்முறையாளர்களு ம், கொள்ளைகாரர்களும ் கொல்லபடவேண்டியவ ர்கலே. அதில் நேர்மையான முறை, நேர்மையற்ற முறை என்று ஒன்றும் கிடையாது.
உங்கள் வாதப்படியே, இவர்கள் 5 பேரையும் கைது செய்து, கோர்டில் விசாரணை செய்வார்கள். காசுக்கு சோரம் போகும் சில களவாணி போலீஸ், சில தடயங்களை அழித்து விட்டு, போலீஸ் கேசை கோர்டில் வலுவிழக்க செய்வார்கள். இவர்களும் குற்றமற்றவர்கள் என்று வெளியில் வந்து விடுவார்கள். திரும்பி இன்னும் பல கொள்ளைகளில் ஈடுபடுவார்கள். டெல்லி ஹோட்டலில் ஜெசிகா லால் என்ற பெண்ணை அரசியல் பின்னணி வுள்ள மனு சர்மா என்றவன் துப்பாகியால் சுட்டு கொன்றான். ஆதாரங்கள் தடம் மாறியது. சாட்சிகள் விலை பேசப்பட்டது. போதிய ஆதாரங்கள் இல்லை இன்று அவனை வெளியில் விட்டனர். ஆனால், பொது மக்கள் கிளர்ச்சியால், இன்று திரும்பவும் சிறையில் உள்ளான்.
ஜனயாகம் நல்ல குடிமகன்களுக்கு தான். இவர்களை போன்ற குண்டர்களுக்கு அல்ல.
ஊன்ஃஉஒடெ :
ஹலோ வணங்காமுடி, விஜய் மல்யவுக்கு வங்கிகள் அவருடைய மற்றும் அவருடைய குழுமத்தின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் மேலெதிபர்க்ககுட ியதுதான். விமான சேவைகள் குறைக்க பட்டதால் பொது மக்களுக்கு சிரமம். மற்றபடி வங்கிகள் எதையும் இழக்கவில்லை. ஏனப்பா கொள்ளைகாரர்களுக ்கு இவ்வளவு வகாலத்து வாங்குகிறீர்கள் ? உண்மையை சொன்னால் எங்களை கொலைகாரர்களுக்க ு வகாலத்து வாங்குகிறீர்கள் என்கிறீர்கள்.[/ஃஉஒடெ]
ந்
வால்டர் வணங்காமுடிக்கு பதில் போடாதின்க நண்பரே!!! அவர் ஒரு விசில் அடிச்சான் குஞ்சு. சவுக்கு கட்டுரையை படி!! மாறுபட்ட கருத்து என்றால் உஙகளின் கருத்தை பதிவு செய்யுங்கள்.. வால்டர் வணங்காமுடிக்கு பதில் எழுத வேண்டாம். அவர் உலகத்தை பார்பபதே குறுகிய வட்டத்தில்... தமிழ் ஈழம்... தமிழ் தேசியம்... வாந்தி எடுக்கும் கூட்டம்.
தமிழ் தேச ஞால தலைவர்... ஞாலம் என்றால் உலகம். தேசம் என்றால் நாடு.. இப்படி எல்லாம் பட்டம் குடுத்துக்கொள்ள ூம் கூட்டம் வால்டர் வணங்காமுடியின் கூட்டம்..[/ஃஉஒடெ]
கணிதத்தை பொருத்தவரை (-) * (-) = (+) தான். அதாவது எதிர்கருத்து உள்ளவர்களின் வெற்று காழ்ப்புணர்ச்சி என்பது என்னை பொருத்தவரை 'நல்லது' தான். ஒத்த கருத்துடையவர்கள ் திடீரென மாற்று கருத்து சொல்லும்போது மட்டும் பதட்டப் படுவது நியாயம். மற்ற்படி 'கும்பிடறேன் சாமி' போன்றவர்களின் காழ்ப்புணர்ச்சி களை நான் மயிருக்கும் மதிப்பதில்லை (என்று தெரியப் படுத்தவே இந்த மறுமொழி).
ஊன்ஃஉஒடெ :
ஹலோ வணங்காமுடி, விஜய் மல்யவுக்கு வங்கிகள் அவருடைய மற்றும் அவருடைய குழுமத்தின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் மேலெதிபர்க்ககுட ியதுதான். விமான சேவைகள் குறைக்க பட்டதால் பொது மக்களுக்கு சிரமம். மற்றபடி வங்கிகள் எதையும் இழக்கவில்லை. ஏனப்பா கொள்ளைகாரர்களுக ்கு இவ்வளவு வகாலத்து வாங்குகிறீர்கள் ? உண்மையை சொன்னால் எங்களை கொலைகாரர்களுக்க ு வகாலத்து வாங்குகிறீர்கள் என்கிறீர்கள்.[/ஃஉஒடெ]
ந்
வால்டர் வணங்காமுடிக்கு பதில் போடாதின்க நண்பரே!!! அவர் ஒரு விசில் அடிச்சான் குஞ்சு. சவுக்கு கட்டுரையை படி!! மாறுபட்ட கருத்து என்றால் உஙகளின் கருத்தை பதிவு செய்யுங்கள்.. வால்டர் வணங்காமுடிக்கு பதில் எழுத வேண்டாம். அவர் உலகத்தை பார்பபதே குறுகிய வட்டத்தில்... தமிழ் ஈழம்... தமிழ் தேசியம்... வாந்தி எடுக்கும் கூட்டம்.
தமிழ் தேச ஞால தலைவர்... ஞாலம் என்றால் உலகம். தேசம் என்றால் நாடு.. இப்படி எல்லாம் பட்டம் குடுத்துக்கொள்ள ூம் கூட்டம் வால்டர் வணங்காமுடியின் கூட்டம்..
--------------------------
ஏனப்பா கொள்ளைகாரர்களுக ்கு இவ்வளவு வகாலத்து வாங்குகிறீர்கள் ? உண்மையை சொன்னால் எங்களை கொலைகாரர்களுக்க ு வகாலத்து வாங்குகிறீர்கள் என்கிறீர்கள்.
எனது மறுமொழி:
----------------
போலி என்கவுண்டருக்கு யார் வக்காலத்து வாங்குகிறார்கள் மற்றும் உண்மையான கொள்ளைகாரனுக்கு யார் வக்காலத்து வாங்குகிறார்கள் எனபதை கீழ்கண்ட கட்டுரைகளை படிப்பவர்கள் தெரிந்துகொள்வார ்கள்.
1. http://www.vinavu.com/2012/03/12/mallya-encountered/
2. http://www.openthemagazine.com/article/business/the-art-of-borrowing
Unquote :
ஹலோ வணங்காமுடி, விஜய் மல்யவுக்கு வங்கிகள் அவருடைய மற்றும் அவருடைய குழுமத்தின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் மேல் கடன் கொடுத்திருகிறார ்கள். கொஞ்சம் பண தடுமாட்டம் வந்தவுடனேயே அவருடைய வங்கி கணக்குகளை முடக்கி விட்டார்கள். கிங் பிஷேர் மற்றும் UB குழுமத்தின் சொத்துக்கள் வங்கி கடனை விட அதிகம். பங்கு சந்தையில் கிங் பிஷேர் பங்கின் விலை வீழ்ச்சியால் பங்கு தாரர்களுக்கு இழப்பு. இந்த மார்க்கெட் ரிஸ்க் பங்குதாரர்கள் எதிபர்க்ககுடியத ுதான். விமான சேவைகள் குறைக்க பட்டதால் பொது மக்களுக்கு சிரமம். மற்றபடி வங்கிகள் எதையும் இழக்கவில்லை.
ஏனப்பா கொள்ளைகாரர்களுக ்கு இவ்வளவு வகாலத்து வாங்குகிறீர்கள் ? உண்மையை சொன்னால் எங்களை கொலைகாரர்களுக்க ு வகாலத்து வாங்குகிறீர்கள் என்கிறீர்கள்.
---------------------------
அமைதியை போதிக்கும் இஸ்லாத்தில், ஜிகாத் என்பதற்கு தவறான அர்த்தத்தை புரிந்துகொண்டு உலகெங்கும் தீவிரவாத அமைபிற்க்கும், இந்து மதத்தில் உள்ள தீவிரவாத அமைபிற்க்கும், குற்றவாளிக்கும் கொலைகார்களுக்கு ம் 'மனித உரிமை அமைப்புகள்' என்ற பெயரில் பரிந்து பேசும் உங்களுக்கும் எந்த வித்யாசமும் இல்லை.
எனது மறுமொழி:
----------------
இதுக்கு பேரு தான் தப்பா புரிஞ்சுகிட்டு பேசுறது. தலையை வெட்டி மரணதண்டனை நிறைவேற்றும் நாட்டில் கூட விசாரணைக்கு முன்பே ஊகத்தின் அடிப்படையில் எவரையும் என்கவுண்டர் பாணியில் கொலை செய்யப் படுவது இல்லை. பிடித்து,விசாரி த்து,குற்றம் நிரூபிக்கப் பட்டு,நாள் குறிக்கப் பட்டு,அப்புறம் தான் தலை எடுக்கப் படுகிறது.மிக கொடுமையாக தண்டனை நிறைவேற்றும் நாடுகளிலேயே இது தான் நடைமுறை. ஆனால் ஒரு ஜனநாயக நாடு என்று சொல்லிகொள்ளும் இந்தியாவில் எதற்கு போலி என்கவுண்டர்? அப்புறம் விசாரிக்க நீதிமன்றம் எதுக்கு? இங்கே மனித உரிமை அமைப்புகள் குறிப்பிடுவது இதை தான். சட்டத்திற்கு உட்பட்டு எதை செய்யனுமோ அதை செய்யணும்.அவ்ளோ தான். "சட்டத்தால ஒன்னும் இங்க புடுங்க முடியாது.தலையை வெட்டினால் தான் இவனுங்க திருந்துவானுங்க " என்று சொன்னால் அதையையும் சட்டதிருத்தம்,ந ீதிமன்றம் வாயிலாகத் தான் செய்யவேண்டுமே ஒழிய, போலிஸ் 'சட்டான்பிள்ளை' வேலை பாக்க கூடாது. தாந்தோன்றிதன்மா க செய்லபடும் எந்த அமைப்பும் இந்தியாவை பொறுத்தவரை ஆளுகட்சியின் ஊதுகுழலாகத் தான் இருந்து வந்துள்ளன என்பது வரலாறு. இப்படி இருக்கையில் அஞ்சுபேரை போட்டா எல்லாம் சரியாய்டும் என்பது கடைந்தெடுத்த முட்டாள்தனம்.
unquote :
அமைதியை போதிக்கும் இஸ்லாத்தில், ஜிகாத் என்பதற்கு தவறான அர்த்தத்தை புரிந்துகொண்டு உலகெங்கும் தீவிரவாத அமைபிற்க்கும், இந்து மதத்தில் உள்ள தீவிரவாத அமைபிற்க்கும், குற்றவாளிக்கும் கொலைகார்களுக்கு ம் 'மனித உரிமை அமைப்புகள்' என்ற பெயரில் பரிந்து பேசும் உங்களுக்கும் எந்த வித்யாசமும் இல்லை.
குண்டு வைப்பவனிடம் 'குரானை' பற்றியும், கேட்டை உடைத்து கொள்ளை அடிபவனிடம் 'கீதையும்' சொல்லி திருத்துவதற்கு முடியுமா ? மக்களையும், அவர்தம் உடமைகளையும், உரிமைகளையும் காப்பது போலீஸ் வேலை. எப்படி கொள்ளை அடிபவர்களுக்கு உரிமை உள்ளதோ, அதே போல் அவர்களை கொள்ளவும் போலிசிக்கு உரிமை உள்ளது. தவறு செய்யாதவர்களும் , நல்லவர்களும் நசுக்க படும்போது அவர்களுக்கு ஆதரவு கொடுக்க மனித உரிமை அமைப்புகள் வாதிடலாம். போலீஸ் செய்வது எல்லாமே தப்பு என்று வாதிடவேண்டாம்.
வாதம் செய்யுங்கள். நல்லது. ஆனால், பிடிவாதம் செய்யாதீர்கள்.
Dear Fool of an ass,
Whatever happens in Bombay, it is not our botheration. Just because you idiot is suffering in Bombay, it does not mean we, Tamils have to be like you goondas. We have compassion for everyone except for our traitors.
Unquote :
Well said Mr. Chagla. Congratulations . You have compassion for (i) Land Grabbers (ii) sand smugglers (iii) political goons (iv) criminals & decoits from other states.
My dear sweet idiot, who asked you to bother about the tamilian brotherhood who are staying in other states. Rather they are worried about our state, being looted by criminals and their supporters like you. If you are so compassionate, you show your ass to others. Don't drag others in support of your foolishness.
If you have different view, register it in a decent manner and don't provoke others.
உங்கள் இந்த கட்டுரையில் சில சந்தேகங்கள்,
இந்த 5 பேரும் குற்றவாளிகளாக இருப்பின் இவர்களை போட்டு தள்ளியதில் எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை, அடுத்தவன மிரட்டி கொள்ளை யடிப்பவன், கொலை செய்பவன் அவன் யாராக இருந்தாலும் கொலை செய்யப்படவேண்டி யவனே!! எத்தன கொள்ளைக்காரன் ஜாமீன்ல வந்து ஒழுங்கா வேலை செய்து பொழைக்குரானுங்க ? வெளிய வந்த முத நாளே வக்கீல் செலவுக்கும் சேர்த்து திருடுரானுங்க! இதுல நஷ்டம் அடையுறது பொது மக்களே.. நான் பேங்க் காரனுங்களுக்கு வக்காலத்து வாங்கல அவனுகளும் திருடனுங்கதான். வீட்டுல தனியா இருக்கற பொம்பளைங்க கழுத்த அறுத்து கொள்ளையடிக்கரான ுகலே அவனுங்களுக்கு என்ன தண்டனை கிடைக்கும்?? அவனுகளையும் இப்படி ஒரு 4 பேர போட்டாதான் பயம் வரும், அவனுகளால மக்களுக்கு உயிர் பயம்தான் மிச்சம்..வீட்டுல குடி இருக்க வர்றவன பத்தி தகவல்கள் குடுப்பதில் என்ன சிரமம்?? ஆமா இப்ப நடுக்கற ஆட்சியில தில்லு முள்ளே நடக்குரதில்லையா , இல்ல எல்லா அதிமுக காரனுங்களும் புத்தர் காந்தி மாதிரி நேர்மையானவன்களா ?? ஏனா நீங்க தான் ஊழலுக்கு எதிரா குரல் குடுப்பவராச்சே?? அதான்..
நேர்மையா நீங்க லஞ்சம் வாங்குற போலீஸ் உடைய முகங்களை வெளி படுத்தலாம் ஆதாரத்தோட, அதை விட்டுட்டு, போலீஸ் செய்யுற நல்லத கூட குற்றம் சொல்வதில் அர்த்தம் இல்லை, போலீஸ் ல 99 சதவீதம் லஞ்சம் வாங்குரவன்க்தான ், அதை ஆதாரத்தோட முன் வைங்க அதுதான் உங்கள் மதிப்பை கூட்டும்!!
இது ஒரு அப்பட்டமான மிகவும் தற்போதைய சூழலில் தேவையான மக்களே எதிர்பார்த்த (அது போலியாகவே இருப்பினும், வரவேற்க பட வேண்டிய) என்கவுண்டர் தான்.
கொலையுண்ட 5 பேரின் பழைய சரித்திரமெல்லாம ் இப்பொது விவரமாக வெளிவந்துவிட்டத ு. திரும்ப திரும்ப நீங்கள் சொல்வதை நியாய படுத்த முயற்சி செய்யாதீர்கள். செத்தவர்கள் குற்ற பின்னணி இல்லாதவர்களாக இருந்திருந்தால் , இந்நேரம் நிதிஷ் குமாரும், லாலுவும், ராம் விலாஸ் பாஸ்வானும் பீகார் சட்டசபையில் கலவரம் பண்ணி தமிழ்நாட்டை உண்டு அல்லது இல்லை என்று ஆகியிருப்பார்கள ்.
என்கவுண்டரை வரவேற்று போஸ்டர் ஒட்டியவர்களை காவல் துறையின் தயவை எதிர்பார்பவர்கள ் என்று நீங்கள் கூறினால், நீங்கள் கொள்ளை அடிப்பவர்களின், சமூக விரோதிகளின் தயவை எதிர்பார்த்து இந்த மாதிரி கட்டுரை பதிவு செயகீர்களா ? செத்தவர்கள் ஒன்றும் அப்பாவிகள் அல்ல.
கொலை செய்யப்பட்டவர்க ள் நக்சலைட்டுகளா என்பது போன்ற அயோக்கியத்தனமான செய்திகளும் என்ற உங்கள் வரிகளில் உங்கள் எழுத்து உள் மனதை பிரதிபலிக்கிறது .
நியாயத்தை எழுதுங்கள். வரவேற்கிறோம். எழுதுவதை நியாபடுதாதீர்கள ். அது உங்கள் மதிப்பை எங்கள் மனதில் குறைக்கும்.
Dear Fool of an ass,
Whatever happens in Bombay, it is not our botheration. Just because you idiot is suffering in Bombay, it does not mean we, Tamils have to be like you goondas. We have compassion for everyone except for our traitors.
தர்
[ஃஉஒடெ நமெ="ழ்௯ச்வ்ப்ன்"]முட்டாள் சவுக்கே....சென்னையை விட்டு வெளியே வந்து மும்பையை பார். குற்றங்கள் நடப்பது எவ்வாறு கட்டுக்குள் இருக்கிறது என்று. ஒரு ரவுடியை கூட வெளியில் பார்க்க முடியாது. வீடு வாடகைக்கு வேண்டும் என்றால் வீட்டு உரிமையாளருடன் அக்ரிமெண்ட் போடவேண்டும். கடைசி பக்கத்தில் புகைபடம் ஒட்டி கையெழுத்து இட வேண்டும். அதை அருகில் உள்ள காவல் நிலையத்தில் கொடுத்து நோ அப்ஜக்சன் சான்றிதழ் வாங்க வேண்டும். அதனால் தவறான ஆட்களுக்கு வீடு கிடைக்காது. அதனால் தான் தீவிரவாதிகள் கடல் வழியாக வந்து நேரடியாக தாக்கினார்கள்.[/ஃஉஒடெ]
kalidasan, mumbai
அம்மா ஆட்சியில் அன்றாடம் உருவாகும் மின்வெட்டு,பஸ், பால் போன்ற மக்களைப்பாதிக்க ும் விலைவாசி உயர்வு போன்ற பிரச்சினைகளை மடைதிருப்பி மறக்கடிக்கும் வேலையை காவல் துறை மூலம் கையாள்வார்.
கடந்த முறை,வீரப்பன், விஜயகுமார் இருவரை வைத்து,திருடன் போலீஸ் ஆட்டம் காட்டி மக்கள் பிரச்சினையை மங்கடித்தார்.
தற்பொழுது திரிபாதி, அம்மாவின் எதிர்பார்ப்புக் கு ஏற்ப சென்னையில் களமாடி காய் நகர்த்துகிறார்.எய்தவன் இருக்க அம்பை நோவானேன்!
But as far as this article is concerned Savukku is doing the Job which will ruin the the Core Objective.
See We cant justify the act of Robbery in any way, as below
1. what is the source for seizing so much money from the labourers
2. there is a say that among the five some body who has not involved also would be there ... I cant accept this point ... when the police team publishes the photograph of the suspected culprit ... it is the duty of the other persons who happened to be innocent to inform the police otherwise he also will be considered as part of the robbery team
3. We need not compare the politician or officials with their act ( robbery)
for every body the respective LAw is there it will take action ... if it does not happen as we expect then in the court of GOD they will be punished so that way also one robbery cant be justified with the other unnoticed robbery .
Any illegal act will be punished when it comes to lime light
LET Savukku continue bring act the illegal act only not the way of dealing the illegal act.
Illegal act is illegal act only for what so ever reason
After killing 5 people in barbaric way.. what right we have to criticize Sri lanka. whether it is 1 lakh people killed or just one people killed. Governments should uphold moral.
தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்
என்குற்ற மாகும் இறைக்கு.
முன்பு தன் குற்றத்தைக் கண்டு அதை நீக்கிவிட்டுப், பின்பு பிறர் குற்றத்தைக் கண்டு அதை நீக்கிவிட்டுப், பின்பு பிறர் குற்றத்தை காணவல்லவனாயின், அரசனுக்கு வரக்கூடிய குற்றம் யாது? ஒன்றுமில்லை
Ramesh, do you think that one lakh armless tamils who were killed in lanka is same as the encounter against 5 robbers, who plan to loot banks in a roundrobin manner ?????????? shame on you people, comparing human slaughter of rajapakse, with this robbery incident.
Hariharan
Sholinganallur
RSS feed for comments to this post