முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
காவல்துறை உள்குத்து. அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 24
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
சனிக்கிழமை, 06 நவம்பர் 2010 11:09

தமிழக காவல்துறையில் உள்குத்து உச்ச கட்டத்தை அடைந்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

 

இந்த உள்குத்து, லத்திக்கா சரணை டிஜிபியாக நியமித்ததில் இருந்தே தொடங்கி விட்டாலும், தற்போது, மிக அதிகமாகி, காங்கிரஸ் கட்சியின் கோஷ்டி சண்டை அளவுக்கு வளர்ந்திருப்பதாக தெரிகிறது.

 

இந்த கோஷ்டி சண்டையில், வழக்கம் போலவே, நமது ஜாபர் சேட்தான் முன்னணியில் இருக்கிறார்.   தனக்கு ஆதரவாக அதிகாரிகளை தன் பக்கம் இழுப்பதில் முனைப்பு காட்டி வருகிறார்.

 

எப்படியாவது, கூடுதல் டிஜிபி பதவி வாங்கி விடலாம் என்று கனவு கண்டு கொண்டிருந்த ஜாபர் சேட்டுக்கு, ஜுனியர் விகடன் பத்திரிக்கையிலேல்லாம், தான் கூடுதல் டிஜிபி ஆகப் போகிறோம் என்று எழுத வைத்தும், பதவி உயர்வு கிடைக்காததால், இருக்கும் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள பகீரத முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக தெரிகிறது.

 Jaffar_Sait_2

இந்த பின்னணியில் தான், கடந்த வாரம், நாகர்கோவிலில் போக்குவரத்துக் கழகத்தின் விஜிலேன்ஸ் அதிகாரியாக உள்ள ஜார்ஜ் உடனான சந்திப்பு நடந்திருக்கிறது.

 

ஜார்ஜ் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில், சென்னை மாநகரின் இணை ஆணையராக இருந்து கொடி கட்டிப் பறந்தவர்.   அப்போது மத்திய அமைச்சராக இருந்த முரசொலி மாறனை தனது ஸ்ட்ரைக்கிங் போர்சை வைத்து, அடித்து தூக்கிப் போட்டவர்.   இவ்வாறு தூக்கிப் போட்டதாலேயே, அறுவை சிசிச்சை செய்து மாறனுக்கு இதயத்தில் பொறுத்தியிருந்த பேஸ் மேக்கர் கருவி, செயலிழந்து, அதனாலேயே மாறனுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதாக ஒரு பேச்சு உண்டு.

 

அதிமுக ஆட்சியில் நெருக்கமாக பல்வேறு பதவிகளை அனுபவித்து வந்திருந்த பல்வேறு அதிகாரிகள் திமுகவோடும், கருணாநிதி குடும்பத்தோடும் சமரசம் செய்து கொண்டு நல்ல பதவிகளை அனுபவித்து வந்தாலும், ஜார்ஜ் மட்டும் சென்னை வரவே முடியவில்லை. அதற்கு முக்கியக் காரணம், கேடி சகோதரர்கள் தான். யார் வந்தாலுமபரவாயில்லை, ஜார்ஜ் மட்டும் சென்னைக்கு நல்ல பதவிக்கு வரக் கூடாது என்பதில் கேடி சகோதரர்கள் பிடிவாதமாக இருந்தனர்.

 

இந்நிலையில், ஜார்ஜுக்கு கூடுதல் டிஜிபி பதவி உயர்வு வரவேண்டியிருந்தது. எங்கே பதவி உயர்வு வராமல் தள்ளிப் போய் விடுமோ என்று அஞ்சிய ஜார்ஜ், சிஐடி காலனியில் உள்ள டேனியல் என்பவரை அணுகுகிறார்.   டேனியல், பதவி உயர்வும், சென்னையில் பதவியும் வாங்கித் தருவதாக வாக்களித்து, ஐம்பது லட்சத்தை அன்பளிப்பாக பெற்றுக் கொள்கிறார்.

 Jaffer7878_1

ஐம்பது லட்சத்தை பெற்றுக் கொண்ட டேனியல், பதவி உயர்வு மட்டும் வழங்கி விட்டு, சென்னையில் பதவி வாங்கித் தரவில்லை. ஜார்ஜ், நாகர்கோவிலில், ஒரு பழைய வில்லீஸ் ஜீப்பில் பவனி வந்து கொண்டிருந்தார். டேனியலிடம் இது பற்றிக் கேட்ட போது, டேனியல், உங்கள் மீது இருந்த குற்றச் சாட்டுகளையெல்லாம் ரத்து செய்து விட்டு, பதவி உயர்வு அளித்ததற்கு ஐம்பது லட்சம் சரியாகப் போய் விட்டது, சென்னைக்கு மாறுதல் வேண்டுமென்றால், மேலும் ஒரு ஐம்பது லட்சம் தர வேண்டும் என்று கூறுகிறார்.

 

அதிர்ச்சி அடைந்த ஜார்ஜ், என்ன செய்வது என்று புரியாமல், அமைதியாக இருக்கிறார்.   இந்த நிலையில்தான், ஜாபர் சேட்டுக்கும், அர்ச்சனா ராமசுந்தரத்துக்கும் மோதல் உருவாகிறது.   அர்ச்சனாவை எப்படியாவது ஓரங்கட்ட வேண்டும் என்று முடிவெடுத்த சேட், ஜார்ஜுக்கு தூது விடுகிறார்.   ஜார்ஜிடம், சென்னைக்கு வருமாறு அழைத்து, கனி மொழியை சந்திக்கச் சொல்கிறார்.   ஜார்ஜும் கனிமொழியை சந்தித்து சென்னைக்கு வரவேண்டும் என்ற தனது விருப்பத்தை தெரிவிக்கிறார்.

 

கனிமொழி, டாடிகிட்ட பேசி ஏற்பாடு பண்றேன் என்று ஜார்ஜுக்கு உத்தரவாதம் அளிக்கிறார்.   குஷியான ஜார்ஜ், ஜாபர் சேட்டை சந்தித்து நன்றி தெரிவிக்கிறார். இரண்டு பேரும், ஆளுக்கு இரண்டு லார்ஜ் போட்டவுடன், ஜாபர் சேட் குஷியாகி, “கன்சிடர் இட் அஸ் டன்“ என்று உத்தரவாதம் அளிக்கிறார்.

 

வரும் வாரங்களில், சிபிசிஐடியின் கூடுதல் இயக்குநராக உள்ள அர்ச்சனா ராமசுந்தரம் மாற்றப் பட்டு ஏதாவது ஒரு டம்மி போஸ்டுக்கும், ஜார்ஜ் சிபிசிஐடியின் கூடுதல் டிஜிபியாகவும் நியமிக்கப் பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

ஜார்ஜ் ஐஐடி பட்டதாரி. அமெரிக்காவில் உள்ள உலகப் புகழ் பெற்ற மாஸசூசெட்ஸ் இன்ஸ்ட்டிட்யூட் ஆப் டெக்னாலஜியில், சுற்றுச் சூழல் பொறியியல் பயின்றவர். எவ்வளவு படித்தும் அறிவு மட்டும் இல்லை.   இத்தனை நாட்கள் பொறுமையாக இருந்தவர், இன்னும் ஆறு மாதம் காத்திருக்கக் கூடாதா ?   இத்தனை நாட்கள் கழித்து ஒரு முழுகும் கப்பலிலா ஏற வேண்டும் ?   ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், ஜார்ஜ் சென்னை மாநகர ஆணையாளராவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கின்றனவே ? ஜாபர் சேட் பேச்சைக் கேட்டு அழிந்தவர்கள் பட்டியலில், சுனில் குமாருக்கு அடுத்தபடி ஜார்ஜை சேர்க்க வேண்டும்.

 

நம்ம சுனில் குமார் எப்படி இருக்கிறார் தெரியுமா ?   கடந்த வாரம், அர்ச்சனாவின் கணவர் ராமசுந்தரம் மீது ரகசிய விசாரணை நடத்தி, சுனில் மாட்டிக் கொண்ட விஷயத்தையும், இது தொடர்பாக போட்டுக் கொடுத்து விட்டார் என்று சந்தேகப் பட்டு, நகரம் 1 பிரிவில் இருந்த எம்.பி.நடராஜன் என்ற டிஎஸ்பியை நகரம் 3 பிரிவுக்கு மாற்றியதையும் சவுக்கு பதிவு செய்திருந்தது. எம்.பி.நடராஜனும் நகரம் 3 பிரிவில் பதவி ஏற்றுக் கொண்டார். சவுக்கில் இந்த விபரங்கள் விரிவாக பதிவு செய்யப் பட்டிருந்ததை அடுத்து, நடராஜன் சுனில் குமாரை சந்தித்து, எதற்காக என்னை மாற்றினீர்கள், நீங்கள் சொன்னதைத் தானே செய்தேன், அதற்கு எனக்கு இப்படி ஒரு தண்டனையா என்று கேட்கிறார். இதையடுத்து, எங்கே நடராஜன் தான் ராமசுந்தரத்தை பற்றி விசாரிக்கச் சொல்லி நெருக்கடி கொடுத்த விவகாரத்தை வெளியில் சொல்லி விடுவாரோ என்று பயந்த சுனில், மாற்றல் ஆணையை ரத்து செய்து, நடராஜனை மீண்டும் நகரம் 1 பிரிவுக்கே நியமிக்கிறார்.   மாற்றல் ஆணையை ரத்து செய்தால், ஒரு மாதிரியாக இருக்கும் அல்லவா. அதனால் மீண்டும் வழங்கப் பட்ட மாறுதல் ஆணையில் In partial modification of the orders issued in the reference cited என்று போட்டு, நகரம் 1 பிரிவில் இருந்த மற்றொரு டிஎஸ்பியான திருநாவுக்கரசை நகரம் 3 பிரிவுக்கு மாற்றல் செய்து உத்தரவிட்டுள்ளார். திருநாவுக்கரசு இருந்த இடத்தில் கன்னியாக்குமரியில் இருந்து கண்ணன் என்ற ஒரு டிஎஸ்பி நியமிக்கப் பட்டிருக்கிறார்.

 

இதற்கிடையே, ஏ.கே.விஸ்வநாதன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கை விசாரித்து வந்த முகம்மது இக்பால் என்ற டிஎஸ்பியும் மாற்றம் செய்யப் பட்டு, சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு நியமிக்கப் பட்டிருக்கிறார்.   இவர் ஏ.கே.விஸ்வநாதன் மீது சொத்துக் குவிப்பு வழக்கை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லை என்று அறிக்கை கொடுத்ததாகவும், அவரது அறிக்கையை படித்துப் பார்த்த சுனில் குமார், ஜாபர் சேட்டின் உத்தரவுப் படி, ஏ. கே.விஸ்வநாதன் மீது எப்ஐஆர் போட்டால் தான் தகவல்கள் கிடைக்கும் என்று அறிக்கையை மாற்றி, அரசுக்கு அனுப்பியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

இதன் நடுவே, ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் வழக்குகளை மேற்பார்வை செய்து வந்த சொர்ணா என்ற கூடுதல் மேலாளர் மீது, சவுக்குக்கு அவர்தான் தகவல் சொல்கிறார் என்று சந்தேகப் பட்டு, அவரிடமிருந்து அந்த சப்ஜெக்ட் பறிக்கப் பட்டு ஜெயஸ்ரீ என்ற மேலாளர் வசம் கொடுக்கப் பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.   இதுதான் திருடன் கையிலேயே சாவியைக் கொடுப்பது. இந்த ஜெயஸ்ரீ, தினமும், சிபிஐ இணை இயக்குநர் அசோக் குமார், சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி ராதாகிருஷ்ணன் ஆகியோரிடம் தகவல்களை சொல்லுவதாகவும் தெரிகிறது.   இந்த விபரங்கலெல்லாம் தெரியாத லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் போலா நாத், இந்த ஜெயஸ்ரீயை நம்பிக் கொண்டு ஏமாந்து வருவதாகவும், லஞ்ச ஒழிப்புத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 sunil_new

 

இதன் நடுவே, சுனில் குமார், லஞ்ச ஒழிப்புத் துறையை விட்டு மாற்றலில் செல்ல முயற்சி செய்து வருவதாகவும் தெரிகிறது.   அவர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்திருக்கிறார் என்று அனுப்பப் பட்ட புகாரின் மீது இது வரை நடவடிக்கை இல்லாததால், சிலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கவும் உத்தேசித்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

 

கடந்த வாரம் ஜாபர் சேட்டின் மகள் ஜெனிபர், துப்பாக்கி சுடுதல் போட்டியில் முதல் பரிசு பெற்றிருக்கிறார். அவருக்கு சவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.   (ஜாபர் சார், பரிசு கொடுக்கும் விழாவுக்கு, கிளம்பிட்டு, கடைசி நேரத்துல ஏன் கேன்சல் பண்ணீங்க. சவுக்கு உங்களுக்காக கோயம்பத்தூர்ல வெயிட் பண்ணிக்கிட்டு இருந்துச்சு தெரியுமா ?)

 காவல்துறையின் இந்த உள்குத்து, மிக மோசமான போக்குக்கு இட்டுச் செல்லும் என்று காவல்துறையில் விபரமறிந்த அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

 

Comments  

 
0 #19 dragon 2011-02-07 08:52
Mr.Savukku can u pls write abt Mr.A.G.Mouriya I.P.S what he is doing now ....n what he did ...
Quote
 
 
0 #18 nasardheen -s 2010-12-29 21:47
தமிழ்நாட்டு மக்களுக்கு என்றுதான் நல்ல காலம் பிறக்குமோ தெரியல???
Quote
 
 
0 #17 Panivazhan 2010-11-29 17:11
நான்தமிழன்.திராவிடன்அல்ல.
தமிழா,
பள்ளனாய், பறையனாய்,
நாடானாய், தேவனாய்,
வன்னியனாய், பரவனாய்,
பிள்ளையாய், கவுண்டனாய்,
மள்ளனாய், குயவனாய்......
வாழ்ந்தது போதும்.
வா - தமிழா
தமிழனாய் வாழ்வோம்.
வந்தேறி தெலுங்கன், கன்னடன், மலையாளி, மார்வாடி, ஆரிய பிராமணர், இவர்களிடம் இருந்து நம் தமிழ் நாட்டை காப்போம்.
"பக்கத்தில் உள்ளவன் சாதியை கேள், அவன் இனம் தெரியும்.
தமிழன் என்றால் தோள் கொடு, வந்தேறி என்றால், விரட்டி அடி "
''தமிழர்கள் சிறுபான்மையாக உள்ள இடங்களில் தாய்மொழி பற்றோடு இருக்கிறார்கள். பெரும்பான்மையாக உள்ள தமிழகத்தில் சீரழி்ந்த தமிழர்களாக இருக்கிறார்கள்!
Quote
 
 
0 #16 Mathan Dubai 2010-11-25 11:03
:zzz :eek: :-x :-? :o :cry: :oops: :-* :-| yenada tamilar mulakkamnu pera vachikittu mentala irukeenga.
21st centurayla jathi,matham????????????????????
naikala neenga thiruthave matenkala>>>>>>
yella payalukalum setha pinnadi mannukula
Ulakathileya kevalamana piravi Tamilan,Mananke ttavan
Quote
 
 
0 #15 Kumar.T 2010-11-08 19:07
Quoting KOVAI PRIYAN:
. ஏனனில் சந்தடி சாக்கில் நமது தளத்தை ஜெ ன் ஆதரவு தளம் போல் திருபிவிடுவர்கள ் இரண்டு கேடிகளும் இதில் கில்லாடிகள் .கவனம் தேவை .


அன்பரே.. நான் ஜெ'யின் ஆதரவாலன் இல்லை, மேலும் எனக்கு ஜெ சார்பாக எழுத வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை.. ஐயவோ இல்லை அம்மாவோ யார் வந்தாலும் எனக்கு ஒன்றும் செய்யப்போவது இல்லை. சொல்லப்போனால் நான் 2006 வரை திமுக உக்கு தான் வாக்களித்தேன். என் என்றால் 1996-2001 வரை இருந்த திமுக அரசு மிக நன்றாக செயல்பட்டது..
எனக்கு ஏற்பட்ட சில சொந்த அனுபவகளின் காரணமாக தான் எனக்கு சரி என்று பட்டதை எழுதினேன்..
2004-2006 ஆண்டில் இரவு பணி முடிந்து 12 மணிக்கு சோழிங்கநல்லூரில ் இருந்து போரூருக்கு தனியாக பைக்கில் எந்த பிரச்சினையும் இல்லாமல் வர முடிந்தது..ஆனால் இப்போது இரவு 10 மணிக்கே அலுவலக வாயில் அருகே வழிபறி நடக்கிறது.. இது போன்ற மேலும் பல கசப்பான அனுபவத்தின் காரணமாகத்தான் அவ்வாறு கூறினேன்.. ஒரு நாட்டின் குடிமகனாக இரண்டு ஆட்சியின் செயல்பாடுகளை விமர்சிக்க எனக்கு உரிமை உள்ளது... ஒரு சார்பாக பேச நான் ஒன்றும் மட்டமான அரசியல்வாதி இல்லை..
Quote
 
 
+1 #14 KOVAI PRIYAN 2010-11-08 14:36
தோழர்களே படு கேவலமான நிலையில் நம் மாநில அரசியல் மட்டும் அல்ல இந்திய அரசியலும் உள்ளது .இதில் எந்த விதத்திலும் ஜெயலலிதா வந்தால் மாற்றம் ஏற்பட போவதில்லை .இப்போதைய நிலையை காட்டிலும் இன்னும் கேவலமாய் தான் இருக்கும் மேலும் நமது இணைய தளம் கருணாநிதிக்கு ஏதிரானது அல்ல .தவறு செய்யும் அணைத்து கேடு கேட்டவர்களுக்கு ம் ஏதிரானது என்பதை மறந்து விடாதிர்கள். ஏனனில் சந்தடி சாக்கில் நமது தளத்தை ஜெ ன் ஆதரவு தளம் போல் திருபிவிடுவர்கள ் இரண்டு கேடிகளும் இதில் கில்லாடிகள் .கவனம் தேவை .
Quote
 
 
0 #13 rukku 2010-11-07 16:45
தமிழ்நாட்டில் கருணாநிதியீறாக நடிகர் விஜய் வடிவேலுவரை, Drபட்டத்திலிருந ்து எதை வேண்டுமானாலும் வாரத்துக்கு ஒரு பட்டத்தை வைத்துக்கொள்ள முடியும். அதைப்பின்பற்றி தமிழ்நாடு பொலிஸும் ஸ்கொட்லன்யார்ட் ,இன்ரப்போல்,இன் னும் எந்த பட்டம் வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலா ம்.தகுதி அடிப்படையில் என்று யார் சொன்னார்,குற்றச ்செயல்கள் சில விரைவில் பிடிபடுவதற்கு காரணம் கிரிமினல்கள் எல்லாம் பொலிஸின் கூட்டாளிகள் என்பதால் தூரத்திற்குப்போ கத்தேவையில்லை,ஒ ருவர் தப்புவதற்காக ஒருவரை மாட்டிவிட்டு பெரிய குற்றவாளி தப்பித்துக்கொண் டேயிருக்கிறான், மற்றப்படி தமிழ்நாட்டின் பொலிஸின் வேலை ராசாத்தியம்மாளி ன் போனை ஒட்டுக்கேட்பதும ் கனிமொழி எங்கேபோகிறா என்பதைகவனிப்பது ம், தமக்கான வழிப்பறி வரவுசெலவு, பதவிக்கான உள்க்குத்து இதற்கே நேரம் சரி ஸ்கொட்லண்யார்ட் , இன்ரப்போல் என்பதெல்லாம் வடிவேலுவின் Drபட்டம் போல
Quote
 
 
0 #12 rukku 2010-11-07 16:12
Quoting Kumar.T:
அதிகாரிகளின் செயல்பாடுகளை வைத்து தான் ஒரு ஆட்சியை மதிப்பிட முடியும், மேலே சொன்ன நாய் சண்டையில் இருந்து

ஆயிரம் குறைகள் இருந்தாலும், ஜெயலலிதா ஒரு சிறந்த நிர்வாகி என்பது மறுக்க முடியாத உண்மை ... தவறு என்று தெரிந்தால் துணிச்சலாக முடிவெடுத்து செயல்படும் குணம் கொண்டவர்...

இப்போது இருக்கும் நிலையில் கருணாநிதியால் ஒரு கவுன்சிலர்யை நீக்க கூட தைரியம் இல்லை ;-)

நகைப்புக்காகவில ்லை!,,,, கருணாநிதியால் சுயமாக எழுந்திருக்கவே தைரியம் அவரிடமில்லை குடும்பம் என்கிற பூதம் அவரை உருளை நற்காலியில் எழுப்பி வைத்து ஊர்வலம் போகிறது, CID நகரில் மாத்திரை அவரை நிறுத்திவைத்திர ுக்கிறது,(சவுக் கு கோபித்தாலும் பரவாயில்லை) நடனவிழாக்களில் அவரது அந்தரங்க ஆசை அவரை 6 மணித்தியாலங்களெ ன்றாலும் தூக்கி நிறுத்தி வைத்திருக்கிறது , பணம் ஓட்டுக்களை வாங்கி அவர் சாகும்வரை தள்ளுவண்டியல்ல ஸ்ரெச்சர் (பாடை) படுக்கையிலும் தனது சுயநலத்திற்காக நிறுத்தி செயற்படுவாரே தவிர மக்களாவது மண்ணாங்கட்டியாவ தூ,தூ,
Quote
 
 
+4 #11 N.Saravanan 2010-11-07 06:44
உலகின் எந்த மூலையிலும் இல்லாத படு கேவலமான, ஊழல்,லஞ்சம்,குத ்துவெட்டு,குழிப றிப்பு,மொள்ளமார ித்தனம்,பித்தலா ட்டம்,பிற்போக்க ுத்தனம், என என்ன என்ன கேவலமான வார்த்தைகளாலும் திட்டமுடியுமோ அத்தனை குணாம்சங்களையும ் கொண்ட இந்திய போலிசை ஏன்ரா எந்த சம்பந்தமுமே இல்லாத ஸ்கொட்லன்ட் யார்ட் போலிசோடு ஒப்பிடுகின்றீர் கள்?
Quote
 
 
+3 #10 Kumar.T 2010-11-06 23:27
அதிகாரிகளின் செயல்பாடுகளை வைத்து தான் ஒரு ஆட்சியை மதிப்பிட முடியும், மேலே சொன்ன நாய் சண்டையில் இருந்து இந்த ஆட்சியின் லட்சணம் நன்றாக தெரிகிறது..

ஆயிரம் குறைகள் இருந்தாலும், ஜெயலலிதா ஒரு சிறந்த நிர்வாகி என்பது மறுக்க முடியாத உண்மை ... தவறு என்று தெரிந்தால் துணிச்சலாக முடிவெடுத்து செயல்படும் குணம் ஒரு சிறந்த நிர்வாகிக்கு தேவை.. தவறு கண்டுபிடித்ததால ் சேகர் பாபு போன்றவர்களையே தூக்கி விட்டு கட்சியை சீர் படுத்தும் துணிச்சல் கொண்டவர்...

இப்போது இருக்கும் நிலையில் கருணாநிதியால் ஒரு கவுன்சிலர்யை நீக்க கூட தைரியம் இல்லை ;-)
Quote
 
 
+2 #9 கனிமொழி கபடநிதி 2010-11-06 21:42
இந்தக்கொள்ளைக்க ூட்டங்கள் தங்களின் உள்குத்து வெளிக்குத்து விடயங்களை முடிப்பதற்கு பொலிஸ் துறையையும் மூளையையும் காலத்தையும் அரசாங்கச்செலவில ் முடித்து காலத்தைத்தள்ளின ால், இந்தச்சந்தர்ப்ப த்தை ப்பயன்படுத்தி கேடிபிரதர்ஸ் வாழும் வரதாச்சாரிக்கு ஆப்படிக்கக்கூடு ம்
Quote
 
 
+1 #8 keerthi 2010-11-06 20:17
TIMESNOW tv channel what's say now about india and usa?
Quote
 
 
+2 #7 கர்ணன் 2010-11-06 19:47
சார், இன்னொரு விஷயம் சொல்ல மறந்துட்டேன். புறநகர் கமிஷனர் ஜாங்கிட் ஆபீஸில் இருந்து பெண் பித்தன் சரவணனுக்கு இந்த வருட தீபாளிக்காக பணக்கட்டு ஒன்றும் பட்டாசு பாக்கெட்டும் கொடுக்கப்பட்டதா ம். பெண்பித்தன் ரொம்பவும் குஷியாக தீபாவளியை கொண்டாடியிருக்க ானாம். அடுத்தவருஷம் ஆட்சி மாறியதும் பெண் பித்தனுக்கும் சேர்த்து ஆப்பு அடிக்கப் போறாங்க. வசந்தி அக்கா மேட்டரை நீங்க எழுதீட்டிங்கன்ன ு சவுக்கைப் பத்தி தாறுமாறா பேசிகிட்டுத் திரியறானாம் இந்த பெண் பித்தன். அதுக்காக அக்காவை சந்திச்சு சதி திட்டம் போட்டுகிட்டு இருக்கானாம். வசந்தி அக்கா வீட்டுக்குப் போய், அங்கிருந்து ஜாபர் அண்ணன்கிட்ட பேச வெச்சானாம். ஜாபர் கூட்டணியில சவுக்கை ஒழிப்பதற்காக இப்போ அக்காவும் சேர்ந்திருக்காம ். பாவம், பெண் பித்தன்.
Quote
 
 
+1 #6 கர்ணன் 2010-11-06 19:43
சார், ஜாபர் பத்தியே எழுதிகிட்டு இருக்கீங்க. ஆனா, ஜூனியர் விகடன் பெண் பொறுக்கி இரா.சரவணன் பற்றி எழுத மாட்ட்டேங்கறீங் களே. இந்த வாரம் ஆனந்த விகடன் பாருங்க. அக்கா கயல்விழி தம்பி துரைதயாநிதி திருமணம் பற்றி சொல்லி, அதனை கட்டுரையாக்கி இருக்கிறான். ஏகப்பட்ட துட்டு பேத்துட்டதா சொல்றாங்க. விசாரிங்க.
Quote
 
 
+1 #5 Pradeep_P 2010-11-06 16:37
nalla kalam 6 masathuku piraku achum varuma???
Quote
 
 
+1 #4 Soundar 2010-11-06 13:53
Wish you all the best Jeni..
Quote
 
 
+3 #3 GOPINATHAN B V 2010-11-06 11:58
ஐயோ கடவுளே? படிக்கும்போதே தலை சுத்துதே. அரசியல்வாதிகளுக ்கு இவர்கள் கொஞ்சமும் சளைத்தவர்கள் இல்லை போல் தெரிகிறதே. சவுக்கு இங்கு இருக்கு. அதனை அவர்கள் மீது சுழற்றுவது யார்?
Quote
 
 
+3 #2 தமிழன் 2010-11-06 11:45
தமிழ்நாட்டு மக்களுக்கு என்றுதான் நல்ல காலம் பிறக்குமோ தெரியல
Quote
 
 
+1 #1 lallu 2010-11-06 11:32
interesting
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 89 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday5818
mod_vvisit_counterYesterday9398
mod_vvisit_counterThis week75559
mod_vvisit_counterLast week78106
mod_vvisit_counterThis month198159
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12720278