முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
மக்களுக்கு உதயக்குமார் திறந்த மடல். அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 37
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
ஞாயிற்றுக்கிழமை, 25 மார்ச் 2012 20:23

அன்பார்ந்த நண்பர்களே…

udayakumar_938372a

வாழ்த்துக்கள்.  புஷ்பராயன், நான் மற்றும் இதர 12 நண்பர்கள் பலவீனமாகியிருக்கிறோம்.   ஆனால், எழுந்து உட்கார்ந்து எங்களால் மக்களோடு பேச முடிகிறது.  காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்கி இன்றோடு ஏழாவது நாள்.

மத்திய அரசிடமிருந்தோ, மாநில அரசிடமிருந்தோ யாரும் எங்களை வந்து பார்த்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை.  பார்க்கவும் வரவில்லை.   நேற்று முன்தினம் (மார்ச் 23) எங்கள் உடல்நிலையை பரிசோதிக்க ஒரு மருத்துவர் குழு வந்தது, ஆனால் அரசு சுகாதாரத்துறையிலிருந்து யாரும் வரவில்லை.  ஆனாலும், மார்ச் 19 அன்று போராட்டம் தொடங்கியதிலிருந்து இதுவரை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் எங்களோடு சேர்ந்து இடிந்தகரையில் குழுமியவண்ணம் உள்ளனர். 144 தடை உத்தரவின் காரணமாக,   எங்களோடு இருக்கும் மக்கள் தங்களால் இயன்ற எளிமையான உணவை சமைத்துச் சாப்பிட்டடு இங்கேயே தங்கி உள்ளனர். புனித லூர்து ஆலயத்தின் எதிரே இருக்கும் ஒரு கால்பந்து மைதானம் அளவுக்கு இருக்கும் இந்த இடத்தை விட்டு வெளியேற அஞ்சியவண்ணம் உள்ளனர். வெளியே சென்றால், மீண்டும் உள்ளே வர முடியாதே என்ற அச்சத்தின் காரணமாக வெளியேறாமல் உள்ளனர்.

நானும் தோழர் புஷ்பராயனும், எப்போது மயக்கமடைவோம் என்று காவல்துறையினர் காத்திருக்கின்றனர்.  மயக்கமடைந்து மருத்துவ மனையில் அனுமதித்தால் அங்கே எங்களை கைது செய்யலாம் என்ற எண்ணத்தின் காரணமாகவே காவல்துறையினர் காத்திருக்கின்றனர்.   மக்கள் விரோத அரசுகள் எத்தனை கொடுமையாகிவிட்டன !!!

இதற்கிடையில் அணு உலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 500 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக 13 பஞ்சாயத்து தலைவர்களின் கூட்டத்தை தமிழக அரசு கூட்டியுள்ளது. காவல்துறையின் அடக்குமுறைகள் தொடர்ந்தவண்ணம் உள்ளது.

கூடங்குளம் பகுதியில் இயல்பு நிலை இருப்பது போலக் காட்டுவதற்காக காவல்துறையினர் சில கடற்கரையோர கிராமங்களுக்குச் சென்று, மீன் பிடிக்கச் செல்லுமாறு வற்புறுத்துக்கின்றனர்.   இடிந்தகரை பகுதி மக்களுக்கு உணவுப்பொருட்கள் எதுவும் எடுத்துச் செல்லக்கூடாது என்றும், மீறினால் வழக்குகள் பாயும் என்றும் தொடர்ந்து மிரட்டியவண்ணம் உள்ளனர். ஆனால், மக்கள் இந்த மிரட்டல்களுக்கு அஞ்சாமல், தொடர்ந்து போராட்டத்தில் பங்கெடுத்து வருகின்றனர்.

இது ஒரு போராட்டம். (ஆனால் அணு உலை ஆதரவாளர்கள் இதை “போர்” என்கின்றனர்) செல்வந்தர்கள், அதிகாரம் படைத்தவர்கள், மேட்டுக்குடி மக்கள், உயர்சாதியினர், ஆடம்பரவாசிகள், மெகா வளர்ச்சியை விரும்புபவர்களுக்கு இடையேயும், விளிம்புநிலை உழைப்பாளி மக்களுக்கு இடையேயும் நடக்கும் போராட்டம்.  அரசுகள் ரஷ்யாவின் லாபத்துக்காக போராடுகின்றனவே தவிர, மக்களுக்காக அல்ல. கூடங்குளம் பகுதி மக்களின் போராட்டத்துக்கு எதிரான ஒரு உணர்வை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே கடந்த சில மாதங்களாக தொடர்ந்த மின்வெட்டை அமல்படுத்தி வருகின்றனர்.

இப்போது கூடங்குளத்தில் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், மின் உற்பத்தி எப்போது தொடங்கும் என்பது தெரியாது என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.  கூடங்குளம் அணு உலை, தமிழக மின்வெட்டுக்கு தீர்வல்ல என்பதை இப்போதாவது மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.  அணு உலைப் பணிகள் தொடங்கியுள்ள நிலையில் தமிழக மக்கள், பேச்சிப்பாறை அணை நீர், கூடங்குளம் மறுசீராக்கும் நிலையம், ஆயுத வசதிகள், அணு ஆயுதங்கள் என்று பல்வேறு விஷயங்களைப் பற்றிய உண்மைகளை புரிந்து கொள்ளப் போகிறார்கள்.

நெருங்கிய, அடர்த்தியான மக்கள்தொகை கொண்ட நாடான இந்தியாவில், ஒரு சிறு விபத்து கூட கோடிக்கணக்கான சகோதர சகோதரிகளின் வாழ்வையும், ஆரோக்கியத்தையும் பாதிப்புக்குள்ளாக்கும்.  நாங்கள் இந்தியாவின் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் அல்ல. அந்த வளர்ச்சியானது, தலைமுறை தலைமுறைக்கும் நன்மை பயக்கும்படி இருக்க வேண்டும் என்றே கோருகிறோம். நாம் வாழப்போகும் 40 ஆண்டுகளுக்கு மின்சாரம் வேண்டும் என்பதற்காக, வரப்போகும் தலைமுறைகளுக்கான இயற்கை வளங்களை விஷமாக்குவதற்கு நமக்கு அதிகாரம் இல்லை. மிக மிக முற்போக்கான திட்டங்களையும், அறிவியல் ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டு, உலகின் தலைவனாக இந்தியா உருவாக வேண்டுமே தவிர, அமெரிக்க, ரஷ்யா மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளின் அடிமையாக இருக்க வேண்டாம் என்றுதான் கூறுகிறோம்.

தற்போது அரசு எங்களைத் தாக்க மாவோயிஸ்ட்டுகளோடு தொடர்பு உள்ளது என்ற புதிய ஆயுதத்தை எடுத்திருக்கிறது.   மாவோயிஸ்டுகளோடு தொடர்பு இருக்கிறது என்றும், நாங்கள் வன்முறையாளர்கள் என்றும் சித்தரிப்பதற்காக, போலியான ஆதாரங்களையும், சான்றுகளையும் உருவாக்குவதில் அரசு முனைப்பு காட்டி வருகிறது.   கடந்த எட்டு மாதங்களாக, எவ்வித வன்முறைக்கும் இடம் கொடுக்காமல் அமைதியான அறவழியில் போராட்டம் நடத்தி வருகிறோம் என்பதை இந்த உலகமே அறியும்.

கூடங்குளம் போராட்டத்துக்கு வெளிநாட்டிலிருந்து பணம் வருகிறது, இப்போராட்டத்தின் பின்னால் வெளிநாட்டு தூண்டுகோல் உள்ளது என்ற குற்றச்சாட்டு எப்படி பொய்யாகப் போனதோ, அதே போல இந்தக் குற்றச்சாட்டிலும் தோல்வியுறுவார்கள்.

சாமான்ய, விளிம்புநிலை மக்களுக்கு சுயசிந்தனை கிடையாது, அவர்களுக்கென்று சொந்தமான அறிவு கிடையாது, அவர்களால் தங்களுக்கென்று சிந்திக்க முடியாது, அவர்களால் தங்கள் உரிமைக்காக போராட முடியாது, அறவழியில், ஒத்துழையாமை இயக்கம் நடத்த முடியாது, குறிப்பாக நாடார்கள், தலித்துகள், இசுலாமியர்கள், பெண்கள், குழந்தைகள் ஆகிய அனைத்துப் பிரிவினரும், சென்னை மற்றும் டெல்லியில் உள்ள கோடீஸ்வரர்களின் நலனுக்காக காவுகொடுக்கப்படக் கூடியவர்கள் என்றே அரசு கருதுகிறது.   தாராளமயப் பொருளாதாரக் கொள்கையின் அடிநாதமே இதுதான்.  இதை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்.

மக்கள் சக்தியா அணு சக்தியா ?  மக்கள் சக்தியா அரசின் வலிமையா ? இந்திய மக்களே… தமிழக மக்களே நீங்கள் யார் பக்கம் என்பதை சிந்திப்பீர்…

இப்போது நடந்து கொண்டிருக்கும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தினாலோ, முதுமையினாலோ நானும் இந்த மக்களும் இறந்து போகலாம்.   ஆனால், இந்த மாநிலம், இந்த நாடு, இந்த உலகம் உங்கள் சந்ததியினர் ஆகியோப் பற்றிச் சிந்தியுங்கள்.  இதுதான் மக்களுக்கான அரசியல்.   மார்ட்டின் நியோமாலர் என்ற ஜெர்மன் சித்தாந்தியின் தங்க வரிகளை உங்கள் சிந்தனைக்காக விட்டுச் செல்கிறேன்.

முதலில் அவர்கள் கம்யூனிஸ்டுகளுக்காக வந்தார்கள்.

நான் பேசவில்லை ; ஏனென்றால் நான் கம்யூனிஸ்ட் இல்லை.

பிறகு அவர்கள் தொழிற்சங்க வாதிகளுக்காக வந்தார்கள்.

நான் பேசவில்லை ; ஏனென்றால் நான் தொழிற்சங்கவாதி இல்லை.

அடுத்து அவர்கள் யூதர்களுக்காக வந்தார்கள்.

நான் பேசவில்லை ; ஏனென்றால் நான் யூதன் இல்லை.

அடுத்து அவர்கள் எனக்காக வந்தார்கள்.

அப்போது எனக்காகப் பேச யாருமே இல்லை.

எஸ்.பி.உதயக்குமார்

இடிந்தகரை

25.03.2012

 

Comments  

 
-1 #41 nallavan 2012-03-30 13:06
அணு உலைகளை எதிர்க்கும் விஞ்ஞானிகள்?? yarappa adhu?? who are you? i am Doctor MBBS nnu oru joke varumaa vassolraja mbbs ila andha mathri விஞ்ஞானிகள்?? :lol: :lol: Quoting P.Iruthayaraj James:
12. கல்பாக்கத்தில் பெரும் விபத்து ஏற்பட்டால் போயஸ் கார்டன், கோபலபுரம் முதல் பாண்டிச்சேரி வரை அழியும் ஆபத்து உள்ளது என்பதும் கூடங்குளத்தில் விபத்து ஏற்பட்டால் தென் மாவ்ட்டங்களும் கேரளத்தின் ஒரு பகுதியும் அழியும் என்பதும் உங்களுக்குத்தெர ியுமா 13.உலகத்தில் எங்கேயும் எந்த இன்சூரன்ஸ் கம்பெனியும் தனி நபர்களுக்கு விமான விபத்து முதல் ஆயுள் காப்பு வரை இன்சூரன்ஸ் கொடுத்தாலும், அணு உலை விபத்து பாதிப்பு இன்சூரன்ஸ் மட்டும் தருவது கிடையாது என்பது உங்களுக்குத் தெரியுமா ? 14. இந்திய அணுசக்திக் கட்டுப்பாட்டு வாரியத்தால் அணுசக்தி துறையை கண்காணிக்க முடியவில்லை என்றும் வாரியத்தை விட துறைக்கு செல்வாக்கு அதிகம் இருப்பதால் உண்மைகளை தெரிந்துகொள்ள முடிவதில்லை என்றும் வாரியத்தின் முன்னாள் தலைவர் அணு விஞ்ஞானி கோபாலகிருஷ்ணன் சொல்லியிருப்பது உங்களுக்குத் தெரியுமா ? 15. தமிழ்நாடு முழுவதும் சுமார் ஒரு கோடி குண்டு பல்புகளை சி.எஃப் எல் குழல் பல்புகளாக மாற்றினால், உடனே 500 மெகாவாட் மின்சாரம் மிச்சமாகும் என்று உங்கள் அரசின் சார்பில் சட்டமன்றத்தில் வைக்கப்பட்ட கொள்கைக்குறிப்ப ில் சொன்னதை ஏன் அதிகாரிகள் இன்னும் நிறைவேற்றாமல் இருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா ? 16. மத்திய அரசு அமைத்த குழு விஞ்ஞானிகளும் சரி நீங்கள் அமைத்த குழு விஞ்ஞானிகளும் சரி, ஏன் அணு உலைகளை எதிர்க்கும் விஞ்ஞானிகள் குழுவை சந்திக்க மறுத்துக் கொண்டே இருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா ?
Quote
 
 
0 #40 P.Iruthayaraj ,Erode 2012-03-29 20:00
To




some six months ago we sent this mail to .with the following content/////////
we in Tamil Nadu (India) is afraid of a atomic power station installed by Russia . help us by emailing how far it is safe, or visite this place kindly mail us whether you can help us in this matter, The place of installation is Kudan kulam,The whole people in this area are living with fear, hope you can help us. This area is identified as vulnerable to earth quake.
with thanks waiting for your mail,
p.iruthayaraj
Quote
 
 
+1 #39 P.Iruthayaraj James 2012-03-29 18:53
12. கல்பாக்கத்தில் பெரும் விபத்து ஏற்பட்டால் போயஸ் கார்டன், கோபலபுரம் முதல் பாண்டிச்சேரி வரை அழியும் ஆபத்து உள்ளது என்பதும் கூடங்குளத்தில் விபத்து ஏற்பட்டால் தென் மாவ்ட்டங்களும் கேரளத்தின் ஒரு பகுதியும் அழியும் என்பதும் உங்களுக்குத்தெர ியுமா 13.உலகத்தில் எங்கேயும் எந்த இன்சூரன்ஸ் கம்பெனியும் தனி நபர்களுக்கு விமான விபத்து முதல் ஆயுள் காப்பு வரை இன்சூரன்ஸ் கொடுத்தாலும், அணு உலை விபத்து பாதிப்பு இன்சூரன்ஸ் மட்டும் தருவது கிடையாது என்பது உங்களுக்குத் தெரியுமா ? 14. இந்திய அணுசக்திக் கட்டுப்பாட்டு வாரியத்தால் அணுசக்தி துறையை கண்காணிக்க முடியவில்லை என்றும் வாரியத்தை விட துறைக்கு செல்வாக்கு அதிகம் இருப்பதால் உண்மைகளை தெரிந்துகொள்ள முடிவதில்லை என்றும் வாரியத்தின் முன்னாள் தலைவர் அணு விஞ்ஞானி கோபாலகிருஷ்ணன் சொல்லியிருப்பது உங்களுக்குத் தெரியுமா ? 15. தமிழ்நாடு முழுவதும் சுமார் ஒரு கோடி குண்டு பல்புகளை சி.எஃப் எல் குழல் பல்புகளாக மாற்றினால், உடனே 500 மெகாவாட் மின்சாரம் மிச்சமாகும் என்று உங்கள் அரசின் சார்பில் சட்டமன்றத்தில் வைக்கப்பட்ட கொள்கைக்குறிப்ப ில் சொன்னதை ஏன் அதிகாரிகள் இன்னும் நிறைவேற்றாமல் இருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா ? 16. மத்திய அரசு அமைத்த குழு விஞ்ஞானிகளும் சரி நீங்கள் அமைத்த குழு விஞ்ஞானிகளும் சரி, ஏன் அணு உலைகளை எதிர்க்கும் விஞ்ஞானிகள் குழுவை சந்திக்க மறுத்துக் கொண்டே இருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா ?
Quote
 
 
0 #38 K.Nagaboobathy 2012-03-29 18:52
8. கூடங்குளம் உலையை உடனே இயக்கினாலும் ஆகஸ்ட்டில்தான் அது மின்சாரம் தரும் என்பதும், அதுவும் உற்பத்தி திறனாகிய 1000 மெகாவாட்டில் 40 சதவிகிதமான 400 மெகாவாட்தான் உற்பத்தி செய்யும் என்பதும் அதிலும் 48 மெகாவாட்டை அதுவே செலவழித்துவிடும ் என்பதும், மீதி 352 மெகாவாட்டில் டிரான்ஸ்மிஷனில் 70 மெகாவாட் போய்விடும் என்பதும், எஞ்சிய 280 மெகாவாட்டில் நாராயணசாமியின் கருணையில் தமிழ்நாட்டுக்கு 50 சதவிகிதம் கொடுத்தாலும் கிடைக்கப்போவது வெறும் 140 மெகாவாட்தான் என்பதும் உங்களுக்குத் தெரியுமா? 9. கல்பாக்கம் அணு உலை வளாகம் சுனாமியால் மட்டுமல்ல, இப்போதைய தானே புயலில் கூட பாதிக்கப்பட்டது ம், கல்பாக்கத்துக்க ருகே கடலில் எரிமலை இருப்பதும் அதைப்பற்றி அணுசக்தித் துறைக்கு எதுவும் தெரியாது என்பதும் உங்களுக்குத் தெரியுமா ? 10. கூடங்குளத்திலும ் கல்பாக்கத்திலும ் சுனாமி வராது என்று அணுசக்தித் துறை முதலில் சொன்னதும் சுனாமி வந்தபின் இனிமேல் 9 மீட்டருக்குமேல் வராது என்று சொல்லிக் கொண்டிருப்பதும் உங்களுக்குத் தெரியுமா? 11. கூடங்குளம் அணு உலையைக் கட்டியிருக்கும் ரஷ்ய ரோசாட்டம் கம்பெனி அந்த நாட்டில் ஊழல் குற்றச்சாட்டுக் கும் தரக்குறைவான் பணிகளுக்காவும் விசாரிக்கப்படுவ து உங்களுக்குத் தெரியுமா ? 12. கல்பாக்கத்தில் பெரும் விபத்து ஏற்பட்டால் போயஸ் கார்டன், கோபலபுரம் முதல் பாண்டிச்சேரி வரை அழியும் ஆபத்து உள்ளது என்பதும் கூடங்குளத்தில் விபத்து ஏற்பட்டால் தென் மாவ்ட்டங்களும் கேரளத்தின் ஒரு பகுதியும் அழியும் என்பதும் உங்களுக்குத்தெர ியுமா
Quote
 
 
+1 #37 K.riaz Ahamed 2012-03-29 18:49
றவிசன்ட்ரன் சேனிவசன் – சென்னை,இந்தியா 201203௨8 11:28:06 ஈஸ்ட் றெபொர்ட் ஆபுசெ
உங்களுக்குத் தெரியுமா? 1.ஜப்பானின் மின் தேவையில் 31 சதவிகிதம் கொடுத்துவந்த அணு உலைகள் இப்போது தருவது வெறும் 2 சதவிகிதம்தான். காரணம் 52 உலைகளை அரசு மூடிவிட்டது. மீதி இரு உலைகளும் மே மாதத்தில் மூடப்படலாம். இதெல்லாம் ஏன் என்பது உங்களுக்குத் தெரியுமா? 2.கல்பாக்கம் அணு உலைகளில் இதுவரை சுமார் 200 விபத்துகள் நடந்துள்ளன என்பதும் ஒரு விபத்து நூலிழையில் மாபெரும் விபத்தாகாமல் தப்பித்தது என்பதும் உங்களுக்குத்தெர ியுமா? 3. செர்னோபில் உலை விபத்தில் இரண்டாயிரம் பேர் இறந்ததாக சோவியத் அதிபர் கோர்பசேவ் சொன்னார். ஆனால் 57 பேர்தான இறந்ததாக அப்துல் கலாம் மட்டும் சொல்வது ஏன், எப்படி என்று உங்களுக்குத் தெரியுமா? 4. புற்று நோய்க்கான காரணங்களில் ஒன்று கதிரியக்கம் என்று அடையாறு புற்று நோய் நிலையம் அறிவித்திருக்கு ம்போது அதன் தலைவர் டாக்டர் சாந்தா மட்டும் கதிரியக்கத்தால் புற்று நோய் வராது என்று அணுசக்தித் துறை விளம்பரத்தில் சொல்வது ஏன், எப்படி என்று உங்களுக்குத் தெரியுமா ? 5. கூடங்குளம் அணு உலைக்கு இடம் தேர்வு செய்தபோது அங்கே மக்களே கிடையாதுஅது ஒரு பாலைவனம் போலுள்ளது என்று அணு விஞ்ஞானி எம்.ஆர்.சீனிவாசன் சொன்னது உண்மையானால்,இப் போது அங்கே ஆயிரக் கணக்கான மக்கள் வாழ்ந்துவருவது ஒரு மாயத்தோற்றம் என்பதுதான் உண்மையா என்பது உங்களுக்குத் தெரியுமா ? 6.பத்தாண்டுக்கொரு முறை அடுத்த பத்தாண்டில் இத்தனை மெகாவாட் அணு மின்சாரம் தயாரிப்போம் என்று இந்திய அணுசக்தித் துறை சொன்னது எதையும் 40 வருடங்களில் இதுவரை ஒருமுறை கூட நிறைவேற்றவில்லை என்பதும் சொன்னதில் ஐந்து சதவிகித மின்சாரம் கூட தயாரிக்கவில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா? 7. இந்தியாவில் ஒரு அணு உலை கூட அதன் நிறுவப்பட்ட உற்பத்தித் திறனில் 50 சதவிகிதத்துக்கு மேல் உற்பத்தி செய்வதில்லை என்பதும் முப்பது வருடத்து கல்பாக்கம் 50 சதத்தை எட்டியதே சில வருடங்களாகத்தான ் என்பதும் உங்களுக்குத் தெரியுமா ?
Quote
 
 
+4 #36 paraman 2012-03-29 11:22
udayakumar is wretched person we should hang him to avoid some unnecessary things
Quote
 
 
+3 #35 சம்சுதீன் 2012-03-28 00:04
உண்ணாவிரதம் பணால்! உண்மையான உண்ணாவிரதம் என்றால் என்னவென்று மாவீரன் திலீபன் வாழ்க்கையை படித்து பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் உதை.
Quote
 
 
-2 #34 K.Riaz Ahamed Erode 2012-03-27 19:56
கூடங்குளம் அணு மின் உலையை எதிர்த்து மாவட்ட மக்கள் இடிந்தகரை எனும் இடத்தில் மிகப் பெரும் போரை தொடங்கி உள்ளனர். 127 பேர் இன்று 6 வது நாளாக சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டு உள்ளனர்.

இவர்களுக்கு ஆதரவாக இருபது ஆயிரம் பேர் தொடர் உண்ணவிரதம் மேற்கொண்டு வருகின்றனர். பல்வேறு கிராமங்களில் இருந்து தினமும் காலையில் வந்து இரவில் ஊருக்கு திரும்பி மீண்டும் காலையில் வந்து விடுகின்றனர்.பகல் முழுவதும் ஆறு நாட்களாக 20000 பேரும் பட்டினி கிடக்கின்றனர்.பள்ளி மாணவ,மாணவியர் சீருடையுடன் பள்ளியை புறக்கணித்து வந்து முழக்கம் போடுகின்றனர்.

தமிழக வரலாற்றில் கண்டறியாத போராட்டம் இது என்று அங்கு சென்று பார்த்த பின் தான் உணர்ந்தேன்.வெளி உலகில் இப்போராட்டத்தின ் பிரம்மாண்டம் மூடி மறைக்கப்பட்டுள் ளது.ஊடகங்கள் அரசுக்கு ஆதரவாக இருந்துகொண்டு சரியாக செய்தி வெளியிட வில்லை.சமூக உணர்வாளர்கள் ஒவ்வொருவரும் பங்கேற்க வேண்டிய போராட்டம் இது.இது குறித்து இணையதளம், கைபேசிகளிலும் போதுமான பிரச்சாரம் இல்லை.

உடன் இச் செய்தியை அனைவருக்கும் ஃபொர்நர்ட் செய்யுமாறு கேட்டுக்கொள்கிற ேன்.இது கூடன்குள மக்களின்வாழ்விய ல் பிரச்சனை மட்டுமல்ல,தமிழக மக்களின் உயிர் பிரச்சனை மட்டுமல்ல,மனித இனத்திற்கே சவாலான பிரச்சனை என்பதை கருத்தில் கொண்டு போராடும் மக்களுடன் உறுதியாக கை கோர்ப்போம்.அனைவரும் சென்று வருவோம்.தமிழகம் முழுவதையும் ஆதரவாக்குவோம்.

தொடர்புக்கு:உதய குமார் 9865683735 ,புஷ்ப ராயன் 9842154073 ,வைபா 9443962021
Quote
 
 
-1 #33 K.Nagaboobathy 2012-03-27 19:41
சவுக்கு வாசகர்களே நாகரிகமாக எழுதுங்கள் .நீங்கள் எழுதுவதை பார்த்தால் தெருகுலாயி சண்டைபோலவுள்ளது .நாய் எருமை ,அவன் இவன், என்று எழுதவேண்டாம் .எனனக்கு பயமாக வுள்ளது .என் கையும் தவறுது .
Quote
 
 
+4 #32 moorty 2012-03-27 18:40
ஆமா, இந்தியாவில இந்த அணு உலை கட்டி அணு ஆயுதம் தயாரிச்சதும் அமேரிக்கா காரன் அப்படியே பயந்து போயிருவான். அது ஒண்ணுதான் இப்ப ஒரே குறை. இந்தியாவின் ஆளும் வர்க்கமே அமெரிக்காவின் அடிவருடிகள்தான் . அவன் காலால் இட்டதை இவர்கள் தலையால் செய்ய காத்திருக்கிறார ்கள். இதில எதுக்கு அணு குண்டெல்லாம்.
Quote
 
 
+27 #31 anandth 2012-03-27 00:09
சம்சுதீன்

அமெரிக்கா சதி செய்யும் அளவுக்கு கூடங்குளம் வொர்த்த் இல்ல தம்பி .அவங்க நெனச்சா ஒரே நாள்ல வெள்ளயிடிச்சு விட்டு போய்டுவானுங்க .இப்படி காச குடுத்து மக்களை தூண்டிவிடனும் நு அவசியம் ம***** கிடையாது .சரி அத விடு ஒரு நாளைக்கு உனக்கு 1000ருபாய் நான் தரேன் .ஆனா உன் மேல தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும் .அப்படி ஒரு போராட்டத்த நீ செய்யணும் .செய்வியா? மாட்ட .ஒரு ஆம்பள நீயே யோசிக்கிற அங்க குடும்பத்தோட உண்ணாவிரதத்துல உக்கந்துருக்கது பணத்துக்காக நு நீ நெனகிறையா தம்பி .

நீ என்ன பண்ற அண்ணனுக்கு ஒரு டீ சொல்லிட்டு சரித்திரத்த ஒழுங்கா படிச்சுட்டு வீட்ல பெரியவங்க இருந்தா கூட்டிட்டு வா .இப்ப கெளம்பு காத்து வரட்டும்
Quote
 
 
+8 #30 m.joshuva daniel,uAe 2012-03-26 21:31
சென்னை மெரினா கடற்கரையில் தமிழர் எழுச்சி இயக்கம் மற்றும் தமிழக பெண்கள் செயற்களம் அணு உலை எதிர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது . அதில் பள்ளி மாணவர்கள் , குழந்தைகள் அவர்கள் பெற்றோர்கள் கலந்து கொள்ளும் விதமாக அணு உலையின் பாதிப்பை விளக்கும் பதாதை ஏந்தி போராட்டடம் செய்தனர் . ஆனால் காவல் துறை அனுமதி மறுத்தது. அவர்களை மீறி போராட்டம் நடந்ததால், காவல் துறை எட்டு மாத கை குழந்தை முதல் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் வரை கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தது . பின்பு ஒரு மணி நேரம் கழித்து அவர்களை விடுதலை செய்தது. இதில் கலந்து கொண்ட குழந்தைகள் அணு உலையின் பயங்கரத்தை விளக்கி முழக்கம் இட்டது பொது மக்கள் அனைவரையும் கவர்ந்தது.
Quote
 
 
+10 #29 ஷாலி 2012-03-26 20:50
அணுஉலை வேண்டுமா வேண்டாமா? இதன் விளைவால் ஆயிரக்காண மக்கள் எதிர்காலத்தில் இறப்பார்கள்.........

இதுபோன்ற கருத்துக்களே இங்கே பகிரப்படுகின்றன . ஆனால்,
கண்ணெதிரே 12 உயிர்கள் ஊசலாடிக்கொன்டிர ுக்கிறது.

இந்த உயிர்களையும் போராட்டத்தில் உள்ள மக்களின் நலன்களையும் யார் காப்பாற்றுவது?

கொடிய கொலை செய்து ஜெயிலில் இருக்கும் ஒரு கைதியைக்கூட அவன் தானாக மரணமடைய விடாமல் அரசு காப்பாற்றும் .ஆனால்,

பொதுமக்களுக்காக போராடும் ஒரு எளிய மனிதனை மரண விளிம்புக்கு தள்ளுவது என்ன நியாயம்?

இந்த நாட்டில் நீதி தர்மம் எல்லாம் செத்துவிட்டதா?

காட்டிலுள்ள மிருகங்கள் உணவு கிடைக்காமல் பசியால் மயங்கி விழும்போது,பிணம ்தின்னி கழுகுகள் அந்த மிருகத்தின் இறப்பை எதிபார்த்து வட்டமிடும்.

நம் நாட்டு கழுகுகளும் இதைத்தான் எதிபார்க்கின்றவ ா?

பேய் அரசான்றால் பிணம தின்னும் சாத்திரங்கள் என்று சொல்வார்கள்.இங்கு அரசே பிணம் தின்ன காத்திருக்கிறது .

நெஞ்சில் நேர்மை,பொதுவாழ் வில் தூய்மை உள்ளவர்கள்
என்றும் இறப்பதில்லை.அவர்கள் கோடனுகோடி காலம் வாழ்வார்கள்.ஆனால் இன்றைய அரசு நாளைக்கு தரிசு.
Quote
 
 
-4 #28 mahesh_new 2012-03-26 18:30
//இது ஒரு போராட்டம். (ஆனால் அணு உலை ஆதரவாளர்கள் இதை “போர்” என்கின்றனர்) செல்வந்தர்கள், அதிகாரம் படைத்தவர்கள், மேட்டுக்குடி மக்கள், உயர்சாதியினர், ஆடம்பரவாசிகள், //
//குறிப்பாக நாடார்கள், தலித்துகள், இசுலாமியர்கள்//

நீங்க யூஸ் பண்ற வாக்கியத்தை பார்க்கும் போது நீங்கள் எதிர்காலத்தில் அரசியல்வியாதி ஆகிவிடுவீங்க போல.. ராமதாசு டாஸ்மாக் கடைக்கு
பூட்டு போடுவேன்னு சொல்ற மாதிரி நீங்களும் அணு உலைக்கு பூட்டு போடுவதுதான் எங்க கட்சியின் முக்கிய கொள்கைன்னு சொல்லலாம்.
அய்யா உதயகுமாரு நீங்கள் சொல்வது போல செயற்கையான மின் பற்றாக்குறையில் அவதிக்கு உள்ளாவது சாமான்ய மக்களே ,
பெரும் செல்வந்தர்கள் அல்ல. அதுசேரி MBC/SC/ST போன்ற நாம் தான் தமிழ்நாட்டின் 60% மக்கள் தொகை. நாமெல்லாம் ஆடம்பரமாக மின்சாரம் செலவு செய்வதில்லையா? கண்ட கண்ட வெளி நாட்டு குளிர் பானங்கள், அழகு சாதன பொருட்கள் , உணவு பழக்கம் என எல்லாவகையிலும் hereditary genes-ஐ சேதபடுத்தி விட்டார்கள். அணு உலைய விட மோசமான விசயங்களை உதயகுமார் உட்பட ஆதரித்து விட்டோம். இப்போது அதை எல்லாம் விட்டுடுங்களேன் பார்போம்.
Quote
 
 
+2 #27 K.Nagaboobathy 2012-03-26 18:29
Sir I was the first person to send mails to all social organisations of the world and MLA, MPS, stating that """INDIA AND TAMILNADU JOINTLY KILL KUDANKULAM AREA PEOPLE A MASS GENOCIDE""' we should always note the point of VAIKO SIR russian technolgy is useless.Today Doctor Kalainger , Chief Manister , all tamil nadu people even communist parties all in dileema joined together to put ""HEAVY WEIGHT ON THE HEAD OF INNOCENT SOUTH PEOPL"",. if anything happens like bursting of Chrnopil, Kalainger sir will write a beautyful poem crying that we lost &700000people who are tamil blood. Chief minister madam will donate money generously to the affected people.we should note onething what VIJAYAKANTH SIR told "" Local people have not been consulted before starting the project!!!!!!!! !"'what is the strong point of Mr.P udayakumar is ,"" WestBengal & Kerala rejected the project what is the secret Tamilnadu accepting this?????????????The way both Tamilnadu Government and Indian Government handled the issue is Ridiculous.I sent many to many in the world so many videos of Russian disaster and copies of P.udayakumar letters all over the world but nobody areested me,I donot know why?? we need Electricity I never say No to this, But means to achieve it, consult the area people ..,,consider them ,because they are affected or going to be affected of if anything happens tomorrow directly or indirectly, Rest of the area people will get only the benifits not the FEAR , CANCER, Psychological problems, death,Eye sight loss,,,.etc,,.....all this will going to become wealth of Kudankulam areapeople very soon!!!!!
Quote
 
 
+10 #26 deepu 2012-03-26 16:54
ஆளும் சுய‌ந‌ல‌ வ‌ர்க்க‌ம், ம‌க்க‌ளைப் பிரித்த‌ளும் வ‌ல்ல‌மை கொண்ட‌வ‌ர்க‌ள்.
ச‌திகார‌ர்க‌ள். ம‌க்க‌ள் கோப‌ம் கொண்டு இண‌ந்திருக்கையி ல், நானும் உங்க‌ளோடுதான் என்பார்க‌ள்.
ந‌ம்பி செல்லும் போதே ந‌டுவ‌ழியில் திசைமாறி, எதிரியிட‌ம் காட்டிக்கொடுத்த ு கூலிவாங்கிக் கொள்வார்க‌ள். தேவை இனிப்பான விஷமா? க‌ச‌ப்பான மருந்தா? உல‌கை மாசுப‌டுத்தி நாட்டின் ம‌ண்,வின், நீர் ஆத‌ர‌ங்க‌ளை அழித்து அடுத்த‌ த‌லைமுறையையே த‌லைமுழுக‌ வேண்டிய‌ நிலைக்கு ம‌க்க‌ளைத் த‌ள்ளும் அணு உலைக‌ளா? அல்லது வ‌ருங்கால த‌லைமுறைக‌ள் இந்த‌ ம‌ண்ணில் " எந்தையும் தாயும் ம‌கிழ்ந்துகுலாவ ி இருந்த‌தும் இந்நாடே ‍ அத‌ன் முந்தைய‌ர் ஆயிர‌ம் ஆண்டுக‌ள் வாழ்ந்து முடிந்த‌தும் இந்நாடே" என ஆடிப்பாடிக் கொண்டாட‌ பூமியை புனித‌மாய் அவ‌ர்க‌ளுக்கு ந‌ல்ல‌ ம‌ண்,நீர், காற்று வ‌ள‌த்துட‌ன் காத்து அவ‌ர்க‌ளை சுக‌மாய் வாழ்விடப் போகிறோமா? ப‌தில்க‌ள் ம‌ண்ணின் ம‌ந்த‌ர்க‌ளிட‌ம ்தான் இருக்க‌ வேண்டும். நாடாள்ப‌வ‌ர் நாடு க‌ட‌ந்த‌தாய் ஏன் க‌ட‌த்த‌ப்ப‌ட்ட ‌தாய்க் கூட‌ ச‌ரித்திர‌ம் இருக்கிற‌து. தியாக‌ங்க‌ள் லாப‌ம் த‌ராம‌ல் போக‌லாம் ஆனால் எப்போதும் வெற்றி பெறுவ‌து அதுதான்.
Quote
 
 
+21 #25 நெல்லை பாலாஜி 2012-03-26 16:02
நாய்களும் பேய்களும் ஆட்சி செய்தால், சாதாரண மனிதன் என்ன செய்வான்???!!.. பன்னாட பதவி வகிக்கிறான்,
பன்னி வாயன் PMO அமைச்சர், இவனெல்லாம் புல் புடுங்க கூட வழி இல்லாமல், அதிகாரத்தை கையில் வைத்து கொண்டு, ஆட்டம் போடுகின்றான்.. இது தெரியமல் ஒரு கூட்டம், சொந்த காசில் சூனியம் வைப்பதை , பெருமை பேசி, தன் தலையில் அணு கழிவை இல்லை இல்லை தன் வாயில், அணு கழிவை எடுத்து வைக்கிறது.. அடே, அற்ப பதர்களே, உங்களுக்கும் சேதுதான் நாங்க போராடுகின்றோம், மானம் கேட்ட மண்ணின் மைந்தர்களே..
இங்க சில பன்னாடைகள், நெகடிவெ ச்லிச்க் பேசிகிறது.. அடே மாங்கா... நீயெல்லாம் திருந்தவே மட்டே...
Quote
 
 
0 #24 A. Kalidasan 2012-03-26 15:05
Savukku sir Mindum Mindum ungalukku solkiren entha kudankulathhu makkali nampathirkal?

Ningal ondurm mattum kavanikka vendum entha idinthakarai makkalukkuthan pattippu varum entru makkal poradukirarkal mindum mindum ondru solkiren ningal manasatch padi entha kadalora kirammangalil enppothum orrumayaka than irupparkal poduvakave chrishtain makkal entral ondru thanudaya panathil Trust arambithu piraku velinadukalukku photo anuppi avarkalidam uthavi ketparkal. entha hindu trust velinattilirunt hu panam vankiyathundo melum pathippu entha idinthakarai makkalukku mattumalla entha kudankulathai surri irukkum oorkallukkum pathipputhan piraku Een motham 4 ayiram pear mattum unnaviratham irukkirarkal. Ivarkal yarume kallvi arivu illatha makkal avarkalukku entha uthayakumar payathai katti avarkalodu poradukirar melum entha oor makkal Pishop Enna sollkiraro appatiye kettu nadapparkal. itharkku mel enna solla

entha Vaiko, Ramdoss, Siman, thirumalavan Ean Ippothu kural kodukkanum 7 mathama poradi varukirrarkale appothu kural kodukkamal ippo pesi payan enna?

Athodu entha thittam nirutha mudiyatha sulnilayil porattakararkal Ean poradikirarkal?



Thanks

A. Kalidasan, mumbai
Quote
 
 
+8 #23 M.S.Chagla 2012-03-26 14:26
சம்சுதின் போன்ர முட்டால் இஙகு தேவயில்லை.
Quote
 
 
0 #22 Anna Hazare 2012-03-26 13:54
Quoting manithan:
அடுத்து அவர்கள் மனிதனா வந்தார்கள். அப்போது நான் மிருகமாக மாரிவிட்டன் . :lol: :lol: :lol: :lol:

thats true you are an animal!!
read carefullly idiot.
1. this country has more water soruce than any other countries in this world.
2. this country has more natural source than any other country,
3.this country has wind source for free
now,
Do karnataka wants to give water to tamilnadu?
do kerala wants to give water to Tamilnadu?
do Karnataka wants to give water to Andhra?
do Maharastra wants to give water to Andhra?
your answar will be "NO"
so called states blocking their water source, why you people not blocking electricity from neyveli to be distrubuted to other states? anyone can start to protest?
what happened to Anderson? what happened to Bohpal accident? and those people suffered got the justice?
see how this govt blamed these people? first called them chirstian missionary, then foregin money, then now terrorists. actually Koodankulam people are 80% Hindu Nadars. Idindakarai people are as many Christian fernandos. but why they are calling Christian names not Hindus? why they are making minority issues? so the message is clear to divide people by name of God/Religion? this region is fast grown region, educated now. unlike late 70s and 80s. more than 90% people are educated now. comparing to other districts in tamilnadu,
My point is to you people, Respect people, do not insult like DINAMALAM news paper. DINAMALAM needs electricity coz they can run their Tirunelveli office without power cut. shoulder threat bastards always selfish, sorry for my language, sorry my few shoulder threat friends, i curse you because of your community caused me to do so.
Quote
 
 
-2 #21 டேய் சம்சுதீன் .... 2012-03-26 13:13
:ப்டேய் சம்சுதீன் .... செய்தித்தாளை படித்து மந்தம் ஆகி போன உன்னுடைய அரைகுறை அறிவை கொண்டு உளறுவதை நிறுத்து...

அணூலை போராட்டம் பற்றிய உண்மையான தகவல்கள் தெரியாமல் இங்கு மட்டுமல்ல, எங்கும் பின்னுட்டம் எழுதுதே..
Quote
 
 
+13 #20 nallavan 2012-03-26 12:46
அமெரிக்கா பணம் சும்மா கொடுக்கிறார் களா? அப்படினா நம்ம இந்தியாவில மில்லியன் கோடி பணம் இருக்கணும் ! உழல் ய் தட்டி கேக்க வக்கு இல்ல அங்கே இருந்து பணம் வருது இங்கே இருந்து பணம் வருது ந்னு பொய் வாய் கூசாமல் சொல்லறிங்க ? நிருபிங்க பாஸ்
Quote
 
 
+7 #19 nallavan 2012-03-26 12:41
அமெரிக்கா பணம் சும்மா கொடுக்கிறார் களா? அப்படினா நம்ம இந்தியாவில மில்லியன் கோடி பணம் இருக்கணும் ! உழல் ய் தட்டி கேக்க வக்கு இல்ல அங்கே இருந்து பணம் வருது இங்கே இருந்து பணம் வருது ன்னு பொய் வாய் கூசாமல் சொல்லறிங்க ? நிருபிங்க பாஸ்
Quote
 
 
-6 #18 GOPALASAMY 2012-03-26 11:48
CENTRAL GOVT COMMITTEE CAME AND TALKED WITH UDAYAKUMAR AND CO.
STATE GOVT COMMITTEE CAME AND TALKED.
NOW UDAYAKUMAR IS SAYING NOBODY CAME TO TALK.
SAVUKKU, YOU PLEASE UNDERSTAND THAT THERE ARE MORE NUMBER OF PEOPLE NOT SUPPORTING UDAYAKUMAR. HIS INTENTIONS AND ACTIONS ARE DOUBTFUL.

GOVT WILL CLOSE ALL THE CHANNELS OF DONATIONS FROM FOREIGN COUNTRIES WITHOUT
MUCH NOISE.

WE ARE WAITING TO SEE THE OTHER SIDE OF THE FACE OF UDAYAKUMAR AT THAT TIME.

IF SAVUKKU AND SOME OTHERS BELIEVE UDAYAKUMAR IS A FIGHTER FOR FOR POOR PEOPLE'S CAUSE, THERE ARE SO MANY PEOPLE BELIEVING HE IS AN AGENT FOR FOREIGN COUNTRY.

A COLLEGE PROFESSOR'S INCOME MAY B LESS THAN WHAT UDAYA KUMAR NOW GETS.

SOMEBODY WRITES TAMIL NADU PRODUCES ELECTRICITY MORE THAN IT'S DEMAND.

IF THEY GIVE STATISTICS WE CAN APPRECIATE.

"THATTINAL THANGAM, VETTINAL VELLI"
CASE.
Quote
 
 
-1 #17 Guna1962 2012-03-26 11:18
Nothing is safe in the present time. Not even walking in the road. Sure, there are risks associated with Atomic Energy anf the risks are there in other form of energy also. But nuclear energy is the easiest option for a poor country like India to feed its 140 crore population. Alternative is to halt and reduce the population crowth by adapting family planning. Are the judas club members of Udya and Pushparayan are raedy for that. Their only agenda is to convert the whole of India to Xtianity. Awake and arise self repscting Indians.
Quote
 
 
+9 #16 Haja Moinudeen 2012-03-26 11:10
உலகமயமாக்கள், பன்னாட்டு நிறுவனங்கலின் வருகை என்பதெல்லாம் இனிப்பாக தான் இருந்தது அதன் சுழ்ட்சி அரியாது இருந்த பொழுது. இன்று அரசாங்கம்மே அதன் கைகலில் தான் உள்ளது.
Quote
 
 
+50 #15 rajkumar 2012-03-26 09:01
மொத்தம் 28 மாநிலங்களையும், 7 யூனியன் பிரதேசங்களையும் உள்ளடக்கிய இந்தியாவில்.... 6 மாநிலங்களில் மட்டும் அணு உலைகளை அமைத்திருக்கிறா ர்கள்... அதிலும்... அதிகப்படியான மின்சாரத்தை தமிழ்நாட்டிலே உற்பத்தி செய்து மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக்கொள்கி றார்கள்...
அணு உலைகள் உள்ள மாநிலங்கள்...மற்றும் மின்சார உற்பத்தி
தமிழ்நாடு - 2890 மெகாவாட் (ப்ரொபொசெட்..ஈன்ச்லுடிங் கோடஙுலம் ஈஃப் இட் ஃபுன்ச்டிஒன்ச்)
ராஜஸ்தான் - 2485 மெகாவாட்
மகாராஷ்டிரா - 1400 மெகாவாட்
குஜராத் - 1840 மெகாவாட்
கர்நாடகா - 880 மெகாவாட்
உத்திரபிரதேசம் - 440 மெகாவாட்
இது இல்லாம காற்றாலை மின்சாரம், நெய்வேலி அனல் மின்சாரம் என்று அதிகப்படியான மின்சாரம் உற்பத்தியாகும் தமிழகத்தில் மட்டும் வரலாறு காணாத மின்வெட்டு... அணு உலைகளே இல்லாத மாநிலத்தில் எல்லாம் மின்வெட்டு கிடையாது...
நீங்க கஷ்டப்பட்டு சம்பாரிச்ச பணத்தை பிடுங்கி... ஊர்ல இருக்குற புள்ளைங்களுக்கு குடுத்துட்டு.... உங்க புள்ளைய பட்டினி போட்டா நீங்க சும்மா இருப்பீங்களா... மக்களே....
பல நாடுகளில் அணு உலைகளே கிடையாது... ஆனால் தடையில்லா மின்சாரம் கிடைக்கிறது.... என்னத்த சொல்ல... ஒரு பக்கம் குளோபல் வார்மிங்( புவி வெப்பமயமாதல்)... ஒரு பக்கம் கதிர்வீச்சு... சுருக்கமா சொல்லப்போனா... இது சாப்பாட்டுல சேக்குற அஜினோ மோட்டோ போலதான்... இப்போதைக்கு ருசியா இருக்கும்... ஆனா... பின்னாளில் கேன்சர் வரும்...

காலையில 20லிட்டர்... சாயங்காலம் 20லிட்டர் பால்கறக்கும்ன்ன ு சொல்லி 2லிட்டர் பால் கறக்குற மாட்டை விற்கிற கதைதான்...

மொத்தம் 22 மாநிலங்களிலும், 7 யூனியன் பிரதேசங்களிலும் அணு உலை இல்லாத போது... இல்லாத இடத்தில் அணு உலை நிறுவாமல்... ஏற்கெனவே அணு உலை இருக்கும் ஆறு மாநிலங்களில்... தமிழ்நாட்டில் மட்டும் இரண்டாவது அணு உலை அமைப்பதிலிருந்த ு நாம் தெள்ளத்தெளிவாக அறிந்துகொள்ள முடியும்... தமிழன் இளிச்சவாயன் என்று....
Quote
 
 
-7 #14 manithan 2012-03-26 08:25
அடுத்து அவர்கள் மனிதனா வந்தார்கள். அப்போது நான் மிருகமாக மாரிவிட்டன் . :lol: :lol: :lol: :lol:
Quote
 
 
-15 #13 manithan 2012-03-26 08:22
well said.. dont worry about negative tick.. those people are not at all going to do anything. just portal readers and vetti vellai parkaum manithargal Quoting சம்சுதீன்:
உதயகுமார் நீங்க சீக்கிரம் "உதை"குமார் ஆகபோரீங்க. நீங்க ஒரு தேசத்துரோகி என்பதில் எள் அளவும் சந்தேகம் இல்லை. அது எப்படி இன்னும் நீங்கள் அந்நிய நாட்டு பணம் உங்களுக்கு வரவில்லை என்று மறுக்கிறீர்கள். ஆதரத்துடன் வெளி வந்து விட்டதே. சரி, நீங்கள் ஒரு சமூக போராளி என்பதால் உங்கள் மீது எனக்கு நெருடலுடன் கலந்த மரியாதையை உண்டு. சுமார் பதினாலாயிரம் கோடி கூடங்குளத்தில் கொட்டும் வரை நீங்கள் எங்கே தூங்கி கொண்டு இருந்தீர்கள். இந்தியாவின் அணு ஆதிக்கத்தை கட்டுபடுத்த அமெரிக்கா விரித்த பாயில் படுத்துவிட்டீர் கள். இந்த அணூலை நாட்டின் இருபத்து ஒன்றாவது உலை, மற்ற இருபதும் பாதுகாப்பாக இருக்கும்போது, உங்களுக்கு மிக மிக உயரிய தொழில்நுட்பத்தி ல் கட்டபட்டு இருக்கும் இந்த உலையின் மீது மட்டும் ஏன் இந்த வெறி? அமெரிக்கா இதில் தலை மட்டுமல்ல மூக்கை குட நுழைக்க முடியவில்லை என்பதாலா? அணு விஞ்ஞானி ஹோமி பாபா விபத்து சாவில் கூட அமெரிக்காவின் சதி இருந்தது உலகம் அறியும். இந்த கூடங்குளத்தில் இருக்காதா என்ன?
Quote
 
 
+6 #12 Anu 2012-03-26 07:51
well done Udai! we appriciate your struggle for common cause against the Poweful GOvernment machinary!
Quote
 
 
+7 #11 samsudeen muttal 2012-03-26 04:55
People don't understand anything.what's the need for a double ph.d to go on indefinite fast for his people? He can simply work in companies or universities and earn in lakhs.support udayakumar&co or else shut up

@samsudeen:just because you got to read some crappy newspaper like dinamalam for one day by begging tea kadai,it doesn't give you the right to vomit those crap you read.
Quote
 
 
-13 #10 vendum suthanthiram 2012-03-26 01:57
Quoting சம்சுதீன்:
உதயகுமார் நீங்க சீக்கிரம் "உதை"குமார் ஆகபோரீங்க. நீங்க ஒரு தேசத்துரோகி என்பதில் எள் அளவும் சந்தேகம் இல்லை. அது எப்படி இன்னும் நீங்கள் அந்நிய நாட்டு பணம் உங்களுக்கு வரவில்லை என்று மறுக்கிறீர்கள். ஆதரத்துடன் வெளி வந்து விட்டதே. சரி, நீங்கள் ஒரு சமூக போராளி என்பதால் உங்கள் மீது எனக்கு நெருடலுடன் கலந்த மரியாதையை உண்டு. சுமார் பதினாலாயிரம் கோடி கூடங்குளத்தில் கொட்டும் வரை நீங்கள் எங்கே தூங்கி கொண்டு இருந்தீர்கள். இந்தியாவின் அணு ஆதிக்கத்தை கட்டுபடுத்த அமெரிக்கா விரித்த பாயில் படுத்துவிட்டீர் கள். இந்த அணூலை நாட்டின் இருபத்து ஒன்றாவது உலை, மற்ற இருபதும் பாதுகாப்பாக இருக்கும்போது, உங்களுக்கு மிக மிக உயரிய தொழில்நுட்பத்தி ல் கட்டபட்டு இருக்கும் இந்த உலையின் மீது மட்டும் ஏன் இந்த வெறி? அமெரிக்கா இதில் தலை மட்டுமல்ல மூக்கை குட நுழைக்க முடியவில்லை என்பதாலா? அணு விஞ்ஞானி ஹோமி பாபா விபத்து சாவில் கூட அமெரிக்காவின் சதி இருந்தது உலகம் அறியும். இந்த கூடங்குளத்தில் இருக்காதா என்ன?


visayam theriyaamal neengalellaam thinamalam pondra patthirikai parappum visatthirkku adimai aagaatheergal... 14,000 kodikku intha kelvi kekkum neengal arasiyal vaathigalidam kelunga pala letcham kodi enge endru.
Quote
 
 
+2 #9 vendum suthanthiram 2012-03-26 01:52
Chernobyl 26 years on -

Malformed children -
http://www.youtube.com/watch?v=rvAJ_u3Q0Hw

Seconds before the blast
http://www.youtube.com/watch?v=I7oDyuMssCY&feature=related

26 years on - Ghost Town Pirpyat (the town looks a disaster hit just yesterday - even after 26 years)

http://www.youtube.com/watch?v=vSUu1ccYBGQ&feature=related

Radio active reading in 2003
http://en.wikipedia.org/wiki/File:Chernobylpowerplantradioactivity.jpg
Quote
 
 
+34 #8 kali.krishna 2012-03-26 01:43
ஆமா, இந்தியாவில இந்த அணு உலை கட்டி அணு ஆயுதம் தயாரிச்சதும் அமேரிக்கா காரன் அப்படியே பயந்து போயிருவான். அது ஒண்ணுதான் இப்ப ஒரே குறை. இந்தியாவின் ஆளும் வர்க்கமே அமெரிக்காவின் அடிவருடிகள்தான் . அவன் காலால் இட்டதை இவர்கள் தலையால் செய்ய காத்திருக்கிறார ்கள். இதில எதுக்கு அணு குண்டெல்லாம்.

இந்தியாவை விட தொழில் நுட்ப வளர்ச்சி கொண்ட நாடுகளான, ஜெர்மனியிலும், சுவிச்லாந்திலும ் 2011 முதல் அணு உலைகளை படிப்படியாக நிறுத்த நடவடிக்கை எடுத்திருக்கிறா ர்கள். அங்கேயும் பல ஆயிரம் கோடி கொடுத்துதான் கட்டியிருப்பார் கள். ஆனால் காசகுடுத்து கட்டிபோட்டு நிறுத்தக்கூடாது என்று சொல்ல உங்களை போல அறிவாளிங்க இல்ல போல.

அங்க கழட்டுற அணுஉலைகளை எல்லாம் நல்ல விலைக்கு விற்க ஏதுவாகத்தான் இங்கே புதிது புதிதாக கட்டி கொண்டு வருகிறார்கள். அதில நம்ம அரசியல்வாதிகளுக ்கு நல்ல கமிஷனும் கிடைக்கும். இந்த முட்டாள்தனத்தைய ும், களவாணிதனத்தையும ் மறைக்கத்தான் வல்லரசு பம்மாத்தெல்லாம் .

பாதிப்பு வந்தால்தானே பிரச்சினை பலர் சொல்லுறாங்க. அணு உலை சாதாரணமாக இயங்கினாலே அதுசார்ந்த பகுதிகளில் கதிர் வீச்சு இருக்கும். 20 , 30 வருட அணு உலைகளின் பாதிப்பை வெளிநாடுகளில் இப்போதுதான் உணர ஆரம்பித்திருக்க ிறார்கள். பலநாடுகளில் பாதிப்பை வெளிப்படையாக்கி னால் மக்கள் குழம்புவார்கள் என்று இரகசியமாக நடவடிக்கை எடுக்கிறார்கள். கூடங்குளத்தில் இன்னும் 20 வருடங்களில் எல்லாம் கை மீறி போனபின்புதானா இதை உணருவார்கள் நமது மெத்த படித்த மர மண்டைகள்.

காசு, பணம், பெறுமதி எல்லாம் மனிதன் உருவாக்கியதுதான ். நமது பூமியும் அதன் சூழலும் எவ்வளவு காசு கொடுத்தாலும் மனிதனால் திரும்ப கொண்டு வர முடியாது. கதிர் வீச்சு என்பது ஒருநாள், இருநாள் பிரச்சினை அல்ல அது ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பாதிப்பு செலுத்தகூடியது.
Quote
 
 
+1 #7 vendum suthanthiram 2012-03-26 01:42
chernobyl - 26 years on -
Quote
 
 
+5 #6 vendum suthanthiram 2012-03-26 01:41
They Lied To US - Fukushima

http://www.youtube.com/watch?v=Rrxmy6R3m90

An year from Fukushima
http://www.youtube.com/watch?v=PqQWpo_AsF8
Summary - It took a year to call the reactor is officially in cold shut-down state. Means - stopped operating.

It is yet for any human to go near the core. It may take years to make such venture.

All works are only involved in disaster recovery operations - even after a year.

Disaster zone is still prohibited for people to go back to their homes.

Japan still don't know what to do with nuclear debries. Have no nuclear waste management facility.
Quote
 
 
+21 #5 K.Mangayarkarai,UK 2012-03-26 01:21
சர்வாதிகாரம் தலைவிரித்து ஆடும்போதுதான், இப்படிக் காவல்துறையைக் கொண்டு, பொதுமக்களை மிரட்டுகின்ற அக்கிரமம் நடக்கும். தங்கள் உயிர்களையும், தங்கள் சந்ததியினரையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று, தரும யுத்தம் நடத்தி வருகின்ற அப்பகுதி வாழ் மக்கள் மீது, காவல்துறை அடக்குமுறையை ஏவுமானால், விபரீதமான விளைவுகள் ஏற்படும் என எச்சரிக்கிறேன்.

இடிந்தகரை உள்ளிட்ட கடற்கரையோரப் பகுதிகளில் குவிக்கப்பட்டு உள்ள காவல்துறை, அங்கிருந்து வெளியேற வேண்டும்.

போராட்டக்குழுவி ன் உதயகுமார், புஷ்பராயன் உள்ளிட்டோர், சாகும்வரை உண்ணாவிரதம் தொடங்கி உள்ளனர்.

அணுமின் நிலைய எதிர்ப்பு இயக்கத்தினரின் அறப்போராட்டத்தை ஆதரித்தும், காவல்துறையின் அடக்குமுறையை எதிர்த்தும் இந்த சோதனையான நேரத்தில் மனித உரிமை ஆர்வலர்களும் அணூலை எதிர்ப்பாளர்களு ம் குரல் கொடுக்க வேண்டுகிறேன்.
Quote
 
 
+25 #4 ஊர்க்குருவி. 2012-03-25 23:41
இது ஒரு தொலைநோக்குப்பார ்வையுடன் சம்பந்தப்பட்ட போராட்டம். விளிம்பு நிலை மக்களுக்கும் அடித்தட்டு மக்களுக்கும் இதன் உள்ளடக்கம் விரைவில் உணரப்படமுடியாது . இன்றைய மின்சார குறைப்பாட்டை முன்னிறுத்தி அடுத்த மாவட்ட மக்களைக்கூட அரசுகள் தம்வசம் வீழ்த்த நல்ல தந்திரத்தை கையாளுகின்றன. தினமலர்போன்ற தமிழ் பத்திரிகைகளும் மூட்டிவிடுவதிலே யே குறியாயிருக்கின ்றன. உண்ணாவிரதிகள் என்ன செய்யப்போகிரார் கள் என்று தெரியவில்லை. தான் பிடித்த முயலுக்கு மூன்றுகால் என்று சாதிக்கும் முதலமைச்சர் சிந்திக்கும் மனப்போக்கில் இருப்பாரோ என்பதும் தெரியவில்லை அவர்களின் நோக்கமெல்லாம் அடுத்த தேர்தலில் வெற்றி பெருவதற்காக அழிவுடன் கூடிய குறுகிய திட்டம் எதையும் அதிகாரத்தை வைத்துக்கொண்டு செயல்ப்படுத்தவே முயலுகின்றனர். எல்லாவற்றிற்கும ் "காலம்தான்" சரியான மாற்றீடுகளை அறிமுகப்படுத்து கிறது. உதயகுமார் மற்றும் தோழர்களுக்கு சிந்திக்கக்கூடி யவர்களின் ஆதரவு நிச்சியம் உண்டு வைகோ, சீமான், த பாண்டியன் போன்ற அரசியல்வாதிகள்த ான் உடனடியாக கைகொடுத்து உதவவேண்டும். சத்தியம் வெல்லும் வாழ்த்துக்கள்.
Quote
 
 
+31 #3 naan kadavuL 2012-03-25 23:38
யார் என்பதை விட எடுத்த செயல் பற்றி சிந்திப்பதே மேல்.சென்ற வாரம் ஜப்பானில் மீண்டும் அணு உலை விபத்து நடந்த இடத்தில் அணுக் கதிர் வீச்சு கண்டறியப்பட்டுள ்ளது.அங்கு செல்ல தடையும் விதிக்கப்பட்டுள ்ள நிலையில் மக்களின் நியாயமான பயத்திற்கு அரசுகள் பதில் சொல்வதே நீதியான செயலாகும். அதை விடுத்து மக்களின் அரசு என்று சொல்பவர்கள் அடக்குமுறையை பயன்படுத்தி ஜனனாயகத்தை குழி தோண்டி புதைப்பது எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை.
Quote
 
 
+18 #2 Eleventh Sense 2012-03-25 23:32
ச்டெர்லிடெ என்னும் நாசக்கார ஆலைக்கு எதிராக வைகோ மட்டும் வந்தார்........
அதே போல் கூடங்குளம் என்னும் நாசக்கார அணுக்கூடத்துக்க ு எதிராக நீங்கள் மட்டும் இல்லை நண்பரே ....
எங்களில் பல பேர் இருக்கிறோம்......

அடுத்து அவர்கள் எனக்காக வந்தார்கள்.

அப்போது எனக்காகப் பேச யாருமே இல்லை......என்று இனி ஒரு முறை சொல்லாதீர்கள் நண்பரே.
Quote
 
 
-56 #1 சம்சுதீன் 2012-03-25 20:56
உதயகுமார் நீங்க சீக்கிரம் "உதை"குமார் ஆகபோரீங்க. நீங்க ஒரு தேசத்துரோகி என்பதில் எள் அளவும் சந்தேகம் இல்லை. அது எப்படி இன்னும் நீங்கள் அந்நிய நாட்டு பணம் உங்களுக்கு வரவில்லை என்று மறுக்கிறீர்கள். ஆதரத்துடன் வெளி வந்து விட்டதே. சரி, நீங்கள் ஒரு சமூக போராளி என்பதால் உங்கள் மீது எனக்கு நெருடலுடன் கலந்த மரியாதையை உண்டு. சுமார் பதினாலாயிரம் கோடி கூடங்குளத்தில் கொட்டும் வரை நீங்கள் எங்கே தூங்கி கொண்டு இருந்தீர்கள். இந்தியாவின் அணு ஆதிக்கத்தை கட்டுபடுத்த அமெரிக்கா விரித்த பாயில் படுத்துவிட்டீர் கள். இந்த அணூலை நாட்டின் இருபத்து ஒன்றாவது உலை, மற்ற இருபதும் பாதுகாப்பாக இருக்கும்போது, உங்களுக்கு மிக மிக உயரிய தொழில்நுட்பத்தி ல் கட்டபட்டு இருக்கும் இந்த உலையின் மீது மட்டும் ஏன் இந்த வெறி? அமெரிக்கா இதில் தலை மட்டுமல்ல மூக்கை குட நுழைக்க முடியவில்லை என்பதாலா? அணு விஞ்ஞானி ஹோமி பாபா விபத்து சாவில் கூட அமெரிக்காவின் சதி இருந்தது உலகம் அறியும். இந்த கூடங்குளத்தில் இருக்காதா என்ன?
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 139 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday418
mod_vvisit_counterYesterday10391
mod_vvisit_counterThis week418
mod_vvisit_counterLast week80132
mod_vvisit_counterThis month203150
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12725269