முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
வேதனையான வீழ்ச்சி 2 அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 14
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
வெள்ளிக்கிழமை, 20 ஏப்ரல் 2012 19:11

அண்ணாவின் அறிக்கைக்குப் பிறகு பெரியார் தன் முடிவை மாற்றிக் கொள்ளாதது மட்டுமல்ல… திராவிடர் கழகத்தின் வாரிசு என்ற மணியம்மையை அறிவிக்கப் போகிறார் என்று செய்திகள் பரவுகின்றன. இதை உண்மை என்று அறிவித்து பெரியார் அறிக்கையும் விடுகிறார்.

வெகுண்டெழுந்த அறிஞர் அண்ணா, “பெரியாரே… இப்படி ஓர் அநியாயமான கொள்கைக்கு முரணான, மக்கள் நகைக்கத்தக்க பொருந்தாத் திருமணம் செய்து கொள்கிறீரே.. இது சரியா என்று கேட்கிறோம்.

போடா போ… நான் திருமணம் மட்டுமா செய்து கொள்ளப் போகிறேன் இயக்கத்தையே மணியம்மையிடம் ஒப்படைக்கிறேன்.  அப்படி ஒப்படைப்பதற்காகவே திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறுகிறார் பெரியார்.

கழகத்தில் அதிக காலம் பணியாற்றியவர்கள் உண்டு. திறமையானவர்கள் உண்டு.  சொத்தை, சுகத்தை இழந்தவர்கள் உண்டு.  கண்ணையும் கருத்தையும் இழந்தவர்கள் உண்டு, இவர்கள் யாவரும் வாரிசாக்க முடியவில்லை.  இவர்களில் யாருக்கும் இயக்கத்தை நடத்திச் செல்லும் வாய்ப்புக் கிடைக்கவில்லை.

எந்த முறையில் ?  பெரியாரின் துணைவியாகும் முறையில். என்ன தகுதியால் ?  பெரியார் அறிக்கையில் கூறியபடி, “நான் 5, 6 வருஷ காலமாகப் பழகி நம்பிக்கை கொண்டதும், என் நலத்திலும், இயக்க நலத்திலும், உண்மையான பற்றும் கவலையும் கொண்டு நடந்து வந்திருக்கின்றதுமான மணியம்மை”.

திராவிடர் கழகத்துக்கு வாரிசு நியமிக்கும் முறை குறித்து அண்ணா “வாரிசு முறை எதற்கு ?  யார் செய்யும் ஏற்பாடு ?  எந்தக் காலத்து முறை ?  ஐதராபாத் நிஜாமுக்கும்,ஆதீனகர்த்தாக்களுக்கும் ஏற்பட வேண்டிய கவலை, பகுத்தறிவு இயக்கத் தலைவருக்கு ஏன்  ஏற்படுகிறதோ தெரியவில்லை.

Kalangher

ஒரு இயக்கத்துக்கு வாரிசு ஏற்படுத்துவது என்பது ஜனநாயக முறைக்கு ஏற்றதுதானா ?  அல்லது நடைமுறையிலே வெற்றி தரக்கூடியதுதானா ? திராவிடக் கழகம் அதற்கென உள்ளதாகக் கூறப்படும் சொத்து என்பது இன்னொருவருக்கு வாரிசு முறைப்பட தரப்பட வேண்டிய காட்டு ராஜாங்கம்தானா ?  இதற்காகத்தானா “வெள்ளிக் குண்டுகளை வீசுங்கள்… வேலை நடப்பதைப் பாருங்கள்” என்று விடுதலை முழக்கமிட்டது ?

இதோ விரட்டப்படுகிறோம். நாம் கட்டிய கோட்டையிலிருந்து, நாம் பாடுபட்ட கழகத்திலிருந்து, தந்தை மக்களை விரட்டியடிக்கிறார். புதிய “வாரிசு”  தேடிக் கொண்டு, திக்கற்றவர்களாகி, திகைப்புண்டவர்களாகி, பாடுபட்டதின் பலனைப் பறிகொடுத்துவிட்டு, குடிபுகுந்த குமரி கோலோச்ச முற்படுவது கண்டு, குமுறி, குன்றி, கோவெனக் கதறிக் கொண்டு நமது வீட்டை விட்டு வெளியேறுகிறோம்.” என்று தனது மனக்குமுறலை வெளியிட்டார் அண்ணா.

இதையடுத்து அண்ணா தலைமையில், எண் 7, பவழக்காரத்தெரு, சென்னையில் அண்ணா தலைமயில் கூடிய கூட்டம் “திராவிடர் கழகத் தலைவர் பெரியார் ஈ.வெ.ரா அவர்களின் திருமணத்திற்குப்  பிறகு கழகத்தில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக கழக நடவடிக்கைகள் ஸ்தம்பித்து விட்டபடியாலும், இந்நிலையை மாற்ற ஜனநாயக முறைப்படி பெரியார் தலைமைப் பதவியை ராஜினாமா செய்யாமல் கழகத்தை செயலாற்றதாக்கி இருப்பதாலும், இப்பொழுது இருக்கின்ற நாட்டு நிலையில் இந்த மாதிரியான மந்த நிலைமை இந்நாட்டு மக்களின் எதிர்கால வளர்ச்சிக்கு பெரிதும் ஊறு பயக்கும் என்று இக்கமிட்டி கருதுவதாலும், கழகக் கொள்கைகளம், இலட்சியமும் நசுக்கப்பட்டுப் போகும் என்று அஞ்சுவதாலும் நாம் இதுவரையில் பரப்பி வந்த கொள்கைகளையும் லட்சியத்தையும் தொடர்ந்து பரப்பவும், உடனடியாக வேலைகளைத் துவக்கி நடத்தவும், நாம், “திராவிடர் முன்னேற்றக் கழகம்” என்ற அமைப்பை ஏற்படுத்திக் கொண்டு செயலாற்றுவதென இக்கமிட்டி தீர்மானிக்கிறது.

காலையில் பவழக்காரத் தெருவில் கூடி எடுக்கப்பட்ட முடிவின் படி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொடக்க விழா, சென்னை ராபின்சன் பூங்காவில் தொடங்கப்பட்டது.

23721734

அந்த விழாவிலே, கொட்டும் மழையில் பேசினார் அண்ணா.   “திராவிடர் கழகமாகட்டும் – திராவிட முன்னேற்றக் கழகமாகட்டும்.  படை வரிசை வேறு என்றாலும் கொள்கை ஒன்றுதான்.  திட்டமும் வேறு அல்ல என்ற நிலை இருந்தே தீரும். படைவரிசை இரண்டுபட்டு விட்டது என்று எக்காளமிடும் வைதீகபுரிக்கும், வடநாட்டு ஏகாதிபத்யத்துக்கும் சம்மட்டியாக விளங்க வேண்டும். இரு கழகங்களும் இரு திக்குகளிலுமிருந்து வடநாட்டு ஏகாதிபத்யத்தை ஒழித்து, வைதீகக் காட்டை அழித்து சமதர்மப் பூங்காவை, திராவிடத்தை செழிக்கச் செய்தல் வேண்டும். அதிலே எந்தக் கழகம் பூங்காவை அமைத்தாலும் அதில் பூக்கும் பூக்கள், காய்கள், கனிகள், திராவிடத்தின் எழுச்சியை, மலர்ச்சியைத் தான் குறிக்கும்.  இரு பூங்காக்களும் தேவை.  ஒன்றோடொன்று பகைக்ககத் தேவையில்லை, அவசியமும் இல்லை.   எது புஷ்பித்தாலும் மாலையாகப்போவது திராவிடத்துக்குத்தான் என்ற எண்ணம் வர வேண்டும்”

இதுதான் திமுகவின் தொடக்கம்.  திமுக தொடங்கிய சில நாட்களிலேயே திராவிட நாடு இதழைத் தொடர்ந்து நடத்துவதற்கு 3000 ரூபாய் ஜாமீன் கட்ட வேண்டும் என்று அரசு உத்தரவிடுகிறது.  இத்தொகையைக் கட்டாவிட்டால், பத்திரிக்கை நின்று விடும் என்ற நிலையில், மக்களிடம் பணம் வசூலித்து, 3000 ரூபாயைக் கட்டகிறார் அண்ணா.   இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், அரசு விதித்துள்ள 3000 ரூபாய்க் கட்டணத்தை செலுத்தத் தேவையில்லை என்று உத்தரவிடப்படுகிறது.  அப்போது என்ன நடந்தது தெரியுமா ?   அந்த 3000 ரூபாயையும், வசூலிக்கப்பட்ட பொதுமக்களிடம் திருப்பி அளிக்கிறார் அண்ணா.

அண்ணா எழுதிய “ஆரிய மாயை” என்ற நூலுக்கு காங்கிரஸ் அரசாங்கம் தடை விதித்தது.  இதையடுத்து அண்ணா கைது செய்யப்பட்டார். இதையடுத்து தமிழகமெங்கும் நடந்த போராட்டங்களின் விளைவாக அண்ணா விடுதலை செய்யப்ட்டார்.  அடுத்ததாக அண்ணா எழுதிய “இலட்சிய வரலாறு“ என்ற புத்தகத்துக்கும் தடை விதிக்கப் பட்டது.   ஏ.வி.ஆசைத்தம்பி எழுதிய “காந்தியாக சாந்தியடை“ என்ற புத்தகத்துக்கும் தடை.  புலவர் செல்வராஜ் எழுதிய “கருஞ்சட்டை ஒழிய வேண்டுமா ? “ என்ற புத்தகத்துக்கும் தடை.

இதனைத் தொடர்ந்து, டால்மியாபுரம் ரயில்நிலையத்துக்கு கல்லக்குடி என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும், ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்திற்கு எதிர்ப்பு என்று தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்ட, பல்வேறு திமுகவினர் தண்டனையடைகிறார்கள்.

1957ம் ஆண்டு நடைபெற்றத் தேர்தலில், முதன் முறையாக திமுக போட்டியிடுகிறது.  142 இடங்களில் போட்டியிட்டு, 15 இடங்களில் திமுக வெற்றி பெறுகிறது.

இதன் பிறகு கட்சி சந்தித்த மிகப் பெரிய பிரிவு ஈவெகி சம்பத் அவர்களின் பிரிவு.  அண்ணாவோடு ஏற்பட்ட கருத்த வேறுபாடு காரணமாக, பிரிந்து “தமிழ் தேசியக்கட்சி” என்ற அமைப்பை ஏற்படுத்தினார்.

1962ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில், திமுக 50 இடங்களில் வெற்றி பெற்றது.  ஆனால் அறிஞர் அண்ணா தேர்தலில் தோல்வியடைந்தார். இது வரை, தமிழகத்தில் மிகப் பெரிய கட்சியாக இருந்த இடதுசாரிகளின் தாக்கம் சரிவடைந்து, திராவிடக் கட்சி அந்த இடத்தைக் கைப்பற்றியது.

தொடர்ந்து நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் விளைவாக மக்கள் மத்தியில் பெரும் ஆதரவைப் பெற்ற திமுக, 1967ல் 138 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தது.

திமுகவின் கொள்கைகள் சரியோ தவறோ, திமுக இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய இடத்தை ஆக்ரமித்துக் கொண்டிருக்கிறது என்பதே உண்மை.  பெரியார் ஒரு வேளை திருமணம் செய்து கொள்ளாமல் இருந்திருந்தால், திமுக என்ற இயக்கம் தோன்றுவதற்கு பெரிதான காரணம் இல்லாமல் போயிருக்கக் கூடும்.

PTI4_24_2011_000034B

மணியம்மையை திராவிடர் கழகத்தின் வாரிசு என்று பெரியார் அறிவித்தவுடன், அறிஞர் அண்ணா எப்படிக் கொதித்துப் போனார் என்பதை கட்டுரையின் தொடக்கத்திலே படித்திருப்பீர்கள்.   இப்படித் துவங்கப்பட்டதுதான் திமுக.

இப்படிப்பட்ட வரலாறு உள்ள திமுக, இன்று எத்தகைய வீழ்ச்சியை அடைந்திருக்கிறது ?  எந்தக் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து திமுக வீறு கொண்டு  எழுந்ததோ, அதே காங்கிரஸ் கட்சியால், நெருக்கடி நிலையின் போது சொல்லொன்னாத் துயருக்கு ஆளாகியது திமுக.  திமுக கரை வேட்டியோடு சாலையில் நடமாடியவர்களையெல்லாம், காவல்துறை கைது செய்தது.   சிறையில் அடைக்கப்பட்ட திமுக தலைவர்கள், கடும் சித்திரவதைக்கும் தாக்குதலுக்கும் உள்ளானார்கள்.

அந்த நெருக்கடி நிலையில் நடந்த கொடுமைகளுக்கெல்லாம் காரணமான காங்கிரஸ் கட்சித் தலைவி இந்திராவின் காலில் சரணடைந்தார் கருணாநிதி.   வண்டி வண்டியான ஆதாரங்களுடன், எம்.ஜி.ஆரும், மற்ற சில அரசியல் கட்சித்தலைவர்களும், வழங்கிய ஆதாரங்களின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணை ஆணையத்தின் அறிக்கை தன்அரசியல் வாழ்வையே அழித்து விடும் என்று பயந்த கருணாநிதி இந்திராவிடம் சரணடைந்தார்.

எம்.ஜி.ஆர் மறைவடையும் வரை, கருணாநிதி நடத்திய எத்தனையோ தகிடுதத்தங்கள் அவருக்கு ஆட்சியை மீட்டுத் தரவில்லை.  எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு, 1989ல் ஆட்சியைப் பிடித்த கருணாநிதி, அப்போது வரை, திராவிட இயக்கத்தின் அடித்தளமான கொள்கைகளுக்கு முழுமையாக எதிரானவராக மாறிப்போய் விடவில்லை.

1990ல் அவரது ஆட்சி கலைக்கப்பட்டதும், 1991ல் ராஜீவ் மறைவுக்குப் பிறகு வந்த தேர்தலில், திமுக வரலாறு காணாத தோல்வியைத் தழுவியது. அப்போது அமலில் இருந்த தடா என்ற கொடிய சட்டத்தின் கீழ், திமுக தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டனர்.   மேலும் ராஜீவ் கொலைக்கே திமுகதான் காரணம் என்ற பிரச்சாரமும் அவிழ்த்து விடப்பட்டது.   1996ல் மீண்டும் ஆட்சிக்கு வந்த கருணாநிதியிடம், முதுமை காரணமாகவோ, அல்லது வேறு காரணமாகவோ மாற்றங்கள் வெளிப்படத் தொடங்கின.

திமுக என்ற இயக்கம் முழுமையான அழிவை நோக்கிச் சென்றது 2006ல் திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகுதான்.   முழுப் பெரும்பான்மைக்கு சில எம்எல்ஏக்கள் குறைவாக இருந்த காரணத்தினால், சிறுபான்மை ஆட்சி நடத்தி வந்த கருணாநிதி, திராவிட இயக்கத்தின் வரலாற்றுக்கு நேர் எதிரான நடவடிகைகளில் இறங்கத் தொடங்கினார். 2006ல் கருணாநிதி ஆட்சிப் பொறுப்பேற்ற சமயத்திலெல்லாம், இப்போது அவர் வேண்டும், வேண்டும் என்று போரும் ஈழம் குறித்து பேசியிருக்கலாம். அப்போது இணக்கமாகவே இருந்த மத்தியில் ஆட்சியில் இருந்த பாரதீய ஜனதா கட்சித் தலைவர்களிடம் சொல்லி, இலங்கையில் தமிழர்களின் உரிமையை நிலைநாட்டுவதற்கான முயற்சிகளை எடுத்திருக்கலாம்.

2008ல் இலங்கையில் போர் தொடங்கியதுமே, தமிழர்களுக்கு எதிராக சிங்கள வெறி கட்டவிழ்த்து விடப்படுகிறது என்பது, ஆட்சியில் இருந்த கருணாநிதிக்கு நன்றாகவே தெரியும்.

2006 தொடக்கத்திலேயே, கட்சிக்குள் இரு மகன்களின் ஆதிக்கம் வெளிப்படையாக விரிவடையத் தொடங்கியது.   கருணாநிதிக்கு அடுத்தபடியாக திமுகவின் முகமாக ஸ்டாலின் மட்டுமே இருந்து வந்தார்.  இதற்குப் போட்டியாக, தென் மண்டலத்தில் தனக்கென்று ஒரு சாம்ராஜ்யத்தை அமைத்துக் கொண்ட அழகிரி, தன் தம்பி ஸ்டாலினை நேரடியான எதிரியாகப் பார்த்தார்.

2007 முதலே, அழகிரி, ஸ்டாலினுக்கு இணையாக, கட்சியில் கனிமொழியையும் வளர்த்து விட வேண்டும் என்பதற்கான முயற்சிகளில் கருணாநிதி இறங்கினார்.  அந்த முயற்சியின் வெளிப்பாடுகளே, சென்னை சங்கமம் போன்ற நிகழ்ச்சிகள்.

மாறன் சகோதரர்கள் தங்கள் பங்குக்கு கட்சியைக் கைப்பற்ற எடுத்த முயற்சிகள் பெரிய அளவில் வெற்றியைத் தேடித் தரவில்லை.   கட்சியில் மூன்றாக அணிகள் பிரிந்து, ஒரே குடும்பத்திற்குள் கட்சியைக் கைப்பற்றுவதற்கான போட்டி வெளிப்படையாக தெரியத் தொடங்கியது.

2011ல் ஆட்சி இருந்தவரை குடும்பத்தை ஒட்டி வைத்திருந்த பசை, ஆட்சி கைவிட்டுப் போனதும், விரிசல் வெளிப்படையாகவே தெரியத் தொடங்கியது.

இன்று அழகிரி மற்றும் ஸ்டாலினுக்கு இடையே நடக்கும் மோதல்களை ஊடகங்கள் விரிவாக விவாதித்துக் கொண்டுள்ளன.  கருணாநிதிக்குப் பிறகு தலைமைப் பொறுப்பு அழகிரி அல்லது ஸ்டாலினிடமே வந்தடையும், இவர்கள் இருவரில் வெற்றி பெறப்போவது யார் என்ற நிலையே இன்று திமுகவில் நீடிக்கிறது.

அழகிரி, ஸ்டாலின், மற்றும், கனிமொழியை விட திறமையான பேச்சாளர்களும், நிர்வாகிகளும், திமுகவில் இருந்தாலும் இவர்களில் ஒருவர் கூட, அடுத்த கட்ட தலைவர்களாக கருதப்படுவது இல்லை என்பதே, திமுகவின் வீழ்ச்சி.

கருணாநிதிக்கு அடுத்தபடியாக ஒரு ஆகர்ஷிக்கப் பட்ட தலைவராக உருவான வைகோவை, தன் உயிரை பறிக்கத் திட்டமிடுகிறார் என்று குற்றம் சுமத்தி வெளியேற்றினார் கருணாநிதி. வைகோவுக்குப் பிறகு, திமுகவில் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இரண்டாம் கட்டத் தலைவர்களே அற்றுப்போய் விட்டார்கள்.

அறிஞர் அண்ணா தலைமைப் பொறுப்பில் இருந்த காலத்தில் மதியழகன், சம்பத், சிபி.சிற்றரசு, ஏவிபி.ஆசைத்தம்பி, டிகே.சீனிவாசன், என்.வி.நடராஜன், காஞ்சி கலியாண சுந்தரம் என்று பல்வேறு தலைவர்கள் இருந்தனர்.  ஒருவர் இல்லாவிட்டாலும் அடுத்தவரை ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கும் அளவுக்குத்தான் அன்று திமுக இருந்தது.

22914734

அழகிரியா, ஸ்டாலினா, கனிமொழியா என்ற மூன்று பெயர்களைத் தவிர்த்து திமுகவுக்கு அடுத்து தலைமையேற்க ஒரே ஒரு தலைவர் திமுகவில் உண்டா ?   திராவிட இயக்கத்தின் வேராக இருந்த திமுக, திராவிட இயக்கத்தின் எச்சமாக இருக்கும் அதிமுகவைப் போலவே வீழ்ச்சியடைந்துள்ளது இன்று.  திமுகவின் கொள்கைகள் சரியோ தவறோ… அது தமிழக அரசியல் வரலாற்றில் பிரிக்க முடியாத ஒன்று.  ஆயிரக்கணக்கான தொண்டர்களின் உழைப்பிலும், உயிர்த்தியாகத்திலும் உருவான இயக்கம் திமுக.

ஒரு ரயில் நிலையத்துக்கு தமிழ்ப்பெயர் வைப்பதற்காக தமிழகமெங்கும் இயக்கம் நடத்தி, துப்பாக்சிச் சூட்டைச் சந்தித்து உயிர்த்தியாகம் செய்த இயக்கம் திமுக.   நேருவுக்கு கருப்புக் கொடி காட்டுவதற்காக, தமிழகமெங்கும் போராட்டம் நடத்தி தடியடி பட்ட இயக்கம் திமுக.  இப்படிப்பட்ட ஒரு இயக்கம், மாநிலத்தில் பதவியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக ஒரு லட்சத் தமிழர்கள் கொன்று குவிக்கப்படுகையில் வாளாயிருந்திருக்குமா ?  அறிஞர் அண்ணா அமைதி காத்திருப்பாரா ?

அந்த திமுகவின் இன்றைய நிலை வேதனையான வீழ்ச்சிதானே….

 

Comments  

 
0 #34 Ravi 2012-05-03 14:09
இந்த அக்கிரமக்காரன் செய்ததில் ஆறில் ஒரு பங்குதான் அக்கால ரஷ்ய ஜார் மன்னன் செய்தான். ஆனால் அவனுக்கு கிடைத்தது துப்பாக்கி குண்டு. இந்த "குடமுருட்டி குண்டு" கருணாவுக்கு நாம் இன்னும் நமது வரிப்பணத்திலிரு ந்து பணம் செலவு செய்து பாதுகாப்பு அளிக்கிறோம். வெட்கக் கேடு.
Quote
 
 
+7 #33 dhinakar 2012-04-25 14:56
இந்தியாவின் பணக்கார குடும்பங்களில் ஒன்றாக தனது குடும்பத்தை உருவாக்கிய கருணானிதி அடைந்தது வளர்ச்சியே!இதில ் மற்ற இந்திய அரசியல்வாதிகள் அனைவரும் அவரிடம் கற்க வேண்டியது ஏராளம்.இளம் வயதில் அவர் பட்ட கஷ்டம்..எப்படியாவது உலகப்பணக்காரனாக ஆகவேண்டும் என்ற வெறீ!அவர் ஒரு சாதனையாளரே!மக்க ளாட்சி முறையில் பணம் சம்பாதிக்க கிடைத்த அத்தனை வாய்ப்பையும் முறையாக பயன்படுத்திக்கொ ண்டவர் அவரே!எதைப்பேசுக ிறோம் என்பது முக்கியமல்ல...எதை அடைகிறோம் என்பதே முக்கியம்!அவருட ைய வழிமுறைகளைப்பின ்பற்றி நாலு காசு சேர்ப்பது எப்படி என்று மட்டும் தெரிந்து கொண்டு பணக்கரானாக வாழ முயலுங்கள்!
Quote
 
 
+1 #32 daniel 2012-04-25 14:01
எம்சிஆர் ஆட்சியின்போது கருனானிதி அவரிடம் லன்சம் வான்கியது உன்மையா?
Quote
 
 
-1 #31 முருகதாஸ் 2012-04-25 12:42
இந்த பின்னுட்டங்களை பார்க்கும் போது ஒன்று புரிகிறது. இவ்வளவுகாலம் சவுக்குக்கு ஆதரவாக இருந்த வாசகர்களெல்லாம் ஏதும் நடுநிலை வாதிகள் ஆல்ல. இவர்களெல்லாம் அதிமுக வை சேர்ந்த ரசிகர்கள். இவ்வலவுனாள் திமுக வாவை சாடும்போதேல்லாம ் எதோ நடுநிலைவாதிகள் போலவும் சமுக அக்கறை கொண்டவர்கள் போலவும் இங்கு வந்து ஆதரவு தெரிவித்தனர். இப்போது திமுக வை பற்றி சில நல்லதுகள் சொன்னாலும் இவர்களால் பொறுத்து கொள்ளமுடியவில்ல ை.அதற்க்கு இவர்கள் சவுக்கை வசை பாடுகிறார்கள். இவர்களை தக்கவைத்துக்கொள ்ள சவுக்குக்கு இருக்கும் ஒரே வழி, திமுக வை மட்டுமே சாடவேண்டியதுதான ். இல்லையென்றால், இப்போது அம்மாவை எதிர்த்து பேசினாலும் ஒன்றும் குறைந்துபோய்விட போவதில்லை, திமுக சார்பு தொண்டர்கள் அதரவு தெரிவித்தல் போகிறது.
Quote
 
 
+4 #30 arunyo 2012-04-24 18:18
அண்ணா ஒரு உல்லாச‌ம‌னித‌ர் , ந‌ல்ல‌ சாப்பாடு தேடித் தேடிச் சாப்பிட‌ணும், உற்சாக‌ம் ந‌ண்ப‌ர்க‌ள் கூட்ட‌ம் வேண்டும். செல‌வ‌ழித்த‌தை பெரியார் க‌ண‌க்குக் கேட்பார். எப்ப‌டா பிரிய‌லாம் எனக் காத்திருந்த‌வ‌ர ்க‌ளுக்கு, ம‌ணிய‌ம்மை திரும‌ண‌ம் ஒரு ச‌ரியான சாக்காக ஆன‌து அவ்வ‌ள்விதான்./////
அவ்வளவு தானா ???!!!
துக்கு ராணி அமுக்கு ராஜா ஆட்டம்
போட்டத பத்தி விவரமா சொல்லுங்கப்பா
Quote
 
 
+1 #29 vengalur 2012-04-24 18:08
ஈவேரா கீழ்வெண்மணிக்கு ச் சரியான எதிர்வினையாற்ற வில்லை என்பது ஒருபுறம் இருக்கட்டும். ஆனால் அவர் 1969 ஜனவரியில் பேசிய பேச்சு (விடுதலை 20௧௬9)ஒவ்வொரு தாழ்த்தப்பட்டவர ்களின் நெஞ்சிலும் ஆணி அடிப்பதை போன்று இருக்கிறது.

‘‘தொழிலாளர்கள் தங்களுக்கு கிடைக்கிற பொருளாதாரத்தில் எப்படி வாழ வேண்டும் என்பதைக் கம்யூனிஸ்டு தோழர்கள் உங்களுக்கு கூறாமல் நாட்டிலே கலவரத்தையும், புரட்சியையும் ஏற்படுத்தி இன்றைய தினம் வலதானாலும் சரி, இடதானாலும் சரி, அதிதீவிர கம்யூனிஸ்டுகளான ாலும் சரி இந்த ஆட்சியினைக் கவிழ்த்துவிட வேண்டும் என்கின்ற முயற்சியில் ஈடுபட்டிருக்கின ்றனர். அதற்கு விவசாயத் தோழர்களும் மற்ற தொழிலாள நண்பர்களும் இடம் கொடுக்கக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன். நாகை தாலுகாவிலே கலகம் செய்யத் தூண்டியது கம்யூனிஸ்டு கட்சி. அதன் காரணமாக 42 பேர் உயிரிழந்தனர். கம்யூனிஸ்டு கட்சி நமக்கு ஒத்துழைத்த கட்சி என்று அரசாங்கம் சும்மா இருந்துவிடவில்ல ை. தேவையான நடவடிக்கையினை மேற்கொண்டிருக்க ிறது.’’

கூபோராட்டமே தேவையில்லை என்று கூற வருகிறார் ஈவேரா. லாபம்லி உயர்வுப் பெருகி

கீழத் தஞ்சையில் நடந்த விவசாயக்கூலிகளி ன் தீரமிக்க போராட்டம் ஒட்டிய வயிறுகளின் தவிர்க்க முடியா உரிமை முழக்கம்! ‘நாகைத் தாலுக்காவிலே கலகம் செய்யத் தூண்டியது கம்யூனிஸ்டு கட்சி’ என்று வருணித்ததன் மூலம் நிலப்பிரபுக்களி ன் கொடூர ஒடுக்குமுறையை, காட்டுமிராண்டித ்தனத்தை அப்படியே புறந்தள்ளிவிட்ட ார் ஈவேரா. இதன் காரணமாக 44 உயிர்களைத் தீயிட்டுக் கொளுத்திய நிலப்பிரபுக்களை க் கண்டிக்காமல் பழியை கம்யூனிஸ்டுகள் மேல் போட்டுவிட்டார்.

இச்சம்பவத்திற்க ு முழுக் காரணமான நிலப்பிரபுக்கள் , பிராமணரல்லாதாரர ாகவே இருந்ததால் அவர் கண்டிக்காமலும் போராடாமலும் விட்டதற்கு காரணம். இதுவே கொன்றது பிராமணராக இருந்திருந்தால் ஈவேராவின் நடவடிக்கை எப்படி இருந்திருக்கும் என்பது சொல்லத் தேவையில்லை. முரளி கபே ஓட்டலில் இருந்த ‘பிராமணாள்’ என்ற பெயரை அழிக்க ஒட்டல் முன்பு கிட்டத்தட்ட ஒரு வருடகாலமாகப் போராடினார்களாம் திராவிடர் கழகக்காரர்கள். ஆனால் கீழ்வெண்மணி சம்பவத்திற்காக அப்படி எந்த ஒரு போராட்டமுமே முன்னெடுக்கவில் லை திராவிடர் கழக ஈவேரா.
Quote
 
 
-1 #28 முருகதாஸ் 2012-04-24 15:43
இந்த பின்னுட்டங்களை பார்க்கும் போது ஒன்று புரிகிறது. இவ்வளவுகாலம் சவுக்குக்கு ஆதரவாக இருந்த வாசகர்களெல்லாம் ஏதும் நடுநிலை வாதிகள் ஆல்ல. இவர்களெல்லாம் அதிமுக வை சேர்ந்த ரசிகர்கள். இவ்வலவுனாள் திமுக வாவை சாடும்போதேல்லாம ் எதோ நடுநிலைவாதிகள் போலவும் சமுக அக்கறை கொண்டவர்கள் போலவும் இங்கு வந்து ஆதரவு தெரிவித்தனர். இப்போது திமுக வை பற்றி சில நல்லதுகள் சொன்னாலும் இவர்களால் பொறுத்து கொள்ளமுடியவில்ல ை.அதற்க்கு இவர்கள் சவுக்கை வசை பாடுகிறார்கள். இவர்களை தக்கவைத்துக்கொள ்ள சவுக்குக்கு இருக்கும் ஒரே வழி, திமுக வை மட்டுமே சாடவேண்டியதுதான ். இல்லையென்றால், இப்போது அம்மாவை எதிர்த்து பேசினாலும் ஒன்றும் குறைந்துபோய்விட போவதில்லை, திமுக சார்பு தொண்டர்கள் அதரவு தெரிவித்தல் போகிறது.
Quote
 
 
+4 #27 ஆர்.தியாகு 2012-04-24 11:54
ஒரு திருடன் நாட்டிற்கு தலைவன் ஆனால் என்ன ஆகும் என்று கடவுள் எடுத்துக்கொண்டி ருக்கும் படத்தின் கதாநாயகன் தான் நம் கருனாநிதி..!

இந்த தறுத்திறிய தலைவன் செய்யும் ஊழலுக்கேல்லாம் மக்களும் ஆதரவு தருகிறார்கள்..!

கருனாநிதி எந்த தவறும் செய்யவில்லை..அவருக்கு ஜனநாயகம் என்றால் வாரிசு அரசியல் என தவறுதலாக சொல்லப்பட்டது..!

சுயநலமே சூத்திரியர்கள் நலம் என தவறாக போதிக்கப்பட்டது !

ஒரு மகன் அழகான கிரி என இவர் நினைக்க
அவனோ அழுகின கிரி ஆகிறான்...

தமிழ் இவருக்கு உயிர் ... கட்டி தயிர்...என இல்லாம் இருந்தாலும் செல்ல மகனுக்கு ஸ்டாலின் என்ற வெள்ளைகாரன் பெயறே வைகிறார்... அவன் பதவி வேண்டும் என அழும்போது அந்த வெள்ளைக்காரன் அழுவதாஇ நினைத்து ஆனந்த படுகிறார்..!

ஒரு நல்ல கனியை எல்லோரும் விரும்புவார்கள் அதுப்போல ஒரு நல்ல மொழியை எனல்லோரும் விருப்புவார்கள் . தன் மகளை எல்லோரும் விரும்பும்படி கனிமொழி என பெயர் இடுகிறார். முறை அல்லது மறையற்று எல்லோரையும் விரும்புகிறது..

கடைசியில் வீல் சேரில் வலம் வரும் நாயகன் ...பல வித பரிதாபத்தை பெற மக்களிடம் முயற்சிக்கிறார் ... பொதுமக்கள் அல்ல அவரது மக்கள்
Quote
 
 
+4 #26 sombu 2012-04-24 11:24
Dear Savukku, Kindly also write how MK, who was a third rung PWD Minister had captured DMK after the demise of Annadurai. The death news of Annadurai was not leaked to the public for nearly two days and MK had shaved the face of Annadurai's deadbody to enable him to lobby for the post of CM. MK had fooled the public for nearly two / three days stating that Annadurai is still alive as he had clean shaved face.

Savukku, do write the aftermath of Annadurai's death and how he kajoled MGR to be his (MK) political platform.
SOMBU
Quote
 
 
0 #25 Unmainaa! 2012-04-24 10:27
http://www.tamilhindu.com/2012/04/dravidian-movement-and-tamil-nadu-a-criticism/
;-)
Quote
 
 
+2 #24 nallavan 2012-04-24 10:07
NONSENSE என்று இருக்கவேண்டும். FONT மாறிவிட்டது . எதையும் தாங்கும் இதயம் என்று பீலா விட்டவர்கள் தான் குடும்ப உருபிணற பின்புறம் கிணறில் குதித்து தற்கொலை பண்ணிகொண்டது கூட ஒரு இயக்க வரலாறு தான் போங்கள்....
Quoting nallavan:
நேருவுக்கு கருப்புக் கொடி காட்டுவதற்காக, தமிழகமெங்கும் போராட்டம் நடத்தி தடியடி பட்ட இயக்கம் திமுக ---- அப்படிப்பட்ட வீரர்களை பார்த்து அன்று நேரு சொன்னது -- NONSENSE-- என்ன ஒரு தீர்க்கசிந்தனை அவருக்கு . :lol:
Quote
 
 
+3 #23 Dinesh Balayah 2012-04-24 09:41
ஒரு சின்ன பிழை திருத்தம் - 2006 இல் மத்தியில் ஆட்சியில் இருந்தது பாரதீய ஜனதா கட்சி என்று எழுதி இருக்கிறிர்கள், அதை மட்டும் திருத்தி கொள்ளுங்கள். திராவிட இயக்க வரலாறு தெரியாமல் புதிதாக படிப்பவர்களுக்க ு எந்த வகையிலும் தவறான செய்தி சென்று சேர்ந்து விட கூடாது அல்லது அவர்கள் நம்மை தவறான செய்தி வெளியிடுவோர் என்று நினைத்து விட கூடாது!
Quote
 
 
+9 #22 muruganmuthu 2012-04-24 00:23
கருணாநிதிக்கு அடுத்தபடியாக ஒரு ஆகர்ஷிக்கப் பட்ட தலைவராக உருவான வைகோவை, தன் உயிரை பறிக்கத் திட்டமிடுகிறார் என்று குற்றம் சுமத்தி வெளியேற்றினார் கருணாநிதி. வைகோவுக்குப் பிறகு, திமுகவில் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இரண்டாம் கட்டத் தலைவர்களே அற்றுப்போய் விட்டார்கள்.
Quote
 
 
+5 #21 bambino 2012-04-23 16:24
இன்று இந்தியாவில் ஜனனாயகம் எந்த கட்சியிலும் இல்லை. மத்தியிலும் அனேக மானிலங்களிலும் குடும்ப அரசியலே நடை முறையில் உள்ளது. இதற்கு தீர்வு என்னவென்றால், படித்த இளையோர் அரசியலுக்கு வர வேண்டும்.
Quote
 
 
+21 #20 Force Vasan 2012-04-23 15:45
அண்ணா ஒரு உல்லாச‌ம‌னித‌ர் , ந‌ல்ல‌ சாப்பாடு தேடித் தேடிச் சாப்பிட‌ணும், உற்சாக‌ம் ந‌ண்ப‌ர்க‌ள் கூட்ட‌ம் வேண்டும். செல‌வ‌ழித்த‌தை பெரியார் க‌ண‌க்குக் கேட்பார். எப்ப‌டா பிரிய‌லாம் எனக் காத்திருந்த‌வ‌ர ்க‌ளுக்கு, ம‌ணிய‌ம்மை திரும‌ண‌ம் ஒரு ச‌ரியான சாக்காக ஆன‌து அவ்வ‌ள்விதான்.
பெரியார் அண்ணாதுரை வ‌ழ்க்கு நீதிம‌ன்ற‌ம் போய் பின் வாப‌ஸ் பெறப‌ட்ட‌து. திமுக‌வை 'ஒரு க‌ண்ணீர் துளி" என்றுதான் பெரியார் அழைத்து வ‌ந்தார். பொரியார்தான் இய‌க்க‌த் த‌லைவ‌ர் என்று சொல்லிக் கொண்டே, அவ‌ரை அழிக்க‌ எல்லா முய‌ற்சியும் செய்தார்க‌ள். "ஒருவ‌ரை புக‌ழ்ந்தே அழிப்ப‌தில் அண்ணா பெரிய‌ ஆள்" என்றி க‌ண்ண‌தாச‌ணே எழுதி இருக்கிறார். மாணவ‌ர்க‌ளை இந்தி எதிர்ப்பு போர‌ட்ட‌ம் என்று அழைத்து க‌ட்சியை வ‌ள‌ர்த்த‌வ‌ர். 'ரூபாய்க்கு மூன்று ப‌டி அரிசி' தருவோம் என்ற‌ பொய் வாக்குறுதி த‌ந்து ஆட்சியை பிடித்த‌வ‌ர். க‌ருணாநிதி சாராய‌க‌டையைத் த‌மிழ‌க‌த்துக்க ு முத‌ன்முத‌லாய் திற‌ந்த‌ சாத்தான் எனில், அண்ணா லாட்டரி சீட்டை திற‌ந்து அர‌சுக்கு வ‌ருவாய் பார்த்த‌வ‌ர்தான ். ஒரே அதிர்ஸ்ட‌ம் அவ‌ருக்குப் பின் முக‌ முத‌ல்வ‌ர் ஆனாதால்
இழுப்பைபூ ச‌க்க‌ர‌யாகி விட்ட‌து.
Quote
 
 
0 #19 Murugan, UAE 2012-04-23 13:57
thank u sir very important usefull history for youngsters.
Quote
 
 
0 #18 Karuna9 2012-04-23 11:30
Dear Mr Savuku,
You always giving false News.
Quote
 
 
+12 #17 அன்புடையான் 2012-04-23 08:26
பெரியாருக்கு அரசியலில் ஈடுபாடு இல்லாததும், அவரின் இரண்டாம் திருமணம் சொத்தின் வாரிசுக்கு என்று அண்ணாதுரை நினைத்ததால் தான் திமுக-வை தொடங்கினார். மேலும் பெரியாரின் பெயரும் மற்றும் திக கொள்கையும் அன்றி கட்சி ஆரம்பிக்கவோ, நடத்தவோ, தொண்டர்களையும் ஈர்க்கவோ முடியாது என்பது அண்ணாவுக்கு தெரியாதா என்ன ? பெரியார் தான் வகுத்த கொள்கையை தானே மீறிவிட்டார் என்ற அண்ணாதுரையின் கூப்பாடு எல்லாம் பகல் வேஷமே.
என்னுடைய தனிப்பட்ட கருத்து
அண்ணாதுரைக்கும் கருணாநிதிக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்றே தோன்றுகிறது. அண்ணாதுரை இன்னும் சிலகாலம் வாழ்ந்திருந்தால ் தெரிஞ்சிருக்கும ். அந்த காலத்திலேயே "மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மனம் உண்டு" என்று பேசியவர் தானே( பெரியாரின் திருமணம் பற்றி பேச என்ன அருகதை). இந்த வாக்கியத்தின் பொருள் எவ்வளவு கீழ்தரம் என்பது தெரியாதா ? தெரிஞ்சே தான் தொண்டர்கள் கூடினார்கள் அதனால் நல்லெண்ணம் கொண்டோர் தொடங்கிய இயக்கம் அல்ல திமுக ...வீழ்ச்சி நோக்கி செல்கிறது.
சுயஒழுக்கம் உள்ள,அதிகார மமதை இல்லா தலைவர் தமிழகத்தை ஆளவேண்டும்
Quote
 
 
+7 #16 Tamilian 2012-04-23 07:27
மு க வின் ஒரு மகா பாதக செயல் தமிழ்னாட்டில் குடி பழக்கத்தை கொன்டுவந்தது. இது இன்றைய மிக பெரிய தீமை இல்லையா? ராஜாஜி,காமராஜ் ஆகியொர் வரக்கூடாது
என்று இருந்த தீமையை வரவழைத்தது நாட்டுக்கு நன்மையா?
இது பற்றி ஏன் எழுதவில்லை?
Quote
 
 
+9 #15 KarthikPrabhakaran 2012-04-22 18:17
இது கருணா,ஸ்டாலின், அழகிரி , கனி ,மாறன் மற்றும் ஊரையே அடித்து உலையில் போட்ட அல்லக்கைகளுக்கு வேண்டுமானால் இது வேதனையான வீழ்ச்சியாக இருக்கலாம். மக்களுக்கு இது மகிழ்ச்சியான வீழ்ச்சியே.
வாரிசு அரசியலில் இனிமேல் தான் உள்ளது ஆட்டமே. ரோமாபுரிப் பாண்டியன் இன்னும் பார்க்க வேண்டிய, கண்ணீர் விட வேண்டிய(ஒரிஜினல ் கண்ணீர், நீலிக் கண்ணீர் அல்ல)காட்சிகள் நிறைய உள்ளது.
கொத்துக் குண்டுகளால் ஈழம் பற்றி எரியும் போது மழை விட்டும் தூவானம் விட வில்லையென்று எகத்தாளம் பேசிய வாய்க்கு இன்னும் உள்ளது வீழ்ச்சி.
Quote
 
 
+13 #14 Subbaraman R 2012-04-22 16:04
திமுக வில் இருப்பவர்கள் அனைவரும் வைகோ வின் தலைமையை ஏற்க வேண்டிய நேரம் வந்து விட்டது.

ஆனால் இந்த மனிதர் அன்பு சகோதரியின் காலில் விழுந்துவிடுவார ோ என்ற அச்சமும் உள்ளது.
Quote
 
 
+3 #13 ABJ 2012-04-22 14:41
அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மை வரலாறு...
Quote
 
 
+2 #12 anniyan 2012-04-22 09:02
பெரியார் : http://www.tamilhindu.com/2012/04/evrs-reaction-on-venmani-incident/
Quote
 
 
+3 #11 Anandth 2012-04-22 01:56
வின்ஸ்டன் சர்ச்சில் ஓடு ஒப்பிடக்கூடிய அளவு அண்ணா தலை சிறந்தவர் !!!

பகுத்தறிவுவாதி !!!

நான் ரொம்ப நாளா யோசிக்கிறது என்னன்னா சவுக்கு பகுத்தறிவு என்பது கடவுள் இல்லை நு சொல்றது மட்டும் கிடையாது .ஒன்றை பற்றி முற்றிலுமாக பகுத்து ஆழ்ந்து அறிந்து தெரிந்து கொள்வது .ஆனால் அண்ணா கருணாநிதியை எப்படி பகுத்தறியாமல் விட்டார் நு தெரியல .அந்த வகைல அண்ணா மிகச்சிறந்த பகுத்தறிவுவாதிய ா ந்றதுல எனக்கு சந்தேகம் உண்டு .!!! :sad: :sad: :sad:
Quote
 
 
+1 #10 Sundarwipro 2012-04-22 01:38
அருமையான கட்டுரை! இன்றைய இளைய சமுதாயதிற்கு திமுக எப்படி துவங்கியது என்பதை தெரிந்து கொள்வதற்கு ஒரு நல்ல வாய்ப்பு. கருணாநிதியுடன் நெருங்கி பழகிய கண்ணதாசன் அன்றே சொன்னதுபோல் "கருணாநிதிக்கு குடும்பத்திற்கு பிறகு தான் ய்கழகம்" அதை உலகத்திற்கு உணர்த்தியதை கடந்த ஐந்து வருடங்களில் பார்த்தோம். கழகத்தை கைபட்ற்ற துடிக்கும் ஸ்டாலின் கோஷ்டி , அழகிரி கோஷ்டி மற்றும் கனிமொழி கோஷ்டி இவர்களின் கையில் சிக்கி சின்னா பின்னமாகி கொண்டு இருக்கிறது இன்றைய திமுக.
Quote
 
 
+5 #9 vendum suthanthiram 2012-04-21 22:55
இன்னொரு பெரியார் அன்னா இந்த சமுதாயட்திர்க்க ு கிடைக்குமா? மானாட மயிலாட தலைமுரை அல்லவா? நடிகைக்கு கொயில் கட்டும் தலைமுரை அல்லவா? இலன்கயில் தமிழர்கல் கொல்லப்படும்ப்த ு இலவச பிரியானி சாப்பிட்டுக்கொன ்டெ டாச்மாக் சரக்கை அடிக்கும் தலைமுரை அல்லவா? சொந்த மகலெயெ அரை குரை ஆடயில் ஆடவிட்டு கைதட்ட்ல் வான்க்கி சினிமா என்ட்ரி தெடும் பெட்ரோர்கல் உல்ல தலைமுரை அல்லவா? எவ்வ்லவு கெவலமாக இரன்கி விட்டது இந்த தமில் சமுதாயம்? பிசசை காரர்கலை விட மோசமாக இலவசட்தை நம்பி வாழ்பவர்கலாக, சுய சிந்தனை இல்லாதவரகலாக ஆகிவிட்டார்கலெ...

யேன் தமிழனாக பிரந்தேன்? இன்னொரு வழ்க்கை என்ட்ரு ஒன்ட்ரு இருந்தால் கன்டிப்பாக தமிழனாக பிரக்க விரும்ப வில்லை. கூலிக்கு மாரடிக்கும் சமுதாயட்தால் எந்த மரியாதயும் இல்லை.
Quote
 
 
+4 #8 பாலசுப்பிரமணி 2012-04-21 18:06
இவரது 20(1944)இ வயது முதல் 1969ல் அண்ணா மறைந்து உலகத் தமிழ்ர்கள்,உலகத ் தலைவர்கள் எல்லாம் ஒத்தைகாலில் நின்று இவரை முதல்வர் ஆக்கியதுவரை, இவரது ம்க்கள், கட்சி,அரசியல்,ச முதாய,மொழி,இனப் பணிகள் என்ன? மூன்று கல்யாணஙள்,ஆறு வாரிசுகள். ஆனால் சுய விளம்பரத்திற்கு ம்,தனக்கு தானே போஸ்டர் அடித்துக் கொள்வதிலும் குறைவில்லை.
'கல்லக்குடி தந்த கருணாநிதி வாழ்கவே'(கள்ளக் 'குடி'யோ?)
'பாளையங்கோட்டை சிறையினிலே,பாம் புகள் பல்லிகள் நடுவினிலே'(அவரு பாளையங்கோட்டை போனாரோ இல்லயோ, நாம பாழாப் போனோம்)
Quote
 
 
+3 #7 nallavan 2012-04-21 17:45
நேருவுக்கு கருப்புக் கொடி காட்டுவதற்காக, தமிழகமெங்கும் போராட்டம் நடத்தி தடியடி பட்ட இயக்கம் திமுக ---- அப்படிப்பட்ட வீரர்களை பார்த்து அன்று நேரு சொன்னது -- ணோண்ஸேண்ஸே -- என்ன ஒரு தீர்க்கசிந்தனை அவருக்கு . :lol:
Quote
 
 
+4 #6 பாலசுப்பிரமணி 2012-04-21 17:44
"1996ல் மீண்டும் ஆட்சிக்கு வந்த கருணாநிதியிடம், முதுமை காரணமாகவோ, அல்லது வேறு காரணமாகவோ மாற்றங்கள் வெளிப்படத் தொடங்கின"
வன்மையாக கண்டிக்கிறேன் யுவர் ஆனர்.கருணாநிதி எப்போதுமே கருணாநிதி தான்.மாற்றம் வந்தது, உஙளையும்,என்னைய ும் ம்ற்றும் நம் கருத்தை ஒத்த முன்னாள் கருணா ஆதரவாளர்களிடம்த ான்.சிலரை சில நேரம் ஏமாத்தலாம்;பலரை பல நேரம் ஏமாத்தலாம்;எல்ல ோரையும் எல்லா நேரமும் ஏமாத்த முடியாது என்பதிற்கு இவர்தான் சிறந்த உதாரணம்.
தனக்கென மட்டுமே சிந்தித்து, செயலாற்றி,வாழும ் சுயந்லத்தின் மொத்த உருவம்.கல்யாண வீட்டின் மாப்பிள்ளை:இழவு வீட்டின் பிணம்.
இவரது துரோக வரலாறு - ஒரு சுருக்கம்.
பெரியார் மற்றும் அண்ணா - கொள்கை ரீதியாக
சம்பத்,எம்ஜிஆர் ,வைக்கோ - அரசியல் ரீதியாக
ஆல் ஃபேமிலி மெம்ப்ர்ஸ் - குடும்ப ரீதியாக
உலகத் தமிழர்கள் - மொழி,கலாச்சார,ப ண்பாடு ரீதியாக
திமுகவினர் - கட்சி ரீதியாக
Quote
 
 
+19 #5 http://koothadivedd 2012-04-21 09:58
அந்த திமுகவின் இன்றைய நிலை வேதனையான வீழ்ச்சிதானே….

ஆனால்
இந்த திமுகவின் இன்றைய வீழ்ச்சி மகிழ்ச்சியான மாற்றத்தின் தொடக்கம்தானே.......
Quote
 
 
+6 #4 jegan usa 2012-04-21 00:49
எம்மை போன்ற இளய சமுதாயம் தெரிந்து கொள்ள வேண்டிய அழகிய படைப்பு இது போன்ற வற்றை மேலும் எதிர் பார்க்கும் ஜெகன் அமரிக்கா.
Quote
 
 
+35 #3 Padman 2012-04-20 21:15
பெரியாரும் அண்ணாவும் தமிழர்களின் வரம்.

மகாபாரதத்தில் இருக்கும் சகுனி போல இந்த கருணாநிதி திராவிட இயக்கத்தின் சகுனி.

அறிஞர் அண்ணாவின் இழப்பின் துக்கத்தில் உண்மையான தலைவர்கள் வேதனையிலிருந்த நேரத்தில் இந்த சகுனியின் சாமர்த்தியம் வென்றது.

உண்மையான அண்ணாவின் தம்பியாக இருந்திருந்தால் அவர் கைகாட்டிய நாவலர் போன்றோர் திமுகவின் தலவராக வர கருணாநிதி பாடுபட்டிருக்க வேண்டும். அது செய்யாதது மட்டுமல்ல... ஜெயலலிதா போன்றவர்கள் "நடமாடும் பல்கலை கழகம்" என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட நாவலரை உதிர்ந்த ரோமம் என்றழைக்க வழிசெய்தது இந்த கருணா போன்றவர்களின் துரோகமே காரணம்.

எல்லாத்தையும் விடு சவுக்கு. பொதுவாழ்க்கையில ் ஈடுபடுபவர்களுக் கு தனிமனித ஒழுக்கம் முக்கியமா இல்லையா? இந்த சகுனி வேலி தாண்டி மேய்ந்த கறுப்பு ஆடு. எந்த ஒரு திருமண நிகழ்ச்சியிலும் "வைகோ" போல தம்பதியாக சென்று வாழ்த்த இந்த மனிதருக்கு தகுதியிருக்கிறத ா? கருணாநிதி முன்னின்று நடத்தி வாழ்த்திய திருமணங்களின் பலரின் நிலை??? கருணாநிதி பாணியில் சொல்வதென்றால் "அந்தோ பரிதாபம்". வேணும்னா ஒரே ஒரு உதாரணம்... ஐம்பது கோடி செலவில் எ வ வேலுவின் இரண்டாவது மகனுக்கு முதலமைச்சராக முன்னின்று நடத்திய திருமணத்தின் இன்றைய நிலையென்ன? இதுபற்றி நான் சொல்ல விரும்பல. திருவண்ணமலையில் பேசிக்கிறத கேட்டா இவனுங்களை சும்மா விடக்கூடாது. சரி இது இப்போ நடந்தது... சசிகலாவுக்கும் நடராசனுக்கும் இவர்தான் முன்னின்று திருமனத்த நடத்தி வைத்ததா சொல்றாங்க. அவங்க நிலைமையும் ரொம்ப மோசம்.

இந்தா ஆளோட தலைமையில் நடக்கும் கட்சிக்கு நானும் கொடிபிடித்தேனே என நினைக்கும் போது வேதனையாக இருக்கிறது. இந்த ஆள் பேச்சு ஒரு போதை. அதில் மயங்கியவர்களில் பலர் இன்னும் மீளமுடியாமல் இருப்பதனால் வந்த வினைதான்..... இன்றைய தமிழர்களின் கையறு நிலை!.

அந்த போதை தரும் மயக்கம்தான் இதுபோல தலைப்பிட வைக்கிறது!!!

அதனால தலைப்ப மாற்றி "வேண்டிய வீழ்ச்சிதான்னு" போடுங்க. உங்களுக்கு புண்ணியமா போகும்!!!
Quote
 
 
+14 #2 kongunadan 2012-04-20 21:12
100% உண்மை. 2006ல் இருந்து 2011 வரை கலைஞர் நடந்து கொண்ட முறைதான் ஒரு எழுச்சி மிக்க இயக்கத்தின் வேதனையான வீழ்ச்சி!
Quote
 
 
0 #1 mohanraj 2012-04-20 20:04
நன்றி சவுக்கு அவர்களே திரு நடராஜன் நினைவு வைத்து எழுதியமைக்கு நன்றி
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 34 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday1369
mod_vvisit_counterYesterday10087
mod_vvisit_counterThis week11456
mod_vvisit_counterLast week80132
mod_vvisit_counterThis month214188
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12736307