முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
போபால் 3 சாத்தான்களின் ஆட்சி. அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 11
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
செவ்வாய்க்கிழமை, 08 மே 2012 08:26

சாத்தான்களின் ஆட்சி.

 

மனிதன் தோன்றுவதற்கு முன்பே தோன்றிய லட்சக்கணக்கான வகைகளில் உள்ள பூச்சிகள், விவசாயத்திற்கு கடும் எதிரியாகவே இருந்து வந்துள்ளன.   இந்தச் சாத்தான்களை அழிப்பதற்கு மனித சமூகம் இன்று வரை தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறது. இந்தப் பூச்சிகள், ஒவ்வொரு பயிர்களையும் தாக்கி அழிப்பதற்கு வெவ்வேறு வகையாக தங்களை சூழலுக்கும் பயிர்களுக்கும் ஏற்றவாறு மாற்றிக் கொண்டு வளர்ந்து வந்துள்ளன.

சில பூச்சி வகைகள், பயிர்களின் கதிர்களை குறி வைத்துத் தாக்கி அழிக்கும்.  சில பயிர்களின் கதிர்களில் உள்ள மொட்டுக்களை தின்று விடும்.  சில இலைகளை உறிஞ்சி உண்ணும்.  சில, பயிர்களின் தண்டுகளுக்குள் புகுந்து பயிர்களையே பட்டுப்போக வைக்கும் தன்மை கொண்டன.

locusts-swarm-615

சூழலுக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்ளும் தன்மை படைத்ததால், இந்தப் பூச்சி வகைகள் ஆப்பிரிக்க பாலைவனங்கள் முதல், ஆர்டிக் ஐஸ் கண்டம் வரை தாராளமாக புழங்குகின்றன. பூச்சிகளால் உங்களின் ஒரு மரம் கூட விடாமல் பட்டுப் போகச் செய்வேன் என்று கடவுள் சாபம் விட்டதாகவும், அவ்வாறு நிகழ்ந்தபோது, மோசஸ் வேண்டுகோளின்படி அந்தப் பூச்சிகளை கடவுள் கடலில் மூழ்கச் செய்ததாகவும் பைபிளில் ஒரு கதை உண்டு.

4500 ஆண்டுகளுக்கு முன்பு, மெசப்பட்டோமயாவில் சல்பர் பூச்சிக்கொல்லியாக பயன்படுத்தப்பட்டதாக ஆதாரஙகள் உள்ளன.   4000 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட ரிக் வேதத்தில், பூச்சிகளை கட்டுப்படுத்துவதற்காக விஷச் செடிகளை பயன்படுத்தியதாக சான்றுகள் உள்ளன.  17ம் நூற்றாண்டின் இறுதியில், புகையிலையிலிருந்து எடுக்கப்பட்ட நிக்கோட்டின் சல்பேட் பூச்சிக்கொல்லியாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

இது போல பூச்சிக் கொல்லி மருந்துகளை உருவாக்க தொடர்ந்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், முதல் உலகப்போர் மற்றும் இரண்டாம் உலகப்போருக்கு இடையிலான காலத்தில் இது குறித்த ஆராய்ச்சிகள் ஏராளமாக நடந்தன. போருக்குத் தேவையான குண்டுகள், ரசாயன எறிகுண்டுகள் ஆகியவற்றுக்குத் தேவை அதிகமான போது, இது குறித்த ஆராய்ச்சிகளும் தொடர்ந்து நடந்தன.

இவ்வாறு நடந்த ஆராய்ச்சிகளின் போதுதான், 1938ம் ஆண்டில் சுவிஸ் நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி ஹெர்மன் முல்லர் என்பவர், டிடிட்டி (DDT) என்று அழைக்கப்படும் டைக்ளோரோ டைபினைல் ட்ரைக்ளோரோஈதேன் (Dichloro Diphenyl Trichloroethane) என்ற பூச்சிக்கொல்லியை கண்டுபிடிக்கிறார். இந்தக் கண்டுபிடிப்புக்கு 1940ம் ஆண்டு பேடன்ட் உரிமை வழங்குகிறது ஸ்விஸ் அரசாங்கம். 1948ம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு, ஹெர்மன் முல்லருக்கு வழங்கப்படுகிறது.

muller_postcard

ஹெர்மன் முல்லர்

இரண்டாம் உலகப்போரின் போது, ராணுவ வீரர்களை கடுமையாக தாக்கி மலேரியாவை உண்டாக்கும் கொசுக்களை ஒழிக்கவும் இது பயன்படுத்தப்பட்டது. போருக்குப் பிறகு, விவசாயத்திற்காக டிடிட்டி முழுமையாக பயன்படுத்தப்பட்டது. முல்லரின் கண்டுபிடிப்பான டிடிட்டி, உலக விவசாயத்தையே புரட்டிப் போட்டது என்றால் அது மிகையல்ல.

டிடிட்டி பயன்படுத்தப்பட்ட இடங்களிலெல்லாம், விளைச்சல் 60 சதவிகிதத்திற்கும் கூடுதலாக விளைந்தது தெரிந்ததும் மகிழ்ந்தார்கள் விவசாயிகள். நாற்பதுகளில் தொடங்கிய டிடிட்டியின் உற்பத்தி தங்கு தடையில்லாமல் தொடர்ந்தது.

1959ம் ஆண்டில், நியூயார்க் டைம்ஸ் நாளேடு, டிடிட்டி பயன்பாட்டுக்கு எதிராக நாசா கவுன்ட்டி என்ற இடத்தில் நடந்த போராட்டத்தைப் பற்றிய ஒரு செய்தியை வெளியிடுகிறது.  இதைத் தொடர்ந்து, ரேச்சல் கார்சன் என்ற இயற்கை ஆர்வலர், இது குறித்து ஆராய்ச்சியில் ஈடுபடத் தொடங்குகிறார்.  அவரது தொடர்ந்த ஆராய்ச்சி “சைலென்ட் ஸ்பிரிங்ஸ்” என்ற நூலாக, 1962ம் ஆண்டு, டிடிட்டியின் தொடர்ந்த பயன்பாட்டால், இயற்கைக்கு நேரும் சீரழிவை பட்டியலிட்டது. இது அமெரிக்கா முழுக்க டிடிட்டிக்கு எதிரான போராட்டங்களை தூண்டியது.   1963ம் ஆண்டு, அப்போதைய அமெரிக்க அதிபர் கென்னடி, ரேச்சல் கார்சன் தனது நூலில் எழுதியிருப்பது உண்மையா என்று ஆராயுமாறு அவரது அமைச்சரவையில் இருந்த விஞ்ஞான ஆராய்ச்சிக் குழுவைப் பணிக்கிறார்.  அந்த ஆராய்ச்சிக் குழு, தனது அறிக்கையில், ரேச்சல் கார்சன், தனது நூலில் குறிப்பிட்டிருந்தவை அனைத்தும் உண்மையே, டிடிட்டி பயன்பாட்டால், சுற்றுச் சூழல் கடுமையாக பாதிக்கப்படுகிறது என்பதை உறுதிப்படுத்தியது.

Silent_Spring_Book-of-the-Month-Club_edition

Rachel-Carson

ரேச்சல் கார்சன்

அதன் பிறகு நடந்த பல்வேறு ஆராய்ச்சிகள், டிடிட்டி மலட்டுத்தன்மை மற்றும் கேன்சரை உண்டாக்கும் தன்மை படைத்தது என்பதையும், பறவைகளுக்கும், தண்ணீரில் வாழும் மீன் மற்றும் இதர உயிரினங்களுக்கும், கடும் பாதிப்பை ஏற்படுத்தியது என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து, விஞ்ஞானிகளும், வழக்கறிஞர்களும் சேர்ந்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிதியம் (Environmental Defense Fund) என்ற அமைப்பை ஏற்படுத்துகின்றனர்.  இந்த அமைப்பு, அமெரிக்காவின் பல்வேறு நீதிமன்றங்களில், டிடிட்டியை தடை செய்ய வேண்டும் என்று வழக்கு தொடுக்கிறது. அமெரிக்க அரசாங்கத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஏஜென்சி, இது தொடர்பான வழக்குகளை ஆராய்ந்து, டிடிட்டியின் பயன்பாட்டை படிப்படியாக குறைக்க வேண்டும் என்று தீர்ப்பளிக்கிறது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து, சுற்றுச் சூழல் ஆர்வலர்களும் மேல்முறையீடு செய்கிறார்கள்.  டிடிட்டியின் பயன்பாட்டை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்று அவர்கள் கோருகிறார்கள்.   டிடிட்டி தயாரிக்கும் ரசாயன நிறுவனங்களும், இதன் பயன்பாட்டை தடை செய்யக் கூடாது என்று நீதிமன்றத்தை அணுகுகிறார்கள்.

1972ம் ஆண்டு, இந்த வழக்கின் மீது தீர்ப்பு வழங்கிய கொலம்பியா நீதிமன்றம், டிடிட்டியை உடனடியாக தடை செய்து உத்தரவிட்டது.

அமெரிக்காவுக்கு முன்னதாகவே,  1968ம் ஆண்டு ஹங்கேரி, 1970ல் நார்வே மற்றும் ஸ்வீடன், 1972ல் ஜெர்மனி ஆகிய நாடுகள் டிடிட்டி தயாரிப்பை தடை செய்தன.   1984ம் ஆண்டில், இங்கிலாந்து டிடிட்டி பயன்பாட்டை தடை செய்தது.  சீனா 2007ம் ஆண்டில் டிடிட்டி தயாரிப்பை நிறுத்தி விட்டது.

DDT_jug

தற்போது உலகிலேயே டிடிட்டியை இன்று வரை தடை செய்யாமல் தொடர்ந்து தயாரித்து வரும் ஒரே நாடு எது தெரியுமா ?  இந்தியா.

 

Comments  

 
0 #15 Unknown 2012-05-14 17:27
Nice one
Quote
 
 
+3 #14 vettrimaran 2012-05-12 17:01
தற்போது உலகிலேயே டிடிட்டியை இன்று வரை தடை செய்யாமல் தொடர்ந்து தயாரித்து வரும் ஒரே நாடு எது தெரியுமா ? இந்தியா.
so PM & President all political leaders are waste in our country. ( ALL ARE DIE IMMEDIATELY ) only way to stop DDT. that all
Quote
 
 
+3 #13 arunsundar 2012-05-11 17:46
No one is bothered about the dangers of Koodankulam nuclear plant, MK and the women ditched the people of Tamilnadu again for their own selfish gains. Tamils should realise the dangers and start condemning the slaves of Delhi Abdul Kalam and barking Narayanaswamy(f uture PM -lol)
Quote
 
 
0 #12 கோபு 2012-05-11 14:54
நம்ம நாட்ல தடை செய்யாததற்க்கு நாம வருத்த பட தேவையில்ல ஏன்னா, வெளிநாட்ல அந்த மருந்து 100க்கு 70% வீரியம் அதிகம் , அது கேன்சர், மலட்டுத்தன்மை உடனே வர செய்யும். ஆனா இந்தியாவுல தயாரிக்கிற மருந்து 100% 25% தான் வீரியம் அது போய் காட்ல தெளிக்கறதுக்குள ்ள ம்ச்ச மீதி வீரியமும் இறங்கிரும். எப்படி வெளிநாடு சரக்குக்கும் உள்நாட்டு சரக்குக்கும் வித்தியாசம் இருக்கில்ல அது மாதிரிதான்.. இந்தியாவுல தயாரிக்கிற டிடிட்டி குபாக்கூர் யாரும் ஒன்னும் பயப்படத்தேவயேல் ல....
Quote
 
 
+10 #11 muslim 2012-05-09 16:10
ஆ[ஃஉஒடெ நமெ="அன்னியன்"][ஃஉஒடெ நமெ="அன்னியன்"]நல்ல கட்டுரை.. நன்றி..

மதுரையில் திமுகவை சேர்ந்த அயூப்கான் என்னும்சகோதரர் தலித் சிறுமியை பலி கொடுத்துள்ளாரே, அதைப் பற்றி எழுதுங்களேன்.[/ஃஉஒடெ]
தலித் சிறுமியை நரபலி கொடுத்தவர் முஸ்லீம் என்பதாலேயே, லேசாக முனகிவிட்டு பயங்கரங்களை அமுக்கப் பார்க்கும் ஊடகங்களும், இந்த கொடூரத்தை நான் எழுத சொன்னதற்கு ணேகாடீவே ரேட்டிங் போடும் வாசகர்களும் பெரும் வியப்பை ஏற்படுத்துகிறார ்கள். போன மாதம் கூட பின்னூட்டத்தில் , 'இலங்கையில் தமிழர்களை அழித்ததில் தவறேயில்லை, தமிழர்கள் எங்கெல்லாம் முஸ்லீம்களைக் காயப்படுத்தினர் ' என்று தாக்குதல் தேதி, இடம் வாரியாக ஒரு பெரிய லிஸ்டையே ஒரு முகம்மதியர் எழுதினார். அப்போதெல்லாம் கூட சும்மாயிருக்கும ் தமிழர்கள் வீரம் மெச்சத்தகுந்தது .[/ஃஉஒடெ]
அன்னியனே முஸ்லிமானாலும், இந்துவானாலும் தவறு தவறுதான். அவனை கொல்ல வேண்டும் சட்டப்படி.

ஒரு முஸ்லிம்
Quote
 
 
+1 #10 kumar 2012-05-09 14:14
very nice article... we are always with u savukku in all moments.. plz give more article like this ..we need more article for சுற்றுச் சூழல் பாதுகாப்பு....
Quote
 
 
+9 #9 visualcpp 2012-05-09 13:58
இந்தியாவவோட மக்கள் தொகைய பாத்தா இந்த மருந்து வேல செய்யுறாப்பல தெரியலயே! :lol:
Quote
 
 
+3 #8 Force Vasan 2012-05-09 13:23
ஆழ்ந்து ஆய்ந்த‌ முழுமையான க‌ட்டுரை.
என்டோசைப‌ன், பிடி காய்க‌றிக‌ள், இர‌சாய‌ன உர‌ங்க‌ள், பாலிதீன் பைக‌ள், புத்துண‌ர்வு பாண‌ங்க‌ள், ஆட‌ம்ப‌ர‌ அழ‌கு இர‌சாய‌ன ப‌சைக‌ள் எல்லாம் த‌டை செய்ய‌ப‌ட‌ வேண்டிய‌ உயிர்க்கொல்லிக‌ ள். தெட‌ர‌ட்டும் போபால் ப‌ற்றி ப‌திவுக‌ள், ஆண்ட‌ர்ச‌னை ப‌த்திர‌மாய் அமெரிக்கா அனுப்பிய‌ ராஜீவ் காந்தி அநியாய‌த்தையும் சேர்த்து.
Quote
 
 
+4 #7 anniyan 2012-05-09 08:07
Quoting anniyan:
நல்ல கட்டுரை.. நன்றி..

மதுரையில் திமுகவை சேர்ந்த அயூப்கான் என்னும்சகோதரர் தலித் சிறுமியை பலி கொடுத்துள்ளாரே, அதைப் பற்றி எழுதுங்களேன்.

தலித் சிறுமியை நரபலி கொடுத்தவர் முஸ்லீம் என்பதாலேயே, லேசாக முனகிவிட்டு பயங்கரங்களை அமுக்கப் பார்க்கும் ஊடகங்களும், இந்த கொடூரத்தை நான் எழுத சொன்னதற்கு NEGATIVE ரேட்டிங் போடும் வாசகர்களும் பெரும் வியப்பை ஏற்படுத்துகிறார ்கள். போன மாதம் கூட பின்னூட்டத்தில் , 'இலங்கையில் தமிழர்களை அழித்ததில் தவறேயில்லை, தமிழர்கள் எங்கெல்லாம் முஸ்லீம்களைக் காயப்படுத்தினர் ' என்று தாக்குதல் தேதி, இடம் வாரியாக ஒரு பெரிய லிஸ்டையே ஒரு முகம்மதியர் எழுதினார். அப்போதெல்லாம் கூட சும்மாயிருக்கும ் தமிழர்கள் வீரம் மெச்சத்தகுந்தது .
Quote
 
 
+4 #6 SUTHIRAN 2012-05-09 01:42
சும்மா கிடைத்தால் பினாயிலையே குடிக்கும் மன நிலையில் உள்ள அரசியல் வாதிகள், கூடவே கமிஷன் (அதாங்க மாமூல்), புட்டி, வெளினாட்டு வெள்ளைத்தோல் குட்டிகள் என்று கிடைத்தால் சும்மாவா விடுவார்கள்! அதுவும் காங்கிரஸ் காரன் என்றால் அவன் பெற்ற தாயையே பத்து ரூபாய் கிடைத்தால் புணரத் தயாராக இருப்பானே ! உருப்படுமா இந்த நாடு!
Quote
 
 
+8 #5 Eleventh Sense 2012-05-09 00:56
1. பாலம் கட்டினால் தனியே சாக்கடை கால்வாய் கட்டுவான்........... அனால் அதை பக்கத்துக்கு சாக்கடை வரை கொண்டு சேர்க்க மாட்டான்.
2 . தொண்டின குழியை உடனே மூட மாட்டான்..... வேலையையும் உடனே தொடங்க மாட்டான் .
3 . ரோடை விட மேன் ஹோல் சேம்பர் உயரமாக இருக்கும் அனால் கண்டுக்க மாட்டான்............
4 . தார் ரோடின் இரு பக்கம் சரள போடாமல் கடல் மண் போட்டு சைக்கிள் ஓட்டுபவன் முதல் நடந்து போகிறவன் வரை கீழே விழ வைப்பான்......
5 . ரௌண்டான போடா வேண்டிய இடத்தில தடுப்பு சுவர் மட்டும் கட்டுவான்......
6 . நோ என்ட்ரி நேரம் முடியும் முன்னர் ஊருக்குள் வரும் லாரிகளிடம் ரூபாய் வாங்கிக்கொண்டு உள்ளே விட்டுவிடுவான்...........
7 . பாதாள சாக்கடை மூடியை ஒரு செங்கல் (9 இன்ச) அளவிற்கு ரோடை விட உயரமாக போட அனுமதித்து அதை சுற்றி பள்ளமாகவே வைத்திருப்பான்........
8 . போடாத ரோடுக்கு போட்டதாய் பில் போட்டுவிடுவான் .........

இவங்களுக்கெல்லா ம் தன பிள்ளை, பொண்டாட்டி, எல்லோரும் கூட தான் செய்கின்ற இந்த தப்பினால் கஷ்டபடுவான்களே என்கிற பயம் இல்லை.
ரிடையர் ஆனா போதும்........... பென்ஷன் கிடைச்சிரும்...........
செத்தாலும் கூட பொண்டாட்டிக்கு கிடைக்கும்...........என்கிற நம்பிக்கை தான்
டிடிட்டி, நம்மை கொஞ்சம் கொஞ்சமாக சாக வைத்து, அரசு ஊழியர் மற்றும் அரசியல் வாதிகள் எத்தனை பேரை வாழ வைத்துக்கொண்டிர ுக்கிறதோ.......
Quote
 
 
+1 #4 anniyan 2012-05-08 18:56
நல்ல கட்டுரை.. நன்றி..

மதுரையில் திமுகவை சேர்ந்த அயூப்கான் என்னும்சகோதரர் தலித் சிறுமியை பலி கொடுத்துள்ளாரே, அதைப் பற்றி எழுதுங்களேன்.
Quote
 
 
+5 #3 Jegan USA 2012-05-08 16:50
என் தாய் நாட்டை இந்த பேய் களிடம் இருந்து காப்பாற்ற வழியே இல்லியா.
Quote
 
 
+11 #2 sathyam 2012-05-08 12:05
savukku salute

very nice article... we are always with u savukku in all moments.. plz give more article like this ..we need more article for சுற்றுச் சூழல் பாதுகாப்பு....
Quote
 
 
+36 #1 Kishore 2012-05-08 10:42
சவுக்கு, இந்தியா வல்லரசாக வேண்டாமா? இப்படி எல்லா நாடுகளிலும் மனிதர்களுக்கு, மற்ற உயிரினங்களுக்கு தீங்கு என்று தடை செய்யபட்ட மருந்துகளை வாங்கி நம் மக்களுக்கு பயன் படுத்த கொடுக்கும் துணிவு யாருக்கு வரும்? ஜப்பானில் இயங்கி கொண்டிடுந்த 54 அணு உலைகளயும் மூடிய பிறகும், இடிந்தகரையில் 300 அதிகமான தாய்மார்கள் கொளுத்தும் அக்கினிவெயிலில் பட்டினி போராட்டம் நடத்தும் பொழுதும், எந்த பேரிடர் பயிர்சியும் அம்மக்களுக்கு அளிக்காமலே, அணு உலை இன்னும் பத்து நாட்களுக்குள் திறக்கப்படும் என்று அறிவிக்கும் துணிவு யாருக்கு வரும்? தினம் தோறும் 1000 கணக்கான மக்கள் 9 மாதங்களாக, எந்த வன்முறையும் இல்லாமல், அஹிம்ஷா வழியில் போராட்டம் நடத்தியும், ஒரு அரசியல்வாதியோ, அதிகாரியோ அந்த மக்களை சந்தித்து அவர்களது கோரிக்கையை கேட்காத ஜன நாயகம் இந்தியாவை தவிர எங்கு நடக்கும்? சர்வ நிச்சயமாக சொல்ல முடியும் இந்திய ஒரு வல்லரசுதான்!!!
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 97 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday6695
mod_vvisit_counterYesterday10391
mod_vvisit_counterThis week6695
mod_vvisit_counterLast week80132
mod_vvisit_counterThis month209427
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12731546