முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்தொடர்புக்கு
+++
மரித்துப் போன சகிப்புத்தன்மை. அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 26
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
சனிக்கிழமை, 12 மே 2012 19:22

கடந்த இரண்டு நாட்களாக பாராளுமன்றமே  என்சிஇஆர்டி பாடப்புத்தகக்தில் அம்பேத்கரை இழிவு படுத்தும் வகையில் உள்ள ஒரு கார்ட்டூன் காரணமாக ஸ்தம்பித்தது.  இடது சாரிகள் உள்ளிட்ட அனைத்துக் கட்சி எம்.பி.க்களும், இந்தக் கார்ட்டூனை உடனடியாக பாடப்புத்தகத்தில் இருந்து நீக்க வேண்டும் என்றும், இந்தக் கார்டூன் வெளிவரக் காரணமாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஒன்று சேர்ந்து குரல் கொடுத்தனர்.

cartoon

மத்திய அரசும் உடனடியாக பணிந்தது. பிரணாப் முகர்ஜி, மற்றும் கபில் சிபல் ஆகியோர், இந்தக் கார்டூன் வெளி வந்ததற்காக மன்னிப்புக் கேட்டனர்.

அப்படி என்னதான் இருந்தது அந்தக் கார்டூனில் ?

1949ம் ஆண்டு, சங்கர்ஸ் வீக்லி என்ற பத்திரிக்கையில் வெளி வந்த கார்டூன்தான் அது.   அரசியல் அமைப்புச் சட்டத்தின் மீது அமர்ந்திருக்கும் அம்பேத்கரை, நேரு சாட்டையால் அடித்து விரைவாக அரசியல் அமைப்புச் சட்டத்தை தயார் செய்யுமாறு சொல்வது போன்ற கார்டூன் அது.   அரசியல் அமைப்புச் சட்டம் தயார் செய்யப்பட்ட சூழல், அப்போது இருந்த அரசியல் சூழல், அரசியல் அமைப்புச் சட்ட வரைவுக் குழுவுக்கு இருந்த நெருக்கடிகள், அம்பேத்கருக்கும் நேருவுக்கும் இடையே இருந்த உறவு ஆகியவற்றை தற்கால மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா ?

அந்த அடிப்படையில்தானே அந்தக் கார்டூன் பாடப்புத்தகத்தில் சேர்க்கப்பட்டது ?   இன்று பகத்சிங், ராஜகுரு, சுக்தேவ் ஆகியோரை மாவீரர்கள் என்று கொண்டாடுகிறோம்.  மஹாத்மா காந்தியை தேசப்பிதா என்று புகழ்கிறோம்.  இதே தேசப்பிதா தானே, அவர்கள் மூவரையும், காங்கிரஸ் மாநாட்டுக்கு முன்பாக தூக்கிலிடுங்கள் என்று பிரிட்டிஷ் அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டார் ?  இந்த உண்மையை மறைத்து விட முடியுமா ? சுபாஷ் சந்திர போசையும், காங்கிரஸ் மற்றும் காந்தி தொடர்ந்து எதிர்த்துத்தானே வந்தனர்.  இன்று சுபாஷ் சந்திரபோஸை நாம் கொண்டாடவில்லையா ?  இதே போல வெளிவந்ததுதானே அந்தக் கார்டூனும் ?

அந்தக் கார்டூன் ஒன்றும் தடை செய்யப்பட்ட கார்டூன் இல்லையே ?  பிறகு எதற்காக இத்தனை கூப்பாடுகள்.   விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட மனிதன் யாராவது இருக்க முடியுமா ? அம்பேத்கரும் விமர்சனத்துக்கு உட்பட்டவர்தானே ?  புத்த மதம், தலித்துகளை சாதீயத் தளையிலிருந்து விடுவிக்கும் என்று அம்பேத்கர் போட்ட கணக்கு தவறு என்பதை காலம் நிரூபித்திருக்கிறதே ….

இந்தப் பாடப்புத்தகங்களைத் தயார் செய்த யோகேந்திர யாதவ் மற்றும் சுகாஸ் பல்சிகர் ஆகியோர் மிகச் சிறந்த அறிஞர்கள்.  நம் மாணவர்கள், அனைத்து துறையிலும் கற்றுத் தேர்ந்து மிகச் சிறந்த அறிஞர்களாக உருவாக வேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள்.

pro_yadv_20110910095312

யோகேந்திர யாதவ்

யோகேந்திர யாதவ், ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தில் முதுகலை தத்துவம் பயின்று விட்டு, பஞ்சாப் பல்கலைகழகத்தில் எம்.பில் பயின்றவர்.   சிஎன்என் ஐபிஎன் போன்ற தொலைக் காட்சிகளில், தொடர்ந்து தேர்தல் கருத்துக் கணிப்புகளை நடத்தி வருபவர்.

சுகாஸ் பல்சிகர் அரசியல் மற்றும் பொது நிர்வாகத்தில் முனைவர் பட்டம் வாங்கியவர்.   பூனே பல்கலைகழகத்தில், சமூகவியல், அரசியல், அரசியல்பொருளாதாரம் ஆகிய பிரிவுகளில் தொடர்ந்து பாடம் எடுத்து வருபவர்.

இதில் வினோதமான விஷயம் என்னவென்றால், இவர்கள் இருவருமே, கடுமையான தலித் ஆதரவாளர்கள்.  இந்திய சமூக அமைப்பை நன்கு புரிந்து, தலித்துகளுக்கும் பிற்பட்டவர்களுக்கும், அரசியல் அதிகாரம் வழங்கப்படவேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருபவர்கள்.

பாராளுமன்றத்தில், இந்தக் கார்டூன் பற்றிய சர்ச்சை எழுந்ததால், இவர்கள் இருவருமே, என்சிஇஆர்டி பாடக்குழுவிலிருந்து ராஜினாமா செய்துள்ளனர்.

சனிக்கிழமை அன்று மதியம், சுகாஸ் பல்சிகரின் பூனே அலுவலகம், குடியரசுக் கட்சித் தொண்டர்களால் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த யோகேந்திர யாதவ், பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, அம்பேத்கரின் ஆழமான கருத்துக்களை நான் சுகாஸ் பல்சிகரிடமே பயின்று வந்தேன்.  அப்படிப்பட்டவரின் அலுவலகத்தை அம்பேத்கர் பெயரால் தாக்கியுள்ளது, வருந்தத்தக்கது, வேதனை ஏற்படுத்துகிறது என்று தெரிவித்திருக்கிறார்.

அம்பேத்கரைப் பற்றிய இந்தக் கார்டூனை தடை செய்ய வேண்டும் என்றால், இந்தியாவில் அத்தனை கார்டூன்களையும் தடை செய்ய வேண்டும்.  எந்த அரசியல்வாதியைப் பற்றியும் கார்டூன் வரையவே முடியாது.

சங்கர் என்று அழைக்கப்படும் சங்கர் பிள்ளை, கேரள மாவட்டம் காயாம்குளம் என்ற பகுதியில் பிறந்தவர்.   சிறிய வயதில், இவரது ஆசிரியர் படுத்திருப்பது போல ஒரு கார்டூன் வரைந்ததற்காக தலைமை  ஆசிரியரால் கண்டிக்கப்பட்டார்.  ஆனால் இவரது மாமா, இவரது திறமையை ஊக்குவித்து, தொடர்ந்து கார்டூன் வரைய உற்சாகப்படுத்தினார்.    மாவேலிக்கராவில் ஓவியம் பயின்ற சங்கர், திருவனந்தபுரம் மஹராஜா கல்லூரியில் பட்டம் பயின்றார்.  பிறகு மும்பைக்குச் சென்ற சங்கர், இந்துஸ்தான் டைம்ஸ், தி ப்ரீ ப்ரெஸ் ஜர்னல் போன்ற பத்திரிக்கைகளில் தொடர்ந்து கார்டூன் வரைந்தார்.

shankar

சங்கர் பிள்ளை

மற்ற பத்திரிக்கைகளில் பணியாற்றி விட்டு, சுதந்திரத்துக்குப் பிறகு, சங்கர்ஸ் வீக்லி என்ற பத்திரிக்கையை தொடங்குகிறார்.   அந்தப் பத்திரிக்கையை தொடங்கி வைத்தது யார் தெரியுமா ?  ஜவஹர்லால் நேருதான்.  ஆனால், நேருவைப் பற்றி சராமாரியாக கார்டூன்களை வரைந்து தள்ளியவர் சங்கர் பிள்ளை.

Cover-Weekly-D

நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்ட பிறகு, கார்டூனிஸ்டுகளை அரசு கைது செய்யும் என்று அறிந்து, இவராகவே முன் வந்து சங்கர்ஸ் வீக்லி பத்திரிக்கையை நிறுத்தினார்.  இந்திரா காந்தி, இவரது பத்திரிக்கையை நிறுத்தியதற்கு வருத்தம் தெரிவித்து சங்கருக்கு கடிதம் எழுதினார்.

Letter-1

இப்படிப்பட்ட சிறப்பான பின்புலம் உள்ளவர்தான் கார்டூனிஸ்ட் சங்கர். அந்தக்கால அரசியல் சூழலை வைத்து, வரைந்த கார்டூனை இன்றைய அரசியல்வாதிகள் அத்தனை பேரும் சேர்ந்து அவதூறு செய்வது, இறந்த கார்டூனிஸ்ட் சங்கருக்கு செய்யும் அவமரியாதையே ஆகும்.  இந்திய அரசாங்கம், அவருக்கு பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்மவிபூஷண் என்று வழங்கிய பல்வேறு பட்டங்கள் அனைத்தையும், பாராளுமன்றத்தில் நடந்த சம்பவங்கள், சாக்கடையில் எரிந்து விட்டன.

இந்தியாவில் தொடர்ந்து கார்டூன்களையும், கார்டூனிஸ்டுகளையும் சாடும் போக்கு இருந்து வருகிறது.  ஆனந்த விகடனில் அட்டைப்படத்தில் வந்த ஒரு நகைச்சுவை துணுக்குக்காக, ஆனந்த விகடன் ஆசிரியருக்கு சிறைத்தண்டனை விதித்தார் “வானளாவிய அதிகாரம்” படைத்த அன்றைய சபாநாயகர் பி.எச்.பாண்டியன்.

சமீபத்தில், ஒரு கார்டூன் வரைந்து அதை இணையத்தில் நண்பர்களோடு பகிர்ந்து கொண்டதற்காக, ஒரு பேராசிரியரையும், அவர் நண்பரையும் சிறையிலடைத்தார் மம்தா பானர்ஜி.

mamatacartoon

தமிழகத்திலும், கார்டூன்களை ரசிக்காமல் கோபப்படும் போக்குக்கு, கருணாநிதி ஜெயலலிதா ஆகிய இருவருமே விலக்கல்ல.  உதயநிதி ப்ரொடக்ஷன்ஸ், துரை தயாநிதி தயாரிப்பு, கலைஞர் கதை வசனம், அருள் நிதி ஹீரோ என்று ஒரு கார்டூன் போட்டதற்காக, தினமணி பத்திரிக்கையை ஒரு பொதுக்கூட்டத்தில் வறுத்து எடுத்தார் கருணாநிதி.  அப்போது அரசு விளம்பரத்தையும் நிறுத்தச் சொன்னதாகத் தகவல்.

இப்படி சகிப்புத்தன்மையை சுத்தமாக இழந்து கொண்டே வந்தால், நாளை இந்தச் சமுதாயம் மிருகங்களின் சமுதாயமாகவே மாறி விடும்.  நகைச்சுவை உணர்ச்சி இல்லாத நமக்கும் மிருகங்களுக்கும் என்ன வேறுபாடு ?

சங்கரின் சில கார்டூன்கள்

shankar-3

 

015

022

 

033

059 

 

Comments  

 
-1 #44 rraju 2012-06-05 08:01
சவுக்கின் கார்ட்டூன் பற்றிய அலசல், ஆதாரத்துடனான அலசல் பாராட்டவேண்டிய ஒன்றுதான். ஆனால் அதற்காக கொடுத்துள்ள உதாரணங்கள்தான் “சவுக்கின்” சரியா என்று யோசிக்க வைக்கிறது. சகிப்புத்தனம் என்பது தலித் மக்களிடையே காலம் காலமாக இருந்து வருகிறது. அவர்கள் உயர் சாதியினரால் அடக்கி வைக்கப்பட்டார்க ள் என்று சொன்னாலும் அதைவிட அடங்கி வாழப் பழக்கப்பட்டவர்க ள் என்றுதான் சொல்லவேண்டும். அவர்களுக்கு சகிப்புத்தன்மை பிறப்பிலேயே வந்த ஒன்று. உடல் உழைப்பு முழுவதையும் பிறருக்காக தந்து, அதற்கான போதிய ஊதியம் கொடுக்கப்பட வேண்டும் என்பதைக் கூட அறியாமல் இருந்தார்கள். கொஞ்சம் யோசித்து நியாயம் கேட்டவர்களை அடக்கி ஒடுக்கப்பட்டார் கள் என்பதும் நாடறிந்த உண்மை. அப்படிபட்ட பிரிவில் வந்த ஒருவர், மெத்தப் படித்து, ஒரு மிகப்பெரிய மக்களாட்சி நாட்டிற்கு சட்டத்தை வடிவமைத்தவரை பற்றி மட்டும் வரலாற்றுப்பதிவு என்பதாக பாடப் புத்தகத்தில் கொண்டுவந்தது கண்டிப்பாக அவரை இழிவு செய்வதாகவே இருக்கும். யோகேந்திர யாதவ், ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தில் முதுகலை தத்துவம் பயின்றார் என்பதற்காக, மிகபிரபலமான கார்ட்டூனிஸ்ட் சங்கர் பிள்ளை என்பதற்காக இப்போது அந்தக் கார்ட்டூன் பாடப்புத்தகத்தி ல் வந்தது சரி என்று சொல்வது ஏற்புடையது அல்ல. வரலாற்றுப் பதிவுக்காக என்று காரணம் சொன்னால், எத்தனையோ தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர்கள் எப்படியெல்லாம் பாதிக்கப்பட்டார ்கள் என்பதைக் காட்டி, இதுபோன்ற இனப்பாகுபாடு காட்டக்கூடாது என்பதைக் காட்ட இன்றைய தலைமுறைக்கு சொல்லலாமே...! அடுத்து அம்பேத்கார் ஒரு அரசியல்வாதியல்ல . அப்போதைய காலக்கட்டத்தில் அவருக்கு ஒப்பான சட்டம் தெரிந்தவர் இல்லை என்பதால்தான் அந்தப் பொறுப்பு அவருக்கு தரப்பட்டது. அதை சங்கர் பிள்ளை கார்ட்டூனாக போட்டதே கண்டிக்கத்தக்கத ு. அப்படி இருக்க இப்போது எதற்க்காக மீண்டும்...! இதில் அந்த பாடப்புத்தகத்தை தயார் செய்த “யோகேந்திர யாதவ் மற்றும் சுகாஸ் பல்சிகர்” இருவரும் கடுமையான தலித் ஆதரவாளர்கள் என்று சொல்லி நியாயப்படுத்துவ து சரியானது அல்ல. அடக்கப்பட்டே / அடங்கியே இருந்தவர்களுக்க ு சகிப்புத்தன்மை என்பது இயல்பானது. அதையும் மீறி இவ்வளவு எதிர்ப்பு என்னும்போது அந்த கார்ட்டூன் எந்த அளவிர்க்கு பாதிப்பு ஏற்படுத்தி உள்ளது என்பதை சாவுக்கு போன்றவர்கள் உணரவேண்டும்.
Quote
 
 
0 #43 rraju 2012-06-04 20:49
அடக்கப்பட்டே / அடங்கியே இருந்தவர்களுக்க ு சகிப்புத்தன்மை என்பது இயல்பானது. அதையும் மீறி இவ்வளவு எதிர்ப்பு என்னும்போது அந்த கார்ட்டூன் எந்த அளவிர்க்கு பாதிப்பு ஏற்படுத்தி உள்ளது என்பதை சாவுக்கு போன்றவர்கள் உணரவேண்டும்.
Quote
 
 
0 #42 raamarasu 2012-06-03 16:40
சவுக்கின் கார்ட்டூன் பற்றிய அலசல், ஆதாரத்துடனான அலசல் பாராட்டவேண்டிய ஒன்றுதான். ஆனால் அதற்காக கொடுத்துள்ள உதாரணங்கள்தான் “சவுக்கின்” சரியா என்று யோசிக்க வைக்கிறது. சகிப்புத்தனம் என்பது தலித் மக்களிடையே காலம் காலமாக இருந்து வருகிறது. அவர்கள் உயர் சாதியினரால் அடக்கி வைக்கப்பட்டார்க ள் என்று சொன்னாலும் அதைவிட அடங்கி வாழப் பழக்கப்பட்டவர்க ள் என்றுதான் சொல்லவேண்டும். அவர்களுக்கு சகிப்புத்தன்மை பிறப்பிலேயே வந்த ஒன்று. உடல் உழைப்பு முழுவதையும் பிறருக்காக தந்து, அதற்கான போதிய ஊதியம் கொடுக்கப்பட வேண்டும் என்பதைக் கூட அறியாமல் இருந்தார்கள். கொஞ்சம் யோசித்து நியாயம் கேட்டவர்களை அடக்கி ஒடுக்கப்பட்டார் கள் என்பதும் நாடறிந்த உண்மை.

அப்படிபட்ட பிரிவில் வந்த ஒருவர், மெத்தப் படித்து, ஒரு மிகப்பெரிய மக்களாட்சி நாட்டிற்கு சட்டத்தை வடிவமைத்தவரை பற்றி மட்டும் வரலாற்றுப்பதிவு என்பதாக பாடப் புத்தகத்தில் கொண்டுவந்தது கண்டிப்பாக அவரை இழிவு செய்வதாகவே இருக்கும். யோகேந்திர யாதவ், ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தில் முதுகலை தத்துவம் பயின்றார் என்பதற்காக, மிகபிரபலமான கார்ட்டூனிஸ்ட் சங்கர் பிள்ளை என்பதற்காக இப்போது அந்தக் கார்ட்டூன் பாடப்புத்தகத்தி ல் வந்தது சரி என்று சொல்வது ஏற்புடையது அல்ல.
Quote
 
 
+2 #41 mmari 2012-05-26 01:08
யோ சவுக்கு (பார்பன கும்பலே) உங்களுக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டம் எழுதிய சூழல் தெரியுமா? அம்பேத்கர் போய் நான் சட்டம் எழுதுகிறேன் எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்று ய்கிட்டயும் (காந்தி, நேரு) கேட்கலா காந்தியே தான் சொன்ணாரு உலகத்திலே சட்டததை நன்கு கற்று அறிந்தவர் அம்பேத்கர் தான் அவரைத்தான் நம் நாட்டிற்கு சட்டம் எழுத்வைக்க வேண்டும் என சொன்னார். உடனே நேரு போய் அம்பேத்கரை சந்த்தித்தார், இது குறித்து விதாதித்தார். அதன் பிறகு தான் அம்பேத்கர் ஒப்புக்கொண்டார் . உலகிலே இந்திய அரசியலமைப்புச் சட்டம் தான் இன்றும் சிறந்து விளங்குகிறது. புரட்சியாளர் அம்பேத்கர் ஒரு சாதிக்கும் மட்டும் தலைவரல்ல ஒட்டுமொத்த இந்திய மக்களின் தேசப் பிதா அம்பேத்கர் அதை தெரிஞ்சுக்கங்க இனிமேலாவது ஒடுக்க பட்ட மக்களுக்காக உங்கள் பேனா எழுதட்டும்
Quote
 
 
+3 #40 வால்டர் வணங்காமுடி 2012-05-22 15:20
//அம்பேத்கரைப் பற்றிய இந்தக் கார்டூனை தடை செய்ய வேண்டும் என்றால், இந்தியாவில் அத்தனை கார்டூன்களையும் தடை செய்ய வேண்டும்.//

கார்டூனை தடை செய்யவேண்டும் என்பது முட்டாள்தனம். ஆனால் அது பாடபுத்தகத்தில் வந்தது ஏற்புடையது அல்ல. இன்னும் சொல்லபோனால் நமது பாடபுத்தகங்கள் பலவிசயங்களை திரித்து கற்பிக்கும் இந்த காலகட்டத்தில் 'சட்டம் அமைக்கும் நெருக்கடியை விலாவரியாக விளக்குகிறேன்' பேர்வழி என்று இப்படி ஒரு கார்டூன் புத்தகத்தில் தேவை இல்லை.
Quote
 
 
+3 #39 வால்டர் வணங்காமுடி 2012-05-22 15:14
சிறு வயதில் சும்மா கிண்டல் அடிப்பதற்காக பசங்க சொல்லும் வாக்கியம்: "நீ ஒரு நாய்........................................................... வளர்த்தியா?". விசயம் "நீ ஒரு நாய் வளர்த்தியா?" என்பது தான். ஆனால் தேவை இல்லாத இடத்தில் கேப் விட்டால் அதன் அர்த்தம் மாறி அடிக்க வருவார்கள். அது தான் இங்கேயும் நடந்துள்ளது. அதெல்லாம் சரி... என்ன **ருக்கு இந்த புகைப்படம் பாடபுத்தகத்தில் வருது? நேரு அம்பேத்காரை கண்டித்தார் -- இந்த வார்த்தைகள் போதாதா? 'லிங்கத்தின் மீது காலை வச்சது மாதிரி' டீ சர்ட் போட்டுகிட்டு, பின்னாடி 'கண்ணப்பன்' என்று எழுதி வைத்தால் 'இந்து' மத ஆட்கள் சும்மா விடுவார்களா? இல்லை, 'சிவனும், பெண்(பெருமாளும் ) ஆணுறை விளம்பரத்தில் வருவது போல போஸ் கொடுத்து, கீழே சுவாமியே சரணம் அய்யப்பா' என்று இருமுடி பை விற்றால் பக்தர்கள் ஒத்துகொள்வார்கள ா?
Quote
 
 
0 #38 Dravidan 2012-05-21 18:22
Quoting jivi:
கருத்து யென்பது யென்ன இதில் என்ன கருத்தை சவுக்க்கு புரிந்தது .கண்ணகி தெவடியா,பிரபாகர ன் பயஙரவாதி என்றூம் நான் கருத்து சொன்னால்.என் கருத்துக்கு சுதந்திரம் தருவாயா...(இப்பொ வலிகுதுல்ல)

Your quote is a perfect exmaple to show where this country is going. You may be able to prove that Prabhakaran is a terrorist but do you really think it is OK to say kannagi is prostitute?
Quote
 
 
+1 #37 jivi 2012-05-21 16:11
கருத்து யென்பது யென்ன இதில் என்ன கருத்தை சவுக்க்கு புரிந்தது .கண்ணகி தெவடியா,பிரபாகர ன் பயஙரவாதி என்றூம் நான் கருத்து சொன்னால்.என் கருத்துக்கு சுதந்திரம் தருவாயா...(இப்பொ வலிகுதுல்ல)
Quote
 
 
+3 #36 Mallan 2012-05-21 02:03
Aruna's comment is excellent!
Yes, Pillai, a casteist's imaginary catoon that depicts false histtory has got into history book, shame of Indian historians...
Quote
 
 
+9 #35 aruna 2012-05-19 15:23
There is no place for cartoon in school subjects.History has been wrongly placed in the political science subject. I feel that the students must know about the real history not the story. There are many cartoons of those years shows how immensly Dr. Ambedkar worked hard as single man to bring he constitution which we all are enjoying. It is very silly that emminent scholers and educationist also has caste feeling in thier mind. As an dalit it hurt every one it touches every heart. Savukku is diverting its work. May be the cartoon is not critiques in those years , but now it is right time to put things straight . Do you peopel put anything about Gandhi or Nehru in same palce as Dr. Ambedkar ... no i doudt . Every one need to speak from thier heart not from thier mind .
Quote
 
 
+10 #34 ஆதிசேஷு 2012-05-17 08:09
அம்பேத்கர் அரசியல்வாதி அல்ல சவுக்கு, நம் நாடு சுதந்திரம் அடையும் முன்பே அதாவது 1939 ல் வைஸ்ராய் மந்திரிசபையில் மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சராக ஆங்கிலேய அரசு அவரை நியமித்தது என்றால் சும்மா போகிற போக்கில் கிடைக்கும் விஷயமா என்ன?அந்த பொறுப்பில் அவர் நிறைவேற்றிய சட்டங்கள் அறிந்தவர் ஆயுளுக்கும் அவரை பற்றி ஒரு அவச்சொல்லை சகிக்கவே கூடாது தலித்தாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஆமாம் ..... என்னப்பா இது இவரை கிண்டல் செய்தே ஒரு கார்டூன் இருக்குதே உடனே அதை ஸ்கூல் பசங்க புக்ல போடுப்பா என்று சிந்தித்த மூளை,உலகிலேயே அம்பேத்கருக்கு தான் அதிக சிலைகள் வைக்கப்பட்டுள்ள உண்மையை வெறுப்போடு கவனித்த சாதி செல்லரித்த மூளை.கடுமையான தண்டனைக்கு உரிய குற்றம் அது.
Quote
 
 
+6 #33 thangapandian 2012-05-16 22:35
Great Sir. This is the way to express our feelings which will definitely reach to the minds of these MANDOOS & "JAATHI VERIYARS" and also they will understand that we are not still illiterate and the group of only anger!!
Quote
 
 
+22 #32 kalappiran2 2012-05-16 19:44
இந்த கட்டுரைக்கு ஆதரவான பின்னூட்டங்கள் பிழைகள் நிறைந்ததாகவும் எதிரான பின்னூட்டங்கள் பிழைகள் இன்றி கருத்து செறிவாகவும் தெளிவாகவும் இருப்பதை காணுங்கள் சவுக்கு. யாராவது கோபபட்டார்களா என்பதையும் கவனியுங்கள் சவுக்கு.சகிப்புதன்மையை யாருக்கு போதிக்கிறீர்கள் ?நேரு சாட்டையை எடுத்தால் வேகமாக நடக்கும் வேலையா அரசியல் அமைப்பு சட்டம் எழுதுவது?அம்பேத்கர் கொண்டு வந்த ஹிந்து கோட் பில் என்பது பெண்களுக்கு எந்தெந்த உரிமைகளை கோரியது என்பதை மட்டும் ஒருவர் படித்தால் போதும் அவரை பற்றி தெரிந்துகொள்ள ஆனால் அதை பாடநூலில் சொல்லும் தைரியம் இருந்தால் அவரையே நாம் தேசப்பிதா என்று அழைக்க வேண்டி இருக்கும்.இவருக்கு போய் இவ்வளவு பெரிய பொறுப்பை வழங்கி விட்டார்களே என்ற சாதி வெறியில் ஒரு மிகச்சிறிய இதழில் ஒரு சாதி வெறியன் வரைந்த கார்டூனை இவ்வளவு ஆண்டுகள் கழித்து பள்ளி மாணவர்களுக்கு அதுவும் பொலிடிகல் சைன்ஸ் பாடத்திலேயே இடம் பெற வைத்தவன் குற்றவாளி.அவர் அமெரிக்காவில் ஆந்த்ரபாலஜி யும் இங்கிலாந்தில் அரசியல் மற்றும் பொருளாதாரம் படித்து ஆய்வு பட்டங்கள் பெற்றதும் சட்டம் படித்ததும் ஏனைய தலைவர்களை போல் காசு சம்பாதிக்க அல்ல அல்ல அல்ல.
Quote
 
 
+18 #31 arumparaiyarasu 2012-05-16 17:21
Indian situation-parliamentary system of democracy was taken from England, the concept of federalism, the Bill of Rights and Judicial Review have followed the US model, the Directive principles of state policy was taken from Irish constitution, the emergency provisions were taken from the Weimer Constitution of Germany, Fundamental Rights were taken from the US Constitution, structure of government into three levels and provision of residuary powers were taken from the Constitution of Canada இப்படி பல நாட்டு அரசியல் அமைப்பு சட்டங்களை ஆய்ந்து உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டிற்கு தனியறை உழைத்து தந்தவரை சாட்டையால் அடிப்பது போல் கார்ட்டூன் வரைந்தவன் நிச்சயம் முட்டாள் அல்லது சாதி வெறியனாய் தான் இருப்பான்.1949 ஆம் ஆண்டில் ஒரு மிக சிறிய பத்திரிக்கையில் வந்த ஒரு கார்டூனை இந்த வருடம் பதினோராம் வகுப்பு அதுவும் cbse சிலபஸ் புத்தகத்தில் பொலிடிகல் சைன்ஸ் பாட புத்தகத்தில் இடம் பெற வைத்தவன் நிச்சயம் சாதிவெறியனே.
Quote
 
 
+13 #30 kalappiran2 2012-05-16 11:53
Indian Constitution aims at securing not merely political or legal equality, but also social equality ………….இது உலகத்தில் எந்த நாட்டிலும் இல்லாதது.the Indian Constitution envisages laws for the governance of the States too. Detailed provisions regarding the working of the Union Government and the State Governments have been given with a view of avoiding any constitutional problems which the newly-born Democratic Republic might experience in the working of the Constitution.இதுவும் உலகில் எங்கும் காணமுடியாது.மேலும் இந்தியர்கள் அனைவருக்கும் உறுதி செய்யப்பட்ட உரிமைகள்
The Right to Equality;The Right to Freedom;The Right against Exploitation;Th e Right to Freedom of Religion;Cultur al and Educational Rights;The Right to Constitutional Remedies….
Quote
 
 
+23 #29 சோழன் 2012-05-15 18:03
சவுக்கு, சகிப்புத்தன்மை எல்லாம் சரி தான்! எனக்கு ஒரு சந்தேகம்! இந்த கார்டூண், அம்பேத்கரை நேரு அடித்து வேலை வாங்குவது போல் உல்லது! அதாவது இன்றைய பாட புத்தகத்தில் எப்படி தொண்ணூறு சத உண்மைகள் மறைக்கப்பட்டு, பொய்களே வறலாறாக உள்ளதோ, அப்படி இதுவும் காங்கிரசின் அடி கழுவும் ஒரு கருத்து தான்! இதற்கு எதற்கு சகிப்புத்தன்மை? பாடபுத்தகத்தில் இந்த கார்டூனின் அவசியம் என்ன?
Quote
 
 
+20 #28 anandth 2012-05-15 15:34
மறுபடியும் சவுக்கு தனது தலித் விரோத போக்கை எடுத்து காட்டுகிறது. நாட்டிலே ஆயிரம் பிரச்சினைகள் இருக்கும் போது அதை விடுத்தது ஆதிக்க சாதிகளுக்கு வக்காலத்து வாங்கும் இந்த கட்டுரை இப்பொழுது தேவை தானா? தலித்தை பற்றி செய்தி போட்டால், கேள்வி கேட்க யாரும் இல்லை. ஒரு கட்சி தலைவர், தனது சாதி காரர்களுக்கு சொல்லுவது என்ன வென்றால் , வேறு சாதி காரர்கள் அவர்களது சாதி பொன்னை திருமணம் செய்தல் அவர்களை வெட்டி போட சொல்லுகிறார். இதை பற்றி சவுக்கு கருத்து அல்லது கட்டுரை போட துணிவு உண்டா ?
Quote
 
 
+14 #27 chandrasekharan 2012-05-15 13:12
What is the purpose of including this cartoon in text books. I can not appreciate the reason you have mentioned that ppl should know the relation between Nehru and Baba saheb, the political situation then etc. the cartoon is in bad taste. Atleast I did not know that this was from Shankar's weekly. The first impression I had was what an atrocious cartoon. That too from Yadav and Palshikar? What happened to them??
Quote
 
 
+24 #26 எஸ்.ஏ.இபுறாஹிம் 2012-05-15 12:57
அரசியல் சட்டமேதை அம்பேத்காரை இழிவு படுத்த வேண்டுமென்ற நோக்கில் தான் இந்த கார்ட்டூன் வெளையிடப்பட்டுள ்ளது. அதே சமயத்தில் சவுக்கின் கருத்திற்கு நான் மாறுபடுகிறேன். இந்தியாவில் இன்றளவும் தீண்டாமைக் கொடுமை உள்ளது என்பதற்கு இந்த கார்ட்டூன் ஒரு சான்றாகும்.

எஸ்.ஏ.இபுறாஹிம். சௌதி....
Quote
 
 
+11 #25 anniyan 2012-05-15 10:59
Quoting Ben:
காந்தி பகத் சிங்கை தூக்கிலிட சொன்னார் என்றும், தலித் மக்களுக்கு துரோகம் இழைத்தார் என்றும் வரலாற்று புத்தகத்தில் உள்ளதா என்ன? இன்றைய வரலாற்று புத்தகத்தில் உள்ள அனைத்துமே ஆளும் மேல் ஜாதி தூதி பாடல்கள் தானே? இதில் மட்டும் சகிப்புதன்மை எதற்கு. காலம் காலமாக தலித் மக்கள் மட்டும் சகித்து கொள்ள வேண்டும் என்பதே மனுதர்மம். சவுக்கும் அதையே வழிமொழிகிறது.


Dear Ben,
மனு தர்மம் எனபதும் அந்த நாளைய நியாயம். இப்போது காலாவதியான ஒரு வரலாற்று ஆவணம். அவ்வளவுதான். அதுவும் இந்த கார்ட்டூன் போன்று காலாவதியாகிவிட் டது.

மேலும், மனுதர்மத்தின் படி சூத்திரன் கொலை செய்தால் அவனுக்கு மிதமான தண்டனையும் , பிராமணன் கொலை செய்தால், அது "உணர்ச்சி வசப்படாமல் முடிவு செய்யப்பட்ட கொலை" என்று பிராமணனுக்கு மரண தண்டனையே கொடுக்க சொல்கிறது. கன்றை தேரேற்றிக் கொன்ற இளவரசனுக்கே மரணதண்டனை என்றவர் மனு. பிறிதெல்லாம் திராவிட கட்சிகளினால் சொல்லப்பட்ட பொய்கள்.

ஆரியன் என சொல்லப்படும் சுப்பிரமணியன் சுவாமி, "ஜீனியஸ் அம்பேத்காரின்" அரசியல் சாசனச் சட்டமே தனக்கு பெரும் உதவியாக இந்த 2 -G வழக்கில் உதவியது என்று நேரடியாகப் புகழ்கிறார். ஆனால் இந்த திராவிட கட்சிகளின் பிரச்சாரத்தால், மனு தர்மத்தை எல்லோரும் எள்ளுகின்றனர். யாருக்கு யார்மேல் துவேஷம் என்று சிந்தித்துப் பார்த்தல் வேண்டும்.

Add On: அந்த கார்ட்டூனிஸ்ட் புத்திசாலியாக இருந்திருந்தால் நத்தை ஒட்டின்மேல் பாராளுமன்றம் போல் தூண்களும், சன்னல்களும் வரைந்திருக்கலாம ்.

But considering this issue is raised now, it is merely to create a scene, despite the fact the cartoon is too early for +2 students.
Quote
 
 
+24 #24 Sakthivel_tup 2012-05-15 00:33
இது சவுக்கு எழுதிய கட்டுரையா? சவுக்கை சவுக்கின்மீதே சுழற்றவேண்டும்.

சகிப்புத்தன்மை என்பது எங்கே இருக்கவேண்டும் என்பது முக்கியம், நீ சொல்லும் சகிப்புத்தன்மை தான் - கருநாக நிதி, ஈழ மக்கள் உயிரிழக்கும்போத ு கொண்டிருந்தது. அது சகிப்புத்தன்மைய ல்ல, கையாலாகாத்தனம், கயவாளித்தனம்.

இந்த அதிமுக அரசில் சவுக்குக்கு வேண்டுமானால் அந்த நிலைக்கு வந்திருக்கலாம்.

அம்பேத்கரை, மக்களுக்கு அவரளித்த பங்களிப்பை - கேலி செய்யும், கொழுப்பெடுத்த கூட்டத்தை செருப்பாலடிக்கு ம் தோழர்களுக்கு அந்த கையாலாகாத்தனம் தேவையில்லை.
Quote
 
 
+33 #23 anniyan 2012-05-14 22:03
மன்னிக்கவும் சவுக்கு அவர்களே. மனிதர்களின் கெளரவம், தன்மானம், உணர்ச்சி, வெறி என்பன வெவ்வேறானவை. இதெற்கெல்லாம் சகிப்புத்தன்மை என்பது எந்த அளவில் வேலை செய்யும் என்பது எனக்குத் தெரியும். கார்டூன்கள் என்பன பெங்காலி ஸ்வீட் போல. மூன்று நாட்களுக்கு பின் காலாவதியாகிவிடு ம். நகைச்சுவையற்று, பொருளோழிந்துவிட ும். இதுவோ அறுவது வருடம் முந்தைய கார்டூன். இது இப்போதக்கென்ன அர்த்தம்? என்ன தேவை?

பாகிஸ்தான் காஷ்மீரை ஆக்கஈரமித்து அங்கிருந்த ஹிந்துக்களை கொலையும் கற்பழிப்பும் ஆயிரக்கணக்கில் செய்து கொண்டிருந்தபோது , உடனடி நடவடிக்கை எடுக்காமல் நேரு நத்தையை விடக் கேவலமாக "இப்போது நாம் ராணுவத்தை அனுப்பினால், ஐ நா சபையில் என்ன சொல்லுவார்கள்?" என்று கேட்டு மனேக் ஷா வுக்கு கொடுக்காமல் இருந்தார். அதையெல்லாம் கார்டூனாகப் போடவேண்டிதுதானே ? அம்பேத்கார் எழுதிய அற்புதமான அரசியல் சாசனம் ஐம்பது வருடத்துக்குப் பின் மாறுதல் செய்யப்பட வேண்டியதே. ஆனால் விமானப் படைத் தளபதி, ராணுவ அமைச்சரிடம் "நம் விமானப் படை பலம் பாகிஸ்தானைவிட வலுவற்று இருக்கிறது" என்ற பதற வேண்டிய ரகஸ்யத்தை சொன்னால் அது அமைச்சகமே பத்திரிகையில் போடும் அளவில் அம்பேத்கரின் அரசியல் சாசனச் சட்டம் மீறப்பட்டுள்ளது . அதை கார்ட்டூனாகப் போட வேண்டியதுதானே? அதையெல்லாம் விட்டுவிட்டு தூங்காமல் உழைத்த அம்பேத்காரை கார்ட்டூனில் போடுவதா?

continued...
Quote
 
 
+36 #22 anniyan 2012-05-14 22:02
இப்போது ஏன் பத்திரிகைகள் மக்களுக்கு சகிப்புத்தன்மை போதிக்கின்றன?

சரஸ்வதியை நிர்வாணமாகவும், சீதையுடன் அனுமன் நீண்ட வாலை விட்டு உடலுறவு கொள்வது போலும் சித்தரிக்கப்பட் டபோது இதே மாதிரி மக்களுக்கு சகிப்புத்தன்மை போதிக்கபடுவதேன் ?

இதே ஏதோ ஒரு டென்மார்க் பத்திரிக்கை முகம்மது நபியின் தலைக்குப் பின்னால் பிறைநிலவு இருப்பது கொம்பு முளைத்தது போன்றிருப்பதாக கார்ட்டூன் வரைந்தபோது அந்த பத்திரிகையையோ அல்லது கார்ட்டூனையோ ஒரு முறை கூட பார்த்திராத மக்கள் பொங்கி எழுந்தனர். ஹைதராபாத்திலும் , பெங்களூரிலும் மட்டுமே நூறு கோடிக்கு மேல் சேதம் விளைவித்தனர். பஸ்களையும், இஸ்லாமியர் அல்லாதோரின் கார்களையும் கொளுத்தினர். டென்மார்க் பத்திரிகைக்கும் ஹைதராபாத் காருக்கும் என்னங்க சம்பந்தம்? என்று கேட்டு எந்த பத்திரிகையும் ஏன் சகிப்புத் தன்மை போதிக்கவில்லை?

போதனைகள் அம்பெத்காருக்கோ , இந்த புண்ய பூமிக்கோ தேவை இல்லை. அரசியல்வாதிகளுக ்கும் , பத்திரிகைகளுக்க ும்தான். உணர்சிகளுக்கு போதனைகள் தேவை இல்லை. வெறிக்குத்தான் தேவை.
Quote
 
 
-23 #21 Ravi 2012-05-14 19:20
சரியான கருத்து. பொதுவாகவே இந்தியருக்கு நகைச்சுவை உணர்வு மிகவும் கம்மி. அதிலும் நமது தமிழ்நாட்டில் கேட்கவே வேண்டாம். இங்கு மக்கள் அடுத்தவனை கிண்டல் செய்தால் சிரிப்பான். ஆனால் தன்னை கிண்டல் செய்தால் கொலைவரை செல்வான். இது தலைவர் முதல் தொண்டர் வரை, நடிகர் முதல் ரசிகன் வரை அனைத்து மட்டத்திலும் இருக்கும் அவலம். நகைச்சுவை என்பதை இன்னும் நாம் கற்கவில்லை. சிறுவயதிலேயே இதை நாம் வளர்க்க வேண்டும்.
Quote
 
 
+29 #20 rameshd 2012-05-14 18:59
அம்பேத்கரை இழிவு படுத்தும் வகையில் உள்ள ஒரு கார்ட்டூன் பாடப்புத்தகத்தி ல் போட்டு என்ன சொல்லவருகிறார்க ள் என்று முதலில் போட்டால் நன்றாக இருக்கும்.

நேருவை அல்லது காந்தியை அம்பேத்கர் சட்டையால் அடிப்பது போல் போட்டால் காங்கிரஸ் விட்டுவிடுமா?

பாடப்புத்தகத்தி ல் ஒரு தலைவரை போட்டு குழந்தைகளுக்கு ஏன் நஞ்சை விதைகிறர்கள்.
Quote
 
 
-26 #19 venkate 2012-05-14 15:28
உஎக்செல்லென்டு கட்டுரை சவ்க்கு!
Quote
 
 
+20 #18 Force Vasan 2012-05-14 14:31
"‌ம‌ரித்துக் போன‌ ச‌க்கிப்புத் த‌ன்மை" என்ற‌ இந்த‌த் தலைப்பை "ம‌ரித்துப் போகாத‌ நேரு குடும்ப‌ அடிமைத்த‌ன‌ம்" என்று மாற்றி விடுங்க‌ள்.கேரளா என்றாலே, இப்போதும் எப்போதும் ம‌த்தியில் இருப்ப‌வ‌ர்க‌ளு ட‌ன் ஒருவித‌ ஒட்டுத‌ல்தான் போலும். நீங்க‌ள் வெளியிட்டுள்ள‌ ச‌ங்க‌ரின் எல்லா கார்டூனும் எமர்ஜென்சி ராணியின் துதி பாடுவ‌த‌க‌வேதான ் இருக்கிற‌து. இவ‌ர் ஒரு நேரு குடும்ப‌ விசுவாசியாய் தான் த‌ன்னை வெளிப்ப்டுத்திக ிறார், நேர்மையான கார்டூணிஸ்டாய் இல்லை.
Quote
 
 
+9 #17 P.Srinivasan 2012-05-14 12:56
தி.மு.கா. - அ.தி.மு.க. இணைப்பு 1979ல், பிஜுபட்னாயக் விருப்பம் மு.கருணாநிதி ஆதங்கம்:

1979 !, அதற்குப்பிறகு 1989 வரை தி.மு.க. வால் பதவிக்கு வரமுடியவில்லை. அதுவும் இலங்கைப்பிரச்சன ையை வைத்து, "திராவிடனுக்கு ஒரு நாடு தமிழீழ நாடு" என்று நீயும் க.அன்பழகனும். இப்போது தயாநிதி,கலாநிதி பிராமணர், அன்பழகன் வெள்ளைக்காரர்(வ ெள்ளாளர்), இலங்கைத்தமிழங்க ளும், மலேஷியா சூதாட்ட பில்லிநேயர் டி. அனந்தகிருஷ்ணன் பெண்டாட்டி பிரஞ்ச்சுகாரி, லண்டன் பெருதுப்பிள்ளை மருமகள் வெள்ளைக்காரி நாங்கள் யாழ்ப்பாண "ஆரிய சக்கரவர்த்தி" வழிவந்தவர்கள் என்று பல அப்பாவி மக்களின் உயிரை பழிவாங்கி இலாபமடைந்தீர்கள .

1980 களில் எங்களைப்போன்றவர ்களையும் பிராடு இலங்கைத்தமிழர்க ளுக்காக ஊர்வலம் நடத்தவைத்து போலீசிடம் அடிவாங்க வைத்தீர்கள்.

ஏன்யா, நீ ஆட்சியில் இருந்தால் மற்றவர்களுடன் இணைவியா ?.
Quote
 
 
-20 #16 sowmi 2012-05-14 11:01
இந்த கார்ட்டூன் ஒரு வருடமாக உள்ளது, வேலை இல்லது திருமாவளவன் இதை வைத்து அரசியல் செய்துள்ளார் , இவருக்கு இலங்கை கூட்டி செல்ல வில்லை என்ற கோவம் , அதனால் இந்த பிரச்னை கிளப்பி ஒரு நாள் பார்லிமென்ட் நேரதை வீணாக்கி உள்ளார்
Quote
 
 
-17 #15 கருப்பட்டி 2012-05-14 09:19
Great!!!! Miss u SHANKAR... :sad:
Quote
 
 
+13 #14 Mallan 2012-05-14 04:18
Not sure Gandhi was a womaniser or may be because he was from a foreign culture but Nehru was certainly and even romancing with Mrs. Mountbatein without divorced with Mr. Mountbatein. The one reason for India intervention in Kashmir was that Nehru was fond of Kashmiri women and enjoyed a lot with Sheikh Abdullah.

These people were above the problems to common men and ran the independence agitation sweetly enjoying with britishers also.
- Candor
http://www.hindustantimes.com/News-Feed/Books/Book-suggests-Gandhi-was-racist-bisexual/Article1-678805.aspx#disqus_thread
Quote
 
 
+15 #13 Mallan 2012-05-14 03:49
You are praising these Yadhav and pillai stupids (still have their caste name in their name) who could not understand even 50 years old history. If Nehru and Ganhi were intelligent then you Ambedhkar was choosen to write constitution!

Ambedkar not womanizer like Nehru, Gandhi was humbug, he did not bring equality in Indian society, killed by a Hindu man. Ambekar was the most intelligent person in 20th Century India. If it is British today these guys (Yadave and Pillai) will be in Jail will be hanged.
Quote
 
 
+18 #12 guest 2012-05-14 03:34
If you look at these cartoons, one thing is certain, nothing has changed in the last 60 years...
Quote
 
 
+27 #11 thangapandian 2012-05-13 23:48
என்ன ஒரு முட்டாள் தனமான கட்டுரை சவுக்கு இது ! பாபா சஹெப் அவர்களை இந்தியாவின் எந்த ஒரு தலைவருடனும் ஒப்பிட முடியாது. வரலாற்றில் திரிக்கப்பட்ட பல செய்திகளால் அண்ணல் அவர்களின் திறமையும் , அறிவும், புகழும் மறைக்க பட்டிருக்கிறதே தவிர வேறொன்றுமில்லை. சம்பந்தப்பட்ட பேராசிரியர்கள் மட்டுமல்ல இந்தியாவின் வேறெவரும் படித்திராத அனைதத்து துறை படிப்பையும் அரசியல், சட்டம், பொருளாதாரம் , வனிகம் , நிர்வாகம், சமூகவியல் இன்னும் பலவற்றயும் கற்றிந்த மேதையை பற்றி விமர்சிக்க எந்த பூஷன் விருது பெற்ற்வனுக்கும் தகுதி இல்லை. ட்ரஃப்டிங் கமிட்டியில் இடம் பெற்ற பலரும் ஒடிவிட்ட நிலயில் அண்ணல் எடுத்த சுய முயற்சியே இன்றய அரசியல் சட்டமும் அதன் மூலம் இன்று உமது மற்றும் எனது உரிமைகள். அண்ணலை பழித்த எந்த இந்தியனும் தனது தாயை பழிப்பதற்கு சமம். ஒப்புக்கொள்ளாவி ட்டாலும் இதுதான் உண்மை.!
Quote
 
 
-10 #10 damaram 2012-05-13 21:27
saatheeya arippugal. aacharyappada oru ..........m illai.
Quote
 
 
-17 #9 Sivajiji 2012-05-13 19:55
இதை திருமாவளவன் என்ற ஜோக்கருக்கு சொல்லுங்கள். நேருவின் படமும் அம்பேத்கரின் படமும் அவர்கள் அந்த அந்த பொறுப்பை வகித்ததினால் இடம் பெற்றது; இதே திருமாவளவ்ன் அரசியல் அமைப்பு சட்ட
வரைவுக் குழுவின் தலைவராக இருந்திருந்தால் அவ்ரது படத்தையல்லவா வரைந்திருப்பார் கள் ? இதைப் புரிந்து கொள்ளாமல் பாராளுமன்றத்தில ் அவர் பேசியதும் அதை அப்படியே ஒத்துக் கொண்டு கபில் சிபலும் பிரணாப் முகர்ஜி பேசியதும் வெட்கக் கேடு
Quote
 
 
+15 #8 kala 2012-05-13 19:34
கார்டூன் பற்றியது அல்ல அந்தத் தகராறு.எதற்கு அதை பதினோராவது பாட புததகதில் போடவேண்டும்.கலா
Quote
 
 
-17 #7 Ray Jaguar 2012-05-13 18:45
freedom should be given to press... only then democracy can prosper...
Quote
 
 
+16 #6 pugazhendhi 2012-05-13 17:12
A 11th std student cannot understand Shankar"s cartoon on Ambedkar.The removal of the cartoon from the text book is justified.
Quote
 
 
+19 #5 Ben 2012-05-13 16:24
காந்தி பகத் சிங்கை தூக்கிலிட சொன்னார் என்றும், தலித் மக்களுக்கு துரோகம் இழைத்தார் என்றும் வரலாற்று புத்தகத்தில் உள்ளதா என்ன? இன்றைய வரலாற்று புத்தகத்தில் உள்ள அனைத்துமே ஆளும் மேல் ஜாதி தூதி பாடல்கள் தானே? இதில் மட்டும் சகிப்புதன்மை எதற்கு. காலம் காலமாக தலித் மக்கள் மட்டும் சகித்து கொள்ள வேண்டும் என்பதே மனுதர்மம். சவுக்கும் அதையே வழிமொழிகிறது.
Quote
 
 
-17 #4 syed ibu 2012-05-13 16:17
சகிப்புத்தன்மைன ்டா என்னதுன்டு நம்ம அரசியல்வாதிக்கு தெரிந்தால் தானே அதை பற்றி அவர்களிடம் கேட்க முடியும். சகிப்புத்தன்மை இருந்தால் அவர்கள் அரசியல் பண்ண முடியுமா
Quote
 
 
+22 #3 Vijay K 2012-05-13 09:31
வியாபார நோக்கிற்காக வெளிவரும் தினசரி பத்திரிக்கையில் வெளிவந்த கேலி சித்திரம், மாணவர்கள் படிக்கும் புத்தகத்தில் வர என்ன அவசியம்?
அம்பேத்கர் மட்டுமல்லாமல் பல தலைவர்களை பற்றி கேலி சித்திரம் உண்டு. காந்தி, நேரு மற்றும் பலர். அந்த சித்திரங்கள் உண்டா அந்த பாட புத்தகத்தில்?
சாட்டை கொண்டு அடித்து அரசு ஊழியர்களை வேலை வாங்குவேன் என்று சொன்ன ஜெ. போல படிபவர்களின் மனதில் பதியாதா?
தனிப்பட முறையில் அம்பேத்கர் பற்றிய புத்தகம் எழுதி அதில் பலதரப்பட்ட கேலி சித்திரத்தோடு இதையும் போட்டால், யார் கேள்வி கேட்க போகிறார்கள்?
கேலி சித்திரத்திற்கு சட்டமன்றத்தில் வைத்து ஜெ அரசு தமிழக அரசாக இருந்து தண்டித்ததற்கும் , குடும்ப கார்டூனுக்கு அரசியல் ரீதியாக பொதுகூட்டத்தில் வறுத்தெடுத்ததிற ்கும் வேறுபாடு தெரியவில்லையா?
Quote
 
 
-21 #2 Arun B 2012-05-12 21:33
Brilliant Savukku-ji...as usual!

I've always wondered from where did/do you get so much information/materials/docu's...et al...

The way you grasp a matter, the way you analyse and put down in words the same to politically-naive people is simply amazing...!
Quote
 
 
-26 #1 நோக்கர் 2012-05-12 20:35
மிகச் சிறப்பான, நேர்மையாக எழுதப்பட்டுள்ள் கட்டுரை. அரசின் ஒடுக்குமுறையால் பாதிக்கப்படும் அனைத்து த்ரப்பாருக்காகவ ும் குரல் கொடுக்கும் சவுக்கு இவ்வாறு துணிச்சலாக கருத்து சுதந்திரத்திற்க ாகவும், நிதானத்திற்காகவ ும், சகிப்புத் தன்மைக்காகவும் வாதாட முன்வருவது பாரட்டுக்குரியத ு. வாழ்த்துக்கள். தொடரும் உங்கள் பணி.
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 168 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday10564
mod_vvisit_counterYesterday18770
mod_vvisit_counterThis week54564
mod_vvisit_counterLast week95167
mod_vvisit_counterThis month276824
mod_vvisit_counterLast month382199
mod_vvisit_counterAll days13193191