முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்தொடர்புக்கு
+++
கண்டிக்கப்பட வேண்டியதே… அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 13
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
சனிக்கிழமை, 16 ஜூன் 2012 10:52

நேற்று சென்னையில் நடந்த ஒரு நிகழ்வு, அனைத்து ஜனநாயக சக்திகளாலும்  கண்டிக்கப்பட வேண்டிய ஒரு நிகழ்வு.  ஜெயலலிதா அரசின் அற்பத்தனங்கள் தொடர்ந்து அரங்கேறி வருவதற்கு நேற்றைய நிகழ்வு ஒரு சிறந்த உதாரணம்.

latest

எழுத்தாளர் சின்னக்குத்தூசியின் 78வது பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக சின்னக்குத்தூசி நினைவு அறக்கட்டளையின் சார்பாக அண்ணா சாலையில் உள்ள தேவணேயப்பாவானர் அரங்கம் (எல்.எல்.ஏ பில்டிங்) முன்பதிவு செய்யப்பட்டது.  இந்த அரங்கத்திற்கான முன்பதிவு ஜுன் 8 அன்று நிகழ்ச்சி அமைப்பாளர்களால் செய்யப்பட்டு முன்பதிவுக் கட்டணமும் வழங்கப்பட்டுள்ளது.   அந்த அரங்கத்தில் நிகழ்ச்சி நடத்துவ தென்றால், அண்ணாசாலை காவல்நிலையத்தில் ஒரு கடிதம் பெற்றுத் தர வேண்டும்.  ஆகையால், அதையும் நிகழ்ச்சி அமைப்பாளர்கள் செய்திருப்பார்கள்.

முன்பதிவுக் கட்டணம் கொடுத்ததும், விழாவுக்கு அழைப்பிதழ்கள் அச்சடிக்கப்பட்டு அனைவருக்கும் விநியோகிக்கப்பட்டன. விழாவில் தோழர் நல்லக்கண்ணு, பேராசிரியர் சரஸ்வதி ஆகியோர் கலந்துகொள்வதாக இருந்தது.    விழா ஏற்பாடுகள் அனைத்தும் முடிந்த நிலையில், அந்த அரங்கத்தின் பொறுப்பாளரான மாவட்ட நூலக அலுவலகத்தின் கண்காணிப்பாளர், விழா அமைப்பாளர்களுக்கு ஒரு அறிவிக்கை அளிக்கிறார்.  தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் நான்காம் தொகுதி தேர்வுக்கான பாடநூல்கள் தேவனேயப்பாவாணர் அரங்கத்தில் வழங்க இருப்பதால், ஏற்கனவே நிகழ்ச்சிக்காக கொடுத்த முன்பணத்தை திருப்பி அளிக்குமாறும், முன்பதிவு ரத்து செய்யப்படுகிறது என்றும் அறிவித்தனர்.

இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில், நூலகத் துறையின் உத்தரவை எதிர்த்து ஒரு அவசர வழக்கு தாக்கல் செய்யப்பட்டு நீதிபதி கே.சந்துருவின் முன்பு விசாரணைக்கு வந்தது.   வழக்கை விசாரித்த நீதிபதி, “நூலக அதிகாரிகள் நிகழ்ச்சிக்காக ஏற்கனவே பணத்தை வசூல் செய்து அனுமதியும் வழங்கியுள்ளார்கள். இதையடுத்து நிகழ்ச்சி அமைப்பாளர்கள் அழைப்பிதழ்களையும் அச்சடித்துள்ளார்கள்.    நிகழ்ச்சி நடக்கும் அன்று 3 மணிக்கு அனுமதியை ரத்து செய்தது தேவையற்றது” என்று தீர்ப்பளித்தார்.

நீதிபதிகளுக்கும், நீதிமன்றத்துக்கும் அரசு நிர்வாகம் எத்தகைய மரியாதையை வைத்திருக்கிறது என்பதற்கு அடுத்து என்ன நடந்தது என்பது ஒரு உதாரணம்.

வழக்கமாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழங்கப்படும் தீர்ப்புகள் இரண்டு நாட்கள் கழித்தே கிடைக்கும். சில சமயம் வாரக்கணக்கில் கூட ஆகலாம்.   அவசர நேர்வுகளில், அந்த வழக்கு நடக்கும்போதே, Issue Today – இன்றே வழங்க உத்தரவிடுங்கள் என்று வழக்கறிஞர்கள் நீதிபதியிடம் உத்தரவு கேட்பது வழக்கம்.   அப்படி இன்றே வழங்கவும் என்று உத்தரவிட்டாலும், உத்தரவு கையில் கிடைப்பதற்கு இரவு எட்டு மணி ஆகி விடும்.

இந்த நேர்விலும் அப்படியே நடந்துள்ளது.  நிகழ்ச்சி 6 மணிக்கு.   விழா அமைப்பாளர்கள் தீர்ப்பு நகலுக்காக நீதிமன்றத்தில் காத்திருக்கையில், நூலக அதிகாரிகள், நாங்கள் 6 மணி வரை காத்திருக்கிறோம்.  அதற்குள் தீர்ப்பு வரவில்லையென்றால் நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது என்று அரங்கத்தை பூட்டி விட்டு சென்று விட்டார்கள்.

வேறு வழியின்றி, அந்த நிகழ்ச்சி, நூலக வளாகத்தின் வாகன நிறுத்தும் இடத்தில் நடத்தப்பட்டிருக்கிறது.

தீர்ப்புகள் இரவு எட்டு மணிக்கு ஏன் தாமதம் ஆகிறது என்று தோன்றும்.   இதற்கு யாரையும் குறை சொல்ல முடியாது.  நீதிபதியின் தீர்ப்புகளை சுருக்கெழுத்தில் எழுதும் சுருக்கெழுத்தர்கள், அத்தீர்ப்புகளை தட்டச்சு செய்து, முதல் முறை நீதிபதியிடம் எடுத்துச் செல்வார்கள்.  அவர் அதில் திருத்தங்கள் செய்து, மீண்டும் நீதிபதியிடம் எடுத்து வருவார்.  மீண்டும் அதில் திருத்தங்கள் இல்லையென்றால் மட்டுமே அது அச்சடிக்கப்படும்.  தீர்ப்பினை தட்டச்சு செய்யும் நீதிமன்ற ஊழியர், அதை ஒரு கணினியில் ஏற்றி மற்றொரு பிரிவுக்கு மாற்றுவார்.  மற்றொரு பிரிவில் அதை அச்செடுத்து அந்தப் பிரிவு அதிகாரியிடம் கொடுப்பார்.  அந்த அதிகாரி அதை சரிபார்த்து தீர்ப்பு நகல் வழங்கும் பிரிவுக்கு அனுப்புவார்.  இத்தனை நடைமுறைகளுக்குப் பிறகு, தீர்ப்பு வழக்கறிஞர் கைக்கு வந்து சேர்வதாலேயே இத்தனை தாமதம்.  இதில் நீதிமன்ற ஊழியர்கள் காலம்தாழ்த்துகிறார்கள் என்று குறை சொல்ல முடியாது.    அவர்கள் பணியாற்றுவதை நேரில் பார்த்தீர்களேயானால், இப்படியும் பணியாற்றும் அரசு ஊழியர்கள் இருக்கிறார்களா என்று வியப்பு எழும்.   அவர்கள் தாமதப்படுத்த மாட்டார்கள்.

சரி.  நேற்றைய நக்கீரன் நிகழ்ச்சி குறித்த தீர்ப்பை அமல்படுத்துவதற்கு வேறு வழியே இல்லையா ?   இருக்கிறது.  நீதிபதி சந்துரு அவர்களுக்கு, இந்த சிகப்பு நாடா நடைமுறைகளும், அரசு இயந்திரத்தின் அயோக்கியத்தனங்களும் அத்துப்படி.    தீர்ப்பு வழங்கையிலேயே  அவர் அந்த நீதிமன்றத்தில் இருக்கும் அரசு வழக்கறிஞரைப் பார்த்து, இந்தத் தீர்ப்பின் விபரத்தை நூலகத்துறை இயக்குநருக்கு உடனடியாக தொலைபேசியில் தெரிவியுங்கள் என்று கூறியிருக்க வேண்டும்.   அவரிடம், நான் இத்தகவலை தெரிவிக்கிறேன் என்று நீதிமன்றத்தின் முன்பாக ஒரு உத்தரவாதத்தை பெற்று, அதை தீர்ப்பில் பதிவு செய்திருக்க வேண்டும்.   நீதிமன்ற ஊழியர்களிடம், இத்தீர்ப்பின் நகலை, நூலகத்துறை இயக்குநருக்கும், தலைமைச் செயலாளருக்கும் தொலைஅச்சு (பேக்ஸ்) மூலம் உடனே அனுப்புங்கள் என்று உத்தரவிட்டிருக்க வேண்டும்.    அதை நீதிபதி சந்துரு ஏன் செய்யத் தவறினார் என்பதுதான் புரியவில்லை.

நக்கீரன் நிர்வாகத்தினர், இத்தீர்ப்பினை செயல்படுத்தாமல் தவறிய நூலகத்துறை மீது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுப்பார்களா என்று தெரியவில்லை.  ஆனால், சிகப்பு நாடா நடைமுறை காரணமாக, இது போல பல்வேறு நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.

இந்த நிகழ்ச்சியை சிறப்பாக நடத்த முடியவில்லையே என்ற வருத்தம்,  திரு கோபால் அவர்களுக்கும், திரு காமராஜ் அவர்களுக்கும் நிச்சயம் இருக்கும்.   இந்த நேரத்தில் எழும் தவிர்க்க இயலாத ஒரு கேள்வி... ...  சின்னக் குத்தூசி நிகழ்ச்சியை சிறப்பாக நடத்த வேண்டும் என்று இவர்கள் நினைத்திருந்தால், இவர்களுக்கு நெருக்கமான  கருணாநிதியின் அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடத்தியிருக்கலாமே...  அல்லது வேறு எத்தனையோ தனியார் அரங்கங்கள் இருக்கின்றன.. அங்கு நடத்தியிருக்கலாமே... அரசு அரங்கத்தில் நடத்த முயற்சித்ததே ஒரு சர்ச்சையை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கமா என்ற சந்தேகமும் தவிர்க்க இயலாமல் எழுகிறது.  

இவர்கள் இருவரும், கடந்த திமுக ஆட்சியில் என்ன நடந்தது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

2009ம் ஆண்டு தொடக்கம் முதலே பத்திரிக்கைகளின் குரல்வளை அப்போதிருந்த உளவுத்துறை தலைவர் ஜாபர் சேட்டால் நெறிக்கப்பட்டது.  ஊடகத்தின் சுதந்திரத்தை குழிதோண்டிப் புதைத்தார் ஜாபர் சேட்.   ஜாபர் சேட்டின் ஆருயின் நண்பராக இன்னும் இருக்கும்  காமராஜ், ஒரு பத்திரிக்கையாளராக இருந்துகொண்டு, அதுவும் அரசின் ஒடுக்குமுறையிலேயே வளர்ந்த ஒரு பத்திரிக்கையைச் சேர்ந்தவராக இருந்து கொண்டு, இந்த ஜனநாயகப் படுகொலைக்கு  துணைபோனதும் இல்லாமல், ஆக்கமும் ஊக்கமும் அளித்து வந்தார். தமிழ் பத்திரிக்கை உலகில் மிகப்பெரிய ஜாம்பவான்களான விகடன், குமுதம் போன்றவர்களும் இந்த அடக்குமுறைக்குத் தப்பவில்லை.  இவர்களை விடப்  பெருமுதலாளிகளான ஆங்கில ஊடகங்களும் இந்த அடக்குமுறைக்கு பணிந்தே சென்றன.  பணிய மறுத்த ஊடகங்களின் செய்தியாளர்களும், முதலாளிகளும், பொய் வழக்குகளில் கைது செய்யப்பட்டனர்.

kamaraj_5

அரசை எதிர்த்து எந்தப் போராட்டங்கள் நடத்தினாலும் அதற்கு அனுமதி மறுக்கப்படும்.   தடையை மீறி நடைபெறும் போராட்டங்களில் கைது செய்யப்படுபவர்கள், மாலை விடுவிக்கப்படுவார்கள் என்ற மரபை மீறி, 15 நாள் சிறைக்கு அனுப்பப்பட்டார்கள்.  பல்வேறு வேலைகளில் ஈடுபடுபவர்கள் 15 நாள் சிறைக்குச் சென்றால் எப்படி வாழ்க்கையை ஓட்டுவது ? எத்தனைபேரால் இப்படி போராட்டங்களில் கலந்து கொள்ள  முடியும் ?

போராட்டங்களுக்குத்தான் இப்படியென்றால், அரங்கக் கூட்டங்களுக்கும் நக்கீரன் குழும நிகழ்ச்சிக்கு நடந்த கதிதான்.    அனுமதி வழங்கிவிட்டு, இறுதி நேரத்தில் அனுமதி மறுப்பார்கள்.  பணத்தை செலவு செய்து நிகழ்ச்சிக்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்த, அமைப்பாளர்கள் செய்வதறியாமல் திகைத்து நிற்பார்கள்.

தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பல்வேறு போராட்டங்களுக்கு இது போல இறுதி நேரத்தில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.   அனைவரும் பங்குகொள்ள ஏதுவாக இருக்கும் என்று பெரும்பாலும் சனி அல்லது ஞாயிற்றுக் கிழமைகளிலேயே ஆர்ப்பாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்படும்.  அப்படி ஏற்பாடு செய்யப்படும் ஆர்ப்பாட்டங்களுக்கு அனுமதி கேட்டு 10 நாட்களுக்கு முன்பே கடிதம் கொடுத்தாலும், அனுமதி மறுக்கும் கடிதம் எப்போது கொடுப்பார்கள் தெரியுமா ?  வெள்ளிக்கிழமை இரவு 8 மணிக்குத்தான் கொடுப்பார்கள்.  இந்த ஆர்ப்பாட்டத்திற்கு துண்டறிக்கைகள் தயார் செய்து, சுவரொட்டிகள் ஒட்டி, பேச்சாளர்களை அழைத்து எல்லா ஏற்பாடுகளும் முடிந்த நிலையில் இப்படிச் செய்வார்கள்.   வெள்ளிக்கிழமை இரவு அனுமதி மறுப்பு கடிதம் கொடுத்தால் எப்படி நீதிமன்றம் செல்ல முடியும் என்ற உள்நோக்கமே தாமதமாக கொடுப்பதற்கு காரணம்.

karuna_adakku_murai

ஒரு முறை ஒரு சுவையான நிகழ்ச்சி நடந்தது.   புதிய தலைமைச் செயலக கட்டிடத் திறப்பு விழா அன்று, சென்னை மெமோரியல் ஹாலில் செங்கல்பட்டு முகாம் அகதிகளுக்காக ஒரு ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.    அன்று நிச்சயம் அனுமதி மறுக்கப்படும் என்பது தெரியும்.  துண்டறிக்கைகள் போடவில்லை. சுவரொட்டிகளும் அடிக்கவில்லை.  முதல் நாள் இரவு அனுமதி மறுப்பு கடிதம் வழங்கப்பட்டது.    மறுநாள் காலை முதல், தோழர்.புகழேந்திக்கு உளவுத்துறையிலிருந்து தொடர்ந்து தொலைபேசி அழைப்பு.  “சார்… தடையை மீறி நடத்தப் போறீங்களா… சொல்லுங்க சார்” என்று.  புகழேந்தி, நான் எங்கள் அமைப்பை கலந்தாலோசித்து முடிவெடுக்க வேண்டும் என்று பதில் கூறி விட்டார்.  சவுக்கு மற்றும் புகழேந்தியின் தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்படுவது நன்கு தெரியும் என்பதால், இருவரும் பகல் 2 மணிக்கு தொலைபேசியில் பேசினோம்.  புகழேந்தி “தோழர் என்ன பண்ணலாம்.. நடத்தலாமா வேணாமா” என்று கேட்டதற்கு. “தோழர்.. ஆர்ப்பாட்டத்தை தடையை மீறி பண்ணா எப்படியும் கைது பண்ணுவாங்க.   தலைமைச் செயலகம் முன்னாடி போய் மறியல் பண்ணலாம்.  அப்போ கைது பண்ணட்டும். கொஞ்சம் பரபரப்பாகவாவது ஆகும்” என்றதும், புகழேந்தி “சரி மற்ற எல்லாருக்கும் தகவல் சொல்லுங்க.” என்று சொல்லி விட்டார்.

பகல் 3 மணிக்கு சுவையான மட்டன் பிரியாணியை வயிறு முழுக்க உண்டு விட்டு, 4 மணிக்கு இருவரும் செல்பேசியை அணைத்து விட்டு அலுவலகத்திலலேய உறங்கி விட்டோம்.   உறங்கிவிட்டு எழுந்து வீட்டுக்குச் சென்று விட்டோம்.    மறுநாள் காவல்துறையினர் சொன்ன தகவல், எப்படியும் மறியலில் ஈடுபடப்போகிறோம் என்று, புகழேந்தியை அடையாளம் தெரிந்த அத்தனை காவல்துறையினரையும், புதிய தலைமைச் செயலக கட்டிடத்தை சுற்றி சீருடை  இல்லாமல் நிறுத்தியிருக்கின்றனர்.  உயர்நீதிமன்றப் பணியில் இருப்பவர்களைக் கூட, அன்று பணிக்கு அழைத்து, புகழேந்தியையோ அவர் நண்பர்களையோ பார்த்தால், உடனே அடையாளம் கண்டு தகவல் சொல்ல வேண்டும் என்று உத்தரவாம்.

பல முறை ஆர்ப்பாட்டங்களுக்கு பணம் செலவு செய்து நடத்த முடியாமல் ஏமாந்ததால், அவர்களை பழி தீர்த்த ஒரு மகிழ்ச்சி ஏற்பட்டது.

2010 தொடக்கம் முதலே, ஊடகம் மீதும், ஊடக சுதந்திரம் மீதும் நெருக்கடிகள் கடுமையாக தொடர்ந்து அரசுக்கு எதிராக ஒரு வரிச் செய்தியைக் கூட வெளிடமுடியாது நிலை ஏற்பட்டிருந்த சூழல் அது.   இந்த நெருக்கடியின் வெளிப்பாட்டால்தான் சவுக்கு தளமே உருவானது.  அப்படிப்பட்ட சூழலில், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட ஊடகத்துறையினர் சேர்ந்து கருத்துரிமைக் கூட்டமைப்பு என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி, ஊடகத்தின் மீதான அடக்குமுறையைக் கண்டிக்கலாம் என்று முடிவெடுத்தபோது, ஒரு அரங்கக் கூட்டம் போடுவதற்கு அரங்கம் இல்லாமல் அலைய வேண்டிய ஒரு துர்பாக்கிய நிலை ஏற்பட்டது.   இறுதியாக மார்க்சிஸ்ட் கட்சியின் உதவியோடு, சென்னை கேரள சமாஜத்தில் தோழர் தமிழருவி மணியனை வைத்து ஒரு கூட்டம் சிறப்பாக நடத்தப்பட்டது.   அந்தக் கூட்டம் நடந்ததில் ஜாபர் சேட்டுக்கு அப்படி ஒரு கோபம்.

maniyan_photo

ஆனால்,   காமராஜ் என்ன செய்து கொண்டிருந்தார்  தெரியுமா ?  நாடே அதிர்ந்து போன 2ஜி ஊழலில் குற்றம் சாட்டப் பட்ட ஆ.ராசாவுக்கு எதிராக ஊடகங்கள் செய்தி வெளியிட்டதற்கு அவர் தலித் என்பதே காரணம் என்று ராசாவுக்கு ஆதரவாக, காகங்களை வைத்து கூட்டம் நடத்திக் கொண்டிருந்தார்.  (ஆகாரம் உண்ண எல்லோரும் ஒன்றாக அன்போடு ஓடி வாங்க) ஊடகங்கள் அத்தனையிலும் பார்ப்பனர்கள் நிறைந்திருப்பதால், ஒரு தலித் மத்திய அமைச்சராக இருக்கிறார் என்பதற்காக அவரை குற்றம் சொல்லுகிறார் என்று கூட்டங்கள் நடத்தியதோடு அல்லாமல், நக்கீரன் இதழிலும் தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்தார்.  ஒடுக்குமுறையிலும், அடக்குமுறையிலும் வளர்ந்த நக்கீரன் இதழின் நிர்வாகிகளான காமராஜோ, கோபாலோ, இந்த அடக்குமுறைகளை எதிர்த்து எழுதாததோடு மட்டுமல்லாமல், ஆதரித்தும் எழுதி வந்தனர்.

aram

IMG_9130

 

அன்று சவுக்கு, மற்றும் இதர ஜனநாயக சக்திகள் உண்ட அதே கசப்பு மருந்தை இன்று திருவாளர்கள் கோபாலும், காமராஜும் சுவை பார்க்கின்றனர்.   இந்த கசப்பின் சுவை என்ன என்பதை இப்போது உணர்ந்திருப்பார்கள்.

ஆனால், தொடர்ந்து மக்களின் அடிப்படை உரிமைகளுக்காகவும், கருத்துச் சுதந்திரத்துக்காகவுமே குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் சவுக்கு உள்ளிட்ட ஜனநாயக சக்திகள், அடக்குமுறையில் அதிமுக அடக்குமுறை, திமுக அடக்குமுறை என்று வேறுபாடு பார்ப்பதில்லை.  அடக்குமுறை எப்போதுமே அடக்குமுறைதான். அது திமுகவாக இருந்தாலும் சரி. அதிமுகவாக இருந்தாலும் சரி.  அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விட்டால், அதைச் சாடுவதோடு மட்டுமல்லாமல், அதை எதிர்த்துப் போராடவும் தயங்காத சக்திகளே மக்களை நேசிக்கும் உண்மையான சக்திகள்.  இந்தச் சக்திகள், பாகுபாடு இல்லாமல் அடக்குமுறைகளை எதிர்ப்பதற்கு ஒரே காரணம், ஒரு ஆதரவையோ, எதிர்ப்பையோ, சாதிப் பாசத்தினாலோ, 2ஜி ஊழலில் கிடைத்த பங்குக்காகவோ வெளிப்படுத்துவதில்லை என்ற ஒரே காரணம்தான்.

சமச்சீர் பாடநூலில் கருணாநிதியின் வரிகளைக் கிழிப்பது, கைது செய்யப்பட்டவர்களை சிறை மாற்றம் செய்து அலைக்கழிப்பது, கருத்துரிமையை தடை செய்வது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபடும் ஜெயலலிதா, வரலாற்றைப் படிக்க வேண்டும்.  அதிகார மமதையோடு, ஆணவமாக, யாரும் அசைக்க முடியாத இடத்தில் இருந்த பலரும், மண்ணைக் கவ்வியிருக்கிறார்கள்.   உலகின் மிக மிக வலுவான ராணுவத்தை கட்டி, உலகையே ஆள நினைத்த ஹிட்லருக்கு நேர்ந்த கதியை வரலாறு பாடமாக்கி  வைத்திருக்கிறது.

ஒரு சட்டமன்றத் தேர்தலில் பிரம்மாண்டமான வெற்றி பெற்றதால் ஏற்பட்ட அகந்தையில், தனக்கு எதிரான கார்டூன் வெளியிட்டவரை கைது செய்தார் மம்தா பானர்ஜி.  20 எம்.பிக்களை வைத்துக் கொண்டு, இந்தியாவின் எல்லா முடிவுகளையும் நான்தான் எடுப்பேன் என்று அகம்பாவமாக அலைந்த மம்தா பானர்ஜி, இன்று எப்படித் தனிமைப் படுத்தப்பட்டுள்ளார் என்பதைப் பாருங்கள்.

மக்களுக்கு நன்மை செய்வதில் உங்கள் கவனத்தை செலுத்துங்கள்.   இது போல கூட்டங்களைத் தடை செய்வது, கருத்துரிமையை முடக்குவது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள், வரலாற்றில் பல முறை நிகழ்ந்துள்ள அதே நிலைக்கத் தள்ளப்படுவார்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.

ஒஓதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை

ஆஅதும் என்னு மவர்.

 

மேன்மேலும் உயர்ந்திட வேண்டுமென விரும்புகின்றவர்கள், தம்முடைய செயல்களால் தமது புகழ் கெடாமல் கவனமாக இருந்திட வேண்டும்.

 

Comments  

 
+5 #23 Bharath Arunachalam 2012-06-21 04:10
Quoting Puthiyavanraj:
Obviously B. Arunachalam has stooped to the level of personal attack perhaps as he felt cornered and desperate to downplay some one’s attempt to glorify barbaric superstitious act of Sati. His comments about a politician’s personal life is of very poor taste. It is none of any one’s business to talk about other man’s wife. Savukku claims to publish comments after editing and how it allows such personal attacks. Our law is also clear that only the legal wife can complain against bigamy and I hope, just as a joke, the reader does not qualify to complain.


Hello Puthiyavanraj,

I would like to remind you that it was you who initiated this discussion by unnecessarily bringing in the statement Jayalalithaa had allegedly made some 25 years ago.

I have every right to talk about Karunanidhi's personal life as long as he is in public life. I expect some kind of decency from a man who calls himself as the leader of Tamil race. The least I expect is that he doesn't set a bad example by parading his wives in public.
The number of wives a man in public life can have is max (0,1). However Karunanidhi behaves as if he can have max (2, infinity).
Quote
 
 
+7 #22 nallavan 2012-06-19 10:29
thumps up kku un thalivanmathri pitcahi edu.... ayyo valai mattai tamilan enru oppari vai... unakku polapu adhudhana :lol: :lol: Quoting Puthiyavanraj:
I have condemned the idiotic attempt of someone who tried to revive and glorify the barbaric superstitious practice of Sati . [During 1987 when Rajiv Gandhi was PM, glorifying or justifying Sati has been made illegal and punishable offence]. Still I have got 2 thumb-downs, it is a pity even at this modern Age, Savukku has some readers to support such barbaric superstition.?
Quote
 
 
+3 #21 Bharath Arunachalam 2012-06-19 07:01
Quoting Puthiyavanraj:
I have condemned the idiotic attempt of someone who tried to revive and glorify the barbaric superstitious practice of Sati . [During 1987 when Rajiv Gandhi was PM, glorifying or justifying Sati has been made illegal and punishable offence]. Still I have got 2 thumb-downs, it is a pity even at this modern Age, Savukku has some readers to support such barbaric superstition.?


You need to get your facts correct. The act came in to effect only in 1988. When Jayalalithaa allegedly made the statement in 1987 it was not illegal.

How would you call Karunanidhi's recent threat that he would self immolate if the Anna Centenary Library was converted to a Children's hospital. Was it not barbaric?
Quote
 
 
-4 #20 Puthiyavanraj 2012-06-18 23:13
Obviously B. Arunachalam has stooped to the level of personal attack perhaps as he felt cornered and desperate to downplay some one’s attempt to glorify barbaric superstitious act of Sati. His comments about a politician’s personal life is of very poor taste. It is none of any one’s business to talk about other man’s wife. Savukku claims to publish comments after editing and how it allows such personal attacks. Our law is also clear that only the legal wife can complain against bigamy and I hope, just as a joke, the reader does not qualify to complain.
Quote
 
 
-5 #19 Puthiyavanraj 2012-06-18 14:30
I have condemned the idiotic attempt of someone who tried to revive and glorify the barbaric superstitious practice of Sati . [During 1987 when Rajiv Gandhi was PM, glorifying or justifying Sati has been made illegal and punishable offence]. Still I have got 2 thumb-downs, it is a pity even at this modern Age, Savukku has some readers to support such barbaric superstition.?
Quote
 
 
-3 #18 Nellai Advocate 2012-06-18 11:48
இந்தக் கட்டுரையை எழுதியது சவுக்குதான். மம்தா பானர்ஜி மற்றும் ஜெயலலிதா அகம்பாவம் பிடித்தவர்களே.. இதில் மாற்றுக் கருத்தில்லை. கருணாநிதியின் கவிதை வரிகள் இருப்பதற்காக, பாடப்புத்தகங்கள ின் பக்கங்களை கிழிக்கச் சொன்னதற்குப் பெயர் துணிச்சலல்ல.. அகந்தை. மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் மட்டுமே நல்ல கல்வி என்று சமச்சீர் கல்வித்திட்டத்த ை குப்பையில் போட்டதற்கப் பெயர் துணிச்சல் அல்ல. அகந்தை.
அண்ணா நூலகத்தை மருத்துவமனையாக மாற்ற உத்தரவிட்டதற்கு ப் பெயர் துணிச்சலல்ல.. அகந்தை
மக்கள் நலப்பணியாளர்களை பணிநீக்கம் செய்ததற்குப் பெயர் துணிச்சலல்ல. அகந்தை.
கூட்டணிக் கட்சிகளின் பலத்தில் ஜெயித்துவிட்டு, நாங்கள் தனியே ஜெயித்தோம் என்று சொல்வதற்குப் பெயர் துணிச்சலல்ல. அகந்தை.
ஒரே ஒரு எதிர்க்கட்சிப் போட்டியிடும் புதுக்கோட்டையில ், அத்தனை எதிர்க்கட்சிகளு ம் போட்டியிடாத நிலையில், ஒரே ஒரு கட்சி போட்டியிடும் சூழலில், அத்தனை அமைச்சர்களையும் அங்கே கூடாரமிட வைத்து, வாக்குக்கு பணம் வழங்கியதற்குப் பெயர் துணிச்சலல்ல. அச்சம்.
பெங்களுரு வழக்கை சந்திக்காமல் இழுத்தடிப்பதற்க ுப் பெயர் துணிச்சலல்ல. அச்சம்.
கார்டூன் போட்ட ஒரு பேராசிரியரை போலீசை வைத்துக் கைது செய்ய வைத்த மம்தா பானர்ஜியிடம் இருப்பது துணிச்சலல்ல அகந்தை
பாலியல் வன்புணர்சிக்கு ஆளான பெண் புகார் கொடுத்தால், குற்றமே நடக்கவில்லை, இது சிபிஎம்மின் சதி என்று சொல்வது துணிச்சலில்லை. அகந்தை.
நேரடி நிகழ்ச்சியில், கேள்வி கேட்பவர்களை மாவோயிஸ்டுகள் என்று குற்றம் சாட்டி விட்டு எழுந்து ஓடுவது துணிச்சலல்ல. அகந்தை மற்றும் இயலாமை.
ஆங்கிலம் படிப்பவர்களெல்ல ாம் கம்யூனிஸ்டுகள் என்று ஆங்கில நாளிதழ்களை நூலகங்களில் தடை செய்ததற்குப் பெயர் துணிச்சலல்ல. அகந்தை மற்றும் அறியாமை.
fantastic...we salute
Quote
 
 
-5 #17 Nellai Advocate 2012-06-18 11:44
Is mr Sivakumar lives in this country...especially in this state?
what he has written is a big ...RUBBISH
Quote
 
 
+5 #16 Bharath Arunachalam 2012-06-18 11:33
Quoting Puthiyavanraj:
Bhrath Arunachalam asked : “Why did Karunanidhi want the children of Tamilnadu to read his poems? Was it not Agambaavam?”
Any sensible administrator would have declared that “unwanted” portion as deleted portion and continued the syllabus. Not doing such an arrogant and stupid act of revising the entire syllabus, printing books for Rs. 200 crores and stopping the education of millions of children going to court, spoiling the education of millions of children for 2 months getting hard slaps from the High Court and not satisfied with that going to Supreme Court to receive hard kicks etc. etc…. Should the children read the brave story of a woman who wanted to commit Sati when another woman’s husband (MGR) died? Reviving and glorifying the barbaric practice of Sati?

Jayalalithaa, like Karunanidhi, did not want the chidren of TN to read her story. Having said that Jayalalithaa's personal story is much more better than that of Karunanidhi. Even at 89 he maintains two wives. It is disgusting to see him walking around with two wives. One of them makes me vomit.
Quote
 
 
-9 #15 Puthiyavanraj 2012-06-17 17:25
Bhrath Arunachalam asked : “Why did Karunanidhi want the children of Tamilnadu to read his poems? Was it not Agambaavam?”
Any sensible administrator would have declared that “unwanted” portion as deleted portion and continued the syllabus. Not doing such an arrogant and stupid act of revising the entire syllabus, printing books for Rs. 200 crores and stopping the education of millions of children going to court, spoiling the education of millions of children for 2 months getting hard slaps from the High Court and not satisfied with that going to Supreme Court to receive hard kicks etc. etc…. Should the children read the brave story of a woman who wanted to commit Sati when another woman’s husband (MGR) died? Reviving and glorifying the barbaric practice of Sati?
Quote
 
 
0 #14 moshi17 2012-06-17 11:27
Mr Sivakumar, We all know that Savukku has been writing and acting very aggresively against the then DMK Government. Now JJ is ruling, and so Savukku is criticizing the wrong doings of this government. Any men who cares for a lawful governance will understand what JJ is doing. Your comment is written without any understanding of what is happening with the Governance of this State. Hope you understand.
Quote
 
 
+4 #13 மனோன்மணி 2012-06-17 10:31
பேராசிரியர் சரஸ்வதி (பெரியார் திராவிட இயக்க தலைவர் திரு.ராஜேந்திரன் அவர்களின் மனைவி) என்னை நன்கு அறிந்தவர்(1980 களில்) அவர் மூலமாகத்தான் அப்போது ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரிக்கு எதிரில் அமைந்த, யாழ்ப்பாண தமிழாராய்ச்சி மாநாட்டில் கலந்துக்கொண்ட பேராசிரியர் இளந்திரையன், சாலினி இளந்திரையன் ஆகியோரை சந்தித்திருக்கி றேன்.

இவர் தற்போது "நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின்" இந்திய உறுப்பினராக இருப்பது பலவித உண்மைகளை புலப்படுத்துகிற து !.
Quote
 
 
+6 #12 jagankovai 2012-06-17 10:06
சவுக்கு, உஙக நடுனிலையான பார்வைக்கு,பாரா ட்டுக்கள்
Quote
 
 
+9 #11 Bharath Arunachalam 2012-06-17 02:32
Why did Karunanidhi want the children of Tamilnadu to read his poems? Was it not Agambaavam?

Why did Karunanidhi choose to build a library in the same place that had been selected by Jayalalithaa for Secretariat? Was it not Agambaavam?

Why did Karunanidhi hire his partymen as Makkal Nala Paniyalargal and paid them using taxpayers' money? Was it not Agambaavam?

Why did Karunanidhi not give Cabinet berths to Congress although he had been running a minority Government with congress's support? Was it not Agambaavam?

It was DMK that started the Thirumangalam formula? People now expect money if there is a by-election. There is no point in blaming Jayalalithaa for this.

Do you expect that Jayalalithaa should plead guilty in the DA case and go to jail without exploring all the legal avenues that are available to her? It is funny.
Why did Karunanidhi fall at the feet of Indira Gandhi when allegations on corruption had been proved against him by the Sarkaria commission? Was Karunanidhi courageous?
Write about Karunanidhi's Agambaavam and wuss-ness for a change.
Quote
 
 
+7 #10 ஷாலி 2012-06-16 21:32
அரசியல் அதிகாரம் என்பது மயக்கம் தரும் போதை போன்றது. என்றும் நிரந்தரமல்ல.

.மாற்றுக்கருத்து க்களை ஒடுக்க நினைப்பது மூடத்தனம்
.இன்றைய ஜெய ஜெய லலிதா ஒருநாள் சவ லலிதாவாக மாறித்தான் ஆகவேண்டும்.

“இன்றிருப்பார் நாளை இல்லை” என்ற பெருமையை உடையது இவ்வுலகு என்பார் வள்ளுவர்.
.
அந்நாள் வரும்வரை மக்கள் பணியில் கவனம் செலுத்தி மாறாப்புகழடைய முயற்சிக்கவேண்ட ும்
Quote
 
 
+21 #9 சவுக்கு 2012-06-16 21:11
அன்பார்ந்த சிவக்குமார், இந்தக் கட்டுரையை எழுதியது சவுக்குதான். மம்தா பானர்ஜி மற்றும் ஜெயலலிதா அகம்பாவம் பிடித்தவர்களே.. இதில் மாற்றுக் கருத்தில்லை. கருணாநிதியின் கவிதை வரிகள் இருப்பதற்காக, பாடப்புத்தகங்கள ின் பக்கங்களை கிழிக்கச் சொன்னதற்குப் பெயர் துணிச்சலல்ல.. அகந்தை. மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் மட்டுமே நல்ல கல்வி என்று சமச்சீர் கல்வித்திட்டத்த ை குப்பையில் போட்டதற்கப் பெயர் துணிச்சல் அல்ல. அகந்தை.
அண்ணா நூலகத்தை மருத்துவமனையாக மாற்ற உத்தரவிட்டதற்கு ப் பெயர் துணிச்சலல்ல.. அகந்தை
மக்கள் நலப்பணியாளர்களை பணிநீக்கம் செய்ததற்குப் பெயர் துணிச்சலல்ல. அகந்தை.
கூட்டணிக் கட்சிகளின் பலத்தில் ஜெயித்துவிட்டு, நாங்கள் தனியே ஜெயித்தோம் என்று சொல்வதற்குப் பெயர் துணிச்சலல்ல. அகந்தை.
ஒரே ஒரு எதிர்க்கட்சிப் போட்டியிடும் புதுக்கோட்டையில ், அத்தனை எதிர்க்கட்சிகளு ம் போட்டியிடாத நிலையில், ஒரே ஒரு கட்சி போட்டியிடும் சூழலில், அத்தனை அமைச்சர்களையும் அங்கே கூடாரமிட வைத்து, வாக்குக்கு பணம் வழங்கியதற்குப் பெயர் துணிச்சலல்ல. அச்சம்.
பெங்களுரு வழக்கை சந்திக்காமல் இழுத்தடிப்பதற்க ுப் பெயர் துணிச்சலல்ல. அச்சம்.
கார்டூன் போட்ட ஒரு பேராசிரியரை போலீசை வைத்துக் கைது செய்ய வைத்த மம்தா பானர்ஜியிடம் இருப்பது துணிச்சலல்ல அகந்தை
பாலியல் வன்புணர்சிக்கு ஆளான பெண் புகார் கொடுத்தால், குற்றமே நடக்கவில்லை, இது சிபிஎம்மின் சதி என்று சொல்வது துணிச்சலில்லை. அகந்தை.
நேரடி நிகழ்ச்சியில், கேள்வி கேட்பவர்களை மாவோயிஸ்டுகள் என்று குற்றம் சாட்டி விட்டு எழுந்து ஓடுவது துணிச்சலல்ல. அகந்தை மற்றும் இயலாமை.
ஆங்கிலம் படிப்பவர்களெல்ல ாம் கம்யூனிஸ்டுகள் என்று ஆங்கில நாளிதழ்களை நூலகங்களில் தடை செய்ததற்குப் பெயர் துணிச்சலல்ல. அகந்தை மற்றும் அறியாமை.
Quote
 
 
+6 #8 chinnakundoosi 2012-06-16 20:54
நல்ல பதிவு..வரலாறு இன்று நேற்றல்ல..பல நூறு வருடங்களாக தொடர்ந்து பாடம் நடத்திக்கொண்டுத ான் இருக்கிறது...ஆனாலும் 'இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னர்களும்' தோன்றி கொண்டேதான் இருக்கிறார்கள்..கடைசியில் மண்ணை கவ்விக்கொண்டுதா ன் இருக்கிறார்கள்..
Quote
 
 
+2 #7 Ravi 2012-06-16 18:59
இன்னா செய்தாரை ஒருத்தர் அவர் நாண
நன்நயம் செய்து விடல். !!

இந்த குறளுக்கு ஒப்ப இப்போது இரண்டாவது முறையாக நக்கீரனுக்கு நடந்த அடக்குமுறைக்கு எதிராக நீங்கள் எழுதியிருக்கீறீ ர்கள்.
இப்பவாவது உங்களை அலைபேசியில் தாறுமாறாக திட்டிய நக்கீரனின் தலைமை நிருபர் தொடர்பு கொண்டு மன்னிப்பு கேட்டாரா.? செய்திருந்தால் அல்லது கோபால் அவரை செய்ய வைத்திருந்தால் அவர்கள் மனிதர்கள். இல்லையேல் மாக்கள்.
Quote
 
 
+19 #6 விநோ 2012-06-16 15:47
நானெல்லாம் நக்கீரன் நக்கீரனா இருக்கும் போது வாங்கினதோட சரி...எப்ப அது முரசொலியா மாறுச்சோ அப்பவே அத வாங்குறத விட்டாச்சு......நக்கீரன் காமடி பீஸ் ஆகி ரொம்பநாள் ஆச்சு,,,,கிசு கிசுக்குக்காக நாக்க தொங்கபோட்டுகிட் டு அலயுர சில சினிமாகாரனுக மாதிரி எவன்டா நம்மல அடிப்பான்னு அலையுரானுக........பிக்காளிபயலுக......
Quote
 
 
+3 #5 SARUBALA 2012-06-16 15:03
முன்னவரும்,இன்ன வரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்........இவர்கள் திருந்தப் போவது இல்லை..........
Quote
 
 
+8 #4 RAVANAN 2012-06-16 14:12
Gopal is a selfish. He like's puplicity He is black mailer. Pls.black'out his news.....and all.
Quote
 
 
+7 #3 நோக்கர் 2012-06-16 12:51
இந்த நேரத்தில் பழையதையெல்லாம், இவர்களது இரட்டைவேடத்தன்ம ையையெல்லாம் கிளறியிருக்கவேண ்டுமா என்ன? எனக்கு உடன்பாடில்லை சவுக்கு. அரசு அற்பத்தனமாக நடந்துகொள்கிறது , அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறத ு என்பதோடு இங்கே நிறுத்திக்கொள்ள லாமே. திமுக அரசும் இப்படித்தான் என்று கூடச் சொல்லலாம், ஆனால் இன்று பாதிக்கப்பட்டிர ுப்பவர்கள் யோக்கியதை என்ன எனக் கேட்பது அரசின் மீதான கண்டனத்தை நீர்த்துப்போகவல ்லவா செய்கிறது.
Quote
 
 
-3 #2 Sivakumar.M 2012-06-16 12:40
"அகம்பாவமாக அலைந்த மம்தா இன்று எப்படி தனிமை படுத்தபட்டுள்ளா ர்கள் என்று பாருங்கள்". "மக்களை நேசிக்கும் உண்மையான சக்திகள் சவுக்கு". இந்த ரெண்டும் சவுக்கின் கட்டுரையில் இடம் பெற்ற வாக்கியங்கள். எவ்வளவு முரண்பாடு. "வெளிநாட்டு வங்கியில் உள்ளத்தெல்லாம் கருப்பு பணம் அல்ல". உணவு பொருளை சேமித்து வைக்க "சாக்கு பை" இல்லை என்று சாக்கு கூறியவர். இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு. உள்நாட்டு உற்பத்தி குறைவு என்று நாடே நாசமாக போக காரணமாக இருந்த ஒருவரை ஜனாதிபதியாக்க வேண்டாம், கலாமை ஜனாதிபதியாக்குங ்கள் என்று கூறிய ஊழல் கறை படியாத ஒருவர் சவுக்குக்கு அகம் பாவம் பிடித்தவர். ஆமாம் இந்த கட்டுரை எழுதிய நபர் எந்த கூமுட்டை என்று கூறினால் நன்றாக இருக்கும். இந்த கட்டுரை எழுதியவன் நிச்சயம் சோனியா, கருணா வீட்டில் மலத்தை(2 ஜி) அள்ளியவனதான் இருப்பான். "பிரணாப்" ஏன் ஜானாதிபதி வேட்பாளர் தெரியுமா? இன்று பொதுத்தேர்தல் நடந்தாலும் காங்கிரஸ் மண்ணை கவ்வும். இன்னும் ஒரு வருடம் கழித்து நடந்தாலும் அடிமண்ணை கவ்வும். அடுத்த ஆட்சி காங்கிரஸ் அல்லாத ஆட்சி என்பது உறுதி. கருப்பு பணம், ஊழல்கள் என்று சிக்கி தவிக்கும் காங்கிரஸ் அடுத்து வரும் ஆட்சியின் செயல் வேகத்தை குறைக்க, முட்டு கட்டை போட பிரணாப் ஜனாதிபதி வேட்பாளர். அதே சமயம் ஆட்சி மாறி பிஜேபி அறுதி பெருபான்மை பெற்றால் ஜனாதிபதிய கூட தூக்கமுடியும். ஆம் இரு அவைகளையும் கூட்டி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பரிந்துரை செய்தால் ஜானதிபதி காலி. அகம்பாவம் யாருக்கு? பலாயிரம் மக்களை கொன்று குவித்த ஊழல் சாக்கடைகள் சோனியா மற்றும் கருணா சவுக்குக்கு குடும்ப குத்து விளக்குகள். ஊழல் கறைபடியாத மம்தா உனக்கு அகம்பாவம் பிடித்தவரா?. இதே போலதான் காரணமே இல்லாமல் ஜெயாவை அடிக்கடி அகம் பாவம் பிடித்தவர், ஆணவம் பிடித்தவர் என்று கூறுகிறாய். இன்றைய அரசியல் சூழ்நிலையில் ஜெயா அப்படி இருந்தால் மட்டுமே காலம் தள்ள முடியும். எங்களுக்கு அது துணிச்சலாக தெரிகிறது. சவுக்குக்கு அது அகம்பாவமாக தெரிகிறது. அவ்வளவுதான்.
Quote
 
 
+17 #1 ஆதி வேல் 2012-06-16 11:35
ஒரு சார்பு உடகவாதிகளுக்கு நம் ஆதரவு வேண்டாம், இவர்கள் ஒதுக்கபட வேன்டியவர்கள்.
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 147 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday11793
mod_vvisit_counterYesterday18770
mod_vvisit_counterThis week55793
mod_vvisit_counterLast week95167
mod_vvisit_counterThis month278053
mod_vvisit_counterLast month382199
mod_vvisit_counterAll days13194420