முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்தொடர்புக்கு
+++
துக்கையாண்டி மனைவி சுப்புலட்சுமி சிறையில் அடைக்கப்பட்டார். அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 14
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
வெள்ளிக்கிழமை, 26 அக்டோபர் 2012 19:50

DSC_6793 

துக்கையாண்டியின் மனைவி சுப்புலட்சுமி சிறையில் அடைக்கப்பட்டார்.  வட இந்தியாவைச் சேர்ந்த இருவருக்கு சொந்தமான பத்து கிரவுண்ட் நிலத்தை, அவர்கள் பெயரில் மோசடியாக ஆவணம் தயார் செய்து நில அபகரிப்பு செய்ததாக புகாரில் சிக்கிய முன்னாள் கூடுதல் டிஜிபி துக்கையாண்டியின் மனைவி இன்று நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

முன்னதாக துக்கையாண்டி, அவர் மனைவி மற்றும் மகள் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவில் தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம், துக்கையாண்டியின் மகள் மற்றும் துக்கையாண்டிக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்ட அதே நேரம், துக்கையாண்டி மனைவியின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது. இதையடுத்து தலைமறைவாக இருந்த துக்கையாண்டியின் மனைவி சுப்புலட்சுமியை நேற்று மதியம் ஒரு மணிக்கு பெங்களுரில் கைது செய்த போலீசார், இன்று காலை தாம்பரம் நீதிமன்ற நடுவர் முன்பு ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய துக்கையாண்டியின் மனைவி சுப்புலட்சுமி, தன் கணவர் ஒரு சிங்கம் போல இருந்தார்.  ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் தீவிரமாக நடவடிக்கை எடுத்ததன் காரணமாக என் மீது இந்தப் பொய் வழக்கு போடப்பட்டுள்ளது.   என் கணவரை ஒன்றும் செய்ய முடியாது என்பதால், என்னை கைது செய்துள்ளனர் என்று கூறினார்.

ஜாபர் சேட்டை விட, சவுக்குக்கு அதிக துன்பத்தை ஏற்படுத்தியவர் துக்கையாண்டி.   சிபி.சிஐடி காவல்துறையால் இரவு முழுவதும் சவுக்கை கொடுமையான சித்திரவதைக்கு ஆளாக்கியபோது சிபி.சிஐடி ஐஜியாக இருந்தவர் துக்கையாண்டி.  துக்கையாண்டி அப்போது லஞ்ச ஒழிப்புத் துறையின் ஐஜியாகவும் இருந்தார்.  துக்கையாண்டி நினைத்திருந்தால், அந்த சித்திரவதையை தடுத்து நிறுத்தியிருக்க நிச்சயமாக முடியும்.   சென்னை உயர்நீதிமன்றம் துறைரீதியான நடவடிக்கை எடுக்கத் தடை விதித்திருந்த போதும், அதை மீறி அரசுப் பணியிலிருந்து டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டார் துக்கையாண்டி.   இதையெல்லாம் விட, மிகப்பெரிய கொடுமையாக, தற்காலிக பணி நீக்கத்திலிருப்பவர்களுக்கு அரசு வழங்கும் பாதி சம்பளத்தை, ஐந்து மாதங்களுக்கு நிறுத்தி வைத்தார் துக்கையாண்டி.  தற்காலிக பணி நீக்கத்திலிருப்பவர்களுக்கு வழங்கப்படும் பாதி ஊதியம், அரசு வழங்கும் உரிமை இல்லையா.. ?  வேறு எந்த வருமானமும் இல்லாத ஒருவர், அந்தப் பாதி சம்பளமும் வராவிட்டால் என்ன செய்வார் ? அந்தக் கோப்பு துக்கையாண்டியின் மேசையிலேயே ஐந்து மாதங்கள் கட்டி வைக்கப்பட்டது.   ஊதியம் வழங்காத விஷயம் உயர்நிதின்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட பிறகுதான், ஊதியம் வழங்கப்பட்டது.

இவ்வளவு செய்தபோதும், துக்கையாண்டியின் இன்றைய நிலையை நினைத்தால் மிகவும் வருத்தமாக இருக்கிறது.  அவர் மனைவி இன்று பேசியதிலிருந்து, இந்த இருவரும் எப்படி நெருக்கமான கணவன் மனைவியாக வாழ்ந்திருக்கின்றனர் என்பதை உணர முடிகிறது.  24 ஆயிரம் சதுர அடிக்கு பங்களாவும், 3 நீச்சல் குளங்களும் உங்களுக்கு இன்று என்ன சந்தோஷத்தை கொடுத்து விடப் போகிறது துக்கையாண்டி… ?  படிச்சவன் சூதும் வாதும் பண்ணா, போவான் போவான் அய்யோன்னு போவான் என்ற பாரதியின் வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன.

நீங்கள் என்ன வேதனையில் இருப்பீர்கள் என்பதை என்னால் உணர முடிகிறது.  உங்கள் நிலையைப் போன்ற வேதனையான நிலை மிகவும் மோசமான ஒரு நிலை.  எனக்கு கடவுள் நம்பிக்கை இருந்தால் நிச்சயம் உங்கள் துன்பம் நீங்க வேண்டுமென்று வேண்டுவேன்.  கடவுள் நம்பிக்கை இல்லாததால், நீங்கள் நம்பிக்கையோடு இருங்கள் என்று மட்டுமே சொல்ல முடிகிறது.

 

Comments  

 
+1 #11 Robinhood 2012-11-06 14:44
சவுக்கு, வுங்களுக்கு துக்கயாண்டி மீது இருக்கும் கோபம் , அவர் வுங்கள் விஷயத்தில் நடந்த முறை. ஆனால் நடுநிலைமையுடன் சொல்லுங்கள், அவர் மனைவியை ஏதோ தீவிரவாதியை கைது செய்ததைப்போல் போலீஸ் மாறுவேடத்தில் சென்று தனிப்படை சென்றதும் அந்த செய்தியை பத்திரிகைகளில் வெளியிடுவதும் சரியா? இது போன்ற வழக்குகள் இன்னும் எவ்வளவு வுள்ளன? நீங்கள் ஏற்கனவே குறிப்பிட்டுள்ள துபோல் சின்மயி புகாரில் எடுக்கப்பட்ட நடவடிக்கைபோல் அதே போன்ற மற்ற வழக்குகளிலும் எடுக்கப்படுமா? நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? மீசைக்கார அங்கிள் கூட இவர்களை காப்பாற்ற முடியாது.
Quote
 
 
+3 #10 PPM 2012-10-29 21:00
24 ஆயிரம் சதுர அடி பங்களா... பராமரிக்கிறதே சிரமம் ஆச்சே...
Quote
 
 
+5 #9 AAR 2012-10-27 21:40
பணம், பதவி, இளமை, உடம்பு திமிர் -- இவை எல்லாம் நிலைக்காது.
காலம் மாறும். இது அனைவருக்கும் ஒரு பாடம்.
Quote
 
 
-4 #8 மனோன்மணி 2012-10-27 20:11
சவுக்கு, நீ தவறு செய்கிறாய் என்று உன்னை குற்றம் சாட்டுகிறேன்!. நீ முதலில் உன் தலைப்பிலிருக்கு ம் வே.பிரபாகரன் படத்தை தூக்கு. நான் பிரபாகரனுடன் ஒரே அறையில் சென்னை பெசண்ட் நகரில் ஒன்றாய் பல இரவுகள் படுத்துறங்கியவன ்(டிசம்பர் 1986 -
டிசம்பர் 1987).
துக்கையாண்டியை தூக்கில் போட்டாலும் தகும், அது வேறு விஷயம். நீ ஒரு பொருப்பான அரசாங்க துறையில் உன் தகப்பனார் இறந்தததால் 16 வயதில் நியமிக்கப்பட்டவ ன். இதே நிலையை நான் 1985 கருணானிதியிடம் கெஞ்சிக் கேட்டும், பல தியாகங்கள் செய்திருந்தும் பெற முடியவில்லை.
கிடைத்ததை விட்டு விட்டு முட்டாள்தனமாக அலையாதே!. நீ செய்தது நியாயம். ஆனால், நியாயத்தின்படி தற்போது காலச்சக்கரம் சுழலவில்லை. நீ செய்தவறைதான் நான் 1986 செய்தேன். உன்னை உசுப்பேத்தி விடுபவர்கள் தற்போது இலாபம் அடைகிறார்கள் என்பதை மட்டும் இப்போது கூறிக்க்கொள்ள விரும்புகிறேன்! . ... தொடரும்....
Quote
 
 
0 #7 ஷாலி 2012-10-27 20:06
மனித வாழ்க்கையில் வரும் ஏற்ற இறக்கங்களை இதுபோன்ற தருணத்தில் பார்க்கும்பொழுத ு மனசுக்கு கஷ்டமாக உள்ளது.

சவுக்கு எழுதிய வரிகளை படித்தபொழுது இன்னும் அதிக கஷ்டமாக இருந்தது.

“ எனக்கு கடவுள் நம்பிக்கை இருந்தால் நிச்சயம் உங்கள் துன்பம் நீங்க வேண்டுமென்று வேண்டுவேன். கடவுள் நம்பிக்கை இல்லாததால்......”

சவுக்கு, காலம் முழுவதும் கம்யூனிஸ்ட் கம்பெனியில் படித்து வளர்ந்ததால் இந்த வெற்றிடம் என நினைக்கிறேன். ஒன்றும் மோசம் போய்விடவில்லை.கடவுளை அறிய, அதுவும் அறிவுப்பூர்வமாக அறிய ஏராளமான கதவுகள் திறந்தே உள்ளன.

“கேளுங்கள் தரப்படும்! தட்டுங்கள் திறக்கப்படும்! தேடுங்கள் கிடைக்கும் என்றார்.....”

“அடையா கதவு அவன் வீடு! அன்பே என்பது அவன் ஏடு!
அழைக்குமுன்னே வருவான்...கேட்குமுன்னே தருவான்!...”

“தேடும் நேயர் நெஞ்சங்களில் குடியிருப்பவன்! -தேடாத
மனிதருக்கும் உணவளிப்பவன்! “

ஒன்றே குலம்! ஒருவனே தேவன்! அந்த ஒரு கடவுளை அறியத்தான் பகுத்தறிவு! பயன்படுத்துங்கள ்.
Quote
 
 
-1 #6 Sreenivasan 2012-10-27 19:39
//நீங்கள் என்ன வேதனையில் இருப்பீர்கள் என்பதை என்னால் உணர முடிகிறது. உங்கள் நிலையைப் போன்ற வேதனையான நிலை மிகவும் மோசமான ஒரு நிலை. எனக்கு கடவுள் நம்பிக்கை இருந்தால் நிச்சயம் உங்கள் துன்பம் நீங்க வேண்டுமென்று வேண்டுவேன். கடவுள் நம்பிக்கை இல்லாததால், நீங்கள் நம்பிக்கையோடு இருங்கள் என்று மட்டுமே சொல்ல முடிகிறது.//

சின்மயி பற்றிய கட்டுரையில் உங்களது சில கருத்துக்கள் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும ் (தேவையற்ற பார்ப்பன துவேஷம்) மேலே சொன்ன வரிகளில் நீங்க நிக்கிறீங்க சவுக்கு. A word of advise, இனிமேல் எந்த ஒரு விஷயத்தை அணுகும்போதும் விருப்பு வெறுப்பு இல்லாம பாருங்க.
Quote
 
 
0 #5 JK 2012-10-27 14:44
கிரட் சவுக்கு
Quote
 
 
+1 #4 S Raj 2012-10-27 11:59
சவுக்கு இதற்கு பெயர் முதலை கண்ணீர், போதும் வேடம் போட்டது.அவனவன் செய்த தப்புக்கு ஆண்டவன் சோதிக்கிறான்.
Quote
 
 
+9 #3 manasu 2012-10-27 02:21
பாத்தா இலவச அரிசி வாங்கவந்த கூலி மாதிரி தெரியுது!!!
என்ன சவுக்கு சந்தோசமா? சந்தோஷ படனும்யா!!! புடுங்கி மாதிரி பண்ணா இப்படித்தான்... பொண்டாட்டிய சிறையில் தள்ளி ஆண்வர்கதிற்கு பெருமை சேர்த்தான் துக்கையாண்டி!!! !
Quote
 
 
+4 #2 Vin 2012-10-27 01:12
Savukku,
what goes around comes around. People will reap what they sow. I don't feel any sympathy towards these guys. If we earn honestly as Police officer we can't even buy a normal house.
Quote
 
 
+3 #1 விக்னேஸ்ராஜ் 2012-10-26 21:15
"பகைவனுக்கருள்வா ய் நன்னெஞ்சே" மாதிரி இருக்கு சங்கர்....
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 144 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday10555
mod_vvisit_counterYesterday13577
mod_vvisit_counterThis week68132
mod_vvisit_counterLast week95167
mod_vvisit_counterThis month290392
mod_vvisit_counterLast month382199
mod_vvisit_counterAll days13206759