|
இன்று வெளிவந்த நக்கீரன் இதழில் வெளிவந்த கட்டுரை கமா புல்ஸ்டாப் கூட மாற்றாமல், சவுக்கு நேயர்களுக்காக அப்படியே தரப்படுகிறது. இந்தக் கட்டுரையை எழுதியவர் பெயர் பிரகாஷ். இக்கட்டுரையை படித்து விட்டு, நக்கீரனின் தரத்தையும், அது பத்திரிக்கையா அல்லது கத்தரிக்காயா என்பதை சவுக்கு வாசகர்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
“எங்க ராசா“ - கலங்கிய மக்கள்"
“ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நான் மேற்கொண்ட நிலைபாடு சரிதான். இதை சட்டப்படி நிரூபிப்பேன்“ என்று பதவி விலகிய பிறகும் உறுதியாக பேட்டியளித்த ஆ.ராசாவைக் குறிவைத்தே டெல்லி மீடியாக்களும் எதிர்க்கட்சியினரும் செயல்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில், ராசாவிவுக்கு மக்களிடம் உள்ள செல்வாக்கை காட்டுவதாக அமைந்தது அவரது சென்னை வருகை.
நவம்பர் 16 அன்று சென்னைக்கு வந்த அவரை வரவேற்க மதியம் மூன்றரை மணியிலிருந்தே விமான நிலையப் பகுதியில் மக்கள் குவிய ஆரம்பித்தனர். முதலில் ராசாவின் நண்பர்கள், உறவுனர்கள் என ஆரம்பித்த கூட்டம் அதன் பிறகு கட்சிக்காரர்கள், பொதுமக்கள் என வளர்ந்து இறுதியில் பறை, பேண்டு நாட்டுப்புற வாத்தியங்கள் என இசை வடிவத்துடனும் ஆவேசமான கோஷங்களுடனும் ஆயிரக்கணக்கான கிராமத்து மக்களின் பங்கேற்புடன் பல்கிப் பெருகியது.
“மத்திய மந்திரி ராசா, ஊட்டி ரோசா“ மந்திரி பதவி வேண்டுமென்றால் போகட்டும் எங்களுக்கு என்றுமே நீ ராசா தான்“ என்ற உணர்ச்சிமிகு கோஷங்களுடன், “ஊழல்வாதி ஜெயலலிதா ஒழிக“ என்கிற எதிர்மறை கோஷங்களும் எதிரொலித்துக் கொண்டிருந்தன. “மாண்புமிகுவை பறிக்கலாம் மானமிகுவை பறிக்க முடியுமா ? “ “ஆரிய திராவிடப் போராட்டம். அதில் அசுரர் குலம் வெல்லும் ஜாக்கிரதை“ என விளம்பரத் தட்டிகளுடன் திராவிடர் கழகத்தின் கருஞ்சிறுத்தைகள் ஓங்கி ஒலித்துக் கொண்டு நின்றனர்.
வரவேற்பு அறிவிப்பை ஒரு அறிக்கை மூலம் முதலில் வெளியிட்டவரான திராவிடர் கழக தலைவர் வீரமணி மிகுந்த ஆர்வத்துடன் வந்திருந்தார். மாநில அமைச்சர்கள் பரிதி இளம்வழுதி, செல்வராஜ் உள்ளிட்டோர் காத்து நிற்க, ராசா வரவேண்டிய விமானம் தாமதமாகிக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில் பொதுமக்களின் குரல் உயர்ந்து கொட்டும் மழையிலும் விமான நிலையத்தின் உள்புறத்தையும் வெளிப்புறத்தையும் அதிர வைத்துக் கொண்டிருந்தது.
வரவேற்க வந்த பொதுமக்களில் ஆண்களுக்கு இணையாக பெண்களும் குரல் கொடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்த நிலையில் “ஏன் இந்த ஆவேச வரவேற்பு ? “ என பெண்களிடம் கேட்டோம். பிம்பலூரைச் சேர்ந்த சரோஜா, செல்வி, அலமேலு ஆகியோர், “எங்க ராசா ரொம்ப நல்ல மனுஷன். எந்த கஷ்டம்னு அவரைப் பார்க்க போனாலும் சென்னையாக இருந்தாலும் பெரம்பலூராக இருந்தாலும் சரி, காலை 6 மணியில் இருந்து எத்தனை மணி நேரம் ஆனாலும் மக்களை சந்திப்பார். அவரை பார்க்கப் போகிற ஒவ்வொரு நாளும் எங்க வீட்டுல உலை நிச்சயமாக கொதிக்கும். அவ்வளவு அள்ளிக் கொடுப்பார். அவர் மந்திரி பதவியை பிடுங்கிட்டாங்கன்னு சொன்னாங்க. குழந்தை குட்டியை எல்லாம் விட்டுட்டு எங்க ஊரிலிருந்து பஸ்சுல வந்திருக்கோம்“ என்றனர் ஆவேசம் குறையாமல்.
வேலூர் ஜெயலட்சுமி, துறைமங்கலம் தமிழரசி, பாத்திமா செல்வராஜ் ஆகியோர் “வானத்துல கோட்டை கட்டி அதுல ஒரு கொடி மரம் வச்சாங்களாம்… அது மாதிரி எங்க ராசா என்ன தப்பு பண்ணினார்னு எந்த ஆதாரத்தையும் சொல்லாம சட்டமன்றத் தேர்தல் வர்ற நேரத்துல சாணக்கியத்தனத்தோடு ஊழல் குற்றம் சுமத்தி பதவியை பறிச்சுட்டாங்க. அதை கண்டிக்குற விதமா அவரை வரவேற்கிறோம்“ என்கிறார்கள்.
மேலப்புலியூர் ஜெயலட்சும் என்பவர், “தொழில் வளர்ச்சியில் தமிழ் நாட்டில கடைசி இடத்தில் பெரம்பலூர் இருந்தது. எங்க ராசாதான் பெரம்பலூருக்கு சிறப்பு பொருளாதார மண்டலத்தைக் கொண்டு வந்தார். இந்தியாவிலேயே எம்.ஆர்.எ*ஃப் டயர் பேக்டரி தனது இரண்டாவது யனிட்டை பெரம்பலூரில் தான் தொடங்கியது. இதற்கு காரணம ராசாதான். ஆர்ட்ஸ் காலேஜ், மெடிக்கல் காலேஜ், இன்ஜினியரிங் காலேஜ்னு எல்லா காலேஜையும் கொண்டு வந்து எங்க மாவட்டத்தை முன்னேற்றம் அடையச் செய்தவர் எங்க ராசா தான். இங்கே நில மதிப்பு, சாழ்க்கைத் தரம், பொருளாதார நிலைமை எல்லாம் உயர்ந்திருக்கிறது. இன்னும் நாலு வருஷம் மந்திரியா இருந்திருந்தா சென்னையை விட பெரம்பலூரை முன்னுக்கு கொண்டு வந்திருப்பார். எங்களுக்கு இவ்வளவு நல்லது செஞ்ச மனுஷனுக்கு சோதனை வந்த நேரத்தில் துணை நிற்க நாங்கள் வந்திருக்கோம்“ என்றார் நன்றியுணர்ச்சியுடன்.
மஞ்சமேடு லதாபாலு, “ஒவ்வொரு முறை மழை அதிகம் பெய்தால் கொள்ளிட ஆறு பெருக்கெடுத்து எங்க ஊரை மூழ்கடித்து விடும். அதற்கு ஒரு தடுப்பணை பாலம் கட்ட பிரிட்டிஷ்காரன் காலத்திலிருந்தே கேட்டுக் கிட்டிருக்கோம். ஆனா ராசா வந்த பிறகுதான் நிறைவேறிச்சு. தொகுப்பு வீடு, பள்ளிக்கட்டிடம் என அவர் எங்க ஊரில் செய்து தராத வசதிகளே இல்லை. அதற்கு நன்றி சொல்லும் விதமாகவும், அந்த நல்லவருக்கு கெடுதல் செஞ்ச ஜெயலலிதாவை கண்டிக்கவும் வந்திருக்கோம்“ என உணர்ச்சி கொப்பளிக்க சொன்னார்.
இரவு 9 மணிக்கு ஆ.ராசா சென்னைக்கு வந்தபோது விமானநிலையமே குலுங்குகிற அளவுக்கு வாழ்த்து முழக்கங்கள் கேட்டன. ஆயிரக்கணக்கில் திரண்டிருந்த மக்களும், கட்சிக் காரர்களும் உற்சாகத்துடன் வரவேற்றனர். நேஷனல் மீடியாக்களின் சென்னை நிருபர்களும், கேமராமேன்களும் இந்த உணர்ச்சிகரமான தருணத்தை பதிவு செய்து, உண்மை நிலவரம் என்ன என்பதை தங்கள் நிறுவனத்தின் தலைமைக்கு தெரிவித்துக் கொண்டிருந்தனர்.
“இது நாள் வரை அவர் மந்திரி. இனி அவர் எங்க ராசா“ என்று பெரம்பலூர் பெண்மணி ஒருவர் நேஷனல் மீடியாவின் கேமராவை நோக்கி உணர்வுப்பூர்வமாகச் சொன்ன வார்த்தைகள் இதயத்தை தொட்டன. வரவேற்பை ஏற்றுக் கொண்ட ஆ.ராசா பயணித்தபோது “என்றென்றும் மானமிகு“ என்று வீரமணி அறிக்கையில் குறிப்பிட்டதைத்தான் தொண்டர்கள் முழங்கினர். |
Comments
இதை விட சிறப்பாக யாரும் நக்கீரனை விமர்சிக்க முடியாது
சிரிப்பை அடக்க முடியவில்லை
இன்று வரை நாடார்களின் மிக உயர்ந்த தலைவராக இருக்கும் காமராஜ் நாடாரை அவ்வாறெல்லாம் திமுக திட்டியதற்காக நாடார் இன மக்கள் தான் யோசித்திருக்க வேண்டும்...
தமிழா,
பள்ளனாய், பறையனாய்,
நாடானாய், தேவனாய்,
வன்னியனாய், பரவனாய்,
பிள்ளையாய், கவுண்டனாய்,
மள்ளனாய், குயவனாய்......
வாழ்ந்தது போதும்.
வா - தமிழா
தமிழனாய் வாழ்வோம்.
வந்தேறி தெலுங்கன், கன்னடன், மலையாளி, மார்வாடி, ஆரிய பிராமணர், இவர்களிடம் இருந்து நம் தமிழ் நாட்டை காப்போம்.
"பக்கத்தில் உள்ளவன் சாதியை கேள், அவன் இனம் தெரியும்.
தமிழன் என்றால் தோள் கொடு, வந்தேறி என்றால், விரட்டி அடி "
''தமிழர்கள் சிறுபான்மையாக உள்ள இடங்களில் தாய்மொழி பற்றோடு இருக்கிறார்கள். பெரும்பான்மையாக உள்ள தமிழகத்தில் சீரழி்ந்த தமிழர்களாக இருக்கிறார்கள்!
21st centurayla jathi,matham????????????????????
naikala neenga thirunthave matenkala>>>>>>
yella payalukalum setha pinnadi mannukula
Ulakathileya kevalamana piravi Tamilan,Mananke ttavan
Quote .Olukkam kettavan.Appan peru theriyathavan
Quote
u want implement ur activity's for lowest people also want to get your news then only public will wake up after reading the news, (b-coz by net not reach maximum people), so pls do the needful.
- இந்த பேர்களை கேட்டா உண்மையிலேயே விமான நிலையம் அதிர்ந்திருக்கு ம்.
மேற்கண்ட தகவலை நமது எம்.ஜி.ஆர் பத்திரிகை இன்று வெளியிட்டுள்ளது . இதே தகவலை, எம்.ஜி.ஆருக்கு முன் வெளியிட்டு புலனாய்வில் தாங்கள் ஒரு புலி என்பதை நிரூபித்த சவுக்குவை பாராட்டுவோம்.
தனது முதல் கட்ட விசாரனை வளையத்துக்குள் கொண்டு வந்திருக்கும் பல முக்கியப் பிரமுகர்களின் அசைவுகளை கூர்ந்து கவனிப்பதோடு அவர்களது பேஸ்போர்ட்டை முடக்கவும் ஏற்பாடுகள் நடக்கிறதாம்.
2g , 3g என்பது எல்லாம் சும்மா. எல்லாம் ஒன்று தான். வாடிக்கையாளர் எண்ணிக்கை தான் கணக்கு. 3g குறைந்த விலைக்கு போக காரணம் ஏற்கனவே இந்திய சந்தை நிரம்பி வழிவது தான். 2g ஏலம் போடும் போது நிலைமை அப்படி இல்லை. இந்திய சந்தைக்கு சர்வதேசமே போட்டி போட்டது.
இந்த செல் நிறுவனங்கள் இவ்வளவு பணத்தை கொடுப்பது எதற்காக என கேள்வி வரலாம். இப்போது நிறைய நிறுவனங்கள் நஷ்டத்தில் ஓடுவதும் உண்மையே. ஆனால் இந்தியாவில் கிட்டத்தட்ட அறுபது கோடி வாடிக்கையாளர்கள ் உள்ளனர். அவர்கள் தங்களது வருவாயில் மூன்று சதவீதத்தை எப்படியும் செலவு செய்வார்கள். கிட்டத்தட்ட இந்தியாவின் மொத்த வருமானத்தில் மூன்று சதவீதம் ஒரு நிறுவனத்திற்கு போகிறது என்றால் எப்படி?. யோசித்து பாருங்கள் இந்த வருமானத்தை வருங்காலத்தில் எடுக்க செல் நிறுவங்கள் இப்போதைக்கு எவ்வளவு நஷ்டம் என்றாலும் தாங்குவார்கள்.
நன்றி திரு பிரபுராஜ் என்னுடைய சந்தேகம் 2g வாடகைக்கு கொடுக்கப்பட்டது 3g விற்கப்பட்டது என்கிறார்களே அதில் தான்.மேலும் இவ்வளவு பரபரப்பிற்கும் பிறகே கூட 3g எவ்வளவிற்கு விற்கப்பட்டது?
---
அவர்கள் சொல்லுவது போல ஒன்று வாடகைக்கும் மற்றது விற்பனை செய்யப்பட்டது என்றே வைத்து கொள்வோம். அந்த வாடகையை அரசு நேரடியாக கொடுத்து இருந்தால் முன்பணம் அதிகமாக கிடைத்து இருக்கும். அதே நேரம் வாடகையும் அதிகமாக கிடைத்து இருக்கும். ஒரு இடைத்தரகர் இருப்பதால் அரசுக்கு எப்படி லாபம்?. அதுவும் அந்த இடைத்தரகர் ஒரு மாதத்தில் ஆயிரக்கணக்கான கொடிகளை சம்பாதிக்கும் போது.
contd
இரண்டையும் ஒப்பிட்டு நஷ்டம் என்று சொல்வது மிகப்பெரிய மோசடி என்று சிலர் கூறுகிறார்கள் உண்மையா என்று விளக்கவும்.
----
சொம்பு சுப்ரமணியன் அவர்களே ஒரு சின்ன சங்கதியப் புரிந்து கொள்ளுங்கள். அரசு ஒரு நிறுவனத்துக்கு உரிமையை ஆயிரம் கோடிக்கு விற்கிறது. அந்த நிறுவனம் அந்த உரிமையில் அறுபத்தி ஐந்து விழுக்காடு பங்கை ஒரு மாத காலத்திற்குள் ஆறாயிரம் கோடிக்கு விற்கிறது. இது ஒரு சின்ன கணக்கு. இந்த உரிமையை அரசே அந்த வெளிநாட்டு நிறுவனத்துக்கு ஒன்பாதாயிரம் கோடிக்கு நேரடியாக விற்று இருக்கலாம். இது ஊழல் இல்லை என்றால் வேறு எது ஊழல்?. அரசுக்கு வருமானம் வருவது, தொலைத்தொடர்பு விலைக் குறைப்பு இதெல்லாம் இந்த ஊழலுக்கு சம்பந்தமே இல்லாத விடயங்கள். இந்த சின்ன கேள்விக்கு யாரிடமாவது பதில் இருக்கிறதா என பாருங்கள். ஒரு மாதத்தில் ஒரு நிறுவனம் ஆயிரம் கோடி போட்டு ஒன்பதாயிரம் கோடி சம்பாதிக்கலாமா?.
Pichitaanga.........
Oru 3rd rated magazine nalla elutharanga sir.
அடிச்சதுல அஞ்சோ பத்தோ தாங்கய்யான்னு போய் நின்னுருப்பாரு
எங்களது பணம் அனைத்தும் இவர்களது வாயில் போனதே என்று கலங்கிய மக்கள்.
ஆ.ராசா,
appo vathu konjam thiruthuvanga...
முதலில் மாவீரன் வீரப்பனை வைத்து பிழைப்பு நடத்தினான்- காட்டிகொடுதான்
அடுத்து ரஜினி, அரசியல், கமல் பொண்டாட்டின்னு சொல்லி தனது வாசகர்களை அதிகபடுதிகொண்டா ன்
மேதகு பிரபாகரன் இதோ , அதோ, புலிகள் செய்தி தொடர்பாளர் ஜெகத் கஸ்பர் கட்டுரை என்று தமிழ் மக்களை குழப்பி இந்தியாவிடம் கல்லா கட்டினான்
இவன் மீசையை பார்க்கும் பொது எனக்கு ஒரு கேள்வி கேக்கணுன்னு தோணுது
வாசகர் rukku சொன்ன மாதிரி இவனும் ஒரு இன துரோகிதான். பஸூ நோட் பன்னுநீங்களா திடீர் திடீர்னு எவனோ வந்து வாசகர் பகுதியில திட்டிட்டு போறானுக... புது ட்ரெண்ட இருக்கு. கிளம்பிடானுகயா கேளம்பிடானுகயா அவனுகளுக்கு ஒன்னு சொல்றேன், ´சினிமாவுல வர்ற தமிழ் போலிசு மாதிரி ´´You are too late´´! பய் தி வே இப்ப இணையதளத்துல சவுக்குனு அடிச்சா புது ப்ளாக் ஒன்னு வருது... ஒஹோஒ அத ஒரிஜினலா ஆக்கிட்டு உண்மையா சாவுக்க டம்மி அக்குரனுகலாம்ம் ம்.. அடேங்கப்பா என்ன ஒரு மாஸ்டர் பிளான்... பில் கேட்சே இவனுக கிட்ட பிச்சை எடுக்கணும்!!! இவிங்கள பத்தி பேசி எனுக்கு டைம் வேஸ்ட்
RSS feed for comments to this post