முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
அவள் பெயர் அம்பிகா… அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 23
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
வெள்ளிக்கிழமை, 16 நவம்பர் 2012 02:30

அவள் பெயர் அம்பிகா.   அவள் கணவன் பெயர் குமார்.  அவளுக்கு இரண்டு மகள்கள்.  ஒரு மகன்.  பெரிய மகளின் பெயர் சுஷ்மிதா.  சின்ன மகளின் பெயர் சுஷாந்திகா.  மகனின் பெயர் சக்திவேல்.   சுஷ்மிதா ஒன்பதாவது படிக்கிறாள்.   சுஷாந்திகா ஏழாவது படிக்கிறாள்.   சக்திவேல்  மூன்றாவது படிக்கிறான்.  அம்பிகாவின் கணவர் பெங்களுரில் வேலை செய்கிறார்.

அம்பிகா அவள் கணவர் குமாரை காதல் திருமணம் செய்தவள். எப்படிக் காதலித்தீர்கள் என்று கேட்டால் அம்பிகாவின் முகத்தில் வெட்கம்.   பணியாற்றும் இடத்தில் காதலித்து திருமணம் செய்து கொண்டோம் என்று வெட்கத்தோடு சொல்கிறாள்.

இந்தப் பெயர்களை வைத்து, அம்பிகாவின் குடும்பம் ஒரு மென்பொறியாளரின் குடும்பமோ, அல்லது ஒரு நடுத்தர வர்க்க அரசு ஊழியர் குடும்பமோ என்று எண்ணத் தோன்றும்.  அப்படி ஒரு குடும்பமாக இருந்திருந்தால், அம்பிகா இன்றும் சிரித்துக் கொண்டு, மகிழ்ச்சியோடு அவள் காதல் கதையை பகிர்ந்திருப்பாள்.  குழந்தைகளோடு சிரித்து விளையாடிக் கொண்டிருப்பாள்….

அம்பிகா வேறு சாதியில் பிறந்திருந்தால் .. …

இன்று அம்பிகா தன் வாழ்வை இழந்து நிற்கிறாள். உழைத்து உழைத்து அவள் சேர்த்த சொத்துக்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன.  அவள் வீடு தீ வைத்துக் கொளுத்தப்பட்டுள்ளது.  அவள் பிள்ளைகள் உடுத்த உடையில்லாமல், பத்து நாட்களாக பழைய உடைகளை அணிந்து தெருவில் அழுக்காக விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.  அவள் கணவன், பத்து நாட்களாக பழைய கைலியை கட்டிக் கொண்டு மர நிழலில் அமர்ந்திருக்கிறான்.  அம்பிகா அடுத்து என்ன என்ற கேள்வியோடு வானத்தைப் பார்த்து அமர்ந்திருக்கிறாள்…

DSC_0599

அம்பிகா செய்த குற்றம் என்ன…. ….. ?  அவள் பறச்சியாக பிறந்து விட்டாள்.  அவள் செய்த ஒரே குற்றம் பறச்சியாக பிறந்ததுதான். அம்பிகாவின் கணவன் குமார், பெங்களுரில் கட்டிடம் கட்டும் கூலித் தொழிலாளியாக வேலை பார்ப்பவன்.  மகளுக்கு திருமணம் செய்ய வேண்டுமே என்று, கணவன் மனைவி இருவரும், தங்கள் செலவுகளைக் குறைத்துக் கொண்டு, சிறுகச் சிறுக சேர்த்து 5 பவுன் நகையைச் சேர்த்து வைத்துள்ளனர்.  தீபாவளிக்காக குடும்பத்துக்கு புதுத்துணி மணிகள் வாங்கவும், அந்த தீபாவளி அன்றே இன்னும் ஒரு பவுன் நகை வாங்க வேண்டும் என்றும் 20 ஆயிரம் பணத்தை வைத்திருக்கிறாள் அம்பிகா.

கையில் ஆயுதங்களோடு ஆரவாரமாக ஊருக்குள் நுழைந்த கும்பலைப் பார்த்து கலவரமடைந்த அம்பிகா, தன் குழந்தைகளை அழைத்துக் கொண்டு, வயல்வெளிக்குள் உயிரைக் காப்பபாற்றிக் கொள்வதற்காக ஓடுகிறாள்.   இரவு நெடுநேரம் கழித்து திரும்பிய அம்பிகாவின் வீடு எரிந்து கொண்டிருக்கிறது.

ஊருக்குள் நுழைந்த வன்முறைக் கும்பல், அம்பிகாவின் வீட்டுக் கதவை உடைத்து, பீரோவில் வைத்திருந்த பணத்தையும் நகையையும் கவனமாக எடுத்துக் கொண்டு, மண்ணென்னையை வீடு முழுக்க ஊற்றி தீ வைத்து விட்டுச் சென்று விட்டது.

நாயக்கன் கொட்டாய். 

DSC_0623

தமிழக வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒரு ஊர் இது.  அப்பு மற்றும் பாலன் என்ற இரண்டு தோழர்களின் களமாக இருந்த ஊர் அது.  தமிழக நக்சலைட் இயக்கத்தின் தாய் வீடு அந்த நாயக்கன் கொட்டாய்.  தலித்துகளுக்காகவும், ஏழை உழைப்பாளி மக்களுக்காகவும், முதலாளித்துவ அரசியலையும், கந்து வட்டி அரசியலையும் ஒழித்துக் கட்ட வேண்டும் என்று சூளுரைத்த தோழர்களின் களம் அது.   கம்யூனிஸ்டுகள் என்று சொல்லிக் கொண்டு மார்க்சியத்தை மரணக்குழியில் தள்ளி விட்டு, திராவிடக் கட்சிகளின் கால்களை நக்கி, ஓட்டுக்களை பொறுக்கிக் கொண்டிருக்கும் தா.பாண்டியன்களும், ஜி.ராமகிருஷ்ணன்களும், கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத தியாகங்களைச் செய்த பல தோழர்களின் களம் அது.   அப்புவும் பாலனும் இறந்து பல ஆண்டுகள் கடந்தாலும்  இன்று வரை, காவல்துறை நடுக்கத்தோடு பார்க்கும் ஊர் அது.  75 வயதான முன்னாள் நக்சலைட் அந்த ஊருக்குள் நுழைந்தாலும் ஆயிரம் முறை விசாரித்து விட்டு பிறகுதான் உள்ளே அனுப்புகிறார்கள் என்றால் காவல்துறையினருக்கு எந்த அளவுக்கு நாயக்கன் கொட்டாய் நடுக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

DSC_0520

DSC_0521

அந்த நாயக்கன் கொட்டாயில்தான் அம்பிகா வசிக்கிறாள்.   வளர்ப்பு மகன் திருமணத்திற்கு வாட்ச்மேனாக இருந்த வால்ட்டர் தேவாரம் போன்ற பொறுக்கி அதிகாரிகளால் கொலை செய்யப்பட்ட அந்த தோழர்களின் தியாகத்தாலோ என்னவோ… இன்று நாயக்கன் கொட்டாய்ப் பகுதியில் வசிக்கும் தலித்துகள், சுயமரியாதையோடு வாழ்கிறார்கள்.  தங்கள் உரிமைகளை உணர்ந்துள்ளார்கள்.  அம்பிகா குடும்பத்தைப் போல பல தலித்துகள் அங்கே நன்றாகவே வாழ்ந்து வருகிறார்கள்.   அத்தனை குடும்பங்களிலும் பிள்ளைகளை படிக்க வைக்கிறார்கள்.  நில உடைமையாளர்கள் வெகு குறைவாகவே உள்ளார்கள்.  பெரும்பாலானோருக்கு கூலி வேலை.   கட்டுமானப் பணிகள் அதிக அளவில் நடைபெறும் ஹோசூர் மற்றும் பெங்களுருக்கு கூலி வேலைக்காகச் செல்கிறார்கள்.   கிராமப்புறம் என்பதால் அதிக அளவில் செலவுகள் இல்லை.  தாங்கள் சம்பாதித்ததை சேர்த்து வைத்து தங்கள் பிள்ளைகளுக்கு கல்வி, திருமணம், போன்றவற்றிற்கு பயன்படுத்துகிறார்கள்.   அரசாங்கம் தரும் இலவச தொலைக்காட்சி, அனைத்து வீடுகளிலும் இருக்கிறது.   கேபிள் இணைப்பு இருக்கிறது.   பெரும்பாலும் சம்பவங்களற்ற வாழ்க்கை.  .

அருகாமையில் உள்ள கிராமங்களில் வன்னிய சமூகத்தைச் சேர்ந்த மக்கள் பெரும்பான்மையாக வசிக்கிறார்கள்.   இரு சமூகத்தினரிடையே சாதி உண்டு.  வன்மம் இல்லை.  தாங்கள் இந்த சாதியைச் சேர்ந்தவர்கள் என்ற பிரக்ஞை இரு சமூகத்தினருக்குமே உள்ளது.    ஆனால் மாமன், மச்சான் என்று பாசத்தோடே உறவாடிக் கொள்கிறார்கள்.  பெண் கொடுப்பது, திருமண உறவுகள் இல்லை.  ஆனால், ஒருவர் மற்றவர் வீடுகளுக்குச் சென்று உணவருந்துவது, விழாக்காலங்களில் வாழ்த்துக்களையும், பலகாரங்களையும் பரிமாறிக் கொள்வது என்று இயல்பான வாழ்க்கையையே வாழ்ந்து வருகின்றனர்.

எப்போதாவது இந்த இரு சமூகத்தில் உள்ள இளைஞர்கள் திடீரென்று காதல் திருமணம் செய்து கொள்கிறார்கள்.  அப்போது இரு சமூகத்தினரிடையே சல சலப்பு ஏற்படுகிறது.  வார்த்தைகளை கவனிக்கவும், சல சலப்பு.   இரு சமூகத்தினர் என்பதை விட, இரு குடும்பத்தினரும் பேசுகிறார்கள்.   சில நேர்வுகளில் வன்னிய சமூகத்தைச் சேர்ந்த சம்பந்தப்பட்ட குடும்பத்தினர், தங்கள் வீட்டுப் பெண்ணையோ, பையனையோ ஒதுக்கி வைக்கின்றனர்.   சில நேர்வுகளில் சேர்த்துக் கொள்கின்றனர்.  பெரும்பாலும், இது போல காதல் திருமணம் செய்பவர்கள், வேறு ஊர்களுக்குச் சென்று விடுவதால், அவர்களின், காதலும், திருமணமும் இரு சமூகத்தாராலும் மறக்கப்படுகிறது.

ஆனால், இளவரசன், வித்யா என்ற இருவரின் காதல் இது போல மன்னிக்கப்படவும் இல்லை.  மறக்கப்படவும் இல்லை.  அவர்கள் காதல் மற்றும் திருமணத்தால் நேர்ந்த நிகழ்வுகள், இன்னும் பல ஆண்டுகளுக்கு நீங்காத வடுவாக நிலைக்கும் அளவுக்கு பதிந்து விட்டன.

இளவரசன் பிஎஸ்சி மூன்றாம் ஆண்டு படிக்கிறான். வித்யா இரண்டாம் ஆண்டு நர்சிங் படிக்கிறாள்.   செம்புலப் பெயல்நீர்போல அன்புடை நெஞ்சங்கள் கலக்கின்றன. வித்யா ஒரு வன்னியர். இளவரசனோ ஒரு பறயன்.   எப்படி ஒப்புக் கொள்வார்கள்.  வித்யா வீட்டில் வேறு மாப்பிள்ளை பார்க்க தொடர்ந்து நடந்த நெருக்குதல் காரணமாக, 2012 அக்டோபர் 8 அன்று வித்யா, இளவரசனைத் தொடர்பு கொண்டு வீட்டை விட்டு வெளியேறுகிறாள். இளவரசன் தமிழ்நாடு காவல் துறையில் காவலர் பணிக்காக தேர்ச்சி பெற்று பயிற்சியில் சேர உள்ளான்.  அரசுப் பணி கிடைத்த பிறகு, காதலித்தவளை மணம் முடிக்க அவனுக்கு என்ன தயக்கம் இருக்கப் போகிறது… ?  சேலத்தில் ஒரு கோயிலில் திருமணம் செய்து கொள்கிறார்கள். வித்யா வீட்டிலிருந்து தொடர்ந்து நெருக்கடி.   வித்யாவைத் தேடுகிறார்கள்.  நெருக்கடி அதிகமாகவே, இளவரசன், 15 அக்டோபர் அன்று, நேரடியாக சேலம் சரக டிஐஜி சஞ்சய் குமாரைச் சந்தித்து, திருமணம் ஆன விபரத்தையும், வித்யா வீட்டில் கொடுக்கப்படும் நெருக்கடியையும் விவரிக்கிறான்.   சஞ்சய் குமார், உடனே தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், அஸ்ரா கார்கை சென்று சந்திக்கச் சொல்கிறார்.  மாலை ஏழரை மணிக்கு, அஸ்ரா கார்க்கை சந்தித்து விபரத்தைச் சொல்லவும், அவர் இரு தரப்பினரையும் வரச் சொல்கிறார்.  வித்யாவின் தந்தை மட்டும் வந்து எஸ்.பியை சந்திக்கிறார். அவர் தந்தை  சம்மதம் தெரிவிக்காததால்,  காவல்துறையினரின் பாதுகாப்போடு, மணமக்களை நல்லம்பட்டியில் உள்ள, இளவரசனின் பாட்டி வீட்டுக்கு அனுப்பப்படுகிறார்.

பெண்ணின் தந்தை நாகராஜனோ, வித்யாவை தலை முழுகி விட்டேன். இனி அவள் எனக்கு மகள் இல்லை என்று மனம் வெதும்புகிறார். இவ்வளவு நாட்களாக இருந்த சூழல் மாறியிருக்கிறது.   அருகாமையில் இருந்த கிராமத்தில் உள்ள  வன்னியர்களுக்கெல்லாம் தகவல் பரவுகிறது. பெண்ணின் தந்தை நாகராஜனை நெருக்குகிறார்கள்.  “என்னய்யா ஒரு பறப்பய உன் பொண்ணத் தூக்கிட்டுப் போயிட்டான்…  விட்டுட்டு பொலம்பிக்கிட்டு இருக்கியே” என்று தொடர்ந்து அவரை நச்சரிக்கிறார்கள். அவர்களின் நெருக்குதல் பொறுக்க முடியாமல், பெண்ணை அனுப்பி விடுங்கள் என்று இளவரசன் குடும்பத்தாருக்கு தூது அனுப்புகிறார். அவர்களோ.. விஷயம் மாவட்ட காவல்துறையினரிடம் போய் விட்டது.   எங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்று கைவிரிக்கின்றனர்.

4 நவம்பர் அன்று 25 கிராமங்களைச் சேர்ந்த வன்னியர்களின் கூட்டம் நாயக்கன்கொட்டாய் கிராமத்தில் நடைபெறுகிறது. இதற்கு பாமக ஒன்றியச் செயலாளர் வி.பி.மதியழகன் தலைமை தாங்குகிறார். வெள்ளாளப்பட்டி பஞ்சாயத்துத் தலைவர் ராசா, வன்னியர் சங்க மாவட்டச் செயலாளர் பாலு, அதிமுக கணேசன், செல்லங்கொட்டாய் முருகன், மற்றும் அதிமுக, திமுக, மதிமுக, புரட்சிகர முன்னணித் தோழர்கள் கலந்துக்கொண்டு பஞ்சாயத்து செய்கின்றனர். 200 வன்னியர்கள் கலந்துக்கொண்ட இக்கூட்டத்தில் தலித்துகள் சார்பாக ஊர் தலைவர் சக்தி, பொடா.பழனி, பொடா.துரை, செயராமன் உள்ளிட்ட 15 பேர் கலந்துக் கொள்கின்றனர். வன்னிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள், பெண்ணை திரும்ப ஒப்படைக்கவில்லை என்றால் விளைவுகள் விபரீதமாக இருக்கும் என்று எச்சரிக்கின்றனர்.  இந்தக் கூட்டத்தில் வன்முறை நடக்கும் என்று அச்சமடைந்த தலித்துகள் காவல்துறைக்கு தகவல் தர, அவர்கள் 20 காவலர்களை பாதுகாப்புக்காக அனுப்பி வைக்கின்றனர். இக்கூட்டத்தில் எந்த சமாதானமும் எட்டப்படவில்லை.

நவம்பர் 7 அன்று பெண்ணின் தாயார் தேன்மொழி, மற்றும் உறவினர்கள் சிலர், வெள்ளக்கல் கட்டமேடு என்ற இடத்தில் மணப்பெண் திவ்யாவையும், மணமகன் இளவரசனையும் அழைத்துப் பேசுகின்றனர்.  பெண்ணின் தாயார் தேன்மொழி, நீ திரும்ப வரவில்லையென்றால், நானும் உன் தந்தையும் தூக்கு போட்டுச் சாக வேண்டியதுதான்.   திரும்பி வந்து விடு என்கிறார்.  ஆனால், மணப்பெண் வித்யாவோ, இதற்கு சம்மதிக்க மறுக்கிறார்.

ஏமாற்றத்தோடு, திரும்பும் வன்னிய சமூக மக்களுக்கு பெண்ணின் தந்தை நாகராஜன், தூக்கிட்டு தற்கொலை செய்த விபரம் தெரிய வருகிறது. அக்கம் பக்கத்தில் உள்ள வன்னிய கிராமங்களுக்கு, தலித்தோடு ஏற்பட்ட காதல் திருமணத்தால் அவமானம் தாங்க முடியாமல் பெண்ணின் தந்தை நாகராஜன் இறந்து விட்டதாகவும், செய்தி பரவுகிறது.   1500 பேருக்கு மேல் கூடுகிறார்கள்.  நாகராஜனின் பிரேதத்தை வைத்து சாலை மறியலில் ஈடுபடுகிறார்கள்.   இந்தச் சாவுக்கு காரணமான தலித்துகளை கைது செய்யாவிட்டால், தீக்குளிப்போம் என்று மிரட்டுகிறார்கள். காவல்துறையினர் சாலை மறியல் செய்த இடத்தில் குவிக்கப்பட்டு, மறியல் செய்தவர்களோடு பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள்.

இந்த சந்தர்ப்பத்தில் அருகாமையில் உள்ள நத்தம், அண்ணா நகர், கொண்டப்பள்ளி, செங்கல்மேடு ஆகிய இடங்களில் உள்ள தலித் கிராமங்களுக்குள் புகுந்த வன்னியர்கள், ஒவ்வொரு வீடாக சூறையாடுகிறார்கள்.   தலித்துகளின் சொத்துக்கள் சூறையாடப்படுகின்றன.

சத்தம் கேட்ட தலித்துகள், வயல்வெளிகளுக்குள் புகுந்து ஒளிந்து கொள்கிறார்கள்.

முன்கூட்டியே திட்டமிட்டது போல, ஒவ்வொரு வீட்டிலும் உள்ள, பீரோ உடைக்கப்பட்டு, நகை மற்றும் பணம் சூறையாடப்படுகிறது.  வெள்ளிக் கொலுசு உட்பட, அத்தனை நகைகளும் கொள்ளையடிக்கப்படுகின்றன.  கையோடு கொண்டு சென்ற பிளாஸ்டிக் கேனில் இருந்த மண்ணென்னையை ஊற்றி, ஒவ்வொரு வீடாக தீ வைக்கப்படுகிறது. பெண்கள் யாராவது உள்ளே இருந்தால், ஓங்கி ஒரு அறை அறைந்து பணத்தையும் நகையையும் எடுத்துத் தருமாறு மிரட்டுகிறார்கள்.  உயிருக்குப் பயந்த பெண்கள் நகைகளையும் பணத்தையும் எடுத்துக் கொடுத்து, வந்த வன்முறைக் கும்பலின் கால்களில் விழுந்து கெஞ்சுகிறார்கள்.  ஓடிப்போய் விடு என்று சொல்லி விட்டு, வீட்டுக்குத் தீ வைத்துச் செல்கிறார்கள்.

ஒரு லாரியை எடுத்து வந்து வெண்கல பாத்திரங்களை விற்கும் ஒருவரின் வீட்டில் இருந்த ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான புதுப் பாத்திரங்களை அள்ளிச் செல்கிறார்கள்.  கருணாநிதி கொடுத்த இலவச தொலைக்காட்சியை உடைத்தெரிந்தவர்கள், எல்.சி.டி டிவிக்களை பத்திரமாக எடுத்துச் செல்கிறார்கள்.

இப்படி ஒவ்வொரு வீடாக 300 வீடுகள் சூறையாடப்படுகின்றன.  காவல்துறை இரவு 10 மணிக்கு வந்து, வயலில் ஒளிந்திருந்த மக்களை அழைத்து வந்த பிறகு, தீயணைப்பு வாகனங்கள் வந்து தீயை அணைத்தன.

கொளுத்தப்பட்ட இந்த மக்களின் வீடுகள் வன்முறை வெறியாட்டத்தின் நினைவுச் சின்னங்களாக அப்படியே இருக்கின்றன.  அரசு 50 ஆயிரம் உடனடி நிவாரணமாக அறிவித்துள்ளது. மன்னிக்கவும், ஜெயலலிதா அறிவித்துள்ளார். வன்னியர்கள் தரப்பில் காவல்துறை ஏறக்குறைய 100 பேர்களை கைது செய்துள்ளது.  தலித்துகள் தரப்பிலும், நாகராஜனை தற்கொலைக்குத் தூண்டியதாக 10 பேரை கைது செய்துள்ளது.

இந்த தலித் கிராமத்தில் உள்ள வீடுகள் முடிந்தவுடன், 20 அடி தூரத்தில் நான்கு வன்னியர் வீடுகள் உள்ளன.  அந்த வன்னியர் வீடுகளின் ஓடுகள் கூட இன்று வரை உடைக்கப்படவில்லை.    ஒரே ஒரு காவலர் மட்டும் அந்த வீடுகளுக்கு பாதுகாப்பு அளித்து வருகிறார்.

திருமண உறவு முறைகளைத் தவிர்த்து, இயல்பாக பழகி வந்த இரு சமூகத்தினருக்கிடையே திடீரென்று எப்படி வந்தது இந்த மோதல்… ?  மாமன் மச்சான் என்று உறவு முறை சொல்லி அழைத்து வந்தவர்கள், திடீரென்று ஒரு சமூகத்தினரின் சொத்துக்களை ஏன் வெறி கொண்டு சூறையாடுகிறார்கள்… ?

18 மாதங்களுக்கு முன்னால், கொண்டம்பட்டியில் ராஜு மற்றும் வேடியம்மா என்பவர்களின் மகன், நேதாஜி, வன்னிய சமூகத்தைச் சேர்ந்த முத்துலட்சுமி என்ற பெண்ணை காதலித்துத் திருமணம் செய்து கொள்கிறான்.   இருவரும் கல்லூரியில் பிஎஸ்ஸி பிசிக்ஸ் படிக்கையில் காதல் ஏற்படுகிறது.  இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள் என்று அறிந்த வன்னிய சமூகத்தினர் பையனின் தாயார் வேடியம்மாளை கடத்திச் செல்கிறார்கள்.   வேடியம்மாவின் கணவர் ராஜு, காவல்துறையில் புகார் தெரிவிக்கிறார்.  வேடியம்மா கடத்தப்பட்டதாக, வன்கொடுமைச் சட்டத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படுகிறது.  காவல்துறையினர் இரு தரப்பினரையும் அழைத்து சமாதானம் பேசுகிறார்கள்.   வன்னியர்கள் பையனின் தாயார் வேடியம்மாவை விடுவிக்கிறார்கள்.   காவல்துறையினர், யாரையும் கைது செய்யாமல் அனுப்பி விடுகிறார்கள்.

இந்தத் திருமணமும் ஒரு தலித் இளைஞனுக்கும், வன்னிய பெண்ணுக்கும் இடையேதான் நடைபெற்றுள்ளது.   அப்போது நேராத வன்முறை இப்போது ஏன் நேர்கிறது… ? திடீரென்று வன்னியர்கள் வீராவேசத்தோடு கிளர்ந்தெழக் காரணம் என்ன ?

“எங்களுக்குச் சாதி வெறி பிடித்து இருக்கிறது என்று பத்திரிகைகளில் எழுதுகிறார்கள். இந்த நாட்டில் எவனுக்கு சாதி வெறி இல்லை? தி.மு.க-வில் உள்ள செட்டியார்களும் முதலியார்களும் அடுத்த சாதியிலா சம்பந்தம் வைத்துக் கொள்கிறார்கள்?

அடுத்த முதலமைச்சரா யார் யாரோ வருவாங்கன்னு பத்திரிகைகாரங்க சொல்றாங்க... ஒரு வன்னியன் வருவான்னு எழுதலையே... ஏன்? எல்லாம் சாதி வெறி''

நம் இனத்துப் பெண்களைப் பலாத்காரம் செஞ்சு கலப்புத் திருமணம் செய்றாங்க. நாம எச்சரிக்கையா இருக்கணும். நம்ம சாதியிலதான் நாம கல்யாணம் செய்யணும். எவன்டா சாதிய ஒழிச்சான்? நான் வன்னியர் சங்கத் தலைவர் சொல்றேன். யாராவது எங்க பொண்ணுங்களுக்கு கலப்புத் திருமணம் செஞ்சு​வைச்சா... தொலைச்சுப்புடுவேன்''

இப்படிப் பேசியவர் யார் தெரியுமா ?  டாக்டர் ராமதாஸின் நெருங்கிய உறவினரும், பாட்டாளி மக்கள் கட்சி எம்.எல்.ஏவுமான காடுவெட்டி குரு.

27flash_t_9

இந்த ஆண்டு மே மாதம், மகாபலிபுரத்தில், வன்னிய இளைஞர் பெருவிழா நடந்தது. அந்த விழாவில், டாக்டர் ராமதாஸ் முன்னிலையில் காடுவெட்டி குரு பேசிய பேச்சுதான் இது. குருவின் இந்தப் பேச்சை ஒட்டி, மகாபலிபுரம் போலீசார், குரு மீது, வழக்கு பதிவு செய்தனர்.  மே மாதம் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில் குருவை ஏன் கைது செய்யவில்லை என்பது, எக்ஸ்டென்ஷன் ராமானுஜத்திற்கே வெளிச்சம்.

சரி… குரு திடீரென்று ஏன் இப்படி ஆவேசமாக பேசுகிறார்.. ?

மருத்துவர் ராமதாஸ் யார் என்பது பற்றி சற்றி விரிவாகத் தெரிந்து கொள்ள சவுக்கில் முன்பு வெளி வந்த இரு கட்டுரைகளைப் படியுங்கள்.

நோயாளியான மருத்துவர் பாகம் ஒன்று

நோயாளியான மருத்துவர் பாகம் இரண்டு

2009 பாராளுமன்றத் தேர்தலில் படு தோல்வி அடைந்த ராமதாஸ், 2011 சட்டமன்றத் தேர்தலிலாவது இழந்த தன் செல்வாக்கை  மீட்டு எடுக்கலாம் என்று திட்டமிட்டார்.  இந்தத் தேர்தலிலும் அவருக்கு படு தோல்வியே.  மேலும் பாட்டாளி மக்கள் கட்சியின் வாக்கு சதவிகிதம் கடுமையாக சரிந்தது.   வன்னியர் ஆதரவு இல்லாமல் எந்தக் கட்சியும் ஆட்சிக்கு வர முடியாது என்று பிளிறிக் கொண்டிருந்த மருத்துவர் அய்யாவுக்கு, விழுந்த பெரிய அடி… அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்கச் சொல்லி சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு.  அந்தத் தீர்ப்பினால் கலங்கியிருந்த ராமதாஸூக்கு விழுந்த அடுத்த அடி… மருத்துவர் சின்ன கொய்யா… மன்னிக்கவும், சின்ன அய்யா என்று அழைக்கப்படும் அன்புமணி மீது டெல்லி நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்த இரண்டு குற்றப்பத்திரிக்கைகள்.   மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக சிபிஐ தாக்கல் செய்துள்ள இந்த இரண்டு குற்றப் பத்திரிக்கைகளிலும், அன்புமணி வசமாக சிக்கியுள்ளார் என்று தெரிகிறது.

கருணாநிதியின் மகன், அழகிரி மற்றும், ராமதாஸின் மகன் அன்புமணி, இருவரில் யார் சிறந்த தொடை நடுங்கி என்று போட்டி வைத்தால், யார் சிறந்தவர் என்று தேர்ந்தெடுப்பது அவ்வளவு சிரமம்.   அப்படி ஒரு “தைரியசாலி” அன்புமணி..  அமைச்சராக இருந்தபோது துட்டு வாங்குவதற்கு இருந்த தைரியம், தற்போது வழக்கை சந்திப்பதில் இல்லை.

3325733396_bdb800d4a9_b

நைனா.. என்ன காப்பாத்து நைனா என்று டாக்டர் ராமதாஸை தொடர்ந்து நச்சரிக்கவும், ராமதாஸும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், அன்புமணியின் மாமனாருமான கிருஷ்ணசாமி மூலமாக, டெல்லி காங்கிரஸ் தலைவர் அஹமது பட்டேலை தொடர்ந்து முயற்சி செய்தும் யாருமே சட்டை கூட செய்யவில்லை.   ராமதாஸ் பேரனுக்காக சம்பந்தம் செய்துள்ள, காங்கிரஸ் பிரமுகர் ராயபுரம் மனோவின் உறவினர் மூலமாக காங்கிரஸ் கட்சியை அணுகினாலும், பயனில்லை.

2014 தேர்தலில், இரண்டு திராவிடக் கட்சிகளுமே பாட்டாளி மக்கள் கட்சியை சட்டை செய்யும் என்று தோன்றவில்லை. அதிகபட்சம் ஒரு எம்.பி சீட் கொடுத்து வேண்டுமென்றால் வாங்கிக் கொள், இல்லையென்றால், தைலாபுரம் தோட்டத்திலேயே புல் புடுங்கு என்று சொல்லிவிடுவார்கள் என்பதை ராமதாஸ் நன்கு உணர்ந்திருக்கிறார்.

தன்னை ஒரு தலைவராக உயர்த்தி, பல கோடிகளை கொள்ளையடிக்க உதவியது வன்னியர்களின் ஆதரவே.  அந்த ஆதரவே தொடர்ந்து சரிந்து வருகிறது என்பதை ராமதாஸ் நன்றாகவே உணர்ந்துள்ளார்.    இழந்த தன் வன்னிய இன ஆதரவை மீண்டும் பெற வேண்டும் என்ற நோக்கத்திலேயே ராமதாஸ் தான் வளர்த்து வரும் வேட்டை நாயான காடுவெட்டி குருவை குரைக்கச் சொல்லியிருக்கிறார்.

ஒரு இனத்தின் ஆதரவை பெறுவதற்கு வன்முறையை விட சிறந்த வழிமுறை எதுவுமே இல்லை.   பாப்ரி மசூதி இடிப்புக்குப் பின் நிகழ்ந்த கலவரங்களையும், அதனால் பிஜேபி பெற்ற ஆதரவையும், தற்பாது எவ்வித வன்முறையும் இல்லாததால் தங்களுக்குள்ளேயே ஒருவர் டவுசரை ஒருவர் மாற்றி மாற்றி கழற்றிக் கொண்டிருக்கும் நிலையையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.

கிழட்டு நரியான ராமதாஸ் தற்போது மீண்டும் சாதி வெறியைத் தூண்டும் தந்திரத்தை கையெடுத்துள்ளார்.   சாதி வெறியைத் தூண்டி வன்முறையை நடத்தினால் மட்டுமே வன்னியர்களின் ஆதரவை மீண்டும் பெற முடியும் என்பதை ராமதாஸ் நன்றாகவே உணர்ந்துதான், காடுவெட்டி குரு என்ற வேட்டை நாயை அவிழ்த்து விட்டுள்ளார்.  எப்போதெல்லாம் ராமதாஸுக்கு வசதியோ, அப்போதெல்லாம் குருவை குரைக்கச் சொல்வார்.   அந்த நாயும் நன்றாகக் குரைத்தால்தான் பிஸ்கட் கிடைக்கும் என்று கேவலமாக குரைக்கும்.

கருணாநிதிக்கு தொந்தரவு கொடுக்க வேண்டும், கூட்டணியை விட்டு வெளியே வர வேண்டும் என்பதற்காக, 2008ல், குருவை குரைக்கச் சொன்னதும், அந்த நாய் எப்படிக் குரைத்திருக்கிறது பாருங்கள்…

“2008ம் ஆண்டு பாமகவுக்கு மிகச் சிறப்பான ஆண்டாக மலரப் போகிறது. ஆண்டிமடம் எம்எல்ஏ (திமுக) சிவசங்கருடைய அப்பாவாலேயே ஒன்றும் புடுங்க முடியவில்லை. இவன் நேத்து வந்த பையன். அமைச்சர் ராஜாவோட (மத்திய திமுக அமைச்சர்) எடுபிடி. அந்த ராஜாவோ கருணாநிதிக்கு எடுபிடி. இந்த ராஜாவுக்கு ஒரு எடுபிடி இருக்கான். அவன்தான் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர்.

எங்க மாவட்டச் செயலாளர் வைத்தி மீது இந்த கலெக்டர்தான் வழக்கு போடச் சொல்லியிருக்கான். அவன் போடச் சொன்னானா... அல்லது அவனுக்கு தலைவனான அந்த கருணாநிதி போடச் சொன்னானா தெரியாது. நீ என்ன வழக்கு வேண்ணா போடு, ஒண்ணும் புடுங்க முடியாது. என் .... கூட புடுங்க முடியாது.

எங்க கட்சி பொறுப்பாளர்கள் யார் மேல கேஸ் போட்டாலும், இந்த ராஜா, சிவசங்கர் அவனுங்களுக்குத் தலைவன் எவனும் உயிரோட இருக்க முடியாது.

குடும்பத்தையே உயிரோட எரிச்சுடுவோம். இந்த பெரம்பலூர் கலெக்டர் மாமா வேல பாக்குறான். அந்த மாமா சொன்னான்னு இந்த போலீஸ் மாமாக்கள் ஆட்டம் காட்றானுங்க...

ஒரு போலீஸ்காரன்கூட அவனுங்க... (போலீசாரின் குடும்பத்தினரை சுட்டிக் காட்டி மட்டமாக பேசுகிறார்)...ஜாக்கிரத...

நாங்க மாநாட்டுக்கு வசூல் பண்றதா சொல்றானுங்க திமுககாரனுங்க. ஏன் வசூல் பண்றது இவனுங்களுக்கு மட்டுமே உள்ள ஏகபோக உரிமையா... ஆமாண்டா... நாங்க வசூல் பண்ணோம். என்ன பண்ணிடுவ... மிரட்டி தாண்டா வசூல் பண்ணோம். உன்னால என்ன புடுங்க முடியும்?

டேய் சின்னப் பையன் சிவசங்கரா... உங்க அப்பன்கிட்டப் போய் என்னப் பத்தி கேட்டுப் பாருடா... வைத்தியை மட்டும் கைது பண்ணியிருந்தா மவனே ஆண்டிமடம் தொகுதில இந்நேரம் இடைத்தேர்தல் தாண்டி...

வைத்தியை உள்ளே அனுப்பிட்டு நாங்க வாயில விரல வச்சிக்கிட்டிருப்பமா... இனிமே திமுக்காரன் எவனாவது பாமகவை எந்த பொதுக் கூட்டத்தில் தாக்கிப் பேசினாலும் அங்கேயே வெட்டுங்கடா... இந்த ராஜாவோ அந்த கருணாநிதியோ ஒரு ம...ம் புடுங்க முடியாது. கருணாநிதியால இனி நிம்மதியா ஆட்சி செய்ய முடியாது. அதுக்கு நாங்க விடவும் மாட்டோம்.

இந்த ஆற்காடு வீராசாமி ஆந்திராவிலருந்து வந்த செ...டு (மிருகத்தை சொல்லி திட்டுகிறார்).. இவனே ஒரு பொறம்போக்கு. இவன் வந்து நம்ம வன்னியர் சங்க கல்விக் கோயில பொறம்போக்குல கட்டியிருக்கிறதா சொல்றான்.

மவனே... தைரியம் இருந்தா ஒரு கமிஷன் போட்டு நிலத்தை சர்வே செய்து பாரு. ஊராட்சித் தேர்தலில் திமுக்காரனுங்க காட்டிக் கொடுத்ததும் கூட்டிக் கொடுத்ததும் ஊருக்கே தெரியும்டா... மானங்கெட்ட பயலுங்களா.

27 சதவிகித இட ஒதுக்கீட்டுக்காகப் போராடுற ஒரே தலைவன் யாரு... இந்தியாவிலயே நம்ம டாக்டரய்யாதான். நீ திராவிடம் பேசி நாட்டை ஏமாத்திக்கிட்டிருக்கே. ரெண்டு கோடி மக்கள் உள்ள நம்ம சமுதாயத்துக்கு 3 அமைச்சராம். ரெண்டு சதவிகிதம் கூட இல்லாத ஆற்காடு வீராசாமி குரூப்புக்கு 2 அமைச்சராம். என்னங்கடா விளையாடறீங்களா...

2011ல் பாமகதான் தமிழ்நாட்டுல ஆட்சி அமைக்கும். இதைக் கருணாநிதியோ ஜெயலலிதாவோ தடுக்க முடியாது.

கருணாநிதியே, எங்களுக்கு முகவரி இருக்கு. உனக்கிருக்கிறதா... திமுக கூட்டணியில் பாமதான் இருக்கு. வன்னியர் சங்கம் இல்ல. சும்மா எங்களை மிரட்டிப் பார்க்காதே. தாங்க மாட்டே... நீ எத்தனை வழக்குப் போட்டாலும் சந்தோஷமா ஜெயிலுக்குப் போவோம், ஆனா வெளிய உள்ள எங்க ஆளுங்க என்ன செய்யணுமோ அதைச் செய்துடுவாங்க. அப்புறம் வருத்தப்பட்டு பிரயோஜனமில்ல.

எங்க டாக்டரய்யா டாஸ்மாக் கடைகளை மூடச் சொல்றார். காரணம், அதனால நஷ்டம் எங்க பாட்டாளி மக்களுக்குத்தான். டாஸ்மாக் மூலம் 9000 கோடி ரூபாய் வருதுன்னு சொல்றே. இது அத்தனையும் எங்க பாட்டாளி மக்கள் பணம். எந்த... (பிராமண சமூகத்தினரை சுட்டிக் காட்டி) டாஸ்மாக்குக்கு வந்து குடிக்கிறான்... பொண்டாட்டி பிள்ளைகளை பட்டினி போட்டுட்டு எங்க விவசாய மக்கள்தானே குடிச்சி அழியறாங்க... அவங்க தாலிய அறுத்துதானே நீ இவ்ளோ கல்லா கட்ற!

இந்த அமைச்சர் ராஜாவுக்கு பூர்வீக சொத்து எவ்வளவு? இன்னிக்கு எத்தனை நூறு கோடி சேர்த்திருக்கான். இதுக்கு காரணம் திமுகாரன் ஓட்டா... எங்க ஓட்டுடா... நாங்க போட்ட ஒன்னரை லட்சம் ஓட்டுலதான் நீ இன்னிக்கு ஜம்பமா சம்பாதிக்கிற... நீதான் எங்காளுங்க மேல கேஸ் போடச் சொன்னியா... மவனே தொலைச்சிடுவேன்!.

மரியாதையா எல்லா கேஸ்களையும் வாபஸ் வாங்கிட்டு வேற வேலயப் பாரு..."

-இதுதான் குரு பேசிய முழு பேச்சு விபரம்.

குருவின் பேச்சில் உள்ள பிரசுரிக்கவே முடியாத அளவுக்கு மட்டகரமான வார்த்தைகளை 'எடிட்' செய்துள்ளோம். ஆதாரம் ஒன் இண்டியா.

இந்தப் பேச்சை குரு பேசியபோது, அருகில் அமர்ந்து ரசித்துக் கொண்டிருந்தவர்தான் ராமதாஸ்.

சுத்தமாக சூடு சொரணையே இல்லாத, காண்டாமிருகத் தோல் படைத்த கருணாநிதிக்கே இந்த பேச்சு சொரணை வர வைத்து விட்டது.   இந்தப் பேச்சை கேட்ட கருணாநிதி, மறுநாள் நடந்த ஒரு திருமண விழாவில், இப்படியெல்லாம் பேசும் ஒரு கட்சியோடு கூட்டணி வைத்துக் கொள்ளத்தான் வேண்டுமா என்று அறிவித்து, பாமக விலக்கப்பட்டது என்று அறிவித்தார்.  2009 தேர்தல் திருவிழாவில் போயஸ் தோட்டத்தின் வாசலில் செருப்பு காண்ட்ராக்ட் எடுக்க வேண்டும் என்று முடிவெடுத்த ராமதாஸ், கருணாநிதி எப்படியாவது கூட்டணியை விட்டு வெளியே அனுப்பினால் போதும் என்று மகிழ்ச்சியானார்.

குரு கைது செய்யப்பட்டார்.   குருவை கைது செய்ததோடு விடாமல், குரு மீது தேசியப்பாதுகாப்புச் சட்டத்தை போட்டார் கருணாநிதி.   தேசியப்பாதுகாப்புச் சட்டம் போடப்பட்டவுடன், அதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று பாமக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.  ஆனால் நீதிமன்றம், மறுத்து விட்டது.  காடுவெட்டி குரு போன்ற அப்பாவிகளை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் அடைத்து விட்டார்களே என்று உருக்கமாக வாதாடினார் குருவின் வழக்கறிஞர்.

ARV_GURU_328056f

நீதிமன்றம் குருவை தேசியப்பாதுகாப்புச் சட்டத்தில் அடைத்தது சரியே என்று தீர்ப்பளித்தது.  அந்தத் தீர்ப்பில் சென்னை உயர்நீதிமன்றம்,

“there is no doubt for us to hold that the speech of the petitioner was abnormal, inflammatory, fuelling passions, inciting and intimidatory and he has provoked the public who attended the meeting to wage a war against the other party men, including the Union Minister, going upto the extent of saying that there will be a bye-election to Andimadam Assembly constituency.  What does he really mean in saying that there will be a bye-election to Andimadam Assembly Constituency is not out of anybody's  guessing, since it shows that he want to do away with the present MLA of Andimadam Assembly Constituency.  A man who is said to be holding a responsible post in a political party and   was a Member of the Legislative Assembly is not at all expected to hurl such unwanted words while addressing a public meeting, provoking and prompting the participants to indulge in illegal activities, including to commit murder of  a People's Representative.  If such persons are not handled with iron hands, they will pollute the Society, provoking, prompting and preaching only illegal activities to others, shaking the Unity of the country.

11. This provocative speech, prompting the people to cause danger to the lives and limbs of opposite party people, who are an MLA and  the Union Minister, and even asking the participants of the meeting not to allow the Union Minister and the MLA to move freely, which has been  guaranteed as a Fundamental Right by the Constitution, has erupted law and order problem in the State, with the other party people protesting against such callous and criminal speech made by the petitioner since at most of the places, the effigies of the petitioner were burnt, Government buses were attacked and damaged at many places in Ariyalur and Perambalur Districts, creating panic and fear among general public, further leading to clashes between the supporters of both the parties.  It is also seen that on the news spreading to other places, it has caused hindrance to the normalcy of life and even tempo of the society.  By delivering such a speech, the petitioner let loose a wave of terror of such greater intensity and magnitude that the even tempo of the life of the community and the general public of Ariyalur and Perambalur Districts and neighbouring areas was put in extreme peril and severe jeopardy, the people of the surrounding areas were panic stricken and the normalcy of life of the community was seriously affected and a feeling of dismay and insecurity prevailed in Ariyalur and Perambalur Districts and the neighbouring districts. The documents available from pages 16 to 42 of the paper book will support this and would show that the violence has spread to other places affecting the normalcy of life and the even tempo of the society.

12. The entire reading of the speech delivered by the petitioner would depict a sorrowful picture as to where we are heading to.    The Freedom Movement of India was carried forward by the Father of the Nation and other National Leaders with the spirit and sole aim of freeing Mother India from the clutches of foreign rule and in the process many inspirational speeches were delivered by them, which have inspired the people to fight for the freedom of the country from the hands of a foreigner, that too in a non-violent manner and by resorting only to non-cooperation movements.  But, now, as could be seen from the case on hand, the so-called leaders, instead of being inspirational and role models to others, are indulging in delivering instigating and provoking speeches to wage war against the fellow country men by resorting to caste politics, which would shake the Unity of the Nation.  The important characteristic of our country is Unity in Diversity.  The people with many religions, beliefs and languages are living under one roof in the country with a sense of brotherhood, which should not be allowed to be broken or shaken by anybody for their self interestedness or invented purposes.

13. Casteism is  the root cause of many law and order problems  in the country.  The petitioner, who is an Ex.MLA, even in his affidavit has proudly stated that he belongs to a particular community as if he is indebted to be loyal only for the caste people that too at the cost of peace and harmony of the country and the safety and liberty of other people.  This ill-culture of promoting casteism, to achieve self goals, at the cost of safety and security of other people and posing threat to the Unity and integrity of the country should not be encouraged.

14. If a man accused of a criminal activity is arrested by the law implementing agency, the legal courses of action are very well open to him and for his supporters.  But, by conducting meetings of protest,  with a view to provoke people to wage war against the persons whom they are suspecting to be the causes for the arrest of the said accused, that too posing serious threat to the lives and limbs and even the personal liberties of such people is heinous and should be dealt with iron hands. “

காடுவெட்டி குரு ஒரு ரவுடி என்பதை சென்னை உயர்நீதிமன்றம் இப்படி பட்டவர்த்தனமாக சொல்லியது.

இது ஒன்றும் சரிப்பட்டு வரவில்லையே என்று ராமதாஸ் மீண்டும் கருணாநிதிக்கு தூது அனுப்பினார்.   எப்படியாவது பாராளுமன்றத் தேர்தலில் ஜெயித்தால் போதும் என்று இருந்த கருணாநிதி குரு மீதான தேசியப்பாதுகாப்புச் சட்டத்தையே விலக்கிக் கொண்டார்.   அப்போது உறவைப் புதுப்பிக்க இந்த இரு கபடவேடதாரிகள் என்ன நாடகம் போட்டார்கள் தெரியுமா ?

“இந்நிலையில், மதுவிலக்கை முழுமையாக அமல்படுத்தக் கோரி, ராமதாஸ் தலைமையில் சமூக ஆர்வலர்கள் மற்றும் சமயத் தலைவர்கள் கொண்ட குழுவினர் நேற்று முன்தினம் முதல்வரைச் சந்தித்தனர்.அவர்களிடம் முதல்வர் கருணாநிதி, படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவதாக உறுதியளித்தார். இதன் முதல்கட்டமாக, கடைகளின் விற்பனை நேரத்தை இரவு 11 மணியிலிருந்து 10 மணியாக குறைத்து, முதல்வர் நேற்று உத்தரவிட்டார்”.

மீண்டும் வன்னியர்களின் வாக்கு வங்கிகளைப் பெற்றால்தான் எப்படியாவது,  பிள்ளையை வழக்கிலிருந்து காப்பாற்ற முடியும், 2014ல் பழையபடி 5 சீட்டாவது பெற முடியும் என்று வன்னியர்கள் மீது கரிசனத்தை பொழியத் தொடங்கினார் ராமதாஸ்.

இந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற திருமண விழாவில் ராமதாஸ் பேசியது…

“வன்னியர் சங்கத்தில் எந்த எதிர்பார்ப்புமின்றி, கடலில் குதிக்க சொன்னாலும் தயாராக இருந்த வீரர்கள் இன்று தளபதிகளாக உள்ளனர். கடந்த கால போராட்டங்களில் அதிகமாக சிறை சென்றவர்கள் செஞ்சி இளைஞர்கள். இளைஞர் படையினர், இளம்பெண்கள், மாணவர் சங்கத்தினர் என வன்னியர்கள் திரண்டு மே.5-ந் தேதி மாமல்லபுரத்துக்கு புறப்பட்டு செல்கின்றனர்.

அங்கு நடைபெற உள்ள வன்னியர் சங்க சித்திரை பெருவிழாவில் 25 லட்சம் வீர வன்னியர்கள், இளைஞர்கள் கூடுகிறார்கள். சத்தியம் கூற, ஆண்ட பரம்பரை மீண்டும் ஆண்டே தீரும். 2016-ல் வன்னியர் ஆட்சி அமைந்தே தீரும் என அவர்கள் கூறுகின்றனர். இது வரை வன்னியர்களை ஏமாற்றிய திராவிட கட்சிகளை வீழ்த்துவது, ஒழிப்பதே இந்த மாநாட்டின் நோக்கம். நாங்கள் இனிவேறு எந்த சின்னத்துக்கும் ஓட்டுபோட மாட்டோம்.

இலவசங்களை கொடுத்து சாராயகடை, சினிமா தியேட்டர்களை திறந்து சாராயம் குடிக்க சொன்னவர்களின் மாயை இனிமேல் எடுபடாது. 4 ஆட்டுக்குட்டிகளை கொடுத்து பெண்களை வாழ சொல்கிறார்கள். இதனால் அவர்கள் பொருளாதாரத்தில் முன்னேறி விடுவார்கள் என இன்னமும் ஏமாற்றுகின்றனர். 1980-ம் ஆண்டில் என்னுடன் வந்தது போல் தற்போதும் என்பின்னால் வரவேண்டிய நேரம் வந்து விட்டது.

வாருங்கள், மற்ற கட்சிகளுக்கு இனிவேலை இல்லை. 2016-ம் ஆண்டோடு திராவிட கட்சிகளுக்கு  மூட்டை கட்ட போகிறோம். அவர்களுடைய அத்தியாயம் முடங்க போகிறது. புதிய பாதையை தொடங்க வேண்டும், புதிய அரசியலை, புதிய நம்பிக்கையை வன்னியர்களுக்கு மட்டுமின்றி அனைத்து தமிழர்களுக்கும் தர உள்ளோம். இதுகுறித்து ஒரே மேடையில் விவாதிக்க நாங்கள் தயார்.

நீங்கள் தயாரா? நீங்கள் இதுவரை எந்த திட்டம் கொடுத்தீர்கள்? ரோஷத்துடன் கூடிய வன்னியர்கள் மற்ற கட்சிகளில் இருக்க வேண்டாம். நெல்லிக்குப்பம் கிருஷ்ணமூர்த்தி, செஞ்சியார் போன்றவர்களின் இன்றைய நிலை என்ன? 2016-ல் இதனை மாற்றி காட்டுவோம். இனியும் நாம் கோழைகளாக இருக்க மாட்டோம். நமது வீரத்தை வெளிப்படுத்தும் நேரம் வந்து விட்டது. தமிழகத்தில் இதுவரை ஒரு வன்னியர் கூட ஆட்சி புரியவில்லை.

நீங்கள் மட்டும் ஆதரவு கொடுத்தால் போதாது. உங்கள் வாரிசுகளையும் அ.தி.மு.க., தி.மு.க.வில் இருந்து விலக வைத்து வன்னியர் சங்க கொடியை பிடிக்க செய்ய வேண்டும். மே.5-ந் தேதி மாமல்லபுரம் வர கூறுங்கள். உங்கள் வாழ்க்கை மாறிவிடும், இதுவரை எம்.எல்.ஏ., சேர்மன், கவுன்சிலர் பதவிகளை தவிர்த்து வேறு என்ன கண்டீர்கள் எழுதிவைத்துக் கொள்ளுங்கள், 2016-ல் வன்னியர்கள் ஆட்சி மலரும் இது உறுதி. இதனை நோக்கி நமது பயணம் தொடரும். “

ஜுலை 2012ல் பேசியது….

“உங்களில் சிலருக்கு சந்தேகம் இருக்கும். தி.மு.க, அ.தி.மு.கவுடன் கூட்டணி வைப்பாரா என சந்தேகம் வேண்டாம்.

கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கே உதித்தாலும் இனி யாருடனும் கூட்டணி வைக்க மாட்டேன். பூமி, கடல், மேகம் உள்ளவரை பாமக தனித்து போட்டியிடும். இனி மற்ற கட்சி கொடியை வன்னியர் பிடிக்க மாட்டான்.

வரும் செப்டம்பர் 17ம் தேதி வேலைவாய்ப்பு மற்றும் கல்வியில் 20 சதவீதம் இடஓதுக்கீடு வன்னியருக்கு வழங்கிட வலியுறுத்தி நாடே மிரளும் அளவிற்கு போராட்டம் நடத்த உள்ளோம்”

ஆகஸ்ட் 2012ல் பொதுக்கூட்டத்தில் பேசியது.

“வன்னியர்களுக்கு உரிய இட ஒதுக்கீட்டை தான் நாம் கேட்கிறோம். பலருக்கு இட ஒடுக்கீடு என்றால் என்ன என்பதே தெரியவில்லை. 100 இடங்கள் இருக்கும் பட்சத்தில் அதில் நமக்கு 20 இடங்களை தனியாக கேட்கிறோம். இதுதான் இட ஒதுக்கீடு.

இந்த இட ஒதுக்கீட்டை மற்ற ஜாதிக்காரர்கள் நமக்காக கேட்பார்களா? கேட்க மாட்டார்கள். நமக்கு நாம் தான் கேட்க வேண்டும். இட ஒதுக்கீட்டை நமக்காக மட்டும் கேட்கவில்லை மற்ற ஜாதிகளுக்காகவும் தான் கேட்கிறோம். நம்மிடம் ஒற்றுமை இல்லை. இதற்காக இந்த ஒற்றுமைக்காக 35 வருடமாக போராடி வருகிறேன். இப்போது தான் ஒற்றுமை வந்துள்ளது. எப்படி கூறுகிறேன் என்றால் ஜெ.குரு உருவாக்கியுள்ள மஞ்சள் படையை பார்த்து தான் ஒற்றுமை வந்து விட்டது என கூறுகிறேன்.

மஞ்சள் நிறமும், அக்னி கலசமும் வன்னியனின் அடையாளம். நாம் ஆட்சிக்கு வந்தால் யாதவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கொடுப்போம். ஏனெனில் வன்னியர்களும், யாதவர்களும் மாமன், மச்சான்கள் தான். யாதவர்களும் 95 ஜாதிகளில் ஒருவராகதான் உள்ளனர். நம்மை போல அவர்களுக்கும் போராட தெரியாது. செப்டம்பர் 17-ந்தேதி நடைபெறும் போராட்டம் ஒரு அடையாள போராட்டம் தான். அதை தொடர்ந்து ஜெயலலிதா தனி இட ஒதுக்கீட்டை தரவில்லை என்றால் வருகிற 2013ம் வருடத்தில் நாம் நடத்தும் போராட்டத்தால் நாடு தாங்காது.

தமிழ்நாட்டில் 12 சிறைகள் உள்ளன. அதில் இருக்கும் கைதிகளை தவிர்த்து 10 ஆயிரம் பேரை அடைக்கலாம். அந்த போராட்டத்திற்கு இட ஒதுக்கீடு கொடுக்கவில்லை எனில் நாம் அடுத்த ஆண்டில் சிறையை பார்ப்போம். கருணாநிதியிடம் தனியாக இட ஒதுக்கீடு கேட்டோம் 107 ஜாதிகளை சேர்த்து கொடுத்தார். முழுமையாக கிடைக்கவில்லை. செப்டம்பர் 17 போராட்டம் சைவ போராட்டம் தான். இதற்கு பிறகு இட ஒதுக்கீடு கொடுக்கவில்லை எனில் 1-ல் 2 பார்த்து விடுவோம். 130 வருடங்களாக வன்னியர் முன்னுக்கு வரவில்லை. இந்த ஜாதியை சேர்ந்த இளைஞர், இளம்பெண்கள் என்னுடைய பேச்சை கேட்டு ஒருமுறை மாம்பழத்திற்கு வாக்களித்தால் இந்த நிலை மாறும்.“

இந்த நெருக்கடிக்கு முன்பெல்லாம், தான் ஒரு சாதிக்கட்சித் தலைவர் என்ற அடையாளத்தை துறக்க விரும்பிய ராமதாஸ், தமிழ் வழிக்கல்வி, சமூக நீதி, மது ஒழிப்பு, ஈழம், என்று அறிக்கைகளும், மேடைப்பேச்சுக்களும் பேசிக் கொண்டிருப்பார்.   தனக்கு வேண்டிய பத்திரிக்கையாளர்களை வைத்து, ராமதாஸ் ஒரு வாழும் பெரியார் என்ற ரேஞ்சுக்கு பில்டப் கொடுத்துக் கொண்டிருப்பார்.

தற்போது அக்னி கலசத்தின் கீழ் எரியும் நெருப்பு மங்கி விட்டதால், சாதி வெறி என்ற நெருப்பைப் பற்ற வைத்திருக்கிறார் ராமதாஸ்.   இப்படியெல்லாம் வன்னியருக்காக உயிரைக் கொடுப்பேன், மயிரைத் திரிப்பேன் என்று பேசும் ராமதாஸ், வன்னியர்களுக்காகவும் எதுவும் செய்ததில்லை.  அக்டோபர் 10 அன்று ராமதாஸின் மகள் வயிற்றுப் பேரன் முகுந்தனின் திருமணம் நடந்தது. அந்தத் திருமணத்திற்கு ராமதாஸ் வரதட்சிணையாக என்ன வாங்கினார் தெரியுமா ?  ஒரு ரோல்ஸ் ராய்ஸ் காரும், போயஸ் தோட்டத்தில் ஒரு பங்களாவும்.  இப்படி வாங்கும் நிலையில்தான் மற்ற வன்னியர்கள் இருக்கிறார்களா… ?

ராமதாஸின் இந்தச் செயல், இனவெறியைத் தூண்டி யூதர்களை அழித்துக் கொன்ற ஹிட்லர் மற்றும் கோயபல்ஸின் செயல்களுக்கு சற்றும் குறைந்ததல்ல.   ராமதாஸ் அரசியல் உலகிலிருந்து அழித்தொழிக்கப்பட வேண்டிய ஒரு விஷக்கிருமி.   இந்த விஷக்கிருமி, தமிழினத்தையே அழித்து விடும்.

ராமதாஸ் போன்ற விஷக்கிருமிகளைக் கண்டிக்க வேண்டிய புரட்சியாளர்கள், திருச்சியின் மூலையில் “பிராமணாள் கபே” என்ற பெயர் இருக்கிறது என்பதற்காக ஒரு ஹோட்டலுக்கு எதிராக போராட்டம் நடத்துகிறார்கள்.   பார்ப்பனின் வேதம் சாதிக்கு அடிப்படையாக இருந்தது என்றால், அந்த பார்ப்பனீயத்தின் மறு வடிவமாக மாறி தலித்துகளின் மீது தாக்குதல் தொடுப்பது இடைநிலைச் சாதியினர்தானே.. ?   தலித்துகளின் மீது தாக்குதல் தொடுத்து விட்டு, பெருமையாக தேவர் ஹோட்டல் என்று மூலைக்கு மூலை இருக்கும் ஹோட்டல்களுக்கு எதிராக போராட்டம் நடத்துங்கள் என்றால், தேவர் என்பது சாதி, பிராமணாள் என்றால் வர்ணம்.  அது ஏஷியன் பெயின்ட்ஸ், இது நெரோலாக் என்று விளக்கம் கொடுக்கிறார்கள்.     தேவர் ஹோட்டல், செட்டிநாடு ஹோட்டல்கள் இருக்கையில் பிராமணாள் ஹோட்டல் இருந்தால் என்ன குடி முழுகி விடப்போகிறது ? அந்த ஹோட்டலை மூடி விட்டால் வர்ணாசிரம தர்மமே அழிந்து விடுமா ?  

தலித்துகளின் சொத்துக்களை சூறையாடி, அவர்கள் வாழ்வாதாரங்களை அழித்து, அவனோடு தீராமல் மோதிக் கொண்டிருக்கும் இடைநிலைச் சாதியினரின் பெயரால் என்ன வேண்டுமானாலும் இருக்கலாமாம்… ஆனால் பிராமணாள் என்ற பெயர் இருக்கக் கூடாதாம்….

பிராமணாள் என்ற பெயருக்கு எதற்காக எதிர்ப்பு என்றால்,  மழை சரியாகப் பெய்யவில்லை என்றால் கூட, அதற்கு ஆரிய ஆதிக்கமே காரணம், பார்ப்பனீயமே அதன் வேர் என்று பேசுவது மற்ற ஆதிக்க சாதியினரின் சாதி மனப்பான்மையை தலித்துகளுக்கு எதிராக தூக்கி நிறுத்த உதவுகிறது என்பதே.  பார்ப்பனியத்தை எதிர்க்கிறேன், பார்ப்பனியமே எல்லா தீமைகளுக்கும் காரணம் என்று முண்டா தட்டுபவர்கள், என் மகனுக்கோ மகளுக்கோ, தலித் சமூகத்திலிருந்து  மட்டுமே திருமணம் செய்வேன் என்று பகிரங்கமாக அறிவிக்கச் சொல்லுங்கள்….

கேட்டால், ‘திருமணம் என்பது தனி மனித உரிமை, தண்ணி குடிக்குது தஞ்சாவூரு எருமை’ என்று விளக்கம் கொடுப்பார்கள்.

பார்ப்பனீயமே எல்லாவற்றுக்கும் காரணம் என்று கூறும் “புரட்சியாளர்கள்” சாதி மறுப்புத் திருமணம் செய்தால் சும்மா விடமாட்டேன் வெட்டுவேன் என்று பகிரங்கமாக அறிவித்த ஒரு ரவுடிப்பயலுக்கு கொம்பு சீவி விட்டுக் கொண்டு வேடிக்கைப் பார்க்கும் ராமதாஸை பகிரங்கமாக ஏன் கண்டிக்க மறுக்கிறார்கள் ? கண்டிக்க மறுக்காமல் அவர்கள் சாதிக்கும் கள்ள மவுனம்,  ராமதாஸுக்கு அவர்களும் உடந்தை என்பதைத் தவிர்த்து வேறு என்ன பொருளை உணர்த்துகிறது ?

பெரியாரின் பார்ப்பனீய எதிர்ப்புக் கொள்கைகள், கவுண்டர்கள், செட்டியார்கள், வன்னியர்கள், முதலியார்கள், தேவர்கள், முத்தரையர்கள், கள்ளர்கள் என்று இடைநிலைச் சாதியினரின் சாதிய ஆதிக்கத்தை தலித்துகளின் மீது நிறுவவவே உதவியிருக்கிறது.  பெரியாரின் படத்தைப் போட்டுக் கொண்டு ஆட்சி நடத்தும் இரண்டு கட்சிகளுமே தலித் விரோதிகளாகவே இருந்திருக்கின்றன, இருக்கின்றன.

3325784744_1dff48b3cb_b

சமூக நீதிக் காவலர், வாழும் பெரியார், தமிழ் குடிதாங்கி, என்றெல்லாம் தன்னையே அழைத்துக் கொண்டு புளகாங்கிதம் அடையும் ராமதாஸ், கருணாநிதிக்கு நிகரான தீயசக்தி.   அவர் ஒரு சாதிச் சங்கத்தின் தலைவர் மட்டுமே.   அவருக்கும் பாட்டாளிகளுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.   மனித இனத்தை நேசிக்கும், தமிழ் மொழியையும், இனத்தையும் நேசிக்கும் ஒவ்வொருவரும் ராமதாஸை புறக்கணிக்க வேண்டும்.   ராமதாஸோடு எந்தப் போராட்டத்துக்காகவும் மேடையேறக் கூடாது.   தன் சுயநலத்துக்காக, ஏழை தலித்துகளின் வீட்டை தீயிட்டு அந்த நெருப்பில் குளிர்காயும் டாக்டர் ராமதாஸ் என்ற தீயசக்தி, தமிழக அரசியலிலிருந்து ஒழித்துக் கட்டப்பட வேண்டும்.   இந்த தீயசக்தியை ஒழித்துக் கட்டுவதே, பாதிக்கப்பட்ட தருமபுரி தலித் மக்களுக்கும், தமிழினத்திற்கும், நாம் செய்யும் மிக மிகப்பெரிய உதவி.

வீர வன்னியர்களின் கோரத் தாண்டவம்...

DSC_0522

DSC_0523

DSC_0527

DSC_0528

DSC_0529

DSC_0530

DSC_0531

DSC_0532

DSC_0533

DSC_0534

DSC_0535

DSC_0536

DSC_0537

DSC_0538

DSC_0539

DSC_0540

DSC_0542

DSC_0543

DSC_0544

DSC_0546

DSC_0550

DSC_0552

 

DSC_0558

DSC_0562

DSC_0564

DSC_0565

எரிந்து முடிந்த விலையில்லா மடிக்கணினி

DSC_0567

DSC_0568

DSC_0569

DSC_0570

DSC_0574

DSC_0575

DSC_0578

DSC_0580

DSC_0582

DSC_0586

DSC_0587

போலீசிடமிருந்து காப்பாற்றுவார் என்று விட்டுவைக்கப்பட்ட கடவுள்கள்

DSC_0588

மன்ணென்ணை எடுத்து வரப்பட்டு தீர்ந்ததும் வீசி எறியப்பட்ட கேன்கள்

DSC_0590

DSC_0594

DSC_0595

DSC_0596

DSC_0601

 

DSC_0603

 

DSC_0604

DSC_0610

DSC_0613

DSC_0614

DSC_0616

DSC_0626

DSC_0628

DSC_0630

DSC_0631

DSC_0633

DSC_0634

DSC_0637

DSC_0638

DSC_0641

DSC_0642

DSC_0646

DSC_0650

DSC_0651

DSC_0653

DSC_0654

DSC_0656

DSC_0660

DSC_0661

DSC_0664

DSC_0668

DSC_0669

DSC_0670

DSC_0671

DSC_0674

DSC_0675

DSC_0677

DSC_0680

DSC_0681

DSC_0684

DSC_0694

DSC_0696

DSC_0699

DSC_0701

DSC_0702

DSC_0704

DSC_0706

DSC_0713

DSC_0720

DSC_0721

DSC_0724

DSC_0725

DSC_0726

DSC_0729

DSC_0728

DSC_0733

DSC_0734

DSC_0736

DSC_0741

DSC_0743

DSC_0745

DSC_0752

DSC_0754

DSC_0755

DSC_0756

DSC_0757

DSC_0761

DSC_0762

DSC_0763

 

DSC_0764

DSC_0797

DSC_0823

DSC_0827

DSC_0851

DSC_0841

DSC_0834

DSC_0872

DSC_0885

DSC_0891DSC_0858

 

Comments  

 
0 #44 Jaivenkit 2012-12-07 09:11
Dear Savukku, please read the article (in Naveena netrikan dated 07.dec.2012) which analysed the root cause of this issue and give your views.
Quote
 
 
0 #43 ராமன் 2012-12-01 22:47
" இந்த காலணியில் 200 பெண்களை கூட்டி வந்து வைச்சிருக்கோம் எந்த பொண்ண விசாரிக்க தேடி வந்திருக்கிரங்க "....இது உண்மையாய் இருந்தால் எத்தனை முறை நாய்க்கன்கொட்டா ய் எரிந்திருக்கும் ....
Quote
 
 
+1 #42 kurt 2012-12-01 16:00
It is most absurd to think that caste will be destroyed because of intermarriages.The child born will get caste certificate from his fathers caste and it will go on...non sense
Quote
 
 
0 #41 venu 2012-11-24 20:56
This story is one sided and vanniyars are being systamatically pictured as anti dalits.The social / economic status of vanniyars is no better than that of Dalits.Because of illiteracy and ignorance this community has been exploited by every political party and media also easily blames vanniyars for every untoward incident taking place in TN.Indescirmnate and ulterior motives of the media really pushing the community to the extremes and ofcourse TN politicians are the no one cheaters of thr poor people.So please check your aspration on vanniyars and report the news without political colour.
Quote
 
 
+1 #40 Kulam 2012-11-23 01:01
[ஃஉஒடெ நமெ="கான்கிரசு"]இந்த தாக்குதல் மிகவும் கண்டிக்கப் படவேண்டியது...
இது வரை சவுக்கு எழுதிய கட்டுரைகளிலேயே மிக மோசமான நடு நிலை சிறிதும் இல்லாத கட்டுரை இது தான்... ஏதோ நாமும் இந்த நிகழ்வை விமர்சித்து எழுத வேண்டுமே என்று நன்பர் எழுதி இருப்பார் போல... இந்த தாக்குதல் மிகவும் கண்டிக்கப் படவேண்டியது...
ஏதோ நமது இதர சில பத்திரிக்கை ஆசிரியர்களைப் போல் சமூக அமைப்பைப் பற்றி ஒன்றுமே தெரியாதவர் போலவும், ஏட்டில் படித்ததை அப்படியே துப்புவது போல இந்த கட்டுரையை எழுதி இருக்கும் சவுக்கு ஒரு சாதாரன் ஆள் இல்லை. பல நிலைகளில் உள்ள மக்களையும் சமுதாய அமைப்பையும் நன்கு அறிந்த நபர்... ஏன் இப்படி ஒன்றுமே தெரியாதவரைப் போல் நடிக்க வேண்டும்??இந்த தாக்குதல் மிகவும் கண்டிக்கப் படவேண்டியது...அ[/ஃஉஒடெ]

ஒர் குலம்...
Quote
 
 
+4 #39 Suresh Raja 2012-11-22 13:21
யார் என்ன சொன்னாலும், இது முழுக்க உண்மையான நடு நிலையான கட்டுரை சவுக்கு... தொடரட்டும் உங்கள் பணி... ராமடோஸுக்கு நல்ல டோஸ்... என் குடும்பத்துல யாரவது பதவிக்கு வந்தா நடு ரோட்டுல செருப்பால அடிக்கலாம்னு சொன்னானே... அது பின்னால என்ன ஆச்சு? இந்தாள இன்னுமா இந்த ஊரு நம்பிக்கிட்டு இருக்கு?
பிராமணாள் கபே பற்றிய செய்தியை தொலைக்காட்சியில ் பார்த்த போது நானும் நெனச்சேன் "ஏன் இப்படி பேர் வைக்கிராங்கன்னு " நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மை. தேவர் ஹோட்டல், செட்டியார் ஹோட்டல் இருக்கும் போது பிராமணாள் கபே னு பேரு வச்சா என்ன? கப்பி பயலுக...
Quote
 
 
0 #38 Naan Thamilan 2012-11-21 08:16
RSS எவ்வளவு ஒழுக்கமான கட்சி என்று உலகம் நன்றாகவே புரிந்து கொண்டுள்ளது.. காந்தியை கொலை செய்துவிட்டு பழியை முஸ்லீம்கள் மீது போட இஸ்மாயில் என்று கையில் பச்சை குத்திக்கொண்டவன ் தானே கோட்சே...இது எந்த வகையான ஒழுக்கம் சார்...

மலேகான் குண்டுவெடிப்பு உள்ளிட்ட பல குண்டுவெடிப்புக ளை செய்துவிட்டு அந்த பழியையும் துவேசத்தையும் முஸ்லீம்கள் மீது போட்டது அதே RSS குண்டர்கள் தானே..

சமீபத்திய குஜராத் கலவரத்தில் ஆயிரக்கணக்கான அப்பாவிகள் கற்பழித்து கொல்லப்பட்டார்க ள்.. இந்த பாதகத்தை செய்தவர்கள் RSS குண்டர்கள் தானே.. இதனை அவர்கள் வாயாலேயே ஒத்துக்கொண்டு நீதி மன்றத்தால் தண்டனை வழங்கப்பட்ட பாபு பஜ்ரங்கி ற்ஸ்ஸ் குண்டன் என்பதை நீங்கள் மறுக்க மாட்டீர்களே...

இதெல்லாம் சில உதாரணங்கள் தான்.. இதெல்லாம் தெரிந்தும் எப்படி சார் RSS ஒரு ஒழுக்கமான கட்சி என்று வாய் கூசாமல் சொல்கிறீர்கள்... ஓ ஒருவேளை இது தான் நீங்கள் ஒழுக்கத்திற்கு வைத்திருக்கும் அளவுகோலோ... ரொம்ப ஒழுக்கமான ஆளு சார் நீங்க..
Quote
 
 
+9 #37 salem veerans 2012-11-19 19:59
கட்டுரையில் நடுநிலமை இல்லை
Quote
 
 
+7 #36 kaankirasu 2012-11-19 19:18
இந்த தாக்குதல் மிகவும் கண்டிக்கப் படவேண்டியது...
இது வரை சவுக்கு எழுதிய கட்டுரைகளிலேயே மிக மோசமான நடு நிலை சிறிதும் இல்லாத கட்டுரை இது தான்... ஏதோ நாமும் இந்த நிகழ்வை விமர்சித்து எழுத வேண்டுமே என்று நன்பர் எழுதி இருப்பார் போல... இந்த தாக்குதல் மிகவும் கண்டிக்கப் படவேண்டியது...
ஏதோ நமது இதர சில பத்திரிக்கை ஆசிரியர்களைப் போல் சமூக அமைப்பைப் பற்றி ஒன்றுமே தெரியாதவர் போலவும், ஏட்டில் படித்ததை அப்படியே துப்புவது போல இந்த கட்டுரையை எழுதி இருக்கும் சவுக்கு ஒரு சாதாரன் ஆள் இல்லை. பல நிலைகளில் உள்ள மக்களையும் சமுதாய அமைப்பையும் நன்கு அறிந்த நபர்... ஏன் இப்படி ஒன்றுமே தெரியாதவரைப் போல் நடிக்க வேண்டும்??இந்த தாக்குதல் மிகவும் கண்டிக்கப் படவேண்டியது...அ
Quote
 
 
+19 #35 gopalpadayatchi 2012-11-19 00:32
தர்மபுரியில் கைது செய்யப்பட்டவர்க ள் வெறும் வன்னியர்கள் மட்டுமல்ல; இஸ்லாமியர்களும் நாயுடுக்களும் கூட கைது செய்யப்பட்டுள்ள னர். இதை வன்னியர் சாதி வெறி என்று மட்டுமே பார்க்க கூடாது. தலித் அல்லாதவர்களைத் தொடர்ச்சியாக எல்லா வகையிலும் சீண்டி வந்ததனால் ஏற்பட்ட கொந்தளிப்பாகவும ் பார்க்க வாய்ப்பிருக்கிற து.

முகமதிய நண்பர் சொன்ன செய்தி
அவர் பகுதியில் முஸ்லிம் மைனர் பெண் காணாமற் போனபோது தருமபுரி நாயக்கன் கொட்டாய் காலனியில் இருக்கும் தகவல் கிடைத்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக தலைவர்களுடன் போய் விசாரித்த பொது அங்கு ஒரு வயதான மூதாட்டி கேட்டார்களாம் இந்த காலணியில் 200 பெண்களை கூட்டி வந்து வைச்சிருக்கோம் எந்த பொண்ண விசாரிக்க தேடி வந்திருக்கிரங்க என்று
என்ன கொடுமை
இதை எந்த அமைப்பாசும் விசாரிங்கள?
Quote
 
 
+10 #34 senthil143 2012-11-18 22:03
savukku you have written only one side story and why it happened after one month of marriage. why you show your anger to ramadass and party.when you write about your suffering from the so called police force and your action is glorified by your self.arrested people are from all castes not only from vanniaers. why don't you marry your own caste girls to dalit and do good think to the community. one think is very clear from the mind set all the writers when the problem comes to their own family then these comments of so secular caste like comments will not come.
Quote
 
 
+5 #33 Tamilian 2012-11-18 21:29
[ஃஉஒடெ நமெ="னான் தமிலன்"]வன்னியர்களின் இந்த செயல் கண்டனத்துக்கு உரியதாக இருந்தாலும் அவர்கள் கொஞ்சம் மனிதாபினம் உள்ளவர்களாக தான் நான் நினைக்கிறேன். இவர்களே ற்ஸ்ஸ் மற்றும் பாரதீய ஜனதா கட்சியால் பயிற்று விக்கப்பட்ட தேச பக்தர்களாக(?!) இருந்தால் வீட்டிலிருக்கும ் பொருள்களை எல்லாம் விட்டு விட்டு அங்கு குடியிருக்கும் அப்பாவிகளை தீயிட்டு கொளுத்தி மகிழ்ந்து இருப்பார்கள். அங்கிருக்கும் கர்ப்பிணிப் பெண்களின் வயிற்றை கிழித்து கொண்டடி இருப்பார்கள். நமது நாடு நிலை பத்திரிக்கைகள் அனைத்தும் இது வன்னியர்களின் எதிர்வினை என்று நியாயப்படுத்தி இருப்பார்கள். காடுவெட்டி குருவை அடுத்த முதலமைச்சர் ஆக்கி அகமகிழ்ந்து போயிருப்பார்கள் நமது பாரம்பரிய பண்பாட்டு தமிழர்கள். காடுவெட்டி குருவும் வாயில் ரத்த கரையுடன் பிரதமர் பதவிக்காக நாக்கை தொங்க போட்டு காத்துக்கொண்டு இருப்பார்...[/ஃஉஒடெ

இது ஒரு முட்டாள்தனமான கருத்து.கண்டனத்திற்கும் உரியது. அது எப்படி பா ஜ க சொல்லியிருந்தால ் தலித்துக்களை கொன்று இருப்பார்கள் என்று
கூறமுடியும்? ஆர் எஸ் எஸ் எவ்வளவு ஒழுக்கமான கட்சி என்று தெரியாமல் உளரக்கூடாது. சாதி வெறியுள்ள சமூகத்தில் நாம் வாழ்கிறோம்! மறக்க கூடாது. பொருளாதார வித்தியாசங்கள் அதிகமாகும் போது இதுவும் அதிகமாகும். அவ்வளவே!
Quote
 
 
+23 #32 Padmanan 2012-11-18 14:31
விடுதலை சிறுத்தைகளின் கொள்கைபரப்பு ஊடகமாக சவுக்குத்தளம் மாறாமல் இருக்க வேண்டுகிறோம். ராமதாஸ் மற்றும் குருவைப் பற்றி எழுதும் நீங்கள் குருமாவைப்பற்றி உண்மையை எழுதுவதில்லை. வேறு சாதிப் பெண்களை பலாத்காரம் செய்து ஏமாற்றி கரம் பிடிப்பதால் தலித் மக்கள் முன்னேறிவிடமாட் டார்கள் என்பதை உங்களுக்கு அறிமுகமான குருமாவிடம் சொல்லுங்கள்.
Quote
 
 
+1 #31 unmai priyan 2012-11-18 13:40
dear my frend puhal, neenga solra mare entha vanniyanum maman machanu koopdrathu kidayathu apdiye koopitalum antha frendunga enga veetuku vantha kellathan ukarvanga avngalaku terium avnga limit silar sekuvara mare aalunagalalatha n prachniye edhanala padhipu pavam poor dalithukatahn aprom Ramadas solli adikra kootam kamithan edhu vanthu vedikaiyana seithi edhla rendu cast pillaingathan kavanam erukanum chance kidaikum but adhu thapu ennathan vai kiliya pesinalum entha vanniyanum para jadhila ponu poitu podhu vidamatan entha nilamaithan varum adhvum darmapuri areavla edhu romba adigam. ennathan padichi pattam vanginalum avanunga puthi marathu.kalara thoki vitukitu oorukulla varuvan enna pudingatanuva enban adanal vantha vinaithan edhu so avoid pannu adutha jathi ponungaalapasan gala. nalla amaithya valalam entha nattil.
Quote
 
 
0 #30 naan thamilan 2012-11-17 15:02
வன்னியர்களின் இந்த செயல் கண்டனத்துக்கு உரியதாக இருந்தாலும் அவர்கள் கொஞ்சம் மனிதாபினம் உள்ளவர்களாக தான் நான் நினைக்கிறேன். இவர்களே ற்ஸ்ஸ் மற்றும் பாரதீய ஜனதா கட்சியால் பயிற்று விக்கப்பட்ட தேச பக்தர்களாக(?!) இருந்தால் வீட்டிலிருக்கும ் பொருள்களை எல்லாம் விட்டு விட்டு அங்கு குடியிருக்கும் அப்பாவிகளை தீயிட்டு கொளுத்தி மகிழ்ந்து இருப்பார்கள். அங்கிருக்கும் கர்ப்பிணிப் பெண்களின் வயிற்றை கிழித்து கொண்டடி இருப்பார்கள். நமது நாடு நிலை பத்திரிக்கைகள் அனைத்தும் இது வன்னியர்களின் எதிர்வினை என்று நியாயப்படுத்தி இருப்பார்கள். காடுவெட்டி குருவை அடுத்த முதலமைச்சர் ஆக்கி அகமகிழ்ந்து போயிருப்பார்கள் நமது பாரம்பரிய பண்பாட்டு தமிழர்கள். காடுவெட்டி குருவும் வாயில் ரத்த கரையுடன் பிரதமர் பதவிக்காக நாக்கை தொங்க போட்டு காத்துக்கொண்டு இருப்பார்...
Quote
 
 
+24 #29 nigaran 2012-11-17 14:48
விசாரித்த, தெரிந்த அனைத்தையும் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி!
இங்கு வந்துள்ள அனைத்து மறுமொழிகளிலும் கூட யாரோ ஒருவரின் ஏதோ ஒரு சாதி வெறி வெளிப்படுவதாக உணர்கிறேன். தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். சாதிகள் இன்றைய சூழலில் பிரிக்க முடியாத ஒன்றாக இருப்பினும் இன்றைய இளம் தலைமுறையினரிமன் முயற்சியால் மட்டுமே அதனை தூர எறிய இயலும். யாரை? திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது திருமணம் செய்து கொள்பவர்களின் விருப்பம். கடைசி வரை திருமணம் செய்து கொள்ளப் போகிறவர்களே வழப்போகிறார்கள் . அவர்களது விசயத்தில் தலையிடுவது முதல் கேவலம். அடுத்தவன் பேச்சைக் கேட்டு புத்தி இல்லாமல் அடித்துக் கொள்வது அதை விடக் கேவலம்
Quote
 
 
+13 #28 Ji M 2012-11-17 13:50
குழந்தைகளின் புகைபடமும் பெண்களின் நிலைமையும் மிகவும் வருந்ததக்கதாவதா ன் உள்ளது.ஆனால் பெண்னை இழந்து மரித்தும் போன குடும்பத்தின் நிலையையும் என்னி பார்க்க வேண்டியுள்ளது.
Quote
 
 
+4 #27 தொண்டி இராஜா 2012-11-17 12:17
இது சரி. இது தவறு என்ற விவாதத்திற்குள் நான் வரவில்லை. இது போல் நடந்தால் என்ன செய்வது என்ற கோணத்தில் யோசிக்காமல் பெற்றவர்களை பற்றி, குடும்பத்தை பற்றி, சுற்றத்தார்களை பற்றி யோசிக்காத அந்த இருவரே இந்த அசம்பாவிதங்களுக ்கு மிக முக்கிய காரணம். இந்த திருமணத்திற்கு தந்தை நாகராஜன் ஒத்துக்கொண்டிரு ந்தால் இதில் எந்த குழப்பமும் வந்திருக்க போவதில்லை. ஒரு தனிமனிதன் தன் குடும்பத்தை சார்ந்துள்ளான், ஒரு குடும்பம் அவர் சார்ந்த சமூகத்தை சார்ந்துள்ளது. அப்படி இருக்கும் சூழ்நிலையில் தனி மனிதன் எடுக்கும் எந்த முடிவாக இருந்தாலும் அது தன்னை, தான் சார்ந்த குடும்பத்தை, இந்த சமூகத்தை பாதித்து விடாது பார்த்துக்கொள்வ து ஒவ்வொருவருடைய கடமை இந்த நிகழ்வு நம் குடும்பத்தில் நடந்தால் நாம் என்ன செய்வோம் என்பதை கருத்தில் கொண்டு கருத்துக்களை பதிவிடுமாறு நண்பர்களை கேட்டுக்கொள்கிற ேன். ஒருவர் நம்ம சாதியை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்தால் அவனை தொலைசுபுடுவேணு காடுவெட்டியார் கூறியதா சொல்லும் உடகங்கள் குறிப்பிட்ட சாதியை கூறி அவங்க நம் வீடுகளில் வந்து குடும்பம் நடத்தட்டும்.என கூறுவதெல்லாம் தாங்களுக்கு தெரியாதா? இது பற்றிய விசாரணை நடத்தி தெளிவாக வாசகர்களுக்கு சவுக்கு பத்திரிகை வெளிச்சம் போட்டு கட்டுமாறு கேட்டுக்கொள்கிற ேன்.
Quote
 
 
+7 #26 தொண்டி இராஜா 2012-11-17 12:13
சவுக்கு பத்திரிகை உள்பட இங்கே கருத்து பதிவுகளை தொடர்ந்து அனல் தெறிக்க பதிவிடும் நண்பர்களே. இது (இந்த சம்பவம்) அடுத்தவர் குடும்பத்தில், அடுத்த ஊரில், அடுத்த மாவட்டத்தில், அடுத்த சமூகத்தில் நடந்தது என்ற செய்தியை வைத்து உங்கள் சிந்தனைக்கு எட்டியதை பதிவிடுகின்றீர் கள். இங்கே நாம் விவாதித்துக் கொண்டிருகிறோம் ஆனால் அவர்கள் அங்கே வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள். அங்கே நிலவும் சூழ்நிலை இரண்டு சமூகத்தாருக்கும ் புரியும். அப்படி இருக்க இது போன்ற முடிவுகளை எடுத்தால் (காதல் திருமணம்) செய்தால் நம் குடும்ப சூழ்நிலை குடும்பத்தினரின ் நிலைப்பாடு எவ்வாறு இருக்கும், இரு சமூகத்தினரின் ஒற்றுமைக்கு ஏதேனும் பங்கம் வருமா? என்பது போன்று இருவரும் யோசிப்பது இல்லையா? தன்னை பெற்றெடுத்த தந்தையை தனது வாழ்விற்கு இவர்தான் சரியான இணை என்பதை சரியாக உணர்த்தி இரு குடும்பத்திற்கு ம், இரு சமூகத்திற்கும் இடையே எந்த குழப்பங்களும் வந்து விடாமல் பார்த்துக்கொண்ட ிருக்க வேண்டியது சம்மந்தப்பட்ட (திவ்யா - இளவரசன்) இருவரும் தான். தன் வாழ்க்கை என்பதை தானே முடிவு செய்துகொள்ளலாம் என்றால் நாம்மை பெற்று, வளர்த்து, படிக்க வைத்து, நமது வளர்ச்சியை, நமது வாழ்க்கையை அவர்களது வாழ்க்கையாக எண்ணி நமக்காகவே வாழும் நமது பெற்றோருக்கு நாம் தரும் பரிசு தற்கொலையா....? இது போன்ற நிகழ்வு நம் குடும்பத்தில் நடந்தால் இது போன்ற விமர்சனங்களை தான் நாம் செய்வோமா? இந்த நிகழ்வில் ஒரு விஷயத்தை நாம் நினைவில் கொள்ளவேண்டும். அந்தப்பெண் சென்றது அக்டோபர் 15 ஆம் நாள் சம்பவம் நடைபெற்ற தேதி நவம்பர் 7 ஆம் நாள் அப்படி இந்த கலவரம் பெண் வீட்டை விட்டு சென்றதற்காக நடந்திருந்தால் அது அக்டோபர் 15 ஆம் நாள் சம்பவம் நடைபெற்றிருக்க வேண்டும். இது நடந்தது நாகராஜன் என்ற சொந்தகாரர் இறந்ததை அடுத்தே இந்த சம்பவங்கள் நடந்தேறியுள்ளன
Quote
 
 
-8 #25 tamilar 2012-11-17 10:08
சவுக்கு தாங்கள் எழுதிய கட்டுரைகளில் இது தான் மிகவும் மோசமான அரைவேக்காடான கட்டுரை நான் பல நல்ல அரசியல் சார்பற்ற்ற தொலைகாட்சி மற்றும் ஊடகம் மூலமாக தெரிந்து கொண்டேன் .

ராமதாஸ் மற்றும் அந்த சமுகத்தை சார்ந்தவர்கள் தான் இந்த கலவரத்துக்கு காரணம் என்றல் அவர்கள் தண்டிகபவேண்டியவ ர்களே ஆனால் காரணம் அவர்கள் மட்டுமே அல்ல.

தலித் நண்பர்கள் தாக்கப்பட்டதற்க ு வன்னியர் நண்பர்கள் தான் காரணம் என்று தாங்கள் கூறுவது முற்றிலும் தவறு. நடத்த கலவரத்துக்கு காரணமாக
வன்னியர் அல்லாத ஏன் ஹிந்து அல்லாத வேறு மதத்தினரும் கைது செய்ய பட்டுள்ளனர் என்பதை தாங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

தாங்கள் குறிபிட்டது போல் 200 வன்னியர்கள் கலந்துக்கொண்ட இக்கூட்டத்தில் தலித்துகள் சார்பாக 15 பேர் கலந்துக் கொள்கின்றனர்.
தமிழ்நாட்டின் முந்தைய சதி வரி கணக்கு எடுப்பின் படி வன்னியன் மட்டும் 2 .75 கோடி அகவே அந்த சமுகத்தை சார்ந்தவர் அதிகமாக கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
அதேபோல் ராமதாஸ் ஒரு தலைவர் மட்டும் தான் குடி பழக்கம் வேண்டாம்
என்று தொடர்ந்து கூறிவருகிறார்
ஆண்ட பரம்பரை மீண்டும் ஆண்டே தீரும் என்று ராமதாஸ் பேசியதில் தவறு ஒன்றும் இல்லை.ஏனினில் ஒரு பெருபான்மை சாதியை சேர்ந்த அரசியல்வாதி அந்த பெருபான்மையான சமுதாயத்தை சேர்த்தவர் ஆளவேண்டும் என்று அவர் கூறியதில் எந்த தவறும் இல்லை.

இங்கு தாங்கள் கட்டுரை எழுதியதின் நோக்கம் தலித் தக்கபட்டர்கள் என்பதை சுட்டிகாட்ட ஆனால் ஏன் சவுக்கு உங்கள் கட்டுரையில் பல இடங்களில் பாப்பானுக்கு ஜால்ரா போட்டுலிர்கள்.

இன்றைக்கு பாப்பான் அல்லாத பல சமுதாயத்தை சேர்ந்தவர்களும் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் முனேறிய தற்கு காரணம் ராமதாஸ் பெற்று தந்த இட ஒதுக்கிடு.


ஆனால் சவுக்கு ராமதாஸ் பற்றி இவ்வளவு கேவலமாக எழுதும் நீங்கள் மற்ற அரசியல் வாதிகளை பற்றி இவ்வளவு கேவலமாக எழுதியதில்லை.

இந்த முழு கட்டுரையும் தாங்கள் வன்னிய சமுதாயத்தின் கால்புனர்சியை
காட்டுகிறதே ஒழிய மிண்டும் இரண்டு சமுதாயமும் நண்பர்கள் அக வேண்டும் என்று ஒரு வரி கூட இல்லை.
தாங்கள் மிண்டும் ஒரு முறை பாப்பன் சொம்பு துக்கி என்பதை நிருபித்துள்ளது இந்த கட்டுரை.
Quote
 
 
+13 #24 RAJKUMARPANDIAN 2012-11-17 09:53
இந்த கொடூரமான சாதி வெறி கும்பலின் தாக்குதலை ..ஏன் பறையர் ..ஆதி திராவிடர் மக்கள் எதிர்த்து நிற்கவில்லை ..சவுக்கு போன்ற தலித் வியாதிகளால் அந்த மக்களிடம் ..நீங்கள் தலித்துகள் (ஆடுகள் ,மாடுகள் போல )கள்..விகுதி ..ர்..விகுதி கூட கிடையாது ..இப்படி ஒரு மக்கள் கூட்டத்தை அழைத்து அவர்களை சுய நம்பிக்கை இல்லாத மக்களாக ..வைத்து தலித்(அடையாள) அரசியல் செய்கிறார்களாம் ...

உங்க சொந்த பிள்ளையிடம் தினமும் சொல்லி பாருங்க ..உன்னால் படிக்க முடியாது ..முடியாது என்று ..நன்றாக படிப்பவனும் மக்காக போய் விடுவான் ...

தலித் ..தலித்து என்று சொல்லி அந்த மக்களை ..உயர்ந்து விடசொன்னால் ..அவன் இன்னும் கீழ தான் போவான் ...நீயும் வீரமானவன் ..உன்னாலும் முடியும் என்று சொல்லி பாருங்க...அப்பொழுது அவன் தன விடுதலையை தானே தேடிக் கொள்ளுவான்..
தலித்து தலித்து என்றே சொல்லிகொண்டிருந ்தால் நீங்க முன்னேறி விடலாம்..

OH!! TO THE PEOPLE WHOM YOU CALL DALITH AND THE ONE WHO BELIVES THE LIE THAT HE/SHE IS A DALITH ..
Quote
 
 
+7 #23 RAJKUMARPANDIAN 2012-11-17 09:37
(R Eswaran) திரு.ஈஸ்வரன் சொன்னது

சாதி ஒரு அடையாளம். குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவன் என்று சொல்வது தவறில்லை.
மற்ற சாதிகளை இழிவாக பேசுவது தவறு. சுமார் 50 வருடங்கள் முன் மிக பின் தங்கிய நிலையில் இருந்த நாடார் இன்று முன்னேறி நல்ல நிலையில் உள்ளனர். இது போல் தலித் மக்கள் ஏன் முன்னேறவில்லை. தலித் தலைவர்களான திருமா, கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன் அவர்களை ஓட்டு வங்கிகளாக நடத்தி வருகின்றனரே தவிர உருப்படியாக ஒன்றும் செய்வதில்லை.


நீங்க அநேகமா BC /MBC பட்டியலில் இருந்து கொண்டு reservation enjoy பண்ணுவதை வசதியாக மறந்து விட்டு பேசுவது தெளிவாக தெரிகிறது SC (Scheduled castes ) Castes என்றால் - சாதிகள் ..பலதரப்பட்ட சாதிகள் ...ஒரே ஒரு சாதி அல்ல..ஒருவரை பார்த்து அவன் sc என்று சொல்லுவது ...உங்களை பார்த்து அவர் BC /MBC என்று பொத்தாம் பொதுவில் சொல்லுவது போன்றது அது உங்களுக்கு பிடித்தம் இல்லாத ,நீங்கள் உடன்படாத விடயம் ...

இல்லை ..நீங்கள் எல்லாம் resrvation அனுபவிக்கீங்க ..அதுனால நீங்க sc தான் உங்கள் சாதி பெயரை சொல்ல உங்களுக்கு தகுதி இல்லை... நீங்கள் sc பட்டியலில் இருப்பதால் என்றால்..நீங்க BC /MBC பட்டியலில் ஏன் இருக்கிறீர்கள் தெளிவாக தெரிகிறது அங்கே எதற்காக உங்கள் சாதியை வைத்திருக்கிறார ்கள் என்று கொஞ்சம் சொல்ல முடியுமா ..அதே கல்வி ,வேலை வாய்ப்பில் உங்களுக்கும் இட ஒதுக்கீடு தேவை இருப்பதால் தான்... நீங்களும் முற்பட்ட வகுப்பினருக்கு மறுக்கப்பட்டுள் ள resevation .. ஐ நீங்களும் enjoy பண்ணுவதால் தான்..

sc பட்டியலில் உள்ள மக்களை தலித் என்று அழைப்பது சரி என்றால் .. BC /MBC பட்டியலில் இருந்து கொண்டு reservation enjoy பண்ணுகிற உங்களை KULITH (குலித்) என்று அழைக்கலாம்...நீங்களும் RESEVATION ENJOY பண்ணுவதை ஏன் மறுக்கிறீர்கள்..மறைகிறீர்கள் SC /ST பட்டியலில் உள்ள மக்களை தலித் என்று அழைப்பதன் மூலம் நீங்களும் RESEVATION ENJOY பண்ணுவதை மறைக்க முயற்சி செய்கிறீர்கள் .
SC = தலித்
BC/MBC=குலித்
இப்படி ஏற்று கொள்ளுவதாய் இருந்தால் எங்களுக்கும் உடன்பாடே...

மற்றபடி உங்கள் எதிர் கருத்துக்களை தொடர்ந்து நாம் நல்ல முறையில் நேர்மையான விவாதத்தில் ஈடுபடலாம்... விவாதிக்கலாம்.
Quote
 
 
+2 #22 கிராமத்தான் 2012-11-17 08:56
பாமக என்ன செய்தது? என்று கேட்போர் கவனத்திற்கு:

தருமபுரி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட வன்னியர் உள்ளிட்ட சமூகத்தினருக்கு ஆதரவாக இருக்கும் ஒரே இயக்கம் பாமக மட்டுமே.

தற்கொலை செய்துகொண்ட, தேமுதிக கட்சி உறுப்பினரான நாகராஜனின் இறுதிச் சடங்கில் அவரது உறவினர்கள் கூட பங்கேற்கவில்லை. பாமகவினர் மட்டுமே கலந்து கொண்டனர்.

சிறைச் சென்ற வன்னியர், நாயுடு, குறும்பர், இசைவேளாளர், செட்டியார் உள்ளிட்ட பல சாதியினரையும் சென்று சந்தித்ததும் போர்வை, தீபாவளி உணவு என பலவற்றிற்கும் ஏற்பாடு செய்ததும் பாமக மட்டும் தான்.

பாதிக்கப்பட்டோர ் பெரும்பாலும் அதிமுக, திமுக, தேமுதிக கட்சியினர். முக்கிய பொறுப்பாளர்கள். ஆனால் அந்தக் கட்சிகள் எதுவும் திரும்பிக்கூட பார்க்கவில்லை.

தருமபுரி சம்பவம் தொடர்பாக நாளை சனிக்கிழமை மருத்துவர் அய்யா அவர்கள் பத்திரிகையாளர்க ளை சென்னையில் சந்திக்க உள்ளார்.
Quote
 
 
+24 #21 R Eswaran 2012-11-17 06:58
இங்கே சாதி ஒழிய வேண்டும் என்று சொல்லும் பலருக்கு தெரியாத உண்மை, தமிழன் என்றால் நமக்கு அடையாளம் போல், சாதி ஒரு அடையாளம். குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவன் என்று சொல்வது தவறில்லை. மற்ற சாதிகளை இழிவாக பேசுவது தவறு. சுமார் 50 வருடங்கள் முன் மிக பின் தங்கிய நிலையில் இருந்த நாடார் இன்று முன்னேறி நல்ல நிலையில் உள்ளனர். இது போல் தலித் மக்கள் ஏன் முன்னேறவில்லை. தலித் தலைவர்களான திருமா, கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன் அவர்களை ஓட்டு வங்கிகளாக நடத்தி வருகின்றனரே தவிர உருப்படியாக ஒன்றும் செய்வதில்லை. தலித் இளைஞர்கள் மற்ற சாதி பெண்கள் காதல் என்பது அதிகரித்து வருகிறது. மற்ற சாதி இளைஞர்கள் தலித் பெண்களை காதல் செய்து கல்யாணம் செய்ததாக செய்திகள் இல்லையே. வன்னிய மக்களுக்கும் தலித்துக்களுக்க ு புகைச்சல் உள்ளதை காண்பிக்கிறது
Quote
 
 
+34 #20 குமார் 2012-11-17 06:56
சவுக்கு நானும் செய்தியாளன் என்பதால் கூறுகிறேன்.உங்கள் விசாரனை வெறும் 30% மட்டுமே உண்மை அறிய நடு நிலையார்களை சந்திக்கவும்.
Quote
 
 
+9 #19 Tamilian 2012-11-16 22:34
இந்த சாதி வெறிக்கு காரணம் ஈ வெ ரா தான்.
அவர் கொளுத்திய விளக்கில் இன்று சாதி தலைவர்கள் குளிர் காய்கிறார்கள்.அவ்வளவே!
இது ஓயாது.சாதிவெறியை வளர்த்துவிட்டது
திராவிட இயக்கமே! இல்லை என்று யாராவது
கூறமுடியுமா?அன்று அரசியல் வெற்றி காண
ஆரம்பிக்க பட்டு ,இன்று ராட்சத மரமாக நிற்கிறது.விதியை நொந்து கொள்வோம்!
Quote
 
 
+5 #18 Real fact 2012-11-16 21:13
Story may be true, but I can’t able to believe that these are PMK’s strategy, Please note, I am not biased with PMK, Did you ever stayed/lived in Dharmapuri, Salem or Erode district hamlets, These are born and brought up of those communities(van nier or gounder), so they never digest or image their relationship with other communities. These are still real fact. May be these parties will take advantages of such communal problems.
Quote
 
 
+4 #17 veeraswamy 2012-11-16 21:08
we saw huge photos it is very unfornate.party politics or cast politics
we ricauest all our politicl leaders sit and sort out the proplm
Quote
 
 
+59 #16 S Karthikeyan 2012-11-16 20:10
சவுக்கு,

ஏழை மக்கள் வீட்டை இப்படி அடித்து நொறுக்குவது தவறு என்றாலும், இந்த கட்டுரை ஒரு பக்கமாக எழுதப்பட்டுள்ளத ு. தலித் மீது நடத்தும் கொடுமைகளை எழுதும் நம் பத்திரிக்கைகள், தலித் செய்யும் குற்றங்களை பற்றி சொல்வதில்லை. சமீப அளவில் குறிப்பிட்ட தலித் தலைவர் தூண்டும் விதமாக, மற்ற சாதி பெண்களை காதலி, கல்யாணம் செய் என்று பேசுவதும் இது போன்ற நிகழ்ச்சிகளுக்க ு காரணம். குறிப்பிட்ட தலித் கட்சி தலைவர்கள் இது போன்று குறி வைத்து மற்ற சாதி பெண்களை காதலிக்க சொல்வதும், பிரச்சினை நடந்தால் கட்டப்பஞ்சாயத்த ு செய்வதும் மற்ற இன மக்களை வெறுப்படைய செய்துள்ளது. தலித் வன்கொடுமை என்ற பெயரில் பொய் புகார் கொடுப்பது, மற்ற சாதி பெண்களை குறி வைத்து காதல் செய்து கல்யாணம் செய்வது போன்ற செயல்களை ஒரு சில தலித் அமைப்புகள் தூண்டி விடுவதையும் எழுத வேண்டும். தலித் வன்கொடுமை சட்டம் நிறைய சமயங்களில் தவறாக உபயோகப்படுத்தப் படுகிறது. உண்மையான காதல் தவறில்லை. மற்ற சாதி பெண்களை காதலி, எந்தப்பிரச்சினை வந்தாலும் நான் வக்கீல் அனுப்புகிறென், படை அனுப்புகிறேன் என்று சொல்வது வெறியை தூண்டும் செயல். இந்த கோவம் வன்னியர்களுக்கு ம், தேவர்களுக்கும், கவுண்டர்களுக்கு ம், நாடார்களுக்கும் வருவதில் தவறில்லை.

சவுக்கு இதன் மூல காரணத்தை ஆராய்ந்து எழுத வேண்டும்
Quote
 
 
0 #15 GOVIND 2012-11-16 19:20
DEAR,
DO YOU EVER HEARD THAT DALIT PEOPLE WERE ATTACKED BY THE OTHER VILLAGE DALIT PEOPLE MASTERMINDED BY DALITS.(FIGHT BETWEEN TWO DALIT COLONY LOCATED ADJACENT) IT WAS NOT A POLITICAL FIGHT RATHER WANT FIGHT.FREEBIE FIGHT. WITHIN THE COMMUNITY CASUALLY THEY ARE FIGHTING OUT OF GREEDY, DRAGGING FEET ,NOT ALLOWING ANY PEOPLE TO LIVE PEACEFULLY,SPRE ADING RUMOURS, DEROGATORY COMMENTS ABOUT THE PERSON WHO IS INTEND TO LIVE WITH THEM AND WORK FOR THEIR WELFARE AND AWARENESS.ONCE YOU GOT TO LIVE WITH THEM THEN ONLY YOU WILL UNDERSTAND THEIR EVIL THOUGHTS AND DESIGN. I AM EXPERIENCING MORE THAN 30 YEARS.THESE PEOPLE NEVER REALISE AND UNDERSTAND MEANINGFUL AND AMICABLE LIVING.THEY CAN DO ANYTHING FOR THE SAKE OF MONEY INCLUDIG BIDDING THEIR BALLOTS SUCH A UNTRUSTED AND UNCHARECTERIISE D MOB. EDUCATION FROM WHERE WILL THEY GET? AND MANY MORE ....... I LEAVE IT HERE!!!!
Quote
 
 
+13 #14 மனிதன் 2012-11-16 15:57
செத்து ஒழிந்தாலும் சாதிக்கு சாவுமணி அடிக்கமாட்டான் அன்புமணியும் அவன் அப்பனும் . இது கோர காட்சியல்ல,eழ காட்சி. மனிதம் மரணிக்கும் போது மதமும் ஜாதியும் தலை தூக்கும் .எத்தனை முறை சொன்னாலும்,எத்த னை உயிர் போனாலும் சாதி காட்டுதனத்தில் இருந்து கம்ப்யூட்டர் ல் வடிவெடுத்து விட்டது. ஃபசெபோக் ஆகவும் ப்லொக்ச்பொட்ச் ஆகவும். முன்பு ஆலமரமும் அரசமரமும் கூடுவதற்க்கான இடங்கள் . இன்று ஃபசெபோக் கும் ப்லொக்ச்பொட்ச் ம் கூடுவதற்க்கான தளங்கள். ஜாதிகளை தேடும் மட்ரிமொன்ய் தளங்கள் வேறொரு பரிமாணத்தில் இன்று பரவிவிட்டது . மட்ரிமொன்ய் தளத்தில் 70 வயது ஆணுக்கும், பெண்ணுக்கும் அவர்கள் ஜாதி சேர்ந்த நபரே வேண்டும் . மனதை புரிந்து கொள்ள தோழமை வேண்டாம் . சந்தேகம் இருந்தால் மட்ரிமொன்ய்.சொம் ல் தேடி பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். மனிதன் மரணிக்கலாம், கண்டிப்பாக, இறுதியாக , உறுதியாக ஜாதி மரணிக்கவே மரணிக்காது. நாம் வெறும் பார்வையாலர்களாவ ே அப்போதும் இருப்போம். ஒன்றும் சொல்லாமல். இது தான் நமது மனம் . நமக்கு வந்தால் மட்டுமே வலியும் வேதனையும், மற்றவர்க்கு நடந்தால் ஒரு தகவல் ஆகவே நமக்கு இருக்கிறது. நாம் மாறாதவரை , நான் மாறாதவரை இது தொடரும் . வேட்ட்கபடவேண்டி ய விசயம
Quote
 
 
+17 #13 VEttitamilan 2012-11-16 15:50
அது ஏன் சவுக்கு பெண்கள் மட்டும் இவனுங்கள விட்டு வேற சாதியில இருக்குது.
Quote
 
 
+11 #12 Raghu 2012-11-16 14:17
ராமதாஸ் தமிழகத்துக்கு என்றுமே விஷத்தேள் தான்.
பெரியார்,காமராஜ ர்,அண்ணா போன்றோர் இருந்த தமிழகத்தில் ராமதாஸ் போன்று சாதியால் அரசியல் நடத்துபவர்கள் இருப்பது கொடுமையே.

சாதி என்பது மக்களின் மனங்களில் இன்னும் ஒட்டிக்கொண்டு தான் இருக்கிறது.ஆனால் அது பிற சாதி மக்களை பாதிக்காத வரை ஒன்றும்
தவறில்லை.ஆனால் அந்த சாதியின் பெயரால் தன்னையும் தன் குடும்பத்தையும் வளர்த்தும் ராமதாஸ் போன்றோர்கள் அரசியலில் இருந்து ஒழிக்கபடவேண்டிய வர்கள் .

சிறுக சிறுக சேர்த்து வைத்த அத்தனையும் தீயில் விட்டவர்களுக்கு மணம் எவ்வளவு குமறியிருக்கும் .அவர்கள் செய்த பாவம் தான் என்ன ?
காடு வெட்டி குரு போன்றவன்கள் காட்டு மிருகங்களிடம் கூட வாழ தகுதி இல்லாதவர்கள் .இதற்கு மேல் இந்த சாக்கடைகளை பற்றி பேச மனம் இல்லை.

2014ல் தி.மு.க ,அ.தி.மு.க இரண்டும் வாய்ப்பளிக்க வில்லை என்றால் பா.ம.க என்ற கட்சி காணாமல் போய் விடும். நடக்குமா?

- ஜப்பான் ரகு
Quote
 
 
-4 #11 meerakumari 2012-11-16 14:10
:roll:
Quote
 
 
+11 #10 venky 2012-11-16 13:44
இதில் யார் தமிழன் இந்த லட்ஷனத்தில் இலஙை தமிழர்க்கு நாம் என்ன செய்ய முடியும். எல்லாமெ அரசியல்
Quote
 
 
+8 #9 palvannan 2012-11-16 12:07
விலஙகுகலை விட மனிதன் மட்டமானவன்..வெரி பிடிது அலையும் வக்கிரமான ஜந்து
இவர்கலைய் நாய் என்ட்ரும் சொல்ல முடியாத ஜந்துகல்..100 பெரியார் வந்தாலும் திருதவெ முடியாத..ஜந்துகல் இவர்கலுகு உல்லகின் எந்த நிலை பெயரும் சூட முடியாத் உன்மையில் மனிதனை தவிர சாதி இல்லை.
Quote
 
 
+3 #8 manik832007 2012-11-16 11:54
We have to neglect Ramdoss from Tamil nadu politics
Quote
 
 
+22 #7 சரவணன் 2012-11-16 11:54
நீங்கள் நாயக்கன்கொட்டாய ் பகுதி ஐ சுற்றியுள்ள செல்லன்னொட்டாய் , வாணியம்பாடியான் கொட்டாய், கோணங்கிநாயக்கணா ள்ளி, செங்கல்மேடு, ஆண்டிஅள்ளி, குட்டூர், ஒன்னியம்பட்டி, அரியகுளம், சீராம்பட்டி, இரக்கிரிகான் கொட்டாய், கோனம்பட்டி, புளியம்பட்டி, வெ.கொல்லப்பட்டி, வெள்ளாளப்பட்டி, பழையூர், மத்திமரத்துபப்ட ்டி இன்னும் சுற்றியுள்ள இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் கிராமங்களில் அப்படி என்ன தமிழ்நாட்டில் எங்கும் இல்லாத சாதி வெறி வன்னியர், நாயுடு, குறும்பர், செட்டியார், பார்பர் ஷாப் சிவா உள்ளிட்ட உங்கள் அனைவருக்கும் அப்படி என்ன வெறி விடுதலை சிறுத்தைகள் பொறுப்பாளர் நந்தன் சொல்வதை அப்படியே பேசுறாங்க புகார் சொல்றாங்க ஏன் அது மட்டுமல்ல முன்னால் நக்சல் தோழர் பெண்ணை அவர் அப்பா நாகராஜிடம் ஒப்படைத்துவிட்ட ு அவரிடம் நானே பேண் கேட்க வருகிறேன் என்று மூன்று, நான்கு முறை பேச்சு வார்த்தை நடத்தப்பட்டதா இல்லையா இன்னும் நிறைய விஷயங்கள் இருக்காமே அப்டின்னு விசாரிச்சு, அலசி அனைத்து தரப்பு கருத்துகளையும் பரிசீலிங்க

அதுக்காக இப்படி ஒரு அழிவை சரின்னு சொல்லல
Quote
 
 
+4 #6 R Chandrasekaran 2012-11-16 11:53
நெஞ்சு பொறுக்குதில்லைய ே... இந்த நிலை கெட்ட மனிதரை நினைத்துவிட்டால ்...
வஞ்சக பேய்கள் என்பார்.. அந்த மரத்தில் என்பார்.. இந்தக் குளத்தில் என்பார்....
Quote
 
 
+16 #5 kanenan 2012-11-16 11:38
சவுக்கு ஒரு தலித் பத்திக்கை
Quote
 
 
+15 #4 amuthapriyan 2012-11-16 11:37
நாங்கள் இந்தியர் என்றார்கள் - பக்கத்து மாநிலக்காரன் தண்ணி தர மாட்டேன்னான்.

நாங்கள் தமிழர் என்றார்கள் - வேற ஜாதிக்காரன் நல்ல அடிச்சான்

நாங்கள் திராவிடர் என்றார்கள் - வேறு ஜாதியினர் எங்களை தலித் என்று ஒதுக்கினார்கள்.

ஓட்டுப் பொறுக்கி அரசியல்வாதிகளால ் நாங்கள் மனிதர்களா என எங்களை நாங்களே கேட்டுக் கொள்கிறோம்.

இதுதான் இன்றைய தமிழ்நாடு. மானங்கெட்ட இந்தியா....
Quote
 
 
+25 #3 சரவணன் 2012-11-16 11:36
நத்தம் சம்பவம் 30 விழுக்காடு விசாரித்து இருக்கீங்க மீதி திரைக்கதையா மாத்தி இருக்கீங்க
Quote
 
 
+12 #2 mokkaraasu 2012-11-16 11:30
ஜாதி வெறி தூன்டும் இந்த கட்டுரை..இவ்வலவு வக்கனை பேசும் நீங்கள் ஒரு தலித் குடும்பத்தில் சம்பந்தம் வைக்க தயாரா..??
Quote
 
 
+42 #1 தமிழ் அரசன் 2012-11-16 11:16
இனி எவனும் சாதி ஒழிப்பு திருமணம் என்று .. ஆதிக்க சாதி பெண்களாக பார்த்து திருமணம் செய்து பிறகு சிறிது மாதம் கழித்து அவளை வாழாவெட்டியாக வீட்டுக்கு அனுப்ப பயப்படுவான் , இனி தங்கள் பெண்களை தெரியமாக பள்ளிக்கும் கல்லூரிக்கும் அனுப்பாலாம் என்ற எண்ணம் அப்பகுதியில் உள்ள வன்னியர் மற்றும் கொங்கு ,நாய்டு ,முதலியார் மக்களுக்கு நம்பிக்கை வந்துள்ளது .... ஒரு தரப்பு நியாயங்களை மட்டும் வைத்து கட்டுரை எழுதி பிரபலமாக நினைக்கும் முட்டாள்களுக்கு , அங்கு நடப்பது என்ன என்று தெரியாமல் இதை நம்ப்புபவர்களை பற்றி எங்கள் பகுதி மக்களுக்கு கவலை இல்லை ... இருப்பிடத்தை கொளுத்தியது தவறே ... அனால் இப்படி சாதி மறுப்பு திருமணம் என்று இவள்கள் எத்துனை தாய்மார்களின் வயிற்றில் நெருப்பை தெளித்தார்கள் அதை ஒப்பிடும்போது இது குறைவே .
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 93 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday6477
mod_vvisit_counterYesterday9391
mod_vvisit_counterThis week6477
mod_vvisit_counterLast week78643
mod_vvisit_counterThis month287852
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12809971