முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
எண்ணற்ற வினாக்களை எழுப்பும் மதிப்புமிக்க நூல்! - சீமான். அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 16
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
திங்கட்கிழமை, 19 நவம்பர் 2012 20:58

invitation

தோழர் திருச்சி வேலுச்சாமியின் நூலுக்கு சீமானின் அணிந்துரை... 

முன்னாள் பிரதமர் இராஜீவ் காந்தி கொலை தமிழ்நாட்டின் அரசியலையும், ஈழத்தின் நம் சொந்தங் கள் நடத்திய நியாயமான, தீரமிக்க விடுதலைப் போராட்டத்தையும் பெரிதும் பாதித்த ஒரு நிகழ்வாகும். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமே இராஜீவ் காந்தியை கொல்வதற்கு சதித்திட்டம் தீட்டி, அதை இந்திய மண்ணில் நிறைவேற்றியது என்று இராஜீவ் கொலையை புலனாய்வு செய்த மத்திய புலனாய்வுக் கழகம் கூறியது, அதனை நீதிமன்றங்கள் ஏற்று தீர்ப்பும் அளித்தன. அதன் விளைவே நமது தம்பிகள் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோர் தூக்குக் கயிற்றை எதிர்நோக்கி கடந்த 21 ஆண்டுகளாக சிறைக்கொட்டடிகளில் வாடிக்கொண்டிருக்கின்றனர்.

இராஜீவ் காந்தியை உண்மையில் சதித்திட்டம் தீட்டி கொன்றவர்கள் யார்? ஏன் கொன்றார்கள்? அதனால் அவர்கள் அடைந்த இலாபம் என்ன? என்கிற கோணத்தில் சிந்தித்தவர்களுக்கெல்லாம் எட்டாத பல உண்மைகளை தான் பெற்ற நேர்முகமான அனுபவங் களின் வாயிலாக, அன்றிருலிருந்து இன்று வரை தமி ழக மக்களிடம் துணிச்சலாக எடுத்துக் கூறி வருபவர் அண்ணன் திருச்சி வேலுசாமி அவர்கள். இராஜீவ் காந்தியின் கொலை பற்றியும், அதன் பின்னுள்ள அரசி யலைப் பற்றியும், சதியைப் பற்றியும் பேசுவதற்கே பலரும் அஞ்சிய காலகட்டத்தில், இராஜீவ் கொலையில் தொடர்புடைய சந்தேகத்திற்குரிய நபர்களின் முகங்களை தமிழ்நாட்டின் மக்கள் மன்றத்தில் தோலுரித்துக்காட்டினார் வேலுசாமி அவர்கள்.

இராஜீவ் கொலையின் முக்கிய சூத்திரதாரிகளான சந்திராசாமி, அரசியல் தரகர் சுப்ரமணியம் சாமி ஆகியோரின் பங்கு பற்றி இந்தியாவின் பல நாளிதழ்களும் ஊடகங்களும் அவ்வப்போது எழுதினாலும் அண்ணன் வேலுசாமி மட்டுமே அதனை தொடர்ச்சியாக, உண்மையின் குரலாய் மக்களிடம் பேசிவந்தார். ஜனதா கட்சியின் தலைவராகவும் மத்திய அமைச்சராகவும், இந்திய அரசியலில் சக்திமிக்க அரசியல்வாதியாகவும் திகழ்ந்த சுப்ரமணியசாமியுடன் நெருங்கிப் பழகி, அவருடைய நம்பிக்கையை பெற்றவராக இருந்தும், இராஜீவ் கொலையில் சாமிக்கு தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகம் முளைவிட்ட நாள் முதல், அவருடன் தனக்கு இருந்த நெருக்கத்தைப் பயன்படுத்திக்கொண்டு, தனக்கு ஏற்பட்ட சந்தேகத்தை அண்ணன் வேலுசாமி விலைபேசியிருப்பாரேயானால் இன்றைக்கு வியத்தகு நிலையில் மிகுந்த அதிகாரமிக்க மத்திய அமைச்சராகவே உலா வந்திருப்பார். ஆனால், தனது வாழ்விற்கே அச்சுறுத்தலாகும் அளவிற்கு ஆபத்து நிறைந்த அந்த கொலைச் சதியைப் பற்றி, தான் அறிந்த உண்மைகள் அனைத்தையும் மக்கள் மத்தியில் சொல்வது என்று முடிவெடுத்து, தமிழ்நாட்டின் ஒவ்வொரு நகரமாகச் சென்று விரிவாக பேசியது மட்டுமின்றி, ஜெயின் ஆணையத்தின் முன் வாக்குமூலம் தாக்கல் செய்து உண்மையை உலகிற்குப் பறைசாற்றினார்.

ஜெயின் ஆணையத்தில் வேலுசாமி அவர்களின் வாக்குமூலமும் சுப்ரமணிய சுவாமியை அவர் குறுக்கு விசாரணை செய்தததும் அவருடைய வினாக்களுக்கு பதிலளிக்க முடியாமல், வியர்வை மழையில் சுப்ரமணியசாமி நனைந்து நின்றதும், இராஜீவ் கொலையில் சதித் திட்டம் தீட்டியவர்கள் யாரென்பதை உலகம் உணர உதவியது. சுப்ரமணிய சாமிக்காக பேரம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்த வாழப்பாடி இராமமூர்த்தி, சந்திராசாமியும், சுப்ரமணியசாமியும் இராஜீவை கொல்ல சதித்திட்டம் தீட்டியது ஜெயின் ஆணைய விசார ணையில் வெளிப்பட்ட பின்னரும் அவர்களை விசாரிக்க மத்திய புலனாய்வுக் கழகத்தின் சிறப்பு புலனாய்வுக் குழுத் தலைவர் டி.ஆர். கார்த்திகேயனின் உண்மை முகத்தை அன்றைக்கே கிழித்தெறிந்தவர் அண்ணன் வேலுசாமி அவர்கள்.

‘ராஜீவ் படுகொலை : தூக்குக் கயிற்றில் நிஜம்’ என்ற இந்த புத்தகத்தை படித்து முடித்தபோது எனக்கு ஏற்பட்ட அனுபவம் வித்தியாசமானது. இந்தியாவைப் போன்றதொரு ஜனநாயக நாட்டில், அதன் முன்னாள் பிரதமரை, இந்த நாட்டிற்குள் இருந்தே சதி செய்து கொன்றுவிட்டு, இன்று வரை இந்திய அரசியலில் கம்பீரமாக வலம் வர முடியும் என்றால், இந்த நாட்டின் அரசியலும் அதிகாரமும் யாரால் இயக்கப்படுகிறது? சுப்ரமணியசாமியை அண்ணன் வேலுசாமி குறுக்கு விசாரணை செய்தபோது, அவர் வியர்வை மழையில் நனைந்த காட்சியை நேரில் பார்த்த இராஜீவ் காந்தியின் மகள் பிரியங்கா காந்தி முகம் சிவந்தார் என்று எழுதியுள்ளார்.

ஆனால் பின்னாளில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தபோது, சுப்ரமணியசாமி மீது ஏன் வழக்குத் தொடரப்படவில்லை, இராஜீவ் கொலையில் அந்நிய சதி குறித்து ஆராய அமைக்கப்பட்ட பல்நோக்கு விசாரணை அமைப்பு ஏன் அவரை விசாரணைக்கு உட்படுத்தவில்லை? தமிழீழத்தின் மீது சிங்கள இனவெறியன் இராஜபக்ச தொடுத்த இனப் படுகொலைப் போருக்கு எல்லாவிதத்திலும் உதவி, ஒன்றே முக்கால் இலட்சம் தமிழர்களை கொன்று குவிக்கக் காரணமாகயிருந்த, இந்தியாவின் ஆட்சி அதிகாரத்தைத் தனது காலடியில் வைத்திருக்கும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தனது கணவரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியவர்கள் சந்திராசாமியும், சுப்ரமணியசாமியும்தான் என்று தெளிவாக தெரிந்த பின்னரும் அவர்களின் மீது தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி விசாரணைக்கு உத்தரவிடாதது ஏன்? என்ற கேள்வியும் எழுகிறது.

இப்படி எண்ணற்ற வினாக்களை எழுப்புகிறது அண்ணன் வேலுசாமி அவர்களின் இந்த மதிப்புமிக்க நூல். இப்படிப்பட்ட ஒரு நூலை வழங்கியதற்காக அண்ணன் வேலுசாமிக்கு தமிழினம் என்றென்றும் கடமைப்பட்டிருக்கும். எப்போதும் பேரன்பிற்கும் பெருமதிப்பிற்கும் உரிய என் தாய்த்தமிழ் உறவுகள் அனைவரும் இந்தப்புத்தகத்தை தவறாது வாங்கிப்படிக்க வேண்டுகிறேன்.

- செந்தமிழன் சீமான்

 

Comments  

 
+1 #15 mutt 2012-12-22 23:09
See YouTube videos for Velusamy interview. Then only understand the truth.
Quote
 
 
-6 #14 Sukhoi30MKI 2012-12-15 09:41
இன்று நரம்பு புடைக்க ஈழம் பற்றிப் பேசும் செபாஸ்டியன் சைமன் (a.k.a சீமான்) அன்று தன் படத்தில் கதாநாயகியாக நடிக்க தேர்ந்தெடுத்தது சிங்களத்தி பூஜாவை. ஏழு கோடி தமிழர்கள் வாழும் தமிழ்நாட்டில் கிடைக்காத பெண் அவனுக்கு சிங்களத்தியில் கிடைத்தாளாக்கும ்?
த்தூ...இந்த பொழப்புக்கு....
Quote
 
 
+1 #13 M.S.Chagla 2012-12-03 10:04
Where can I buy this book? Please send me details of the purchase order/details.
Quote
 
 
+2 #12 Saba 2012-12-01 23:53
இங்கு இந்த நூல் பற்றி கேள்வி கேட்பவர்கள் முதலில் அதைப் படிக்க வேண்டுகிறேன். திருச்சி வேலுசாமி யார் என்பதும் உங்களுக்கு அதில் தெளிவாகத் தெரியும்.
Quote
 
 
+11 #11 BALANT 2012-11-30 21:35
கொஞ்சம் கூட அரசியல் அறிவும் வரலாறு பற்றிய அறிவும் இல்லாத திராவிடர்கள் மட்டுமே - சீமானைப் பற்றியும் தமிழினத்தின் வேதனைகளைப் பற்றியும் கிண்டல் அடிப்பார்கள் - உங்களைப் போன்றவர்களால்தா ன் நாங்கள் இத்தனை நாட்கள் அடிமையாக இருக்கிறோம்
Quote
 
 
-15 #10 True Indian 2012-11-30 16:30
ராஜீவ் காந்தி கொல்ல பட்ட போது அவருடன் 14 தமிழர்களும் இறந்தார்கள். அந்த 14 அப்பாவி தமிழர்களை பற்றி வருத்த படாமல் அவர்களை கொன்றவர்களை ஆதரிக்கும் எவரும் உண்மையான தமிழர்களே இல்லை. சக தமிழர்களை கொன்ற கொலையாளிகளை ஆதரிக்கும் அனைவரும் தேச துரோகியே.
Quote
 
 
-8 #9 ராமன் 2012-11-29 21:06
நண்பர் ஆண்டனி ராஜ் அவர்களூக்கு எனது மனமார்ந்த நன்றிகள். செம்மறி ஆடுகளை வைத்து பண்ணையாருக்கு பெருமை. ஆட்டு மந்தைக்கு என்ன பெருமை. ஆனால் பண்ணையார், மண்டியிட்டு மடிபிச்சை கேட்டது கூட அலைவரிசை நான்கில் அடுத்த மாவீரர் தினத்தில் வரலாம். ஆனால் ஆட்டு மந்தைகள் மே...மே என்று ...... தூ வெட்கம் கெட்ட பிழைப்பு....
Quote
 
 
0 #8 Malar 2012-11-29 11:56
Where can I buy this book online?.
Quote
 
 
-17 #7 Tamilian 2012-11-29 10:07
ஏழுதியவர் ஒரு அனாமதேயம். யாரென்றே யாருக்கும் தெரியாது. அதற்க்கு சிபாரிசு ஒரு வி.புலிகள் கைகூலி! இதை படிப்பதால் யாருக்கு லாபம்? புத்தகம் விற்பனை ஆகும் என்பது தவிர?
Quote
 
 
0 #6 jothy 2012-11-28 06:52
Hi Savukku,

Please email me Patricia Pathippagam web address or email address I like to buy this book.

Thanks

jothy
Quote
 
 
-12 #5 Tamilian 2012-11-24 12:10
வேலுசாமி போன்ற மாபெரும் துப்பறியும் மேதையை விட்டு விட்டு சி பி ஐ போன்ற
அமைப்பிடம் எதற்காக ராஜிவ் கொலையை
விசாரிக்க கொடுக்க பட்டது? இதை ஏன் வேலுசாமி நீதிமன்றத்தில் அன்றே தடை வாங்கவில்லை? கொடுத்திருந்தால ் சு ஸ்வாமியை ஜெயிலில் போட்டிருப்பார் அல்லவா? இதை பற்றி மேதகு சீமான் ஒன்றும் கூறவில்லையே? 3 கொலையாளிகளும் 21 வருடங்கள் களி தின்று இருக்கமாட்டார்க ளே?
Quote
 
 
-17 #4 antony rajan 2012-11-20 14:38
dear savukku,
I already send some feedback, but it seems that you dont want to paste due to the crisitism about prabhakaran. is this right?..how can we trust your article?, you also doing same as nakkheeran?

thanks
Quote
 
 
+20 #3 antony rajan 2012-11-20 10:59
ராஜிவ் கொலையை அவர்கள் செய்யவில்லை என நாம் கதறி கத்துவதற்கும், நாங்கள் செய்யவில்லை என் மறுப்பதற்கும் வித்தியாசம் இல்லையா?

என்றாவது மேதகு பிரபாகரன் இதுபற்றி பேசினாரா? அப்படுகொலைக்கு பின்னால 18 மாவீரர் தினஉரையில் என்றாவது அதுபற்றிசொன்னார ா?, இல்லை கிளிநொச்சி மாநாட்டில் கூட "துன்பியல் சம்பவம்" என நகையாடினாரே தவிர முற்றிலும் நாம் செய்யவில்லை என மறுத்தாரா?..

ஒருமுறை, ஒரே ஒருமுறை நாங்கள் அப்படுகொலையை செய்யவில்லை,வேண ்டுமானால் இந்திய அரசுடன் விவாதிக்கதயார் என்று கூறினாரா?. தன்னை நம்பிய‌ (நம்பவைக்கபட்ட) மக்களின் எதிர்காலத்தினை நினைத்தால் ஒரு தலைவன் அந்த பழியினை துடைக்கமுற்படமா ட்டானா?..இவ்வளவு அழிவு நடந்திருக்குமா?

18 ஆண்டுகளாக பேசவில்லை, பிரபாகரனிடம் அதைபற்றி கூடகேட்கவில்லை..இப்போது புத்தகம் எழுதுகிறார்களாம ்....
Quote
 
 
+10 #2 sundarwipro 2012-11-20 04:11
கண்டிப்பாக இந்த புத்தகம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்புவோமாக.
Quote
 
 
-5 #1 vennai 2012-11-19 21:28
vetti pasanga , veena ponavan, ulaithu pilaikkamal orran kasil pudingi thinnum koottam ellarum varungal.. :lol: :lol:
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 134 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday6222
mod_vvisit_counterYesterday11112
mod_vvisit_counterThis week27421
mod_vvisit_counterLast week80132
mod_vvisit_counterThis month230153
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12752272