முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்தொடர்புக்கு
+++
காதல் டாக்டர்.. … அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 37
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
திங்கட்கிழமை, 19 நவம்பர் 2012 22:28

4740740575_c8b22d94a7_bகாதலிப்பவர்களுக்கெல்லாம் ஒரு அற்புத செய்தி.   காதலிக்கும் போது பலருக்கு இருக்கும் ஒரு அச்சம் நம் காதல் உண்மையானதுதானா…  நம் காதல் நிறைவேறுமா… நாம் ஒருவரையொருவர் காதலிப்பது சரியானதா… இல்லையா.. இது போல பல சந்தேகங்கள் காதலர்களுக்கு எழுவது இயல்பானதே.

ஆனால் இந்தச் சந்தேகங்களையெல்லாம் யாரிடம் போய் தீர்த்துக் கொள்வது ? காதலித்துக் கொண்டு, கல்யாணமும் செய்து, அந்தக் காதல் உண்மையான காதல் அல்ல என்பது தெரிகையில் ஏற்படும் வேதனை, இழப்பு எத்தகையது… ?

அப்படியெல்லாம் காதலித்து, கல்யாணம் வரை போய் காதலிப்பவர்கள் யாரும் அவஸ்தைப் பட வேண்டியதில்லை.  காதலர்களுக்கெல்லாம் வரப்பிரசாதமாக, ஒரு காதல் டாக்டர் இருக்கிறார் என்பது தெரிந்தால் காதலர்கள் எப்படி மகிழ்வார்கள்…. ?  எவன்டா அது….  பாருங்க சார்.. எவ்வளவு சீரியஸான மேட்டர் பேசிக்கிட்டு இருக்கும்போது ஒரு பொறுப்பில்லாத பயல், அந்த டாக்டர் ஸ்டெதஸ்கோப்பை எங்க வச்சு டெஸ்ட் பண்ணுவார்னு கேக்கறான்…  இடியட்…

சனி அன்று காலை ஹோட்டல் ஃபோர்ட்டல்லில் தமிழ்க்குடிதாங்கி, சமூகநீதிப் போராளி, வாழும் பெரியார், வன்னிய குல திலகம், வன்னியரின் வாழ்வுரிமை, (வேற என்ன சொல்லலாம்….) அன்புமணியின் அப்பா, சவுமியாவின் மாமனார்.. போதும்.. தருமபுரி கலவரம் தொடர்பாக ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தினார்.

பத்திரிக்கையாளர் சந்திப்பு தொடங்கியதும், தருமபுரியில் நடந்தவை என்ன என்பதை விளக்க, பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் செந்திலை பேசச் சொன்னார் தமிழ்த் தடிதாங்கி.  சாரி… குடிதாங்கி.

மருத்துவர் செந்தில், நாயக்கன் கொட்டாய் பகுதியைச் சேர்ந்த திவ்யா என்ற பெண்ணை, இளவரசன் என்ற வாலிபன் கிண்டல் செய்து, தொடர்ந்து தொந்தரவு செய்து வந்திருக்கிறான்.  திவ்யா பிஎஸ்ஸி நர்சிங் படித்துக் கொண்டிருந்தாள்.  இளவரசனின் தொந்தரவு தாங்க முடியாமல், திவ்யாவை ஹாஸ்டலில் சேர்த்தனர்.  ஹாஸ்டலில் சேர்த்தும் இளவரசனின் தொந்தரவு தொடர்ந்தது.  ஒரு நாள் திடீரென்று இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். பெண்ணைக் காணவில்லை என்று பெண் வீட்டார் காவல்நிலையத்தில் புகார் செய்தார்கள்.   பெண்ணை ஒப்படையுங்கள் என்று பெண் வீட்டார் கேட்டதற்கு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வந்திருந்த நான்கைந்து பேர், பெண்ணை ஒப்படைக்க முடியாது என்று காவல்நிலையத்திலேயே மறுத்தனர்.  இதன் தொடர்ச்சியாகவே சம்பவங்கள் நடந்தேறின என்றார்.

அவரைத் தொடர்ந்து பேசத் தொடங்கினார் மருத்துவர் அய்யா.  வருந்தத்தக்க சம்பவங்கள் நடந்தேறியுள்ளன.  இச்சம்பவங்கள் நடந்திருக்கக் கூடாது. எந்தச் சம்பவங்கள் நடக்கக் கூடாது என்று 32 ஆண்டுகளாக போராடி வந்தேனோ, அந்தச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளது வேதனை அளிக்கிறது. நேற்று பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த தம்பி தொல் திருமாவளவன், இந்த வன்முறைச் சம்பவத்துக்குக் காரணம் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம் என்று கூறியுள்ளார்.  நான் இதை எதிர்ப்பார்க்கவில்லை.  இது மிகவும் அபத்தமானது.   பாட்டாளி மக்கள் கட்சியின் பெயரைக் கெடுக்க வேண்டுமென்றே சிலர் இது போன்ற பொய்ப்பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தருமபுரியில் நடந்தது இரண்டு சமூகத்திற்கு இடையிலோ அல்லது இரண்டு கட்சிகளுக்கு இடையிலோ நடந்தது அல்ல.    அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு இடையே பல காலமாக பகை இருந்து வருகிறது.  அந்தப் பகை காரணமாகவே இந்த மோதல் நடந்துள்ளது.   சமீபத்தில் அங்கே நடந்த திருமணம் இதற்கு காரணமல்ல.  பெண்ணின் தந்தை நாகராஜன், தலித் சமூகத்தைச் சேர்ந்த பலரால் கடுமையாக அவமானப்படுத்தப்பட்டிருக்கிறார்.  குறிப்பாக தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒரு உதவி ஆய்வாளர், நாகராஜனை திட்டி, தற்கொலை செய்து கொள்ளுடா என்று கூறியுள்ளார்.  இதனாலேயே அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

DSC_0976

ஏற்கனவே உள்ள முன்பகை காரணமாக பாதிக்கப்பட்ட மக்கள் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள்.  தற்போது குற்றம் சாட்டப்பட்டுள்ள மக்களில் வன்னியர்கள் மட்டும் இல்லை.  நாயுடுக்கள், செட்டியார்கள், பழங்குடி இனத்தைச் சேர்ந்த குரும்பர்கள் போன்றோர் உள்ளனர்.  இது கட்சிகளுக்கிடையேயான தகராறும் அல்ல.  இன்னும் சொல்லப்போனால் தற்கொலை செய்து கொண்டு இறந்து போன நாகராஜன் தேமுதிகவைச் சேர்ந்தவர்.   கலவரத்துக்குக் காரணமாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள முருகேசன், அதிமுகவைச் சேர்ந்தவர்.  மற்றொருவரான பச்சையப்பன் திமுகவைச் சேர்ந்தவர்.   இது தவிர, கைது செய்யப்பட்டுள்ளவர்களில், மதிமுக, விவசாயிகள் சங்கம் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் உள்ளனர்.

நான் காதல் திருமணத்திற்கு எதிரானவன் அல்ல.  நானே காதல் திருமணங்களை நடத்தி வைத்திருக்கிறேன். (உங்க மவனுக்கும், கிருஷ்ணசாமி படையாச்சி பொண்ணுக்கும் பண்ணி வச்சது காதல் திருமணமா… கடுப்பேத்தறார் மை லார்ட்)  பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்த வன்னியர்கள், தேவர்கள், நாயுடு, முதலியார், கொங்கு வேளாளக் கவுண்டர்கள் நாடார்கள் ஆகிய சமூகங்களைச் சேர்ந்தவர்கள் இது போன்ற காதல் நாடகங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவே கலவரத்திற்கு காரணம்.   இது குறித்து அரசு விரிவான விசாரணையை மேற்கொள்ள வேண்டும்.   இந்த காதல் நாடகங்கள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வன்கொடுமைத் தடுப்புச் சட்டமும் கடுமையான முறையில் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது.   ஒரு டீக்கடையில் ரெண்டு பேர் பேசிக்கிட்டு இருக்கான்… அவங்களுக்குள்ள சண்டை வருது.  திடீர்னு ஒருத்தன் போயி இன்னொருத்தன் என்னை ஜாதிப் பேரச் சொல்லி திட்டிட்டான்னு புகார் கொடுத்துட்றான்.. அங்க ஜாதிப் பேரைச் சொல்லி எதுவுமே பேச்சு நடந்துருக்காது.  இதைப் போலத்தான் பல வழக்குகள் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படுகின்றன.  இந்தச் சட்டத்தால் பல சமூகத்தைச் சேர்ந்த மக்களும் பாதிக்கப்படுகிறார்கள்….

வன்னிய சமூகம் மற்றும் இதர சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் தலித்துகள் வசிக்கும் பகுதிக்குள் சென்றால்  அவர்களுக்கு பாதுகாப்பு இல்லை.  அவர்களை கிண்டல் செய்வது, அச்சுறுத்துவது போன்ற விஷயங்கள் நடந்து வருகின்றன.  இது போன்ற சம்பவங்களால் பல பெண்கள் தங்கள் கல்வியையே கை விடும் சூழல் ஏற்பட்டுள்ளது.  இதனால் பெண் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது.  இது குறித்தும் அரசு விரிவான விசாரணை நடத்த வேண்டும்.

தருமபுரியில் நடந்த கலவரத்திற்கு காதல் திருமணம்தான் காரணம் என்றால் ஒரு மாதத்திற்கு முன்பாகவே நடந்திருக்க வேண்டும்.  ஆகையால் அந்த கலவரத்திற்கு இந்தத் திருமணம் காரணம் என்ற குற்றச்சாட்டு பொய்யானது.   தலித்துகளுக்கும் தலித் அல்லாதோருக்கும் நீண்ட காலமாக நிலவி வந்த பகையே இந்த மோதலுக்குக் காரணம்.  இந்தப் பகையை அகற்றுவதற்கு அரசு முயற்சி செய்ய வேண்டும்.  சமூக ஆர்வலர்களும் இதற்காக முயல வேண்டும்.

இந்த காதல் நாடகங்கள் தடுக்கப்பட வேண்டும்.  இந்த காதல் நாடகங்களே மோதலுக்கு வழி வகுக்கின்றன. தலித் அல்லாத மாணவிகள் குறிவைத்து இந்த காதல் நாடகங்களுக்கு பலியாக்கப்படுகிறார்கள்.  குறிப்பாக பள்ளி இறுதி மற்றும் கல்லூரியில் உள்ள மாணவிகள்… (யோவ்…  கல்லூரியில் படிக்கும்போது காதலிக்காம உன் வயசுலயா காதலிக்க முடியும்.. உனக்கு ஏதாவது அறிவு இருக்கா இல்லையா… ?)

தருமபுரி வன்முறைச் சம்பவங்களுக்கு வன்னியர்களே காரணம் என்று குற்றம் சாட்டுவதன் மூலம், தருமபுரி பகுதியில் உள்ள தலித் அதிகாரிகள், வன்னியர்களை பழிவாங்கும் நோக்கத்தோடு செயல்படுகின்றனர்.  பல அப்பாவி வன்னியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.   வன்னியர்களை குறி வைத்து காவல்துறை கைது செய்து வருகிறது.  இவ்வாறு கைது செய்யப்படும் வன்னியர்கள், அங்கே உள்ள தலித் காவல்துறையினரால் அடித்து துன்புறுத்தப்படுகிறார்கள்.

இது வரை கைது செய்யப்பட்டுள்ளளவர்களில் வெகு சிலரே பாமகவைச் சேர்ந்தவர்கள்.   உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை (கரெக்ட் டாக்டர்.  கலவரத்தை தூண்டி விட்ட நீங்க, டாக்டர் செந்தில், காடுவெட்டி குருவைக் கைது செய்யாம காவல்துறை அம்புகளைத்தானே கைது செய்திருக்கிறது)

எங்களுக்கு இந்தக் கலவரம் குறித்து சில செய்திகள் வந்திருக்கிறது.  அந்தப் பகுதியில் சில வீடுகள் மட்டுமே எரிக்கப்பட்டதாகவும் அங்கே உள்ள வீரண்ணன் என்ற திட்ட அதிகாரி, அந்தப் பகுதியில் உள்ளவர்களை அழைத்து, உங்கள் வீடுகளை எரித்து விடுங்கள்… அப்போதுதான் புதிய வீடுகளை அரசு செலவில் கட்டிக் கொள்ளலாம் என்று கூறியதால் பல வீடுகளை அவர்களாகவே எரித்து உள்ளனர் என்ற தகவல் எங்களுக்கு வந்துள்ளது.  இதையும் அரசு விசாரிக்க வேண்டும்.

அரசு அதிகாரிகள் நேர்மையாக பாரபட்சமின்றி நடந்து கொள்ள வேண்டும்.  அந்த காவல்துறை உதவி ஆய்வாளர் பெண்ணின் தந்தை நாகராஜனை அவமானப்படுத்தியதாலேயே அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.  இது குறித்த இது வரை அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.  இது வரை பாதிக்கப்பட்ட நாகராஜன் குடும்பத்தினை அரசு அதிகாரிகளோ, அமைச்சரோ சென்று பார்க்கவில்லை. அரசும் பாதிக்கப்பட்ட நாகராஜன் குடும்பத்தினருக்கு அரசு நஷ்ட ஈட்டையும் இது வரை வழங்கவில்லை.  நாகராஜன் உயிர் என்ன விலை மதிப்பற்றதா… ?

அவர் தற்கொலைக்கு காரணமான அந்த உதவி ஆய்வாளரை உடனடியாக கைது செய்ய வேண்டும்.  அந்த மாவட்டத்தில் உள்ள மாவட்ட வருவாய் அதிகாரி மற்றும் திட்ட அலுவலர் இடமாற்றம் செய்ய்பட வேண்டும்.  நாகராஜன் குடும்பத்திற்கு அரசு நஷ்ட ஈடு வழங்க வேண்டும்.  நேர்மையான அதிகாரிகள் அந்த மாவட்டத்தில் நியமிக்கப்பட வேண்டும்.

நாங்கள் தலித்துகளுக்கு எதிரானவர் அல்ல.  என் வாழ்நாள் முழுக்க தலித்துகளின் நலனுக்காக பாடுபட்டவன் நான்.  எத்தனையோ அம்பேத்கர் சிலைகளை திறந்து வைத்திருக்கிறேன்.  ஒரே நாளில் ஆறு அம்பேத்கர் சிலைகளை திறந்து வைத்திருக்கிறேன்.   வட தமிழகத்தில் இன்று அமைதி நிலவுவதற்கு நான் பெரும் காரணமாக இருந்திருக்கிறேன்.   தென் தமிழகத்தில் சாதிக் கலவரங்கள் ஏற்பட்ட போது, அங்கே சென்று அமைதிக்  கூட்டங்களை நடத்திய ஒரே தலைவர் நான்தான்.   என்னோடு திருமாவளவனும் வந்திருந்தார்.

அடுத்து காடுவெட்டி குரு பேசினார்.

இந்தக் கலவரத்திற்கு காரணமே, தேவையற்ற சில மேடைப்பேச்சுக்கள்தான்.  தேவையற்ற முறையில் பேசி சிலர் வன்முறையைத் தூண்டுகிறார்கள்.  (உங்களப்பத்தி இப்படி உண்மைய ஒத்துக்கறீங்களே… நீங்க நல்லவரு சார்..) நாங்களும் சாதிய ஒழிக்கணும்னுதான் நெனைக்கிறோம். ஆனா பல தலித்துகள் வன்னியர்களைப் பழிவாங்க வேண்டும் என்பதற்காகவே வேண்டுமென்றே வன்னியப் பெண்களை காதலித்து ஏமாற்றுகின்றனர்.  வன்னியப் பெண்களை காதலிப்பது, பின்னர் திருமணம் செய்து கொள்வது, அந்தப் பெண்ணை கர்ப்பாமாக்கிய  பின்னர், அவளைக் கை விடுவது.  அந்தப் பெண்ணின் பெற்றோரும் ஏற்கனவே அந்தப் பெண்ணின் மீது கோபமாக இருப்பதால் அந்தப் பெண்ணை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள்.  அந்தப் பெண் தவறான வழியில் செல்ல நேர்கிறது.  இதை நாங்கள் எப்படி அனுமதிக்க முடியும் ?

கலப்புத் திருமணம்தான் சாதிய ஒழிக்க வழின்னு சொல்றாங்க.. அப்படி கலப்புத் திருமணம்தான் சாதிய ஒழிக்க வழின்னா, தலித்துகள் இருக்கற இடத்துலயே ஒதுக்கி வைக்கப்பட்டிருக்க அருந்ததியர்னு சொல்லப்பட்ற சக்கிலியர்கள் வீட்ல பொண்ணு எடுகக் வேண்டியதுதானே… இவனுங்களுக்கு அந்த எடத்துல ஏன் காதல் வர மாட்டேங்குது…

விழுப்புரத்துல ஒரு வக்கீல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேந்தவரு…  அந்த ஆளு ரெண்டாயிரம் மற்ற சாதிப் பெண்களை தலித்துகளுக்கு கல்யாணம் பண்ணி வச்சுருக்கார்…. ஒரு ரெட்டியார் வீட்டுப் பொண்ண வீடு பூந்து தூக்கிட்டுப் போயி கல்யாணம் பண்ணிருக்காங்க.

இது தலித்துகளுக்கும் வன்னியர்களுக்குமான போராட்டம் இல்ல… தலித்துகளுக்கும் தலித் அல்லாதாருக்குமான போராட்டம்.   சாதி ஒழிப்புக்கு காதல் திருமணங்கள் ஒரு வழிமுறையாக இருக்க முடியாது.  வன்னிய இனப் பெண்கள் மீது திட்டமிட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது என்றார்.

மீண்டும் பேசிய மருத்துவர் அய்யா, இப்போது திருமணம் நடந்த இளவரசனுக்கு வயது 19தான் ஆகிறது.  சட்டப்படி 21 வயது ஆகாத ஆண் மகனுக்கு திருமணம் நடப்பது குற்றம்.  இந்தக் குற்றத்தை செய்த சேலம் சரக டிஐஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

ஒரு செய்தியாளர், தருமபுரியில் தலித்துகள் தங்கள் வீடுகளைத் தாங்களாகவே கொளுத்திக் கொண்டார்கள் என்று சொல்கிறீர்களா என்று கேட்டார்.   அதற்கு மருத்துவர், இப்படி ஒரு தகவல் எங்களுக்கு வந்திருக்கிறது, இதை அரசுதான் விசாரிக்க வேண்டும் என்றார்.

மகாபலிபுரம் வன்னியர் சங்க விழாவில் குரு காதல் திருமணங்களில் ஈடுபடுபவர்களை வெட்டுவேன் என்று பேசினாரே என்று ஒரு பத்திரிக்கையாளர் கேட்டார்.  உடனே, ராமதாஸ், குரு அப்படிச் சொல்லவில்லை.  அது தவறாக போடப்பட்டது. திட்டமிட்டு தூக்கிக் கொண்டு போய் திருமணம் செய்வது தவறு, அதை அனுமதிக்காதீர்கள் என்றுதான் பேசினாரே தவிர, காதல் திருமணமே தவறு என்று அவர் சொல்லவில்லை. அங்கேதான் அவர் அப்படிப் பேசினாரே தவிர வேறு எங்கும் அவர் அவ்வாறு பேசவில்லை.. இன்னும் சொல்லப்போனால், அவர் பேசியதற்கு தமிழ்நாட்டில் தலித் அல்லாத எல்லா சமுதாயங்களும் குரு பேசுனது சரியான பேச்சுதான்னு சொல்லியிருக்காங்க.

உடனே குரு பேசினார்.  காதல் பண்ணி, திருமணம் பண்ணி எத்தனை பேர் ஏமாத்திருக்காங்கன்னு நான் மாவட்ட வாரியா உங்களுக்கு ஒரு பட்டியலே தர்றேன்.  பல இடங்கள்ல இது நடந்துருக்கு.  டாக்டர் ராமதாஸ் “கடலூர் மாவட்டத்துல மட்டும் 2000 திருமணங்கள் இது மாதிரி நடந்துருக்கு”

குரு ”இந்த மாதிரி திருமணங்களத்தான் நாங்க கண்டிக்கறோம். ”

பத்திரிக்கையாளர் ”இந்தப் பிரச்சினை இன்னைக்கோ நேத்தோ நடந்த பிரச்சினை இல்லை. இது தொடர்ச்சியா நடக்கற பிரச்சினை.  அப்போல்லாம் பா.ம.க என்ன பண்ணுச்சு…”

ராமதாஸ் ”பா.ம.க என்ன பண்ணுச்சுன்னுதான் இவ்ளோ நேரமா சொல்லிக்கிட்டு இருக்கறேன்.. இப்போ வந்து என்ன பண்ணுச்சுன்னு கேக்கறீங்க…”

மற்றொரு செய்தியாளர், அய்யா நல்ல காதல் நாடகக் காதல் என்பதை எப்படிக் கண்டு பிடிப்பது என்று கேட்டார். “காதலிக்கறதுக்கு ஒரு வயசு வேணாமா… எந்த வயசுல காதலிக்கறதுன்னு ஒரு வரைமுறை வேணாமா “  நானே ஒரு திருமணத்தைப் பண்ணி வச்சேன்.  5 வருஷமா காதலிச்சாங்க.. அவங்க பெற்றோர்கள் சம்மதிக்கல.. நான் உங்கள கேக்கறேன்.. பெற்றோர்கள் 18 வயசு 19 வயசு வரைக்கும் பாராட்டி சீராட்டி வளக்கறாங்க.. அந்தப்  பொண்ணு திடீர்னு ஓடிப்போயி கல்யாணம் பண்ணிக்கிச்சுன்னா அவங்க பெற்றோர்களோட மனநிலைய நெனச்சுப் பாருங்க… இது மூலமா… இந்தக் காதல் மூலமாத்தான் ஜாதி ஒழிப்பு நடக்கணும்னா அது எப்படி..?”

குரு “நான் இன்னொரு சேதி சொல்றேன்…. வட தமிழ்நாடு பூரா காதல் திருமணம் நடந்து அது போலீஸ் ஸ்டேஷனுக்கு வருது.  போலீஸ் ஸ்டேஷனுக்கு விடுதலைச் கட்சிக் காரங்க வந்துருக்காங்க… எங்க சமுதாயத்து ஆளுங்களும் போயிருக்காங்க.. எந்த எடத்துலயும் அந்தப் பொண்ண பிரிச்சுக்கிட்டுத்தான் அழச்சுக்கிட்டு வருவோம்னு சொல்றதேயில்ல… போன்னா போன்னு அனுப்பி வச்சுடுவோம். தமிழ்நாட்டுல எந்த இடத்திலயும் பொண்ண பிரிச்சுதான் கூட்டிட்டு வரணும்னு எங்க கட்சிப் பொறுப்பாளர்களோ…. வன்னியர் சங்க பொறுப்பாளர்களோ சொன்னதே கிடையாது.  அந்தப் பையனோடதான் வாழுவேன்னா அந்தப் பையனோட போயிக்கோன்னு சொல்லுவோம்.. அந்தப் பொண்ணோட அப்பா அம்மா எனக்கும் உனக்கும் எந்தத் தொடர்பும் இல்லன்னு சொல்லிட்டு வந்துடுவாங்க. இப்படி சொல்லி அனுப்பி வந்துட்டதுக்குப் பிறகு, அந்தப் பொண்ணோட நெலமை ஊர்ல என்னன்னா .. அதுக்கு கீழ ஒரு தங்கச்சி அண்ணன் தம்பி இருந்துச்சுன்னா… பொண்ணு குடுக்கவோ பொண்ணு எடுக்கவோ யாரும் வர மாட்டாங்க..அந்தக் குடும்பம் அந்த ஊர்ல ஒரு மாதிரியா ஒடுக்கப்படுது. மிகப்பெரிய கொடுமைய அந்தக் குடும்பம் அந்த ஊர்ல அனுபவிக்குது. இவ்வளவும் நடக்கும்போது அந்தப் பொண்ணு ஒரு ஆறு மாசம் கழிச்சு வயித்துல புள்ளையோட திருப்பி அனுப்பிட்டான்னு இங்க வந்து நின்னா .. ஒரு நல்ல ஆண் மகன், அந்தப் பொண்ணோட அண்ணனா இருந்தா என்ன பண்ணுவான் ? தற்கொலை பண்ணிக்குவான்.. இல்லன்னா வெட்டுவான்… வேற என்ன பண்ணுவான்..

ராமதாஸ்..”வெட்டுவான்.. இல்லையா… ? ”

செய்தியாளர் “அப்போ சட்டப்படி நடவடிக்கை எடுக்கறதுல தாமதம் ஏற்பட்டுச்சுன்னா வெட்றதுதான் ஒரே தீர்வுன்னு சொல்றீங்களா.. ”

ராமதாஸ் ”அதை எங்களை சொல்ல வைக்கறீங்களா…”

குரு…”உங்க தங்கச்சி அது போல பண்ணா நீங்க என்ன பண்ணுவீங்க சொல்லுங்க.. உங்களுடைய தங்கச்சி அது போல போயி வீட்டுக்கு திரும்பி வந்தா என்ன பண்ணுவீங்க சொல்லுங்க…” என்றார்.

 

கேள்வி கேட்ட செய்தியாளரை மிரட்டும் காடுவெட்டி குரு மற்றும் ராமதாஸ்

DSC_0979

DSC_0980

DSC_0981

DSC_0982

DSC_0983

DSC_0984

DSC_0985

DSC_0986

DSC_0987

 

DSC_0991

 

 

இறுதியாக ராமதாஸிடம், 21 வயதைக் கடந்த இருவர், வன்னியர் சாதியிலிருந்தும், தலித் சாதியிலிருந்தும் திருமணம் செய்து கொண்டால் அதை நீங்கள் ஆதரிக்கிறீர்களா என்று கேட்டதற்கு, பெற்றோரின் சம்மதத்தோடு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றார்.

ராமதாஸின் காதல் குறித்த கருத்துக்களைப் பார்க்கையில் கவிஞர் மீராவின் கவிதைதான் நினைவுக்கு வருகிறது.

உனக்கும் எனக்கும்

ஒரே ஊர்

வாசு தேவ நல்லூர்...

 

நீயும் நானும்

ஒரே மதம்...

திருநெல்வேலிச்

சைவப் பிள்ளைமார்

வகுப்புங் கூட....

 

உன்றன் தந்தையும்

என்றன் தந்தையும்

சொந்தக்காரர்கள்

மைத்துனன்மார்கள்

 

எனவே

செம்புலப் பெயல்நீர் போல

அன்புடை நெஞ்சம்

தாம் கலந்தனவே!

 

எப்படி ஒரு அற்புதமான வரிகள் ?  இதற்கும் ராமதாஸின் கருத்துக்களுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை. தலித்துகள் அந்த சாதிக்குள்ளேயேதான் திருமணம் செய்ய வேண்டும், மாற்று சாதியில் திருமணம் செய்யக் கூடாது, அப்படி மீறி திருமணம் செய்தால் வெட்டுவோம் என்பதை வெளிப்படையாகவே அறிவித்துள்ளார்.

 

ராமதாஸின் ஒவ்வொரு கருத்தாகப் பார்ப்போம்.   இது இரு சமூகங்களுக்கிடையேயான மோதல் அல்ல என்கிறார்.  இது இரு சமூகங்களுக்கிடையே நிகழ்ந்த மோதல் அல்ல.  சரியான விஷயமே.  ஒரு சமூகம் திட்டமிட்டு இன்னொரு சமூகத்தின் மீது நடத்திய கொடுந்தாக்குதல் இது.  இது மோதல் அல்ல.

 

இரு சமூகங்களுக்கிடையே பல காலமாக பகை இருந்து வருகிறது என்கிறார் மருத்துவர்.   இந்த இரண்டு சமூகங்களுக்கிடையே பகை கிடையாது.  வன்னியர் சமூகத்துக்கு, தலித்துகள் மீது வன்மம் இருந்து வந்திருக்கிறது என்பதே இந்த திட்டமிட்ட தாக்குதலுக்கு காரணம்.  பெரும்பாலான தலித்துகள் கூலிகளாக இருக்கும் நிலையில், வன்னியர்களில் பெரும்பாலானோர் நில உடைமையாளர்களாக இருக்கின்றனர்.   ஒன்று அல்லது இரண்டு ஏக்கராவது குறைந்தபட்சம் வைத்திருக்கின்றனர்.   பல ஆண்டுகளாக இவர்களின் நிலங்களில் விவசாயக் கூலிகளாக இருந்த தலித்துகள், கடந்த சில ஆண்டுகளாக விவசாயக் கூலி வேலைக்குச் செல்வது இல்லை.  100 நாள் வேலைத் திட்டத்தில் வேலை செய்யாமலேயே பணம் கிடைக்கையில் எதற்காக கூலி வேலைக்குச் செல்ல வேண்டும் ?  மேலும், பெரும்பாலான தலித் ஆண்கள், ஓசூருக்கும், பெங்களுருக்கும் கட்டுமான வேலை உள்ளிட்ட வேலைகளுக்குச் செல்கிறார்கள்.  நம் வயல்களுக்கு கூலி வேலை செய்ய வராமல், வெளியில் எங்கோ வேலைக்குச் சென்று சம்பாதித்து, அந்தப் பணத்தில் அந்தப் பணத்தில் பைக், கலர் டிவி என்று வாங்கி நம் முன்னாலேயே அந்த பைக்கில் போகிறார்களே பறப்பயல்கள் என்ற வன்மம் வன்னியர்களுக்கு நீண்ட நாட்களாகவே உள்ளது என்பதே மருத்துவர் கொய்யா சொன்னதன் பொருள்.

 

பாட்டாளி மக்கள் கட்சியின் பெயரைக் கெடுக்க வேண்டும் என்பதற்காகவே சிலர் திட்டமிட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் என்கிறார் மருத்துவர்.  இது முழுக்க முழுக்க தவறான குற்றச்சாட்டு.  பாட்டாளி மக்கள் கட்சிக்கு நற்பெயர் இருக்கிறது என்று எந்த பரதேசிப் பயல் சொன்னது ?  சமூக நீதி, சாணி அள்ளும் தேதி என்று பேசிக் கொண்டிருந்து விட்டு, லஞ்சம் வாங்கிக் கொண்டு உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாத தனியார் மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி அளித்த சின்ன கொய்யாவின் சாயத்தை சிபிஐ வெளுத்து விட்டது.

Anbumani Ramadoss appears before Delhi Court

CBI files chargesheet against Anbumani Ramadoss in corruption case

CBI may file another chargesheet against Ramadoss

அதனால் பாட்டாளி மக்கள் கட்சிக்கு நற்பெயர் என்றெல்லாம் தமாஸ் பண்ணிக் கொண்டிருக்காதீர்கள் மருத்துவரே… போயி பழையபடி க்ளினிக் வெச்சு பொழைக்கிற வழியப் பாருங்க…

பெண்ணைக் காணோம் என்று புகார் கொடுக்கச் சென்றபோது காவல் நிலையத்தில் இருந்த தலித் சமூகத்தைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் தற்கொலை செய்து கொள்ளுடா என்று பெண்ணின் தந்தையை அவமானப் படுத்தியதால்தான்  அவர் தற்கொலை செய்து கொண்டாராம்.  ஒரு காவல் நிலையத்தில் ஆய்வாளர்தான் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்.  இது போன்ற முக்கியமான வழக்குகளை ஆய்வாளரே விசாரிப்பார்.   அந்த உதவி ஆய்வாளர் தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்க முடியாது.   மேலும் புகார் கொடுக்கையில் வன்னிய சமூகத்தைச் சேர்ந்த பலர் காவல் நிலையம் சென்றிருப்பார்கள்.  அவர்கள் முன்னிலையில் அந்த உதவி ஆய்வாளர், “தற்கொலை செய்து கொள்ளுடா” என்று பெண்ணின் தந்தையைப் பார்த்துச் சொல்லியிருக்கிறார் என்பது நம்பும்படி இல்லை.

பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்த வன்னியர்கள், தேவர்கள், நாயுடு, முதலியார், கொங்கு வேளாளக் கவுண்டர்கள் நாடார்கள் ஆகிய சமூகங்களைச் சேர்ந்தவர்கள் இது போன்ற காதல் நாடகங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவே கலவரத்திற்கு காரணம் என்ற ராமதாஸின் அறிக்கைதான் பூனைக்குட்டியை வெளியை வரவழைத்துள்ளது.  கருணாநிதியையே தெலுங்கர் என்று குற்றம் சாட்டியவர் ராமதாஸ்.  திராவிடம் என்று சொல்லி, இரண்டு திராவிடக் கட்சிகளும் தமிழனை ஏமாற்றியுள்ளன என்று தொடர்ச்சியாக பேசி வருபவர் ராமதாஸ்.  அப்படிப்பட்ட ராமதாஸ், தெலுங்கு பேசும் ரெட்டியார்களுக்கும், நாயுடுக்களுக்கும் வக்காலத்து வாங்குவது, 2014 தேர்தலில் சாதிக் கூட்டணியை ஏற்படுத்துவதற்கான முன்னோட்டமே.   வன்னிய சாதியைத் தவிர வேறு எந்த சாதிக்காகவும் ஒரு துரும்பைக் கூட தூக்கிப் போடாத ராமதாஸ், இத்தனை சாதிக்களுக்காக பேசுவது, வன்னிய சாதியோடு மற்ற சாதி இந்துக்களை கூட்டணி சேர்ப்பதற்காகவே.

வன்னிய இனப் பெண்கள் தலித் பகுதிக்குள் சென்றால் ஆண்கள் கிண்டல் செய்கிறார்களாம்… அதனால் வன்னியப் பெண்கள் படிப்பையே கை விடுகிறார்களாம்.  இதனால் பெண் கல்வி பாதிக்கப்படுகிறதாம்.    வன்னியப் பெண்ணை தலித் இளைஞர்கள் கிண்டல் செய்வது அங்கொன்றும், இங்கொன்றுமாக நடந்திருக்கும் என்பதை மறுப்பதற்கில்லை.  ஆனால், இதனால் வன்னிய இனப் பெண்கள் படிப்பையே கைவிடுகிறார்கள்..  பெண் கல்வி பாதிக்கப்படுகிறது என்பது எத்தனை பெரிய அயோக்கியத்தனம்… ? ஒரு பெண்ணைப் பெற்றவன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதற்கே ஊரைக் கொளுத்துபவர்கள், வன்னியப் பெண்களை பள்ளிக்குச் செல்லாமல் தடுக்கும் அளவுக்கு தலித்துகள் கிண்டல் செய்தால் விட்டு விடுவார்களா என்ன ?  மேலும் இவர்களுக்கு இருக்கும் செல்வாக்குக்கு காவல்துறையினரை வைத்து, தலித்துகளின் ஊரையே அடித்து நொறுக்க மாட்டார்களா ?

இது வரை கைது செய்யப்படடவர்களில் மற்ற சாதியினரும் இருக்கிறார்களாம்.  அதனால் இது இரு சமூகத்திற்கிடையேயான மோதல் என்று சொல்ல முடியாதாம்.  ராமதாஸ் அவர்களே.   இது வரை தருமபுரி கலவரத்துக்காக கைது செய்யப்பட்டவர்கள் 142 பேர்.  இவர்களில் 125 பேர் வன்னியர்கள்.  நீங்கள் தாராளமாக காவல்துறையில் சரிபார்த்துக் கொள்ளலாம்.   இது வன்னியர்கள் நடத்திய தாக்குதலா.. வேறு சாதியினர் நடத்திய தாக்குதலா… பொய்யையும் புரட்டையுமே தொடர்ச்சியாக பேசி வரும் உங்களுக்கு வெட்கமாகவே இல்லையா ?

எத்தனையோ அம்பேத்கர் சிலைகளை திறந்து வைத்திருக்கிறாராம்.  வாழ்நாள் முழுக்க தலித்துகளுக்காக பாடுபட்டிருக்கிறாராம்.   வாழ்நாள் முழுக்க உங்கள் குடும்பத்துக்காக பாடுபட்டிருக்கிறேன் என்று சொல்லுங்கள் ஒப்புக் கொள்ளலாம். தலித்துக்காக என்ன பாடுபட்டிருக்கிறீர்கள் என்பதுதான் புரியவேயில்லை.  அம்பேத்கர் சிலையைத் திறந்துவைத்தது நீங்கள் தலித்துகளுக்கு செய்த மிகப்பெரிய சேவை என்றால், அம்பேத்கரை சேரியிலுள்ள ஒரு தலித்தாக மட்டும்தானே பார்க்கிறீர்கள் ?  உங்கள் மனதில் எத்தகைய வன்மத்தோடு அம்பேத்கர் சிலையைத் திறந்து வைத்திருப்பீர்கள்.. இப்படி ஒரு வன்மத்தோடு நீங்கள் அம்பேத்கர் சிலையைத் திறந்து வைப்பதை விட அம்பேத்கருக்குச் செய்திருக்கும் அவமானம் வேறு எதுவுமே இருந்திருக்க முடியாது.

தற்கொலை செய்து கொண்ட நாகராஜனுக்கு அரசு இது வரை எந்த நஷ்ட ஈடும் வழங்கவில்லையாம்.  யோவ் வௌக்கெண்ணை… அரசு குடுக்கறது இருக்கட்டும்… நீ உன் முடிச்ச அவுத்து குடுக்க வேண்டியதுதானே… என்ன பண்ணிக்கிட்டு இருக்க.  சாதித் திமிரால் ஒருவன் தற்கொலை செய்து கொண்டால், மக்கள் வரிப்பணத்திலிருந்து அரசு நிவாரணம் கொடுக்க வேண்டுமா ?

விழுப்புரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் பொறுப்பாளர் ஒருவர் 2000 தலித்துகளுக்கு வேற்று சமூகத்திலிருந்து, குறிப்பாக வன்னிய சாதியிலிருந்து கல்யாணம் பண்ணி வைத்திருக்கிறாராம்.  இந்தப் பட்டியலை டாக்டர் வைத்திருக்கிறாராம்.    அந்த பொறுப்பாளருக்கு விழா அல்லவா எடுக்க வேண்டும்.  2000 சாதி மறுப்பு திருமணங்களை பெரியார் கூடச் செய்ததில்லையே..  இதப் போயி கொறையா சொல்லிக்கிட்டு… போங்க டாக்டர்… நீங்க சரியான லூசு.

சாதி மறுப்புத் திருமணங்கள் மூலமாகத்தான் சாதியை ஒழிக்க வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாதாம்.. வேற எப்படி டாக்டர் சாதிய ஒழிக்கறது… நீங்க பண்ண மாதிரி, உங்க மகன் அன்புமணிக்கும், காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி படையாச்சிக்கும் கல்யாணம் பண்ணி வைக்கறது மூலமா சாதியை ஒழிச்சுட முடியுமா… ?   உங்களுக்கு உண்மையிலேயே அறிவு இல்லையா.. இல்ல அறிவு இல்லாத மாதிரி நடிக்கறீங்களா… ?

தலித்துகள் தங்கள் வீடுகளைத் தாங்களே கொளுத்திக் கொண்டார்கள் என்று சொன்னது உச்சகட்ட அயோக்கியத்தனம்.  டாக்டர் ஒரு மனிதனே இல்லை மிருகம் என்பதை அவரின் இந்த வாக்கியம் காட்டுகிறது.   300 வீடுகள், எரிந்திருக்கின்றன.  வீட்டில் உள்ள உடைமைகள், துணிமணிகள், எரிந்திருக்கின்றன.  அத்தனை வீடுகளிலும் உள்ள பொருட்கள் அடித்து நொறுக்கப்பட்டிருக்கின்றன.  மனசாட்சியே இல்லாமல் எப்படி இது போல் பேசமுடிகிறது இந்த மனிதரால் ?

இது தலித்துகளுக்கும், தலித் அல்லாதோருக்குமான போராட்டம் என்ற டாக்டரின் பேச்சுதான் இருப்பதிலேயே விஷமத்தனமானது.  அயோக்கியத்தனமானது.  அரக்கத்தனமானது.  ஒடுக்கப்பட்ட மக்களான தலித்துகளுக்கு எதிராக மற்ற ஆதிக்க சாதிகளை ஒன்று திரட்டும் டாக்டரின் அயோக்கியத்தனமான திட்டமே இது.  இது மிக மிக விஷமத்தனமானது.  மனிதனின் நாகரீக வளர்ச்சியும், கல்வியும் இத்தனை ஆண்டுகாலமாக உருவாக்கி வைத்திருக்கும் ஒரு அற்புதமான கட்டமைப்பை ஒரே நாளில் சிதைக்கும் நோக்கம் கொண்ட பேச்சு இது.

சமூக நீதிக் காவலர், தமிழ்க் குடிதாங்கி, என்றெல்லாம் பல பட்டங்களோடு, போலி வேடமிட்டுத் திரிந்த மருத்துவர் ராமதாஸின் முகத்திரை கிழிந்ததில் உள்ளபடியே மகிழ்ச்சி.  இத்தனை நாள் உங்களின் மனதில் உள்ள வன்மம் புரியாமல், ஏதோ இந்த ஆளு ஈழம் குறித்துப் பேசுகிறார், மொழி குறித்துப் பேசுகிறார் என்று நம்பி பலர் ஏமாந்திருக்கிறார்கள். அப்படியெல்லாம் ஏமாறாதீர்கள்.  நான் வன்னிய சாதி வெறி பிடித்தவன் என்பதை வெளிப்படையாக அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கதே.   இப்போதாவது இவர்களின் அசல் முகத்தைக் கண்டு கொள்ள முடிந்ததே என்று மகிழ்ச்சியே.

ஆகையால் காதலர்களே.. இனி உங்கள் காதல் உண்மையானதா இல்லையா என்பதை இந்த காதல் டாக்டரிடம் பரிசோதித்து தெரிந்து கொள்ளுங்கள்.   இவர் பரிசோதிப்பது மட்டுமின்றி, அரசாங்கம் இது குறித்து விசாரிக்க வேண்டும் என்று வேறு தெரிவித்துள்ளார்.   இருந்தாலும் காதல் டாக்டரின் பரிசோதனைகளே சிறந்த பரிசோதனையாக இருக்கும்.

ராஸ்கல்ஸ்… இன்டீசன்ட் ஃபெல்லோஸ்.. பாருங்க சார்.. திருப்பி டாக்டர் எங்க ஸ்டெத்தஸ்கோப்பை வச்சு டெஸ்ட் பண்ணுவாருன்னு கேக்கறானுங்க…  டர்ட்டி பாய்ஸ்..

 

Comments  

 
0 #47 nettrikkann_rty 2013-06-11 01:57
இந்த விஷயத்தில் பின்புலத்தில் வேலை செய்பவர்களில் முக்கியமானவர் ஆவடி, பூம்பொழில் நகர் ரா.விஸ்வநாதன், இவர் ஹ்வ்ஃப் இல் இருந்து பணிஓய்வு பெற்றவர் ஆனால் பணியில் இருக்கும் போதே கந்து வட்டி கட்டபஞ்சாயத்தில ் ஈடுபட்டு வந்தவர்(கட்சி பேரை நான் சொல்ல வேண்டியதில்லை ) பணி ஓய்வு பெற்றவுடன் அதையே முழு நேர தொழிலாக மாற்றிக்கொண்டார ்,இது போல பல கலப்பு திருமணங்களில் இவரின் பங்கு பெண் வீட்டாரிடம் 'ரேட்' பேசுவது தான் (இங்கு தான் அவரின் வட்டி தொழில் கை கொடுக்கிறது) இவரின் சாதிக்காரர்களே இவரிடம் வட்டிக்கு பணம் வாங்கி தற்கொலை வரை போன சோகங்களும் உண்டு அந்த அளவுக்கு இவர் நெருக்கடி கொடுப்பார்.
Quote
 
 
+1 #46 rajaaaaaaaaa 2012-12-09 13:55
அன்பார்ந்த சகோதரர்களே ,

இறைவனின் படைப்புகளில் சிறந்த படைப்பு மனித படைப்பு - மனித குலம் ஒரே குலம்தான் - "ஒன்றே குலம் " என்ற சொற்றொடரை உணர வேண்டும் , அதை வாழ்வியலில் பின்பற்ற முன்வர வேண்டும்.

"மனிதர்களிடையே உயர்வு-தாழ்வு என்பது ,அவர்களின் நற்செயல்களை பொறுத்து மட்டுமே இருக்கின்றது.நிச்சயமாக பிறப்பால் இல்லை "

பிறப்பின் அடிப்படையில் மட்டுமே ஒருவன்
உயர்ந்தவன் அல்லது தாழ்ந்தவன் என்ற கருத்தை வரலாற்றின் பல பக்கங்கள் உறுதியாக மறுத்ததை உலகமே அறியும் .

மனித உணர்வுகள் அனைத்தும் மதிக்கப்பட வேண்டும்தான்.காதல்,பற்று,ஆதங ்கம் இன்னும் எந்த உணர்வாக இருந்தாலும் மனிதனுக்கு வெளிப்படுத்த உரிமை உண்டு.

ஆனால் மனித இனத்திற்கு
கேடு விளைவிக்கும் எந்த ஒன்றையும் "உணர்வாக" கருத முடியாது . அதை 'வெறி' அல்லது 'மதம்'
என்றுதான் சொல்ல முடியும் .

"நீ வாழ பிறரை கெடுக்காதே!"
என்ற பதம் நாம் அறிவோம் .

மனிதனுக்கு வாழ உரிமை உண்டு .
தான் வாழ வேண்டும் என்பதற்காக
எதை வேண்டுமானாலும் செய்யும்
"மனித மிருகங்களை " அல்லது "மிருக
மனிதர்களை" அடியாளம் கண்டு விலகி நிற்பதே தனி மனிதனுக்கும் நல்லது , ஒட்டு மொத்த மனித குலத்துக்கும்
நன்மையானது .
Quote
 
 
0 #45 Someone 2012-12-06 13:46
Until yesterday Savukku was blaming brahmins for all the problem.Funny now how things are shaping up. Whatever comment comes up I am sitting back and enjoying..
Quote
 
 
+3 #44 சரவணன் 2012-12-06 10:00
நத்தம் பிரச்சினைக்கான உண்மையான காரணங்கள், கற்றுக்கொண்ட பாடங்கள், என்ன நடந்தது, இனி இது போல நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி யோசிக்க விடாமல் அரசியலாக்கி, திசை திருப்பி தலித் அல்லாதோரை ஒன்றாக சேர்த்த பெருமை திருமாவளவனை தான் சாரும் .............சவுக்கும் அதக்கு அல்லக்கை வேல பாக்குது
Quote
 
 
0 #43 nanum tamilan 2012-12-01 05:44
இந்த கமென்ட்கலை பார்த்தால், படித்த எல்லோர் மனதிலும் கூட சாதி வெரி வேரூன்ரி இருக்கிரது புரியுது. எத்தனை பெரியார் வந்தாலும் திருத்த முடியாது...
Quote
 
 
+16 #42 அர்ஜூன் 2012-11-27 15:18
சவுக்கு,

உங்கள் சகோதரியை ஒரு பறையனுக்கு முதலில் கட்டிக்கொடுங்கள ்!


விவாகரத்தான நீங்கள் ஒரு பறைச்சிக்கு வாழ்வு கொடுங்களேன்??


சமத்துவத்தை வெட்டியாய் பேசுவதைவிட செய்துக்காட்டுங ்கள் சவுக்கு..
Quote
 
 
+5 #41 Ji M 2012-11-25 15:00
ஓரளவிற்காவது மனசாட்சி இருந்ததால்தான் மருத்துவருக்கு வன்னியர்கள் கடந்த ஆட்சியில் பாடம் புகட்டினார்கள்.ஆனால் மனசாட்சி என்பதே இந்த தலித் தலைவரகளுக்கும் தலித் மக்களுக்கும் இல்லை என்பது கண்கூடு.
Quote
 
 
+18 #40 maha 2012-11-24 21:23
சவுக்கு அவர்களே , தருமபுரி ஏரியாவை சேர்ந்த என் நண்பர் கூறிய உண்மை கதை இது . ஒரு மிக வசதியான வீட்டு பெண்ணை , ஒரு வாலிபன் காதலிப்பது போல் நடித்து , ஏடா கூடமாக போட்டோ எடுத்து மிரட்ட ஆரம்பித்து விட்டான் . பையன் தரப்பில் கோடிக்கான பணம் பேரம் பேச பட்டது . பேரத்தில் அமர்ந்தவர் இன்று நீங்கள் அடி பட்டதாக சொல்லும் வகுப்பின் கட்சி தலைவர் . இம்மாதிரி சம்பவங்கள் நான் பல முறை கேள்வி பட்டுள்ளேன் .கலவரம நிச்சயம் கண்டிக்க பட வேண்டியதுதான் . ஆனால் எந்த விசயத்திலும் அதன் மறு பக்கத்தையும் பார்க்க வேண்டும் .
Quote
 
 
+13 #39 R Sampath 2012-11-24 21:07
நமது சமூகத்தாலும் ஊடகங்களாலும் பழங்காலம் முதலே பொதுப்புத்தி மூலம் உருவாக்கப்பட்ட சில விஷயங்கள் உண்டு. உதாரணமாக,

பணக்காரங்க எல்லாம் நல்லவங்க..ஏழைங்க எல்லாம் கெட்டவங்க.

கிராமத்து ஆட்கள் எல்லாம் நல்லவங்க...பட்டணத்துக்காரங ்க எல்லாம் கெட்டவங்க

ஒரு ஊரே அநியாயமாக கொள்ளையடிக்கப்ப ட்ட சம்பவத்தை கண்டிக்கும் அதே வேளையில், இது வழக்கமான வன்னிய ஜாதிவெறியின் வெளிப்பாடு தான் என்று முடிவு செய்துகொண்டு, அதன் காரணத்தை சரியான முறையில் நாம் அலசாமல் செல்கிறோம் என்றே தோன்றுகிறது. மாற்றுத் தரப்பின் குரல் எதுவும் இங்கே முழுமையாகப் பதிவு செய்யப்படவும் இல்லை.

கீழே உள்ள செய்தியை முதலில் படிக்கவும் :

//
தர்மபுரி பாணியில் தஞ்சை அருகே கலவரம்..குடிசைகள் எரிப்பு, நகைகள் கொள்ளை -

தஞ்சாவூர்: தர்மபுரி அருகே கலப்புத் திருமணத்தால் இரு தரப்புக்கு இடையே நடந்த பெரும் கலவரத்தைப் போல தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்ப ள்ளி அருகே இரு தரப்பினர் இடையே பெரும் மோதல் வெடித்தது. .............
தர்மபுரிக் கலவரத்திற்காக பதிவுலகம் கொந்தளித்துக்கொ ண்டிருந்த அதே நேரத்தில்தான் இந்தச் செய்தியும் வந்தது. காரணங்கள் வேறாயினும், ஏறக்குறைய ஒரே மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்திய கலவரம் தான் இதுவும். இந்தச் செய்தியையாவது நீங்கள் அறிவீர்களா? தர்மபுரிக் கலவரத்திற்காக கூக்குரலிடும் நாம் ஏன் இந்தச் செய்தியை புறந்தள்ளினோம்?

ஏனென்றால் இங்கே பாதிக்கப்பட்டது தலித் சமூகம் அல்ல. ஒரு ஆதிக்க சாதி. ஆதிக்க சாதிக்காக குரல் கொடுப்பதில் என்ன பெருமை இருக்கிறது?புரட்சியாளன் பட்டம் பெறுவதும், அறிவுஜீவியாக வலம் வருவதும் பாதிக்கப்படுமே என்பதாலா?
Quote
 
 
+5 #38 Sami 2012-11-24 16:11
This article is biased one, your view is not balanced, your blindly support one side. when it comes to community you scolds all other, is that something you have it in your heart. or personal attachment
Quote
 
 
+4 #37 janaki 2012-11-24 15:45
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=_Axybsm8AdE

yenda pannada NEGATIVE visayathai mattum potruka intha linkla poi paruda parathesi
Quote
 
 
+13 #36 p_ram_usa 2012-11-24 13:11
சவுக்கு, இதுவரை உன் பதிவுகள் அனைத்தும் நடுநிலையான, தீர ஆய்ந்து எழுதப்பட்டது என்று நினைத்தேன் . கடந்த சில பதிவுகள் அந்த எண்ணத்தை மாற்றிவிட்டது. சமீபத்தில் நடத்த தருமபுரி சம்பவதில் இரண்டு தரப்பிலும் தவறு உள்ளது எல்லோருக்கும் தெரியும். தலித் சமுதாயத்தை சேர்த்த ஒரு சிலர் வெளிப்படையாகவே கவுண்டனை வெட்டு, அவன் வீட்டு பொண்ணை கட்டு என்று மேடை போட்டு பேசியது உனக்கு அயோக்கியதனமாக தெரியவில்லை. அது உனக்கு புரட்சி...ஆனால் தலித் சமுதாயத்தை சேர்த்தவனுக்கு ஏன் அருந்ததியர் பெண்கள் மீது காதல் வரவில்லை என்று கேட்பது மட்டும் உனக்கு ஜாதி வெறியர்களாக, அயோக்கியத்தனமாக தெரிகிறது? இதுவரை காதல் என்ற நாடகம் மூலம் தலித் சமுதாய ஆண்களால் ஒரே ஆண்டில் கைவிடப்பட்ட பெண்களை பற்றி நீ கேள்விபட்டதே இல்லையா? சொத்திற்காக செய்யப்பட்ட இதுபோன்ற காதல் நாடகங்கள் நிறைய வழக்குகள் நீதிமன்ற நிலுவையில் உள்ளது உனக்கு தெரியாதா? ஆணிற்கு 19 வயதில் காதல் திருமணம் செல்லாது என்பது கூடவா உனக்கு தெரியாது? தலித் சமுகத்தில் யாரும் தவறே செய்யவில்லை என்று உன்னால் நிரூபிக்க முடியுமா? நீ நடுநிலையாக எழுதி இருந்தால் இரண்டு சமுதாயத்தில் இருக்கும் நியாயம், தவறுகளும் சுட்டிகாடியிருக ்க வேண்டும். நீ இதுவரை சவுக்கில் எழுதிய உன்னை பற்றிய அணைத்து பதிவுகளும் தற்போது சந்தேகதுகுரியவை ..ஒருதலைபட்சமான கருத்துக்கள் என்று நினைக்க தோன்றுகிறது... சவுக்கு இனி மெல்ல சாகும்...
Quote
 
 
+2 #35 solla payanthan 2012-11-23 21:51
ஆனால், பெரும்பாலான (இஸ்லாமியர்கள்) , ஒரு வித மனப்புழுக்கத்தோ டு, இது குறித்து கருத்து தெரிவிக்கவே அஞ்சுகிறார்கள். எங்கே இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தால், நம்மை தேச விரோதியாக்கி விடுவார்களோ என்ற அச்சம் அவர்களிடத்தில் காணப்படுகிறது. நத்தை ஓட்டுக்குள் சுருங்குவது போல அவர்கள் சுருங்குவதை காண முடிகிறது. இவ் விடதில் தாழ்தப்பட்டொர் அல்லாதொர் என்ட்ரு படிகவும்.
Quote
 
 
-3 #34 M.BABU 2012-11-23 14:00
மொதல்ல இவன யெதுகு பெட்டி யெடுக்கனும்
Quote
 
 
-1 #33 anandmca2005 2012-11-22 17:59
savukku, can you tell how intercaste marriages will abolish castes. Everyone saying this intercaste marriage is only way to abolish castes. I do not understand how. Kid's of parents who did intercaste marriage is going to have either any of the caste in his community certificate and this is going to carry on. Everyone will use the caste which is beneficial to them.(you should be knowing what they will use).
Quote
 
 
-2 #32 manithan 2012-11-22 07:19
[ஃஉஒடெ நமெ="மனி.பு"]இந்த நூற்றாண்டின் நடமாடும் மனித கழிவுகள் ராமதாஸ்,காடுவெட ்டி குரு போன்றவர்கள் அரசியலில் இருந்து அப்புறப்படுதப்ப ட வேண்டும்.வன்னிய மக்களாலேயே புறம் தள்ளப்பட்ட இந்த புண்ணாக்குகள் இப்போது ஜாதி தீயை பற்றவைத்து தஙக்ள் அடுப்புகளுக்கு உலை வைக்க நினைக்கின்றன.போலி தேசியம் பேசும் இந்த மோசடி ஜாதிவெறியன்களின ் முகத்திரைய்யயை கிழிக்க வேண்டும்[/ஃஉஒடெ]
[ஃஉஒடெ நமெ="மனி.பு"]இந்த நூற்றாண்டின் நடமாடும் மனித கழிவுகள் ராமதாஸ்,காடுவெட ்டி குரு போன்றவர்கள் அரசியலில் இருந்து அப்புறப்படுதப்ப ட வேண்டும்.வன்னிய மக்களாலேயே புறம் தள்ளப்பட்ட இந்த புண்ணாக்குகள் இப்போது ஜாதி தீயை பற்றவைத்து தஙக்ள் அடுப்புகளுக்கு உலை வைக்க நினைக்கின்றன.போலி தேசியம் பேசும் இந்த மோசடி ஜாதிவெறியன்களின ் முகத்திரைய்யயை கிழிக்க வேண்டும்[/ஃஉஒடெ]
well said mani
Quote
 
 
-1 #31 manithan 2012-11-22 07:15
savukku neenga evlo thaan thapai... thapunu sonaalum intha jaathi veri pidicha manusanunga thirunthavey maatununga...enavo ivanva kaduvulai vendi virumbi intha jaathiyila pirantha maathiri thaaan....padichavanunga thaaan savukai padikiran anaal savukku one side.aa eluthi irukunu polamburaan... padichavan thirunthi irukanumeyyy ilai...asingama vayila varuthu...naagarigam thadukuthu...press meet sema comedy.... atheleyum iyyyyyya thaniya election.la ninaru.nna inum sema comedy iruku wait n see. :lol:
Quote
 
 
+2 #30 Ram prasad 2012-11-22 01:51
By reading the comments i think i have nothing more to add.Most of the reader's overwhelming response are against this article.Which means only one thing.There is a strong problem of this sort going on in our state.I personally seen a chettiyar family vacating our village selling their 25 year old shop and house at a dirt cheap rate just for only one reason.A dalit scumbag crashed into their house at midnight to see their daughter.The chettiyar died broken hearted very next yearEven if they call it true love then why the fu@k they dont get that true love on a aruthathiyar women...point blank
Quote
 
 
+2 #29 mokkarasu 2012-11-21 13:27
வர வர சவுக்கு ஒரு தலித் ஆதரவு பத்திரிக்கை ஆகிவிட்டது..நடுனிலைமை இல்லை..
Quote
 
 
+6 #28 bambino 2012-11-21 12:45
காதல் திருமணம் செய்தவர்கள் நீடித்து ஒன்றாய் வாழ்வதற்கு பக்குவம் தேவை. அந்த பக்குவம் வருவதற்கு கல்வி, வாழ்க்கை அனுபவம் தேவை. ஆனால் சில தருணங்களில் அவசரப்பட்டு பின்னால் வாழப்பிடிக்காமல ் பிரிந்து விடுவது, தற்கொலை செய்து கொள்வது என காதல் திருமணங்கள் தோல்வி அடைகின்றன.
இந்த நிகழ்வு மிகவும் துரதிர்ஷ்டமானதா கும். ஒரு தகப்பன் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரை நம்பியுள்ள மற்ற பிள்ளைகளின் நிலையை நினைத்துப் பார்க்க வேண்டும்.
இது இரண்டு குடும்பத்திற்கு உட்பட்ட பிரச்சனை. இரண்டு சாதிக்கட்சிகளின ் பிரச்சனை அல்ல.
பெற்ற தகப்பனை இழந்து, புகுந்த வீட்டிற்கும் இழப்பு நிகழ்ந்து, இச்சூல்னிலையில் அந்தப் பெண்ணின் நிலை பரிதாபம். இன்னும் சில காலங்களில் அரசியல் கட்சிகள், கருத்து கந்தசாமிகள் (அடியேன் உட்பட) அவர் அவர் வேலைகளை பார்ப்பார்கள். ஆனால், அந்தப் பெண்ணின் நிலை ?
Quote
 
 
+12 #27 ஷாலி 2012-11-21 10:48
// தலித் அல்லாத மாணவிகள் குறிவைத்து இந்த காதல் நாடகங்களுக்கு பலியாக்கப்படுகி றார்கள்.குறிப்பாக பள்ளி இறுதி மற்றும் கல்லூரியில் உள்ள மாணவிகள்......(யோவ்.....கல்லூரியில் படிக்கும்போது காதலிக்காமே உன் வயசுலையா காதலிக்க முடியும்.......உனக்கு ஏதாவது அறிவு இருக்கா இல்லையா......)//

சவுக்கின் எழுத்தில் ஏனிந்த தடுமாற்றம்? பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ,மாணவிகள் கட்டாயம் காதலிக்க வேண்டிய பருவம் இதுதான் என்று சவுக்கு கூறுகிறதா? காதல் படிப்பு படிக்கவா கல்லூரிக்கு அனுப்பப்படுகிறா ர்கள்?

ராமதாசை எதிர்ப்பதற்காக தவறான பாதையை காட்டலாமா? பருவ வயதில் அனைவருக்கும் உருவாகும் ஈஸ்ட்ரோஜன்,டெஸ் டிரஜோன் ஹார்மோனால் ஈர்ப்பு இரு பாலருக்கும் இருக்கத்தான் செய்யும்.அந்த உணர்ச்சி வெள்ளத்தை கல்லூரியிலேயே உடைத்து விடாமல்,அணை கட்டி தடுத்து படிப்பில் முழு கவனம் செழுத்துபவனே வெற்றி பெறுகிறான்.

பள்ளியறை பாடத்தை பள்ளியில் பெறுபவன்,ஒழுக்க ம் கெட்ட ஒரு வைரஸ் கிருமி. இந்த விஷக்கிருமி காதலை சவுக்கு ஆதரிப்பது ஒரு சமூக குற்றம். நிதானமாக எழுதுங்கள்.சொல்லற்க! சொல்லில் பயனிலா சொல்.!
Quote
 
 
+1 #26 ignatius 2012-11-20 22:10
But one thing is sure .. ramadoss has set the stage .. he wont shut down this flame .. instead he will pour oil and make it glow .. so that he will win the coming elections and win seats , Make his son a minister .. this will happen for sure .. All Caste hindus will surely vote for him and make him victory ..
Quote
 
 
+74 #25 T Velmurugan 2012-11-20 21:23
சட்டம் என்பது அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும். தலித் அடுத்தவன் வீட்டு பெண்ணை தூக்கு என்றால் தவறில்லை. அதே ஒரு தேவர், வன்னியர் அல்லது செட்டியார் தலித் பெண்ணை தூக்கு என்றால் தவறு. என்னங்கயா உங்க சட்டம்? வன்முறையை தூண்டும் எந்த ஒரு சாதி அமைப்பும் ஒடுக்கப்பட வேண்டும்.
Quote
 
 
+92 #24 T Velmurugan 2012-11-20 21:19
மணி கண்டன் அனுப்பிய வீடியோ பார்த்தால்தான் தெரிகிறது. தலித் தலைவர்கள் காதல் என்ற பெயரில் பணம் பறிக்கும் கும்பலாக மாறி வருகின்றனர். இது தவறான அணுகுமுறை. தலித்துகள் படித்து முன்னேறீ காண்பிக்கட்டும் . இல்லை விளையாட்டில் முன்னேறி காண்பிக்கட்டும் . இல்லை பிசினஸில் முன்னேறி காண்பிக்க வேண்டும். அடுத்தவன் வீட்டு பெண்ணை தூக்குவது என்ன முன்னேற்றம்? நீ நன்றாக முன்னேறினால் பெண்கள் தானாக வந்து கல்யாணம் செய்து கொள்வார்கள். பத்திரிக்கைகள் இரு சாரார் கருத்தையும் எழுதாது வருத்தம் தெரிவிக்கிறது. நம்ம வீட்டு பெண்களை இப்படி யாராவது குறி வைத்து சுற்றினால் ஒப்புக்கொள்வோமா ? அது எந்த சாதிக்காரனா இருந்தாலும்? பத்திரிக்கைகள் பெரும்பாலும் தலித்துகள் செய்யும் குற்றத்தை சொல்வதில்லை. ஆனால் சவுக்கு உயர் நீதிபதி கர்ணனை ஒரு முறை விளாசி உள்ளது. ரவுடிகள் அரசியல் கட்சியில் புகுந்து கொண்டு அடாவடி செய்வது போல், தலித்துக்கள் தலித் அமைப்பில் சேர்ந்து தவறு செய்கிறார்கள் என்பது தெளிவு
Quote
 
 
+41 #23 nellai advocate 2012-11-20 20:40
Quoting SK Manikandan:
தலித்துக்கள் தவறே செய்வதில்லை என்ற எண்ணம் பெரும்பாலான ஊடகங்கள் மூளை சலவை செய்கின்றன. ஒரு காலத்தில் தலித்துக்கள் ஒதுக்கப்பட்டது உண்மை. ஆனால் இன்று அவர்கள் அப்படியில்லை. படிக்க வாய்ப்புண்டு. சட்டப்படி சம உரிமை உண்டு. அவர்களை யாரும் அடிமையாக நடத்தவில்லை. மாறாக தலித்துக்கள் செய்யும் தவறுகள்தான் அதிகம். அரசு உதவித்தொகை வாங்கி கொன்டு நிறைய பேர் சரியாக படிப்பதில்லை. அரசு வேலைகளிலும் யாரும் அவர்களை கேள்வி கேட்க முடியாது. எனக்கு தெரிந்த ஒரு பாங்க் மேனேஜர் தன் கீழ் வேலை செய்யும் பியூனிடம் வேலை சொல்ல முடியவில்லை. அந்த தலித் பியூன் ரொம்ப வேலை கொடுத்தால் தலித் வன்கொடுமை சட்டத்தில் புகார் செய்வேன் என்று மிரட்டினார். எனக்கு தெரிந்த தலித் ஐ.ஏ.எஸ் அதிகாரி (1985 வாக்கில்) தலைமை செயலாளராக இருந்தார். கவர்னர் ஆலோசகராக இருந்தார். பின்னாளில் வட கிழக்கு மானிலத்தில் கவர்னராக இருந்தார். (பேர் வேண்டாம், ஆனால் யார் என்று யூகிக்க முடியும்). ஆட்டோ சங்கர் வழக்கில் ஒரு டைரி கிடைத்தது (பி.சி. அலெக்சாண்டர் கவர்னர் காலத்தில்). அதில் ஒரு தலித் ஐ.பி.எஸ் அதிகாரி பெயர் இருந்தது. தன் சக தலித் ஐ.பி.எஸ் அதிகாரியை காப்பாற்ற அந்த டைரியை இந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி மறைத்து விட்டார். இவ்வளவு ஏன்? முன்னாள் உச்ச நீதி மன்ற நீதிபதி கே.ஜி. கோபால கிருஷ்ணன் செய்யாத தகிடு தத்தங்கள் இல்லை. தலித் என்ற காரணத்துக்கு பி.டி. தினகரன், கர்ண்ன் போன்றவர்களை தூக்கி விடவில்லையா? நீதிபதி கர்ணன் பற்றி சவுக்கே ஒரு கட்டுரை எழுதி உள்ளது. சவுக்கு தவறுகளை சாதிய கண்னோட்டத்தில் பார்க்க கூடாது.

savukku is a middle man.nothing wrong in his view.but its true wat this reader wrote too
Quote
 
 
-11 #22 nellai advocate 2012-11-20 20:38
Quoting சோழன்:
#8 R Eswaran 2012-11-20 08:30

ஐயா ஈசுவரன்,
நிலம் உடைய வசதி கொண்ட உன் சாதியே "மிகவும் பிற்படுத்தப்பட் ட" என்கிற அடைமொழியுடன் இட ஒதுக்கீடு பெறுவது தமக்கு தெரியாதோ? இல்லை எல்லாம் முடிந்த உடன் மறந்துவிட்டதா? இட ஒதுக்கீடு பெற்றது?

they wish to enjoy theprivilages of a dalit but never wished to be called so.MBC...!!!
Quote
 
 
-9 #21 சோழன் 2012-11-20 18:29
சவுக்கு எல்லா சாதியையும் திட்டி / சாடி கட்டுரை எழுதிவிட்டது! முழுதாக படிக்காத மடையர்கள் இன்னும் சவுக்கை ஒரு சாதிக்கு சார்பாக எழுதுவதாக குறை சொல்லுவது முட்டாள்தனம் அல்லது தன் சாதி தவறை மறைக்கும் காவாளித்தனம்!
Quote
 
 
+83 #20 ஷாலி 2012-11-20 18:00
காதல் டாக்டர் மட்டுமல்ல, பொதுவாக எல்லா சாதி தமிழனுடைய எண்ணமும் இதுதான்.ஆணோ பெண்ணோ யாரை வேண்டுமானாலும் காதலியுங்கள்,கர ்ப்பமாக்குங்கள் , (கற்புக்கு குஷ்பூக்களால் இலக்கணம் வகுக்கப்பட்டு விட்டது.).ஆனால் கல்யாண “ஒய்ப்” தன் சாதியில் மட்டுமே செய்ய வேண்டும்.வைத்துக்கொள்ளும ் “வைப்பு” எச்சாதியாயிருந் தாலும் பரவாயில்லை.

தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் அரசு கொடுக்கும் சலுகையில் கல்லூரியில் இடம்பிடித்து அரசு வேலையையும் சுலபமாக பெற்று விடுகின்றனர்.பின்பு என்ன நடக்கிறது? வெள்ளைத்தோல் காரி எவளிடமாவது பல்லைக்காட்டி அவள் பின்னால் ஓடி வெள்ளைப் பிள்ளைக்கு தகப்பனாக ஆசைப்படுகிறான்.

தன் சமூகத்து முறைப்பெண் சேரிப்பெண்ணை திரும்பிக்கூடப் பார்ப்பதில்லை.தன் சமூகத்துப் பெண்ணை கை தூக்கிவிடும் கடமை மறந்த, தன் சமூக பிரங்ஞை அற்ற சுயநல வாதிகளால் தான், தாழ்ந்த சமூகம் தலை நிமிர முடியாமல் தீ நாக்குகளால் தின்னப்படுகிறது
Quote
 
 
+101 #19 Amanullah 2012-11-20 16:00
சவுக்கின் கருத்தில் எனக்கு சிறிதும் உடன்பாடு இல்லை. கலப்பு திருமணத்தால் நிச்சயம் ஜாதி வெறியினை ஒழிக்க முடியாது. மாறாக அது மென்மேலும் வளரத்தான் செய்யும். எங்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளாக ஏறத்தாழ 100க்கும் மேற்பட்ட இசுலாமிய பெண்கள் கலப்பு திருமணம் செய்து கொண்டனர். அதற்காக எத்தனை மக்கள் பகுத்தறிவாளிகளா க மாறிவிட்டார்கள் ? கலப்பு திருமணம் செய்து கொண்ட பெண்கள் பலரும் பல சவரன் தங்க நகைகளை எடுத்து கொண்டு தான் வீட்டை விட்டு ஓடினர். அவர்கள் மணந்ததும் பெரும்பாலும் தலித் ஆண்களை தான். தலித் ஆண்கள் வசதி படைத்த பிற சமுதாய பெண்களை திட்டமிட்டு வளைக்கின்றனர் என்ற மறுக்க முடியாத குற்றச்சாட்டும் அனைத்து சமுதாய மக்களிடம் பரவலாக இன்று இருக்கிறது. அந்த பெண்களுடைய பெற்றோர்கள் தங்களுடைய உற்றார் உறவினர்கள் முகத்தில் விழிப்பதற்கு வெட்கப்பட்டும் திருமணம், இறப்பு உள்ளிட்டவைகளுக் கு கலந்து கொள்வதை தவிர்த்தும் நடைபிணமாக இன்று வாழ்ந்து வருகின்றனர். 20 30 வருடங்களுக்கு முன்பு இருந்த தலித் மக்களுக்கும் இன்றைய தலித் மக்களுக்கும் நிறைய வித்தயாசம் உள்ளது என்பது தான் எதார்த்தம். இரட்டை டம்ளர் முறை தீண்டாமை போன்ற பழைய பஞ்சாகங்களை இன்னும் எத்தனை நாளைக்கு தான் நான் தாங்கி பிடித்து கொண்டிருப்போம் என தெரியவில்லை. வலியின் உண்மையான வேதனை வலி உள்ளவனுக்கு தான் தெரியும். வெளியில் இருந்து கொண்டு கலப்பு திருமணத்தினை பற்றி எவ்வளவு வேண்டுமானாலும் பேசலாம். தங்கள் குடும்பத்திலும் அந்த சம்பவம் ஒன்று நடந்தால் தான் பேசுவர்களுக்கு எதார்த்தம் புரியும்.
Quote
 
 
+8 #18 manithan 2012-11-20 15:50
savukku sankar pls. dont call ramadoss a doctor.he obtained his certificate through forgery .he was punished for doing such a criminal act, he cannot practise as a doctor as well as he cannot participate in elections.his certificate was obtained saying he was from the scheduled caste. this is a liable information
Quote
 
 
-24 #17 Dilip Narayanan 2012-11-20 12:59
// ஒரு டீக்கடையில் ரெண்டு பேர் பேசிக்கிட்டு இருக்கான்… அவங்களுக்குள்ள சண்டை வருது. திடீர்னு ஒருத்தன் போயி இன்னொருத்தன் என்னை ஜாதிப் பேரச் சொல்லி திட்டிட்டான்னு புகார் கொடுத்துட்றான்.//ஏதோ போலீஸ் எல்லாருமே வேலை வெட்டி இல்லாமல் வன் கொடுமை தடுப்புச்சட்டம் 1989 இன் கீழ் எவனடா பிடிச்சு உள்ள தள்ளலாம் என்று கங்கனம் கட்டிக்கொண்டு உட்கார்ந்திருப் பது போல அல்லவா தமிழ்க்குடிதாங் கி சொல்லுகிறார். பதிவான வன் கொடுமை வழக்குகளில் 5% தண்டனை கிடைத்தாலே பெரிய விஷயம். வழக்கை பதியாமல் விடுவது அப்படி பதிந்தாலும் சரியான சாட்சி இல்லையென்று கேசை கழட்டிவிடுவதுதா னே சாதாரணமாக நடக்கிறது இங்கே.
Quote
 
 
0 #16 சோழன் 2012-11-20 12:16
#8 R Eswaran 2012-11-20 08:30

ஐயா ஈசுவரன்,
நிலம் உடைய வசதி கொண்ட உன் சாதியே "மிகவும் பிற்படுத்தப்பட் ட" என்கிற அடைமொழியுடன் இட ஒதுக்கீடு பெறுவது தமக்கு தெரியாதோ? இல்லை எல்லாம் முடிந்த உடன் மறந்துவிட்டதா? இட ஒதுக்கீடு பெற்றது?
Quote
 
 
+20 #15 saravananht 2012-11-20 11:27
சவுக்கு கருத்து மிக கேவலமாக உள்ளது. பொதுவாக திருமா அவர்களும் ராமதாஸ் அவர்களும் இணைந்து இருந்ததால் தான் கடந்த பல ஆண்டுகளாக வடமாவட்டங்களில் இனமோதல் குறைந்து சமூகமான சூழல் இருந்துவந்தது. அது தொடரவேண்டும்.தர்மபுரியில் நடந்துது கண்டிப்பாக வன்னியர் தலித் மோதல் அல்ல.அதையும் தாண்டி நடந்துள்ளது. இதற்கு சவுக்கு உட்பட நாம் அனைவரும் பொறுப்பு ஏற்கவேண்டும் . சமூக மாற்றம் ஏற்படவேண்டும் .இரு ஒடுக்கப்பட்ட சமூகங்களை பிரிக்கும் அரசியலாகவே இதை நான் பார்கிறேன் . குறிப்பாக மிக இளம் வயது பெண்களால் சரியான முடிவெடுக்கமுடி யவில்லை . ஊடகங்கள் குறிப்பாக திரைப்படங்கள் காதல் தவிர உலகில் எதுவும் இல்லததைபோல் காட்டி சீரழித்துவிட்டன .எனவே தளங்களிலும் சமூக மாற்றம் கொண்டுவர முயலவேண்டும். தயவு செய்து மேலோட்டமான கருத்துக்கள்வேண ்டாம்.ராமதாஸ் மற்றும் திருமா இருவருமே சமூக அக்கறை உள்ளவர்கள்தான் .அவர்கள் இருவரையும் பிரித்து சிறுமைபடுத்தி ஆதாயம் தேட சில அரசியல் சக்திகள் முயல்வதே உண்மை.
Quote
 
 
+24 #14 AAR 2012-11-20 11:08
Eve teasing and harassment of school girls by Dalit boys is a major social problem in rural Tamilnadu.
Quote
 
 
+81 #13 SK Manikandan 2012-11-20 11:04
தலித்துக்கள் தவறே செய்வதில்லை என்ற எண்ணம் பெரும்பாலான ஊடகங்கள் மூளை சலவை செய்கின்றன. ஒரு காலத்தில் தலித்துக்கள் ஒதுக்கப்பட்டது உண்மை. ஆனால் இன்று அவர்கள் அப்படியில்லை. படிக்க வாய்ப்புண்டு. சட்டப்படி சம உரிமை உண்டு. அவர்களை யாரும் அடிமையாக நடத்தவில்லை. மாறாக தலித்துக்கள் செய்யும் தவறுகள்தான் அதிகம். அரசு உதவித்தொகை வாங்கி கொன்டு நிறைய பேர் சரியாக படிப்பதில்லை. அரசு வேலைகளிலும் யாரும் அவர்களை கேள்வி கேட்க முடியாது. எனக்கு தெரிந்த ஒரு பாங்க் மேனேஜர் தன் கீழ் வேலை செய்யும் பியூனிடம் வேலை சொல்ல முடியவில்லை. அந்த தலித் பியூன் ரொம்ப வேலை கொடுத்தால் தலித் வன்கொடுமை சட்டத்தில் புகார் செய்வேன் என்று மிரட்டினார். எனக்கு தெரிந்த தலித் ஐ.ஏ.எஸ் அதிகாரி (1985 வாக்கில்) தலைமை செயலாளராக இருந்தார். கவர்னர் ஆலோசகராக இருந்தார். பின்னாளில் வட கிழக்கு மானிலத்தில் கவர்னராக இருந்தார். (பேர் வேண்டாம், ஆனால் யார் என்று யூகிக்க முடியும்). ஆட்டோ சங்கர் வழக்கில் ஒரு டைரி கிடைத்தது (பி.சி. அலெக்சாண்டர் கவர்னர் காலத்தில்). அதில் ஒரு தலித் ஐ.பி.எஸ் அதிகாரி பெயர் இருந்தது. தன் சக தலித் ஐ.பி.எஸ் அதிகாரியை காப்பாற்ற அந்த டைரியை இந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி மறைத்து விட்டார். இவ்வளவு ஏன்? முன்னாள் உச்ச நீதி மன்ற நீதிபதி கே.ஜி. கோபால கிருஷ்ணன் செய்யாத தகிடு தத்தங்கள் இல்லை. தலித் என்ற காரணத்துக்கு பி.டி. தினகரன், கர்ண்ன் போன்றவர்களை தூக்கி விடவில்லையா? நீதிபதி கர்ணன் பற்றி சவுக்கே ஒரு கட்டுரை எழுதி உள்ளது. சவுக்கு தவறுகளை சாதிய கண்னோட்டத்தில் பார்க்க கூடாது.
Quote
 
 
+78 #12 SK Manikandan 2012-11-20 10:53
நண்பர் சவுக்கு,

நீங்கள் எழுதுவது தவறு. இந்த வீடியோ ஆதாரங்களை பார்த்து விட்டு சொல்லவும். கவுண்டனை வெட்டு, கவுண்டச்சியை கட்டு என்று தூண்டி விடுவது தவறில்லையா? அது போக இந்த இளைஞனுக்கு (இளவரசனுக்கு 21 வயது தாண்டவில்லை). தலித் இளைஞர்களை வன்முறைக்கு தூண்டிவிடும் இந்த தலைவர்களை கைது செய்ய எந்த பத்திரிக்கையும் சொல்வதில்லை. சவுக்கின் கட்டுரைகள் நேர்மையாக இருக்கும், ஆனால் இந்த கட்டுரை தவறு. இப்படி தூண்டி விட்டு நடத்தும் கல்யாணததை காதல் நாடகம் என்று சொல்லாம என்னவென்று சொல்வது? ராமதாஸ் சொல்வது சரி.சவுக்கு நேர்மையான எழுத்தாளர் என்றால் இரு சாரார் கருத்தையும் வெளியிட வேண்டும். இந்த வீடியோ ஆதாரங்கள் எப்படி தலித் இளைஞர்கள் தூண்டப்படுகிறார ்கள் என்பதற்கு சாட்சி.

http://www.youtube.com/watch?v=GyfenxYJtNE
http://www.youtube.com/watch?v=XjzZXHCWww8
http://www.youtube.com/watch?v=oEoCRVBQz34
Quote
 
 
+35 #11 Robinhood 2012-11-20 09:41
ஜாதி என்று பேசி எல்லோருமே ஜாதி வெறியர்களாகவே அடையாளப்படுத்து கிறார்கள். வுன்மையான பிரச்சினை என்ன என்பதை வுணரவில்லை. எந்த ஜாதியாக இருந்தாலும் பெற்றோர்களின் சம்மதமின்றி திருமணம் செய்துகொள்வதைபற ்றி பிள்ளைகள் சிந்திக்கவேண்டு ம். முதலில் அவர்கள் தங்கள் குடும்பத்தை பற்றியும் முன்னேற்றத்தை பற்றியும் யோசிக்கவேண்டும் . காதல் என்பது ஒரு வுணர்வு. தங்கள் குடும்பத்தை பற்றியும், பின்விளைவுகள் பற்றியும் யோசிக்காமல் காதல், காதல் என்று இளைஞர்கள் இரண்டு பெற்றோர்களையும் துன்புறுத்துவது தவறு. கல்வி மற்றும் பொருளாதாரத்தில் முன்னேற்றமடைந்த ாலே ஜாதிகள் ஒழியும். ஒவ்வொரு பெற்றோருக்கும் தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல வாழ்க்கை அமைதுகொடுக்க வேண்டும் என்றுதான் இருக்கும். காதல் செய்து விட்டார்கள், ரொம்ப நல்லது, படிக்கலன்னா பரவால்ல வுடனே,கல்யாணம் பண்ணி வச்சிட்டா ஜாதிகள்ஒழிந்து விடும் , நாடு முன்னேறிவிடும் என்றா நினைப்பார்கள்? ஜாதிகளை வைத்து அரசியல் செய்பவர்கள் ஜாதிவெறியை தூண்டகூடாது. இந்த வுருப்படாத காதலால் முன்னூறு வீடுகள் எரிக்கப்பட்டன, ஒரு தற்கொலை நடந்தது. இந்த வன்முறைக்கு காரணமானவர்கள் அனைவருமே தண்டிக்கப்படவேண ்டியவர்களே.
Quote
 
 
-40 #10 சரவணன் 2012-11-20 08:57
**** இவ்வளவும் நடக்கும்போது அந்தப் பொண்ணு ஒரு ஆறு மாசம் கழிச்சு வயித்துல புள்ளையோட திருப்பி அனுப்பிட்டான்னு இங்க வந்து நின்னா .. ****

கருவுற்ற பெண்ணை, வளைகாப்பு நடத்தி, தாய் வீட்டுக்கு அனுப்பித்தான் வைப்பார்கள்! அதுகூட குத்தமாய்யா?!!
Quote
 
 
+84 #9 R Eswaran 2012-11-20 08:40
பொதுவாக சாதி வேண்டாம் என்று சொல்லும் ஒரு சிலர், ஏன் தமிழன் என்று அடையாளப்படுத்தி கொள்ள வேண்டும்? சவுக்கில் மற்றும் எத்தனையோ தமிழ் பத்திரிக்கைகளில ் முல்லைப்பெரியார ் சமயத்தில் மலையாளிகளை திட்டியும், காவிரி பிரச்சினையில் கன்னடர்களை திட்டியும் கட்டுரைகள் வரவில்லையா? சாதி வேண்டாம் என்று சொல்லும் ஒரு சிலர் தமிழனை மட்டும் ஏன் உயர்வாக பிடிக்க வேண்டும்? தமிழன் தவறே செய்வதில்லையா? ஒரே மாதிரி பழக்க வழக்கங்கள், நாகரீகம் உள்ளவர்கள் சேருவது தவறில்லை. மும்பையில் தமிழ் சங்கம் இருப்பதும், இலங்கையில் தமிழர்கள் ஒன்று கூடி தன்னைப்போன்று இனத்துக்கு போராடுவது இயற்கை. தலித்துகள் தன் இனத்துக்கு கட்சி அமைப்புக்கள் வைத்து போராடுவது சரி, ஆனால் நாடார், வன்னியர், கவுண்டர் கட்சி வைக்க கூடாதா? முஸ்லிம்களுக்கு இருக்கும் கட்சியை சவுக்கு கண்டிக்குமா? சாதி கட்சி வேண்டாம் என்றால், மதக்கட்சியும் கூடாது அல்லவா? சவுக்கு ஒரு சிலரை திருப்திபடுத்த இப்படி கட்டுரைகள் எழுதுவது தவறு
Quote
 
 
+100 #8 R Eswaran 2012-11-20 08:30
ராமதஸிடம் நிறைய முரண்பாடான விவகாரங்கள் உண்டு(ஆனால் எந்த தலைவர்களிடம் இல்லை). ஆனால், மது விலக்கு போன்ற சமாச்சாரங்களில் உறுதியாக குரல் கொடுத்த ஒரே தலைவர் ராமதாஸ்.

இந்த விவகாரத்தில் சவுக்கு புரியாமல் எழுதி உள்ளது. காதல் தவறில்லை. ஆனால் சமீப காலத்தில் தலித் இளைஞர்கள் மற்ற சாதி பெண்களை கிண்டல் செய்வதும், குறி வைத்து காதல் செய்வதும், அது திருமா போன்ற தலைவர்களால் ஊக்கப்படுத்துவத ும் ஊர் அறிந்த உண்மை. நிறைய காதல் திருமணங்கள் தோல்வியில் முடிந்ததும், பணத்துக்காக வி.சி பிரமுகர்கள் கட்டப்பஞ்சாயத்த ு நடத்துவது சமீப அளவில் நடந்து வருவது நிறைய பேருக்கும் தெரியும். ஆனால் பத்திரிக்கைகளோ, அரசியல் தலைவர்களோ இதை பேச விரும்பவதில்லை. ஓட்டு வங்கி பயம். இது போன்று வன்கொடுமை சட்டங்கள் தவறாக பயன்படுத்தப்படு வதும் உண்மை. தலித் வன்கொடுமை சட்டங்கள், வரதட்சிணை சட்டங்கள் போன்றவை நிறைய இடங்களில் தவறாக பயன்படுத்தப்படு கின்றன. தலித் வன்கொடுமை சட்டத்தால் பாதிக்கப்பட்ட தேவர், கவுண்டர், வன்னியர் தனக்கென்று சாதி அமைப்பு உருவாக்கி கொண்டார்கள். தலித்துக்கு வி.சி என்று அமைப்பு உருவாகிய போது அது சாதி கட்சி இல்லை, அதே வன்னியருக்கோ, கவுண்டருக்கோ கட்சி அமைந்தால் சாதி கட்சியா? தலித் வன்கொடுமை சட்டம் தவறாக பயன்படுத்தப்படு கிறது என்று கொங்கு முன்னேற்ற கழகம் முன்னிலைப்படுத் தி 2009 நடந்த பாராளுமன்ற தேர்தலில் சுமார் 5 தொகுதிகளில் 1 லட்சம் ஓட்டு வாங்கியது. தெரியாமல்தான் கேட்கிறேன். தலித்துக்களுக்க ு பாராளுமன்றத்தில ் இட ஒதுக்கீடு, சட்டசபையில் இட ஒதுக்கீடு, அரசு வேலையில் இட ஒதுக்கீடு என கடந்த 65 வருடங்களாக இருக்கிறது. ஏன் தலித் தலைவர்கள் அவர்களுடைய சமூதாயத்தை முன்னேற்றவில்லை ? ஏன் மற்ற சாதிகளில் ஏழைகள் இல்லையா? இது போன்ற கண் மூடித்தனமான இட ஒதுக்கீடும், சட்டங்களும் (வன்கொடுமை சட்டங்கள்) மற்ற சமூக மக்களை எரிச்சல் செய்ய வைக்கிறது. சட்டம் என்பதும் அனைவருக்கும் சமமாக இருக்க வேன்டும். நியாயம் என்பதும் சமமாக இருக்க வேண்டும். தலித் என்றால் தப்பு செய்ய மாட்டார்கள், மற்ற சாதி மக்கள்தான் தவறு செய்வார்கள் என்பது தவறான கண்ணோட்டம்.
Quote
 
 
-35 #7 Karikalan_cdm 2012-11-20 04:11
As usual Savukku rocks thru his brave article.
Quote
 
 
-20 #6 kingkong 2012-11-20 03:26
மிக்க நன்றி சவுக்கு.. இப்படி வயிறு குலுங்க சிரித்து ரொம்ப நாள் ஆச்சு.. வீடியோ சூப்பர்..

பெத்தவங்க சம்மதத்தோட கல்யாணம் நடந்துச்சாம்.. அத இவர் நடத்தி வெச்சாராம்.. நீங்க என்ன ஐயரா? பெத்தவங்க சம்மதிச்சா அப்புறம் நடத்திவெக்க நீங்க எதுக்கு?

ஐயா குரு.. போலீஸ் ஸ்டேஷன்ல போயி பிரி பிரின்னா கூட்டை பிரிச்சு, முட்டைய ஒடச்சிரிவானுவோ.. பாத்து
Quote
 
 
+99 #5 Padmanan 2012-11-20 01:54
சவுக்கு இதைத்தான் எழுத வேண்டுமென எங்களால் நிர்பந்திக்க முடியாது. ராமதாஸ் மற்றும் பாமக பற்றி எழுதும் போதோ அல்லது சின்மயி பற்றி எழுதும் பொழுதோ நியாயத்தை எழுதாமல் வேண்டியவர்களுக் கு ஆதரவாக எழுதுவது அப்பட்டமாக தெரிகிறது.

விசி கட்சியை சேர்ந்த சிறுத்தைகள்(?)செய்யும் அடாவடி, கேலி, கிண்டல்களால் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வீட்டோடு முடங்கிப்போன வன்னியர் பெண் குழந்தைகள் கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் அதிகம். இதற்கெல்லாம் என்ன சொல்ல வருகிறீர்கள்?

தலித் சாதியை சேர்ந்தவர்களோடு சம்மந்தம் வைக்க வேறு சாதியினர் யாரும் தயாராக இல்லை. அது மேலும் மேலும் பிரச்சனைக்குத்த ான் வழி வகுக்கும். இந்து மதத்தில் சாதி ஒழிப்பு அவ்வளவு எளிதில் நடந்து விடாது.
தலித் மக்கள் வாழ்க்கைத்தரம் உயர உருப்படியான ஆலோசனைகள் மற்றும் முயற்சிகள் இருந்தால் சொல்லுங்கள் அல்லது செய்யுங்கள். அதைவிடுத்து வன்னியப் பெண்களை திருமனம் செய்யுங்கள், புள்ளையை கொடுத்துவிட்டு பிரச்சனையெனில் வாருங்கள் தீர்த்து வைக்கிறோம் என விசி கட்சியை சேர்ந்த தலைவர்கள் பேசியதை பற்றி எதுவும் எழுதாமல் ராமதாஸ் பாமக என சுற்றி சுற்றி வருவது எரிச்சலாக இருக்கிறது. இராமதாஸ் மற்றும் பாமகா மட்டும்தான் அயோக்கியன்கள் போல் எழுதுவது ரொம்பவே ஓவர். எதோ நாலு எழுத்து படிக்க அனுப்பினால் அப்பிள்ளைகளின் மனதை கெடுத்து எதிர்காலத்தை சூன்யமாக்கும் இதுபோன்ற கேடுகெட்ட செய்லகளுக்கு சவுக்கு உடன் போக வேண்டாம்.
Quote
 
 
-15 #4 kadothkajan 2012-11-20 01:05
ஜாதி பிரச்சினை பண்ணும் உண்மையான ஜாதிகளை அடையாளம் காண்பித்ததற்கு மிக்க நன்றி.
Quote
 
 
-4 #3 Mani.Pu 2012-11-20 00:17
இந்த பொறுக்கி கும்பல் இனி ஈழம்பற்றி பேசக்கூடாது.
Quote
 
 
+11 #2 தமிழரசன் கலை 2012-11-20 00:06
இங்கு தேர்தல் அரசியல்பிழைப்பு ஈனர்களுக்கு தமிழ்தேசிய விடிவில் துளியும் அக்கறை இருந்ததில்லை அனைத்தும் ஏமாற்று நாடகம் ! மேலும் இந்த சுயநல அரசியல் நச்சுகிருமிகளுக ்கு தன் சாதியைச்சேர்ந்த மக்களின் மேல் பற்றும் அக்கறையும் துளியும் இல்லை மக்களைத் தூண்டிவிட்டு சாதிவெறியை எரியவிட்டு அதில் குளிர் காய நினைக்கும் கொடூரக் கேடு இந்த கயவர்கள்!
தேர்தல் கட்சியில் கிடைத்த பதவிகளில் சுரண்டிக் சுருட்டிக் கொழுத்து அரசியல் சுரண்டிப் நடத்திய இவர்களின் தம் பொய் புரட்டு அரசியல் வேடம் கிழிந்து சிதைந்து போன தம் செல்வாக்கை மீண்டும் சூழ்ச்சியாக மக்களை பழி கிடா வாக்கி தம் தேர்தல் கொள்ளைக்கு சாதிக் கலவரங்கள் தேவைப்படுகிறது !
Quote
 
 
+8 #1 Mani.Pu 2012-11-20 00:04
இந்த நூற்றாண்டின் நடமாடும் மனித கழிவுகள் ராமதாஸ்,காடுவெட ்டி குரு போன்றவர்கள் அரசியலில் இருந்து அப்புறப்படுதப்ப ட வேண்டும்.வன்னிய மக்களாலேயே புறம் தள்ளப்பட்ட இந்த புண்ணாக்குகள் இப்போது ஜாதி தீயை பற்றவைத்து தஙக்ள் அடுப்புகளுக்கு உலை வைக்க நினைக்கின்றன.போலி தேசியம் பேசும் இந்த மோசடி ஜாதிவெறியன்களின ் முகத்திரைய்யயை கிழிக்க வேண்டும்
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 196 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday9879
mod_vvisit_counterYesterday13443
mod_vvisit_counterThis week23322
mod_vvisit_counterLast week95998
mod_vvisit_counterThis month257369
mod_vvisit_counterLast month382199
mod_vvisit_counterAll days13173736