முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
தேசிய அவமானம்.. … அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 146
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
வியாழக்கிழமை, 22 நவம்பர் 2012 07:30

kasab_reuters

 

 

தந்தை வண்டி இழுத்து வாழ்வை நடத்துபவர். கடுமையான வறுமைச் சூழல்.  ஆறாவது வகுப்போடு படிப்பை கைவிடுகிறான்.   அதற்குப் பிறகு உடல் உழைப்பு. லாஹுரில் தனியாக தங்கி வேலை செய்கிறான்.  ஊருக்குத் திரும்பியதும், தான் சம்பாதித்த பணத்தை செலவு செய்வது தொடர்பாக அவனுக்கும், அவன் தந்தைக்கும் சண்டை.  கோபித்துக் கொண்டு, ராவல்பிண்டி செல்கிறான். மீண்டும் அங்கே வேலை. அங்கே லஷ்கர் ஏ தொய்பா என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் நோட்டீஸ் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.  காஷ்மீர் விடுதலைக்காக ஆடுகளை தானமாகக் கொடுங்கள் என்று பேசுகிறார்கள்.  20 வயதான கசாப்புக்கு அது ஈர்ப்பை ஏற்படுத்துகிறது.  அந்த லஷ்கர் அமைப்பின் அலுவலகத்துக்கு சென்று நான் ஜிகாத்தில் சேர வேண்டும் என்கிறான்.  வீட்டுக்குப் போய் உன் துணி மணியையெல்லாம் எடுத்துக் கொண்டு நாளை வா என்று அனுப்புகிறார்கள்.  அதன் படியே துணி மணிகளை எடுத்துக் கொண்டு மறு நாள் செல்கிறான்.

அவனை வேறு ஊருக்கு அனுப்பி பயிற்சி எடுக்க அனுப்புகிறார்கள்.   அங்கே அவனுக்கு ஆயுதப் பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.  மூன்று முறை பயிற்சி எடுக்கிறான். இந்தியாவுக்கு சென்று கண்மூடித்தனமாக தாக்குதல் தொடுக்க வேண்டும் என்று அவனுக்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

2008 நவம்பர் 26 அன்று மும்பை வந்திறங்கிய அவன் கண்மூடித்தனமாக விக்டோரியா ரயில் நிலையத்தில் இருந்த அப்பாவிப் பொதுமக்கள் சுட்டுத் தள்ளுகிறான்.  காவல்துறையோடு நடந்த மோதலில் இறுதியாக கைது செய்யப்படுகிறான்.

26 நவம்பர் 2008 அன்று மும்பையில் நடந்த தாக்குதல் இந்தியாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கசாப்பும் அவனோடு வந்த தீவிரவாதிகளும் நடத்திய தாக்குதலில் 176 பேர் உயிர் துறக்கின்றனர்.  226 பேர் காயமடைகின்றனர்.   இந்தியாவையே உலுக்கிப் போடுகிறது இத்தாக்குதல்.

இதனைத் தொடர்ந்து நடந்த விசாரணையில் கசாப்புக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. இந்தத் தண்டனையை ஒட்டியே கசாப் புதன் அன்று காலை 7.30 மணிக்கு தூக்கிலிடப்படுகிறான்.

இந்த மரண தண்டனை சட்டபூர்வமாக செய்யப்பட்டிருக்கிறதா என்றால் இல்லை.  மிக மிக ரகசியமாக, யாருக்கும் தெரியக்கூடாது என்பதற்காகவே மறைக்கப்பட்டு, படு ரகசியமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஊடகங்களில் வந்த தகவல்களின் படி, கசாப்பை தூக்கிலிடுவதற்கு ஆபரேஷன் எக்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது.  குடியரசுத் தலைவரின் அலுவலகத்திலிருந்து நவம்பர் 8 அன்று கசாப்பின் கருணை மனு நிராகரிக்கப்பட்ட தகவல் உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்படுகிறது.

மத்திய உள்துறை அமைச்சகம் நவம்பர் 8 அன்றே மஹாராஷ்டிர அரசுக்கு தெரியப்படுத்துக்கிறது.  9 நவம்பர் அன்று உள்துறை அமைச்சர், தேசியப்பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் மத்திய உள்துறை செயலர் ஆகியோர் விவாதிக்கின்றனர்.   26க்கு முன்பாக தூக்கு தண்டனை நிறைவேற்றப் படவேண்டும் என்று முடிவெடுக்கப்படுகிறது.

11 நவம்பர் அன்று மஹாராஷ்டிர முதல்வர் உள்துறைச் செயலர் மற்றும் டிஜிபியோடு ஆலோசனை நடத்துகிறார். 21 நவம்பர் அன்று காலை 7.30 மணிக்கு தூக்கிலிடுவது என்று முடிவெடுக்கப்படுகிறது. மத்திய உள்துறை அமைச்சருக்கு 21 என்று முடிவெடுக்கப்பட்ட தேதி தெரிவிக்கப்படுகிறது. வெளியுறவுத்துறை அமைச்சர் குர்ஷீத்துக்கும் தெரிவிக்கப்படுகிறது. பாகிஸ்தான் அமைச்சர் ரஹ்மான் மாலிக் 23 இந்தியா வருவதாக இருந்தது.  26/11 தாக்குதலை காரணம் காண்பித்து அவரது வருகை தள்ளிப்போடப் பட்டது.  சல்மான் குர்ஷீத்தின் ஈரான் பயணமும் ரத்து செய்யப்பட்டது.

திங்கட்கிழமை அன்று, மஹாராஷ்டிர மாநில சட்டம் ஒழுங்கு ஐஜி மற்றும் சிறைத்துறை ஐஜிக்கு தகவல் சொல்லப்படுகிறது.   கசாப்பை பாதுகாத்து வரும், இந்திய திபேத்திய எல்லைப் படையினருக்கு கசாப்பை பூனாவில் உள்ள ஏரவாடா சிறைக்கு கசாப்பை மாற்ற வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.  அந்தக் காவல்துறையினரின் அத்தனை செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டு, காவல்துறை பயன்படுத்தும் மைக் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.

செவ்வாய் அன்று மாலை தூக்கிலிடுபவருக்கு தகவல் சொல்லப்படுகிறது.  அவர் பூனா சிறைக்கு வரவழைக்கப்பட்டு அங்கேயே தங்க வைக்கப்படுகிறார்.   சட்டம் ஒழுங்கு ஐஜியின் செல்போன் மட்டுமே செயல்பாட்டில் இருக்கிறது மற்ற அதிகாரிகள் அனைவரும், செல்போனை அணைத்து வைக்ககுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

புதன் அன்று காலை 7.30 மணிக்கு கசாப் தூக்கிலிடப்படுகிறான்.

மிக மிக ரகசியமாக வெளி உலகத்திற்கு தெரியாத வகையில் இந்த தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தத் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்ட விதத்தைப் பார்க்கையில் அரசியல் காரணங்களுக்காக நிகழ்த்தப்பட்ட கொலையாகவே இதைப் பார்க்க வேண்டியுள்ளது.

இந்திய சட்டங்களின் படி, கசாப்பை தூக்கிலிட வழி வகைகள் இருக்கின்றன என்றாலும், பிரிட்டிஷார் ஆட்சிக் காலத்தில் தூக்கிலிடப்பட்ட பகத்சிங், ராஜகுரு மற்றும் சுக்தேவுக்குப் பிறகு இப்படி ரகசியமாக தூக்கிலிடப்பட்டவர்கள் யாருமே இல்லை.

வாழும் உரிமையை அனைத்து இந்தியர்களுக்கும் வழங்கும் இந்திய அரசியல் சட்டப் பிரிவு 21, அந்த உரிமையை வெளிநாட்டவருக்கும் வழங்குகிறது. யார் ஒருவரையும் கைது செய்கையிலோ, அவர் உயிரைப் பறிக்கையிலோ, சட்டபூர்வமான வழிமுறைகளுக்குப் பின்னரே அவ்வாறு செய்ய வேண்டும் என்ற அந்த முக்கியமான உரிமை கசாப் விஷயத்தில் மீறப்பட்டுள்ளது.

பிரிட்டிஷாரின் காலனியிலிருந்து உருவான இரண்டு நாடுகளான இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இருக்கும் மிகப் பெரிய வேறுபாடே, இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்பதுதான்.  மத அடிப்படையில் உருவான பாகிஸ்தானில் இது வரை பல ராணுவப் புரட்சிகள் நடைபெற்றுள்ளன.  இந்தியாவைப் போல மனித உரிமைகளுக்கெல்லாம் மதிப்பளிக்கும் நாடு அல்ல பாகிஸ்தான்.   மத அடிப்படைவாதத்தில் ஊறித் திளைக்கும் நாடு அது.   ஆனால், இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக தன்னைக் கருதிக் கொள்கிறது.  மனித உரிமைகளுக்கும், ஜனநாயகத்துக்கும் மதிப்பளித்து, வளர்ந்த நாகரீகமாக தன்னைக் காண்பித்துக் கொள்ளும் இந்தியாவில்தான் இப்படிப்பட்ட ஒரு படுகொலை நிகழ்த்தப்பட்டுள்ளது.

கருத்துச் சுதந்திரம், மனித உரிமைகள் போன்றவற்றை இந்தியாவின் உச்சநீதிமன்றம் காலப்போக்கில் செழுமைப்படுத்தி, உலகின் வளர்ந்த நாகரீங்களுக்கு இணையானதாக இந்தியாவை உருவாக்கியிருக்கிறது.  இத்தனை ஆண்டுகளாக, செதுக்கி செதுக்கி உருவாக்கிய இந்தியாவின் பண்பு, ஒரு படுகொலையின் மூலம் தூக்கி எறியப்பட்டிருக்கிறது.

அஜ்மல் கசாப் பாகிஸ்தானைச் சேர்ந்தவன்.  அவனைத் தூக்கிலிட வேண்டும் என்று மத அடிப்படைவாதிகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்கள்.  கசாப்பை சிறையில் வைப்பதால் இந்திய அரசுக்கு தேவையில்லாத செலவு என்று பேசியும், எழுதியும் வருகிறார்கள்.   கசாப்பை பாதுகாக்கும், இந்திய திபேத்திய எல்லைப்படைக்கு இத்தனை நாட்களாக 60 கோடி ரூபாய் செலவாகியிருக்கிறது என்று செய்தி பரப்புகிறார்கள்.  60 கோடி ரூபாய், மஹாராஷ்டிர அரசு, மற்றொரு துணை ராணுவப் படைக்குத்தான் அளிக்கிறது, அதுவும் இந்திய அரசின் ஒரு அங்கம்தான் என்பது வசதியாக மறைக்கப்பட்டு, ஏதோ வெளிநாட்டுக்கு 60 கோடி ரூபாயை அளிக்கப்போவது போல பரப்புரை நிகழ்த்தப்பட்டு வருகிறது. சாதாரண பாமரன் மத்தியில், கசாப்பை உயிரோடு வைத்திருப்பதால், இந்தியாவுக்கு மிகப்பெரிய நிதிச்சுமை, அவனை உடனடியாக கொலை செய்ய வேண்டும் என்ற பரப்புரை திட்டமிட்டு பரப்பப்பட்டே வந்திருக்கிறது.

சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகாலமாக நாம் செழுமைப் படுத்தி வளர்த்த உரிமைகளையும், ஜனநயாயகப் பண்புகளையும் ஒரே நாளில் குழிதோண்டிப் புதைத்துள்ளோம்.

எத்தகைய குற்றமாக இருந்தாலும், அந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய 90 நாட்கள் அவகாசம் வழங்கப்படுகிறது.  மரண தண்டனை வழக்குகளில் உச்ச நீதிமன்றமே தீர்ப்பை உறுதி செய்தாலும், குடியரசுத் தலைவரிடம் மேல்முறையீடு செய்யலாம்.  குடியரசுத் தலைவர் மேல்முறையீட்டை நிராகரித்தாலும், மீண்டும் உச்ச நீதிமன்றத்தை அணுகும் வழிவகைகள் நமது நீதிபரிபாலனத்தில் உண்டு.    குடியரசுத்தலைவர் கருணை மனுக்களை நிராகரித்த பல நேர்வுகளில் உச்ச நீதிமன்றம், மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றியிருக்கிறது.  அப்படிப்பட்ட வாய்ப்பு கசாப்புக்கு மறுக்கப்பட்டிருக்கிறது.

மரண தண்டனை நேர்வுகளில், சம்பந்தப்பட்டவரே நீதிமன்றத்தை அணுக வேண்டும் என்பதில்லை.  தொலைக்காட்சியில் செய்தியைப் பார்த்தேன்.  இவரைத் தூக்கிலிடுவதில் சட்டபூர்வமான பிழை இருக்கிறது என்று இந்தியாவில் யார் வேண்டுமானாலும் நீதிமன்றத்தை அணுகலாம் என்ற நிலையில், கசாப்பை இப்படி தூக்கிலிட்டிருப்பது,  அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒரே நேரத்தில் நெருக்கடிக்குள்ளாக்கி, அரசியல் ஆதாயம் தேட வேண்டும் என்பதைத் தவிர வேறு காரணங்கள் இல்லை.

கசாப் வழக்கையே எடுத்துக் கொண்டால், கசாப்புக்கு மற்றவர்கள் அனைவருக்கும் கிடைத்த நியாயமான உரிமைகள் கிடைத்ததா என்றால் இல்லை.  கசாப் சார்பாக ஆஜராக எந்த வழக்கறிஞரும் முன்வரவில்லை.  அந்த அளவுக்கு தேசபக்த வெறி ஊட்டப்பட்டிருந்தது.   உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த கே.ஜி.பாலகிருஷ்ணன் வெளிப்படையாக கசாப்புக்கு வழக்கறிஞர் வைக்கும் உரிமையை நிராகரிக்கக் கூடாது என்று அறிவித்த பின்னரே நீதிமன்றத்தின் சார்பாக வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டார்கள்.   வெளிப்படையாகவே கசாப் சார்பாக ஆஜராகும் வழக்கறிஞர்கள் தேசத் துரோகிகள் என்று அறிவிக்கப்பட்டது.

26/11 தாக்குதல் ஒரு மோசமான தீவிரவாதத் தாக்குதல் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.  அதற்காக அதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு எவ்விதமான உரிமையையும் வழங்கக் கூடாத என்று இந்தியா முழுக்க குரல் எழுவது ஒரு ஜனநாயக நாட்டில் ஏற்புடையதா ?  ஆனால் அப்சல் குரு வழக்கிலும், அஜ்மல் கசாப் வழக்கிலும் இதுதான் நடந்தது.   இந்த இருவருக்கும் ஆதரவாக அல்ல… இந்த இருவருக்கும் நியாயமான உரிமைகள் வழங்கப்படவேண்டும் என்று கூறினாலே அவ்வாறு கூறுபவர்கள் தேசத்துரோகிகளாகிறார்கள்.

மத அடிப்படைவாதத்தின் அடிப்படையிலேயே தொடர்ந்து அரசியல் நடத்தும் சங் பரிவார் அமைப்புகளின் தாக்கம், காங்கிரஸ் கட்சியையும் பீடித்திருப்பதையே இது காட்டுகிறது.   அதன் வெளிப்பாடே கசாப்பின் ரகசிய தூக்கு.

சுதந்திரம் பெற்ற நாள் முதலாகவே இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்தும் போக்கு வளர்ந்தே வந்திருக்கிறது.  சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரும், இந்த அடிப்படைவாதியுமான வல்லபாய் பட்டேல், 1948ம் ஆண்டு, பட்டேல் அனைத்துத் துறை செயலாளர்களுக்கும் கடிதம் எழுதுகிறார்.  அந்தக் கடிதத்தில்

I draw your attention to one aspect of security which has assumed urgency and importance in the present context of relations with Pakistan.  There is growing evidence that a section of Muslims in India is out of sympathy with the Government of India, particularly because of its policy regarding Kashmir and Hyderabad, and is actively sympathetic to Pakistan.   Such Government servants are likely to be useful channels of information and would be particularly susceptible to the influence of their relatives.

It is probable that among Muslim employees of Government there are some who belong to these categories.  It is obvious that they constitute a dangerous element in the fabric of administration; and it is essential that they should not be entrusted with any confidential or secret work or allowed to hold key posts.  For this purpose I would request you to prepare a list of muslim employees in your ministry and offices under your control, whose loyalty to the Dominion of India is suspected or likely to constitute a threat to security.

இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களில் பலர், இந்தியாவின் காஷ்மீர் மற்றும் ஐதராபாத் தொடர்பான கொள்கைகளின் காரணமாக ஆத்திரமடைந்து பாகிஸ்தான் ஆதரவாளர்களாக உள்ளனர்.  இது போன்ற நபர்களை முக்கிய பதவிகளில் நியமிப்பது ஆபத்தானது.  ஆகையால் உங்கள் துறையில் பணியாற்றும் இது போன்ற நபர்களை கண்டறிந்து அந்த பட்டியலை அனுப்பவும் என்று கடிதம் எழுதுகிறார்.

பாகிஸ்தானிலேயே தங்கிய இந்துக்களுக்கு அந்நாட்டு அரசு கடும் நெருக்கடி கொடுப்பதாக தகவல்கள் பரவியிருந்ததால், பட்டேலின் இந்தக் கடிதம், இந்து  அதிகாரிகளுக்கு வரப்பிரசாதமாக அமைந்தது.

இந்தக் கடிதம் அனைத்துத் துறைகளிலும் இஸ்லாமியர்களுக்கு எதிரான ஒரு போக்கை உருவாக்குகிறது.  தொல்பொருள் ஆய்வுத் துறையில் (Archaeological Survey of India) ஏராளமான முஸ்லீம்கள் பணியாற்றி வந்தனர். 17ம் நூற்றாண்டில், தாஜ்மஹாலை பாதுகாப்பதற்காக “காதிம்” என்ற வாட்ச்மேன் போன்ற பணியிடத்தை ஷாஜஹான் உருவாக்கியிருந்தார்.  அந்தப் பணியிடம் 20ம் நூற்றாண்டு வரை தொடர்ந்தது.  ஆக்ராவுக்கான தொல்பொருள் துறையின் கண்காணிப்பாளர் தனக்குக் கீழ் பணியாற்றும் காதிம்களை பழிவாங்க இதுவே சரியான சந்தர்ப்பம் என்று கருதினார். யார் யாருடைய உறவினர்கள் பாகிஸ்தானில் இருக்கிறார்களோ, அவர்கள் தங்கள் உறவினர்களை உடனடியாக இந்தியா அழைத்து வர வேண்டும், அப்படி இல்லையென்றால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவித்தார்.  அப்படி இந்தியா வந்தவர்கள் அனைவரும், நான் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் போர் வந்தால், இந்தியாவுக்காக உயிரைக் கொடுப்பேன் என்று உறுதிமொழிப் பத்திரம் எழுதி வாங்கினார்.  அரசு நிர்வாகத்தில் பட்டேல் தொடங்கி வைத்த அந்த போக்கு, இன்று இந்தியா முழுக்க பரவியிருக்கிறது.

பாகிஸ்தானில் இந்துக்கள் துன்புறுத்தப்படுகிறார்கள் என்ற செய்திகள் பரவத் தொடங்கியதும், இங்குள்ள இஸ்லாமியர்கள் மீதான நெருக்கடிகளை அதிகரிக்க வேண்டும் என்று இந்து அடிப்படைவாதிகள் மத்தியில் குரல் எழத் தொடங்கியது.

பட்டேல் இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்கள் தங்களின் விசுவாசத்தை நிரூபித்துக் காட்ட வேண்டும் என்று சொன்ன அதே வேளையில், ஜவஹர்லால் நேரு, இஸ்லாமியர்களை பாதுகாப்பாக உணரச் செய்வது அரசின் கடமை என்றார்.

பிரிவினை நடந்து மூன்று மாதங்களுக்குப் பிறகு அனைத்து மாநில முதல்வர்களுக்கும் எழுதிய கடிதத்தில் நேரு

We have a Muslim minority who are so large in numbers that they cannot, even if they want, go anywhere else.  That is a basic fact about which there can be no argument.  Whatever the provocation from Pakistan and whatever the indignities and horrors inflicted on non-Muslims there, we have got to deal with this minority in a civilized manner.  We must give them security and the rights of a citizens in a democratic State.  If we fail to do so, we shall have a festering sore which will eventually poison the whole body politic and probably destroy it.

இஸ்லாமிய சிறுபான்மையினர் பெரும் எண்ணிக்கையில், அவர்கள் விரும்பினாலும் வேறு எங்கேயும் செல்ல முடியாத எண்ணிக்கையில் இருக்கிறார்கள்.   விவாதம் செய்ய இடமில்லாத  ஒரு அடிப்படை உண்மை இது.   பாகிஸ்தானில் முஸ்லீம் அல்லாதவர்கன் துன்புறுத்தப்படுகிறார்கள் என்று எத்தனை செய்திகள் வந்தாலும், இங்குள்ள சிறுபான்மை முஸ்லீம்களை நாம் நாகரீகமாக நடத்த வேண்டும்.  அவர்கள் இந்நாட்டின் குடிமகன்கள் என்ற எல்லா உரிமைகளையும் அளித்து, அவர்களை பாதுகாப்பாக உணரச் செய்ய வேண்டும்.  அப்படிச் செய்யத் தவறுவோமேயானால், அது ஆறாத புண்ணாக மாறி, மொத்த உடலுக்கும் அந்த விஷம் பரவி, இறுதியாக அது நம்மை அழித்து விடும் என்றார்.

எத்தனை நிதர்சனமான வரிகள்… ?

நேரு எதற்காக பயந்தாரோ, அதை காங்கிரஸ் அரசு நடத்திக் காட்டிக் கொண்டிருக்கிறது.  மார்ச் 2005ல் இஸ்லாமியர்களின் நிலைமை குறித்து ஆராய காங்கிரஸ் அரசு நியமித்த நீதிபதி சச்சார் கமிட்டி நவம்பர் 2006ல் அதன் பரிந்துரைகளை அளித்தது.

6 முதல் 14 வயதுக்குட்பட்ட முஸ்லீம் குழந்தைகள் பள்ளிக்கே செல்லவில்லை அல்லது பள்ளிப் படிப்பை கைவிட்டார்கள்.

அரசு கல்வி நிறுவனங்களில் முஸ்லீம்களுக்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளன.

மேலாண்மை மற்றும் ப்ரொபஷனல் துறைகளில் இஸ்லாமியர்களின் பங்கு குறைவாக உள்ளது.

ஐஏஎஸ், ஐஎப்எஸ் மற்றும் ஐபிஎஸ் பணிகளில் இஸ்லாமியர்களின் சதவிகிதம் முறையே 3, 1.8 மற்றும் 4 சதவிதமாகவே உள்ளது.

ரயில்வேயில் இஸ்லாமியர்கள் வெறும் 4.5 சதவிகிதமே இருக்கிறார்கள்.  அந்த 4.5 சதவிதத்திலும் 98.7 சதவிகிதம் கடைநிலை ஊழியர்களாக இருக்கிறார்கள்.

மதராஸா எனப்படும் இஸ்லாமிய கல்விமுறையையே முஸ்லீம்கள் விரும்புகிறார்கள் என்பது தவறு. மொத்தம் உள்ள இஸ்லாமியர்களில் நான்கு சதவிகிதத்தினரே இந்தக் கல்வி முறையில் பயில்கிறார்கள் என்று பல்வேறு உண்மைகளை சச்சார் கமிட்டி எடுத்துரைத்தது.

ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டதாகவும், இரண்டாம் தர குடிமக்களாகவும் உணரும் இஸ்லாமியர்களை அஜ்மல் கசாப்பை தூக்கிலிட்ட முறை மேலும் தனிமைப்படுத்தும்.

அஜ்மல் கசாப்புக்கு உரிய உரிமைகளை வழங்கி, உச்சநீதிமன்றத்தில் குடியரசுத்தலைவரின் முடிவுக்கு எதிராக வழக்கு தொடர வாய்ப்பு வழங்கி, சட்டபூர்வமான முறையில் இந்த மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருந்தால் கூட, யாரும் குறை சொல்வதற்கு வாய்ப்பு நேர்ந்திருக்காது.

ஆனால், இந்த மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட முறை, நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் தன்மைகளை உருவாக்கும்.  உலகில் உள்ள மொத்த நாடுகளில் மூன்றில் இரண்டு பங்கு நாடுகள் மரண தண்டனையை ஒழித்திருக்கும் இந்தச் சூழலில், இந்தியா படு ரகசியமாக நிறைவேற்றியுள்ள இந்த மரண தண்டனை, ஏற்கனவே இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இருந்து வரும் பலவீமான உறவை மேலும் பலவீனப்படுத்தும்.   இந்த ரகசிய மரணதண்டனையானது, தாலிபான், லஷ்கர் ஏ தொய்பா போன்ற அமைப்புகள், இளம் இஸ்லாமிய இளைஞர்களை, இந்தியாவுக்கு எதிராக தாக்குதல் தொடுக்க பயிற்சி கொடுக்கவே வழிவகை செய்திருக்கிறது.

ட்விட்டரிலும், இதர சமூக வலைத்தளங்களிலும், கசாப்பை தூக்கிலிட்டது குறித்து நடக்கும் கொண்டாட்டங்கள், நாம் நாகரீகத்தில் பின்னோக்கிச் செல்கிறோமோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.  குறிப்பாக பாலிவுட்டைச் சேர்ந்த பலர், கசாப்பை தூக்கிலிட்டதை பெரும் உவகையோடு கொண்டாடுகிறார்கள்.

ஆனால், பெரும்பாலான இஸ்லாமியர்கள், ஒரு வித மனப்புழுக்கத்தோடு, இது குறித்து கருத்து தெரிவிக்கவே அஞ்சுகிறார்கள்.  எங்கே இதற்கு எதிர்ப்புத்  தெரிவித்தால், நம்மை தேச விரோதியாக்கி விடுவார்களோ என்ற அச்சம் அவர்களிடத்தில் காணப்படுகிறது.  நத்தை ஓட்டுக்குள் சுருங்குவது போல அவர்கள் சுருங்குவதை காண முடிகிறது.

இதுவா காந்தி கனவு கண்ட இந்தியா ?  காஷ்மீரை கைப்பற்றுவதற்காக பாகிஸ்தான் இந்தியா மீது படையெடுத்த பிறகு, பாகிஸ்தானுக்கு இந்தியா தர வேண்டிய 55 கோடியை இந்தியா தரக்கூடாது என்று வல்லபாய் படேல் முடிவெடுக்கிறார்.  இத்தகவலை அறிந்த காந்தி, பாகிஸ்தானுக்கு ஏற்கனவே கொடுத்த வாக்குறுதியை மீறக் கூடாது என்று அறிவுறுத்தி, உண்ணாவிரதம் மேற்கொள்கிறார்.  அதன் பிறகே இந்தியா தர வேண்டிய 55 கோடி தரப்பட்டது.

இப்படிப்பட்ட தலைவர்கள் வாழ்ந்த நாட்டில் இன்று இப்படி ஒரு படுகொலை நடந்திருப்பது தேசிய அவமானமா இல்லையா ?

 

Comments  

 
+1 #137 D. Ramchandran 2012-12-08 15:34
I fully agree with N. Ramesh.
Quote
 
 
+3 #136 gopalasamy 2012-12-05 11:54
CLEARLY IT WAS A WAR AGAINST INDIA.
IF SAVUKKU WANTS TO SUPPORT PAKISTAN OR WANTS TO MIGRATE, NO OBJECTION FOR ANYBODY. I DO NOT KNOW, WHY YOU CAME TO THE CONCLUSION, THAT ALL MUSLIMS WILL SUPPORT KAZAB'S ACTION.
IF YOU KNOW THE ANSWER /DETAILS, PL PUBLISH IT ALSO.
Quote
 
 
+9 #135 பாரதி 2012-12-04 18:31
இநதச் செயலுக்கு இப்படி ஒரு விளக்கம தேவையில்லை. என்னவோ மதவாதிகள் மட்டும்தான் கசாப் தூக்கிலிடப்படவே ண்டும் என்பதாக நீங்கள் சொல்வது தவறு. அன்றைக்கு தேதிக்கு cst நிலையத்தில் இருந்தவன் அனைவரும் மதவாதிகளா? குறுக்குக்தனமாக யோசிப்பதில் தவறில்லை ஆனால்...
Quote
 
 
0 #134 D. Ramchandran 2012-12-04 15:17
The posts start from #72. Are there previous posts? If so please do furnish them also. (Perhaps my post also is within them.)
Quote
 
 
+6 #133 Nandha 2012-12-03 20:12
The worst article from savukku.
Never expect this from you.
We are not that good to allow any one to kill us.We don't want to be also.
Because of you guys only these people are getting the courage to do this.
Always punishment should be cruel.
Never allow any ****** to enjoy life in prison.
Never publish this kind of article again.
Quote
 
 
+1 #132 ஷாலி 2012-12-03 09:43
தமிழ்த்தாய் பெற்ற தவப்புதல்வர்களு க்கு தேச பக்தியை ஊட்டுவதற்கு ஒரு பாகிஸ்தானி கஸாப் தேவைப்படுகிறது.பாகிஸ்தானியுடன் கிரிக்கெட் விளையாடும்போது தேசபக்தி அனல்பறக்கும்.ஆஸ்திரேலியாகாரன ுடன் விளையாடும்போது அது அமுங்கிவிடும்.உணர்ச்சி தமிழர்களே! காவிரியில் தண்ணீர் வர வில்லை.இரவில் ஒளியில்லை.உங்கள் தேசபக்தியை பயன்படுத்தி தமிழ் மக்களுக்கு குடிக்க தண்ணீரையும்,இரவ ு ஒளிர மின்சாரத்தையும் டெல்லி காங்கிரஸ் காரனிடம் வாங்கிக்கொடுக்க முடியுமா? வேளாச்சேரி என்கவுண்டரில் இருந்து வெள்ளத்துரை என்கவுண்டர் வரை நீதி நெறி சட்டங்களை காற்றில் பறக்க விடும் மத்திய,மாநில ஆட்சிகளின் அரசு பயங்கரவாதத்தை ஆதரிக்கலாமா? மற்ற தூக்குத்தண்டனை கைதிகளுக்கு கொடுக்கப்பட்ட சட்டபூர்வ மேல்முறையிடும் வாய்ப்பை கசாபிற்க்கு கொடுக்கப்படவில் லை என்பதே சவுக்கின் குற்றச்சாற்று.சட்டப்படி நடக்க சொல்வது,தேசபக்த தமிழர்களுக்கு தவறாக தெரிவது ஏன்?
Quote
 
 
0 #131 trpalanivel 2012-12-03 08:06
I have sent my comments 3 days back.It is not found here since it is against the article.will you not post such comments?
Quote
 
 
0 #130 GR Rajesh Kumar 2012-12-01 21:42
"Why should I rejoice Kasab's death? I will rejoice when little innocent children will stop being taught to kill in the name of god and religion," Ashish tweeted.


"Ignorance gave different faces to god, who in my view is one. Hence, religion too is one and that religion is humanity. Kasab was not taught that.
"I sympathise with Kasab. He also was once a small innocent baby, like my son. But unfortunately born around wrong people and wrong teachings.
"I'm sure as a little baby, Kasab didn't plan his outcome. He was brainwashed, driven to kill in the name of god. He didn't know he was wrong," he added.
Kasab was hanged five days before the fourth anniversary of the Mumbai terror attack that claimed 166 lives. Nine of his associates, who were killed, had been secretly buried in the city in January 2010.


Ashish's sister and brother−in−law were held hostage and killed while having dinner at the Oberoi hotel, one of the targets of the terrorists.


"I will not teach my children to rejoice anyone's death − be it Kasab. They will learn to be non−vindictive, non−fanatical and will love all. I'm not saying that I defend the consequence he faced.
"I just feel that rejoicing, or feeling completion doesn't make sense. There's more to it," said Ashish.


"In these four years of awaiting and looking upon Kasab's sentence, I can bet lakhs of new Kasab's were born. Problem lies there. Rejoice when that stops," he added.


Read more: http://india.nydailynews.com/newsarticle/7a6423afd62998cbcecf1aa0daddab1b/why-should-i-rejoice-kasab-hanging-asks-kin-of-victims#ixzz2DojbbQZl
Quote
 
 
+10 #129 True Indian 2012-12-01 13:38
சவுக்கு ஆதரிக்கும் அந்த 3 விடுதலை புலி கொலைகாரர்களுக்க ும் இதே மாதிரி தூக்கு தண்டனை கொடுத்து விடுவார்களோ என்ற பயத்தால் தான் மத ரீதி யான குழப்பத்தை கொண்டு வர திட்ட மிட்டு இந்த கட்டுரையை சவுக்கு வெளியிட்டு உள்ளார். எந்த ஒரு நல்ல முஸ்லிமும் இந்தியாவிற்கு எதிரான தீவிரவாதத்தை ஆதரிக்க மாட்டான்.
Quote
 
 
+4 #128 R.JAGADEESH 2012-12-01 12:28
1000 % I agreed the comments of chinnakundoosi & Ravi ........ Savukku you tooooooo ???????????
Quote
 
 
+1 #127 sangeet 2012-12-01 11:33
இந்த மரண தண்டனை, ஏற்கனவே இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும ் இருந்து வரும் பலவீமான உறவை மேலும் பலவீனப்படுத்தும ். இந்த ரகசிய மரணதண்டனையானது, தாலிபான், லஷ்கர் ஏ தொய்பா போன்ற அமைப்புகள், இளம் இஸ்லாமிய இளைஞர்களை, இந்தியாவுக்கு எதிராக தாக்குதல் தொடுக்க பயிற்சி கொடுக்கவே வழிவகை செய்திருக்கிறது . இதற்கு எல்லாம் நாங்கள் பயபடமட்டோம்.
Quote
 
 
+4 #126 Seetharaman P 2012-12-01 08:31
Dear Savukku, just didn't get opportunity to look at your articles for last few weeks due to some personal work..After reading this article you lost the respect you have gained among your article followers and also the way you have written the article..there could be some internal politics under the carpet but Indians residing across all over the world welcoming this decision also we feel that, its late one!! By reading this article looks to us you always becoming mad & brutus nowadays and you are also trying to gain some popularity by putting these kind of articles..don't you??
Quote
 
 
+4 #125 trpalanivel 2012-12-01 06:32
A preposterous article.The human slaughter should have been hanged much much earlier.It is shameful that this worst element has this much support..Will you write the same had your kith and kin suffered in the hands of this beast?
Quote
 
 
-4 #124 SOORIYAPPIRAKASH 2012-12-01 00:41
சவுக்கு இப்போதுதான் நான் முதன் முதலாக பார்க்கிறேன் ...இன்றைய மீடியாக்கள் காசுக்காக சுயநலத்துடன் ஹிந்துத்துவா வெறி ஊட்டப்பட்டு இருக்கும் இந்நிலையில் நாட்டின் மீது கசாபின் தூக்கின் மூலமாக படிந்திருக்கும் கரைகளை அழகாக சுட்டிக்காட்டு இருக்கிறது ..கசாப்பை தூக்கில் போட்டது சரியா,அல்லது தவறா என்று நான் வாதாடவரவில்லை அவன் குற்றவாளியாக இருந்தால் நிட்சயம் இந்திய அரசியல் சாசனம் சொல்லும் எந்த தண்டனையாக இருந்தாலும் கொடுக்கலாம் ..ஆனால் அவன் ஒரு பாகிஸ்தானி என்கிற காரணத்துக்காக மட்டும் அவனுக்கு இந்த தண்டனை என்றால் இன்று இந்தியா முழுவதும் வெடிகுண்டுகள் வைத்து வெடிக்கச்செய்த ஆர்.எஸ்.எஸ் காரர்களுக்கு என்ன தண்டனை கொடுப்பது மாலேகான்,அஜ்மீர ்,ஹைதராபாத் .தென்காசி உட்பட நாட்டில் உள்ள அனைத்து இடங்களிலும் குண்டுகள் வைத்தவர்கள் ஆர்.எஸ்.எஸ் காரர்கள்தான் என்பதனை நான் சொல்லவில்லை மாவீரர் ஹேமந்த் கர்கரே கூறி பல ஹிந்துத்துவா வாதிகளை கைதுசெய்து சிறையில் தள்ளினார் ..அவர்களுக்கு என்னதண்டனையை நமது அரசும் உள்துறை மந்திரியும் .கொடுக்கப்போகிறா ர்கள் .வெடிகுண்டுகள் வெடிக்கச் செய்வது ஹிந்துத்துவா
வாதிகள் ஆனால் அதற்காக கைதுசெய்யப்பட்ட ு சிறையில் தள்ளப்படுவது சிறுபான்மையினர் என்றால் நமது நாடு எங்கே போகிறது என்பது நமக்கு புலப்படவில்லை ...
இதை தெளிவாக வெளிப்படுத்திய சவுக்கு மீடியா உலகில் தனது தனித்தன்மையை நிலைநாட்டி விட்டது
Quote
 
 
-4 #123 rizwan 2012-12-01 00:05
Mr Ilyas,

U r represent all the muslims of India?

If yes, how do u got the rights?

Muslims r elected u?

If u hv any comments, it wil b ur own & sud nt represent all..

Wt u know about this?

Ajmal kasab was only accuste? Wt was his role / attedence no? 17 r 18?

Wt abt another 16 / 17 prisoners? they are hanged?

Do u hv answer?

If nt, shut ur bleddy mouth & run away from this..
Mind ur words..
Quote
 
 
+8 #122 chinnakundoosi 2012-11-30 23:55
விசு படம் மாதிரி கடைசியா வந்து ஏதாவது தன்னிலை விளக்கம் கூறும் பதிவை போட்டு மேலும் உங்களை காமெடி ஆக்கிக்கிராதீங் க சவுக்கு...உங்க எல்லை எது, உங்க பலம் எது போன்றவற்றை நன்கு ஆராய்ந்து அந்த விஷயங்களை மற்றுமே இனி டீல் செய்யுங்க..எல்லோரும் எல்லா விஷயத்திலும் எப்போதும் பெர்பெக்டாக இருக்கமுடியாது..
Quote
 
 
-37 #121 பாய் Nanban 2012-11-30 14:54
சுதந்திரம் பெற்ற நாள் முதலாகவே இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்தும் போக்கு வளர்ந்தே வந்திருக்கிறது. சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரும், இந்த அடிப்படைவாதியும ான வல்லபாய் பட்டேல்.
He Was SLEEPING CELL:
Quote
 
 
-37 #120 பாய் 2012-11-30 14:44
அருமயான ஆய்வு கட்டுரை, இந்திய விடுதலை
போரில் இஸ்லாமியர்களின் பங்கு இன்றிஅமையாதது.
அன்றே காவி சங் பரிவார் கூட்டம் நாட்டை காட்டி கொடுத்து தங்கள் பதவிகளை அனுபித்தவர்கள்.
Quote
 
 
+26 #119 Ray Jaguar 2012-11-30 06:04
I oppose this article!!!
Quote
 
 
+21 #118 Haasan 2012-11-29 21:48
Savukku U too Brutus ?
Quote
 
 
+39 #117 Rashika 2012-11-29 17:55
தவறான முன்னுதாரணன்களை க் காட்டி ஒரு தீவிரவாதியின் தண்டனையை தயவு செய்து மதவாதமாக்காதீர் கள்...
Quote
 
 
+34 #116 G.R.Giridharan 2012-11-29 17:39
உங்களுடைய எழுத்துக்களை எங்கள் நேரத்தை செலவழித்து படித்து
எங்கள் கருத்துக்களை மாஞ்சு மாஞ்சு எழுதினா நீங்கள் வெளியிட மறுப்பது மிகுந்த
ஏமாற்றத்தை அளிக்கிறது. கசாப்பைப் பற்றி நான் எழுதிய கருத்துக்களை
நீங்கள் வெளியிடாது தவறு !!
Quote
 
 
+33 #115 srirama 2012-11-29 15:57
R u Mad??
A bad article from you
Shame on you
Quote
 
 
+18 #114 Robinhood 2012-11-29 15:17
You have not published my comments also. What did I tell? I told that you r too good a person. If Rajapakshe is handed over to you for war crime to deal with him , he will be very safe at your hands. Because, you are such a good person. Am I right? Publish my Tamil comments.
Quote
 
 
+33 #113 chinnakundoosi 2012-11-29 14:24
கடந்த மூன்றாண்டுகளாகவ ே தினந்தோறும் நான் பார்க்கும் ஒரு இணையதளம், சவுக்கு. என் நண்பர்கள் பலபேருக்கு இந்த தளத்தை அறிமுகம் செய்திருக்கிறேன ். ஆனால் சமீப சில நாட்களாகவே சவுக்கின் பல கட்டுரைகளில் குழப்பமும் தடுமாற்றமும் தெரிகிறது. சரி அது கிடக்கட்டும், சவுக்கின் பல கட்டுரைகளை படித்து அவர் பற்றி எனக்கு ஏற்பட்ட பிம்பம் என்னவெனில் சவுக்கு ஒரு மனிதாபிமானி, மனித உரிமை போராளி, நேர்மையாளர், கருத்து சுதந்திரத்துக்க ு மிகுந்த மதிப்பளிப்பவர் என்று. ஆனால் நீங்கள் பேசும் மனித உரிமை என்பது சட்டங்களால் குற்றம் என வரையறுக்கப்பட்ட செயல்களை புரியும் குற்றவாளிகளுக்க ுதான் போலிருக்கிறது, அந்த குற்றவாளிகளின் கொடிய செயல்களால் பாதிக்கப்பட்ட அப்பாவிகளுக்கு மனித உரிமை என்பது இல்லை போலும். கசாபை பற்றிய இந்த பதிவுக்கு இத்தனை நாள் கழித்துதான் கமெண்ட்ஸ் வெளியிடுகிறீர்க ள். நானும் ஒருவாரத்துக்கு முன்பே எனது கமெண்ட்டை பதிவு செய்தேன் ஆனால் உங்கள் கருத்துக்கு எதிராக இருந்ததாலோ என்னவோ, அதை நீங்கள் இன்றுவரை வெளியிடவில்லை...கருத்து சுதந்திரத்துக்க ு நீங்கள் அளிக்கும் மதிப்பு இதிலிருந்து நன்கு புலனாகிறது. இந்த லட்சணத்தில் கார்த்தி சிதம்பரதின் கருத்து.காமை கிண்டல் செய்து நீங்கள் வெளியிட்ட பதிவு வேறு.
அதிகார மட்டத்தில் நடக்கும் ஊழல்கள் மற்றும் அராஜகங்களை பற்றி மட்டும் கட்டுரைகள் எழுதி வந்தவரை சவுக்கின் எழுத்தில் ஒரு கூர்மை இருந்தது, ஆனால் நாட்டில் நடக்கும் எல்லா விஷயங்கள் பற்றியும் சவுக்கு தனது கருத்துக்களை முன்வைக்கும்போத ு அந்த கூர்மை மழுங்கி விட்டது. இதனாலேயே பல விஷயங்களில் சவுக்கு காம்ப்ரமைஸ் ஆகிவிட்டது போல. இந்த எனது கருத்தையும் நீங்கள் வெளியிட மாட்டீர்கள், ஆனாலும் எனது நேரத்தை செலவிட்டு உங்கள் பதிவை படிக்கும் எனக்கு எனது கருத்தை தெரிவிக்கவேண்டி யது அவசியமாகிறது.
Quote
 
 
+22 #112 G.R.Giridharan 2012-11-29 10:30
Dear Savukku,
You have not published my comments. That means you also accepts my comments. Biase comments shall be published will improve your strength.

G.R.Giridharan
Quote
 
 
+53 #111 Ravi 2012-11-29 02:57
கசாப் ஒரு தேச துரோகி, மற்றும் மானுடத்திற்கு எதிரி. இவனுக்கு இவன் பிறந்த நாட்டைவிட அதிக
மனித உரிமை அளித்து சட்டப்படி அளித்த தண்டனையை நீங்கள் இப்படி ஒரு மத அரசியலாக்கி பார்ப்பது முட்டாள்தனம்
இல்யாஸ் எழுதியபடி அவன் ஒரு தேச துரோகி. அவன் முஸ்லீமாக இருப்பதால் எல்லா முஸ்லீமும் இவனை
ஆதரிப்பார் என நீங்கள் நினைத்ததே அவமானம். உண்மையில் இப்படி எழுதி நீங்கள் இந்திய இஸ்லாமியர்களை அவமானப்
படுத்திவிட்டீர் கள். உண்மையில் நீங்கள் தான் இஸ்லாமியர்களிடம ் மன்னிப்பு கேட்கவேண்டும்
1947 வருடம் இந்தியாவின் நிலை, அதன் எல்லையில் இருந்த குளறுபடிகள், உள்நாட்டில் ஹைதிராபாத், கோவா, புதுவை மற்றும் திருவாங்கூர் சமஸ்தானம் என்று ஏகப்பட்ட பிரச்சனைக்கு இடையே சர்தார் படேல் எழுதியதாக ஒரு கடிதத்தை வைத்துக் கொண்டு சுமார் 65 வருடங்களுக்கு பிறகு நீங்கள் இஸ்லாமியரிடையே மதவெறியை தூண்ட எழுதுவது மிகவும் கண்டிக்கத்தக்கத ு. வாசகர்கள் இருக்கிறார்கள் என்று கண்டதையும் எழுதாதீர்கள்
Quote
 
 
+25 #110 Ravi 2012-11-29 02:39
உங்களுடைய எழுத்துக்களை எங்கள் நேரத்தை செலவழித்து படித்து
எங்கள் கருத்துக்களை மாஞ்சு மாஞ்சு எழுதினா நீங்கள் வெளியிட மறுப்பது மிகுந்த
ஏமாற்றத்தை அளிக்கிறது. கசாப்பைப் பற்றி நான் எழுதிய விரிவான எதிவினையை
நீங்கள் வெளியிடாது தவறு !!
Quote
 
 
-23 #109 குசும்பன். 2012-11-28 22:59
அறிவுபூர்வமா ஒரு விடயத்தையும், உணர்வு பூர்வமா அதே விடயத்தையும் அணுகினால் அது இரு துருவங்களாகவே தெரியும். கசாப்பு செயற்கையாக குற்றவாளி ஆக்கப்பட்டவன் அம்பை அழிக்கும்போது எய்தவர்கள் எவரென்று புலனாய்வு செய்து வெளிப்படுத்திரு க்கவேண்டும். தூக்குத்தண்டனைக ்குள் சந்தற்பவாத அரசியல் அதிகமாக ஊடுருவியிருக்கி றது. அது மிகவும் அபாயகரமானது.
Quote
 
 
+21 #108 scorpio 2012-11-28 19:15
தம்பி சரியான பேத்தல். டோன்ட் சேன்ச் யுவர் ஃபோகஸ். expose the corruption with your inimical style.
Quote
 
 
+34 #107 அண்ணா 2012-11-28 19:00
என்ன பின்னூட்டம் கம்மியா இருக்கு. சவுக்கோட தேச பக்தி பதிவுக்கு ஆதரவு இல்லையா? சவுக்கு டௌசர் கிழிஞ்ச பதிவு. ஊழல் அரசியல்வாதிகளால ் மட்டுமல்ல உம்மை மாதிரியான ஆட்களாலும் தான் நாடு நாசமா போவுது.
Quote
 
 
+18 #106 scorpio 2012-11-28 18:48
பேத்தல்
Quote
 
 
+41 #105 தமிழ்ச்செல்வன் 2012-11-28 18:36
இந்தக் கட்டுரை தான் தேசிய அவமானம்.
Quote
 
 
+42 #104 Iamahypocrite 2012-11-28 13:11
என்ன சவுக்கு இது? ஆத்துல ஒரு காலு சேத்துல ஒரு காலா? காந்தி கன்ட கனவுலயா விடுதலை புலி அமைப்பு போராடுசு? வித்யாசம எழுதனும்னு எழுதின மதிரி இருக்கு. என்ன கேட்டா மரண தண்டனைய விட ஆயுல் தண்டனை தான் இவனுக்கு கெடச்சு இருக்கனும் என்னா அது தான் கொடியது.
Quote
 
 
+43 #103 rajamanickam 2012-11-28 09:44
இந்தியா தர வேண்டிய 55 கோடியை தந்த பிறகும் பாகிஸ்தான் நமக்கு வழங்குவதாக வாக்களித்த 500 கோடியை 1947லிருந்து இன்று வரை வழங்கவே இல்லை என்பதை வசதியாக மறைத்து விட்டீர்களே சவுக்கு.படேல் நமக்கு வர வேண்டிய 500கோடியில் நாம் தர வேண்டிய 50 கோடியை கழித்து விட்டு மீதம் 450 கோடியை அவர்கள் வழங்கத்தானே கோரினார்.
Quote
 
 
+17 #102 rasarasa 2012-11-28 06:08
சவுக்கு கசாப்பின் ரசிகர் என்பது இப்பொழுதுதான் தெரிகிறது.சவுக்கிற்கு கசாப்பிடம் எத்தனை நாளாக தொடர்பு,,,மும்ப ை தாக்குதலுக்கு முன்பிருந்தா
Quote
 
 
+20 #101 arunyog 2012-11-27 23:50
ஆராய காங்கிரஸ் அரசு நியமித்த நீதிபதி சச்சார் கமிட்டி நவம்பர் 2006ல் அதன் பரிந்துரைகளை அளித்தது/////

சவுக்கு அண்ணே
நீதிமான் சச்சார் அவர்களூக்கூ வெளீ நாட்டில்
நடக்கும் காஷ்மீர் தொடர்பான கூட்டங்களுக்கு
சென்று வருவதற்கு பாகிஸ்தான் ஐஎஸை
50000 டாலர்கள் பல முறை கொடுததது ஏன்?
செக்குலரிசத்தின ் விலையாக இருக்குமோ!
Quote
 
 
+69 #100 iliyas 2012-11-27 22:26
திரு சவுக்கு அவர்களே

நீங்கள் சுட்டி காட்டிய அனைத்து

விசயங்களும் இந்தியாவில்

முஸ்லிம்களுக்கெ திரான மனோ பாவம்

நிறைந்துள்ளது என்பதை காட்டுகிறது இது

நூறு சதவித உண்மை ஆனால் கசாப்

விசயத்தில் அவனுக்கு வழங்கப்பட்ட

தண்டனை இந்திய முஸ்லிம்களை எந்த

விதத்திலும் பாதிக்க வில்லை ஏனெனில்

எனது தாய் நாடான இந்தியாவுக்குள்

நுழைந்த ஒரு அந்நிய நாட்டை சேர்ந்தவன்

இங்கு உள்ள எனது சக அப்பாவி

குடிமகனை குருவியை சுடுவது போல்

சுட்டு கொள்கிறான் அவன் நிச்சயம்

தூக்கிலிடப்பட வேண்டியவன் தான் அவன்

ஒரு முஸ்லிம் என்பதற்காக இங்கு உள்ள

எந்த ஒரு முஸ்லிமும் அவனுக்கு

அனுதாபம் தெரிவிக்கவில்லை இந்த


தண்டனையை வரவேற்கின்றோம் ஒரு

மனிதரை வாழ வைத்தவர் எல்லா

மனிதரையும் வாழ வைத்தவர் போலாவார்

ஒரு மணிதரை கொலை செய்தவர் எல்லா

மனிதரையும் கொன்றவர் போலாவார் (திருக்குராண்் 5:32) என்று

கூறும் திரு குரானின் வசனத்தை நம்பும்

எந்த ஒரு முஸ்லிமும் இந்த தண்டனையை

வரவேற்கத்தான் செய்வான்
Quote
 
 
-50 #99 sagesh 2012-11-27 22:23
good article
Quote
 
 
+13 #98 lakshman 2012-11-27 14:01
i want to scold u with all Bad words. Idiot, hereafter i won't visit this website. Bloody hate to say you are indian.
Quote
 
 
+42 #97 True Indian 2012-11-27 05:32
Savukku, Get well soon !

Good work done by Indian Government by Hanging Kasab to death.
Quote
 
 
+41 #96 anthonyx 2012-11-27 04:55
Shame on you.
Quote
 
 
+22 #95 Iniyan 2012-11-26 22:39
தமிழில் ஒரு பழமொழி உள்ளது. குதிரைக்கு குர்ரம் என்றால் யானைக்கு அர்ரம் என்று சொல்வான் என்று. அதை நினைவுபடுத்துகி றது உங்கள் கட்டுரை. சில காலமாகவே சவுக்கு தடுமாறுகிறதோ என்று எண்ணத்தோன்றுகிற து.இது மிக்க வருத்தத்தை அளிக்கிறது.
Quote
 
 
+34 #94 Hariharan Venkatrama 2012-11-26 21:04
//பெரும்பாலான இஸ்லாமியர்கள், ஒரு வித மனப்புழுக்கத்தோ டு, இது குறித்து கருத்து தெரிவிக்கவே அஞ்சுகிறார்கள். எங்கே இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தால், நம்மை தேச விரோதியாக்கி விடுவார்களோ என்ற அச்சம் அவர்களிடத்தில் காணப்படுகிறது.//

என்ன ஒரு அற்புதமான வரிகள்? ஆழமான சிந்தனை?! கண்ணீரை வரவழைக்கும் சொற்றொடர்கள்???
நாடு விட்டு நாடு வந்து கொலை செய்வார்களாம். ஜாதி, மதம் பார்த்து முடிவு எடுத்து தண்டனை கொடுக்கணுமாம். கேட்டால் சிறுபான்மையினர் என முலாம் பூசுவீர்களாம். ஐயா.. சவுக்காரே... கொஞ்சம் யோசித்து எழுதுங்கள்... கொலை செய்யப்பட்டது உங்கள் குடுபம்பத்தாராய ிருந்தால் அதன் வலி உங்களுக்குத் தெரிந்திருக்கும ்.

உங்கள் வேலை பறி போனதற்காகக் கோபப்பட்டு போலீசில் நடக்கும் அவலங்கள் வெளிக்கொணர்கிறே ன் என ஆரம்பித்த இந்த பதிவு தளம் இப்போது எதற்கெல்லாம் பயன் படுத்தப்படுகிறத ு? உங்களுக்கு நடந்த அனியாயத்திற்கு உங்களுக்குக் கோபம் வருவது போல் தான் சாதாரண இந்தியக் குடிமகன்களை பொது இடத்தில் சுட்டும் குண்டு வீசியும் கொன்ற இவன் போன்ற ஆட்களுக்கெல்லாம ் வக்காலத்து வாங்கி உங்கள் பெயரைக் கெடுத்துக்கொள்ள ாதீர்கள்.

முடிந்தால் பாக்கிஸ்தான் சென்று தலிபான் தீவிரவாதிகளிடம் இந்தியாவிற்குள் தீவீரவாதிகள் அனுப்பவேண்டாம் எனச் சொல்லிப்பாருங்க ள்.
Quote
 
 
+12 #93 Velu Pillai 2012-11-26 17:34
Savukku... Have you gone nuts?? your publish seems like encouraging a terrorist to kill lives of people just like that. We are not Jesus christ to forgive when an enemy attacks. we need to show them a lesson of what will happen if some one tries to harm us. More over KASAB is not a muslim. He is a vampire who thirsted for blood. Don't ever make my muslim bros & sis shameful by saying that a vampire was a muslim. Got it???
Quote
 
 
+16 #92 Haasan 2012-11-26 16:56
தேசிய அவமானமா இல்லையா ? இல்லை !!!! சவுக்கு இந்த மாறி முட்டாள் கட்டுரையை விடலாம், கைவிடலாம் !

கசாப் பிடிபட்ட உடனே அவனிடம் உண்மையை வாங்கி விட்டு, இனி போரோஜனம் இல்லை என்ற உடனே கொன்றுருக்கலாம் ! encounter என்ற பெயரில் , இந்திய போலீஸ் பண்ணத்தா என்ன ?? அப்படி அப்பவே சுட்டு கொன்றுருந்தால் ஒரு கோடி இல்லை பத்து இல்லை 80 கோடி ருபாய் மிச்சம் ! 80 கோடி இருந்துருந்தா என்ன எல்லாம் பண்ணிருக்கலாம் ! 80 கோடி வீண் ! குறிப்பு : 80 கோடி செலவு இது வரை கசாப் பாதுகாப்புக்கு !!!!
Quote
 
 
+14 #91 seenivaas 2012-11-25 18:00
One of the most irresponsible article by the writer.
Quote
 
 
+9 #90 DARWIN000000 2012-11-25 15:14
what they did is right why savuuku against this ?, your last article regardin darmouri also against PMK,if you take chennai,chengap ut,thiruvaLLUR DISTRIC RULED BY DALITS , THEY ARE DOING KATAPANCHAYTU , ROWDYSIM AGAINST OTHER COMMUNITY PEOPLE MANY P
Quote
 
 
+11 #89 chenthil Krishnan 2012-11-25 14:35
ஒரு தவரான கட்டுரை சவுக்கு தளதில் எதிர்பார்க்க வில்லை.. 128 இந்தியரை சுட்டு கொன்ட்றா இவனுகக எழுதுவது ... அந்தஇந்தியருக்க ு யென்ன பதில் சவுக்கு? inorder to keep him alive India has spend more than several crores... which is not given to a common person, or an Indian army or to the fighters who dies in the same attack for India... This much humanity has already been shown to him.... when he kills that much people where the humanity went? It is not eye to eye, but what he has done is not excusable... so i condemn this Article..
Quote
 
 
-4 #88 ansari 2012-11-25 11:51
/// பெரும்பாலான இஸ்லாமியர்கள், ஒரு வித மனப்புழுக்கத்தோ டு, இது குறித்து கருத்து தெரிவிக்கவே அஞ்சுகிறார்கள். எங்கே இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தால், நம்மை தேச விரோதியாக்கி விடுவார்களோ என்ற அச்சம் அவர்களிடத்தில் காணப்படுகிறது.////

கசாப் தண்டனை குறித்து எங்களுக்கு எந்தவிதமான வருத்தமும் இல்லை, தவறு செய்தவன் தண்டனை பெற்றான், 176 பேர் சாகக் காரணமானவரகளில் ஒருவன் பெற்ற தண்டனை சரியே. ஆனால் 26 / 11 தொடர்புடைய பல வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ள நிலையில் (உதரணம் கர்கரே வழக்கு), அதை நிறைவேற்றிய விதம், காட்டிய வேகம் விமர்சனதிற்குள் ளகிறது.

காவி தீவிரவாதி பால் தாக்கரே, மும்பை கலவர வழக்குகளில் குற்றவாளி என்று கோர்ட்டால் அறிவிக்கப்பட்டு ம் அரசு அவரை நெருங்க பயப்படுவது போல் நாடகமாடுகிறது. அரசு இறுதி மறியாதையுடன் வழியனுப்ப ப்படுகிறது.
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 270 விருந்தினர்கள் மற்றும் 1 உறுப்பினர்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday9797
mod_vvisit_counterYesterday10268
mod_vvisit_counterThis week52524
mod_vvisit_counterLast week80132
mod_vvisit_counterThis month255256
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12777375