முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்தொடர்புக்கு
+++
பிறந்த நாள் வாழ்த்துக்கள் அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 30
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
திங்கட்கிழமை, 10 டிசம்பர் 2012 00:05

ராதாகிருஷ்ணன்.  இவர் ஒரு வழக்கறிஞர்.  ஆயிரக்கணக்கில் இருக்கும் வழக்கறிஞர்களில் இவர் ஒரு வழக்கறிஞர் அல்ல.  இவர் மக்களுக்கான வழக்கறிஞர்.

1DSC_0115

நம்மில் பலர் பல்வேறு துறைகளில் விற்பன்னர்களாக இருப்போம். நிபுணர்களாக இருப்போம்.  மற்றவர்களோடு ஒப்பிட முடியாத அளவுக்கு சிறந்த திறமை படைத்தவர்களாக இருப்போம்.   ஆனால் நமது திறமையை எப்படிப் பயன்படுத்துகிறோம், யாருக்காக பயன்படுத்துகிறோம் என்பதே நாம் எப்படிப்பட்ட மனிதர்கள் என்பதை வரலாற்றில் பதியச் செய்கிறது.

ராதாகிருஷ்ணன் ஒரு மிகச் சிறந்த வழக்கறிஞர் என்பதை அவரோடு அறிமுகம் ஆன அனைவரும் ஒப்புக் கொள்வார்கள்.  அவருக்கு இருக்கும் சட்ட அறிவும், வாதத்திறமையும் ஈடு இணை இல்லாதது.  அவருக்கு இருக்கும் திறமையை அவர் யாருக்காக பயன்படுத்துகிறார் ?

2009ம் ஆண்டு வேலூர் சிறையில் ஒரு சம்பவம். சாரதா என்ற பெண்மணியை பெண் சிறைக்காவலர்கள், நிர்வாணப்படுத்தி சித்திரவதை செய்தார்கள் என்ற புகார் வந்தது.  வேலூர் சிறைக்கு நளினியைப் பார்க்கச் சென்ற தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் செயலாளர் புகழேந்தி நடந்த சம்பவம் குறித்து உடனடியாக உள்துறைச் செயலாளருக்கு தந்தி அனுப்பினார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த ராதாகிருஷ்ணன், உடனடியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

அந்த வழக்கு நீதிபதி எலிப்பி தர்மாராவ் மற்றும் நீதிபதி சி,டி.செல்வம் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.  வழக்கு விசாரணை நடந்தபோது, பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினரோ, நண்பரோதான் வழக்கு தாக்கல் செய்ய முடியும்… மனு தாக்கல் செய்திருப்பவர் ஒரு வழக்கறிஞர்.. அவர் எப்படித் தாக்கல் செய்யலாம் என்ற ரீதியில் பல்வேறு கேள்விகளை எழுப்பினார் நீதிபதி எலிப்பி தர்மாராவ்.   சிறையில் நடக்கும் ஒரு கொடுமையை நீதிமன்றத்தின் கவனத்துக்கு எடுத்து வருவது ஒரு வழக்கறிஞரின் கடமை.  விளிம்பு நிலை மக்களுக்கு நியாயம் வழங்கும் நீதிமன்றத்தின் கடமையைச் செய்ய, இந்த வழக்கறிஞர் உதவி செய்திருக்கிறார்.   நடைபெற்றிருக்கும் மிக மோசமான இந்த மனித உரிமை மீறலை கவனத்தில் கொள்ளாமல், யார் மனு தாக்கல் செய்திருக்கிறார்கள் என்று நீதிமன்றம் ஆராய்வது வருத்தத்திற்கு உரியது.   நீதிமன்றத்தின் கவனத்துக்கு இப்படிப்பட்ட அநீதியை எடுத்த வந்ததற்காக, மனுதாரரை இந்நீதிமன்றம் பாராட்ட வேண்டும். மாறாக இப்படி டெக்னிக்கலான கேள்விகளைக் கேட்பதே, வருத்தத்திற்குரியது என்றார்.

அவரின் அத்தனை வாதங்களையும் ஏற்றுக் கொண்ட நீதிபதி, பாதிக்கப்பட்ட சாரதா என்ற பெண்ணுக்கு 50 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடும், அவர் மீது நடந்த தாக்குதலுக்குக் காரணமான சிறைக் காவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்க உத்தரவிட்டார்.

2009 முதல், திமுக ஆட்சியில் நடந்த ஏராளமான அயோக்கியத்தனங்களுக்கு எதிராக தமிழக மக்கள் உரிமைக் கழகம் தொடுத்த பல்வேறு பொதுநல வழக்குகளில் ஆஜராகி வாதாடியிருக்கிறார் ராதாகிருஷ்ணன்.   சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக ஆட்சிக் காலத்தில் அரசு வழக்கறிஞராக இருந்த ராஜா கலிபுல்லாவைக் கேட்டுப்பாருங்கள்.  நீதிமன்றத்தில் திமுக அரசின் மானம் கப்பலேறாமல் காப்பாற்ற அவர் எத்தனை பாடுபட்டிருப்பார் என்று.

தமிழக மீனவர்களைச் சுட்டுக் கொன்ற சிங்களக் கடற்படையினரைக் கைது செய்ய வேண்டும், சென்னையில் திருநாவுக்கரசு என்ற இளைஞனைக் கொலை செய்து விட்டு, இலங்கையில் அமைச்சராக உள்ள டக்ளஸ் தேவானந்தாவைக் கைது செய்ய வேண்டும், 2ஜி ஊழலில் சம்பந்தப்பட்ட திருட்டுப் பாதிரியார் ஜெகத் கஸ்பரோடு தமிழக அரசு இணைந்து சென்னைச் சங்கமம் நடத்தக் கூடாது, ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களை ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யக்கூடாது, கூடங்குளத்தில் போடப்பட்டுள்ள 144 தடை உத்தரவை விலக்க வேண்டும், போலி என்கவுன்டரில் சம்பந்தப்பட்ட அனைத்து காவல்துறை அதிகாரிகள் மீதும் கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும், தமிழக சிறைகளில் நடக்கும் கொடுமைகளை நிறுத்த வேண்டும், ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் நளினியை முன் விடுதலை செய்ய வேண்டும், விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும், சட்டவிரோதமாக செய்யப்படும் தமிழக இளைஞர் காவல் சிறப்புப் படைக்கு தடை விதிக்க வேண்டும், என்று மனித உரிமைகள் தொடர்பான ஏராளமான வழக்குகளில் ராதாகிருஷ்ணன் ஆஜராகி வாதாடியிருக்கிறார்.

ராதாகிருஷ்ணனுக்கு இருக்கும் சட்ட அறிவுக்கும், வாதத் திறமைக்கும், அவர் ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தின் நலன்களைப் பாதுகாக்கும் வழக்கறிஞராகியிருக்கலாம்….   அயோக்கியத் தனங்களை அரங்கேற்றுவதையே முழு நேர வேலையாக வைத்திருக்கும் அரசுகளின் வழக்கஞராகியிருக்கலாம், அரசுப் பணத்தைக் கொள்ளையடிக்கும் பணக்கார முதலைகளின் நலனுக்காக பாடுபட்டிருக்கலாம்.  இப்படியெல்லாம் அவர் இருந்திருந்தால், சென்னை போட் கிளப் சாலையில் ஒரு பங்களா வாங்கி, பிஎம்டபிள்யூ காரில் பயணித்துக் கொண்டிருப்பார்.

ஆனால், மனித உரிமைகளுக்காக குரல் கொடுத்து, தன் அத்தனை திறமைகளையும் விளிம்பு நிலை மக்களுக்காகவே செலவிட்டுக் கொண்டிருப்பதால், இன்று பெரும்பாலான மக்களின் அன்புக்கு பாத்திரமாகியிருக்கிறார்.   சென்னை உயர்நீதிமன்றத்தின் வரலாற்றில், ஒரு மனித உரிமைப் போராளி என்று பதிவாகியிருக்கிறார்.

இப்படிப்பட்ட மனிதரான ராதாகிருஷ்ணன், உலக மனித உரிமை நாளில் பிறந்திருப்பது இயல்புதானே… ?

அவரது பிறந்தநாளில், அவர் மென்மேலும் பல்வேறு வெற்றி மகுடங்களைச் சூட வேண்டும் என்றும், ஏழை உழைப்பாளி  மற்றும் விளிம்பு நிலை மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும் என்றும், இப்போது போல எப்போதும் அதிகார மையங்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்க வேண்டும் என்றும் சவுக்கு மனதார வாழ்த்துகிறது.

நீங்களும் வாழ்த்துங்கள் தோழர்களே… 

 

Comments  

 
+1 #85 P.R.RAJENDRAN 2012-12-21 21:39
Respected sir,

You are the living history.Long live ayya.
Quote
 
 
+2 #84 veera tamilan 2012-12-16 19:55
வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம் தொடர்க உங்கள் சேவை
i salute ur service..
Quote
 
 
+1 #83 anbuselvan 2012-12-15 15:55
வழக்கறிஞரை பற்றி நீங்கள் சொல்வது உண்மையானால்......
இவர் மிக மிக மிக பாராட்டப்பட வேண்டியவர்....
இப்படியும் நல்லவர்கள் இருக்கிறார்கள் என்று நினைக்கத்தோன்று கிறது....
Quote
 
 
+2 #82 veeraswamy 2012-12-13 19:06
dear sir please accept our wishes.many more
happy returns of the day.
Quote
 
 
+3 #81 Ramesh Subramani 2012-12-13 15:59
பிறந்த நாள் வாழ்த்துகள் ஐயா....
Quote
 
 
+1 #80 Balas Pillai 2012-12-13 11:19
Hats off ! Long Live RadhaKrishanan !!
Quote
 
 
+2 #79 vetti tamilan 2012-12-13 06:35
belated birthday wishes. :-) :-) :-)
Quote
 
 
+5 #78 Iniyan 2012-12-12 22:53
ஐயன் வள்ளுவனின் வாக்குக்கு செயல் வடிவம் கொடுக்கும் திரு.இராதாகிருஷ்ணன் அவர்கள் பல்லாண்டு வாழ்ந்து நெடும்பணி செய்து மக்களின் மனதில் நீங்கா இடம் பெற வாழ்த்துக்கள்.

சவுக்குக்கு நன்றி. திரு. இராதாகிருஷ்ணன் அவர்களின் சிறப்பு பணிகளை திறம்பட வெளியுலகிற்கு எடுத்து இயம்பியதற்கு.

வாழ்க உமது பணி. வாழ்க திரு. இராதாகிருஷ்ணன் பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்ட ு.
Quote
 
 
+3 #77 Sreenivasan 2012-12-12 19:38
வாழ்க பல்லான்டு
Quote
 
 
+3 #76 L.RAJAN PRABHAKARAN 2012-12-12 17:11
Many More Happy Returns of the day Sir, May your excellent service will uplift the downtrodden people of the entire country.
Quote
 
 
+4 #75 Srinivasan Ayyakkann 2012-12-12 09:26
பிறந்த நாள் வாழ்த்துக்கள் அய்யா...
Quote
 
 
+4 #74 முத்து சிவக்குமார் 2012-12-12 09:12
வாழ்க பல்லாண்டு
Quote
 
 
+7 #73 rajaa 2012-12-11 19:53
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.......
Quote
 
 
+6 #72 Francis Andimadam 2012-12-11 19:21
வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம் தொடர்க உங்கள் சேவை
Quote
 
 
+6 #71 Suresh Raja 2012-12-11 17:18
பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள ்.
Quote
 
 
+4 #70 Thangamani 2012-12-11 16:44
wish you happy birth day sir
Quote
 
 
+4 #69 Rajase 2012-12-11 14:38
முகவரி கொடுஙள் , வாழ்து மடல் அனுப்புகிறோம்
Quote
 
 
+5 #68 bala_ 2012-12-11 14:34
Dear Sir,

Wish you many more Happy returns!!!1

My hearty wishes
Quote
 
 
+7 #67 Xavier 2012-12-11 14:32
ராதாகிருஷ்னன் அய்யா அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.
Quote
 
 
+5 #66 Jaganathan P 2012-12-11 14:20
ராதாகிருஷ்னன் அய்யா அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.
Quote
 
 
+8 #65 NameNotAccepting 2012-12-11 14:19
ராதாகிருஷ்னன் அய்யா அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.
Quote
 
 
+5 #64 mathan1976 2012-12-11 13:32
Wish you happy birthday
Quote
 
 
+5 #63 Selvathurai 2012-12-11 12:02
Wish you all the best and many more returns of the day
Quote
 
 
+5 #62 Jagan T 2012-12-11 11:36
மனித உரிமைக்க்கும், நியாயத்த்தின் பக்கமும் இருக்கும் ராதாக்ருஷ்ணன் அவ்ர்களுக்கு வாழ்த்துக்க்ள்.
Quote
 
 
+5 #61 sella 2012-12-11 11:21
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
Quote
 
 
+6 #60 SUTHIRAN 2012-12-11 10:14
வாழ்க ! வளர்க! மிக மிக நீண்டகாலம் நல்ல உடல் ஆரோக்கியத்துடனு ம், மகிழ்ச்சியுடன் கூடிய நல்ல மன நிலையிலும் திரு ராதாகிருஷ்ணன் தொடர்ந்து இதே போல அல்ல இதை விடவும் மென்மேலும் சிறப்பாகப் பொது நலப் பணிகளை ஆற்ற அந்த எல்லாம் வல்ல இறைவன் இவருக்குப் பரிபூரண அருள் வழங்கப் பிராத்தனை செய்கிறேன் என் மனதார !
Quote
 
 
+4 #59 Kumar Swamy 2012-12-11 09:51
Happy Birth day sir, God' blessing on you to serve the marginalzed.

Kumar Swamy, Bangalore
Quote
 
 
+9 #58 Jothy 2012-12-11 07:17
I wish Mr. Radha Krishnan Sir, many more happy returns of the day,May God bless you Sir.
Quote
 
 
+8 #57 குமார. இரவிக்குமார் 2012-12-11 04:28
நீடூழி வாழ்க !. நிறைவோடு வாழ்க !. மகிழ்வோடு வாழ்க! .வளமோடு வாழ்க !.
Quote
 
 
+8 #56 நெல்லை பாலாஜி 2012-12-11 02:50
வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம் ..தொடர்க உங்கள் சேவை
Quote
 
 
+8 #55 Priyan 2012-12-11 00:47
Wish you many more happy returns of the day sir!
Quote
 
 
+6 #54 Padmanan 2012-12-11 00:02
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். மக்கள் உரிமைக்காக உறுதியுடன் தொடர்ந்து வெற்றிகரமாக போராட எல்லா பலத்தையும் கடவுள் கொடுக்க வேண்டுகிறோம்.
Quote
 
 
+6 #53 Raja N 2012-12-10 23:11
வாழ்த்துக்கள் திரு.ராதா கிருஷ்ணன் ்்சார்.தங்களை ொபோன்றோர் இருபத்தினால்தன நீதி துறையின் மீது மக்கள் இன்னும் நம்பிக்கை வைத்துள்ளனர்.
Quote
 
 
+7 #52 safetymuthu 2012-12-10 23:09
God wish Mr. Radhakrishnan many more happy returns of the day.

Safetymuthu
Dubai
Quote
 
 
+5 #51 Maakaan 2012-12-10 22:24
Wish you very happy birth day sir.
Quote
 
 
+6 #50 charly 2012-12-10 20:59
wise u a very happy birth day sir
Quote
 
 
+6 #49 Karl Max 2012-12-10 20:43
Many more happy returns of the day Mr. Radha Krishnan!!
Quote
 
 
+5 #48 rajini venu 2012-12-10 20:21
Many more happy returns sir.
Quote
 
 
+6 #47 Noah S 2012-12-10 20:02
I wish Mr. Radhakrishnan Sir many more happy returns of the day May God Bless U
Quote
 
 
+6 #46 Mayavi 2012-12-10 19:30
May you prosper well by God's grace in your life's onward race. wishing you very many happy returns of the day, Mr Radhakrishnan.
Quote
 
 
+6 #45 U.Gokulakrishnan 2012-12-10 19:29
பிறந்த நாள் வாழ்த்துகள் ஐயா....
Quote
 
 
+5 #44 Vgops 2012-12-10 19:17
வாழ்த்துக்கள் ......
Quote
 
 
+6 #43 Senthilkumar K 2012-12-10 18:53
Happy BirthDay Radha Krishnan Sir.....
Quote
 
 
+7 #42 Palani Perumal 2012-12-10 17:24
Happy Birth to Lawyer Radhakrishnan
Quote
 
 
+10 #41 Nageswaran 2012-12-10 16:35
வழக்கறிஞர் இராதாகிருஷ்ணன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் நீடூழி வாழ இறையருளை வேண்டுகிறேன்.
Quote
 
 
+5 #40 PENIGABI 2012-12-10 15:34
Wish U A Happy Birthday 2 U. and MAY GOD BLESS YOU SIR.
Quote
 
 
+5 #39 Eleventh Sense 2012-12-10 15:00
HAPPY BIRTHDAY SIR.
Quote
 
 
+6 #38 revolt singapore 2012-12-10 14:50
வழக்கறிஞர் இராதாகிருஷ்ணன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
Quote
 
 
+5 #37 Nambikai Nagaraj 2012-12-10 14:26
Life is not what we got but how we live! Dear RadhaKrishnan Sir! Never think about what facilities you not got! Kindly think about what facilities people got because of you! Kindly try to put PIL cases for Judicial delay, Inactivism and police atrocities repeatedly so that some day , they are awake!
Quote
 
 
+6 #36 m.s.dhandapany 2012-12-10 14:09
Many more returns of the day. I am amazed that, still there is a advocate like him. Savukku would have giver his mail address. - seithy porukki
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 360 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday3165
mod_vvisit_counterYesterday18770
mod_vvisit_counterThis week35378
mod_vvisit_counterLast week95998
mod_vvisit_counterThis month269425
mod_vvisit_counterLast month382199
mod_vvisit_counterAll days13185792